Showing posts with label Gandhi. Show all posts
Showing posts with label Gandhi. Show all posts

Thursday, October 1, 2015

விவிலியமும், ஜான் ரஸ்கினும், காந்தி மஹானும்

விவிலியமும், ஜான் ரஸ்கினும், காந்தி மஹானும்


இன்னம்பூரான்
அக்டோபர் 2, 2015

Take that thine is, and go thy way: I will give unto this last, even as unto thee.
-Matthew 20:14

நீரின்றி அமையாது உலகு. நூலின்றி அமையாது அவ்வுலகின் மேன்மை. பொருளாதாரம் என்ற சொல்லைத் தவிர்த்து பொருளியல் என்று எகனாமிக்ஸ் என்ற துறையை வகைப்படுத்துவது சாலத்தகும்.  அத்துறையில் நான்கு நிபுணர்கள் இருந்தால், ஐந்து கருத்துக்கள் வலம் வரும் என்று கேலி செய்வதுண்டு. ஆடம் ஸ்மித், டேவிட் ரிக்கார்டோ, ஜான் ஸ்டூவர்ட் மில் போன்ற பொருளியல் தந்தைகளால் போதிக்கப்பட்ட முதலாளித்துவ பொருளியல் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன்னால் கூட, நமது பாடபுத்தகங்களில் கோலோச்சின. பின்னரும்!  இத்தனைக்கும் 1860லேயே அதில் புதைந்திருந்த பாகுபாடுகளை, சமுதாய அநீதிகளை அலசி உதறிய ஜான் ரஸ்கினின் ‘Unto This Last’ என்ற நூல் வலம் வந்து, சில மாற்றுக்கருத்துக்களை முன் வைத்தது. சான்றோரை சிந்திக்க வைத்தது. அக்காலத்து பொருளியல் கோட்பாடுகளை கேள்விக்குறியாக்கியது. அந்த நூல் புரட்சிக்கு வித்திடுகிறது என்று முதலாளித்துவம் அஞ்சியது.

விவிலியத்தில் ஒரு குட்டிக்கதை. திராக்ஷை தோட்டம் ஒன்று. முதலாளி காலையில் சில கூலிகளையும், பின்னர் சில கூலிகளையும் ‘ஆளுக்கொரு தம்பிடி’ என்று சொல்லி அமர்த்தினார். அவ்வாறே கொடுத்தார். சிரமத்துக்கு ஏற்ற கூலியில்லையே என்று குறைப்பட்டுக்கொண்டிருந்தவர்களிடம், ‘நான் அநியாயம் செய்யவில்லையே! பேசியதை கொடுத்தேன். ["Friend, I do thee no wrong. Didst not thou agree with me for a penny? Take that thine is, and go thy way. I will give unto this last even as unto thee."] என்றார். சரி தான். ஆனால் சரியில்லை தான்.

அண்ணல் காந்தி புரட்சிக்கு வித்திடும் இந்த நூலை 1904ல், ஒரு ரயில் பிரயாணத்தின் போது படித்த போது, ‘ எடுத்த புத்தகத்தை முழுதும் படிக்காமல் வைக்க முடியவே இல்லை’ என்று தன்னுடைய சுயசரிதையில் பின்னர் எழுதினார். அவர் மேலும் சொன்னது, “...என்னை பிடித்து ஆட்டியது அந்த நூல். அதன் இலக்குகள் தான் எனக்கு அடிப்ப்டை போதனை...என் வாழ்வை அதற்கிணங்க அமைத்துக்கொள்வேன்... என்னுடைய மனத்தின் ஆழத்தைத் தொட்ட இந்த நூல் என் கோட்பாடுகளுக்கு கலங்கரை விளக்கு. என் வாழ்க்கையை மாற்றி அமைத்து விட்டது, அது” என்றார்.
சுருங்கச்சொல்லின், மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களை மஹாத்மா ஆக்கியது, இந்த நூல் தான். இங்கு நான் பொருளியல் பேசவில்லை.அதற்கு பல பரிமாணங்களும், பரிநாமங்களும் உண்டு. அண்ணல் காந்தியை பற்றி பேசி, அவரை, அவரது ஜன்மதினமன்று, வணங்குகிறேன்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.dominantbooks.com/pic/book/big/8178886669.jpg


Tuesday, October 1, 2013

'சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ...’! 1869 லிருந்து 1948 வரை & 1948 லிருந்து 2013 வரை





'சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ...’!
1869 லிருந்து 1948 வரை & 1948 லிருந்து 2013 வரை
Inline image 1

மஹாத்மா காந்தி ஜனித்த தினமாகிய அக்டோபர் 2 அன்று அவரை புகழ்ந்து பல கட்டுரைகள் பிரசுரம் ஆகும், பல மொழிகளில், உலகெங்கும். இந்தியா அவரை தனது பிதுரார்ஜித சொத்தாக உரிமை கொண்டாடும். காங்கிரஸ் கட்சி தன்னை அவரது தலைமகன் என்று பிரகடனம் செய்து கொள்ளும். பிரமுகர்கள் துப்பாக்கி பாதுகாப்புடன் ராஜ்காட் தகனபூமிக்கு சென்று, முகபாவத்தை சோகவடிவில் பாவித்துக்கொண்டு, மலர் தூவி, பஜனை செய்து, அந்த அனாதைப்பக்கிரிக்கு ராஜமரியாதை செய்வார்கள். மற்ற நகரங்களிலும், குக்கிராமங்களிலும், பட்டி தொட்டிகளிலும், அவரவர் அரசியல் திட்டத்திக்கேற்ப, காந்தி கீதங்கள் இசைக்கப்படும். அபஸ்வரம். நையாண்டி மேளம் எல்லாம் மேடைகளை அலங்கரிக்கும் இவையெல்லாம் மறுநாள் மறந்து விடும் ஸ்மசான (சுடுகாட்டு) வைராக்கியங்கள் அல்ல. வருடாவருடம் தத்க்ஷணமே உதறப்பட்ட சத்திய பிரமாணங்கள் அவை.

‘...நான் உம்மை நண்பரே என்று விளிப்பதின் காரணம், எனக்கு எதிரிகள் இல்லை என்பதே. கடந்த 33 வருடங்களாக, மனித குலத்தை, இனம், நிறம், மதம் போன்ற வித்தியாசங்களை புறக்கணித்து, பேணுவதிலும், மனித நேயம் நாடுவதிலும் கழித்து வந்திருக்கிறேன்...’. என்று ‘பேயரசு’ புரிந்த ஹிட்லருக்கு கிருஸ்தமஸ் விழாவை ஒட்டி 1940ல் லிகிதம் வரைந்த காந்தி மஹான் ஒரு விந்தை மனிதர். அதிசய தேவதை. ஆண்டவனின் பிரதிமை. யாவரையும் போல ஒரு பாமர மனிதனாக ஜனித்த மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி, புழுவாய் பிறந்தது வண்ணத்துப்பூச்சியாக உருவெடுத்த ஜந்துவைப் போல, காந்தி மஹானாக மாறி, எரிநக்ஷத்திரமாக வீழ்ந்த கதை, காதை, காப்பியம் எல்லாம் ஒரு ‘பெரிய புராணம்’. ‘இத்தகைய அருந்தகை இப்புவியின்கண் நடமாடினரோ என்று வருங்கால தலைமுறைகள் வியந்து வரும்’ என்று ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் கூறிய ஆரூடம் பொய்த்து விட்டதோ என்ற கவலை எம்மை வாட்டுகிறது. யாம் அறிந்த காந்தி மஹான் 1948க்கு முந்தியவர். தென்னாப்பிரிக்காவில் ஞானஸ்னானம். அங்கு, பாமரமக்களுக்கு சத்தியத்தின் பராக்கிரமத்தை உணர்த்தி, அரசு அஞ்சிய புரட்சியை தோற்றுவித்தவர். அதன் மூலம் நிறவேற்றுமையில் திளைத்த வெள்ளையர் அரசை திகைக்கவைத்து, அடி பணிய வைத்தவர். தன்னை சிறைப்படுத்திய ஜெனெரல் ஸ்மட்ஸுக்கு தான் தைத்த செருப்பை பரிசாக அளித்தவர். சத்யமேவ ஜயதே. பாபு ஏவ ஜயதே.

இந்திய சுதந்திர தினம் ஆகஸ்டு 15, 1948. கோலாகலம் இயல்பானதே. மகிழ்ச்சிகரமான தினம். உலகமே நம்மை போற்றிய தினம். பருப்பில்லாமல் கல்யாணம் நடந்தது. (என்ன கல்யாணமோ! இன்று சீரழிகிறது.) ஆம். ‘பாபு’ (அவரை விளிக்கும் சொல், அதே.) டில்லியில் இல்லை. வங்காளத்தில் சமயச்சண்டையில் சிக்கிக்கிடந்த நொவகாளி குக்கிராமங்களில் சாந்தி நிலவவேண்டும் என்ற குறிக்கோளை பரப்ப சென்றிருந்தார். இந்த மாதிரியான யாத்திரை அவருக்கு புதிது அல்ல. தென்னாப்பிரிக்காவில் கெட்டிக்கப்பட்ட துவம்சுக்கட்டையல்லவோ அவரது சலனமற்ற திட மனது. அங்கு புடம் போடப்பட்ட இந்த பத்தரைமாத்துத் தங்கம் ஒரு புருஷோத்தமன். மனிதருள் ஒரு மாணிக்கம். அவருடைய சாதனைகளின் தனிச்சிறப்பு அவற்றின் புனிதமான பின்னணி. எனினும்,1948க்கு பிறகு அவரை பற்றி நன்கு அறிந்தவர்கள் கூட, கொலையுண்டு உயிர் நீத்த அவரது ஆத்மாவின் நிழலை கூட சிறிதளவே அறிவார்கள். அதனால் தான் அவரது ‘பெரிய புராணத்தை’ (1) 1869 லிருந்து 1948 வரை என்றும், (2) 1948 லிருந்து 2013 வரை இரு பகுதிகளாக அமைத்துள்ளேன். பகுதி (2) முதலில் வரும்;அதுவும் 2013லிருந்து பின்னோக்கி. அவருடைய புனிதமான சாதனைகளை சிறிதேனும் புரிந்து கொள்ளவேண்டி, பகுதி(1)க்கு அறிமுகம் பகுதி (2). இது வரலாற்றின் கோலம், அலங்கோலம், ஓலம், வ்யாகூலம்.

‘Quo Vadis’ (எங்கே செல்கிறாய்?) என்ற திரைப்படம் அந்தக்காலத்தில் கொடி கட்டிப் பறந்தது. ஏசு பிரானின் இறை தூதர் தடுமாறி தடம் மாறும்போது, அவரை தடுத்தாட்கொண்ட வினா, அது. இவ்வருடம் (2013) பாரதமாதா, இந்தியாவின் போக்கைக்கண்டு, தீராத விசனத்தில் ஆழ்ந்திருக்கிறாள். தனது நாட்டில் ஜனநாயகத்தின் பினாமியின் ஆளுமையும், அதனுடைய பிரதிநிதித்துவம் பிரதிகூலமாக செயல்படுவதையும் கண்டு, மனம் நொந்து அருமந்த புத்திரன் ‘பாபு’ தகிக்கப்பட்ட பூமியை நோக்கி கண்ணீர் சொரிகிறாள். அன்று கலோனிய அரசு கொள்ளை அடித்தது என்று வாசாலகம் பேசுவோர் வெளிநாடுகளில் நம் மக்களின் செல்வத்தை ஒளித்து வைக்கும் தேசத்துரோகத்தை கண்டுகொள்வதில்லை. ஏழை பாழை வயிற்றில் மண் அடித்து, அரசியல் ஆதாயத்துக்கு வித்தும், நாத்தும் நடுகிறார்கள், வம்சாவளியின் செல்வத்தைப் பெருக்கி. இன்று வரை கனம் கோர்ட்டார் அளித்த தீர்வுகளோ, தணிக்கைத்துறையின் விமர்சனங்களோ, சான்றுகளுடன் தான் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை குலைப்பதில் வீராவேசம் காட்டுபவர்கள், வாய்மைக்குக் களங்கம் விளைப்பதால், மஹாத்மா காந்தியின், ‘Truth is God’ என்ற சத்யாக்ரஹ கோட்ப்பாட்டை காலால் எட்டி உதைப்பவர்கள். இந்த நிலக்கரி அடாவடி அலாட்மெண்டை பாருங்கள். அது காந்திஜியை அவமதிக்கும் ‘ஆளைக்காட்டு; ரூலை சொல்கிறேன்.’ என்ற நிர்வாகக்கேடு. 2ஜி அவமானம் இந்தியாவை கேலிக்கு உள்ளாக்கிய போது, பாபு என்ன சொல்லியிருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள். ‘ஏன் பிறந்தேன்?’ என்று பெருங்குரல் எடுத்து அழுதிருப்பார். பிரதிநிதிகளில் சிலர் சட்ட விரோதமான குற்றங்களுக்கு தண்டிக்கப்பெற்றவர்கள். அவர்களின் ‘பிரதிநிதித்துவத்தை’ பறிப்பதைப்பற்றி உச்ச நீதி மன்றம் அளித்த காந்தீய தீர்ப்பை முறியடிக்க சட்டம் கொணர்ந்தது, பாபு மீது ஒரு தாக்குதல். அது நிறைவேறாதது கண்டு அழிச்சாட்டியமாக அவசரச்சட்டம் கொணர்ந்தது, பாபு மீது சவுக்கடி. ஜனாதிபதியின் விவேகமும், பிரதமரையும், அமைச்சரவையையும் இளவல் உலுக்கியதும், ப்ளேட்மாரிகளின் கூச்சல்களும், பாபுவுக்கு சமாதானம் செய்யும் வகையில் அமையவில்லை. அவர்களின் இலக்கு: தேர்தலில் வெற்றிக்கனி என்று அவர்களே கூறுகிறார்கள். பிலாக்கணம் பாடினால் மட்டும் மாண்டோர் இந்த மாநிலத்தில் புனர்ஜன்மம் எடுக்கப்போவதில்லை. 

ஆனால், அன்று காந்தி மஹான் அடி பணிந்த மக்கள், அவருடைய ஆத்மாவின் அந்தரங்கம் அறிவார்கள் என்றும் வாய்மையின் மறு அவதாரம் கை கூடும் என்றும் நினைக்க ஆசையாக இருக்கிறது. ‘கண்ணீர் விட்டு வளர்த்தப் பயிரல்லவோ, நம் சுதந்திரம்!’. சற்றே மனோபலத்துடன் (மோஹனம் வேண்டாம்.) மஹாத்மா காந்தியின் ஆத்ம பயணத்தை நோக்குவோம். அவர் தன்னையே இடைவிடாமல் ஆத்மபரிசோதனைக்கு உட்படுத்தியவர். தென்னாப்பிரிக்காவுக்கு சென்றது ஒரு வழக்கறிஞராக. வாழ்ந்து காட்டியதோ ஒரு தர்மவான் ஆக. அவருடைய அந்தராத்மா தான் அவருடைய கலங்கரை விளக்கு. அவரது சட்ட மீறல் தர்மங்களை நேரில் கண்டு பங்கேற்றவர்கள் தான் ஓரளவு புரிந்து கொண்டனர். பிற்கால சந்ததிகள் அதை சுயநலத்துக்கு பயன் படுத்தியது கண்கூடு. மேலும் சொல்லப்போனால், அவருக்கு அந்த தர்மம் தான் தலைமையை வாங்கிக்கொடுத்தது. கோடானு கோடி மக்களை தன் வசம் இழுத்துக்கொண்டது. இப்படித்தான் விடுதலை வேள்வி கொழுந்து விட்டு எரிய துவங்கியது. அவருடைய ஆன்மீகம் அநேகருக்குப் புரியவில்லை; அது அரசியலுக்குப் புதிய வேதம். இலக்கு அடைவதை விட, வழிநடை நெறி தான் அவருக்கு பிரதானம். அதனால் தான் ‘செளரி செளரா’ ரத்து. விடுதலையை விட அதன் உன்னதம் தான் முக்கியம். அங்கு தான் 1947லிருந்து 2013 வரை, நாம் மோசம் போய் கொண்டிருக்கிறோம். நான் எந்த கட்சியை பற்றியும் விமர்சிக்கவில்லை. மக்கள் ஏமாந்து போனதை கண்டு புலம்புகிறேன். ஒரு பிடி உப்பு அள்ளி கலோனிய அரசை ஆட்டிப்படைத்த பாபு, இறைவனிடம் கேட்ட பிரார்த்தனை, ‘ஒரு படி ஏறினால் போதும், இப்போது.’ அவருக்கு பின் வந்தவர்கள் ஏணியின் படிகளை உடைத்தனர், மற்றவர் ஏறக்கூடாது என்று. ஆண்டவா! ஏன் இந்த தண்டனை எம் அன்னைக்கு?

பாபுவுக்கு இறைவனோடும் அன்யோன்யம். மக்களோடும் அன்யோன்யம். அவர் எது செய்தாலும் மக்கள் மன்றத்தின் முன் போய் நிற்பார். மனித நேயத்தின் மறு உரு பாபு. அவருடன் பழகியவர்கள் யாவரையும் வசீகரம் செய்து விடுவார், பொக்கை வாய் சிரிப்புடன். அவருடன் ஒத்துப்போகாதவர்கள் பலர். வாதித்து வாகை சூடுவதை விட, கொள்கையின் தரம் பொருட்டு, பிரதிவாதியை தன் வசம் செய்து கொள்வது தான், அவருடைய அணுகுமுறை.
மஹாத்மா காந்தியை பற்றிய உசாத்துணைகள், பல பக்கங்களை நிரப்பும். தினந்தோறும் நாம் யாவரும் பாபுவை பற்றி ஒரு பக்கம் படித்தால் கூட, நாட்டை உய்விக்க வழி பிறக்கலாம். 

காந்தி ஸ்மரணம் தேச உத்தாரணம்.


இன்னம்பூரான்



coral shree Tue, Oct 1, 2013 at 3:22 PM

அருமையான நினைவுகூரல் ஐயா. பகிர்விற்கு நன்றி.

அன்புடன்
பவளா


Geetha Sambasivam Tue, Oct 1, 2013 at 3:24 PM

அன்பார்ந்த ஐயா,


அருமையான இடுகை.  பலமுறை படித்தேன்.  நெஞ்சம் கலங்கியது.  ஒரு சின்ன விஷயம்.


மூணாவது பத்தியின் ஆரம்ப வரிகளைக் கொஞ்சம் சரி பாருங்கள்.


//இந்திய சுதந்திர தினம் ஆகஸ்டு 15, 1948. //

என்று கொடுத்திருக்கிறீர்கள்.  இந்திய சுதந்திர நாள் ஆகஸ்ட் 15, 1947 க்குப் பின்னர் வந்த ஜனவரி 30, 1948 ஆம் ஆண்டிலேயே காந்தி சுடப்பட்டுவிட்டார் அல்லவா?  ஆகவே ஆகஸ்ட் பதினைந்து அவர் இறந்த பின்னர் வரும் முதல் சுதந்திர தினம் என்ற பொருளில் சொல்லி இருக்கிறீர்களா?   ஏனெனில் அடுத்து வரும் வாக்கியங்களில் நொவகாளி சென்றதையும் குறித்துள்ளீர்கள். கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.  தயவு செய்து மன்னிக்கவும்.


Innamburan S.Soundararajan Tue, Oct 1, 2013 at 3:39 PM

இந்திய சுதந்திர வருடம் 1947 தான். என் உள்மனது இந்த வினாவை எதிர்நோக்கியதோ! அதனால் தான் காரிய தவறோ! சுதந்திர வருடம் 1948 என்று தான் திட்டம். ஆனால், காந்திஜியை/ராஜாஜியை தவிர மற்றவர்கள் அவசரப்பட்டார்கள். வயசாறது இல்லையா? ஜின்னா வேறு வன்முறை துவக்கினார். நொவகாளி பிரச்னை 1948 என்றால் எழுந்திருக்காது என்ற ஹேஷ்யம் பலமாக இருந்தது. நான் அன்றொரு நாள் தொடரில் எழுதிய கோணாமாணா ரேட்க்ளிஃப் அவார்ட் வந்திருக்காது. பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான் தான், நேருஜியின் இடைக்கால அரசில் நிதி அமைச்சர். விஷய்ம் தெரிந்த அவர், 1948 என்ற பக்ஷத்தில் பலகோடி கேட்டு உபத் ரவம் செய்திருக்க்காமல் இருந்திருக்கலாம். காந்திஜி அதை கொடுக்கச்சொல்லி வற்புறுத்தும் நிலை வந்திருக்காது. கோட்ஸேக்கும் கொலை நோக்கம் வராமல் இருந்திருக்கலாம். இதெல்லாம் ஹேஷ்யம். பின்னணி அறிந்த ஹேஷ்யம்.
நன்றி, கீதா.



சொ. வினைதீர்த்தான் Tue, Oct 1, 2013 at 3:43 PM

இ.சாரின் நடையழகில் அருமையான இடுகை. காந்தி மகானுக்கான சிறந்ததொரு அஞசலி.

இன்று காலை நாட்டு நலப் பணி திட்ட மாணவர், மாணவியர் இடையில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் காந்தியடிகள் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு முதல்வர் முனைவர் சந்திரமோகன் அழைப்பில் அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது. தனி இழையில் எழுதுகிறேன்.
இ.சாருக்கு நன்றி.

அன்புடன்சொ.வினைதீர்த்தான்

Geetha Sambasivam Tue, Oct 1, 2013 at 3:48 PM

அருமையானதொரு விளக்கத்துக்கு நன்றி ஐயா.  உங்கள் ஞாபகசக்திக்குத் தலை வணங்குகிறேன்.




Friday, March 22, 2013




அன்றொருநாள்: மார்ச் 23:* * *
17 messages

Innamburan Innamburan Thu, Mar 22, 2012 at 5:46 PM
To: mintamil , thamizhvaasal
Cc: Innamburan Innamburan

அன்றொருநாள்: மார்ச் 23
:Inline image 1Inline image 2Inline image 3



விடுதலை வேள்வியில் தன்னையே ‘ஸ்வாஹாஹா!’ என்று அர்ப்பணித்துக்கொண்ட தியாகச்சுடர்கள் முன்னே நாம் தூசு என்க. மார்ச் 23, 1931 அன்று பகத் சிங், சுக்தேவ் & ராஜகுரு ஆகிய மூன்று வாலிபர்கள் லாஹூர் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். அவர்களில் பகத் சிங்கை பற்றி பரவலாக அறிந்தவர்களுக்கு , மற்ற இருவர்களை பற்றி அவ்வளவாகத் தெரியாது. மூவரும் தியாக செம்மல்களே. அவர்களுக்கு மனம் நெகிழ்ந்த அஞ்சலி செலுத்திய பின், ஒரு வித்தியாசமான பார்வை; பாமரகீர்த்தி நோக்கு. 
‘அன்றொரு நாள்: ஜனவரி:28‘...மாசற்ற ஜோதி வதனமினிக் காண்பேனோ?...’ என்ற இழையில், ‘...அக்டோபர் 30, 1928 ஒரு கரி நாள். அன்று சைமன் கமிஷனை எதிர்த்துச் சென்ற ஊர்வலத்தில், லாலாஜி தலைமை வகித்தார். ஒரு போலீஸ் முரடன் தடியால் தலையில் அடித்து, படுகாயப்படுத்தினான். அதை பொருட்படுத்தாமல் அன்று மாலை பொதுக்கூட்டத்தில், ‘என் மேல் படும் அடி ஒவ்வொன்றும், பிரிட்டீஷ் சவப்பெட்டியில் ஆணிகளாகும்’ என்று முழங்கினார். இவரது உடல் நிலை கெட்டுப்போய், நவம்பர் 17, 1928 அன்று விண்ணுலகம் ஏகினார்’ என்று கூறினேன்.
லாலா லஜ்பத் ராய் அவர்களை  தடியால் அடித்தவன் ஜேம்ஸ்.ஏ.ஸ்காட். பழி வாங்கும் நோக்கத்துடன் பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு, ஜெய் கோபால் & சந்திரசேகர் ஆசாத் 
(அன்றொரு நாள்: ஜூலை 23:I: சுளீர்! சுளீர்! சுளீர்! பாலகனுக்கோ வயது 15; கசையடிகளும் 15.  ஒவ்வொரு சுளீருக்கும் ஒரு ‘பாரதமாதாவுக்கு ஜே!’ வெள்ளைக்காரனுக்கே தாங்கவில்லை. உன் பெயர் என்னவென்றான். இவனும் ‘திவாரி’ என்று சொல்லமாட்டானோ? ‘சுதந்திரப்பறவை என்று பொருள்பட ‘ஆசாத்’ என்றான். சுளீர்!) 
ஆகிய ஐவர் குழு, அவன் என்று நினைத்து ஜான் சாண்டர்ஸ் என்ற போலீஸ் அதிகாரியை சுட்டுக்கொன்றனர்.  (மத்திய அசெம்ப்ளியில் குண்டு வீசிய வழக்கு வேறு.) தந்திரமாக, கல்கத்தா, கான்பூர், லக்னெள என்று ஓடிப்போனாலும், பிடிபட்டார்கள். இந்த மூவருக்கும் தூக்கு தண்டனை. இதையெல்லாம் படித்துக்கொள்ளலாம். நான் சொல்லப்போகும் விஷயம்: 1945ல் ‘பகத் சிங்கும், தோழர்களும்’ என்ற ஆங்கில நூல். பம்பாயிலிருந்து பிரசுரம் ஆனது; ஆசிரியர் அஜாய் கோஷ்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காரியதரிசி (1951 -62)பகத் சிங்குடன் சிறையில் இருந்தவர்.
சாராம்சம்: 
நான் பகத் சிங்கை முதலில் பார்த்தது 1923ல். வயது 13/14. நல்ல உயரம், மெலிந்த உடல், கிராமத்தான். வெள்ளந்தி.  சில நாட்கள் கழித்து நாங்கள் இருவரும் அளவளாவினோம். மக்களுக்கு விழிப்புணர்ச்சி இல்லையே என்று மிகவும் கவலைப்பட்டான். முதல் லாஹூர் சூழ்ச்சி வழக்கில் தூக்கிலிடப்பட்ட கர்தார் சிங் தான் அவனுக்கு மாடல். எங்கள் நட்பு வளர்ந்தது... சில வருடங்கள் கழித்து 1928ல் அவனை சந்தித்தபோது அவனுடைய புதிய அவதாரம் கண்டு வியந்தேன். அவன் கிராமத்தானாக இல்லை. அவனுடைய சாதுரியமும், ஒளி விசும் கண்களும், வசீகர தோற்றமும் என்னை கவர்ந்தன. அவன் பேசினால், நாள் பூரா கேட்கலாம். அத்தனை வேகமும், தாகமும்... ஏப்ரல், 1929ல் கம்யூனிஸ்ட் வேட்டை தொடங்கியது. பி.சி.ஜோஷி காலேஜ் பையன். கைது. நாங்களும் கொஞ்சம் கம்யூனிஸ்ட் வாடையால் இழுக்கப்பட்டோம். ஆனால், எங்களுக்கு ஆயுதம் தாங்கி ஆங்கிலேயனை விரட்டவேண்டும். கம்யூனிஸ்ட்டுகள் அதை ஆதரிக்கவில்லை. மற்றபடி, ஆங்கில ஏகாதிபத்தியத்தை, அரசியல் சாஸன அணுகுமுறையை எதிர்ப்பதிலும், நேரடி தாக்குதல் கொள்கையிலும், நாங்கள் ஒத்துப்போனோம். கம்யூனிஸ்ட்டு கட்சியினரை கைது செய்வதை எதிர்த்தோம்... அசெம்ளியில் குண்டு வீசியதற்கு, ஸ்தலத்திலேயே பகத் சிங்கும், தத் என்பவரும் கைதானார்கள். பகத் சிங்கின் வாக்குமூலம் கணீரென்று இருந்தது. பொறுப்பை ஏற்றுக்கொண்டான். தீவாந்திர தண்டனை.
லாஹூரில் இருந்த எங்கள் குண்டு தொழிற்சாலையை மோப்பம் பிடித்து, சுக்தேவ், கிஷோரி லால் ஆகியோரை கைது செய்தார்கள். ஜெய் கோபாலும்,ஹன்ஸ்ராஜ் வோஹ்ராவுக்கும், போலீஸ் அடிதடி பொறுக்காமல், அரசு தரப்பு சாட்சிகளாயினர். மேலும் ஐந்து பேர். இந்தியா முழுதும் எங்கள் குழுவே கைதாயிற்று; அல்லது அஞ்ஞாத வாசம். நானும் அஞ்ஞாத வாசம் புகுமுன் கைதானேன்.
ஜூலை 1929ல், கோர்ட்டில் பகத் சிங்கை பார்த்து அழுதேன். அவன் தன்னுடைய நிழலாகி விட்டான். போலீஸ் டார்ச்சர், சமத்துவம் கோரி உண்ணாவிரதம். மெலிந்து, இளைத்து, துரும்பாகி, கிழித்தக் கந்தலாகக் கிடந்த அவனை ஸ்டெரெச்சில் கிடத்திக் கொண்டு வந்தார்கள். லாஹூர் சூழ்ச்சி வழக்கு என்று ஒன்றும் தொடர்ந்தார்கள். நானும், பகத் சிங்கும், வழக்கை கவனிக்காமல், பேசிக்கொண்டிருப்போம். அவன் சொன்னது: ‘எல்லாம் முடிந்த கதை என்று சோர்வடையக்கூடாது; இது வெறும் சட்டரீதியான வழக்கு அன்று; எல்லாரையும் காப்பாற்ற முயல்வோம்; ஆனால், அரசியல் பின்னணியை மறக்காதே. இந்த வழக்கை ஒரு தருணமாக கையாண்டு, சொல்லாலும், செய்கையாலும் துணிந்து அசகாய புரட்சிகரமான வேலைகள் செய்து, ராஜாங்கத்தை அசத்துவோம்.’. அது எங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. எல்லாரும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினோம். மெலிந்தோம், இளைத்தோம். துணிவு இழக்கவில்லை. பத்து நாட்களுக்குப் பிறகு வலுக்கட்டாயகாக ஊட்டினார்கள். 13ம் நாள், ஜதீன் தாஸ்சின் நிலைமை மோசமாகி விட்டது. நன்றாகத்தான் இருந்தான். ஒரு சிறிய அதிகாரி தயங்கி, தயங்கி, அவனுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டியதில் கேடு விளைந்தது என்றார். ஜதீன் தாஸ் ஒரு நகைச்சுவையாளன். கதை சொல்லி. பாமர கீர்த்தி செப்புவான். அவனோ நினைவிழந்து கிடந்தான், ஆஸ்பத்திரியில். ஜெயில் அதிகாரிகளை மிரட்டி, நான் போய் பார்த்தேன். அடுத்த பலிகடா சிவ் வர்மா. ஆஸ்பத்திரி ஃபுல். கோர்ட் காலி. தண்ணீருக்கு பதிலாக பால் கொடுத்தார்கள். நாங்களும் இல்லாத தந்திரங்களை கையாண்டோம். இந்தியா முழுதும் பரவியது உண்ணாவிரத புரட்சி. அவ்வப்பொழுது பகத் சிங்கின் ஊக்கம் எங்களை ஆட்கொண்டது.
ஜதீன் தாஸ் செத்துப்போய்ட்டான். சிறை அதிகாரிகள் அழுதார்கள். வாசலில் பெரும் கூட்டம். லாஹூர் போலீஸ் சூபரிண்டெண்ட், ஹாமில்டன் ஹார்டிங்க், தலை குனிந்து வணங்கினார்.
(தொடரும்)
இன்னம்பூரான்
23 03 2012
பி.கு. தொடர் கட்டுரையாக எழுத நினைக்கவில்லை. பகத் சிங் செய்த கொலையை நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால்... 
Inline image 1


MAINSTREAM, VOL XLV, NO 42

renuka rajasekaran Thu, Mar 22, 2012 at 6:05 PM
To: Innamburan Innamburan
ஐயா 
சாராம்சம் என்ற பகுதியின் கீழ் நீங்கள் தந்துள்ளது உங்கள் வரலாறா ஐயா?
சொல்லுங்கள் ஐயா! 
ஐயா இந்த விவரங்கள் அறிந்து நெஞ்சுள் புல்லரிக்கிறது - பிறாண்டுகிறது 
இன்றைய குழந்தைகள் விவரம் தெரியாத குழந்தைகளாகவே வளர்க்கப் பட்டிருக்கிறார்கள் என்று வேதனைப் படக் கூறிய கண்ணதாசனின் குரல் என் காதில் ஒலிக்கறது ஐயா
உம்மைப்போல பொறுப்புடன் எமக்கு இந்த விவரங்கள் தர வேறு எவரிருக்கிறார் ஐயா?
உம்மைப் பற்றி நிறைய அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்!
சொல்லுங்கள் ஐயா! நிறைய சொல்லுங்கள்!
கேட்க ஆவலாய் இருக்கிறேன்   
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Innamburan Innamburan Thu, Mar 22, 2012 at 6:13 PM
To: 
அன்பின் அவ்வை மகள்,
 நான் மிகவும் உணர்ச்சிவசப்படுபவன். என் அம்மா சொன்னமாதிரி, ஒருமாதிரியான பையன்! பள்ளியில் படிக்கும் போது அரஸ்ட். அதை விடுங்கள். உணர்ச்சி வசப்பட்டு மேலே எழுதமுடியாமல் ஆகி விட்டது. அந்த பகத் சிங் ஃபோட்ட்டோவில் என்னே அமைதி! அது என்னை வசமிழக்கச்செய்தது.எனக்கு ஒரு ஐயம் கூட உண்டு, அது பற்றி. பகத் சிங் தாடியை எடுத்தவர். நாத்திகர். ஜெயிலில் ஏன் இப்படி சம்பிரதாயமாக. ஒரு வேளை ஃபோட்டோ பொய்யோ? 
சாரம்சம், அஜாய் கோஷ் எழுதியதின் சாராம்சம். உசாத்துணையில், முழுதும் ஆங்கிலத்தில் உளது.
அன்புடன்,
இன்னம்பூரான்
[Quoted text hidden]

renuka rajasekaran Thu, Mar 22, 2012 at 7:36 PM
To: Innamburan Innamburan
பலே!
உணர்ச்சிவசப்படுகிறவன் தான் பாரதியும்!
உணர்ச்சிவசப்படுகிறவன் தான்  பகத் சிங்கும் 
உணர்ச்சிவசப்படுகிறவன் தான்  வீர பாண்டியனும் 
உணர்ச்சிவசப்படுகிறவள் தான் அவ்வையும் 
உணர்ச்சிவசப்படுகிறவள் தான் துர்க்கையும் 
உணர்ச்சிவசப்படுகிறவன் தான்முருகனும்  

உலகில் உப்பு பூத்ததே உணர்ச்சிவசப் படுவதற்காக மட்டுமே! 
உலகில் குருதி எனும் ஊற்று உருவானது உணர்ச்சிவசப் படுவதற்காக மட்டுமே! 
இவையெல்லாம் இயற்கையின் கொடை
பிதாமகர்கள் உணர்ச்சிவசப் படுவதற்காக மட்டுமே பிறப்பெடுக்கிறார்கள்!

இதில் உம்மைப்போல ஒருவரை அறிந்து கொண்டபேறு பெற்றமைக்காக
நான் உணர்ச்சிவசப் படுகிறேன்!
 
இது வார்த்தைகளுக்குக் கட்டுப்படாத உணர்ச்சிப் பிரவாகம்!!
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Innamburan Innamburan Thu, Mar 22, 2012 at 9:27 PM
To: 
எனக்கு மகிழ்ச்சியே. அன்றொரு நாள் அந்த பாரதியை பற்றி எழுதினேன். பச்சை நிறக்கவிதை தத்க்ஷணத்தில் நான் படைத்தது. செய்தி மூலம் வெ.சாமிநாத சர்மா அவர்களின் 'நான் கண்ட நால்வர்'. கட்டுரையில் சொல்லப்பட்ட பாலு சார் நிகழ்வு: 7/8 வயதில் அவர் சொல்லிக்கொடுத்ததை, நெட்டுரு போட்டு, தஞ்சை திலகர் மைதானத்தில் பரவசத்துடன் உரை நிகழ்த்தியதற்கு கிடைத்த பரிசு, இன்று சைண்ட் லூயிஸில், என் மகளிடம். 60 வருடங்கள் கழித்து அந்த பள்ளியில் மாணவர்களுடன் அளவளாவும் தருணம் கிட்டியது. 

ஆம். உணர்ச்சி வார்த்தைகளுக்குள் அடங்காது.
அன்புடன், இன்னம் பூரான்
******
அன்றொரு நாள்: டிசம்பர் 11
ஒளி படைத்தக் கண்ணினாய்!

இன்று மஹாகவி சுப்ரமண்ய பாரதி அவர்களின் ஜன்மதினம். இணைய தளத்தில் பலர் அவருடைய புகழுரைப்பார்கள். செப்டம்பர் 11, 2011 அன்று யான் ‘‘செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;...’ என்று இறை வணக்கம் செய்து, ‘பால பருவத்தில் எனக்கு தேசாபிமானம் என்ற அடிசில் ஊட்டி...’ என்று குரு வந்தனம் செய்து, 
‘வந்தாரே அமானுஷ்யன்; 
சட்டையில் காலரில்லை; 
ஆனா டை கட்டி தொங்குதடா, 
சீமானே! மனம் போல் திறந்த கோட்டு, 
தோளின் மேல் சவாரி, 
நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.
முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே. 
அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல. 
எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.
மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு. 
எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே! 
கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு? 
உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா? 
அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு? 
என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா; 
அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!
மஹமாயி!  ஆதி பராசக்தி! 
அந்த மணக்குளத்து பிள்ளையாரே!
பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ
இவனுக்கு சேவகன் இல்லையாடா?
அதெல்லாம் சரி. 
அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?
ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!

என்று கவி வந்தனம் செய்து, ‘பராக்! பராக்!’ என்று சல்யூட் அடித்து, அஞ்சலி செய்ததை மீள்பதிவு செய்து விட்டு, சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். 1930-40களில் பாரதியார் வாசம் மாணவர்கள் நாவில். அவருடைய பாடல்கள் ஸ்ருதி தான். படிக்கக்கிடைக்காது.
நான் சொல்வது எந்த அளவுக்கு இன்றைய சூழ்நிலையில் புரியும் என்று தெரியவில்லை. மதிப்புக்குரிய தமிழாசிரியர் வி.ஜி.ஶ்ரீனிவாசன், பாலு சார், தலைமை ஆசிரியர் யாகூப் கான் போன்றோரின் ஊக்கம் எங்களுக்கு மிகவும் உற்சாகம் அளித்தது. பாலு சார், எமது சூத்ரதாரி. அவருடைய எதிரொலியாக திலகர் மைதானத்தில் கர்ஜித்தேன், பாரதி கீர்த்தியை. வி.ஜி.எஸ். தந்தையின் நண்பர். ரொம்ப அன்யோன்யம் என்று நினைக்கிறேன். அவருடைய இல்லத்தில் என் அம்மா பால் காச்சியதும், அதிலிருந்த பால் ஏடு வாங்கி ருசித்ததும் மட்டுமே பாலப்பருவத்திலிருந்து இன்று வரை நினைவில் இருக்கிறது. அப்பா அடிக்கடி பாரதியாரை பற்றி வி.ஜி.எஸ் சொன்னதாக, அவ்வப்பொழுது சொன்னது மனதில் தங்கியிருந்திருக்கலாம். தலைமை ஆசிரியரோ எங்களை எங்கள் போக்கில் விட்டதே பெரிய ஸ்வாதந்தர்யம். அதற்கான வலியையும் பொறுத்துக்கொண்டார். எங்கள் ஹீரோ. 
ஆம். ஒரு பிற்போக்கான கிராமத்தில், பின் தங்கிய சமுதாயத்திற்கான ஏழைகளின் பள்ளியில், ‘என்னா ப்ரதர்!’ என்ற உறவே துலங்கும் மாணவருலகத்தில் பீடு நடை போட்டு, வீறாப்புடன் நடந்த கவிஞன் மஹாகவி சுப்ரமண்யபாரதியார். எங்களை உய்விக்க வந்த மஹானுபவன். ஒளி படைத்த கண்ணினான். 

60 வருடங்களுக்கு மேல் கடந்தன. புதுச்சேரியில் மஹாகவி வாழ்ந்த இல்லத்தை அங்குலம் அங்குலமாக யான் அனுபவிக்கும் வேளையிலே, இரு சம்பவங்கள். ஒரு பெண் எம்.லிட். ஆய்வு செய்கிறாளாம். நூலகத்தில் உள்ள நூல்களை படித்து வந்தாள். ஏடுகள் காற்றில் பறக்காமல் இருக்க, ஒரு கல்லை அதன் மேல் வைத்தாள். மடிந்த பக்கம் லேசாகக் கிழிந்தது. நான் அவளை கோபித்துக்கொண்டேன். அங்கு ஒரு விசிப்பலகை. அதில் அமர்ந்து தான் மொட்டை மாடியில், மஹாகவியும், நண்பர்களும் அளவளாவினர். அந்த விசிப்பலகையில் ஒருவர் அமர, நான் அவரை எழுந்திருக்கச் சொன்னேன், கறாராக பேசி. அவர் ஒத்துக்கொண்டார். ஆனால், அந்த இல்லத்தை பராமரிப்பவர்கள் தங்களால் அத்தனை கண்டிப்பாக பேச முடியவில்லை என்றும், பார்வையாளர்கள்.  கேட்கமாட்டார்கள் என்றும் சொன்னார்கள். அங்கு வாங்கிய பாரதியார் நூல்களை, எங்கு வாங்கியவை அவை, ஆங்கிலேயனை அவர் விமர்சித்த முறை, வின்ச் துரையெல்லாம் சொல்லி, போர்ட்ஸ்மத் நூலகத்துக்கு அன்பளிப்பாகக்கொடுத்தேன். 

எது எப்படியோ! மஹாகவி சுப்ரமண்ய பாரதியாரின் தயவில், அவர் பெயரில், ஒரு புரட்சி நிகழவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.
இன்னம்பூரான்
11 12 2011
Subramanya_Bharathi_Signature.jpg

2012/3/22 renuka rajasekaran 

renuka rajasekaran Thu, Mar 22, 2012 at 11:11 PM
To: Innamburan Innamburan
உமது இந்த வார்த்தைகளுக்காய் இதோ  ஒரு சிறு பரிசு 
அந்த பகத் சிங் ஃபோட்ட்டோவில் என்னே அமைதி! அது என்னை வசமிழக்கச்செய்தது.எனக்கு ஒரு ஐயம் கூட உண்டு, அது பற்றி. பகத் சிங் தாடியை எடுத்தவர். நாத்திகர். ஜெயிலில் ஏன் இப்படி சம்பிரதாயமாக. ஒரு வேளை ஃபோட்டோ பொய்யோ? 

உண்மைகள் பொய்ப்பதில்லை - நிழலும் கூட என்றும் பொய்ப்பதில்லை 

Inline image 1


பா- ரதி- நீ! எனப் பாடுவேன்! பாரதிரப் பாடுவேன்! பாரம் தீரப்  பாடுவேன்! பாரின் தீரமெங்கும் பாடுவேன்! பா தீரப் பாடுவேன்!

பேசினாய் பேசினாய் பேசினாய் - உன் பேச்சிலே என் வழி மாற்றினாய்!
[Quoted text hidden]
--
Renuka Rajasekaran

Geetha Sambasivam Thu, Mar 22, 2012 at 11:28 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
பி.கு. தொடர் கட்டுரையாக எழுத நினைக்கவில்லை. பகத் சிங் செய்த கொலையை நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால்... //

கண்ணீரோடு படித்தேன்.  பகத்சிங் செய்த கொலையை நியாயப் படுத்தவில்லை எனில்?? பகத்சிங் என்ன செய்திருக்க வேண்டும்?? தொடர் கட்டுரையாக எழுத நினைக்காவிட்டாலும் இது எழுத ஆரம்பித்தால் பல பதிவுகளுக்குத் தொடரும் ஒன்று.

பகத்சிங் விஷயத்தில் காந்தியின் நிலைப்பாடு ஏற்கக் கூடிய ஒன்றா? :((((((

On Thu, Mar 22, 2012 at 11:16 PM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:






Innamburan Innamburan Fri, Mar 23, 2012 at 9:51 AM
To: 
நான் உங்களிடமிருந்து எதிர்ப்பார்த்தக் கேள்விகள் தான் இவை. உங்களுக்கு தெரிந்தவகையில் காந்தியின் நிலைப்பாடு என்ன? பதில் எனக்கு, தொடர உதவும்.
[Quoted text hidden]

கி.காளைராசன் Fri, Mar 23, 2012 at 10:08 AM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம் பல.

2012/3/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: மார்ச் 23
மார்ச் 23, 1931 அன்று பகத் சிங், சுக்தேவ் & ராஜகுரு ஆகிய மூன்று வாலிபர்கள் லாஹூர் சிறையில் தூக்கிலிடப்பட்டனர்.
மார்ச் 23 ஆம் நாளன இன்று இம்மூன்று விடுதலை வீரர்களையும் என் நெஞ்சில் நினைந்து வணங்குகிறேன்.
 
அவர்களில் பகத் சிங்கை பற்றி பரவலாக அறிந்தவர்களுக்கு , மற்ற இருவர்களை பற்றி அவ்வளவாகத் தெரியாது.
தங்களது எழுத்துக்கள் வாயிலாக அறிந்து கொண்டேன்.
இவ்வீரர்களால் வீரசுதந்திரம் பெற்றுள்ளோம் என அறிந்து பெருமிதம் கொள்கிறேன்.

தேசத்தைக் காத்த வீரர்களை அறிமுகம் செய்துவைத்த தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களும், பாராட்டுகளும்.

அன்பன்
கி.காளைராசன்


Geetha Sambasivam Fri, Mar 23, 2012 at 10:27 AM
To: Innamburan Innamburan , தமிழ் வாசல்
Cc: mintamil
சரி, சொல்றேன்,  காந்தி நினைத்திருந்தால் இளைஞர்களைத் தூக்கு மேடையில் இருந்து காப்பாற்றி இருக்கலாம் அல்லவா?  ஆனால்!!!!!!!!!
[Quoted text hidden]

Geetha Sambasivam Fri, Mar 23, 2012 at 10:33 AM
To: Innamburan Innamburan , தமிழ் வாசல்
Cc: mintamil
காந்தியை ஒருவகையில் தந்திரக்காரர் என்று மட்டுமின்றி எமோஷனல் ப்ளாக்மெயிலர் என்றும் சொல்லலாமோ? 

இதனால் காந்தியிடம் எனக்கு மதிப்போ, மரியாதையோ இல்லை என அர்த்தம் இல்லை.  என்றாலும் யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கொப்ப காந்தியின் மாபெரும் தவறுகளில் இவையும் ஒன்று.  போஸை நிராகரித்தது, சுதந்திரத்துக்குப் பின்னர் படேலை நேருவுடன் ஒத்துப் போகக் கட்டாயப் படுத்தியது,  என எத்தனையோ இருக்கு. :(((((((

அவருடைய சக்தியை, ஆற்றலைச் சரியானபடி செலுத்தி இருக்கலாம். இல்லையா?  இன்று நாடு இருக்கும் மோசமான நிலைக்கு காந்தியும் ஒரு மறைமுகக் காரணம் எனத் தோன்றுகிறது.  அவர் பார்வையில் அவர் செய்தவை நியாயமாய் இருக்கலாம்.  ஆனால் ஒரு சாதாரணக் குடிமகனாக என் பார்வை வித்தியாசப் படுகிறது.

காந்தியின் நிலைப்பாடு குறித்த உங்கள் விளக்கம் எனக்குள் தெளிவைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கேன்.
On Fri, Mar 23, 2012 at 3:57 PM, Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com> wrote:
சரி, சொல்றேன்,  காந்தி நினைத்திருந்தால் இளைஞர்களைத் தூக்கு மேடையில் இருந்து காப்பாற்றி இருக்கலாம் அல்லவா?  ஆனால்!!!!!!!!!




Innamburan Innamburan Fri, Mar 23, 2012 at 11:17 AM
To: 
வபையான பாயீண்டுகள். காந்திஜி வைஸ்ராயுடன் பேசினார். வைஸ்ராய் இர்வினும் தார்மீக  சிந்தனையாளர். காந்திஜியால், வைஸ்ராயின் கருத்துக்குப் பதில் சொல்ல இயலவில்லை. ஆனால். விளக்கமாக பதிலுரைக்கவேண்டும். கூடிய சீக்கிரம் செய்கிறேன். அதற்க்குள், மற்றவர்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்கலா, தயக்கமின்றி.
[Quoted text hidden]

திவாஜி Fri, Mar 23, 2012 at 11:27 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
சட்டத்துக்கு கீழ் படியாதேன்னு சொல்லிக்கொடுத்தவரே அவர்தானே? அதுக்கு ஒரு கௌரவத்தையும் கொடுத்தார். தொலை நோக்கு பார்வை இல்லை. :-(

[Quoted text hidden]

Geetha SambasivamFri, Mar 23, 2012 at 11:32 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
ஆஹா, ஒரு சப்போர்ட்டு, நன்றி. நன்றி.  நானும் இப்படி நிறைய ஸ்டாக் வைச்சிருக்கேன். 
[Quoted text hidden]

Nagarajan Vadivel Fri, Mar 23, 2012 at 4:34 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Some helpful links

http://www.marxists.org/archive/bhagat-singh/index.htm

http://www.marxists.org/archive/bhagat-singh/1930/x01/x01.htm

http://www.marxists.org/archive/bhagat-singh/1931/x01/x01.htm
As to the question of our fates, please allow us to say that when you have decided to put us to death, you will certainly do it. You have got the power in your hands and the power is the greatest justification in this world. We know that the maxim "Might is right" serves as your guiding motto. The whole of our trial was just a proof of that. We wanted to point out that according to the verdict of your court we had waged war and were therefore war prisoners. And we claim to be treated as such, i.e., we claim to be shot dead instead of to be hanged. It rests with you to prove that you really meant what your court has said.
We request and hope that you will very kindly order the military department to send its detachment to perform our execution.
Yours,
BHAGAT SINGH
Nagarajan
2012/3/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Subashini Tremmel Fri, Mar 23, 2012 at 9:13 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram


2012/3/22 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: மார்ச் 23
...
ஜூலை 1929ல், கோர்ட்டில் பகத் சிங்கை பார்த்து அழுதேன். அவன் தன்னுடைய நிழலாகி விட்டான். போலீஸ் டார்ச்சர், சமத்துவம் கோரி உண்ணாவிரதம். மெலிந்து, இளைத்து, துரும்பாகி, கிழித்தக் கந்தலாகக் கிடந்த அவனை ஸ்டெரெச்சில் கிடத்திக் கொண்டு வந்தார்கள். லாஹூர் சூழ்ச்சி வழக்கு என்று ஒன்றும் தொடர்ந்தார்கள். நானும், பகத் சிங்கும், வழக்கை கவனிக்காமல், பேசிக்கொண்டிருப்போம். அவன் சொன்னது: ‘எல்லாம் முடிந்த கதை என்று சோர்வடையக்கூடாது; இது வெறும் சட்டரீதியான வழக்கு அன்று; எல்லாரையும் காப்பாற்ற முயல்வோம்; ஆனால், அரசியல் பின்னணியை மறக்காதே. இந்த வழக்கை ஒரு தருணமாக கையாண்டு, சொல்லாலும், செய்கையாலும் துணிந்து அசகாய புரட்சிகரமான வேலைகள் செய்து, ராஜாங்கத்தை அசத்துவோம்.’. அது எங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. எல்லாரும் உண்ணாவிரதத்தைத் தொடங்கினோம். மெலிந்தோம், இளைத்தோம். துணிவு இழக்கவில்லை. பத்து நாட்களுக்குப் பிறகு வலுக்கட்டாயகாக ஊட்டினார்கள். 13ம் நாள், ஜதீன் தாஸ்சின் நிலைமை மோசமாகி விட்டது. நன்றாகத்தான் இருந்தான். ஒரு சிறிய அதிகாரி தயங்கி, தயங்கி, அவனுக்கு வலுக்கட்டாயமாக ஊட்டியதில் கேடு விளைந்தது என்றார். ஜதீன் தாஸ் ஒரு நகைச்சுவையாளன். கதை சொல்லி. பாமர கீர்த்தி செப்புவான். அவனோ நினைவிழந்து கிடந்தான், ஆஸ்பத்திரியில். ஜெயில் அதிகாரிகளை மிரட்டி, நான் போய் பார்த்தேன். அடுத்த பலிகடா சிவ் வர்மா. ஆஸ்பத்திரி ஃபுல். கோர்ட் காலி. தண்ணீருக்கு பதிலாக பால் கொடுத்தார்கள். நாங்களும் இல்லாத தந்திரங்களை கையாண்டோம். இந்தியா முழுதும் பரவியது உண்ணாவிரத புரட்சி. அவ்வப்பொழுது பகத் சிங்கின் ஊக்கம் எங்களை ஆட்கொண்டது.
எவ்வளவு உறுதியான சிந்தனை பொருந்திய வார்த்தைகள்! இளைய தலிமுறையினர் இவ்வகைச் செய்திகளை வாசித்து நாட்டுப் பற்றும் கொள்கை பிடிப்பும் பெற்று வளர வேண்டும். தொடருக்கு நன்றி
சுபா

 
ஜதீன் தாஸ் செத்துப்போய்ட்டான். சிறை அதிகாரிகள் அழுதார்கள். வாசலில் பெரும் கூட்டம். லாஹூர் போலீஸ் சூபரிண்டெண்ட், ஹாமில்டன் ஹார்டிங்க், தலை குனிந்து வணங்கினார்.
(தொடரும்)
இன்னம்பூரான்
23 03 2012
பி.கு. தொடர் கட்டுரையாக எழுத நினைக்கவில்லை. பகத் சிங் செய்த கொலையை நியாயப்படுத்தவும் இல்லை. ஆனால்... 

Sunday, March 10, 2013

அன்றொருநாள்: மார்ச் 10 & 18 வாழ்க! நீ எம்மான்!


அன்றொருநாள்: மார்ச் 10 & 18 வாழ்க! நீ எம்மான்!
7 messages

Innamburan Innamburan Fri, Mar 9, 2012 at 6:32 PM
To: mintamil , thamizhvaasal

=அன்றொருநாள்: மார்ச் 10 & 18
வாழ்க! நீ எம்மான்!

सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति।
वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते॥२९॥
என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது.
गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदह्यते।
न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः॥३०॥
காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது.
ஶ்ரீமத் பகவத் கீதையில் காண்டீபத்தைக் களைந்து விட்டு, ‘என் உடல் நடுங்குகிறது, கண்ணா!’ என்பான், அர்ஜுனன். அந்த மாதிரி, சுட்டெரிக்கும் கோடையிலும், பதைபதைத்த ஆன்மாவும், நடுங்குகிற உடலுமாக, நாங்கள் நின்ற இடம், ஒரு நீண்ட தாழ்வாரம்; விசாலமான மாளிகை; அமைதியான நந்தவனம்: செல்வந்தர் வாழுமிடம். அங்கு தங்க எனக்கு சலுகையான வசதிகள். அது அரசு விருந்தினர் இல்லம். ஆனால், அதில் மனம் செல்லவில்லை. வருடம் 1966. என்னுடைய சஞ்சலத்தை புரிந்து கொள்ள, பகிர்ந்து கொள்ள வஸந்தா இருந்தாள். சின்ன வயதா! ஆத்மானுபவங்களை கண்ணசைவில் உணர்ந்து கொள்ளும் வயது. உக்காய் கானகக்குடிலில் தான் வாசம். அங்கிருந்து, கிட்டத்தட்ட 200 மைல்கள் காரோட்டி வந்த அலுப்பு. வந்து இறங்கியவுடன், வாசல் வராண்டாவில் ஒரு சலவைக்கல் பதிவு. யாரும் எச்சரிக்கவில்லையா! திகைத்துப்போய்விட்டோம். இந்த இடத்தில் தான் 1922ல் அண்ணல் காந்தி ராஜத்துரோகக்குற்றம் சாட்டப்பட்டார் என்றது, அந்த கல்வெட்டு. எந்த அறை என்று நாங்கள் தேடியதை, விந்தையாக பார்த்தார்கள், அங்கிருந்தவர்கள். ‘கோயில் நெருங்க, நெருங்க, சாமி நகர்ந்து, நகர்ந்து...!’.
வழக்கு நடந்த தினம் மார்ச் 18. ஏனிந்த அவசரம் என்றா கேட்கிறீர்கள்? காந்திஜியையும், பாங்கரையும் கைது செய்த தினம் மார்ச் 10, 1922. அன்றே நாடு கொதித்தெழுந்தது. சரி. அந்த ஷாஹிபாக் அரண்மனையில், மார்ச் 18, 1922 அன்று அஹமதாபாத் நகரில் நடந்ததெல்லாம், அரசின் கழுகுப்பார்வையிலிருந்து தப்பித்து, மான்செஸ்டர் கார்டியன் என்ற பிரிட்டீஷ் இதழில் பதிவானது. அதன் மேல் ஒரு பார்வை. 
“...அம்பாலால் சாராபாய் ஊரிலேயே பிரமுகர். கலைக்டர் சாட்ஃபீல்டுக்கு வேண்டப்பட்டவர். அனுமதிச்சீட்டு வாங்கி வைத்திருந்தார். எனக்கு கம்பெனி, அவருடைய குடும்பப்பள்ளியின் முதலாசிரியர், மிஸ்டர் ஸ்டாண்டிங் என்ற ஆங்கிலேயர்... ‘டாண்’ என்று 11 45 காலை, போலீஸ் சூபரிண்டெண்ட் மிஸ்டர் ஹில், ஒரு தனி ரயில் முதல் வகுப்புப் பெட்டியை நீராவி இஞ்சின் இழுத்து வர, காந்திஜியையும், சங்கர்லால் பேங்கரையும், ரயில்வே க்ராஸ்ஸிங்க் வரை, அதில், கொண்டு வந்து, பிறகு காரில் ஏற்றிக்கொண்டு வந்தார். கோர்ட்டில் இருந்த எல்லாரும் ‘சட்’டென்று எழுந்து நின்றனர். காந்திஜி கோவணாண்டி தான்; ஆனால், முகத்தில் என்ன தேஜசு! மணி 12. ஜட்ஜ்் ப்ரூம்ஃபீல்ட் ஐ.சீ.எஸ். நுழைந்தார். மக்கள் நிம்மதியின்மை, ராஜத்துரோகம் ஆகியவற்றை சட்டரீதியில் விளக்கி விட்டு, குற்றச்சாட்டை வாசித்தார். 
உரையாடல்:
ஜட்ஜ்: குற்றத்தை ஒப்புக்கொள்கிறீர்களா? அல்லது வழக்கை விலாவாரியாக விசாரிக்க வேண்டுமா?
காந்திஜி: நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.
பாங்கர்: நானும் அப்படியே.
அட்வகேட் ஜெனெரல் ஆர்ம்ஸ்ட்ராங்க்: குற்றத்தை நிரூபிக்கத் தேவையில்லை என்றாலும், தண்டனை எவ்வளவு என்று தீர்மானிக்க, விசாரணை வேண்டும்.
(ஜட்ஜ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை).
ஜட்ஜ்: நான் தண்டனையை பிரகடனம் செய்யவேண்டியது தான் பாக்கி. அது பற்றியாவது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருத்தை கேட்க நான் தயார்.
காந்திஜி தன்னுடைய உரையை வாசிக்க விரும்பினார். ஊசி போட்டால், விழும் சத்தம் கேட்கும். அப்படி ஒரு அமானுஷ்ய நிசப்தம். (நான் இந்த நிகழ்வை பற்றி ஒரு தடவை எழுதியதாகவும், அதில், அண்ணலுடைய முழு உரையையும் பதிவு செய்ததாகவும் ஞாபகம். அது அகப்படவில்லை. பேராசிரியர் தேடிக்கொடுப்பார்.)  ஒரு சில வாக்கியங்கள், இங்கே. முழு உரையை, உசாத்துணையில் படித்துக்கொள்ளலாம்.
காந்திஜி: “...என்னை விடுதலை செய்தாலும், நான் திரும்பவும் அதையே  செய்வேன்... சட்டரீதியாக மாபெரும் குற்றமும், என் மனசாக்ஷிப்படி ஒரு பிரஜையின் உயரிய கடமையையும் செய்திருக்கிறேன். எனவே, அதிக அளவு தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்...எனக்கு எந்த ஊழியனுடனோ, அதிகாரியினுடனோ பகையில்லை. ஆகவே, தண்டனையை நான் எதிர்ப்பது பொருளற்றது. ஆனால், இந்தியாவின் மற்ற ஆளுமையினருடன் ஒப்பிட்டால், இந்த பிரிட்டீஷ்  ராஜ் இந்தியாவுக்கு செய்த தீமை பெரிது. அதை பகைத்துக்கொள்வது எனக்கு வரப்பிரசாதம் ஆயிற்றே...’.
சாக்ரட்டீஸ் விஷம் பருகியதையும், ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததையும் நினைவூட்டியது, இந்த காட்சி. காந்திஜியின் உரை முடிந்தபின், லோகமான்யதிலகர் மீது நடந்த வழக்கை முன்னுதாரணமாகக் கூறி, காந்திஜிக்கு ஆறு வருட தண்டனை அறிவித்த ஜட்ஜ் அடுத்தபடி சொல்கிறார், ‘உங்களை அரசு சிறையிலிருந்து விடுவித்தால், என்னை விட மகிழ்ச்சி கொள்ள ஆளில்லை.’
காந்திஜி தண்டனையை ஏற்றுக்கொண்டார். அதிகாரிகள் எல்லாரும் கிளம்பி விட்டார்கள். ஆசிரமவாசிகள் அண்ணலை வணங்கி விட்டு வீடு திரும்பினர். அந்த ஒத்தைப்பெட்டி ரயிலே, அண்ணலை தாங்கிக்கொண்டு எரவாடா சிறைக்குச் சென்றது. 
கோர்ட்டில் ஃபோட்டோ எடுக்க அனுமதியில்லை. ரவிசங்கர் ராவல் என்ற காந்திபக்தன், அவசரம், அவசரமாக, உடனடி சித்திரங்கள் வரைந்து கொள்ள, மிஸ்டர் ஸ்டேண்டிங்க், அதையும் தன் குறிப்புகளயும், மான்செஸ்டர் கார்டியனுக்கு அனுப்பினார். ஒரு மனிததெய்வத்தின் கீர்த்தி பாடப்பட்டது.
இன்னம்பூரான்
10 03 2012
Inline image 1
உசாதுணை:


கி.காளைராசன் Fri, Mar 9, 2012 at 7:41 PM
To: mintamil@googlegroups.com
Cc: thamizhvaasal , Innamburan Innamburan
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/3/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>
எனக்கு வரப்பிரசாதம் ஆயிற்றே...’.
சாக்ரட்டீஸ் விஷம் பருகியதையும், ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததையும் நினைவூட்டியது,
மகாத்மாவின்  
“என்னை விடுதலை செய்தாலும், நான் திரும்பவும் அதையே  செய்வேன்... சட்டரீதியாக மாபெரும் குற்றமும், என் மனசாக்ஷிப்படி ஒரு பிரஜையின் உயரிய கடமையையும் செய்திருக்கிறேன். எனவே, அதிக அளவு தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்“
என்ற வரிகள் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டன.

படம் அருமையான ஒரு பொக்கிஷம்.
-- 
அன்பன்
கி.காளைராசன்


Nagarajan Vadivel Fri, Mar 9, 2012 at 8:03 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
The documentary discusses about March 10th and 18th at 1:10:00 to 1:13:00

http://www.youtube.com/watch?v=uibI7s5URiU&feature=relmfu

Please move the mouse t the bottom time line to move to 1:10;00

A comparative study of Mahatma and Mandela

http://www.youtube.com/watch?v=4eZ9eFjAhN8&feature=relmfu

I will search further to get the full speech
Nagarajan

2012/3/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]


Nagarajan Vadivel Fri, Mar 9, 2012 at 8:29 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கோர்ட்டில் இருந்த எல்லாரும் ‘சட்’டென்று எழுந்து நின்றனர். காந்திஜி கோவணாண்டி தான்; ஆனால், முகத்தில் என்ன தேஜசு! மணி 12. ஜட்ஜ்் ப்ரூம்ஃபீல்ட் ஐ.சீ.எஸ். நுழைந்தார்
http://www.youtube.com/watch?v=27lMS76hGG0

The scene is available at 1:56:19

Nagarajan
2012/3/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]


Innamburan Innamburan Fri, Mar 9, 2012 at 9:10 PM
To: mintamil@googlegroups.com

நல்ல காரியம் செய்தீர்கள், பேராசிரியரே. நான் எழுதியது நாலெழுத்து. நீங்கள் அளித்திருப்பது பொக்கிஷம். நன்றி. நீங்கள் பின்னூட்டம் தரவில்லை. பொன்னூட்டம் தந்திருக்கிறீர்கள். இந்த திரைப்படத்தை எத்தனை தடவை பார்த்திருப்பேன். இனி, நினைத்த போது பார்க்கலாம்.
இன்னம்பூரான்
2012/3/9 Nagarajan Vadivel
கோர்ட்டில் இருந்த எல்லாரும் ‘சட்’டென்று எழுந்து நின்றனர். காந்திஜி கோவணாண்டி தான்; ஆனால், முகத்தில் என்ன தேஜசு! மணி 12. ஜட்ஜ்் ப்ரூம்ஃபீல்ட் ஐ.சீ.எஸ். நுழைந்தார்
http://www.youtube.com/watch?v=27lMS76hGG0

The scene is available at 1:56:19

Nagarajan
2012/3/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>
=அன்றொருநாள்: மார்ச் 10 & 18
வாழ்க! நீ எம்மான்!

सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति।
वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते॥२९॥
என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது.
गाण्डीवं स्रंसते हस्तात्त्वक्चैव परिदह्यते।
न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः॥३०॥
காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது.
ஶ்ரீமத் பகவத் கீதையில் காண்டீபத்தைக் களைந்து விட்டு, ‘என் உடல் நடுங்குகிறது, கண்ணா!’ என்பான்,

Tthamizth Tthenee Sat, Mar 10, 2012 at 1:02 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
"சாக்ரட்டீஸ் விஷம் பருகியதையும், ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததையும் நினைவூட்டியது"
அடடா   என்னே நேர்மை, திடம் , தீர்க்க தரிசனம், நெஞ்சுரம்
 
இனி இவர்கள் போன்று  மஹாத்மாக்களைப் பார்க்க முடியுமா?
 
மஹாத்மாவை  நினைத்து நெஞ்சு தழுதழுக்கிறது
 
அதையும் விட அந்த நீதி பதியின்   நேர்மையும்  அவர் கூறிய  சொற்களும்   என்னை  அழ வைத்தது  என்றால் அது மிகையல்ல
 
இன்னமும் நீதி சாகவில்லை  என்று எண்ண வைத்தது
 
ஹஊம்  அதெல்லாம் ஒரு  காலம்
 
இப்போதெல்லாம்  மஹாத்மாக்களுக்கும்   கொலைகாரர்களுக்கும்  ஒரே மரியாதைதான்
 
பணம் இருந்தால் நீதி விலைபோகிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2012/3/10 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>
சாக்ரட்டீஸ் விஷம் பருகியதையும், ஏசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்ததையும் நினைவூட்டியது

[Quoted text hidden]

coral shree Sat, Mar 10, 2012 at 1:52 AM
To: Innamburan Innamburan
அன்பின் ஐயா,

ஆகா, மிக அழகான நினைவலைகள்.... நம் இந்திய மறக்க முடியாத வரலாற்று செய்தியையும், கீதையும், சொந்த நினைவலைகளும்.. ஐயா.. எங்கோ சென்று விட்டீர்கள்..மிக மிக அழகான பதிவு. எத்தனை ஆழமான தகவல்கள்! மிக்க நன்றி. நாகராஜன் ஐயாவின் உசாத்துணை வளம் சேர்த்துக் கொண்டிருப்பதும் உண்மை... 

அன்புடன் 

பவளா.
[Quoted text hidden]
--

                                                              
                 

Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.