Showing posts with label Nobel. Show all posts
Showing posts with label Nobel. Show all posts

Friday, October 9, 2015

நோபெல் விருது: 2015: 5

நோபெல் விருது: 2015: 5



இன்னம்பூரான்
அக்டோபர் 9, 2015

சில சமயங்களில் பாரதியாரின் ‘கண்ணன் என் சேவகன்’ எங்கிருந்தோ வந்து
 ‘ எனதகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்செல்வம்,இளமாண்பு,சீர்,சிறப்பு,நற்கீர்த்தி,கல்வி,அறிவு,கவிதை,சிவயோகம்,தெளிவே வடிவாம் சிவஞானம்,என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!’ 
என்று மனமுருக பாடியதைப் போல, இவ்வருட சமாதான நோபெல் பரிசு இந்தியர்களான நமக்கு பாடம் கற்றுக்கொள்ள வகை செய்கிறது. இது ஆனந்தமே. நான் இந்தியாவில் புரட்சி ஏற்படுவதற்கான ஹேதுகள் பல என்று சில வருடங்களாகக் கூறி வருகிறேன். நடந்து முடிந்துள்ள ஒரு மல்லிகை புரட்சியின் (ட்யூனிஷியா: 2011) பின்விளைவாக நிகழ்ந்தது அந்த நாட்டின் கொடுப்பினையே. நான்கு குழுக்கள் (தொழிற்சங்கம், தொழிலக கூட்டமைப்பு, வாணிகம், கைவினைப்பொருள் ஆகியவற்றின் அமைப்பு, ட்யூனிஷியாவின் மனித உரிமை அமைப்பு, வழக்காளர்களின் இயக்கம்) ஆகியவை ஒன்று சேர்ந்து, நாம் கனவு காணாத ஒற்றுமையுடன் Tunisian National Dialogue Quartet என்ற கூட்டணி அமைத்து, இசையின் இலக்கணமாக திகழும் ஒரு ‘தாளவாத்தியகச்சேரி’யை 2013ல் துவக்கி, சக்கை போடு போட்டு, நாட்டின் மேலாண்மையை உன்னதமான நிலைக்கு உயர்த்தி, அரசியல் கொலைகளை கட்டுப்படுத்தி, பரவியிருந்த சமுதாய சீர்கேடுகளை ஒழித்து, உள்நாட்டு யுத்தம் நடக்க இருந்த சூழ்நிலையை விலக்கி, எந்த விதமான பாலியல்/அரசியல் கோட்பாடு/மத நம்பிக்கை பொருட்டு பேதங்களை ஒழித்து, சமாதானம் பேணும் அரசியல் இலக்கணத்தை வகுக்கும் அரசியல் சாஸனத்தை வைர வரிகளால் எழுதியதும் அதற்காக, இரண்டே வருடங்களில் அந்த கூட்டமைப்புக்கு நோபெல் சமாதான விருது கிடைத்ததற்கு, உலகம் முழுதும் விழா எடுக்கவேண்டும். இந்த கூட்டமைப்பு மக்கள், அரசியல் கட்சிகள், மேலாண்மை தளங்கள் எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து தேசீயம் வளர்க்க வகை செய்தது. சில சாதனைகள்:
  1. வன்முறை, அச்சமில்லாததால், ஆதரவு இல்லாததால், இறங்குமுகம் கண்டது;
  2. இது ஆல்ஃப்ரெட் நோபெலின் இலக்கை அடைவதாக அமைந்தது, குறிப்பிடத்தக்கது;
  3. பென் அலி என்ற சர்வாதிகாரியின் கொட்டதை அடக்கியது;
  4. இஸ்லாமிய அமைப்புகளும், மதசார்பற்ற அமைப்புகள் இணைந்து இயைவதை நிரூபித்துக்காட்டியது;
  5. சமாதான பேச்சுகளின் செயல்பாடுகளையும், நாட்டுப்பற்றையும் இணைத்தது;
  6. மக்கள் இயக்கம், அமைப்புகள், விழிப்புணர்ச்சி, ‘திருமங்கலமற்ற’ மங்களமான தேர்தல்கள், ஆளுமை பகிர்வுகள், எல்லாவற்றையும் நேர்த்தியாக நிகழ்த்திக்காட்டியது இந்த Tunisian National Dialogue Quartet.
  7. மல்லிகை புரட்சி வீணாகவில்லை; ஒரே காரணம்: Tunisian National Dialogue Quartet.
பின், வேறு யாருக்குத் தான் நோபெல் விருது அளிக்கப்படும்?
சொல்லுமையா, சிவனாரே!
பாரத மாதாவே! இந்தியாவுக்கு Tunisian National Dialogue Quartet போன்ற அமைப்பு தலையெடுக்க வரம் அருள்வாயாக.
-#-
சித்திரத்துக்கு நன்றி:https://pmchollywoodlife.files.wordpress.com/2015/10/nobel-peace-prize-lead.jpg?w=600

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, October 8, 2015

நோபெல் விருது: 2015: 4

நோபெல் விருது: 2015: 4


இன்னம்பூரான்
அக்டோபர் 8, 2015

இன்றைய நோபெல் விருதை இலக்கியத்துக்கும் ஆணிவேரான ‘பாமரகீர்த்திக்கு’
பல்லாயிரம் ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாததால் ஓரிடத்தில் பிறந்து பற்பல இடங்களில் வளர்ந்து வரும் பாமரகீர்த்திக்குக் கிடைத்த விருதாகத்தான் பேசப்படுகிறது; ஏற்றுக்கொள்ளப்பட்டது; பாராட்டப்படுகிறது. ஒரே விருதாளரான Svetlana Alexievich பேலரஸ் நாட்டைச் சேர்ந்தவர். கடைசி நிமிடம் வரை உலா வந்த ஹேஷ்யங்களில் என்னுடைய வாக்கு இவருக்குத் தான் இருந்தது. இரட்டிப்பு மகிழ்ச்சி. ரத்னச்சுருக்கமான சுற்றறிக்கை இது தான்;

The Swedish Academy, announcing her win, praised Alexievich’s “polyphonic writings”, describing them as a “monument to suffering and courage in our time”.

அதாவது, பல்லாயிரம் மக்களின் துன்பக்கேணியில் இறங்கி அவர்களின் அச்சமின்மையை நேர்த்தியாகவும், உணர்ச்சி பிரவாஹம் தடையில்லாமல் பெருக்கெடுப்பதை மூலாதாரமாக வைத்து பண்ணிசையில் எழுதியிருக்கிறார்,

விருது வந்தடைந்த செய்தி அவருடைய ஸ்தித பிரதிஞ்ஞத்தை அசைக்கமுடியவில்லை. மகிழ்ச்சி என்றாலும், கலங்கினேன் என்கிறார், Svetlana Alexievich. Ivan Bunin, Boris Pasternak போன்ற விருதாளர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குடைச்சல்கள் அவற்றை நினைத்து வருந்தினார். விருது அளிக்கப்பட்ட செய்தி கிடைத்தபோது, சராசரி மனுஷி ஆன இவர் துணிகளுக்கு இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தாராம்.

நோபெல் அகாதமி சொல்வதை கேட்போம். 

“கடந்த 30/40 வருடங்களாக சோவியத்/ மாஜி சோவியத் மானிடர்களின் உணர்ச்சி, மனவோட்டம், நிழல் மனவோட்டம் எல்லாவற்றையும், நுட்பங்கள் தவறாமல், பொதுமை மறக்காமல், மானிடத்தின் உள்ளே சென்று, ‘ஆவியின் உள்புகுந்து’ அவர் செய்த பதிவுகள், அதுவும்  Chernobyl விபத்து, ஆஃப்கனிஸ்தானில் ஆட்டம் ஆகியவற்றை தனி மனிதப்பார்வையில் பதிவு செய்திருப்பது மாபெரும் சாதனை.

Svetlana Alexievich சொல்வது: நான் மக்களிடம் சோஷலிசம் பேசவில்லை; என்னுடைய ஆயிரக்கணக்கான பேட்டிகளில், சிறார்களிடமும், பெண்களிடமும், ஆடவர்களிடமும் அன்பு, காதல், பொறாமை, மழலை, முதுமை, இசை, நடனம், சிகை அலங்காரம் ஆகியவை பற்றி துளைத்து, துளைத்து விசாரித்தேன். சராசரி மனிதர்கள் அன்றாடம் மன்றாடும் சிக்கல்கள், அவற்றில் கொழுந்து விட்டெரியும், சுட்டுப்பொசுக்கும் உண்மைகள். 

ஒரு சுட்டெரிக்கும் உண்மையை போட்டு உடைக்க வேண்டும் தாய்மார்களே. Svetlana Alexievich எழுதிய U vojny ne ženskoe lico (War’s Unwomanly Face) என்ற நூல் இரண்டாவது உலக யுத்தத்தில் பங்கெடுத்துக்கொண்ட நூற்றுக்கணக்கான பெண்களை பேட்டி எடுத்ததின் சாராம்சம். குறைந்தது பத்து லக்ஷம் பெண்மணிகள் யுத்தத்தில் பங்கெடுத்தனர். வரலாற்றில் அதை பற்றி சொல்லொன்றும் காணவில்லை. அந்த குறையை மேற்படி நூலில் நீக்கி விட்டார், இவர். அதற்கு இன்னொரு நோபெல் கொடுக்கலாம், மேரி க்யூரிக்குக் கொடுத்தது போல.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://i.ndtvimg.com/i/2015-10/svetlana-alexievich_650x400_71444303070.jpg



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, October 7, 2015

நோபெல் விருது : 2015: 3


நோபெல் விருது: 2015: 3

இன்னம்பூரான்
அக்டோபர் 7, 2015

இன்று அறிவிக்கப்பட்ட வேதியியல் நோபெல் விருது Tomas Lindahl, Paul Modrich, Aziz Sancar எனப்ப்டும் மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது. உயிரணுக்களின் விநோதமான வாழ்வியலை அறியவும், ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்   (DNA) எவ்வாறு உயிரணுக்களால் பராமரிக்கப்படுகிறது என்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெற்றியடைந்த மேற்காணும் விஞ்ஞானிகளை பாராட்டுவது நலமே. புற்று நோய் சிகிச்சைகளுக்கு, இந்த ஆராய்ச்சிகள் மிகவும் உதவும். ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்   (DNA) அழுகி, அழிந்து போகும் வேகத்தைப்பார்த்தால், புவியில் வாழ்க்கை அமைந்து வளர்வது சாத்தியமில்லை என்ற கூற்றை முதன்முறையாக நிரூபித்த Tomas Lindahl, அடுத்த கட்டமாக அந்த அழிவை எவ்வாறு மூலக்கூறு (molecular machinery) அடிப்படை மராமத்து செய்யும் விந்தையை  base excision repair எடுத்துக்கூற  nucleotide excision repair என்ற நுட்பத்தை Aziz Sancar விவரித்தார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, mismatch repair என்று காரணப்பெயர் எடுத்த (ஒரு விதத்தில் அறுவை சிகிச்சை போன்ற) ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்  உயிரணுக்கள் பெருகும்போது ஏற்படும் ஆயிரக்கணக்கான சிக்கல்களை அவிழ்ப்பதை நிரூபணம் செய்தார். 

சுருங்கச்சொல்லின், இவ்வருட முக்கூடல் நோபெல் விருது உயிரணுக்களின் நடைமுறை,அந்த இயல்பை உபயோகம் செய்வது, குறிப்பாக புற்று நோய் நிவாரணம் ஆகியவற்றை பற்றி அடிப்படை நுட்பங்களை பாராட்டியுள்ளதை நாமும் பாராட்டவேண்டும்.
-#-
உசாத்துணை: பல தளங்கள்.
சித்திரத்துக்கு நன்றி: http://pbs.twimg.com/media/CQtKEK7UsAAITh5.jpg

Tuesday, October 6, 2015

நோபெல் விருது: 2


நோபெல் விருது: 2

இன்னம்பூரான்
அக்டோபர் 6, 2015
துகள் இயற்பியல் (Particle Physics) முற்காலத்து பெளதிக ஏணியின் உயரமான நிலையில் உன்னதமாக மிளிரும் படிகளில் ஒன்று. NEUTRINO - நுண்நொதுமி - ஒளிவேகம் அருகாமையில் செல்லக்கூடிய அடிப்படைத் துகள்களை அந்த இயலில் உள்ள/ இன்று பாராட்டப்பட்ட ஆராய்ச்சிகள் நம்மை வியக்கத்தக்கவை. இந்த வருட பெளதிக நோபெல் விருது Arthur McDonald, a professor emeritus at Queen's University in Kingston, Ontario என்பவருக்கும் (17வது கனடிய நோபெல் விருதாளர்) Takaaki Kajita of the University of Tokyo என்பவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கண்டு பிடித்து நிரூபித்த உண்மை: இந்த நுண்நொதுமிகள் தமது நீண்ட பயணங்களில், எப்படியோ தன் தன்மைகளை மாற்றிக்கொள்கின்றன. இந்த மாற்றம் ஏற்பட அவைகள் MASS - திணிவு, நிறை ஆக இருக்கவேண்டும். இதனால் சகலமானவர்களுக்கும் நோபல் கமிட்டி சொல்வது: MATTER - பொருண்மை, பருப்பொருள் எனப்படும் பெளதிக பொருண்மையை பற்றி நாம் அறிந்து கொண்டது எல்லாம் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ ஆக மாறிவிட்டன. துகள் இயற்பியல் (Particle Physics) மேலும் உச்சாணிக்கிளையை பிடித்து விடும் போல தோன்றுகிறது. 1998லியே ஜப்பானில் இந்த நுண்நொதுமியின் ஆள்மாறாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரியனிடமிருந்து புறப்பாடு செய்யும் நுண்நொதுமிகள் கூடு விட்டு கூடு பாய்வது கனடாவில் 2001ல் திண்ணமாக நிரூபிக்கப்பட்டது. இது ஒரு யுரேகா மூமெண்ட் என்று இன்று McDonald சொல்வது ஒரு மயிர் சிலிர்க்கும் நிகழ்வு என்று நான் நெகிழ்ந்து போகிறேன். நீங்கள் எப்படியோ?!

உசாத்துணை: நோபெல் ஆங்கில ஆவணங்கள்.

சித்திரத்துக்கு நன்றிள் http://static.dnaindia.com/sites/default/files/2015/10/06/382711-nobel-physics-prize.jpg

Tuesday, November 26, 2013

வைரக்குவியல்: I:அன்றொரு நாள்: நவம்பர் 27:I

அப்டேட்: என்ரிக்கோ ஃபெர்மி வரவில்லை இது வரை. போனவருட நோபெல் எல்லாம் போட்டேன். Not this year. Wo reads, anyway?
இன்னம்பூரான்
27 11 2013


அன்றொரு நாள்: நவம்பர் 27:I வைரக்குவியல்: I
7 messages

Innamburan Innamburan 27 November 2011 19:14

அன்றொரு நாள்: நவம்பர் 27:I
வைரக்குவியல்: I
ஒரு மனோவாக்கு அதிசயமாக பயணித்து, நிரந்தமான கொடையாக குடை விரித்து, உலகை ஒரே இனமாக பாவித்து, 1901லிருந்து கிட்டத்தட்ட 800 சாதனையாளர்களை பாராட்டி, சுடராழி போல் திகழ்கிறது என்றால், அது தான் நோபெல் பரிசு. அதற்கான திட்டம் ஒன்றை வகுத்து, தன் செல்வத்தில் 94 %  பங்கை அதற்காக ஒதுக்கி வைத்து எழுதிய உயிலில் திரு. ஆல்ஃப்ரெட் நோபெல்் கையொப்பமிட்ட தினம், நவம்பர் 27, 1895. திரு. ஆல்ஃபெரட் நோபல் ஒரு விஞ்ஞானி. டைனமைட் என்ற வெடிமருந்தை கண்டு பிடித்தவர். அதன் விளைவாக, அபரிமிதமான செல்வம் ஈட்டியவர். (பிற்காலத்து ‘அபகீர்த்தி போஃபோர்ஸ்’ இவருடைய சொத்து தான்.) இறவா வரம் பெற்ற இந்த பரிசில் வந்த விதம் விந்தை. ‘மரணத்தின் வியாபாரி இறப்பு’ என்று அவருடைய சகோதரனின் மரணத்தை பற்றி வந்த செய்தி, இவரது மனோதர்மத்தை அலக்கழித்தது. திடுக்கிட்ட ஆல்ஃப்ரெட், இந்த முடிவுக்கு வந்தார். ஐந்து துறைகளுக்கு நோபெல் பரிசில். 1968லிருந்து பொருளியலுக்கும்; அது ஸ்வீடன் மத்திய வங்கியின் உபயம். நோபெல் பரிசு பற்றி சர்ச்சைகள் பல உண்டு. கணக்கு சாத்திரத்துக்கு பரிசில் இல்லை! ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டும்,  அமைதி பரிசில் மஹாத்மா காந்திக்கு மறுக்கப்பட்டது. பெர்னார்ட் ஷா நோபெல் பரிசை, கேலி செய்து, நிராகரித்தார். சில வருடங்கள் பரிசில்கள் அறிவிக்கப்படவில்லை. இத்யாதி.
பல வருடங்களுக்கு முன் உலக அளவிலான பொது அறிவை வளர்ப்பதை பற்றி பேச்சு வந்த போது, நோபல் பரிசின் வரலாறு பெரிதும் உதவும் என்றேன். அவ்வப்பொழுது அதை படிப்பதும் என் வழக்கம். இடம், பொருள், ஏவல், ஆர்வம், அவற்றின் எல்லைகள், வாசக ருசி ஆகியவை கருதி, ஒரு சிறிய அறிமுகத்துடன் முடித்து விடுகிறேன். அதற்காக, 111 வருடங்களாக பாராட்டப்பெற்ற சாதனையாளர்களில் சிலரை பற்றி மட்டும், சில வரிகள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்றாலும், எனக்கே இப்படி தந்தி பாஷையில் கோஷமிடுவதில் சந்தோஷம் இல்லை. என்றோரு நாளில், உரிய முறையில் விளக்கமாக, நோபெலர்கள் பற்றி ஒரு மின்னூல் வரவுக்கு இது தூண்டிலாக இருக்கட்டும். நான் எழுதினால் என்ன? மற்றவர்கள் எழுதினால் என்ன?
  1. இலக்கியம்:
1999ல் இலக்கிய நோபெலர், கந்தர் க்ராஸ் (Günter Grass). இலக்கியம் படைத்த தத்துவஞானி. தத்துவம் பேசும் படைப்பாளி. நோபெல் பரிசு பெறும் போது அவர் ஆற்றிய உரையிலிருந்து சில துளிகள்.
‘கதை சொல்லிகள் இல்லாத காலமே கிடையாது...படிக்காத மேதைகளின் கதைகள் சுவை மிகுந்தவை...வாசகர்களின் ஆரவம் குன்றினாலும் கவலையில்லை. அவர்களே கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்...சைனா, இந்தியா, பெர்சியா, பெரு நாடு அங்கெல்லாம் கதை சொல்லிகள் தாம் இலக்கியம் படைத்தார்கள்...மறக்கவேண்டாம்.கதையின் உற்பத்தி உதட்டில். பேச்சு மொழி இலக்கியம் தான் முதல் வரவு...நான் எழுத்தாளனாக ஆனதின் பின்னணி: பகற்கனவு, சொல் விளையாட்டு, பொருத்தமான பொய் சொல்வதில் உள்ள சுகம் & அரசியலின் தலையீடு...ஐ.நா.வில் வில்லி ப்ரேண்ட் அவர்கள் ‘பசியும் ஒரு போர்க்களமே’ என்று அதிரவைக்கும் முழக்கம் செய்த போது நான் அங்கிருந்தேன். அப்போது நான் எழுதிவந்த ‘குப்புறவிழுந்தான்’ என்ற புதினம், மிதமிஞ்சிய விருந்தும், பட்டினிச்சாவும், சாப்பாட்டு ராமன்களும், அன்றாடம் காய்ச்சி நோஞ்சான்களும், எருமை நாக்கின் ருசியும், எச்சில் பொறுக்கியும் போன்ற வாழ்வியல் அடித்தளங்களை பற்றி இருந்ததும் ஒருமிக்க கருத்துக்கள்...”.
2. அமைதி:
1999ம் வருட நோபெல் பரிசில் ஒரு தன்னார்வ அமைப்புக்கு தரப்பட்டது. ப்ரஸ்ஸல் நகரில் 1971 ம் வருடம் பத்து ஃபெரன்ச் டாக்டர்களால் துவக்கப்பட்டு, 20 நாடுகளில் அலுவலகங்கள் அமைத்து 70 நாடுகளில், தேவைக்கேற்ப, அந்தந்த நாட்டு அரசுகளின் அழைப்புக்கு காத்திராமல், மருத்துவப்பணி செய்யும் அந்த அமைப்பின் பெயர்: ‘எல்லை கடந்த மருத்துவர்கள்’. செஞ்சிலுவை சங்கத்தின் போக்கின் மீது இருந்த அதிருப்தியால், இந்த அமைப்பு உருவாயிற்று.1972ல் நிக்கராகுவே பூகம்ப நிவாரணப்பணியில் எடுத்த நற்பெயர், தொடர்ந்த நற்பணியினால், 1999ல் நோபெல் கிடைக்க ஹேதுவாயிற்று. அநியாயத்தை எதிர்க்கும் தன்மை இருப்பதால், சில நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட அனுபவமும் இதற்கு உண்டு.
3. மருத்துவம்:1912, வருடத்து நோபெல் பரிசு டாக்டர் அலெக்ஸிஸ் கெரல் என்ற ஃபெரன்ச் டாக்டருக்கு, ரத்தக்குழாய்களுக்கு தையல் போடும் விதம் கண்டு பிடித்ததற்கு. சொல்லப்போனால், இவருடைய சாதனை போர்முனை ஆஸ்பத்திரிகளின் செயல்பாடுகளுக்கும், பிற்கால உறுப்பு அறுவடை/மாற்றல் சிகிச்சைக்கும் அபூரவ்மான வழி வகுத்தது. அவருடைய ‘மனிதன்: நாம் அறியா மர்மங்கள்’ என்ற நூல் என்னை மிகவும் கவர்ந்தது.
4. பொருளியல்: 
1998ம் வருட நோபெல் பரிசு அமார்த்தியா சென். பொருளியலின் மனசாக்ஷி என்று அழைக்கப்படும் அமார்த்தியா சென் ஒரு நேர் காணலில் சொன்னது: ‘பொருளியல் ஆளுமையில் அரசுக்கும் பங்கு உண்டு; சுதந்திர சந்தைக்கும் பங்குண்டு;திட்டமிடுவதும் வேண்டும். சலுகைக்களுக்கும் இடமுண்டு; ஜனநாயகமும், மனித உரிமையும் முக்கியம் என்பது மட்டுமல்ல; சமுதாய முன்னேற்றத்திலும், பொருளியல் வளர்ச்சிக்கும் அவை இன்றியமையாதவை...’.
பரிசில் கிடைத்த சமயத்தில், அவர் கேம்பிரிட்ஜ் ட் ரினிட்டி காலேஜின் மாஸ்டர் (தலைவர்) ஆக இருந்தார். கேம்ப்ரிட்ஜின் 31வது நோபெல் சாதனையாளர். ட் ரினிட்டியின் சமீப கால ஐந்து மாஸ்டர்களில் மூவர் நொபெல் சாதனையாளர்கள்.
(தொடரலாமா?)
இன்னம்பூரான்
27 11 2011
sweden_photo2.jpg10610s.jpgstamps1.jpgalexis_carrel_021.gifAmartyaSENN.jpg



உசாத்துணை:


Geetha Sambasivam 27 November 2011 19:22

தொடருங்கள்.  அமர்த்தியா சென்னை மட்டும் அறிவேன்; மற்ற இருவர் பற்றியும் அறிந்ததில்லை.  மற்றபடி நோபல் பரிசின் வரலாறு ஓரளவுக்குத் தெரியும். தொடருங்கள் காத்திருக்கோம்.
2011/11/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 27:I
வைரக்குவியல்: I

rajam 27 November 2011 19:57

கட்டாயமாகத் தொடருங்கள்! சங்கத்தமிழ் இலக்கணத்துக்கும் அந்தப் பரிசு வேணும் என்றும் பரிந்துரை செய்யுங்கள்! [கொசுறு: அது எனக்குக் கிடைக்கணும்-னும் ஸ்ரீராமனை வேண்டுங்கள், என்ன!!]  :-) :-) :-)

[

Innamburan Innamburan 27 November 2011 21:29

நான் எவெர் ரெடி, ராஜம். கட்டுரையின் முதற்பகுதியே பிடித்துப்போனது சந்தோஷம். அது சரி. 'அன்றொரு நாள்: நவம்பர் 25செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம்' கண்ணில் தென்பட்டதோ?

[Quoted text hidden]

தனி மடல்




Subashini Tremmel 2 December 2011 21:40



2011/11/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 27:I
வைரக்குவியல்: I

..
(தொடரலாமா?)

தொடருங்கள்.. 

சுபா

Innamburan Innamburan 2 December 2011 21:46
To: mintamil@googlegroups.com

~  நன்றி. என்ரிக்கோ ஃபெர்மி வந்து கொண்டே இருக்கிறார்.

Thursday, October 10, 2013

இலக்கியம், நோபெல், அலிஸ் மன்றோ




இலக்கியம், நோபெல், அலிஸ் மன்றோ

Innamburan S.Soundararajan Thu, Oct 10, 2013 at 9:52 PM


இலக்கியம், நோபெல், அலிஸ் மன்றோ

சிறுகதை ராணி என்று உலகபுகழ் பெற்ற திருமதி. அலிஸ் மன்றோ(82) அவர்களுக்கு இன்று கிடைத்த நோபெல் பரிசு ஓரளவு எதிர்ப்பார்க்கப்பட்டது தான். போன வருடம் ஹேஷ்யங்களைக்கூட பகிர்ந்து கொண்ட நான் இலக்கியபரிசை பற்றி மட்டுமே எழுதக்காரணம், வாசகர்களுக்கு அலுப்பும் சலிப்பும் தட்டவேண்டாமே என்ற எண்ணம்.
கனடாவுக்கு இந்த பரிசு 1976க்குப் பிறகு, இப்போது தான் கிட்டுகிறது. இப்பரிசை பெறும் 13வது பெண்மணி, இஅவர். 19 வயதிலேயே (1950) கதை எழுத ஆரம்பித்த இவருக்கு புகழாரங்கள், ஆண்டாண்டுதோறும் குவிந்த வண்ணம். சிறுகதை மன்னர் ஆண்டன் செக்காவுடன் ஒப்பிடப்படும் இவருக்கு செம்மையாக, மனதார நேசத்துடன், மன்னித்தருளும் மனோபாவத்துடன் எழுதுபவர் என்ற நற்பெயர் உண்டு. இன்று ஒரு வேடிக்கை. நோபெல் மையம் பரிசு பெறுபவர்களை வாழ்த்திய பிறகு தான், பிரகடனம் செய்வார்கள். இவரை தொடர்பு கொள்ள முடியாததால் அறிவிப்பு மட்டும் வைத்து விட்டு, பிரகடனம் செய்தார்கள்.
தனக்கு மற்ற திறன் யாதும் இல்லாததால், கதாசிரியராக வலம் வரமுடிந்திருக்கலாம் என்று தன்னடக்கத்துடன் தன்னையே கேலி செய்து கொள்ளும் இவருக்கு சர்வதேச விசிறிகள் உண்டு. அவருக்கு இணை யாரும் இல்லை என்று சொல்லும் பி பி சி கலை ஆசிரியர் வில் கோம்பெர்ட்ஸ், இவருடைய மனிதாபிமானத்தை உற்று நோக்கும் பண்பை புகழ்கிறார்.
‘வாழ்வே! இன்ப வாழ்வே (2012) இவரது கடைசி நூல். தனிமை நாடும் இவருக்கு இதய சிகிச்சை (பை பாஸ்) நடந்திருக்கிறது. புற்று நோய் பிரச்னையும் இருந்திருக்கிறது.
பெண்மையை மென்மையாக ஆனால், உள்ளது உள்ளபடி, கையாளுவது தான் இவருக்கு பிடித்தது. வாசகர்களுக்கு ஆர்வம் இருப்பின், நாளை, அது பற்றி பேசலாம்.
உதவிய தளங்கள்:
  1. B B C
  2. New Yorker
  3. Salon
{ all dated 10 10 2013}
இன்னம்பூரான்
10 10 2013

Tuesday, April 9, 2013

நோபெல் திருவிழா பகுதி-4

Innamburan Innamburan Thu, Oct 11, 2012 at 12:28 PM
To: mintamil , thamizhvaasal , vallamai@googlegroups.com, vallamai editor , தமிழ் சிறகுகள்

நோபெல் திருவிழா
பகுதி-4
இன்னம்பூரான்Inline image 1
11 10 2012
இலக்கியத்துக்கான நோபெல் பரிசு அறிவிக்கப்படும் முன்னதாகவே, ஊடகங்களில் பல பெயர்கள் அடிபடுகின்றன. கூர்மையாக விவாதிக்கப்படுகின்றன, ஆங்காங்கு பட்டி மன்றங்களில். அவற்றில், ஹரூகி முரகாமி (Haruki Murakami) என்ற ஜப்பானிய நாவலாசிரியர் பெரிதும் பேசப்படுகிறார். இஸ்மாயில் காதரே என்ற அல்பேனியரும், மோ யான் என்ற சீனரும், சீஸ் நூடெபூம் என்ற டச்சுக்காரரும், ஐயான் மக்வான் என்ற ஆங்கிலேயரும், பாப் டைலான் என்ற பிரபல பாடலாசிரியரும், ஃபிலிப் ரோத் என்ற தடிமன் நாவல் புகழ் அமெரிக்கரும், கார்மெக் மெக்கர்த்தி என்ற மற்றொரு அமெரிக்கரும், அமேஜ் ஓஸ் என்ற இஸ்ரேலியரும், மிகவும் அதிக ஊதியம் பெற்று வரும் டாஸிய மெரைனி என்ற இத்தாலிய பெண்மணியும், களத்தில் இருப்பதாக அசரீரிகள் அங்குமிங்கும் ‘விர்’ ‘விர்’ என பறந்த வண்னம் உள்ளன.
இந்த விநாடி. ஓடி வந்த ஃப்ளாஷ்: மோ யான் என்ற புனைப்பெயரில் பல மொழிகளில் எழுதி வரும் திரு குவான் மோயே (Guan Moye) பரிசை தட்டிச்செல்கிறார். ஒரு வேளாண்மை குடும்பத்தில் 1955ல் வடகிழக்கு சைனாவில் பிறந்து வளர்ந்த மோயே, 12 வயதில் பள்ளிப்படிப்பை உதறிவிட்டு, விவசாயம், தொழிற்சாலையில் ஊழியம் என சென்று விட்டார். 1976ம் ஆண்டு ‘மக்கள் விடுதலை ப்படையில் சேர்ந்த பின், இலக்கியம் படிக்கத்தொடங்கினார். எழுதவும் தொடங்கினார். முதல் சிறுகதை வளி வந்தது 1981ல். 1986ல் வெளி வந்த குறு நாவல் Touming de hong luoboம் 1993ல் வெளிவந்த ஃப்ரென்ச் நாவல் Le radis de cristal ம் அவருக்கு புகழ் தேடித்தந்தன. அவருடைய படைப்புகளில் வரலாற்று மோகமும், பாமர கீர்த்தியும், சமுதாய குறை காணலும் அதிகம்.
கற்பனையையும், நிஜத்தையும் , வரலாற்று/சமூக வரலாற்றுத்துணுக்குகளாக, ரசவாதம் செய்து, கிழக்குக்கும், மேற்குக்கும் உகந்த இலக்கிய பாலங்கள் அமைத்தார். 
******



Iyappan KrishnanFri, Oct 12, 2012 at 8:25 AM
Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com
// ‘ராமசாமி! மீட்டிங் இன்று மதியம் 14 மணி- 58வது நிமிடம்- 17வது வினாடியின் 9482.7 துகளில் ஆரம்பம். அதற்கு சரியான விமானம் பிடித்து வந்து விடுங்கள்’ என்று சொல்லும் காலம் வெகு தூரமில்லை. இந்தியா தாங்குமா, சாரே! //  

IST = Indian Stretchable Time க்கு இது சரி பட்டு வருமா?

Sunday, March 3, 2013

அன்றொரு நாள்: நவம்பர் 27:I வைரக்குவியல்: I




அன்றொரு நாள்: நவம்பர் 27:I வைரக்குவியல்: I
7 messages

Innamburan Innamburan Sun, Nov 27, 2011 at 7:14 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: நவம்பர் 27:I
வைரக்குவியல்: I
ஒரு மனோவாக்கு அதிசயமாக பயணித்து, நிரந்தமான கொடையாக குடை விரித்து, உலகை ஒரே இனமாக பாவித்து, 1901லிருந்து கிட்டத்தட்ட 800 சாதனையாளர்களை பாராட்டி, சுடராழி போல் திகழ்கிறது என்றால், அது தான் நோபெல் பரிசு. அதற்கான திட்டம் ஒன்றை வகுத்து, தன் செல்வத்தில் 94 %  பங்கை அதற்காக ஒதுக்கி வைத்து எழுதிய உயிலில் திரு. ஆல்ஃப்ரெட் நோபெல்் கையொப்பமிட்ட தினம், நவம்பர் 27, 1895. திரு. ஆல்ஃபெரட் நோபல் ஒரு விஞ்ஞானி. டைனமைட் என்ற வெடிமருந்தை கண்டு பிடித்தவர். அதன் விளைவாக, அபரிமிதமான செல்வம் ஈட்டியவர். (பிற்காலத்து ‘அபகீர்த்தி போஃபோர்ஸ்’ இவருடைய சொத்து தான்.) இறவா வரம் பெற்ற இந்த பரிசில் வந்த விதம் விந்தை. ‘மரணத்தின் வியாபாரி இறப்பு’ என்று அவருடைய சகோதரனின் மரணத்தை பற்றி வந்த செய்தி, இவரது மனோதர்மத்தை அலக்கழித்தது. திடுக்கிட்ட ஆல்ஃப்ரெட், இந்த முடிவுக்கு வந்தார். ஐந்து துறைகளுக்கு நோபெல் பரிசில். 1968லிருந்து பொருளியலுக்கும்; அது ஸ்வீடன் மத்திய வங்கியின் உபயம். நோபெல் பரிசு பற்றி சர்ச்சைகள் பல உண்டு. கணக்கு சாத்திரத்துக்கு பரிசில் இல்லை! ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டும்,  அமைதி பரிசில் மஹாத்மா காந்திக்கு மறுக்கப்பட்டது. பெர்னார்ட் ஷா நோபெல் பரிசை, கேலி செய்து, நிராகரித்தார். சில வருடங்கள் பரிசில்கள் அறிவிக்கப்படவில்லை. இத்யாதி.
பல வருடங்களுக்கு முன் உலக அளவிலான பொது அறிவை வளர்ப்பதை பற்றி பேச்சு வந்த போது, நோபல் பரிசின் வரலாறு பெரிதும் உதவும் என்றேன். அவ்வப்பொழுது அதை படிப்பதும் என் வழக்கம். இடம், பொருள், ஏவல், ஆர்வம், அவற்றின் எல்லைகள், வாசக ருசி ஆகியவை கருதி, ஒரு சிறிய அறிமுகத்துடன் முடித்து விடுகிறேன். அதற்காக, 111 வருடங்களாக பாராட்டப்பெற்ற சாதனையாளர்களில் சிலரை பற்றி மட்டும், சில வரிகள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்றாலும், எனக்கே இப்படி தந்தி பாஷையில் கோஷமிடுவதில் சந்தோஷம் இல்லை. என்றோரு நாளில், உரிய முறையில் விளக்கமாக, நோபெலர்கள் பற்றி ஒரு மின்னூல் வரவுக்கு இது தூண்டிலாக இருக்கட்டும். நான் எழுதினால் என்ன? மற்றவர்கள் எழுதினால் என்ன?
  1. இலக்கியம்:
1999ல் இலக்கிய நோபெலர், கந்தர் க்ராஸ் (Günter Grass). இலக்கியம் படைத்த தத்துவஞானி. தத்துவம் பேசும் படைப்பாளி. நோபெல் பரிசு பெறும் போது அவர் ஆற்றிய உரையிலிருந்து சில துளிகள்.
‘கதை சொல்லிகள் இல்லாத காலமே கிடையாது...படிக்காத மேதைகளின் கதைகள் சுவை மிகுந்தவை...வாசகர்களின் ஆரவம் குன்றினாலும் கவலையில்லை. அவர்களே கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்...சைனா, இந்தியா, பெர்சியா, பெரு நாடு அங்கெல்லாம் கதை சொல்லிகள் தாம் இலக்கியம் படைத்தார்கள்...மறக்கவேண்டாம்.கதையின் உற்பத்தி உதட்டில். பேச்சு மொழி இலக்கியம் தான் முதல் வரவு...நான் எழுத்தாளனாக ஆனதின் பின்னணி: பகற்கனவு, சொல் விளையாட்டு, பொருத்தமான பொய் சொல்வதில் உள்ள சுகம் & அரசியலின் தலையீடு...ஐ.நா.வில் வில்லி ப்ரேண்ட் அவர்கள் ‘பசியும் ஒரு போர்க்களமே’ என்று அதிரவைக்கும் முழக்கம் செய்த போது நான் அங்கிருந்தேன். அப்போது நான் எழுதிவந்த ‘குப்புறவிழுந்தான்’ என்ற புதினம், மிதமிஞ்சிய விருந்தும், பட்டினிச்சாவும், சாப்பாட்டு ராமன்களும், அன்றாடம் காய்ச்சி நோஞ்சான்களும், எருமை நாக்கின் ருசியும், எச்சில் பொறுக்கியும் போன்ற வாழ்வியல் அடித்தளங்களை பற்றி இருந்ததும் ஒருமிக்க கருத்துக்கள்...”.
2. அமைதி:
1999ம் வருட நோபெல் பரிசில் ஒரு தன்னார்வ அமைப்புக்கு தரப்பட்டது. ப்ரஸ்ஸல் நகரில் 1971 ம் வருடம் பத்து ஃபெரன்ச் டாக்டர்களால் துவக்கப்பட்டு, 20 நாடுகளில் அலுவலகங்கள் அமைத்து 70 நாடுகளில், தேவைக்கேற்ப, அந்தந்த நாட்டு அரசுகளின் அழைப்புக்கு காத்திராமல், மருத்துவப்பணி செய்யும் அந்த அமைப்பின் பெயர்: ‘எல்லை கடந்த மருத்துவர்கள்’. செஞ்சிலுவை சங்கத்தின் போக்கின் மீது இருந்த அதிருப்தியால், இந்த அமைப்பு உருவாயிற்று.1972ல் நிக்கராகுவே பூகம்ப நிவாரணப்பணியில் எடுத்த நற்பெயர், தொடர்ந்த நற்பணியினால், 1999ல் நோபெல் கிடைக்க ஹேதுவாயிற்று. அநியாயத்தை எதிர்க்கும் தன்மை இருப்பதால், சில நாடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட அனுபவமும் இதற்கு உண்டு.
3. மருத்துவம்:1912, வருடத்து நோபெல் பரிசு டாக்டர் அலெக்ஸிஸ் கெரல் என்ற ஃபெரன்ச் டாக்டருக்கு, ரத்தக்குழாய்களுக்கு தையல் போடும் விதம் கண்டு பிடித்ததற்கு. சொல்லப்போனால், இவருடைய சாதனை போர்முனை ஆஸ்பத்திரிகளின் செயல்பாடுகளுக்கும், பிற்கால உறுப்பு அறுவடை/மாற்றல் சிகிச்சைக்கும் அபூரவ்மான வழி வகுத்தது. அவருடைய ‘மனிதன்: நாம் அறியா மர்மங்கள்’ என்ற நூல் என்னை மிகவும் கவர்ந்தது.
4. பொருளியல்: 
1998ம் வருட நோபெல் பரிசு அமார்த்தியா சென். பொருளியலின் மனசாக்ஷி என்று அழைக்கப்படும் அமார்த்தியா சென் ஒரு நேர் காணலில் சொன்னது: ‘பொருளியல் ஆளுமையில் அரசுக்கும் பங்கு உண்டு; சுதந்திர சந்தைக்கும் பங்குண்டு;திட்டமிடுவதும் வேண்டும். சலுகைக்களுக்கும் இடமுண்டு; ஜனநாயகமும், மனித உரிமையும் முக்கியம் என்பது மட்டுமல்ல; சமுதாய முன்னேற்றத்திலும், பொருளியல் வளர்ச்சிக்கும் அவை இன்றியமையாதவை...’.
பரிசில் கிடைத்த சமயத்தில், அவர் கேம்பிரிட்ஜ் ட் ரினிட்டி காலேஜின் மாஸ்டர் (தலைவர்) ஆக இருந்தார். கேம்ப்ரிட்ஜின் 31வது நோபெல் சாதனையாளர். ட் ரினிட்டியின் சமீப கால ஐந்து மாஸ்டர்களில் மூவர் நொபெல் சாதனையாளர்கள்.
(தொடரலாமா?)
இன்னம்பூரான்
27 11 2011
sweden_photo2.jpg10610s.jpgstamps1.jpgalexis_carrel_021.gifAmartyaSENN.jpg



உசாத்துணை:


Geetha Sambasivam Sun, Nov 27, 2011 at 7:22 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
தொடருங்கள்.  அமர்த்தியா சென்னை மட்டும் அறிவேன்; மற்ற இருவர் பற்றியும் அறிந்ததில்லை.  மற்றபடி நோபல் பரிசின் வரலாறு ஓரளவுக்குத் தெரியும். தொடருங்கள் காத்திருக்கோம்.

2011/11/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 27:I
வைரக்குவியல்: I

4. பொருளியல்: 
1998ம் வருட நோபெல் பரிசு அமார்த்தியா சென். பொருளியலின் மனசாக்ஷி என்று அழைக்கப்படும் அமார்த்தியா சென் ஒரு நேர் காணலில் சொன்னது: ‘பொருளியல் ஆளுமையில் அரசுக்கும் பங்கு உண்டு; சுதந்திர சந்தைக்கும் பங்குண்டு;திட்டமிடுவதும் வேண்டும். சலுகைக்களுக்கும் இடமுண்டு; ஜனநாயகமும், மனித உரிமையும் முக்கியம் என்பது மட்டுமல்ல; சமுதாய முன்னேற்றத்திலும், பொருளியல் வளர்ச்சிக்கும் அவை இன்றியமையாதவை...’.
பரிசில் கிடைத்த சமயத்தில், அவர் கேம்பிரிட்ஜ் ட் ரினிட்டி காலேஜின் மாஸ்டர் (தலைவர்) ஆக இருந்தார். கேம்ப்ரிட்ஜின் 31வது நோபெல் சாதனையாளர். ட் ரினிட்டியின் சமீப கால ஐந்து மாஸ்டர்களில் மூவர் நொபெல் சாதனையாளர்கள்.
(தொடரலாமா?)
இன்னம்பூரான்
27 11 2011


rajamSun, Nov 27, 2011 at 7:57 PM
To: mintamil@googlegroups.com
Cc: Innamburan Innamburan
கட்டாயமாகத் தொடருங்கள்! சங்கத்தமிழ் இலக்கணத்துக்கும் அந்தப் பரிசு வேணும் என்றும் பரிந்துரை செய்யுங்கள்! [கொசுறு: அது எனக்குக் கிடைக்கணும்-னும் ஸ்ரீராமனை வேண்டுங்கள், என்ன!!]  :-) :-) :-)



Innamburan Innamburan Sun, Nov 27, 2011 at 9:29 PM
To: mintamil , rajam
Cc: Innamburan Innamburan
நான் எவெர் ரெடி, ராஜம். கட்டுரையின் முதற்பகுதியே பிடித்துப்போனது சந்தோஷம். அது சரி. 'அன்றொரு நாள்: நவம்பர் 25செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம்' கண்ணில் தென்பட்டதோ?
[Quoted text hidden]

rajam Mon, Nov 28, 2011 at 1:25 AM
To: Innamburan Innamburan

On Nov 27, 2011, at 1:29 PM, Innamburan Innamburan wrote:

நான் எவெர் ரெடி, ராஜம். கட்டுரையின் முதற்பகுதியே பிடித்துப்போனது சந்தோஷம். அது சரி. 'அன்றொரு நாள்: நவம்பர் 25செல்வி. மீரா அனந்தகிருஷ்ணனுக்கு சமர்ப்பணம்' கண்ணில் தென்பட்டதோ?
இ 

பட்டது, மிகவும் நன்றி! ஏற்கனவே அந்த நிகழ்ச்சி பற்றிச் சொல்லிவிட்டதால் திரும்பவும் சொல்லலை. பாவம் அந்தக் குழந்தை.

அதோடு ... "பெண்மை" என்றும் "தாய்மை" என்றும் (தேனீயார் போன்றவர்கள்!) பீற்றிக்கொண்டாலும் அவர்கள் விரலை அசக்கி என்ன செய்கிறார்களோ தெரியவில்லை. சும்மா பிரசவ சமயத்துலெ வேண்டிண்டேன்-னு ஒளறினாப் போறுமா? அதனால் "பெண்ணியம்" ... அந்த மாதிரித் தலைப்பில் நான் ஈடுபட்டு ஒன்றும் சொல்வதில்லை. அதுபற்றி என் வாயைத் திறந்தால் சில ஆடவரால் கேட்டுத் தாங்கிக்கொள்ளமுடியாது! :-) 
அன்புடன்,
ராஜம்
[Quoted text hidden]

Subashini Tremmel Fri, Dec 2, 2011 at 9:40 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com


2011/11/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 27:I
வைரக்குவியல்: I
..
(தொடரலாமா?)

தொடருங்கள்.. 

சுபா
 
இன்னம்பூரான்
27 11 2011
sweden_photo2.jpg10610s.jpgstamps1.jpgalexis_carrel_021.gifAmartyaSENN.jpg



உசாத்துணை:



Innamburan Innamburan Fri, Dec 2, 2011 at 9:46 PM
To: mintamil@googlegroups.com


2011/12/2 Subashini Tremmel <ksubashini@gmail.com>


2011/11/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 27:I
வைரக்குவியல்: I
..
(தொடரலாமா?)

தொடருங்கள்.. 

சுபா
~  நன்றி. என்ரிக்கோ ஃபெர்மி வந்து கொண்டே இருக்கிறார்.