Wednesday, February 11, 2015

என்னத்தைச் சொல்ல? -7 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (5)

என்னத்தைச் சொல்ல? -7 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும் II (5)


இன்னம்பூரான்
11 02 2015

மாமாங்கத்துக்கு மாமாங்கம் சால்ஜாப்பு சொல்லுவோம். 
ஜாமத்துக்கு ஜாமம் ஊரை நாசமடிப்போம்.
ஏமாத்து வேலைக்கு ஜால்ரா போடுவோம். விளக்கு
மாத்தாலெ அடிச்சாலும் சுரணை கிடையாது.

‘பீஸ் சால் கே பாத்’ (20 வருடங்களுக்கு பிறகு) என்ற ஒரு சினிமா அந்த காலத்தில் பிரபலம். பேரை மட்டும் வாங்கிக்கிறேன், ஒரு முப்பது வருட கொலைக்களத்து பிலாக்கணம் பாட:

1996ம் வருடம் உச்ச நீதி மன்றத்துக்கு முன்னால், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கொடுத்த சபதம் இது:

"It is submitted that there are 584 tanneries in North Arcot Ambedkar District vide annexure 'A' and 'D'. Out of which 443 Tanneries have applied for consent of the Board. The Government were concerned with the treatment and disposal of effluent from tanneries. The Government gave time upto 31.7.1985 to tanneries to put up Effluent Treatment Plant (E.T.P.). So far 33 tanneries in North Arcot Ambedkar District have put up Effluent Treatment Plant. The Board has stipulated standards for the effluent to be disposed by the tanneries."

அந்த சபதத்தை மீறி, கண்ட கழுதைகளுக்கு ஆதரவு அளித்து, அண்ணல் காந்தியின் தரித்ர நாரயணனை அவர் கொலையுண்ட தினத்தில், கொலை செய்தவர்களை என்ன செய்யலாம்? நடந்தது என்ன? முப்பது வருடங்களுக்கு பிறகு:

ராணிபேட்டையில் ஒரு சாக்கடை. அந்த ‘சாக்கடை’ எனப்படுவது சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட ஒரு சாயகழிப்பறை. நஞ்சு கலந்த சாயக்கழிவுகளால் காந்தி மகான் அஞ்சலி தினமன்று அங்கு ஒரு பிணக்குவியல். அந்த ஹெக்ஸாவெல்ண்ட் க்ரோமியம் அந்த பிராந்தியத்தில் குடிநீர் குடிப்பவர்களையும் கொன்றுவிடுமாம். எத்தனை அப்பாவிகள் செத்தனரோ? அந்த வெள்ளிக்கிழமையில் இறந்த பத்து பேர்களில் ஒன்பது பேர் வறுமையின் காரணமாக மேற்கு வங்காளத்திலிருந்து வந்திருந்த அன்றாடங்காய்ச்சி இளைஞர்கள். அவர்களை கொன்று குவித்த முதலாளிகளுக்கு தேசீய சுற்றுப்புறசூழல் நீதிமன்றம் ரூபாய் 75 லட்சம் தண்டனை அளித்திருக்கிறது. அதில் 50 லட்சம் அரசுக்கு; பாக்கி கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு. வரிப்பணத்தில் கைவைக்காமல், மாசுபடுத்தியவர்களிடமிருந்து நஷ்ட ஈடு வாங்கியது சரி தான் என்றாலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரங்கெட்ட அதிகாரிகள்  இதற்கெல்லாம் உள்கை.  கொலையில் அவர்களுக்கும் பங்கு உண்டு. அந்த வாரியத்தின் தலைமை குற்றத்தை ஒத்துக்கொண்டு இருக்கிறது. 

உசாத்துணை;








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, January 30, 2015

சச்சரவாக ஒரு சர்ச்சை!

சச்சரவாக ஒரு சர்ச்சை!

Monday, January 26, 2015

ஆர்.கே.லக்ஷ்மண்



என் நண்பன் இறந்து விட்டான். நான் அழுகிறேன்.


Wednesday, January 21, 2015

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:6 முதல் ஐந்து கடிதங்கள்

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:6

முதல் ஐந்து கடிதங்கள் 
இன்னம்பூரான்
21 01 2015

தமிழ் மரபு அறக்கட்டளையின் முகமலராகிய மின் தமிழ் நாட்தோறும் புதிய விஷயங்களை கட்டியம் கூறி வரவேற்கவேண்டும்: ஆக்கப்பூர்வமாக இயங்கவேண்டும்; மாணவ சமுதாயத்துக்குத் தொண்டு செய்யவேண்டும்;  த.ம.அ சேகரங்களை அலசி, ஆராய்ந்து அருளவேண்டும் என்ற என் அவாவுக்கு வரவேற்பு இருப்பதாக, கண்ணன், சுபா, திரு.நரசய்யா, ஷைலஜா போன்றவர்களின் பின்னூட்டங்கள் அமைகின்றன. தமிழ் மொழியை கையாளும் போது, நான் தமிழ்த்  தென்றல் திரு.வி.க. அவர்களின்  அறிவுரைகளை ஏற்கிறேன். 

“...தாய்மொழியிற் கல்வி பெறுவது இயற்கை...பின்னை வேறு பல மொழிகளை பயிலலாம்: ஆராயலாம்...இந்நாளில் (1932) தூயத்தமிழர் இன்னாரென்றும், குடிபுகுந்து நிலைத்த தமிழர் இன்னாரென்று பிரித்துக்காட்டல் எவராலும் இயலாததொன்று...இப்போது தூய ஆரியர் இன்னார்’-’தூய தனித்தமிழர் இன்னார்’ என்று எவரே பிரிக்கவல்லார்?...பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது...வடமொழி பாரதநாட்டுக்குரிய பொது மொழி...”

வல்லமையிலும் அவ்வாறே தான் எழுதிவருகிறேன். சொல்லின் பயனைப் பொருளின் சுவையில் காண்கிறேன். இந்த ஐந்து கடிதங்களும் வெவ்வேறு விதங்களில் சுவை கூட்டுகின்றன; மகிழ்விக்கின்றன; அறிவுரை அருளுகின்றன; இயல்பாக அமைந்து என் அணுகுமுறையை ஆதரிக்கின்றன.

  1. முதல் கடிதம் மிகவும் பிரபலமாக அமெரிக்காவில் பல்லாண்டு பல்லாண்டாக வளையவரும் சிரஞ்சீவி மடலின் தமிழாக்கம். பொறுப்பு எனதே. தற்கால தமிழாளுமையார்கள் வர்ஜீனியாவுக்கு பதில் போடுவார்களா என்பது கேள்விக்குறி.  பதில் எழுதிய இதழாளர் சிறுமிக்கு புரியும் வகையில் எழுதினார்; ஷேக்ஸ்பிரிய ஆங்கிலத்தில் எழுதவில்லை. வர்ஜீனியாபிரிய ஆங்கிலத்தில் எழுதினார்.
  2. இது ரசிகமணி டி.கே.சி. அவர்களின் கடிதத்தில் ஒரு பகுதி. ‘ஆஸ்பத்திரி’, ‘பிரத்யேகமாக’, ‘பாஷை’ போன்ற சொற்களை இயல்பாகவே பயன்படுத்தியுள்ளார்.  தமிழார்வத்தில் நாம் ஒருவருக்கும் குறைந்தவர் இல்லை, அவர். இது அந்தக்கடிதத்தில் உள்ள மென்மையான நகைச்சுவையிலிருந்து  தெரிகிறது. யாருமே அவர் பெயரை ஊகிக்கவில்லை என்று குறைப்பட்டுக்கொள்கிறேன்.
  3. இந்த கற்பனை கடிதம், எம்.ஏ. பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. திரு.நரசய்யா சொல்வதை என் நிர்வாக அனுபவம் ஆதரிக்கிறது. சுபாஷிணி சொல்வதை என் சமூகவியல் ஆய்வுகள் ஆமோதிக்கின்றன. அதீதமாக மிகைப்படுத்தி எழுதப்படும் கடிதங்கள் பொருட்படுத்தப்படுவதில்லை. ஆனால், மிகையாக தோன்றும் புகையே, பகை தான் என்றால் சிந்திக்கப்படவேண்டிய/அவசர உதவி அளிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது எனலாம்.  ஒரே கடிதத்தில், டாஸ்மாக் கண்டனம், சுகாதாரக்குறைவின் சாபமாக அன்னை ஆஸ்பத்திரியில், ஒரு உளவியல்,  வேலையில்லாத்திண்டாட்டம், பளாரென்று நம்மை செருப்பால் அடிக்கும் வறுமை எல்லாம் இடம் பெற்று விட்டன. இதை தர்ப்பண (முகம் பார்க்கும் கண்ணாடி) இலக்கியம் எனக் கருதுகிறேன். ‘இக்கடிதம் உண்மையே என்று எடுத்துக் கொள் ளும் நிலையில், தமிழகத்தின் மிகச் சாதாரண வாழ்வியல் நிலை அதாவது அடித்தட்டுவர்க்கமக்களின் அன்றாட நிலையை ஒரு கடிதத்திலேயே வெளிச்சமாக்கும் ஆவணமாகத் திகழ்கின்றது.’ என்பது நிதர்சனம்.
  4. ‘... 'ஜன சக்தி' வார மலரை ஒரு இதழ்கூடத் தவறவிடாமல், கட்டாயம் சேர்த்துவைப்பாய் என்று நம்புகிறேன்.’ என்பதிலேயே இவருடைய முகவிலாசம் இருக்கிறது. இவர் தான் கம்யூனிஸ்ட் துறவி ப. ஜீவானந்தம் அவர்கள். பெண்ணியத்துக்கு முகநூல் இந்தக்கடிதத்தொகுப்பு என்றால் மிகையல்ல. அவர் விளிக்கும் பெண்மணி கற்பனையாகக்கூட இருக்கலாம். ஆனால் கடித இலக்கியம் அற்புதமான படிப்பினைகளை அள்ளி அள்ளித் தருவதற்கு, இது ஒரு சான்று. ஜீவாவும் கோஷம், வியாபகம்,பரிட்சை போன்ற வடமொழிச்சொற்களை பயன்படுத்த தயங்கவில்லை. மேலும் ரஞ்சனி சொன்னாற்போல், ‘"நல்ல வைத்தியனிடம் மூன்று பண்புகள் இருக்கவேண்டும். ஒன்று, தன்னலங் கருதாமலும் உள்ளதை மறைக்காமலும் இருக்கும் உணர்வு; இறந்து, நோயாளி படுகிற துன்பத்தையும் வேதனையையும் தீர்க்க விரும்பும் பரிவு; மூன்று, நோயின் தன்மையையும் அதனால் வரும் கேட்டையும் பகுத்து அறிந்து, அதைக் குணப்படுத்தும் மருந்தை அறிகிற அறிவு" என்ரு பகுதியில் மூலத்திலேயே ‘இரண்டு’ என்ற சொல்லுக்கு பதிலாக ‘இறந்து’ என்ற சொற்பிழை நேர்ந்துள்ளது. ரஞ்சனி உன்னிப்பாகப்படித்தது எனக்கு ஆறுதல். மற்றபடி யார் படிப்பார்கள் என்று நினைத்தேன்.
  5. தமிழனை ‘அப்பாவி’ என்றும் அவன் பேசும் பாஷையை பொல்லாதது என்றும், அவனை பயித்தார ஆஸ்பத்திரிக்கு அனுப்பவேண்டும் என்று கேலி செய்தது ரசிகமணி அவர்கள் தாம். நாம் தான் இன்னும் மாறவில்லை.

-#-

Thursday, January 15, 2015

என்னத்தைச்சொல்ல ? 7: கோலமும் அலங்கோலமும்: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [4]



என்னத்தைச்சொல்ல ? 7:
ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [4]
கோலமும் அலங்கோலமும்
இன்னம்பூரான்
15 01 2015.
மங்கலம் இங்குப் பொங்கவில்லை. கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன் உயரதிகாரி மாற்றப்பட்டவுடன், ஒப்பந்தங்களின் விலை கூடின என்று ஒரு ஆடிட் ரிப்போர்ட் கொடுத்தேன். மேலாவில் அதை ஏற்க தயங்கினார்கள்: அது புதுமையாக இருந்தது காரணம். ஆனால், சான்றுகள் பலமாக இருந்தன.ஆடிட் ரிப்போர்ட்டில் பிரசுரம் ஆகிவிட்டது. அது போல, ஒரு பொறுப்பான அதிகாரி பத்து வருடங்களுக்கு முன் ஓய்வில் சென்று விட்ட பின் தெலிங்கானாவின் அடிலாபாத் மாவட்டத்தின் ‘கோலம்’ ஆதிவாசிகள் அலங்கோலப்படுத்தப்பட்டனர். அவ்வப்பொழுது தலையெடுக்கும் வியாதி வெக்கைகள் அவர்களை தீர்த்துக்கட்டின. கடந்த குளிர் காலத்தில், ஜெய்னூர், சிர்பூர் மண்டலங்களில் வசித்த 65 கோலம் மக்களில் 20 பேர் மரித்தனர். அரசும் அதிகாரிகளும் அவர்களை தூசு என்று ஒதுக்கிவிட்டதால், அவர்கள் பயங்கரமாக அனாதையாகினர். அரசு அளிக்கும் மக்கள் நல திட்டங்கள் ஒன்றாவது அவர்களை தொடக்கூட இல்லை. சோத்துக்குப் பஞ்சம். 5000 மக்களை பற்றி ஆராய்ந்தபோது, அவர்கள் பயரிட்ட நெல்லை அவர்கள் விற்கவேண்டி இருந்தது. காட்டில் பொறுக்கிய ‘இப்பா’, ‘மஹுவா’ செத்த பிராணிகளின் மாமிசம் போன்றதை வேறு வழியில்லாமல், தின்றதால், உடலில் திடமில்லை. நஞ்சு ஏறியது, உடலில். கல்வி என்று பார்க்கப்போனால், மூன்று வருடங்களாக, பள்ளியாசிரியரே கிடையாது. சின்னஞ்சிறார்களும் கடுமையாக உழைத்தால் தான், கொஞ்சநஞ்ச வருமானம். இன்றும் அதே கதி தான். ரேஷன் அரிசியும் ‘லபக்’. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பற்றி அவர்கள் கேள்விப்பட்டது கூட கிடையாது.
ஹீனமான குரலில் கொத்தப்பல்லி கோலம்குடா என்ற நற்நூர் மண்டலத்தின் கிராம ஊழியர், ‘எங்களுக்கு பழையமாதிரி, ஒரு நல்ல மேற்பார்வை அதிகாரி வேண்டும்’ என்று வேண்டுகிறார்.
உரிய அதிகாரம் கொடுத்து அனுப்பினால், நான் சம்பளம் வாங்காமல் அந்த அலங்கோலப்படுத்தப்பட்ட கோலம் மக்களுக்கு உழைக்கத்தயார். 
இவர்களின் இன்னல்களை யார் நமது பிரதமர் மோடிக்கு எடுத்துச்சொல்வார்கள்?

மேற்படி அழுகுரலுக்கு ஆதாரம் கீழே. ஹிந்து இதழ் காப்புரிமை படங்களை நாம் போடக்கூடாது.நீங்கள் ஆதாரத்துக்கு சென்று பார்த்து, ரத்தக்கண்ணீர் விடுங்கள்.

© The Hindu
-#-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, January 14, 2015

ARMY DAY: 15 01 2015

ARMY DAY: 15 01 2015

The Indian Army is gearing up to celebrate the 67th Army Day on January 15, 2015. With growing pressures across the borders and increasing low-intensity conflicts within the country, the role of Indian Army is changing by the day. On the occasion of Army Day, here's a close look at the Southern Command and some of its significant achievements. The Command is headquartered in Pune. (The matter is being sourced from the Ministry of Defence, the Indian Army and the Press Information Bureau). Surrender by Pakistan to India Investiture Ceremony in Mumbai this year The Army Day is celebrated every year on January 15 to mark the taking over of the Indian Army by the first Indian Commander-in-Chief, Lieutenant General (Later Field Marshal) K M Cariappa on the January 15, 1948. He took over the reins of the Indian Army from Lieutenant General Sir Francis Butcher, the last British Commander-in-Chief. The day is marked by ceremonial events all over India. This year, the Southern Command will be hosting an Investiture Ceremony in Mumbai at the Gateway of India on January 15. 2015. Thirty recipients of various gallantry and distinguished services awards will be honoured on the occasion. The formal raising of Southern Command was on April 1, 1895. The Southern Command is responsible for guarding the Western and Southern borders. It has taken part in all major military operations since Independence. The Command has also provided succor to the citizens in times of natural calamities and disasters. Victorious Indian soldiers atop a Pakistani tank in Longewala Key role during Indo-Pak War in 1965 The Command was responsible for Junagarh and Hyderabad signing the Instruments of Accession to India. The process of nation building also saw the Southern Command playing a stellar role in the liberation of Goa from the Portuguese in 1961. The Command played an important part in the 1965 war with Pakistan. The Southern Star Command gave an outstanding account of itself in 1971 Indo-Pak war. The legendary Battle of Longewala was fought in the Jaisalmer Sector under the Command. The offensive launched by the Southern Command in Khokrapar and Gadra city in West Pakistan was instrumental in capturing nearly 9000 square kms of Pakistani territory in the Barmer Sector which was the largest area captured in the Western Theatre while the major part of the war raged on in the Eastern Theatre. Indian tank negotiates an obstacle with ease Playing a real hero when it matters the most The Command has provided relief to the citizens on a number of occasions when nature's fury or man-made disasters have struck the citizens in the Southern part of the country. Be it the Bombay Dock Workers' Strike in 1947, the Koyna earthquake of 1960, the Khadakswala Dam burst of 1961, earthquakes in Latur in 1993 and in Bhuj in 2001, the tsunami in 2004, the 26/11 attacks in Mumbai or floods which have ravaged various parts of India every year, the Southern Command has always been there to help those who were affected. Infallible and indefatigable soldiers of Southern Command have always put their lives at risk to save the helpless victims. In 2014, the soldiers of Southern Command were called out to provide rescue and relief during a number of natural calamities including cyclone Hud-Hud that hit Coastal Andhra Pradesh in October 2014 and floods that swept Vadodara in September 2014. The Command also provided material and manpower for Op Meghraahat, flood relief in the devastating floods in the Kashmir Valley in September 2014. Delivery of a deadly load onto the enemy Best training establishments under the Command The Southern Command also has the proud privilege of being home to some of the best training establishments of the Indian Army like the NDA, the School of Artillery, Deolali, the OTA, Chennai, the Armoured Corps Centre and the School, Ahmednagar, College of Military Engineering, Pune to name a few. In all, there are 23 major training institutions located in the Southern Command. Sports persons are trained regularly at the Army Sports Institute (ASI), Pune and the Army Rowing Node (ARN), CME, Pune. Various Army teams have brought laurels for the nation during the Asian Games 2014 held at Incheon. Soldiers during the recent Operation HudHud Series of welfare measures The Command has also initiated a number of welfare measures to take care of the the need of veterans and veer naries residing in the area of responsibility. The formation remains steadfast in furthering the cause of the Indian Army to take care of all personnel associated with it both serving and retired, and their families. Photo Courtesy: MoD (Chennai)

Read more at: http://www.oneindia.com/feature/southern-command-army-s-shining-star-1620665.html

Tuesday, January 13, 2015

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:3ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:3
இன்னம்பூரான்
13 02 2015
அதுவும் தமிழில்!
சின்சினாட்டிச்சின்னதாத்தா
(தொடர்கிறது)
[வழியிலே சூறாவளி. கேப்டன் வேறே... சொன்னால் விரோதம்! அதான் கப்பல் லேட்டு, ரஞ்சனி.]

அந்தக்காலத்திலேயே தண்டபாணி முன்கோபி. ஹாஸ்டலில் இதுலெ உப்பு கம்மி; அதுல்லெ ஒரு கல்லு ஜாஸ்தி, வாழைக்காய் பொடிமாஸ்ஸை கடிக்கவேண்டி இருக்கிறது, இட்டிலியை கெட்டிலி என்றெல்லாம் கலாய்ச்சிண்டுருப்பான்; ஒரு நாள் இவனுடைய பிலாக்கணத்தை கேட்டுக் கொண்டே சாமியார் வந்துட்டார். ‘தண்டபாணி! இன்னிலேருந்து நீ தான் மெஸ் செக்ரடரி’ அப்படினு சொன்னார், அந்த ‘சடக்’முன்கோபி ‘சதக்கென்று’ . இந்த ‘நின்னா குத்தம்; உக்காந்தா குத்தம்’ முன்கோபி, அதான் தண்டபாணி, வாணலியில் தத்தளிக்கிற மொளகாய் போல துள்ளிக் குதித்தெழுந்து, ‘சுவாமிஜி! வேண்டாம் அது. நான் குத்தம் சொல்லமுடியாதே’ என்றான். அவர் சிரிச்சிண்டே அன்னண்ட போய் பிரின்சிபால் கிட்ட வத்தி வச்சுட்டார். கேட்டு வாசல்லெ பொட்டி,படுக்கையோட சப்ஜாடா சொத்துபத்து, இரவல் வாங்கின புத்தகங்கள், நடிகைகள் படங்கள் சகிதமாக, அசட்டு அம்மாஞ்சி மாதிரி நின்னுண்டுருக்கான், தண்டபாணி. என்னடா என்று கேட்டால், என்னை எக்ஸ்ப்போர்ட் பண்ணிட்டாடா என்று ஒரு குரல் அழுதான். அதற்கப்பறம், இப்போ தான் அவனை பார்க்கிறோம்.
*
ஒரு உரையாடல்:
சுப்புடு: ஏண்டா! உன்னுடன் கூட இருக்கிற அந்த வெள்ளைக்காரக்கிழவி யாரு?
தண்டபாணி: நாக்கை அறுத்துடுவேன், அறுத்து. அவள் என்னோட ஒய்ஃப்டா.
குரு: சாஸ்த்ரோக்தமாக பண்ணிண்டையா? இல்லை..... சிகாகோவில் கோவில் இருக்கே. அதான் கேட்டேன். 
நம்ம மின் தமிழ்லெ நடக்கறாபோல, க்ஷணத்தில் சுதாரித்துக்கொண்ட தண்டபாணி, வரதனைப் பார்த்து, ‘ஏண்டா! உன் பொண்ணு நார்வேயிலெ இருக்காளாமே. ‘கரடி’ சொன்னான்.’ என்று திசை மாற்றின்னான். ‘கரடி’ வராத பிரகிருதி. அவன் காலை வாரலாம் என்று நாங்கள் இருந்த காலகட்டத்தில் தான் இந்த திசை மாற்றம். ‘கரடி’ புராணம் மிகவும் நீண்டது. நீங்க வேணும்னா வண்டலூரில் போய் ஜூவில் கரடியை பாருங்கோ. அதெல்லாம் போலி சார். இவன் தான் மூலவர் மாதிரி அட்டைக்கரி. ரோமஹர்ஷணர் (அதான் முடிகளால் மூடப்பட்ட மனிதன்). காலையும் கையும் பரப்பி அலாக்கா கரடி நடை பயில்வான். வரதன் ஐந்து தடவை ஃபோன் செய்தும் வரேன் என்று சொல்லிவிட்டும் ‘கரடி; வராததால், வரதனையே ஒரு பிடி பிடித்தோம், தண்டபாணி ஒத்துப்பாட.

ஐயா ஏற்கனவே லாகிரியால் ஆட்கொள்ளப்பட்டதால், துணிச்சலாக ஒரு காரியம் செய்தான்.
“This is a stag’s party, darling. And, these fellows are rogues of the first water. Not the place for you. I tell you what. You go to our Leela Palace Hotel and take rest. I shall come soon.” என்று சொல்லிவிட்டு மேலெழுந்தவாரியாக, அவளுக்கு ஒரு முச்சா கொடுத்தான். அது கண்டு திகைத்த குருவும் மூர்ச்சை அடைந்தான். 
நான் சொல்ல வந்தது என்ன என்றால்... பி.கு. நோக்குக.
(தொடரும்)
*
பி.கு. கவலையற்க. நான் திருக்கருகாவூரை மறக்கவில்லை. ஆனால், கதை கும்போணத்து குடமுருட்டி போல ஓட்றது. நான் என்ன செய்யமுடியும்? 

Tuesday, January 6, 2015

என்னத்தைச் சொல்ல?! ~7: ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [3]

என்னத்தைச் சொல்ல?! ~7: 




ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: II [3]

இன்னம்பூரான்
ஜனவரி 6, 2015

பல வருடங்களுக்கு முன் மும்பையில் சொற்பசம்பளத்தில் பணிபுரிந்த காலகட்டத்தில் ஒரு ஆபத்பாந்தவன் வந்து சேர்ந்தார். அவர் நடத்தும் தர்மஸ்தாபனத்துக்கு சில ஆயிரங்கள் காசோலை மூலம் நன்கொடை அளித்தால், கறாராக அதை முழுதும் காசாகவே திருப்பிக்கொடுப்பேன். உங்களுக்கு வரிச்சலுகை. எனக்கு நிறமாற்றம் (கருப்பிலிருந்து வெள்ளை). எப்படி ஐடியா என்று கொக்கரித்தார். இது அதர்மமில்லையோ என்ற என்னை புழுவைப்போல் துச்சமாகப் பார்த்தார். பத்து வருடங்கள் முன்னால் இந்திய மக்கள் ஆலோசனை மன்றம் துவக்கவேண்டும் என்ற வீராப்புடன் மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களில் தரமுயர்ந்த தன்னார்வக்குழுக்களுடன் கலந்தாலோசனை செய்தேன். அடிப்படை ஊழியம் செய்ய ஆள் கிடைக்கவில்லை. ஆனால் யாரோ பதினொரு ஆசாமிகளை கொணர்ந்து என்ஜீவோ சிறகு சொருக பல சில்லறைகள் தயாராக இருந்தன. போட்ட கைப்பணம் போச்சு என்று நானும் வாகை சூடா மன்னனாக இங்கிலாந்து திரும்பினேன். எதற்கு இந்த பீடிகை என்றா கேட்கிறீர்கள்?

இதோ. இந்தியாவில் கோடிக்கணக்கான ரூபாய்களில் புரளும் 25 லக்ஷம் தன்னார்வக்குழுக்களில் 10 % தான் சட்டத்திற்கு உட்பட்டு வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்கள் என்ற இந்திய புலன் விசாரணை கழகத்திடம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மாண்புமிகு ஹெ.எல்.டத்து அவர்களின் தலைமையில்  அமைக்கப்பட்ட நீதிபதிகள் குழு, ‘எல்லா தகவல்களையும் உடனுக்குடன் தொகுக்கவும்.பிறகு, உங்கள் உங்கள் வாதங்களை முன்வைக்கலாம். இந்த தன்னார்வக்குழுக்கள் அவர்களை ஆவணப்படுத்திய மையங்களுக்கு முழுமையாக கணக்கு வழக்கு தரவேண்டும் என்ற விதி என்ன ஆனது? அப்போது தான் வெளிப்படுத்தல் ஒழுங்காக நடைபெறும்.” என்று அறிவுரை அளித்தது. 

புள்ளியியல் கூறுவது: ஒன்பது மாநில தன்னார்வக்குழுக்களிலிருந்து தகவல் இல்லை. தமிழ் நாடும் அவற்றில் ஒன்று. 20 மாநிலங்களில் 23 லக்ஷம் குழுக்களில் 2.23 லக்ஷம் குழுக்கள் தான் கணக்கு வழக்கு அளித்தன.கிட்டத்தட்ட வருடம்தோறும் 950  கோடி அரசு மான்யம் பெறும் குழுக்கள் 2002 -2009 ல் பெற்ற மான்யம்: 6654  கோடி ரூபாய். மத்திய அரசின் நேரடி அரசாட்சி பெறும் பிராந்தியங்களில், டில்ல் பதில் சொல்லவில்லை மற்றவையில் கணக்குக் கொடுத்தவர்கள்: நூறில் ஒன்று. (1%). 22 ஆயிரம் குழுக்கள் பெற்ற வெளிநாட்டுக்கொடை $ 3.2 பில்லியன்.

இதெல்லாம் தோண்டித்துருவிய பெருமை எம்.எல். சர்மா என்ற வழக்கறிஞருக்கு உரியது. ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளை என்ற அன்னா ஹஜாரேயின் தன்னார்வக்குழுவை பற்றி அவர் விவரங்கள் கேட்க, இரண்டு வருடங்களுக்கு முன் உச்ச நீதி மன்றம் புலன் விசாரணைக்கு ஆணையிட, இத்தனை தேள், புழு, பூரான், நட்டுவாக்கிளி எல்லாம் தெரிய வந்தது.
எனக்கு என்னமோ சம்சயங்க:
  1. எந்த தைரியத்தில் அத்தனை அழுச்சாட்டியம் நடந்தது?
  2. உடன்கட்டை ஏற்றப்படுபவர்கள் யாரார்?
  3. கேட்க வேண்டியவர்கள் செத்து விட்டார்களா?
  4. தமிழ் நாட்டு தன்னார்வத்துக்கு தெனாவட்டு ஏன்?
  5. இந்த தன்னார்வக்குழுக்களை சீஏஜியை விட்டு தணிக்கை செய்தாலாகாதா?
அடுத்த ஐந்து கேள்விகளை நீங்கள் தான் கேட்கணும்.‘ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?’ என்று குந்திக்கிணு இருந்தா எப்படீங்க!
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.pambazuka.net/images/articles/500/hakima_abbas/gado_ngo_cashcow.jpg





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, January 5, 2015

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:4: ஒரு முடங்கல்: புதுமைபெண் 1

‘மடல்பெரிது தாழை மகிழினிது...’:4
ஒரு முடங்கல்: புதுமைபெண் 1
இன்னம்பூரான்
05 01 2015

முற்றும் துறந்து பற்றறவராக தன் கொள்கைக்காகவே வாழ்ந்த ஒரு சான்றோன் எழுதிய கடிதம். அவரது முகவிலாசம் கடிதத்திலேயே இருக்கிறது. இது ஒரு பதில் கடிதம். அந்த பெண் எழுதிய வினாக்கடிதம் காணக்கிடைக்கவில்லை. இந்தக்கடிதத்தில் அதன் உள்ளுறை இதில் இருப்பது போதுமே. அவர் ஆற்றிய உரைகளை கேட்டிருக்கிறேன்.சாதாரணம். ஆனால் நம்மை கவர்ந்து விடுவார். அவர் உள்ளதை உள்ளபடி எளிய தமிழில் இயல்பான,யதார்த்தமான, எழுத்தறிவில்லாத பாமர்களும் புரிந்துகொள்ளும் தரத்தில், அருகே நின்று அளவளாவது போல இருக்கும் உரையாற்றல், அவரது. மடலின் சில சொற்களை, சொல்லாக்கங்களை, குறிப்பால் உணர்த்தியுளேன். நுட்பம் அறிக.

தற்காலம் நானிருக்கும் இடத்தில் ‘அல்லி ராஜ்யம்’ தான் என்றால் கேலி அன்று; சற்றே அவர்களுடன் களங்கமில்லாமல் பகிர்ந்து கொள்ளும் மிகை. எல்லாருமே முதியவர்கள். 90 வயதைக் கடந்த மூதாட்டிகள் புன்னகையோடு வலம் வருகிறார்கள்.ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். சிலர் நூல்கள் எழுதியுள்ளார்கள்;சிலர் கையில் ஐபேட். பாகவதமும், திருப்பாவையும், திருவெம்பாவையும்.  பெரும்பாலும் எல்லாருமே மெத்தப்படித்தவர்கள். முனைவர்களும் உளர். மேற்படி கடிதம் எழுதப்பட்ட காலகட்டத்தில், இவர்கள்இளம்பெண்கள்,சிறுமிகள்,குழவிகள்.  இவர்களுக்கும், வினாக்கடிதம் எழுதிய பெண்ணுக்கும் பின்புலம் வேறா?
*
அன்புமிக்க............
உனது முடங்கல் தடங்கலின்றிக் கிடைத்தது. கடிதத்தின் உள்ளடக்கத்தைச் சுவைத்தேன்; மேலும் சுவைத்தேன். என் நெஞ்சம், உணர்ச்சியை இன்பத்தில் தோய்த்துத் தோய்த்து எடுத்தது."பழம்பெரும் தமிழ்ப்பண்பாட்டில் பெண்களைப் பற்றிய கருத்து என்ன? கண்ணோட்டம் என்ன? சாதாரண மக்களிடையில், தலைமுறைத் தத்துவமாக, பெண்களைப்பற்றி இருந்துவரும் மனப்பான்மை என்ன? சான்றோர்கள் பெண்மையைப் பற்றி, குறைத்துப் பேசுகிறார்களா? கூட்டிப் பேசுகிறார்களா? சரியாக, முறையாகப் பேசுகிறார்களா?"

அன்பே! இவ்வாறு உனது கடிதத்தில் கேள்விமேல் கேள்வி கேட்டிருக்கிறாய். 
இன்று உலக முழுவதிலும் பெண்கள் நிலைமை என்ன? பாரத நாட்டில் பெண்கள் வாழ்வு எப்படி? தமிழகத்தில் பெண்கள் எவ்வாறு இருக்கிறார்கள்? ஜனநாயகம் என்றும், சமதர்மம் என்றும், சமாதானம் என்றும் உலகமெங்கும் முழங்கப்படுகிறது அல்லவா, இன்று? இந்த கோஷங்களுக்கும் பெண்களுக்கும் என்ன ஒட்டு? என்ன உறவு!பெண்களுக்குத் தனிப் பிரச்சினைகள் உண்டா? உண்டென்றால் அவைகளுக்கு பைசல் காண பெண்களுக்கு மட்டும் தான் பங்கா? அல்ல ஆண்களுக்கும் பங்கு உண்டா? பெண்ணுரிமைக்காக, பெண் விடுதலைக்காகத் தனி இயக்கம் வேண்டுமா? தனி ஸ்தாபனங்கள் வேண்டுமா? உலகத்தில், இந்தியாவில், தமிழகத்தில் பெண்கள் இயக்கம் எந்த நிலையில் இருக்கிறது? என்னென்ன பிரச்சினைகளுக்காகப் போராடுகிறது?  இவ்வாறு, உனது அன்புக் கடிதத்தில் கேள்வி மாரி பொழிந்திருக்கிறாய். என்றும் இல்லாதவாறு, என்னைக் கேள்வி மழையில் தள்ளி, திக்கு முக்காடச் செய்திருக்கிறாய்.  இதுகாறும் தீட்டிய கடிதங்களில், நீ குடும்பக் கதைகளை எழுதுவாய்; உனது படிப்பையும், பரீட்சைகளையும் பற்றி எழுதுவாய்; ஆடல் பாடல்களைப் பற்றி எழுதுவாய்; கிடைத்த 'மார்க்கு' களையும் தேறிய தரத்தையும், பெற்ற பரிசுகளையும் பற்றி எழுதுவாய்; நீயும் உனது தோழியர்களும், பொழுது போக்குக்காக அவ்வப்போது நடத்தும் இனிய உரையாடல்கள் பற்றியும், அவற்றில் நீர்க்குமிழிபோல் தோன்றி மறையும் செல்லச் சண்டைகள் பற்றியும் எழுதுவாய். இவைகளையெல்லாம், நான் படிக்கப் படிக்க சுவை சொட்ட, இன்பம் சொட்ட எழுதுவாய். இது உனது வழக்கம். ஆனால், இன்று நான் பெற்ற உனது கடிதமோ, முன்மாதிரியானதல்ல. உன் உணர்ச்சியில் ஒரு புதிய திருப்பத்தைக் காட்டுகிற கடிதம் இது. அன்பே! உலகச் சரித்திரத்தில் பெண்கள் இயக்கம், எப்படித்தோன்றி வளர்ந்து வந்திருக்கிறதென்று வினா எழுப்பி, விடை கேட்கிறாய். சகல துறைகளிலும், சர்வ வியாபகமாய்ப் பெண்கள் இயக்கம் எப்படிப் பரவிப் படர்ந்து நிற்கிறதென்று என்னிடம் கேட்கிறாய். இவைகளைப்பற்றிய எனது அறிவையும், அனுபவத்தையும் பற்பல கேள்விகளால் நயமாகக் கிண்டிவிட்டு, விடை காண முயல்கிறாய். என்றைக்கும் இல்லாத புதுமையாக நீ சரமாரியாகக் கேள்விகள் கேட்டும் கடிதம் எழுதி யிருக்கிறாய். உலகம் தழுவிய ஒரு பெரும் இயக்கமான, பெண்கள் இயக்கத்தைப்பற்றிக் கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறாய். தேனென இனிக்கும் வகையில் சுவை படக் கடிதம் எழுதியிருக்கிறாய். இவை யாவற்றிற்கும் மேலாக, பொட்டு வைத்தது மாதிரி, மனித இனத்தின் செம்பாதியும், உன் னினமும் ஆகிய பெண்ணினத்தின் பிரச்னைகளை யெல்லாம் கிளறி, முன்னிறுத்தி எனது பதில்களில் என்ன தீர்வுகள் பிறக்கின்றன என்று பார்க்கவும் துணிகிறாய்.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்ததுபோல், அன்பே இன்றையப் பெண்கள் இயக்கத்தில், நவீனப் படிப்புப்படித்த பெண்களின் கடமை என்ன, சொல்லுங்கள்! என்றும் கேட்டு எழுதி யிருக்கிறாய்.
உனது கடிதத்தை, குறிப்பாக, உனது கேள்விகளுக்குப் பதில் சொல்லும் உனது எழுத்துப் பாணியை, நினைக்க நினைக்க ஏற்பட்ட எதிரொலியைத்தான், உனது கடிதத்தைப் படித்ததும் எனது நெஞ்சம் இன்பக் கடலாடுகிறது என்று தொடக்கத்தில் படம்பிடித்துக் காட்டினேன்.
இவ்வளவு தூரம் உனது கடிதத்தைப் பற்றியே எனது மன வெழுச்சியைக் கூறினேன். இது இருக்கட்டும். அன்பே! உனது வேண்டுகோள்படி பெண்கள் இயக்கத்தின் பல்வேறு கூறுகளைப் பற்றி உனக்கு அடுத்த கடிதத்திலிருந்து எழுதுவேன். பலப்பல கடிதங்கள் எழுதுவேன். இடையீடின்றித் தொடர்ச்சியாக எழுதுவேன். எனவே 'ஜன சக்தி' வார மலரை ஒரு இதழ்கூடத் தவறவிடாமல், கட்டாயம் சேர்த்துவைப்பாய் என்று நம்புகிறேன்.  இனி இந்தக் கடிதத்தில், அறிமுகமாக உனக்குச் சில சொல்ல விரும்புகிறேன், நினைவாற்றலும், சிந்தனைத் திறனும் படைத்த நீ, கருத்தில் ஊன்றி வைத்துக்கொள்வாய் என்பது உறுதிசொல்கிறேன், கேள்.
படித்த, படிக்கிற யுவதிகளில் பலர் எப்படி வாழ்கிறார்கள் தெரியுமா? கடற்கரையில் விளையாடும் சின்னஞ்சிறு குழந்தைகள் துள்ளிக் குதித்து, ஆடி, இங்கும் அங்கும் ஓடி, அங்கு ஒரு அழ காண சிப்பியையும், இங்கு ஒரு மெல்லிய கடற்பாசியையும் கண்டு மகிழ்வதைப்போல் வாழ்கிறார்கள்.
ஆனால், நீ அப்படிப்பட்ட ரகத்தைச் சேர்ந்தவளல்ல. அறியப்படாமல் பரந்து விரிந்து கிடக்கும் பெருங்கடலை அறிய முயல்கிறாய் நீ. அதனால்தான், விடைவேண்டி, ஆயிரத்தெட்டுக் கேள்விகளை என்னிடம் கிளப்பி இருக்கிறாய். இலட்சியம் இல்லாத ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, திசையறி கருவியில்லாத கப்பல் என்ற உண்மை உன் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது என்பதை நான் காண்கிறேன். கண்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன். அன்பே! எனக்கு மிகப்பழக்கமான ஒரு பெரிய டாக்டரிடம் ஒரு தடவை ஒரு கேள்வி கேட்டேன். ஒரு சிறந்த மருத்துவரிடம் என்னென்ன பண்புகள் இருக்கவேண்டும் என்பது என் கேள்வி. அவர் சொன்னார்:
"நல்ல வைத்தியனிடம் மூன்று பண்புகள் இருக்கவேண்டும். ஒன்று, தன்னலங் கருதாமலும் உள்ளதை மறைக்காமலும் இருக்கும் உணர்வு; இறந்து, நோயாளி படுகிற துன்பத்தையும் வேதனையையும் தீர்க்க விரும்பும் பரிவு; மூன்று, நோயின் தன்மையையும் அதனால் வரும் கேட்டையும் பகுத்து அறிந்து, அதைக் குணப்படுத்தும் மருந்தை அறிகிற அறிவு" என்று. இதை உன் நினைவுக்குக் கொண்டுவருகிறேன். ஏன்! நான், மேலே காட்டிய நல்ல டாக்டரின் பண்போடு சமுதாய வாழ்வில் பெண்ணினத்தின் பிரச்னைகளையும் பைசல்களையும் தெரிந்து புரிந்து காட்டுவதில் எந்த அளவு வெற்றி பெறப்போகிறேன் என்பதை நீதானே முடிவு கட்ட வேண்டும்? அதற்காகத்தான்.

அன்பே! ஏடுகளையும் நூல்களையும்போல் எனது கடிதமும் ஓரளவுக்குத்தான் உனக்கு உதவி செய்ய முடியும். மற்றப் பெரும் பகுதி, அனுபவ வாயிலாக அறிய வேண்டியவைகளே. கைகாட்டி மரம் உனக்கு வழியைச் சுட்டிக் காட்டமுடியும். ஆனால் நீ போகவேண்டிய இடத்திற்கு உன்னைக் கொண்டு சேர்க்க அதனால் முடியாது.
இவைகளை எல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு, எனது கடிதங்களை நீ ஊன்றிப் படிப்பாய் என்று நம்புகிறேன். உனது சகோதரிகளையும் படிக்கவைப்பாய் என்பதில் எனக்கு நம்பிக்கை யுண்டு.
இந்தக் கடிதம் உனக்கு எந்த அளவு சுவைக்குமோ எனக்குத் தெரியாது. ஆனால், அடுத்த கடிதத்தை நீ ஆவலோடு எதிர்பார்ப்பாய் என்று மட்டும் என்னமோ என் மனதில் படுகிறது. 

-#-

Sunday, January 4, 2015

இடை வேளை ‘மடல்பெரிது தாழை மகிழினிது...’


ஒரு இடை வேளை பதிவு. 

*
முனைவர்.பெருமாள் முருகன் அவர்கள் நாமக்கல் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நாட்டுப்புறவியல்த் துறையில் புகழ்பெற்ற் இவரது கட்டுரைகளுள் சிம்கார்டுக்குத் தமிழ்ச்சொல் என்ன? என்னும் கட்டுரை பெரிதும் பேசப்பட்டதாக அமைகிறது.'மாதொரு பாகன்' நினைவுக்கு வருகிறதா?
இன்ன்ம்பூரான்
04 01 2015

*

தமிழ் அறிக-8 (சிம்கார்டுக்குத் தமிழ்)

சிம்கார்டுக்குத் தமிழ்ச்சொல் என்ன? 

சில மாதங்களுக்கு முன் எனது செல்பேசிக்கு நான்கைந்து குறுஞ்செய்திகள் வந்திருந்தன. எல்லாம் ஒரே விஷயத்தைச் சொல்வன. யாரோ ஒருவர் அனுப்பியதை அப்படியே முன்னனுப்பியவை. ஆனால் தமிழரின் மான உணர்ச்சியைத் தூண்டிப் பார்க்கும் செய்தி அது.  ‘நீ செம்மொழித் தமிழனா? அப்படியானால் சிம்கார்டு என்பதற்குத் தமிழ்ச்சொல் என்ன? உடனே சொல்’ என்பதுதான் செய்தி.
செம்மொழித் தமிழன் என்னும் உணர்விருந்தால் இன்னும் எத்தனையோ சொற்களுக்குத் தமிழ்ச்சொல் தெரிந்திருக்க வேண்டும். ’செயல்முறைத் தமிழ்’ என்னும் பாடம் ஒன்றைத் தமிழிலக்கியம் மூன்றாமாண்டு மாணவர்களுக்கு நடத்திக் கொண்டிருக்கிறேன். அப்பாடத்தில் பிறமொழிச் சொற்களுக்குத் தமிழ்ச்சொல் கண்டறிதல் என்னும் பகுதி ஒன்று உள்ளது. அதை நடத்தியபோது இந்தக் குறுஞ்செய்தி பற்றிச் சொன்னேன். உடனே மாணவர்கள் நம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள பல சொற்களுக்குத் தமிழ்ச்சொல் என்னவென்று கேட்கத் தொடங்கிவிட்டனர். நீங்களே கண்டுபிடியுங்கள் என்று சொல்லிச் சமாளித்தேன்.
சார்ஜர் என்பதற்கு என்ன தமிழ்? வின்னர், ரன்னர் என்பவற்றிற்குத் தமிழ் என்ன? மிக்சி, கிரைண்டர் ஆகியவற்றுக்குத் தமிழில் சொற்கள் உண்டா? பைக், ஸ்கூட்டர், மொபெட்  என்பவற்றிற்கெல்லாம் தமிழ் யாது? இப்படிப் போய்க் கொண்டே இருந்தது. சைக்கிளுக்குத் தமிழில் என்ன எனக் கேட்டேன். ‘மிதிவண்டி’ என்று கத்தினார்கள். நல்லது, சைக்கிளில் உள்ள ஹேண்டில் பார், கேரியர், மக்கார்ட், செயின், பிரேக், பால்ரஸ், பெடல் எனக் கணக்கிட்டால் நூற்றுக்கு மேல் வரும் பாகங்களுக்கெல்லாம் தமிழில் சொற்கள் உருவாக்கி இருக்கிறோமா? யாராவது உருவாக்கிக் கொடுத்தால் நாம் பயன்படுத்தத் தயாராக உள்ளோமா? ஏதாவது புதிய சொல் உருவாக்கினால் அதைக் கேட்டு ஏளனமாகச் சிரிக்கத்தான் நம்மால் முடியும். என்றெல்லாம் என் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துக்கொண்டேன்.  

சிம்கார்டு என்பதற்குத் தமிழ் என்ன என்று கேட்டு எனக்கு வந்த குறுஞ்செய்திகளுக்கு மதிப்புக் கொடுத்துத் தீவிரமாக யோசித்துப் பார்த்தேன். ‘பேசிப் பயனர் அட்டை’ என்பதை உருவாக்கி என் பிள்ளைகளிடமும் சொல்லி ஒப்புதல் வாங்கி எல்லாருக்கும் இச்சொல்லைத் தெரிவித்தேன். பேசி என்பதை இன்று பெயர்ப் பொருளில் பரவலாக வழங்குகிறோம். தொலைபேசி, செல்பேசி ஆகியன வழக்குக்கு வந்து நாட்களாகி விட்டன. இதை மேலும் சுருக்க முடியுமா என யோசித்தேன். வெகு சுருக்கமாக இருக்கும் கலைச்சொல்தான் நிலைபெறும்.

‘பேசிப் பயனர் அட்டை’ என்பதை இன்னும் சுருக்கிப் ‘பேசியட்டை’ என்று சொல்லலாம் எனத் தோன்றியது. பேசிப் பயனர் அட்டை என்பதில் மூன்று சொற்கள் இருக்கின்றன. ‘பேசியட்டை’ என்பதில் இரண்டு சொற்கள்தான். அவையும் இடையில் ‘ய்’ என்னும் உடம்படுமெய் ஏற்று ஒரே சொல் போல வடிவம் பெற்றுவிட்டன.  ஒருசொல் நீர்மைத்தாய் உருவாக்கப்படும்  கலைச்சொற்களே சிறந்தவை. அப்படி வடிவம் கொண்ட பேசியட்டை என்பதையே சிம்கார்டுக்கு நிகரான தமிழ்ச்சொல்லாகப் பயன்படுத்தலாம்.

என் சொல் உருவாக்கம் சரியா? தெரியவில்லை. ஆனால் இது ஒரு முயற்சி. பேசியட்டை என்பதையும் எல்லாருக்கும் குறுஞ்செய்தி வழியாகத் தெரிவித்தேன். செம்மொழித் தமிழனா என உணர்ச்சி பொங்க வினா எழுப்பியவர் எவரும் இந்த விடையைப் பற்றிக் கவனம் செலுத்தவில்லை.  சொல் உருவாக்கம் பற்றிக் கருத்தும் தெரிவிக்கவில்லை. செய்தியை யாருக்கும் முன்னனுப்பவும் இல்லை. இதுதான் செம்மொழித் தமிழன் இயல்பு.
                                                                             ---------------
பி.கு. நம் மின் தலிழ் மாதிரி இல்லை. பல கருத்துக்கள் பின்னூட்ட்ங்களில் பயின்று வரும். அதில் ஒன்று இங்கே:


அமர பாரதி சொன்னது…
பெருமாள் முருகன் சார்,

இந்த பின்னூட்டத்துக்கு தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். ஆனால் தோன்றியதை எழுதுகிறேன்.  

சிம் கார்ட் என்பதன் ஆங்கில வடிவம் "Subscriber Indentity Module" இதற்கும் தாங்கள் சொல்லிய பேசியட்டை என்ற சொல்லுக்கும் எந்த சம்பந்தமாவது உள்ளதா? இந்த மாதிரி தமிழ் படுத்துதலே தவறு என்பது என் எண்ணம். சிம் கார்டையும் செல் போன் தொழில் நுட்பத்தையும் நாம் கண்டு பிடிக்க வேண்டும், அதன் பிறகு அதற்கு தமிழில் பெயரிட வேண்டும். அது உலகம் முழுதும் புழங்க வேண்டும். அதற்கு வக்கிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு பிறர் பெற்ற குழந்தையை பெயர் மாற்றிக் கூப்பிட நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

ஆப்பிளையும் சப்போட்டாவையும் சொல் மூலம் கண்டு பிடித்து அதற்கும் பெயர் வைப்பீர்களா?  

ஒரு உதாரணத்திற்கு நாம் பேசியட்டை என்றே அழைத்து அதை எல்லோரும் உபயோகிப்பதாகவே வைத்துக் கொள்வோம். நாம் பெங்களூருக்கோ அல்லதது கைதராபாத்துக்கோ சென்றால் அந்த செல் போன் கடையில் பேசியட்டை என்று சொன்னால் அவன் நம்மை பைத்தியக்காரன் என்று எண்ண மாட்டானா? அது அபத்ததின் உச்சமாகவே இருக்கும்.

நாம் பெற்ற குழந்தைக்கு நாம் பெயர் வைப்போம். அடுத்தவன் பெற்ற குழந்தையை அவன் வைத்த பெயரைக் கொண்டு அழைப்போம். அதுவே முறை.

முடிந்தால் எதையாவது கண்டு பிடிப்போம் அல்லது இப்படி தமிழ்ப் "படுத்துதலையாவது" நிறுத்துவோம்.

இப்படி சொல் உருவாக்கம் எந்த மொழியிலும் இருப்பதாக தெரியவில்லை. தமிழில் மட்டுமே இருக்கிறது. அதே போல ஸ்பெல்லிங் மாற்றி எழுதுவது. நடத்துவது என்பதை நடாத்துவது என்று எழுதுவது போன்றவை. ஆங்கிலத்தில் இந்த மாதிரி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஒரு உதாரணத்திற்கு "DAUGHTER" என்பதை "DATTOOOOR" என்று எழுதினால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்?
14 மார்ச், 2011 ’அன்று’ 6:00 முற்பகல்
உசாத்துணை: http://www.perumalmurugan.com/2011/03/8.html