Showing posts with label சின்சினாட்டி. Show all posts
Showing posts with label சின்சினாட்டி. Show all posts

Tuesday, January 13, 2015

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:3ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:3
இன்னம்பூரான்
13 02 2015
அதுவும் தமிழில்!
சின்சினாட்டிச்சின்னதாத்தா
(தொடர்கிறது)
[வழியிலே சூறாவளி. கேப்டன் வேறே... சொன்னால் விரோதம்! அதான் கப்பல் லேட்டு, ரஞ்சனி.]

அந்தக்காலத்திலேயே தண்டபாணி முன்கோபி. ஹாஸ்டலில் இதுலெ உப்பு கம்மி; அதுல்லெ ஒரு கல்லு ஜாஸ்தி, வாழைக்காய் பொடிமாஸ்ஸை கடிக்கவேண்டி இருக்கிறது, இட்டிலியை கெட்டிலி என்றெல்லாம் கலாய்ச்சிண்டுருப்பான்; ஒரு நாள் இவனுடைய பிலாக்கணத்தை கேட்டுக் கொண்டே சாமியார் வந்துட்டார். ‘தண்டபாணி! இன்னிலேருந்து நீ தான் மெஸ் செக்ரடரி’ அப்படினு சொன்னார், அந்த ‘சடக்’முன்கோபி ‘சதக்கென்று’ . இந்த ‘நின்னா குத்தம்; உக்காந்தா குத்தம்’ முன்கோபி, அதான் தண்டபாணி, வாணலியில் தத்தளிக்கிற மொளகாய் போல துள்ளிக் குதித்தெழுந்து, ‘சுவாமிஜி! வேண்டாம் அது. நான் குத்தம் சொல்லமுடியாதே’ என்றான். அவர் சிரிச்சிண்டே அன்னண்ட போய் பிரின்சிபால் கிட்ட வத்தி வச்சுட்டார். கேட்டு வாசல்லெ பொட்டி,படுக்கையோட சப்ஜாடா சொத்துபத்து, இரவல் வாங்கின புத்தகங்கள், நடிகைகள் படங்கள் சகிதமாக, அசட்டு அம்மாஞ்சி மாதிரி நின்னுண்டுருக்கான், தண்டபாணி. என்னடா என்று கேட்டால், என்னை எக்ஸ்ப்போர்ட் பண்ணிட்டாடா என்று ஒரு குரல் அழுதான். அதற்கப்பறம், இப்போ தான் அவனை பார்க்கிறோம்.
*
ஒரு உரையாடல்:
சுப்புடு: ஏண்டா! உன்னுடன் கூட இருக்கிற அந்த வெள்ளைக்காரக்கிழவி யாரு?
தண்டபாணி: நாக்கை அறுத்துடுவேன், அறுத்து. அவள் என்னோட ஒய்ஃப்டா.
குரு: சாஸ்த்ரோக்தமாக பண்ணிண்டையா? இல்லை..... சிகாகோவில் கோவில் இருக்கே. அதான் கேட்டேன். 
நம்ம மின் தமிழ்லெ நடக்கறாபோல, க்ஷணத்தில் சுதாரித்துக்கொண்ட தண்டபாணி, வரதனைப் பார்த்து, ‘ஏண்டா! உன் பொண்ணு நார்வேயிலெ இருக்காளாமே. ‘கரடி’ சொன்னான்.’ என்று திசை மாற்றின்னான். ‘கரடி’ வராத பிரகிருதி. அவன் காலை வாரலாம் என்று நாங்கள் இருந்த காலகட்டத்தில் தான் இந்த திசை மாற்றம். ‘கரடி’ புராணம் மிகவும் நீண்டது. நீங்க வேணும்னா வண்டலூரில் போய் ஜூவில் கரடியை பாருங்கோ. அதெல்லாம் போலி சார். இவன் தான் மூலவர் மாதிரி அட்டைக்கரி. ரோமஹர்ஷணர் (அதான் முடிகளால் மூடப்பட்ட மனிதன்). காலையும் கையும் பரப்பி அலாக்கா கரடி நடை பயில்வான். வரதன் ஐந்து தடவை ஃபோன் செய்தும் வரேன் என்று சொல்லிவிட்டும் ‘கரடி; வராததால், வரதனையே ஒரு பிடி பிடித்தோம், தண்டபாணி ஒத்துப்பாட.

ஐயா ஏற்கனவே லாகிரியால் ஆட்கொள்ளப்பட்டதால், துணிச்சலாக ஒரு காரியம் செய்தான்.
“This is a stag’s party, darling. And, these fellows are rogues of the first water. Not the place for you. I tell you what. You go to our Leela Palace Hotel and take rest. I shall come soon.” என்று சொல்லிவிட்டு மேலெழுந்தவாரியாக, அவளுக்கு ஒரு முச்சா கொடுத்தான். அது கண்டு திகைத்த குருவும் மூர்ச்சை அடைந்தான். 
நான் சொல்ல வந்தது என்ன என்றால்... பி.கு. நோக்குக.
(தொடரும்)
*
பி.கு. கவலையற்க. நான் திருக்கருகாவூரை மறக்கவில்லை. ஆனால், கதை கும்போணத்து குடமுருட்டி போல ஓட்றது. நான் என்ன செய்யமுடியும்? 

Sunday, December 21, 2014

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:1 ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III




ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: III

சின்சினாட்டிச் சின்னத்தாத்தா:1


இன்னம்பூரான்
21 12 2014

சொல்றது எளிது. செய்வது கடினம். ராமநாதனோட அப்பா கர்ணம், திருக்கருகாவூரில். அப்போதெல்லாம், ஊர் அத்தனை பிரபலம் இல்லை, பிள்ளை வரம் அளிப்பதில். அதனால், அதிகப்படியான போக்குவரத்து கிடையாது. நாளைக்கு ஒரு பஸ் உச்சிவேளையில் வரும். சாயும் வேளை திரும்பும். அந்தக்காலத்தில் மூன்று போகம் சாகுபடி. சர் ஆர்தர் காட்டன் போட்ட வாய்க்காலில் தண்ணீர் கல கல என ஓடும். தலையாரி ஆறுமுகமும், ஏழுமலையும் ஒரு நாள் பிச்சுமணி அய்யரின் ( அதான் ராமநாதனனின் தந்தை) பேச்சை கேட்பார்கள். அடுத்த நாள் மணியக்காரர் ஹாஜி அப்துல் காதர் மொய்னுதீன் பேச்சை கேட்பார்கள். அது ஒரு ராஜதந்திரம். பக்கத்தில் இருக்கும் பண்டாரவாடையில் வெற்றிலை சாகுபடி செய்பவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர். என்ன தான் சாதிக்கட்டுபாடுகள் இருந்தாலும் அந்த பிராந்தியத்தில் ஒற்றுமை அதிகம். சம்பிரதாயத்துக்கு ஒன்றும் குறைச்சல் இருக்காது. என்ன தான் அன்யோன்யம் இருந்தாலும், நாமநாதன் ஹாஜி வீட்டில் சாப்பிடமுடியாது. பீபீ கொடுக்கிற அல்வாத்துண்டை ரகசியமாக வாயில் போட்டுக்கொள்வான். கோகுலாஷ்டமி பக்ஷணங்கள் எல்லாம் சீர் வரிசை மாதிரி மணியக்காரர் வீட்டுக்குப் போகும். இத்தனைக்கும் கிஸ்தி விவகாரத்தில் இரண்டு பேருக்கும், கைகலப்பைத் தவிர, மற்ற எல்லா சண்டையும் உண்டு. ஒரு நாள் கலைக்டர் ஜான்சனே வந்து சமாதானம் பன்ணி வைத்தான் என்று சொல்லிக்கொள்வார்கள். ராமநாதன் தாம் அரைகுறை இங்கிலீஷில் துபாஷியாம்.

என்னடா! ஐயங்கார் இருக்கவேண்டிய இடத்திலே ஹாஜியா என்று சில பேர் மூக்கிலெ விரலை வைக்கிறார்கள். நம்ம மொய்தீன் சாகிபுடைய தாத்தா ஜனாப் முகம்மது மொய்தீன் தான் கும்பகோணம் துளிர் வெற்றிலைக்குத் தகப்பன் எனலாம். ஏக்கர் கணக்கா வெற்றிலைத்தோட்டம். அப்பவே ஏற்றுமதி ஆச்சு என்பார்கள். எந்த வெளியூர்க்காரன் வெற்றிலை போடுவான் என்று கேட்காதீர்கள். ஜான்சனுக்கு ஸ்பெஷல் சப்ளை போகும். உறையூரிலிருந்து சுருட்டு வரும். சாம்பசிவம் அய்யர் ( அதான் ராமநாதனுடைய கொள்ளுத்தாத்தா) ஜனாப் சாஹிபுடைய குமாஸ்தா. பற்று வரவு எல்லாம் அவருக்குத்தான் அத்துபடி. திடீரென்று ஒரு நாள் ஊரில் ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சு. கோமளா மாமி தான் அடுப்பை அணைக்க மறந்து போயிட்டா. கூரை பற்றிக்கொண்டது என்பார், சிலர். பிரச்னம் கேட்டோம், மலையாளத்து பிராமணாள் மூலமா.  தெய்வகுற்றம் என்று சொல்கிறார்கள். இது ஒரு கட்சி. அக்ரஹாரமும் எண்ணைக்காரத்தெருவும் சப்ஜாடா காலி. அக்னி பகவான் ஸ்வாஹா பண்ணிட்டார். எல்லா வீடுகளும் சாம்பலாயின. ஜனாப் முகம்மது மொய்தீன் தான் எல்லாருக்கும் கட்டிக்கொடுத்தார். பட்டா, கிட்டா பிரச்னையெல்லாம் தீர்த்து வைத்தார். சுயம்பு மாதிரி, யாரும் ஏதுவும் செய்யாமலே, பட்டாமணியம் அப்பாசாமி ஐயங்கார் தேக வியோகம் ஆனபின், ஜனாப் முகம்மது மொய்தீன் தான் பட்டாமனியம் என்ற எழுதப்படாத விதி வந்தது. பரம்பரை சொத்தாகவும் மாறியது. இனபேதம், மதபேதம் இல்லாமலும், சம்பிரதாயமான இனபேதமும், மத  பேதமும் உடன் வர, கிராமத்தில் நல்லாட்சி நடந்து வந்தது. இது எல்லாம் ராமநாதன் சொல்லித்தான் எனக்குத்தெரியும். ஏதோ பழைய பேப்பரை எல்லாம் குடைந்து விட்டு அவன் சொன்னான், ‘டேய் ராஜூ! மன்மோகன் சிங் மாதிரி சாம்பசிவம் அய்யர், சோனியா மாதிரி, ராவுத்தர்னு. ஒரு நமுட்டுச்சிரிப்பு வேறே!

(தொடரலாமா?) 

சித்திரத்துக்கு நன்றி: நம்ம http://www.heritagewiki.org/images/9/95/Indian_village.jpg