Showing posts with label முட்டுக்கட்டை. Show all posts
Showing posts with label முட்டுக்கட்டை. Show all posts

Sunday, June 9, 2013

18. எண்ணெய் காய்கிறது!: தணிக்கை


தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை
18. எண்ணெய் காய்கிறது!
அப்டேட்: கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியும்,முட்டுக்கட்டை, 'ஆடாமல்,அசையாமல்!'
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvmQT6oebTWAYRSqHncus63ipIcSyGNadoHUPtnQOYa6FPVE1efTx1xQS7_zSsGQIzSYcGSBiQFyUf88ZDP3G-Opg2tS2kA74kfAVgz1tQ21thqS8yyTKy2IjAGISeeUDsbQ__Y6eGgsU/s1600/Tamil_News_large_698447.jpg
இன்னம்பூரான்
ஜூன் 9, 2013
செப்டம்பர் 9, 2011: காலை 2 00 மணி:
வாணலியில் எண்ணைய் காய்ந்தால், தீ பற்றி எரியும். சமையலறை எரியும். தீ பரவும், வீடு, அடுத்த வீடு, தெரு, பேட்டை எல்லாம் எரியக்கூடும். இப்போ அப்படித்தான் இருக்கு.
ஊர்திகள் விரைகின்றன. விமானங்கள் பறக்கின்றன. தோசை வார்க்கிறோம். ராணுவம் தயார் நிலையில். இதற்கெல்லாம் கச்சா பெட்ரோலியம் எண்ணைய் வேண்டும். இந்தியா விடுதலை அடைந்த போது, எண்ணெய் கம்பெனிகள் எல்லாம் அன்னியர் கையில். ஒரு பாடாக, நேருவின் பொருளியல் கொள்கைக்கேற்ப அரசின் ஆளுமை, இத்துறையில் வலுத்தது, கே.டி. மாளவியா எந்த அமைச்சரின் துரித நடவடிக்கைகளால். இதை எல்லாம் குறை கூறுபவர்கள் உண்டு. ஆனால், இந்தியாவின் ஆளுமை அதன் வலிமையைக் கூட்டியது. அது எண்ணெய் வல்லரசுகளின் பொறாமையை கிளப்பியது. கச்சா எண்ணெய் ராசாதி ராசர்களுடனும் இந்தியா இணக்கமாக இருந்தது. இது எல்லாம் சூடு ஆறின கதை.
இந்திய பொருளாதாரக் கொள்கைகள் தாராளமயமானது (யாருக்காக?) 1991ல். கடந்த இருபது வருடங்களில் தனியாரின் தொனி கூடி வருகிறது. இத்தனைக்கும், ஆடிட் ரிப்போர்ட்டில் சொல்றமாதிரி, கன்ட்ரோல், அரசு கையில் இருக்க வேண்டும். எண்ணெய் ராசா ரிலையன்ஸ் காலின் மேல் கால் போட்டுக்கொண்டு நைச்சியமாக பேசுகிறது, 2011ல். இந்தியாவிலேயே பெரிய கம்பெனி. பங்குச்சந்தை கண்காணிப்பாளர், முதலீடு செய்து கையை சுட்டுக்கொண்டவர்கள் (உங்களில் சிலர் இருப்பார்கள்; நான் ஓடி வந்து விட்டேன்.), ஆய்வாளர்கள் எல்லாருமே, ‘ரிலையன்ஸ்! ரிலை பண்ணமுடியல்லையே’ என்று அலறுகிறார்கள். பங்குச்சந்தையில் ஏண்டாப்பா விழுகிறாய் என்றால், இது கரடி வித்தை என்கிறது, இந்த அடுக்கு மாடி கம்பேனி.
சற்றே விசாரிப்போம், வாசகர்களில்லாமல், இத்தொடர் அறுந்து போயிருந்தாலும்.
மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்திய தணிக்கைத்துறை, இத்துறையின் அரசு-தனியார் கூட்டுப்பணிகளை அலசி, ஆகஸ்ட் 24, 2011 அன்று தன் 203 பக்க அறிக்கையை நம் ஜனாதிபதியிடமும், கச்சா எண்ணெய் அமைச்சரகத்திடமும் சமர்ப்பித்தது. மத்திய அரசு மனமுவந்து அதையும், கிட்டத்தட்ட பூண்டி ஆகிவிட்ட நமது ஏர் இந்தியா கம்பெனி ஆடிட் ரிப்போர்ட்டையும், சில மணி நேரம் முன்னால், நம் நாடாளுமன்றத்தில் (கதவு பாதி மூடின பிறகு) தாக்கல் செய்தது. கேள்வி கேட்க முடியாது பாருங்கள். எனினும், துரிதம் என்று தான் சொல்லவேண்டும். கர்நாடகாவுக்குத் தான் உலகளவில் கின்னெஸ் ரிக்கார்ட்! பெங்களூரு நகர மையம் 53 வருடங்களாக ஆடிட் ரிப்போர்ட்டை தாக்கல் செய்யவில்லை என்று மார் தட்டிக்கொள்கிறது. அது ஒழிந்து போகட்டும்.
இந்த ஆடிட் ரிப்போர்ட் என்ன சொல்றதாம். அரச மரத்தை சுற்றி வந்து வயற்றை தொட்டுப்பார்த்தாளாம், மாதொருத்தி! அந்த மாதிரி நம் ஊடகங்கள் சில மாதங்களாகவே ஊகமும், ஹேஷ்யமும், கசிவுகளாகவும், இல்லாததையும், பொல்லாததையும் சொல்லிக்கொண்டு, அடித்துக்கொண்டன. ரிலையன்ஸ் புலம்பலை விளம்பரப்படுத்தின. நானும் அப்பப்போ ‘வல்லமையில்’ சங்கு ஊதினேன். செவி சாய்த்தீர்களோ, இல்லையோ? அதை விடுங்கள்.
அதிகாரப்பூர்வமான ரிப்போர்ட் கையில். ஆடிட் ரிப்போர்ட்டின் புருஷலக்ஷணம் சுருக்கம். நான் மேலும் சுருக்கினால், ‘சுக்குமி, ளகுதி இப்புலி’ என்று இருக்கும். முக்கியமானவற்றை பட்டியலிடத்தான் முடியும். முழுதாக, ஆடிட் ரிப்போர்ட்டை ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ, இலவசமாகப் படிக்கலாமே.
‘சுருக்’ என தைத்த ‘சுருக்’ ரிப்போர்ட்:
பாரா 3.5: எங்கள் வேலை பலவிதங்களில் தடை பட்டது. காலம் கடந்து, அமைச்சரகம் ‘ஒத்துழைக்க’, ஒரு பாடா ஒப்பேத்தினோம். (நமக்குள்: போன வருடமே ரெடியாக இருந்தது.)
பாரா 4.2.1: ரிலையன்ஸ் ‘மணலை கயிறாகத் திரித்து’ (என் சொல். ஆடிட் ரிப்போர்ட் இத்தனை  வக்கணையா பேசாது. அதுவும் சரி தான்.) ஆடிட் செய்வதையே ‘ஒப்பந்த விரோதம்’ என்று காச்சுமூச்சினர். இத்தனைக்கும் அமைச்சரகம், எங்கள் ஆடிட்டை வேண்டியது மட்டுமல்ல;  மட்டுமல்ல; எங்கள் ஆளுமையை உறுதிப் படுத்தியது.
எக்கச்சக்கமான கேஸ்களில் அரசின் மேற்பார்வை மிகக்குறைவு; பத்துக்கேஸ்களில் ரிலையன்ஸ் அகேர் என்ற கம்பெனிக்கு டெண்டர் இல்லாமல் ‘கேட்டதைக் கொடுத்த’ ஒப்பந்தங்கள்; அரசின் பணம் மாட்டிக்கொண்டிருந்தாலும், கவர்ன்மெண்ட் விதிப்படி தனியார் துறை செய்யவேண்டும் என்று சொல்லவே மாட்டோம். எனினும், விவேகம் என்று ஒன்று எல்லாருக்கும் பொது;
ஹைட்ரோகார்பன் இலாக்கா கடமை தவறியது.. கே.ஜீ. பேஸின் பகுதிகளில், ஒப்பந்தப்படி, 25% பாகத்தை சரண் செய்து, இரண்டாவது (7645 சதுர. கிலோமீட்டர்கள்), மூன்றாவது பகுதிகளுக்கு செல்லலாம். அதை ஏன் விட்டுக்கொடுத்தார்கள் என்பது மர்மம்; விட்டுக்கொடுத்த அதிகாரியின் மீது ஏற்கனவே புலனாய்வு விசாரணை இருந்தது குறிப்பிடத்தக்கது. இனியாவது நல்லதொரு தீர்மானம் வேண்டும்;
ஏப்ரல் -மே 2005 லியே தனது இலாக்காவின் விதிகளை மீறியது, ஹைட்ரோ கார்பன் இலாக்கா. எதற்கு? ரிலையன்ஸுக்கு அதீத சலுகைகள் அளிக்க.
பர்மார், பன்னா-முக்தி பகுதிகளில் கைர்ன், ஓ.என்.ஜீ.ஸி, ப்ரிட்டீஷ் காஸ் + ரிலையன்ஸ் ஒப்பந்தங்களில் ஏற்பட்ட ராயல்டி நஷ்டம்  கணிசமானது என்ற ஆடிட் ரிப்போர்ட், அதை கணிக்கவில்லை. 2ஜி படிப்பினையா? எனக்கு அது பிடிக்கவில்லை. ஆனால், ரிப்போர்ட்டை ஊன்றிப் படிக்க வேண்டும்.
அதே மாதிரி ,கே.ஜி-டி6 பகுதியில் செலவை 2.4 பில்லியன் டாலரிலிருந்து, ரிலையன்ஸ் 8.8. பில்லியனுக்கு தூக்கிப்பிடித்ததை பற்றி விமரிசிக்கவில்லை. எனக்கு அது சரியாகப்படுகிறது. ரிலையன்ஸின் பதிலை தன் ஆய்வில் எடுத்துக்கொண்டதாகத் தோற்றம். போகிறப்போக்கு நல்லாயில்லை. ரிப்போர்ட்டை ஊன்றிப் படிக்க வேண்டும். செலவு ஆன பிறகு தணிக்கை செய்யத்தான் வேண்டும். வரிப்பணம், ஐயா.
ஈற்றடி: தனியார் கம்பெனிகள், நாங்கள் ஏதோ அநாவசியமாகத் தலையிட்டு காரியத்தை கெடுக்கிறோம் என்று சொன்னால், வரிப்பணம் வீணாவதை பார்த்துக்கொண்டு, நாங்கள் வாளாவிருக்க முடியுமா? என்ன?;
பாரா 7.1: ஆக மொத்தம், அமைச்சரகம், எழுத்து மூலமாக, ஆடிட் முடிவுகளை ஒத்துக்கொண்டு, ஆவன செய்வதாக, வாக்கு அளித்திருக்கிறது.
>> http://www.vallamai.com/paragraphs/7769/

Tuesday, May 28, 2013

10.தணிக்கைக்கு ஒரு முட்டுக்கட்டையா?




10.தணிக்கைக்கு ஒரு முட்டுக்கட்டையா?

Innamburan S.Soundararajan Tue, May 28, 2013 at 6:43 PM

தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 10

இர
இன்னம்பூரான்


Thursday, June 2, 2011, 10:19

அப்டேட்:கடந்த இரு வருடங்களுக்குள் தணிக்கை ரிப்போர்ட்கள் அரசியல் வட்டாரங்களை ஒரு ஆட்டு ஆட்டுவித்தாலும், மக்கள் விழிப்புணர்ச்சி ஒன்று தான் வழி. இல்லாவிடின், நான் ஏன் விழுந்து, விழுந்து எழுதப்போகிறேன்!
இன்னம்பூரான்
28 05 2013 

தணிக்கைக்கு ஒரு முட்டுக்கட்டையா?

தணிக்கைத் துறை, உலகெங்கும், அலட்டிக்கொள்ளாமல், தணிந்து பேசும் தன்மையுடையது; உள்ளது உள்ளபடி கூறும் தன்மையுடையது; பெருந்தவறுகளைக்கூட, சான்றில்லையெனில், முன்னிறுத்தத் தயங்கும் தன்மையுடையது. இத்துறையின் சர்வதேச அமைப்புகள் செவ்வனே இயங்கின்றன. இன்றைய நம்நாட்டு அரசுகள் இயங்கும் / இயங்காத / முரணாக இயங்கும் செப்பிடு வித்தைகளைக் காணும்போது, தணிக்கைத் துறையின் ஏற்புடைய தன்மைகளையும் மாற்றித்தான் அமைக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.
இரு பின்னூட்டங்கள், என்னை இப்படிச் சிந்திக்க வைக்கின்றன.  கண்டும் காணாமல் விடப்படும் தணிக்கை அறிவிப்புகளைப் பற்றி ஒருவர் கூறினார், ‘இந்தக் கசப்பான நிலை மாறவேண்டும்; தணிக்கைத் துறையில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.’
மற்றொருவர், ‘வருத்தமளிக்கும் செய்தி. ஜனநாயகத்தில், பணநாயகம் விளையாடுவதன் அறிகுறி’ என்றார்.
இத்தருணம், வலிமை மிகுந்த அமெரிக்காவின் தணிக்கைத் துறையின், 2011 மே 31ஆம் நாள் (31.05.2011) பிரகடனத்தைக் கவனிப்போமாக. அமெரிக்க ஐக்கிய நாட்டில் (யூ.எஸ்.ஏ) மருத்துவச் செயல்பாடுகள் சிக்கலானவை. காப்பீடு இல்லையெனில், மருத்துவம் இல்லையெனலாம். தமிழ்நாட்டுக் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போல் இல்லாமல், பெருமளவு ஒழுங்காக இயங்கினாலும், நுகர்வோர்களைப் பாடாய்ப் படுத்தும் தன்மை உடையவை.
India Post issued a stamp to celebrate the 150 years of Comptroller and Auditor General of Indiaசட்டமன்றங்களின் அரசியல் சாஸனம் சார்ந்த பணிகளில் உதவுவதும், மத்திய அரசு உருப்படியாக இயங்குவதற்கான பணிகளில் இறங்குவதும், அந்த அரசு மக்களிடம் கணக்குக் காட்டச் செய்வதும், தனது பணி என்று அடக்கமாக சொல்லிக்கொள்ளும் தணிக்கைத் துறைக்கு, இந்த மருத்துவச் செயல்பாடுகள் விஷயத்தில் நேரடிப் பணி ஒன்றும் கிடையாது. ஆனால் பாருங்கள், அங்கு நடப்பதை:
மருத்துவக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தி, கண்காணிக்க ஒரு மேல்மட்டக் குழு. பழையன கழித்து, புதியன புகுத்தி அப்பணியை செவ்வனே செய்ய, அங்கத்தினர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுகிறார்கள். பணி நன்றாகச் செய்பவர்களுக்கு மறு நியமனம் உண்டு. இந்த மேல்மட்டக் குழுவில் இடம் பெறுவது, சமுதாயத்தில் மதிப்பு தருகிறது. எனவே, மனுதாரர்கள் அதிகம். 1997இல் சட்டமன்றத்தால் அமைக்கப்பட்ட இந்த மேல்மட்டக் குழு தான் மக்களின் ஆரோக்கிய மாதாவாகிய திட்டத்தின் வழிமுறைகளைப் பற்றி, கட்டணங்களைப் பற்றி, சட்டமன்றத்துக்கு ஆலோசனை அளிக்கிறது.
இந்தியாவின் மக்கள் சபை, மேல் சபை இரண்டும் போல, அமெரிக்காவின் சபைகள் இரண்டும், இந்த மேல்மட்டக் குழுவின் அங்கத்தினர்களை நியமிக்கும் பொறுப்பை, ஆடிட்டர் ஜெனெரல் வசம் ஒப்படைத்திருக்கிறது. ஜெனெ.எல்.டொதாரோ என்பவர், தற்கால ஆடிட்டர் ஜெனெரல். அங்கு. அவர் நியமித்தவர்களில் ஒருவரான வில்லிஸ் கிராடிஸன் ட்யூக் பல்கலைக்கழகத்தின் ‘அங்கு தங்கியிருக்கும்’ வல்லுனர் (Scholar in Residence in the Health Sector Management Program).
அது சாதாரணமான பதவி அல்ல. அமெரிக்காவின் பெர்க்க்லி பல்கலைக்கழகத்தில், நம் உலகப் புகழ் கதாசிரியர் ஆர்.கே. நாராயணன் அவர்களை ‘அங்கு தங்கியிருக்கும்’ வல்லுனராக நியமித்த போது, அவர் தன் வேலை என்னவென்று கேட்டார். நீங்கள் இங்கு தங்கியிருப்பது போதும். அது தான் எங்களுக்குத் தனிச் சிறப்பு என்றார்கள்.
அந்த உன்னத ஸ்தானத்தில் இருப்பவர், வில்லிஸ் கிராடிஸன் அவர்கள். அவர் 18 வருடங்கள், சட்டசபை அங்கத்தினராக இருந்தவர். இன்னொருவர், வில்லியம் ஹால் என்ற முதியோர் மருத்துவர், பேராசிரியர். அவர் வகுத்த திட்டங்கள், மிகவும் புகழ் வாய்த்தவை. இப்போது, அமெரிக்காவில் ஆடிட்டர் ஜெனரலுக்கு உள்ள மதிப்பு புரிகிறதல்லவா?
இந்தியாவிலோ, அந்தோ பரிதாபம்! இதே காலகட்டத்தில், பாராளுமன்றக் குழு ஒன்று (சாக்கோ கமிட்டி), நம் ஆடிட்டர் ஜெனெரலிடம், ‘கோக்குமாக்காக’ (aggressively), பலமுறை தெளிவுபடுத்தப்பட்ட 2ஜி விஷயத்தைப் பற்றிக் கேட்டதாக, ஊடகங்கள் கூறுகின்றன. இதில் அவமானம் யாருக்கு என்று வருங்கால வரலாறு கூறும்போது, நமது சந்ததிகள் நம்மைக் கேலி செய்வார்கள். அமெரிக்காவில் மலை; இந்தியாவில் மடு.
(தொடரும்……
===========================================================
படங்களுக்கு நன்றி: http://philatelynews.comhttp://www.currentnewsindia.comShare
Tags: 
Published Vallamai.



  • Karthik wrote on 2 June, 2011, 10:34
    //அமெரிக்காவில் மலை; இந்தியாவில் மடு.//
    உண்மை

Sunday, May 19, 2013

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை! 1. ஒரு முகாந்திரம்:



Innamburan Innamburan Sun, Mar 27, 2011 at 5:01 PM



தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை!


1. ஒரு முகாந்திரம்:

     அரசு இயந்திரத்தை பூரி ஜெகன்னாத் தேருடன் ஒப்பிடுவார்கள். அத்தனை
மெள்ள மெள்ள நகருமாம். ஆங்கில மொழியிலேயே அந்த சொல், ‘ஆடாமல் அசையாமல்
வரும்’ ஆமை வேகத்திற்கு உவமை ஆகிவிட்டது. உவமை மேலும் பலவிதங்களில்
பொருத்தம். ஊர் ஜனங்கள் ஆயிரக்கணக்கில் வடம் பிடிக்கவேண்டும்;
தேர்த்தட்டில், அமர்ந்தும், நின்றும், ஆடியும்,பாடியும், கூவியும்
‘பண்டா’ எனப்படும் பூசாரி இனத்தவர் படுத்தும் பாடு சொல்லி மாளாது.
நம்மூர் பக்கம் வருவோம். நமக்குத் தெரிந்தது திருவாரூர் தேர். பெரிது. பல
வருடங்கள் நிலை பெயரவில்லை, திருவெறும்பூர் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்
நிறுவனம், நவீன சக்கிரங்கள் பொருத்தும் வரை. இது நடந்து நாற்பது
ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். அப்போது எழுந்த வினா: முட்டுக்கட்டை எப்படி
இருக்கிறது?; முட்டுக்கட்டையை தலைமுறை, தலைமுறையாக போடும் வம்சாவளி
எங்கே? எங்கே?

     ஐயன்மீர்! விழாக்கோலம் கொண்ட தேர் வலமும் வந்து, பெருமான் தரிசனமும்
அளித்து , மக்கள் ஒருமைப்பாட்டையும் நிலை நாட்டிய பிறகு, சொகுசாக
நிலையில் வந்து, வருடம் முழுதும் அமரிக்கையாக இருக்க வேண்டும் என்றால்,
முட்டுக்கட்டையாருக்கு வந்தனமும், நன்றியும் சொல்லியாக வேண்டும்.
சிறியவனாக இருந்த போது, அரியக்குடியில் தேர் வடம் பிடித்திருக்கிறேன்.
பதவியில் இருந்த போது, பூரி ஜெகன்னாத் தேரையும் இழுத்திருக்கிறேன். இரு
தடவையும், முட்டுக்கட்டையாரின் திறனையும், துணிவையும், வலிமையையும்,
உடனடி செயலையும் கண்டு வியந்திருக்கிறேன். அவர்களுக்குக் கொடுக்கப்படும்
மாலை மரியாதை, தாம்பூலம், திரவிய தானம், பரிசிலாகத் தேறல் எல்லாம்
உகந்தது தான் என்பதில் ஐயமில்லை. உவமித்து கூறுவது யாதெனில், அரசு
இயந்திரம் தேர் போல; வடம் பிடிப்போர் மக்கள் என்க. அரசு ஊழியம் செய்வோர்
பண்டாக்கள் மாதிரி. இங்கு மட்டும் உவமை அரைகுறை பொருத்தம் தான். பிறகு
விளக்குகிறேன்.

     இத்தனை பீடிகை எதற்கென்றால், தணிக்கைத்துறை என்றதொரு ‘நிர்வாக
முட்டுக்கட்டை’க்கு இந்தியாவில் மதிப்பு குறைவு. அரசு புறக்கணிக்கும்;
ஊடகங்கள் ‘ஏனோ தானோ’; மக்கள் இருளில். இந்த குறைகள் தீர்ந்தால் தான்,
அரசு சுதாரித்துக்கொள்ளும். ஊடகங்கள் கவனைத்தை திருப்பும். மக்களும்,
‘நாக்கைப் பிடுங்கிக்கறாப்போல, நாலு கேள்வி’ கேட்க முடியும். அன்று தான்
ஜனநாயகம் வலு பெறும். சுருங்கச்சொல்லின், தணிக்கைதுறை மக்கள் தொண்டு
செய்ய இயலும், நல்லவை நடந்தால்.

     ஆங்கில அரசின் படைப்பாக 150 வருடங்களாக பணி புரியும், அரசியல்
சாஸனத்தில் நிர்வாக ஆணிவேராக சொல்லப்பட்ட, இந்த இலாக்காவின் செயல்
பாடுகளின் பயன் மக்களை அடைவதில்லை. அமெரிக்காவில் ‘ஜெனெரல் ஆடிட் ஆஃபீஸ்’
என்ற பெயரை கேட்டாலே, அழுத குழந்தையும் வாயை மூடும். அத்தனை அச்சம்!
இங்கிலாந்தில் ஆடிட்டர் ஜெனரலை தேர்ந்தெடுக்கும் விதம் பாரபக்ஷம் அற்றது;
எவராலும் மறுக்க இயலாதது; வீசும் வலையும் நாலாப்பக்கமும் அலையும்.
ஏனென்றால், அந்த வேலை ஆயுசு பரியந்தம் உறுதி. ஒரு உபகதை இருக்கிறது.
பிறகு சொல்கிறேன். இந்தியாவில், ஆடிட்டர் ஜெனரலை நியமிப்பது பிரதமர், நடை
முறையில். அது பற்றியும் பிறகு தான் அலச வேண்டும். இப்போதைக்கு பீடிகை
போதும்.

     ஒரு தற்கால விவகாரத்தை அவதானிப்போம். இந்த 2ஜி சமாச்சாரம் எங்கும்
நிறைந்துள்ளது - உச்ச நீதி மன்றம், பிரதமரின் ஜவாபுகள், நாடாளுமன்றத்தில்
கலாட்டா, அந்த மன்றத்துக் குழுக்களின் இழுபறி, தொலைக்காட்சிகளில் தொல்லை,
இதழ்களில் முணுமுணுப்பு, உலகெங்கும் இந்தியாவை பற்றி இழிச்சொல், எள்ளல்.
இதற்கெல்லாம் மூலம் ஒரு சிறிய ஆடிட் ரிப்போர்ட் - 57 பக்கங்கள்; பேசும்
ஆவணங்கள் 77 பக்கங்கள்; சிறிய முன்னுரை. அதன் சாராம்சம்  ஒரு வரியில்!
சும்மா சொல்லக்கூடாது. குடை சாயும் தேரை, இந்த முட்டுக்கட்டை
நிமிர்த்தும் போது, அந்த தேர் நடுநடுங்கித்தான் நின்றது. இத்தனைக்கும்,
அந்த ரிப்போர்ட், கண்ட கண்ட இடங்களில் சேதி கேட்கவில்லை;ஒற்று
கேட்கவில்லை; வதந்திகளை நம்பவில்லை. டெலிகாம் துறையின் ஆவணங்களும்,
அத்துறை அருளிய விளக்கங்களே ஆதாரம், இந்த ரிப்போர்ட்டுக்கு. ஆடிட்
மரபுகள் மீறப்படவில்லை. வழக்கம் போல், தணிக்கை செய்யப்போகிறோம் என்று
நோட்டீசும் கொடுத்து, (தீவட்டிக் கொள்ளைக்காரன் கூட இப்படி முன்னறிவிப்பு
செய்வதில்லை!). அதை எப்படி செய்வோம் என்று முன் கூட்டி அத்துறையின்
அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தணிக்கை முடிவுகளையும் அவர்களுடன்
விவாதித்து, அவர்களின் விளக்கங்களை பெற்றபின் தான் அது ஃபைசல்
செய்யப்பட்டது. இத்தனை முஸ்தீப்புகள் செய்த பின், ‘ஐயகோ! மண்ணில்
வீழ்த்தினானே! இவன் உருப்படுவானா!’ என்றெல்லாம் அலறி விட்டு, ‘மீசைலே மண்
ஒட்டலே’ என்று நொண்டி சமாதானம் கூறினால், நடந்தது, நடக்கவில்லை என்று ஆகி
விடுமா என்ன?

     இந்த 2ஜி ஆடிட் ரிப்போர்ட் பல வகைகளில் வரலாறு படைத்தது.
விக்கி லீக் மாதிரி, இந்த ரிப்போர்ட்டின் கசிவுகளை, ஆவணங்கள் ஆர்வத்துடன்
அணைத்து ‘குய்யோ முறையோ’ என்று கூவின. அன்றாடம் எதிர் கூவல்கள். ஆடிட்டர்
ஜெனரல் காஷ்ட மெளனம். எங்கள் துறையில் காபந்துகள் அதிகம், தொடக்கக்
காலத்திலிருந்து. ஒரு மூச்சு! ஹூம்! கசிவுகள் எல்லாம்
வேறிடங்களிலிருந்து.
ஆடிட் என்றால் வேம்பு, அரசு ஆளுமைக்கு. அரசியல் சாஸனத்தின் அடிப்படை
விதிகளுக்கு முரணாக, எல்லா கட்சி அரசுகளும் தணிக்கை அறிக்கையை நாடாளும்
மன்றம் ஒத்தி வைக்கப்படும் தினம், மூடு விழாவை போல, வைப்பார்கள், யாரும்
படித்து வினா எழுப்பக்கூடாது என்ற குற்ற உணர்வோடு. வரலாறு காணாத
முறையில், இந்த ரிப்போர்ட் முதல் முறையாக, உடனுக்குடன் நாடாளும்
மன்றத்தில் வைக்கப்பட்டது. அந்த அளவுக்கு, அரசுக்கு நெருக்கடி.
ஆடிட் இங்க்லீஷ் அரசு இங்க்லீஷ். புரியாது, மற்றவர்களுக்கு. இந்த
ரிப்போர்ட் பரவாயில்லை. படிக்க முடிகிறது. நீங்களும் நானும் அலசலாம்.
படியுங்களேன்.
77 பக்கங்கள் கொண்ட ஆவணத்தொகுப்பு, ஒரு நல்வரவு. மத்திய அரசை ஒரு கை
பார்த்து விட்டது.
இது கூட, தணிக்கைத்துறையின் இலக்கணத்தை பற்றிய விளக்கம் மட்டுமே. 2ஜி
விவகாரம் என்ற கந்தல் புராணம் பற்றி பேசும் தருணம் இது அல்ல. பிறகு
வருவோம்.

     ஒரு சூடான செய்தி:  “ஒரே முகவரியில் பல நிறுவனங்கள்: கண்காணிக்க
மத்திய அரசு தீவிரம்.” பத்து தலை ராவணனையும் தோற்கடிக்கும் மயில்
ராவணன்கள் நிறைந்த நன்னாடு இது.  ஒரே முகவரியில் பல பெயர்களில் இயங்கும்
நிறுவனங்கள்/ பல நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் சிலரே இயக்குநர்கள்/
பல வருமான வரி ‘பான் கார்டுகள்’ வைத்துள்ள ஏய்ப்போர் என்றெல்லாம், அரசு
கவனத்திற்கு வந்திருக்கிறதாம். ஒரு சான்று: அசத்யம் செய்த சத்யம்
கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம்.

     எனக்கு சிரிப்பு வந்து விட்டது. இந்த கூத்தெல்லாம் நான் போன
நூற்றாண்டின் அறுபதுகளிலேயே கண்டு கொண்டவன். தடுத்தாட்கொண்டதால், எனக்கு
பேரும், புகழும் வந்து சேர்ந்தன.  அந்தக் காலத்து கான்ட்ராக்ட் ஒன்று,
கோடிக்கணக்கில். மூன்று அரையணா ஆசாமிகள் போட்டி! போடாத போட்டி! அதாவது,
மூன்று பேரும் உள்கை. விதிமுறைகள், ஆணைகள், வரை முறைகள் எல்லாமே
அப்பழுக்கு இல்லாமல், பரிசுத்தம். நான் திட்டவட்டமாக, அந்த ‘பரிசுத்த’
டெண்டர்களை நிராகரித்தவுடன், அம்மாநிலத்து பொதுப்பணித்துறையின்
மேலதிகாரிகள் ‘புலு புலு’ என்று சண்டைக்கு வந்து விட்டார்கள். என்னை விட
ரொம்ப சீனியர். ராஜாஜி அன்றொரு நாள் சொன்னார்,’ என் முதல் எதிரி
கம்யூனிஸ்ட்கள் அல்ல; பொதுப்பணித்துறை் தான் என் முதல் எதிரி’ என்று. அது
நினைவுக்கு வர, எங்கள் முதல்வரிடம் ஓடினேன்..,

(தொடரும்)
இன்னம்பூரான்

சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgp5iR3wl8lVp_tkzPXTUPjZ_s7DGijBrwhuTQjAXHBO11nAWM38tjr2C0UdQSD2UZ0IdxkmeechYUiqjtjlZD9EqvM4q7hedoGWZ2GwUomyKVK0jXnLGGu3q7kq8mBgXh2sdOB2QZ5WzY/s1600/rath-3.jpeg

பின்குறிப்பு:
இந்தியாவில், ஆடிட்டர் ஜெனரலை நியமிப்பது பிரதமர், நடை
முறையில். அது பற்றியும் பிறகு தான் அலச வேண்டும்


எல்லாம் சிவப்பு மசி சமாச்சாரம் தான்! இன்று மணியோசை. நாளை ஒரு சிறப்பு அப்டேட். பிறகு தொடர் தொடர்ந்து வரும்.
இன்னம்பூரான்




vallamai editor Fri, Apr 1, 2011 at 6:27 AM


Friday, May 10, 2013

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 29





Innamburan S.Soundararajan Fri, May 10, 2013 at 9:11 AM

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை – 29
  1. Friday, May 10, 2013, 6:49
  1. Featuredஇலக்கியம்Inline image 1பத்திகள்


இன்னம்பூரான்
pastedGraphic.pdf

இன்றைய ஊடகங்களில் பலவற்றை ஊன்றி படித்தேன், ஒரு முட்டுக்கட்டையும் இன்னொரு முட்டுக்கட்டையும் மோதிக்கொள்வது போன்ற மாயத்தோற்றம் அளிக்கும் சுவாரசியமான நிகழ்வை அவை விமர்சித்த அழகை (இது வஞ்சப்புகழ்ச்சி என்று சொல்லாமலே புரியும்!) கண்டு. ஊடகம் என்றாலே அவர்களுக்கு வாசகர்களை தட்டி எழுப்பவேண்டும், சுட்டி அளித்து, கட்டித் தழுவவேண்டும்; ஆருஷி மர்டர் கேஸ் என்றால், உடனடி ஆஜர். உச்ச நீதிமன்றம்/ஆடிட் மவராஜன் என்றால், சுவையான தகவல் நாடி, வபையான செய்திகளை கோட்டை விடவேண்டும். சர்குலேஷனும், சந்தாவும் கூடினால் போதும். இந்த குறையை நீக்குவது வெளி நாட்டு ஊடகங்கள் என்பது, இன்றைய எகானமிஸ்ட் இதழில் வெள்ளிடைமலை.
கனம் கோர்ட்டார் தீர்ப்புகளையும், ஆடிட் ரிப்போர்ட்களையும் ஊடகங்கள் சரிவர புரிந்துகொள்வதில்லை; துலாக்கோல் ஆய்வு செய்து, அவற்றின் சாராம்சங்களை அளிப்பது இல்லை என்ற கவலை எனக்கு பல வருடங்களாக உண்டு. வால்டர் லிப்மென் என்ற பிரபல இதழியல் வல்லுனர் ஊடகங்கள், மக்களின் கருத்துக்களை உருவாக்கும் பணியை நடுவு நிலையிலிருந்து, பொறுப்புடன் செய்ய வேண்டும் என்றார். நம் ஊடகங்கள் அதை மறந்து விட்டன என்று தான் பல நாளிதழ்களில், இன்றைய நிகழ்வறிக்கை தோற்றுவிக்கிறது.
அது என்ன? ஒரு பன்னாட்டு நிறுவனமும், இந்திய நிறுவனமொன்றும் சம்பந்தப்பட்ட பங்கு விற்பனை விவகாரத்தில் மத்திய அரசும், அதனுடைய பெட் ரோலிய கம்பெனியும் (ஓ.என்.ஜீ.சீ) எடுத்த முடிவின் மீது ஆடிட்டர் ஜெனெரல் குறை கண்டுள்ளார். அது தவறு. மத்திய அரசு செய்தது தான் சரி. தணிக்கத்துறை சொல்வது எல்லாம் வேதவாக்கு அன்று. தணிக்கை அறிக்கையை நாடாளுமன்றம் விவாதிக்கும். பொதுக்கணக்குக் கமிட்டி அலசும். பிறகு, அமைச்சரகம் சொல்வதை ஏற்றுக்கொண்டு, நாடாளுமன்றம் தணிக்கை அறிக்கையை நிராகரிக்கக்கூடும் என்று கனம் உச்சநீதி மன்றத்தில் இன்று சொல்லிவிட்டார்கள். டும்! டும்! என்று ஹூங்காரத்துடன் தொடங்கி, ஆடிட்டுக்கு சம்பந்தமில்லாத ஒரு பொது நலவழக்கு இது, தணிக்கைத்துறையின் செயல்பாடுகளை கனம் கோர்ட்டார் விமரசிக்கவில்லை என்பதையெல்லாம் அடக்கி வாசித்தது, வால்டெர் லிப்மென் என்ற இதழியல் பிதாமகனின் அரிச்சுவடிக்கு முரண்.
சரி. கனம் கோர்ட்டார் சொன்னது தான் என்ன என்று அறிய உச்சநீதி மன்றத்தின் இன்றைய தீர்ப்பைப் படித்தேன். அன்றாடம் தீர்ப்புகள் வெளி வந்து விடுவது ஒரு பெரிய ஆறுதல்.
அருண் குமார் அகர்வால் என்ற விண்ணப்பதாரரின் பொது நலவழக்கு (ரிட் பெட்டிஷன் 69/2012) மீது இன்று (09 04 2013) நீதிபதிகள். திரு.கே.எஸ்.ராதாகிருஷ்ணன் & தீபக் மிஸ்ரா வழங்கிய தீர்ப்பில், தள்ளுபடி செய்யப்பட்டது. விண்ணப்பத்தில் தணிக்கை அறிக்கை சான்றாகக் கூறப்பட்டிருந்தது. 46 பக்கங்கள் கொண்ட இந்த தீர்ப்பில், முதல் 36 பக்கங்களில் தணிக்கை அறிக்கை பற்றிய பேச்சே இல்லை. அரசு எடுத்த முடிவுகள் பற்றி ய சாட்சியம், ஆவணங்கள், இரு தரப்பு வாதங்கள், அரசியல் நடைமுறைகள், பொருந்தும்/பொருந்தாத முன்னைய தீர்ப்புகள் பற்றி விவரமான, தெளிவான அலசல்கள் தான் இடம் பெற்றன. அடுத்த பத்து பக்கங்களில், ஆடிட்டர் ஜெனரல் பற்றி அரசியல் சாஸனம் கூறுவது, நாடாளு மன்றத்தின் மேலாண்மை, ஆடிட் வரலாறு, வல்லுனர்களில் கருத்து எல்லாவற்றையும் விலாவாரியாக அலசி, தொகுத்து அளித்து விட்டு, நான்கு வாக்கியங்களில், தணிக்கை அறிக்கையின் மீது நாடாளும் மன்றத்துக்கு உள்ள மேலாண்மையை கோர்ட்டார் ஸ்வீகரிக்கலாகாது என்பதை விளக்கும் போது, ஆடிட் கூற்றை வேதவாக்காக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றாலும், இந்திய அரசியல் சாஸனம் அமைத்த தணிக்கைத்துறையின் அறிக்கையின் மதிப்பை குறைத்து எடை போடக்கூடாது; அதே சமயம் எதிர்வாதங்களில் நியாயம் இருந்தால் அதை புறக்கணிப்பதும் சரியல்ல என்று தீர்ப்பு கூறுகிறது. இதையே தான் தணிக்கைத்துறையும் ஒவ்வொரு அறிக்கையிலும் முன்னெச்சரிக்கையாக, பல வருடங்களாக தாக்கல் செய்து வருகிறது. இந்த வழக்கில் தணிக்கைத்துறை ஒரு கட்சிக்காரர் இல்லை. அதனால், இந்த விளக்கம் அளிக்க அவர்களுக்குத் தருணம் கிட்டவில்லை.
இந்த தீர்ப்பில், மற்றும் பல வகைகளில் முக்கியமானது.
அரசு தீர்மான கட்டங்கள் துல்லியமாக அலசப்பட்டுள்ளன;
நடைமுறை சாத்தியங்கள் அழகாக விவாதிக்கப்பட்டுள்ளன;
ஆடிட் வரலாறு நிரல் நிறையாக கொடுக்கப்பட்டுள்ளது;
குறிப்பிடப்பட்ட பழைய தீர்வுகள் மிகவும் தேவையானவை;
இன்றைய காலகட்டத்தில் -கர்நாடக தேர்தல் முடிவுகள், ஜேபிஸி வில்லங்கம், ஸீபீஐ வில்லங்கள் – இது மேலும் ஆய்வு செய்ய வேண்டிய ஆவணம்.
வாசகர்களுக்கு ஆர்வம் இருக்கும் பக்ஷத்தில், ‘கனம் கோர்ட்டார் அவர்களே!’ என்ற தொடரில் அவற்றை பற்றி எழுதுவதாக உத்தேசம். பார்க்கலாம்.
உசாத்துணை:

சித்திரத்துக்கு நன்றி:





பின்குறிப்பு: இது வல்லமை இதழில் அவ்வப்பொழுது தலை காட்டும் வேறு ஒரு தொடர். தொடர் 1 -28 பின்னர் வரும்.
இன்னம்பூரான்
10 05 2013

Friday, April 26, 2013

அரசமரமும் அடிவயிறும்! -1: வல்லமை




அரசமரமும் அடிவயிறும்! -1: வல்லமை
Innamburan Innamburan Mon, Oct 17, 2011 at 2:42 PM


அரசமரமும் அடிவயிறும்! -1
  1. Monday, October 17, 2011, 8:50

இன்னம்பூரான்

“மத்திய அரசு கிராமீய சுகாதாரச் சேவையையும், துவக்கப் போகும் நகர்ப்புறச் சுகாதாரச் சேவையையும், 13-வது ஐந்தாவது திட்டத்தின் போது இரண்டற கலந்து இயக்கும். அது வரை அவை தனித், தனிப்பாதையில். 2005-ல் துவக்கப்பட்ட கிராமீயச் சுகாதாரச் சேவை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பு… நகர்ப்புறச் சுகாதாரச் சேவைக்காக 30 ஆயிரம் கோடி ரூபாய் திட்டம்… எல்லா நகரவாழ் மக்களுக்காக இயங்கும். சேரி வாழ் ஏழைகளுக்கு மேலும் கவனிப்பு…”
~ மத்திய அரசின் அறிவிப்பு (க்கமாக): அக்டோபர் 14, 2011
அரசமரம் அரசின் ஆளுமைக்கு உவமை. அடிவயிறு, ஆலாய்ப் பறக்கும் (அண்ணல் காந்தியின்) தரித்ரநாராயணனுக்கு உவமை. மேற்படி அறிவிப்பு புதிதாக என்ன செய்ய உத்தேசிக்கிறது? ஒரு பின்னோட்டம் (நீங்கள் பின்னூட்டமிடாவிடினும்!): ‘கிழக்கிந்திய கம்பெனியின் அறிவிப்பு:1621 ‘ இந்தியாவில் கிடைக்கும் மருந்துகள், தரத்திலும் சரி, எண்ணிக்கையிலும் சரி, குணம் தருவதிலும் சரி, இங்கிலாந்தில் கிடைப்பதில்லை. மருந்து வாங்க இங்கு வாருங்கள்…உணவு இங்கு மிக சிறந்தது..மருத்துவ மாணாக்கர்களின் பயிற்சி சிறப்பாக தொடங்கிய வருடம்: 1827.( ஆதாரம்:  அருமை நண்பர் டாக்டர் டி.வி.எஸ். ரெட்டி:1947: The Beginnings of Modern Medicine in Madras).
1964-ல் என் தந்தைக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிக்கலான அறுவை சிகிச்சை நடந்தது. எல்லாம் உயர்தரம். ஆபரேஷன் சார்ஜ் ரூ.15. நோ சிபாரிசு. அக்காலம் அரசியல் பிரமுகர்கள் அரசு ஆஸ்பத்திரிக்குத்தான் வருவார்கள் – ராஜாஜி. 2008 – 2010: நான் தனிமனிதனாக, கீழ்ப்பாக்கம் (டயபெட்டீஸ்) ராயப்பேட்டை (இருதய நோய்), ஜெனரல் ஆஸ்பத்திரி (குடல் வியாதி) குறிப்பிட்ட துறைகளில், அநாமதேயமாக கவனித்தேன்
எல்லாம் திருப்திகரம். நெரிசல், வசதிக் குறைவு, சுகாதாரக் குறைவு. மற்றபடி பரவாயில்லை. நல்ல கவனிப்பு, பாரபட்சமில்லாமல். க்யூ. 2011: ஒரு டாக்டரின் பொறுமையின்மையால், என் உடல் நிலை தீவிரமாகத் தாக்கப்பட்டது. அரசு டாக்டர், சொந்தக் கச்சேரி. ஒரு தனியார் மனையில் ஒரு நோயாளி இரட்டை விலையில் ஒரு சாதனம் வாங்கச் சொல்லி கட்டாயப் படுத்தப்பட்டார். மற்றொருவருக்கு கடுமையான டெஸ்ட்டுகள் செய்ய வேண்டும்; புற்று நோய் என்றனர், தனியார் ஆஸ்பத்திரியில். அடையார் புற்று நோய் ஆஸ்பத்திரியில் இவற்றை புறக்கணித்து விட்டார்கள், தேவையில்லை என்று.
சரி. ஏழைகள் படும் பாடு பார்ப்போம். 1980-களில் ஒரு கிராமத்தில் சின்ன அரசு சுகாதார மையம், மயானத்துக்கு அருகில். டாக்டர்கள் ஊருக்குள் தனியார் ஆஸ்பத்திரியில். 1997: சென்னை: எங்கள் தெரு துப்புரவுப் பெண் தொழிலாளியைக் கார்ப்பரேஷன் பிள்ளைப் பேறு மையம் கொண்டு செல்கிறோம். நல்ல கவனிப்பு. நோ லஞ்சம். பல நிகழ்வுகளைத் (1621 ~ 2011) தொகுத்து இங்கு அளித்ததின் காரணம்: மேற்கூறப்பட்ட மத்திய அரசு அறிவிப்பு 30 ஆயிரம் கோடி என்ன முப்பது பைசா பொறாது. காகிதத்தையும் மசியையும் வீண் அடிக்கிறார்கள். ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி, நேரு, மஹாத்மா என்று சகஸ்ரநாமங்கள் வேறு. தமிழ்நாட்டில் கலைஞர் காப்பீடு என்று வரிப்பணத்தை தனியார் கம்பெனிகளுக்கு தாரை வார்த்தார்கள்.
நான் காணும் குறை யாது? சுகாதாரம், மருத்துவம், கல்வி ஆகியவற்றிற்கு இந்தியாவில் அடித்தளம் நன்றாகத்தான் இருக்கிறது. மேல் கட்டிடம் தான் சோபை இழந்து, சாயம் கலைந்து, காரை பெயர்ந்து, செங்கல் துருத்தி, அலங்கோலமாக இருக்கிறது. அவற்றைச் சீர் செய்து, பராமரிப்பதை விட்டு விட்டு, புதிதாக அஸ்திவாரம் தோண்டுவானேன்? பின்னர் மேல் கட்டிடம் சோபை இழந்து, சாயம் கலைந்து, காரை பெயர்ந்து, செங்கல் துருத்தி, அலங்கோலமாக இருக்கிறதே என்று அலறி, 2016-ல் ராகுல் காந்தி சுகம் ஆதாரம் திட்டம் (இது கற்பனை) போடுவானேன்? திட்டம் போடுவதற்கு முன், கட்டுக்கோப்பாக, வாய்மையுடன் இயங்குங்கள். கட்டம் கட்டுங்கள். கட்டிடத்தைப் பராமரியுங்கள். அரசுப் பணிகளை உரிமையுடன் மக்கள் கேட்பதற்கு முன் கொடுத்துப் பழகுங்கள்.
‘தணிக்கையென்றதொரு முட்டுக்கட்டை’ என்ற தொடர் விழிப்புணர்ச்சியின் ஒரு கோணம். தட்டிக் கேட்டு ‘ஆடியவள் குற்றமா? முற்றம் குற்றமா? என்று நிர்ணயிப்பது. ‘கனம் கோர்ட்டார் அவர்களே’ என்ற தொடர், அரசின்/ சமுதாயத்தின்/மக்களின்/ தனியாரின் செயல்பாடுகளில் அதர்மம் ஓங்கிவிடாமல் பார்த்துக் கொள்வதைப் பற்றி. ‘அரசமரமும் அடிவயிறும்!’ என்று, இன்று தொடங்கும் தொடர் ஆளுமை செய்யும். மத்திய அரசு/ மாநில அரசுகளைப் பற்றி. வாசகர்களுக்கு ஆர்வம் தராத, விழிப்புணர்ச்சியைத் தூண்டாத கட்டுரைகள் வாரா.
(தொடரும்?)
இன்னம்பூரான்
17 10 2011

sridharan raghavan Mon, Oct 17, 2011 at 3:42 PM


கிராமப்புற சுகாதார மேம்பட்டு திட்டம் மிக அருமையான திட்டம். இது தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறது. இந்திய அளவில் முதல் நிலையில் உள்ளதாக சான்று பெற்றுள்ளது. இந்த த்திட்டம் கீழ அடிமட்ட மருத்துவமனைகள் பெரும்  பயன் அடைந்துள்ளன. மக்க2011/10/17 Innamburan Innamburan <innamburan@gmail.com>



Innamburan Innamburan Mon, Oct 17, 2011 at 7:44 PM
To: mintamil@googlegroups.com

கிராமப்புற சுகாதார மேம்பட்டு திட்டம் மிக அருமையான திட்டம். இது தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறது. இந்திய அளவில் முதல் நிலையில் உள்ளதாக சான்று பெற்றுள்ளது. இந்த த்திட்டம் கீழ அடிமட்ட மருத்துவமனைகள் பெரும்  பயன் அடைந்துள்ளன. மக்களும்தான். 


~ நண்பர் ஶ்ரீதர் ராகவனுக்கு,
மிக்க மகிழ்ச்சி. ஆதாரத்துடன், அனுபவசான்றுகளுடன் மேலதிக விவரங்கள் கொடுங்கள். அடுத்த கட்டுரைக்கு உதவும். உமது உசாத்தணையும் குறிப்பிடுவேன்.
இன்னம்பூரான்

Geetha Sambasivam Mon, Oct 17, 2011 at 10:51 PM



கிராமப்புற சுகாதார மேம்பட்டு திட்டம் மிக அருமையான திட்டம். இது தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகிறது. இந்திய அளவில் முதல் நிலையில் உள்ளதாக சான்று பெற்றுள்ளது. இந்த த்திட்டம் கீழ அடிமட்ட மருத்துவமனைகள் பெரும்  பயன் அடைந்துள்ளன. மக்களும்தான்//

ஆச்சரியமான செய்தி.


sridharan raghavan Tue, Oct 18, 2011 at 4:26 PM


இதில் அச்ச்ர்யபடுவதற்கு ஒன்றும் இல்லை. தமிழகத்தை பொறுத்தவரையில் அடிப்படை கட்டமைப்பு ஏற்கனவே உள்ளது .இது மற்ற மாநிலங்களில்  இல்லை. இந்த திட்டத்தில் மூன்று ஆண்டுகள் அலுவலராக  பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.  ஐயா கேட்டுள்ள தகவல்களை விரைவில் தருகிறேன்.


Innamburan Innamburan Tue, Oct 18, 2011 at 6:21 PM

நன்றி. உங்கள் பதில் வந்தபின் தான், நான் இது பற்றி, அடுத்தக்கட்டுரை எழுதுவேன். அடிப்படை கட்டமைப்பை பற்றி நான் எழுதியிருக்கிறேன். எந்த எந்த மாநிலங்களில் அது இல்லை என்பதையும் எழுதவும். வல்லமையில், பின்னூட்டமாகவுமோ, வாசகர் கடிதமாக எழுதலாம். உங்கள் விருப்பம்.
இன்னம்பூரான்
[

Geetha Sambasivam Tue, Oct 18, 2011 at 7:34 PM


எனது ஆச்சரியம் இந்தத் திட்டத்தின் கீழ் அடிமட்ட மருத்துவமனைகள் பயனடைந்ததும், மக்களுக்குப் பயன் போய்ச் சேர்ந்தது என்பதுமே.  நான் பார்த்தவரை கிராமங்களில் இது குறித்து அதிருப்தி நிலவுகிறது. ஆனால் நீங்கள் அலுவலராகப் பணியாற்றி உள்ளதால் இன்னும் அதிகமாகத் தகவல்கள் தர முடியும். நன்றி.

*
சித்திரத்துக்கு நன்றி: http://tamil.oneindia.in/img/2011/05/04-tree200.jpg
இன்னம்பூரான்
26 04 2013


Tuesday, April 16, 2013

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை -28


தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை -28
Wednesday, April 17, 2013, 4:46


இன்னம்பூரான்
pastedGraphic.pdf
இந்தத் தொடரை விட்ட குறை எட்டு மாதங்களுக்கு முன், ஒரு வாசகரின் பதிலுக்குக் காத்திருந்ததால். ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருப்பதில்லையே! தற்காலத்திய ஆடிட்டர் ஜெனெரல் திரு. விநோத் ராய் அவர்கள் மே மாதம் வேலையிலிருந்து ஓய்வு பெறுவார். புதிய ஆடிட்டர் ஜெனெரல் நியமனம், பிரதமர் கையில். இது தான் முப்பது-நாற்பது வருடங்களாக நடந்து வருகிறது. தணிக்கைத் துறையிலிருந்து தலைமையை தேர்வு செய்வதில்லை. எல்லாம் ஐ.ஏ.எஸ். தலைகள். திரு. விநோத் ராயும் அங்கிருந்து வந்தவர் தான். ஆனால் பாருங்கள். தணிக்கைத்துறை, தன்னுடைய சீரிய மரபுகள், உகந்த நடைமுறைகள், வைக்கோல் போரில் ஒளித்து வைத்த ஊசியை தேடிப் பிடித்து விடும் திறன், விருப்பு/வெறுப்புக்கு அப்பாற்பட்ட தன்மை, அச்சம் தவிர்த்த மனப்பான்மை ஆகியவை மூலம் அவரைப் போன்ற, காலம் சென்ற திரு. சி.ஜி.சோமையா அவர்களைப் போன்ற உயர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தன்வசம் இழுத்துக்கொண்டது. தற்காலம் ஊடகமெங்கும், உலகளாவிய வகையில் இந்திய தணிக்கைத் துறையின் சாதனைகள் புகழப்படுகின்றன. ஐ.நா. அமைப்புகள் எல்லாவற்றிலும், இத்துறையினர் பேரும், புகழுமாக, பணி செய்கிறார்கள். மத்திய அரசின் அசரீரி வாக்கு ஆகிய அமைச்சரொருவர், ‘ஒருவர் தலைமை’ வேண்டாம். ஒரு ஆடிட் குழு அமைக்கலாமே என்று பட்டம் விட்டுப் பார்த்தார். துரிதமாக, அதை வாபஸ் பெற்றார். மற்றொரு அழகிய பெருமாள் அமைச்சர், ‘அதிகாரிகள் என்ன? நானே ஆடிட்டுக்கு அஞ்சுகிறேன்!’ என்று பூச்சாண்டி காண்பித்து விட்டு, எள்ளல் செய்கிறார்.
எதற்கும், இங்கு நினைவூட்ட வேண்டியது,  மே 30, 1949 அன்று, அரசியல் சாஸனம் வகுக்கும் அவையில் டாக்டர் அம்பேத்கார் அவர்கள், ‘…இந்திய அரசியல் சாசனத்தின் முதல் முக்கிய பதவியாக ஆடிட்டர் ஜெனெரல் பதவியைக் கருதுகிறேன்…நீதிபதிகளின் ஸ்தானத்தை விட இது மேலும் பொறுப்பு மிகுந்த பதவி.. நீதித்துறையை விட இதை முக்கியமாகக் கருதுகிறேன்..‘என்றார், என்பதே. பல சான்றோர்கள் அதை வழி மொழிந்தார்கள். தணிக்கை மட்டுமல்ல; அரசின் வரவு/செலவு விஷயங்களை, ஆதியோடந்தமாக அலச வேண்டியதால், Comptroller and Auditor General என்ற நாமகரணம் தேவை என்றார், திரு.டி.டி.கிருஷ்ணமாச்சாரி. அதையெல்லாம் முற்றும் புறக்கணித்து விட்டார்கள். அரசு-தணிக்கை மோதலை கண்டு மனம் வருந்தி, ஓய்வு பெற்ற சில தணிக்கை அதிகாரிகள் ஜனாதிபதியிடம், ஒரு மேன்மை குழு மூலம்தான் அடுத்தத் தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்கள். அதில் என்னுடைய கருத்து, அமெரிக்கா/இங்கிலாந்து போல, ஓய்வு பெறும் ஆடிட்டர் ஜெனரலும் அந்தக் குழுவில் இருக்க வேண்டும் என்பதே. என்ன செய்யப்போகிறார்களோ! தெரியவில்லை, பாரதமாதாவே! நல்லதே நடக்கட்டும்.
அடுத்த செய்தி விசித்திரமானது. சில அரசுத் துறைகள், ‘நாங்கள் செய்யும் வேலைகளை முன்னாலேயே பரிசீலித்து, தணிக்கைத்துறை நற்சான்று கொடுக்கட்டும்.’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரோடு போடப்போறோம். ஒப்பந்தம் வரையுமுன், எங்கள் திட்டவட்டத்தைப் பாருங்கள் என்கிறார்கள், ஒரு துறையினர். நாங்கள் டெண்டர் திறகும்போது, வந்து சாட்சி இருங்கள் என்கிறது, மற்றொரு துறை. திரு.கேம்கா என்ற யோக்கியமான ஐ,ஏ.எஸ். அதிகாரியை வறுத்தெடுக்கும் ஹரியானா அரசு, நிலபுலன்கள் மதிப்பை தணிக்கைத்துறையே போடட்டும் என்று சொல்கிறது.  இது ஒரு பகடியாகத்தான் தோன்றுகிறது. என்னுடைய அனுபவத்தில் தணிக்கைத்துறை முன்கூட்டியே அரிதான சில சமயங்களில் அரசை அன்புக் கட்டளையாக எச்சரித்தது உண்டு. ஆனால், ‘நாங்கள் செய்யும் வேலைகளை முன்னாலேயே பரிசீலித்து, தணிக்கைத்துறை நற்சான்று கொடுக்கட்டும்.’ என்று கோஷமிடுவது ஒரு தகிடுதத்தமே அல்லது பகடியே. வாசகர்களின் விருப்பத்தைப் பொறுத்து, அது பற்றி, விவரமாக அலசி, அடுத்த கட்டுரை அமையலாம். சமைக்கும் முன் ருசி பார்ப்பது எப்படி?
(Reproduction right applied for)
பிரசுரத்துக்கு நன்றி: http://www.vallamai.com/?p=34553