Showing posts with label CAG. Show all posts
Showing posts with label CAG. Show all posts

Friday, April 29, 2016

பொய்க்கணக்கு எளுதுவோம்லெ!இன்னம்பூரான் பக்கம்: III:4

இன்னம்பூரான் பக்கம்: III:4
இந்திய தணிக்கைத்துறையும், நானும்[4]
பொய்க்கணக்கு எளுதுவோம்லெ!

இன்னம்பூரான்
ஏப்ரல் 27, 2016
வல்லமை பிரசுரம்: http://www.vallamai.com/?p=68413&cpage=1#comment-14657


“...தணிக்கை என்பது காசுபணம் மட்டும் பார்க்காது. வச்ச காசுக்கு ஆதாயம் இருக்கிறதா என்று தோண்டிப் பார்க்கும். நாக்கை பிடுங்கிறாப்பல நாலு கேள்வி கேட்கும்....”.

இந்த நாசமாப்போன ரேஷன் வந்தாலும் வந்தது, ஊழலும் அதன் கழுத்தைக்கட்டிக்கொண்டு வந்து உபத்ரவம் செய்தது. அரசு கொள்முதலில் நியாயவிலையில், ‘லாபம் ஒண்ணு..’ என்று நெல்லை படியளக்கும்போது, அதை உமி நீத்து, தவிடுத் தவிர்த்து அரிசியாக்கி மக்களுக்கு தருவதற்குள், ஒரு மோசடி நடந்து முடிந்திருக்கும். ஒரு படி நெல்லை அரைத்தால் அரைப்படி அரிசி தேறும்; குருணை, தவிடு, உமி எல்லாம் விலை போகக்கூடியவை தான். சொதப்பலான ஒப்பந்தம் எப்படி இருக்கும் என்றால், ஒரு படி நெல்லுக்கு அரைப்படியை விட 10% குறைந்தால், பரவாயில்லை. 10% க்கு மேல் குறைந்தால்  ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பகிங்கரமாக அறிவித்து விடுவார்கள். திருடுவதற்கு, இதை விட சுகமான வழியே தேவையில்லை. ஒரு படி நெல்லுக்கு கால்படி அரிசி கொடுத்து விட்டு, கால் படி அரிசி வேஸ்ட் ஆனதாகச்சொல்லி, அபராதத்தை டீக் ஆகக் கட்டி விடுவார்கள். நான் இந்த தந்திரத்தை கண்டது ஒரிசாவில்; இங்கு உள்ளவர்கள் அப்படி சேமித்த அரிசியை கேரளாவுக்கு அனுப்பி வந்தார்களோ? நான் சொல்வதைத் தப்பாக நினைக்காதீர்கள். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வதில் நமக்கு இணை நாம் மட்டும் தான். அது தவிர யான் ஒன்றும் அறியேன், பராபரமே !

தணிக்கைத்துறையில் இதை மோப்பம் பிடித்து, அபராத விழுக்காடு திருடுவதற்கு ஊக்கத்தொகையாகப் பணி புரிகிறது என்று நாங்கள் பொதுக்கணக்கு மன்றத்தில் புரிய வைப்பது பெரும்பாடாக போய்விட்டது என்றாலும், அந்த துறை காரியதரிசி, ‘ஆடிட் சொல்வது உண்மையே. எங்களை இதை திருத்தவதை மேலா அனுமதிப்பதில்லை; ஆனால் ஆடிட் கூற்றை வைத்தே, அபராத விழுக்காடை ஐந்து மடங்கு உயர்த்திவிடுவோம் என்றார்.

எதற்கு சொல்ல வரேன் என்றால்.... பாருங்களேன் !

அடிக்கடி சென்னையில் காணப்படும் விருதா காட்சி ஒன்று: ‘ஆவின் பால் ஒப்பந்தவண்டி. அவசரம். வழி விடவேண்டும்.’ என்ற பதாகையுடன் வலம் வரும் லாரிகள். அவற்றில் பல நடு வழியில் நின்று நிதானமாக ரயில் இஞ்சின் மாதிரி தண்ணிப்போட்டது வேறு சமாச்சாரம். இந்தியாவில் நடக்கும் பல ஊழல்கள், லஞ்ச வாவண்யங்கள் மக்களின் ஒத்துழைப்பால் தான் ரயில் மேட்டுக்கத்தாழையாக வாழ்கின்றன.

அரசு நிர்வாகமோ, தனியார் துறையோ, தன்னார்வக்குழுவோ, ஊழியர்கள் ‘கடைத்தேங்காயை எடுத்து தனது சமையலறையில் உடைத்து சட்னி செய்து ‘கொட்டிப்போம்.’ என்றால், பயிரை மேயும் வேலிகள் கை கட்டி நிற்கும்.

இந்த ஆடிட் ரிப்போர்ட்டை பாருங்கள். ஜம்மு-காஷ்மீர் காவல் துறை மாவட்ட அதிகாரிகள் ஊழல் தூள் கிளப்பியிருக்கிறார்கள்.

  1. 29 அலுவலகங்களில் 9 அலுவலகங்களின் ஆவணங்களை, தணிக்கைக்கு வந்த செலவு ஆவணங்கள், ஊர்தி ரிஜிஸ்டிரேஷன் அலுவலகத்து ஆவணங்களுடன் இணைத்து பரிசோதனை செய்த போது, பஜாஜ், சேடக்,, வெஸ்பா, ஆக்டிவா வகையறா ஸ்கூட்டர்கள்,  புல்லுட், ஹீரோ ஹோண்டா மோட்டார் சைகிள், செத்துப்போன வண்டிகள் (சாம்பிள்: டாட்டா சுமோ JKB 5826) , டிராக்டர், புல்டோசர் எல்லா  வகையான வண்டிகளை நாலுகால் ப்ளெஷர் கார் என பொய்க்கணக்கு எழுதி, துட்டு சம்பாதித்ததாக ‘பகீர்’ நிரூபணம்;
  2. ஊர்தி ரிஜிஸ்டிரேஷன் அலுவலகத்துக்கண்களில் படாத நம்பர் சில வண்டிகள் கணக்கில்!;
  3. டூப்ளிகேட் பில்களுக்குத் தெரிந்தே பொய்க்கணக்கு எழுதி பட்டுவாடா;
  4. ஒன்பது மாவட்டங்களில் வண்டி வாடகை கொடுத்தது 57. 37 கோடி ரூபாய். வருமான வரி கழிக்காமல் விட்டது: 6.75 லக்ஷம் ரூபாய். இது பெரிதாகப்படாவிட்டாலும் , எல்லா 29 மாவட்டங்களில் என்ன என்ன நடந்ததோ?
  5. இப்படி மானாவாரியாக வண்டிகளை வாடகைக்கு எடுப்பதற்கு கெடு: 24 12 2014.
அதை மதிக்காமல் ஜம்மு மாவட்டத்தில் 771 வண்டிகள் வாடகைக்கு எடுக்கப்பட்டன.6. விதித்த  அளவுக்கு மீறி வண்டிகளை வாடகைக்கு எடுத்ததில் ஒரு நாளைக்கு அதிகப்படி செலவு: 25.89 லக்ஷம் ரூபாய்கள்.

இப்படி போகிறது கதை. எல்லா மாநிலங்களிலும் இதன் பிரதிபலிப்பை காணலாம். சொன்னால் பொல்லாப்பு! இந்த ஆடிட் புண்ணியவான்கள் இப்படி பல துறைகளின் ஆவணங்களை அலசி, இந்த கந்தரகூளத்தை அம்பலத்துக்குக் கொண்டு வரலாமா?
ஒரு ஐடியா தோன்றது. வண்டி வாங்காமல், பில்லை மட்டும் (லஞ்சம் கொடுத்து) வாங்கி, ஒரு பினாமி வாடகையாக அதை கற்பனையில் விட்டு துட்டு சம்பாதிக்கலாமா? ஆடிட் ஒழிக என்று கூச்சல் போடலாமா?
-#-
படித்தது:
சித்திரத்துக்கு நன்றி:

Innamburan wrote on 29 April, 2016, 6:29

பிரசுரத்துக்கு நன்றி. தணிக்கை சுட்டும் குற்றங்களை காலாவட்டத்தில் மக்கள் மறந்து விடுவார்கள் என்று அரசுத்துறைகள் வாளா இருப்பார். இந்த குற்றச்சாட்டை தீவிரமாக எடுத்துக்கொண்டு, விசாரணை தொடங்கியுளனர். அதையும் பகிர்ந்து கொள்கிறேன்.
இன்னம்பூரான்
29 04 2016







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, March 13, 2016

III:3: இன்னம்பூரான் பக்கம்: III:3இந்திய தணிக்கைத்துறையும், நானும்[3] ஆட்டைத்தூக்கி…!


III:3: 
இன்னம்பூரான் பக்கம்: III:3
Monday, March 14, 2016, 5:31
இந்திய தணிக்கைத்துறையும், நானும்[3]
ஆட்டைத்தூக்கி…!
இன்னம்பூரான்
மார்ச் 13, 2016

தணிக்கைத்துறை சகலகலாவல்லவனாக இருக்கமுடியாது. 
ஒரு நாள் கல்லூரி ஆடிட்; 
அடுத்த நாள் நீர் பாசனம்; 
அடுத்த நாள் ஆசுபத்திரி;
அடுத்த நாள் ராணுவ தளவாடங்கள். 

எல்லாம் வேஸ்ட் சார்! இது காமன் எரிந்த கட்சி. 

சார்! கணக்கு வழக்குப் பார்ப்பவனுக்கு நிர்வாகத்தை பற்றி என்ன தெரியும்? ரோடு போடமுடியுமா? பதிலடி கொடுப்போம் இல்லை! இது ரதியும் எரிந்த கட்சி!

தணிக்கை செய்யப்பட்ட துறையுடன் ஆலோசனை செய்து, ஆடிட் திட்டமிடப்படுகிறது. அந்த துறையின் பதிலும் உள்ளடக்கம். நாங்கள் உள்ளதை, உங்கள் ஆவணங்களை ஆய்வு செய்து, சொல்கிறோம். எங்கள் அறிக்கையை, அக்கு வேறு, ஆணி வேறாக அலச, சட்டசபையின் பொது கணக்கு கமிட்டி இருக்கிறது. இது காமன் எரியாத கட்சி.

ஒரு பல்கலை கழகத்தின் நூலகம் சிதறி கிடைந்தது. நூல் வாங்க அளித்த பணத்தில் ஹாஸ்டலுக்கு அரிசி வாங்கினார்கள்; பாசனத்துக்கு சுழல்முறையில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். அது தவறினால், அநீதி நிகழும். ஒரு ஆசுபத்திரியில் செத்தவங்களுக்கு சோறு போட்டதாக கணக்கு எழுதினார்கள். போஃபோர்ஸ் பீரங்கி தெரிந்த கதை. கணக்கு வழக்குப் பார்க்கிறவன், தோட்டாவை காணவில்லையே பெட்டியில். நமது சிப்பாய் எதிராளியை தாக்கமுடியாமல் சுடப்படுவானே என்று அங்கலாய்த்தால், அதில் என்ன தவறு?

தணிக்கை என்பது காசுபணம் மட்டும் பார்க்காது. வச்ச காசுக்கு ஆதாயம் இருக்கிறதா என்று தோண்டிப் பார்க்கும். நாக்கை பிடுங்கிறாப்பல நாலு கேள்வி கேட்கும். தணிக்கைத்துறையின் பயிற்சிக்கூடம் 1955 வரை சென்னையில் இருந்தது. பின்னர் சிம்லாவில் அங்கு தான் எங்களுக்கு அக்னிப்பரிக்ஷை.

ஒரு அனுபவம். நான் இராணுவத்துறையில் பணிபுரிந்த போது, பொதுகணக்குத்துறையில் ஆடிட்டுக்கு எதிரணியில் பணி. உரிய நேரத்தில் முடிவு எடுக்காததால் பீர் விலை ஏறிவிட்டது. இத்தனை நஷ்டம் என்று ஆடிட் புகார். நஷ்டமில்லை. விலையில் கூட்டிவிட்டோம் என்று பதில் அளித்தார், ஹரீஷ் ஸரீன் ஐ.சி.எஸ். ஆடிட்டர் ஜெனெரல் ரங்கநாதனும் ஐ.சி.எஸ். ஆபீஸுக்கு வந்த பின் அந்த பதிலில் உள்ள தவறை ஹரீஷ் ஸரீனிடம் காண்பித்தேன். காலையில், முடிந்து போன கதையை மறுபடியும் எடுத்து, தவறை ஏற்றுக்கொண்டு, இரவே இந்த செலவை ஜவான் தலையில் கட்டக்கூடாது என்று எங்கள் தலையில் போட்டுக்கொண்டோம் என்றார், அவர். எல்லாரும் அதை சிலாகித்தார்கள். அந்த காலத்தில் எல்லாருமே மாரல் ஜட்ஜ்மெண்டில் குறியாக இருந்தார்கள். இது நிற்க.

மாஜி ராணுவவீரர்கள் நாள்தோறும் செத்துப்பிழைத்தவர்கள். எல்லாநாடுகளிலும் அவர்களுக்கு தனி மரியாதை, சலுகைகளும் உண்டு. இந்தியாவிலும் தான். ஆனால் நடந்ததை பாருங்கள். மாஜி ராணுவ வீரர்கள், அவரை சார்ந்த குடும்பம், பெற்றோர்கள் ஆகியோருக்கு [47.34 லக்ஷம்: ஏப்ரல் 2015] கைக்காசு செலவழிக்காத வகையில் மருத்துவ உதவி அளிக்க மத்திய அரசு 2002ல் ECDS என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

சமீபத்தில் நடந்த ஆடிட் முடிவுகள்:
முதல் கோணல் முற்றும் கோணல்: உறுப்பினர்களுக்கு அடையாள சீட்டு அச்சடிக்கும் மிகவும் பொறுப்பான வேலையை ஐந்து வருடங்களுக்கு விதியை மீறி ஒரு நிறுவனத்துக்குக் கொடுக்கப்ட்டது. சந்தை விலையை பற்றி ஒரு விசாரிப்பு இல்லை. அதிகப்படி தண்டம் ரூ.6.69 லக்ஷம் வேறே!

இது இலவச பராமரிப்பு இல்லை. ஒரே தடவை-சந்தா காசு கட்டினால் தான் சிகிச்சை. வேறு செலவை மாஜிகள் தலையில் கட்டக்கூடாது; ஆனால் கட்டினார்கள். கேள்வி முறை இல்லையா?

டில்லியில் மட்டும், மாஜிகளின் சந்தாவில் பணிபுரியும் இந்த ECDSலிருந்து தற்கால ராணுவ மருத்துவ இலாக்காவுக்கு அனுமதியில்லாமல் செய்த செலவு: ரூ.40.78 கோடி. அதான் ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டார்கள்!

பல பாலிக்ளினிக்களில் மருந்து பஞ்சம், வருடம் முழுதும்.
காலாவதியான மருந்துகளை தன் செலவில் ஒப்பந்தக்காரர் எடுத்து செல்லவேண்டும் என்று ஷரத்து. ஆனால், அவற்றை திருப்பி அனுப்பாததால் நஷ்டம்: ரூ.73.44 லக்ஷம்.
மற்றும் பல.

ஆடிட் ரிப்போர்ட்டை முழுதும் படித்தால், நான் குறிப்பால் உணர்த்தியது சொற்பம் என்று தெரியும். அது இலவசம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

Sunday, December 6, 2015

A REPORT THAT WAS NOT READ

An excerpt from my mail to my children, this minute,

We in Perungalathur were sitting duck when the floodgates of Chembarapakkam Lake were opened without warning. The Residency was sturdy and well maintained and escaped with minimal damage. What is astounding is the way the staff at all levels turned up daily at grave risk. There are bed-ridden patients. They were 100% cared for. During the worst rains, duly protected by all my rain gear bought by Suja and Jagan, I went on a tour of our place with my camera on hand while it was pouring in torrents and shall mount the photos early in the net. All key personnel -maintenance, hospital,security, office etc. were in their duty stations with a  cheer. The manager and security were on inspection tours.
Love,
Dad

Secondly, We from the Indian Audit & Accounts Department are no fools. We are neutral, tenacious and uncompromising. For 150 years, our Mantra is 'NO FEAR. NO FAVOUR'.

Why Chennai went down and under



Chennai rising Without control R Ragu



A CAG audit shows that the Centre and State governments have been criminally remiss over disaster management

The unprecedented and continuing rains that have broken a 100-year record and have wreaked havoc in Chennai for over a week, highlight both elaborate rescue and relief efforts as well as gaps in the existing policy on disaster planning. It is true that swift deployment of the armed forces to evacuate people in affected areas and extensive rehabilitation work by the government, various NGOs, not to mention high-spirited individuals, is laudable. But as the city limps back to normalcy, it is time for introspection.
Terror attacks, massive floods, earthquakes — every such event that occurs in India appears to follow a similar pattern. Public rage, condemnation of the government, massive relief efforts, and then, as a final touch, focus on the ‘spirit of the city and people’. But we need to ask ourselves if extolling the undying spirit is a cover-up for our indifference to the lacunae in the policies of the Centre and the State governments.
True, losses were unavoidable given the record-breaking rains that lashed across the city. But what made matters worse was that people were caught unawares by the flash floods in the absence of an effective early warning system or mitigation measures.
A look into the performance audit report of the disaster management mechanism in the country by the Comptroller and Auditor General (CAG) in 2013 offers some heart-rending insights. While the latest figures may differ slightly, the wide gaps in the system, across the disaster management cycle, are unlikely to have changed drastically.
The government of India notified the Disaster Management Act in December 2005, followed by a National Policy on Disaster Management in 2009. The NDMA at the national level, the State Disaster Management Authority (SDMA) at the state level and the District Disaster Management Authority (DDMA) at the local level have been provided as part of the institutional framework under these Acts. A typical disaster management plan essentially comprises prevention, mitigation, preparedness, response, rehabilitation and reconstruction and recovery.
The CAG report found that the NDMA was ineffective in its functioning in most of the core areas.
Sitting ducks
Chennai is no stranger to heavy rains and cyclonic storms. The state of Tamil Nadu has been frequently subjected to cyclonic storms and flooding. The CAG report states that between 1900 and 2009, there were 50 cyclonic storms and, on an average, the State faces one or two severe cyclones during the northeast monsoon period. The low pressure and depression last for days, leading to heavy rainfall and flooding of vulnerable areas. It is inexcusable, then, that there was no disaster preparedness plan. According to the CAG report, the SDMA, constituted in 2008, did not meet even once, nor were State disaster management rules prepared.
Even as Chennai city got some respite, there was excessive discharge of water from Chembarambakkam lake — the reservoir had been in surplus because of the heavy rainfall. The sudden discharge that came without warning displaced even more people from their homes. Much of the devastation and chaos could have been averted had the authorities altered the residents beforehand.
One of the reasons why this may not have happened is because a large number of reservoirs and barrages in the country are not monitored at all for their water levels. The CAG report states that only eight States out of 29 had prepared emergency action plans for 192 large dams as against a total of 4,728 large dams as of September 2011. The ministry of water resources had not formulated an actionable plan for the management of floods in accordance with NDMA guidelines. There were 4,728 reservoirs and barrages in the country as of September 2011. The Central Water Commission, responsible for conservation and utilisation of water resources in the States, provided inflow forecasts with respect to only 28 reservoirs and barrages.
Ineffective response
Let us look at the response systems. It is true that the National Disaster Response Force (NDRF) formed as a special force to deal with all types of disasters, has been initiating massive rescue operations in the last couple of days in Chennai. But despite such elaborate efforts, you still hear appalling stories of families stranded in their homes for days without food or water, with no rescue in sight. The answer may lie in the inadequate and ineffective resources of the NDRF.
According to news reports, though there was a clear forecast of heavy rainfall, the State government requisitioned only a few teams of the NDRF. Had there been adequate forces, rescue operations would have been more effective. The shortage of manpower and inadequate specialised training are concerns that are highlighted in the CAG report. Also, the national policy on disaster management 2009 provided that the primary responsibility for disaster management rested with the States.
Nothing’s unavoidable
The aim was for each State to equip and train one battalion equivalent force known as the State Disaster Response Force (SDRF). According to the CAG report, till June 2012, only seven States had set up the force — Bihar, Odisha, Rajasthan, Gujarat, Maharashtra, J&K and Nagaland. The need for every State to have its own SDRF team in place is evident from the hurdles the NDRF teams are facing now in Chennai. As many of these teams were called in from the north, the Hindi-speaking personnel have been unable to communicate with distressed residents. Also, precious time was lost in understanding the topography and receiving logistical support from local agencies; this impeded rescue operations.
Chennai and the 2013 disaster in Uttarakhand are clear wake-up calls. It is critical that effective disaster managing mechanisms are put in place to reduce the risks and damage from disasters to the maximum extent possible.
After all, disaster by definition means catastrophe or calamity that is beyond the coping capacity of the public. Let us not tag it as ‘unavoidable’ and attempt to shrug off responsibility for disasters, natural or manmade.
(This article was published on December 6, 2015)

Printable version | Dec 7, 2015 5:31:57 AM | http://www.thehindubusinessline.com/opinion/why-chennai-went-down-and-under/article7955146.ece © The Hindu Business Line

Tuesday, June 18, 2013

22: வெட்டவெளியிலே கரும்புள்ளி !:தணிக்கை.




22: வெட்டவெளியிலே கரும்புள்ளி !:தணிக்கை.
Innamburan Innamburan Fri, Jan 27, 2012 at 8:26 PM

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை:22:
வெட்டவெளியிலே கரும்புள்ளி !
இன்னம்பூரான்
26 01 2012

கடந்த 2011ம் வருடத்தில் இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட துறை: அகில இந்திய தணிக்கைத்துறை. அரசியலில் ஆளுமை செலுத்துபவர்களால் பெரிதும் வசை பாடப்பெற்ற
மகிமையும் அதைத்தான் சாரும். ஊடகங்களால் ஆதரவுடனும், எதிர்மறையாகவும் விமர்சனம் செய்யப்பட்ட துறையும், அதுவே. நடுநிலையில் நின்று, ஆதாரங்களுடனும், புள்ளி விவரங்களுடனும், நிரூபணங்களுடனும், மறுக்கமுடியாத முடிபுகளுடனும், தங்கு தடையின்றி, நமது அரசியல் சாசனத்துக்கு ஏற்புடைய வகையில், அதன் அடிப்படைக்குக் குந்தகம் இல்லாத வகையில், தரமுயர்ந்த அறிக்கைகளை சமர்ப்பணம் செய்யும் துறை, இது ஒன்றே. ஆகவே, குடியரசு தினத்தன்று, இந்த தொடர் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது.
logo.png

தற்காலம், மக்களால், அரசின் செயல்கள், கொள்கைகள், ஒப்பந்தங்கள், முரண்செயல்கள், தடுமாற்றங்கள் எல்லாம் ஆராயப்படுவதும், விழிப்புணர்ச்சியுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் தொட்ட குறைகளையும், விட்ட குறைகளையும், பாரபக்ஷமில்லாமல் அலசப்படுவதும் கண்கூடு. சில மாஜி அமைச்சர்களும், கட்சி பிரமுகர்களும், உயரதிகாரிகளும் சிறை சென்றதின் முகாந்திரம், இந்த ஆடிட் அறிக்கைகளே. அவை அரசியல் சாசனத்தின் கட்டளைக்குட்பட்டு, பாராளும் மன்றத்தில்/சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. தணிக்கைத்துறைக்கு நாடாளும் மன்றம் தான் எஜமானன் என்பர். ஆனால், அரசியல் சாசனத்தின் மேலாண்மையை உணர்த்துவர், நுட்பம் அறிந்தவர்கள். இன்றைய காலகட்டத்தில், 150 வருடங்களாக, இடைவிடாமல் பணி புரியும் இத்துறையின் எஜமானன், மக்கள் சமுதாயமே என்பது என் கருத்து. இது நிற்க.

அணுசக்தி இலாக்காவும், வெட்டவெளி (ஸ்பேஸ்) இலாக்காவும் பலவருடங்களாகவே, குற்றம், குறை காண்பவர்களை அண்ட விடுவதில்லை. அவற்றை தணிக்கை செய்வது எளிதும் அன்று. ஆவணங்கள் கொடுக்கப்படவேண்டும்; கிடைத்தவை புரியவேண்டும்; நாட்டின் பாதுகாப்பு விஷயங்களுக்கு முக்கியத்வம் கொடுக்கவும் வேண்டும். இவற்றை கவனத்தில் வைத்துக்கொண்டு தான் ஏற்புடைய தணிக்கை கையேடுகள் தயார் செய்யப்பட்டு, விஞ்ஞான ஆடிட் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, ஒரு தனி பிரிவே இயங்குகிறது.
இது வரை தணிக்கை முடிவுகளை, தகுந்த காரணம் காட்டி, யாரும் குறை கண்டதில்லை.
IndianSpaceResearchOrganisation_thumb.jpg

இந்தியாவின் வெட்டவெளி இலாக்கா, ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற தன்னுடைய நிழல் (‘பினாமி’ மாதிரி; ஆனால்,அநாமதேயம் அல்ல.) மூலம் தேவாஸ் மல்டி மீடியா என்ற கம்பெனிக்கு, விதிகளை விலக்கி, சலுகைகள் நிறைந்த ஒப்பந்தம் அளித்ததால், கோடிக்கணக்கில் (2,00,000 கோடி) நஷ்டம் என்றும், உள்கை ஆதரவும், புறங்கை சுவையுமாக, பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்றும் இந்திய தணிக்கைத்துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறுகிறது. ‘முதல் கோணல்’ என்று தொடங்கி, முற்றும் கோணல்’ என்று அலசியிருக்கிறது, அந்த ரிப்போர்ட். நியாயப்படுத்த முடியாத தாமதத்திற்கு பிறகு, ஃபெப்ரவரி 2011ல் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, மத்திய அரசு, ஆடிட் ரிப்போர்ட்டை உறுதி செய்திருக்கிறது. அதற்கு இப்போது 2012 ல் என்ன என்று கேட்பவர்களுக்கு, இன்றைய செய்தி ஒன்று பதில் அளிக்கிறது. திரு. மாதவன் நாயர் என்பவர் பிரபல விஞ்ஞானி. வெட்டவெளித்துறையின் முன்னால் தலைவர். மத்திய அரசு அவருக்கும், மேலும் மூன்று மாஜி அதிகாரிகளுக்கும் யாதொரு அரசு பதவியும் கொடுக்கலாகாது என்றொரு ஆணை பிறப்பித்துள்ளது. அந்த தடாலடி ஆணை நான்கு விதமான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

முதல் கேள்வி: 
அவர்கள் நிஜமாகவே தவறு செய்திருந்தால், அவர்களில் சிலரும், மற்றும் சிலரும், தணிக்கைத்துறை அப்பட்டமாக எழுதியது போல தங்க நாணயங்களை பரிசிலாக பெற்று இருந்திருந்தால், இந்த மென்மை வருடல் ஒரு தண்டனையா என்ன? அவர்கள் மீது சட்டபூர்வகமாக 2008லிருந்து ஏன் கடும்நடவடிக்கை எடுக்கவில்லை? அல்லது, அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபணம் ஆகிவிட்டால், இந்த தடாலடி ஏன்? மாபெரும் தவறுகளை ஒப்புக்கொண்ட மாதிரி தான் பிற்கால நடவடிக்கைகள் இருக்கின்றன. தவறு செய்தவர்கள் தப்பி விட்டனரோ என்ற ஐயம்; இரண்டாவது கேள்வி எழுகிறது.

இரண்டாவது கேள்வி:

இது மேலும் சிக்கலானது. ஆதாரங்களை பாரபக்ஷமில்லாமல் ஆய்வு செய்தால், தவறுகளுக்கு மற்றும் பலர் துணை போயிருக்கலாம் என்று தோற்றம். ஏனெனில், இந்த ஸ்பேஸ் துறையே பிரதமரின் நேரடி அலுவல்களில் ஒன்று. அவர் தான் இத்துறைக்கு பொறுப்பு ஏற்கும் அமைச்சர். அவருடைய அலுவலகத்தில் துணை அமைச்சராக இருக்கும் திரு.பிருதிவிராஜ் செளஹான் அன்றாட பொறுப்பு வகிக்கும் துணை அமைச்சர். அவருக்கும், பிரதமரின் அலுவலகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு தெரியாதபடி, திரு. மாதவன் நாயர் மறைத்து விட்டார் என்று சொல்ல இயலாது. அவர்கள் தஸ்தாவேஜுகளை இனம் கண்டு ( அல்லது இனம் காணாமல் !) அவ்வப்பொழுது சம்மதம் தெரிவித்து இருக்கவேண்டும், அரசு விதிமுறைப்படி. 
மேலும், இந்த எஸ். பாண்ட் விவகாரம் நாட்டின் பாதுகாப்பை பாதிக்கக்கூடியது. அந்த ‘பொன் பரிசில்’ அளித்த கம்பெனிக்கு எக்கச்சக்க சலுகைகள். இலாகாவின் மந்திரியோ பிரதமர். அவருக்கு தெரியாது, இந்த கூத்து என்று அவருடைய ஆலோசகர்களின் குழு சொல்கிறது. யார் இதை நம்ப முடியும்?
சந்தடி சாக்கில் துறை சாராத துணை அமைச்சர் ஒருவர் வந்து விஞ்ஞானிகளை தரக்குறைவாக, 27 01 2012 அன்று சாடியிருக்கிறார்.  அவர் வந்து புகல் என்ன நீதி என்று திரு. மாதவன் நாயர் கேட்பதில் நியாயம் இருக்கிறது. ஐயகோ! இந்தியா கலிலியோ காலத்துக்குத் தள்ளப்பட்டதோ என்று மாதவன் நாயர் வினவுகிறார். நாம் எங்கே போய் அழுவது? ஜனாப் அப்துல் கலாம் அவர்களிடம் போயா?

மூன்றாவது கேள்வி:

அந்த ஒப்பந்தம் தான் ஒரு வருடம் முன்னால் அபார்ஷன் செய்யப்பட்டுவிட்டதே என்று ஒரு சால்ஜாப்பு. அது எடுபடாது, ஐயா. இந்திய தணிக்கைத்துறை சுணக்கம் காட்டாமல் தவறுகளை சுட்டியதாலும், ஊடகங்கள் சங்கு ஊதியதாலும், மக்கள் மன்றம் ஊழலையும், லஞ்சத்தையும் நாள் தோறும் கண்டிந்து வந்த காலகட்டம், அது என்பதாலும் தான், மத்திய அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்தது. காலகட்டத்தை பாருங்கள்: ஃபெப்ரவரி 2011. இல்லாவிடின், ஒப்பந்தம் நிறைவேறி, ஆடிட் குறிப்பிட்ட இரண்டு லக்ஷ கோடி ரூபாய்கள்  நஷ்டம் கடையேறியிருக்கும்.

நான்காவது கேள்வி:

இந்திய தணிக்கைத்துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறியது என்ன? என்ன? சரியான கேள்வி. வல்லமை இதழில் இந்தத் தொடர் நிலைக்கு வராத காரணம், இதை வரவேற்கும் வாசகர்கள் இல்லையோ என்ற ஐயம் எழுந்ததாலே. தற்காலம், வல்லமையின் பொலிவு கூடியிருக்கிறது. புதிய எழுத்தாளர்களின், புதிய வாசகர்களின் நல்வருகையினால் உவகை கூடுகிறது. ஆகவே நான்காவது கேள்வி எழுப்பபட்டால், அடுத்த தொடரில், பதில் அளிக்க இயலும்.
(தொடரலாமா?)
இன்னம்பூரான்

Saturday, June 15, 2013

22. ராஜாங்க ரகஸ்யம்: தணிக்கை




22. ராஜாங்க ரகஸ்யம்: தணிக்கை.
இன்றைய அப்டேட்: 54 கோடி ரூபாய் பொறுமான சுண்ணாம்பு தாதுகற்களை மாற்றான் பூமியிலிருந்து சட்டத்திற்கு புறம்பாக தோண்டி எடுத்த குற்றத்துக்காக பாபுபாய் பொகாரியா என்ற குஜராத் அமைச்சரும் (பி.ஜே.பி.), அவரது கூட்டாளியான கேடி ஒருவரும், பாரத்பாய் ஒடேத் ரா என்ற மாஜி காங்கிரஸ் எம்.பி.யும் கோர்ட்டாரால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.  மூன்று வருட கடுங்காவல். 2006ம் வருடத்துக் கேசு. 2007ல் போலீசால் கைது செய்யப்பட்டாலும், தப்பி வெளிநாடுக்கு ஓடி விட்டாராம். பிடி வாரண்டு பிறப்பிக்கப்பட்டு வாபசும் ஆனது. இவரும் 2012 தேர்தலில் வெற்றி பெற்றார். அமைச்சரும் ஆனார். இது ஜனநாயகத்தின் ஒரு முகம். மற்றொரு முகம்: இது கண்ட காங்கிரசார் கொக்கரிக்க, அதை பா.ஜ.க. கேலி செய்தது.  God helps only those, who help themselves.
இன்னம்பூரான்
15 06 2013

Innamburan Innamburan Thu, Nov 24, 2011 at 1:16 PM


தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை ~ 22
22. ராஜாங்க ரகஸ்யம்: தணிக்கை

எதை எடுத்துக்கிறது, எதை விடறது என்று புரியமாட்டேங்கிறது. பேசறவங்க எல்லாரும் பெரிய மனுஷங்க. சமீபத்தில் ஊடகங்களில், கலந்து கட்டியா, சில சமாச்சாரங்கள். 2ஜி ஜாமீன் என்று எங்கிட்டும் ஒரே பேச்சு. ஆய்வுகளும், கருது கோள்களும் மிகுந்து வந்த வண்ணம் உளன. சில துளிகள்: 
ஒரு உலக பொருளியல் சங்கமத்தில் முகேஷ் அம்பானி சொல்றாரு, 
‘இந்தியாவின் பொருள் ஆதாரம் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லவில்லை. அரசு தான் ஆமை வேகம். அது துரிதமாக இயங்கவேண்டும். ஜனநாயகம் என்பதால், நாம் முடங்கிக் கிடைக்க வேண்டியதில்லை.’
பேஷ்! கச்சா எண்ணெய் விஷயமாக, கவர்ன்மெண்டு நிலத்தை இவரு முடக்கிப்போட்டதை பற்றி தணிக்கை ரிப்போர்ட் சொன்னதுக்கு பதிலை காணோம். இவர் ப்ளேட்டை திருப்பிப்போடறாரு. அவர் சொல்லாமல் விட்டது, ‘ஒன்லி விமல்’ புராணம்! 
இதற்கு நடுவிலே, எல்லோராலும் மதிக்கப்படும் இன்ஃபோசிஸ் என். ஆர். நாராயணமூர்த்தி, புரட்சிகரமாக, ஒரு பாயிண்ட் சொல்றாரு:
‘லஞ்சம் கொடுப்பதை சட்டவிரோதமாக கருதவேண்டாம். லஞ்சம் வாங்குவதை சட்டம் தண்டிக்கட்டும். அப்போது தான், லஞ்சம் கொடுப்பவர் வாங்கியவரை காட்டிக்கொடுப்பார்.’
 முதலில் தொட்டிலை ஆட்டு. அப்றம் கிள்ளவும் கிள்ளு. பேஷ்! இது ஒரு காலத்தில் கெளசிக் பாசு என்ற உயர் அதிகாரி சொன்னது தான். இப்போது கூட, இதை ஆதரிக்கும் தொழிலதிபர் அதி கோட்ரஜ், லஞ்சத்துக்கு ஒரு உச்ச வரம்பு வைக்கலாம் என்கிறார்! ‘எத்தனை கோடி இன்பம்’ என்று பாடாதே. ‘எத்தனை கோடி லஞ்சம்’ என்று கெஞ்சு! இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், இங்கு குறிப்பிட்ட பெரியமனுஷாளில் ஒருவருடன், இருபது வருடங்களுக்கு முன்னால், தற்செயலாக ஒரு வீ.ஐ.பி.ஐ யை பற்றி பேச்சு வந்த போது அவரை நாங்கள் தான் நியமனம் செய்தோம் என்றார், சர்வ சாதாரணமாக. நான் திக்கிட்டுப் போனேன். ஆனால், லஞ்சம் எக்காலத்திலேயோ, ராவணன் போல் பத்து தலை ராசா என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
லஞ்சித்த வரலாறுகள் பல, ‘அழுக்குத்துணியை தெருச்சாக்கடையில் அலசுவதை’ போல ஊடகங்களில் காணக்கிடைக்கின்றன. சுக்ராம் என்ற மாஜி டெலிகாம் அமைச்சர் மீது 1996ல் தொடங்கிய வழக்கு ஒன்றில், $6000 லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் அவர் $8000 அபராதத்துடன் ஐந்து வருடம் சிறை என்று போனவாரம் தண்டிக்கப்பட்டார். அவருடைய வயது 86. அவரை திகார் ஜெயிலுக்கு கொண்டுபோனால், அங்கே பிரசன்னம், ஆ.ராசா. அவரும் மாஜி டெலிகாம் அமைச்சர். அவர் மீது 40 பிலியன் டாலர் நஷ்டம் உண்டு பண்ணியதாக வழக்கு. இதை எல்லாம் தோண்டி எடுத்தது, தணிக்கைத்துறை. காங்கிரஸ்க்காரங்க அந்த அமைப்பு மீது கடுப்பில்! சுக்ராம் தண்டிக்கப்பட்ட துக்கதினத்திலேயே, பாரதி ஏர்டெல், வோடோஃபோன் என்ற புகழ் வாய்ந்த டெலிகாம் கம்பெனிகள் மீது புலனாய்வுத்துறை ரெய்டு. $100 மிலியன் நஷ்டம் என்று அத்துறை சொல்கிறது. அந்த வண்டவாளங்கள் நடந்த காலகட்டத்தில் பிரமோத மஹாஜன் என்ற பா.ஜ.க. அமைச்சர் இருந்தார். இப்போது அவர் உயிருடன் இல்லை. இருந்தால், திகார்லெ ஒரு மும்முனை மாநாடு நடந்திருக்கலாம்! அந்த பா.ஜ.க. தான் கூச்சல் போட்டு நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் கலாட்டா செய்யறாங்கோ.
இது ஒரு பக்கம். எதுவானாலும் ஒரு ஆய்வு செய்து விடுவோம் என்பது மேற்கத்திய நாடுகளின் பழக்கதோஷம். ஷிகாகோ பல்கலைக்கழகத்தின் பூத் பள்ளி என்ற ஆய்வுகளம் சொல்கிறது, ‘லஞ்சத்தை கொஞ்சத்தில் எடை போட முடியாது. ‘Good, Bad & Ugly’ என்று மூன்று வகை உண்டு. எல்லாமே தீயது செய்வதில்லை. நன்மை பயக்கும் லஞ்சமும் உண்டு.’ ஆஸ்ட் ரேலிய க்வீன்ஸ்லாந்து பல்கலைக்கழகம் லஞ்சத்தின் இலக்கணத்தை, ‘ மூலதனம், மனிதத்திறன் என்ற செல்வம் ஆகியவற்றை குலைத்து, அரசியலிலும் சஞ்சலத்தை உண்டாக்கும் லஞ்சலாவண்யமானது, பொருளியல் வளர்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கலாம். கமுக்கமான அணுகுமுறையை வணிகம் தவிர்க்க, இது உதவலாம்.’ என்று ‘லாம்’ ‘லாம்’ குழலூதுகிறது. இது நிற்க.
கொஞ்சமாவது நடுநிலை வகிப்போம் என்ற ஹேமந்த் கனோரியா என்ற வல்லுனர், ‘பீஹார், ஒடிஷா போன்ற மாநிலங்களில் லஞ்சத்தை கணிசமாகக் குறைத்து விட்டார்கள். அதனால், எல்லாம் துரிதமாக நடக்கிறது என்று சொல்லமுடியாது’ என்கிறார். சரி. மூன்று நோக்குகளில், அதுவும், வெளிநாடுகளில் நடந்த சிகாகோ, க்வீன்ஸ்லாந்து, வார்ட்டன் அலசல்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ‘கொஞ்ச லஞ்சம்’, ‘கொஞ்சநஞ்ச லஞ்சம்’ ‘மிஞ்சும் லஞ்சம்’, ‘விஞ்சும் லஞ்சம்’ என்றெல்லாம் கணக்கு தீர்த்து, மக்களை கிணற்றில் தள்ளி விடுவார்களோ? 
ஒரு ராஜாங்க ரகஸ்யம் சொல்றேன், கேட்டுக்குங்கோ. எந்த ஆவணங்களை வைத்து அரசு பீடு நடையும், ஆமை நடையும் போடுகிறதோ, அதே ஆவணங்களை அலசி, வினா எழுப்பித்தான், தணிக்கை நடக்கிறது. சுக்ராம் காலத்துக்கு முன்னாலேயிருந்து, ஆடிட்காரன் கரடியா கத்தினாலும், காதில் போட்டுக்கொள்ளாமல், தப்பு தண்டா செய்தவர்களை கோர்ட்டுக்கு இழுத்துண்டு போகிறமாதிரி, ‘ஜவ்’ இழுத்து, தாமதத்தினாலேயே, Good, Bad & Ugly லஞ்சலாவண்யத்தை போற்றி பாதுகாக்கிறார்களோ? என்னமோ? உங்களுக்கு தெரிந்தா சொல்லுங்கோ.
(தொடரும்)
இன்னம்பூரான்
Image Credit: http://www.buysoundtrax.com/images/good_bad_ugly-theme.jpg



Friday, June 14, 2013

21. தணிக்கை: ஒரு முகாரவிந்தம்


21. தணிக்கை: ஒரு முகாரவிந்தம்
தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-21


இன்னம்பூரான்

  • Friday, September 30, 2011, 11:55

பாலப்பிராயமும், ஆடிட்டும்:
இத்தொடரின் இலக்கு மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை, குண்டலினி சக்தியெனத் தட்டி எழுப்புவதே. சில கேள்விகளுக்கு உரிய பதில்களையும், தொடர்புடைய பழைய அனுபவங்களையும் எழுத விழைந்தபோது, கீழ்க்கண்ட ஆவணம் வந்து அடைந்தது. எழுத நினைத்ததை ஒத்திப் போட்டு, தணிக்கையின் மற்றொரு முகாரவிந்தத்தைப் பற்றி எழுதுகிறேன். நீங்கள் சொன்னால்தான் இது செல்லுபடி ஆகுமா இல்லையா என்று தெரியும். தேவையானால், மாற்றியமைக்க இயலும். திசை மாறியும் பயணிக்கலாம்.
‘ஆடிட்’ என்ற ஆங்கிலச் சொல்லின் மூலமே ‘செவி சாய்ப்பது, கேட்டறிவது’. தணிக்கைத் துறையின் செயல்முறைகளைக் கூட மக்கள் அறிந்து கொண்டால், அவர்களே உள்ளூர் விஷயங்களை, “குப்பை அள்ளுவதிலிருந்து சிசேரியன் ஆபரேஷன் வரை” தணிக்கை செய்ய இயலும். வாழ்வாதாரம் உயரும். அதாவது, தணிக்கை என்பது நிதி சம்பந்தமானது மட்டுமல்ல. அந்தக் கழுகுப் பார்வைக்கு மனித யத்தனங்கள் யாவற்றையும் உட்படுத்தலாம் என்பதே. உதாரணமாக, மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை ஒவ்வொன்றிற்கும் குறிப்புக்கள் எழுதி வைக்க வேண்டும். அவற்றை அலசுவதை ‘மெடிக்கல் ஆடிட்’ என்பார்கள்.

நமது ஊர்களிலே அநாதை இல்லங்களும், பள்ளிகளும் உண்டு. தலித் மாணவ மாணவிகளுக்கு சலுகை தரும் இல்லங்களும், பள்ளிகளும் உண்டு. குற்றமிழைத்த சிறார்/சிறுமிகளுக்கு சீர்திருத்தப் பள்ளிகள் உண்டு. மாற்றுத்திறனாளி/ கண்ணொளி மங்கியோர்/ கேட்கும் திறனற்றவர்கள்/பேசும் திறனற்றவர்கள்/ மனோவியாதியால் பீடிக்கப்பட்டவர் என நம் உடன் பிறந்த/ பிறவா சகோதர, சகோதரிகளுக்கு உறைவிடம், பள்ளி ஆகியவை உண்டு. நம்மில் யாராவது அவ்விடங்களுக்கு சென்று, என்னதான் நடக்கிறது என்று கேட்டது உண்டா? உற்றார், உறவினர், சுற்றம், நண்பர்கள், பொது ஜனம் போய்க் கேட்டால், அங்கு கோலோச்சுபவர்கள், அதிகாரப்பேய் ஆவேசத்தில் விரட்டுகிறார்களா?, மழுப்புகிறார்களா? பொய்யுரைக்கிறார்களா? நம் உடன் பிறந்த/ பிறவா சகோதர, சகோதரிகளை பேச விடுவதில்லையா? அவ்வாறெல்லாம் இருந்தால், மேலும் படிப்பீர்கள் என நினைக்கிறேன்.
இங்கிலாந்தில் இரண்டாவது உலக யுத்தத்தின் போது, இருபாலாரும் போர்க்களப் பணிகளில் முனைந்து இருந்ததாலும், ஜெர்மானிய குண்டுவீச்சு மும்முரமாக இருந்ததாலும், சிறார்கள், பாதுகாப்புக் கருதி, முன்பின் தெரியாத குடும்பங்களுடன் வாழ, கிராமங்களுக்கு அனுப்பப் படுவார்கள். அவர்களில் ஒருவரை அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு கண்டு பேசிய போது, செவிலித்தாயின் அன்பைச் சொல்லிச், சொல்லி, உருகினார். அதே சமயம், மேற்கத்திய நாடுகளில் மத போதகர்களின் அநாகரீக பாலியல் பலாத்காரங்களும்  பதிவு ஆகியிருக்கின்றன.

இந்தப் பின்னணியில், ஒரு வாரம் முன்னால் வந்த ஒரு தணிக்கை அறிக்கை (ஆடிட்டர் ஜெனரல் கொடுத்தது அல்ல. ஆஃப்ஸ்டெட் என்ற அரசு அதிகாரம் பெற்ற அமைப்பு). சமுதாய நலன் என்ற அரசு பிரிவினர் இந்த இல்லங்களை சோதித்து வர வேண்டும் அவர்கள் செய்யும் சோதனை பற்றி, குழந்தைகளிடமே கேள்வி கேட்கப் பட்டது. 224 குழந்தைகளிடம் கேள்வி கேட்கப் பட்டது. அவற்றில் 149 பேருக்கு , இந்தச் சோதனை அனுபவம் உண்டு. முக்கால்வாசிப் பேர்களுக்கு சோதனை வரப் போவது தெரியும். கால்வாசிப் பேருக்குத் தெரியாது. மேலும் தோண்டித் துருவினால்: கால்வாசி குழந்தைகள் தாங்கள் சோதனைக்கு தயார் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். முக்கால்வாசி குழந்தைகள் தாங்கள் எந்த வகையிலும் கட்டுப்படுத்தப் படவில்லை என்றனர். இருபத்தேழு குழந்தைகள் இருப்பிடங்கள் சுத்தமாக வைக்கப்பட வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினதை சொன்னார்கள். இன்னும் சிலர் (4/27) நல்லதையே சொல்ல வேண்டும் என வற்புறுத்தப்பட்டனர்.
இது பெரிய விஷயமல்ல. தணிக்கை அறிக்கையைச் சுருக்கி அளித்தேன்.  நமக்கேற்ற சில படிப்பினைகள் முக்கியம். அவை:
  1. இந்த விசாரிப்பு, அவரவரின் மொழியில் நடந்தது;

  1. பதினான்கு வயதுக்கு மேல்/கீழ், ஆண்/பெண், இருக்குமிடம் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது, நுட்பங்கள் அறிய;
  2. இந்தச் சோதனைகளை குழந்தைகள் நோக்கிய விதத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.
  3. இடம்,பொருள், ஏவல் பொறுத்து, இதமாக, நிதானமாக கேள்விகள் கேட்பதில் பயன் அதிகம் உண்டு.
ஒரு வித்தியாசமான தணிக்கையை பகிர்ந்து கொண்டதின் விளைவாக, உங்கள் ஊரில்/பேட்டையில் எழக் கூடிய வினாக்களில் ஐந்து, மாதிரிக்கு:
  1. அநாதை இல்லங்களில், ராணிப்பேட்டையில் இருக்கும் தீனபந்து இல்லத்தில் என்னால் இயன்றது போல, சிறார்களுடன் பேசமுடியுமா?
  2. உங்கள் அருகில் இருக்கும் சீர்திருத்தப் பள்ளி எங்கு இருக்கிறது தெரியுமா? அங்கு நடப்பதை மேற்பார்வை செய்வது யார்? செங்கல்பட்டில் ஒன்று உள்ளது.
  3. தலித் ஹாஸ்டலில் சமபந்தி போஜனம் என்றாவது நடப்பது உண்டா?
  4. பள்ளிகளில் அளிக்கும் மதிய உணவை, பெற்றோர் பார்வையிட அனுமதி கிடைக்குமா?
  5. புதிய கருத்து/வினா ஏதாவது உங்களுக்குத் தோன்றுகிறதா?
*********
சித்திரத்துக்கு நன்றி:http://www.cartoonstock.com/newscartoons/cartoonists/awh/lowres/awhn120l.jpg



Monday, June 10, 2013

20: தமிழ்நாடு: தணிக்கை




தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-20


Innamburan Innamburan Fri, Sep 23, 2011 at 7:15 AM

அப்டேட்: கிட்டத்தட்ட இரு வருடங்கள் முந்தைய டார்ச்சர், இது. காலத்தின் கோலமடா! 2013 வருட டார்ச்சருக்கான தமிழ்நாட்டு ஆடிட் ரிப்போர்ட்கள் வந்து சில நாட்கள் தான் ஆயின. எனினும் 'டார்ச்சர் ஒழிக' என்று யாராவது இகழப்போகிறார்களோ என்ற அச்சத்தில் நடுங்கும்
இன்னம்பூரான்
10 06 2013
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyJYd-gz-aJEoeuBdKFzFRJ0ABYADmSpjcTPK_yGeTEpcbij3hqm-Ti1CPGjQ5hkuiOxPC9qRyDBdbuRFy2Q1Sf1Oanty0wrrB89ztHV99oC1pF5Im1Uagc8DmqiZLxKK37rMnmj3grFM/s1600/Untitled-1.jpg
வல்லமையில் யான் வரைந்த டார்ச்சர்!

*
தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-20

தமிழ்நாடு
தணிக்கை அலுப்புத் தட்டும் விஷயம் தான். ஆனால், மக்கள் அதைச் செங்கோலாக பயன்படுத்த முடியும். அரசைக் கண்டித்துத் தண்டிக்க முடியும், தேவை ஏற்படுமானால். எனவே, அரசு ஆங்கிலத்தில் வரும் ஆடிட் ரிப்போர்ட்களை, என் பேசும் மொழியில், அலசிப், பகிர்ந்து கொள்கிறேன். எந்த வினா எழுந்தாலும், உகந்த பதில் அளிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். தமிழ் மொழியிலும் ஆடிட் ரிப்போர்ட்டுக்கள் பிரசுரம் ஆகின்றன. சில நாட்களாகவே, ஊடகங்களில் தணிக்கைச் செய்திகள். மூலம் தென்படவில்லை. ஏ.ஜீ. ஆஃபீசில் விசாரித்தேன். உடனே விவரம் அனுப்புவதாகச் சொன்னார்கள். அத்துடன்  சரி. அதிகார பூர்வமான அறிக்கைகள் ஒரே நாளில் நான்கு, புதுச்சேரி அறிக்கைகள் உள்பட, இன்று வந்துள்ளன. அவை கிடைத்தவுடன், இதை எழுதுகிறேன்.
A. அரசு கம்பெனிகள், வாரியங்கள் பற்றிய ஆடிட் அறிக்கை இது. [Audit Report No.4 (Commercial) for the year ended 31 March 2010: 163 பக்கங்கள்]
  1. ரத்தினச் சுருக்கம்: 64 கம்பெனிகள், 2 வாரியங்கள், 11 முடங்கிய கம்பெனிகளில், 2.79 லட்சம் ஊழியர்கள். ரூ. 47,578.39 கோடி வரவு/செலவு; சேமித்த? நஷ்டம்- ரூ. 21,297.39 கோடி. இவற்றின் வரவு/செலவு கொஞ்ச நஞ்சமில்லை.  அரசின் வரவு/செலவில் ஐந்தில் ஒரு பங்கு. கபளீகரம்!. மூன்று வருடங்களாக ஆடிட் கரடி கத்தியதை ஆய்வு செய்தாலே, ரூ. 4000 கோடி  நஷ்டத்தையும் ரூ. 600 கோடி  வீணாப் போன முதலீடுகளையும் தவிர்த்திருக்கலாம் என்பது தெளிவு. சீர்திருத்தங்கள் மிகவும் தேவை.
  2. சொன்னதும், செய்ததும்: கடந்த 25 வருடங்களில் தனித் தனிக் கம்பெனிகளாக உலவி வரும் ஆதி திராவிடர் /பின் தங்கிய வகுப்புக்கள்/ சிறு பான்மையினர்  முன்னேற்றக் கம்பெனிகள் மூன்றுக்கும் இலக்கு ஒன்றே தான். (ஏன் திரி மூர்த்திகள்?) மூன்றும் முன்னேற்றம் பண்றாங்களோ இல்லையோ, அரசுப் பணத்தை வங்கியில் டிபாசிட் செய்து விட்டுச், சும்மா இருக்கிறார்கள். ஹூம் ! ரூ. 250 கோடி வரை! திட்டம் யாதுமில்லை, ஐயா. கிராமங்கள் பற்றிய விவரங்கள் இல்லை, ஐயா. தாமதம் உண்டு, ஐயா. தரிசு நிலம் வாங்கியதும் உண்டு. அளித்த பயிற்சியும், கொடுத்த வேலையும் வெவ்வேறு. உதவிக்கரம் யாருக்கு நீட்டவேண்டும் என்ற தெளிவு இல்லை. அரைகுறைக் கடனுதவி. யாருக்கும், அது உதவாது. உதவிக்கரம் நீட்டினால், லேவாதேவி ரேட்டு அதிகம், ஐயா. ஆடிட் கோரிக்கை: சற்றே விவரங்களின் ஆதாரத்துடன், திட்டமிட்டு, டிலே செய்யாமல், இந்த ஏழை பாழைகளுக்குச் சொன்னதைச் செய்யுங்கள்.
  3. சாரமில்லா மின்சாரம்: ஐயா! தனி மனிதனுக்கோராயிரம் வாட் மின்சாரம் என்பது 2012 வருட தேசீய இலக்கு. ஆனா பாருங்கோ! 4000 மெகாவாட் அதிகப்படி உற்பத்தி  தேவையிருந்தாலும், எடுத்த காரியத்தைச் செய்யாததாலும், திட்டமிட்ட ஹைட்ரோ திட்டங்களை அரோஹரா செய்ததாலும், 290 மெகாவாட் மட்டுமே அதிகப்படியாக உற்பத்தி.  இத்தனைக்கும் அதிகப்படி செலவு ரூ. 400 கோடி. இன்னொரு சமாச்சாரம். (40 வருடங்களாக ஆடிட் சொல்லி வரும் குற்றச்சாட்டு, இது). மின் உற்பத்திக் கலங்களுக்கு 35 வயதுதான் ஆயுசு. காயகல்பம் உண்டு. சத்தியமாக பலிக்கும். 16 ஸ்டேஷன்களுக்கு அர்ஜெண்ட் காயகல்பம் தேவை. கொடுத்ததோ, இரண்டு ஸ்டேஷனுக்கு மட்டும். (ஏனையா மின்வெட்டு வராது?) இந்த அழகில் ரூ. 2,175 கோடி பெறுமான வேலைகள், டெண்டர் இல்லாமல் (வேண்டப்பட்டவருக்கு?) கொடுத்ததால், சுங்கவரிச் சலுகை ரூ. 133 கோடி ரூபாய் போச்சு. நிலக்கரி வாங்கிய வகையில், மற்றொரு அரசு கம்பெனி வாங்கிய விலையோடு ஒப்பிட்டால், நஷ்டம்-ரூ. 337.76 கோடி. எண்ணூர் பேசின் பிரிட்ஜ் மின்கலங்களால் நஷ்டம் அதிகம். அவை சாரமில்லாதவை. சக்கை. (இங்கும் ஒரு பழங்கதை) ஏன் அவற்றைக் கட்டிக் கொண்டு மாரடிக்கிறார்கள் என்று புரியவில்லை. செலவு தான் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி ஜாஸ்தியாகியிருக்கிறது. கடன் சுமையும் நாலு வருஷங்களில் கிட்டத்தட்ட நாலு மடங்கு ஜாஸ்தி.
  4. ஒரு சூட்சுமம்: நிலக்கரி எரிப்பதால் சாம்பல் விழும். அதற்கும் காசு கிடைக்கும், கணிசமாக. ஆனால் விலை போன சாம்பல், விழுந்த சாம்பலை விட குறைவு. என்ன குப்பையைக் கிளறுகிறீர்களே என்று கேட்கிறீர்களா? கேட்டால், ஒரு பழங்கதை சொல்லி, விளக்குகிறேன். இப்போதெல்லாம் பழங்கதைகளை, கேட்டாலொழியச், சொல்வதில்லை.
  5. மாதிரிக்கு சில ஆடிட் துளிகள்: அரசு கேபிள் கார்ப்பரேஷன், மக்களுக்குத் தொலைக்காட்சிகள் அதிகச் செலவில்லாமல் கிடைக்க வேண்டும் என்று அக்டோபர் 2007-ல் உருவாக்கப்பட்டு, ஏப்ரல் 2008-ல் மத்திய அரசின் அனுமதி பெற்று, ஜூலை 2008-ல், அரசின் பங்கு ரூ. 25 கோடி, மற்றும் கடனுதவி ரூ. 36 கோடியுடன் தொடங்கி, மூன்று வருடங்களில் சாதித்தவை: அனாவசிய கட்டுமான வசதிகள் ரூ. 28.28 கோடி,  நஷ்டம் ரூ. 8.11 கோடி. காரணம்: லோக்கல் ஆபரேட்டர்களுடன் உறவாடாமல் இருந்தது. சன், சோனி, ஸ்டார் போன்ற ஜாம்பவான்களுடன் ஒவ்வாமை. ( அது தான் உள்குத்துத் திட்டம் என்று வாசகர்கள் சொன்னால், இல்லை என்று சொல்ல என்னிடம் சான்றுகள் இல்லை.)
  6. தலைகீழ்: ரூ. 28.08  கோடி செலவில் வாங்கிய உபகரணங்கள், ரூ. 142.50 கோடி செலவில் செட்-அப் பெட்டி வசதி செய்யா விட்டால், வேஸ்ட். அந்தச் செலவு செய்தால், நஷ்டம் உத்தரவாதம். ரூ. 28.08  கோடி செலவில் வாங்கிய உபகரணங்கள் என் செய்ய உதவும்?- உதவாது.
  7. வரவு எட்டணா! செலவு எட்டாயிரம் அணா: ரூ. 250 கோடி எதிர்பார்த்த இடத்தில் வந்தது ரூ. 1.50 கோடி. சுண்டைக்காய் ஒரு பணம்; சுமைக்கூலி பத்துப் பணம். ரூ. 1.50 கோடி தருவிக்க, ரூ. 11 கோடி செலவு. பேஷ்!
  1. பேரென்னெவோ பூம்புகார் கப்பல் கம்பெனி. ஒரே கரி. நிலக்கரி சுமக்க வாங்கின கப்பல்கள்: தமிழ்ப் பெரியார், தமிழ் அண்ணா, தமிழ்க் காமராஜ். தூத்துக்குடியில் கரிச்சுமையை இறக்க க்ரேன் வசதி இல்லை. கப்பலின் க்ரேன் தான் பயன்படவேண்டும். தமிழ் அண்ணா என்ற கப்பலில் இருக்கும் பத்தாம்பசலி க்ரேன் இரண்டும் ரிப்பேர். அதைச் சரி செய்வதில் அசாத்திய டிலே. காரணங்கள் ஆவணங்களில் இல்லை. பத்தாம்பசலி க்ரேன் என்று பதில் வேறு.  தமிழ்ப் பெரியார் என்ற கப்பலை மராமத்து செய்வதில் ஒரு சைனாக் கம்பெனியுடன் இழுபறி. அடுத்துச் சென்ற கம்பெனி படு தாமதம். சாமான் வாங்குவதில் செய்த டிலேயினால் அதிகப்படி செலவு ரூ. 56.37 கோடி. வேறு கப்பல்களின் க்ரேன் வாடகை அதிகப்படி செலவு ரூ. 50. 29 கோடி. கப்பல்களைக் குத்தகை எடுப்பதில், அரசின் விதிகளை இந்தக் கம்பெனி கண்டு கொள்ளவில்லை. மேலும், கடல் வாணிக நுட்பங்களை சரிவர இயக்காமல், இந்த கம்பெனி பல இன்னல்களுக்குள் சிக்கியது.
  1. எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன், அவசரப்பட்டு தேவையில்லாத இடங்களில் நிலம் வாங்கியதில் இருபது கோடி ரூபாய் முடக்கம்.
  2. சிப்காட் கம்பெனி அலிசன் ட்ரான்ஸ்மிஷன் என்ற மனுதாரருக்கு, அரசின் ஆணைக்கு உட்பட்டு, பாதி விலையில் நிலம் அளித்ததில் நஷ்டம்  ரூ. 8.32 கோடி.  இதில் பாரபட்சம்  இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.
  3. மத்திய அரசு விதித்த சர்வீஸ் வரியை சிப்காட் வசூலிக்காததால் ரூ. 70 லட்சம் நஷ்டமாகி விடும். அதனுடன் வட்டி ரூ. 15 லட்சம் மற்றும் அபராதம் ரூ. 75 லட்சமும் நஷ்டம். [மத்திய அரசு இதைத் தள்ளுபடி செய்ய விரும்பாது; தணிக்கை அங்கும் திரும்பும் அல்லவா! அதற்கு ஒரு பழங்கதை உள்ளது, வாசகர்களே!]
  4. தமிழ்நாடு கட்டுமான கார்ப்பரேஷன் பத்து வருடங்களாக, வரவு செலவு முடிவு செய்யவில்லை. ஆள் இல்லையாம். பேஷ்!
  5. ட்ரான்ஸ்ஃபார்மர் போன்ற சாமக்கிரியைகளை வாங்குவது சிக்கலான விஷயம். ஒப்பந்தக்காரரின் திறன் போன்ற விஷயங்களை ஆராய வேண்டும். அத்தருணம் சாமர்த்தியம், வாய்மை, பின்னணி எல்லாம் கை கொடுக்கும். டெண்டர் விதிகளை சடங்கு மாதிரி, உதட்டசைவில் செய்வதால் நலம் ஒன்றுமில்லை. அப்படிச் செய்ததால், மின்சார வாரியத்திற்கு ஏழு கோடி ரூபாய் நஷ்டம். இது எந்த தெய்வத்திற்கு ப்ரீதி?
  1. B. Audit Report (Civil), Tamilnadu For the Year 2009-2010: 212 பக்கங்கள்
இரண்டாவது சுற்றில் வந்த இந்த அறிக்கை, தமிழ்நாட்டு அரசின் துறைகளையும், ஐந்தாவது சுற்றில் வந்த மற்றொரு அறிக்கை (85 பக்கங்கள்) தமிழ்நாட்டு அரசின் வருமானத்தையும் பற்றியவை. இந்த அறிக்கையிலிருந்து இரு துளிகள் மட்டும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில். வாசகர்கள் விரும்பினால், அண்ணா பல்கலை கழகத்தின் கலக்கங்கள், அசெம்ப்ளி அமர்க்களங்கள், மற்றும் பல ஆச்சரியங்களைப், பின்னர் பார்க்கலாம், பார்க்காமலும் விட்டு விடலாம்.
  1. இந்தத் தொடரின் 6-வது பத்தியில் ‘பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!’ உடைக்கப்பட்டது. அதன் தொடர் இங்கே தென்படுகிறது. ‘ஒப்பந்தக் காரர்கள், அரசுடன் ஒப்பந்தம் செய்கிறார்களோ, இல்லையோ, தங்களுக்குள் செய்கிறாப்பில இருக்கே’என்று, புள்ளி விவரங்களுடன், ஆடிட் வினவ, அரசு மேலதிகாரியும் ‘அப்படித்தான் தோன்றுகிறது எம்மால் யாதும் செய்ய இயலாது’ என்கிறார். எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனெனில், அரசின் ஆளுமையை, நிர்வாகத் திறனை, இந்தப் பதில் பழிக்கிறது. இந்த ஒப்பந்தக்காரர்கள் லேசுப்பட்டவர்கள் இல்லை. 17,513 டெண்டர்களில், 17,110 டெண்டர்களில், இரு ஒப்பந்தக்காரர்கள் தான் போட்டி. ஊன்றிக் கவனித்துப் பார்த்தால் ‘டூவில்டம்’ மும் ‘டூவில்டீ’யும் (அதாம்ப்பா! ஐயாவும் & பினாமியும்) போட்டி என்ற தோற்றம். கட்சிக்காரனுக்கு டெண்டர் என்று ஓப்பனா உரிமை கொண்டாடுகிறார்களே, புரியுதா?
  1. அசெம்ப்ளி சேதி என்ன? என்று கேட்பீர்கள்: இரண்டு சொட்டு மருந்து: (i) முன் வைத்த காலைப் பின் வைத்த காதை: கோபுரம் கட்ட நாளாகும். தேர்தலுக்கு முன்னால் கிரகப்பிரவேசம். ஒரு பாலாலய கோபுரம் ( தற்காலிக டூப்ளிகேட்) கட்டுக என்று ஆணை. நோ டெண்டர். வீண் செலவு: ` 3.28 கோடி. (ii) பைல் அஸ்திவாரம் போட்டாஹ. அளவு கோல் மாத்தினாஹ. அதிகப்படியாகக் கொடுத்தாஹ:` 2.46 கோடி.

நான் என்ன சொல்ல வரேன்னா? கேளுங்கோ. சொல்றேன்.
(தொடரலாமா என்று கேட்கலாமா?)

இன்னம்பூரான்
23 09 2011

திவாஜி Fri, Sep 23, 2011 at 9:29 AM

கேக்குறேன், சொல்லுங்க!
எல்லா பழங்கதைகளையும் சொல்லி அருள வேணும்!


காளையும் கரடியும் Fri, Sep 23, 2011 at 9:26 AM

சொல்லுங்கோ! கேட்டுக்குறோம்!
இது போன்ற அரசாங்க கஜானாவிலிருந்து செலவழிக்கப்படும் துட்டு எந்த
அளவிற்குப் பயனளிக்கிறது என்ற (மக்களின் பார்வைக்கு வராமலிருக்கும்)
தணிக்கை அறிக்கைகளை அலசுவதற்கு ரொம்ப நன்றி!

On Sep 23, 11:15 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>


kra narasiah Fri, Sep 23, 2011 at 2:02 PM

நானும் விசாகைத் துறைமுகத் தலைமைப் பொறியாளராக இருந்த பொது தணிக்கையாளர்களைக் குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளேன். ஆனாலும் இப்போது பார்க்கையில் தணிக்கையாளர்களின் முக்க்யத்துவம் - முக்கியமாக - 2 ஜி விவகாரம் பிறகு தெரிகிறது! நீங்களும் எங்கள் துறையில் இருந்தீர்கள் என நினைக்கிறேன்.
நரசய்யா

--- On Fri, 9/23/11, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:

Thiruvengada Mani T.K. Fri, Sep 23, 2011 at 2:05 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கேட்டுக் கொண்டுதானே ஐயா இருக்கிறோம்..... தொடருங்கள்
மணி

Innamburan Innamburan Fri, Sep 23, 2011 at 2:45 PM

ஆம். நான், சென்னை, விசாகை, மும்பாய், குஜராத் துறைமுகங்கள், பாராதீப் தணிக்கை செய்திருக்கிறேன். உங்கள் கடுமையான விமர்சனம் புரிகிறது. அதனால் தான், when the National Institute of Ports asked me to design a conventional 'Finance for Non-Finance Port Executives, I neatly turned the table on them, by designing the "Non-Finance for Finance Executives." Our captive audience was a gang of FACAOs and naturally, I had you in the Faculty. Good old days.
Innamburan


K R A Narasiah Fri, Sep 23, 2011 at 3:20 PM


அங்குதான் (National Institute of Port Mnagement) நான் உங்களை முதன் முதலாகச் சந்தித்தேன்! நாம் இருவரும் 1992-3 ல் வகுப்புகள் எடுத்ததைக் குறித்து நீங்கள் தான் எனக்கு நினைவூட்டினீர்!
நான் ஓய்வு பெற்றபோது என்னை முதலில் அங்குதான் டைரக்டராக நியமிக்கப்ப்போவதாக்ச் சொன்னார்கள்1 ஆனால் எனக்கும் ஜக்தீஷ் டைட்லருக்கும் (அப்போதைய மந்திரி) உண்டான கருத்து வேற்றுமையால் அது நிறைவேறாது போயிற்று. ஆயினும் எனக்கு அதனால் நன்மையே உண்டானது! ஐக்கிய நாட்டு நிறுவனங்களில் பணி செய்ய முடிந்தது!
எல்லாம் பழைய கதை!
நீங்கள்  'Finance for Non-Finance Port Executives, I neatly turned the table on them, by designing the "Non-Finance for Finance Executives." என மாற்றியது இப்போது நீங்கள் சொன்ன பிறகு நினைவிற்கு வருகிறது!
cud chewing அசைபோடுதல் ஒரு நல்ல பொழுது போக்கு!
அடையாற்று வீட்டில் எங்கள் குடியிருப்பில் முதல் மாடி வீட்டுச் சொந்தக்காரர் காலம் சென்ற சுந்தரராஜனும் உங்கள் clan IA & AS! Rly Tribunal Member ஆக இருந்தவர்!
 
எத்தனை அழகரசர்கள் உங்கள் clan ல்!
 
புரிகிறதா!
நரசய்யா
 
2011/9/23 Innamburan Innamburan <innamburan@gmail.com>


annamalai sugumaran Fri, Sep 23, 2011 at 5:06 PM

இ சார் ,
ஷமிக்கணும்  ,ஒரு சிறிய சந்தேகம் 

மனிதனுக்கோராயிரம் வாட் மின்சாரம்
>    என்பது 2012 வருட தேசீய இலக்கு. ஆனா பாருங்கோ! 4000 மெகாவாட் அதிகப்படி
>    உற்பத்தி  தேவையிருந்தாலும், எடுத்த காரியத்தைச் செய்யாததாலும், திட்டமிட்ட
மனிதனுக்கோராயிரம் வாட்  என்பது  ஒரு   KW  தான் அதுவே ஒருமணி நேரம் உபயோகித்தால் ஒரு KWH  தான் அதுதான் நாம் சொல்லும் ஒரு யூனிட் என்பது ,ஒரு மனிதனுக்கு ஒரு யூனிட் மின்சாரம் தேசிய இலக்குஎன்பது  மிகவும் கொஞ்சமாகத் தோணுதே .
அன்புடன் 
சுகுமாரன் 



Innamburan Innamburan Fri, Sep 23, 2011 at 5:54 PM

நீங்கள் இவ்வளவு உன்னிப்பாக தணிக்கை செய்வது நலமே. ஆடிட் ரிப்போர்ட் சொல்வது: The availability of reliable and quality power is crucial for sustained growth of the economy. The National Electricity Policy envisaged providing at least 1,000 units per capita electricity by 2012. இது தவறா அல்லது மொழியாக்கம் தவறா என்று சொல்லுங்கள்.
நன்றி, வணக்கம்,
[Quoted text hidden]

Muruga poopathi Fri, Sep 23, 2011 at 7:01 PM

அன்புள்ள ஐயா,
1000 வாட் = 1 கிலோ வாட் = 1 யூனிட்
என்பதாகும்.
Innamburan Innamburan Fri, Sep 23, 2011 at 8:53 PM

நன்றி, பூபதி! நீங்களும் மின் துறையை சார்ந்தவர். எனக்கு அது தெரியும், சுகுமாரன் நல்ல நண்பர். அவரும் அத்துறையை சார்ந்தவர். அவரை ஊக்கப்படுத்தவே, அவ்வாறு எழுதினேன். எனினும் ஆடிட் ரிப்போர்ட் மேலும் தெளிவாக இருந்திருக்கவேண்டும். ஆடிட் அலுவலுகத்திடம், நேற்றே சொல்லி விட்டேன். இதையும் தமிழ் மன்றத்தில் ஏற்றி விடுங்கள். அன்றாடம்,'அன்றொரு நாள்', 'பாமர கீர்த்தி ~இன்னம்பூரான்' இரண்டையும் நீங்களே ஏற்றி விடுங்கள், முடிந்தால். உங்கள் ஸ்பிக் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்?
[Quoted text hidden]

Geetha Sambasivam Sat, Sep 24, 2011 at 1:32 AM
இதைப்படிக்கையிலேயே மின் அழுத்தம் ஏறி ஏறி இறங்குதே!


Geetha Sambasivam Sat, Sep 24, 2011 at 1:35 AM

இந்தத் தொடரின் 6-வது பத்தியில் ‘பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!’ உடைக்கப்பட்டது. அதன் தொடர் இங்கே தென்படுகிறது. ‘ஒப்பந்தக் காரர்கள், அரசுடன் ஒப்பந்தம் செய்கிறார்களோ, இல்லையோ, தங்களுக்குள் செய்கிறாப்பில இருக்கே’ என்று, புள்ளி விவரங்களுடன், ஆடிட் வினவ, அரசு மேலதிகாரியும் ‘அப்படித்தான் தோன்றுகிறது எம்மால் யாதும் செய்ய இயலாது’ என்கிறார். எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனெனில், அரசின் ஆளுமையை, நிர்வாகத் திறனை, இந்தப் பதில் பழிக்கிறது.//

நீங்க சொல்லாமலேயே புரியுதே!  தொடருங்கள். காத்திருக்கோம். உங்களுக்கு மட்டுமில்லாமல் எங்களுக்கும் வெட்கமாய்த் தான் இருக்கிறது.
ஐயா! தனி மனிதனுக்கோராயிரம் வாட் மின்சாரம் என்பது 2012 வருட தேசீய இலக்கு.//


இதைப்படிக்கையிலேயே மின் அழுத்தம் ஏறி ஏறி இறங்குதே!


annamalai sugumaran Sat, Sep 24, 2011 at 4:51 AM

இ  சார் 
பெரியவர் பெரியவரே !
நல்ல முறையில் எடுத்துக்கொண்டதற்கு நன்றி .
 
providing at least 1,000 units per capita electricity by 2012

என்பது ஆளுக்கு ஆயிரம் யூனிட் அதாவது ஆளுக்கு 
ஆயிரம் KWH(   KILOWATT PER HOUR ) எனப்பொருள் படும் .இது ஒரு உயர் இலக்குத்தான் . 
ஒரு யூனிட் என்பது KWH ,   அது  KW அல்ல .W அல்ல 
நன்றி வணக்கம் .

அன்புடன் 
சுகுமாரன் 
2011/9/23 Innamburan Innamburan <innamburan@gmail.com>


Innamburan Innamburan Sat, Sep 24, 2011 at 6:34 AM

ஆமாம். கிராமங்களிலே 'அவனிடம் இரண்டுக்கு இருக்கலாம்' என்பார்கள். அதாவது இரண்டாயிரம் என்று (ரூ.2கே) சொல்வார்கள். அந்த மாதிரி ஆயிரத்தில் பேசி வழக்கம். எதற்கும், இந்த பாயிண்ட் ஆடிட் ஆqபிஸிடம் 22ம் தேதியே சொல்லிவிட்டேன். இது உயர் இலக்கு அன்று, பல மின் தேவைகள் வரப்போகும், வளரும் நாட்டில்.
இன்னம்பூரான்
2011/9/24 annamalai sugumaran <amirthamintl@gmail.com>
இ  சார் 
பெரியவர் பெரியவரே !
நல்ல முறையில் எடுத்துக்கொண்டதற்கு நன்றி .
 
providing at least 1,000 units per capita electricity by 2012

என்பது ஆளுக்கு ஆயிரம் யூனிட் அதாவது ஆளுக்கு 
ஆயிரம் KWH(   KILOWATT PER HOUR ) எனப்பொருள் படும் .இது ஒரு உயர் இலக்குத்தான் . 
ஒரு யூனிட் என்பது KWH ,   அது  KW அல்ல .W அல்ல 
நன்றி வணக்கம் .