Showing posts with label IAAS.. Show all posts
Showing posts with label IAAS.. Show all posts

Tuesday, May 28, 2013

10.தணிக்கைக்கு ஒரு முட்டுக்கட்டையா?




10.தணிக்கைக்கு ஒரு முட்டுக்கட்டையா?

Innamburan S.Soundararajan Tue, May 28, 2013 at 6:43 PM

தணிக்கை என்ற முட்டுக்கட்டை – 10

இர
இன்னம்பூரான்


Thursday, June 2, 2011, 10:19

அப்டேட்:கடந்த இரு வருடங்களுக்குள் தணிக்கை ரிப்போர்ட்கள் அரசியல் வட்டாரங்களை ஒரு ஆட்டு ஆட்டுவித்தாலும், மக்கள் விழிப்புணர்ச்சி ஒன்று தான் வழி. இல்லாவிடின், நான் ஏன் விழுந்து, விழுந்து எழுதப்போகிறேன்!
இன்னம்பூரான்
28 05 2013 

தணிக்கைக்கு ஒரு முட்டுக்கட்டையா?

தணிக்கைத் துறை, உலகெங்கும், அலட்டிக்கொள்ளாமல், தணிந்து பேசும் தன்மையுடையது; உள்ளது உள்ளபடி கூறும் தன்மையுடையது; பெருந்தவறுகளைக்கூட, சான்றில்லையெனில், முன்னிறுத்தத் தயங்கும் தன்மையுடையது. இத்துறையின் சர்வதேச அமைப்புகள் செவ்வனே இயங்கின்றன. இன்றைய நம்நாட்டு அரசுகள் இயங்கும் / இயங்காத / முரணாக இயங்கும் செப்பிடு வித்தைகளைக் காணும்போது, தணிக்கைத் துறையின் ஏற்புடைய தன்மைகளையும் மாற்றித்தான் அமைக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.
இரு பின்னூட்டங்கள், என்னை இப்படிச் சிந்திக்க வைக்கின்றன.  கண்டும் காணாமல் விடப்படும் தணிக்கை அறிவிப்புகளைப் பற்றி ஒருவர் கூறினார், ‘இந்தக் கசப்பான நிலை மாறவேண்டும்; தணிக்கைத் துறையில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்.’
மற்றொருவர், ‘வருத்தமளிக்கும் செய்தி. ஜனநாயகத்தில், பணநாயகம் விளையாடுவதன் அறிகுறி’ என்றார்.
இத்தருணம், வலிமை மிகுந்த அமெரிக்காவின் தணிக்கைத் துறையின், 2011 மே 31ஆம் நாள் (31.05.2011) பிரகடனத்தைக் கவனிப்போமாக. அமெரிக்க ஐக்கிய நாட்டில் (யூ.எஸ்.ஏ) மருத்துவச் செயல்பாடுகள் சிக்கலானவை. காப்பீடு இல்லையெனில், மருத்துவம் இல்லையெனலாம். தமிழ்நாட்டுக் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போல் இல்லாமல், பெருமளவு ஒழுங்காக இயங்கினாலும், நுகர்வோர்களைப் பாடாய்ப் படுத்தும் தன்மை உடையவை.
India Post issued a stamp to celebrate the 150 years of Comptroller and Auditor General of Indiaசட்டமன்றங்களின் அரசியல் சாஸனம் சார்ந்த பணிகளில் உதவுவதும், மத்திய அரசு உருப்படியாக இயங்குவதற்கான பணிகளில் இறங்குவதும், அந்த அரசு மக்களிடம் கணக்குக் காட்டச் செய்வதும், தனது பணி என்று அடக்கமாக சொல்லிக்கொள்ளும் தணிக்கைத் துறைக்கு, இந்த மருத்துவச் செயல்பாடுகள் விஷயத்தில் நேரடிப் பணி ஒன்றும் கிடையாது. ஆனால் பாருங்கள், அங்கு நடப்பதை:
மருத்துவக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தி, கண்காணிக்க ஒரு மேல்மட்டக் குழு. பழையன கழித்து, புதியன புகுத்தி அப்பணியை செவ்வனே செய்ய, அங்கத்தினர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்படுகிறார்கள். பணி நன்றாகச் செய்பவர்களுக்கு மறு நியமனம் உண்டு. இந்த மேல்மட்டக் குழுவில் இடம் பெறுவது, சமுதாயத்தில் மதிப்பு தருகிறது. எனவே, மனுதாரர்கள் அதிகம். 1997இல் சட்டமன்றத்தால் அமைக்கப்பட்ட இந்த மேல்மட்டக் குழு தான் மக்களின் ஆரோக்கிய மாதாவாகிய திட்டத்தின் வழிமுறைகளைப் பற்றி, கட்டணங்களைப் பற்றி, சட்டமன்றத்துக்கு ஆலோசனை அளிக்கிறது.
இந்தியாவின் மக்கள் சபை, மேல் சபை இரண்டும் போல, அமெரிக்காவின் சபைகள் இரண்டும், இந்த மேல்மட்டக் குழுவின் அங்கத்தினர்களை நியமிக்கும் பொறுப்பை, ஆடிட்டர் ஜெனெரல் வசம் ஒப்படைத்திருக்கிறது. ஜெனெ.எல்.டொதாரோ என்பவர், தற்கால ஆடிட்டர் ஜெனெரல். அங்கு. அவர் நியமித்தவர்களில் ஒருவரான வில்லிஸ் கிராடிஸன் ட்யூக் பல்கலைக்கழகத்தின் ‘அங்கு தங்கியிருக்கும்’ வல்லுனர் (Scholar in Residence in the Health Sector Management Program).
அது சாதாரணமான பதவி அல்ல. அமெரிக்காவின் பெர்க்க்லி பல்கலைக்கழகத்தில், நம் உலகப் புகழ் கதாசிரியர் ஆர்.கே. நாராயணன் அவர்களை ‘அங்கு தங்கியிருக்கும்’ வல்லுனராக நியமித்த போது, அவர் தன் வேலை என்னவென்று கேட்டார். நீங்கள் இங்கு தங்கியிருப்பது போதும். அது தான் எங்களுக்குத் தனிச் சிறப்பு என்றார்கள்.
அந்த உன்னத ஸ்தானத்தில் இருப்பவர், வில்லிஸ் கிராடிஸன் அவர்கள். அவர் 18 வருடங்கள், சட்டசபை அங்கத்தினராக இருந்தவர். இன்னொருவர், வில்லியம் ஹால் என்ற முதியோர் மருத்துவர், பேராசிரியர். அவர் வகுத்த திட்டங்கள், மிகவும் புகழ் வாய்த்தவை. இப்போது, அமெரிக்காவில் ஆடிட்டர் ஜெனரலுக்கு உள்ள மதிப்பு புரிகிறதல்லவா?
இந்தியாவிலோ, அந்தோ பரிதாபம்! இதே காலகட்டத்தில், பாராளுமன்றக் குழு ஒன்று (சாக்கோ கமிட்டி), நம் ஆடிட்டர் ஜெனெரலிடம், ‘கோக்குமாக்காக’ (aggressively), பலமுறை தெளிவுபடுத்தப்பட்ட 2ஜி விஷயத்தைப் பற்றிக் கேட்டதாக, ஊடகங்கள் கூறுகின்றன. இதில் அவமானம் யாருக்கு என்று வருங்கால வரலாறு கூறும்போது, நமது சந்ததிகள் நம்மைக் கேலி செய்வார்கள். அமெரிக்காவில் மலை; இந்தியாவில் மடு.
(தொடரும்……
===========================================================
படங்களுக்கு நன்றி: http://philatelynews.comhttp://www.currentnewsindia.comShare
Tags: 
Published Vallamai.



  • Karthik wrote on 2 June, 2011, 10:34
    //அமெரிக்காவில் மலை; இந்தியாவில் மடு.//
    உண்மை

Tuesday, April 30, 2013

“ஓவர் டு ஸிம்லா”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -22




“ஓவர் டு ஸிம்லா”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -22


22 01 2010

 ஓவர் டு ஸிம்லா: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -22
 Inline image 1

கவர்மெண்ட்காராளுக்கு என்னிக்குமே இங்கிதம் தெரியாது என்பார்கள். சென்னையில்ஜீ.ஏ.நடேசய்யர் பங்களாவிலிருந்த IAAS Training School ஐ ஸிம்லாவுக்கு மாற்றியதும் அல்லாமல்அவர்கள் பிறப்பித்த தாக்கீது படிநான் தலை தீபாவளியன்று காலை ஜீ.டி. பிடித்து பயணிக்கவேண்டும். மூன்றாம் வகுப்பு என்றால்டில்லி கம்பார்ட்மெண்ட்முதல் வகுப்பு என்றால்நள்ளிரவில் காசிப்பேட்டில்,வண்டி மாறவேண்டும். நான் ஏன் முதல்வகுப்பு டிக்கெட் வாங்கினேன் என்று இன்றும் புரியவில்லை. முதல் வட இந்தியப்பயணம்கூத்து தான் போங்கள்! முதலில்பல நாட்கள்பலர் ஆலோசனைகளுக்கு கட்டுப்பட்டு (தாக்ஷண்யம் தன நாசம்!) வேண்டாத சாமான்களை எடுத்துக்கொண்டு (அலுமினிய கூஜா- அப்பாசரவணபவன் ஸைஸ் டிஃபன் கேரியர் – மாமியார்/  பட்டுப்பாய்,மெத்தைதலைகாணி - அடுத்தாத்து கிழம்/  லோகல் ரஜாயி - மாமனார் பெரிய குடைசின்ன குடைபிடித்த புத்தகங்கள்)வேண்டிய சாமான்களை விட்டு விட்டு (கம்பிளிபூட்ஸ்ஸ்வெட்டர் ரெயின் கோட் இத்யாதி/- நான்இடமில்லை என்று) கிட்டதட்ட 26 1/2 லக்கேஜ்களுடன் வண்டி ஏறினேனாமற்றோரு ஆலோசனைக்குழு என்னை தத்து எடுத்துக்கொண்டது..

அந்த காலத்தில் ரயில் பயணம்கப்பல்லே போற மாதிரி. தண்ணி சுத்துப்பட இல்லாவிட்டாலும்காடு. ஒன்றும் கிடைக்காது. அத்வானத்திலே மணிக்கணக்கா நிற்கும்தண்ணி பிடிக்கப்போனா, ‘கூ கூ என்று ஊதி விட்டு கிளம்பிவிடும்.  கடைசி வண்டியில் தொத்திக்கணும். இதைப்பற்றியெல்லாம் எச்சரிக்கை விடுத்த அந்தக்குழுபெரிய மனுஷாக்கூட்டம். சம்பளம் முதல் என்னைப்பற்றி யாதும் கேட்டறிந்த பிறகுஒரு ஐயாடில்லியில் வாங்கவேண்டியதைப்பற்றி பட்டியலே கொடுத்தார். இன்னொருத்தர் பஞ்சாபி பெண்களைப்பற்றி பயமுறுத்தினார் இப்படியாக பயணித்து காசிபேட்லே இறங்கினாவெட வெட குளிரு. கொட்ற மழைஅடிச்சுப்பிடிச்சு டில்லி கம்பார்ட்மெண்ட்லெ ஏறினா, 26 சாமான் தான் இருக்கு. [காலம்பறப்போயிஅந்த 1/2 சாமானையும் எடுத்து வந்தேன்.]. அந்த வண்டி மஹானுபவர்கள்முதல் வண்டி பட்டியலை உதாசீனம் பண்ணிவேறு லிஸ்ட்/கடை விவரத்துடன் கொடுத்தார்கள். இரண்டு நாள் பயணமா? கொண்டுவந்த தீபாவளி பக்ஷணங்கள் காலி. இது தான் சாக்கு என்று கல்யாண ஃபோட்டோக்களைப்பார்த்த ஒரு வட இந்திய பெரிசு, 'நீ ராஜாஜி மாப்பிள்ளையா?' என்று கேட்டார். எல்லா ஐயங்கார்களுக்கும் நாசி தீர்க்கம் என்று சொல்லித் தப்பித்தேன்.  டில்லியும் வந்தது. ஓல்ட் டில்லி ஸ்டேஷன் போய்கால்கா போகும் ரயிலைப்பிடிக்கவேண்டும்எப்டியோ பிடித்தேன். விஷயம் தெரிந்தவர்கள் கால்காவிலிருந்து ஸிம்லாவுக்கு ஷேர்டாக்ஸி பிடித்து சென்றனர். தந்தை சொல் மந்திரம் என்று நான் ஸிம்லா வரை டிக்கட் வாங்கியிருந்ததால், 'லொடக் லொடக்என்று சாவகாசமாக,மேட்டுப்பாளையம்-ஊட்டி வண்டி மாதிரி பல மணி நேரம் பயணித்துஒரு பாடாக ஸிம்லா சேர்ந்தால்ஒரு கூலியே, 261/2 31/4 லக்கேஜ்ஜை முதுகில் ஏற்றிக்கொள்ள,  நடராஜா ஸர்வீஸ். ஸிம்லா  என்றால் நடைமறுபடியும் நடைஅப்பறமும் நடை.

ஹாஸ்டலில் எல்லாரும் என்னையும் சாமான்களையும் விந்தையாக பார்த்தார்கள். கூஜாவை இரவல் வாங்கிசாப்பிடும் ஹாலில்பார்வைப்பொருளாக வைத்தார்கள்!  ரூமுக்குபோனாமெத்தை,கித்தை எல்லாம் தடபுடலாக இருந்தது. அசந்து உறங்கிவிட்டேன். எழுந்தா ரூம்லே தீ!
(தொடரணுமாஎன்ன?)

--
Tthamizth Tthenee 
1/22/10

மற்றோரு ஆலோசனைக்குழு என்னை தத்து எடுத்துக்கொண்டது
..


ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஅ

அவசியம்  தொடரவேண்டும்

இந்த  தத்துக்குழுக்கள்  நம்மைக் குழப்பும் குழப்பு  இருக்கிறதே  
அதை எழுதவேண்டாமா

அன்புடன்

தமிழ்த்தேனீ
_____________
இன்னம்பூரான்
30 04 2013