Saturday, September 3, 2016

சிவகாமியின் செல்வன் 2

சிவகாமியின் செல்வன் 2

பெரியவர் தஞ்சை ஜில்லாவில் இருந்த பழைய கோயிலொன்றுக்கு சென்றார், அந்த ஊர் மக்களும் ,அதிகாரிகளும் அழைத்து செல்ல. ஆர்வத்துடனும், வியப்புடனும் அந்த கோயிலைச் சுற்றிப் பார்த்து விட்டு, 'இது யாரு கட்டினதுங்கிறே?' என்றார். எல்லாரும் வாயடைத்து நிற்க, ஒரு அதிகாரி மட்டும் இது பற்றி தெளிவான வரலாறு ஒன்றும் இல்லீங்கய்யா.' என்றார். சிர்த்துக்கொண்டே, மேலே இருந்த ட்யூப் லைட்டைபார்த்தவாறு, 'இத்தனை காலமா நிலைத்து நிக்கிற கோயிலைக் கட்டினவன் யாருன்னு தெரியல்லே; ஒரு மாசம் கூட ஒழுங்கா எரியாத இந்த லைட்டிலே... உபயதாரர் யாருன்னு எவ்வளவு பெரிசா எழுதி வெச்சிருக்கான் பாருன்னேன்!" என்றாரும். 

அவருக்கு சட்னு கோபம் வந்துரும்...
பிற பின்னர்.
[தொடரும்]

ஆதாரங்கள், மூலம் எல்லாம் இறுதியில் தரப்படும்.

Friday, September 2, 2016

சிவகாமியின் செல்வன் 7

சிவகாமியின் செல்வன் 7
இன்னம்பூரான்
செப்டம்பர் 2. 2016

“ஜீவாவை அனைவரும் போற்றினார்கள். காமராஜர் போற்றினார் - அவர் எப்படிப் போற்றினார் என்பதை நான் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கிறேன். ஒருகட்டத்தில், சென்னையில் தாம்பரம் பகுதியில் குடிசை வீட்டில்தான் வசித்தார். அந்த வீட்டில் மழை பெய்தால் குடிசை ஒழுகும். உள்ளே சேறும் சகதியுமாக இருக்கும். அப்படிப்பட்ட குடிசையில் தான் அவர் வாழ்ந்தார்.
அப்படி ஒருகட்டத்தில், அவர் கடுமையாகக் காங்கிரசை விமர்சித்துக் கொண்டு இருந்தார். 

காமராசர் முதலமைச்சர். அங்கே இருக்கின்ற ஒளவை ஆரம்பப் பாடசாலை ஆண்டு விழாவுக்கு வருகிறார். ஜீவா வசித்த குடிசை வீட்டுக்குப் பக்கத்தில் தான் பள்ளிக்கூடம். அந்தப் பள்ளியே ஜீவா தொடங்கிய பள்ளிக் கூடம்தான். ஆனால், ஆண்டு விழாவுக்கு ஜீவாவுக்கு அழைப்பு இல்லை. வருடம் 1961. காமராசர் விழாவுக்கு வருகிறார். அப்பொழுது சென்னை கலெக்டராக இருந்த திரவியமும் அங்கே வருகிறார். அவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்தான்.
விழாவுக்கு வந்தவுடன் காமராசர் திடீரென்று ஓரிடத்தில் இறங்கி, தெருவில் நடக்க ஆரம்பிக்கிறார். நடந்தவர் ஓரிடத்தில் நின்று, இங்கே ஜீவானந்தம் வீடு எங்கே இருக்கிறது? என்கிறார். இதில் ஆச்சர்யம் என்ன வென்றால், அவர் நின்று கேட்கின்ற இடம் ஜீவாவின் குடிசை வீட்டு வாசல்தான். இங்கேதான் ஜீவானந்தம் இருக்கிறார் என்கிறார்கள். உள்ளே நுழைகிறார்.

வெளியூர் சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வந்து, எண்ணெய் தேய்த்துக் கொண்டு குளிக்க வேண்டும் என்று இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு இருக்கிறார் ஜீவா. அரவம் கேட்டு, யாரது? என்கிறார். காமராசரை பார்க்கிறார். என்ன விஷயமாக நீங்கள் இங்கே வந்து இருக்கிறீர்கள்? என்கிறார். என்ன ஜீவா, ஒளவை பள்ளிக்கூடம் ஆண்டு விழா. நீங்கள் வரவில்லையா? என்கிறார் காமராசர்.
‘எனக்குத் தெரியாதே’ என்கிறார் ஜீவா. காமராசர் ஒரு பார்வை பார்க்கிறார். சட்டையைப் போட்டுவிட்டு வாருங்கள் என்று அழைத்துக் கொண்டுசெல்ல, காமராசருக்குப் போடப்பட்ட நாற்காலியில் ஜீவாவை அமர வைத்தார் காமராசர். (நான் வேறு இடத்தில் அறிந்து கொண்ட தகவல். தனக்கு இருந்த ஒரே உடுப்பை நனைத்து காயவைக்கிறார், ஜீவா. அதனால் பெரியவர் வைட்டிங்!}

அதை விட வேதனை என்ன தெரியுமா? மீண்டும் இன்னொருமுறை வருகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டு வருகிறார். அந்தக் குடிசையின் நிலைமையைப் பார்க்கிறார். மழை கொட்டினால் உள்ளே தண்ணீர் பெருகிவிடும். அண்ணாந்து பார்த்தால் அந்த ஓட்டைக்குடிசை வழியாக வானத்தைப் பார்க்கலாம். என்ன ஜீவா நீங்கள் இந்தக் குடிசையில் இருக்கிறீர்கள். நான் ஒரு வீடு ஒதுக்க ஏற்பாடு செய்கிறேன். வருகிறீர்களா? என்கிறார் காமராசர்.

அதற்கு ஜீவாவோ, ‘இல்லை. இந்த நாட்டிலே வசிக்கின்ற எல்லா மக்களும் மாடி வீடு கட்டி வாழும்போது அடியேனும் அப்படிப்பட்ட வீட்டுக்கு வருவேன்.’ என்றாராம்.

‘தூக்குமேடைச் சிங்கம்’ என்று கவிதையில் ஜீவா எழுதுவார். காமராசர் சொல்கிறார், சிங்கமடா, அவர் பேச்சைக் கேட்க வேண்டுமே, எரிமலை வெடிப்பதைப்போல இருக்கும். அதுவும் கம்ப இராமாயணத்தை அவர் பேசக் கேட்க வேண்டுமே, எப்பேர்ப்பட்ட தலைவர்! தொழிலாளிகளுக்காகவே போராடி வாழ்ந்து, குடிசை வாழ் மக்களுக்காகவே போராடிக் கொண்டு இருக்கின்ற அந்த மனுஷன், இப்படி வந்து குடிசையில் கிடக்கிறாரே என்று காரில் திரும்பிச் செல்லும்போது காமராசர் தமது உள் ஆதங்கத்தைச் சொல்லிக்கொண்டே போனாராம்.


~ வைகோ

பின்குறிப்பு
தொடர் தொடர்ந்து வரவில்லை. பிறகு சரி செய்கிறேன். எனக்கு ஜீவாவை தெரியும். அந்த ஆதங்கம். மன்னிக்கவும்.

Thursday, September 1, 2016

சிவகாமியின் செல்வன் 1

I

சிவகாமியின் செல்வன் 1


Thu, Sep 1, 2016 at 6:53 PM

சிவகாமியின் செல்வன் 1

காமராசரின் மதம் பற்றிய பார்வையை பற்றிய தொகுப்பு பலருடன் அளவளாவியதை திரு. வீரபாண்டியன் என்ற சன் டி.வி தொகுப்பாளர் வழங்கியது. எனது அறியாமையினாலும், இயலாமையினாலும், அந்த இழையை என்னால் மீட்க முடியவில்லை. அதன் தொடர்பு இங்கே:

“வானவில்” 
பார்க்க:  ஆடி 2016 இதழ், பக்கம் 12-13    

*
அதன் கோணம் ஒரு புறம் இருக்க, 'பெரியவர்' என்று நெருங்கியவர்களால் அறியப்பட்ட 'சிவகாமியின் செல்வன்'  காமராஜர் என்ற பன்முகம் தாங்கிய மாமனிதரை பற்றி தற்கால தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலால், இந்த தொடரை துவக்கத் துணிந்தேன். தமிழ்நாட்டின் முதலமைச்சர்களின் -திருவாளர்கள் டி.பிரகாசம், ராஜாஜி, காமராஜர், ஓமந்தூரார், குமாரசாமி ராஜா, பக்தவத்ஸலம், கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஆகியோரின் ராஜ்ய பரிபாலனத்தை, பிரஜை, உத்யோகஸ்தன் என்ற முறையில் நேரடியாக அறிந்த நான் கூற விரும்புவது: 

அந்த பட்டியலில், பெரியவர் காமராஜர் ஒருவர் தான் மக்கள் நலம் மட்டுமே நாடி, பாமரனுடன் ஒன்றி, அதற்காக இடை விடாமல், பதவியை பொருட்படுத்தாமல், உழைத்தவர். ஐய்க்கண் அவர்களில் மேன்மக்களில் ஒருவர், அவர். மற்ற முதல்வர்களை பற்றி இங்கு கருத்து கூறப்போவதில்லை, திசை மாற்றத்தைத் தவிர்க்கவேண்டி.

அவரை பற்றி நான் முதலில் அறிந்து கொண்டது: விடுதலை போராட்டத்தில், அடிபட்டு இரு இளைஞர்கள் மூர்ச்சையில் தெருவில் கிடக்கிறார்கள். ஒருவர் நமது பெரியவர். அடுத்து கிடந்தது, டி. பிரகாசம். பிற்கால அரசியலில் அவர்கள் இருவரும் எதிர் துருவங்கள்!

கீழ்க்கண்டது மீள்பதிவு:

"அண்டை வீட்டுக்காரன் என்ற வகையில் பெருந்தகை காமராஜர் அவர்களை நான் நன்றாக அறிவேன். நான் ஜூனியர் உத்யோகஸ்தன். அவர் முதல்வர். அடிக்கடி அவர் வீட்டு வாசற்படி அளவுளாவுதல் சில நிமிடங்கள் நடக்கும். ஏனென்றால், என் மூன்று வயது மைந்தனை அவருக்கு பிடிக்கும். நன்முத்துக்கள் உதிரும். நான் புரிந்து கொண்டது:

அவர் அரசியலர். மதம் அவருக்கு ஒரு பொருட்டு அல்ல. அது தான் விதுர நீதி எனலாம். ஆனால், அவர் மத நம்பிக்கையை தகர்க்கவில்லை. இழிச்சொல் பேசவில்லை. அத்தகைய இழிச்சொல்லை கல்வெட்டில் பதிக்கவில்லை. திரு. உத்தாண்டராமபிள்ளை என்ற உயர் அதிகாரி ஒரு மாமனிதர். இந்து மத கோயில்களின் நிர்வாகம் செய்து வந்தார். மரபுகளையும். நாணயத்தையும் மீறும் கோயில் ஊழியர்களை அவர் தண்டித்தார். காமராஜர் அமைச்சைரவையில் இருந்த திரு பக்தவத்சலம் கோயில் செல்லுமம் பக்திமான். அவருடைய தெய்வநம்பிக்கையை காமராஜர் மதித்து நடந்தார். ஒரு மத்திய அரசு அமைச்சர் திரு ராமசாமி ஒரு கோயிலில் ஆத்திரம் மிகுந்து நடந்து கொண்டார். மரபுகளை நிந்தித்தார். திரு.பக்தவத்சலம் அவர்கள் திரு. ராமசாமிக்கு இனி கோயில்களில் வரவேற்பு இருக்காது என்று ஆணை பிறப்பித்தார்.


அன்புடன்,
இன்னம்பூரான்
*
பெரியவர் சுதந்திர இந்தியாவின் மைல்கல்கள் ஆன நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருந்த காலகட்டங்களில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களிலும், அவற்றின் பின்னணியிலும் முத்திரை பதித்தவர். இன்று கண்ணதாசன் அவரை பற்றி பாடிய கவிதையை பகிர்ந்து கொள்கிறேன்.

சொத்துசுகம்
நாடார்,
சொந்தந்தனை
நாடார்
பொன்னென்றும்
நாடார்,
பொருள் நாடார்,
தான்பிறந்த
அன்னையையும்
நாடார்,
ஆசைதனை
நாடார்,
நாடொன்றே
நாடித்தன்
நலமொன்றும்
நாடாத
நாடாரை
நாடென்றார்.

பிற பின்னர்.
[தொடரும்]

இன்னம்பூரான்


ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
தன் சுக துக்கங்களை நாடாத, தன் நாட்டு மக்களின் நலன் மட்டும் நாடிய தமிழ்நாடன் பற்றிய தங்களது பதிவு அருமை.
பெரியவரின் வாழ்க்கை நேரில் அறிந்தவர் என்ற வகையில் தங்களது பதிவுகள் சிறப்புப் பெருகின்றன ஐயா.
தொடர்ந்து பெரியவரின் சிறப்புக்களைப்
 பிரஜை, உத்யோகஸ்தன் என்ற முறையில் நேரடியாக அறிந்த தங்களது பதிவுகளைப் படிக்க  ஆவலாய் உள்ளேன்.

அன்பன்
கி.காளைராசன்




Tuesday, August 30, 2016

வெட்கக்கேடு

Innamburan S.Soundararajan

வெட்கக்கேடு


Wed, Aug 31, 2016 at 11:12 AM







வெட்கக்கேடு

Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Wed, Aug 31, 2016 at 11:08 AM

வெட்கக்கேடு


உலகெங்கும், அவ்வப்பொழுது, மனிதனின் ஒழுங்கீனம், களவாணி தன்மை, கொடுங்கோல் ஆளுமை, ஆகியவற்றைப் பற்றி தகவல்கள் வருகின்றன. இந்தியாவில் அவை அதிகமாக காணக்கிடைக்கின்றன. மும்பையின் செல்வந்தர் பகுதியான கஃப் பரேட், சென்னையின் அமைச்சர்கள் வசிக்கும் க்ரீன்வேஸ் சாலையின் சில பகுதிகள் தவிர, பெரும்பாலும் நடைபாதைகள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளதால், நடக்க லாயக்கில்லை. செல்வந்தர்கள் தான், இந்த குற்றத்துக்கு தலைமை தாங்குபவர்கள். அதருமமிகு சென்னையின் ராஜபாட்டைகளில், விதிகளை மீறி, தவறான எதிர் பாதைகளில் இருசக்கரவாஹனங்கள் ஓடோடி வருவதையும், அதை கண்டும் காணாமலும் காவல்துறையினர் அசால்ட்டாக இருப்பதும், குடித்து கார் ஓட்டுபவர்கள் சகட்டுமேனிக்கு கொலை செய்வதும் கண்கூடு. இந்த பீடிகை நாமே தன் தலையில் சகதியை வாரிப்போட்டுக்கொள்வதற்கு சில உதாரணத்துளிகள்.

இனி, பெரிய விஷயத்துக்கு போவோம். ஒடிஷா மாநிலத்தின் இயற்கை வளம் அபாரமானது. அங்குள்ள காலஹண்டி மாநிலம் விவசாயத்துக்கு உகந்த செழிப்பான பூமி. ஏழையின் காஷ்மீர் என்று கூட சொல்வார்கள். அத்தனை அழகு மிகுந்த பிரதேசம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் பனி மழை கூட உண்டு. பழங்குடிகள் ஒடிஷாவின் மண்ணின் மைந்தர்கள். அவர்கள் பெரும்பான்மையைர் என்றாலும், ஊருக்கு இளைத்த இனம். பொலாங்கீர், காலஹண்டி, பூல்பானி என்ற அண்டை மாநிலங்களுக்குக் கலைக்டர்கள் நியமனம் செய்யும்போது, ஒரு பெரிய ஆய்வே நடக்கும், அந்த காலத்தில். மனிதநேயம் மிகுந்தவர்களும், ஏழைபங்காளனுமாக இருப்பவர்களை, நிர்வாகத்தில் யதார்த்ததை புரிந்து கொண்டு விதி அனுசரணை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்ற பரிவு தான் அதற்கு பின்னணி. 

1977=80 களில் ஒடிஷா மாநில பழங்குடிகளின் இயற்கை வள சொத்துக்களை (கெந்து இலை, சால் மர விதைகள் வகையறா) சூறையாடிய ஒப்பந்தக்காரர்கள் மிகவும் இரக்கமற்ற கும்பல் தான் என்பதில் ஐயமில்லை.  எனினும், இந்த மூன்று மாநில கலைக்டர்கள் என்னுடைய தணிக்கை அணுகுமுறையை அனுசரித்தார்கள். நானும் ஏழைபாழைக்கு உதவும் வகையில் விதிகள் தளர்த்தப்படுவதை ஊக்கப்படுத்தினேன். அந்த காலத்தில் இருந்த இந்த நல்லுறவால், பழங்குடிகளுக்கு நன்மை செய்ய முடிந்தது, எங்களுக்கு எதிராக அநாமதேயக்கடிதங்களை ஒப்பந்த்தக்காரர்கள் அனுப்ப ஏற்பாடு செய்தாலும்.

இந்த பின்னணியில் அண்மையில் நடந்த கொடூரத்தை பாருங்கள்.மஜ்ஹி எனப்படும் பழங்குடிகள் தன்மானம் காப்பவர்கள். திரு. தானா மஜ்ஹி அவர்களின் மனைவி திருமதி.அமனா தேய் காலஹண்டி மாநில மருத்துவமனையில் இறந்தார்: காசநோய். விதிப்படி அமரர் ஊர்தி இலவசமாக தரப்படவேண்டும். ஆனால், அவர் ஊருக்கு இளைத்த பிள்ளையார் கோயில் ஆண்டியை விட பலவீனன் ஆதலால், தன் சிறிய மகள் பின் தொடர, அவர் மனைவியின் சடலத்தை சுமந்து,  நடக்கத் தொடங்கினார். பிறகு ஏதோ உதவி கிடைத்தது. அதை விடுங்கள். அவர் தன் மனைவிக்கு முக்கியமான மூன்றாம் நாள் சடங்கு செய்யமுடியவில்லை. கலைக்டர், உதவி கலைக்டர், அந்த கழுதை, இந்த கழுதை எல்லாம் இவரை விசாரணை செய்ய வேண்டுமாம். அந்த தினம் வலுக்கட்டாயமாக் இழுத்துச்சென்று அவரையும், அவரது மகளையும் கலைக்டர் அம்மா முன்னால் ஆஜர் செய்ததும், அந்த  பெண் சிகாமணி, ‘நீ தான் உன் மனைவியை கொன்றாயா?’ என்று வினவினாராம்.

இந்த அபகீர்த்தி உலகெல்லாம் பரவ, பஹ்ரைன் முதல்வர் நிதி உதவி செய்திருக்கிறார். பழங்குடி சமுதாயங்கள், விழிப்புணர்ச்சியுடன் போராட துவங்கி விட்டனர். நாம் அவர்களுக்கு ஜே போட்டால் போதாது. நமது சமுதாய இனபேதங்களை, பேச்சில் மட்டும் இல்லாமல், செயல் மூலம் ஒழிக்கவேண்டும்.

மேலும் நம்மை கலங்கவைக்கும் செய்திகள் உளன. சொன்னால் பொல்லாப்பு!

கீழ்க்கண்ட செய்தியை படித்து, வெட்கி தலை குனியுங்கள்.



இன்னம்பூரான்

சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, August 28, 2016

சுகவனம் 4


Innamburan S.Soundararajan

சுகவனம் 4


Mon, Aug 29, 2016 at 7:27 AM

சுகவனம் 4



இன்னம்பூரான்
28 08 2016
பிரசுரம்: http://www.vallamai.com/?p=71502


ஏழை பாழை என்றால், அதுவும் கிராமத்தான் என்றால், இளப்பம் தான். சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம் காய்ச்சலில் தவிக்கிறது. அந்த ஊரின் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு படுக்கையில் இரண்டு நோயாளிகள். டெங்கு போன்ற உயிர்கொல்லி காய்ச்சல்களுக்கு  இது வரப்பிரசாதம்.  காய்ச்சலுடன் யார் வந்தாலும், ஆஸ்பத்திரியில் பரிசோதனை தொடங்கி விடுகிறார்கள். டெங்கு மட்டுமல்ல. டைஃபாய்டு, எலிவிஷஜுரம் எல்லாம் அங்கு அடைக்கலம் நாடுகின்றன. 

அந்தோ பரிதாபம்! போனவாரம்  எழும்பூரில் உள்ள குழ்ந்தைகள் ஆஸ்பத்திரியில். திருவள்ளூரிலிருந்து போன ஐந்து குழந்தைகள் இறந்து விட்டன. ‘அதுவோ! இதுவோ1’ என்று காரணங்கள் பல கூறப்பட்டாலும், மாண்டார் மீண்டு வருவாரோ? [அப்டேட்: சற்று நேரம் முன்னால் மற்றொரு மழலை பலி.]

சுகாதார பின்னணியை நோக்குவுமாக. திருவள்ளூர் மாவட்ட்த்தின் ஜனத்தொகை  37 லக்ஷம் மக்கள்; அடர்த்தி தான். மாவட்டம் முழுதுமே சுற்றுச்சூழல் சுகாதாரம், ஸ்வச்ச பாரத் ஆகியவற்றை அறியாதவர்கள் போலும்! மக்களே இந்த அவலத்துக்குக் காரணம் என்கிறார்,சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி ஒருவர்.

குதிரை திருடு போனபின் லாயத்தை பூட்டுவதைப் போல், வருடக்கணக்காக திறந்த சாக்கடைகள், துர்நாற்றம் வீசும் சாக்கடைகளை போன வாரம் சுத்திகரித்து, குழாய்கள் மூலம் சாக்கடைகளை மூடினாலும், அசுத்தமான நீர் தான் அளிக்கப்படுகிறது என்கிறார், ஒரு உயர் அதிகாரி. போதாக்குறையாக, கட்டுமான பணிகள் சென்னையின் பல பகுதிகளில் நடப்பதால், ஏழை பாழை கூலிகள் அங்குமிங்குமாக சோத்துக்கு அலைந்து திரிவதே ஒரு அபாயம் என்க.

அதிகாரிகள் டெங்கு எதிர்பாராத போது வரக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். அதிவேகமாக பரிசுத்தப் ப்யணம் நடக்கும் என்கிறார்கள் அதிகாரிகள். அங்கன்வாடி ஊழியர்களை கவனமாக காய்ச்சல் செய்தி கிடைக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. போலி டாக்டர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

பொன்னேரியிலும் இதே கதி தான். மருந்து சீட்டு இல்லாமல் வரும் நோயாளிகளுக்கு  தெய்வமே துணை.

இதற்கெல்லாம் நடுவில் ஒரு ஜோக். அமைச்சர் பார்வையிட வந்த போது மட்டும்  கொடுக்கப்பட்ட போர்வைகள், அவர் தலை மறைந்தவுடன் , பிடுங்கப்பட்டன!


© The Hindu

சித்திரத்துக்கு நன்றி:





























இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

சுகவனம் 3

Innamburan S.Soundararajan




Sun, Aug 28, 2016 at 4:36 PM






சுகவனம் 3
1


Sun, Aug 28, 2016 at 4:32 PM



சுகவனம் 3



இன்னம்பூரான்
24 08 2016
பிரசுரம்: http://www.vallamai.com/?p=71428


மேற்படி நிறுவனத்தின் நீண்ட ஆய்வின் பயனாக வெளியிடப்பட்ட மற்ற அறிவுரைகள்:

1. சுகவனம் 2 ல் கூறப்பட்டது;
Keep Active: உங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் என்றென்றும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது நலம் பயக்கும். எறும்பு சுறுசுறுப்பாக இயங்குவதை நாம் காண்கிறோம். ஆண்சிங்கமோ படு சோம்பேறி. புலியை விட வேங்கையின் வேகம் அதிகம். மற்ற ஆய்வுகளும் சோம்பிக்கிடக்காமல், பல அலுவல்களில்  இயங்கும் மானிடரை வியாதிகள் அணுகுவது குறைவு என்று பல்லாண்டுகளாக அறிவித்து வந்துள்ளனர்.
Eat Well: உணவே மருந்து. அதை தக்கதொரு முறையில் தயாரித்து நன்றாக உட்கொள்வது நல்லது. அறுசுவை உண்டி அளிக்கும் சுவை போற்றத்தக்கது என்றாலும் சிறிய அளவில், இனிப்பையும், உப்பையும், எண்ணெயையும் குறைத்து, காய்கறிகளையும், பழவகைகளையும் உட்கொள்வது நலம். ஆய்வு செய்தவர்களில் பேலியோ டயட்டார்கள் இருந்திருக்கலாம். மாமிசம் உண்போரும் உணவை நல்ல வகையில் உண்ணலாம் -முட்டை,மீன், கோழிக்கறி என்று. அதை குறை சொல்வதற்கு இல்லை.
Drink Sensibly: மேல்நாடுகளில் பெரும்பாலோர் மது அருந்துபவர்கள். அவர்களின் கலாச்சாரத்தில் அது ஒரு அங்கம்  வகிக்கிறது. அதனால் தான் இந்த அறிவுரை. நம் நாட்டில் குடிமயக்கம் அடிக்கடி தென்படுகிறது. போன வருடம், ஒரு பயணத்தில் ஒரு டாஸ்மாக் கடை ‘வாழ்க வளமுடன்’ என்ற விலாசம் படைத்த வாடகை கட்டிடத்தில். அதன் வாசலில் அலங்கோலமாக கிடந்தனர், குடிமகன்கள். ‘வாழ்வே மாயம்’ என்று நினைத்துக்கொண்டேன்.
Keep in touch: மனிதனின் இயல்பு சுற்றத்துடன் வாழ்வது. அது குடும்பம், கூட்டுக்குடும்பம், சுற்றம், நண்பர்கள், ஊர், மாநிலம், நாடு, உலகம் என்று பல பரிமாணங்கள் கொண்டது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கூடி வாழ்வது நலம் பயக்கும்.
Ask for Help: தட்டுங்கள். கதவு திறக்கப்படும். மற்றவர்களுக்கு உதவுவது ஒரு கலை. திறந்த மனம் வேண்டும். உதவும் மனப்பான்மை வேண்டும். அது உகந்த முறையில் இயங்க பயிற்சி பெறவேண்டும். இந்த விஷயத்தில் இங்கிலாந்தில் 80 வருடங்களாக, நாடெங்கும் சராசரி மனிதர்களால், குறிப்பாக, குடும்பத்தலைவிகளால், தன்னார்வத்துடன் இயங்கும் மக்கள் ஆலோசனை மன்றத்துக்கு இணை உலகில் எங்கும் கிடையாது. என் அமைதி வாழ்க்கை அதற்கு நிரூபணம்.
Take a Break: அவ்வப்பொழுது ஓய்வும், மனமகிழ்ச்சி நிகழ்வுகளும் மிக்க உதவும் என்பது யாவரும் அறிந்ததே.
Do something you are good at: எது செய்தாலும், தனக்கு உகந்ததை செய்வது எளிது; நிறைவு தரும். மற்றவர்களுக்கும் உதவும், நான் இந்த தொடரில் இறங்கியது போல.
Accept who you are: ஒருவர் போல் ஒருவர் இருப்பது இல்லை. காந்திஜி ‘கத்தியின்றி, ரத்தமின்றி...‘விடுதலை புரட்சி நடத்தினார். தமிழ்த்தாத்தா தமிழ் மணத்துடன் வாழ்நாளை கடத்தினார். பாமரனும் நல்லாட்சி புரியமுடியும் என்பதை காமராஜர் நடத்திக்காட்டினார். அவரவர்கள் இத்தகைய பட்டியலை தயார் செய்து கொண்டு, தன்னிலை விளக்கம் அளித்துக்கொள்ளலாம்.
Care for others: சொல்லித் தெரிவதில்லை, மனித நேயம். தொடரின் இறுதி கட்டத்தில் இது விவரமாக பேசப்படும்.

-#-
சித்திரத்துக்கு நன்றி: 
http://images.fineartamerica.com/images-medium-large/ebullience-regina-valluzzi.jpg


Mental Health Foundation Copyright © 2016. 


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


__._,_.___



__,_._,___

Wednesday, August 24, 2016

சுகவனம் 2

Innamburan S.Soundararajan

சுகவனம் 2


Wed, Aug 24, 2016 at 1:57 PM



சுகவனம் 2




இன்னம்பூரான்

செவ்வாய் 23 08 2016

பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=71382#respond

மனம் என்பதின் இருப்பிடம், அதன் வழித்தடங்கள் பற்றிய ஆய்வுகள் கணக்கில் அடங்கா. விஞ்ஞான ரீதியாக, அது மூளையின் செயலே என்ற கருத்து தற்காலம் பெரிதும் பேசப்படுகிறது. ஆழ்மனம் என்றால், அது உடல் அவயவமாகவே தென்படுவதில்லை. ஆனால், நம்மை அது தான் ஆட்டிப்படைக்கிறது என்பது அவரவர் அறிந்ததே. அந்த ஆட்டிப்படைத்தல் உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும் என்பதும் ஒரு அனுபவக்கூறு. நோயற்ற வாழ்வுக்கு மனோதிடம் உறுதுணை என்பதும் மறுக்க முடியாத சூத்திரம் என்பதை ஐயமுற அறிவதற்கு, 1976 லிருந்து இயங்கும் மேற்படி அமைப்பு மனித இனத்தின் காவல் தெய்வமாக இயங்கி வருகிறது. அண்மையில் அவர்கள் ஒரு நீண்ட ஆய்வின் பயனாக பத்து அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதில் முதலாவது பற்றிய பதிவு இது. வாசுதேவன்,ருத்ரா, கோபால், லக்ஷ்மி நாரயணன் போன்றோர் கேட்டால் அவை யாவையும் அலசி, அவரவருக்கு ஏற்புடையதை நடைமுறைக்கு கொணரலாம். தமது உணர்ச்சிகளை இற்செறிக்காதீர்கள். நால்வரிடம் அது பற்றி கலந்தாலோசித்தால், அது பெரிதும் உதவும் என்பது முதல் அறிவுரை, விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில்.

சற்றே விவரமாக: தன் உணர்ச்சிகளை பகிர்ந்து கொளவது பலவீனமல்ல. அது தன்னலம் போற்றும் அணுகுமுறை. தன்னை பாதுகாத்துக்கொள்ளும் வழி. உன்னை அலக்கழிக்கும் சிக்கலை, அது அவிழ்க்கக் கூடும். இது எளிதில் நடக்கக்கூடியது இல்லை.  தீராத பிரச்னையை விசாலமாக விளக்குவதும் நலனே. அதற்காக, ஒரு பகிர்வை செயற்கையாக அமைத்து விட்டால், வேறு வினை வேண்டாம். இத்தகைய உரையாடல்கள் தான்தோன்றியாக, இயல்பாகவே அமைந்து விட்டால், நீங்கள் ஒரு பாலத்தை கடந்து விடுவீர்கள். முஸ்தீபுகள் செய்து கொள்ளாமல், நண்பர்களிடம் மனம் விட்டு பேசினால், தீர்வு கிடைப்பது எளிதாக அமையும் என்பது ஆய்வின் வெளியீடு. துவக்கும் போது பாலைத்திணை கற்கள் நெருடலாம். அவசரம் இல்லை. காலம் கடந்தாலும், தக்கதொரு சூழ்நிலை ஏற்படுகிறது என்பதும் ஆய்வின் முடிபு எனலாம்.

Mental Health Foundation Copyright © 2016.


சித்திரத்துக்கு நன்றி: 

Monday, August 22, 2016

சுகவனம் 1

Innamburan S.Soundararajan

சுகவனம் 1


Mon, Aug 22, 2016 at 3:17 PM


சுகவனம் 1


இன்னம்பூரான்
திங்கள்: 22/23 08 2016

பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=71310

‘சுகவனம்’ என்ற இந்த தொடர் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்று துவக்கப்பட்டதின் நீடிப்பு. உரியகாலம் இப்போது தான் வந்ததோ என்னவோ? சுகவனம் இயற்கை வளம் பொருந்திய கானகம் என்க. அது அவரவர் ஆரோக்கியத்தை அவரவரே கண்காணித்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தின் உருவகம். அந்த விழிப்புணர்ச்சிக்கு அரசும், சமுதாயமும், மருத்துவ உலகமும் கைகொடுக்கவேண்டும். அவ்வாறு அவர்கள் இயங்காவிடின் அவர்களை நாம் வற்புறுத்தி, நல்வழிக்குக் கொணரவேண்டும்.

சான்றாக, கவிஞர் நா.முத்துக்குமார் அவர்களின் அகாலமரணம் கலையுலகுக்கும், கவிதையுலகுக்கும் மாபெரும் இழப்பு. மக்களின் சுகவனம் பற்றி நமது நாட்டில் அரசின்/ சமுதாயத்தின் கோட்பாடுகள் நோயாளியை வியாதியிலிருந்து மீட்க, அவரை முன்னிறுத்தி செயல்படவேண்டும். காமாலை நோயால் அவர் இறந்ததை எளிதில் தவிர்த்திருக்க முடியும் என்பதால், சோகமும் ஆத்திரமும் எனக்கு ஏற்படுகிறது. பல வருடங்களுக்கு முன்னால் டாக்டர் பார்த்தசாரதி என்ற மயக்கமருந்து கொடுக்கும் இளவயது மருத்துவர் காமாலையால் இறந்தார். அது அறுவை சிகிச்சை மையத்தில், சிக்கனம் கருதியோ, அக்கரையில்லாததாலோ, டாக்டர்களுக்கு பாதுகாப்பு வளையம் சரியாக அமையவில்லை. அவர் பலி கொடுக்கப்பட்டார். பல வருடங்களுக்கு முன், சென்னையில் ஒரு பிரபல ஆஸ்பத்திரியின் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர் கொடுத்த சுதந்திரத்தை பிரயோகித்து ஒரு தணிக்கை செய்து நான் அமைத்த ஒரு மூவர் குழு பல பரிந்துரைகளை அளித்தது. அவற்றை, உரிய நேரத்தில் கூறுகிறேன். ஒன்று மட்டும் இப்போது. அறுவை சிகிச்சை டாக்டர்களின் உயிரும் வெல்லம் தான். அவர்கள் ஒரு திரவத்தை அள்ளி, அள்ளி பூசிக்கொண்டு தான் அறுவை சிகிச்சைக்கு ஆயத்தம் செய்து கொள்வார்கள். அந்த ஆஸ்பத்திரியில் காலாவதியான திரவம் தரப்பட்டிருந்தது. அவற்றையெல்லாம் திரட்டி நாசம் செய்தேன். தலைவர் ஆமோதித்தார். இதை சொல்லவருவதற்குக் காரணம்: காமாலை நோயை மருத்துவர்கள் கையாளும் முறையில் உள்ள தவறுகள். சான்று கீழே உள்ள ஆங்கில ஆய்வுக் கட்டுரையின் சுருக்கமான தமிழாக்கமும், மூலமும்:

சுகவனம் நோயாளியின் நலனுக்கு முதல் மரியாதை கொடுக்கவேண்டும். 2014ஆம் வருடத்தில் அமல்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் காமாலை வியாதியை குணப்படுத்துவதில் ஒரு புரட்சியே கண்டது. அதன்படி பெரும்பாலான நோயாளிகளை குணப்படுத்த முடியும். ஆனால் மூன்று மாத சிகிச்சை திட்டத்தின் விலை லக்ஷக்கணக்கில் ஆகும். அமெரிக்காவில் கூட அந்தத் திட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் என்ற நடைமுறை. மற்றவர்களுக்கு அவஸ்தை தான் மிஞ்சும். இந்த அணுகுமுறை, மருத்துவ கோட்பாடுகளை மீறுகிறது. விஞ்ஞானம் இதை ஆதரிக்கவில்லை. மக்கள் சுகாதாரம் நாடி எடுக்கும் வழிமுறைகளை நீர்க்கச் செய்து விடுகிறது. மூலக்கட்டுரை படைத்த ஆய்வாளர் [Brian.R.Edin], இந்த தவறான அணுகுமுறையை டாக்டர்களும், அரசும் ஒழிக்கவேண்டும் என்கிறார். ஆங்கில மூலமும், அதன் மூலமும் கீழே.

இந்தியாவில் கேட்கவேண்டாம். அண்மையில் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அதற்காக, இங்கிலாந்திலிருந்து வந்திருந்த என் மைந்தன், ஒரு மயக்கமருந்து ஸ்பெஷலிஸ்ட்; வலி நிவாரணம், உறக்கம் சம்பந்தமான இன்னல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்பவர். அவர் இங்கு வியாதியஸ்தர்கள் படும் பாட்டைக் கண்டு திகைத்துப்போனார். இங்கு எல்லாமே சடங்குகள், சம்பிரதாயங்கள். வியாதியஸ்தன் ஒரு நம்பர். இந்த சூழ்நிலையில், தான் செய்த படைப்புகளுக்கு புகழ் பெற்று, திரவியம் இழந்த கவிஞர் நா.முத்துக்குமார் அத்யாவசியமான மருந்துகள் கொடுக்கப்பட்டாரா என்ற ஐயம் எழுகிறது. சிலருக்கு நினைவு இருக்கலாம். என் நண்பரும் தலித் கதாசிரியருமான திரு.க.சமுத்திரம் ஒரு விபத்துக்குள்ளானர். நினைவிழந்த அவரால் தன் நிலை கூற இயலவில்லை. மற்றவர் சொன்னதை அந்த தனியார் ஆஸ்பத்திரி ஏற்க வில்லை. காசு வை முதலில் என்று நிர்பந்தித்தார்கள். அவர் இறந்து போனார்.



Sound health policy puts patients first. Antiviral regimens approved in 2014 revolutionised treatment of hepatitis C virus (HCV) infection. Most patients can now be cured. These new regimens, however, were priced at US$83 320–150 000 for a 3-month course. Public and private payers in the USA responded by limiting coverage to patients with advanced fibrosis or cirrhosis, keeping the drugs from being used to prevent those stages. These restrictions defy medical guidelines, lack scientific justification, and undermine public health efforts to stem transmission. Instead of reducing barriers to care, the system has இன்னம்பூராerected new ones. As drug makers and payers battle over billions of dollars, the needs of patients have been cast aside. Physicians and governments have a duty to make sure health policy is driven by the needs of patients and public health. In this Personal View, I call upon these groups to lead the creation of a national consensus among all stakeholders that will allow the advances in therapeutics for HCV infection to be put to work to end the epidemic.


சித்திரத்துக்கு நன்றி: 

Monday, August 15, 2016

Fair, but not, Lovely!


Innamburan S.Soundararajan

Fair, but, Not Lovely!


Mon, Aug 15, 2016 at 4:35 PM

Dear Friends,

I write regularly for Confluence, a Magazine in the UK. The latest issue reached me yesterday. My article with the caption given in the subject column is the 10th in the series

Sunday, August 14, 2016

அசோகச் சக்கரம்








Mon, Aug 15, 2016 at 8:00 AM







அசோகச் சக்கரம்


Sun, Aug 14, 2016 at 10:29 PM


அசோக சக்கரம்


இன்னம்பூரான்
14 08 2016
பிரசுரம்: வல்லமை: சுதந்திர தினம்: 15 -8 2016:http://www.vallamai.com/?p=71188


எல்லாரும் ஓரினம் என்றாலும் ராணுவ வீரர்களுக்கு ஒரு தனி முத்திரை இருக்கத்தான் இருக்கிறது. ஏனெனில் அவர்களுக்கு உயிர் வெல்லமல்ல. சற்று மாற்றி எழுதவேண்டும். அவர்களுக்கு உயிர் வெல்லம் தான், மற்றவர்களின் உயிர். இந்தியாவின் பெரிய ராணுவப்பள்ளியின் தாரகமந்திரமே, “உனது நாடு முதலில்; அடுத்து முக்கியமானது உனது படை வீரர்கள்; உனது இடம் கடைசியில்; என்றுமே.’ அன்றொரு நாள் தொகுப்பில் லெஃப்டினண்ட் அருண் க்ஷேத்ரபால் பற்றி எழுதியிருந்தேன். இன்று அசோகச்சக்கரம் விருது அளிக்கப்பட்ட அமரர் ஹவில்தார் ஹங்பன் தாதா அஸ்ஸாம் ராணுவப்படையை சேர்ந்தவர். மே 26 அன்று இமாலயத்தின் 13 ஆயிரம் அடி உயரமான பனிக்கட்டி பிராந்தியத்தில் நான்கு பயங்கரவாதிகளை கொன்று குவித்த அவர்,ஒளிந்திருந்த பயங்கரவாதி சுட்டதால், அவனை படுகாயப்படுத்தின பின்னர், வீரமரணம் அடைந்தார். 

அவரை பற்றி சில சுவையான செய்திகள்: மாதாகோவிலில் முன்னின்று சம்பிரதாயங்களை நடத்தும் அவர், போர் புரிவதிலும் தலைமை ஏற்க தயக்கம் காட்டியவர் இல்லை. எப்போதும் சிரித்த முகம். அவருடைய ஜன்மதினம் காந்திஜியின் ஜன்மதினம்: 1979. கிராமத்தான். துணிச்சல் பிரமாதம். நியாயத்துக்கு அவர் அடிமை. சமர் புரிவதிலும் எல்லாரும் சமானமானவர்கள் கிடையாது. அபாயம் அதிகரித்த காலகட்டங்களில் தனித்து சென்று வேவு பார்த்து வரும் தன்மை உடையவர், மற்றவர்களின் உயிர் வெல்லமல்லவா! மாதாகோவிலில் இவருடைய பிரசங்கங்களை யாரும் மறக்கவில்லை. இறை நம்பிக்கை மிகுந்தவர்.மனித நேயத்தில் மறு உருவாக, அவர் செய்த பணிகள் அவரை உணர்த்துகின்றன.

அவருடைய ஆத்மா சாந்தியடைக. அவரை கெளரவித்த அரசு தனக்கு கெளரவம் பெற்றத

சித்திரத்துக்கு நன்றி:http://images.newsworldindia.in/2016/08/Havildar-Hangpang-Dada-750x500.jpg


படித்தது:









இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com















இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com