Showing posts with label திருவெள்ளூர். Show all posts
Showing posts with label திருவெள்ளூர். Show all posts

Sunday, August 28, 2016

சுகவனம் 4


Innamburan S.Soundararajan

சுகவனம் 4


Mon, Aug 29, 2016 at 7:27 AM

சுகவனம் 4



இன்னம்பூரான்
28 08 2016
பிரசுரம்: http://www.vallamai.com/?p=71502


ஏழை பாழை என்றால், அதுவும் கிராமத்தான் என்றால், இளப்பம் தான். சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டம் காய்ச்சலில் தவிக்கிறது. அந்த ஊரின் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு படுக்கையில் இரண்டு நோயாளிகள். டெங்கு போன்ற உயிர்கொல்லி காய்ச்சல்களுக்கு  இது வரப்பிரசாதம்.  காய்ச்சலுடன் யார் வந்தாலும், ஆஸ்பத்திரியில் பரிசோதனை தொடங்கி விடுகிறார்கள். டெங்கு மட்டுமல்ல. டைஃபாய்டு, எலிவிஷஜுரம் எல்லாம் அங்கு அடைக்கலம் நாடுகின்றன. 

அந்தோ பரிதாபம்! போனவாரம்  எழும்பூரில் உள்ள குழ்ந்தைகள் ஆஸ்பத்திரியில். திருவள்ளூரிலிருந்து போன ஐந்து குழந்தைகள் இறந்து விட்டன. ‘அதுவோ! இதுவோ1’ என்று காரணங்கள் பல கூறப்பட்டாலும், மாண்டார் மீண்டு வருவாரோ? [அப்டேட்: சற்று நேரம் முன்னால் மற்றொரு மழலை பலி.]

சுகாதார பின்னணியை நோக்குவுமாக. திருவள்ளூர் மாவட்ட்த்தின் ஜனத்தொகை  37 லக்ஷம் மக்கள்; அடர்த்தி தான். மாவட்டம் முழுதுமே சுற்றுச்சூழல் சுகாதாரம், ஸ்வச்ச பாரத் ஆகியவற்றை அறியாதவர்கள் போலும்! மக்களே இந்த அவலத்துக்குக் காரணம் என்கிறார்,சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி ஒருவர்.

குதிரை திருடு போனபின் லாயத்தை பூட்டுவதைப் போல், வருடக்கணக்காக திறந்த சாக்கடைகள், துர்நாற்றம் வீசும் சாக்கடைகளை போன வாரம் சுத்திகரித்து, குழாய்கள் மூலம் சாக்கடைகளை மூடினாலும், அசுத்தமான நீர் தான் அளிக்கப்படுகிறது என்கிறார், ஒரு உயர் அதிகாரி. போதாக்குறையாக, கட்டுமான பணிகள் சென்னையின் பல பகுதிகளில் நடப்பதால், ஏழை பாழை கூலிகள் அங்குமிங்குமாக சோத்துக்கு அலைந்து திரிவதே ஒரு அபாயம் என்க.

அதிகாரிகள் டெங்கு எதிர்பாராத போது வரக்கூடும் என்று அஞ்சுகிறார்கள். அதிவேகமாக பரிசுத்தப் ப்யணம் நடக்கும் என்கிறார்கள் அதிகாரிகள். அங்கன்வாடி ஊழியர்களை கவனமாக காய்ச்சல் செய்தி கிடைக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. போலி டாக்டர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

பொன்னேரியிலும் இதே கதி தான். மருந்து சீட்டு இல்லாமல் வரும் நோயாளிகளுக்கு  தெய்வமே துணை.

இதற்கெல்லாம் நடுவில் ஒரு ஜோக். அமைச்சர் பார்வையிட வந்த போது மட்டும்  கொடுக்கப்பட்ட போர்வைகள், அவர் தலை மறைந்தவுடன் , பிடுங்கப்பட்டன!


© The Hindu

சித்திரத்துக்கு நன்றி:





























இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com