Saturday, August 24, 2013

நாமக்கல் கவிஞர்:அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24


அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24

Innamburan Innamburan Wed, Aug 24, 2011 at 1:34 AM

அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24
     உங்களுக்கு கருப்பையா பிள்ளையை தெரியுமோ? அம்மணியின் எட்டாவது குழந்தை. இது அம்மா ஆசையுடன் கூப்பிடும் பெயர். அவர் தான் நாமக்கல் கவிஞர். கவிஞர்களில் சிலரின் உரைநடை, கவிதை, அறிவுரை எல்லாம் எளிய நடையில், படோடோபமில்லாமல் இருக்கும் என்பதற்கு பாரதியார், கவிமணி, பாவேந்தன், நாமக்கல் கவிஞர் ஆகியோர் தக்க சான்றுகள். சிறுவயதில் நாமக்கல் கவிஞரின் ‘என் சரிதம்’ என்னை ஈர்த்ததின் காரணம் அதுவே. இயல்பான நடை என்னை கேட்டால், இந்த விஷயத்தில், அவரை முன்னால் வைப்பேன். அவரிடம் ராஜ விசுவாசமும், விடுதலை பற்றும், அவரது கவிதைகளும், ஓவியங்களும் ஒரு சேர இருப்பதைப் போல், முரண் யாதுமில்லாமல், தன்னிச்சையாக வளைய வருவதைக் கண்டேன்.  அக்டோபர்19, 1888 இல் பிறந்த திரு. வெ.ராமலிங்கம் பிள்ளை (நாமக்கல் கவிஞர்) அவர்களை ஆகஸ்ட், 24, 1972 அன்று இழந்தோம். காந்திஜி விதைத்த விதை என்று ராஜாஜி அவரை விமரசித்தது சரியே. சதா சர்வகாலமும் காந்திஸ்மரணை, இவருக்கு. இவருடைய காந்தி மலர் ஒரு நூலன்று. அது ஒரு வாடாத பூச்செண்டு. இது ஒன்று போதும் சமச்சீர்க்கல்வியை, படிப்படியாக அளிக்க.
     வாழ்க்கை விநோதமானது. தந்தை வெங்கடராமனோ காவல் துறை. தேசபக்திக்கான உரம் யாதுமில்லை. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், நல்லிசையும் செவிப்பழக்கம், நாடகமும் நடைப்பழக்கம் என்று இருந்த கவிஞரின் நண்பர் எஸ்.ஜி. கிட்டப்பாவின் ஏழுகட்டை சுருதி தமிழுலகம் அறிந்ததே. அவருக்கு பாட்டு எழுதப்போய், இவரையும் நாட்டுப்பற்று தொற்றிக்கொண்டது. நாகராஜ ஐயங்கார் என்பவரும் இவருடன் சேர, இருவரும் அரவிந்தர் போன்ற சான்றோர்களின் உரைகளை கேட்டு களத்தில் இறங்கினார்கள். நம் கவிஞரின் சொற்பொழிவுகளுக்கு கூட்டம் சேர்ந்தது. வாசாலகர் இவர் என்க.
     ஒரு உரையாடல்: செட்டி நாடு/காரைக்குடி: 
பாரதியார்: ‘கவி பாடுவீரோ? ஒன்று பாடும்.’
கவிஞர் (அவருக்கு நல்ல குரல் வளம்): "...தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்...’
பாரதியார், "பலே பாண்டியா! பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை. "தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்...' பலே, பலே இந்த ஓர் அடியே போதும்''.
     நாடு விடுதலை அடைந்தது 1947. சென்னை மாகாண ஆஸ்தான கவிஞர் 1949 இல் பிள்ளைவாள்.1956-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி நிர்வாக உறுப்பினரானார். 1956 முதல் தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். 1971-ஆம் ஆண்டு பாரத அரசு அவருக்கு "பத்மபூஷண்' விருது வழங்கிச் சிறப்பித்தது. ‘அவளும் அவனும்’ ஒரு இனிய காவியம். புதினங்கள் பல எழுதினார். அவரின் ‘மலைக்கள்ளன்’ திரைப்படமாக வலம் வந்தது. இவரை தமிழுலகத்துக்கு அறிமுகம் செய்த பெருமை, ‘தமிழ்ப்பண்ணை’ சின்ன அண்ணாமலையை சாரும். அவரும் அருமையான சொற்பொழிவாளர். கேட்டிருக்கிறேன்.
     மறக்கலாகாது, ஐயா. நாமக்கல் கவிஞர் வேதாரண்ய உப்பு சத்யாக்ரஹத்தில் கலந்து கொண்டு, சிறை சென்றார் என்பது பெரிய செய்தி அல்ல. உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலொன்றை அவர் இயற்ற, அது இன்றளவும் அஹிம்சையின் இனிய குழலோசையாக அமைந்ததே பெரிய செய்தி.க ேளும்:
’கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்’
     1387.jpg
     இன்று தமிழ், தமிழன், தமிழ்நாடு, தமிழகம், செந்தமிழ், தனித்தமிழ், செம்மொழி, என்று தோள் தட்டுகிறோம்; குரலெழுப்புகிறோம்; வாதங்களில் இறங்குகிறோம், படியில்லா கிணற்றில் சறுக்கியபடி.  
"தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடைய மொழியாகும்' 
என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை உதட்டசைத்து மட்டும் பாடுகிறோம். ஐயகோ! அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி! மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா! காலும் தொய்ந்தல்லவா போகிறது. திருந்துங்கள், ஐயா!
வணக்கத்துடன்,
இன்னம்பூரான்
24 08 2011


Geetha Sambasivam Wed, Aug 24, 2011 at 8:39 PM

அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி! மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா! காலும் தொய்ந்தல்லவா போகிறது. திருந்துங்கள், ஐயா!//

என்ன அற்புதமான சொல்லாடல்!  ஐயா,உங்களின் இந்த வரிகள் மனதைப்பிழிகிறது.  கேட்பவர் கேட்டால் நன்மை விளையும்.  விளையட்டும். அனைவரும் திருந்தப்பிரார்த்திப்போம்.  நாமக்கல் கவிஞர் குறித்த செய்திகளுக்கு நன்றி. பள்ளிப்பாடத்தில் படித்தது. 


2011/8/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24
   ஐயகோ! அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி! மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா! காலும் தொய்ந்தல்லவா போகிறது. திருந்துங்கள், ஐயா!
வணக்கத்துடன்,
இன்னம்பூரான்
24 08 2011

Thursday, August 22, 2013

சென்னை குறிப்புகள் ~5 ஐந்து நாள் வைபோகம்! வைபோகமே!


சென்னை குறிப்புகள் ~5 ஐந்து நாள் வைபோகம்! வைபோகமே!

Innamburan S.Soundararajan Wed, Aug 21, 2013 at 3:07 PM

Tuesday, August 20, 2013
சென்னை குறிப்புகள் ~5
ஐந்து நாள் வைபோகம்! வைபோகமே!

உங்களுக்கு பண்டாரவாடை வெற்றிலை கதை தெரியுமோ? கும்போணம் துளிர் வெற்றிலைக்கு உள்ள மவுசுக்கு உற்பத்திஸ்தானம் பண்டாரவாடையில் படரும் வெளிர்பச்சை வெற்றிலை கொடிகள். பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தின் திறன்மிக்க பணி, அதன் சாகுபடியில். மத நல்லிணக்கத்துக்கு வெற்றிலை ஒரு எடுத்துக்காட்டு. கோயில்களுக்கு அங்கிருந்து தானே வருகிறது. ஆனா ஒண்ணு. தொட்டாச்சுணுங்கி மாதிரி, கவனம் குறைந்தால், அழுகிவிடும். உடனே விற்றுவிடவேண்டும், சல்லிசு விலைக்கு. ஆனால், நாள் தோறும் அழுகிய வெற்றிலை தான் விற்க நேரிடும். அல்லது ஒரு நாள் அழுகலை அழிக்கவேண்டும். நிதி அமைச்சரையோ அல்லது திட்டக்கமிஷனையோ கேட்டால், தினந்தோறும் அழுகிய வெற்றிலையை விற்கச்சொல்லுவார்களோ, என்னமோ, ஆடிட்காரன் மீது பழியை போட்டு விட்டு!

இத்தனை அருமையான உவமையை முன்னிறுத்துவதற்குக்காரணம், என் தற்கால நிலைமை தான். நாள் தோறும் செந்தமிழேணியில் பேலன்சிங்க்! சூறாவளி பயணங்கள். நண்பர்களுடன் சந்திப்பு. ஓயாதக் கைச்செவி. காதோ மந்தம். அது தான் போகிறது என்றால் இணையம் கிட்டாது. கிட்டினாலும் எட்டாது. எட்டினால் மீட்டிங்கில். திருவேங்கடமணி மாதிரி அநேக நண்பர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த அழகில் அன்றாட நினைவுகள் மங்கிப் போய்விடுவதால், வாசகர்களிடம் உரிமை எடுத்துக்கொண்டு, முன்னும் பின்னுமாக எழுதுகிறேன். இல்லாவிடின், அவை மக்கிப்போய்விடக்கூடும். ஜூலை 7 அன்றே, இறங்கிய களைப்புத் தீராமல் சென்னை உலா வந்ததை (காரைக்குடிக்கு வந்து என்னை வாழ்த்திய கீதா சாம்பசிவம் தம்பதிகள் நோட்டுக.) எழுதி முடிக்கும் முன் ஆகஸ்ட் 16 வந்து விட்டது. ஆண்டவா?. அதான் இப்படி. 

ஆகஸ்ட் 13 அன்று இரவு, இன்னம்பூர்/காரைக்குடி விஜயம் முடிந்த பின் ( அது பிறகு வரும்.), மறுபடியும் தஞ்சை பெரிய கோயில், தாராசுரம், கங்கை கொண்டான் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்து, சிற்பங்களை கண்டு வியந்து, திருவண்ணாமலையில் தமிழ்ச்செல்வி குடும்பத்தினருடன் அளவளாவி விட்டு, இராத்தங்கல் கிரோம்பேட்டையில். 14 அன்று என் தந்தையின் திதி. அவருடைய ஞாபகம் பூரணமாக மனதில் இருக்க, அவருக்கு அஞ்சலி செலுத்தினோம், நானும் என் தம்பியும். அன்றே சாஸ்திரி நகர் பயணம்.

சாஸ்திரி நகரில் ஒரு அடுக்கு மாடி வாசிகள் வாரச்சாப்பாடு போட்டார்கள், இந்த ‘ஐந்து நாள் வைபோகத்தில்’. சுகுமார்-டொரதி என்ற தம்பதியுடன் வாசம். உடனிருந்த பெண்ணரசி எவாஞ்சலின். வெளியூரில் வசிக்கும் பாலீன் தினந்தோறும் மாலை கைபேசியில். அன்று இரவு அங்கு விருந்து. பிறகு, காலை, மதியம், மாலை இந்த மாடி வீடு அல்லது அந்த மாடி வீடு என்று விருந்து. ஆகஸ்ட் 18 அன்று வழியில் உண்ண டொரதி கொடுத்த சாண்ட்விச் வரை அங்கு தான் டேரா; விருந்தோம்பல் எல்லாம். அங்கிருந்த குடித்தனக்காரர்கள் யாவரும் என்னை உபசரித்தது ஒரு மென்மையான அனுபவம். அவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறையும், கனிவான அன்பும், என் ஆரோக்கியத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட கவனிப்பும் சொல்லில் அடங்கா. ஒரு வீடு பஞ்சாபி நண்பரின் வாசஸ்தலம். என்னிலும் முதியவரான அவருடைய மாமனாரும், அவரது சஹதர்மிணியும் உபசரித்தனர். மற்றொரு வீட்டில் ஒரு இளம்பெண்ணும், பெற்றோர்களும். கவனித்துப்போட்டதுமில்லாமல், உணவு சம்பந்தமான என் ஆசாபாசங்களை கணக்கில் எடுத்துக்கொண்டனர். மற்றொரு வீட்டில் இளந்தம்பதி, முதியவர்கள், விசால தள நேத்ரியான ஒரு ஸ்தீரி பிரஜை. சமத்து குழந்தை. அவளுடைய தங்கை, கைக்குழந்தை. அவர்கள் வைரமுத்துவின் நூல்களை எனக்கு படிக்கக்கொடுத்தனர்.

நான் விருந்தாளியாக இல்லை, டொரதி வீட்டில். வீட்டுக்கு ‘பெரிசாக’ இருந்தேன். அன்பும் கனிவும், அக்கறையும், கவனிப்பும் இயல்பாகவே அமைந்து விட்டது பூரணமாக. நாள் தோறும் ஹை-லைட்ஸ். காலை எட்டு மணிக்கு வேலைக்கும், கல்லூரிக்கும் அவர்கள் சென்று விடுவதால், எல்லாம் திட்டமிட்ட முன்னேற்பாடு. மாலை/இரவு மணிக்கணக்காக அளவளாவுதல். பாமரகீர்த்திகள் பல பாடப்பட்டன. கை பேசிகள் படம் எடுத்த வண்ணம். ஒரு நாள் மாலை என் மகளும், பேருக்கு தாதியாகவும், உள்ளபடி மற்றொரு மகளாக எங்களுக்கு இருந்த புஜம்மாவும் அவளுடைய மகளும், புது மாப்பிள்ளையும் எஞ்சினீயர் மகனும் வந்திருந்தார்கள். ‘ஆதி ஆந்திர திராவிட இனம்’ என்று சொல்லப்பட்டு, சமூகத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்ட புஜம்மாவின் குடும்பத்தின் தற்கால உன்னத நிலை எனக்கு அளித்த மகிழ்ச்சியை சொல்லி மாளாது. பல வருடங்கள் வரை சாத்தியமாகாத இந்த சந்திப்பு வஸந்தாவின் ஞாபகார்த்தமாக அமைந்தது. 

டொரதி குடும்பத்தில் நான் ‘புதிய தாத்தா’ என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஒரு மனநிறைவு தரும் நிகழ்வு. அங்கிருந்த ஐந்து நாட்களும், வினாடி தோறும், குடும்பத்தில் ‘பெரியவராக’ ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஒரு நினைவைக் கிளறியது. கேரளத்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்க சான்றோன், என் சிறு வயதில் எனக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்ந்தார். இத்தனைக்கும் அந்த காலகட்டம் சோகமயமானது. அவருடைய மூத்த மகனும், என் கடைசி தம்பியும் டைஃபாயிடில் இறந்த காலகட்டம். ஐம்பது வருடங்களுக்கு பின் அவருடைய கடைசி மகன் டில்லியில் என்னை சந்தித்தார். அப்போது அவர் சொன்னது, ‘நீங்கள் தான் இனி எங்கள் பெரிய குடும்பத்தின் மூத்தமகன்’ என்று எங்கள் தந்தை அடிக்கடி சொல்லுவார்.’. அந்த இனிய சம்பவமும் சரி, பாலீனுக்கும், எவாஞ்சலினுக்கும் நான், ‘the Other Thaathaa’ ஆனதும் எனக்கு பரமபிதாவும், கர்த்தரும் அளித்த வரன்கள் என்று சொன்னால் மிகையாகாது.  ஒரு குறை. ஞாயிற்றுக்கிழமை அவர்களுடன் மாதாகோயிலுக்குப் போவதாக திட்டம். உடனுக்குடன் அமெரிக்கா போய் சேர்ந்த பெண்ணுடன் பேச, அப்போது தான் நேரம் அமைந்தது. ஆகவே, மாதாகோயிலுக்கு போக இயலவில்லை.
பத்துப்பக்கம் எழுதுவதை ஒரு சித்திரம் சொல்லி விடும். அத்தகைய சித்திரங்களை எடுத்தது, டொரதி. குடும்பமே கலைக்குடும்பம். அவர்களுடன் ‘சிசு தரிசனம்’ பற்றியும், ராகத்துடன் தோத்திரபாடல்கள் இயற்றிய மரியாதைக்குரிய வேதநாயகம் சாஸ்திரிகளை பற்றியும் சம்பாஷணை நடந்தது.  நான் பயணம் செய்ய கிளம்பும்போது, நாங்கள் நால்வரும் கைகோத்து பிரார்த்தனை செய்தது, மிகவும் உணர்ச்சிகரமான நிகழ்வு:
ஆண்டவனின் பரிபூர்ணமான அரவணைப்பு அந்த குடும்பத்திற்கு என்றென்றும் கிட்டவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
இன்னம்பூரான்
14 ~ 18 ஆகஸ்ட் 2013/ 20 ஆகஸ்ட் 2013
சித்திரங்கள்: டொரதி உபயம்.

5 attachments
IMG01380-20130818-1714.jpg
436K
IMG01387-20130818-1719.jpg
463K
IMG01389-20130818-1738.jpg
437K
IMG01363-20130815-1805.jpg
431K
IMG01362-20130815-1752.jpg
491K

Dorathy 
Dear Uncle / The ‘Other Thatha’ !

I cant say how we were blessed to have you with us – especially when we felt you are like my dad .. The richness of your thought and the kind of time we could spend with you was very emotional for us.  We wish you good health and we must catch up as often as we can...  We are honoured to be in your ‘blog’...

Lots of love and affection; I am really touched.   

Dorathy

PS: Tell Suja and Jagan that you are a ‘shared father’.....

From: Innamburan S.Soundararajan [mailto:innamburan@gmail.com]
Sent: Wednesday, August 21, 2013 3:08 PM
To: mintamil; vallamai@googlegroups.com
Subject: 
சென்னை குறிப்புகள் ~5 ஐந்து நாள் வைபோகம்வைபோகமே!


Geetha Sambasivam Wed, Aug 21, 2013 at 5:09 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
// தாதியாகவும், உள்ளபடி மற்றொரு மகளாக எங்களுக்கு இருந்த புஜம்மாவும் அவளுடைய மகளும், புது மாப்பிள்ளையும் எஞ்சினீயர் மகனும் வந்திருந்தார்கள். ‘ஆதி ஆந்திர திராவிட இனம்’ என்று சொல்லப்பட்டு, சமூகத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்ட புஜம்மாவின் குடும்பத்தின் தற்கால உன்னத நிலை எனக்கு அளித்த மகிழ்ச்சியை சொல்லி மாளாது. பல வருடங்கள் வரை சாத்தியமாகாத இந்த சந்திப்பு வஸந்தாவின் ஞாபகார்த்தமாக அமைந்தது. //

இவங்களுக்குத் தானே நீங்க உங்க மனைவியின் கடைசி வேண்டுகோளான பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றியது? வாழ்க! வளர்க!  நினைவு வைச்சுப் பார்க்க வந்திருக்காங்களே.

திருவண்ணாமலையில் தமிழ்ச் செல்வியைப் பார்த்தேன் என்பது உண்மையில் எனக்கு வியப்பு.  தமிழ்ச்செல்வி எப்படி இருக்காங்க?  அவங்களை நினைக்காத நாளே இல்லை.  இப்போ அதிகம் இணையத்தில் பார்க்க முடியலை.  தெரிஞ்சால் கேட்டதாகச் சொல்லச் சொல்லி இருப்பேன். இந்த மடலைப் பார்ப்பாங்கனு நினைக்கிறேன்.

அருமையான  அற்புதமான அனுபவங்கள். அனைவரையும் அனுசரித்துக் கொண்டு காலத்துக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டு நடப்பதாலேயே இது சாத்தியம் ஆகிறது. வணங்கிக்கறேன்.

2

Geetha Sambasivam Wed, Aug 21, 2013 at 5:10 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
படங்களைத் தனியாகத் தான் திறந்து பார்க்க முடிந்தது.  இங்கே வரவில்லை.  புஜம்மாவையும் பார்த்தேன். 
[Quoted text hidden]

கி.காளைராசன் Wed, Aug 21, 2013 at 7:20 PM

Reply-To: vallamai@googlegroups.com
To: mintamil
Cc: "vallamai@googlegroups.com"
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2013/8/21 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
நான் விருந்தாளியாக இல்லை, டொரதி வீட்டில். வீட்டுக்கு ‘பெரிசாக’ இருந்தேன். அன்பும் கனிவும், அக்கறையும், கவனிப்பும் இயல்பாகவே அமைந்து விட்டது பூரணமாக. நாள் தோறும் ஹை-லைட்ஸ். காலை எட்டு மணிக்கு வேலைக்கும், கல்லூரிக்கும் அவர்கள் சென்று விடுவதால், எல்லாம் திட்டமிட்ட முன்னேற்பாடு. மாலை/இரவு மணிக்கணக்காக அளவளாவுதல். பாமரகீர்த்திகள் பல பாடப்பட்டன.

சூரியஒளியும், தண்ணீரும்தான் உலகில் உள்ள எல்லாப்பொருட்களுடனும் ஒன்றாகக் கலந்து விடுமாம்.
ஐயா, தாங்கள் சூரியஒளியா? தண்ணீரா?

அன்பன்
கி.காளைராசன்



Monday, August 19, 2013

சென்னை குறிப்புகள் ~3 டைம் பாஸ் எக்ஸ்பெரஸ்...!




சென்னை குறிப்புகள் ~3
டைம் பாஸ் எக்ஸ்பெரஸ்...!




Monday, August 19, 2013
சென்னை குறிப்புகள் ~3
டைம் பாஸ் எக்ஸ்பெரஸ்...!
Inline image 2

யான் செய்த முற்பயன் விளைவாக, நமது வடிவேலரை (வேறு யாரு? வ.வெ. தான்.) போலவே அஞ்ஞாத வாசம் சென்னை மாநகரத்தில், நான்கு நாட்கள்.  அதனால், நேற்று புதுச்சேரிக்குப் பயணம், முல்லைப்பாட்டையும், கபிலரையும் நாடி. அருந்தவம் செய்ததின் நற்பயன், முன்கூட்டி பயணச்சீட்டு கெழுமை நண்பரொருவர் மூலமாக பதிவு செய்த அசகாய வருமுன் காப்போன் செயல். சாஸ்திரி நகரிலிருந்து ஒரு நண்பரின் காரில், மற்றொரு நண்பரின் உறுதுணையோடு, மாலை 6.00 மணிக்கு, அதாவது அரை மணி நேரம் முன்னதாகவே ஆஜராக வேண்டும் என்ற கட்டளை பயணச்சீட்டில் கொட்டை கொட்டையாக எழுதப்பட்டிருந்ததால், ஜாமான்கள் ஐந்து இருந்ததால், 5.38க்கே ஆஜரானோம். ஊழ்வினை உறுத்தூஊம் அல்லவா. திருவாரூர் தேர் போல ஆடி அசைந்து வந்த ‘பர்தா’ எக்ஸ்பெரஸ், குறித்த இடத்தை விட்டுத் தள்ளியே நின்றது. முன் பின் தெரியாத என்னை, ‘அஸால்ட்டாக’ பயணச்சீட்டு வகையறா கேட்காமல், ‘டுர்ரெ’ன்று கிளம்பிவிட்டது. உதவியாளர் ‘கொச்சினா?’ என்று வினவினார். நான் திக்கிட்டுப்போனேன். ‘பரவாயில்லை. முதலில் புதுச்சேரி’ என்று ஆசுவாசப்படுத்தினார். ஏன் போகும் ஊர் பேர் போடவில்லை என்றேன், அப்பாவியாக. என்னை பிள்ளைப்பூச்சியை போல் திரணமாக மதித்த ஓட்டுனர், ‘அதெல்லாம் போடக்கூடாது. நாங்கள் ரூட் பஸ் இல்லை, தினந்தோறும் ரூட் பஸ்ஸாக பயணித்தாலும்.’ என்றார். உடனே, தனக்கு ‘ஆமாம்! ஆமாம்! போட்டுக்கொண்டார். தமிழ் நாட்டில் சட்டம் செல்லாக்காசு என்று சொல்லாமல் சொன்னார்.  அந்த நிமிடம் முதல், என்னால் தடைப்பட்ட ‘கடலை போடலை’ ஊர்தி ஓட்டுனரும், அவருடைய இரு உதவியாளர்களும் இடை விடாமல் புதுச்சேரி வரை ‘லொட லொட’ என்றும், ‘சள சள’ வென்றும் தொடர்ந்தனர். இருவருக்கும் தெரிந்த சமாச்சாரங்களைச் சொல்லி சொல்லி, ஆயிரம் வாலா வெடி போல் சிரித்து மகிழ்ந்தனர். எனக்கோ அஸ்தியில் ஜன்னி. ஃப்ரண்ட் சீட் ஆச்சே!. பெல்ட் இல்லை. ஒரு பாடாக புதுச்சேரிக்கு தாமதமாக வந்து சேர்ந்தோம். பஸ் ஸ்டேண்டுக்கு செல்லாமல், வழியில், அவர்களின் ‘ஆபீஸ்’ என்ற இடத்துக்கு முன்னால் நின்றது பஸ்ஸு. ஏன் இப்படி என்றேன். மறுபடியும் என்னை பிள்ளைப்பூச்சியை போல் திரணமாகவும் விநோதமாகவும் ஓட்டுனர், ‘அதெல்லாம் போடக்கூடாது. நாங்கள் ரூட் பஸ் இல்லை, தினந்தோறும் ரூட் பஸ்ஸாக பயணித்தாலும்.’ என்றார். உடனே, மறுபடியும் தனக்கு ‘ஆமாம்! ஆமாம்! போட்டுக்கொண்டார். மறுபடியும் தமிழ் நாட்டில் சட்டம் செல்லாக்காசு என்று சொல்லாமல் சொன்னார். புதுச்சேரியிலும் தான் என்று நினைத்துக்கொண்டேன். இன்னும் சொல்ல எத்தனையோ இருக்கிறது. ‘பர்தா’ எக்ஸ்பெரஸ்’ ஒரு அச்சுப்பிழை.
வர்ரேன்....
இன்னம்பூரான்
18/19. 08 2013

Saturday, August 17, 2013

சென்னை குறிப்புகள் ~2 அதே நாற்காலி!




சென்னை குறிப்புகள் ~2 அதே நாற்காலி!

Innamburan S.Soundararajan Sat, Aug 17, 2013 at 7:02 PM




Saturday, August 16, 2013
சென்னை குறிப்புகள் ~2
அதே நாற்காலி!
=Inline image 1

பல நாள்....! நான் சொல்லவந்தது வேறே! பல வருடங்கள் என்று தான் சொல்ல வேண்டும். திரு. நரசய்யா அவர்களை, நாங்கள் இருவரும் கலந்துரையாடிய ஒரு நிகழ்வுக்குப் பிறகு, அவரது இல்லத்தில் இறக்கி விட்டு விட்டு, ‘நாளை வருகிறேன்’ என்று அவரிடம் சொல்லி விட்டு, இருபது வருடங்கள் கழித்து இன்று தான் போய் சந்தித்தேன். ஏற்பாடு ஒரு மாதம் முன்னால். போனஸ்: கொழுக்கட்டை! ஆம். வரலக்ஷ்மி நோன்பு அல்லவா. அடித்தது யோகம். அவருடைய குடும்பத்தினரின் விருந்தோம்பலை, மனதாலும், உடலாலும், சிந்தனையாலும், நாவினாலும், செவியினாலும் சுவைத்தேன். சகபாடி, ‘அலெக்ஸாண்டர் புகழ்’ நண்பர். திரு. சம்பத். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அளவளாவினோம், ஒரு நிமிடம் கூட தொய்வில்லாமல். எது எது பற்றி நாங்கள் பேசிக்கொள்ளவில்லை என்ற பட்டிமன்றத்தை என் மனதின் உள்ளுறையாக நடத்திப்பார்த்தேன். ஒரு சமாச்சாரமும் அதில் சிக்க வில்லை. எதை எதை பற்றி அலசித்தீர்த்தோம் என்று ஆலோசித்தேன். சிக்கியதை எழுத ஒரு அத்தியாயம் வேண்டும். எனவே, அவற்றை தொகுத்து வைத்து, அவர் எதிர்பாராத காலகட்டங்களில் அவிழ்த்து விடுவதாக உத்தேசம். எதற்கும் சில வார்த்தைகள். புறநானூறும், கலித்தொகையும் உலா வந்தன. சிட்டி அவர்கள் பூரணமாக மருமானை வாயிலாக வைத்துக்கொண்டு கலங்கரை விளக்காக ஒளி வீசினார். இந்திரா பார்த்தசாரதி, விகடன் ‘பாலு’(அவருடைய படப்பை தோட்டத்து கிளிகள் இதழாசிரியர் உரிமையை நிலை நாட்ட சிறை சென்ற விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்ரமணியம் அவர்களை அப்படித்தான் பிரியத்துடன் அழைக்கும்.), திருமதி கிருத்திகா அவர்கள், தருமமிகு சென்னை, ஆகஸ்ட் 18 அன்று, பழனியப்பா பிரசுரம் புகழ் திரு. செல்லப்பா அவர்கள் தலைமையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி கழகத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வு, அதை நழுவவிட்டு புதுச்சேரி சென்று விடும் எனக்கு ஒரு மென்மையான டிக்-ஆஃப், ஏற்கனவே நடந்த தொன்மை ஆராய்ச்ச்சிக்கு இருந்த வரவேற்பு, திரு.கோபால் காந்தி, மற்றும் பல பிரபலங்கள் வலம் வந்தனர். இன்றைய சமுதாய நிலை, அரசல் புரசலான அரசியல், தமிழகத்தின் ‘புறம்’ எல்லாம் தப்பவில்லை. வீடு திரும்பும் பார்த்தால், என் எடை கூடியிருந்தது. திரு. நரசய்யா அவர்களின் அன்பளிப்பாக, என் மகவுகளுக்கும், எனக்கும் நல்வரவாகிய MADRAS: JOURNEY 1639,Lettered Dialogue, A slim Collection of his short stories, translated into English, QUEEN OF THE CORAMANDEL ஆகிய நூல்களின் சுமை இனிமையானது.
(தொடரும்)

இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி: http://media.newindianexpress.com/article1468011.ece/alternates/w460/K-R-A-Narasiah.jpg

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, August 12, 2013

பல அலுவல்களும், இடைவிடாத பிரயாணமும் இருப்பதால், பதிவுகள் தாமதம் ஆகின்றன. பொறுத்தாளவும்.
அன்புடன், இன்னம்பூரான்
12 08 2013

Friday, August 9, 2013

விஷ்ணு நாரயண் பட்கண்டே,அன்றொரு நாள்: ஆகஸ்ட் 10




அன்றொரு நாள்: ஆகஸ்ட் 10

Innamburan Innamburan Wed, Aug 10, 2011 at 1:37 AM


அன்றொரு நாள்: ஆகஸ்ட் 10

கலை குலைந்து கலைந்து போவதற்கு காரணம் கலைஞர்களில் சிலர் அதை சொத்துரிமையாக பாத்தியதை கொண்டாடுவதே. முடிச்சுப்போட்டு வைத்துக்கொள்வதே. நான் தான் சாவேரி பாடுவேன் என்று அடம் பிடிக்கலாமோ என்று ஒரு இசைவிழாவுக்கு தலைமை தாங்க வந்திருந்த ஜஸ்டிஸ் எம்.அனந்தநாராயணன் ஐ.சி.எஸ் அவர்களிடம் கேட்டேன். அவர் இசை மேதை. உமக்கு பிடித்த ராகம் என்னவென்றார். கதனகுதூகலம் என்றேன். அதன் அருமையை அரைமணி நேரம் பாராட்டினார். எதற்கு சொல்ல வரேன் என்றால், எந்த துறையில் மனம் வைத்தாலும் அதில் உன்னத பதம் அடைவதில் சட்டமேதைகள் வெற்றி அடைவதை அடிக்கடி காண்கிறோம். 
ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஏகாதிபத்திய கலைஞர்கள் கையில், வானரத்தின் கையில் சிக்கிய பூமாலையை போல, ஹிந்துஸ்தானி சங்கீதம் கசங்கிக் கிடந்தது. ராஜமரியாதை வேறு கிடைத்ததா! அகந்தை அகற்றாத பாடகர்கள், சிஷ்யகோடிகளைக் கூட வளரவிடவில்லை. இசையே அசைந்து வீழ்ந்தது. அதை புனருத்தாரணம் செய்து உய்விக்க, விஷ்ணுவே அவதாரம் செய்த மாதிரி, 1860 வருடம் கோகுலாஷ்டமி அன்று ஜனித்தார், விஷ்ணு நாரயண் பட்கண்டே. அனவரதமும் அந்த இசைப்பணியில் தன்னை இணைத்துக்கொண்ட இந்த பிரபல வழக்கறிஞர் எதிர்கொண்ட அலைச்சலும், ஆதங்கங்களும் ,இடைஞ்சலும், ஈட்டிநுனி மோதல்களும், உரசலும், ஊரறிஞ்ச நெரிசலும், எத்து வேலைகளும், ஏமாற்றங்களும் கணக்கிலடங்கா. எனினும், அவருடைய அபூர்வமான இசை ஞானமும், புத்திசாலித்தனமும், உழைப்பும், ஆளுமையும், வசீகரமும் அவருக்கு உறுதுணையாயின. 
இவரது தொண்டு இணையற்றது. வரலாற்றுணர்வை கற்றுக்கொடுத்தார். இசையின் இலக்கணத்தையும், கவின் ரசிகத்தன்மையையும் இணைத்தருளினார். இசை கருவூலமொன்றை நிறுவினார். ஒளிக்கப்பட்டவையெல்லாம் வெளியில் கொணர்ந்தார். அவரது பணியின் விவரணை எந்த துறைக்கும் அறிவுரை எனலாம். முதலில் அவர் தன்னை பாடகனாக தயார் செய்து கொண்டார், குருகுலவாசம் செய்து, அன்னை மடியிலிருந்து தொடங்கி. அன்னை இனியகுரலும், தந்தை கூரிய செவியும் அருளினர். அடுத்த படி பிரபல வக்கீலாகி செல்வம் குவித்தார், இசைத்தொண்டுக்காக. அதன் பின்னர் இசை தேடும் யாத்திரை -காஷ்மீரிலிருந்து, ராமேஸ்வரம் வரை, ஸூரத் திலிருந்து பூரி வரை. இசை நூலகங்களே குறி. தானறிந்த இசையை பகிர்ந்துகொள்ள விரும்பாத பாடகர்களை, மாணிக்கவாசகர் நரியை பரியாக்கியது போல, இனிய நண்பர்களாக்கினார். அவர்களும் கூட்டாளிகள் ஆனார்கள். 
அடுத்த கட்டம், பிரசுரக்கட்டம். பண்டித்ஜி (அது தான் அவரை எல்லோரும் விளிக்கும் முறை.) ஒரு மகத்தான சேவை செய்தார். அவர் சேகரித்த கருவூலம் பெரியது. அவற்றிலிருந்து, ‘அபிநவராகமஞ்சரி’ ‘அபிநவதாளமஞ்சரி’, ‘லக்ஷியசங்கீதம்’, ‘ஹிந்துஸ்தானி சங்கீத் பத்ததி’, ‘கிரந்த சங்கீதம்’, ‘பாவிக சங்கீதம்’,  ‘ஸ்வரமாலிகா’, கீத்மாலிகா’, ‘க்ராமிக்’ வரிசைகளில் தொகுப்புக்கள், சங்கீதத்தின் வரலாறு, சங்கீதத்தின் தத்துவங்கள் போன்ற வேறெங்கும் காணக்கிடைக்காத பிரசுரங்கள் வந்த வண்ணம். அதுவும், விளம்பரம் நாடாத வகையில் - விஷ்ணு சர்மா, சதுர்பண்டிட்’ என்ற புனைப்பெயர்களில். எத்தனை ராகங்களை பற்றிய கிரந்தங்கள் -250 என்று ஒரு கணக்கு. அவரே சொல்கிறார், ‘இசையின் மீது காதல் கொண்ட என் சகோதர-சகோதரிகளுக்கு, இசையின் இன்றைய நிலைமையை எடுத்துச்சொல்லும் பணியிது’ என்று.
அடுத்தகட்டம் ‘வெள்ளியெழுந்தாற் போல்’. சிஷ்யகோடிகள் குவிந்தனர் - பரோடா, க்வாலியர், ராம்பூர,தரம்பூர், அக்பர்பூர் போன்றை இசைதிக்கு, திசைகளிலிருந்து. இவரும் சங்கீதயாத்ரை தொடங்கினார். இவருடைய பாற்கடலில் உதித்தவை தான்,
பரோடா, க்வாலியர், லக்னெள, பம்பாய், நாக்பூர் இசைக்கல்லூரிகள். அதன் பின்னர் இசைவிழாக்கள், பரோடாவிலும், லக்னெளவிலும், வாராணசியிலும், டில்லியிலும் கூட.
ஆகஸ்ட் 10,  பண்டித்ஜியின் ஜன்மதினம் ~கோகுலாஷ்டமி. செப்டம்பர் 19, 1936 அவர்  அமரரான தினம் ~ கணேச சதுர்த்தி. கணேச சதுர்த்தி. அன்று, இன்றளவும் இவரை பாராட்டி இசைவிழா எடுக்கப்படுகிறது. மூன்று விஷயங்கள் ~ பண்டித்ஜி தென்னிந்தியாவில் சஞ்சாரம் செய்து இசைப்பணி செய்தார். அவருடைய திட்டமிடும் திறனுக்கு ஒரு சான்று: அஹமதாபாத் கலெக்டர் க்ளெமெண்ட் ஹிந்துஸ்தானி இசைக்கு மேற்கத்திய சங்கேதங்கள் வகுக்கத் தொடங்கினார். பண்டித்ஜிக்கு அதில் சம்மதமில்லை. ஆனால், கலெக்டரின் அதிகாரபலம் கோலோச்சியது. விஷ்ணு திகம்பர் என்ற இசைமேதைக்கும் இவருக்கும் ஒரு விதத்தில் ஏழாம் பொருத்தம். எனினும் அவரை தன் வழி கொணர்ந்து, க்ளெமெண்டை வாபஸ் வாங்கச்செய்தார். மூன்றாவதாக,  9 ஆகஸ்ட் 2011ல் தமிழுலகில் எழுந்த ஒரு வினாவுக்கு அன்றே விடை அளித்தார்! 
“...இசை பொருட்டு எதை கூறினாலும், இயன்றவரை உன்னுடைய தாய்மொழியில் உரைக்கவும்...”
இன்னம்பூரான்
pastedGraphic.pdf


10 08 2011
உசாத்துணை

Geetha Sambasivam Thu, Aug 11, 2011 at 1:33 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
தெரியாத செய்தி.  இந்த இசைமேதையின் பெயரை இன்றே அறிந்தேன். பகிர்வுக்கு நன்றி. ஒரு வாரமாய்த் தொடர்ந்த மின் தடை.  சில மடல்களே படிக்க, பார்க்க முடிகிறது. 
2011/8/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: ஆகஸ்ட் 10

இன்னம்பூரான்
pastedGraphic.pdf


10 08 2011
உசாத்துணை



Innamburan Innamburan Thu, Aug 11, 2011 at 1:37 PM
To: mintamil@googlegroups.com

நன்றி, உங்கள் கருத்துக்காகக் காத்திருந்தேன். எனக்கும் நிறைவு தந்த இழை, இது.

 வணக்கம்.

இன்னம்பூரான்


Sunday, August 4, 2013

சென்னை குறிப்புகள் ~1



சென்னை குறிப்புகள் ~1
Inline image 1

நேற்றுப்போல் இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாதம், கிட்டகிடுகிடுவென்று ஓடி விட்டது. ஜூலை ஆறு அன்று ஹீத்ரோ அடையும் போது சில வயோதிக பிரச்னைகள், நீரழிவு நோயினால். அதனால் தள்ளு வண்டி. தள்ளியது ஒரு குஜராத்திப்பெண். திறனுடன் இயங்கிய அந்த யுவதி டிப்ஸ் பெற்று கொள்ள மறுத்து விட்டாள். கொஞ்சம் வற்புறுத்தி கொடுக்க வேண்டியாகி விட்டது. இது வரை சென்னை அனுபவம், அந்த வசதிகள் பேச்சுடன் சரி. எழுதப்பட்டதை நீரில் எழுதியதாக வைத்துக்கொள்ளலாம். ஆனால், தேவை குறைந்து விட்டபோதிலும், வண்டி ஆஜர். வற்புறுத்தி ஏற வைத்தார்கள், நான் தேவையல்ல என்று செய்தி அனுப்பியிருந்த போதிலும். அந்த வேலையில் இருக்கும் இளைஞர்களின் சீருடை அழுக்கு; வள வள பேச்சு அதிகம். தன்னிச்சைப்படி என்னை பரிமாற்றம் செய்து கொண்டார்கள். வரும்போதே அவர் ஒரு பவுனுக்கு குறைந்து டிப்ஸ் கொடுக்கலாகாது என்று சபதமேயிட்டிருந்தார். ஆனால், டாக்ஸி கம்பேனி டாலரோ/பவுனோ வாங்க மறுத்து அண்ணா நகர் செல்ல ரூபாய் 600/- கேட்டார்கள். நல்ல வேளை, கிளம்பும் போது என் பையர் சில இந்திய ரூபாய் நோட்டுகள் கொடுத்திருந்ததால், பிழைத்தேன். டிரைவர் நாலாவது மாடி வரை ஜாமான்களை கொண்டு வந்து உதவியதால் கொடுத்த டிப்ஸை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். வழியில் கார்கள் பூம் பூம். இருசக்கராதிபதிகள் கன்னா பின்னா பரபரப்பு. நடை பயணிகள், காலை ஆறு ஆகியும் காணக்கிடைக்கவில்லை. எங்கெங்கும் குப்பை தரிசனம். மெட்ரோ போடுவதால் வழி நெடுக வழி இல்லை. ஹிந்து இதழ் கரடியாக கத்தினாலும், நடை பாதைகள் அண்ணா நகரிலேயே தென்படவில்லை. குண்டும் குழியும் பாலை திணையை நினைவுறுத்தியன.  இறங்கியதும் கிடைத்தது...
(தொடரும்)

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk


http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

சித்திரத்துக்கு நன்றி: http://puthiyathalaimurai.tv/wp-content/uploads/2013/07/rain-sting.png

Monday, July 29, 2013

இன்ஸுலின்! அன்றொரு நாள்: ஜூலை 27:II




அன்றொரு நாள்: ஜூலை 27:II
Innamburan Innamburan Wed, Jul 27, 2011 at 8:55 PM

அன்றொரு நாள்: ஜூலை 27:II
[Image Credit: http://upload.wikimedia.org/wikipedia/commons/5/57/Human-insulin-hexamer-3D-ribbons.png
எடுத்த எடுப்பிலேயே, ஒத்துக்கொள்கிறேன். என்ன தான் கை வலித்தாலும், எழுதுவதை நிறுத்தமுடியவில்லை. படிக்க நேரம் கிடைக்கவில்லை; நாய்குட்டி விளையாடணும் என்று அடம் பிடிக்கிறான்; நடை பயிலுவது குறைந்து போகிறது, தன்னார்வப்பணியில் துண்டு விழுகிறது என்றெல்லாம் குறை பட்டுக்கொண்டிருந்தாலும், கைகள் இரண்டும் தட்டச்சு செய்யும் பலகைக்கு விரைகின்றன.
அது சரி. விஷயம் என்ன? ஒரு நன்றிக்கடன். கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஒரு நாள் சுகவீனம். அடி சறுக்கின களிறு போல் கவிழ்ந்து கிடந்தேன். போகிற போக்கில், சில நாட்களில் இரங்கற்பா பாடிடுவார்களோ என்ற ஐயமும் எழுந்தது. பிற்காலம் ஒரு இமிடேஷன் இரங்கற்பா பாடப்பட்டது வேறு விஷயம். திசை மாற்றாதே!திசை மாற்றாதே! என்று ஹெச்சரிக்கா கேட்கிறது. அது சரி. விஷயம் என்ன? தருமமிகு சென்னை பெரிய டாக்டருக்கு நேரமின்மையால், கொடுத்த காசுக்குக் கூட அவர் கவனிக்காததால், நிலைமை முற்றிப்போய், ஒரு மாதிரியான துறவறம் பூண்டு, பையனுடைய ரக்ஷணைக்கு வரும்படியாச்சு, சென்னையோ சென்னைக்கு டாட்டா சொல்லி விட்டு! 
இங்கோ டாக்டர்களும், ஆசுபத்திரிகளும் கையாளும் முதல் சிகிச்சை: க்யூ! இருந்தும், நிஜமாகவே ஒரு பெரிய டாக்டர் ( ஃப்ரெண்ட் என்பது வேறு: சிகிச்சைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.) நான் எடுத்துக்கொள்ளும் இன்ஸுலின் ஊசி திட்டத்தை புரட்சிகரமாக மாற்றினார். சில நாட்கள் முன்னால் ஒரு ரிவியூ. மிலிட்டரிக்காரன் மெடல் குத்திக்கிறமாதிரி, எனக்கு சுகவீன மெடல்கள் ஐந்து; எல்லாமே பரம வீர் சக்ரா தரம்! அந்த பிரச்னைகள் யாவற்றிலும், நல்ல முன்னேற்றம், சிகிச்சையில். மற்ற மருந்துகளை குறைந்து விட்டார்கள். தேங்க் யூ,, ஸர் ஃப்ரெட்ரிக் பாண்டிங்க். 
இன்றைய தினம் ஜூலை 27, 1921 அன்று நடந்த அதிசயம் (இன்ஸுலின் கண்டு பிடிப்பு) அவருடைய கைங்கர்யம். என் மாதிரி கோடிக்கணக்கான மக்களை காப்பாற்றிய புண்யம் உமது. மஹாவிஷ்ணு உம்மை வைகுண்டத்தில் உச்சஸ்தானத்தில் வைத்திருப்பார், இன்ஸுலீன் சிம்மாசனே!
முக்கியமான பாயிண்ட் இது தான். இந்த டயபெட்டீஸ், புற்றுநோய், சுற்றுபுற சூழல், விண்மீன்கள், ஜலதரங்கம்: எதை எடுத்தாலும், பொறுப்புடன் நம்பகத்தனமான செய்திகளை தரலாம். ஆரோக்கியமாக அளவளாலாம். பலர் அளிக்கும் அறிவுரைகள் உபயோகமாக இருக்கலாம். சில பிரச்னைகள்: தினம் எழுத இயலாது; அரட்டைக்கும், தர்க்கத்துக்கும், திசை திருப்பவும், தனக்குத்தானே விதித்துக்கொள்ளும் தடை வேண்டும். பரீக்ஷார்த்தமாக, உலகத்தையே ஆட்டிப்படைக்கும் நீரழிவு நோயை பற்றி, உண்மைகளும், சீரான சிகிச்சையும் பற்றி அறியலாம். முதற்கண்ணாக, நான் கனவு காணும் இந்த இழைக்கு என்ன பெயர் வைக்கலாம்? மற்ற கருத்துக்கள் யாவை? அவசரமில்லை. நிதானமாக, ஆக்கபூர்வமாக, விருப்பமிருந்தால்........
இப்போதைக்கு ஐயா படம், நன்றியுடன்,
இன்னம்பூரான்
27 07 2011

Geetha Sambasivam Wed, Jul 27, 2011 at 9:03 PM


சீக்கிரம் எழுதுங்க, காத்திருக்கோம், இவ்வளவு பிரச்னைகளுக்கும் உடல் நலக்கேட்டுக்கும் இடையில் நீங்க எழுதுவது எனக்கு இன்னும் அதிகமான ஊக்கத்தைக் கொடுக்கிறது.
2011/7/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: ஜூலை 27:II


-

கி.காளைராசன் Fri, Jul 29, 2011 at 5:42 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
"நான் கனவு காணும் இந்த இழைக்கு என்ன பெயர் வைக்கலாம்?"நிதர்சனம்?
"இ"தர்சனம்,

அன்பன்

கி.கா​ளைராசன்

Saturday, July 27, 2013

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை:அன்றொரு நாள்: ஜூலை 27


அன்றொரு நாள்ஜூலை 27

     I. மஹாகவி பாரதியார் மடையின் கதவு. கரை புரண்டு கட்டுக்கடங்காமல் பாய்ந்தோடும் பெரு வெள்ளம், மடை திறந்த வினாடியே. பாவேந்தர் கோட்டைக் கதவு. படை வகுத்து விரைந்தோடி வரும் சொல்லின் அணிகள். நாமக்கல் கவிஞர் நகர் வாயில். நகரா ‘கத்தியின்றி, ரத்தமின்றி...’ என்று ஒலிக்கிறது.  கவிமணி சாளரமாயிறு. ஆசிய ஜோதி ஒளி விசுகிறது. சாக்யமுனியின் துறவு பற்றிய ஆங்கில ஆன்மீக கவிதை (Sir Edwin Arnold”s The Light of Asia:1879) ஒன்றை தமிழ்க்கவிதையாக்கமாக ஒரு சாளரம். ஒப்பில்லா உமர்காயாம் கவிதைகள் கொஞ்சும் தமிழிலொரு சாளரம். ‘மருமக்கள்வழி மான்மியம்’என்ற வரலாற்று சாளரமொண்று. ‘கதர் பிறந்த கதை’ ஒரு காந்தி ஜன்னல். ‘மலரும் மலையும்’ முன்னதாகவே திறக்கப்பட்ட (1938) திட்டி வாயில் ஜன்னல். பக்தியென்றொரு சாளரம், இலக்கியமென்றொரு ஜன்னலும், வரலாற்று கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள். 1922லேயெ தொடங்கி விட்ட ஆய்வுகளின் முதல் ஜன்னல்: 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரை. ஜன்னல்கள் எத்தனையடி பாப்பா! 
     சிரிக்க வைக்கவும் மறக்கவில்லை, கவிமணி அவர்கள், ஜன்னலின் இரண்டு கம்பிகளை லேசாக வளைத்து, நகர்த்தி விட்டு, அவரும் சிரிக்கிறார். 
‘... ஒரு நீதிமன்றம்... அதில் ஒரு குற்றவாளி... ஒரு வழக்கறிஞர்... நடுவில் நீதிபதி. அவர் குற்றவாளியை நோக்கிக் கேட்பார்... 'ஓடுகிற குதிரையின் உச்சியில் இருந்த கொம்பு ஒன்றா... இரண்டா?’ குற்றவாளி, 'குதிரைக்கு ஏது கொம்பு?’ என்பார். நீதிபதியோ, 'நான் கேட்டது குதிரைக்குக் கொம்பு ஒன்றா, இரண்டா?’ என்றே கேட்பார்...’
     ஆம். இன்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் ஜென்மதினம்: ஜூலை 27, 1876. விருதுகள் பல பெற்று எளிய வாழ்க்கை வாழ்ந்து காட்டிய கவிமணி அவர்களை செப்டம்பர் 26, 1959 அன்று இழந்தோம்.
வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு, யாராவது நெய்க்கு அலைவார்களா? உசாத்துணை இருப்பது  தமிழ் மரபு அறக்கட்டளையிலும், மின் தமிழிலும். எனவே, தன்னடக்கமாக, இத்துடன் நிறுத்தி, உசாத்துணைகளை சுட்டுகிறேன்.
II. பசங்களை ஆட, பாட, ஆடிப்பாட, பாடி ஆட, சொல்லி, அதை கண்டு, களித்து, வீட்டுக்கு வந்த மஹாஜனங்கள், ஆனந்த சாகரத்தில் முத்துக்குளிக்கவேண்டும் (அலுத்து போய் ஓட முயன்றால், நடக்காது ஓய்!) என்பது பெற்றோர்களின் அநியாய ஆசை. என்னுடைய அத்தான் ஜகதலபிரதாபனுக்கு, மதுரை புஷ்பவனம் போல் இனிய குரல் என்ற மாயையில், கறிகாய்க்காரி பொன்னம்மா வந்தாக்கூட, அவனை பாடச்சொல்லுவாள், அத்தை. ‘அம்பா! நீ இரங்கலாகாதா...’ என்று அவன் ஆலாபனை செய்ய ஆரம்பித்தால், பொன்னம்மா கூட ஒரு கட்டு கொத்தமல்லி கொசுறு கொடுத்துட்டு ஓடப்பார்ப்பாள்! அப்றம், அவரு ஒரு ஸ்லோகவாதி. ரகுவீர கத்யம், ‘கடபுட’ என்று பதினேழாம் வாய்ப்பாடு மாதிரி, தப்புத்தப்பாக, ஒப்பிக்கிறான். நிஜமாவே ஒரு லாங்கூலர் வந்து நிற்கிறார்!எதித்தசாரி கோடியாத்து பட்டு ஸ்வாமிகளே, ஹனுமத் விஜயம் என்று கேலி செய்கிறார்.நம்பளோடதெல்லாம் நாட்டுப்பாடல். தனித்தமிழ்! ‘பனைமரமே! பனைமரமே! ஏன் வளர்ந்தாய்? பனைமரமே!’ என்று ஆரம்பிக்கிறேன், ஒரு அருகம்புல் வளர்கிறது! என்ன தான் ‘மாயம்ம...’ என்று சுதா தரங்கிணியில் பாடினாலும், இந்த மழலையின்ப சுகம் வருமோ? தற்செயலாக, நண்பர் ஒருவரின் தனிமடலுக்கு, நேற்று யான் அளித்த பதில் இது:
[1. மாம்பழம் நல்ல மாம்பழம் அப்பா
     வாங்கித் தந்த மாம்பழம்
மாம்பழம் இது காணக் காண
    வாயி னிக்கிற மாம்பழம்

மாம்பழ மிவை கிடைத்த படியால்
   மகிழ்வி னோடு வருகிறேன்
தீம்பழ மிதைச் சீவி வெட்டிச்
   சிரித்துச் சிரித்துத் தின்னுவோம்

தின்னுவோம் வா தின்னுவோம்
   சீவிச் சீவித் தின்னுவோம்
பொன்னு ருண்டை போல
   புதுமை யான மாம்பழம்.

-  சோமசுந்தரப்புலவர்  (1955)சிறுவர் செந்தமிழ்: ‘கடவுள்‘
--------------------
என் சம்பத்தி பேத்திக்கு சொல்லிக்கொடுத்ததில் ஒரு பகுதி:

இந்த மாம்பழம் இனிய ஜாதியாம்;
எந்தன் தந்தையார் எனக்கு தந்தது;
மேலிருக்கும் தோல் மிக கசக்குமே
மெல்லிய கத்தியால் சீவ வேண்டுமே.

உள்ளே பார் இதோ!
சக்கரை திசை உடனே வாயிலே
போட்டுக்கொள்ளலாம்.
-----------

நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்]

குழந்தை இலக்கியத்தின் முன்னோடி எனலாம், ‘தங்கத்தாத்தா’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஈழத்து, நவாலி கிராமத்தில், மே மாதம், 25, 1878  அன்று ஜனித்த சோமசுந்தரப்புலவர் அவர்களை. அவர்களின் நினைவு தினம் இன்று: ஜூலை 27, 1953. அவரின் நினைவார்த்தமாக, சோமசுந்தரப்புலவர்  (1955)சிறுவர் செந்தமிழ் என்ற நூலை இணைக்கிறேன் (கூகிள் மறுத்து விட்டார்.). வயது வந்தவர்களும் படித்து மகிழலாம். பவள சங்கரிக்கு திருப்தி தானே!
இன்னம்பூரான்
27 07 2011

Geetha Sambasivam 
7/27/11
to mintamil
தேசிக விநாயகம் பிள்ளை பற்றிய செய்திக்கும், சோமசுந்தரப்புலவர் குறித்த செய்திக்கும் நன்றி.  சோமசுந்தரப் புலவர் குறித்து அறிந்திலேன்.  நன்றி.
தேசிக விநாயகம் பிள்ளை என்றாலே அவர் எழுதிய சைகிள் குறித்த பாடலே நினைவில் வரும். ஆரம்பப் பள்ளியில் படித்தது.
2011/7/27 Innamburan Innamburan <innamburan@gmail.com>
anantha narayanan nagarajan 
7/28/11
to me
வந்தனம் சொல்லி,
'இந்த மாம்பழம் இனிக்கும் மாம்பழம்
எந்தன் தந்தையார் எனக்குத் தந்தது
மேலிருக்கும் தோல் கசக்குமாதலால்
மெல்லக் கத்தியால் சீவவேண்டுமே'
என்று படித்ததாக நினைவு. கவிஞர் அழ.வள்ளியப்பா என்றும் நினைவு. உறுதிப்படுத்தவேண்டும்
அன்புடன்,
அரவக்கோன்
****
சித்திரத்துக்கு நன்றி: http://mmimages.maalaimalar.com/Articles/2013/Jan/64e582fa-7fa1-4e45-b00a-762a1a9b98cb_S_secvpf.gif