Friday, January 1, 2016

இனி ஒரு விதி செய்வோம்: 1

இனி ஒரு விதி செய்வோம்: 1

  • Friday, January 1, 2016, 5:30

இன்னம்பூரான்
ஜனவரி 1, 2016
பிரசுரம் வல்லமை: http://www.vallamai.com/?p=65295

innam
தற்காலம் பொற்காலமில்லை என்று நாம் யாவரும் அறிவோம். பொற்காலம் என்ற சொல்லே ஒரு மயக்கம். மிடாஸ் என்ற ஐதிக அரசன் தொட்டதெல்லாம் பொன் ஆனதால், பட்டினியில் வாடினானாம். நமக்கு வேண்டியதெல்லாம் நல்ல காலம். உழைப்புக்கேற்ற ஊதியம். மகவுகளுக்கு தரமான கல்வி. பொறுப்பும், காருண்யமும், திறனும் கூடிய மருத்துவம். ஒளிமயமான வருங்காலத்தை அளிக்கக்கூடிய தனிமனிதனின் ஆற்றலும், சமூகத்தின் பரந்த மனப்பான்மையும், சமுதாயத்தின் முற்போக்கு சிந்தனைகளும், தடம் மாறாத அரசும்.
நாம் நிதர்சனமாக அன்றாடம் கண்டும் காணாது விடுபவை: சுண்ணாம்பு காளவாயிலும், செங்கள் சூளையிலும் கொத்தடிமைகள். முறுக்கு பிழிவது சிறார்கள். தேநீர் ஆற்றுவது சிறார்கள். ஆரம்பக்கல்வி அரசின் பொறுப்பு. இலவசம். அதைத் தட்டிப்பறித்தது அரசியல் சாஸனத்தின் உள்ளுறை குறைபாடு. தற்குறியாக ( எழுதப்படிக்கத்தெரியாதவர்களாக) இறந்தது பல ஏழை தலைமுறைகள். அறுபது, எழுபது வருடங்களுக்கு முன்னால் அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளிலும் தரமான கல்வி அளிக்கப்பட்டது. அதை பிற்காலம் கல்வி தந்தைகள் சூறையாடியதற்கு யார் காரணம்? அக்காலம் பிரபலங்கள் கூட அரசு ஆஸ்பத்திரிகளுக்குத்தான் செல்வார்கள். தற்காலம், வீடு, மனை, வயற்காடு எல்லாவற்றையும் விற்றால் தான் ஏழைகள், காசை தட்டிப்பறித்து, அதன் பின்னர் பிரமாதமான சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரிகளில், நிவாரணம் நாட இயலும். இது எல்லாமே நமது சமுதாயம் அழுகிப்போகும் சின்னங்களே.
பொது வாழ்வு என்றொரு துறை இருக்கிறது. பொது நலம் நாடுவோர்களின் தோணி, அது. மக்கள் யாவரும் அந்தத் துறையில் அனுபவம் பெறவேண்டும். தனது நேரம், செல்வம், உழைப்பு எல்லாவற்றிலிருந்தும் கடுகளவாவது பொது நலத்துக்கு உழைக்க வேண்டும். சாதாரணமாக, சராசரி மக்களுக்கும் பொதுநலசேவைக்கும் காத தூரம் என்பதை, சில நாட்களுக்கு முன்னால் தமிழ் நாட்டை அலக்கழித்த மழையும், வெள்ளமும், சகதியும் தகர்த்து விட்டது. சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்கள் ஓடோடி முன்பின் அறியாதவர்களுக்கு உதவினார்கள். சாதிமதபேதம் முதலில் தகர்ந்தது. இளைய சமுதாயத்தின் முதிர்ந்த மனப்பான்மையை கண்கூடாகப்பார்த்தோம். தலை வணங்கினோம். யாவரும் சேவகனானோம். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற சொற்றொடர் தாரகமந்திரமானது.
இனி ஒரு விதி செய்வோம்.
பிறந்த குழந்தைக்கு, நாமே முன்னோடியாகத் திகழ்ந்து, பொதுநல சேவை பாடங்கள் நடத்தத் தொடங்குவோம். வளரும் சிறார்களுக்கு சிறிய சிறிய பொறுப்புகள் கொடுத்துப் பழக்குவோம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.quickmeme.com/img/30/3000818e21952986f174bf51237dd650fa11b000adf99846bc2699b9a0113dbb.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

நாளொரு பக்கம்: III: 001

நாளொரு பக்கம்: III: 001


இன்னம்பூரான்
ஜனவரி 1, 2016
“வயது முதிர்ந்துவிடினும் - எந்தை
வாலிபக் களைஎன்றும் மாறுவதுஇல்லை;
துயர் இல்லை, மூப்பும் இல்லை, - என்றும்
சோர்வுஇல்லை, நோயொன்று தொடுவதுஇல்லை;
பயமில்லை, பரிவுஒன்றுஇல்லை, - எவர்
பக்கமும்நின்று எதிர்ப்பக்கம் வாட்டுவது இல்லை
நயம்மிகத் தெரிந்தவன்காண்; - தனி
நடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான். 
~ [செய்யுள் 9: கண்ணன் என் தந்தை: மகாகவி சுப்ரமண்ய பாரதியார்]

தண்டியலங்காரம் என்ற தமிழிலக்கண நூல் ‘பாவிக அணி’ என்ற சொல் அலங்காரத்தை விளக்கும் போது, மையக்கருத்து அமைவதையும் அதை சுற்றி அமையும் மண்டலத்தை பற்றியும் எடுத்துரைக்கும். மகாகவி, கண்ணனை மையப்படுத்தி, அவனை பற்பல உறவுகளாகக் கற்பித்து பாடிய பாடல்களில் மென்மை (காதலன்), கனிவு (காதலி), யதார்த்தமும், பணியின் மேன்மையும் (சேவகன்) எல்லாமே பாவிக அணியாக அமையும். ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்று மேடையில் உசாவி விட்டு, வீட்டில் அவரை (முதியவர்கள் யாவரையும் தந்தை ஸ்தானத்தில் வைத்து அழைப்பதை மேநாடுகளில் காணலாம். பேச்சளவில் மட்டும்தான் என்று சிலர் சொல்லலாம். அதுவாவது உளதே!) உதாசீனம் செய்யாதவர்களுக்கும், பாமரனுக்கும் மகாகவியின் சொற்கள் புரியும்.

முதியோர் இல்லங்களில் வாழும் பெரியவர்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கவேண்டும். உடல்நலம் பேணுவது தற்காப்பு. மனவலிமையில்லையெனில் உடல் தளர்ந்து போகும். மனவலிமை ஒரு அப்பியாசமே. முதுமையையும் என்றோ சம்பவிக்கப்போகும் மரணத்தையும் இணைத்து கவலைப்படுவதோ,பச்சாதாபப்படுவதோ நலம் தரப்போவதில்லை. மேலும், கவலையில்லாத மனிதன் உலகில் இல்லா மனிதன். நடப்பது நடக்கட்டும் என்று விட்டேற்றியாக இருப்பது தான் விவேகம். முன்னேற்பாடுகள் நலம் தரும். அறிவு தேடலும், இளைப்பாறுதலும், நட்பும் பண்பும் கலந்த புதிய உறவுகளும்  வாழ்க்கைக்கு செழிப்பு சேர்க்கும். இது இப்படியாக இருக்க, மகவுகளும்,  மகாகவி போல பெற்றோரை எங்கிருந்தாலும் போற்றி வந்தால், அது கொடுப்பினையே. இங்கு சொல்லப்படுவது இருபாலாருக்கும் பொது. உடல் ஒத்துழைக்க மறுத்தாலும், நயம் மிகுந்து, துயர் ஒழிந்தால், எதிர்வாடை வாட்டாது. 

இந்த வினாடி புத்தாண்டு ஜெனனம். யாவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். மகாகவியின் சொல் பலிக்கட்டும்.  முதியோரும், வாலிபர்களும், சிறார்களும் ’நடுநின்று விதிச்செயல் கண்டு’ மகிழ்வோமாக.
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://images.rapgenius.com/9f89b08a952f75c7160ea31d3cdea612.570x571x1.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Saturday, December 26, 2015

நாளொரு பக்கம் 44


நாளொரு பக்கம் 44

Wednesday, the 8th April 2015



Ludwig Wittgenstein has been considered by many as the most influential Western philosopher since Immanuel Kant. He had wide-ranging interests -moving from engineering to philosophy to becoming an elementary school teacher to military service, all the while deeply delving in philosophical investigations.
‘Bertrand Russell, his pupil Ludwig Wittgenstein  and their colleague G. E. Moore – the pioneers of Analytic philosophy – shared the view that ‘all sound philosophy should begin with an analysis of propositions’ (Russell 1992: 9; first published in 1900). In Russell and Wittgenstein such analysis was centrally a matter of logic.’
Viewed in this background, it come as no surprise that he uses the simile of a combination lock. In sum, Phlosophy is an alluring Spreadsheet.
-x-

Thursday, December 24, 2015

நாளொரு பக்கம் 43

நாளொரு பக்கம் 43


Tuesday, the 7th April 2015

स्वभावो नोपदेशेन शक्यते कर्तुमन्यथा ।
सुतप्तमपि पानीयं पुनर्गच्छति शीतताम् ॥

கல்யாண தரகர்களில் ஒருவர் சொன்னாராம், ‘ நான் சிபாரிசு செய்யும் பையனுக்கு தாராளமாக உங்கள் பொண்ணை கொடுக்கலாம். 64 குணங்களில் அவனுக்கு இரண்டு தான் இல்லை. மற்றபடி தங்கமான பையன்’. பொண்ணை பெத்தவன் கவலை அவனுக்கு. அந்த இரண்டும் என்ன என்று கேட்டாராம். பதில்: ‘தனக்காவும் தெரியாது; சொன்னாலும் கேட்கமாட்டான்!’.

இந்த பூவுலகில் பெரும்பாலோர் இப்படித்தான் ‘ரண்டுங்கெட்டான்’ என்ற உண்மையை மேற்படி சுபாஷிதம் டபால் என்று  போட்டு என்றோ உடைத்துவிட்டது: “ அடுப்பில் வைத்தால் தண்ணீர் வென்னீராகிறது. சற்று நேரம் கழித்து ஆறிவிடுகிறது. அது போல ஆலோசனை வழங்கி ஒருவரின் குணாதிசயங்களை மாற்றமுடியாது.”
இதையே, ‘நாய் வாலை நிமிர்த்த முடியாது.’ என்பார்கள். ஆனால், நாய் வாலை எதற்கு நிமிர்த்தவேண்டும்? அது பொருத்தமான உவமை அன்று.
In English: You can take the horse to water, but cannot make it drink.
அப்படியானால் என்ன் செய்யலாம்? தெரியவில்லை. சொல்லுங்கள்.
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://markewbie.weebly.com/uploads/4/0/3/9/40396485/7667532.jpg

Wednesday, December 23, 2015

SEASON'S GREETINGS & A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2016

SEASON'S GREETINGS & A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2016

INNAMBURAN

23 12 20115




IMAGE CREDIT & COPYRIGHT & THANKS TO GOOGLE




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, December 21, 2015

நாளொரு பக்கம்: 42

நாளொரு பக்கம்: 42


Monday, the 6th April 2015
பாரம்பரியம், மரபு போன்ற சொற்கள் நம்மை வரலாற்றின் முன்பக்கங்களுக்கு எடுத்து செல்கின்றன. தற்காலத்தில் நாம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு, பழங்காலத்து ஆளுமை இருந்திருக்கிறது என்று புரிந்து கொண்டோமானால், அவற்றை பற்றி மேலும் மேலும் அறிய அவா எழும், ஆர்வம் உள்ளோருக்கு. ஆர்வமில்லாதவர்களுக்கும் மேலும் அறிய ஆவல் ஏற்படலாம். 

இனியவை நாற்பது, இன்னா நாற்பது போன்ற அறம் சாற்றும் நூற்கள், திருக்குறளுக்கு இணையாகவே அமைந்துள்ளன என்றால் மிகையாகாது. ‘இனியவை நாற்பது’ என்ற கடைச்சங்க நூலின் ஆசிரியர், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார்.

இறைவணக்கத்துக்கு பின் வந்து முதல் செய்யுளை காண்போம். 

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே
நற்சவையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே
முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. ~ [1]

பிச்சை யெடுத்துண்டாயினும் கற்பனவற்றைக் கசடறக்கற்றல் மிக இனிது.  அங்ஙனம் கற்ற கல்விகள் நல்ல சபையில் உரையாட, அளவளாவ, தர்க்கம் செய்ய வந்துதவும். அதுவும் இனிதே. முத்தையொக்கும் பற்களையுடைய மகளிரது வாய்ச்சொல் இனிது. அது போலவே  சான்றோரின் துணைக் கொள்ளுதல் தெளியவுமினிது.
இத்தருணம்
"நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"
என்று புறநானூறு கூறும் 177 செய்யுள் கண் முன்னே வந்து நிற்கும்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.geotamil.com/pathivukalnew/images/stories/crit_7.jpg


Saturday, December 19, 2015

நாளொரு பக்கம் 41

நாளொரு பக்கம் 41


Sunday, the 5th April 2015
“The thing that makes you exceptional, if you are at all, is inevitably that which must also make you lonely. “
- Lorraine Vivian Hansberry (May 19, 1930 – January 12, 1965)

Lorraine, whom we tragically lost to pancreatic cancer at her prime, was the first black woman to write a play performed on Broadway. Her family had struggled against segregation, challenging a restrictive covenant and eventually provoking the Supreme Court case Hansberry v.Lee. Her best known work, the play ‘A Raisin in the Sun’ highlights the lives of Black Americans, living under racial segregation in Chicago. 
Martin Luther King, Jr. paid her this tribute: "Her creative ability and her profound grasp of the deep social issues confronting the world today will remain an inspiration to generations yet unborn."
Reading her quote, knowing her background, one cannot resist the hard-won lesson of Life, she shares with us.  One has to learn to live with himself or herself only for long spells at great deprivation of social life, if one has to achieve something exceptionally great.
-x-

Image Credit::https://i2.wp.com/www.rugusavay.com/wp-content/uploads/2013/07/Lorraine-Hansberry-Quotes-5.jpg

Friday, December 18, 2015

நாளொரு பக்கம் 40

நாளொரு பக்கம் 40

Saturday, the 4th April 2015
Rajrishi Bhartruhari,popularly believed to be the brother of King Vikramaditya,was a ruler, moral preceptor, poet and romantic, all combined into one singular personality. He authored three immortal classics  of one hundred verses each- Neeti Satakam (Moral values), Vairagya Satakam (Renunciation or philosophical) and Srungaara Satakam (About Love). One citation here.
प्रारभ्यते न खलु विघ्नभयेन नीचैः
प्रारभ्य विघ्नविहता विरमन्ति मध्याः।
विघ्नैः पुनः पुनरपि प्रतिहन्यमानाः
प्रारब्धमुत्तमगुणा न परित्यजन्ति ॥ 1:26

Prarabhyate na khalu vighnabhayena neechaih
Praarabhya vighnavihataa viramanti madhyaah
Vighnaih punah punarapi pratihanyamaanaah
Prarabdhamuttama janaah na parityajanti    

We have three kinds of people, who are engaged in getting things done. Some never take the very first step, lest obstacles stop them in the track. They rank lowest. Some begin well, but halt in their track, even if something minor impedes their advance. We have the achievers too. They persist in their endeavour until they reach their goal, overcoming all obstacles en route.
-x-
Image Credit:http://4.bp.blogspot.com/-yi9EOc9J5Lk/UmgMC8VLeqI/AAAAAAAAAYY/MtTnxlBiUYo/s1600/keep-calm-and-get-stuff-done-3.png
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, December 16, 2015

நாளொரு பக்கம் 39

நாளொரு பக்கம் 39


Friday, the 3rd April 2015
People are like stained glass windows: they sparkle and shine when the sun is out, but when the darkness sets in their true beauty is revealed only if there is a light within. 
-Elisabeth Kübler-Ross, psychiatrist and author (1926-2004) 

Elisabeth Kübler-Ross became a celebrity psychiatrist with her ground-breaking book, "On Death and Dying.", as the Western world attaches great importance to Grief-counseling in a professional approach. She founded Shanti Nilaya in California as a  healing center for the dying and their families.

We will benefit by listening to the advice from such a distinguished star. She advocates our exercising our minds to illuminate our living styles, by using the apt simile of the stained glass in the Church windows, each one an art-creation. Just as they sparkle when the sun is out, our enlightened mind will liven us up, if only we know the secret of enlightening it,from within.

Lead! Kindly Light! 

-x-


விதி வகுப்பது மனிதன்; நீதி வழங்குவது மாமனிதன் [1]

விதி வகுப்பது மனிதன்; நீதி வழங்குவது மாமனிதன் [1]

இன்னம்பூரான்
15 12 15
Published: Vallamai 15 12 2015
http://www.vallamai.com/?p=64717#comments

ஆராய்ச்சிமணி அடித்தக் கறவைப்பசுவுக்கும், வண்ணாத்தியிடம் ஜஹாங்கீர் துப்பாக்கி நீட்டியதும் வகுக்கப்பட்ட விதியல்ல; நீதிபோதனை.
மின்னிதழ்களிலும், மின்குழுமங்களிலும் தற்காப்புக் கருதி நான் நீண்டகாலம் எழுதுவதில்லை.‘நாவினால் சுட்டவடு..’ என்று தெரியாமலா சொன்னார், வள்ளுவர் பெருந்தகை? மதிக்கப்படாவிடினும், மிதிபட வேண்டாம் அல்லவா! இது நிற்க.
சிந்தனையும் சொல்லும் இணைந்து செயல்படுபவை. ஆங்கிலத்தில் algorithm என்ற சொல் கொடி கட்டிப்பறக்கிறது; சாதனை படைக்கிறது; அதற்கு’ வழிமுறை’ என்று தமிழ்ப் பொருள் கூறப்படுகிறது. என்னுடைய கணிப்பில் அது மேலான,புடம் போட்ட வழிமுறை. நான் மதிக்கும் algorithm: ‘விதி வகுப்பது மனிதன்; நீதி வழங்குவது மாமனிதன்.’ என்பதே. இன்று ‘மருத்துவத்தின் மூன்று வி (நீ)திகள்’ என்ற தலைப்பில் சித்தார்த் முக்கர்ஜீ என்ற மருத்துவர் எழுதிய கட்டுரை ஒன்றை படித்ததின் விளைவாக எழுகிறது, இந்தத் தொடர். நான் விதித்துக்கொண்ட விதியை மீறி, நீதி பேசுகிறது. குறைப்பிரசவம் ஆனாலும் ஆகலாம். அப்போது விட்டு விட வேண்டியது தான். விதி யாரை விட்டது? இதுவும் நிற்க.
சென்னை வெள்ளத்தில் நகரே சிதிலம் அடைந்தது. தமிழ்நாடு முழுதும் சேதம் அடைந்தது. மனம் பதைத்து, பல தடங்கல்களை கடந்து, மூட்டைகளை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு டிசம்பர் 7 அன்று எடுத்து சென்றால், அத்தியாவசிய பொருள்கள் மிகுதியாக வந்தன; மிகுதியாகப் போயின. செல்வந்தர்கள் பால் பாக்கெட்டுக்குக் கையேந்தினர். ஏழை பாழை தாராளமாக் வழங்கினர். பேதமில்லாத உலகம். எண்பதைத் தாண்டிய முதியோர்களுடன் பள்ளி மாணவர்கள் இணைந்து செயலாற்றினர்; நம் வீட்டு சிறுவர்/சிறுமிகளோ, உலகின் பலபகுதிகளிலிருந்து whatsapp மாயா மச்சீந்திரா உபாயங்கள் மூலம் உடனக்கடி அபயம் அளித்து வந்தனர். Blue Cross நிறுவனத்தின் Dawn அவர்கள் அசகாய வேலை செய்து உயிர் மீட்டனர். மற்றும் பல மனிதநேய நிகழ்வுகள், உருக்கமான செய்திகள், எண்மெய்ப்பாடுகளும், வளைய வந்த மனித அபிமானங்களும், சுவபாவங்களும், பல பாடங்களைக் கற்பித்தன. மேற்படி செயல்பாடுகளில் ஒன்று கூட விதிக்கு உட்பட்டவை அன்று. அன்றாட இயல்பு வாழ்க்கையில் இவை இடம் பெற்றிருக்கப்போவதில்லை. அவை நீதிதேவதையின் வழிமுறை.
மேல்தளத்து (அதாவது பாதுகாப்பாக இருந்த) மக்கள் ரூல் பேசினார்கள். அரசை கண்டித்தார்கள். ஆக்கிரமிப்புகளை பற்றியும், நீராதாரம் பற்றியும், ‘அத்தையும் செய்யலாம்; இத்தையும் செய்யலாம்’ என்று முடியா வழக்குகளை சகதியிலும், ஊடகங்களிலும், மின்/மின்னா குழுக்களிலும் பேசி வந்தனர். பிராவகத்து போராளிகளுக்கு இதெல்லாம் இரண்டாம் பக்ஷம். அவர்கள் விதியை மறந்தனர். நீதியை நாடினர்.
வாழ்வியலில் நாம் சிரத்தையுடன் (பஹுகார்யமாக), அரைகுறை தகவல்களை வைத்துக்கொண்டு, பக்குவமான தீர்வுகளை நாடுகிறோம். வாகை சூட முடியவில்லை; பகை தான் புகைக்கிறது. சில உதாரணங்களுடன், இன்றைய பதிவை முடித்துக்கொள்கிறேன்.
Lord Keynes said, ‘In the long run, we are all dead’. ஆம். நிரந்தரவாழ்க்கை யாருக்கும் கிடையாது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். நமது ஊர்களில் 99.99 % வீடுகளில் வாசற்படி தெருவை ஆக்கிரமித்து இருக்கும். நடைபாதைகள், சின்னச்சின்ன குருவிகளுடன் செத்துப்போயின. அரசு கட்டிடம் வாசலில் நடை பாதைக்கு முள்வேலி பாருங்கள்! இது குடிமகனின் செயலா! அரசின் கொடுமையா? ‘இன்று வீட்டுமனை விலை ஆகாயத்தைத் தொடுகிறது. ஏரிக்கரையில் ஒரு குட்டிப்பகுதியை கைப்பற்றி, குடிசை போட்டு, காரை வீடு; மாடி வீடு; பல தளங்கள், மாட மாளிகை, கூட கோபுரங்கள் என்று, கேட்ட லஞ்சத்தைக்கொடுப்பது விதிக்கும் முரண்; நீதிக்கும் முரணாக விதியை உலுக்கிவிட்டேன்.’ என்பவர்களின் முதலையீடுகளை, ஏன் உயர் அதிகாரி செல்வி அமுதா இடிக்கமாட்டார்? நீரை வெளியேற்ற வேண்டி,அவசர கட்டத்தில் சில சில உப விதிகள் அடிபட்டுப்போயிருக்கலாம். ஆனால் நீதி நிலைத்து நின்றதே.
லஞ்ச லாவண்யத்தின் தீமைகளை பற்றி எமது சிறிய சிந்தனை வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. வாய்ச்சொல் வீரர்களை பற்றியும் பேச்சு எழுந்தது. லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் அநீதி; விதிக்கு முரண். இந்தியாவின் முதல் லஞ்சஒழிப்புச் சட்டத்தில் லஞ்சம் கொடுப்போருக்கும் தண்டனை உண்டு. ஆனால், வழிமுறை அவ்வாறு இல்லையே. இந்தியா முழுதும் நாம் நாட்தோறும் கண்ணாரக்காண்பது கோடிக்கணக்கான லஞ்சம், ஊழல், சால்ஜாப்பு, அரசியல் வாதிகளில் பலரின் தீவினைகள். இந்தப்பின்னணியில் ஏரி ஏன் உடையாது? நதி ஏன் பெருக்கெடுக்காது? கடல் ஏன் கொந்தளிக்காது? வீடு ஏன் முழுகாது? உயிர் ஏன் பிரியாது? ஒவ்வொரு கட்டுமானத்திலும் – ஏரிக்கரை, தூர் வாருதல், ரோடு, கட்டிடங்கள், பாலங்கள், அன்றாட பராமரிப்பு – இவைகளில் உள்ள குறைகள், ‘ஈயத்தைப் பார்த்து இளைத்ததாம் பித்தளை’ என்ற வகையில் இன்று சந்தி சிரிக்கின்றன. இவைகளெல்லாம் விதிகளின் கீழ்படிதலாக, நீதியை கற்பழித்துக் கட்டப்பட்டனவையே. சாணக்ய நீதிப்படி உரியகாலத்தில் விதி மீது சதி செய்தவர்களை கடுமையாக தண்டிக்காதவர்களையும் தண்டிக்க வேண்டும்.
செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதை உரத்த குரல் எழுப்பி கண்டிப்பவர்களும், அரசு உயர் அதிகாரியின் விளக்கங்களும் விதியை பற்றி விளாசலாம். நீதி எங்கே போயிற்று? முதற்கண்ணாக, தமிழ்நாடு சென்னையை விட பெரியது. தாமிரபரணி நதிக்கரையில் நடந்தது என்ன? கடலூர் மூழ்க, செம்பரம்பாக்கம் என் செய்தது?
இரண்டாவதாக, நமக்கு பரந்த மனப்பான்மை வேண்டும். விசாலமான நோக்கு வேண்டும். இரக்க சுபாவம் வேண்டும். மருத்துவத்தில் முதலுதவி கொடுப்பது வரிசை விதியை விலக்கும் நீதி. அது போல ஏழைபாழைகளுக்கு முதலில் வாழ்வாதாரம் கொடுத்து எல்லாருக்கும் உடனடி உதவி கொடுக்க வேண்டும். நம்மால் ஏன் ராணுவம் போல் இயங்கவில்லை என்பதை பரிசீலனை செய்யவேண்டும். வெட்கக்கேடு! பரிதவிக்கும் மக்களை விட்டு, மேட்டுக்குடி வீஐபிகளை காப்பாற்ற சொன்னார்கள், அதிகார மையங்கள் என்று ராணுவம் கூறும் போது, நாக்கிப்பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருக்கிறது.
எந்த எந்த அளவில் எந்த எந்த அன்றாட அரசு ஆணைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பது ஒரு பூடகமான விஷயம். இலைமறைவு; காய் மறைவு. விதியை மீறும் நீதி அழிப்பு. காங்கிரஸ் ஆட்சியிலேயே சென்னையில் வீடுகளை வாடகைக்கு விடும் தீர்மானங்களை அமைச்சர்கள் கையில். பிற்காலம் அது புழக்கடைக்கு வந்தது. எல்லாத்துறைகளிலும் அன்றாட தலையீடுகள் தான் பேயாட்டம் ஆடின. காவலராயினும், ஆசிரியராயினும், குமாஸ்தாவாயினும், பொறியாளராயினும், அந்தந்தத்துறைத்தலைவர்கள் கையாலாகதவர்களாயினர். உயர் அதிகாரிகள் கொள்கை வகுப்பதும், அதற்கு நேரமும், அடிப்படை ஞானமும் இல்லாத நிழல் மனிதர்களும், அவர்களின் கூடாநட்பு கொண்ட அமைச்சர்களும், அன்றாட வரத்துப்போக்குக்களில் விதி மீறி, நீதி தவிர்த்து நடமாடும் காலம் பழுத்தது. அணைகள் பாதுகாப்பையும், அரவணைப்பையும் காலங்காலமாக அந்தந்தத்தலத்தில் பொறுப்பும், பதவியும் வகிக்கும் உதவி பொறியாளர் தான் செய்கிறார் என்பதை தலைமை அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும்.
இனி ஒரு விதியும் அதை வழிமுறை நடாத்தும் நீதியையும் கொணருவோம். மாநிலம் முழுதும் எல்லா பிராந்தியங்களும், நீர்நிலைகளும் பற்றிய முழு உண்மை நிலை, எந்த விதமான கலப்பில்லாமல், அசல் புள்ளி விவரங்களுடன், மெத்த விசாரணையின் அறிக்கையுடன் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவேண்டும். அதற்கு முன்னால், பல விதங்களில் தண்டோரோ போட்டு மக்களின், அதிகாரிகளின், ஆர்வலர்களின் சாக்ஷியம் பெறப்படவேண்டும். அது நேர்காணலில் நடக்க வேண்டும். ஒவ்வொரு ஆவணத்தின் வரலாறு வேண்டும். Logging என்ற உடனடி தகவல் பதிவு செய்யப்பட்டதா என்ற விஷயத்துக்கு சத்தியபிரமாணமும் வேண்டும். மற்றபடி சான்றும் வேண்டும். என்ன நிவாரணம் கிடைக்கிறதோ அதை விட, விதி வகுக்கும் திறனும், நீதி வழங்கும் மூதறிஞர்களும் கிடைப்பது தான் தேசத்தின் விதியை நிர்னயிக்கும்.
நீதியில்லையேல் பீதி: நீதியில்லையேல் வீதி; நீதியில்லையேல் மீதியில்லை.
-#-
சித்திரத்துக்கு நன்றி:https://arthamullainiyamanam.files.wordpress.com/2013/05/074sattam.jpg
இன்னம்பூரான்
இன்னம்பூரான்
இன்னம்பூரானின் இயற்பெயர், சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் அவரது பூர்வீகம். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார்.

அண்ணாகண்ணன் ( அமுதசுரபி மாஜி ஆசிரியர்) wrote on 16 December, 2015, 13:07


ஒரே கட்டுரையில் சிக்கல்களை அலசி, தீர்வுகளை முன்வைத்துள்ளார். இவற்றை நடைமுறைப்படுத்த, திடமான தலைமையுடன் மின்னாளுகை நுட்பங்களைச் சிறப்புறப் பயன்படுத்த வேண்டும்.