Thursday, August 29, 2013

அரசு 12 துரைத்தனம்.


அரசு 12 துரைத்தனம்.


Innamburan S.Soundararajan Fri, Aug 30, 2013 at 9:20 AM

அரசு 12 துரைத்தனம்.

Friday, August 30, 2013, 4:57


இன்னம்பூரான்
Cockroachawardராஜமாதா முப்பெரும்தேவி பொன்னம்மா தேவிஶ்ரீ மதுராபுரியை ஆண்ட ராணிமங்கம்மாவை விட பல திறன்களில் தலை சிறந்து விளங்குபவர். ரோமாபுரி இளவரசி. தாமரை மணாளனை அவரை சங்கத்தமிழ் பண்புக்கு இணங்க காதல் செய்த பின்னரே வரைவு செய்து கொண்டது உலகறிந்த விஷயம். அது அவர்களது உரிமை என்பதில் கடுகளவேணும் ஐயமில்லை. அழகான குழந்தைகள். ஆண் அரசாளும் என்கிறார்கள் சிலர். அவருடைய திருமகனார் இளங்குமரனுக்காக, அரியணை காத்திருக்கிறது. வடிவுக்கரசியான அவருடைய திருமகளோ, குடும்ப விளக்கு. எங்கிருந்தோ வந்த ஆணழகன் இளஞ்சேரலாதனை மணந்து பல வருடங்கள் ஆயின. ‘திரைகடலோடியும் திரவியம் தேடு’ என்றாள், ஒளவை பாட்டி. குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல் ஆகிய திணைகள் (பாலையையும் விட்டு விடவில்லை!) நாடோடி, நாடோடி இளஞ்சேரலாதனை நாடின. மணிமேகலையின் அமுதசுரபி தோற்றது, போங்கள். அலிபாபாவின் மாயவிளக்கு மங்கியதோ என்ற தோற்றம்! காசுகள் கொட்டின; மோஹராக்கள் ‘தக தக’வென்று மின்னின; திரவியம், கனகதாரா தோத்திரம் மொழிந்தவாறு, கூரையை பிய்த்துக்கொண்டு ‘கொட்டோ கொட்டு’ என்று இடைவிடாமல் பொழிந்தது; பொழிகிறது; பொழிந்து கொண்டே இருக்கும். இளஞ்சேரலாதன் அமர்ந்தவிடத்தில் அல்லது தேகாப்பியாசம் செய்யும் இடத்தில் அல்லது இளைப்பாறலும், தேறலும், விருந்தும் அளிக்கும் மன்றங்களில் மகிழ்வின் மணமும், செல்வத்தின் செல்வாக்கும் நிறைகுடங்களாக ததும்பி வழிகின்றன.
என்றென்றும் ராஜ விசுவாசிகளில் ஒருவராக பரிமளிக்கும் குருக்ஷேத்திரத்தின் குறுநிலமன்னராகிய உலகநாதபெருமான் அவர்களிடம் தெற்கத்திய பத்திரிகை ஒன்று, இளஞ்சேரலாதனுக்கு குருக்ஷேத்திர பிராந்தியம் அள்ளி அள்ளி கொடுத்த நிலபுலனை பற்றியும், ஸ்தாவரசொத்தான பூமியயையே காசு பணமாக ரஸவாதம் செய்யப்பட்ட உத்திகளை பற்றியும், குருக்ஷேத்திர நாட்டின் உயர்/தாழ் ஊழியனனான கண்ணிய கமுக்கனார் தட்டிய முரசொலியின் ‘அபஸ்வர’ எதிரொலியை பற்றியும், ஒரு உரையாடல் நிகழ்த்தினார்கள். அவரோ ஜராசந்தன் போன்ற சண்டைக்கோழி. விடுவாரா? ஒரு உயர்/தாழ் ஊழிய சமூகத்தையே அருகில் வைத்துக்கொண்டு கருத்து முத்துக்கள் பல உதிர்த்தார். அவையாவன:
தேசத்தின் மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு மைனர் குடியானவர்.
குருக்ஷேத்திர தர்மம் மைனர் குடியானவர்களுக்கு, அதுவும் செல்வக் களஞ்சியங்களுடன் ‘தகாத’ இனம் சேரும் மைனர் குடியானவர்களுக்கு சலுகைகள் அளிக்கும்.
ஆகவே மாப்பிள்ளை இளஞ்சேரலாதனுக்கு கொடுத்த சலுகைகள் தர்மத்தின் அடிப்படையே.
இந்திரனா புகாரித்தான்? இந்திர பதவி உயர்ந்தது தான். ஆனால் இந்திரர்கள் எல்லாம் உயர்ந்தவர்கள் அல்ல. இந்திரனும் காசு பார்த்தான். அநீதி + அநீதி = நீதி! இது அறியாத தென்னாட்டுத் திருமாலே. உம்மை கண்டு பரிதாபம் கொண்டேன்.
கமுக்கரின் குற்றச்சாட்டுகள் நீர்த்துப்போயின, ஐயா. செல்வக்களஞ்சியம் ஏன் புகாரிக்கவில்லை. அது எனக்கு புரியவில்லையே!!!
கமுக்கரின் குற்றச்சாட்டுகளை, துரைத்தனத்தாரின் கமிட்டி நிராகரித்து விட்டதே. அதன் ரிப்போர்ட்டை நான் படிக்கவில்லை. அதனால் என்ன கெட்டுப்போச்சு? அது நிராகரித்திருக்கும்.கும்! கும்மோ கும்!!
அப்படியானால் குமுக்கரை ஏன் அமுக்கவில்லை என்றா கேட்கிறீர்கள்! நான் அவசரப்படுபவன் அல்ல. என்னை போன்ற நடுநிலையாளர் கிடையாதாக்கும். கும்! கும் கும்!!
மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு பண்பாளர். அவர் ராஜமாதாவின் மாப்பிள்ளை என்பதால் தான், பத்திரிகைகள் அவரை வாட்டுகின்றன. அலக்கழிக்கின்றன. என்னே அக்கிரமம்! மம்! மம்மோ மம்!!
அசரீரி: “ மெய்யெல்லாம் மெய்யல்ல; பொய்யெல்லாம் பொய்யல்ல; மெய் என்பது பொய்யோ? பொய் என்பது மெய்யோ? பொய்யும் மெய்யும் கலந்துக்கட்டியோ? ஐயோ!”
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆகும்’ என்று அரசியல் அறியாமையினால், சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பிழை இழைத்து விட்டார் போலும். எதற்கும் ஒரு செய்தி. அரசியல் பிழைத்தோர்க்கு ஆரூடம் கை வந்த கலை. ஜோசியம் கை கூடிய கலை. அதனால் தான் இந்த உலகநாதபெருமானின் அற்புத வாசகங்கள் வருமுன்னரே, ராஜமாதாவின் பிரதம விசுவாசியும், திவானும் ஆன மனோவசியனார் அவர்கள், பத்திரிகைகளுக்கு ஒரு அறைகூவல் விடுவித்தார். “பத்திரிகைகள் எதையும் விசாரிக்கட்டும்; ஆனால் தனிமனிதர்களை மீது பழி கூறலாகாது….”. அதாவது தவறு செய்தவன் தனிமனிதனாலும், சிஸ்டம் தவறியது என்பது உகந்த சொல் எனலாமோ? அவரது பொழிவை முழுதுமுச்சூடும் கேட்டோ/படித்தோ வசியமானவர்கள் உலகநாதபெருமானின் கூற்றை அனுபவித்து வரவேற்பார்கள்.
‘ஏழை குடியானவர்கள்’ பிழைப்பார்கள். விதர்பா ஏழை குடியானவர்கள் மடிவார்கள். குருக்ஷேத்திரத்தில் நிலபுலன் இழந்த ஏழை குடியானவர்கள் நெற்றியில் பட்டை நாமம் பளபளக்கிறது. மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் மைனர் குடியானவர் என்றால், ‘அமிதா பச்சன் ஒரு அறிமுக நடிகர்’ என்றார், ஒரு ட்விட்டர். மாப்பிள்ளை இளஞ்சேரலாதன் ஒரு மைனர் குடியானவர் என்றால் முதுகலைஞர் கருணாநிதி அவர்கள் பால் மணம் மாறாத குழவி என்பர் சிலர்.
வர்ரேன்…
சித்திரத்துக்கு நன்றி: asifmeeran.blogspot.com
பிரசுரம்: வல்லமை 30 08 2013


Sunday, August 25, 2013

கனம் கோர்ட்டார் அவர்களே! – 20




கனம் கோர்ட்டார் அவர்களே! – 20

Innamburan S.Soundararajan Sat, Aug 24, 2013 at 9:08 PM


கனம் கோர்ட்டார் அவர்களே! – 20

இன்னம்பூரான்
page1
நானோ! ஒரு அப்பாவி!
மகா கனம் பொருந்திய கோர்ட்டார் சமூகத்தின் முன்னிலையில் நடை பெற்றதாக ஒரு கற்பனை உரையாடலை செவி சாய்த்து கேட்பீர்களாக. இரட்டை ஜீயும், நிலத்தடி எண்ணை வளமும் உங்களது கற்பனையில் மேய்ந்தால், யான் அதற்குப் பொறுப்பல்ல. ‘நானோ! ஒரு அப்பாவி!’ அது கூட இரவல்.
இனி உரையாடல்.
சாக்ஷி (சா), கோர்ட்டார் (கோ), அரசு வழக்கறிஞர். (அ.வ.) கோர்ட்டு குமாஸ்தா (கோ.கு.), டவாலி (ட).
ட: பராக்! பராக்!! பராக்!!! கோர்ட்டார் வருகிறார்! வந்துகொண்டே இருக்கிறார்! டட்! டட்! டட்!
எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். ‘சல சல’ வென்று கோர்ட்டாடை, மடிசாரு மாமியின் பட்டுப்புடவையைப் போல, சர சரக்க, ஐயா வருகிறார்கள்; அமர்கிறார்கள். எல்லாரும் ‘சர் புர்’ அமைதியுடன் (கோர்ட்டு நாற்காலிகள் கலோனிய காலத்தவை; முதுகு வலிக்கும்.) அமர்கிறார்கள். சற்றே மெளனம். கோர்ட்டார் தலையசைக்க, அன்றைய நீதி தேவதை அரூபமாகக் காட்சியளிக்கிறாள்.
சாவதானமாக, அலம்பல் யாதும் செய்யாமல், குறித்த நேரத்துக்கு முன்பே, ‘கூஜாக்கள்’ உடனில்லாமல், சமத்தாக வந்து கூண்டேறினார், சாக்ஷி பெருமகனார்.
கோ.கு: உமது பெயர் என்ன?
சா: ரிஷ்ய சிருங்கர், மாமுனி மைந்தன், மாமுனி (ஜூனியர்) தம்பி.
கோ.கு: ‘யான் பேசுவது உண்மையே. பேசுவது முற்றிலும் உண்மையே. உள்ளுறையாகக்கூட பொய் பேசமாட்டேன். இது சத்யம். சத்யம். சத்யம் என்று அடித்துக்கூறும். கடவுளைக்கூப்பிடுவீர்களா? அல்லது உம் நாணயத்தை நம்புவீர்களா?. உடனே பதில் சொல்லும். ஹூம்!
சா: கடவுளே என் சாக்ஷி. (தனிமொழி: அவர் குரலெடுக்கமாட்டார்.)
(கோ.கு. பகவத் கீதை நூலை சாக்ஷியின் கையில் கொடுத்தார். அவரும் அதை பவ்யமாக வாங்கி, அதன் மேல் ஒரு ஷொட்டு கொடுத்து, நடுநடுங்கும் குரலில் சத்தியப்பிரமாணம் செய்தார்.)
கோ:உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா?
சா: என் பெயரே ரிஷ்ய சிருங்கர், வணக்குத்துக்கு உரிய என் தந்தையோ மாமுனி. மரியாதைக்கு உரிய என் மூத்த உடன்பிறப்போ மாமுனி (ஜூனியர்). எனக்கு பெண்பால் பரிச்சயமில்லை. In fact…
அ.வ.: கனம் கோர்ட்டார் அவர்களே! சாக்ஷி வினவிய வினாவுக்கு விடை அளித்தால் போதும். அவர் கேட்டக்கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. I object…
கோ: Objection sustained. உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா? கேட்ட கேள்விக்கு பதில்.
( ஒரு விசிட்டர்: ‘என்ன இது பெர்ரி மேஸன் கதை போல் போகிறது!’ டெல்லா ஸ்ட் ரீட் வருவாளா அல்லது ‘தரகு’ மாமியா?) நல்ல வேளை அவர் முணுமுணுத்ததால் அது யார் காதிலும் விழவில்லை.)
சா: யான் அன்னலக்ஷ்மியை அறியேன். அறிந்ததுமில்லை, அறியப்போவதுமில்லை.
கோ: உமக்கு அன்னலக்ஷ்மியை தெரியுமா? கேட்ட கேள்விக்கு பதில்.
சா: (சுளித்த முகத்துடன்) அறியேன். அறியேன். அறியேன்.
கோ: உமக்கு எத்தனை தடவை சொல்வது? ஒரு வினா.ஒரு விடை. போதும்.
சா: என்னுடைய வக்கீல் ஐயா பாரீஸ்டராக்கும். லண்டனில் படித்தவர் அவர் சொன்னபடி கக்குவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டுகிறேன், கனம் கோர்ட்டார் அவர்களே. சத்தியம் ஜெயிக்க வேண்டுமல்லவா, பாரதநாட்டின் இலச்சினையில் கூறிய மாதிரி.
(அரசு வக்கீல் ஏதோ சொல்ல வாயெடுக்கிறார். சாக்ஷியின் வக்கீல் கோர்ட்டார் பார்க்கும் மாதிரி தன் கைகளை விரித்து, முணுமுணுக்கிறார்.
கோ: அரசு வக்கீலைப் பார்த்து: Go ahead.
அ.வ.: சரி. விருந்தாந்தத்தை சொல்லவும்.
சா: அன்னலக்ஷ்மியை லவலேசமும் அறியேன். ‘நம்பிக்கை -1’ கம்பெனி ‘நம்பிக்கை -2’ கம்பெனியில் அடக்கம். நான் ‘நம்பிக்கை -2‘கம்பெனியின் நிர்வாகப்பொறுப்பேற்காதத் தலைவன். ‘நம்பிக்கை -1’ கம்பெனியின் தலைமைக்குழுவில் இருந்தேன். எப்போது? என்ன? என்பதை மறந்து விட்டேன். வெகுதான்ய ௵ அந்த பதவியில் இருந்தேனா என்று சொல்ல இயலாது.
(இதெல்லாம் ஆவணங்களிலிருக்கும். அந்த கதையை அவிழ்த்து விட்டால், இந்த கதை எங்கெல்லாம் செல்லுமோ!)
(அரசு வக்கீல் அவரிடம் ஒரு தஸ்தாவேஜை காண்பித்தார். அன்னலக்ஷ்மி பெயரில் ஒரு வங்கிக்கணக்கைத் துவக்க, சாக்ஷியும், சாக்ஷிணியும் (ஆஹா! அவர் பெண்பால் அறிந்தவர் என்பது தெளிவாயிற்று. அது ஒரு புறமிருக்க…அந்த தஸ்தாவேஜில் சாக்ஷியும், சாக்ஷிணியும் கையொப்பமிட்டு இருந்தனர். அன்னலக்ஷ்மியின் சித்திரம் வேறே பதிவாகி இருந்தது.)
சா: அவை எங்கள் கையொப்பம் என்று உறுதி செய்கிறேன். எங்கள் இருவரின் வருமான வரி ஆவணங்கள் அங்கு பதிவு ஆகியுள்ளன. ஸத்யமேவ ஜயதே! ஸத்ய ஸத்யமேவ ஜயதே! மேவ ஜயதே!
(அரசு வக்கீல் அவரிடம் மற்றொரு தஸ்தாவேஜை காண்பித்தார். அன்னலக்ஷ்மி பெயரில் இவரது கம்பேனி ‘அன்னதானம்’ செய்வதை பற்றியது, அது.)
சா: அது பற்றி யான் ஒன்றும் அறியேன் பராபரமே. (ஒரு கூஜா ஓடி வந்து கொடுத்த திருநீரை அணிந்துகொள்கிறார்.)
சா: (தென்பு திரும்ப) அந்த தஸ்தாவேஜில் என் பெயரும், சாக்ஷிணியின் பெயரும் இருந்தாலும், அது வங்கியின் தஸ்தாவேஜு. அதை பற்றியும், அதன் பொருளடக்கத்தைப் பற்றியும் யான் லவலேசமும் அறியேன் என்பது கண்கூடு, வெட்ட வெளிச்சம், உள்ளங்கை நெல்லிக்கனி, வெள்ளிடை மலை.
(கோ: சாக்ஷியின் வக்கீலிடம் ‘உமது கட்சிக்காரர் சொல்லாட்டம் ஆடுகிறார். அதை கட்டுப்படுத்தி வைக்கவும். இது என் ஆணை.)
(அரசு வக்கீல் சாக்ஷியிடம் அன்னலக்ஷ்மியின் ஊழியர்களான, சித்தார்த், இந்திரன், விஷ்ணு என்ற மூவரின் சித்திரங்களை காண்பித்தார்.)
சா: ஓ! இவர்களை தெரியுமே. இவர்கள் குழுவினர் ஆச்சே. ஆனால் அவர்களின் பதவி, கையொப்பம் பற்றி யாதும் அறியேன்.
அ.வ.: கனம் கோர்ட்டார் அவர்களே! சாக்ஷியை குறுக்கு விசாரணை செய்ய அனுமதி கோருகிறேன்
கோ: Granted.
குறுக்கு விசாரணையின் போது, தான் வேவுத்துறை அதிபதியிடம், இவ்வழக்கு சம்பந்தமாக போனதை ஒப்புக்கொண்ட சாக்ஷி, தான் எழுத்தில் கொடுத்து மாட்டிக்கொள்ளவில்லை என்று கம்பீரமாக பதிலினார். கோர்ட்டார் கேட்ட வினாவுக்கு பதில் அளிக்கும்போது தனக்கு அச்சுறுத்தல், இற்செறிப்பு ஒன்றும் வரவில்லை என்று திண்ணமாகக் கூறினார். பொய் சொன்னால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அறிவேன் என்று அடித்துக்கூறினார்.
(இதெல்லாம் ஆவணங்களிலிருக்கும். அந்த கதையை அவிழ்த்து விட்டால், இந்த கதை எங்கெல்லாம் செல்லுமோ!)
மறுபடியும் குறுக்கு விசாரணை:
சா: அன்னலக்ஷ்மியை எங்களுடன் உறவாட யாம் அழைக்கவில்லை. அவளது வானள்ளும் சாகசங்களை பற்றி கொஞ்சம் கூட எனக்குத் தெரியாது. அவளுக்கு ‘நம்பிக்கை -1’ கம்பெனி எக்கச்சக்கமாகக் கொடுத்த பொன் மோஹராக்கள் பற்றி எனக்கு எப்படித்தெரியும்?நீங்களே சொல்லுங்கள். நானோ! ஒரு அப்பாவி!
அன்றைய கோர்ட்டுக் கலைந்தது.
மறுநாள் சாக்ஷிணியும் கிருகலக்ஷ்மி என்ற பீடத்திலமர்ந்து, கம்பெனிகளுக்கு தான் கம்பெனி கொடுக்கவில்லை என்ற தோரணையில் விடையளித்தார். (கம்பெனி ஆவணங்கள் சொலவு வேறானால் என்பது வேறு ஒரு கேள்வியோ என்ற ஐயம்.
ஹூம்!

சித்திரத்துக்கு நன்றி
மெட்ராஸ் (சென்னை) ஹை கோர்ட்+வ.உ.சி.+வாலேஸ்வரன்
POSTED ON 5:39 PM BY SANKARA RAMASAMY WITH NO COMMENTS

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

பிஎசுரம்: வல்லமை: 24 08 2013


Aadhiraa Sat, Aug 24, 2013 at 10:00 PM
Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com
ம்ம்ம்  கட்டுரை படித்தேன். மிகவும் பயனுள்ளது.தங்களது கட்டுரையை விட பதிலினார், இற்செறிப்பு முதலிய சொல்லாட்சிகளை மிகவும் ரசித்தேன் சார்.

சென்னையிலா? பாண்டியிலா?

2013/8/24 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>


Innamburan S.Soundararajan Sun, Aug 25, 2013 at 6:56 AM
To: "vallamai@googlegroups.com"
பாண்டியில் பாண்டி ஆடி வருகிறேன். மிக்க நன்றி ஆதிரா.

அன்றொரு நாள்: ஆகஸ்ட் 25




அன்றொரு நாள்: ஆகஸ்ட் 25

Innamburan Innamburan Thu, Aug 25, 2011 at 12:44 AM


அன்றொரு நாள்: ஆகஸ்ட் 25
என்னத்தை சொல்றது? மெய்ஞ்ஞானமோ, அழிந்து போகும், உடலாகிய மெய்யை பற்றி அல்ல. விஞ்ஞானமோ ‘மெய்யும் பொய்யோ?’ ‘பொய்யும் மெய்யோ?’ என்று வினவியபடி, தேடிக்கொண்டே இருக்கிறது. பாத்தேன்! 2011 ஐ 1835 இல் கட்டிப்போட்டேன், சந்திர மண்டல சித்திரங்களை இணைத்து விட்டு. முழுப்பொறுப்பையும் என் தலையில் சுமக்கிறேன். வினவவும். வினயமாக விடை கூறுகிறேன்.
ஆகஸ்ட் 25,1835 முதல் ஐந்து நாள் நியூ யார்க் கதிரவன் என்ற இதழில் காலக்ஷேபமாக நிகழ்ந்த வானவியல் கட்டுரைகளின் ரத்னசுருக்கமும், அதை அறிமுகம் படுத்த, ஆகஸ்ட் 21, 2011 இல் லண்டன் டைம்ஸ் இதழில் வந்த கட்டுரையின் தலைப்புகளையும், அவற்றை சார்ந்த என் வினாக்களையும் முன் வைத்து, உங்களுடைய மேலான அபிப்ராயங்களை, ஆவலுடன் நாடுகிறேன்.
ஆகஸ்ட் 21, 2011
‘அமெரிக்க ஸ்பேஸ் மையம் மனிதர்கள் வேறுலகங்களுக்கு புலன் பெயர்வதை பற்றி ஆலோசனை கேட்கிறது.’
~ கேட்டதா? 
‘கடலோடிகள் மாதிரி கிரகமோடிகள் வேண்டும். விண்ணப்பிக்கவும்.’
~ விண்ணப்பித்தீர்களா? 
‘கருவை உறைய வைத்து, வேறுலகம் சென்ற பின் உயிர்ப்பிப்போம்.’
~ உயிர்ப்பித்தார்களா? 
‘பிரபஞ்சத்தின் சுரங்கங்களை அறிவோம். அவற்றில் பயணிப்போம்.’
~ யாத்ரா பலன் யாதோ?
‘அணுசக்தி கூட கொஞ்சூண்டு. பிரபஞ்சப்பயணம் நூற்றுக்கணக்கான வருடங்கள் பிடிக்கும்.’
 ~ உயிருடன் இருந்தீரோ? 
‘ஆல்ஃபா சென்சுரி’ விண்மீன் தான் நமக்கு அண்டை வீடு.’.’
~ ஆமாம்! அடுத்த வீட்டுத்திண்ணை.
‘வாயேஜர் விண்கலத்தில் மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் பயணித்தால்,  ‘ஆல்ஃபா சென்சுரி’ அடைய 70 ஆயிரம் ஆண்டுகள் பிடிக்கும்.’
~அப்பாடா! 
‘இப்புவி ஒரு அங்குலத்தின் ஐந்தில் ஒரு பங்கு விட்டமுள்ள வட்டம் என்றால், ஆல்ஃபா சென்சுரி 800 மைல தூரம்.’
~அம்மாம் தூரமா?

ஆகஸ்ட் 25,1835: தலைப்பு:


GREAT ASTRONOMICAL DISCOVERIES 
LATELY MADE 
BY SIR JOHN HERSCHEL, L.L.D. F.R.S. &c. 
At the Cape of Good Hope 
[From Supplement to the Edinburgh Journal of Science]

சுருக்கம்:
புதிய தொலை நோக்குக்கருவியும் ,நவீன விஞ்ஞான கோட்பாடும் இங்கே...சந்திர கிரஹத்தில் கானகங்களும், மாபெரும் ஏரிகளும், பிரமிடுகள் உளன. காட்டெருமைகள் மேய்கின்றன. நீலமேக யாளிகளை மலை மேல் காண்கிறோம். வட்டவடிவம் கொண்ட அதிசயப்பிராணிகள் நடக்கவும் நடக்கின்றன; நீந்தவும் செய்கின்றன. இருகால் பிராணிகள் வசிக்கும் குடில்கள் கண்டோம்; அவை அக்னி பிரயோகம் செய்வதையும் கண்டோம். கோயில்களில் தங்க விமானம் பளபளக்கிறது.; பறக்கும் மனிதர்கள் (வெஸ்பர்டில்லியோ~ஹோமோ) வேறு.  அறுபது அடி நீளமான எங்கள் தொலை நோக்கியின் உதவியால், சந்திரனின் மலைகளையும், மடுக்களையும், சமவெளிகளையும் தெளிவாகக் காணமுடிந்தது. சர்வே செய்து, அளவுகளை, இது வரை விஞ்ஞானத்தின் வரலாறு காணாத வகையில், சரி பார்க்க முடிந்தது...என்ன தான் தொலை நோக்கினாலும், ஒளி தர சூர்யன் வேண்டுமே. அதையும் சரிக்கட்டினோம். சொல்லி மாளாது. விஞ்ஞானிகளில் ஒட்டு மொத்தமான கூட்டு ஆராய்ச்சிகளினால், ஒளிமயமான தொலைநோக்கு திறன் அடைந்தோம்...ஜலவாயு~ பிராணவாயு நுண்~ஆராய்ச்சி கருவியின் மேன்மையும், உபயோகமும் விலை மதிப்பற்றவை...எங்கள் லென்ஸ்ஸெ 14,826 இராத்தல் எடை. 42 ஆயிரம் மடங்கு பெரிதாக்கிக்காட்டும் சக்தி யுடையது. இந்த புவியில் இல்லாத சந்திரனின் அதிசயம், அங்குமிங்கும் அலையும் மலைகள்! மலைத்து விட்டோம், ஒரு ஆழமான, விஸ்தாரமான ஏரியை பார்த்து. ஏனெனில், அது மரண ஏரி! எண்டோமியான் எரிமலைகளை கண்டோம். க்லோமெடீஸ் மலைத்தொடரில் எத்தனை குழிகள், பள்ளங்கள்!
மிக ஆர்வத்துடன் நாங்கள் கண்டுபிடித்த இரு பெரிய வளையங்களை பற்றி: ‘அவை சூரியமண்டலத்திலிருந்து பிரிந்து போன இரு துருவங்களில் அமைந்த பூலோக அமைப்புகளின் துண்டங்கள். அவை சந்திரமண்டலத்தில் சரணடைந்த விந்தையை, மர்மத்தை என்னவென்று சொல்வது?

மேலும் சில தகவல்கள்: ஐரோப்பியநாடுகள் எல்லாம் தமது விஞ்ஞானிகளை அனுப்பினார்கள்; இங்கிலாந்து வரப்போகும் வெள்ளி கிரஹம் இடம் மாறும் வைபவத்தை ஹெர்ஷல் அவர்கள் தான் ஆய்வு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டது. அவரும் ஒத்துக்கொண்டு ஒரு வருடம் முன்பே செய்யவேண்டிய திட்டங்களை அறிவித்தார். 
புகழ் வாய்ந்த யேல் கல்லூரியில்: மாணவர்கள், பேராசிரியர்கள், முனைவர்கள், ஆன்மீக/தெய்வீக/சட்ட மேதைகள் யாவரும் தினந்தோறும் ஆவலுடன் காத்திருந்தனர். அவர்களிடையே, ‘சர் ஜான் ஹெர்ஷலின் ஆய்வுகளை கண்டீரோ? சூர்யக்கதிர் இதழ் படித்தீர்களோ? சந்திரனில் மனித நடமாட்டம் பார்த்தீர்களோ?’ போன்ற கேள்விகளால், ஒருவரையொருவர் துளைத்துக்கொண்டு இருந்தனர்.
இது தான் சாக்கு என்று நானும் ஓடி வந்து விட்டேன்.
இன்னம்பூரான்
25 08 2011

Moon Jpj.pages
76K

coral shree Thu, Aug 25, 2011 at 6:31 AM

அன்பின் ஐயா,
அருமையான வினாக்களை எடுத்து வைத்திருக்கிறீர்கள். எத்துனை ஆழ்ந்த சிந்தனை.........பதிலுக்காகக் காத்திருப்போரின் பட்டியலில் நானும்............
சந்திர மண்டலம் குறித்த தகவல்கள் என்றுமே சுவாரசியமானவை.  அங்கும் மக்கள் தொகை பெருகப் போகிற காலம் வெகு தொலைவில் இல்லையோ?
[Quoted text hidden]
--

                                                              
                 

anantha narayanan nagarajan Thu, Aug 25, 2011 at 4:49 PM

என்னத்தச் சொல்றது?அட்சரம் புரியல்லை.
அரவக்கோன்
[Quoted text hidden]

Geetha Sambasivam Sat, Aug 27, 2011 at 1:53 PM

படங்களைப் பார்த்தேன். கட்டுரையும் படித்தேன்.  முற்றிலும், முற்றிலும்னா சுத்தமாத் தெரியாத ஒரு தகவல். பகிர்வுக்கு நன்றி. ஓடி வந்தா எப்படி?? கேள்விகளுக்கும் பதில் கொடுக்க வேண்டாமோ? 
2011/8/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>


இது தான் சாக்கு என்று நானும் ஓடி வந்து விட்டேன்.
இன்னம்பூரான்
25 08 2011


Innamburan Innamburan Sat, Aug 27, 2011 at 10:17 PM


சுத்தமாத் தெரியாத தகவல் தான். 420! டுபாக்கூர்! தற்கால செய்தி.உண்மை. என் வினாக்களின் அதிகப்பிரசங்கம் வெளிப்படை. நானே பொறுப்பு என்றதெல்லாம், குறிப்பால் உணர்த்த! ந்யூயார்ல் சன் என்ற இதழ் ஹெர்ஷல் என்ற புகழ் பெற்ற விஞ்ஞானியின் பெயரை சும்மா கலாட்டா செய்ய எடுத்துக்கொண்டு பிஃல்ம் காட்டிற்று. அவர் கோபிக்கவில்லை, முதலில். ஆனால், யேல் முதற்கொண்டு, ஏமாந்த சோணகிரியான போது, அவருக்கு பிடிக்கவில்லை. ஆனா பாருங்கோ! இன்று வரை அந்த இதழ் தான் செய்த கிருத்திரமத்தை ஒத்துக்கொள்ளவில்லை. தமிழ்த்தேனி என்ன சொல்றாரு?
இன்னம்பூரான்
 

Saturday, August 24, 2013

நாமக்கல் கவிஞர்:அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24


அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24

Innamburan Innamburan Wed, Aug 24, 2011 at 1:34 AM

அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24
     உங்களுக்கு கருப்பையா பிள்ளையை தெரியுமோ? அம்மணியின் எட்டாவது குழந்தை. இது அம்மா ஆசையுடன் கூப்பிடும் பெயர். அவர் தான் நாமக்கல் கவிஞர். கவிஞர்களில் சிலரின் உரைநடை, கவிதை, அறிவுரை எல்லாம் எளிய நடையில், படோடோபமில்லாமல் இருக்கும் என்பதற்கு பாரதியார், கவிமணி, பாவேந்தன், நாமக்கல் கவிஞர் ஆகியோர் தக்க சான்றுகள். சிறுவயதில் நாமக்கல் கவிஞரின் ‘என் சரிதம்’ என்னை ஈர்த்ததின் காரணம் அதுவே. இயல்பான நடை என்னை கேட்டால், இந்த விஷயத்தில், அவரை முன்னால் வைப்பேன். அவரிடம் ராஜ விசுவாசமும், விடுதலை பற்றும், அவரது கவிதைகளும், ஓவியங்களும் ஒரு சேர இருப்பதைப் போல், முரண் யாதுமில்லாமல், தன்னிச்சையாக வளைய வருவதைக் கண்டேன்.  அக்டோபர்19, 1888 இல் பிறந்த திரு. வெ.ராமலிங்கம் பிள்ளை (நாமக்கல் கவிஞர்) அவர்களை ஆகஸ்ட், 24, 1972 அன்று இழந்தோம். காந்திஜி விதைத்த விதை என்று ராஜாஜி அவரை விமரசித்தது சரியே. சதா சர்வகாலமும் காந்திஸ்மரணை, இவருக்கு. இவருடைய காந்தி மலர் ஒரு நூலன்று. அது ஒரு வாடாத பூச்செண்டு. இது ஒன்று போதும் சமச்சீர்க்கல்வியை, படிப்படியாக அளிக்க.
     வாழ்க்கை விநோதமானது. தந்தை வெங்கடராமனோ காவல் துறை. தேசபக்திக்கான உரம் யாதுமில்லை. சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், நல்லிசையும் செவிப்பழக்கம், நாடகமும் நடைப்பழக்கம் என்று இருந்த கவிஞரின் நண்பர் எஸ்.ஜி. கிட்டப்பாவின் ஏழுகட்டை சுருதி தமிழுலகம் அறிந்ததே. அவருக்கு பாட்டு எழுதப்போய், இவரையும் நாட்டுப்பற்று தொற்றிக்கொண்டது. நாகராஜ ஐயங்கார் என்பவரும் இவருடன் சேர, இருவரும் அரவிந்தர் போன்ற சான்றோர்களின் உரைகளை கேட்டு களத்தில் இறங்கினார்கள். நம் கவிஞரின் சொற்பொழிவுகளுக்கு கூட்டம் சேர்ந்தது. வாசாலகர் இவர் என்க.
     ஒரு உரையாடல்: செட்டி நாடு/காரைக்குடி: 
பாரதியார்: ‘கவி பாடுவீரோ? ஒன்று பாடும்.’
கவிஞர் (அவருக்கு நல்ல குரல் வளம்): "...தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்...’
பாரதியார், "பலே பாண்டியா! பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை. "தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்...' பலே, பலே இந்த ஓர் அடியே போதும்''.
     நாடு விடுதலை அடைந்தது 1947. சென்னை மாகாண ஆஸ்தான கவிஞர் 1949 இல் பிள்ளைவாள்.1956-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி நிர்வாக உறுப்பினரானார். 1956 முதல் தொடர்ந்து இரண்டு முறை சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். 1971-ஆம் ஆண்டு பாரத அரசு அவருக்கு "பத்மபூஷண்' விருது வழங்கிச் சிறப்பித்தது. ‘அவளும் அவனும்’ ஒரு இனிய காவியம். புதினங்கள் பல எழுதினார். அவரின் ‘மலைக்கள்ளன்’ திரைப்படமாக வலம் வந்தது. இவரை தமிழுலகத்துக்கு அறிமுகம் செய்த பெருமை, ‘தமிழ்ப்பண்ணை’ சின்ன அண்ணாமலையை சாரும். அவரும் அருமையான சொற்பொழிவாளர். கேட்டிருக்கிறேன்.
     மறக்கலாகாது, ஐயா. நாமக்கல் கவிஞர் வேதாரண்ய உப்பு சத்யாக்ரஹத்தில் கலந்து கொண்டு, சிறை சென்றார் என்பது பெரிய செய்தி அல்ல. உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலொன்றை அவர் இயற்ற, அது இன்றளவும் அஹிம்சையின் இனிய குழலோசையாக அமைந்ததே பெரிய செய்தி.க ேளும்:
’கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்’
     1387.jpg
     இன்று தமிழ், தமிழன், தமிழ்நாடு, தமிழகம், செந்தமிழ், தனித்தமிழ், செம்மொழி, என்று தோள் தட்டுகிறோம்; குரலெழுப்புகிறோம்; வாதங்களில் இறங்குகிறோம், படியில்லா கிணற்றில் சறுக்கியபடி.  
"தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு; அமிழ்தம் அவனுடைய வழியாகும்; அன்பே அவனுடைய மொழியாகும்' 
என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை உதட்டசைத்து மட்டும் பாடுகிறோம். ஐயகோ! அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி! மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா! காலும் தொய்ந்தல்லவா போகிறது. திருந்துங்கள், ஐயா!
வணக்கத்துடன்,
இன்னம்பூரான்
24 08 2011


Geetha Sambasivam Wed, Aug 24, 2011 at 8:39 PM

அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி! மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா! காலும் தொய்ந்தல்லவா போகிறது. திருந்துங்கள், ஐயா!//

என்ன அற்புதமான சொல்லாடல்!  ஐயா,உங்களின் இந்த வரிகள் மனதைப்பிழிகிறது.  கேட்பவர் கேட்டால் நன்மை விளையும்.  விளையட்டும். அனைவரும் திருந்தப்பிரார்த்திப்போம்.  நாமக்கல் கவிஞர் குறித்த செய்திகளுக்கு நன்றி. பள்ளிப்பாடத்தில் படித்தது. 


2011/8/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஆகஸ்ட் 24
   ஐயகோ! அதை மனதில் கொள்ளாதவர்கள் எத்தனை கோடி! மனம் வலிக்கிறது. உடல் துடிக்கிறது. கை நடுங்குகிறது.ஐயா! காலும் தொய்ந்தல்லவா போகிறது. திருந்துங்கள், ஐயா!
வணக்கத்துடன்,
இன்னம்பூரான்
24 08 2011

Thursday, August 22, 2013

சென்னை குறிப்புகள் ~5 ஐந்து நாள் வைபோகம்! வைபோகமே!


சென்னை குறிப்புகள் ~5 ஐந்து நாள் வைபோகம்! வைபோகமே!

Innamburan S.Soundararajan Wed, Aug 21, 2013 at 3:07 PM

Tuesday, August 20, 2013
சென்னை குறிப்புகள் ~5
ஐந்து நாள் வைபோகம்! வைபோகமே!

உங்களுக்கு பண்டாரவாடை வெற்றிலை கதை தெரியுமோ? கும்போணம் துளிர் வெற்றிலைக்கு உள்ள மவுசுக்கு உற்பத்திஸ்தானம் பண்டாரவாடையில் படரும் வெளிர்பச்சை வெற்றிலை கொடிகள். பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தின் திறன்மிக்க பணி, அதன் சாகுபடியில். மத நல்லிணக்கத்துக்கு வெற்றிலை ஒரு எடுத்துக்காட்டு. கோயில்களுக்கு அங்கிருந்து தானே வருகிறது. ஆனா ஒண்ணு. தொட்டாச்சுணுங்கி மாதிரி, கவனம் குறைந்தால், அழுகிவிடும். உடனே விற்றுவிடவேண்டும், சல்லிசு விலைக்கு. ஆனால், நாள் தோறும் அழுகிய வெற்றிலை தான் விற்க நேரிடும். அல்லது ஒரு நாள் அழுகலை அழிக்கவேண்டும். நிதி அமைச்சரையோ அல்லது திட்டக்கமிஷனையோ கேட்டால், தினந்தோறும் அழுகிய வெற்றிலையை விற்கச்சொல்லுவார்களோ, என்னமோ, ஆடிட்காரன் மீது பழியை போட்டு விட்டு!

இத்தனை அருமையான உவமையை முன்னிறுத்துவதற்குக்காரணம், என் தற்கால நிலைமை தான். நாள் தோறும் செந்தமிழேணியில் பேலன்சிங்க்! சூறாவளி பயணங்கள். நண்பர்களுடன் சந்திப்பு. ஓயாதக் கைச்செவி. காதோ மந்தம். அது தான் போகிறது என்றால் இணையம் கிட்டாது. கிட்டினாலும் எட்டாது. எட்டினால் மீட்டிங்கில். திருவேங்கடமணி மாதிரி அநேக நண்பர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த அழகில் அன்றாட நினைவுகள் மங்கிப் போய்விடுவதால், வாசகர்களிடம் உரிமை எடுத்துக்கொண்டு, முன்னும் பின்னுமாக எழுதுகிறேன். இல்லாவிடின், அவை மக்கிப்போய்விடக்கூடும். ஜூலை 7 அன்றே, இறங்கிய களைப்புத் தீராமல் சென்னை உலா வந்ததை (காரைக்குடிக்கு வந்து என்னை வாழ்த்திய கீதா சாம்பசிவம் தம்பதிகள் நோட்டுக.) எழுதி முடிக்கும் முன் ஆகஸ்ட் 16 வந்து விட்டது. ஆண்டவா?. அதான் இப்படி. 

ஆகஸ்ட் 13 அன்று இரவு, இன்னம்பூர்/காரைக்குடி விஜயம் முடிந்த பின் ( அது பிறகு வரும்.), மறுபடியும் தஞ்சை பெரிய கோயில், தாராசுரம், கங்கை கொண்டான் ஆகிய கோயில்களில் தரிசனம் செய்து, சிற்பங்களை கண்டு வியந்து, திருவண்ணாமலையில் தமிழ்ச்செல்வி குடும்பத்தினருடன் அளவளாவி விட்டு, இராத்தங்கல் கிரோம்பேட்டையில். 14 அன்று என் தந்தையின் திதி. அவருடைய ஞாபகம் பூரணமாக மனதில் இருக்க, அவருக்கு அஞ்சலி செலுத்தினோம், நானும் என் தம்பியும். அன்றே சாஸ்திரி நகர் பயணம்.

சாஸ்திரி நகரில் ஒரு அடுக்கு மாடி வாசிகள் வாரச்சாப்பாடு போட்டார்கள், இந்த ‘ஐந்து நாள் வைபோகத்தில்’. சுகுமார்-டொரதி என்ற தம்பதியுடன் வாசம். உடனிருந்த பெண்ணரசி எவாஞ்சலின். வெளியூரில் வசிக்கும் பாலீன் தினந்தோறும் மாலை கைபேசியில். அன்று இரவு அங்கு விருந்து. பிறகு, காலை, மதியம், மாலை இந்த மாடி வீடு அல்லது அந்த மாடி வீடு என்று விருந்து. ஆகஸ்ட் 18 அன்று வழியில் உண்ண டொரதி கொடுத்த சாண்ட்விச் வரை அங்கு தான் டேரா; விருந்தோம்பல் எல்லாம். அங்கிருந்த குடித்தனக்காரர்கள் யாவரும் என்னை உபசரித்தது ஒரு மென்மையான அனுபவம். அவர்கள் எடுத்துக்கொண்ட அக்கறையும், கனிவான அன்பும், என் ஆரோக்கியத்தில் அவர்கள் எடுத்துக்கொண்ட கவனிப்பும் சொல்லில் அடங்கா. ஒரு வீடு பஞ்சாபி நண்பரின் வாசஸ்தலம். என்னிலும் முதியவரான அவருடைய மாமனாரும், அவரது சஹதர்மிணியும் உபசரித்தனர். மற்றொரு வீட்டில் ஒரு இளம்பெண்ணும், பெற்றோர்களும். கவனித்துப்போட்டதுமில்லாமல், உணவு சம்பந்தமான என் ஆசாபாசங்களை கணக்கில் எடுத்துக்கொண்டனர். மற்றொரு வீட்டில் இளந்தம்பதி, முதியவர்கள், விசால தள நேத்ரியான ஒரு ஸ்தீரி பிரஜை. சமத்து குழந்தை. அவளுடைய தங்கை, கைக்குழந்தை. அவர்கள் வைரமுத்துவின் நூல்களை எனக்கு படிக்கக்கொடுத்தனர்.

நான் விருந்தாளியாக இல்லை, டொரதி வீட்டில். வீட்டுக்கு ‘பெரிசாக’ இருந்தேன். அன்பும் கனிவும், அக்கறையும், கவனிப்பும் இயல்பாகவே அமைந்து விட்டது பூரணமாக. நாள் தோறும் ஹை-லைட்ஸ். காலை எட்டு மணிக்கு வேலைக்கும், கல்லூரிக்கும் அவர்கள் சென்று விடுவதால், எல்லாம் திட்டமிட்ட முன்னேற்பாடு. மாலை/இரவு மணிக்கணக்காக அளவளாவுதல். பாமரகீர்த்திகள் பல பாடப்பட்டன. கை பேசிகள் படம் எடுத்த வண்ணம். ஒரு நாள் மாலை என் மகளும், பேருக்கு தாதியாகவும், உள்ளபடி மற்றொரு மகளாக எங்களுக்கு இருந்த புஜம்மாவும் அவளுடைய மகளும், புது மாப்பிள்ளையும் எஞ்சினீயர் மகனும் வந்திருந்தார்கள். ‘ஆதி ஆந்திர திராவிட இனம்’ என்று சொல்லப்பட்டு, சமூகத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்ட புஜம்மாவின் குடும்பத்தின் தற்கால உன்னத நிலை எனக்கு அளித்த மகிழ்ச்சியை சொல்லி மாளாது. பல வருடங்கள் வரை சாத்தியமாகாத இந்த சந்திப்பு வஸந்தாவின் ஞாபகார்த்தமாக அமைந்தது. 

டொரதி குடும்பத்தில் நான் ‘புதிய தாத்தா’ என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஒரு மனநிறைவு தரும் நிகழ்வு. அங்கிருந்த ஐந்து நாட்களும், வினாடி தோறும், குடும்பத்தில் ‘பெரியவராக’ ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஒரு நினைவைக் கிளறியது. கேரளத்தைச் சேர்ந்த ஒரு கத்தோலிக்க சான்றோன், என் சிறு வயதில் எனக்குக் கலங்கரை விளக்காகத் திகழ்ந்தார். இத்தனைக்கும் அந்த காலகட்டம் சோகமயமானது. அவருடைய மூத்த மகனும், என் கடைசி தம்பியும் டைஃபாயிடில் இறந்த காலகட்டம். ஐம்பது வருடங்களுக்கு பின் அவருடைய கடைசி மகன் டில்லியில் என்னை சந்தித்தார். அப்போது அவர் சொன்னது, ‘நீங்கள் தான் இனி எங்கள் பெரிய குடும்பத்தின் மூத்தமகன்’ என்று எங்கள் தந்தை அடிக்கடி சொல்லுவார்.’. அந்த இனிய சம்பவமும் சரி, பாலீனுக்கும், எவாஞ்சலினுக்கும் நான், ‘the Other Thaathaa’ ஆனதும் எனக்கு பரமபிதாவும், கர்த்தரும் அளித்த வரன்கள் என்று சொன்னால் மிகையாகாது.  ஒரு குறை. ஞாயிற்றுக்கிழமை அவர்களுடன் மாதாகோயிலுக்குப் போவதாக திட்டம். உடனுக்குடன் அமெரிக்கா போய் சேர்ந்த பெண்ணுடன் பேச, அப்போது தான் நேரம் அமைந்தது. ஆகவே, மாதாகோயிலுக்கு போக இயலவில்லை.
பத்துப்பக்கம் எழுதுவதை ஒரு சித்திரம் சொல்லி விடும். அத்தகைய சித்திரங்களை எடுத்தது, டொரதி. குடும்பமே கலைக்குடும்பம். அவர்களுடன் ‘சிசு தரிசனம்’ பற்றியும், ராகத்துடன் தோத்திரபாடல்கள் இயற்றிய மரியாதைக்குரிய வேதநாயகம் சாஸ்திரிகளை பற்றியும் சம்பாஷணை நடந்தது.  நான் பயணம் செய்ய கிளம்பும்போது, நாங்கள் நால்வரும் கைகோத்து பிரார்த்தனை செய்தது, மிகவும் உணர்ச்சிகரமான நிகழ்வு:
ஆண்டவனின் பரிபூர்ணமான அரவணைப்பு அந்த குடும்பத்திற்கு என்றென்றும் கிட்டவேண்டும் என்பதே என் பிரார்த்தனை.
இன்னம்பூரான்
14 ~ 18 ஆகஸ்ட் 2013/ 20 ஆகஸ்ட் 2013
சித்திரங்கள்: டொரதி உபயம்.

5 attachments
IMG01380-20130818-1714.jpg
436K
IMG01387-20130818-1719.jpg
463K
IMG01389-20130818-1738.jpg
437K
IMG01363-20130815-1805.jpg
431K
IMG01362-20130815-1752.jpg
491K

Dorathy 
Dear Uncle / The ‘Other Thatha’ !

I cant say how we were blessed to have you with us – especially when we felt you are like my dad .. The richness of your thought and the kind of time we could spend with you was very emotional for us.  We wish you good health and we must catch up as often as we can...  We are honoured to be in your ‘blog’...

Lots of love and affection; I am really touched.   

Dorathy

PS: Tell Suja and Jagan that you are a ‘shared father’.....

From: Innamburan S.Soundararajan [mailto:innamburan@gmail.com]
Sent: Wednesday, August 21, 2013 3:08 PM
To: mintamil; vallamai@googlegroups.com
Subject: 
சென்னை குறிப்புகள் ~5 ஐந்து நாள் வைபோகம்வைபோகமே!


Geetha Sambasivam Wed, Aug 21, 2013 at 5:09 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
// தாதியாகவும், உள்ளபடி மற்றொரு மகளாக எங்களுக்கு இருந்த புஜம்மாவும் அவளுடைய மகளும், புது மாப்பிள்ளையும் எஞ்சினீயர் மகனும் வந்திருந்தார்கள். ‘ஆதி ஆந்திர திராவிட இனம்’ என்று சொல்லப்பட்டு, சமூகத்தினால் ஒதுக்கி வைக்கப்பட்ட புஜம்மாவின் குடும்பத்தின் தற்கால உன்னத நிலை எனக்கு அளித்த மகிழ்ச்சியை சொல்லி மாளாது. பல வருடங்கள் வரை சாத்தியமாகாத இந்த சந்திப்பு வஸந்தாவின் ஞாபகார்த்தமாக அமைந்தது. //

இவங்களுக்குத் தானே நீங்க உங்க மனைவியின் கடைசி வேண்டுகோளான பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றியது? வாழ்க! வளர்க!  நினைவு வைச்சுப் பார்க்க வந்திருக்காங்களே.

திருவண்ணாமலையில் தமிழ்ச் செல்வியைப் பார்த்தேன் என்பது உண்மையில் எனக்கு வியப்பு.  தமிழ்ச்செல்வி எப்படி இருக்காங்க?  அவங்களை நினைக்காத நாளே இல்லை.  இப்போ அதிகம் இணையத்தில் பார்க்க முடியலை.  தெரிஞ்சால் கேட்டதாகச் சொல்லச் சொல்லி இருப்பேன். இந்த மடலைப் பார்ப்பாங்கனு நினைக்கிறேன்.

அருமையான  அற்புதமான அனுபவங்கள். அனைவரையும் அனுசரித்துக் கொண்டு காலத்துக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டு நடப்பதாலேயே இது சாத்தியம் ஆகிறது. வணங்கிக்கறேன்.

2

Geetha Sambasivam Wed, Aug 21, 2013 at 5:10 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: மின்தமிழ்
படங்களைத் தனியாகத் தான் திறந்து பார்க்க முடிந்தது.  இங்கே வரவில்லை.  புஜம்மாவையும் பார்த்தேன். 
[Quoted text hidden]

கி.காளைராசன் Wed, Aug 21, 2013 at 7:20 PM

Reply-To: vallamai@googlegroups.com
To: mintamil
Cc: "vallamai@googlegroups.com"
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2013/8/21 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
நான் விருந்தாளியாக இல்லை, டொரதி வீட்டில். வீட்டுக்கு ‘பெரிசாக’ இருந்தேன். அன்பும் கனிவும், அக்கறையும், கவனிப்பும் இயல்பாகவே அமைந்து விட்டது பூரணமாக. நாள் தோறும் ஹை-லைட்ஸ். காலை எட்டு மணிக்கு வேலைக்கும், கல்லூரிக்கும் அவர்கள் சென்று விடுவதால், எல்லாம் திட்டமிட்ட முன்னேற்பாடு. மாலை/இரவு மணிக்கணக்காக அளவளாவுதல். பாமரகீர்த்திகள் பல பாடப்பட்டன.

சூரியஒளியும், தண்ணீரும்தான் உலகில் உள்ள எல்லாப்பொருட்களுடனும் ஒன்றாகக் கலந்து விடுமாம்.
ஐயா, தாங்கள் சூரியஒளியா? தண்ணீரா?

அன்பன்
கி.காளைராசன்



Monday, August 19, 2013

சென்னை குறிப்புகள் ~3 டைம் பாஸ் எக்ஸ்பெரஸ்...!




சென்னை குறிப்புகள் ~3
டைம் பாஸ் எக்ஸ்பெரஸ்...!




Monday, August 19, 2013
சென்னை குறிப்புகள் ~3
டைம் பாஸ் எக்ஸ்பெரஸ்...!
Inline image 2

யான் செய்த முற்பயன் விளைவாக, நமது வடிவேலரை (வேறு யாரு? வ.வெ. தான்.) போலவே அஞ்ஞாத வாசம் சென்னை மாநகரத்தில், நான்கு நாட்கள்.  அதனால், நேற்று புதுச்சேரிக்குப் பயணம், முல்லைப்பாட்டையும், கபிலரையும் நாடி. அருந்தவம் செய்ததின் நற்பயன், முன்கூட்டி பயணச்சீட்டு கெழுமை நண்பரொருவர் மூலமாக பதிவு செய்த அசகாய வருமுன் காப்போன் செயல். சாஸ்திரி நகரிலிருந்து ஒரு நண்பரின் காரில், மற்றொரு நண்பரின் உறுதுணையோடு, மாலை 6.00 மணிக்கு, அதாவது அரை மணி நேரம் முன்னதாகவே ஆஜராக வேண்டும் என்ற கட்டளை பயணச்சீட்டில் கொட்டை கொட்டையாக எழுதப்பட்டிருந்ததால், ஜாமான்கள் ஐந்து இருந்ததால், 5.38க்கே ஆஜரானோம். ஊழ்வினை உறுத்தூஊம் அல்லவா. திருவாரூர் தேர் போல ஆடி அசைந்து வந்த ‘பர்தா’ எக்ஸ்பெரஸ், குறித்த இடத்தை விட்டுத் தள்ளியே நின்றது. முன் பின் தெரியாத என்னை, ‘அஸால்ட்டாக’ பயணச்சீட்டு வகையறா கேட்காமல், ‘டுர்ரெ’ன்று கிளம்பிவிட்டது. உதவியாளர் ‘கொச்சினா?’ என்று வினவினார். நான் திக்கிட்டுப்போனேன். ‘பரவாயில்லை. முதலில் புதுச்சேரி’ என்று ஆசுவாசப்படுத்தினார். ஏன் போகும் ஊர் பேர் போடவில்லை என்றேன், அப்பாவியாக. என்னை பிள்ளைப்பூச்சியை போல் திரணமாக மதித்த ஓட்டுனர், ‘அதெல்லாம் போடக்கூடாது. நாங்கள் ரூட் பஸ் இல்லை, தினந்தோறும் ரூட் பஸ்ஸாக பயணித்தாலும்.’ என்றார். உடனே, தனக்கு ‘ஆமாம்! ஆமாம்! போட்டுக்கொண்டார். தமிழ் நாட்டில் சட்டம் செல்லாக்காசு என்று சொல்லாமல் சொன்னார்.  அந்த நிமிடம் முதல், என்னால் தடைப்பட்ட ‘கடலை போடலை’ ஊர்தி ஓட்டுனரும், அவருடைய இரு உதவியாளர்களும் இடை விடாமல் புதுச்சேரி வரை ‘லொட லொட’ என்றும், ‘சள சள’ வென்றும் தொடர்ந்தனர். இருவருக்கும் தெரிந்த சமாச்சாரங்களைச் சொல்லி சொல்லி, ஆயிரம் வாலா வெடி போல் சிரித்து மகிழ்ந்தனர். எனக்கோ அஸ்தியில் ஜன்னி. ஃப்ரண்ட் சீட் ஆச்சே!. பெல்ட் இல்லை. ஒரு பாடாக புதுச்சேரிக்கு தாமதமாக வந்து சேர்ந்தோம். பஸ் ஸ்டேண்டுக்கு செல்லாமல், வழியில், அவர்களின் ‘ஆபீஸ்’ என்ற இடத்துக்கு முன்னால் நின்றது பஸ்ஸு. ஏன் இப்படி என்றேன். மறுபடியும் என்னை பிள்ளைப்பூச்சியை போல் திரணமாகவும் விநோதமாகவும் ஓட்டுனர், ‘அதெல்லாம் போடக்கூடாது. நாங்கள் ரூட் பஸ் இல்லை, தினந்தோறும் ரூட் பஸ்ஸாக பயணித்தாலும்.’ என்றார். உடனே, மறுபடியும் தனக்கு ‘ஆமாம்! ஆமாம்! போட்டுக்கொண்டார். மறுபடியும் தமிழ் நாட்டில் சட்டம் செல்லாக்காசு என்று சொல்லாமல் சொன்னார். புதுச்சேரியிலும் தான் என்று நினைத்துக்கொண்டேன். இன்னும் சொல்ல எத்தனையோ இருக்கிறது. ‘பர்தா’ எக்ஸ்பெரஸ்’ ஒரு அச்சுப்பிழை.
வர்ரேன்....
இன்னம்பூரான்
18/19. 08 2013

Saturday, August 17, 2013

சென்னை குறிப்புகள் ~2 அதே நாற்காலி!




சென்னை குறிப்புகள் ~2 அதே நாற்காலி!

Innamburan S.Soundararajan Sat, Aug 17, 2013 at 7:02 PM




Saturday, August 16, 2013
சென்னை குறிப்புகள் ~2
அதே நாற்காலி!
=Inline image 1

பல நாள்....! நான் சொல்லவந்தது வேறே! பல வருடங்கள் என்று தான் சொல்ல வேண்டும். திரு. நரசய்யா அவர்களை, நாங்கள் இருவரும் கலந்துரையாடிய ஒரு நிகழ்வுக்குப் பிறகு, அவரது இல்லத்தில் இறக்கி விட்டு விட்டு, ‘நாளை வருகிறேன்’ என்று அவரிடம் சொல்லி விட்டு, இருபது வருடங்கள் கழித்து இன்று தான் போய் சந்தித்தேன். ஏற்பாடு ஒரு மாதம் முன்னால். போனஸ்: கொழுக்கட்டை! ஆம். வரலக்ஷ்மி நோன்பு அல்லவா. அடித்தது யோகம். அவருடைய குடும்பத்தினரின் விருந்தோம்பலை, மனதாலும், உடலாலும், சிந்தனையாலும், நாவினாலும், செவியினாலும் சுவைத்தேன். சகபாடி, ‘அலெக்ஸாண்டர் புகழ்’ நண்பர். திரு. சம்பத். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அளவளாவினோம், ஒரு நிமிடம் கூட தொய்வில்லாமல். எது எது பற்றி நாங்கள் பேசிக்கொள்ளவில்லை என்ற பட்டிமன்றத்தை என் மனதின் உள்ளுறையாக நடத்திப்பார்த்தேன். ஒரு சமாச்சாரமும் அதில் சிக்க வில்லை. எதை எதை பற்றி அலசித்தீர்த்தோம் என்று ஆலோசித்தேன். சிக்கியதை எழுத ஒரு அத்தியாயம் வேண்டும். எனவே, அவற்றை தொகுத்து வைத்து, அவர் எதிர்பாராத காலகட்டங்களில் அவிழ்த்து விடுவதாக உத்தேசம். எதற்கும் சில வார்த்தைகள். புறநானூறும், கலித்தொகையும் உலா வந்தன. சிட்டி அவர்கள் பூரணமாக மருமானை வாயிலாக வைத்துக்கொண்டு கலங்கரை விளக்காக ஒளி வீசினார். இந்திரா பார்த்தசாரதி, விகடன் ‘பாலு’(அவருடைய படப்பை தோட்டத்து கிளிகள் இதழாசிரியர் உரிமையை நிலை நாட்ட சிறை சென்ற விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்ரமணியம் அவர்களை அப்படித்தான் பிரியத்துடன் அழைக்கும்.), திருமதி கிருத்திகா அவர்கள், தருமமிகு சென்னை, ஆகஸ்ட் 18 அன்று, பழனியப்பா பிரசுரம் புகழ் திரு. செல்லப்பா அவர்கள் தலைமையில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி கழகத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வு, அதை நழுவவிட்டு புதுச்சேரி சென்று விடும் எனக்கு ஒரு மென்மையான டிக்-ஆஃப், ஏற்கனவே நடந்த தொன்மை ஆராய்ச்ச்சிக்கு இருந்த வரவேற்பு, திரு.கோபால் காந்தி, மற்றும் பல பிரபலங்கள் வலம் வந்தனர். இன்றைய சமுதாய நிலை, அரசல் புரசலான அரசியல், தமிழகத்தின் ‘புறம்’ எல்லாம் தப்பவில்லை. வீடு திரும்பும் பார்த்தால், என் எடை கூடியிருந்தது. திரு. நரசய்யா அவர்களின் அன்பளிப்பாக, என் மகவுகளுக்கும், எனக்கும் நல்வரவாகிய MADRAS: JOURNEY 1639,Lettered Dialogue, A slim Collection of his short stories, translated into English, QUEEN OF THE CORAMANDEL ஆகிய நூல்களின் சுமை இனிமையானது.
(தொடரும்)

இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி: http://media.newindianexpress.com/article1468011.ece/alternates/w460/K-R-A-Narasiah.jpg

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, August 12, 2013

பல அலுவல்களும், இடைவிடாத பிரயாணமும் இருப்பதால், பதிவுகள் தாமதம் ஆகின்றன. பொறுத்தாளவும்.
அன்புடன், இன்னம்பூரான்
12 08 2013