Wednesday, June 19, 2013

நீயும் நானும் விஞ்ஞானமும் – 3




நீயும் நானும் விஞ்ஞானமும் – 3

Innamburan S.Soundararajan Wed, Jun 19, 2013 at 1:42 PM

நீயும் நானும் விஞ்ஞானமும் – 3

இன்னம்பூரான்
Wednesday, June 19, 2013, 16:38
‘அவர் (கரியமாணிக்கனார்) புகழ் வாய்ந்த விஞ்ஞானி மட்டுமல்ல; அவர் அதற்கெல்லாம் மேலே மிகவும் உயர்ந்தவர்; புருஷோத்தமன்; லட்சியப் பிரஜை; முழுமையான மனிதர். ‘ – ஜவஹர்லால் நேரு.
உங்களுக்கு சிவக்கொழுந்து சாரைத் தெரியுமோ? தெரிந்திருக்க நியாயமில்லை. அவர் பெளதிக பாடம் எடுத்த காலக்கட்டம், நூறு வருடங்களுக்கு முன்னால்: 1911: 9ஆவது வகுப்பு: ஹிந்து உயர்நிலை பள்ளி: ஶ்ரீவில்லிபுத்தூர். தமிழில் பெளதிகத்தையும், பூகோளத்தையும்/ வேதியியலையும்  எளிதில் விளக்கி எனக்கு அதில் ஆர்வமூட்டினார், என்கிறார் ஒரு விஞ்ஞானி. அவரும் சளைத்தவரல்ல. மதிய விருந்துண்ணும் வேளையில், போகிற போக்கில், பாட அட்டவணையில்லாமல், பெளதிகத்தை போதித்து இறவாப் புகழ் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் அருமையான விஞ்ஞான கட்டுரைகள் எழுதியவர்:Sir.K.S.Krishnan.
விஞ்ஞானத்துக்கும் நமக்கும் காத தூரம் என்று நமக்குள் பச்சாதாபப்பட்டுக்கொண்டு மருகி வாடவேண்டிய தேவை ஒன்றுமில்லை. விடுதலை பெற்ற காலக்கட்டத்தில், அறுபது ஆண்டுகளுக்கு முன் விஞ்ஞானத்தின் மீதும், பொறியியல் மேலாண்மை மீதும், மாபெரும் தொழிற்சாலைகளை அமைப்பதிலும் ஆர்வமும் தீவிரமும் இருந்தது. பிரதமர் நேருவின் தீர்க்கதரிசனமும், கற்றோர்களின் தொண்டும், அன்றைய இளைய சமுதாயத்தின் தீவிர ஆர்வமும் அதற்குத் துணை நின்றன. காரைக்குடியில் இருக்கும் நவீன மின் – ரசாயன பரிசோதனை சாலையில் நடந்த இரும்பு துருப்பிடிப்பதைக் கட்டுப்படுத்தும் ஆய்வுகளும், அந்த மையத்தின் தலைவர் டாக்டர் பி.பி.டே அவர்கள் அளித்த பேட்டியும் நினைவலையில் உலவி வந்த போது, புனே நகரில், பெளதிகம் சார்ந்த பரிசோதனை மையம் கண் முன் வந்து நின்றது. மாபெரும் கட்டடம். ஒரு குட்டி கலாட்டா. கவின் அழகைப் பாதிக்கிறது என்று இரு மரங்களை வெட்டிக்கொண்டு இருந்தனர். காரில் அந்த பக்கம் வந்த ஒருவர் ‘சட்’ என்று இறங்கி ஓடோடி வந்து அரைகுறை ஹிந்தியில் சத்தம் போடுகிறார். மரத்தை வெட்டக் கூடாது என்கிறார். மற்ற அதிகாரிகள் வந்து வினயத்துடன் பிரச்சினையைச் சொன்னவுடன், மலர்ந்த முகத்துடன், ‘ மூன்றாவது மரம் நட்டு விட்டால், அழகு கூடுமே’ என்றார். கணக்குப் புலி; பாவ்லாவோ பாலே நாட்டியத்திலும் ரசனை. அவர் தான் இன்றைய தலைமாந்தன், கரியமாணிக்கனார்.
இராமனும் கிருஷ்ணனும் இணைந்து விஞ்ஞான சாதனைகள் புரிந்த கதை, இது. அணுக்களுக்குள் புகுந்து விளையாடிய சர். கே.எஸ்.கிருஷ்ணன் அவர்களை ராயல் சொஸைட்டியில் அனுமதிக்கப் பரிந்துரை செய்த சர்.சி.வி.ராமனின் பரிசோதனைகளுக்கு உடனிருந்து பல ஆராய்ச்சிகளை செய்த தம்பி கிருஷ்ணனை வானாளவ புகழ்கிறார், அண்ணா. ராமன் எஃப்பெக்ட்’ என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞான சாதனை, சொல்லப் போனால், ‘ராமகிருஷ்ண எஃப்பெக்ட்’ தான். ஆனால், தன்னடக்கத்துடனும் பெருந்தன்மையுடனும், ராமன், ‘இது கிருஷ்ணன் எஃப்பெக்ட்’ என்கிறார். கிருஷ்ணன், ‘இது ராமன் எஃப்பெக்ட் தான்’ என்கிறார்.  பெளதிக சாத்திரத்தின் மற்ற கிளைகளிலும் இவரது கொடி பறந்தது. தற்காலத்தில், ஒளஷதங்கள், வர்ணங்கள், பிளாஸ்டிக், எரிபொருள்கள், நடையுடை யாவற்றிலும் கரியமாணிக்கனாரின் கைவண்ணம் மிளிர்கிறது.
வத்திராயிருப்பு கிராமத்தில் டிசம்பர் 4, 1898இல் பிறந்த நமது கரியமாணிக்கம் சிவக்கொழுந்து சாரைப் பற்றி சொல்வது,’…அவர் விஞ்ஞானியல்ல. ஆனால். விஞ்ஞானத்தை விளக்குவதில் மன்னன். மகுடிக்கு மயங்கிய அரவம் போல எங்களைக் கட்டிப் போட்டார். பெளதிகமோ, பூகோளமோ, வேதியியலோ, அவரது ஸ்டைலே தனி. அவர் பாடம் மட்டும் நடத்தமாட்டார். பரிசோதனைகளைச் செய்து காட்டுவார். எங்களைச் செய்ய ஊக்குவார். அவரால் தான் நான் விஞ்ஞானத்தில் ஆர்வம் கொண்டேன்…’.
சிவக்கொழுந்து சாருக்கு நெடுஞ்சாண்கிடையாக தாள் பணிந்து வந்தனம் செலுத்தும்
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி:
உசாத்துணை:
பிரசுரம்:http://www.vallamai.com/?p=36253

Tuesday, June 18, 2013

22: வெட்டவெளியிலே கரும்புள்ளி !:தணிக்கை.




22: வெட்டவெளியிலே கரும்புள்ளி !:தணிக்கை.
Innamburan Innamburan Fri, Jan 27, 2012 at 8:26 PM

தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை:22:
வெட்டவெளியிலே கரும்புள்ளி !
இன்னம்பூரான்
26 01 2012

கடந்த 2011ம் வருடத்தில் இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட துறை: அகில இந்திய தணிக்கைத்துறை. அரசியலில் ஆளுமை செலுத்துபவர்களால் பெரிதும் வசை பாடப்பெற்ற
மகிமையும் அதைத்தான் சாரும். ஊடகங்களால் ஆதரவுடனும், எதிர்மறையாகவும் விமர்சனம் செய்யப்பட்ட துறையும், அதுவே. நடுநிலையில் நின்று, ஆதாரங்களுடனும், புள்ளி விவரங்களுடனும், நிரூபணங்களுடனும், மறுக்கமுடியாத முடிபுகளுடனும், தங்கு தடையின்றி, நமது அரசியல் சாசனத்துக்கு ஏற்புடைய வகையில், அதன் அடிப்படைக்குக் குந்தகம் இல்லாத வகையில், தரமுயர்ந்த அறிக்கைகளை சமர்ப்பணம் செய்யும் துறை, இது ஒன்றே. ஆகவே, குடியரசு தினத்தன்று, இந்த தொடர் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகிறது.
logo.png

தற்காலம், மக்களால், அரசின் செயல்கள், கொள்கைகள், ஒப்பந்தங்கள், முரண்செயல்கள், தடுமாற்றங்கள் எல்லாம் ஆராயப்படுவதும், விழிப்புணர்ச்சியுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் தொட்ட குறைகளையும், விட்ட குறைகளையும், பாரபக்ஷமில்லாமல் அலசப்படுவதும் கண்கூடு. சில மாஜி அமைச்சர்களும், கட்சி பிரமுகர்களும், உயரதிகாரிகளும் சிறை சென்றதின் முகாந்திரம், இந்த ஆடிட் அறிக்கைகளே. அவை அரசியல் சாசனத்தின் கட்டளைக்குட்பட்டு, பாராளும் மன்றத்தில்/சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படுகின்றன. தணிக்கைத்துறைக்கு நாடாளும் மன்றம் தான் எஜமானன் என்பர். ஆனால், அரசியல் சாசனத்தின் மேலாண்மையை உணர்த்துவர், நுட்பம் அறிந்தவர்கள். இன்றைய காலகட்டத்தில், 150 வருடங்களாக, இடைவிடாமல் பணி புரியும் இத்துறையின் எஜமானன், மக்கள் சமுதாயமே என்பது என் கருத்து. இது நிற்க.

அணுசக்தி இலாக்காவும், வெட்டவெளி (ஸ்பேஸ்) இலாக்காவும் பலவருடங்களாகவே, குற்றம், குறை காண்பவர்களை அண்ட விடுவதில்லை. அவற்றை தணிக்கை செய்வது எளிதும் அன்று. ஆவணங்கள் கொடுக்கப்படவேண்டும்; கிடைத்தவை புரியவேண்டும்; நாட்டின் பாதுகாப்பு விஷயங்களுக்கு முக்கியத்வம் கொடுக்கவும் வேண்டும். இவற்றை கவனத்தில் வைத்துக்கொண்டு தான் ஏற்புடைய தணிக்கை கையேடுகள் தயார் செய்யப்பட்டு, விஞ்ஞான ஆடிட் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, ஒரு தனி பிரிவே இயங்குகிறது.
இது வரை தணிக்கை முடிவுகளை, தகுந்த காரணம் காட்டி, யாரும் குறை கண்டதில்லை.
IndianSpaceResearchOrganisation_thumb.jpg

இந்தியாவின் வெட்டவெளி இலாக்கா, ஆண்ட்டிரிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற தன்னுடைய நிழல் (‘பினாமி’ மாதிரி; ஆனால்,அநாமதேயம் அல்ல.) மூலம் தேவாஸ் மல்டி மீடியா என்ற கம்பெனிக்கு, விதிகளை விலக்கி, சலுகைகள் நிறைந்த ஒப்பந்தம் அளித்ததால், கோடிக்கணக்கில் (2,00,000 கோடி) நஷ்டம் என்றும், உள்கை ஆதரவும், புறங்கை சுவையுமாக, பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன என்றும் இந்திய தணிக்கைத்துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறுகிறது. ‘முதல் கோணல்’ என்று தொடங்கி, முற்றும் கோணல்’ என்று அலசியிருக்கிறது, அந்த ரிப்போர்ட். நியாயப்படுத்த முடியாத தாமதத்திற்கு பிறகு, ஃபெப்ரவரி 2011ல் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, மத்திய அரசு, ஆடிட் ரிப்போர்ட்டை உறுதி செய்திருக்கிறது. அதற்கு இப்போது 2012 ல் என்ன என்று கேட்பவர்களுக்கு, இன்றைய செய்தி ஒன்று பதில் அளிக்கிறது. திரு. மாதவன் நாயர் என்பவர் பிரபல விஞ்ஞானி. வெட்டவெளித்துறையின் முன்னால் தலைவர். மத்திய அரசு அவருக்கும், மேலும் மூன்று மாஜி அதிகாரிகளுக்கும் யாதொரு அரசு பதவியும் கொடுக்கலாகாது என்றொரு ஆணை பிறப்பித்துள்ளது. அந்த தடாலடி ஆணை நான்கு விதமான சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 

முதல் கேள்வி: 
அவர்கள் நிஜமாகவே தவறு செய்திருந்தால், அவர்களில் சிலரும், மற்றும் சிலரும், தணிக்கைத்துறை அப்பட்டமாக எழுதியது போல தங்க நாணயங்களை பரிசிலாக பெற்று இருந்திருந்தால், இந்த மென்மை வருடல் ஒரு தண்டனையா என்ன? அவர்கள் மீது சட்டபூர்வகமாக 2008லிருந்து ஏன் கடும்நடவடிக்கை எடுக்கவில்லை? அல்லது, அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபணம் ஆகிவிட்டால், இந்த தடாலடி ஏன்? மாபெரும் தவறுகளை ஒப்புக்கொண்ட மாதிரி தான் பிற்கால நடவடிக்கைகள் இருக்கின்றன. தவறு செய்தவர்கள் தப்பி விட்டனரோ என்ற ஐயம்; இரண்டாவது கேள்வி எழுகிறது.

இரண்டாவது கேள்வி:

இது மேலும் சிக்கலானது. ஆதாரங்களை பாரபக்ஷமில்லாமல் ஆய்வு செய்தால், தவறுகளுக்கு மற்றும் பலர் துணை போயிருக்கலாம் என்று தோற்றம். ஏனெனில், இந்த ஸ்பேஸ் துறையே பிரதமரின் நேரடி அலுவல்களில் ஒன்று. அவர் தான் இத்துறைக்கு பொறுப்பு ஏற்கும் அமைச்சர். அவருடைய அலுவலகத்தில் துணை அமைச்சராக இருக்கும் திரு.பிருதிவிராஜ் செளஹான் அன்றாட பொறுப்பு வகிக்கும் துணை அமைச்சர். அவருக்கும், பிரதமரின் அலுவலகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு தெரியாதபடி, திரு. மாதவன் நாயர் மறைத்து விட்டார் என்று சொல்ல இயலாது. அவர்கள் தஸ்தாவேஜுகளை இனம் கண்டு ( அல்லது இனம் காணாமல் !) அவ்வப்பொழுது சம்மதம் தெரிவித்து இருக்கவேண்டும், அரசு விதிமுறைப்படி. 
மேலும், இந்த எஸ். பாண்ட் விவகாரம் நாட்டின் பாதுகாப்பை பாதிக்கக்கூடியது. அந்த ‘பொன் பரிசில்’ அளித்த கம்பெனிக்கு எக்கச்சக்க சலுகைகள். இலாகாவின் மந்திரியோ பிரதமர். அவருக்கு தெரியாது, இந்த கூத்து என்று அவருடைய ஆலோசகர்களின் குழு சொல்கிறது. யார் இதை நம்ப முடியும்?
சந்தடி சாக்கில் துறை சாராத துணை அமைச்சர் ஒருவர் வந்து விஞ்ஞானிகளை தரக்குறைவாக, 27 01 2012 அன்று சாடியிருக்கிறார்.  அவர் வந்து புகல் என்ன நீதி என்று திரு. மாதவன் நாயர் கேட்பதில் நியாயம் இருக்கிறது. ஐயகோ! இந்தியா கலிலியோ காலத்துக்குத் தள்ளப்பட்டதோ என்று மாதவன் நாயர் வினவுகிறார். நாம் எங்கே போய் அழுவது? ஜனாப் அப்துல் கலாம் அவர்களிடம் போயா?

மூன்றாவது கேள்வி:

அந்த ஒப்பந்தம் தான் ஒரு வருடம் முன்னால் அபார்ஷன் செய்யப்பட்டுவிட்டதே என்று ஒரு சால்ஜாப்பு. அது எடுபடாது, ஐயா. இந்திய தணிக்கைத்துறை சுணக்கம் காட்டாமல் தவறுகளை சுட்டியதாலும், ஊடகங்கள் சங்கு ஊதியதாலும், மக்கள் மன்றம் ஊழலையும், லஞ்சத்தையும் நாள் தோறும் கண்டிந்து வந்த காலகட்டம், அது என்பதாலும் தான், மத்திய அரசு ஒப்பந்தத்தை ரத்து செய்தது. காலகட்டத்தை பாருங்கள்: ஃபெப்ரவரி 2011. இல்லாவிடின், ஒப்பந்தம் நிறைவேறி, ஆடிட் குறிப்பிட்ட இரண்டு லக்ஷ கோடி ரூபாய்கள்  நஷ்டம் கடையேறியிருக்கும்.

நான்காவது கேள்வி:

இந்திய தணிக்கைத்துறையின் ஆடிட் ரிப்போர்ட் பீ.ஏ.9: 2008 யின் ஒன்பதாவது அத்தியாயம் கூறியது என்ன? என்ன? சரியான கேள்வி. வல்லமை இதழில் இந்தத் தொடர் நிலைக்கு வராத காரணம், இதை வரவேற்கும் வாசகர்கள் இல்லையோ என்ற ஐயம் எழுந்ததாலே. தற்காலம், வல்லமையின் பொலிவு கூடியிருக்கிறது. புதிய எழுத்தாளர்களின், புதிய வாசகர்களின் நல்வருகையினால் உவகை கூடுகிறது. ஆகவே நான்காவது கேள்வி எழுப்பபட்டால், அடுத்த தொடரில், பதில் அளிக்க இயலும்.
(தொடரலாமா?)
இன்னம்பூரான்

அன்றொரு நாள்: ஜூலை 20:II




அன்றொரு நாள்: ஜூலை 20:II
Innamburan Innamburan Wed, Jul 20, 2011 at 5:43 AM



அன்றொரு நாள்: ஜூலை 20:II


‘...Full many a gem of purest ray serene
The dark unfathom'd caves of ocean bear:
Full many a flower is born to blush unseen,
And waste its sweetness on the desert air.

Some village-Hampden, that with dauntless breast
The little tyrant of his fields withstood,
Some mute inglorious Milton here may rest,
Some Cromwell, guiltless of his country's blood...’

தாமஸ் க்ரே அவர்களின் ‘கிராமீய கல்லறை இரங்கற்பாட்டை திரு. வீ.கே. விஸ்வநாதய்யர் சொல்லிக்கொடுத்ததை மறக்கமுடியுமோ? ‘ஆழ்கடலின் நன்முத்தை கண்டது யார்? ...

காட்டு ரோஜா மணக்குமா? திருட்டுக்கும்பலில் மாட்டிக்கொண்ட நாணயஸ்தன் என்ன செய்யவேண்டும்? தலைகால் தெரியாமல் குதிக்கும் அரசன் வீசி கடாசிய செங்கோலை நாமும் மிதித்துத் துவம்சம் பண்ணத்தான் வேண்டுமா? ‘யதா ராஜா! ததா பிரஜா!’ இது வேத வாக்கா? பைசாச துர்போதனையா? 
     
இரண்டாம் உலக யுத்தத்தில் நார்மண்டி லேண்டிங்க் உலகபிரசித்தம்.   அமெரிக்காவின் ‘அருண் க்ஷேத்ரபால்’ ந்னு வச்சுக்கோங்கோ. படுகாயமடைந்த நண்பனை காப்பாற்ற ஒரு வாலிபன் (23)  உயிரை பணயம் வைக்கிறான். நல்லவேளை பொழைச்சுட்டான். பல வருஷங்களுக்கு பின் செங்கோலை மிதிக்கச்சொல்றா. போடான்னுட்டார். அவர் சொல்றார். நார்மண்டியில் இருந்த மனோதர்மம் தான் இங்கும் என் துணை என்று. அதான் கதை. ஆனால், இவரை பற்றி எனக்கு முன்னாலேயே தெரியும் என்று யாராவது சொன்னால், எனக்கு ஆத்ம திருப்தி. ஸ்வாமி! காட்டு ரோஜா, அநாமதேய நாணயஸ்தன், விடாக்கொண்டன்ஸ், உடும்புப்பிடி, இவர்கள் எல்லாம் இல்லையானால், இந்த அரசியலர், அதிகாரமையங்கள், Extra Constitutional Power Centres, எல்லாம் நம்மை தூக்கி சாப்பிட்டிருக்கும். வரலாறு அவர்களை மறந்து போகிறது. மறக்கவைக்கப்படுகிறது. நான் சொல்வது உலக அளவில். அன்றைய இந்தியா, இன்றைய இந்தியா, உண்ணா விரதிகள், உண்ணும் ..., அவர்களை எல்லாம், நீங்களே தான் இனம் கண்டு இயங்கவேண்டும். ஒன்று திண்ணம். ‘அச்சம் தவிர். தேசம் பசாவ்!’

ஜூலை 20, 1920யில் பிறந்த சராசரி மனிதன் எலியட் ரிச்சர்ட்ஸன். தேசப்பற்றில் ஊறிய பாஸ்டன் மண். அவர் பார்க்காத பெரிய ஊழியம் இல்லை; அட்டர்னி ஜெனெரல், மாநிலத்திலும், மத்திய அரசிலும், பிரட்டனுக்கு அமெரிக்கத் தூதர், சர்வதேச கடல் சம்பந்தமான சட்டங்களை வகுத்து நிர்ணயம் செய்தவர், ஐ.நா.வின் சார்பில், நிகராகுவே தேர்தலை கண்காணித்தவர், வரலாற்றில் காணாத வகையில், அமெரிக்க அமைச்சரகத்தில் நான்கு பதவிகள் வகித்தவர், இத்யாதி.
     

நிக்சன் ஜனாதிபதியாக இருந்த போது, அவர் எதிக்கட்சியின் அலுவலகத்துக்குள் திருட்டுத்தனமாக நுழைந்தது (ஜூன் 17, 1972) முதல், பண்ணாத லூட்டி கிடையாது. கேட்காத ஒட்டு கிடையாது. அதிகார துஷ்பிரயோகம் கொடி கட்டி பறந்தது. பக்கிரியும், போக்கிரியுமாக அவருக்கு துணை நின்றோர் பலர். நன்றாக ஞாபகம் இருக்கு. பாப் உட்வெர்ட், கார்ள் பெர்ன்ஸ்டீன் என்ற இரு நிருபர்கள், பிச்சு உதறி விட்டார்கள். அந்தக் கதை படு சுவாரஸ்யம். இன்று இந்தியாவில் பாடம் எடுக்க உதவும். எங்கிட்ட ட்யூட்டோரியல் ரெடி. எப்போ சொல்வதற்க்கு வேளை வருமோ? நம்ம எலியட் ரிச்சர்ட்ஸன் ஐயா தான் அட்டர்னி ஜெனெரல்.  ஆர்ச்சிபால்ட் காக்ஸ் என்பவர் அரசு வக்கீல் (Special Public Prosecutor). கொளுத்தரராரு போட்டு. நிக்சனுக்கு சூடு தாங்கலை. எளுந்து நின்னு செங்கோலை வளைச்சுட்டு, ‘ஆர்ச்சிபால்ட் காக்ஸை டிஸ்மிஸ் பண்ணு’ என்றார், எலியட் ரிச்சர்ட்ஸனிடம். அவரு முடியாது மன்னனே! என்று சொல்லிவிட்டார். (தனி மொழி: கோவிச்சுக்காதங்கோ! பின்ன என்ன? கோபால் சுப்ரமணியம் என்ற அரசு வக்கீலை கபில் சைபல் அவமதித்தது கண்டீரோ?).

ராஜிநாமா செய்தார். அடுத்தபடி வந்த வில்லியம் ரக்கல்ஹெளஸ்ஸும் முடியாது என்க, அவரும் வேலை இழந்தார். பின்னர் செங்கோலை மிதித்து, அந்த அபகீர்த்தியை கட்டிக்கொண்டது, ராபெர்ட் போர்க் என்ற பெரிய அதிகாரி. ஆனால். அவர் பெயரும் பெர்மனெண்டா டாமேஜ் ஆயிடுத்து. அதிபரும் ஜெயிலிலிருந்து தப்ப, ராசியாகமாகவே, ராஜீநாமா செய்யும்படி ஆகிவிட்டது.  
     
‘ஒரு மிதவாதியின் எண்ணோட்டங்கள்’ என்ற 1996ல் எழுதிய நூலில், எலியட் ரிச்சர்ட்ஸன் எழுதியது: 

‘...இந்த விசாரணை சுதந்திரமாக இருந்தால் மட்டும் போதாது; அந்த சுதந்திரம் மக்களுக்கு கண்கூடாக இலங்க வேண்டும்’ என்று செயல் பட்டேன்..அதிபரின் கைக்கூலிகள் தீயவர்கள் மட்டுமல்ல. பச்சோந்திகள்...’

ஒரு லேசு தகவல்: எலியட் ரிச்சர்ட்ஸன் அவர்கள் சிலகாலம் புகழ் வாய்ந்த நீதிபதி ஃபெலிக்ஸ் ஃப்ராங்க்ஃபெர்ட்டரிடம் குருகுலவாசம் செய்தபோது, தினந்தோறும் ஷேக்ஸ்பியர் படிக்க ஒரு மணி வேண்டும் என்றார். அது கேட்டு மனம் குளிர்ந்த நீதிபதி, இவரை (வயது 33) ஹார்வேர்ட் தலைமைக்கு சிபாரிசு செய்தார்.
சுருங்கச்சொல்லின், இந்தியாவுக்கு இன்று பல்லாயிரக்கணக்கான எலியட் ரிச்சர்ட்ஸன்கள் வேண்டும். நீதிபதி ஃபெலிக்ஸ் ஃப்ராங்க்ஃபெர்ட்டர் மாதிரியும் வேணும். ஒரு வகையில் வீ.ஆர். கிருஷ்ணய்யார் மாதிரி. ஹெரால்ட் லாஸ்கியின் நண்பர். ஹெரால்ட் லாஸ்கி தான், நமது மாஜி ஜனாதிபதி கே.ஆர். நாராயணனை, நேருவிடம் சிபாரிசு செய்தவர். மனசு வச்சா, லோகம் சின்னது.
     
மற்றவர்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம் என்பதற்காக, கொஞ்சம் கசப்பு கலக்காமல் மருந்து கொடுக்க முடியுமா? இதோ ஒளஷதம். (பிடிக்கலை என்றால் டெலீட் பட்டன் இருக்கவே இருக்கு). 

மதிப்பிக்குரிய மாஜி ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை புகழ்ந்து எனது ஒரு மடல். ஹிந்து இதழில் போட்டார்கள். அதற்கு பிறகு அவர் செயலை குறை கூறி ஒரு மடல். போட்டார்களோ? போட்டதாக  நினைவில் இல்லை.
Opinion - Letters to the Editor 
The President has articulated ethical concerns and echoed public opinion.
The Oxonian in Prime Minister Manmohan Singh will recognise the incongruity
of applying a British constitutional device to the opposite end. It is not
beyond the realm of possibility that the President may resign, rather than
being pressured into giving assent in the second round. 
S. Soundararajan, 
Chennai 
Note: He did not resign and gave assent in the second round. I recall that my letter condemning the same was not published.]
இப்போ மட்டும் ஒரு இந்திய எலியட் ரிச்சர்ட்ஸன் இருந்திருந்தால்...

இன்னம்பூரான்
20 06 2011
உசாத்துணை:
http://img.freebase.com/api/trans/image_thumb/m/02chh4t?errorid=%2Ffreebase%2Fno_image_png&maxheight=200&mode=fit&maxwidth=150

Image Credit:http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/92/ElliotLeeRichardson.jpg/220px-ElliotLeeRichardson.jpg

pastedGraphic.pdf

Geetha Sambasivam Wed, Jul 20, 2011 at 8:56 AM


நார்மன் லேண்டிங் பற்றியோ எலியட் ரிச்சர்ட்சன் பற்றியோ கேட்டதில்லை.  இந்தத் தகவல்கள் புதுசு.  ஆனால் கபிலி சிபல்(சைபல்??), கோபால் சுப்ரமணியம் பிரச்னை புரியும்.  அதனால் இதுவும் புரிந்தது.  பகிர்வுக்கு நன்றி.

2011/7/20 Innamburan Innamburan <innamburan@gmail.com>






anantha narayanan nagarajan Wed, Jul 20, 2011 at 2:36 PM

வணக்கம்,
உங்கள் மடல்களை தவறாமல் படித்துவிடுகிறேன். பெரும்பாலும் அவை -அந்த செய்திகள்- அன்னியமானதாகவே உள்ளன. எனது உலகியல்  அறியாமையின் அளவு ஒரு பூதம்போல முன்னே நிற்கிறது.
அன்புடன்,
அரவக்கோன்

[Quoted text hidden]

Innamburan Innamburan Wed, Jul 20, 2011 at 5:00 PM


மிக்க மகிழ்ச்சி, திரு.அரவக்கோன், உங்கள் கருத்துக்களை நாடுகிறேன். எனக்கும் புதிய அணுகுமுறை கிடைக்கிறது. இவற்றை, நீங்கள் வரலாற்று நோக்கில், உங்களது மகனார் தன்னுடைய தலைமுறை நோக்கில், கிருஷாங்கினி, இலக்கிய நோக்கில், பரிசோதித்து, கருத்து சொன்னால், சீர்திருத்தங்கள் செய்யலாம்.
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்

]

அன்றொரு நாள் ஜூன் 19 ,àuɴ sʰáɴ sṵ tɕì




அன்றொரு நாள் ஜூன் 19,àuɴ sʰáɴ sṵ tɕì


Innamburan Innamburan Sun, Jun 19, 2011 at 6:32 PM

To: mintamil



அன்றொரு நாள் ஜூன் 19
àuɴ sʰáɴ sṵ tɕì




அகக்கண் போல, அகச்செவியும் உண்டு. மொழி புரியவில்லை என்று இந்த வீடியோவை பார்க்காமல் விட்டு விடாதீர்கள். இன்னல்கள் மத்தியில் இப்படியும் ஒரு மன நிறைவு!

தொட்டில் பழக்கம்! நான் பள்ளியில் படிக்கத் தொடங்கும் போது இரண்டாம் உலகயுத்தம். காகித பஞ்சம். இன்று வரை பழம் கடுதாசி, கவர் எல்லாம் சேத்து வச்சு, காந்திஜி மாதிரி, எழுதிக்கறது தான். எது அச்சில் வந்தாலும் பத்திரப் படுத்துவதும் தான். அந்த காலத்திலே ஃபோரம் என்று ஒரு அருமையான ஆங்கில இதழ். தற்கால அவுட்லுக், இந்தியா டுடே எல்லாவற்றிக்கும் முன்னோடி. நடுநிலை. ஆசிரியர், ஜோஷிம் ஆல்வா. காங்கிரஸ்ஸை சேர்ந்த மார்கரெட் ஆல்வாவின் தந்தை. 1947ல் அந்த இதழில் பர்மாவின் ‘நேரு’ என புகழப்பட்ட ஆங்க்ஸான் அவர்களும் அவருடைய சகபாடிகளும் படுகொலை. ஃபோட்டோக்கள். 60 வருடங்களுக்கு மேல் வைத்திருந்த அந்த ஆவணத்தை இந்த வருடம் தான் யாரிடமோ கொடுத்து விட்டேன். ஹூம்!  அதை இணைக்கலாம் என்றால்! 32 வயதில் மறைந்த ‘போக்யோக் (பெரும்தலைவர்) என்று இன்றும் போற்றப்படும் அந்த ஆங்க்ஸானின் சுபுத்திரி திருமதி. ஆங்க் ஸான் ஸு க்யி  [àuɴ sʰáɴ sṵ tɕì]; அவர்களின் ஜன்மதினம் இன்று, 1945.

சைனாவில் மக்களாட்சிக்காக போராடும் திரு.வாங்க் சொல்கிறார்: 

‘1991 வருட நோபல் சமாதான பரிசில் பெற்ற திருமதி. ஆங்க் ஸான் ஸு க்யி ஆசிய ஜோதி; உலகளாவிய மக்களாட்சி தீபம். 1989ல் நான் டியனான்மென் இயக்கத்தில் சைனாவின் மக்களுக்காக போராடியபோது, இவரின் அஹிம்சை போராட்டம் என் கவனத்தை ஈர்த்தது...இருபது வருடங்களுக்கு மேல் இற்செறிக்கப்பட்டாலும், முன்னின்று மக்களாட்சிக்கு போராடுவதில் இணையற்றவர்...’.

அவர் 1988ல் ஒரு சொற்பொழிவு ஆற்றினார். மக்களின் மனதில் அன்றிலிருந்து அவருக்கு நிரந்தரவாசம். ஜெயில் என்ன செய்ய இயலும்? கூடியது 300 ஆயிரம் மக்களா? ஒரு மிலியனா? அறியோம். எங்கும் தலைகள். மனிதக்கடல் அலை மோதியது, இவரின் பேச்சை கேட்க. பர்மாவில் பல்லாண்டுகளாக ராணுவ ஆட்சி; கடுமையான அடக்குமுறை. 14 வயதில் வெளிநாடு சென்று, 30 வருடங்கள் இங்கிலாந்தில் இருந்த திருமதி. ஆங்க் ஸான் ஸு க்யி, மரணப்படுக்கையில் இருந்த அன்னையை பார்க்கவந்தார். தேசமாதாவுக்காக தங்கிவிட்டார், பர்மாவில்.
இந்தியாவில் மேற்படிப்பு படித்த திருமதி. ஆங்க் ஸான் ஸு க்யி ஒரு வீராங்கனை; பர்மாவின் காந்தி மஹான்.(பர்மா என்று சொன்னால் என்ன? கடாரம் என்று சொன்னால் என்ன? மியான்மார் என்று சொன்னால் என்ன? மக்கள் குரல் தான் கேட்கவில்லையே!). அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு ரோல் மாடல்.  அவரை பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. யார் படிப்பார்களோ? அதான், இத்துடன் முற்றுப்புள்ளி.

எனினும் நப்பாசை. அதனால் சில வார்த்தைகள். இன்று 66 வயது அவருக்கு. 1992ல் ஜவஹர்லால் நேரு பரிசிலும், 2009ல் மஹாத்மா காந்தி பரிசிலும் அளித்து தன்னை உச்சி குளிர வைத்த இந்தியா இந்த பாருக்குள்ளே நல்ல நாடு, பர்மாவில் மக்களாட்சி வர உதவும் என்று தான் நம்புவதாக, அவர் இந்தியாவுக்கு இன்று வாழ்த்துச்செய்தி அனுப்பியிருக்கிறார். அந்த காணொலி இன்று டில்லியில் ஒளி பரப்பபடும். ஒபாமாவும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுப்பிருக்கிறார். இணைத்து இருப்பது பர்மீய மக்களுக்கு அவர் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்துச்செய்தி, காணொளியில்.
இன்னம்பூரான்
19 06 2011

குறிப்பு:மேலதிக விவரங்களை சிலர் கேட்டனர்.
அப்டேட்: 06 10,2011
*

புரட்சிக்கு ஓரிடம் உண்டு, அம்மா, இந்த பூவுலகிலே.
மியான்மார் (பர்மா) அதிபர் தீன் ஸைன் ஐராவதியில் கட்டப்படும் ம்யாத்ஸோன் அணைக்கட்டு வேலை நிறுத்தப்படும் என்றார், அண்மையில். சுற்றுப்புறச்சூழலுக்கு நல்லது. அதா அன்று. மியான்மார் சைனாவின் சினத்தை பொருட்படுத்தாது என்றும் தெரிகிறது. சைனா தான் அந்த அணைக்கட்டுக்கு தாலி கட்டியது. இந்த விரோதம் மியான்மாருக்கு நல்லது அல்ல என்றாலும், இது நல்வரவே. மியான்மாரின் யதேச்சதிகாரம், மக்களின் கருத்தை மதிக்கத்தொடங்கியது என்று அர்த்தம். இல்லையெனில்,புரட்சிசெல்வி ஆங்க் சான் ஸ்யூ க்யீ யுடன் அதிபர் பேச்சு வார்த்தை நடத்துவாரா? புரட்சிசெல்வி ஆங்க் சான் ஸ்யூ க்யீ தான் எதிர்க்கட்சியின் உருவகம். வருடக்கணக்காக இற்செறிப்பு. இப்போது அவருக்கு சுதந்திரம் அதிகம். வெளி நாட்டினர் சந்திக்கிறார்கள், அவரை. அதா அன்று. தொழிற்சங்கங்கள் அமைக்க அனுமதி.
மஹாகவி குடுகுடுப்பை சொன்னது போல, ‘நல்ல காலம் பிறக்குதையா, மியான்மாருக்கு!

எடிட்டட்: ஜூன் 19, 2013
சித்திரத்துக்கு நன்றி:https://sphotos-a.xx.fbcdn.net/hphotos-frc1/p480x480/377080_326717754008393_98488930_n.jpg


https://www.youtube.com/watch?v=gJV7fw577wk








[Quoted text hidden]

கனம் கோர்ட்டார் அவர்களே ~ 11




கனம் கோர்ட்டார் அவர்களே ~ 11






கனம் கோர்ட்டார் அவர்களே ~ 11
Inline image 1

இது வழக்கத்திற்கு மாறான வழக்கு. இன்றைய செய்தி. அமெரிக்கக் கோர்ட்டு.    ஃபிலடெல்ஃபியா மாநிலத்தில், வணக்கத்துக்குரிய கத்தோலிக்க மத குருமஹராஜ் வில்லியம் லின்னுக்கு ஆறு வருட சிறை தண்டனை கொடுத்து இருக்கிறது. அந்த மதம் சார்ந்த 15 லக்ஷம் கத்தோலிக்கர்களுக்கான மாதாகோயில்/பள்ளி/ வளாகங்களில் 1992லிருந்து 2004 வரை, வணங்கப்பட்ட பூசாரி/மதகுரு/ சாமியார்/ ஊழியர் போன்ற கழிசடைகள் சிறார்களை துன்புறுத்தி செய்த பாலின குற்றங்கள் எக்கச்சக்கம். 800 பூசாரிகளை மேற்பார்வை செய்யும் கடமையிலிருந்துத் தவறி, குற்றம் செய்த பூசாரிகளை வெள்ளந்தி மக்களிடம் உலவ விட்டும், ‘குழந்தைகளை கற்பழித்த ஈனர்களை பாதுகாத்தும், உலகை ஏமாற்றிய கயவன் என்ற  குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவருக்கு தண்டனை வழங்கிய ஜட்ஜ் தெரெஸா சர்மீனா, ‘நீ பூசாரி வேஷம் போட்ட இராக்கதர்களை ரக்ஷித்தாய். பிடி சாபம்.’ என்றார். லின், ‘ நான் ஆண்டவனுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய விழைந்தேன்.’ என்றார். அத்தனை திமிர்! 

இந்த வழக்கை பற்றி வல்லமை வாசகர்கள் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? நமது சமூகத்தில் பல அவலங்களை பார்க்கிறோம். பாலியல் கொடுமைகள், சிறார்களை வேலை வாங்குவது, பொய்க்கணக்கு, கலப்படம், ஆயிரக்கணக்கான சட்ட விரோதங்கள், ஏழை வயிற்றில் மண் அடிப்பது, வகையறா. போலி சாமியார்களும், ஆஷாடபூதிகளும், லஞ்சாதிபதிகளும், ஓட்டு வாங்கிய மக்களுக்கே வேட்டு வகையறா நிறைந்த நம் நாட்டில், எத்தனை நாட்கள், நீங்கள் கண்மூடி கந்தசாமியாக இருக்கப்போகிறீர்கள்?  நாக்கைப் பிடுங்கிக்கொள்ள வேண்டிய, இந்த கேள்விக்கு பதில் சொல்லத்தான், இந்த வழக்கை பற்றி வல்லமை வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இன்னம்பூரான்
24 07 2012
மேலதிக விவரங்களுக்கு: 
சித்திரத்துக்கு நன்றி:

உசாத்துணை
பிரசுரம்: வல்லமை இதழ்.





]

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 6




வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 6

Innamburan S.Soundararajan Tue, Jun 18, 2013 at 11:50 AM

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 6
Inline image 1

அன்றொரு நாள் உலகம் கவிழ்ந்து விட்டது. உடன்போக்கை விட சுவாரசியம் கூடிய ஊடகப்போக்கை பாருங்கள்; படித்து மகிழுங்கள். சுவரொட்டிகள் கட்டியம் கூறியதாவது:
‘அண்டசராசரங்கள் உருண்டோடின!!!!!!!!!’. - தின தந்தி.
‘இன்று காலை 5.47 மணி அளவில் புவி கவிழ்ந்த காதை’. -தினமலர்.
‘உலகம் கவிழ்ந்தது. நேர்காணல், படங்களுடன், நமது நிருபர்’. -தினமணி.
 ஸ்பெஷலு! ஸூப்பர் ஸ்பெஷலு!!!!!: 
‘தீப்பந்து போல் உருண்டோடிய தரணி’ வரலாற்று கட்டுரை: ஆர். கிருஷ்ணராமன். -ஜூனியர் விகடன்
பிரளயம்! கலி முற்றி வெடித்தது, ஶ்ரீ பாகவதத்தில் துவாபர யுகாரம்பத்திலே நூறாயிரம் வருடம் முன்னால் சொல்லப்பட்டது. - ‘சதா சர்வகால ஹிந்து தர்ம பரிபாலன பத்திரிகா.
‘உலகமாவது, கவிழ்வதாவது? இது ஒரு பார்ப்பன சூழ்ச்சி...ஐயோ!கண்ணை சுத்துதே. (தனி மொழி:பொங்கல் படைக்கிறேன், ஆத்தா! ! !) - விடுதலை.
‘உலகம் கவிழ்ந்தது என்று கேள்விப்பட்டோம். கார்டியன் இதழும் ந்யூ யார்க் டைம்ஸும் உறுதிபடுத்தினர். -ஹிந்து.
எனது கற்பனை இப்படியெல்லாம் தறி கெட்டு ஓடியதற்கு பிரமேயம், மவுண்ட் ரோடு மஹாவிஷ்ணு என்று செல்லப்பெயருடைய எங்கள் இன்னம்பூர் மூதாதை குடும்பம் நடத்தும், வாழையடி வாழையாக பண்புடன், ஆதாரத்துடன், நிதானம் இழக்காமல், அடக்கி வாசித்தே பழகிப்போன ஹிந்து பத்திரிகையில் நேற்றைய செய்தியும், தலைப்பும்:
“பகற்குறியோ? இரவுக்குறியோ? கலந்து விட்டால், கல்யாணம் ஆகிவிட்டது.” ~ மதராஸ் உயர் நீதி மன்றம்.
பறந்தன ட்வீட்டுகளும், அகமுணர்த்தும் முகநூல் மொழிகளும். அவற்றிலொன்று...: சரி. இப்போது வேண்டாம். 
யாருமே வக்கீல் குமாஸ்தாவின் கடிதங்களை படிப்பதில்லை என்று நான் சொன்னாலும், ஆயிரம் கண்கள் பார்த்தவண்ணம். உமது மூதாதையை போல் அடக்கி வாசிக்கலாகாதா என்று நா.கண்ணன் பச்சாதாபப்படுவார்.‘புரியவில்லை’ என்பார் ஸுபாஷிணி. வ.வ. பென்ச் மேலே ஏற்றுவார். திரு. (நான் கப்ச்சிப்) ...
நான் சொல்ல வந்ததின் சுருக்கம்: 
தீர்ப்பை முழுதும் படிப்பது நலம் பயக்கும்.
கேசு: ஒரு ஆணும், பெண்ணும் கூடி வாழ்கிறார்கள். இரு குழந்தைகள். சான்றுகளும், ஆவணங்களும் அதை உறுதி படுத்துகின்றன. இரண்டாவது மகவு பிரசவத்தின் போது, ஸிசீரியன் ஆபரேஷன் செய்ய , அந்த ஆண் தான் சம்மதம் கொடுத்திருக்கிறார். இப்போது லடாய்! அவள் ஜீவானம்சம் கேட்கிறாள்.
தீர்ப்பு:இந்த பின்னணியில் அவர்கள் தம்பதி தான். திருமணச்சடங்குகள் சம்பிரதாயம். எப்படி பார்த்தாலும், இவர்களை மணமானவர்களாகக் கருதுவது தான் சரி. ஜீவானம்சம் கொடுக்க வேண்டும்.
சரி. சினிமா நடிகர் திருமதி குஷ்பூ, ‘மணம் புரியாமல் கூடி வாழ்வதை’ பற்றி கருத்துக்கூறியதை பற்றி, உச்ச நீதி மன்றம் என்ன சொல்லியது தெரியுமோ?
யாராவது, இதை படித்துவிட்டு வினா எழுப்பினால்....
பாப்பம்.
சித்திரத்துக்கு நன்றி.http://4.bp.blogspot.com/-PA_xkW4X5p8/T6tyGAydSRI/AAAAAAAADSs/bH0qzlPgle8/s1600/1.jpg

இன்னம்பூரான்
18 06 2013

Monday, June 17, 2013

அன்றொரு நாள் ஜூன் 18

அன்றொரு நாள் ஜூன் 18

Edited: 18 06 2013


Innamburan Innamburan Sat, Jun 18, 2011 at 9:09 PM


அன்றொரு நாள் ஜூன் 18




அந்த நாள் நினைவில் இருக்கிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது தஞ்சாவூரிலும், உசிலம்பட்டியிலும், ஆரம்பப்பள்ளி. தஞ்சாவூரில் யுத்தப்பிரசாரத்திற்காக, ஊர்வலம் போகவேண்டும். ‘சர்ச்சில் வாழ்க! ஹிட்லர் ஒழிக’ என்று கூவவேண்டும். நாங்களும் ‘சர்ச்சில் ஒழிக! ஹிட்லர் வாழ்க’ என்று கூவுவோம். வாத்தியார்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். உசிலம்பட்டியில் தேசீயவாதி என்று முத்திரை குத்தப்பட்டதால், தள்ளி வைக்கப்பட்டேன். ஒரு தடவை மட்டும் ‘இரண்டாவது போர்முனை’ என்ற தலைப்பில் பேசவைக்கப்பட்டேன். இவை நினைவலைகள். 

இன்று, எனது அன்றைய பரமவைரியான ஸர் வின்ஸ்டன் சர்ச்சிலை பாராட்டி எழுதுகிறேன். மின் தமிழில் ‘அரசை உருப்படியாக வேலை செய்யப்படுவது எப்படி’ என்ற இழை ஓடி, நடந்து, தவழ்ந்து, நின்றே விட்டது. போர்க்காலத்தில் பிரிட்டீஷ் பிரதமரான சர்ச்சில், அரசையும், மக்களையும் உருப்படியாக வேலை செய்ய வைத்து யுத்தத்தில் வாகை சூடினார் என்பது தான் மையக்கருத்து, இங்கே.

யுத்தத்தில் பிரிட்டனுக்கு பலத்த அடி, மிகுந்த நஷ்டம், சிப்பாய்கள் பலி, மக்களுக்கு பலமுனைகளில் திண்டாட்டம். ஆனால், இவருடைய ஆவேசப்பேச்சுக்கள் ஒரு மாபெரும் ஆயுதக்கிடங்கு, படைகளுக்கு டானிக், மக்களுக்கு அருமருந்து. ஜூன் 18, 1940 அன்று பாராளுமன்றத்தில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவு, வெற்றியின் முதல் படி என்றால் மிகையல்ல. ரத்னசுருக்கமாக அது இங்கே:

“ பிரான்ஸில் நடந்த சில இழப்புகளால், நமது சேனைகளுக்கு பயங்கர நஷ்டம். 120 ஆயிரம் துருப்புகளை நமது கப்பற்படை காப்பாற்றியது, டன்கிர்க்கில். தளவாடங்கள் எல்லாவற்றையும் இழந்தோம்...நான் யார் மீதும் பழி சுமத்தவில்லை...போனது போகட்டும். ஆகவேண்டியதை கவனிப்போம். மனசாட்சியின் படி நடப்போம்...குறை காணவேண்டுமா? மாற்று வழி சொல்லவேண்டுமா? செய்யுங்கள், அதற்கான ரகசிய மீட்டிங்கில். நம் எண்ணங்கள் எதிரிக்கு தெரியலாமோ?...நம்மிடம் வலிமை, தளவாடங்கள், மக்கள் ஆதரவு, தியாகம், 50 ஆயிரம் வாலண்டியர்கள், இருக்கிறது. இது போதும் எனக்கு...பக்கபலங்கள் கனடா போன்ற நாடுகளிலிருந்து வந்த வண்ணம். (காஸ்போர்ட் என்ற ஊரில், எங்கள் இல்லத்தின் புழக்கடையில் தான் கனடா துருப்புகள் வந்து இறங்கின. இன்றும் அங்கு அது பற்றி கல்வெட்டு.) நமது கடற்படை ஈடு, இணையற்றது. எதற்கும் தயாராக நாம் இருப்பதை இந்த மன்றத்தில் உறுதி செய்கிறேன்...எதிரியின் விமானப்படை வலிமையுள்ளது எனினும், டன்கிர்க்கில் அவர்களுக்கு தண்ணி காட்டினோம்...நம்மீது குண்டுகள் விழும். ( நானிருக்கும் போர்ட்ஸ்மத்தில், ஜெர்மன் குண்டுகள் சர்வநாசம் செய்தன, மக்களின் திடசித்தம் தவிர. நான் அங்கம் வசிக்கும் குழு வரலாற்று படங்களை காண்பித்தனர்.) ஆனால், ஜெர்மன் விமானப்பபடை நசுக்கப்படும்...கடமையை செய்வோம்.தலை நிமிர்ந்து நடப்போம். ஆயிரம் வருடங்கள் ஆனாலும், ‘இது தாம் எமது பொன்னான தருணம்’ என்பது அமரவாக்கு என்க.’

எல்லா கட்சிகளும் கரகோஷம் செய்து இந்த சொற்பொழிவை வரவேற்றன. இதுவும், அவரது மற்ற இரண்டு ஆவேச சொற்பொழிவுகளும், ஒரு கவலைக்குரிய நாள் அன்று அவரே முன்னின்று விமானப்படையை இயக்கிய திறனும், பிரிட்டனின் வெற்றிக்கு கணிசமான அளவில் உதவின என்று வரலாறு சொல்கிறது. அவருடைய பேச்சை கேளுங்கள்; கீழே.
போர்க்காலத்தில் பிரிட்டனில் தஞ்சம் புகுந்த ஜெனெரல் சார்லஸ் டிகால் என்ற ஃபிரான்ஸ் நாட்டு தேசாபிமானி, அதே தினம் பீ பீ ஸீ ரேடியோவில் பேசினார். அன்று ஃபிரான்ஸ் நாடு நசுக்கப்பட்ட நிலையில். அவரது நாட்டு மக்கள், இன்னல்கள் பலவற்றை அனுபவித்தும், கொடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும், உள்ளிருந்தே ஜெர்மானிய படைகளை எதிர்த்தற்கு முன்னோடியாக கருதப்படுவது, அந்த பேச்சு- இன்று வரை.  

தேசாபிமானத்தைத் தவிர, வேறு எதையும் பொருட்படுத்தாத அவர், ஒரு விசித்திரப்பிராணி. ஒரு ஜோக் கூட உண்டு. 1959லிருந்து பத்து வருடம் அந்த நாட்டு ஜனாதிபதியாக இருந்த அவர் 1970 ல் இறந்த போது, அந்த ஜோக்:

    “Avec quoi a-t-on creusé le tombeau du général de Gaulle? [டி காலின் சமாதியை எதை வைத்துத்தோண்டினார்கள்?]

    “Avec la pelle du 18 juin… [ ஜூன் 18 என்ற மண்வெட்டியால்!]

ஜூன் 18 விண்ணப்பம் என்ற அந்த மண்வெட்டியின் சாராம்சம்:

‘நமது நாட்டு தலைவர்கள் (மார்ஷல் பெடைய்ன் & பியரி லவால்) வைரியிடம் சரண் அடைந்து விட்டனர். அவனுடைய வலிமை பெரிது. எதிர்பாராதத் தாக்குதல். ஃபிரான்ஸ் அடி பணிந்தது. ஆனால், அடி பணியவில்லை. இது உலக யுத்தம். நமக்கு ஆதரவு பெருகிறது. உலகத்தின் விதி நம் கையில். நாடு கடந்த ஜெனரல் ஆகிய நான், போர் புரிய ஃபிரான்ஸ் நாட்டு ராணுவத்தையும், வல்லுனர்களையும் அழைக்கிறேன். நம் தீவட்டி அணையாது. கொழுந்து விட்டு எரியும்.”

[கொழுந்து விட்டு எரிந்ததே!]

மூன்று காரணங்களுக்காக, இந்த இடுகை: 

(1) அரசை உருப்படியாக இயக்க முடியும்;

(2) தன்னலமற்ற தலைவர்கள் தேவை;

(3) நாட்டுப்பற்று இருந்தாலே, அருஞ்செயல்கள் பல செய்யலாம். 
இன்னம்பூரான்

18 06 2011
http://www.youtube.com/watch?v=cSnfaPY5vFI
சித்திரத்துக்கு நன்றி:http://tamilmurasu.org/data1/TmNewsImages/Evening-Tamil-News-Paper_17600214482.jpg




'City Improbables என்று ஒரு தொகுப்பு.  குஷ்வந்த் சிங் தொகுப்பாசிரியர்.  பெங்குவின் வெளியிட்டது.அதில் இரண்டு அத்தியாயங்கள். Ballimaran and the War Fund - Chaman Lal
New Delhi at War, 1939-42. இந்த இரண்டு அத்தியாயங்களையும் ஒருசேரப் படித்த ஒரு கோலாகலம் உங்கள் சிறுபதிவில் கிடைத்தது.   அன்றைய டெல்லியில் ஆங்கிலேய அதிகாரிகள் யுத்த நிதி சேர்க்க 
வீடுவீடாகச் சென்ற போது மொழிப்பிரச்னை மற்றும் போர் பற்றிய புரிதல் இல்லாது ஜெனானாவின் பெண்கள் நடந்து கொண்ட விதம் பற்றியும் ரொம்பவும் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும்.  போர்க்கால டெல்லியில் ஆங்கிலேயர்களின் இரவு நேரக் கேளிக்கைகள் குறித்த கட்டுப்பாடு மற்றும் முஷைரா நடக்கும் வீடுகளில் கிடைத்த சலுகைகள் பற்றியும் இரண்டாவது கட்டுரை லேசான அங்கதத்துடன் சொல்லிச் செல்லும்.

உங்கள் அனுபவம் இந்த இரண்டு கட்டுரைகளையும் தூக்கிச் சாப்பிட்டு நிற்கிறது.' என்ற 
யதார்த்தா கி.பென்னேஸ்வரன் இதை அற்புதம் என்று பாராட்டினார். அவருக்கு என் நன்றி உரித்ததாகுக.


------------------------------------------------------------------------------

இன்னம்பூரான் பக்கம் ~ 19




இன்னம்பூரான் பக்கம் ~ 19

Innamburan S.Soundararajan Mon, Jun 17, 2013 at 9:10 AM


MONDAY JUNE 17TH 2013

இன்னம்பூரான் பக்கம் ~ 19

‘…சாக்ரட்டீஸ் (கி.மு. 470~399) கிரேக்க நாட்டின் பிரதான நகரமாகிய ஏதென்ஸ்ஸின் பொற்காலத்தில் வாழ்ந்தவர். தனக்கு முந்திய தத்துவபோதனைகளை படித்து அவற்றில் இரு குறைகளை கண்டார். பல தத்துவங்களின் கலந்துகட்டியாக இருந்தன, அவை; ரசவாதமொன்றும் இல்லை, அவற்றில். ஒன்றுக்கொன்று முரணாக  அமைந்ததால், குழப்பம் தான் மிஞ்சியது என்றார்…’. (இன்னம்பூரான் பக்கம் ~ 17)
Inline image 1
ஏதென்ஸ்ஸின் பொற்காலம் பற்றி எழுத நினைத்தபோது, அருமையான நூல் ஒன்று கிட்டியது. வித்யாதானத்தை பற்றிய சாக்ரட்டீஸ்ஸின் சிந்தனைகள் வரவேற்கப்பட்டதால், அந்த நூலின் வரவு மிகவும் பயனுள்ளதாக அமைந்து விட்டது. கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தத்துவபோதனைத்துறையின் நுழைவாயிலிருந்த வில் டூராண்ட் (WILL DURANT, PH.D.) என்ற ட்யூட்டர் (instructor) 1917 ல் எழுதிய ‘தத்துவமும் சமூக சிக்கல்களும்’ என்ற நூல், அது. சமூகத்தின் சிக்கல்களை களைவதில் தத்துவம் ஆர்வம் காட்டவில்லை என்ற அந்த நூல் தான் அவருடைய முனைவர் விருதுக்கான ஆய்வு கட்டுரை/ முதல் நூல். பிற்காலம் கலாச்சாரங்களும் நாகரீகங்களும் பிறந்த வரலாறுகள் எழுதி , இன்றளவும் இறவா புகழ் பெற்ற வில் டூராண்ட் அவர்களே, நமக்கு அருமையான நடைமுறை தத்துவங்களை போதித்தவர். என்றாவது ஒரு நாள் அவரை பற்றி எழுதுவது நலம் பயக்கும். ஏதன்ஸ்ஸின் பொற்காலத்தை பற்றி அவர் எழுதியதின் சில அத்யாயங்களின் சாராம்சத்தை மட்டும் கூறி, உசாத்துணையாக, அந்த மின் நூலை தருகிறேன். ஆர்வமுள்ளவர்கள் படித்து பயன் பெறலாம். கட்டுரையையும் அந்த ஒற்றையடி பாதையில், சிறிது காலம் பயணிக்கும்.
சாக்கிரட்டீஸ் காலத்து மறுமலர்ச்சி/ புரட்சிகரமான சிந்தனைகள்/எதையும் புரட்டிப்பார்க்கும் மனப்பான்மை எல்லாவற்றிற்கும் மூல காரணமே, அதற்கு முந்தியகாலத்து சர்வாதிகார அரசியல் போக்கு. தனிமனிதர்களின் ஆதரவை கட்டாயப்படுத்தி ஆளுமை பெற்றுக்கொள்வதால், நீறு பூத்த தணலாக அதை எதிர்க்கும் சிந்தனைகள், மறைமுகமாயினும், வலுத்து வந்தன. வெளிப்படையாக நிலவும் சம்பிரதாயங்களை புறக்கணிக்கும் தனி நபர் போக்கு வலுத்தது.
“நம்மால் ‘உயர்ந்த பழக்க வழக்கங்கள்’ என்று கருதப்படும் எல்லாவற்றையும் குவித்து வைத்து, தீவிர சிந்தனைக்கு பிறகு, அவற்றில் ‘மட்டமானவையை’ கடாசி விட்டால், மிச்சம் ஒன்றுமிருக்காது.” என்ற சிந்தனை கி.மு. நான்காவது நூற்றாண்டிலேயே முன்வைக்கப்பட்டது. காலப்போக்கில் தடபுடலாக (மேலாண்மை ஆதரவு/பிரசாரம்/வற்புறுத்தல் மூலமாக) போற்றப்பட்ட நடைமுறைகள் பகுத்தறிவு என்ற நியாயாலயத்தின் முன்னர் வைக்கப்படும் போது வலுவிழந்து விடுகின்றன.
*
தற்காலம்: இந்திய சூழ்நிலை: குடியரசு, அரசியல் சாஸனம், விடுதலை, சுயாட்சி, தேர்தல் என்ற மந்திரங்களின் மீது ஒரு காலத்தில் இருந்த அசையா நம்பிக்கைத் தளர்ந்து விட்டது. பிரதிநிதிகளின் அணுகுமுறையும், அட்டகாசமும், ஆளுமையும், ஆகாத்தியமும், இற்செறிப்பும் தாங்கமுடியவில்லை. மக்கள் நலம் அம்பேல். அரசியல் சாஸனத்தின் பிம்பம் தணிக்கை. ஆளுமைக்கு அதன் மீது அளவு கடந்த ஒவ்வாமை. ஆரம்பக்கல்வியை மனித உரிமையாக பாராட்டிய அரசியல் சாஸனம், அதை செல்லாக்காசாக ஒதுக்கி வைத்தது. மூன்று தலைமறையாக உறங்கிக்கிடந்த இந்த உரிமையை இழந்து செத்துப்போன இந்தியர்களின் தொகை பல கோடி. இன்றும், இந்த உரிமை அல்லாடுகிறது. சுயாட்சியும், தேர்தலும் எள்ளலுக்கு உரியவையாக ஆயின. நாம் இவற்றையெல்லாம் பகுத்தறிவு என்ற நியாயாலயத்தின் முன்னர் வைக்கவேண்டும். களையறுக்க வேண்டும்.
*
வில் டூராண்ட் தனது ஆய்வில் பட்டியலிடும் சில கிரேக்க காலத்து சிந்தனைகளையும், நடைமுறைகளையும் காண்போம்.
  1. ‘கடவுள் எல்லாரையும் சுதந்திர மனிதனாகத்தான் படைத்தார். (அக்காலம் அடிமைகள் உண்டு; இக்காலம் கொத்தடிமைகள்.)
  2. இயற்கை யாரையும் அடிமையாக படைக்கவில்லை. (ஏழ்மை அடிமைகளை உருவாக்குவதை கண்முன் காண்கிறோம். உலகின் செல்வத்தின் பேர்பாதியின் சொந்தக்காரர்கள் 8% செல்வந்தர்கள் என்று உலக வங்கி ஆய்வு ஒன்று சொல்கிறது: 2013).
  3. போட்ஸ்ஃபோர்த் என்ற வரலாற்றாசிரியர் கிரேக்க சிந்தனையில் உள்ள புரட்சிகரமான சோஷலிஸ்ட் கருத்துக்களை கூறுகிறார்.
  4. பெண்ணுரிமையை பற்றிய முற்போக்குக் கருத்துக்களை Euripides & Aristophanes துணிவுடன் முன் வைக்கிறார்கள்.
  5. அரசின் போக்கை அவர்கள் கண்டிக்க பயன் படுத்திய உவமானம்: சிலந்தி வலையை போல், அது சின்ன பூச்சியை பிடித்து, பெரிய தலைகளை தப்ப விடுகிறது என்று!
*
தற்காலம்: சொல்லியா தெரியவேண்டும்! பல்லாயிரம் கோடிகளை தொலைத்தவர்கள் அல்லவா, நம் மக்கள்.
*
  1. Callicles & Thrasymachus கவலைப்படாமல், அரசு இயந்திரம் மக்களை வாட்டுகிறது என்கிறார்கள்.
இந்த கண்காட்சியை நடத்திய பிறகு தான், வில் டூராண்ட், சாக்கிரட்டீஸ்ஸுக்கு முன் கோலோச்சிய ஸொஃபிஸ்ட்ஸ் (The Sophists) என்ற தத்துவ போதகர்களுக்கு வருகிறார். இந்த கட்டுரையே கனமாகி விட்டது. பிறகு பார்க்கலாம்.
(தொடரும்)

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, June 16, 2013

அன்றொரு நாள்: ஜூன் 17


அன்றொரு நாள்: ஜூன் 17


முன் குறிப்பு:


இரு வருடங்கள் உருண்டோடி விட்டன. 
தற்செயலாக, மனம் அலைந்து திரிந்து வடித்த இந்த கட்டுரையை மாற்ற மனமில்லை. இன்று ஒரு வீராங்கனையை பற்றி. ஒரு வருடம் கழித்து, ஜூன் 16, 2012 அன்று ஒரு தேசபந்துவின் சரிதம். இடையில் பலபட்டறை, நாள் தோறும். இவ்வாறு ஒரு வருட காலம் மின் தமிழ் குழுமத்தில் ஓடிய இந்த தொடர் எனக்குக் கல்வி புகட்டியது; நண்பர்களை அளித்தது; மனநிறைவையும், குறைவையும் அளித்தது. மன நிறைவு: எழுதக்கிடைத்த வாய்ப்பு. மனக்குறைவு: மற்ற பல பணிகளும், குடும்பத்துடன் பழகும் வாய்ப்பு, நேரமின்மையால் குன்றியது. இது நிற்க.

வரலாறு பல விதங்களில் எழுதப்படுகிறது. நாட்காட்டியை அடித்தளமாக வைத்துக்கொண்டு எழுதுவது சுவையை கூட்டுகிறது. பல திசைகளில் பயணிக்கிறது. நாளொரு புதுமை காணக்கிடைக்கிறது. வாசகர்களின் கருத்துக்கள் பொலிவை கூட்டியதால், அவற்றையும் எடிட் செய்து இணைக்கிறேன். பின்வரும் கட்டுரைகளை மறுபடியும் படித்து, அசை போட்டு, அணிகள் கூட்டி, எடிட் செய்திருக்கிறேன். அதனால், அவை குழுமங்களிலும் இடம் பெறலாம்.

சித்திரத்துக்கு நன்றி: 
http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/4/4d/Jhansirani1850.jpg/200px-Jhansirani1850.jpg


இன்னம்பூரான்
17 06 2013

Innamburan Innamburan Sat, Jun 18, 2011 at 1:55 PM

அன்றொரு நாள்: ஜூன் 17
 ஜான்சி ராணி
‘மனு! நான் செத்தேன்.’
இந்த ஹீனக்குரல் கேட்டு, தன் புரவியை திருப்பினாள், மனு. நானாவை தூக்கி தன் குதிரையில் அமர்த்திக்கொண்டு, அவனுடைய தம்பி ராவுடன், ஊருக்கு திரும்பினாள். அதற்கு முன்னரே நானாவின் சவாரியில்லாத துரகம் தலை நகருக்கு திரும்பிவிட, அவனின் வளர்ப்பு தந்தை மனம் கலங்கினார். கூட இருந்து ஆறுதல் சொன்னது, மனுவின் தந்தை. வீட்டுக்கு வந்த பிறகு,அவர் மனுவிடம் கேட்கிறார்:
‘மனு! என்னே துரதிர்ஷ்டம்! நானாவுக்கு பலத்த அடி.
‘அப்பா! பெரிதாக ஒன்றுமில்லையே. பலத்த காயம் பட்ட பின்னும், அபிமன்யூ போரிடவில்லையா?’
‘அந்த காலம் வேறு, மனு.’
‘என்ன வித்தியாசம், அப்பா? அதே ககனம். அதே பூமி. அதே சூரிய சந்திரரும்.’
‘காலம் மாறி விட்டது, பெண்ணே! இது அந்த பாரத வர்ஷம் இல்லை. அன்னியர் ஆட்சி. நாம் வலிமை இழந்தவர்கள், மனு.’
‘என்னது இது? சீதா தேவி, ஜீஜீபாய், தாராபாய் என்று வீராங்கனைகளை பற்றி பேசி, பெண்ணினத்து பெருமையை நினைத்து உச்சி குளிர்ந்த என் தந்தையை, இப்படி மனம் கலங்க வைத்தாயே, பிரபு! (மனுவின் தனி மொழி).
இது ஒரு புறம் இருக்க:
நானாவும், ராவும் ஒரு யானையின் மேல் சவாரி செய்கின்றனர். தந்தைகள் இருவரும் மனுவும் அவர்களுடன் சவாரி செய்ய வேண்டும் என விரும்புகின்றனர். நினைத்தது எல்லாம் நடந்து விடுகிறதா? இல்லை. நானா ஆணையிட, யானைப்பாகன் அவளை ஏற்றிக்கொள்ளாமல் கிளம்பிவிடுகிறான். மனு ஏமாந்து போனாள்.
வீட்டில்:
‘காலத்தை அனுசரித்து நடக்கவேண்டும், மனு! நாம் என்ன அரசகுலமா? குறு நிலமன்னர்களா? நமக்கு விதிக்கப்படாததின் மீது ஆசை வைக்கலாகாது, என் கண்ணின் மணியே.’
‘அப்பா! கவலையற்க. எனக்கு விதிக்கப்பட்டது ஒரு கஜ சேனை; ரத கஜ துரக பதாதி.’
‘ததாஸ்து.’ (கண்ணை ரகசியமாக துடைத்துக்கொள்கிறார்).
மனுவை பற்றி என். எஸ். ராமபிரசாத் கூறியது, என் கண்களின் முன்னே, ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னே, கட்டியம் கூறியது, நான் மனுவின் மண்னை கண்களில் ஒத்திக்கொண்ட போது. அவர் கூறியது:
‘(மனு) இந்திய பெண்ணினத்துக்கு மட்டும் இறவா புகழ் கொணரவில்லை. தரணியின் பெண்குலத்துக்கு மங்கா புகழ் அளித்தாள் அவள். இளவயது; தளிர் மேனி. ஆனால் அவள் சிம்மம் அல்லவோ! மகிஷாசுரமர்த்தினி அல்லவோ! காளி மாதா அல்லவோ!. வயதுக்கு மீறிய தீர்க்கதரிசனம்! முதிர்ந்த கனி போன்ற தீர்மானங்கள்.’ சரி. நீங்கள் அந்த ஊருக்கு சென்று வந்த பின் அல்லவோ அவர் எழுதினார் என்றெல்லாம் கேட்கப்படாது. இன்று மனுவின் நினைவு தினம். பிறந்த தினம் பற்றி சரியான தகவல்கள் இல்லை. நானாவின் சகபாடி என்பதால், அவளது வீர மரணம், போர்க்களத்தில், முப்பது வயதிற்க்குள். ஏனிந்த பேச்சு? அமரதெய்வம் மனுவுக்கு காலவறையில்லை. என்றும் நிரந்தரமாக மின்னும் தாரகை, அவள். 
அவளது பகைவனே, ‘புரட்சி செய்தவர்களில், துணிவு மிகுந்தவளும், சிறந்த தளபதியும் அவள் தான்’ என்றார்.
நானாவின் தந்தை: மராத்தா பேஷ்வா பாஜி ராவ். மனுவின் தந்தை: அவரது சகோதரரின் அமைச்சர் மொரோபந்த் தம்பே. மனுவின் பகைவர்: பிரிட்டீஷ் ஜெனெரல் சர் ஹ்யூ ரோஸ். மனு: ராணி லக்ஷ்மி பாய்: ஜான்ஸி ராணி. அவள் வீர மரணம் எய்தது: ஜான்சியில், ஜூன் 17 1858.
இம்மாதிரியான விஷயங்கள் என் மனதை பாதிப்பதை, நான் மறுக்கவில்லை. தட்டச்சில் கூட கண்ணீரின் கறை படலாம், இந்த வீராங்கனையை பற்றிய நாட்டுப்பாடல்களை கேட்டால், கல்லும் உருகும். இவளை பற்றி பொறுப்புடன் ஆய்வு செய்தவர், அலென் கோப்ஸே என்ற ஆங்கிலேயர்.
 மேலும் படியுங்கள்:
‘வீர சமாதியா? நமது ராணிக்கா? ஐயா! அது எல்லாம் தேவையேயில்லை. என்றென்றும் எங்கள் நினைவுகளில் அழிக்க முடியாத ரத்தக்கறையாக உறைகிறாளே. அது தான் அவளுடைய வீர சமாதி...’ என பொருள்பட பாடினார், என்னுடைய அபிமான கவிஞர், ஸுபத்ரா குமாரி செளஹான். सिंहासन हिल उठे राजवंशों ने भृकुटी तानी थी என்று எளிய ஹிந்தி நடையில் தொடங்கி:
तेरा स्मारक तू ही होगी, तू खुद अमिट निशानी थी
बुंदेले हरबोलों के मुँह हमने सुनी कहानी थी

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 5




வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 5
Innamburan S.Soundararajan Sun, Jun 16, 2013 at 11:55 AM

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் 5
Inline image 1Police behavior,
‘காவல் துறையிலிருந்து காததூரம் தள்ளி நில்.’ எனப்படும் வேதவாக்கு ‘அறம் செய விரும்பு.’ எனப்படும் பொன்வாக்கையும் மிஞ்சியது என்க.
டைம்லைன்: 16 06 2013 செய்திகள்:
  1. ‘இனாமாக மூன்று வேளையும் சோறு போடு’ என்று சில சிற்றுண்டி ஹோட்டல்களை என்று வற்புறுத்திய போலீசார் இருவரிடமிருந்து 2 1/2 லக்ஷம் ரூபாய் அபராதம் வசூலிக்க பரிந்துரை செய்தது, மாநில மனித உரிமை கமிஷன். பாவம். தண்டச்சோறு போட்டார்கள். நிறுத்தியும் விட்டார்கள். வெகுண்டெழுந்த போலீஸ் அவர்களுடைய ஊர்திகளின் ஆவணங்களை கேட்டார்களாம். அவற்றை கிழித்தெறிந்து விட்டு மறுபடியும் அவற்றை கேட்டார்களாம்! முணுமுணுத்தற்கு பலத்த அடி; நோ சிகிச்சை; தாணாவில் ரிமாண்ட். ஊர்திகள் பறிமுதல். எல்லாமே சட்டவிரோதம், போலீஸ் சால்ஜாப்பு நம்புவதற்கில்லை என்கிறது, கமிஷன்.[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/shrc-orders-cops-to-pay-relief-to-restaurateurs/article4819205.ece]
  2. ‘எப்படி ஓடினரோ’ என்ற தொடரில் உடன்போக்கு சென்ற பெண்ணை மீட்க சென்ற போலீஸ், வண்டிச்சாவிகளை பிடுங்கிக்கொண்டார்கள். சட்டவிரோதம் தான். சட்டம் அவர்கள் கையில் சிக்கிய பூமாலை. என் செய்வது? அந்த மாதிரி, Section 19: MV Act படி இயங்காமல், ஒரு பஸ் டிரைவரின் உரிமத்தை பறிமுதல் செய்தது சட்டவிரோதம் என்று உயர் நீதி மன்ற தீர்ப்பு. முந்தைய வழக்கின் அத்து மீறலை இது உறுதிபடுத்துகிறது. 
  3. மும்பையில் ஒரு முதியவரை வஞ்சித்து ரூபாய் 45 லக்ஷம் கொள்ளையடித்த போலீஸ் அதிகாரி.  கேடிகளுடன் அவரது உறவாடல் என்று புகார். (http://www.dnaindia.com/mumbai/1848818/report-flat-promise-ats-officer-among-5-held-for-duping-senior-citizen)
டைம்லைன்: 1942:நினைவலை:
தஞ்சை. ஒரு தேசபக்தனை (ஶ்ரீனிவாசய்யர் என்று ஞாபகம்) கைது செய்ய போலீஸ் மேலராஜவீதியில் குவிந்தது. தாங்கொண்ணா பொதுமக்கள் கொந்தளிப்பு. திடீரென்று ஒரு தாணாக்காரர் தன் சட்டையை கிழித்துக்கொண்டார். ‘கடமை செய்வதைத் தடுக்கிறார்களே’ என்று பொருள்பட குரல் கொடுத்தார். லத்தீ சார்ஜ். மக்கள் சிதறி ஓடினர். எதிர்பாராத திருப்பம். இதை திரு. ஶ்ரீனிவாசய்யர் கண்டித்து, வெள்ளைய உயர் அதிகாரியிடம் பிரஸ்தாபித்தார். அவர் உடனே, அந்த தாணாக்காரரை ஒரு ஜட்காவில் (அக்காலம் போலீஸ் வண்டிகள் மிகக்குறைவு) பேக் செய்து பேரக்சுக்கு (டேராவுக்கு; அது தண்டனை) அனுப்பி விட்டார். லத்தீ சார்ஜ் நின்றது. திரு. ஶ்ரீனிவாசய்யரும் ஜெயிலுக்குப் போனார். மங்கலான நினைவு.
டைம்லைன்: 1850 காலகட்டம்:வரலாறு:
இந்தியாவில் ‘தக்’ எனப்படும் கொலை/கொள்ளைக்கூட்டம். பெரிய கதை. அவர்களை அடக்கி, ஒடுக்கி, சந்ததியை புணருத்தாரணம் செய்தவர் சர். வில்லியம் ஸ்லீமென். அவருடைய வரலாற்றில் கூறப்பட்டது: ‘கிராமங்களில் சண்டை சச்சரவு நிகழ்ந்தால் டரோகாவை (டரோகா பாமர வரலாறு சுவையானது. டரோகா என்றால் போலீஸ் அதிகாரி, இன்றைய சொல்வழக்கிலும்.) வரவழைக்கமாட்டார்கள்; பஞ்சாயத்து நடக்கும். ஏனெனில் போலீஸ் வந்தால், நாட்கணக்கில் டேரா போட்டு, இரண்டு பக்கமும் பணம் வாங்கிக்கொண்டு, ஆடுமாடு, கோழிக்குஞ்சு எல்லாவற்றையும் சப்ஜாடா ஜீரணம் செய்து விடுவார்கள்.
என்னடா! ஒரேடியாக போலீஸ் கண்டனம் என்று பார்க்கிறீர்களா?
புறனடை
1.ஒரு கறார் போலீஸ் இன்ஸ்பெக்டர். யோக்கியன். திடீரெனெ அவர் வீட்டுக்கு வந்த ஆங்கிலேய அதிகாரி, ‘நீர் சம்பாதித்தது எவ்வளவு?’ என்று கேட்கிறார். ‘சற்றே பொறும்’ என்று உள்ளே சென்றவர் தன் மழலைச்செல்வங்களை அழைத்து வந்து, ‘இது தான்’ என்று காண்பித்தாராம். அப்பா சொன்ன நிஜ சம்பவம். மதுரை மாவட்டம். அப்பாவின் நண்பர். அவருடைய பெயர் சுப்ரமணிய பிள்ளை. அவருடைய சந்திதியை சந்திக்கவேண்டும் போல் இருக்கிறது. 
2.டாக்டர். பி. சுப்பராயன் என்று அக்காலத்து காங்கிரஸ் தலைவர். குமாரமங்கலம் ஜமீன். அவருடைய மகன் மோஹனும், பேரனும் அமைச்சர்களாக இருந்த கம்யூனிஸ்ட்கள். வேனிற்காலத்தில் இங்கிலாந்து சென்று விடும் டாக்டர். பி. சுப்பராயன் திருச்சி சிறையில் வாடுகிறார், சுருட்டுப்பிடித்துக்கொண்டு. ஜெயிலில் பீடிக்கு மட்டும் தான் அனுமதி. அந்தப்பக்கம் வந்த ஆங்கிலேய அதிகாரி, “நல்ல சுருட்டு மணம். டாக்டர். பி. சுப்பராயன் ஈஸ் என்ஜாயிங்க். என்று சொல்லிவிட்டு, திரும்பி விடுகிறார்.

3.வேதாரண்யம் உப்பு சத்யாக்ரஹம். ராஜாஜியை கைது செய்ய வந்த போலீஸ் மரியாதையாக நடந்து கொள்கிறார்கள்.

மேலும் சொல்லப்போனால், எத்தனையோ மேன்மையும், பக்குவமும், கடமையுணர்ச்சியும் உள்ள போலீஸாரும் உளர். அவர்களும் மனிதர்கள் தானே. எதற்கும், ‘காவல் துறையிலிருந்து காததூரம் தள்ளி நில்.’. என்ன? நான் சொல்றது சரி தானே.
இது எஃப்.ஐ. ஆர். எனப்படும் பிரம்மாஸ்திரத்துக்கு/புஸ்வாணத்துக்கு ஒரு பீடிகை. கதை சொன்னால் நம்மருமை வாசகர்கள் படிப்பார்க்ளோ என்ற அல்பாசை. 
இன்னம்பூரான்
16 06 2013