Tuesday, May 7, 2013

தேமதுரத் தமிழோசை விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 1






Tue, May 7, 2013 at 7:17 PM

தேமதுரத் தமிழோசை விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 1
28 messages

Innamburan Innamburan <innamburan@gmail.com>Thu, Nov 15, 2012 at 10:25 PM

தேமதுரத் தமிழோசை

விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 1
Inline image 1


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்குங் காணோம்
பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்§ம், ஒருசொற் கேளீர்
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல்வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை யில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்


மகாகவி சுப்பிரமணிய பாரதியார் என்று நீட்டி முழக்கி எழுதுவது தான் என் வழக்கம். இது வாயுபசாரமில்லை. நான் அவருக்கு செலுத்தும் மரியாதை. அவருடைய கவிதைகளுக்கு உரை அவை தான். எளிமையான தமிழ். சுளுவாக படிக்கலாம். பளிங்கு நீர் போன்ற தெளிவு.
தமிழுக்கு இறவாத புகழுடைய புதுநூல்கள் கேட்கிறார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார். இன்று வேறொரு இழையில், முனைவர் ராஜம் மின்தமிழ் இடுகைகள் ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையை தெரிவித்திருக்கிறார். கண்ணன் உடனே செயலில் இறங்கச்சொல்கிறார். ஸுபாஷிணி திட்டமிட்டு செயல்பட சொல்கிறார். அவ்வாறே செய்வோம் என்று இந்த தொடரை தொடங்கினேன். இந்தியா நமது தாயகம் தானே. இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றை நமது இளைய சமுதாயம் அறிவது நலன் பயக்கும்.

தமிழ்நாட்டை சார்ந்த முனைவர் பத்ம பூஷண் ராமச்சந்திரா குஹா ஒரு உலகபிரஜை. வரலாற்று ஆசிரியர். கிரிக்கெட் ஆர்வலர். தற்காலம் லண்டன் பொருளியல் பல்கலைகழகத்தில் வரலாறு/சர்வதேச நிலவர துறைகளில் பேராசிரியர். என்னுடைய மானசீக ஆசான் ஹெரால்ட் லாஸ்கியின் படைப்பு அந்த பல்கலைக்கழகம். (அவருடைய அறிவுரையின் மீது தான் பிரதமர் நேரு முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாரயணன் அவர்களை இந்திய வெளியுறவு இலாக்காவில் நியமனம் செய்தார்.)  முனைவர் குஹா பல நூல்களை எழுதியவர். அமெரிக்க டைம்ஸ் இதழ்  அவரை ‘இந்திய ஜனநாயகத்தின் முன்னோடி வரலாற்றாசிரியர்’ என்று புகழ்ந்தது. அவருடைய ‘தேசபக்தர்களும், ஒருதலைபக்ஷ வாதிகளும்’ (Patriots and Partisans) என்ற நூல் பிரபல பெங்குவின் பிரசுரத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அவர் யாரையும் விட்டுவைப்பதில்லை. இன்று மமதா பானர்ஜியின் யதேச்சிதிகாரத்தைக் கொல்கத்தாவில் விமரிசித்தார். அவரை பற்றிய மேலதிக விவரங்களை பிறகு தருகிறேன்.

அவர் சமீபத்தில் கீழ்க்கண்ட நூல்களை, என் சிறு வயதிலேயே சிந்தனை இதழ்களில் சிறந்ததாக கருதப்பட்ட, 1914லிருந்து வெளி வரும் The New Republic என்ற அமெரிக்க இதழில் கீழ்க்கண்ட பிரபல நூல்களை மதீப்பீடு செய்திருந்தார். அது ஒரு நீண்ட கட்டுரை. நான் கேட்ட சில நிமிடங்களிலேயே, அதை தமிழாக்கம் செய்து மின் தமிழில் வெளியிட தாராள மனப்பான்மையுடன் சம்மதம் தெரிவித்தார். அவருக்கு நன்றி தெரிவித்து, அவரது காப்புரிமையை அறிவித்து, அந்த அமெரிக்க இதழுக்கு 60 வருடங்களாக உமது இதழை அறிவேன் என்று அவர்களுக்கு நான் பட்ட கடனை தெரிவித்து, அந்த கட்டுரையின் தமிழாக்கத்தின் முதல் பகுதியை பதிவு செய்கிறேன். பிழைகள் பொறுத்தாள்க. திசை மாற்றாதீர்கள். மாற்றுக்கருத்து இருப்பின், சான்றுடன் பகர்க. முனைவர் குஹாவின் ஆய்வு உலகளவில் சான்றாக, பல பல்கலைக்கழகங்களில் கருதப்படுகிறது. தனிமடல்கள் அனுப்பினால், அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும்.

Recovering Liberties: Indian Thought in the Age of Liberalism and Empire
By C. A. Bayly
(Cambridge University Press, 383 pp., $29.99)

Democracy and Its Institutions 
By André Béteille
(Oxford University Press India, 228 pp., £27.50)
இனி, அவரது கட்டுரையின் என்னுடைய தமிழாக்கம். பகுதி ஒன்று.
*
மனித வரலாற்றில் இந்திய ஜனநாயகம் ஒரு துணிச்சலான,  கட்டவிழ்த்த அரசியல் பரிசோதனை தான்.  இது வரை, பலபட்டறை சமூகங்களிருந்து ஒரே தேசீய நாடு இவ்வாறு உருவானதேயில்லை. பிறவிலேயே மத அடிப்படையில் நாடு பிரிவு படுத்தப்பட்டது. எனினும், முஸ்லீம் சரணாலயமாக அமைந்த பாகிஸ்தான் அளவுக்கு, இந்தியாவில் முஸ்லீம் ஜனத்தொகை உள்ளது. இங்கு ஆஸ்ட்ரேலியாவை விட கிருத்துவர்கள் அதிகம்; திபெத்தை விட பெளத்தர்கள். எந்த நாட்டிலும் இந்த அளவு சீக்கியர்களும், சமணர்களும், பார்ஸிகளும் கிடையாது. இந்தியாவில் பெரும்பான்மையினராக கருதப்படும் ஹிந்து மதத்திற்க்குள் சாதி, இன பிரிவுகள் பல்லாயிரக்கணக்கானவை. அப்பப்பா! எத்தனை மொழிகள்! கரன்ஸி நோட்டுகளில் பதினேழு மொழிகள், அத்தனை லிபிகளில்.
இது ஒரு செயற்கை தேசீயமையா! ஜனநாயகத்துக்கும், இதற்கும் எத்தனை ஒவ்வாமை! பாருங்களேன். எழுதப்படிக்க தெரியாத ஏழைகளால், இந்த அளவுக்கு, இந்த மாதிரி பிரிதிநிதித்துவ எஜமானர்கள் வேறெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை, ஐயா. மேற்கத்திய நாடுகளில் வாக்குரிமை படிப்படியாக கொடுக்கப்பட்டது. இந்திய அரசியல் சாஸனமோ, சாதி/மத/இன/வாழ்க்கைத்தரம்/கல்வி தகுதி/பால் ஆகிய பாகுபாடுகள் இல்லாமல், எல்லாருக்கும், ஒரேடியாக வாக்குரிமை அளித்து விட்டது. இது நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டது. இதை கண்டு உலகம் வியந்தது. முதல் பொது தேர்தல் 1952ல் நடந்த போது, ‘இது வரலாற்றிலேயே பெரிய சூதாட்டம்’ என்ற பொருள்பட ஒரு பிரபல இந்திய இதழாளர் எழுதினார். சூதாட்டமோ, இல்லையோ, அதை வெற்றி என்று தான் சொல்ல தோன்றுகிறது. 14 பொது தேர்தல்கள் நடந்தேறியன. ஒவ்வொன்றும்  மாபெரும் ஜனநாயக பரிசோதனை தான். கிட்டத்தட்ட 40 கோடி மக்கள் 2009ல் வாக்களித்தார்கள். ஃபிரான்ஸ்/ஜெர்மனியை விட பெரிய மாநிலங்களிலும் தேர்தல்.
*
மூலம்:
*
I.
THE REPUBLIC OF INDIA is the most reckless political experiment in human history. Never before was a single nation constructed out of so many diverse and disparate parts. Partitioned at birth on the basis of religion, India now has almost as many Muslims as the Muslim homeland of Pakistan. It has more Christians than Australia, more Buddhists than Tibet, more Sikhs, Jains, and Parsis than any country in the world. The Hindus, nominally the religious “majority,” are divided into tens of thousands of endogamous castes and sects. Meanwhile, the extraordinary linguistic diversity of India is represented on the country’s currency notes, with the denomination—50 rupees, 10 rupees, and so on—written in seventeen languages, each with a distinct script.
This is an unnatural nation, as well as an unlikely democracy. Never before was a population so poor and so illiterate asked to vote freely to choose who would govern it. Unlike in the West, where the franchise was granted in stages, the Indian constitution immediately gave the vote to every adult regardless of caste, class, education, or gender. This was an act of faith, greeted with widespread disbelief: writing of the first general elections, held in 1952, a prominent Indian editor observed that they were the “biggest gamble in history.” It was a gamble that seems to have paid off—there have been fourteen general elections since, each the greatest democratic exercise in human history (with some four hundred million voting in the last iteration in 2009), as well as regular elections in states more populous than France or Germany.
*
சேமமுற வேண்டும் என்று  தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம், மின் தமிழர்கள் கூட்டுறவில்.
(தொடரும்)
இன்னம்பூரான்
15 11 2012

Geetha Sambasivam Fri, Nov 16, 2012 at 12:50 AM

மெளனமாய்த் தொடர்கிறேன்.  நன்றி.

2012/11/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
தேமதுரத் தமிழோசை

விடுதலை மீட்பும் குடியரசின் தூண்களும்: 1




N. Kannan Fri, Nov 16, 2012 at 8:11 AM

What a coincidence. Just now I posted my thoughts on evolving a common
Indian administrative, scientific language! Only when the Tamil truly
understand the strength of Indian Union and work hard to influence it
positively there is no growth for Tamil (in my humble opinion).

’இ’னாவின் எண்ணங்கள் இனிமையாய் வலம் வரட்டும் இங்கு!

N.Kannan
[Quoted text hidden]

shylaja Fri, Nov 16, 2012 at 8:25 AM

   வீட்டில்  தமிழ் முழங்குவதே  அரிதாகிக்கொண்டிருக்கிறது இ சார். அந்நியமொழியின் ஆதிக்கம் இளைய தலைமுறையிடம்  பெருகிவருகிறது.
 
தமிழ்  வளர்கிறதா  வீழ்கிறதா?
 
ஒவ்வொரு மொழியிலும் மொழிப்பற்றாளர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலமொழிப்பற்றாளர்களைவிட பிரெஞ்சுமொழிப்பற்றாளர்கள் தங்கள் மொழியில் தீவிரவாதிகள் என்பார் என் தந்தை. ஏன் ரஷ்ய இனப்பற்றாளர்கள்(ஸ்லாங் இனத்தினர்) அதி தீவிரவாதிகள் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். அலெக்சாண்டர் புஷ்கின் தான் இந்த ஸ்லாங் இனப்பற்றையும் ரஷ்யமொழிப்பற்றையும் தொடங்கினார். டால்ஸ்டாய் பிஸ்டாவங்க் அலெக்சாண்டர் ஹெர்சன் பொன்றவரக்ள் நம்மையெல்லாம் விட தீவிர மொழிப்பற்று இனப்பற்றுக்கொண்டவர்கள். அவர்கள் எழுத்து சாதனைகள் உலகு அறிந்து இன்றும் பாராட்டக்கூடிய பெருமைகொண்டதாக இருக்கிறதே.
1905ம் ஆண்டுவாக்கில் பாரதி வந்தார். சுதேசி இயக்கம் பாரதிக்கு சுதேசிய கீதங்கள் பாட உந்தியது. சுதந்திர உணர்வுக்கவிதைகளைப்பாடினார். நாட்டு சுதந்திரம்தான் தனி மனித சுதந்திரத்தை பாரதி சொல்லவில்லை. பிறகு திராவிட இயக்கம் தோன்றியது அதன் வரலாறு மக்கள் அறிந்ததே.
தமிழ் மற்றும் தமிழ் இலக்கியம் சுதந்திரத்திற்குப்பின் எந்த அளவுக்கு வளர்ந்தது? பெரியார் அண்ணா போன்றோரின் கருத்துக்களைவிட அவர்கள் தமிழ் ,பரப்பிய தமிழ் எந்த அளவுக்கு தாக்கங்களை ஏற்படுத்தின?
நல்ல தரமான உயர் படைப்பிலக்கியம் எப்படி வளர்ந்தது? பாரதி பாரதிதாசன் கவிதைகள் மறுமலர்ச்சி எழுத்தாளர்களீன் சிறுகதைகள் வசன எழுத்துக்களால் தமிழ் வளர்ந்தது ஆனால் இன்று நிலமை எப்படி உள்ளது?
முதலில் நல்ல இலக்கியம் படைப்பிலக்கியம் கவிதை நாவல் சிறுகதை என்று எடுத்துக்கொண்டால் இவற்றில் செவ்விலக்கியம் என்னும் அந்தஸ்தைப்பெறும் படைப்புகள் எவை?
மலையாளத்தில் சாகித்ய அகாடமி என்னும் அமைப்பு திருச்சூரில் சுமார் 100 ஆண்டுகளாக நடக்கிறது அவர்களே தனியாக இலக்கியப்பரிசுகள் இலக்கிய மாநாடுகள் நடத்துகிறார்கள்.
 
கன்னட சாகித்ய அகாடமி சாகித்ய சம்மேளன நிகழ்ச்சிக்கு மாநில அரசு 2011ல் 1.5 கோடி ரூ உதவித்தொகை கொடுத்துள்ளது. மராட்டி சாகித்ய சம்மேளன விழாக்களில் பார்வையாளர்களாக முன்பெல்லாம் அந்த நாள் முதலமைச்சர்கள் வந்து அமர்வார்களாம்.இங்கே நம் அமைச்சர்களுக்கு அதற்கு நேரம் இருக்கிறதா ? மான் மயில் ஆடுவதைக்காணவே முந்தின அரசியல் முண்டியடித்தது! அவர்களைப்பற்றின குற்றப்பத்திரிகை வாசிக்கவே இந்த அரசியலுக்கு சரியாக இருக்கிறது.
 
வங்காளமொழியின் இலக்கியம் பற்றி சொல்லவும் வேண்டுமோ? வங்காளத்தின் பிரபல பத்திரிகை தேஷ் அதன் ஆசிரியர் ஞானபீட பரிசுபெற்ற சுனில் சகோபாத்யாயா. அப்புறம் பத்திரிகை தரமாக இல்லாமல் போய்விடுமா என்ன?
மாத்ருபூமி ஆசிரியர் எம் டி வாசுதேவன் நாயரும் ஞானபீடவிருது பெற்றவர். கலை சினிமா படமெடுத்துப்புகழ்பெற்றவர். இப்படியான இலக்கிய மேதைகள் தமிழில் எங்கே அவர்கள் சு்தந்திரமாக நின்று செயல்பட பத்திரிகைகள் எங்கே?
 
ஒரு மொழியானது பண்பாட்டுசக்தியாக பரிணாம வளர்ச்சி பெற வேண்டும். சரியான சமூக அரசியல் சூழ்நிலை வேண்டும். ஒருவகை குறிப்பிட்ட கொள்கை சாரா நடுநிலை(லிபரல்) சூழ்நிலை தேவை. சகிப்புத்தனமை அதிகம் தேவை. அரசியல்வாதி அபூர்வமாக இலக்கியவாதி ஆகலாம் ஆனால் நம் தமிழகத்திலோ சினிமா நடிகர் நடிகையர் வசனகர்த்தா என அனைவரும் அரசியல்வாதிகள்.
 
(சீரியசா எழுதப்போனால் பதிவு  நீள்கிறது ஆகவே தொடரலாமா?:)


Subashini Tremmel Fri, Nov 16, 2012 at 9:55 AM

வணக்கம் திரு,இன்னம்புரான்,

வாசித்து மனம் மகிழ்ந்தேன். 
நல்ல சிந்தனைகளை, தேச பக்தி, மனிதாபிமானம், அன்பு எனும் நற்பன்புககளைப் பற்றி அடிக்கடி பேசுவோம். அச்சிந்தனைகளை மக்கள் மனதிலே மீண்டும் மீண்டும் பதியவைப்போம் - என அடிக்கடி நினைத்துக் கொள்வேன். மின் தமிழில் இவ்வகை எழுத்துக்கள் நிச்சயமாக வாசிப்போர் மனதில் நல்லெழுச்சியை ஏற்படுத்தும்.

அது சரி.. நீங்கள் எவ்வளவு அழகாகத் தமிழில் எழுதுகின்றீர்கள். 4 வருடங்களுக்கு முன்னர் தமிழ் எழுத சரியாக வராது என்று என்னிடம் நீங்கள் கூறியது இன்றும் ஞாபகம் இருக்கின்றது. :-) இந்த அளவிற்கு எழுத நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சி நன்கு தெரிகின்றது.

அன்புடன்
சுபா


கி.காளைராசன் Fri, Nov 16, 2012 at 12:16 PM

வணக்கம்.

2012/11/16 Subashini Tremmel <ksubashini@gmail.com>
அது சரி.. நீங்கள் எவ்வளவு அழகாகத் தமிழில் எழுதுகின்றீர்கள். 4 வருடங்களுக்கு முன்னர் தமிழ் எழுத சரியாக வராது என்று என்னிடம் நீங்கள் கூறியது இன்றும் ஞாபகம் இருக்கின்றது. :-) இந்த அளவிற்கு எழுத நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சி நன்கு தெரிகின்றது.

இந்த வரிசையில் ஐயா ‘இ‘னா அவர்களுடன்,
ஐயா நரசய்யா அவர்களையும், 
சேர்த்துக் கொள்ள வேண்டும்.


K R A Narasiah Fri, Nov 16, 2012 at 5:23 PM

absolutely right!
எனது முதல் கதை 1964 ல் எழுதியபோது தமிழ் சுமாராகத்தான் எனக்குத் தெரியும் ஆங்கிலத்தில் நினைத்துத் தமிழில் எழுதினேன்! ஆனலும் வெளி வந்தபோது விகடன் முத்திரையுடன் உலகுக்கு அதை அளித்தனர். 

கடலோடியின் முதற்பதிப்பு வெளிவந்தபோது (1972) ஹிந்து இவ்வாறு விமர்சித்தது:
The author thinks in English and translates his thoughts into Tamil, with a result the book appears to be a Tamil translation of an original English!

முயன்றேன் - முடிந்தது.

மொழி அபிமானம் மற்றொரு மொழியின் மீது காட்டப்படும் வெறுப்பினால் அளக்கப்படவேண்டாம் என்பது என் கட்சி.
விஜய் டி வி யில் நானா நீயா  நிகழ்ச்சியில் என்னைக் கண்டவர்களுக்கு நினைவிருக்கலாம். 

Language is a vehicle for expression of thought; Destination is important while the means is in no way less important.While the Saraswathi Samman and Gnana peeth people award the tamil writers, the Tamils were busy applying tar on other language posters and indicators.

தாய் மொழிப் பற்று மிக்க அவசியம் 

எல்லா மொழிப்பற்றும் மிக மிக அவசியம். நன் தமிழை விரும்பிக் கற்றேன். அதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ள நான் தயங்கியதே கிடையாது. ஆங்கிலத்தில் தான் முதலில் எழுதினேன். அதுவும் கவிதை. அயர்லாந்தின் பத்திரிகையில் 1960ல் வெளியாயிற்று. ஆங்கிலத்தை நான் வெறுத்ததே கிடையாது.

நரசய்யா
____________________
Innamburan
07 05 2013
  

Monday, May 6, 2013

அன்றொரு நாள்: மே 7, 8, 9: எல்லாமே மூணு தான்! மும்முனை போர்.



அன்றொரு நாள்: மே 7, 8, 9: எல்லாமே மூணு தான்! மும்முனை போர்.

Innamburan Innamburan Wed, May 9, 2012 at 11:52 PM



ன்றொரு நாள்: மே 7, 8, 9:
எல்லாமே மூணு தான்!
மும்முனை போர்.
மூன்று கழுதைகள்: ஹிட்லர், முஸோலினி, டோஜோ.
மூன்று களிறுகள்: சர்ச்சில், ரூஸ்வெல்ட், ஸ்டாலின்

இரண்டாவது உலக மஹா (என்ன ‘மஹா’ வேண்டிக்கிடக்கு: மண்ணாங்கட்டி!) யுத்தம் மும்முரமாக மும்முனைகளில் நடந்து ஓய்ந்து, ஏப்ரல் 30, 1945 அன்று ஹிட்லர் தன்னையும், பலநாள் ஆசைக்கிழத்தியும், ஒரு நாள் மனைவியும் ஆன ஈவா ப்ரானையும் மாய்த்துக்கொள்ள, இஸ்பேட் சரவாதிகாரி அட்மிரல் கார்ள் டொயனிட்ஸ் நேசத்துருப்புகளிடம், மே 7 1945 அன்று, ரீம்ஸ் என்ற இடத்தில் சரணடைந்தான். மறு நாள் (மே 8.1945) அன்று பெர்லினில் ஆவணப்படுத்தப்பட்டது. மூன்றாம் நாள் (மே 9, 1945) ஸோவியத் ரஷ்ய திருவிழா.
ஒரு கொசுறு:
இந்த ‘உறையூர் சுருட்டு‘ புகழ் சர்ச்சிலுக்கு மதியம் இரண்டு மணி வரை துயில் கொள்ளும் வழக்கம். காலை நாலு மணி வரை நெட்டி வேலை, சினிமா, சிங்கிள் மால்ட்! அதான். அவருடைய ஆணை: நான் தூங்கணும். கெட்ட செய்தி வந்தா எழுப்பு, உடனே. நல்ல செய்தி வந்தா, அது காத்திருக்கட்டும். அவங்களும் எழுப்பவில்லை. அதை அவரும் சிலாகித்து... 
ராஜா ராணியுடன், சுருட்டைப்பிடித்துக்கொண்டு, ஐயா பக்கிங்ஹாம் அரண்மனையின் உப்பரிகையிலிருந்து தரிசனம் தராரு, ராஜகுமாரி குட்டிகள் இரண்டும், ஜனங்கள் ஊடே புகுந்து விளையாடுதுங்க. பத்து லக்ஷம் மக்கள் கூடி குதூஹலமாக ஆரவாரம் செய்கிறார்கள். சர்ச்சிலின் சொற்பொழிவில் உணர்ச்சியும், கடமையும் ஒலித்தது. மக்களிடம் ‘ஆண்டவன் துணை’ என்றார். அவர்கள், ‘சர்ச்சில் ஜாலி பையன் என்று பாடினார்கள். இது மே 8, 1945.
ஜப்பான் சரண்டர் உரிய காலத்தில் வரலாம். 
அமெரிக்காவில், ஜனாதிபதி ஹாரி ட்ரூமனுக்கு மணி விழா, இன்று: மே 8, 1945. நம்ம மிஸெளரிக்காரர்.(இங்கு விடுமுறை). வாகை சூடிய பெருமிதத்தை தன்னுடைய முன்னோடியான அமரர் (ஏப்ரல் 12, 1945) ரூஸ்வெல்ட்டுக்கு அர்ப்பணித்தார். தேசீயக்கொடி ஒரு மாதகாலம், அரைக்கம்பத்தில். ஷிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ், மியாமி, ந்யூ யார்க் எல்லாம் தடபுடலான கொண்டாட்டங்கள்.
நான் மே 7,8, 9 என்று போட்டால் 72 மணி நேரம் அல்ல. ந்யூ யார்க்கில் 8ம்தேதி, ரஷ்யாவில் 9ம் தேதி. (நான் மே 8 என்று எழுதும் போது, 9ம் தேதி ஹிந்து இதழ் வந்தாச்சு அல்லவா.) ஆனால்.ஸ்டாலினும் சந்தேஹப்பிராணியா? பிகு பண்ணினார். ரஷ்யாவில் வாணவேடிக்கையும், கூத்து நடனமுமாக மெகா கொண்டாட்டம்.
உசிலம்பட்டி: தெருத்தெருவாக ஊர்வலம். சொல்லப்போனால், உசிலம்பட்டி ஒரு மிலிட்டரி செண்டர். பிரமலை கள்ளர்கள் தலைமுறை, தலைமுறையாக ராணுவம். உசிலம்பட்டியில் மாரி பிஸ்கெட், சார்லி பிஸ்கெட் எல்லாம் குடிசைத்தொழில். அந்தக்காலம், இலவச பிஸ்கட் காலம். வாரி வழங்கினார்கள். நானும் என் பங்குக்கு அதை சாப்பிட்டுவிட்டு, நேதாஜி பிரச்சாரம் செய்தேன். மென்மையாக கடிந்தவர்கள், கண்டும், காணாமலும், விட்டு விட்டார்கள்.
இன்னம்பூரான்
7/8/9/ -05 -2012
Inline image 1
ஜெர்மனி சரண்டர்
உசாத்துணை:  
The BBC asked the public to contribute their memories of World War Two to a website between June 2003 and January 2006. This archive of 47,000 stories and 15,000 images is the result.

Geetha Sambasivam Thu, May 10, 2012 at 1:44 AM


ஆஹா, இப்படி எல்லாம் எங்க சரித்திர ஆசிரியர் சொல்லிக் கொடுத்திருந்தால் சரித்திரத்தில் எங்கேயோ போயிருப்பேன். என்ன அழகாயும், சுருக்கமாயும் முக்கியமான நிகழ்வுகளைச் சொல்லி இருக்கிறீர்கள்.  படித்தது தான்.  இப்போது தான் விபரமாய்த் தெரிந்து கொள்கிறேன்.  மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் விஷயங்கள்.

2012/5/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>

ன்றொரு நாள்: மே 7, 8, 9:
எல்லாமே மூணு தான்!
மும்முனை போர்.


Subashini Tremmel Thu, May 10, 2012 at 8:00 AM




2012/5/10 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ன்றொரு நாள்: மே 7, 8, 9:
எல்லாமே மூணு தான்!
மும்முனை போர்.
மூன்று கழுதைகள்: ஹிட்லர், முஸோலினி, டோஜோ.
மூன்று களிறுகள்: சர்ச்சில், ரூஸ்வெல்ட், ஸ்டாலின்

இரண்டாவது உலக மஹா (என்ன ‘மஹா’ வேண்டிக்கிடக்கு: மண்ணாங்கட்டி!) யுத்தம் மும்முரமாக மும்முனைகளில் நடந்து ஓய்ந்து, ஏப்ரல் 30, 1945 அன்று ஹிட்லர் தன்னையும், பலநாள் ஆசைக்கிழத்தியும், ஒரு நாள் மனைவியும் ஆன ஈவா ப்ரானையும் மாய்த்துக்கொள்ள, இஸ்பேட் சரவாதிகாரி அட்மிரல் கார்ள் டொயனிட்ஸ் நேசத்துருப்புகளிடம், மே 7 1945 அன்று, ரீம்ஸ் என்ற இடத்தில் சரணடைந்தான். மறு நாள் (மே 8.1945) அன்று பெர்லினில் ஆவணப்படுத்தப்பட்டது. மூன்றாம் நாள் (மே 9, 1945) ஸோவியத் ரஷ்ய திருவிழா.
ஒரு கொசுறு:
இந்த ‘உறையூர் சுருட்டு‘ புகழ் சர்ச்சிலுக்கு மதியம் இரண்டு மணி வரை துயில் கொள்ளும் வழக்கம். காலை நாலு மணி வரை நெட்டி வேலை, சினிமா, சிங்கிள் மால்ட்! அதான். அவருடைய ஆணை: நான் தூங்கணும். கெட்ட செய்தி வந்தா எழுப்பு, உடனே. நல்ல செய்தி வந்தா, அது காத்திருக்கட்டும். அவங்களும் எழுப்பவில்லை. அதை அவரும் சிலாகித்து... 
ராஜா ராணியுடன், சுருட்டைப்பிடித்துக்கொண்டு, ஐயா பக்கிங்ஹாம் அரண்மனையின் உப்பரிகையிலிருந்து தரிசனம் தராரு, ராஜகுமாரி குட்டிகள் இரண்டும், ஜனங்கள் ஊடே புகுந்து விளையாடுதுங்க. பத்து லக்ஷம் மக்கள் கூடி குதூஹலமாக ஆரவாரம் செய்கிறார்கள். சர்ச்சிலின் சொற்பொழிவில் உணர்ச்சியும், கடமையும் ஒலித்தது. மக்களிடம் ‘ஆண்டவன் துணை’ என்றார். அவர்கள், ‘சர்ச்சில் ஜாலி பையன் என்று பாடினார்கள். இது மே 8, 1945.
ஜப்பான் சரண்டர் உரிய காலத்தில் வரலாம். 
அமெரிக்காவில், ஜனாதிபதி ஹாரி ட்ரூமனுக்கு மணி விழா, இன்று: மே 8, 1945. நம்ம மிஸெளரிக்காரர்.(இங்கு விடுமுறை). வாகை சூடிய பெருமிதத்தை தன்னுடைய முன்னோடியான அமரர் (ஏப்ரல் 12, 1945) ரூஸ்வெல்ட்டுக்கு அர்ப்பணித்தார். தேசீயக்கொடி ஒரு மாதகாலம், அரைக்கம்பத்தில். ஷிகாகோ, லாஸ் ஏஞ்சலஸ், மியாமி, ந்யூ யார்க் எல்லாம் தடபுடலான கொண்டாட்டங்கள்.
நான் மே 7,8, 9 என்று போட்டால் 72 மணி நேரம் அல்ல. ந்யூ யார்க்கில் 8ம்தேதி, ரஷ்யாவில் 9ம் தேதி. (நான் மே 8 என்று எழுதும் போது, 9ம் தேதி ஹிந்து இதழ் வந்தாச்சு அல்லவா.)

அமர்க்களம் :-)

சுபா

கி.காளைராசன் Thu, May 10, 2012 at 11:24 AM


ஒரு கொசுறு:
இந்த ‘உறையூர் சுருட்டு‘ புகழ் சர்ச்சிலுக்கு மதியம் இரண்டு மணி வரை துயில் கொள்ளும் வழக்கம்.

அதென்ன உறையூர் சுருட்டு?
உறை பற்றியும் உரைக்க வேண்டுகிறேன்.

 கெட்ட செய்தி வந்தா எழுப்பு, உடனே. நல்ல செய்தி வந்தா, அது காத்திருக்கட்டும்.

ஆகா அற்புதமான அரசியல்வாதி.

அவங்களும் எழுப்பவில்லை.

உசிலம்பட்டி: தெருத்தெருவாக ஊர்வலம். சொல்லப்போனால், உசிலம்பட்டி ஒரு மிலிட்டரி செண்டர். பிரமலை கள்ளர்கள் தலைமுறை, தலைமுறையாக ராணுவம். உசிலம்பட்டியில் மாரி பிஸ்கெட், சார்லி பிஸ்கெட் எல்லாம் குடிசைத்தொழில். அந்தக்காலம், இலவச பிஸ்கட் காலம். வாரி வழங்கினார்கள்.
காளையார்கோயில் வட்டம், ஒச்சந்தட்டு என்ற கிராமத்திற்குத் தேர்தல்பணிக்காகச் சென்றிருந்தேன்.  ஓட்டுப்போட்டபின் ஒவ்வொருவராக என்னிடம் வந்து “பொரியும் போண்டா“வும் கேட்டனர்.
எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. முகவர் (ஏஜெண்ட்) களிடம் கேட்டேன்.
“எல்லா வேட்பாளர்களும் ஒன்றாகச் சேர்ந்து , ஒட்டளித்த பின் எல்லோருக்கும் போண்டாவும் பொரியும் கொடுப்போம்“ என்றார்.  எதுவானாலும் 200 மீ.க்குள் இருக்கக் கூடாது என்று நினைத்து அப்படியே ஒரு சுற்று சுற்றி வந்தேன்.  தூரத்தே ஒரு மரத்தடியில் வைத்து வாரி வழங்கிக் கொண்டிருந்தனர்.

அன்பன்
கி.காளைராசன்

_________________________________________________________________

Sunday, May 5, 2013

அன்றொரு நாள்: மே 7: மரபு அணு மகிமை!=




அன்றொரு நாள்: மே 7: மரபு அணு மகிமை!

Innamburan Innamburan Tue, May 8, 2012 at 11:59 PM


ன்றொரு நாள்: மே 7:
மரபு அணு மகிமை!

ஓரிரு குடும்பங்கள் உலகையே மாற்றியமைத்து விடுகின்றன. மூன்று பிதாமகர்கள் ஹிந்து மதத்திலிருந்து, இஸ்லாமுக்கு மாறியதால், ‘பிராலி’ என்று ஒதுக்கப்பட்ட பார்ப்பன குடும்பமொன்று, (‘குஷாரி’ வம்சாவளி). அது ‘தாக்கோர்முஷாய்’ (‘தவத்திரு’) என உயர்ந்தது. வணிகம், செல்வம், கல்வி, கலை எல்லாவற்றிலும் முதன்மை, ஒரிஜினல். 

முதலில் தலையெடுத்த தர்ப்பநாராயண் லேவாதேவி செய்தார். செல்வம் கொழித்தது. மகனார் கோபிமோஹன் கொடையாளி. காளி கோயிலுக்கு நன்கொடை, பல மொழிகள் அறிந்தவர். ஹிந்து காலேஜ் ஸ்தாபகர். மகனார் பிரஸன்ன குமார் ஜமீந்தார். நிலபுலன் சங்கம் துவக்கினார். ஆங்கில அரசின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். நாடகத்துறைக்கு அடி கோலினார். ஊருக்கு பெரிய மனிதர். மகனார் ஞானேந்திர மோஹன், கிருத்துவத்துக்கு மாறி, வாரிசு உரிமையை பறி கொடுத்தார். அவர் தான் இந்தியர்களில், முதல் பாரிஸ்டர். லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர். அடுத்த வாரிசு ஜதீந்திரமோஹன் நடிகர்; நாடகத்துறை வல்லுனர். மைக்கேல் மதுஸூதனர் ‘திலோத்தமை’ என்ற காவியம் எழுத நிதி உதவினார். நாட்டியாலாயா என்ற அமைப்பை நிறுவினார். அவர் தான் இந்தியாவில் கூட்டு இசை (ஆர்கெஸ்ட்றா) அமைத்து இசைப்பணி செய்தார். அந்தக்காலத்தில் ஃபோட்டோ மன்றத்தில், இவர் தான் முதல் இந்திய உறுப்பினர். அடுத்த வாரிசு ராம்நாத்: அவருடைய ஓவிய கண்காட்சி மிகவும் அருமையானது. ஸெளரீந்திரமோஹன் இசைத்துறையில் 1875ல் ஃபிலெடெல்ஃபியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்: ஆக்ஸ்ஃபோர்டிலும். மேற்கத்திய இசையிலும், இந்திய இசையிலும் வல்லுனராகிய இவரை ஈரான் மன்னரும், ஆங்கில அரசும் விருதுகள் அளித்து பெருமை செய்தன.

இதோ நெருங்கிவிட்டோம், இன்றைய கதாநாயகரின் தாத்தா துவாரகாநாத் அவர்களை. அவரொரு ராஜா. வாரிசுவழி சொத்து அபரிமிதம். சம்பாத்தியம் அதை விட மேல். கவர்ன்மெண்டில் பெரிய உத்யோகம்: ஷெரிஸ்தேதார். (இன்று அடிப்பொடி உத்யோகம் அது.) பெரிய சமூக சீர்திருத்தவாதி. செலவாளி. பத்தாம்பசலிகளுக்கு டேக்கா கொடுத்துவிட்டு, இங்கிலாந்துக்குக் கப்பலேறியவர்.
ராஜாவுக்கு பிறந்தது தேவரிஷி ஆகி விட்டது. ஆன்மிகத்தில் ஆழ்ந்தவர். பிரம்மோ இயக்கத்தைத் துவக்கினார். தத்துவபோதினி என்ற இதழை நடத்தினார். பிரும்மோ சமாஜத்தை வங்காள மறுமலர்ச்சி இயக்கமாக வழி நடத்தினார்.
தேவரிஷி இல்லறத்திலும் ரெக்கார்டு மனிதர். 13  மணியான குழந்தைகள் வளர்ந்தனர். மூத்தவர் த்விஜேந்த்ரனாத் புலவர், கனிஞர், இசை ஞானி, இதழ் ஆசிரியர், விழாத்தலைவர். பெங்காலி சுருக்கெழுத்து படைத்தவர். அடுத்தவர் ஸத்தியேந்திரநாத் இந்தியாவின் முதல் ஐ.சீ.எஸ்., எழுத்தாளர், கவிஞர், இசை ஞானி. மூன்றாமவரான ஹேமேந்திரநாத் கட்டுப்பாடு மன்னர், குடும்ப நிர்வாகி. பலசாலி பயில்வான். இந்தியாவின் முதல் விஞ்ஞான எழுத்தாளர். பெண்ணியவாதி. பெண்களுக்கு மாப்பிள்ளை தேடுவதில், பாரத விலாஸ்.  கணேந்திரநாத் மேல்நாட்டு கலாச்சார மோஹி. மனைவி ஞ்யானதாநந்தினியை கிட்டத்தட்ட வெள்ளைக்காரியாக்கினார். அவரொரு பிருகிருதி.
பல மொழிகள் கற்ற ஜ்யோதீந்தரநாத் நாடகமேடையாளர். ஓவிய கலைஞர். 
ஆணுக்கு சரி நிகர் சமானமாக, பெண்ணரசி ஸ்வர்ணகுமாரி தேவி எழுத்தாளர், பாடகி, சமுக சேவகி, இதழாளர். மற்ற பெண்களும் க்யாதி படைத்தவர்கள். பட்டியல் மிக நீண்டது. மற்றொரு இழை சில நாட்களில் வர இருப்பதால், கடைக்குட்டி ரபீந்தரநாத் தாகூருடன், இவ்விழை முடிகிறது. நோபல் பரிசு வாங்கிய கவிஞர். நம் நாட்டு தேசீய கீத கர்த்தா. அழகிய தாடி. குருதேவ். 1946ல் படித்த அவருடைய கதைமாந்தர் காபூலிவாலா கண்முன் நிற்கிறார். மாப்பிள்ளை தேடுபவர்கள் இந்த குடும்பத்தில் சம்பந்தம் பேச விரும்பியது ஆச்சிரியம் இல்லை, இவர்கள் கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும்.
இன்று அவருடைய ஜென்மதினம். மே 7,1761. அவரது கவிதை ஒன்றை, பவளசங்கரி என்ற மாமி மொழிபெயர்க்க, மஹாகவி பாரதியார் மொழிபெயர்த்த தாகூர் கவிதை ஒன்றை நாகராஜன் மாமா, ‘எலி அவரை கிள்ளினதையும் பொறுத்துக்கொண்டு, மலையை நிஜமாகவே கிள்ளி‘ கண்டு பிடித்தார். அதனால், நான் அதிகம் பேசவில்லை. என் அப்பா சொல்லுவார்:  ஆகஸ்ட் 7, 1941 அன்று ரபீந்திரநாத் தாகூர் மறைந்ததை ரேடியோ அறிவித்தபோது, எட்டு வயதான நான், ‘ இன்று காலை அஸ்தமனம்‘ என்ற பொருள்பட சொன்னேனாம்.
இன்னம்பூரான்
07/8 05 2012
Inline image 1

உசாத்துணை: 
von Golam Abu Zakaria (2011) Rabindranath Tagore - Wanderer zwischen Welten: ISBN 978-3-86281-018-5 + பல நூல்கள்/ ஆவணங்கள்/இணைய தளங்கள்/விக்கிப்பீடியா

MANICKAM POOPATHI Wed, May 9, 2012 at 1:53 AM


வணக்கம்..!  _/\_

மஹிலா மரபணுவின் மகிமையினை
உணர்த்தும் சத்தியமேவ ஜெயதே..!

மிக்க நன்றி..!

அன்புடன்.../பூபதி

http://tinyurl.com/6m9r3dm
http://tinyurl.com/7482sun
___________________________________________

The show is being simulcast in eight languages across all key channels
of the Star network – Star Plus, Star Pravah, Star Jalsha,Star Utsav,
Asianet, Star Vijay besides ETV Telugu and Doordarshan.
_________________________________-
2012/5/8 Innamburan Innamburan <innamburan@gmail.com>
>
> அன்றொரு நாள்: மே 7:
>
> மரபு அணு மகிமை!


coral shree Wed, May 9, 2012 at 2:05 AM


அன்பின் இ ஐயா,

வணக்கம். எங்கெங்கோ நுழைந்து, குடைந்து, தெரியாத பல விசயங்களை அள்ளிக் கொட்டி விடுகிறீர்கள்.. இந்த அன்றொரு நாள் என்றொரு நாளைக்கும் நிறைவான பொக்கிசம் நம் தமிழ் மரபு விக்கிக்கு! மறைந்து, மறந்து போய்க்கொண்டிருக்கும் பல பழைய சங்கதிகளை தோண்டி எடுத்து கொண்டுவந்து சேர்த்து விடுகிறீர்கள் ஐயா.

தன்யனானேன் ஐயா. என் நினைவுகூரலையும் தங்களுடைய மேலான இடுகையில் இணைத்து எனக்கும் ஒரு அங்கீகாரமா... மிக்க நன்றி . வணக்கம்.

அன்புடன்
பவளா


sk natarajan Wed, May 9, 2012 at 2:07 AM

அருமையான  பதிவு ஐயா
எத்தனைத் தகவல்கள் இதனுள் அடங்கியுள்ளன
வாழ்த்துகள் ஐயா 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
]

Geetha Sambasivam Wed, May 9, 2012 at 2:17 AM

மரபணு மஹிமை அறிந்து ஆச்சரியமும், உவகையும் அடைந்தேன்.  இத்தனை ஆழமாகப் பொறுமையுடன் விஷயங்களைத் தேடும் உங்கள் பொறுமையில் கால்வாசியாவது எனக்குக் கிடைக்க அந்த அரங்கனை வேண்டுகிறேன்.  தொடர்வதற்குக் காத்திருக்கேன்.
[Quoted text hidden]

N. Kannan Wed, May 9, 2012 at 1:45 PM


2012/5/9 Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>:
> மரபணு மஹிமை அறிந்து ஆச்சரியமும், உவகையும் அடைந்தேன்.  இத்தனை ஆழமாகப்
> பொறுமையுடன் விஷயங்களைத் தேடும் உங்கள் பொறுமையில் கால்வாசியாவது எனக்குக்
> கிடைக்க அந்த அரங்கனை வேண்டுகிறேன்.  தொடர்வதற்குக் காத்திருக்கேன்.
>
இனிமே வாய்க்கு வாய் ரங்காதான்!
கேட்கவே சந்தோஷமாக உள்ளது கீதா!
ஹரிஜியும், விசாகாவும் இந்த வாரக்கடைசியில் லண்டன் வருகிறார்கள். உங்க
ஊர் சகவாசிகள்!

கண்ணன்


Hari Krishnan Wed, May 9, 2012 at 3:32 PM


2012/5/9 N. Kannan <


ஹரிஜியும், விசாகாவும் இந்த வாரக்கடைசியில் லண்டன் வருகிறார்கள்.

எந்த ஹரிங்கறத செத்த வெவரமா எழுதிப் போடுங்க.  நீங்க என்னையும் ஹரிஜிங்கறீங்க... அவரையும் ஹரிஜிங்கறீங்க... நான் எங்க லண்டனுக்குப் போறது?

Geetha Sambasivam Wed, May 9, 2012 at 3:59 PM

நான் புரிந்து கொண்டேன். விசாகா&ஹரி இருவரும் வருவதைச் சொல்கிறார்.
[Quoted text hidden]

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -29:' டெலிஃபோன் ஆடிட்’



தணிக்கை செய்வதில் தணியா வேகம் -29:' டெலிஃபோன் ஆடிட்’:

Innamburan S.Soundararajan Sun, May 5, 2013 at 6:32 PM


29 01 2010

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -29:' டெலிஃபோன் ஆடிட்
Inline image 1


அரசின் கையிருப்பு ஒரு தகவல் சாகரம். எண்ணற்ற தகவல்கள் தாறுமாறாக குவிந்திருப்பதாலும்தணிக்கைத்துறை எல்லாவற்றையும் தணிக்கை செய்வது இயலாது என்பதாலும்அநேக அரசு நடவடிக்கைகள் தணிக்கையிலிருந்து தப்பக்கூடும். அதை கட்டுபடுத்தஎல்லா அலுவலகங்களின் பட்டியல் அரசு தரவேண்டும் என்பது விதி. மதிப்பார்களோஅதற்குத்தான் டெலிஃபோன் ஆடிட் உருவாக்கினேன். டைம்லைன்: 1959.

தூத்துக்குடியில் ஒரு தணிக்கை நடந்துகொண்டிருந்தது. டெலிஃபோன் டேரக்டரியில் Regional Officer (Sails) என்றொரு அலுவலகம். அது ஆடிட் செய்யபட்டதாக வரலாறு கூறவில்லை. ஃபோன் செய்து நாங்கள் ஸர்ப்றைஸ் ஆடிட் செய்யப்போவதாக சொன்னேன். 'வருகஎன்றார்அதன் அதிகாரிபட்டாச்சார்யா என்ற பெங்காலி அதிகாரி. சின்ன ஆஃபீஸ். இரண்டு மணி நேரத்தில் தணிக்கை முடிந்து விட்டது. அவருக்கும் மகிழ்ச்சி. ஏனென்றால்அவர் நேர்மையான அதிகாரி. டெக்னாலஜிஸ்ட். அலுவலக விஷய்ங்கள் தெரியாது. முன்னின்று. சிறிய தவறுகளை நீக்கினார். பிறகுஎங்கள் வேலையை நீங்கள் பார்க்கவேண்டும் என்று அவர்களது சிறிய கப்பலில் [trawler] கடலுக்குள் அழைத்து சென்று எல்லாம் விளக்கினார்.

நம்ம் ஆடிட் புத்தி எங்கே போகும்டீஸல் வரத்துப்போக்கை அலசினோம், நடுக்கடலில். Nothing like visual audit. அதன் பயனாக,டீஸல் வாங்குவது/அதை வைத்து கப்பலை இயக்குவது/ செலவு எழுதுவது ஆகிய படிகளை ஆய்வு செய்துசில மாற்றங்களால் [fine tuning] சிக்கனம் கடைப்பிடிக்கலாம் என்று நாங்கள் சொன்னதை மறுக்காமல் ஏற்றுக்கொண்ட அவர் எழுப்பிய வினா: நான் அதிக்ப்படி செலவு செய்தாலும்எனது முறை அரசினால் அங்கீகரிக்கபட்டதுநீங்கள் சொல்வதோ புதிது. எங்கள் தலைமை ஆஃபீஸ்க்காரங்க குட்டுவார்கள். அவர் சொல்வது யதார்த்தம். 'இது தான் ஆடிட் நோட்எனவேஅவர்கள் சொல் படி செய்யத்தொடங்கிவிட்டேன்என்று எழுதுங்கள் என்றேன். ஆனால்அந்த நோட்டை எழுதியதேஅவர் தான். விஷயம் புரிந்துகொண்டதாலும்டெக்னிகல் மொழி அவரிடம் இருந்த்தாலும்நல்லதே நடந்த்தது. சுருங்க்ச்சொல்லின், 'குரங்கு பிடிக்கப்போய். பிள்ளையார் பிடிக்கப்பட்டது!

பிற்காலம்அவர் சென்னையில் வீட்டுக்கு வந்ததும்அவரது குடும்பமும்என் குடும்பமும் நண்பர்களாக ஆனதும் போனஸ்
இன்னம்பூரான்
29 01 2010

இன்றைய அப்டேட்:

தமாஷ் எல்லாம் கூட நடக்கும். தீவட்டிக்கொள்ளைக்காரன் மாதிரி நோட்டீஸ் கொடுத்து ஆடிட் செய்வது தான் வழக்கம். ஒரு நாள் ஒரு பெரியவர் என்னை பார்க்க வீட்டுக்கு வந்தார், கண்ணீர் மல்க. ஆடிட் வரப்போவதால், அவருடைய மகள் கல்யாணத்துக்கு லீவு தரமாட்டேன் என்று சொல்லி விட்டாராம், தாசில்தார். எல்லாம் அலசியபிறகு, ஆடிட் செய்வதை ஒத்திப்போட்டோம்! தாசில்தார் அத்தனை முரடு.
சித்திரத்துக்கு நன்றி:http://www.stemtechnews.com/wp-content/images/telephone.jpg

இன்னம்பூரான்
06 05 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -28:'டெக்னிக்’




Innamburan S.Soundararajan Sun, May 5, 2013 at 6:01 PM
28 01 2010

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -28:'டெக்னிக்
Inline image 1

தணிக்கையாளன் செய்நன்றி எதிர்பார்க்கக்கூடாது. அவன் நிந்தனையிலிருந்தும்எள்ளலிருந்தும் தப்பமுடியாது. கர்மா தியரில் அவனுக்கு அசையா  நம்பிக்கை வேண்டும். ஏனென்றால்அவனிடம் யாதொருவிதமான அதிகாரமும் கிடையாது. குற்றம் காணலாம்.Who cares?  கெஞ்சிக்கூத்தாடிஏதோ ஒரு பதில் வாங்கியாக வேண்டும்பதிலையும் இணைத்துத்தான் ஆடிட் கண்டுபிடித்த விஷயங்களை வெளியிடவேண்டும் என்று மரபு.

இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட் அனுப்பினால்பதில் போட மாட்டார்கள்முக்யமான அம்சங்களை ட்ரஃப்ட் ஆடிட் பாரா என்று தலைப்பு இட்டுஅரசு காரியதரிசிக்கு அனுப்புவார்கள்ஆறு வாரக்கெடு வைத்துசிலசமயம்ஆறு மாதத்திற்கு பிறகும் பதில் வராது. அதற்குள்ஆடிட் ரிப்போர்ட் அளிக்கவேண்டிய காலக்கெடுவும் நெருங்கிவிடும். ஆக மொத்தம்பதில் சொலவதில் கால தாமதப்படுத்திஒரு ஆடிட் பாராவை அலக்கழிக்கமுடியும்.

இப்படியாக பாஸ்ஸெஞ்சர் வண்டி அன்னநடை போடுகிறதே என்றால்எங்களுக்கு வேறு வேலை இல்லையா என்பார்கள். இத்னால் தான்லக்ஷக்கணக்கான நிர்வாகக்குற்றங்களை வடிகட்டிவடிகட்டிதயாரிக்கப்படும் ஃபில்டர் டிக்காக்ஷமன் தான் ஆடிட் ரிப்போர்ட். ஒரு சொல் கூட தவறக இருக்காது. அந்த அளவுக்குபைத்தியக்காரன் சட்டையைக் கிழித்துக்கொள்வது போலஒருவருக்கு நாலு பேர்ஆதாரங்களை சரி பார்த்த பிறகு தான்அதற்கு விடிவு காலம்.. இத்தனையும் ஆனபிறகு,, நாடாளும் மன்றத்தின் பொதுக்கணக்குக்குழுவின் முன்ஆடிட் சொல்வது தப்பு என்று சத்தியப்பிரமாணம் செய்வார்கள். அதை எதிர்நோக்கத்தான் 'சாவி' [KEY] ஆடிட்பாரா பூட்டு என்றால். இந்த ஆதாரக்கூட்டுச்சோறு தான் சாவி. ஒரு பக்கப்பூட்டுக்கு, 50 பக்க சாவி இருக்கும். அதிலிருந்து மேற்க்கோள் காட்டினால்சாவி கொடுக்கவில்லையே என்பார்கள்!

இப்போ புரியதாஏன் அரசு கடியாரம் மணி காட்டுவதில்லை என்று?...

இன்னம்பூரான்

பி.கு. ஆறு வாரக்கெடு வைத்து  ட்ரஃப்ட் ஆடிட் பாரா அனுப்பும்போது, 'இதற்கு ரிமைண்டர் வராது' என்று முன்கூட்டி சொல்வது என் வழி. அதற்காக, நான் பெற்ற நிந்தனைகள் எக்கச்சக்கம்!

Today's Update:
'...JAIPUR: Comptroller and auditor general Vinod Rai on Saturday said that reports of the CAG can be accessed by the public at every stage, including when the draft report is ready, through an Right To Information application. 

"Under the law we are obliged to share information if someone files an RTI," Rai said here and added that whenever an audit query is raised if someone files an RTI the CAG is bound to give away the information, and this can happen at any stage of the audit, even at the point when the draft report is ready. 

Rai was speaking here at the inauguration of the International Centrefor Environment Audit and Sustainable Development. He said that the CAG office never has indulged in any selective leaks as it is duty bound to maintain secrecy till the report is tabled in Parliament. '
*

Innamburan
05 05 2013

அன்றொரு நாள்: மே 6: தலை கீழ்!




அன்றொரு நாள்: மே 6: தலை கீழ்!

Innamburan Innamburan Mon, May 7, 2012 at 10:26 PM


ன்றொரு நாள்: மே 6:
தலை கீழ்!
ராஜாஜி அவர்கள் பிரிட்டீஷ் சர்க்காருடன் காங்கிரஸ் செய்த ஏற்பாட்டின் படி, சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்தபோது, ஒரு டவாலியிடம் ஒரு கவரை கொடுத்து தபால் தலை ஒட்ட சொன்னார். ராஜாவும் தொங்கினார்! அந்த டவாலி தலை கீழாக ஒட்ட, ராஜாஜி, ‘ஏம்ப்பா! இந்த ராஜாவை கவிழ்க்க நாங்கள் எல்லாம் பிரம்ம பிரயத்தனம் செய்கிறோம். நீ ஒரு வினாடியில் கவிழ்த்து விட்டாயே’ என்றாராம். இது படித்தது. தபால் தலைகள் வரலாறு பேசும். நான் ஆறு/ஏழு வயதில் தொடங்கிய தபால் தலை சேகரிப்பு தொய்வில்லாமல் தொடருகிறது, எழுபது வருடங்களாக. தீப்பெட்டி லேபல் எத்தனை வைத்திருந்தேன். அபேஸ். நேற்று கூட ஃப்ளோரிடா, அரிஜோனா, ஒஹாயோ, நார்த் கரோலினா அரை டாலர்கள் பத்திரப்படுத்தினேன். நாலு வரி ஒப்பேத்தியாச்சு. விஷயத்திற்கு வருகிறேன்.

உலகிலேயே முதல் தபால் தலை மே 6, 1840 அன்று பயனுக்கு வந்தது, இங்கிலாந்தில். அதற்கு ‘பென்னி ப்ளேக்’ (Penny Black). தம்பிடி சவரனாக மாறிய மாதிரி, அன்று அதன் விலை ஒரு பென்னி. இன்று $565 வரை ஈபே ஏலத்தில் போவுது. முதல் உசாத்துணையில் அபரிமிதமான படங்கள். எல்லாம் மாட்சிமை தாங்கிய பிரிட்டீஷ் மஹாராணியிடம் தங்கியவை. பார்த்து மகிழவும். இந்தியாவின் முதல் தபால் தலை மே 6. 1854ல் வெளியிடப்பட்டது என்று விக்கிப்பீடியா சொன்னாலும், சிந்த் மாகாணத்தில் அதற்கு முன்னோடிகள் (சிந்தியா டாவ்க்) இருந்தன. இரண்டாவது உசாத்துணையில் இந்திய தபால் தலை வரலாறு உளது.
இன்னம்பூரான்
06 05 2012
Inline image 1

உசாத்துணை:

renuka rajasekaran Tue, May 8, 2012 at 12:31 AM

"ஏம்ப்பா! இந்த ராஜாவை கவிழ்க்க நாங்கள் எல்லாம் பிரம்ம பிரயத்தனம் செய்கிறோம். நீ ஒரு வினாடியில் கவிழ்த்து விட்டாயே’ என்றாராம்." ---------ஆஹா! அருமை!!

"இந்தியாவின் முதல் தபால் தலை மே 6. 1854ல் வெளியிடப்பட்டது என்று விக்கிப்பீடியா சொன்னாலும், சிந்த் மாகாணத்தில் அதற்கு முன்னோடிகள் (சிந்தியா டாவ்க்) இருந்தன. இரண்டாவது உசாத்துணையில் இந்திய தபால் தலை வரலாறு உளது." ---------ஓஹோ பெருமை! பெருமை!! பெருமை!!!

நன்றி

கி.காளைராசன் Tue, May 8, 2012 at 12:59 AM


ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/5/8 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ஒரு டவாலியிடம் ஒரு கவரை கொடுத்து தபால் தலை ஒட்ட சொன்னார். ராஜாவும் தொங்கினார்! அந்த டவாலி தலை கீழாக ஒட்ட, ராஜாஜி, ‘ஏம்ப்பா! இந்த ராஜாவை கவிழ்க்க நாங்கள் எல்லாம் பிரம்ம பிரயத்தனம் செய்கிறோம். நீ ஒரு வினாடியில் கவிழ்த்து விட்டாயே’ என்றாராம்.
ஒரு முறை அலுவலகத்தில் காந்திஜியின் தபால்தலையை ஒருவர் தலைகீழாக ஒட்டினார்.  எடுத்துச் சொன்னபோதும் கேட்கவில்லை.  மாறாக இதனால் குற்றம் ஏதும் இல்லையென வாதிட்டார்.
அவரது வேலை காலியானது.

இது படித்தது. தபால் தலைகள் வரலாறு பேசும். நான் ஆறு/ஏழு வயதில் தொடங்கிய தபால் தலை சேகரிப்பு தொய்வில்லாமல் தொடருகிறது, எழுபது வருடங்களாக. தீப்பெட்டி லேபல் எத்தனை வைத்திருந்தேன். அபேஸ். நேற்று கூட ஃப்ளோரிடா, அரிஜோனா, ஒஹாயோ, நார்த் கரோலினா அரை டாலர்கள் பத்திரப்படுத்தினேன். நாலு வரி ஒப்பேத்தியாச்சு.

நாலுவரி பத்திரப்படுத்தியாச்சு.
அன்பன்

கி.காளைராசன்

Geetha SambasivamTue, May 8, 2012 at 2:25 PM


எங்க வீட்டிலேயும் தபால்தலை சேமிப்பு உண்டு.  என் கணவரோட சேமிப்புப் புத்தகம், பெண், பிள்ளையோடது பத்திரமாய் வைத்திருக்கோம். உசாத்துணையை இன்னமும் படிக்கலை.  அப்புறமாப் படிச்சுக்கறேன். 

2012/5/8 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.