Friday, May 3, 2013

“ச்சில்! ச்சில்! சில்ரினோ ஜவான்!!”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -25




“ச்சில்! ச்சில்! சில்ரினோ ஜவான்!!”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -25

Innamburan S.Soundararajan Fri, May 3, 2013 at 11:31 AM


25 01 2010

ச்சில்! ச்சில்! சில்ரினோ ஜவான்!!: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -25
Inline image 1

c + F தணிக்கை எல்லாம் காலாகாலத்திலே வரும்.  அது சரி. சென்னையிலே பனி பொழிகிறதாமே! [விகடன்] இவா ஸிம்லா/போர்ட்ஸ்மத்/சையின் லூயி பாக்கணும்.

*

'ட்ரீஈஈங்க்' 'ட்ரீஈஈங்க்'  டெலிஃபோன் அலற... கும்மிருட்டு. நடு நிசி. "ஷார்ட்டீ! (காரணப்பெயர்) கம் அட் ஒன்ஸ்" என்றார்பிரின்ஸிபால். எதற்கும் எம்து புல்வெளியை எட்டிப்பார்த்தேன்குதிரைவீரன் உலா வருகிறானாஎன்று. அவன் எங்கள் ரெஸிடென்ட் பேய்! கலோனியக்கட்டிடம் (colonial). ல்லாரும் சொல்வார்கள்யாரும் பார்த்ததில்லைநாங்களும்  ப்ருடா விடுவோம்.(வதந்திகளை குலைப்பது மஹாப்பாவம்.)  இன்று தரிசனமோஅப்றம் கரடியெல்லாம் வரும்,  அவர் வீடு பக்கத்தில் என்றாலும். எதற்கும் இருக்கட்டும் என்று மல்ஹோத்ராவை எழுப்பினால்அவன் தாடியை வலையில் சிறை செய்துடை கட்டி (அவன் எப்போதும் டிப் டாப்பிற்காலம் நாங்கள் காஷ்மீர் சுற்றுலா போன போது,அவன் விருந்தோம்பினான்,) மறுபடியும் 'ட்ரீஈஈங்க்' 'ட்ரீஈஈங்க்'! 'நான் கிளம்பியாச்சுஎன்று முரண்பட கூறி ஓடினால்அவருடைய சிறுமகன் மல்லாக்கப்படுத்துண்டுருக்கிறான். யான் சைகையால் விளிக்க,அவர் கண்னசைவில் பதில். பார்த்தால்பாட்டில் பாதி காலி!

எல்லாரும் கை பிசைந்து நிற்கஓடோடி ஃபில்டர் காஃபி போட்டேன்ஒரு செல்ல அறை கொடுத்துவாயில் ஊற்றினேன்மலங்க மலங்க விழித்துவிஸ்கி மாதிரி இருக்கேஎன்றான். ஒரு குட்டு குட்டி(அதானே சாக்கு.) ஆம்புலன்ஸ்ஸில்,  மல்ஹோத்ரா ரன்னிங்க் கம்மென்டரியுடன்ஆஸ்பத்திரிக்குப் போனால்என்ன கொடுத்தீர்கள் என்று வினவினார்கள். காஃபி என்றவுடன்சரிவீட்டுக்கு போங்கள்தூங்கட்டும் என்றார்கள். மறு நாள் இஞ்சி தின்னக்குரங்கு மாதிரி இளிக்கிறான். எனக்கு கித்தாப்பு (சன்டியர் மாதிரிநாலு ஸ்வெட்டர்க்கு மேல்,காலரை தூக்கிவிட்டிக்கொள்ளும் அளவுக்கு) அதிகரிக்கமற்றவர்கள், 'ஓ! பிரின்ஸ்பாலுக்கு வேண்டப்பட்டவனா?  வேட்டு வைக்கிறோம் பாருஎன்று கருவினார்கள்..

வேட்டொ! பூட்டோ! திருஷ்டி விழுந்து விட்டது. பேட்மிண்டன் விளையாடும்போது, (தலையல்ல,ஓய்!) எPன் தோள்பட்டை மூட்டு நழுவி விட்டது அதன் பினனணி அபாரம்பிறகு. ஸ்னோடன் ஆஸ்பத்திரிக்கு ஃபோன் போட்டால்ஆம்புலன்ஸ் அனுப்பினார்கள். ஸிம்லாவில் சைரன் வேண்டாம். ரோட்டில் இந்த வண்டி மட்டும் அலெளட். தலைமை டாக்டர் கே.என்.உடுப்பா FRCS (பிற்காலம்ஆயுர்வேதம்,யோகா என்று பெரும் புகழ் படைத்தவர்) வரும் வரை காக்க வைத்துவிட்டார்கள். வலி துடித்துப்போய்விட்டேன். அவர் வந்தால் ஒரு டோஸ் கொடுக்கவேண்டும் என்று நப்பாசை. இரண்டு மணி நேரம் கழித்து வந்த அவரின் சாந்தமான முகத்தைப்பார்த்து வலி ஓடிப்போய்விட்டது. அகத்தின் அழகு முகத்திலே. பிறகு மயக்கம்;உளரல். பசங்க வேறு என்ன ரகஸ்யம் வரப்போகிறது என்று வல்லூறுகள் போல காத்திருந்தனர். ஒரு பாடா வந்து சேர்ந்தேன். இதுக்கு நடுவுலே கவலை என்ன என்றால், 'ஏற்கனவே,வஸந்தாவின் டெய்லிக்கடிதங்களைப்படிக்க ஆவல் கொண்டோர்பிரித்துப்படிப்பதை தவிர்ப்பது எப்டி?' என்று. அது பற்றிமயங்கிய நிலையில் கொட்டிப்டேன் போல இருக்கிறது. அடுத்த தடவைடேபிள் டென்னிஸிலும்மூட்டு நழுவடாக்டர் உடுப்பாகனிவே உருவாகக் கேட்டார், 'தினம் லெட்டர் வரதாப்பா?' என்று.

விலாவாரியா எழுதலாம். ஆனால், 23 பேர். ரயில்வே அக்கவுன்ட்ஸ் பசங்க 11, இதில் பெண்பாலார்பிரின்ஸிபால்வாஸ்,  (ஆராவ) மதன் என்ற அட்மினிஸ்ட்ரேடிவ் ஆஃபீஸர், (சுத்துப்படை என்று நான்கு கதை மாந்தர்கள்.). அனவரதமும், 34 பிருகிருதிகள் மற்ற 33பிருகிருதிகளின் காலை வாருவது பற்றி ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து இருப்பது,  கூட்டுச்சதிகள்பீட்டல் பிரிகேட் (Betel brigade)என்ற பீடா/பான் ஆர்வலர்கள்வடமொழிப்பித்துக்கள்பார்ப்பனச்சிட்டர்கள்தலைகீழ் கணக்கர்கள்சண்டைக்கோழிகள் என்று பல பல இனங்கள். இந்த ஸிம்லா சகாப்தம்ராமாயணம் தோற்றது போங்கள்.

இன்னம்பூரான்
----------------------
இன்னம்பூரான்
03 05 2013

No comments:

Post a Comment