Sunday, April 28, 2013

“ஃபேஸ்புக்”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -20




“ஃபேஸ்புக்”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -20


Innamburan Innamburan Tue, Jan 19, 2010 at 6:07 PM

20 01 2010

 ஃபேஸ்புக்: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -2

இந்த ஹிந்தி கார்யாலாவின் முக்கிய சலுகை: ஃபேஸ்புக் போன்ற அரசு சமூக தொடர்புகள். சென்னையில் உள்ள ஒவ்வொரு மத்திய அரசு அலுவலகத்திலிருந்து ஒரு தொடர்பு அதிகாரி என்று ஒருவருக்கு அதிகப்படி பொறுப்பு. அவர்கள் எல்லாருக்கும் தலை மாந்தர் இந்த ஆஃபீஸர் இன் ஓவரால் சார்ஜ். மாதம் ஒரு முறை எல்லாரும் சந்தித்துஹிந்தி பரப்ப வேண்டிய தலை போகும் பணியை சிறப்புற செய்வது பற்றி விவாதிக்கவேண்டும். முந்திரிப்பருப்புமைஸூர்பாக்பக்கோடாடீ/காஃபி என்னுடைய உபயம்அரசு செலவில். ஏன் வரமாட்டார்கள்?

ஆக மொத்தம்தெரிந்தவர்கள் பல துறைகளில் இருப்பதாலும்தலை மாந்தன் என்ற சிறப்பு துணை போனதாலும்புதிய உறவுகள் முளைத்தன. கற்றோனுக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்றால்தொடர்பு உள்ளவனுக்கு கேட்டதெல்லாம் நடக்கும் என்பது உறுதியாச்சு. அடக்கி வாசித்ததாலும்ஏற்புடைய வகையில் பரஸ்பர உதவி என்று இயங்கியதால்அன்றைய கால கட்டத்தில்அனேகருக்கு உற்ற நண்பனாகிவிட்டேன் என்றால் மிகையாகாது. அந்த கால கட்டத்தில்அங்கும் இங்கும் வேண்டப்பட்ட ஆள் இல்லை யென்றால்டெலிஃபோன் கிடைக்காது: ரயில்வே ரெசெர்வஷன் செய்யமுடியாதுஸ்கூல் அட்மிஷன் கஷ்டம். க்வார்ட்டார்ஸ் கிடைக்காதுதகுந்த டாக்டர் சிக்க மாட்டார்எண்ணில் அடங்காஅன்றாட இன்னல்கள்பின்னல்கள்சிக்கல்கள். ஏ.ஜீ.யேஅந்த  பீ.ஆர்.ஓ வை  (Public Relation Officer)  கூப்பிடு என்ற அளவுக்குசெல்வாக்கு. இது பொறுக்குமோதெய்வத்திற்க்கு?

என்னை சித்தரஞ்சன் ரயில்வே எஞ்சின் தொழிற்சாலைக்கு டிபுடி சீஃப் ஆடிட்டராக மாற்றி விட்டார்கள். டைம் லைன் 1960. சில மாதங்களே தணிக்கை செய்ய கற்றுக்கொள்வதற்குள்ஹிந்தி சீட்டிங்கைடீச்சிங்கா ரசவாதம் செய்வதற்குள்பொதுநல அதிகாரநுட்பங்கள் கற்றுக்கொள்வதற்குள்ஜ்யோதி பாஸு அவர்களின் பிரதேசத்துக்குப் பக்கம்பயணம்புது அனுபவங்களை நோக்கி. கிட்டத்தட்டஇந்த சமயத்தில் தான் ஒரு ஞானஸ்நானம் எதிர்பாராத விதமாகநடந்து முடிந்தது..

யானும்காசிக்குப் போன பார்ப்பனன் தனக்கு பிடிக்காத கத்திரிக்காயை தியாகம் செய்த மாதிரிஒரு மாதிரியான! 'துறவறம்பூண்டேன். சமயோசிதமாகஇன்று வரை யாரிடமும் சொன்னதும் இல்லை.

அது சரிநான் சஸ்பென்ஸ் வைச்சாஷைலஜாக்கூடபெண்ணேஸ்வரன் கூட,  'இன்னா சமாச்சாரம்?' ந்னு கேக்கலையென்றால்இங்கு பனி உருகறமாதிரிசுரத்து இறங்கிவிடுகிறது. சான்றாக, 'சிம்லா போன கதைஎன்றேன். கமுக்கம். ஸீல் போட்ட டெண்டரை பிரிப்பது என்றேன். கம். இந்த துறவறம் பற்றி கேட்காவிட்டால்மண்டையே வெடித்து விடும் போல தோற்றம். முனைவர் திருவேங்கடமணி கூட காஷ்ட மெளனம்! ஒய்?
இன்னம்பூரான்
Tirumurti Vasudevan Wed, Jan 20, 2010 at 7:38 AM

அருமையா போய்கிட்டு இருக்க்ற கதை நடுவிலே பூந்து தடுக்கவோ திசை திருப்பவோ வேண்டாம்ன்னுதான்.  ஏற்கெனெவே ஒரு இழை பிரிஞ்சாச்சு!சிம்லா கதை ஸீல் கதை துறவறக்கதை எல்லாமே சொல்ல வேணும். தட்ஸ் ஒய்,  சரிதானே ஓய்?


Tthamizth Tthenee Wed, Jan 20, 2010 at 7:53 AM
அது சரிநான் சஸ்பென்ஸ் வைச்சாஷைலஜாக்கூடபெண்ணேஸ்வரன் கூட,  'இன்னா சமாச்சாரம்?' ந்னு கேக்கலையென்றால்இங்கு பனி உருகறமாதிரிசுரத்து இறங்கிவிடுகிறது. சான்றாக, 'சிம்லா போன கதைஎன்றேன். கமுக்கம். ஸீல் போட்ட டெண்டரை பிரிப்பது என்றேன். கம். இந்த துறவறம் பற்றி கேட்காவிட்டால்மண்டையே வெடித்து விடும் போல தோற்றம்
ஐய்யா  இன்னம்புரரரே  தயவு செய்து  அந்த ரகசியத்தை (துறவறத்தைப்) பற்றி   சொல்லிவிடாதீர்கள்
 
ஆனாலும்  மர்மக் கதை  மன்னன் போல  இருக்கிறீர் நீர்
 
துறவறம் பற்றித் தெரிந்து கொள்ளாமல்  தூக்கம் வருமோ
 
ஆனாலும் நீங்கள் அதை சொல்லிவிடாதீர்கள்
 
மனது கேட்கவில்லை 
 
மர்மக் கதை படித்தாலே  கடசீப் பக்கத்தை  முதலில் படிப்பவர்கள்  ஏரரளம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
_______________________________________________________________________________________

Image Credit:http://image.shutterstock.com/display_pic_with_logo/172795/172795,1274706007,1/stock-vector-public-relations-word-cloud-53764561.jpg
innamburan
28 04 2013
 
 
 


 

No comments:

Post a Comment