Friday, June 14, 2013

21. தணிக்கை: ஒரு முகாரவிந்தம்


21. தணிக்கை: ஒரு முகாரவிந்தம்
தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-21


இன்னம்பூரான்

  • Friday, September 30, 2011, 11:55

பாலப்பிராயமும், ஆடிட்டும்:
இத்தொடரின் இலக்கு மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை, குண்டலினி சக்தியெனத் தட்டி எழுப்புவதே. சில கேள்விகளுக்கு உரிய பதில்களையும், தொடர்புடைய பழைய அனுபவங்களையும் எழுத விழைந்தபோது, கீழ்க்கண்ட ஆவணம் வந்து அடைந்தது. எழுத நினைத்ததை ஒத்திப் போட்டு, தணிக்கையின் மற்றொரு முகாரவிந்தத்தைப் பற்றி எழுதுகிறேன். நீங்கள் சொன்னால்தான் இது செல்லுபடி ஆகுமா இல்லையா என்று தெரியும். தேவையானால், மாற்றியமைக்க இயலும். திசை மாறியும் பயணிக்கலாம்.
‘ஆடிட்’ என்ற ஆங்கிலச் சொல்லின் மூலமே ‘செவி சாய்ப்பது, கேட்டறிவது’. தணிக்கைத் துறையின் செயல்முறைகளைக் கூட மக்கள் அறிந்து கொண்டால், அவர்களே உள்ளூர் விஷயங்களை, “குப்பை அள்ளுவதிலிருந்து சிசேரியன் ஆபரேஷன் வரை” தணிக்கை செய்ய இயலும். வாழ்வாதாரம் உயரும். அதாவது, தணிக்கை என்பது நிதி சம்பந்தமானது மட்டுமல்ல. அந்தக் கழுகுப் பார்வைக்கு மனித யத்தனங்கள் யாவற்றையும் உட்படுத்தலாம் என்பதே. உதாரணமாக, மருத்துவத் துறையில் அறுவை சிகிச்சை ஒவ்வொன்றிற்கும் குறிப்புக்கள் எழுதி வைக்க வேண்டும். அவற்றை அலசுவதை ‘மெடிக்கல் ஆடிட்’ என்பார்கள்.

நமது ஊர்களிலே அநாதை இல்லங்களும், பள்ளிகளும் உண்டு. தலித் மாணவ மாணவிகளுக்கு சலுகை தரும் இல்லங்களும், பள்ளிகளும் உண்டு. குற்றமிழைத்த சிறார்/சிறுமிகளுக்கு சீர்திருத்தப் பள்ளிகள் உண்டு. மாற்றுத்திறனாளி/ கண்ணொளி மங்கியோர்/ கேட்கும் திறனற்றவர்கள்/பேசும் திறனற்றவர்கள்/ மனோவியாதியால் பீடிக்கப்பட்டவர் என நம் உடன் பிறந்த/ பிறவா சகோதர, சகோதரிகளுக்கு உறைவிடம், பள்ளி ஆகியவை உண்டு. நம்மில் யாராவது அவ்விடங்களுக்கு சென்று, என்னதான் நடக்கிறது என்று கேட்டது உண்டா? உற்றார், உறவினர், சுற்றம், நண்பர்கள், பொது ஜனம் போய்க் கேட்டால், அங்கு கோலோச்சுபவர்கள், அதிகாரப்பேய் ஆவேசத்தில் விரட்டுகிறார்களா?, மழுப்புகிறார்களா? பொய்யுரைக்கிறார்களா? நம் உடன் பிறந்த/ பிறவா சகோதர, சகோதரிகளை பேச விடுவதில்லையா? அவ்வாறெல்லாம் இருந்தால், மேலும் படிப்பீர்கள் என நினைக்கிறேன்.
இங்கிலாந்தில் இரண்டாவது உலக யுத்தத்தின் போது, இருபாலாரும் போர்க்களப் பணிகளில் முனைந்து இருந்ததாலும், ஜெர்மானிய குண்டுவீச்சு மும்முரமாக இருந்ததாலும், சிறார்கள், பாதுகாப்புக் கருதி, முன்பின் தெரியாத குடும்பங்களுடன் வாழ, கிராமங்களுக்கு அனுப்பப் படுவார்கள். அவர்களில் ஒருவரை அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு கண்டு பேசிய போது, செவிலித்தாயின் அன்பைச் சொல்லிச், சொல்லி, உருகினார். அதே சமயம், மேற்கத்திய நாடுகளில் மத போதகர்களின் அநாகரீக பாலியல் பலாத்காரங்களும்  பதிவு ஆகியிருக்கின்றன.

இந்தப் பின்னணியில், ஒரு வாரம் முன்னால் வந்த ஒரு தணிக்கை அறிக்கை (ஆடிட்டர் ஜெனரல் கொடுத்தது அல்ல. ஆஃப்ஸ்டெட் என்ற அரசு அதிகாரம் பெற்ற அமைப்பு). சமுதாய நலன் என்ற அரசு பிரிவினர் இந்த இல்லங்களை சோதித்து வர வேண்டும் அவர்கள் செய்யும் சோதனை பற்றி, குழந்தைகளிடமே கேள்வி கேட்கப் பட்டது. 224 குழந்தைகளிடம் கேள்வி கேட்கப் பட்டது. அவற்றில் 149 பேருக்கு , இந்தச் சோதனை அனுபவம் உண்டு. முக்கால்வாசிப் பேர்களுக்கு சோதனை வரப் போவது தெரியும். கால்வாசிப் பேருக்குத் தெரியாது. மேலும் தோண்டித் துருவினால்: கால்வாசி குழந்தைகள் தாங்கள் சோதனைக்கு தயார் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். முக்கால்வாசி குழந்தைகள் தாங்கள் எந்த வகையிலும் கட்டுப்படுத்தப் படவில்லை என்றனர். இருபத்தேழு குழந்தைகள் இருப்பிடங்கள் சுத்தமாக வைக்கப்பட வேண்டும் எனக் கட்டாயப் படுத்தினதை சொன்னார்கள். இன்னும் சிலர் (4/27) நல்லதையே சொல்ல வேண்டும் என வற்புறுத்தப்பட்டனர்.
இது பெரிய விஷயமல்ல. தணிக்கை அறிக்கையைச் சுருக்கி அளித்தேன்.  நமக்கேற்ற சில படிப்பினைகள் முக்கியம். அவை:
  1. இந்த விசாரிப்பு, அவரவரின் மொழியில் நடந்தது;

  1. பதினான்கு வயதுக்கு மேல்/கீழ், ஆண்/பெண், இருக்குமிடம் இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது, நுட்பங்கள் அறிய;
  2. இந்தச் சோதனைகளை குழந்தைகள் நோக்கிய விதத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.
  3. இடம்,பொருள், ஏவல் பொறுத்து, இதமாக, நிதானமாக கேள்விகள் கேட்பதில் பயன் அதிகம் உண்டு.
ஒரு வித்தியாசமான தணிக்கையை பகிர்ந்து கொண்டதின் விளைவாக, உங்கள் ஊரில்/பேட்டையில் எழக் கூடிய வினாக்களில் ஐந்து, மாதிரிக்கு:
  1. அநாதை இல்லங்களில், ராணிப்பேட்டையில் இருக்கும் தீனபந்து இல்லத்தில் என்னால் இயன்றது போல, சிறார்களுடன் பேசமுடியுமா?
  2. உங்கள் அருகில் இருக்கும் சீர்திருத்தப் பள்ளி எங்கு இருக்கிறது தெரியுமா? அங்கு நடப்பதை மேற்பார்வை செய்வது யார்? செங்கல்பட்டில் ஒன்று உள்ளது.
  3. தலித் ஹாஸ்டலில் சமபந்தி போஜனம் என்றாவது நடப்பது உண்டா?
  4. பள்ளிகளில் அளிக்கும் மதிய உணவை, பெற்றோர் பார்வையிட அனுமதி கிடைக்குமா?
  5. புதிய கருத்து/வினா ஏதாவது உங்களுக்குத் தோன்றுகிறதா?
*********
சித்திரத்துக்கு நன்றி:http://www.cartoonstock.com/newscartoons/cartoonists/awh/lowres/awhn120l.jpg



வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -3




வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -3

Innamburan S.Soundararajan Fri, Jun 14, 2013 at 3:04 PM

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம் -3
Inline image 1


இன்று போர்ட்ஸ்மத்தில் வீட்டுவாசலிலேயே விலங்கிடப்பட்டு சிறை சென்ற ஒரு இளம்பெண் செய்த குற்றம்: சமீபத்தில் முரசொலிக்கும் பணி புரியும் ராணுவவீரரொருவர் லண்டனில் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். மக்கள் ஆவேசத்துடன் விசனம் அடைந்தார்கள். அதன் தொடர்பாக முகநூலில் இவர் எழுதியது இஸ்லாமிய இனத்தை இழிவுபடுத்தியது என்ற குற்றம். இதே காலகட்டத்தில் சென்னையில் ஒரு செல்வந்தரின் மகன் மீது தாறுமாறாக காரோட்டி உயிர்ச்சேதம் விளைத்ததாகக் குற்றச்சாட்டு. அதில் பல திடீர் திருப்பங்கள். ஏகப்பட்ட விமர்சனங்கள். இதே மாதிரி அட்மிரல் நந்தா என்ற கடற்படைத்தலைவரும், பிற்கால ஆயுத தரகரும் ஆகிவிட்டவரின் பேரன் மீது தாறுமாறாக காரோட்டி உயிர்ச்சேதம் விளைத்ததாகக் குற்றச்சாட்டு, சில வருடங்கள் முன். அதிலும் பல திடீர் திருப்பங்கள். முரண்கள். தகாத செயல்கள் மூன்றுக்கும் ஒப்புமை: Omne crimen ebrietas et incendit et detegit!
இந்த லத்தீன் சூத்திரத்தின் பொருள்: 
குடிவெறி உசுப்பேத்தும்; குற்றங்களை காட்டிக்கொடுத்து விடும். எல்லாவிதமான குற்றங்களையும் தூண்டி விடுவதும் குடிவெறி. குடிவெறியினால் ஏற்படும் தற்காலிக சித்தபிரம்மை என்று வாதாடி பயன் இல்லை. ஏனெனில், அந்த நிலை பொறுப்பை விலக்கவில்லை. சுயநினைவு இருக்கும்போது குடித்துவிட்டு, தன்வசம் இழந்திருந்தாலும், குற்றம் குற்றமே. குடிப்பழக்கம் கெடுத்து விட்டது என்று குடிகாரர்களும் வாதாடமுடியாது. நீதி சாத்திரம், ‘எல்லாவிதமான குற்றங்களையும் தூண்டி விடுவதும் குடிவெறி‘ என்பதை எல்லா வழக்குகளிலும் ஏற்காவிடினும் கூட, குடிபோதையில் நடந்து விட்டது என்ற சால்ஜாப்பு தள்ளுபடி செய்யவேண்டியதாகும். [State v. Hundley, 46 Mo. 414 (Mo. 1870)] 
இது அமெரிக்க தீர்ப்பு 150 வருடங்களுக்கு முன்பே. நான் தேடியவரை இந்தியாவில் இது பற்றிய தீர்ப்பு கிடைக்காவிடினும், சில மாதங்கள் முன் உச்ச நீதி மன்றம் கூறியது ஒன்றை நினைவிலிருந்து அளிக்கிறேன். வாசகம் மாறி இருக்கலாம். கருத்து மாறவில்லை. ‘நீங்கள் சின்ன மீனை பிடிப்பதில் காட்டும் ஆர்வத்தில் ஒரு பின்னம் கூட குடித்துவிட்டு காரோட்டி கொலை செய்பவர்களை பிடிப்பதில் இல்லையே ஏன்?’
அநேக கிரிமனல் வழக்குகளில் குற்றச்சாட்டுகளை கறாராக பொருத்தமான சட்டம்/ஷரத்துக்களுடன் போலீசார் இயையவைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இந்தியாவில் பரவலாக உலவி வருகிறது. முதலில் தாக்கல் செய்யப்படும் ஆவணம், எஃப்.ஐ.ஆர். முதல் கோணல் முற்றும் கோணல் அங்கே தான் துவக்கம். அந்தக்காலத்துக் கதை. போலீஸ் ஸ்டேஷனில் எழுத்தர் (ரைட்டர்) என்று ஒரு தாணாக்காரர் அமர்ந்திருப்பாராம். ‘ஐய்யோ! குத்திக்கொலை செய்கிறானே’ என்று ஓடி வந்தால், ‘எஃப்.ஐ.ஆர். போடணும். ஒரு குயர் வெள்ளைப்பேப்பர் வாங்கி வா.’ என்பாராம். வாங்கி வந்தால், பேனா வாங்கி வா என்று அனுப்பி தாமதம் செய்வாராம். அந்த கேப்பில் அவர் விடும் சைக்கிள் எதிர்தரப்பைக் கூப்பிட்டு கட்டைப்பஞ்சாயத்து செய்து துட்டு பார்க்குமாம். அது ஒரு அரதப்பழுத ஜோக் என்றாலும், மிகையல்ல என்று தான் தோன்றுகிறது. Omne crimen ebrietas et incendit et detegit! என்ற சூத்திரத்தை முறியடிக்கும் பாணியில் ஒரு டில்லி வழக்கு நடந்தது. சூப்பர் செல்வந்தர்கள் புழங்கும் கள்ளுக்கடையில் குடிபோதையான் ஒருவன் ஒரு பெண்ணை சுட்டுக்கொன்று விடுகிறான். அவளை கொளுத்தி வருடங்கள் ஆயின. கேசு என்னமோ தொடர்கதை! 
குடிவெறியில் இழைக்கப்படும் குற்றங்கள் நாள்தோறும் ஊடகங்களில். அங்கு எல்லாம் இந்த லத்தீன் சூத்திரம் கையாளப்படவிடின், அநீதியின் ஆளுமை பெருகும்.
ஒரு சின்ன சூத்திரம்: Crimen omnia ex se nata vitiat. அதன் பொருளின் உருவகம்:
‘நாய் விற்ற காசு குலைக்கும்’!
இன்னம்பூரான்
14 06 2013
சித்திரத்துக்கு நன்றி:http://www.tamilhindu.com/wp-content/uploads/dr02.jpg


உசாத்துணை:

Thursday, June 13, 2013

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம்:2




வக்கீல் குமாஸ்தாவின் கடிதம்:2

Innamburan S.Soundararajan Thu, Jun 13, 2013 at 8:08 PM

வக்கீல் குமாஸ்தாவின் கடிதம்:2
இது ஒரு தொடரிதழ் என்பதை விட தொகுப்பிதழ் என்று சொல்வதே பொருந்தும். சட்டம், நீதி போன்ற விஷயங்களை கோர்வையாக அளிப்பது கடினம், அன்றாட நிகழ்வுகள் முன்னுரிமை கேட்பதால். 
இன்று ‘Omne crimen ebrietas et incendit et detegit!’ என்ற லத்தீன் முதுசொல்லை இந்திய பின்னணியில் விளக்கி, அதற்குப் பிறகு ‘Habeus Corpus’ என்ற ஆள் கொணரும் உரிமையை பற்றி எழுதுவதாக இருந்தேன். அதற்கு நடுவில் ஒரு நெகிழ்வான செய்தி முதலிடம் நாடியது. ‘பெண்ணியம்’, ‘பெண்ணுரிமை’, ‘பெண்ணின் மனம்’ என்று அடி எடுத்துக்கொடுத்தாலே, வாரிச்சுருட்டிக்கொண்டு பங்கேற்கும் பட்டிமன்றங்கள் சட்டரீதியாக சமூகத்தில் பெண்களின் இடம் என்பதைப் பற்றி வேண்டிய அளவு ஆராய்வதில்லை. கமலஹாசன் படம் ஒன்றில், நண்பர் பூர்ணம் விஸ்வநாதன் அபாரமாக நடித்திருப்பார். அதுவும், ‘நிலா காய்கிறது’ என்ற பாட்டும் தான் நினைவில் இருக்கிறது. கதை சுருக்கம். விலைமாது சமூகத்தில் சிக்கிய ஒரு சிறுமி தந்தையை வாடிக்கையாளராக நினைத்து விடுவார். பின்னர் மீட்கப்படுவார். இத்தனைக்கும் விபசாரம், பெண்களை கடத்தல் போன்றவை சட்டவிரோதம். THE IMMORAL TRAFFIC (PREVENTION) ACT, 1956 
டைம் லைன்: 2013:
அந்த மாதிரியான சூழ்நிலையில் வளர்ந்த ஸ்வேதா கட்டி என்ற இளம்பெண் தந்தையாலேயே கொடுமை படுத்தப்பட்டவர். எத்தனை பெண்கள் இப்படி அழிந்து மடிந்தனரோ? ஸ்வேதா ஒரு புரட்சிக்காரி. அவளுடைய கூட்டாளிகளும் அப்படியே. அன்றாட சராசரி வாழ்க்கை நடத்தும் பெரும்பாலோரின் இன்னல்களும், சிக்கல்களும், இடர்ப்பாடுகளும், ஸ்வேதாவின் அக்னிமூலையிலிருந்துப் பார்த்தால் துகள்கள். அவளுடைய எதிர்நீச்சல் வாய்க்காலில் அன்று; வாழும் கடலில். ஸ்வேதா சிறந்த மாணவியாக திகழ்ந்து, அமெரிக்காவில் படிக்கப்போகிறார். அமெரிக்க சமுதாயம் அவளுக்கு அளிக்கும் உதவித்தொகை $50,000/-. இது சம்பந்தமான விழியத்தை இணைத்திருக்கிறேன். அதை பார்வையிடுவீர்கள் என நம்புகிறேன். 
அதற்கு முன் ஒரு வார்த்தை. மும்பையில் போரஸ் ரோடு என்ற இடத்தில் விலைமாதுகள் சமுதாயம். அங்கு 1970-80 களில் டாக்டர்.ஐ.எஸ்.கலாடா என்ற இளைஞர் அரும்பணிகள் பல செய்து அநாதை ஜன்மங்களாகிய விலை மாதுகளுக்கு புனர்வாழ்வு அளிக்க உழைத்தார். அவருடைய பரிச்சியம் நினைவில் வந்தது. அவருக்கு வந்தனம் சொல்ல யாராவது ஸ்வேதாவிடம் பரிந்துரை செய்யவேண்டும்.
காப்புரிமை & நன்றி:

Wednesday, June 12, 2013

பாமரகீர்த்தி -7




பாமரகீர்த்தி -7

Innamburan S.Soundararajan Wed, Jun 12, 2013 at 2:31 PM
To: mintamil@googlegroups.com
பாமரகீர்த்தி -7
Inline image 1

 ஜூனியர் விகடன் கழுகார் இன்றைய இதழில் கூறியது.  இந்தத்தொடரே அதற்குத்தான். 
சித்திரத்துக்கு நன்றி: http://kungumam.co.in/image/Kungumam-dk-4101.jpg
இன்னம்பூரான்
12 06 2013
வினா:
“மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வரலாற்று உணர்வு மங்கிவருகிறதே?

விடை:

வரலாறு என்றாலே அசோகர், கனிஷ்கர், பல்லவர், சோழர்.. எனப் படிப்பதுதான் என்று பலரும் நினைப்பதால்தான், வரலாறு பற்றிய கசப்பு வந்துவிடுகிறது. இதெல்லாம் படித்து என்ன செய்யப்போகிறோம் என்று பலரும்  நினைக்கிறார்கள். ஆண்டுவாரியாக புள்ளிவிவரங்களை அடுக்குவது அல்ல வரலாறு. நம்முடைய மூதாதையரைப் பற்றித் தெரிந்துகொள்வதும், தங்களது குடும்பத்தின் ஊரின் கோயிலின் முந்தைய கதையை அறிந்து கொள்வதும் வரலாறுதான். சுவாரஸ் யமான அந்தத் தகவல்களை முதலில் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
கடந்த காலத்தை அறியாதவர்களால், நிகழ் காலத்தில் பயணிக்க முடியாது. நிகழ்காலம் இல்லாதவர்க்கு, எதிர்காலம் இல்லை.”

தெருக்கூத்து 6


தெருக்கூத்து -6



நமது மனோன்மணி அம்மாவின் கடம்பூர் கந்தசாமி பாய்ஸ் &; கேர்ல்ஸ்  டிராமா கம்பெனி எந்த விதத்தில் குறைந்தது? எண்சுவைகளில் அது ஒரு படி மேலே.
சித்திரத்துக்கு நன்றி: http://www.hindustantimes.com/Images/2011/9/282c5009-5d61-48f5-bec4-350b6fd48749MediumRes.JPG

Tuesday, June 11, 2013

கனம் கோர்ட்டார் அவர்களே! -11:எரிய வீட்டில்….!


கனம் கோர்ட்டார் அவர்களே! -11

இன்னம்பூரான்
Monday, September 10, 2012, 3:32
எரிய வீட்டில்….!
நேற்று (ஸெப்டம்பர் 7, 2012) நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட நீதிபதி எம்.பி.ஷா கமிஷனின் ரிப்போர்ட் நம்மை உலுக்குகிறது. கோவா மாநில அரசையும், மத்திய அரசையும் தெளிவாகக் குற்றம் சாட்டும் அந்த அறிக்கை, அந்த மாநில முதல்வர் திகம்பர் காமத் தலைமையில் 2000ம் ஆண்டிலிருந்து 12 வருடங்கள் நடந்த ‘எரிய வீட்டில் பிடுங்கிய ஆதாயம்’ 35000 கோடி ரூபாய் என்கிறது. அந்த மாநிலத்தின் இயற்கை வளத்தை ‘தங்கு தடையில்லாமல், கணக்கு வழக்கில்லாமல், ‘போனால் போகட்டும் போடா’ என்ற தேசவிரோத மனப்பான்மையுடன் சைனாவுக்கு இரும்புத் தாதுவை ஏற்றுமதி செய்திருக்கிறார்கள் என்கிறது.
சட்டமீறல்களைக் கன்னாபின்னாவென்று தாதுவை பிறாண்டியதொன்று, சுற்றுப்புற சூழலை மீறியதொன்று, வேலியே பயிரை மேய்ந்த கதையொன்று, மற்றவர் சொத்துகளை அபகரித்ததொன்று என்றெல்லாம் பட்டியலிடுகிறது, அந்த அறிக்கை. அங்கு பல வருடங்களாகக் கோலோச்சி வரும் டிம்ப்ளோ, ஸலகாவ்ங்கர், செளகுலே குடும்பங்களையும், ஸேஸே கோவா போன்ற கம்பெனிகளையும் நேரடியாக இந்தச் சட்டவிரோதங்களுக்குக் குற்றம் சாட்டியிருக்கிறது. மத்திய அரசின் சுரங்க இலாக்காவையும், மத்திய அரசின் சுற்றுப்புற சூழல், வன பாதுகாப்பு இலாக்காவையும், கோவா மாநில இலாக்காக்கள் எல்லாவற்றையும் சகட்டுமேனிக்குச் சாடும் இந்த ரிப்போர்ட்டை நாடாளுமன்றம் என்ன செய்யும் என்பது நினைக்கவே அச்சமாக இருக்கிறது.
ஏனென்றால், வனத்துறைக்கு இழைக்கப்பட்ட அட்டூழியம் ஏற்கனவே ஆறாத புண் ஆயிற்று. குற்றம் சாற்றப்பட்ட முதலாளித்துவம் அழுச்சாட்டியமாக சட்டவிரோதமாக இயங்கின; அதற்கு அரசு இலாக்காக்கள் துணை போயின என்று கனம் கோர்ட்டார் அளவுக்கு மதிக்கப்படவேண்டிய ஒரு கமிஷன் ஆதாரத்துடன் கூறியும், அது புறக்கணிக்கப்படுமா என்பது தான் கேள்வி. தாது வெட்டுவதை முழுதும் நிறுத்த வேண்டும் என்கிறது, அந்த அறிக்கை. உரிமம் பெறாமலே தோண்டப்பட்ட தாதுவை எடுத்துச்செல்வதைத் தடை செய்ய வேண்டும் என்கிறது. தீர விசாரித்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்கிறது. நடக்குமா? தமிழிதழ் ஆகிய வல்லமையில் கோவாவை பற்றி என்ன பேச்சு என்பார்கள், சிலர். ஐயா! கர்நாடக பூமி குடைச்சலும், ஆந்திர மயில் ராவணமும், மேலூர் மலைமுழுங்கிகளும், இப்படித்தான் மாமாங்கம், மாமாங்களாகக் கொழித்து வருகின்றன. அடிபடுவது பாமர மக்கள்.
பிரசுரம்: http://www.vallamai.com/?p=25980
சித்திரத்துக்கு நன்றி:http://www.vallamai.com/wp-content/uploads/2012/09/DSC03058.jpg

Monday, June 10, 2013


டெர்ர்ருக்கூட்!

Innamburan S.Soundararajan Mon, Jun 10, 2013 at 3:47 PM

டெர்ர்ருக்கூட்!
Inline image 1

எனக்கு ஒரு தம்பி இருந்தான். அவனுடைய மழலை ஆங்கிலம்: ‘அஃப்ஃப்ஃஅ! எனக்கு ஃபென்ஸில் வேணும்’. அந்த மாதிரி டெர்ர்ருக்கூட்! ஆன தெருக்கூத்து, இது.
செய்தி: 100 மோடிகள் வந்தாலும் காங்கிரஸை அசைக்கமுடியாது என்றார் ரெட்டி.
அறிமுகம்: யாரு இந்த ரெட்டி? காந்தி-நேரு கட்சிலெ?
அவருர்ரா? காரிய தரிசு ஆம்! சுதர்ஷண ரெட்டியாம்!
மெட்டு: ‘ஆயிரம் சாதியுண்டு இங்கே. இதில் அன்னியர் வந்த் புகழ் என்ன நீதி?’ மெட்டு மாத்திக்கலாம்.
ரெட்டி கூத்:
‘மோடி ஆயிரம் வந்தாலும் அண்ணே, கேட்டுக்கோ!
ரெட்டி ஒன்னு போதுமினு அறியாயோ, பெண்ணே?
அத்வானி இல்லாத அத்துவானமே, நீ, பா.ஜ.க.வா?
சொத்தையாய் போய்விடுவாய், பிடி சாபம்.’
மோடி எதிர்கூத்:
‘ரெட்டிக்கு என்ன பஞ்சம், இந்த காங்கிரஸ் கானகத்தே?
ரொட்டிக்கு ஆலாய் பறக்காறகளே, ஏளை மக்கள்.
வத்ராவுக்கு சொத்து. ‘புத்தர் மைந்தனுக்கு’ ஃப்ரீ கடனு.
மத்ராஸ் பக்கம் வாங்க. பிச்சி உதறிடுவோம், பிச்சி.
[மனோன்மணி அம்மாள்: ‘டேய் பசங்களா! கெஜ்ரிவால் வந்துட்டாரு. உங்க வாலை சுருட்டுங்கடா.]
திரை விழுந்தது.
சித்திரத்துக்கு நன்றி: http://lh6.ggpht.com/_07NXgYxfEdY/SYPDB873L-I/AAAAAAAAGGs/tVqqCu76Rlk/s800/IMG_5741.JPG

20: தமிழ்நாடு: தணிக்கை




தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-20


Innamburan Innamburan Fri, Sep 23, 2011 at 7:15 AM

அப்டேட்: கிட்டத்தட்ட இரு வருடங்கள் முந்தைய டார்ச்சர், இது. காலத்தின் கோலமடா! 2013 வருட டார்ச்சருக்கான தமிழ்நாட்டு ஆடிட் ரிப்போர்ட்கள் வந்து சில நாட்கள் தான் ஆயின. எனினும் 'டார்ச்சர் ஒழிக' என்று யாராவது இகழப்போகிறார்களோ என்ற அச்சத்தில் நடுங்கும்
இன்னம்பூரான்
10 06 2013
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiyJYd-gz-aJEoeuBdKFzFRJ0ABYADmSpjcTPK_yGeTEpcbij3hqm-Ti1CPGjQ5hkuiOxPC9qRyDBdbuRFy2Q1Sf1Oanty0wrrB89ztHV99oC1pF5Im1Uagc8DmqiZLxKK37rMnmj3grFM/s1600/Untitled-1.jpg
வல்லமையில் யான் வரைந்த டார்ச்சர்!

*
தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை-20

தமிழ்நாடு
தணிக்கை அலுப்புத் தட்டும் விஷயம் தான். ஆனால், மக்கள் அதைச் செங்கோலாக பயன்படுத்த முடியும். அரசைக் கண்டித்துத் தண்டிக்க முடியும், தேவை ஏற்படுமானால். எனவே, அரசு ஆங்கிலத்தில் வரும் ஆடிட் ரிப்போர்ட்களை, என் பேசும் மொழியில், அலசிப், பகிர்ந்து கொள்கிறேன். எந்த வினா எழுந்தாலும், உகந்த பதில் அளிக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். தமிழ் மொழியிலும் ஆடிட் ரிப்போர்ட்டுக்கள் பிரசுரம் ஆகின்றன. சில நாட்களாகவே, ஊடகங்களில் தணிக்கைச் செய்திகள். மூலம் தென்படவில்லை. ஏ.ஜீ. ஆஃபீசில் விசாரித்தேன். உடனே விவரம் அனுப்புவதாகச் சொன்னார்கள். அத்துடன்  சரி. அதிகார பூர்வமான அறிக்கைகள் ஒரே நாளில் நான்கு, புதுச்சேரி அறிக்கைகள் உள்பட, இன்று வந்துள்ளன. அவை கிடைத்தவுடன், இதை எழுதுகிறேன்.
A. அரசு கம்பெனிகள், வாரியங்கள் பற்றிய ஆடிட் அறிக்கை இது. [Audit Report No.4 (Commercial) for the year ended 31 March 2010: 163 பக்கங்கள்]
  1. ரத்தினச் சுருக்கம்: 64 கம்பெனிகள், 2 வாரியங்கள், 11 முடங்கிய கம்பெனிகளில், 2.79 லட்சம் ஊழியர்கள். ரூ. 47,578.39 கோடி வரவு/செலவு; சேமித்த? நஷ்டம்- ரூ. 21,297.39 கோடி. இவற்றின் வரவு/செலவு கொஞ்ச நஞ்சமில்லை.  அரசின் வரவு/செலவில் ஐந்தில் ஒரு பங்கு. கபளீகரம்!. மூன்று வருடங்களாக ஆடிட் கரடி கத்தியதை ஆய்வு செய்தாலே, ரூ. 4000 கோடி  நஷ்டத்தையும் ரூ. 600 கோடி  வீணாப் போன முதலீடுகளையும் தவிர்த்திருக்கலாம் என்பது தெளிவு. சீர்திருத்தங்கள் மிகவும் தேவை.
  2. சொன்னதும், செய்ததும்: கடந்த 25 வருடங்களில் தனித் தனிக் கம்பெனிகளாக உலவி வரும் ஆதி திராவிடர் /பின் தங்கிய வகுப்புக்கள்/ சிறு பான்மையினர்  முன்னேற்றக் கம்பெனிகள் மூன்றுக்கும் இலக்கு ஒன்றே தான். (ஏன் திரி மூர்த்திகள்?) மூன்றும் முன்னேற்றம் பண்றாங்களோ இல்லையோ, அரசுப் பணத்தை வங்கியில் டிபாசிட் செய்து விட்டுச், சும்மா இருக்கிறார்கள். ஹூம் ! ரூ. 250 கோடி வரை! திட்டம் யாதுமில்லை, ஐயா. கிராமங்கள் பற்றிய விவரங்கள் இல்லை, ஐயா. தாமதம் உண்டு, ஐயா. தரிசு நிலம் வாங்கியதும் உண்டு. அளித்த பயிற்சியும், கொடுத்த வேலையும் வெவ்வேறு. உதவிக்கரம் யாருக்கு நீட்டவேண்டும் என்ற தெளிவு இல்லை. அரைகுறைக் கடனுதவி. யாருக்கும், அது உதவாது. உதவிக்கரம் நீட்டினால், லேவாதேவி ரேட்டு அதிகம், ஐயா. ஆடிட் கோரிக்கை: சற்றே விவரங்களின் ஆதாரத்துடன், திட்டமிட்டு, டிலே செய்யாமல், இந்த ஏழை பாழைகளுக்குச் சொன்னதைச் செய்யுங்கள்.
  3. சாரமில்லா மின்சாரம்: ஐயா! தனி மனிதனுக்கோராயிரம் வாட் மின்சாரம் என்பது 2012 வருட தேசீய இலக்கு. ஆனா பாருங்கோ! 4000 மெகாவாட் அதிகப்படி உற்பத்தி  தேவையிருந்தாலும், எடுத்த காரியத்தைச் செய்யாததாலும், திட்டமிட்ட ஹைட்ரோ திட்டங்களை அரோஹரா செய்ததாலும், 290 மெகாவாட் மட்டுமே அதிகப்படியாக உற்பத்தி.  இத்தனைக்கும் அதிகப்படி செலவு ரூ. 400 கோடி. இன்னொரு சமாச்சாரம். (40 வருடங்களாக ஆடிட் சொல்லி வரும் குற்றச்சாட்டு, இது). மின் உற்பத்திக் கலங்களுக்கு 35 வயதுதான் ஆயுசு. காயகல்பம் உண்டு. சத்தியமாக பலிக்கும். 16 ஸ்டேஷன்களுக்கு அர்ஜெண்ட் காயகல்பம் தேவை. கொடுத்ததோ, இரண்டு ஸ்டேஷனுக்கு மட்டும். (ஏனையா மின்வெட்டு வராது?) இந்த அழகில் ரூ. 2,175 கோடி பெறுமான வேலைகள், டெண்டர் இல்லாமல் (வேண்டப்பட்டவருக்கு?) கொடுத்ததால், சுங்கவரிச் சலுகை ரூ. 133 கோடி ரூபாய் போச்சு. நிலக்கரி வாங்கிய வகையில், மற்றொரு அரசு கம்பெனி வாங்கிய விலையோடு ஒப்பிட்டால், நஷ்டம்-ரூ. 337.76 கோடி. எண்ணூர் பேசின் பிரிட்ஜ் மின்கலங்களால் நஷ்டம் அதிகம். அவை சாரமில்லாதவை. சக்கை. (இங்கும் ஒரு பழங்கதை) ஏன் அவற்றைக் கட்டிக் கொண்டு மாரடிக்கிறார்கள் என்று புரியவில்லை. செலவு தான் கிட்டத்தட்ட ரூ. 300 கோடி ஜாஸ்தியாகியிருக்கிறது. கடன் சுமையும் நாலு வருஷங்களில் கிட்டத்தட்ட நாலு மடங்கு ஜாஸ்தி.
  4. ஒரு சூட்சுமம்: நிலக்கரி எரிப்பதால் சாம்பல் விழும். அதற்கும் காசு கிடைக்கும், கணிசமாக. ஆனால் விலை போன சாம்பல், விழுந்த சாம்பலை விட குறைவு. என்ன குப்பையைக் கிளறுகிறீர்களே என்று கேட்கிறீர்களா? கேட்டால், ஒரு பழங்கதை சொல்லி, விளக்குகிறேன். இப்போதெல்லாம் பழங்கதைகளை, கேட்டாலொழியச், சொல்வதில்லை.
  5. மாதிரிக்கு சில ஆடிட் துளிகள்: அரசு கேபிள் கார்ப்பரேஷன், மக்களுக்குத் தொலைக்காட்சிகள் அதிகச் செலவில்லாமல் கிடைக்க வேண்டும் என்று அக்டோபர் 2007-ல் உருவாக்கப்பட்டு, ஏப்ரல் 2008-ல் மத்திய அரசின் அனுமதி பெற்று, ஜூலை 2008-ல், அரசின் பங்கு ரூ. 25 கோடி, மற்றும் கடனுதவி ரூ. 36 கோடியுடன் தொடங்கி, மூன்று வருடங்களில் சாதித்தவை: அனாவசிய கட்டுமான வசதிகள் ரூ. 28.28 கோடி,  நஷ்டம் ரூ. 8.11 கோடி. காரணம்: லோக்கல் ஆபரேட்டர்களுடன் உறவாடாமல் இருந்தது. சன், சோனி, ஸ்டார் போன்ற ஜாம்பவான்களுடன் ஒவ்வாமை. ( அது தான் உள்குத்துத் திட்டம் என்று வாசகர்கள் சொன்னால், இல்லை என்று சொல்ல என்னிடம் சான்றுகள் இல்லை.)
  6. தலைகீழ்: ரூ. 28.08  கோடி செலவில் வாங்கிய உபகரணங்கள், ரூ. 142.50 கோடி செலவில் செட்-அப் பெட்டி வசதி செய்யா விட்டால், வேஸ்ட். அந்தச் செலவு செய்தால், நஷ்டம் உத்தரவாதம். ரூ. 28.08  கோடி செலவில் வாங்கிய உபகரணங்கள் என் செய்ய உதவும்?- உதவாது.
  7. வரவு எட்டணா! செலவு எட்டாயிரம் அணா: ரூ. 250 கோடி எதிர்பார்த்த இடத்தில் வந்தது ரூ. 1.50 கோடி. சுண்டைக்காய் ஒரு பணம்; சுமைக்கூலி பத்துப் பணம். ரூ. 1.50 கோடி தருவிக்க, ரூ. 11 கோடி செலவு. பேஷ்!
  1. பேரென்னெவோ பூம்புகார் கப்பல் கம்பெனி. ஒரே கரி. நிலக்கரி சுமக்க வாங்கின கப்பல்கள்: தமிழ்ப் பெரியார், தமிழ் அண்ணா, தமிழ்க் காமராஜ். தூத்துக்குடியில் கரிச்சுமையை இறக்க க்ரேன் வசதி இல்லை. கப்பலின் க்ரேன் தான் பயன்படவேண்டும். தமிழ் அண்ணா என்ற கப்பலில் இருக்கும் பத்தாம்பசலி க்ரேன் இரண்டும் ரிப்பேர். அதைச் சரி செய்வதில் அசாத்திய டிலே. காரணங்கள் ஆவணங்களில் இல்லை. பத்தாம்பசலி க்ரேன் என்று பதில் வேறு.  தமிழ்ப் பெரியார் என்ற கப்பலை மராமத்து செய்வதில் ஒரு சைனாக் கம்பெனியுடன் இழுபறி. அடுத்துச் சென்ற கம்பெனி படு தாமதம். சாமான் வாங்குவதில் செய்த டிலேயினால் அதிகப்படி செலவு ரூ. 56.37 கோடி. வேறு கப்பல்களின் க்ரேன் வாடகை அதிகப்படி செலவு ரூ. 50. 29 கோடி. கப்பல்களைக் குத்தகை எடுப்பதில், அரசின் விதிகளை இந்தக் கம்பெனி கண்டு கொள்ளவில்லை. மேலும், கடல் வாணிக நுட்பங்களை சரிவர இயக்காமல், இந்த கம்பெனி பல இன்னல்களுக்குள் சிக்கியது.
  1. எலெக்ட்ரானிக் கார்ப்பரேஷன், அவசரப்பட்டு தேவையில்லாத இடங்களில் நிலம் வாங்கியதில் இருபது கோடி ரூபாய் முடக்கம்.
  2. சிப்காட் கம்பெனி அலிசன் ட்ரான்ஸ்மிஷன் என்ற மனுதாரருக்கு, அரசின் ஆணைக்கு உட்பட்டு, பாதி விலையில் நிலம் அளித்ததில் நஷ்டம்  ரூ. 8.32 கோடி.  இதில் பாரபட்சம்  இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது.
  3. மத்திய அரசு விதித்த சர்வீஸ் வரியை சிப்காட் வசூலிக்காததால் ரூ. 70 லட்சம் நஷ்டமாகி விடும். அதனுடன் வட்டி ரூ. 15 லட்சம் மற்றும் அபராதம் ரூ. 75 லட்சமும் நஷ்டம். [மத்திய அரசு இதைத் தள்ளுபடி செய்ய விரும்பாது; தணிக்கை அங்கும் திரும்பும் அல்லவா! அதற்கு ஒரு பழங்கதை உள்ளது, வாசகர்களே!]
  4. தமிழ்நாடு கட்டுமான கார்ப்பரேஷன் பத்து வருடங்களாக, வரவு செலவு முடிவு செய்யவில்லை. ஆள் இல்லையாம். பேஷ்!
  5. ட்ரான்ஸ்ஃபார்மர் போன்ற சாமக்கிரியைகளை வாங்குவது சிக்கலான விஷயம். ஒப்பந்தக்காரரின் திறன் போன்ற விஷயங்களை ஆராய வேண்டும். அத்தருணம் சாமர்த்தியம், வாய்மை, பின்னணி எல்லாம் கை கொடுக்கும். டெண்டர் விதிகளை சடங்கு மாதிரி, உதட்டசைவில் செய்வதால் நலம் ஒன்றுமில்லை. அப்படிச் செய்ததால், மின்சார வாரியத்திற்கு ஏழு கோடி ரூபாய் நஷ்டம். இது எந்த தெய்வத்திற்கு ப்ரீதி?
  1. B. Audit Report (Civil), Tamilnadu For the Year 2009-2010: 212 பக்கங்கள்
இரண்டாவது சுற்றில் வந்த இந்த அறிக்கை, தமிழ்நாட்டு அரசின் துறைகளையும், ஐந்தாவது சுற்றில் வந்த மற்றொரு அறிக்கை (85 பக்கங்கள்) தமிழ்நாட்டு அரசின் வருமானத்தையும் பற்றியவை. இந்த அறிக்கையிலிருந்து இரு துளிகள் மட்டும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற வகையில். வாசகர்கள் விரும்பினால், அண்ணா பல்கலை கழகத்தின் கலக்கங்கள், அசெம்ப்ளி அமர்க்களங்கள், மற்றும் பல ஆச்சரியங்களைப், பின்னர் பார்க்கலாம், பார்க்காமலும் விட்டு விடலாம்.
  1. இந்தத் தொடரின் 6-வது பத்தியில் ‘பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!’ உடைக்கப்பட்டது. அதன் தொடர் இங்கே தென்படுகிறது. ‘ஒப்பந்தக் காரர்கள், அரசுடன் ஒப்பந்தம் செய்கிறார்களோ, இல்லையோ, தங்களுக்குள் செய்கிறாப்பில இருக்கே’என்று, புள்ளி விவரங்களுடன், ஆடிட் வினவ, அரசு மேலதிகாரியும் ‘அப்படித்தான் தோன்றுகிறது எம்மால் யாதும் செய்ய இயலாது’ என்கிறார். எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனெனில், அரசின் ஆளுமையை, நிர்வாகத் திறனை, இந்தப் பதில் பழிக்கிறது. இந்த ஒப்பந்தக்காரர்கள் லேசுப்பட்டவர்கள் இல்லை. 17,513 டெண்டர்களில், 17,110 டெண்டர்களில், இரு ஒப்பந்தக்காரர்கள் தான் போட்டி. ஊன்றிக் கவனித்துப் பார்த்தால் ‘டூவில்டம்’ மும் ‘டூவில்டீ’யும் (அதாம்ப்பா! ஐயாவும் & பினாமியும்) போட்டி என்ற தோற்றம். கட்சிக்காரனுக்கு டெண்டர் என்று ஓப்பனா உரிமை கொண்டாடுகிறார்களே, புரியுதா?
  1. அசெம்ப்ளி சேதி என்ன? என்று கேட்பீர்கள்: இரண்டு சொட்டு மருந்து: (i) முன் வைத்த காலைப் பின் வைத்த காதை: கோபுரம் கட்ட நாளாகும். தேர்தலுக்கு முன்னால் கிரகப்பிரவேசம். ஒரு பாலாலய கோபுரம் ( தற்காலிக டூப்ளிகேட்) கட்டுக என்று ஆணை. நோ டெண்டர். வீண் செலவு: ` 3.28 கோடி. (ii) பைல் அஸ்திவாரம் போட்டாஹ. அளவு கோல் மாத்தினாஹ. அதிகப்படியாகக் கொடுத்தாஹ:` 2.46 கோடி.

நான் என்ன சொல்ல வரேன்னா? கேளுங்கோ. சொல்றேன்.
(தொடரலாமா என்று கேட்கலாமா?)

இன்னம்பூரான்
23 09 2011

திவாஜி Fri, Sep 23, 2011 at 9:29 AM

கேக்குறேன், சொல்லுங்க!
எல்லா பழங்கதைகளையும் சொல்லி அருள வேணும்!


காளையும் கரடியும் Fri, Sep 23, 2011 at 9:26 AM

சொல்லுங்கோ! கேட்டுக்குறோம்!
இது போன்ற அரசாங்க கஜானாவிலிருந்து செலவழிக்கப்படும் துட்டு எந்த
அளவிற்குப் பயனளிக்கிறது என்ற (மக்களின் பார்வைக்கு வராமலிருக்கும்)
தணிக்கை அறிக்கைகளை அலசுவதற்கு ரொம்ப நன்றி!

On Sep 23, 11:15 am, Innamburan Innamburan <innambu...@gmail.com>


kra narasiah Fri, Sep 23, 2011 at 2:02 PM

நானும் விசாகைத் துறைமுகத் தலைமைப் பொறியாளராக இருந்த பொது தணிக்கையாளர்களைக் குறித்துக் கடுமையாக விமர்சித்துள்ளேன். ஆனாலும் இப்போது பார்க்கையில் தணிக்கையாளர்களின் முக்க்யத்துவம் - முக்கியமாக - 2 ஜி விவகாரம் பிறகு தெரிகிறது! நீங்களும் எங்கள் துறையில் இருந்தீர்கள் என நினைக்கிறேன்.
நரசய்யா

--- On Fri, 9/23/11, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:

Thiruvengada Mani T.K. Fri, Sep 23, 2011 at 2:05 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
கேட்டுக் கொண்டுதானே ஐயா இருக்கிறோம்..... தொடருங்கள்
மணி

Innamburan Innamburan Fri, Sep 23, 2011 at 2:45 PM

ஆம். நான், சென்னை, விசாகை, மும்பாய், குஜராத் துறைமுகங்கள், பாராதீப் தணிக்கை செய்திருக்கிறேன். உங்கள் கடுமையான விமர்சனம் புரிகிறது. அதனால் தான், when the National Institute of Ports asked me to design a conventional 'Finance for Non-Finance Port Executives, I neatly turned the table on them, by designing the "Non-Finance for Finance Executives." Our captive audience was a gang of FACAOs and naturally, I had you in the Faculty. Good old days.
Innamburan


K R A Narasiah Fri, Sep 23, 2011 at 3:20 PM


அங்குதான் (National Institute of Port Mnagement) நான் உங்களை முதன் முதலாகச் சந்தித்தேன்! நாம் இருவரும் 1992-3 ல் வகுப்புகள் எடுத்ததைக் குறித்து நீங்கள் தான் எனக்கு நினைவூட்டினீர்!
நான் ஓய்வு பெற்றபோது என்னை முதலில் அங்குதான் டைரக்டராக நியமிக்கப்ப்போவதாக்ச் சொன்னார்கள்1 ஆனால் எனக்கும் ஜக்தீஷ் டைட்லருக்கும் (அப்போதைய மந்திரி) உண்டான கருத்து வேற்றுமையால் அது நிறைவேறாது போயிற்று. ஆயினும் எனக்கு அதனால் நன்மையே உண்டானது! ஐக்கிய நாட்டு நிறுவனங்களில் பணி செய்ய முடிந்தது!
எல்லாம் பழைய கதை!
நீங்கள்  'Finance for Non-Finance Port Executives, I neatly turned the table on them, by designing the "Non-Finance for Finance Executives." என மாற்றியது இப்போது நீங்கள் சொன்ன பிறகு நினைவிற்கு வருகிறது!
cud chewing அசைபோடுதல் ஒரு நல்ல பொழுது போக்கு!
அடையாற்று வீட்டில் எங்கள் குடியிருப்பில் முதல் மாடி வீட்டுச் சொந்தக்காரர் காலம் சென்ற சுந்தரராஜனும் உங்கள் clan IA & AS! Rly Tribunal Member ஆக இருந்தவர்!
 
எத்தனை அழகரசர்கள் உங்கள் clan ல்!
 
புரிகிறதா!
நரசய்யா
 
2011/9/23 Innamburan Innamburan <innamburan@gmail.com>


annamalai sugumaran Fri, Sep 23, 2011 at 5:06 PM

இ சார் ,
ஷமிக்கணும்  ,ஒரு சிறிய சந்தேகம் 

மனிதனுக்கோராயிரம் வாட் மின்சாரம்
>    என்பது 2012 வருட தேசீய இலக்கு. ஆனா பாருங்கோ! 4000 மெகாவாட் அதிகப்படி
>    உற்பத்தி  தேவையிருந்தாலும், எடுத்த காரியத்தைச் செய்யாததாலும், திட்டமிட்ட
மனிதனுக்கோராயிரம் வாட்  என்பது  ஒரு   KW  தான் அதுவே ஒருமணி நேரம் உபயோகித்தால் ஒரு KWH  தான் அதுதான் நாம் சொல்லும் ஒரு யூனிட் என்பது ,ஒரு மனிதனுக்கு ஒரு யூனிட் மின்சாரம் தேசிய இலக்குஎன்பது  மிகவும் கொஞ்சமாகத் தோணுதே .
அன்புடன் 
சுகுமாரன் 



Innamburan Innamburan Fri, Sep 23, 2011 at 5:54 PM

நீங்கள் இவ்வளவு உன்னிப்பாக தணிக்கை செய்வது நலமே. ஆடிட் ரிப்போர்ட் சொல்வது: The availability of reliable and quality power is crucial for sustained growth of the economy. The National Electricity Policy envisaged providing at least 1,000 units per capita electricity by 2012. இது தவறா அல்லது மொழியாக்கம் தவறா என்று சொல்லுங்கள்.
நன்றி, வணக்கம்,
[Quoted text hidden]

Muruga poopathi Fri, Sep 23, 2011 at 7:01 PM

அன்புள்ள ஐயா,
1000 வாட் = 1 கிலோ வாட் = 1 யூனிட்
என்பதாகும்.
Innamburan Innamburan Fri, Sep 23, 2011 at 8:53 PM

நன்றி, பூபதி! நீங்களும் மின் துறையை சார்ந்தவர். எனக்கு அது தெரியும், சுகுமாரன் நல்ல நண்பர். அவரும் அத்துறையை சார்ந்தவர். அவரை ஊக்கப்படுத்தவே, அவ்வாறு எழுதினேன். எனினும் ஆடிட் ரிப்போர்ட் மேலும் தெளிவாக இருந்திருக்கவேண்டும். ஆடிட் அலுவலுகத்திடம், நேற்றே சொல்லி விட்டேன். இதையும் தமிழ் மன்றத்தில் ஏற்றி விடுங்கள். அன்றாடம்,'அன்றொரு நாள்', 'பாமர கீர்த்தி ~இன்னம்பூரான்' இரண்டையும் நீங்களே ஏற்றி விடுங்கள், முடிந்தால். உங்கள் ஸ்பிக் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்?
[Quoted text hidden]

Geetha Sambasivam Sat, Sep 24, 2011 at 1:32 AM
இதைப்படிக்கையிலேயே மின் அழுத்தம் ஏறி ஏறி இறங்குதே!


Geetha Sambasivam Sat, Sep 24, 2011 at 1:35 AM

இந்தத் தொடரின் 6-வது பத்தியில் ‘பூசணிக்காயைச் சோற்றில் மறைத்த மர்மம்!’ உடைக்கப்பட்டது. அதன் தொடர் இங்கே தென்படுகிறது. ‘ஒப்பந்தக் காரர்கள், அரசுடன் ஒப்பந்தம் செய்கிறார்களோ, இல்லையோ, தங்களுக்குள் செய்கிறாப்பில இருக்கே’ என்று, புள்ளி விவரங்களுடன், ஆடிட் வினவ, அரசு மேலதிகாரியும் ‘அப்படித்தான் தோன்றுகிறது எம்மால் யாதும் செய்ய இயலாது’ என்கிறார். எனக்கு வெட்கமாக இருக்கிறது. ஏனெனில், அரசின் ஆளுமையை, நிர்வாகத் திறனை, இந்தப் பதில் பழிக்கிறது.//

நீங்க சொல்லாமலேயே புரியுதே!  தொடருங்கள். காத்திருக்கோம். உங்களுக்கு மட்டுமில்லாமல் எங்களுக்கும் வெட்கமாய்த் தான் இருக்கிறது.
ஐயா! தனி மனிதனுக்கோராயிரம் வாட் மின்சாரம் என்பது 2012 வருட தேசீய இலக்கு.//


இதைப்படிக்கையிலேயே மின் அழுத்தம் ஏறி ஏறி இறங்குதே!


annamalai sugumaran Sat, Sep 24, 2011 at 4:51 AM

இ  சார் 
பெரியவர் பெரியவரே !
நல்ல முறையில் எடுத்துக்கொண்டதற்கு நன்றி .
 
providing at least 1,000 units per capita electricity by 2012

என்பது ஆளுக்கு ஆயிரம் யூனிட் அதாவது ஆளுக்கு 
ஆயிரம் KWH(   KILOWATT PER HOUR ) எனப்பொருள் படும் .இது ஒரு உயர் இலக்குத்தான் . 
ஒரு யூனிட் என்பது KWH ,   அது  KW அல்ல .W அல்ல 
நன்றி வணக்கம் .

அன்புடன் 
சுகுமாரன் 
2011/9/23 Innamburan Innamburan <innamburan@gmail.com>


Innamburan Innamburan Sat, Sep 24, 2011 at 6:34 AM

ஆமாம். கிராமங்களிலே 'அவனிடம் இரண்டுக்கு இருக்கலாம்' என்பார்கள். அதாவது இரண்டாயிரம் என்று (ரூ.2கே) சொல்வார்கள். அந்த மாதிரி ஆயிரத்தில் பேசி வழக்கம். எதற்கும், இந்த பாயிண்ட் ஆடிட் ஆqபிஸிடம் 22ம் தேதியே சொல்லிவிட்டேன். இது உயர் இலக்கு அன்று, பல மின் தேவைகள் வரப்போகும், வளரும் நாட்டில்.
இன்னம்பூரான்
2011/9/24 annamalai sugumaran <amirthamintl@gmail.com>
இ  சார் 
பெரியவர் பெரியவரே !
நல்ல முறையில் எடுத்துக்கொண்டதற்கு நன்றி .
 
providing at least 1,000 units per capita electricity by 2012

என்பது ஆளுக்கு ஆயிரம் யூனிட் அதாவது ஆளுக்கு 
ஆயிரம் KWH(   KILOWATT PER HOUR ) எனப்பொருள் படும் .இது ஒரு உயர் இலக்குத்தான் . 
ஒரு யூனிட் என்பது KWH ,   அது  KW அல்ல .W அல்ல 
நன்றி வணக்கம் .


Sunday, June 9, 2013

கனம் கோர்ட்டார் அவர்களே! (10)


கனம் கோர்ட்டார் அவர்களே! (10)

Innamburan Innamburan Mon, Jul 2, 2012 at 1:30 AM

வல்லமை இதழில் இன்று வெளிவந்தது.
இன்னம்பூரான்
*
கனம் கோர்ட்டார் அவர்களே! (10)
Monday, July 2, 2012, 4:36



இன்னம்பூரான்
Inline image 2
நான்கு வாரங்களுக்கு ‘வல்லமை’யில் நான் எழுதப்போவதில்லை என்று நினைத்திருந்தேன். ஆனால், ஒரு சூடான செய்தி வெளி வந்த ஒரு மணி நேரத்துக்குள் 1392 பின்னூட்டங்கள் வந்து என்னை உசுப்பி விட்டன.
சில சாதகம்; சில பாதகம். அதுவல்ல பிரதான விஷயம்.
அமெரிக்க மக்களின் விழிப்புணர்ச்சியை, பொதுஜன அபிப்பிராயத்தை, எதிர்ப்பார்ப்பை, சிறந்த விவாத அணுகுமுறையை அது பிரதிபலிக்கிறதே, அது தான் பிரதானம். அதில் ஒரு பின்னமாவது நம் நாட்டில் இருந்தால், நாம் ‘பாருக்குள்ளே நல்ல நாடாக’ என்றோ புகழ் ஈட்டிருப்போம். இப்போது தலைகீழாக, அதுவும் திரிசங்கு சுவர்க்கத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறோம். நாட்டுக்குக் கூட பழவினை! 
என்ன அந்த சூடான செய்தி?
அமெரிக்காவின் உச்சநீதி மன்றத்தில் ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ், லேர்னட் ஹேண்ட், ஃபெலிக்ஸ் ஃப்ரான்க்ஃபர்டர் போன்ற பிதாமகர்கள் ஆளுமை செலுத்தியிருக்கிறார்கள். அவர்களை நான் மிகவும் மதிப்பவன். எனினும், இந்தியாவிலோ, பிரிட்டனிலோ இருப்பது போல இல்லாமல், அமெரிக்காவின் உச்சநீதிமன்றத்தில் அரசியல் வாடை வீசும்.
ஆனால் பாருங்கள். இன்று அளிக்கப்பட்ட தீர்ப்பு ஒன்று, அமெரிக்க வரலாற்றில் என்றென்றும் பேசப்படும். ஏழை பாழைகளுக்கும் மருத்துவ வசதி வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில், இந்த காப்பீடு ‘விலங்கு’ அணிந்திருக்கும் அமெரிக்க சமுதாயத்தில் ஜனாதிபதி ஒபாமா அவர்கள் ஒரு சட்டம் வகுத்தார்.
அதன் முக்கிய ஷரத்து: ‘அமெரிக்கர்கள் யாவரும் காப்பீடு செய்து கொள்வது கட்டாயம். மீறுபவர்களுக்கு அபராதம்.’
நான்கு நீதிபதிகள் இந்த சட்டத்தை ஏற்கவில்லை.
‘இது செல்லுபடியாகாது; உச்சநீதிமன்றம் இதை ஆதரிப்பது மாபெரும் தவறு என்றார், அந்தோனி.எம். கென்னடி என்ற நீதிபதி.
அவரைப்போலவே பழங்காலத்து மனிதராக கருதப்படும் தலைமை நீதிபதி ஜான்.ஜி. ராபர்ட்ஸ் என்பவர், எதிர்பாராத வகையில், இந்த ‘அபராதத்தை’ வரி என்று வகைப்படுத்துவது தான் நியாயம், அத்தகைய வரியை விதிக்க அரசியல் சாசனம் அனுமதிக்கிறது. அதை தடுத்தாட்கொள்வதோ அல்லது அதனுடைய தர்மத்தை அலசுவதோ, உச்சநீதிமன்றத்தின் நியதியன்று என்று சொல்லி, அந்தோனியார் கூற்றை குடை சாய்த்து விட்டார்.
ஆனால், ‘மெடிக்-எய்ட்’ என்ற ஏழைபாழைகளுக்கான திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு முட்டுக்கட்டை. மாநிலங்களை மத்திய அரசு வற்புறுத்தக்கூடாது என்று அடித்து சொல்லி விட்டார்கள், ஏழு நீதிபதிகள்.
ஆனாலும், வணிக நோக்கு எனப்படும் ஷரத்தை தலைமை நீதிபதி அனுமதிக்காததை, தாராளபோக்குள்ள நான்கு நீதிபதிகள் குறை கூறியுள்ளார்கள். அவர்களில். மூவர் பெண்கள்.
செல்வம் மிகுந்த நாடுகளில், அமெரிக்காவில் மட்டும் தான், மருத்துவ வசதிக்குத் திண்டாட்டம். அது குறையும் என்பதால், இன்றைய தீர்ப்பு, பல்லாண்டுகளில் வந்தவற்றில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
‘இது மக்களின் வெற்றி என்றார், ஜனாதிபதி ஒபாமா. ‘இல்லை’, ‘இல்லை’ என்று அழுந்த சாதித்தார், அவருடன் அடுத்தத் தேர்தலுக்கு போட்டியிடும் மிட் ரோம்னி.
இந்த தீர்ப்பின் சிக்கல்களை ஆராய்வது என் இலக்கு அன்று. தலைமை நீதிபதி,‘மக்களை அவர்களுடைய அரசியல் முடிவுகளிலிருந்து ரக்ஷிப்பது எமது பணி அல்ல’ என்றார். அதன் உள்ளுறை, மக்களின் பிரிதிநிதிகளின் கடமையாற்றலில் அதீதமாக தலையிடக்கூடாது என்பதே.
தற்கால இந்தியாவில் அந்த உள்ளுறை பொருந்துமா என்பதே என் கேள்வி. அண்மையில், உச்சநீதிமன்றத்தின் முன்னால், அரசு எடுக்கும் ஏடாகூட நிலைப்பாடுகள் கவலை தருகின்றன. மேலும், பிரதிநிதிகள் மக்களின் பிரதிகூலர்களாக நடந்து கொள்கிறார்கள் என்ற தோற்றம் வலுத்து வருகிறது. என் செய்யலாம்?

புகைப்படத்துக்கு நன்றி:
Inline image 1

Swaminathan Venkat Mon, Jul 2, 2012 at 2:13 AM


நீதி மன்றத்தின் முன் அரசு எடுக்கும் நீங்கள் சொல்லும் ஏடா கூட நிலைபபாடுகள்” மக்கள் பிரதிநிதியாக அரசு எடுக்கும் நிலைப்பாடுகள் அல்ல, இன்று அரசு என்று பெயர் பெற்றுவிட்ட ஒரு கொள்ளைக்கார கும்பலின் நிலைப் பாடுகள் என்பது தெளிவு.

இந்தக் கும்பலின் இருக்கும் ஒர் God Mother. எவ்வளவு சாமர்த்தியமும் தந்திரமும், சதிமூளையும் அந்த Godmother-க்கு! யாரைச் சொல்லி என்ன பயன்?

செல்வன் Mon, Jul 2, 2012 at 7:05 AM

முட்டாள்தனமான சட்டம். 

ஒபாமா தேர்தலில் தோற்க இந்த சட்டமே முக்கிய காரணம். மிட் ராம்னி ஆட்சிக்கு வந்து முதல் நாள் இந்த சட்டத்தை தூக்கபோவதாக கூறியுள்ளார். அதுவே என் விருப்பமும்.



--
செல்வன்

Innamburan Innamburan Mon, Jul 2, 2012 at 12:03 PM

ஐயா செல்வன்,

என் கட்டுரையின் மையமான கருத்துத் துல்லியமாக சொல்லிருக்கிறேன்.

"இந்த தீர்ப்பின் சிக்கல்களை ஆராய்வது என் இலக்கு அன்று. தலைமை நீதிபதி,‘மக்களை அவர்களுடைய அரசியல் முடிவுகளிலிருந்து ரக்ஷிப்பது எமது பணி அல்ல’ என்றார். அதன் உள்ளுறை, மக்களின் பிரிதிநிதிகளின் கடமையாற்றலில் அதீதமாக தலையிடக்கூடாது என்பதே."
நீங்கள் தும்பை விட்டு வாலை பிடிக்கிறீர்கள். இந்த 'முட்டாள்தனமெல்லாம்' அவரவர் பேச்சுரிமை.
அன்புடன்,
இன்னம்பூரான்


செல்வன் Mon, Jul 2, 2012 at 2:36 PM



நான் அதை மறுக்கவில்லையே சார்? தேர்தலில் ஜெயித்து மிட் ராம்னி சட்டத்தை தூக்குவார் என தானே விரும்புகிறேன்? நீதிமன்ற தீர்ப்பை நான் ஏதும் விமர்சனம் செய்யவில்லையே?

18. எண்ணெய் காய்கிறது!: தணிக்கை


தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை
18. எண்ணெய் காய்கிறது!
அப்டேட்: கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியும்,முட்டுக்கட்டை, 'ஆடாமல்,அசையாமல்!'
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvmQT6oebTWAYRSqHncus63ipIcSyGNadoHUPtnQOYa6FPVE1efTx1xQS7_zSsGQIzSYcGSBiQFyUf88ZDP3G-Opg2tS2kA74kfAVgz1tQ21thqS8yyTKy2IjAGISeeUDsbQ__Y6eGgsU/s1600/Tamil_News_large_698447.jpg
இன்னம்பூரான்
ஜூன் 9, 2013
செப்டம்பர் 9, 2011: காலை 2 00 மணி:
வாணலியில் எண்ணைய் காய்ந்தால், தீ பற்றி எரியும். சமையலறை எரியும். தீ பரவும், வீடு, அடுத்த வீடு, தெரு, பேட்டை எல்லாம் எரியக்கூடும். இப்போ அப்படித்தான் இருக்கு.
ஊர்திகள் விரைகின்றன. விமானங்கள் பறக்கின்றன. தோசை வார்க்கிறோம். ராணுவம் தயார் நிலையில். இதற்கெல்லாம் கச்சா பெட்ரோலியம் எண்ணைய் வேண்டும். இந்தியா விடுதலை அடைந்த போது, எண்ணெய் கம்பெனிகள் எல்லாம் அன்னியர் கையில். ஒரு பாடாக, நேருவின் பொருளியல் கொள்கைக்கேற்ப அரசின் ஆளுமை, இத்துறையில் வலுத்தது, கே.டி. மாளவியா எந்த அமைச்சரின் துரித நடவடிக்கைகளால். இதை எல்லாம் குறை கூறுபவர்கள் உண்டு. ஆனால், இந்தியாவின் ஆளுமை அதன் வலிமையைக் கூட்டியது. அது எண்ணெய் வல்லரசுகளின் பொறாமையை கிளப்பியது. கச்சா எண்ணெய் ராசாதி ராசர்களுடனும் இந்தியா இணக்கமாக இருந்தது. இது எல்லாம் சூடு ஆறின கதை.
இந்திய பொருளாதாரக் கொள்கைகள் தாராளமயமானது (யாருக்காக?) 1991ல். கடந்த இருபது வருடங்களில் தனியாரின் தொனி கூடி வருகிறது. இத்தனைக்கும், ஆடிட் ரிப்போர்ட்டில் சொல்றமாதிரி, கன்ட்ரோல், அரசு கையில் இருக்க வேண்டும். எண்ணெய் ராசா ரிலையன்ஸ் காலின் மேல் கால் போட்டுக்கொண்டு நைச்சியமாக பேசுகிறது, 2011ல். இந்தியாவிலேயே பெரிய கம்பெனி. பங்குச்சந்தை கண்காணிப்பாளர், முதலீடு செய்து கையை சுட்டுக்கொண்டவர்கள் (உங்களில் சிலர் இருப்பார்கள்; நான் ஓடி வந்து விட்டேன்.), ஆய்வாளர்கள் எல்லாருமே, ‘ரிலையன்ஸ்! ரிலை பண்ணமுடியல்லையே’ என்று அலறுகிறார்கள். பங்குச்சந்தையில் ஏண்டாப்பா விழுகிறாய் என்றால், இது கரடி வித்தை என்கிறது, இந்த அடுக்கு மாடி கம்பேனி.
சற்றே விசாரிப்போம், வாசகர்களில்லாமல், இத்தொடர் அறுந்து போயிருந்தாலும்.
மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்திய தணிக்கைத்துறை, இத்துறையின் அரசு-தனியார் கூட்டுப்பணிகளை அலசி, ஆகஸ்ட் 24, 2011 அன்று தன் 203 பக்க அறிக்கையை நம் ஜனாதிபதியிடமும், கச்சா எண்ணெய் அமைச்சரகத்திடமும் சமர்ப்பித்தது. மத்திய அரசு மனமுவந்து அதையும், கிட்டத்தட்ட பூண்டி ஆகிவிட்ட நமது ஏர் இந்தியா கம்பெனி ஆடிட் ரிப்போர்ட்டையும், சில மணி நேரம் முன்னால், நம் நாடாளுமன்றத்தில் (கதவு பாதி மூடின பிறகு) தாக்கல் செய்தது. கேள்வி கேட்க முடியாது பாருங்கள். எனினும், துரிதம் என்று தான் சொல்லவேண்டும். கர்நாடகாவுக்குத் தான் உலகளவில் கின்னெஸ் ரிக்கார்ட்! பெங்களூரு நகர மையம் 53 வருடங்களாக ஆடிட் ரிப்போர்ட்டை தாக்கல் செய்யவில்லை என்று மார் தட்டிக்கொள்கிறது. அது ஒழிந்து போகட்டும்.
இந்த ஆடிட் ரிப்போர்ட் என்ன சொல்றதாம். அரச மரத்தை சுற்றி வந்து வயற்றை தொட்டுப்பார்த்தாளாம், மாதொருத்தி! அந்த மாதிரி நம் ஊடகங்கள் சில மாதங்களாகவே ஊகமும், ஹேஷ்யமும், கசிவுகளாகவும், இல்லாததையும், பொல்லாததையும் சொல்லிக்கொண்டு, அடித்துக்கொண்டன. ரிலையன்ஸ் புலம்பலை விளம்பரப்படுத்தின. நானும் அப்பப்போ ‘வல்லமையில்’ சங்கு ஊதினேன். செவி சாய்த்தீர்களோ, இல்லையோ? அதை விடுங்கள்.
அதிகாரப்பூர்வமான ரிப்போர்ட் கையில். ஆடிட் ரிப்போர்ட்டின் புருஷலக்ஷணம் சுருக்கம். நான் மேலும் சுருக்கினால், ‘சுக்குமி, ளகுதி இப்புலி’ என்று இருக்கும். முக்கியமானவற்றை பட்டியலிடத்தான் முடியும். முழுதாக, ஆடிட் ரிப்போர்ட்டை ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ, இலவசமாகப் படிக்கலாமே.
‘சுருக்’ என தைத்த ‘சுருக்’ ரிப்போர்ட்:
பாரா 3.5: எங்கள் வேலை பலவிதங்களில் தடை பட்டது. காலம் கடந்து, அமைச்சரகம் ‘ஒத்துழைக்க’, ஒரு பாடா ஒப்பேத்தினோம். (நமக்குள்: போன வருடமே ரெடியாக இருந்தது.)
பாரா 4.2.1: ரிலையன்ஸ் ‘மணலை கயிறாகத் திரித்து’ (என் சொல். ஆடிட் ரிப்போர்ட் இத்தனை  வக்கணையா பேசாது. அதுவும் சரி தான்.) ஆடிட் செய்வதையே ‘ஒப்பந்த விரோதம்’ என்று காச்சுமூச்சினர். இத்தனைக்கும் அமைச்சரகம், எங்கள் ஆடிட்டை வேண்டியது மட்டுமல்ல;  மட்டுமல்ல; எங்கள் ஆளுமையை உறுதிப் படுத்தியது.
எக்கச்சக்கமான கேஸ்களில் அரசின் மேற்பார்வை மிகக்குறைவு; பத்துக்கேஸ்களில் ரிலையன்ஸ் அகேர் என்ற கம்பெனிக்கு டெண்டர் இல்லாமல் ‘கேட்டதைக் கொடுத்த’ ஒப்பந்தங்கள்; அரசின் பணம் மாட்டிக்கொண்டிருந்தாலும், கவர்ன்மெண்ட் விதிப்படி தனியார் துறை செய்யவேண்டும் என்று சொல்லவே மாட்டோம். எனினும், விவேகம் என்று ஒன்று எல்லாருக்கும் பொது;
ஹைட்ரோகார்பன் இலாக்கா கடமை தவறியது.. கே.ஜீ. பேஸின் பகுதிகளில், ஒப்பந்தப்படி, 25% பாகத்தை சரண் செய்து, இரண்டாவது (7645 சதுர. கிலோமீட்டர்கள்), மூன்றாவது பகுதிகளுக்கு செல்லலாம். அதை ஏன் விட்டுக்கொடுத்தார்கள் என்பது மர்மம்; விட்டுக்கொடுத்த அதிகாரியின் மீது ஏற்கனவே புலனாய்வு விசாரணை இருந்தது குறிப்பிடத்தக்கது. இனியாவது நல்லதொரு தீர்மானம் வேண்டும்;
ஏப்ரல் -மே 2005 லியே தனது இலாக்காவின் விதிகளை மீறியது, ஹைட்ரோ கார்பன் இலாக்கா. எதற்கு? ரிலையன்ஸுக்கு அதீத சலுகைகள் அளிக்க.
பர்மார், பன்னா-முக்தி பகுதிகளில் கைர்ன், ஓ.என்.ஜீ.ஸி, ப்ரிட்டீஷ் காஸ் + ரிலையன்ஸ் ஒப்பந்தங்களில் ஏற்பட்ட ராயல்டி நஷ்டம்  கணிசமானது என்ற ஆடிட் ரிப்போர்ட், அதை கணிக்கவில்லை. 2ஜி படிப்பினையா? எனக்கு அது பிடிக்கவில்லை. ஆனால், ரிப்போர்ட்டை ஊன்றிப் படிக்க வேண்டும்.
அதே மாதிரி ,கே.ஜி-டி6 பகுதியில் செலவை 2.4 பில்லியன் டாலரிலிருந்து, ரிலையன்ஸ் 8.8. பில்லியனுக்கு தூக்கிப்பிடித்ததை பற்றி விமரிசிக்கவில்லை. எனக்கு அது சரியாகப்படுகிறது. ரிலையன்ஸின் பதிலை தன் ஆய்வில் எடுத்துக்கொண்டதாகத் தோற்றம். போகிறப்போக்கு நல்லாயில்லை. ரிப்போர்ட்டை ஊன்றிப் படிக்க வேண்டும். செலவு ஆன பிறகு தணிக்கை செய்யத்தான் வேண்டும். வரிப்பணம், ஐயா.
ஈற்றடி: தனியார் கம்பெனிகள், நாங்கள் ஏதோ அநாவசியமாகத் தலையிட்டு காரியத்தை கெடுக்கிறோம் என்று சொன்னால், வரிப்பணம் வீணாவதை பார்த்துக்கொண்டு, நாங்கள் வாளாவிருக்க முடியுமா? என்ன?;
பாரா 7.1: ஆக மொத்தம், அமைச்சரகம், எழுத்து மூலமாக, ஆடிட் முடிவுகளை ஒத்துக்கொண்டு, ஆவன செய்வதாக, வாக்கு அளித்திருக்கிறது.
>> http://www.vallamai.com/paragraphs/7769/