Showing posts with label திரிகடுகம். Show all posts
Showing posts with label திரிகடுகம். Show all posts

Sunday, November 8, 2015

நாளொரு பக்கம் 29

நாளொரு பக்கம் 29

Tuesday, the 24rd March 2015

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு. 
-திரிகடுகம் 6


பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும்:
தற்புகழ்ச்சியையே தவிர்ப்பது கடினம். சுயநலத்திற்காகவோ, மரியாதை நிமித்தமாகவோ, பணிவன்புடனோ பிறர் புகழ்மாலை சாற்றினால் உச்சி குளிர்ந்துவிடும். மற்றவர் பேணுவதை நாடுவீர்கள். அதை லஜ்ஜையுடன் கையாளுவது சாலத்தகும்.
பேணார்
திறன் வேறு கூறின் பொறையும்:

புகழ் வரவு. இழிச்சொல்லோ பற்று (அதாவது [-]). இழிச்சொல்லை ஜீரணம் செய்வது கடினம். அது சொற்போரையோ, கைகலப்பையோ துவக்கலாம். தேவையா? பொறுத்தாள்வதே விவேகம்.

அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும்:

பிறருக்கு மைம்மாறு செய்யும் தருணம் கிட்டினால், அதை கொடுப்பினையாக கருதாமல், கைம்மாறு எதிர்பார்ப்பதைத் தவிர்த்து, ‘பணி செய்து கிடப்பது என் கடனே’ என்ற ஆளுமை தான் நற்பயன். செருக்கு என்றால் அகந்தை என்ற பொருள் இங்கு இல்லை. அது பெருமிதத்தைக் குறிக்கிறது.
-#-

Saturday, September 12, 2015

நாளொரு பக்கம் 3

நாளொரு பக்கம்  3

Friday, the 27th February 2015
“கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்/தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம்/நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம்/ இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி.”- தமிழ் நீதி நூல்: திரிகடுகம்.

‘திரிகடுகம் போலும் மருந்து’ 
Image Credit: தினமலர்

‘ அறம் செய்ய விரும்பு’ என்றாள், அவ்வைப்பாட்டி. ‘அகரமுதல் எழுத்தெல்லாம்...’ இறை வணக்கம் செய்தார், திருவள்ளுவர் பெரும்தகை. ‘யாமறிந்த மொழிகளிலே இனிதான...’ தமிழ்மொழியின் சங்க கால இலக்கியத்தில் நீதி நூல்கள் பல. அக்காலத்திலேயே தமிழன் கண்டறிந்து பொருத்தமாக கையாண்டு பயன் பெற்ற மூலிகைகளை முன்னிறுத்தி அறிவுரை அளித்த நீதி நூல்கள் மூன்று. யாவரும் அறிந்த மூலிகைகள் ஆன சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் வாழ்வாதாரம் தருபவை: அவையே ‘திரிகடுகம்’ என்ற உயிர் மருந்து நூல் எனலாம். இம்மைக்கும் (கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் வகையறா) மறுமைக்கும் (அவாவறுத்தல், மெய்யுணர்தல் வகையறா) ஏற்புடைய நல்வழிகளை உணர்த்தி அறம் சாற்றும் நூல், இது. 

இறை வணக்கத்தில் துவக்குவது சங்ககாலத்திலிருந்து தமிழ் மரபு.  கவிஞர் நல்லாதனார் ‘திரிகடுகத்தின்’ காப்பு செய்யுளில், தர்ம சாஸ்திரத்தின் சிருஷ்டிகர்த்தாவான கிருஷ்ண பகவானின் புகழ் பாடுகிறார். திருமாலின் லீலாவிநோதங்களில், வாமனாவதாரமும், குருந்தை மரத்தை முறித்ததும், மாயச்சகடம் உதைத்ததும் கூறி, அந்த ‘பூவைப்பூ வண்ணன் அடி’ போற்றி வணங்குகிறார்.  வரும் பாடல்களில் மூன்று மூன்று கருத்துக்களும், ஈற்றடியில் ஒரு பொது கருத்தும் கோர்க்கப்படுவது போல, இங்கும் மூன்று லீலாவிநோதங்களும், ஈற்றடியில் வணங்குதலும் பயின்று வரும் நுட்பத்தைசுவைப்போமாக.
-#-



சித்திரத்திக்கு நன்றி: http://img1.dinamalar.com/admin/Bookimages/247713.jpg








Sunday, July 5, 2015

நாளொரு பக்கம் 55

நாளொரு பக்கம் 55


Sunday, the 19th April 2015

விளியாதான் கூத்தாட்டுக் காண்டலும், வீழக்
களியாதான் காவாது உரையும், தெளியாதான்
கூரையுள் பல் காலும் சேறலும், - இம் மூன்றும்
ஊர் எலாம் நோவது உடைத்து

- திரிகடுகம் 11

ஒரு நாட்டிய அரங்கம். யாவரும் பார்க்க விழையும் பிரபல நர்த்தகிகளின் நாட்டியம் அறிவிக்கப்பட்டாலும், அழைப்பு இல்லையேல் நுழைவு இல்லை. அங்கு சென்று வாயிற்காப்போரின் மறுப்பை பெறுவது தவிர்க்கக்கூடிய அவமானம். பொது மன்றத்திலோ அல்லது ராஸ்தாவிலோ, ஒருவன், குடி போதையில், உளறிக்கொட்டி, கிளறி மூடுகிறான். ஏளனத்துக்கு ஆளாகிறான்? தேவையா? அன்றே சொன்னாள், அவ்வைப்பாட்டி, ‘ மதியாதார் தலை வாசல் மிதியவேண்டாம்.’ நம்மிடம் நம்பிக்கை இல்லாமலோ, பிடித்தம் இல்லாமலோ, வெறுப்பினாலோ, விலக்க விரும்புவர்கள் இல்லத்துக்கு படையெடுப்பது, அவமதிப்பை தேடிப்பிடிக்கும் அசமஞ்சம். அதையும் தவிர்க்கவேண்டும் என்று உபாயம் சொல்கிறார், நல்லாதனார். 

-#-
சித்திரத்துக்கு நன்றி: http://screencrave.com/wp-content/uploads/2009/05/theunivitedheader09-5-1.jpg

Saturday, June 20, 2015

நாளொரு பக்கம் 48

நாளொரு பக்கம் 48
Sunday, the 12th April 2015



பெருமை உடையார் இனத்தின் அகறல்,
உரிமை இல் பெண்டிரைக் காமுற்று வாழ்தல்,
விழுமிய அல்ல துணிதல், - இம் மூன்றும்
முழு மக்கள் காதலவை.             
- திரிகடுகம் 9


சான்றோர் பெருந்தன்மை உடையவர்கள். அவர்களின் நட்பு பெருமை தரும். பல விதங்களில் நம்மை மேன்மை படுத்தும். அத்தகைய அருமையான கொடுப்பினையை இழப்பது மதி கெட்ட மாந்தர் செயல். 

இல்லறமல்லது நல்லறமன்று என்பதற்கு நல்லாதனார் ஒரு மென்மையான விளக்கம் தருகிறார். ஆண் பெண் கூடி வாழ்வது தான் இயல்பு. அதன் பொருட்டு திருமணம் போன்ற உரிமை மரபுகள் உளன. அதீதமான காமத்தினால் உந்தப்பட்டு, உரிமை மீறும் வகையில் பெண்டிர் சம்பந்தம் வைத்துக்கொள்வது தகாத செயல்; மூடர்கள் தான் அதில் ஈடுபடுவார்கள். நாம் தான் தினந்தோறும், இதையெல்லாம், ‘சொல்வதெல்லாம் உண்மை!’ என்ற தொல்லைக்காட்சி தொடரில் கண்டு வருகிறோமே! 

இவ்வுலகில் பயனற்ற செயல்களுக்கு பஞ்சமில்லை.  தமிழில் அவற்றை சுட்டுவதற்கு சுவையான பழமொழிகளுண்டு: ‘குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது’, ‘வேலையில்லா அம்பட்டன் பூனையை சிரைத்தானாம்’..... 
தமிழனின் நகைச்சுவை பாராட்டத்தக்கது தான்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://images.sodahead.com/polls/003566617/1519493852_waste_of_time_answer_1_xlarge.jpeg


Saturday, June 6, 2015

நாளொரு பக்கம் 38

நாளொரு பக்கம் 38






Thursday, the 2nd April 2015

தொல் அவையுள் தோன்றும் குடிமையும், தொக்கு இருந்த
நல் அவையுள் மேம்பட்ட கல்வியும், வெல் சமத்து
வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும், - இம் மூன்றும்
தாம் தம்மைக் கூறாப் பொருள்.

திரிகடுகம் 8

தமிழில் தாரதம்யம் என்றதொரு சொல் உண்டு. இடம், பொருள், ஏவல் ஆகியவை கருதி, அதற்கேற்ப பொருத்தமாக செயல்படுவோருக்கு, தற்புகழ்ச்சிக்கு அவசியமே இல்லை. சான்றாக, தொன்மை, பழமை, பாரம்பரியம் ஆகியவற்றை ஆராயும் இடத்தில் நல்ல குடிப்பிறப்பு அருமையாக உதவும். கற்றோர்களும், புலவர்களும், மேதைகளும் வீற்றிருக்கும் அவையில் நல்ல கல்வி அறிவு கை கொடுக்கும். போர்க்களத்தில் வாகை சூடுவது மட்டுமே குறி. அதற்கேற்ற துணிவு, ஆற்றல், கட்டுப்பாடு தேவை. இவை மூன்றையும் தானாகவே அறிந்து செயல்பட முடியும். 

அத்தகைய உயர்நிலை சூழ்நிலையில் ‘தம்மைக் கூறாப் பொருள்’ தலைமை வகிக்கும்.

-#-





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine


www.olitamizh.com


Tuesday, May 26, 2015

நாளொரு பக்கம் 29

நாளொரு பக்கம் 29

Tuesday, the 24rd March 2015

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு. 
-திரிகடுகம் 6


பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும்:
தற்புகழ்ச்சியையே தவிர்ப்பது கடினம். சுயநலத்திற்காகவோ, மரியாதை நிமித்தமாகவோ, பணிவன்புடனோ பிறர் புகழ்மாலை சாற்றினால் உச்சி குளிர்ந்துவிடும். மற்றவர் பேணுவதை நாடுவீர்கள். அதை லஜ்ஜையுடன் கையாளுவது சாலத்தகும்.
பேணார்
திறன் வேறு கூறின் பொறையும்:

புகழ் வரவு. இழிச்சொல்லோ பற்று (அதாவது [-]). இழிச்சொல்லை ஜீரணம் செய்வது கடினம். அது சொற்போரையோ, கைகலப்பையோ துவக்கலாம். தேவையா? பொறுத்தாள்வதே விவேகம்.

அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும்:

பிறருக்கு மைம்மாறு செய்யும் தருணம் கிட்டினால், அதை கொடுப்பினையாக கருதாமல், கைம்மாறு எதிர்பார்ப்பதைத் தவிர்த்து, ‘பணி செய்து கிடப்பது என் கடனே’ என்ற ஆளுமை தான் நற்பயன். செருக்கு என்றால் அகந்தை என்ற பொருள் இங்கு இல்லை. அது பெருமிதத்தைக் குறிக்கிறது.
-#-


Monday, May 18, 2015

நாளொரு பக்கம் 20

நாளொரு பக்கம் 20

Monday ,the 16th March 2015

பகை முன்னர் வாழ்க்கை செயலும், 
தொகை நின்ற பெற்றத்துள் கோல் இன்றிச் சேறலும், 
முன் தன்னைக் காய்வானைக் கை வாங்கிக் கோடலும், - 
இம் மூன்றும் சாவ உறுவான் தொழில்.

திரிகடுகம்  4


பகைவர்களுக்கு எதிரில் செல்வங் காட்டினால் அவர்கள் அதற்குக் கேடு செய்ய முற்படுவார்கள்.  (அதாவது) நம்மீது பகையும், பொறமையும், காய்ச்சலும், காழ்ப்புணர்ச்சியும் உள்ளவர்கள் முன்னால் நமது மயிலாட்டமும் வேண்டாம்; ஒயிலாட்டமும் வேண்டாம். அதனால் தான் ‘துஷ்டனைக் கண்டால் தீர விலகு.’ என்றார்கள்.

கோலில்லாது மாட்டு மந்தையிற் போனால் ஏதாவது ஒரு மாடு முட்டும்.  இது ஒரு உவமை. எங்கு சென்றாலும், என்ன செய்தாலும், பொருத்தமும், பொருத்தமான உபகரணங்களும் தேவை.  அமாவாசை இருட்டில்,  தீவட்டி இல்லாமல் நடந்தால், அரவம் தீண்டலாம். The right tool for the right job.

நம்மீது பகையும், பொறமையும், காய்ச்சலும், காழ்ப்புணர்ச்சியும் உள்ளவர்களை விலக்கி விட்டு, மறுபடியும் கூட்டுச் சேர்த்துக்கொள்வதை விட வேறு வினை வேண்டாம்.

இவை மூன்றும்  சாவு நாடுபவன்  தேடி வருவித்து தன்னை வறுத்துக்கொள்பவனின் செய்கையாகும்.

கேவலமான சிக்கல்களில் மாட்டிக்கொள்வதை விட நாக்கைப்பிடுங்கிக்கொண்டு சாகலாம் என்ற சொலவடை தமிழில் உண்டு.


-#-
சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c4/Flickr_-_don_macauley_-_Shepherd_with_cows.jpg/220px-Flickr_-_don_macauley_-_Shepherd_with_cows.jpg

Saturday, May 16, 2015

நாளொரு பக்கம் 17

நாளொரு பக்கம் 17
Wednesday ,the 11th March 2015



கல்லார்க்கு இன்னா ஒழுகலும், காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும், இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலும், - இம் மூன்றும்
அறியாமையான் வரும் கேடு. 
~ திரிகடுகம் 3

கல்வியும், அதன் நன்கொடையான அறிவும் வாழ்வை சிறப்புற அமைக்கின்றன. கற்றாருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு. அன்னாருடைய நட்பு நமக்கும் அறிவை புகட்டி நமது தரத்தை உயர்த்தும். அதை வலியுறத்தவே, புலவர் ‘கல்லார்க்கு இன்னா ஒழுகலும்’ -
கற்றறியாதவருடன் நட்பாய் இருப்பது வேண்டா என்றார். இல்லறம் அல்லது கணவனும் மனைவியும் இங்கிதமாக குடித்தனம் நடத்தினால் தான் நல்லறம் ஆகும். அதை வலியுறத்தவே, ‘காழ்க் கொண்ட
இல்லாளைக் கோலால் புடைத்தலும்’ -கற்புடை மனைவியை அடித்தல் வேண்டா என்றார். அவரவது இல்லங்களில். நல்ல எண்ணம் இல்லாதவர்கள், தரங்கெட்ட இயல்பினர், சிற்றறிவினால் குற்றம் புரிபர்கள் ஆகிய தன்மை உடையவர்களை அனுமதிக்காமல் இருப்பது விவேகம். கற்றறியாதவருடன் நட்பாய் இருப்பதும், கற்புடை மனைவியை அடித்தலும், சிற்றறிவினரை தம் வீட்டுள் சேர்ப்பதும் அறியாமையினால் விளைகின்ற கேடுகளாகும்.
-x-


சித்திரத்துக்கு நன்றி: http://www.muthukamalam.com/images/picture/neededucation.jpg

Tuesday, May 5, 2015

நாளொரு பக்கம் 6

நாளொரு பக்கம் 6
Monday, the 2nd March 2015
அருந்ததிக் கற்பினார் தோளும், திருந்திய
தொல் குடியில் மாண்டார் தொடர்ச்சியும், சொல்லின்
அரில் அகற்றும் கேள்வியார் நட்பும், - இம் மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து.
திரிகடுகம் 1
அருந்ததி எழு முனிவருள் ஒருவராகிய வசிஷ்டரின் தர்மப்பத்தினி; கற்புக்கு இலக்கணம்.
மூன்று விண்மீன்களில் நடுவிலிருப்பதான வசிஷ்டர் மீனோடு துணையாய் மின்னும் அவருக்கு பிரபஞ்சமே புகழாரம் சூட்டுகிறது.  அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல்லவோ திருமணம்.  இள்ங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் கோவலன்

நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்க்கீழ்
வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
சாலி யொருமீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான்...
நற்குண நற்செய்கைகளுள்ள பெண்ணை மணஞ்செய்திருப்பது இம்மை மறுமைகளில் நேரிடும் துன்பங்களைத் தீர்த்து இன்பங் கொடுப்பவாதலால் நோயைப் போக்கி நலத்தைக் கொடுக்கும் சுக்கு திப்பிலி மிளகுகளாகிய மருந்து போலும் என்மனார், நல்லாதனார்.

நற்குடியில் பிறப்பதே இறைவனின் கொடுப்பினை. தொன்மையும், மரபும், வம்சாவளி பெருமிதமும் ஒருசேர இருக்கும் குடும்பத்தில் பிறந்து, காலாகாலத்தில் சிறப்புற மாட்சிமை அடைந்தவரின் தொடர்ச்சியே, கூடப்பிறந்த மூலிகை என்க.

அது போலவே, சொற்களில் மாசு அகற்றும் சான்றோரின் நட்பும் அருமருந்தே.

‘நுணங்கிய கேள்விய ரல்லார்' என்ற குறளில் கருத்தை ஒப்பு நோக்குக.

-x-

சித்திரத்துக்கு நன்றி: http://i1.wp.com/www.brahminsnet.com/wp/wp-content/uploads/2015/03/mangalya-dharanam.jpg?resize=300%2C225

Sunday, May 12, 2013

தமிழார்வம் ‘திரிகடுகம்: தகைமை


தமிழார்வம்
‘திரிகடுகம்: தகைமை
Inline image 1
அப்டேட்:2014
எழுத்தை சீரமைக்கச் சொன்னர்கள்.
இன்னம்பூரான்

4. தகைமை மூன்று
தன்குணங் குன்றாத் தகைமையும் தாவில்சீர்
இன்குணத்தார் ஏவின செய்தலும் - நன்குணர்வின்
நான்மறை யாளர் வழிச்செலவும் இம்மூன்றும்
மேன்முறை யாளர் தொழில். 
4.1. நமது மூதாதையரின் பேரும், புகழும், குணாதிசயங்களும் நீடூழி நிலைத்திருப்பதற்கு நாம் கடமை பட்டிருக்கிறோம். அதற்கு சுயகட்டுப்பாட்டுடன் இயங்கும் நல்லொழுக்கம் (தகைமை) வழி வகுக்கும். அதை கடைப்பிடிப்போமாக.  அழிவிலா கீர்த்தியுடைய நற்குணமுடையோர் இனிமையாக பேசுவார்கள். அவர்கள் இட்ட பணியை செய்வது நன்மை பயக்கும். நான்கு வேதங்களின் அறிவுரை படி நடக்கவேண்டும். இது எல்லாம் மேலோர்களின் பண்பு.  இன்குணத்தாருக்கு ‘அழிவிலா கீர்த்தி’ என்ற அடை மொழி, உரை அளிக்கும் பாடம். ‘இன்குணத்தார் ஏவின செய்தலும் ‘ என்பதற்கு, குணஞ் சான்றவர்க்கு ஆவன செய்தல்’ என்பது விருத்தியுரை அளிக்கும் பாடம். 

4.2. பௌடிகமும், தைத்திரியமும், சாமவேதமும், தலவகாரமும்’ என்று, நச்சினிக்கினியாரை தழுவி கூறும் விருத்தியுரை, அவற்றை இக் காலத்தவர் இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என்பர் என்று விளக்குகிறது.  உரையாசிரியர்  அக்காலத்திலேயே யசுர், சாம, அதர்வணம் என்று தான் கூறியிருக்கிறார். அதர்வணத்தை, விருத்தியுரை, தலவகாரம் என்று சொல்வது வியப்பை அளிக்கிறது. அது சாமவேதத்தின் ஒரு கூறு என்றும்  எசுர், சாமவேதம் என்ற   பெயர்கள் வால்மீகியார் காலத்திலேயே வழக்கில் இருந்தன என்றும் பேராசிரியர் தி.வே. கோபாலையர் அவர்களும் கூறியிருக்கிறார். திருமங்கையாழ்வார்   அருளிய   பெரிய   திருமொழியிலும்   ‘...சந்தோகா,பௌழியா, தைத்திரியா, சாம   வேதியனே,   நெடுமாலே...’ (7-7-3)   என்று
நச்சினார்க்கினியர் குறிப்பிடும் பண்டை வேதப் பெயர்கள்  வழங்குகின்றன என்பதையும் சுட்டிய ‘தமிழ்க்கடல்’ அவர்கள், ‘... இராமனை   முதன்முறை   கண்டு   தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட
அநுமன்   கூற்றினைச்   செவிமடுத்த   இராமன்   இவன் இருக்கு, எசுர்,சாமவேதம்    என்ற   வேதங்களில்   பயிற்சியுடையனாதல்   வேண்டும்.அதனால்தான் இவன் பேச்சு   வணக்கமும்   தொடர்ச்சியும்   இனிமையும் உடையதாய் உள்ளது என்று   இலக்குவனிடம்   குறிப்பிட்டதாக  வான்மீகி குறிப்பிடுகிறார். இருக்கு, எசுர், சாமவேதம் என்ற   பெயர்கள் வான்மீகியார்
காலத்திலேயே   வழக்கில்   இருந்தன...’ என்றும் எழுதியுள்ளார்.

5.3. ‘தண்குணங் குன்றாத் தகைமை’ குடும்பம், குலம், மொழி, தேசாபிமானம், மனித நேயம் ஆகிய பல படிநிலைகளில் இயங்குகிறது என்று நான் கருதுகிறேன். அதன் பொருட்டு அதை சமுதாயத்துக்கே நிவாரணம் அளிக்கும் ஒளஷதம் என்றால் மிகையல்ல. இன்குணத்தார் ஏவின செய்தல்’ அவர்கள் இட்ட பணியாக இருந்தாலும், அவர்களுக்கு ஆவன செய்வதாக இருந்தால், நன்மை தான் பயக்கும். காழ்ப்புணர்ச்சியும், இனபேதமும், தன்னலமும் மேலாண்மை செய்யும் தற்காலத்தில் இன்குணம் அரிய மருந்து என்பதில் ஐயமேதுமில்லை. வேத அத்யயனம் குறைந்து விட்டது. வேத அறிவுரைகளை பொறுப்புடன் எடுத்துக்கூறும் விற்பன்னர்கள் மிகவும் குறைந்து விட்டனர். அதை பற்றிய ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முன் நல்லாதனாரின் திரிகடுகம் படிப்பது மேல்.

(தொடரும்)

இன்னம்பூரான்
07 11 2012
உசாத்துணை:
திரிகடுகம்: மூலமும், உரையும்: http://noolaham.net/project/35/3423/3423.pdf
தமிழ் இணையக் கல்விக்கழகம்
திரிகடுகம்:மூலமும்,விருத்தியுரையும்: http://www.tamilvu.org/library/libindex.htm

சித்திரத்திற்கு நன்றி:

பிரசுரம்: வல்லமை