8. முள்ளுப்பொறுக்கியார்: தணிக்கை |
Innamburan S.Soundararajan | Mon, May 27, 2013 at 1:01 PM | |
|
8. முள்ளுப்பொறுக்கியார்: தணிக்கை |
Innamburan S.Soundararajan | Mon, May 27, 2013 at 1:01 PM | |
|
21. “ஞானஸ்நானம்”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -3 1 message |
Innamburan S.Soundararajan | Mon, Apr 29, 2013 at 9:19 PM | |||||||||||||||||||
21 01 2010
21. “ஞானஸ்நானம்”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -3
ஞானஸ்நானத்துடன் மூன்றாம்பத்து தொடங்குகிறது.
ஆட்டைத்தூக்கி மாட்டிலே போடக்கூடாது; ஒத்துக்கிறேன். அதற்காக புலியோடு போடுவார்களோ? அரசாங்கக்கணக்கு வ
"தனிபெறு தன்புலத்துத் தலைப்பெயற்கு அரும்பீன்று..." என்றெல்லாம் கலித்தொகையில் பிடவம், கோடல், காயா முதலான பல மலர்கள் சொல்லப்பட்டமாதிரி, இந்த பெரும் தலைகள், சிறு தலைகள், குட்டித்தலைகள், அரசு கணக்கு வழக்கில் புகுந்து விளையாடின. கல்லறைகளுக்கு மட்டும் நான்கு குறும் தலைகள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இது எல்லாம் எங்கள் அலுவலகப்பரிக்ஷைகளில் வந்து பாடாய் படுத்தின. முதல்முறையாகவும் கடைசிமுறையாகவும் கோட்டு அடித்தேன். இல்லறத்தை பாதிக்கும் அளவுக்கு, ராவெல்லாம் தலைகள் உருண்டன. என்ன பயன்?
ஆனானப்பட எனக்கே இந்த அதோகதி என்றால், நேற்று வந்த கருவூலகுமாஸ்தா (9ஸி: தினக்கூலி) ஏன் ஆட்டைத்தூக்கி புலியில் போடமாட்டார்? எனக்கு இது சுத்தமா பிடிக்கவில்லை; புரியவில்லை.
போதாக்குறைக்கு, ஏ.ஜீயின் பாங்கன் யான் வைத்த பெயரை அவரிடம் வத்தி வைத்துவிட்டார் போல. ஏ.ஜீ என்னை கடிந்து கொண்டார். "நீ கடவுளர் பெயரை எல்லாம் இப்படி இழுக்கலாமா? இது தகுமோ? இது முறையோ?" என்று அவர் வினவ, "இல்லை! இல்லை! (தனிமொழி: 'அப்பாணை! இல்லை! இல்லை!) என்று விடையளித்துவிட்டு, சிரங்களையெ
எந்த துறையிலும் நுணுக்க, நுணுக்க, முழுமை மறந்து போய் விடுகிறது. ஆங்கிலத்தில் சொன்னால், ‘The devil is in the detail; but, we lose the wood for the trees. “எங்கள் டிபார்ட்மென்ட்டின் பெயரிலேயே, இரட்டைக்குழல்: கணக்கு வழக்கு & தணிக்கை. நான் ஏதொ கொஞ்சம் தணிக்கை செய்ய கற்றுக்கொண்டாலும், ஒரு தணிக்கை ரிப்போர்ட் பார்த்தது கிடையாது. அது எல்லாம் மூடுமந்திரம். கற்றுக்கொண்டதோ, நிர்வாகம், பொ
கல்கத்தாவிலிருந்து சித்தரஞ்சன் ஒரு தடவை வரும்போது, அப்போது தான் தொடங்கிய காஸ்ட் அக்கெளவுன்டெட் தனியார் துறை தலைவரும் என் கூட பயணித்தார். வாய்சாலகங்கள் முடிந்தபின், 'எங்கள் பரிக்ஷைகள் எழுதி முன்னேறுக' என்று அழைப்பும் விடுத்தார். பார்த்தேன். ரயில் பயணம் இலவசம் அல்லவா! ஜாம் ஜாம் என்று தம்பதி சமேதராக, டில்லி சலோ! என்னுடைய ஆசார்யன், 'ஈ.வி.சரோஜா விசிறி' திரு.பரஃபுல் சந்திர பாதி அவர்களை வீட்டில் சந்தித்து சரணடைந்தேன். ஆஃபீசில் வேங்கை என்றாலும், ஏற்கனவே குடும்ப நண்பர்கள். அஜகஜாந்திர தூரம், பதவி விஷயத்தில் இருந்தாலும். நான் அவரிடம் எந்த விதமான தயவு கோரவே இல்லை என்பதால் தான் இது முடிந்தது. ஏதாவது கேட்டிருந்தால், கடாசியிருப்பா
ஒரு குரல் அழுதேன், வஸந்தா ரன்னிங்க் கமென்டரி அடிக்க. செவி மடுத்துக்கேட்டுக்கொண்டார். என் பாயிண்ட்ஸ்; 1. எனக்கு அக்கெளண்ட்ஸ் வேண்டாம். தணிக்கை மட்டும் வேண்டும் 2. காஸ்ட் அக்கெளண்ட்ஸ்: அறிவுரை ப்ளீஸ்.
அவர் விடுத்த தோட்டாக்கள:
1 கணக்கு வழக்குக்கு முழுக்குப்போட்டு விடு, என் மாதிரி. யாரிடமும் சொல்லாதே. (அவர் கணக்குப்புலி;ஆடிட் சிங்கம், அருமையாக தச்சு வேலை செய்வார்; எனக்கு ஒரு பரிசு கூட அளித்திருக்கிறார்; சினிமாப்
2.தணிக்கையில் தணியா வேகம் எடுக்க.
3.உனக்கு கணக்குவழக்கு பதவிகள் வரும். அஞ்சாதே. ஒரு தகுந்த எஸ்.ஏ.ஸ். கணக்காளரை உறுதுணையாக வைத்துக்கொள்.*
4. காஸ்ட்டும் வேண்டாம். அக்கெளண்ட்ஸும் வேண்டாம். ஸ்பெஷைலைஷன் நலம் தராது. மூலையில் முடங்கிவிடுவாய்.
5. திறந்த மனதுடன் பல விஷயங்கள் கற்றுக்கொள். கேள்வி ஞானம் சிறந்தது என்பதை மறக்காதே.
6. படிப்பதை நிறுத்திவிடாதே.
இவ்வாறு ஆசுவாசப்படுத்திய பிறகு தட்டிக்கொடுத்து அவர் அருளிய வாக்கு: "உனக்கு வாக்தீக்ஷையும், சக்க்ஷுதீக்ஷை
தமிழ்த்தேனீ எச்சரிக்கை விடுத்தும், எனக்கு கணக்கு வழக்கு தெரியாது என்று இன்று சொல்லிவிட்டேன். கணக்குவழக்கு பதவிகளை திறம்பட வகித்தேன். பிற்காலம், என்னுடைய சாக்ஷியத்தை உயர்மட்டநிதிகமிஷன் பாராட்டினார்கள். அது ஆச்சர்யம் அல்ல. தனிப்பட்ட சாதனையும் அல்ல.
மாரல்:
‘The devil is in the detail; but, do not lose the wood for the trees.
* ஆடிட்டர் ஜெனரல் நேர்முக அடிப்படையில் மட்டும் எஸ்.ஏ.ஸ். கணக்காளர்களை தேர்ந்து எடுத்து, (சிபாரிசு அறவே கிடையாது..) பயிற்சியில் புடம் போட்டு மத்திய தட்டு மேற்பார்வையாளர்களாக பணியில் அமர்த்தினார், சில வருடங்கள். ஐ.ஏ.ஏஸ்ஸில் சோடை போனது உண்டு. எஸ்.ஏ.ஸ்ஸில் ஒருவர் கூட சோடை போனதில்லை.
இன்னம்பூரான்
List of Major Gods & Minor Gods!. மன்னிக்கவும். அது நான் வைத்த செல்லப்பெயர்; இயற்பெயர்
List of Major Heads & Minor Heads. Detailed headsஇது போன்று ரகசிய குறிப்பு வார்த்தைகள் பரவலாக ஒவ்வொரு அலுவலகத்திலும் உண்டு ரக வாரியாக பிரிக்கலாம் இந்த பெரும் தலைகள், சிறு தலைகள், குட்டித்தலைகள், அரசு கணக்கு வழக்கில் புகுந்து விளையாடின. கல்லறைகளுக்கு மட்டும் நான்கு குறும் தலைகள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்
இவ்வாறு ஆசுவாசப்படுத்திய பிறகு தட்டிக்கொடுத்து அவர் அருளிய வாக்கு: "உனக்கு வாக்தீக்ஷையும், சக்க்ஷுதீக்ஷை
நல்லவேளை அதனால்தானே இன்று எங்களுக்கெல்லாம் தணிக்கை செய்யாத குறும்புகள் இலவசமாயக் கிடைக்கின்றன
அன்புடன்
தமிழ்த்தேனீ
excellent
_______________
Image Credit: http://3.bp.blogspot.
இன்னம்பூரான்
29 04 2013
|
தணிக்கை செய்வதில் தணியா வேகம் -15: "வலையை வீசு" 1 message |
Innamburan S.Soundararajan | Sat, Apr 20, 2013 at 4:40 PM | |||||||||||||||||||||||||
தணிக்கை செய்வதில் தணியா வேகம் -15: வலையை வீசு"லையை வீசு"
தணிக்கைத்துறையின் தணியா வேகம், 'அழகர் ஆற்றில் இறங்கிய' மாதிரி நம்மை எல்லாம் அரசு நிர்வாகமும், அதன் குறைகளும் என்ற சர்ச்சையில், அதுவும் மற்றொரு இழையில், அழைத்து சென்றது, நான் எதிர்ப்பார்த்தது, வரவேற்பது. இரண்டு இழைகளும் Interactive Fora. இது நிற்க (வேண்டாமே).
பல பிரிவுகளில் அனுபவம் தர வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், எங்களை,அங்கும்,இ
சுருங்கச்சொல்லின், எல்லாருக்கு
சொல்லிக்கொடுக்கப்படாத பின்க் ஸ்லிப், மிஸ்ஸிங்க் க்ரெடிட், லாடர்,ரெகான்சிலேயஷன் என்ற கண்கட்டு வித்தை ஆகியவை இனி செல்லுபடி ஆகாது என்று முகாந்திரம் இல்லாமல், ஒரு ஆணை பிறப்பித்து, இந்த ஆனானப்பட்ட ஃபண்ட்ஸ் 4. அதன் சுற்றுப்படைகளான 7 செக்க்ஷன்களை
தெரியாமல் ஏ.ஜீ. அவர்கள் எல்லா ஆவணங்களிலும் சுருக்கொப்பம்/ கையொப்பம் இடவில்லை. இது ஒரு நடு நிலை உத்தி. அவருடைய மனப்போக்கை அறிய,மார்ஜினில் அவர் எழுதியதை படித்தால் போதும். இந்த அதிசய முறை எப்பவாவது அரிதாக வரும். யாருடைய மனமும் நோகக்க்கூடாது. (அவர் நினைத்தால் செய்வார்,அடிக்கடி. அது வேறு விஷயம்.) உண்மை வெளிவரவேண்டும். அவ்வளவு தான். ஆனால்,எளிதில் முடியவில்லை, இந்த சர்ச்சை. நான் ஏ.ஜீ.யிடம் ஒரு கன்ஃபெஷன் செய்ய வேன்டி இருந்தது. அகவுன்ட்ஸ் கரன்ட் என்று ஒரு செக்க்ஷன். பாகிஸ்தானிலிருந்து மாதாமாதம் 'சொல்ல ஒன்றுமில்லை' (‘Nil, Nil, Nil’) என்று ஒரு லிகிதம் வரும். நான் ஸ்டாமபை உருவிக்கொண்டு (ஹி.ஹி. தொட்டில் பழக்கம்) செக்க்ஷனுக்கு அனுப்பாமல், ரொம்ப நாள் வைத்திருந்ததைக்காட்டி, செக்க்
அவன் அனுப்புறான். இவன் இதற்கு இல்லாத வேலையை செய்யாமல் இருக்கிறான்! இதற்கு ஆள் பலம் வேறு. அது தான் கதை. 'ஓஹோ' என்றார். என் கூற்றை ஆதரித்தார். வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிக்கொண்டது. நான் நிர்வாகத்தை ஒரேயடியாக கேலி செய்யவில்லை. சில நுட்பங்களை பகிர்ந்து கொண்டேன். எல்லா அலுவலகலங்களிலும், ஓம் ஐயா சுட்டிய மாதிரி, தலைகீழ் வாய்பாடுகள் உண்டு.
இப்பிடி வண்டி சாவதானமாக நடை போட்டுக்கொண்டு இருக்கும் போது, அப்பாவின் க்ஷேமநிதி சாபம் நினைவுக்கு வந்தது. உடனே அவரை விவரம் கேட்டேன். உன்னால் முடியாது, இருபது வருடங்கள் கடந்தன. 'எள்' என்று விட்டு விட்டேன் என்றார்; விவரமும் கொடுத்தார். யாரை தான் நப்பாசை விடும்? நான் விலக்க நினைத்த மிஸ்ஸிங்க் க்ரெடிட் பட்டியலை துளாவி, கண்டு பிடித்துக்கொடுத்தேன். மகிழ்ச்சி பொங்க, அவரும் மேலும் பல கேஸ்கள் கொடுத்தார். கண்டு பிடித்தோம்.
மூன்று படிப்பினைகள்:
1. மிஸ்ஸிங்க் க்ரெடிட் பட்டியலை விலக்க நினைத்தது , என் தவறு.
2. ஆனால், அந்த செக்க்ஷன் மிஸ்ஸிங்க் க்ரெடிட் பட்டியலை கையாண்டமுறை தப்பு.எனது தலையீடு பயன் அளித்தது.
3. கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு, உத்தர் பிரதேஷ் கும்பமேளாவில், க்ஷேமநிதி மிஸ்ஸிங் க்ரெடிட் புகார்களை கேட்க வசதி நான் செய்தததிற்கு, இந்த ஆய்வு தான் கை கொடுத்தது. கணிசமாக தீர்வு காண உதவியது. ரிப்பேர் ஆன பேரை மீட்டுக்கொடுத்தது.
இன்னம்பூரான்
இரண்டுக்கும் நடைமுறை வித்தியாசம் உண்டா?
எப்போது சுருக்கொப்பம் எப்போது கையெழுத்து? திவாஜி
2010/1/15 Tirumurti Vasudevan <agnihot3@gmail.com>
பொதுவாக வருவாய்த்துறையில் பயன்படுத்துவது ’டாட்டன்ஹாம் ’முறை .
அலுவலகத்திற்கு வந்த ஒவ்வொரு கடிதமும் அச்சு எண்ணிட்டு திறமை அனுபவமுள்ள ஒருவருடைய கண்காணிப்பில் நிர்வகிக்கப் படும். ’மாவட்ட அலுவலக நடைமுறை நூல்’ என்ற புத்தகம் தபால் வந்தடைந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு கண்ட பின்னர் அதனை பதிவுகள் வைப்பறைக்கு செல்வது வரையிலான விளக்கம் அளிக்கும்.
முடிவு செய்யப்பட்ட கோப்புகள் கூட எத்தனை ஆண்டுகாலம் காக்கவேண்டும் என்று கால நிர்ணயக் குறிப்புடன் வைப்பறைக்கு அனுப்பப் படும். அந்தக் காலக் கெடு முடிந்தபின்னர் அவை அழிக்கப்படும்.
கோப்புகள் மிகவும் முக்கியமானவை மட்டுமே மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கும் ஒப்புதலுக்கும் அனுப்பப் படும். மிகச் சாதாரணமானவை அந்த அந்த அலுவருக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்புக்குட்பட்டவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் ,நேர்முக உதவியாளர்கள் ஒப்புதல் அளித்து தீர்வு காண்பர்.
எடுத்துக் காட்டாக புதியதாக ஒரு சாலை ;ரிங் ரோடு’ புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிடுகின்றது என்போம். உரிய புலத் தணிக்கை மேற்கொண்டு எந்த எந்த சர்வே எண்கள் அடங்கிய நிலங்கள், தனியாருக்கு பாத்தியப்பட்டவை, அரசுப் புறம்போக்கு நிலங்கள் முதலானவை பரிசீலிக்கப் படவேண்டும். புறம்போக்கு நிலங்கள் இருந்தால் அவை சர்வே செய்து சரிபார்க்கப்பட்டபின்னர் நில எடுப்புக்குத் தேவையான அளவு மட்டும் சப்-டிவிஷன் செயப்படும். புலப்படங்கள் தயார் செய்து கொண்டபின்னர் தனியாரிடம் தகவல் தந்து எவ்வளவு நிலம் அரசு கையகப்படுத்த விருக்கின்றது என்பதைக் காட்டி அரசின் கொள்முதல் விலையாக இவ்வளவு தர உத்தேசம் என்பதைத் தெரிவிப்பார்கள். ஏற்றுக் கொண்டு விலையைப் பெற்றுக் கொள்வோர் சம்மதம் தெரிவிப்பர். அரசின் விலை பற்றாக்குறை என்பவர் மேல் முறையீடு செய்து காம்பென்சேஷன், ‘இழப்பீடு க்கு போதிய தொகை பெற்றுக்கொள்வார்கள்.’ திட்டத்திற்கு ஆகும் தொகையைப் பொருத்து கையகப்படுத்தும் அதிகாரம் தனியே அரசாணைமூலம் இன்ன அலுவலர் என்பதை அரசு அங்கீகாரம் செய்யும்.
குறைந்த அளவிலான சிறிய கையகப்படுத்தும் திடத்திற்கு வட்டாட்சியர் நிலையில் நியமனம் செய்வார்கள்.. அதிக அளவில் நிலத்தேவை ஏற்பட்ட நிலையில் துணைக் கலக்டர் அந்தஸ்தில் கையகப் படுத்தும் அலுவலரை நியமனம் செய்வார்கள்.
கையகப்படுத்துதல் பற்றிய விதிமுறைகள் உள்ளன. அவற்றில் எந்த ஒரு பிசகும் இன்றி எந்த ஒரு விடுதலும் இன்றி குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் நிலம் கையகப்படுத்தி உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கப் படவேண்டும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப் பட்ட அதிகாரி பொருப்புடையவர் ஆவார்.
கையகப்படுத்தும் திட்டம் முன்வடிவு தந்து நெடுஞ்சாலைத் துறை வேண்டுகோள் விடுத்துக் கோரிய முதல் கடிதம் தபாலில் வந்த உடன் மேலாளர் அந்தக் கடித்த்தைப் பிரித்துப் படித்தவுடன் கையகப்படுத்தும் பிரிவுக்கு அந்தக் கடிதத்தின் தலைப்பில் இடது ஓரத்தில் எண் அச்சிட்டு அனுபுகிறார். அந்தப் பகுதியின் தலைவர் அதனை சம்பந்தப்பட்ட எழுத்தரின் பதவிப் பெயருக்கான எல்.1. எல்2 எழுத்தர்க்கு அனுப்பி அவர்கள் பெற்றுக்கொண்டமைக்காக அந்த தபால் பதிவேட்டில் சுருக்கொப்பம் செய்கிறார் எழுத்தர். அந்தக் கோப்பு அந்தக் கடிதத்தின் எண்ணின் பெயரால் அழைக்கப்படும். 2345/10 எல்.1 என்பது அந்தக் கோப்பின் பெயராகும்.
எல்.1 அந்தக் கடிதத்தை வாங்கி அவர் கையாளும் தன் பதிவேடு (Personal Register) -இல் பதிந்து கொள்வார். அதாவது அந்தக் கடிதத்தின் பொருள்- ”நிலம் கையகப் படுத்துதல்- மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கிராமம்- புல எண் 13-4 , 6, 9. ,14/2, 3, 5, 19/1 ஆகிய நிலங்களில் 12-கெக்டேர் 12 ஆர்ஸ். கையகப் படுத்துதல்
தொடர்பாக” என்று தன்பதிவேட்டில் பதிவு செய்வர். கோரியிருக்கும் அலுவலரின் பதவிப் பெயர் அவருடைய அலுவலக் கடித எண் நாள் ஆகியவற்றைப் பதிந்து கொண்டு அந்த கோப்பு எண் அருகில் தன் பதிவேட்டின் வரிசை எண்ணையும் எழுத்திவைப்பார் .
கடிதம் கைக்குக் கிடைத்த மூன்று நாட்களுக்குள் அந்தக் கோப்பினை அலுவலரின் பார்வைக்கு வைக்கவேண்டும்.
கோப்பு இரண்டு பகுதியாகக் கையாளப்படுகின்றது.. ஒன்று கரண்ட் ஃபைல், ஒன்று நோட் ஃபைல். எழுத்தர் நெடுஞ்சாலைத் துறைக்குத் தேவையான நிலங்கள் எவை கோரப்பட்டுள்ளன என்பதையும் அந்த நிலங்கள் தொடர்பான விவரங்களையும்(அந்தப் புல எண் நிலத்தின் மொத்த அளவில் எவ்வளவு தேவை, அவை எந்த வகையைச் சார்ந்தவை,அவற்றில் புறம்போக்கு எவை எவ்வளவு, தனியார் பட்டா நிலங்களின் எண், பரப்பு, அதில் தேவை எவ்வளவு) எடுத்து எழுதி மேல் அலுவலருக்கு கோப்பினை அனுப்புவார். மேல் அலுவலருக்கு அனுப்புகையில் எழுத்தர் ஒரு தனித் தாளில் ’குறிப்பு’ (Note) என்று தலைப் பிட்டு கோரிக்கைக்கடிதத்தில் எழுதப்பட்ட விவரங்களின் மேல் விளக்கம் எழுதி இடது ஓரத்தில் (லாண்ட்ரி மார்க்) போன்று தன்னுடைய சுருக்கொப்பமிட்டு, பல கைகள் மாறி ஒவ்வொருவருடைய மெற்குறிப்புடன் செல்லும். அலுவலர் அதைப் பார்த்து தன்னுடைய கருத்தியும் கூறி அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அந்த நோட்ஃபைலில் எழுதி அதே வரிசையில் திரும்பவும் எழுத்தருக்கு வரும் .
எழுதியதைத் திரும்ப எழுதாமல் எழுத்தர் எழுதியிருக்கும் குறிப்பில் சம்பந்தப்பட்ட வரியை அடிக்கோடிட்டு மார்ஜினில் இரத்தினச் சுருக்கமாக ‘சரி- அப்படியே செய்யவும்’ அல்லது ‘இதை மாற்றி இவ்வாறு செய்யவும்’ என அலுவலர் எழுதுவார். அவருடைய அங்கீகாரம் சுருக்கொப்பத்தின் மூலம் உறுதியாகி மேலும் அடுத்தகட்ட நடவடிக்கையாகப் புலத்தணிக்கைக்கு உரிய துறைப் பதிவேடுகளின் சகிதம் இடப்பார்பை நடக்கும்.. அங்கு அவர் புலத் தணிக்கை செய்தவற்றையும் தன் அறிவுரையையும் நோட்ஃபைலில் எழுதி சுருக்கொப்பம் இட்டு எழுத்தருக்கு மீண்டும் வரும். அந்த நிலம் கையகப் படுத்தப்பட்டு நிலம் நெடுஞ்சாலைத் துறையினரின் கணக்கிலிருந்து பணம் பெற்று உரியநபர்களுக்குப் பணம் பட்டுவாடா ஆகி, நிலத்தை ஒப்படைக்கும் வரை அந்தக் கோப்பு தொடர்ந்து இருக்கும். முழுக் கையொப்பம் (Fair copy) யில் மட்டுமே இருக்கும்.அதாவது வெளிச்செல்லும் கடிதங்களில் மட்டுமே முழுக்கையொப்பம் இருக்கும். அந்தக் கடிதத்தில் அப்ரிவியேஷன்ஸ் எதுவும் இருப்பதில்லை.
ஒரு நிகழ்வில் நோட்ஃபைலில் குறிப்பு எழுதி மேல் அதிகாரிக்கு அனுப்பப் பட்டது. கீழே யிருந்து ’சரிகம பதநி’ என்று கீழ் வரிசையின் அனைத்து அலுவலர்களும் சுருக்கொப்பம் செய்திருந்தனர். வ்ருவாய் அலுவலர் அந்தக் குறிப்பின் முக்கியமான கோரிக்கையை அடிக்கோடிட்டு மார்ஜின் ஓரத்தில் (Not approved) என்று எழுதி சுருக்கொப்பம் செய்துவிட்டார்.
மலையென நம்பிக்கை வைத்துக் காத்திருந்த மனுதாரர் நொந்து போய் அலுப்வலகத்டின் முன்வரிசை அலுவலர் ஒருவரைச் சந்தித்து கையூட்டுக் கொடுக்க முன்வர அவர் அந்தக் கொப்பினைப் பெற்று (Not approved) என்று எழுதியிருப்பதை (Note approved) என ஒரு ‘e’ சேர்த்து மனுதாரரைத் திருப்திப் படுத்திவிட்டார்.
அந்த கோப்பினை வழக்கு மன்றமோ அல்லது மேல் முறையீட்டு அலுவலரோ தணிக்கை செய்யக் கேட்பதுண்டு. அவ்வாறு அனுப்பப் படும் போது நோட்ஃபைல் அனுப்பப் படமாட்டாது. கரண்ட் ஃபைல் மட்டுமே போகும்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.
அருமையா இருக்கு. அதுவும் தமிழக அரசுத்துறையில் புழங்கும் பல தமிழ்ச்சொற்களைக் கண்டேன். நன்றாகவே புரிகிறது.
*
சித்திரத்துக்கு நன்றி:http://2.bp.blogspot.
இன்னம்பூரான்
20 04 2013
|
தணிக்கை செய்வதில் தணியா வேகம்: போதுமடா சாமி! ~7 |
Innamburan S.Soundararajan | Sun, Apr 14, 2013 at 5:38 PM | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
To: Innamburan Innamburan | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|