Monday, August 4, 2014

‘நான்’ ஒரு விளையாட்டுப்பிள்ளையா?:3:பனையூர் நோட்ஸ் 2:

பனையூர் நோட்ஸ் 2: ‘நான்’ ஒரு விளையாட்டுப்பிள்ளையா?:3
இன்னம்பூரான்
04 08 2014

இடம் கருதி எழுதினால், தலைப்பை ‘புதுச்சேரி நோட்ஸ்’ என்று மாற்றவேண்டும்.
பொருள் கருதி எழுதினால் அது தேவையற்றது. ஏவல் கருதி எழுதினால், தலைப்பை
‘மனதின் மார்க்கம்’ எனலாம். இப்போதைக்கு, தலைப்பு இருந்து விட்டு
போகட்டுமே. எல்லோரும் இந்நாட்டு ‘உளவியல் வல்லுனர்கள்’ என்பது ஒரு
நெருடலான விஷயம். தச்சனிடம் போய் முடி வெட்டிக்கொள்ளமுடியுமா?

அண்மையில் ஒரு மன நல ஆலோசகர் தொலைக்காட்சியில் அருமையான சில கருத்துக்களை
கூறினார். அதனுடைய பயனை புதுச்சேரிக்கு பயணிக்கும் ஒரு சகபயணியிடம்
கண்டேன். அவளது மகன் பிஸ்கோத்து சாப்பிட்ட பின் அதனுடைய பேக்கிங்கை
குப்பைத்தொட்டியை தேடி அதில் போட்டான். அதை சிலாகித்து நான் பேசியபோது
,தான் அந்த தொலைக்காட்சியை பார்த்ததின் நற்பயனே இது என்றார். பெரிய
விஷயம் ஒன்றுமில்லை. சொன்னதை செய்து காட்டியிருக்கிறார்.. பையன் மனதில்
பசுமரத்தாணியாக பதிந்து விட்டது. சிறிது நேரம் கழித்த பின் ஒரு
ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை ஒரு மனிதர் நழுவவிட்டார். அது உருண்டோடிய
வண்ணம். அந்த சிறுவன், அது மற்றவர்களை காவு வாங்குவதற்கு முன், அதை
எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டான். அம்மா அவனுக்கு முத்தம் கொடுத்து
வாழ்த்தினார். சரி. ஒரு நல்ல தலைவன் உருவாகி வருகிறான் நான்
ஆனந்தப்பட்டேன். பாட்டிலை நழுவ விட்ட மனிதன் காலி பாக்குப்பொட்டலத்தை
வீசி எறிந்தான். சரி. ஒரு சமூகவிரோதி நடமாடுகிறானே என்று கவலைப்பட்டேன்.
உரிமையை நாடும் மனிதன் கடமையை செய்ய பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்பது
பாடம். எந்த பள்ளியிலும் இது எடுக்கப்படவில்லை என்பதால், பெற்றோர்களின்
தலையாய கடமையாகி விடுகிறது.

அடுத்தபடியாக, தன் செயலுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வது. மார்க்கண்டேய
கட்ஜூ சர்ச்சைக்கு உள்ளான மனிதராக இருக்கிறார். அலஹாபாத்தில் அவர்
நீதிபதியாக இருந்த காலத்தில் ஒரு பொதுநல உதவி அவரிடம் நாடினேன். உடனே
கொடுத்து பாராட்டிய அவர் மன்மோஹன் சிங்கை ஒரு அரசியல் கட்சி பாடாய்
படுத்தியதை கூறவும், சில கட்சி தலைவர்கள் பாய்ந்து, பாய்ந்து அவரை
கண்டனம் செய்கிறார்கள். அவர்கள் உள்மனதுக்கு நடந்த விஷயம் அப்பட்டமாக
தெரியும். அதை பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைத்த மாதிரி, மூடி
மெழுகுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அதே மாதிரி, தணிக்கைத்துறை
கூறுவது எல்லாவற்றையும் ஆவணமாக ஒப்புக்கொண்டபின், பல துறைகள் குய்யோ
முறையோ என்று அடித்துக்கொள்கிறார்கள். கேட்டகேள்விக்கு பதில் இல்லை.
அரசியல், சமூகம், சுற்றம், தனித்துவம் ஆகியவற்றில் இத்தகைய போலி
நியாயப்படுத்தல் (Rationalization), சால்ஜாப்பு, மெய்யை பொய்யாகவும்,
பொய்யை மெய்யாகவும் மாற்றி வைப்பது (Fabrification) எல்லாவற்றையும்
அன்றாடம் காண்கிறோம். அதன் தீவினையாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
மக்கள் மன்றமே கட்டைப்பஞ்சாயத்து செய்கிறது!தனிமனிதனின்
மனோவியாதியின்/குறுக்குப்புத்தியின்/ வக்கிரத்தின் கொள்ளுவாய் பிசாசு
தான் இது என்பதில் ஐயமில்லை.

மூன்றாவதாக சமுதாயத்தை குலைக்கும் தனிமனிதனின் மற்றொரு விகாரம் பற்றி,
நீங்களே சொல்லுங்களேன்!
-#-
சித்திரத்துக்கு நன்றி:
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7e/Social_Psychology_Definition_3.jpg/300px-Social_Psychology_Definition_3.jpg
சித்திரம் க்ளிக்கினால் தான் கிடைக்குமாம்.



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

‘நான்’ ஒரு விளையாட்டுப்பிள்ளையா?:3:பனையூர் நோட்ஸ் 2:

பனையூர் நோட்ஸ் 2: ‘நான்’ ஒரு விளையாட்டுப்பிள்ளையா?:3
இன்னம்பூரான்
04 08 2014

இடம் கருதி எழுதினால், தலைப்பை ‘புதுச்சேரி நோட்ஸ்’ என்று மாற்றவேண்டும்.
பொருள் கருதி எழுதினால் அது தேவையற்றது. ஏவல் கருதி எழுதினால், தலைப்பை
‘மனதின் மார்க்கம்’ எனலாம். இப்போதைக்கு, தலைப்பு இருந்து விட்டு
போகட்டுமே. எல்லோரும் இந்நாட்டு ‘உளவியல் வல்லுனர்கள்’ என்பது ஒரு
நெருடலான விஷயம். தச்சனிடம் போய் முடி வெட்டிக்கொள்ளமுடியுமா?

அண்மையில் ஒரு மன நல ஆலோசகர் தொலைக்காட்சியில் அருமையான சில கருத்துக்களை
கூறினார். அதனுடைய பயனை புதுச்சேரிக்கு பயணிக்கும் ஒரு சகபயணியிடம்
கண்டேன். அவளது மகன் பிஸ்கோத்து சாப்பிட்ட பின் அதனுடைய பேக்கிங்கை
குப்பைத்தொட்டியை தேடி அதில் போட்டான். அதை சிலாகித்து நான் பேசியபோது
,தான் அந்த தொலைக்காட்சியை பார்த்ததின் நற்பயனே இது என்றார். பெரிய
விஷயம் ஒன்றுமில்லை. சொன்னதை செய்து காட்டியிருக்கிறார்.. பையன் மனதில்
பசுமரத்தாணியாக பதிந்து விட்டது. சிறிது நேரம் கழித்த பின் ஒரு
ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை ஒரு மனிதர் நழுவவிட்டார். அது உருண்டோடிய
வண்ணம். அந்த சிறுவன், அது மற்றவர்களை காவு வாங்குவதற்கு முன், அதை
எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டான். அம்மா அவனுக்கு முத்தம் கொடுத்து
வாழ்த்தினார். சரி. ஒரு நல்ல தலைவன் உருவாகி வருகிறான் நான்
ஆனந்தப்பட்டேன். பாட்டிலை நழுவ விட்ட மனிதன் காலி பாக்குப்பொட்டலத்தை
வீசி எறிந்தான். சரி. ஒரு சமூகவிரோதி நடமாடுகிறானே என்று கவலைப்பட்டேன்.
உரிமையை நாடும் மனிதன் கடமையை செய்ய பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்பது
பாடம். எந்த பள்ளியிலும் இது எடுக்கப்படவில்லை என்பதால், பெற்றோர்களின்
தலையாய கடமையாகி விடுகிறது.

அடுத்தபடியாக, தன் செயலுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வது. மார்க்கண்டேய
கட்ஜூ சர்ச்சைக்கு உள்ளான மனிதராக இருக்கிறார். அலஹாபாத்தில் அவர்
நீதிபதியாக இருந்த காலத்தில் ஒரு பொதுநல உதவி அவரிடம் நாடினேன். உடனே
கொடுத்து பாராட்டிய அவர் மன்மோஹன் சிங்கை ஒரு அரசியல் கட்சி பாடாய்
படுத்தியதை கூறவும், சில கட்சி தலைவர்கள் பாய்ந்து, பாய்ந்து அவரை
கண்டனம் செய்கிறார்கள். அவர்கள் உள்மனதுக்கு நடந்த விஷயம் அப்பட்டமாக
தெரியும். அதை பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைத்த மாதிரி, மூடி
மெழுகுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அதே மாதிரி, தணிக்கைத்துறை
கூறுவது எல்லாவற்றையும் ஆவணமாக ஒப்புக்கொண்டபின், பல துறைகள் குய்யோ
முறையோ என்று அடித்துக்கொள்கிறார்கள். கேட்டகேள்விக்கு பதில் இல்லை.
அரசியல், சமூகம், சுற்றம், தனித்துவம் ஆகியவற்றில் இத்தகைய போலி
நியாயப்படுத்தல் (Rationalization), சால்ஜாப்பு, மெய்யை பொய்யாகவும்,
பொய்யை மெய்யாகவும் மாற்றி வைப்பது (Fabrification) எல்லாவற்றையும்
அன்றாடம் காண்கிறோம். அதன் தீவினையாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
மக்கள் மன்றமே கட்டைப்பஞ்சாயத்து செய்கிறது!தனிமனிதனின்
மனோவியாதியின்/குறுக்குப்புத்தியின்/ வக்கிரத்தின் கொள்ளுவாய் பிசாசு
தான் இது என்பதில் ஐயமில்லை.

மூன்றாவதாக சமுதாயத்தை குலைக்கும் தனிமனிதனின் மற்றொரு விகாரம் பற்றி,
நீங்களே சொல்லுங்களேன்!
-#-
சித்திரத்துக்கு நன்றி:
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7e/Social_Psychology_Definition_3.jpg/300px-Social_Psychology_Definition_3.jpg
சித்திரம் க்ளிக்கினால் தான் கிடைக்குமாம்.



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

‘நான்’ ஒரு விளையாட்டுப்பிள்ளையா?:3:பனையூர் நோட்ஸ் 2:

பனையூர் நோட்ஸ் 2: ‘நான்’ ஒரு விளையாட்டுப்பிள்ளையா?:3
இன்னம்பூரான்
04 08 2014

இடம் கருதி எழுதினால், தலைப்பை ‘புதுச்சேரி நோட்ஸ்’ என்று மாற்றவேண்டும்.
பொருள் கருதி எழுதினால் அது தேவையற்றது. ஏவல் கருதி எழுதினால், தலைப்பை
‘மனதின் மார்க்கம்’ எனலாம். இப்போதைக்கு, தலைப்பு இருந்து விட்டு
போகட்டுமே. எல்லோரும் இந்நாட்டு ‘உளவியல் வல்லுனர்கள்’ என்பது ஒரு
நெருடலான விஷயம். தச்சனிடம் போய் முடி வெட்டிக்கொள்ளமுடியுமா?

அண்மையில் ஒரு மன நல ஆலோசகர் தொலைக்காட்சியில் அருமையான சில கருத்துக்களை
கூறினார். அதனுடைய பயனை புதுச்சேரிக்கு பயணிக்கும் ஒரு சகபயணியிடம்
கண்டேன். அவளது மகன் பிஸ்கோத்து சாப்பிட்ட பின் அதனுடைய பேக்கிங்கை
குப்பைத்தொட்டியை தேடி அதில் போட்டான். அதை சிலாகித்து நான் பேசியபோது
,தான் அந்த தொலைக்காட்சியை பார்த்ததின் நற்பயனே இது என்றார். பெரிய
விஷயம் ஒன்றுமில்லை. சொன்னதை செய்து காட்டியிருக்கிறார்.. பையன் மனதில்
பசுமரத்தாணியாக பதிந்து விட்டது. சிறிது நேரம் கழித்த பின் ஒரு
ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை ஒரு மனிதர் நழுவவிட்டார். அது உருண்டோடிய
வண்ணம். அந்த சிறுவன், அது மற்றவர்களை காவு வாங்குவதற்கு முன், அதை
எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டான். அம்மா அவனுக்கு முத்தம் கொடுத்து
வாழ்த்தினார். சரி. ஒரு நல்ல தலைவன் உருவாகி வருகிறான் நான்
ஆனந்தப்பட்டேன். பாட்டிலை நழுவ விட்ட மனிதன் காலி பாக்குப்பொட்டலத்தை
வீசி எறிந்தான். சரி. ஒரு சமூகவிரோதி நடமாடுகிறானே என்று கவலைப்பட்டேன்.
உரிமையை நாடும் மனிதன் கடமையை செய்ய பயிற்சி அளிக்கப்படவேண்டும் என்பது
பாடம். எந்த பள்ளியிலும் இது எடுக்கப்படவில்லை என்பதால், பெற்றோர்களின்
தலையாய கடமையாகி விடுகிறது.

அடுத்தபடியாக, தன் செயலுக்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வது. மார்க்கண்டேய
கட்ஜூ சர்ச்சைக்கு உள்ளான மனிதராக இருக்கிறார். அலஹாபாத்தில் அவர்
நீதிபதியாக இருந்த காலத்தில் ஒரு பொதுநல உதவி அவரிடம் நாடினேன். உடனே
கொடுத்து பாராட்டிய அவர் மன்மோஹன் சிங்கை ஒரு அரசியல் கட்சி பாடாய்
படுத்தியதை கூறவும், சில கட்சி தலைவர்கள் பாய்ந்து, பாய்ந்து அவரை
கண்டனம் செய்கிறார்கள். அவர்கள் உள்மனதுக்கு நடந்த விஷயம் அப்பட்டமாக
தெரியும். அதை பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைத்த மாதிரி, மூடி
மெழுகுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அதே மாதிரி, தணிக்கைத்துறை
கூறுவது எல்லாவற்றையும் ஆவணமாக ஒப்புக்கொண்டபின், பல துறைகள் குய்யோ
முறையோ என்று அடித்துக்கொள்கிறார்கள். கேட்டகேள்விக்கு பதில் இல்லை.
அரசியல், சமூகம், சுற்றம், தனித்துவம் ஆகியவற்றில் இத்தகைய போலி
நியாயப்படுத்தல் (Rationalization), சால்ஜாப்பு, மெய்யை பொய்யாகவும்,
பொய்யை மெய்யாகவும் மாற்றி வைப்பது (Fabrification) எல்லாவற்றையும்
அன்றாடம் காண்கிறோம். அதன் தீவினையாக குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
மக்கள் மன்றமே கட்டைப்பஞ்சாயத்து செய்கிறது!தனிமனிதனின்
மனோவியாதியின்/குறுக்குப்புத்தியின்/ வக்கிரத்தின் கொள்ளுவாய் பிசாசு
தான் இது என்பதில் ஐயமில்லை.

மூன்றாவதாக சமுதாயத்தை குலைக்கும் தனிமனிதனின் மற்றொரு விகாரம் பற்றி,
நீங்களே சொல்லுங்களேன்!
-#-
சித்திரத்துக்கு நன்றி:
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7e/Social_Psychology_Definition_3.jpg/300px-Social_Psychology_Definition_3.jpg
சித்திரம் க்ளிக்கினால் தான் கிடைக்குமாம்.



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, August 1, 2014

பெருங்களத்தூர் நோட்ஸ் 1 அலை பாயுதே !

பெருங்களத்தூர் நோட்ஸ் 1
அலை பாயுதே !
இன்னம்பூரான்
01 08 2014

தர்மமிகு சென்னை நாலாபக்கமும் விரவி வருவதால், வண்டலூர் மிருக கண்காட்சி
சாலைக்கு அருகில் உள்ள பெருங்களத்தூர் என்ற மனித கண்காட்சி சாலையின்
மவுசு ஏறி வருகிறது. புதிய பெருங்களத்தூரின் பிறவி வேறு. அருகே கானகம்
வேறு மெருகேற்றுகிறது. சுற்று வட்டாரத்தில் வேங்கை நடமாடினாலும், இங்கு
புகலடைந்தேன். கிட்டத்தட்ட தமிழில் நாற்பது நூல்கள் எழுதிய சான்றோன்
ஒருவரின் நட்பு கிடைத்தது. அவர் ஜே.கே.யின் தத்துவங்களை பற்றி ஒரு
அருமையான நூல் படைத்திருக்கிறார். அதை படித்துக்கொண்டிருக்கிறேன்.இது வரை
எழுதியதற்கு அவருடைய முன்னுமதி இருப்பதால், எழுதிவிட்டேன்.  அவருடன்
அளவளாவுவது ஒரு இனிய அனுபவம்.

அவரும் நானும் பல விஷயங்களை பரிமாறிக்கொண்டோம். அத்தருணம், என்னுடைய
ஜனவரி 1953ம் வருட குறிப்பு ஒன்று தற்செயலாக கிடைத்தது. அதில் ‘The
Psychology of Study’,வீணடிக்கப்பட்ட நேரம், ஆனந்த விகடனில் தேவன் எழுதிய
கதையை பற்றிய விமர்சனம்,அரிஸ்டாட்டில், என்னுடைய சிநேகிதி, அண்ணல்
காந்தி, சர்தார் படேல், கன்ஃபூஷியஸ் எல்லாரும் உலவுகிறார்கள். இருவரும்
இதை படித்துவிட்டு, நினைவலைகளில் மிதந்தோம். அதன் நற்பயனாக, “Master
Kong” (Chinese: Kongzi), Confucius எனப்படும் சீன தத்துவ மேதையிடம்,
எங்கள் சிந்தனை அலை பாய்ந்தது. நண்பர் வயதானவர்.ஓய்வெடுக்க சென்று
விட்டார். கன்ஃபூசியஸ்ஸிடம் வசமாக மாட்டிக்கொண்டேன். தமிழில் அவரை பற்றிய
செய்திகள் குறைவாகத்தான் காணப்படுகின்றன. சாக்ரட்டீஸ் மாதிரி அவரும்
பெரிதும் புகழப்பட்டவர், நிந்திக்கப்பட்டவர்;அவரே தெய்வம்;அவரே சாத்தான்!
எனினும், உலகமெங்கும் சிந்தனைக்களங்களில் இன்றளவும் பேசப்படும் அந்த
ஞானியை பற்றியும் அவருடைய சூத்திரங்களை (Analects (Chinese: Lunyu)
பற்றியும் நாம் அறிந்தது சொற்பம் என்ற தோற்றம். எனவே, அபரிமிதமான
துணிவுடன், அவரை பற்றிய இந்த தொடரை துவக்கியுள்ளேன் பார்க்கலாம்!

இங்கு ஆசான் எனப்படுவது அவரே.அரசாங்கமும், பொது நடப்புகளும் என்ற
தலைப்பில் அவர் எழுதிய சூத்திரங்கள் இந்திய சமுதாய முன்னேற்றத்துக்கு
பொருத்தமானவை. இன்றைக்கு முதலாவது:

‘ஆயிரம் தேர்கள் ஆடி வரும் நாட்டில், கண்ணியம், சிக்கனம், கொடை,
காலத்துக்குகந்த வேலை வாய்ப்பு, தரமுயர்ந்த வணிகம் ஆகியவற்றின் மீது
தீவிர கவனம் தேவை என்று ஆசான் அவர்கள் கூறினார்.

‘The Master said: In ruling a country of a thousand chariots there
should be scrupulous attention to business, honesty, economy, charity,
and employment of the people at the proper season.’

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


-
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

சிரிச்சு மாளலெ! ~10

சிரிச்சு மாளலெ! ~10


இன்னம்பூரான்
01  08 2014

சமீபத்தில் அழகர் கோயில் போயிருந்த போது அங்கு வானர மேலாண்மையை கண்டு மகிழ்ந்தோம். ஓடோட, என் புத்திரி அவற்றை படம் பிடித்துக்கொண்டாள். அனுப்பவதில் தான் தொய்வு. அமெரிக்கா போன பிஸி தான். இன்றைய செய்தி ஒன்றை பார்த்து விட்டு என் கவலைகள் பறந்தோடின. தனியாக இருக்கும்போதே சிரித்துக்கொண்டிருக்கிறேன்! கொஞம் லூசு தான். என்ன பண்றது?

மஹா கனங்கள் - ராஹுலிலிருந்து மோடி வரை - வாழும் டில்லியில் ஸ்க்ரீச் என்று வானர இசை கேட்டால் அது மந்தியில்லை. கூலிக்கு  ‘ஸ்க்ரீச்சும்’ நரோத்தமர்கள் (சொல்லிப்பிட்டேன்; நான் யாரையும் குறிப்பிடவில்லை.) குரங்குகளை விரட்டுகிறார்களாம்! ஆனானப்பட்ட வெங்கையா நாயுடு அவர்கள் நேற்று ராஜ்ய சபையில் தாக்கல் செய்த அறிக்கை படி மனித வானரங்கள் வானர வானரங்களை அச்சுறுத்தி விரட்டுகிறார்களாம். நம்ம பனையூர் பேட்டைக்கு அருகில் வேங்கை புலி தரிசனம் கொடுத்ததால், பெருங்களத்தூருக்கு  பறந்தோடி வந்தேன். இங்கும் ஒன்று சுத்துகிறதாம். இனி, காலை 4.00 மணிக்கு உலாவ செல்லாமல் 4.01க்கு போகவேண்டும். கையில் ஒரு தடி வேறே. இதை விடுங்கள். யானை கூட்டங்கள் வந்து கந்து வட்டி வாங்கி நட்ட கரும்பு தண்டுகளை அபேஸ் செய்து விடுகிறதுகளாம். அவங்க பேட்டையில் அனாயசமாக, தரகர்களுக்கு அழுது விட்டு, குடித்தனம் போன விபசாயிகள் பட்டாஸ் வெடித்து அவற்றை துரத்த முனைகிறார்களாம். சாமி! டில்லிக்கு போங்க. நம்ம பெரிசுகள் அங்கே வானர விரட்டல் மன்னர்கள். சிலரை புலி வேஷம் போட்டுக்கொண்டு இங்கே வரச்சொல்லுங்கள். நான் காலாகாலத்தில் வாக் போக செளர்யமாக இருக்கும். ஆனை வேஷம் எப்டிப் போட்றது? நம்ம க்ரூப்லெ குண்ட்ன்ஸ் இல்லையே. எதற்கும் பிள்ளையாரப்பனை துணைக்குக் கூப்பிடவேண்டாம். அவர் அந்தப்பக்கம். உங்க கற்பனை யானையை தட்டி எழுப்புங்கள். பல தீர்வுகள் கிடைக்கும். சில பைத்தியக்கார பரிந்துரைகள்:
  1. ஆனைக்குட்டியை அபேஸ் பண்ணி கொண்டுவந்து விட்டு ப்ளேக்மைல் செய்யலாம்; அதற்குள் ஆனைக்குட்டி உம்மை மோதி மிதித்து விடும்.
  2. பட்டாஸ் வெடித்து விரட்டலாம். நம்ம இந்திய பட்ஜெட் மாதிரி புஸ்வாணமாக அது போய்விட்டால், கரும்பும் போச்சு, வீட்டுக்கூரையும் போச்சு.
  3. ‘கும்கி’ வைத்து விபீஷண சரணாகதி அடையச்சொல்லலாம். அந்த யானைக்கும் உருண்டை சாதம் கொடுக்க ஐவேஜி இருக்கா?
  4. நடக்ககூடிய ஒரு வழி: ஒரு எலிக்கு பயிற்சி கொடுத்து யானையின் காதில் புகுத சொல்லலாம். ஆனால் ஆனையுடன் எலியும் போய்விடும்! ஒரு எலிப்பட்டாளம் வளர்த்துக் கொள்க.
  5. கரடி வந்தா என்ன செய்வது? யான் அறியேன். மதஎசுஇந்திரனை கேட்டால், தீர்வு கிடைக்கலாம்.
-#-
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, July 29, 2014

நெடுநல்வாடை 6 :பனையூர் நோட்ஸ் 6

பனையூர் நோட்ஸ் 6


இன்னம்பூரான்
29 06 2014

நெடுநல்வாடை  6
‘...பல்வேறு மலர்கள் கலந்து பூத்திருக்கும் அகன்ற சோலையில், குளிர்ச்சியான குருந்த மரக்கிளைகளின் குருத்துகளில் இருந்து மழைத்துளிகள் இடையறாது விழுந்து கொண்டேயிருந்தன...’
(தொடருகிறது)
புல்லின் மீது உறையும் பனித்துளி மிருதுவானது; மாசற்றது; மென்மையும் வெண்மையும் கலந்த ஒரு ரசவாதம். இயற்கையின் கவின்கலை. நெடுநல்வாடையின் மாக்கள் தெருவில் அலைந்து திரியும் காட்சிக்கு முன் சோலையின்பம் காண்போமே! மழைத்துளியின் படைப்புத் தானே இந்த சோலை.
நாம் குறுந்தொகையில் வரும் சோலைகளையும், கிட்கிந்தை மலை, பள்ளத்தாக்கு, கானகங்களில் ஏறி இறங்கி, ஆச்சாமரங்களையும், சந்தனமரங்களையும் பார்த்து மகிழ்ந்த ராமலக்ஷ்மணர்களையும், மஹாகவி பாரதி குயில்பாட்டு எழுதிய மாந்தோட்டத்தையும் (அது தற்போது இல்லையாம்.) ஏதோ தென்னகத்தில் எஞ்சியிருக்கும் தேக்கடி, முன்னார், வால்பாறை,முதுமலை, கபினி கானகங்களை நினைத்துக்கொள்ளலாம். என் பங்குக்கு, ஸிமிலிபால்,ஸாஸன்கிர், ராஜாஜி பார்க், கன்னா பார்க் போன்றவற்றை பற்றி சில வரிகள் எழுதுகிறேன்.
அஞ்சுவது அறியாது , அமர் துணை தழீஇ
நெஞ்சு நப்பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய,
மை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும்
சேய  அம்ம , இருவாம் இடையே
மாக் கடல் திரையின் முழங்கி , வலன் ஏர்பு
கோட்  புலி வழங்கும் சோலை

எனைத்து என்று எண்ணுகோ முயக்கிடை மலைவே 

- குறுந்தொகை பாடல் 237. பாலை தலைவன் கூற்று


கானகத்தே மவுனம் நிலவும் என்று தான் நகரவாசிகள் நம்புகிறார்கள். நீங்கள் ஐந்து நிமிடங்கள் கூட கானகத்தில் நின்றாலும், ஜீவன்களின் வாழ்வியலை கண்ணார காண்பீர்கள். ஒரு சத்தம், பல சத்தங்களின் கோரஸ் ஓயாமல் அல்லும் பகலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். மவுனம் கூட ஒலிக்கும். அவற்றின் மிக்ஸ்-அப் தனை இனம் கண்டு பிரித்துப் பார்த்தால் நாம் புரிந்துகொள்ளக்கூடிய  பிராணிகளின் தற்காப்பு கலை அதிசயத்தை சொல்லி மாளாது. நல்ல பாம்பு சீறிக்கொண்டு வந்து எச்சரிக்கும். மேகமூட்டம் கண்டு மயில் ஆடும். மான்கள் அமைதியாக மேய்ந்தாலும், குரங்கு ‘புலி வருகிறது’ என்று அதற்கான பிரத்யேக ஒலி கொடுத்து எச்சரித்தால், மயிலாடுதற்கு மசியாமல் மான்கள் பாய்ந்தோடி விடும். வண்டினம் ஒலிப்பதில் எத்தனை ‘ச ரி க ம ப த நி ஸ ‘ சரளி வரிசை! 

பாலைத்தலைவனுக்கு சற்று தொலைவில் நிற்கும் தலைவியை தழுவ ஆசை. யாருக்குத்தான் இருக்காது? தடை யாதெனில், அது இடையே அடர்ந்து இருக்கும் புதர் மண்டிய காடு. அதை ‘கடல் திரையின் முழங்கி , வலன் ஏர்பு கோட்  புலி வழங்கும் சோலை.’ என்கிறார், புலவர். கோரஸ் சத்தம். புலி உலவும் சோலை. அஞ்சாமல்  இருக்க முடியுமா? அவர்களின் காதலுக்கு தொந்தரவு செய்யாமல், வேறு ஒரு சோலையும், நீரோடையையும் காண்போம்.

79. பாலை - தலைவி கூற்று 
கான யானை தோனயந் துண்ட 
பொரிதாள் ஓமை வளிபொரு நெடுஞ்சினை 
அலங்கல் உலவை யேறி ஒய்யெனப் 
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும் 
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச் 
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக்கு 
ஒல்லேம் என்ற தப்பற்குச்
சொல்லா தகறல் வல்லு வோரே. 
-குடவாயிற் கீரத்தனார். 

அலர் தூவுவது ஊராரின் இயல்பு. ஊரில் உள்ளவர்கள் கண்டபடி பேசி அவர்கள் வாரி இறைக்கும் அவதூறுக்கு பயந்தால் காதலும் காமமும் வெளிக்காட்ட முடியாமல் குறைந்து பின் மறைந்துவிடும். அதற்காக எவன் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று கர்மமே(காமமே) கண்ணாக இருந்தால் அனைவர் முன்னிலையில் வெட்கித்தலைகுனியும் நிலையும் ஏற்பட்டுவிடக்கூடும். எப்படி பெரிய யானை தன் தும்பிக்கை கொண்டு முறித்த மரக்கிளை, நிலத்திலும் விழுந்து தொலையாமலும், மரத்திலும் ஒட்டாமலும் ஊசலாடுமோ- ... ெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ...’ - அப்படித்தான் அவர் நினைவால் வாடும் என் உடம்பும் உள்ளது தோழி..!
காதலையும் காமத்தையும் மறக்கவும் முடியாமல், மறைக்கவும் முடியாமல் போன தன் நிலையை தோழிக்கு கூறுவதாக அமைந்த இந்த வரிகள்...
ஆலந்தூர் கிழார் என்ற புலவரால் எழுதப்பட்ட குறுந்தொகைப் பாடல்...

’பெளவை அஞ்சின் காமம் எய்க்கும்
எள் அற விடினே உள்ளது நாணே
பெருங் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை ஒசியல் அற்றே
கண்டிசின், தோழி! அவர் உண்ட என் நலனே
.’
குறுக்கே (குறுந்தொகை) புகுந்து நெடுக (நெடுநல்வாடை) வருகிறோம், தெருவில் திரியும் மக்களைப்போல !
தெருக்களில் சுற்றித்திரியும் மக்கள்
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்
படலைக் கண்ணி பரு ஏர் எறுழ் திணி தோள்
முடலை யாக்கை முழு வலி மாக்கள்
வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலைத் தண் துளி பேணார் பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர  (29 – 35)
அந்த பழமையான நகரத்தின் (மூதூர்) வீதிகள் ராஜபாட்டைகளாம்; அவை அகண்ட காவேரி போல நதியுருவம் கொண்டனவையாம். அங்குண்டாம் மாட மாளிகை, ஏழு மாடி உப்பரிகைகளாம். அவை வானுற உயர்ந்தவையாம். [கடும் உழைப்பு, உடற்பயிற்சி ஆகியவற்றால்] உடல் வலிமை பெற்று திடகாத்திரமான புஜங்களுடன் பூமாலை அணிந்த ஆணழகர்கள் மொந்தை மொந்தையாக தேறல் (கள்) அருந்தியபடி காலம் போக்கினார்களாம். நீங்கள் மொந்தை கள் பார்த்திருக்கிறீர்களோ, பருகியதை சொல்ல துணிவு இல்லாவிடினும்! ‘மது! ‘மது! ‘மது! சொல்லே அழகு. லாகிரியோ மயங்கிய அழகு. பருக, பருக, உன்மத்தம் ஏறுதடி. நிலை தடுமாறுதடி. நம்மில் அநேகருக்கு அமிதா பச்சனை தெரியும். மருமகப்பெண் கண்ணழகி ‘ஐஸ்’ ஐஸ்வர்யா ராய்யை தெரியும். எல்லாம் தொலைவிலிருந்து தான். ஆனால் அவருடைய தந்தை ஹரிவம்சராய் ஶ்ரீவத்ஸவா ’பச்சன்’ அவர்களை பற்றி சிலருக்குத்தான் தெரியும். அவர் ‘மதுஷாலா’ என்ற அற்புதமான கவிதையை படைத்தார். அதிலிருந்து முதல் இரண்டு பாக்கள்:
मधुशाला



मृदु भावों के अंगूरों की आज बना लाया हाला,
प्रियतम, अपने ही हाथों से आज पिलाऊँगा प्याला,
पहले भोग लगा लूँ तेरा फिर प्रसाद जग पाएगा,
सबसे पहले तेरा स्वागत करती मेरी मधुशाला।।१।

प्यास तुझे तो, विश्व तपाकर पूर्ण निकालूँगा हाला,
एक पाँव से साकी बनकर नाचूँगा लेकर प्याला,
जीवन की मधुता तो तेरे ऊपर कब का वार चुका,
आज निछावर कर दूँगा मैं तुझ पर जग की मधुशाला।।२।
அது மற்றொரு கவிதை. பார்க்கலாமா? 
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி: http://upload.wikimedia.org/wikipedia/commons/a/a4/Ara_macao_-_two_at_Lowry_Park_Zoo.jpg

Saturday, July 26, 2014

தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்-தமிழும் விருதுகளும் -

தமிழும் விருதுகளும் - தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்

இன்னம்பூரான்
26 07 2014
விருது வழங்குவது சான்றோர்களின் பெயர்களுக்கு தண்டியலங்காரம் போல் அணி அணிவித்து அழகு பார்க்கும் நற்பண்பு. தமிழ்த் தென்றல் என்றால் திருவாரூர் கல்யாண சுந்தரனார் அவர்கள் (அவர் விருப்பபடி சாதிப் பெயர் இல்லை) மட்டுமே. பாவேந்தர் என்றால் பாரதிதாசன் அவர்கள் தான். சிலம்புச் செல்வர் என்றால் ம.பொ.சிவஞானம் அவர்கள். சொல்லின் செல்வர் என்றால் குழந்தை கூட அது ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களைக் குறிக்கும் என்று சொல்லும். அண்ணாதுரை அவர்களும் பேராசிரியர் மு.வரதராசனார் அவர்களும் நமது பெர்னாட்ஷாவாகப் போற்றப்பட்டனர். நகரத்தார் சமூகத்தில் யாருமே கொடை வள்ளல் அழகப்ப செட்டியார் அவர்களைப் பெயர் சொல்லிக் குறிப்படுவதில்லை. ‘பார்-அட்-லா’ என்றால் அவர் மட்டுமே. ‘தமிழ்த் தாத்தா’ போன்ற ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால், இந்தக் கட்டுரையின் நோக்கம் அது அல்ல.
விருது என்று சொல்வதை விட, இவற்றை எல்லாம் அடைமொழி எனலாம். அரசாங்கம் வழங்குவதை ‘விருது’ என்பதே சாலத் தகும். மகாத்மா காந்திக்கு விருது கொடுத்தால் அது அரசுக்குத்தான் பெருமை சேர்க்கும். அந்த மாதிரி அமைவதும் உண்டு. மாறாக, ‘ராவ் பகதூர்’ ‘கான் பகதூர்’ போன்ற ஆங்கிலேய அரசின் சிபாரிசுகள் பொறுத்துக்கொள்ளப்பட்டனவே தவிர, பாராட்டப்படவில்லை. அந்த விருதுகள் விருதாவாகத்தான் கருதப்பட்டன. ‘சர்’ எனப்படும் கலோனிய ‘பாரத ரத்னா’ கூட, ‘மயிலை முனிபுங்கவர்’ எஸ். சுப்ரமணிய அய்யர், ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெருந்தகைகளால் உதறப்பட்டது. எனினும், ‘மயிலை முனிபுங்கவர்’, ‘குருதேவ்‘ போன்ற அடைமொழிகள் சாசுவதம் அடைந்தன. ஆக மொத்தம், அடைமொழிகளும் விருதுகளும் இறவாவரம் பெறுவது, மக்களின் ஆதரவைப் பொறுத்து அமையும். பீடிகை முற்றியது.
இந்தப் பின்னணியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110இன் கீழ் இன்று நமது முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் ‘... சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்பும் ஒருவருக்கு ஆண்டுதோறும் இளங்கோவடிகள் விருதும் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடு படும் ஆர்வலர்களைக் கண்டறிந்து, மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 32 பேருக்குத் தமிழ்ச் செம்மல் விருதும் வழங்கப்படும்...’ என்று அறிவித்து,’கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி’ என்று தமிழரின் பழம் பெருமையைப் பற்றி புகழ்ந்து பேசும் புறப்பொருள் வெண்பா மாலையை முன்னிறுத்தி, ‘யாமறிந்த மொழிகளிலே’ நிகரற்ற தமிழ் மொழிக்குப் பெருமை சேர்ப்பதிலும், தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்தவர்களைக் கௌரவிப்பதிலும் சிறப்பிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டதிற்குப் புகழாரம் சூட்டத்தான் வேண்டும்.
தமிழார்வலர்களுக்கு மகிழ்வும் நிறைவும் தரும் செய்தி இது; தமிழார்வம் கூட்டும் தன்மை உடையது. தற்காலம் வழங்கப்படும் விருதுகளை அதிகரித்து, தமிழ் மொழியின் சிறப்புக்கு மேலும் சிறப்பு சேர்க்க விழைந்ததுடன் நிற்காமல் தன்னுடைய அணுகுமுறைக்கு இணங்க, செயலில் இறங்கிய முதல்வர் அவர்களை வாழ்த்தி, ஊக்கம் அளிப்பது நம் கடமை. உலகில் பல பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் இதை வரவேற்பர் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. இதே அலைவரிசையில் தமிழுலகமும் சமுதாயமும் தமிழ் வளம் பெற, அடுத்தடுத்துப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
என்னுடைய ஆய்வின் படி கலோனிய அரசு 18 / 19 நூற்றாண்டுகளில் செய்த தமிழ்ப் பணி, 1947க்குப் பிறகு தணிந்துவிட்டது. 18ஆம் நூற்றாண்டில் கலோனிய துரைத்தனத்தாரால் உயர்நிலைப் பள்ளிகளில் படிக்க அமைத்த தமிழ்ப் பாடப் புத்தகம் ஒன்று உளது. அத்துடன் ஒப்பியல் செய்தால், தற்காலப் பட்டப் படிப்பின் தரக் குறைவு, வெள்ளிடை மலை. தமிழை ஆட்சி மொழியாகக் கொணர்வது பற்றி, விடுதலை பெற்ற இந்தியாவில் பேச்சுத்தான் அதிகம். செயல்பாடு இன்று வரை இல்லை. 
1868ஆம் ஆண்டு கலோனிய அரசு தமிழில் ஆங்கிலேய கலெக்டருக்குத் தாசில்தார்களால் எழுதப்பட்ட மடல்களை ஐ.சி.எஸ். அதிகாரிகளுக்குப் பாடமாக அமைத்தது. இஸ்லாமிய தாசில்தார், வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறார். அந்தணராகிய அதிகாரி, உருதுச் சொற்களை இயல்பாகக் கையாளுகிறார். அந்த அளவுக்குச் சமன்படுத்தப்பட்ட தீவிரம், 1947க்குப் பிறகு காணக் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் தொலைநோக்குப் பார்வையில் 1940இலேயே அண்ணா அவர்கள் தமிழின் இறங்குமுகத்தைப் பற்றி மனவலியுடன் பேசியிருக்கிறார். அவருடைய தம்பிகள் அதைப் பொருட்படுத்தவில்லை என்று தான் தோற்றம் என்பதை வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறேன். 
வெப்துனியா மூலம் நம் முதல்வரிடம் நான் அவையடக்கத்துடன் முன்வைக்கும் வேண்டுகோள்: 
"தயை செய்து இன்றே தமிழை ஆட்சி மொழியாக அறிவித்து, குஜராத்தில் 1960களிலேயே குஜராத்தி ஆட்சி மொழியாக நிலவிய வகையில், அமலுக்குக் கொண்டு வாருங்கள். பள்ளி / கல்லூரிகளில் / பல்கலைக்கழகங்தமிழும் விருதுகளும் - தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்
களில் தமிழ்ப் படிப்பின் தரத்தை உயர்த்தி, தமிழ்ப் புலமையை வளர்க்கவும் பல நாடுகளில் வாழும் தமிழர் கூட்டத்தின் தணியா ஆர்வம் அளவில் அடங்காது. நாள்தோறும் உலக மேடையில் தமிழன்னை வணங்கப்படுகிறாள். எனவே அவர்களையும் தேர்வடம் பிடிக்க அழையுங்கள்."
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, July 24, 2014

கொலைகார பாவிகளா!

கொலைகார பாவிகளா!
இன்னம்பூரான்
24 07 2014 
அன்பின் ஶ்ரீவித்யா, தும்மா விஷ்ணு, ஸ்ருதி, சரத், வஹீத், ரஜியா, நீருடி வம்ஷி, சிந்தாலா திவ்யா, சிந்தாலா சரண், வித்யா, கோலா மஹேஷ், சிந்தாலா சுமன், மேலும் உங்கள் சகபாடிகள் எட்டு பேர்,
நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். மண்டை வெடித்து, மூளை சிதறி, கைகால் உடைந்து, குடல் பிதுங்கி, குருதி வெள்ளத்தில் மூழ்கி செத்துப் போய்விட்டீர்கள். ஆம். கொலை செய்து விட்டார்கள். நாசமா போற கைபேசியில் பேசிக்கொண்டே, உங்கள் பஸ்ஸை ஓடும் ரயிலில் தலை கொடுத்து, உம்மையெல்லாம் கொன்று குவித்து, தன்னையும் பலி கொடுத்தார் வண்டி ஓட்டுனர் பிக்ஷாபதி கவுட். அப்பனும் ஆத்தாளும் வவுத்திலும் வாயிலும் அடித்துக்கொண்டு அழுகிறார்கள். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். அமைச்சர்களும் அதிகாரிகள் படையெடுத்து வந்து பிலாக்கணம் பாடுவார்கள், மூக்கொலியால். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, பிலாக்கணம் பாடினாலும், நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். படுகாயம் அடைந்த 20 சகபாடிகளில் எல்லாரும் பிழைக்கவேண்டும் என்று தெய்வத்துடன் கலந்து விட்ட உங்களிடம் வரம் கேட்கிறோம். காலை பிடித்து கெஞ்சுகிறோம். பேச்சுக்கு சொன்னேன். உங்கள் கால்கள் தான் உடைந்து மூலைக்கு ஒன்று கிடக்கின்றனவே. உங்கள் பள்ளிக்கூடமாகிய தூப்ரான் காக்காத்தியா டெக்னோ பள்ளியில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்வார்கள். குழந்தைகள் அழும். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். அரசு ஓடி வந்து அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் காசு கொடுப்பார்கள். ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். இதழ்களில் உரத்த குரலில் வாதம் புரிவார்கள். ஆனால், ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள். கனம் கோர்ட்டார் மன்றங்களில் ஜவ்வு மிட்டாய் மாதிரி இழுத்தடிக்கும் வழக்குக்கள் நடக்கும். ஆனால், ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள்.
நான் பச்சாதாபத்தினால் இதெல்லாம் சொல்லவில்லை. நான் சொல்வதெல்லாம் உண்மை. கும்பகோணம் பள்ளியில் தீயில் பிஞ்சுகள் கருகி செத்துப்போய் பத்து வருஷம் ஆச்சு. உடனே தீ வைத்து உங்களையெல்லாம் கொளுத்தினாங்களே தவிர, கேசு நடக்குது. வாரத்துக்கு ஒரு ஆழ்கிணறு பலி. குழந்தைகளையும், பெண்களையும் கொல்லும் பாரத நாட்டில் ஈவிரக்கம் கிடையாது. கீழ்வெண்மணியில் உயிருடன் தீ மூட்டினார்களே. அசட்டை உண்டு.
நண்டேட்- செகந்திராபத் ரயில் ஏற்கனவே நான்கு மணி தாமதம். உங்கள் பஸ் ஓட்டுனரை கெஞ்சினீர்களே. கேட்டாரா? ரயிலை முந்தணும், காவு கொடுத்தாலும். அது தான் அவருடைய இலக்கோ? முந்திட்டார். ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு உங்கள் பஸ் இழுத்துச்செல்லப்பட்டதாமே. என்னத்தைச் சொல்ல !
‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்’, நீங்கள் ஒருவரும் திரும்பி வரமாட்டீர்கள். செத்துப் போய் விட்டீர்கள்.
இது மசியல்ல. உலர்ந்த உங்கள் குருதி.
சித்திரமும் வேண்டாம். மண்ணங்கட்டியும் வேண்டாம். அடுத்த அசட்டை கொலைக்களமும் நடக்கும் என்ற அச்சம் மேலோங்கி நிற்கிறது.

-#-

Wednesday, July 23, 2014

பனையூர் நோட்ஸ் 2: ‘நான்’ ஒரு விளையாட்டுப்பிள்ளையா?:2




பனையூர் நோட்ஸ் 2: ‘நான்’ ஒரு விளையாட்டுப்பிள்ளையா?:2



இன்னம்பூரான்
24 07 2014

“... தொலைக்காட்சியில் காணக்கிடைக்கும் மனோநல தலையீடுகளை (அதுவும் பெண்களை ‘ங’ போல் வளைய சொல்பவை) கண்டு அஞ்சுகிறேன். நமது மடலாடலிலும் அது தென்படுகிறது. மனோநலம் என்ற துறை சாமான்யமானது இல்லை...”. 

(தொடரும்)

புலன் பெயரும் நிலையில் உள்ள இந்த நீண்ட தொடர் ‘நான்’ என்ற சிந்தனையின்/குழப்பத்தின் வரத்துபோக்குக்களை முன் எடுத்து வைக்க முயலும். முதற்கண்ணாக, மனித இனத்தின் மன அழுத்தம் (depression) என்பதை பற்றி சில வரிகள். அது ஒரு அபூர்வமான மனோவியாதி அல்ல.
எந்த சமூகத்திலும் பத்தில் ஒரு பங்கு மக்கள் இத்தகைய பாதிப்பு அடைந்து இருக்கிறார்கள் என்று சமீபகால (2013) பிரிட்டீஷ் ஆய்வு ஒன்று கூறுகிறது. முதற் பலிகடா வாழ்வின் தரம். அடுத்த படியாக சுற்று வட்டாரத்தில் உள்ள மற்றவர்களை ஏதோ ஒரு வகையிலாவது பாதிக்கிறது.  மேலும் ஒரு கொடுமை,  அதன் மறைமுகம். ‘நான்’ மன அழுத்தத்தினால் பாதிக்கப்படாதவன் (ள்) என்று தான் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். போதாக்குறைக்கு, anxiety என்று சொல்லப்படும் கவலை/வியாகூலம்/ விசாரம் மன அழுத்தம் என்ற வேடம் பூண்டு வருகிறது. ‘ஏக்கமும்’ (stress) பகுவேடதாரி. பத்து தலை ராவணனைப் போல மன அழுத்தமும், மன அமுக்கமும், கவலையும், ஏக்கமும் ஒன்று கூடி வந்தால், வேறு வினை வேண்டாம். அவை தனித்துத் தனித்து வந்தாலும், ‘மன அழுத்தம்’ ‘கவலையாகவும், ‘கவலை’ ஏக்கமும் ஆக வந்து  பாடாய் படுத்தலாம்.

இதையெல்லாம் மேலெழுந்தவாரியாக ‘நான்’ என்ற தனக்கே பூட்டிக்கொள்வது எளிது, Jerome.K.Jeromeயின் கற்பனயில் உதித்த Three men in a Boat போல! இங்கிலாந்தில் முப்பது சதவீத மக்கள் கவலைப்பட்டு, கவலைப்பட்டு மாய்ந்து போகிறார்கள் என்று அந்த ஆய்வு கூறுகிறது. ஒன்று கெட ஒன்று என்ற சங்கிலித்தொடர் அபாயம் வேறு இருக்கிறது. ஏக்கம் கவலையாக மாறி அது மன அழுத்தமாக உருவெடுத்து , பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக, கொம்பேறி மூக்கன் போல் ஏறி, ஆளைக் குலைத்து விடலாம். 

மனோநல ஆலோசகர் [Psychologist] வாயா வார்த்தையாக குணப்படுத்த முயலுவார்கள். மனோ வியாதியின் குறிகளை, கண்டறிந்தும், கேட்டறிந்தும், அலசியும் தீர்வு காண்பதில் இறங்குவார்கள். சில பயிற்சிகளையும் சொல்லிக்கொடுப்பார்கள். மனோநல வைத்தியரிடம் [Psychiatrist] செல்ல பரிந்துரையும் செய்யக்கூடும். இருவரும் கலந்தாலோசித்தும் நிவாரணம் தரலாம். தரமுயர்ந்த மருந்துகளும் உளன. உதாரணமாக Prozac என்ற மருந்து அதிகம் பேசப்படுகிறது. மற்றும் சில மருந்துகளை பற்றி சொல்ல தயங்குகிறேன். ஏனெனில் மனோநல வைத்தியரின் பரிந்துரை அத்தியாவசியம். இல்லாவிடின் பக்கவிளைவுகள் பாதிக்கலாம்.  மனோநல உள்ளுறை ஆலோசகர் [Therapist] இந்த வரிசையில் முக்கிய பங்கு வகிக்கிறார். அவரிடம் பாதிக்கப்பட்ட நபர், குடும்ப நபர்கள் எல்லாருமே ஆலோசனைக்கு வரவழைக்கப்படுவார்கள். அது தொடர் நிகழ்வாக பல தடவை நடை பெறும். நேரம் பணவிரயமும் அதிகம். ஆனால், பக்க விளைவு இல்லாத வகையில் இதில் பூரண நிவாரணம் கண்டவர்கள் பலர். சொல்லப்போனால், மேல்நாடுகளில் மனோநல உள்ளுறை ஆலோசகரை , யாதொரு விதமான பாதிப்பு இல்லாதவர்கள் கூட அணுகுவது உண்டு. 

‘பெண்களை ‘ங’ போல் வளைய சொல்லும் தொல்லைக்காட்சிகள்/ இதழ்களில் உலவும் அத்தைப்பாட்டிகள் (agony aunts)/ அடுத்த வீட்டு அம்மாமி/ எதிர்வாடை எதிராஜ நாயுடு போன்றோர் விளைவிக்கும் அபாயம் பற்றி பிறகு பேசுவோம். ஏனெனில், இது ஒரு இரங்கல் மடல்.

இந்தியாவில் மனோநல உள்ளுறை ஆலோசகர்கள் மிகக்குறைவு. எல்லோரும் மனோநல நிபுணர்களாக உள்ள இந்த பாரதபூமியில் அவர்களுக்கு மவுசு இல்லை. சென்னையில்  Emma Gonsalves என்ற மனோநல உள்ளுறை ஆலோசகர் இருந்தார். தனது துறையில் வல்லுனாராக இருந்தவர். பணத்தாசை இல்லாமல் மன நிம்மதியுடன் இருந்து முன்னுதாரணமாக இருந்து திகழ்ந்தவர். செல்லப்பிராணிகளின் மீது ஆசை. அவருடைய பெர்ஸியன் பூனை மிகவும் அழகானவள்.  எனக்கு நண்பர். என் மகளுக்கு ஆசான். அண்மையில் அவர் (82) தன் அறையில் கழுத்து நெறிக்கப்பட்டுப் பிணமாகக் கிடந்தார். முதலில் இயற்கை மரணம் என்றார்கள். பின்னர் வேலையாள் செய்தது என்றார்கள். அவரது குடியிருப்புக்கு சிறந்த பாதுகாப்பு. அப்படியும் கொலை விழுந்தது. உயில் சம்பந்தமாக உறவினர் கொலை செய்திருக்கலாம் என்ற செய்தியும் உலா வந்தது. இதோ படம்.
ஒரு நாள் அவருடைய நண்பர்கள் கூடி நீலாங்கரையில் அண்மையில் அஞசலி செலுத்தினார்கள். ஊடகமும் அவரை மறந்தது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இதை பதிவு செய்கிறேன்.

-#-
சித்திரத்துக்கு நன்றி: காப்புரிமை ஹிந்து & ந்யூ இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, July 21, 2014

லேடீஸ் & லேடன்ஸ்,

லேடீஸ் & லேடன்ஸ்,


வாகை சூடினாரே! வாகைனா வாகை!
வாங்க அய்யா, அய்யா வாங்க.
மாலை போடுங்க நம்ம பசங்களுக்கு.
கோலம் போடுங்க லார்ட்ஸ்லெ.

இதெல்லாம் சில நிமிடங்களுக்கு முன்னால். 28 வருடத்திற்கு பிறகு இந்தியாவுக்கு லார்ட்ஸ்லெ வெற்றி