Monday, November 18, 2013

ஆட்டிப்படைத்திடவே: அன்றொரு நாள்: நவம்பர் 19



அன்றொரு நாள்: நவம்பர் 19 ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!
10 messages

Innamburan Innamburan 19 November 2011 18:10

அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!

தலைப்பின் பெண்ணியம் தலை நிமிர்ந்தது; துணிச்சல் மிகுந்தது; அஞ்சாநெஞ்சத்தின் உறைவிடம்; ஒளி படைத்த கண்ணினாள்; துள்ளி வரும் வேலாக, பகையை அள்ளி, அலக்கழித்து விளையாடும் பெண்ணியம் எனலாம். ‘ஆணவம்’ என்ற சொல் ஆண்பாலின் ஏகபோக உரிமை என்றால், கோல்டா மீயர் (இஸ்ரேல்), இந்திரா காந்தி (இந்தியா), மார்கரெட் தாச்சார் (பிரிட்டன்) ஆகிய அல்லி ராணிகள், ஆண்மக்களே, முபாரக் அலி சொன்ன மாதிரி. யார் அந்த முபாரக் அலி? 

நவம்பர் 19, 1917 அன்று பிறந்த  ஸ்திரீ பிரஜையை, அவளுடைய ‘தலை நிமிர்ந்த’ பாட்டியே சூள் கொட்டித்தான், அரைமனதுடன், வரவேற்றாளாம்.  அந்த மாளிகையின் முதிய மாஜி ஊழியர் முபாரக் அலியிடம், வழக்கம் போல், எடுத்துச்சென்றால், அவர் குழவியை ஆணாக பாவித்து ‘சுபிக்ஷம் உண்டாகட்டும்’ என்று ஆசி வழங்குகிறார், சொன்னதை காதில் போட்டுக்கொள்ளாமல்.  இந்தியாவின் பிரதமராக இருந்த திருமதி. இந்திரா காந்தி அவர்களை பற்றி நேற்றைய (18 11 2011) எகனாமிக்ஸ் டைம்ஸ் இவ்வாறு கட்டியம் கூறுகிறது. இன்று எதிர்க்கட்சியும் புஷ்பாஞ்சலி செய்கிறது. தீர்க்க தரிசி தான் அந்த முபாரக் அலி, பத்தாம் பசலியாக இருந்தாலும்.

இந்த கட்டுரைக்கான ஆய்வில் பல மணி நேரம் வீணாயின, எனக்கு. கட்டுரைத்தலைவியை பற்றி அதிகம் கிடைத்தவை: பொய் மிகு மெய் கீர்த்திகள் & பொய் மிகு பொய் அபகீர்த்திகள். அது போகட்டும். மோதிலால் நேருவின் செல்ல பேத்தி இந்திரா பிரியதர்ஷிணி தனக்கே இழைத்துக்கொண்ட அநீதி: எமெர்ஜென்சி. எடுத்தவுடன் அது தான் பேச்சு, வாதம், விவாதம், விதண்டாவாதம், நிந்தனை. அவருடைய மற்ற சிறந்த பணிகள் மறக்கடிக்கப்படுகின்றன. அதை பற்றி நான் சொல்ல வேண்டியதெல்லாம், ‘அன்றொரு நாள்’ தொகுப்பில், ஜூன் 25 & 26 ஏற்கனவே சொல்லி விட்டேன். இங்கு அது பற்றி பேசப்போவதில்லை. ‘மின் வேலி’ என்ற கட்டுரையில் நான் எழுதியதிலிருந்து ஒரு துளி மட்டும் இங்கே.

“...இந்திரா காந்தியின் கொடுப்பினை: பாலப்பருவத்திலேயே அரசிலயர்களின் அவலக்ஷணத்தை கண்கூடாகப் பார்க்கும் தருணங்கள்; பலரின் தனிமொழிகளையும், உரையாடல்களையும், தள்ளி நின்று கேட்டிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள்; அவர்கள் சொல்வதை செய்யாததையும், செய்ததை சொல்லாததையும் வைத்து அவர்களை எடை போடும் வாய்ப்பு. தாயை சிறுவயதில் இழந்த அபலையான இந்திராவின் தந்தையோ அரசியலில் மும்முரம்; பெண்ணுக்கு தனிமை தான் துணை. சிந்தனையும், சூழ்ச்சி செய்யும் திறனும் இந்திராவுக்கு வலுத்தன. கண்ணசைகளையும், சங்கேதங்களையும், நுட்பங்களையும் இனம் காணுவதில் பெண்ணினம் இணையற்றது. அந்த குணாதிசயம் இந்திராவுக்குக் கை கொடுத்தது. கூடப்பிறந்த பிடிவாதமும், துணிச்சலும், ஏற்கனவே பட்டியலிடப்பட்ட கை வந்த கலைகளும், ஆணினத்தை அடி பணிய வைத்தன. தேவ்காந்த் பரூவா என்ற அசடு ‘இந்திரா தான் இந்தியா’ என்று எக்காளமிட்டது. பாபு ஜகஜீவன் ராமே அச்சத்தில், என்கிறார், குல்தீப் நய்யார். ஓடோடி வந்து உடுக்கு அடித்தனர், சித்தார்த் ஷங்கர் ராயும், வித்யா சரண் சுக்லாவும். பூம் பூம் மாடு, ஓம் மேஹ்தா. ஜக் மோஹன் போன்ற அதிகாரவர்க்கம் தலை வணங்கிற்று. ஜனாதிபதி ஃபக்ருத்தீன் அகமது அடித்துப் பிடித்துக்கொண்டு கையொப்பமிட்டார். (அந்த கெஜட் பிரதி ஒன்று என்னிடம் உளது.) தடாலடிக்கு பிள்ளாண்டான் சஞ்சய்யும் அவனது கூஜாக்களும். இந்த ஆணடக்கம் பெரிய சாதனை. இந்திராவின் வாழ்க்கைப்பாடங்களும், குணாதிசயங்களும் ஒருசேர, வரலாற்றில் வேறெங்கும் புலப்படவில்லை. இந்த 1975 ~1977  இந்திய எமெர்ஜென்சிக்கு வித்து, உரம், பாசனம், வேளாண்மை எல்லாம் இந்திரா காந்தி அவர்களின் பின்னணி என்பது என் கருத்து...”

நான் அவரை முதலில் பார்த்தது 1962/63. குடியரசு தின ஜனாதிபதியின் தேனீர் விருந்தில். அழகு என்றால் அப்படி ஒரு அழகு. பலவருடங்களுக்கு பிறகு அமெரிக்க அதிபர் நிக்சனுடன் ஒரு புகைப்படம். நிஜமா சொல்றேன். மாமியாரிடம் அஞ்சும் மருமகப்பெண் போல நிக்ஸனார். அம்மையோ லண்டன் எகானமிஸ்ட் வரைந்த காளிப்படம் போல, சீற்றமான முகத்துடன், அதில் ஒரு புன்முறுவலுடன் . நிக்சனும், அவருடைய சகுனி கிஸ்ஸிங்கரும், திரைக்கு பின்னே வசை பாடுகின்றனர்.தந்தைக்கும் அருமந்த புத்திரிக்கும் ஒரு வித்தியாசம். முக்கியமான பொறுப்புகளில், முழுதும் பொருந்தாதவர்களை, அமர்த்திவிட்டு திண்டாடிய நல்ல மனிதர், நேரு. ~ சர்தார் கே.எம். பணிக்கர் ஒரு உதாரணம். உரிய நேரத்தில் சர்தார் படேல் எச்சரித்தார். நேரு கேட்கவில்லை. அசடோ, சமத்தோ, ஜகதல பிரதாபனோ, அபூர்வ சிந்தாமணியோ, அதற்கதற்கு ஆளை பொறுக்குவதில், அம்மணி நிகரற்றவரே. காமராஜரும், மொரார்ஜி தேசாயும் லகுவாக உதறப்பட்டனர். 

இந்த தீன் தேவிகளை சீனியாரட்டிப்படி ஒருகண் பார்த்து விடுவோம்.1898ல் பிறந்த கோல்டா மீயர் ஒப்பற்ற பிரதமர். இஸ்ரேல் பிறக்கும் முன்னரே தேசாபிமானத்தின் உருவகம், அன்னை கோல்டா மீயர். தன்னினம் ஈவிரக்கம் நாடலாகாது என்பதில் தீவிரமாக இருந்தார். ஏழு மிலியன் டாலர் நிதியுதவி புரட்டமுடியாத இடத்தில்  50 மிலியன் திரட்டினார். மூஞ்சியில் அடித்த மாதிரி பேசும் கறார் குணம். இஸ்ரேல் உருவாக்கத்துக்கு நான்கு நாட்கள் முன்னால், மாறுவேடத்தில் சென்று அப்துல்லா மன்னரிடம், ‘எம்மை எதிர்க்கவேண்டாமே’ என்று வேண்டுகோள் விடுவிக்க, அவரும் ‘அவசரப்படேல்’ என்றார், ஏதோ ஞானியை போல. பதில்: ‘அவசரமா? நாங்கள் இரண்டாயிரம் வருடம் காத்திருக்கிறோமே.’ ஒரே வார்த்தையில் கோல்டாமீயரின் புருஷலக்ஷணம். ம்யூனிச் நகர படுகொலை பற்றி, ‘அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 5’  இழையில் எழுதியிருந்தேன். கோல்டா மீயர் எதிர்ப்பார்த்த அளவுக்கு சர்வ தேச ஆதரவு கிட்டவில்லை. அந்த  கொலைகாரர்களை இருபது வருடங்களாகத் தேடி பிடித்து ஒழித்து விட ஆணை பிறப்பித்து, அதை செய்து காட்டியது கோல்டா மீயர். தேவி நம்பர் 1.
இந்திய பிரதமர் இந்திரா காந்தி நம்பர் 2 சீனியாரிட்டியில். பல விஷயங்களில் நம்பர் 1. அவருடைய குணாதிசயங்களை புரிந்து கொள்ள, சில் மேற்கோட்கள்: 
~ என் தந்தை ராஜாங்கம் ஆளுபவர்; நான் அரசியல் வாதி பெண். அவர் ஒரு ஸைண்ட். நான் அப்படியில்லை.
~ நான் செய்வதெல்லாம் அரசியல் விளையாட்டுக்கள். ஜோன் ஆஃப் ஆர்க் மாதிரி நான் அவ்வப்பொழுது பலிகடா ஆகிறேன்.
~ என் தாத்தா சொல்லுவார்: உழைப்பவர்கள் ஒரு இனம்; பேர் தட்டிச் செல்பவர் மற்றொரு இனம். முதல் இனத்தில் சேரு. போட்டி கம்மி.

உங்களுக்குத் தெரியாதது என்ன எனக்கு தெரிந்து இருக்கப்போகிறது? இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் அவரது புகழை நிலை நாட்டுகிறது. அதனுடைய முதல் துணை வேந்தர் டாக்டர் ராமி ரெட்டி எனது நண்பர். அடிக்கடி அந்த நிறுவனத்துக்காக, அவருடன் அநாமதேயமாக உழைத்தது உண்டு. அப்படி வேலை வாங்குவது இந்திரா காந்தி ஸ்டைல். டாக்டர் ராமி ரெட்டியை, தீவிர ஆய்வுக்குப் பிறகு தேர்ந்தெடுத்த பிரதமர் இந்திரா காந்தி சொன்னது, ‘உம்மை இங்கு அமர்த்தியதுடன் என் வேலை முடிந்தது. இனி வெற்றியோ தோல்வியோ,உம் கையில். யாரும் குறுக்கிடமாட்டோம்.’

இனி தேவி நம்பர் 3: 1925 ல் பிறந்த மார்கெரட் தேட்சர். இங்கிலாந்தின் பிரதமர் 1979 -1990. கன்செர்வேட்டிவ். அவரது ஆட்சி பல விதங்களில் ஒரு எதிர்நீச்சல். விலாவாரியாக பேச இது இடமில்லை. ஆனால், இரண்டு விஷயங்கள். 1. அவருக்கு இந்திரா காந்தி மாடல் எனலாம். 2. குடிசை மாற்று வாரியம் போல், இங்கிலாந்தில் முனிசிபாலிட்டிகளுக்கு சொந்தமான மலிவு குடியிருப்புகளில் ஏழை பாழை வாழ்வார்கள். அவற்றை பாதி விலைக்கு அவர்களுக்கு விற்கப்போவதாக இன்று (19 11 2011) அறிவிப்பு. இதற்கு நன்றி மார்கெரெட் தாட்சருக்கு சொல்ல வேண்டும். 
அதே போல், நாமும் இந்திரா பிரதர்ஷிணி காந்திக்கு பல விஷயங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். பல விஷயங்களை நினைத்து திருந்தவும் வேண்டும்.
இன்னம்பூரான்
19 11 2011  
scan0017-300x174.jpg




உசாத்துணை:

18 NOV, 2011, 12.10PM IST, IANS 


Seethaalakshmi Subramanian 19 November 2011 19:47


அண்ணா, நவம்பர் மாதம் பிறந்த பொண்ணு எல்லோரும் ராணியாகிட முடியுமா? நானும் நவம்பர் மாதத்துப் பொண்ணு. சமத்தா, அடக்கமா வீட்டுக்குள் இருக்கேன்.
அண்ணா , நான் சாதுப் பொண்ணுதானே?
உங்கள் தங்கை சீதா
2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>

Innamburan Innamburan 19 November 2011 19:54
To: mintamil@googlegroups.com
நீயும் நவம்பர் அல்லி அரசாணி தான், சீதா! எத்தனை பேரை ஆட்டிவைத்திருக்கிறாய்! ஆட்டிப்படைத்திடவே வந்துருளிய பெண்ணியத்தில் நீயும் அடக்கம். என் வாழ்த்து. படங்கள் எல்லாம் பார்க்கவும்.அரிய புகைப்படங்கள் உளன்.
அண்ணா இன்னம்பூரான்

2011/11/19 Seethaalakshmi Subramanian <seethaalakshmi@gmail.com>
அண்ணா, நவம்பர் மாதம் பிறந்த பொண்ணு எல்லோரும் ராணியாகிட முடியுமா? நானும் நவம்பர் மாதத்துப் பொண்ணு. சமத்தா, அடக்கமா வீட்டுக்குள் இருக்கேன்.
அண்ணா , நான் சாதுப் பொண்ணுதானே?
உங்கள் தங்கை சீதா

2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!



Seethaalakshmi Subramanian 19 November 2011 20:12


அண்ணா, நான் சிறுமியாக இருக்கும் பொழுதே என் அப்பா என் பொண்ணை இந்திராகாந்தி மாதிரி வளர்ப்பேன் என்றார். அப்பொழுது அந்த அம்மாள் எந்தப்பதவியிலும் இல்லை. நேருஜிக்கு ஒரே பெண். அப்பாவிடம் கேட்டதற்கு துணிச்சலான பொண்ணா இருன்னு சொன்னார். எனக்கு மிகவும் பிடித்தமான பெண். அவர்கள் செய்த செய்ல்கள் எல்லாவற்றையும் நியாயப்படுத்தவில்லை. அவரது துணிச்சல் பிடிக்கும். அதுவும் அரசியலில், ஆண்கள் உலகில் துணிச்சலுடன் இருந்தே ஆக வேண்டும். அவர்களை ஒருமுறையாவது தொட்டுப் பார்க்க விரும்பினேன். போட்டொ எடுத்துக் கொள்ள விரும்பினேன். இரண்டும் நடந்தது அண்ணா
சீதா

[Quoted text hidden]

Innamburan Innamburan 19 November 2011 20:48
To: mintamil@googlegroups.com

கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது, சீதா. தற்கால வரலாறு எழுதும்போது, தெரிந்ததை எல்லாம் எழுதிவிடமுடியாது. எல்லாரும் மனிதர்கள் தானே. சந்ததிகள் மனம் நோகலாகாது. இந்திரா காந்தியின் அசாத்திய துணிச்சல் மோதிலால் நேருவுக்கு இருந்தது. பிறகு யாருக்கும் இல்லை. நான் குறிப்பிட்ட முப்பெருந்தேவிகளில் மார்கெரட் தாட்சரின் அணுகுமுறையை நான் ஏற்கவில்லை. ஆனால் அவருடைய தீர்மானத்தின் பிற்கால நல்ல பயனை புறக்கணித்தால், வரலாறு எழுதும் தகுதியை இழந்து விடுவேன். அம்மாதிரி தான் இந்திரா காந்தியின் தீர்மானங்களில் சில. என்றுமே, ஆளை பொறுக்குவதிலும், கழிப்பதிலும் அவருடைய அபார திறனை நான் வியக்காத நாள் கிடையாது.

அது சரி. உன்னை சேர்த்து எனக்கு ஐந்து தங்கைகள். கடைக்குட்டிக்கூட என்னை பன்மையில் விளிப்பதில்லை. நீயும் அந்த பழக்கத்தை நிறுத்தி விடு.
அண்ணா இன்னம்பூரான்


Seethaalakshmi Subramanian 19 November 2011 22:01


அண்ணா, ஒரு விஷயம். ஒரு பெரிய அரசியல் பிரமுகரிடம் நான் "நீங்கள் அரசியலுக்கு அவ்வளவு சரியில்லை" என்றேன்.அவர் என் மீது கோபித்துக் கொள்ளவில்லை. ஆனால் உடனே ஒரு கேள்வி கேட்டார். "நீ யாரை பொருத்தம் என்று நினைக்கின்றாய்? உடனே தயங்காமல் இந்திராகாந்தி என்றேன். நேருஜி நல்லவர். ஆனால் மகள் வல்லவர். 
அரசியலில் தலைமையேற்று நடப்பது சாதாரணமல்ல.
உங்களுக்குத் தெரியும். நாம் வேலை செய்வது எளிது. ஆனால் பலரிடம் வேலை வாங்குவது அவ்வளவு எளிதல்ல.  management is not easy. he should have special skill.
போர்க்களத்தில் கொலைகள் எப்படி நியயப்படுத்தப்படுகின்றதோ அரசியலிலும் சில போக்குகள் அவசியமாகின்றது. சாணக்கிய தந்திரம் என்கின்றோம். எதற்கும் அஞ்சாத ராட்சசி அந்த அம்மாள்
ஆனால் அவர்களும் சாதாரண மனுஷி என்பதை ஒரு முறை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அலக்பத் தீர்ப்பு வந்தது. எமெர்ஜென்சியும் வந்தது. அதன் பின்னர் அவர்கள் காஞ்சிக்கு மகாப் பெரியவரைப் பார்க்க வந்தார்கள். தேனப்பாக்கத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. பெரியவர் ஒன்றும் பேசவில்லை. நேரகப் பார்க்கக் கூட இல்லை. அங்கே அமைதியாக கிழே அமர்ந்திருந்த அம்மையாரின் கண்கணில் கண்ணீர் வழிந்தோடியது. அவர்கள் ஆத்மாவின்  கண்ணீர்
இதுவரை இதனை நான் யாரிடமும் சொன்னதில்லை. சிலர்தான் அக்காட்சியைக் காணமுடிந்தது
கண்ணன் பார்தப்போரில் செய்யாத சூழ்ச்சியா? அவனால் சிரிக்க முடியும். ஆக்கலும் அழித்தலும் அவனுக்கு ஒன்றே. நாம் மனிதர்கள். துணிச்சல் எத்தனை இருந்தாலும் ஏதாவது தவறுகள் செதிருந்தால் (மனிதன் செய்யாதிருப்பானா) என்றாவது ஒருநாள் 
கண்ணீர் சிந்தத்தான் வேண்டும். . முதுமை கால்த்தில் வேலைகள் எதுவும் செய்யாதிருந்தால் நம் பழங்கணக்கைப் பார்க்கத்தோன்றும். அப்பொழுது சிரிப்பதும் அழுவதும் நேரிடும்
இந்திராகாந்தி பெயரே என்னை எங்கோ இட்டுச் சென்றுவிட்டது. பலரும் புத்தகத்திலும் படங்களிலும் பார்க்க முடிந்த பல பெரியவர்களுடன் அருகில் இருக்கும் வாய்ப்பு நம்மிருவ்ருக்கும் அதிகம் உண்டு. நாம் பேசியிருக்கின்றோம்

Geetha Sambasivam 19 November 2011 23:16


அரிய தகவல்கள். தெரிந்த தகவல்கள் எனினும் தொகுப்பு அபாரம். வழக்கம் போல் தெரியாத தகவல்களும் உண்டு.
2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!

இன்னம்பூரான்
19 11 2011  

Geetha Sambasivam 19 November 2011 23:18


Subashini Tremmel 20 November 2011 09:01



இப்பதிவை வாசித்து மகிழ்ந்தேன் திரு.இன்னம்புரான். 

இந்த இழையில் நீங்களும் சீதாம்மாவும் செய்யும் கலந்துரையாடலும் அனுபவத்தின் வெளிப்பாடாகவும் சுவாரசியாமகவும் இருக்கின்றது. 


சுபா

2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா


Innamburan Innamburan 20 November 2011 10:16




~ நன்றி, ஸுபாஷிணி, அரிய படங்களையும், ஒரு நேர்காணலையும் இணைத்திருக்கிறேன். நேரம்கிருக்கும் போது பார்க்கவம்.
இன்னம்பூரான் 

2011/11/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: நவம்பர் 19
ஆட்டிப்படைத்திடவே ஒரு பெண்ணியம் வேண்டுமம்மா!


Sunday, November 17, 2013

அமர் சித்ர கதா:அன்றொரு நாள்: நவம்பர் 18



அன்றொரு நாள்: நவம்பர் 18 அமர் சித்ர கதா

Innamburan Innamburan 18 November 2011 17:15
அன்றொரு நாள்: நவம்பர் 18
அமர் சித்ர கதா

அமர் சித்ர கதா இதழ் நிறுவிய நண்பர் திரு. அனந்த் பாய் அவர்கள் நான் தலைப்பை இரவல் வாங்கியதை கண்டு மகிழ்ந்திருப்பார். ஏனெனில், கதாநாயகன் அமரர்; சித்ராங்கதர்; காவியமும், ஓவியமும், இசை, இயல், நாடகமும் ஒருங்கே உருவகமான சகல கலா வித்தகர். ஆங்கிலத்தில் லெஜெண்ட் என்பார்கள், வாழும் காலத்தே வரலாறு படைத்தவர்களை. தாதாசாஹேப் பால்கே விருது பெற்ற டைரக்டர் பத்ம பூஷண் வி.ஶாந்தாராம் அவர்கள் ஒரு லெஜெண்ட் தான். இந்திய திரைபடக்கலையின் எல்லா கலையம்சங்களிலும், பொறியியல் நுட்பங்களிலும், சினிமா தியேட்டரில் திரைதூக்கும் சில்லறை வேலையில் தொடங்கி அமர சித்திர கதைகளை திரைப்படங்களாக படைப்பது வரை, 75 ஆண்டுகள் தன்னை இந்திய திரைப்படக்கலைக்கு அர்ப்பணித்துக் கொண்டவர். மற்றவர்களுக்குக் கலங்கரை விளக்காக விளங்கினார். அவர் விட்டுச் சென்ற கருவூலங்களும் சிறந்தவை. கொடுத்து வைத்த மனிதர். அவருடைய மனைவிகளும், மக்களும் அவருடைய புகழை மங்காமல் பார்த்துக்கொண்டனர். என்றுமே, அவர் ஒரு ‘பளிச்’ மனிதர்.
நவம்பர்  18, 1901 அன்று கோலாப்பூரில் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிறந்த திரு.ராஜாராம் வாங்குதிர் ஶாந்தாராம் பள்ளிக்கு செல்லவில்லை. எடுபிடி வேலைகள் செய்து பிழைத்தார். அதுவே அவருக்கு நடிப்புத்துறையின் அணு-நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்தது. வல்லுனர்களுக்கு அணுக்கத்தொண்டு செய்ததின் பிரதிபலனும் கிடைத்தது. வாய்ப்பை ஆற்றிக்கொள்ளும்  ஆற்ரலும் உடன் பிறந்தது என்க. பிரபல டைரக்டர் பாபுராவ் பெய்ண்டர் நடிக்க ஒரு வாய்ப்பு கொடுத்தார், 1925ல். டாம்லே, பெய்ண்டர், குல்கர்னி, சையத் ஃப்தேஹ்லால் போன்ற ஜாம்பவான்களுடன் 1929ல் ஒரு சுபயோக சுபதினத்தில் பிரபாத் என்ற சினிமா கம்பெனி ஆரம்பித்தார், ஶாந்தாராம்.
கோபால் கிருஷ்ணா (1931) என்ற முதல் படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு. தொன்மை நாடகங்களில் தற்கால சமுதாய பிரச்னைகளை நுட்பமாக ஆராய்வதே, இவரது தனிச்சிறப்பு. அடுத்த வருடமே ‘அயோத்தியா கா ராஜா’ என்ற பேசும் படம். அத்துடன் விட்டாரா? ஜெர்மனிக்கு சென்று கலர் சினிமா உத்திகளை கற்று வந்தார். உடனடியாக, கலர் படங்கள். பூனாவுக்கு சென்று ஸ்டூடியோ அமைத்துக்கொண்டஅர். 1941ல் எடுத்த ‘படோஸி’ (பக்கத்து வீட்டுக்காரன்) என்ற படம் இனவெறியை தணிக்கும் செய்தியாக அமைந்தது. பெளத்தம் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் எதிர்த்ததை பிரதிபலித்த ‘அம்ருத் மந்தன்’ சமகாலத்து சம்பிரதாயங்களையும், சடங்குகளையும் மென்மையாகக் கண்டித்தது. அவருடைய ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு சேதி சொல்லின.
1942ல் மும்பைக்குத் திரும்பி ராஜ்கமல் ஸ்டூடியோவை துவக்கிய ஶாந்தாராம் ‘டாக்டர் கோட்னிஸ் கீ அமர் கஹானி’ என்ற படம் எடுத்ததும் இல்லாமல், அவரை பிரதான நாயகனாக நடித்தார். 1957ல் அவர் எடுத்த ‘தோ ஆங்க்கேன் பாரா ஹாத்’  பெர்லின் சினிமா பரிசு, மெட் ரோ கோல்ட்வின் மேயர் பரிசு, ஜனாதிபதியின் தங்க மெடல் எல்லாம் பெற்று, போடு போடுன்னு போது போட்டது. அதற்கும் மேலாக தடபுடல் வரவேற்பு. ‘ஜனக் ஜனக் பாய்லெ பாஜே’ (1955) என்ற நிருத்திய நாடகத்திற்கு.
சுருங்கச்சொல்லின், 1990ல், 89 வயதில் அமரரான திரு. ஶாந்தாராமும், இந்திய சினிமாவும், தோளுடன் தோள் வளர்ந்த ஜிக்ரி தோஸ்த்துக்கள். இந்திய சினிமாவின் ‘பொழுதொரு வண்ண, நாளொரு மேனி’ வளர்ச்சியின் ஒட்டு மாங்கனி: டைரக்டர் ராஜாராம் வாங்குதிர் ஶாந்தாராம் அவர்கள். 
இன்னம்பூரான்
18 11 2011
photo5.jpg

Stamp-Rel14.gif
உசாத்துணை

Geetha Sambasivam 20 November 2011 02:56

சாந்தாராம் பற்றிய அருமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.  எனக்குப் பிடிச்ச படம் தோ ஆங்கே, பாரா ஹாத். அதில் வரும் பாடல்
 
"யே மாலிக்"  பால் ராஜ் சஹானி(??) அற்புதமாக நடித்திருப்பார்.  சந்தியாவும்.  கீத் காயா பத்தரோனே தான் பிடிக்கவில்லை.

Saturday, November 16, 2013

இந்தியாவுக்கு நுழைவாயில்:



அன்றொரு நாள்: நவம்பர் 17 இந்தியாவுக்கு நுழைவாயில்

Innamburan Innamburan 17 November 2011 17:26

அன்றொரு நாள்: நவம்பர் 17
இந்தியாவுக்கு நுழைவாயில்

பாமர கீர்த்தியில் அஃறிணைக்கும் இடம் உண்டு. ஏன்? உயிர்மையுமுண்டு. வாழ்வாதார உரிமையும் உண்டு. சொந்தம் கொண்டாடும் பந்து ஜனங்களுமுண்டு. நவம்பர் 17,1869 தான் சூயஸ் கால்வாய் என்ற  ‘இந்தியாவுக்கு நுழைவாயில்’ திறக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், இதனுடைய உயிர்மையை விவிலியத்திலேயே ‘எக்ஸோடஸ்’ பகுதியில் காண்கிறோம். கி.மு.1470லியே கடற்படைகள் இம்மாதிரியான குறுக்கு வழியில் வந்ததாக, சரித்திர ஆதாரங்கள் கூறுகின்றன. பின்னர்,ராமுஸெஸ், நேச்சோ 2 ஆகிய மன்னர்களும், கி.மு. 522லிருந்து 486 வரை அரசாண்ட பாரசீக மன்னர் டேரியஸ்ஸும், நைல் மஹாநதியையும் சிவந்த கடலையையும் இணைக்கும் இந்த அமைப்பை புனருத்தாரணம் செய்ததாக, வரலாறு கூறுகிறது. கடல் வணிகம் பெருக, அது அக்காலமே உதவியது. கி.பி.எட்டாம் நூற்றாண்டில் இப்படியொரு கால்வாய் இருந்ததற்கு ஆதாரங்கள் உளன. நெப்போலியன் காலத்து அகழாய்வு ஆராய்ச்சிகளும் பழங்கால சூயஸ் கால்வாய் ஒன்றை இனம் காண்பித்தன. ேநச்சோ 2  மன்னர் காலத்தில் எல்லாம் ஆரூடம் கேட்பது வாடிக்கை. ஒரு ஆரூடம் சொல்லியதாம்: ’ விட்டு விடு. உனக்கு ஆதாயமில்லை. மற்றவர்களுக்குத்தான் இது உதவும்’, என்று. பொருத்தமானது தான், சில ஆயிர வருடங்களுக்கு பிறகு. சூயஸ் கால்வாய்  கலோனிய ஆங்கில அரசுக்கு உதவியது. எகிப்து இரண்டாம் பக்ஷம். அந்த கால்வாயை 26 ஜூலை 1956 அன்று, எகிப்து தேசீயமயமாக்கிய பிறகும், பற்பல சர்வதேச இழுபறிகள் ஆனபிறகும் ‘ சூயஸ் கால்வாயை, யுத்தம் நடந்தாலும், சாந்தி நிலவினாலும், எந்த நாட்டுக்கப்பலும் பயன்படுத்தலாம் என்ற விதி அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த கால்வாயை கட்டி முடிப்பதற்குள் ஆயிரம் தாவாக்கள். தற்காலம், பெட் ரோலியத்துக்காக, மேற்கத்திய நாடுகள், மனசாட்சியிலிருந்து ஜனநாயகம் வரை பணயம் வைப்பது போல, சூயஸ் கால்வாயும், அவர்களின், குறிப்பாக, ஆங்கிலேய கலோனிய பேராசைக்கு இலக்காக இருந்தது. இது வரை, ஐந்து தடவை இது அடைக்கப்பட்டது. ஒரு தடவை எட்டு வருடங்களுக்கு. 

தற்கால சூயஸ் கால்வாயின் தலபுராணம்: 1854ல் ஃபெரென்ச் ராஜதந்திரியும் பொறியாளரும் ஆன விகோம்டெ ஃபெர்டினாண்ட் மேரி டெ லெஸ்ஸப்ஸ் என்பவரின் தூண்டுகோலால் எகிப்து உடன்பட, 1858ல் ஒரு கம்பெனி துவக்கப்பட்டது. 200 மிலியன் ஃப்ரென்ச் காசுகள் மதிப்பு. 99 வருடங்களுக்குப் பிறகு எகிப்துக்கு சொந்தம் என்று உடன்பாடு. முதல் போட்டது எகிப்தும், ஃபிரான்ஸும்.  சில தெனாலி ராமன் கதை சம்பவங்களுக்குப் பிறகு, நவம்பர் 17, 1869 அன்று, இந்த கால்வாய் சர்வ தேச கடல் பிரயாணத்துக்குத் திறக்கப்பட்டது. பலத்த கொண்டாட்டம், சில வாரங்களுக்கு. உலகின் பல பெருந்தலைகள் கலந்து கொண்டன. 1875ல் லாகவமாக, பிரிட்டீஷ் அரசு எகிப்தின் பங்கை, 400 ஆயிரம் பவுண்டுகளுக்கு வாங்கிக்கொண்டது. பிரிட்டீஷ் கலோனியத்துவமா, சும்மாவா! சர்வதேச கால்வாயான சூயஸ் கால்வாய் பிராந்தியத்தில் ராணுவம் வைக்க முடிவு செய்தது. 1936ல் அதற்கான ஒப்பந்தம் ஒன்றை எகிப்துடன் போட்டுக்கொண்டது. அந்த ஒருதலைப்பக்ஷ ஒப்பந்தத்தின் வலுவை படிப்படியாகக் குறைப்பதாக, ஒரு அரைகுறை மனது ஒப்பந்தம், 1954ல். 1956ல் தேசீயமயமாக்கும்வரை அந்த ‘இரண்டு பெண்டாட்டிக்காரன்’ நிலை நீடித்தது. அதன் பிறகு பிரிட்டீஷ்-ஃப்ரென்ச்-இஸ்ரேல் படையெடுப்பு. கால்வாய் அடைக்கப்பட்டது, அக்டோபர் 1956லிருந்து மார்ச் 1957 வரை. எகிப்து-இஸ்ரேல் போரின் காரணமாக ஜூன் 1967லிருந்து 1975 வரை அடைப்பு. இது எல்லாமே நினைவில் உளன.
சொத்து எகிப்தின் நீர், நீச்சு, நிலம். பத்து வரவு ஆங்கிலேய கலோனிய மோகம். போருக்குப் பிரமேயம், இஸ்ரேலின் இனப்பற்று. விளைவு: கடல் வாணிகம் பாதிப்பு. இப்போது ஒரு உபகதை கேளும். (யாராவது கேக்கறவா இருந்தால்!) உப விளைவு: நோபல் பரிசு, கனடா நாட்டின் வெளியுறவு அமைச்சர் லெஸ்டர் பியர்சன் அவர்களுக்கு. பிரிட்டன் நாசத்தை நாட செல்வதாகக் கருதிய பியர்சன் முதல் தடவையாக ஐ.நா.வின் அமைதிப்படையை அங்கு நிறுத்தி, எகிப்தும், இஸ்ரேலும் அடங்கி நடக்க வழி வகுத்தார். அமெரிக்காவுக்கும் தன் பங்குக்கு,  தன்னிடம் இருந்த பவுண்டு செல்வத்தை விற்று, அதன் மதிப்பை குறைக்கப்போவதாக பயமுறுத்தியது. இங்கிலாந்தில் ஏகப்பட்ட எதிர்ப்பு. 
எது எப்படியோ, சில நல்வரவுகள். ஐ.நா. அமைதி காக்க உருப்படியாக செயல்பட்டது. இது முதல் தடவை; கலோனிய ஆர்பாட்டங்களுக்கு மவுசு குறைய தொடங்கியது; அகில உலக அளவில், தேசாபிமானம் தலையெடுத்தது. ‘வர வர மாமியார் கழுதை போல் ஆன மாதிரி’, பிற்காலம் எகிப்தில் யதேச்சாதிகாரம் கொடி கட்டி பறக்க, வல்லரசுகளும் அதற்கு துணை போக, இந்தியாவும் ஒத்தூத, 2011 ல் மறுபடியும் ஒரு புரட்சி!
இன்னம்பூரான்
17 11 2011
3236425614_e331f20c0f.jpg

உசாத்துணை:

Geetha Sambasivam 17 November 2011 18:54

புதுச் சரித்திரம்.  தெரிந்து கொள்ள முடிந்தது.  பகிர்வுக்கு நன்றி.


Friday, November 15, 2013

பாரிசில் க.கொ.சோ:அன்றொரு நாள்: நவம்பர் 16



அன்றொரு நாள்: நவம்பர் 16 பாரிசில் க.கொ.சோ

Innamburan Innamburan 16 November 2011 16:21


அன்றொரு நாள்: நவம்பர் 16
பாரிசில் க.கொ.சோ

கூடி வாழ்ந்தால் கோடி புண்ணியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) தோன்றிய தினம், நவம்பர் 16, 1945. 1995லிருந்து, தன் ஜன்மதினத்தை, அந்த உலக சகிப்புத் தன்மை தினமாக கொண்டாடுகிறது. பொறுத்தார் பூமியாள்வார் என்று தெரியாமலா சொன்னார்கள்! ஐ.நா. வின் சிறப்பு அவ்வப்பொழுது மங்கும். அதனுடைய சில அமைப்புக்கள் செலவு செய்வதில் தடபுடல். யுனெஸ்கோ, டபிள்யூ.ஹெச். ஓ. போன்றவையின் பணி போற்றத்தக்கது. யுனெஸ்கோ போன்ற நிறுவனத்தின் அவசியத்தை 1921 லியே உலக நாடுகள் உணர்ந்திருந்தன. ஸெப்டெம்பர் 21, 1921 அன்று எடுத்தத் தீர்மானமும், ஜனவரி 4, 1922 அன்று அமைக்கப்பட்ட சர்வதேசக்குழுவும், ஆகஸ்ட் 9, 1925 ல் பாரிசில் அமைக்கப்பட்ட முன்னோடி நிறுவனமும் அடித்தளம் என்க. இந்த பாழாப்போன யுத்தம் வந்ததில் எல்லாம் தடைபட்டது. அடுத்தபடியாக அட்லாண்டிக் ஒப்பந்தம், இது வளர வழி வகுத்தது. 1942லிருந்து மூன்று வருடங்களுக்கு இணைந்த கல்வி அமைச்சர்களின் மாநாடு ஆக்கப்பூர்வமாக, பல விஷயங்களை விவாதித்து, 1945ம் வருட நவம்பர் மாத முதல் இரு வாரங்களில் லண்டனில் நடந்த 44 நாடுகளின் கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் புனர்ஜன்மம் எடுத்தது எனலாம். புகழ்வாய்ந்த விஞ்ஞானி ஜூலியன் ஹக்ஸ்லி அவர்களின் தலைமையில், டிசெம்பர் 1946லிருந்து தீவிரமாகப் பணி துவக்கமாயிற்று. இந்த நிறுவனம் இனவெறியை எதிர்த்ததால், 1956ல் விலகிக்கொண்ட தென்னாஃப்பிரிக்கா, நெல்ஸன் மண்டேலா அவர்கள் தலைமையில் 1994ல் ‘பூ மணத்துடன் திரும்பி வந்த மச்சானாக’ வந்து சேர்ந்தது. 1968ல் உயிர்க்கோளத் திட்டம் கொணர்ந்ததும், 1989ல் உலகளாவிய வலைத்தளம் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கவை.தற்காலம் 193 நாடுகள் உறுப்பினர்களாகவும், மேலும் ஏழு நாடுகள் கலந்து கொள்ளும் தகுதியுடனும், இந்த நிறுவனத்தின் சேவையில் பங்களிக்கிறனர். 

நமக்கெல்லாருக்கும் மனநிறைவை தரும் செய்தி ஒன்றை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. தஞ்சை மாவட்டம். ஒரு சிறிய வட்டம். தஞ்சை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம். புராதனக்கோயில்கள் மூன்று. அவற்றில் இரண்டில், பெருமானின் திருநாமம் ஒன்றே. அந்த மூன்று கோயில்களும் இந்தியாவின் மரபையும், பண்பையும், கலையார்வத்தையும், உலகமே வியக்கும் அளவில் பிரதிபலிப்பதால், அவற்றை போற்றி பாதுகாப்பதில், யுனெஸ்கோ அதிக கவனம் செலுத்து வருகிறது. அவற்றை இங்கு http://whc.unesco.org/en/list/250 கண்டு மகிழுங்கள்.
இந்தியன் என்று தலை நிமிர்ந்து கொண்டேன். தமிழன் என்று மார்தட்டிக்கொண்டேன். சோழநாட்டு இன்னம்பூரான் என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டேன்.
இன்னம்பூரான்
16 11 2011
darasuram.jpg
உசாத்துணை:

Thursday, November 14, 2013

சாது மிரண்டால்...!அன்றொரு நாள்: நவம்பர் 15


அன்றொரு நாள்: நவம்பர் 15 சாது மிரண்டால்...!
6 messages

Innamburan Innamburan 15 November 2011 17:25

அன்றொரு நாள்: நவம்பர் 15
சாது மிரண்டால்...!

~ ‘இரண்டு மிலியன் மக்கள் கூடி’ என்ற கூவலுடன்,கையோடு கையாக, அதை பாதியாக குறைத்து  ஒரு மிலியன் மக்கள் மட்டுமே(!),என்று கூறி,  வாஷிங்க்டனில் அதிபர் ஒபாமாவின் மக்கள் மருத்துவ மசோதாவை எதிர்த்து ஆர்பாட்டம் செய்ததாக, லண்டன் டெய்லி மெயிலில், 12 09 2011 செய்தி. எது நிஜமோ? யார் எதற்குப் பிணை?
~ கூடங்குளத்தில் எதிர்ப்பவர்கள் ஒரு கூலிப்பட்டாளமோ என்ற ஐயம், ஒரு மத்திய அமைச்சருக்கு! 
நவம்பர் 6, 1913 அன்று காலை 6:30 மணிக்கு, 57 குழந்தைகளும், 127 பெண்களும், 2,037 ஆண்களும் பின் தொடர, எல்லை கடந்து, சட்டத்தையே மாற்றியமைத்தார், அண்ணல் காந்தி, தென்னாஃப்பிரிக்காவில். ரெளலட் சட்டத்தை எதிர்த்து நாட்டையே ஒன்று திரட்டினார், அவர். 
~ அன்னா ஹஜாரேயின் எதிர்ப்பு அரசை ஆட்டிப்படைக்கிறது. உள்குத்து வலிக்கிறது. 
~ மார்ட்டின் லூதர் கிங் தன் கனவை காந்தீயமுறையில் நனவாக்கினார். 
~ லண்டன் ஹைட் பார்க்கில் யார் வேண்டுமானாலும் எதை பற்றி வேண்டுமானாலும் கையையும் காலையும் ஆட்டி, வாயாடலாம். 
~ இத்தனை பீடிகை, நவம்பர் 15, 1969 அன்று வாஷிங்டனில் வியட்நாம் போரை எதிர்த்து நடந்த மக்களின்  ஆரவாரத்தின் படிப்பினையை புரிந்து கொள்ள:

வியட்நாமிலிருந்து அமெரிக்க வீரர்களை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று ஒரு மாபெரும் மக்கள் எதிர்ப்பு, அமைதியாக, நடந்தது. 250 ஆயிரம் மக்கள் அதில் கலந்து கொண்டதாக,ஜெர்ரி வில்சன் என்ற உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். விமானத்திலிருந்து எடுத்தப் புகைப்படங்கள் மூலமாக அது 300 ஆயிரம் என்று ஊகிக்கப்பட்டது. 500 ஆயிரம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இன்று ஏதோ பெரிய கார்மேகமொன்று இறங்கி வந்தாற்போல், ஒரு மாபெரும் அமைதி பட்டாளம் வந்து இறங்கியது, வாஷிங்டனில். முக்கிய ராஜபாட்டைகளில், ஒரு மனிதக்கடல் ஊர்ந்து சென்றது. அதன் குறிக்கோள்: அதிபர் நிக்சனின் வியட்நாம் அன்னநடை போக்கை கண்டிப்பது. விரைவில் அமெரிக்க வீரர்கள் திரும்பவேண்டும் என்ற கோரிக்கை. அவர்களின் தலைவரான மினசாடோ செனேட்டர் யூஜின்.ஜே. மக்கார்த்தி அவர்களின் சொற்பொழிவின் சாரம், 

“...வரலாறு தெளிவாக கூறுவது யாதெனில்: பழங்காலமோ, தற்காலமோ, மக்களின் நம்பிக்கையை, சுய ஆதாயத்துக்காகவோ அல்லது தவறான அணுமுறையினாலோயோ, பலிகடா செய்த அரசியலர்கள், மக்களுக்கு தீமை விளைவித்தவர்கள் என்க. மக்களின் நம்பிக்கையயும் நன்றியையும் வைத்துக்கொண்டு, ரோமானிய சீசர் சக்ரவர்த்திகள் போருக்கு சென்றார்கள். அம்மாதிரியே மக்களின் ஆதரவை பணயம் வைத்து நெப்போலியன் செய்யாதன செய்தான். இவை எல்லாம் அமெரிக்காவுக்குப் பாடம்...”.
பெரும்பாலும் மாணவர்களே. கறுப்பினம்/இடது சாரி அதிகமாக தென்படவில்லை. கிட்டத்தட்ட 100 இயக்கங்கள் கலந்து கொண்டன. சமாதானம் நாடும் கோஷங்கள் எழுந்தன. அங்குமிங்குமாக போலீஸ் அதிகப்படி என்றாலும், கூட்டத்தின் கட்டுப்பாடு, அவர்களால், தமக்குள், நியமிக்கப்பட்ட வாலண்டியர்களிடம். அவர்கள் கறார். ராணுவம் தலை காட்டவில்லை. போலீஸ் போக்குவரத்து ஒழுங்குமுறையுடன் சரி. “ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, தந்திரம் செய்யும் டிக்கி, போரை நிறுத்து.” என்ற கோஷம் அதிகமாகக் கேட்கப்பட்டது. ஆகஸ்ட் 28, 1963 அன்று 200 ஆயிரம் மக்கள் கூடி மார்ட்டின் லூதர் கிங்க் அவர்களின் சொற்பொழிவை கேட்கக்கூடியது நினைவில் வந்தது. ரிபப்ளிகன் செனெட்டர் சார்லஸ்.இ. குடெல் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.சில சிறிய தீவிர எதிர்ப்பாளர்கள் குழுக்கள் மாலையில் அமெரிக்க தேசியக்கொடியை எரித்தனர். சில்லறை விஷமம் செய்தனர். புகை வாயு வீசப்பட்டது. சிலர் கைதாயினர். மாலை 8 மணிக்கு அவர்கள் கலைய ஆரம்பித்தனர். இரவு 11 மணிக்கு சகஜ நிலை திரும்பியது. மூவாயிரம் இளைஞர்களுக்கு போக்குவரத்து வசதி கிடைக்காததால், முனிசிபாலிட்டியே அவர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தது.
~~~~~~இதில் நமக்கு என்ன பாடம் இருக்கிறது?
இன்னம்பூரான்
Washington+War+Moratorium+1969.jpg

உசாத்துணை:
12 Sep 2009 – Demonstrators hold up banners on Capitol Hill in Washington on Saturday. 'I will not waste time with those who think that it's just good politics ... 

Thevan 15 November 2011 19:01


அரசாங்கங்கள் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்.
௧௫ நவம்பர், ௨௦௧௧ ௧௦:௫௫ பிற்பகல் அன்று, 


செல்வன் 15 November 2011 23:43



2011/11/15 Innamburan Innamburan <innamburan@gmail.com>
வியட்நாமிலிருந்து அமெரிக்க வீரர்களை உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று ஒரு மாபெரும் மக்கள் எதிர்ப்பு, அமைதியாக, நடந்தது. 250 ஆயிரம் மக்கள் அதில் கலந்து கொண்டதாக,ஜெர்ரி வில்சன் என்ற உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார். விமானத்திலிருந்து எடுத்தப் புகைப்படங்கள் மூலமாக அது 300 ஆயிரம் என்று ஊகிக்கப்பட்டது. 500 ஆயிரம் என்றும் சிலர் சொல்கிறார்கள். இன்று ஏதோ பெரிய கார்மேகமொன்று இறங்கி வந்தாற்போல், ஒரு மாபெரும் அமைதி பட்டாளம் வந்து இறங்கியது, வாஷிங்டனில். முக்கிய ராஜபாட்டைகளில், ஒரு மனிதக்கடல் ஊர்ந்து சென்றது. அதன் குறிக்கோள்: அதிபர் நிக்சனின் வியட்நாம் அன்னநடை போக்கை கண்டிப்பது. விரைவில் அமெரிக்க வீரர்கள் திரும்பவேண்டும் என்ற கோரிக்கை.


இந்த கோமாளிகள் இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஊர்வலம் போயிருந்தால் இன்னும் ஐரோப்பா ஹிட்லரின் பிடியில் இருந்திருக்கும்.

லிப்ரல்களின் துரோகம் மட்டும் இல்லையெனில் கம்யூனிசத்தை இன்னும் பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பே வீழ்த்தி இருக்க இயலும். ஆனால் லிபரல்களால் நாட்டின் முன்னேற்றத்தை தாமதிக்க முடியுமே ஒழிய தடுத்து நிறுத்த இயலாது.

இப்போது லிபரல் ஜோக்கர்களின் கனவு புராஜக்டான யூரோ குப்புற கவிழ்ந்து கிடக்கிறது.சோஷலிச கட்சி ஆளும் கிரேக்கம் பணால் ஆகிவிட்டது. இன்று நியூயார்க் டைம்ஸில் பால் க்ருக்மன் இத்தாலி அவுட்டனால் யூரோவும் அவுட் என புலம்பி தள்ளி இருக்கிறார்.
--
செல்வன்

Innamburan Innamburan 16 November 2011 08:58
To: mintamil@googlegroups.com
இந்த கோமாளிகள் இரண்டாம் உலக யுத்தத்தின்போது ஊர்வலம் போயிருந்தால்....

~ கனவலைகள் மோதுகின்றன. அப்பாவுக்கு சாமுவேல் தேவசகாயம்னு ஜிக்ரி தோஸ்த். நேரே கிட்சன்லெ வந்து ஃபில்டர் காபி கேப்பார். அவர் வீட்டுக்குப்போனா சுவை மிகுந்த கேக் கிடைக்கும். தோட்டத்திலெ கொடுக்காப்புளி பறிச்சுக்கோன்னு துரட்டி கொண்டு வந்து கொடுப்பார். ஆனா பாருங்கோ! அவர் கிட்ட என்ன பேச்சுக் கொடுத்தாலும் ~ நேருவும் சீனாவும், காந்தியும் திருவள்ளுவரும், சுருட்டில்லா சர்ச்சில், தொல்காப்பியமும் நாமக்கல் கவிஞரும், எப்படி வாணாப்பேசிப்பாருங்கோ, சுவிசேஷத்தவப்புதல்வரான, சாமுவேல் தேவசகாயம் மாமா, ‘கர்த்தர் என்ன சொல்றார்னா’, பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே, இந்த சிவபிரான் படுத்துவதை பாரும்’, ‘விவிலியத்திலிருந்து ஒரு பகுதி தாண்டா, இந்த திவ்யபிரபந்தம்’ என்று விட்டு விளாசுவார்.
 அந்த மாதிரி...
இன்னம்பூரான்
16 11 2011 



செல்வன் 16 November 2011 14:24



2011/11/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
~ கனவலைகள் மோதுகின்றன. அப்பாவுக்கு சாமுவேல் தேவசகாயம்னு ஜிக்ரி தோஸ்த். நேரே கிட்சன்லெ வந்து ஃபில்டர் காபி கேப்பார். அவர் வீட்டுக்குப்போனா சுவை மிகுந்த கேக் கிடைக்கும். தோட்டத்திலெ கொடுக்காப்புளி பறிச்சுக்கோன்னு துரட்டி கொண்டு வந்து கொடுப்பார். ஆனா பாருங்கோ! அவர் கிட்ட என்ன பேச்சுக் கொடுத்தாலும் ~ நேருவும் சீனாவும், காந்தியும் திருவள்ளுவரும், சுருட்டில்லா சர்ச்சில், தொல்காப்பியமும் நாமக்கல் கவிஞரும், எப்படி வாணாப்பேசிப்பாருங்கோ, சுவிசேஷத்தவப்புதல்வரான, சாமுவேல் தேவசகாயம் மாமா, ‘கர்த்தர் என்ன சொல்றார்னா’, பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே, இந்த சிவபிரான் படுத்துவதை பாரும்’, ‘விவிலியத்திலிருந்து ஒரு பகுதி தாண்டா, இந்த திவ்யபிரபந்தம்’ என்று விட்டு விளாசுவார்.
 அந்த மாதிரி...


அந்த மாதிரி தோழர்கள் அனைத்தையும் கம்யூனிச கண்னாடி மூலமே பார்த்து ஆதரித்தும், எதிர்த்தும் வந்ததால் அவர்கள் செய்ததை மாத்திரம் இங்கே விளக்க அதே கம்யூனிச கண்னாடி தேவைபடுகிறது.

வியட்னாம் போரை விட மோசமான உலகபோரில் அமெரிக்கா இறங்கியது.அதை உலகெங்கும் இடதுசாரிகள் ஆதரித்தனர்.காரணம் அவர்களின் அபிமான சோவியத்யூனியன் காக்கபடவேண்டும் என்ர எண்ணத்தில். இந்தியாவில் சோவியத்யூனியன் மேல் ஹிட்லர் படை எடுக்கும்வரை "இந்தியா போரில் இறங்ககூடாது" என போராடி வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி சோவியத்யூனியன் மேல் ஹிட்லர் படை எடுத்தவுடன் பல்டி அடித்து "இந்தியா உலகயுத்தத்தில் இறங்கவேண்டும்" என்றது.இதே வியட்னாம் என்றதும் "போரை எதிர்க்கிறோம்" என பிளேட் திருப்பி போடபட்டது.

[Quoted text hidden]

Innamburan Innamburan 16 November 2011 16:35

வியட்னாம் போரை விட மோசமான உலகபோரில் அமெரிக்கா இறங்கியது......
~ சாமுவேல் மாமா கிட்ட சொன்னேன். விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 19 - "திருப்பாடல்கள்" அதிகாரம் 2: திருப்பாட்டு 1 படிக்கச்சொன்னார்.
இன்னம்பூரான்

2011/11/16 செல்வன் <holyape@gmail.com>


20

Wednesday, November 13, 2013

வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை!அன்றொரு நாள்: நவம்பர் 14:

அப்டேட்:1:  என் செலவில் ஒரு கம்பிளைச்சால்வை வாங்கிக்கொண்டேன். இப்போது நல்ல குளிர், இங்கே. அதை போத்திக்கொண்டு இருக்கிறேன்.

அப்டேட்:2: நேரு, படேல், ஆஸாத், கிருபளானி, நேதாஜி என்றெல்லாம் இன்று கதை பேசும், அபிப்ராய சிசுக்களுக்கு, பாரதியார் விவரித்த சூரத் காங்கிரஸ் பற்றி தெரியாது என்று நினைக்கிறேன். திலகரும் கோகலேயும் கருத்து வேறுபட்டனர். நேருவுக்கும் படேலுக்கும், ராஜாஜிக்கும் இருந்த நட்புரிமையுடன் கூடிய அபிப்ராய பேதம், இன்று நாம் கண்டு இளிக்கும் கூடா நட்பு கூட்டமைப்புகளின் போலி உறவை விட கோடிக்கணக்கு மேல், அறிவிலிகாள்!
இன்னம்பூரான்
14 11 2013

அன்றொரு நாள்: நவம்பர் 14: வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை!
23 messages

Innamburan Innamburan 13 November 2011 19:31

அன்றொரு நாள்: நவம்பர் 14:
வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை!
ஜவஹர்லால் நேரு (14 11 1889 ~27 05 1964)
விடுதலை வீரர். மஹாத்மா காந்தியின் அரசியல் வாரிசு. இந்தியாவின் நீண்டகால முதல் பிரதமர். குழந்தைகளின் நண்பர். இன்று குழந்தைகள்   தினமாக விழா எடுப்பது முற்றிலும் பொருத்தமே. குமரியிலிருந்து லடாக் வரை, மேற்குக்கோடி ‘ரன் ஆஃப் கட்ச்’ லிருந்து கிழக்குக்கோடி24 பர்காணா வரை பெரும்பாலான இந்திய குடும்பங்கள் இவரை உறவினராகப் பாவித்தன. அவரை பற்றி எதை எழுதுவது? எதை விடுவது? எது தான் உங்களுக்கு தெரியாதது!  அக்காலம் அறியா தற்காலத்தவர்கள் சிலர் அவரை கடுமையாக விமரிசிப்பது உண்டு. ஒரு காலகட்டத்தில் இதழியல் மேதை ராமானந்த சட்டர்ஜி ( அவர் மூன்று தலைமுறைகளின் விழிப்புணர்ச்சியை உரம் போட்டு வளர்த்தவர்)  பிரசுரித்த மாடர்ன் ரிவ்யூவில் நேருவை கண்டிக்கும் போக்கில் ஒரு கட்டுரை வந்தது; ஒரே எதிர்ப்பு. பிறகு தான் தெரியவந்தது, அது அவரே எழுதியது என்று.  அந்த நேரு தற்கால விமர்சனங்களை, அவை உரிமை பிரகடனங்கள் என்று அனுமதித்து விடுவார்.
மனதில் இத்தருணம் தோன்றும் சில நினைவுகளை மட்டும் அசை போடுகிறேன்.
என்றோ படித்தது: ஜவஹர் கல்யாணத்திற்கு, அலஹாபாதிலிருந்து ஒரு பிரத்யேக ரயில் வண்டியில் மாப்பிள்ளை வீட்டார் டில்லி சென்றார்கள் என்று.
மெளண்ட்பேட்டனிடம் நேருஜி அமைச்சர்கள் பட்டியல் இருந்த கவரை கொடுத்தார். பிரித்தால் வெத்துப்பேப்பர்! அத்தனை நெருக்கடி. ஞாபகமறதி. இந்த மாதிரி 500 பக்கங்கள் எழுதலாம், இன்றே.
அப்பா சொன்னது: மோதிலால் நேருவின் மாளிகை ‘ஸ்வராஜ்பவன்’ அவரால் ஒரே மகன் ஜவஹர் பேரில் கிரயம் செய்யப்படுகிறது. மகனாக அல்ல. காங்கிரஸ் கட்சியின் அக்ராசனராக. 
பார்த்தது: நான் நேருஜியை ஆவடி காங்கிரஸ்ஸில் முதல் முறையாக பார்த்தேன். ஜன வெள்ளம். ஜிப்பா ஜேபியில் இருந்த மூக்குக்கண்ணாடியை தேடி, அமர்க்களப்படுத்தி விட்டு, அது கிடைத்தவுடன் அவர் சிரித்த அசட்டுச்சிரிப்பின் வசீகரம் அபரிமிதம், போங்கள்!. பிறகு, 1961-2 என்று ஞாபகம். ஆம். சொன்னதை எல்லாம் மறுபடியும் சொல்கிறேனோ? வயசு ஆயிடுத்தோல்லியோ! மின் தமிழில் புதியவர் வருகையும் உளது. சித்தரஞ்சன் ரயில் இஞ்சின் தொழிற்சாலைக்கு வந்திருந்தார். தேனீர் விருந்தின் போது என் மகனை தூக்கிவைத்துக்கொண்டார். இருவரும் ஒரே சமோசாவை சுவைத்தனர். இரவு விருந்தில் ரொம்பவும் சகஜமாகப் பழகினார். அப்பாவும் பொண்ணுமாக, அவரும் வஸந்தாவும் பேசி மகிழ்ந்தனர். என் கையில் கட்டு. கேலி செய்தார். மறு நாள், அசன்சால் ரயில் நிலையத்தில், வரும் ரயில் வண்டியில், கதவைத் திறந்து கொண்டு நிற்கிறார்! செக்யூரிடியாவது! மண்ணாங்கட்டியாவது! ஒரே ஆரவாரம். மக்களுக்கு அவர் வண்ணாத்தி. அவருக்கு மக்கள் வண்ணன். அப்படி ஒரு ஆசை. 
அடுத்த வருடமே, அவர் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் எனக்குப் பணி. அடிக்கடி தரிசனம் கிடைக்கும். வழி விட்டு, நமஸ்தே சொன்னால், அவரும் பதில் மரியாதை தெரிவிப்பார். ஒரு நாள் எதிர்பாராத விதமாக பார்த்துக்கொண்டபோது, அவருடைய சிவந்த முகம், கருப்பாக, குழம்பிக்கிடந்தது. அத்வானத்தைப்பார்த்து நடந்தார். மரியாதையுடன் தள்ளி நின்ற நாங்கள் யாருமே அவர் கண்ணில் படவில்லை. பிறகு தான் தெரிந்தது, ராணுவ அமைச்சர் வீ.கே.கிருஷ்ணமேனனிடன் ராஜிநாமா கடிதம் வாங்கச்சென்றார், என்று. வீ.கே.க. அவருடைய நண்பர். சைனா யுத்தம் உச்சகட்டம். யாருக்கும் வீ.கே.கே. மீது நம்பிக்கை இல்லை. இருந்தும், பண்புடன் நண்பரை நடத்தினார், பிரதமர்.
எனக்கோ பார்லிமெண்ட் ட்யூட்டி. ஓடினேன். ஒய்.பி.சவான் புதிய ராணுவ அமைச்சர் என்று பிரதமர் அறிவித்தவுடன் கரகோஷம் வானை பிளந்தது. அருகில் இருந்தேனா! அவருடைய அகத்தில் மகிழ்ச்சி இருந்ததாக, முகத்தில் தெரியவில்லை. குடியரசு தினவிழா. சைனா யுத்தம். உச்சகட்டம். பிரதமரின் தலைமையில் ராஜ்பத் ராஜபாட்டையில் நடை ஊர்வலம். இப்படியெல்லாம் தற்காலத்தலைமுறையால் கற்பனை கூட செய்யமுடியாது. ஜான் லால் ஐ.சி.எஸ். தலைமையில் ஒரு இருவர் குழு, பிரதமரை அடை காத்து, மேடைக்கு அழைத்து வர. அடியேன் இரண்டாமவன். அந்தக்காலத்தில் தடால் புடால் ஏற்பாடுகள் கிடையாது. துணியாய் துவண்டு வந்து சேர்ந்தார், நேருஜி. கவலையுடன் டாக்டர்கள். அவருடைய பழைய கேடிலக் காரில் ஏற்றி செல்ல வேண்டும் என்று திட்டம். அது வசமாக கேட்டுக்கதவில் சிக்கிக்கொண்டது. ஏதோ குருட்டு அதிர்ஷ்டம், என் வசம் ஒரு ஜீப் ரகஸ்யமாக இருந்தது. காரிலிருந்து இறக்கி, இவரை ஜீப்பில் ஏற்றிக்கொள்வதற்குள் அவசரம். ஜனாதிபதியின் சாரட் மேடையை நெருங்கிவிட்டது. பிரதமர் அவரை வரவேற்கவேண்டும். கைபேசியாவது, கால் பேசியாவது! எப்படியோ சங்கேதம் செய்து சாரட் புரவிகளை சற்றே தாமதப்படுத்தினோம். ஜீப்பில் ஏறியவுடன் புன்முறுவல். களைத்த புன்முறுவல். அந்தக்காலத்து அதிகாரிகளின் பண்பு போற்றத்தக்கது. திரு.ஜான் லால் என்னை அறிமுகப்படுத்தி, ஜீப் ரகசியத்தை உடைத்தார். ‘ஹோஷியார் லட்கா ஹை’ என்றார், நேருஜி. எனக்கு உச்சி குளிர்ந்தது.
பிறகு ஒரு நாள், நேருஜி மீது திரு.ராம் மனோஹர் லோஹியா நம்பிக்கையில்லா தீர்மானம் கொணர்ந்தார். உத்தியோகஸ்தர் வரிசையில் எக்கச்சக்ககூட்டம். முண்டியடித்துக்கொண்டு , ஒத்தைக்கால் தவத்தில் நின்று குறிப்பு எடுத்தேன். கடுமையான தாக்குதல். லோஹியாவும் நேருவும், விடுதலைப்போரில் தோளுக்குத் தோள் கொடுத்த நண்பர்கள். லோஹியா வீசிய கடுஞ்சொற்களின் சூடு தகித்தது. நேருவின் முகத்தில் உணர்ச்சி கொப்பளித்தது. ஆனால், பாருங்கள். தேதி/தொடர்பு நினைவில் இல்லை. லோஹியா சிறையில். ஜன்ம தினம். ஒரு கூடை அல்ஃபான்சா மாம்பழம். அனுப்பியது, அவரை சிறையிலிட்ட நேருஜி.
ஒரு நாள் வசமாக மாட்டிக்கொண்டோம். ஒரு ஆவணத்தில், வரிசையாக, மூன்று ஸெளந்தரராஜன்கள்! பிரதமரின் வியங்கோள் வினா: Who are these Soundararajans?. எங்கள் உயரதிகாரி ஹரீஷ் ஸரீன் ஐ.சி.எஸ் அவர்கள் பிரதமரிடம் நல்ல பரிச்சியம் உள்ளவர். அவர் ஒரு நாள், ஏதோ ஒரு பிரமேயமாக, இவர்கள் தான் அந்த திரிமூர்த்திகள் என்று சொல்லி வைத்தார். கொள்ளை சிரிப்பு.
நான் 1964ல் மாற்றல் செய்யப்பட்டு வேறு வேலையில் சேர்ந்து விட்டேன். 25 வருடங்கள் கழித்து நேருபூமியான அலஹாபாத்தில் வேலை. அக்காலம் ஸ்வராஜ் பவனில் ஏலம். நேருஜியின் உடைமைகள் சில ஏலம் போடப்பட்டன. எனக்குக் கட்டுப்படியாகாத விலையில் போன அங்கவஸ்திரம் ஒன்றை அலுவலக செலவில், முறையான விதிகள் படி, வாங்கி, கண்ணாடி போட்டு வைத்தேன். என் செலவில் ஒரு கம்பிளைச்சால்வை வாங்கிக்கொண்டேன். இப்போது நல்ல குளிர், இங்கே. போத்திக்கொண்டு இருக்கிறேன், இப்போது.
இன்னம்பூரான்
14 11 2011
jawaharlal-nehru-20rupee-rev.JPG
nehru+family.jpg
children's+day+stamp+1997.jpg

Geetha Sambasivam 13 November 2011 20:23



பசுமை நிறைந்த நினைவுகளே,
பாடிக்களித்த பறவைகளே
என்று பாடலாம் போல் இருக்கிறது உங்கள் நினைவலைகள். 
அக்காலம் அறியா தற்காலத்தவர்கள் சிலர் அவரை கடுமையாக விமரிசிப்பது உண்டு//
இதில் நானும் உண்டு.  ஆகவே உங்களுக்குத் தெரிந்ததை சொல்லக் கூடியவற்றைக் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள். பகிர்வுக்கு நன்றி.

2011/11/13 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அன்றொரு நாள்: நவம்பர் 14:
வண்ணாத்திக்கு வண்ணான் மேலெ ஆசை!

இன்னம்பூரான்
14 11 2011

செல்வன் 13 November 2011 23:01

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
இந்த இழை ஒரு வரலாற்று பேழை.

--
செல்வன்

Thiruvengada Mani T.K. 14 November 2011 02:09


நன்றி ஐயா நினைவுகளைப் பகிர்ந்து பதிப்மைக்கு. இளைஞர் படித்துப் பயன் பெற வேண்டிய தகவல்கள் பலவும்... இவ்விழைகளில் வருகின்றன.
“இந்த இழை ஒரு வரலாற்றுப் பேழை“ மட்டுமல்ல நினைவுகளின் சுரங்கமும் கூட..... தோண்டத்தோண்ட தங்கக்கட்டிகள்....
தொடருக....
திருவேங்கடமணி
[Quoted text hidden]
--
Dr.T.K.Thiruvengada Mani

[Quoted text hidden]

rajam 14 November 2011 02:21

நல்ல, கூர்மையான, இளமைக்கால நினைவுகள்!
எனக்கும் நேரு மாமா பத்திக் கொஞ்சம் தெரியும்! அவர் பிறந்த நாள் குழந்தைகள் நாள் என்று முதல் முதலாக அறிவிக்கப்பட்டபோது பள்ளியில் ஒரு பச்சை சோப்பு டப்பா பரிசு கொடுத்தார்கள் எனக்கு! ஏன் என்று எனக்குப் புரியவில்லை! :-)
பின்னாளில் ... எங்கள் பூமி மாமா (பிறகு ஒரு நாள் அவர் பாமரகீர்த்தி பற்றி எழுதுகிறேன்) சித்ரா ஸ்டுடியோ ஆரம்பித்துத் தடபுடலாகப் போய்க்கொண்டிருந்தபோது அவர்தான் ஊருக்கெல்லாம் ஃபொட்டாக்ரஃபர். நேரு மதுரைக்கு வந்தபோது பூமி மாமா எடுத்த படம், அவர் மகள் சித்ராவுடன்.  







Nehru-1.tif
211K

Geetha Sambasivam 14 November 2011 02:45


உங்கள் பூமி மாமா பெயர் பாரதியா?? காக்காத்தோப்புத் தெரு போகும் வழியில் குடியிருந்தாரா?  படம் அருமை!  
[Quoted text hidden]


Nehru-1.tif
211K

rajam14 November 2011 03:07


இவர் பெயர் பாரதி இல்லெ, கீதா. இவர் பேரே "பூமி"தான். சீக்கிரமா இவர் பத்திச் சொல்ல ஆசை. எங்க அப்பாவின் சிறுபிள்ளைத் தோழர். இப்பொ காலமாயிட்டார். எங்க குடும்பத்துக்கு ரொம்ப அணுக்கமானவர். மிக மிக நயமான மனிதர். அவர்போல் அவ்வளவு அழகான, பண்புள்ள மனம் கொண்ட மனிதரை நான் பார்த்தது அரிது. 






coral shree 14 November 2011 05:15

ஆகா, அருமை .... மறைந்திருக்கும் புதையல் அனைத்தும் மெல்ல மெல்ல வெளி வரும் போல் உள்ளதே..... இ ஐயா செய்யும் மாயம் இப்போதெல்லாம் எல்லை கடந்து கொண்டிருக்கிறது.... வாழ்க வாழ்க பல்லாயிரம் ஆண்டு! ராஜம் அம்மா, சீதாம்மா பேரா. நாகராஜன் ஐயா , கண்ண் பரமாத்மா....இப்படி அனைத்து புதையல் தளங்களையும் இழுத்துக் கொண்டு வந்து வெளிப்படுத்த வேறு யாரால் ஆகும்.... சூப்பரோ சூப்பர்!
[


Nehru-1.tif
211K

Innamburan Innamburan 14 November 2011 07:31

தன்யனானேன். பற்பல தங்கச்சுரங்கங்கள்.  பூமி மாமா, சாம்பவசிவத்தின் அப்பா, திருநாவுக்கரசின் தந்தை, புலவர் முத்துக்கருப்பனாரின் தந்தை போன்றோரின் பாமரகீர்த்தி வரவேண்டும். ஒரு வேடிக்கை. அந்த சிறியக்கூட்டத்தில், நேருஜி என் மூன்று வயது மகனை தட்டிக்கொடுத்தார். அவன் ஹிந்தியில் அப்போது பிளந்து கட்டுவான். 'முஜ்ஸே ஹாத் மிலாயகா? நஹீன்?' (எனக்கு கைலாகு கொடுப்பீர்களா? இல்லையா?). என்று முறைத்தான். கைலாகு கொடுத்து, தூக்கிக்கொண்டு, பக்கத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து, இருவரும் நிதானமாக,சிற்றுண்டி அருந்தினார்கள். நாங்கள் காத தூரத்தில்.இன்னம்பூரான்
14 11 2011
இன்னம்பூரான்
den]


Nehru-1.tif
211K

coral shree 14 November 2011 08:14


எத்துனை அருமையான நினைவலைகள்! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று நிரூபித்து விட்டார் தங்கள் மகன், முளை விடும் போதே! வாழ்த்துகள் அவருக்கும்.பகிர்விற்கு நன்றி ஐயா.
[


Nehru-1.tif
211K

N. Kannan 14 November 2011 10:09


நான் காந்தித்தாத்தாவைப் பார்த்ததில்லை. ஆனால் நேரு மாமாவைப் பார்த்திருக்கிறேன். 

அப்போது மானாமதுரைவாசம். நேருமாமா வைகைப் பாலத்தைக் கடந்து எங்கோ செல்கிறாராம். காலையிலிருந்து கையில் சின்னக் கொடியுடன் நாங்களெல்லாம் பாலத்தின் மீது காத்திருந்தோம். சில மணி வாட்டலுக்குப் பிறகு வண்டி வந்தது. நேருமாமா ஷெர்வாணியுடன் கையசைத்த வண்ணம். சென்ற முறை டெல்லி போன போது இந்த டெல்லி தர்பார் கருப்பு சூட்டொன்று வாங்கி வந்தேன். எப்போதாவது போடுவதுண்டு. (http://www.subaonline.net/nakannan/ ஒரு சின்னப்படம் இங்கு ஒளிந்து கொண்டு இருக்கிறது). எப்படித்தான் அந்த வேகாத வெய்யிலில் அந்தவுடை போட்டுக்கொண்டு சிரிக்க முடிகிறதோ?

நா.கண்ணன்
2011/11/14 coral shree <coraled@gmail.com>
ஆகா, அருமை .... மறைந்திருக்கும் புதையல் அனைத்தும் மெல்ல மெல்ல வெளி வரும் போல் உள்ளதே..... இ ஐயா செய்யும் மாயம் இப்போதெல்லாம் எல்லை கடந்து கொண்டிருக்கிறது.... வாழ்க வாழ்க பல்லாயிரம் ஆண்டு! ராஜம் அம்மா, சீதாம்மா பேரா. நாகராஜன் ஐயா , கண்ண் பரமாத்மா....இப்படி அனைத்து புதையல் தளங்களையும் இழுத்துக் கொண்டு வந்து வெளிப்படுத்த வேறு யாரால் ஆகும்.... சூப்பரோ சூப்பர்!

-- 
[Quoted text hidden]

Geetha Sambasivam 14 November 2011 11:10


தேட வேண்டி இருக்கே படத்திலே.  நானும் பள்ளி நாட்களிலேயே நேருவைப் பார்த்தேன். அனைவரின் நெஞ்சிலும் பசுமையான நினைவுகள்.


Geetha Sambasivam 14 November 2011 11:13


எழுதுங்க அம்மா.  எங்க குடும்பத்திலே இப்போப் பெரியவங்க அந்தக் காலங்களைப் பற்றிச் சொல்லக் கூடியவர்களே இல்லை.  பூமி என்னும் பெயரும் கேள்விப் பட்டமாதிரிதான் இருக்கு. சித்ரா ஸ்டுடியோ தெரியும். யார் சொந்தக்காரர் என்ற அளவுக்குத் தெரியாது.  என் அப்பாவின் நண்பர் டவுன்ஹால் ரோடில் கிருஷ்ணா ஸ்டுடியோ வைத்திருந்தார்.  எதிரே ரேடியோ மாமா என்று அழைக்கப்பட்ட ரேடியோ பட்டாபியின் வீடு இருக்கும்.


[Quoted text hidden]

N. Kannan 14 November 2011 11:54

:
> தேட வேண்டி இருக்கே படத்திலே.  நானும் பள்ளி நாட்களிலேயே நேருவைப்
> பார்த்தேன். அனைவரின் நெஞ்சிலும் பசுமையான நினைவுகள்.
>

படம் பார்த்து கதை சொல் :-))

அது கருப்பு கோட்டு! வட இந்திய மந்திரிகள் போட்டுக்கொள்வது!

க.>

[Quoted text hidden]

rajam 14 November 2011 16:29


ஜோரான படங்கள்!! முறைத்த பார்வைக் கண்ணன், அரும்புமீசைக் கண்ணன், குறும்புச் சிரிப்புக் கண்ணன் ... இப்படியெல்லாம் உருவாகிவந்திருக்கிறீர்கள்! "குடும்ப நூலகம்" தொடங்கவேண்டும் என்று ஒரு முறை சொல்லியிருந்தீர்கள். செய்துவிட்டீர்களே! பாராட்டு!
:

Narayanan Kannan 14 November 2011 23:10


எனக்குக் கூர்தலியல் (பரிணாமவியல்) பிடிக்கும்! அதன் விளைவு. நான்
தொட்டிலில் தவழ்ந்து கொண்டிருக்கும் படமுண்டு. யார் வீட்டில் கிடக்கிறது
என்று தெரியவில்லை. தேடிப்பிடித்து அங்கு போட வேண்டும்.

யாரோ கேட்டார்கள்! நீ பதின்ம வயது கண்ணனாக மாறும் வாய்ப்புக் கிடைத்தால்
போவாயா என்று. மாட்டேன் என்று தோன்றுகிறது. வாழ்வு தந்த அனுபவங்களுக்கு
நன்றியுடையவனாகி இப்போது உள்ள அனுபவப்புரிதலுடன் இருக்கவே ஆசை. மீசை
வைத்துக் கொண்டால் கொரியாவில் பயப்படுகிறார்கள் :-)

நா.கண்ணன்

கி.காளைராசன் 15 November 2011 09:36


ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.
> அன்றொரு நாள்:
நவம்பர் 14:
>
> ஜவஹர்லால் நேரு (14 11 1889 ~27 05 1964)
>
காரைக்குடிக்கு வந்து மத்தியமின் வேதியல் ஆய்வுக் கூடத்தைத் திறந்து
வைத்த போது எடுத்த புகைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்துள்ளேன்.  அவற்றைச்
சேகரித்து வள்ளல் பிறந்தநாள் அன்று மின்தமிழிலில் வெளியிட
முயற்சிக்கிறேன்.

> மனதில் இத்தருணம் தோன்றும் சில நினைவுகளை மட்டும் அசை போடுகிறேன்.
> அடுத்த வருடமே, அவர் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தில் எனக்குப் பணி. அடிக்கடி
> தரிசனம் கிடைக்கும். வழி விட்டு, நமஸ்தே சொன்னால், அவரும் பதில் மரியாதை
> தெரிவிப்பார்.

இதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை உள்ளதல்லவா!


> ஏலம். நேருஜியின் உடைமைகள் சில ஏலம் போடப்பட்டன. எனக்குக் கட்டுப்படியாகாத
> விலையில் போன அங்கவஸ்திரம் ஒன்றை அலுவலக செலவில், முறையான விதிகள் படி,
> வாங்கி, கண்ணாடி போட்டு வைத்தேன்.

படம் இருந்தால் அன்போடு போடுமாறு வேண்டுகிறேன்.

என் செலவில் ஒரு கம்பிளைச்சால்வை
> வாங்கிக்கொண்டேன். இப்போது நல்ல குளிர், இங்கே. போத்திக்கொண்டு இருக்கிறேன்,
> இப்போது.

இப்போதும் இப்படியொரு கொடுப்பினை உண்டல்லவோ!
இதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

அன்பன்
கி.காளைராசன்

[Quoted text hidden]


rose.jpg
3K

கி.காளைராசன் 15 November 2011 09:39


ஐயா கண்ணன் அவர்களுக்கு வணக்கம்.

சிறுவன், மாணவன், பட்டதாரி, ஆய்வாளர், ஆய்வு நிறைஞர் என அடுத்தடுத்த
படங்கள் அனைத்தும் அருமை. வயது கூடிக்கொண்டே போக.... முடிகுறைந்து கொண்டே
போகிறது.

Innamburan Innamburan 15 November 2011 10:09
To: mintamil@googlegroups.com
நன்றி, காளை ராஜன். அந்த படங்களை வெளியிடுங்கள். பார் அட் லா அவர்களின் விசிறியாகிய  நான் காரைக்குடி வந்து, மத்திய மின் வேதிய ஆய்வுக்கூடத்தின் முதல் டைரக்டர் டாக்டர் பி.பி.டே அவர்களை பேட்டி கண்டு எங்கேயோ பிரசரிக்கக்கொடுத்தேன். வேதிய ஆய்வில் ஆர்வமிருந்தால், என்னை வேலைக்கு எடுத்துக்கொள்வதாகச் சொன்னார். நான் தான் வேறு திசையில் சென்று விட்டேன்.
[Quoted text hidden]

N. Kannan 15 November 2011 10:29


2011/11/15 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>:
> ஐயா கண்ணன் அவர்களுக்கு வணக்கம்.
>
> சிறுவன், மாணவன், பட்டதாரி, ஆய்வாளர், ஆய்வு நிறைஞர் என அடுத்தடுத்த
> படங்கள் அனைத்தும் அருமை. வயது கூடிக்கொண்டே போக.... முடிகுறைந்து கொண்டே
> போகிறது.
>

 Purely genetics! ஐயா!

எனக்கு விவரம் தெரிந்த போது என் தந்தை என் போன்ற தலையுடன்தான் இருந்தார்.

முழுக்க மொட்டையடிக்கூட ஆசையுள்ளது. முடி குறையக் குறைய அழகு கூட
வாய்ப்புள்ளது. என்னைப் பொறுத்தவரை நான் எனக்கு முக்கியம் என்பதை நான்
பார்ப்போருக்கு சகிக்கக்கூடியவனாக உள்ளேனா என்பதில் அக்கறை கொள்கிறேன்.
இது ஆப்பிள் நிறுவனத்தின் நோக்கு!

நா.கண்ணன்

[Quoted text hidden]

Tthamizth Tthenee 15 November 2011 15:57


பார்த்தேன், படித்தேன்

இன்றுதான் இணையத் தொடர்பு கிடைத்தது

மிகவும் அருமை

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/11/15 N. Kannan <navannakana@gmail.com>:

[Quoted text hidden]

rajam 15 November 2011 16:40




முடி குறையக் குறைய அழகு கூட
வாய்ப்புள்ளது.

ஆண்களைப் பொருத்தவரை இது ஓரளவு உண்மையே! :-) அழகு என்பதைவிட மெருகு என்ற சொல் இன்னும் நன்றாகப் பொருந்தும். 


முழுக்க மொட்டையடிக்கூட ஆசையுள்ளது.


முழுக்க மொட்டையடிக்கவும் வேணாம்;  கலிக்கு வந்துவிட்டுப் போகும்வரையிலாவது ... மீசை/தாடி வைத்துக்கொள்ளவும் வேணாம்! மீசை/தாடி எனக்குப் பயம். :-) :-) :-) 
[Quoted text hidden]
[Quoted text hidden]