Showing posts with label தஞ்சை. Show all posts
Showing posts with label தஞ்சை. Show all posts

Friday, November 15, 2013

பாரிசில் க.கொ.சோ:அன்றொரு நாள்: நவம்பர் 16



அன்றொரு நாள்: நவம்பர் 16 பாரிசில் க.கொ.சோ

Innamburan Innamburan 16 November 2011 16:21


அன்றொரு நாள்: நவம்பர் 16
பாரிசில் க.கொ.சோ

கூடி வாழ்ந்தால் கோடி புண்ணியம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்த ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) தோன்றிய தினம், நவம்பர் 16, 1945. 1995லிருந்து, தன் ஜன்மதினத்தை, அந்த உலக சகிப்புத் தன்மை தினமாக கொண்டாடுகிறது. பொறுத்தார் பூமியாள்வார் என்று தெரியாமலா சொன்னார்கள்! ஐ.நா. வின் சிறப்பு அவ்வப்பொழுது மங்கும். அதனுடைய சில அமைப்புக்கள் செலவு செய்வதில் தடபுடல். யுனெஸ்கோ, டபிள்யூ.ஹெச். ஓ. போன்றவையின் பணி போற்றத்தக்கது. யுனெஸ்கோ போன்ற நிறுவனத்தின் அவசியத்தை 1921 லியே உலக நாடுகள் உணர்ந்திருந்தன. ஸெப்டெம்பர் 21, 1921 அன்று எடுத்தத் தீர்மானமும், ஜனவரி 4, 1922 அன்று அமைக்கப்பட்ட சர்வதேசக்குழுவும், ஆகஸ்ட் 9, 1925 ல் பாரிசில் அமைக்கப்பட்ட முன்னோடி நிறுவனமும் அடித்தளம் என்க. இந்த பாழாப்போன யுத்தம் வந்ததில் எல்லாம் தடைபட்டது. அடுத்தபடியாக அட்லாண்டிக் ஒப்பந்தம், இது வளர வழி வகுத்தது. 1942லிருந்து மூன்று வருடங்களுக்கு இணைந்த கல்வி அமைச்சர்களின் மாநாடு ஆக்கப்பூர்வமாக, பல விஷயங்களை விவாதித்து, 1945ம் வருட நவம்பர் மாத முதல் இரு வாரங்களில் லண்டனில் நடந்த 44 நாடுகளின் கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் புனர்ஜன்மம் எடுத்தது எனலாம். புகழ்வாய்ந்த விஞ்ஞானி ஜூலியன் ஹக்ஸ்லி அவர்களின் தலைமையில், டிசெம்பர் 1946லிருந்து தீவிரமாகப் பணி துவக்கமாயிற்று. இந்த நிறுவனம் இனவெறியை எதிர்த்ததால், 1956ல் விலகிக்கொண்ட தென்னாஃப்பிரிக்கா, நெல்ஸன் மண்டேலா அவர்கள் தலைமையில் 1994ல் ‘பூ மணத்துடன் திரும்பி வந்த மச்சானாக’ வந்து சேர்ந்தது. 1968ல் உயிர்க்கோளத் திட்டம் கொணர்ந்ததும், 1989ல் உலகளாவிய வலைத்தளம் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கவை.தற்காலம் 193 நாடுகள் உறுப்பினர்களாகவும், மேலும் ஏழு நாடுகள் கலந்து கொள்ளும் தகுதியுடனும், இந்த நிறுவனத்தின் சேவையில் பங்களிக்கிறனர். 

நமக்கெல்லாருக்கும் மனநிறைவை தரும் செய்தி ஒன்றை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி. தஞ்சை மாவட்டம். ஒரு சிறிய வட்டம். தஞ்சை, தாராசுரம், கங்கை கொண்ட சோழபுரம். புராதனக்கோயில்கள் மூன்று. அவற்றில் இரண்டில், பெருமானின் திருநாமம் ஒன்றே. அந்த மூன்று கோயில்களும் இந்தியாவின் மரபையும், பண்பையும், கலையார்வத்தையும், உலகமே வியக்கும் அளவில் பிரதிபலிப்பதால், அவற்றை போற்றி பாதுகாப்பதில், யுனெஸ்கோ அதிக கவனம் செலுத்து வருகிறது. அவற்றை இங்கு http://whc.unesco.org/en/list/250 கண்டு மகிழுங்கள்.
இந்தியன் என்று தலை நிமிர்ந்து கொண்டேன். தமிழன் என்று மார்தட்டிக்கொண்டேன். சோழநாட்டு இன்னம்பூரான் என்று காலரை தூக்கி விட்டுக்கொண்டேன்.
இன்னம்பூரான்
16 11 2011
darasuram.jpg
உசாத்துணை:

Thursday, April 25, 2013

எப்படி ஓடினரோ-6





எப்படி ஓடினரோ-6

Innamburan S.Soundararajan Thu, Apr 25, 2013 at 8:33 AM

எப்படி ஓடினரோ-6
Inline image 1


   ‘ஓடிப்போறது = eloping: உடன்போக்கு = Eloping.‘  ஆங்கிலத்தில் பெரிய/சிறிய எழுத்துக்கள் குறிப்பால் உணர்த்த உதவுகின்றன. யார் கண்டார்கள்? ஒருகாலம், தமிழ் எழுத்துக்களும் அவ்வாறு திருத்தப்படலாம், போறப்போக்கைப் பார்த்தால்! இது நிற்க.

    தற்காலம் ‘ஓடிப்போறது‘ அன்றாட செய்தி. யார், யார் கூட ஓட்றது என்பது விவஸ்தை இல்லாமல் போய்விட்டது என்று ஜூனியர் விகடன், அவள் ரிப்போர்ட்டர், தினத்தந்தி வகையறா மூலம் அறிகிறோம். மாற்றான் மனைவியையும், மாற்றாள் கணவனையும் இழுத்துக்கொண்டு... என்று தகவல்கள். ‘துறவிகளுக்கு‘ சுயம்வர தகுதி அதிகமாம். ஆறாங்க்ளாஸ் கிராமப்பொண்ணு கூட  எஃப்.ஐ. ஆர். போடுது! ஆட்டோ ட் ரைவர்கள் ஆட்டோமாட்டிக்க காதல் வயப்பட்றோங்கோ. சுளுவா, ஒருவனை கழுவி, மற்றோருவனை தழுவுறாக. பாட்டியைக்கேட்டா, ‘கலி முத்திப்போச்சு’ங்க்றா. அவள் காலத்து கதையை எடுத்து விட்றா! பொக்கைவாயை திறந்து விஷமமா சிரிக்கிறா. எனக்கென்னமோ, இது அப்பீல் ஆகல்லை. விவஸ்தையும் இல்லை; சுவாரஸ்யமும் இல்லை. காமம் மிகுந்தால், மையல் பறந்து விடும். எனக்கு, ‘முக்கோல் பவர்களை‘ போல ஒரு திருப்தி. வனஜாவும், வனஜனும் ஓடவில்லை. உடன்போக்கினர். They Eloped. அது சங்கக்காலப்பண்பு. இதை விளக்க ‘முக்கோல் பவர்களிடம் செல்லவேண்டும்.

    நம்பியகப்பொருளில், நாற்கவிராச நம்பி, நற்றிணை, குறும்தொகை, கலித்தொகை வழி நடந்து, தஞ்சை வாணன் யதேச்சையாக ஒத்து ஊத, ‘உடன்போக்கை’ ஆறு கிளவித்தொகைகளில், 18 விரிகளில், அத்துடன் உடன்பட்டு, விவரிக்கிறார். களவாணித்தனமா, காட்டிலும், பூந்தோட்டத்திலும் தலைவியை கூடி மகிழ்ந்த தலைவன், இரவில் வீட்டுக்கே வந்து விடுகிறான். அப்பெல்லாம் குழாயடி கிடையாது. ஊர்க்கேணி அருகிலே மகளிர் மன்றம் கூடி இவள் மேல் அலர் (பழி) தூவுவார்கள். தகப்பன் தடி எடுப்பானே, அண்ணன்மார் வாள்மறவர்கள் ஆச்சுதே என்று அஞ்சி, அன்னை அவளை இற்செறிப்பாள் (வீட்டில் சிறை), வேறு மணவாளன் தேடுவாள். ‘ஐயோ பாவம்’ என்று, பாங்கி, தலைவன் அவளை Elope செய்ய சூழ்ச்சி செய்வாள். அவள் கூற்று, தஞ்சை வாணன் கோவை 305 ல்

    “ வெற்பா! ...எம் ஐயன்மார்...நீ கடல் சூழ்ந்த உலகத்தையே தந்தாலும் கொள்ளார்...இவளை நின் ஊருக்கு உடன்கொண்டு செல்வாயாக...வேறு வழியில்லை...”

    அவன் கில்லாடியாச்சே. வழி முள்ளும் கல்லும் நிறைந்தது என்பான். பாங்கி அதி புத்திசாலி: “...நீர்க்கால் யாத்த நிரையிதழ்க் குவளை...இனியவாம் நும்மோடு வரினே..” (குறுந்தொகை -388) என்பாள். சென்னை தமிழில், ‘ நீ எதுக்கண்ணா இருக்கே’?. இங்கு தான் மென்மையான காட்சி. வழியிலே ‘கண்டோர்’ ‘இவ்விருவரும் புவியின் கண் உறையும் மானிடரோ? அல்லது விண்ணுலகின் கண் உறையும் தேவரோ’ என்று மாய்ந்த்து மாய்ந்து வியந்து போவார்களாம். அதாவது, உலகம் மையலின் எனிமி அல்ல. மையலின் மயங்குறவைக்கும் மையல் அவர்களை ஆட்க்கொள்ளும்.

   செவிலியின் ஆற்றாமையை ஏற்கனவே கண்டோம். அவள் இப்போது தெய்வத்திடம் வேண்டுவது யாதெனில்:

    “ஞாயிறு காயாது, மரநிழல் பட்டு,/....சுடர்வாய் காளையோடு/மடவரல் அரிவை போகிய சுரனே..” (குறுந்தொகை, 378)

பெருமானே! இவர்களுக்கு எல்லாமே இனியதாக அமையட்டும்.

    இனிமேல் தான் ஆஸிட் டெஸ்ட். செவிலி முக்கோல் பவரை ( முக்கோலையும், கமண்டலத்தையும் ஏந்திய முனிவர்கள்) கண்டு வினவுகிறாள். அவர்கள் அருமை சாற்றினார்கள், இந்த உடன்போக்கு முறையானதே என்று! அதற்கு கலித்தொகைக்கு செல்ல வேண்டும்.

   “பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை/ மலையுள் பிறப்பினும் மலைக்கு அவை தான் என் செய்யும்?/ சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை/ நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை என் செய்யும்?/ ஏழ்புனர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை/ யாழுலே பிறப்பினும் யாழ்க்கு அவை தான் என் செய்யும்?/ சூழுங்கால் நும்மகள் நுமக்கு ஆங்கு அனையளே...”

    ஒரு போடு போட்டார்கள். ‘பெண்ணை பெற்றால், அவளை கவர ஒருவன் வருவான்’ என்று.
    நம் கதைக்கு திரும்புவோம்: இது ஓடிப்போனது அல்ல. இது உடன்போக்கு.

    கதை மாந்தர்கள்:
    தலைவி: வனஜா
    தலைவன்: வனஜன்
    அன்னை: விசாலம்
    செவிலி: குப்புசாமி
    முக்கோல் பவர்: கபூர், குப்தா, யான், மின் தமிழ் வாசகர்கள்

நன்றி, வணக்கம்

 
இன்னம்பூரான்



Geetha Sambasivam 
7/16/10


நீங்க சொல்லும் வித்தியாசத்தை நான் புரிந்து கொண்டேன், ஐயா, இது பத்திக் கேட்கணும்னு இருந்தேன். இந்த இழை பின்னாலே போயிருக்கு. இன்னிக்கு உங்க விளக்கமும் வந்திருக்கு. நன்றி. நான் நினைச்ச விளக்கம் தான்.


seethaalakshmi subramanian
7/16/10

சமீப காலத்தில் இந்த "பண்புகள்" பற்றி அதிகம் பேசப் படுகின்றது.
ஓடிப்பொறது சங்க காலத்தில் உடம்போக்கு
வசதிக்கேற்ப "பண்பு "கூட வளையும் போலலிருக்கின்றது.
அய்யா, இன்னம் பூரனாரே, கொஞ்சம் சங்க காலப் பண்புகள் பட்டியல் தயாரிக்கலாமே.
காரணமாகத்தான் கேட்கின்றேன். முதலில் எல்லோரும் அந்த :பண்பு "களைப் பட்டியல் போடுவோம்
பண்பு நம்பர் ஒன்று உடம்போக்கு
தொடரவும்
உம்ம கதை மேடை ஏறப்போறது
சீதாம்மா

Tthamizth Tthenee 
7/16/10

உம்ம கதை மேடை ஏறப்போறது
சீதாம்மா
 
 
ஜாக்கிறதை  இன்னம்புரான் அவர்களே);
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
7/16/10

திருமதி.கீதா:

மணியோசை வரும் முன்னே! இன்று, அன்றாடாம் தேவாரம், மற்ற பதிகங்களை பற்றி சிறப்புற, பொதுகையில் உரையாடும் முனைவர் இரா.செல்வகணபதி அவர்கள், ஓடிப்போவதிற்கும், உடன்போக்குக்கும் உள்ள வேற்றுமையை விளக்கினார். என் உரையை அவர் வழங்கினாரோ என்ற அளவுக்கு ஒற்றுமை. நன்றி.

திருமதி. சீதாலக்ஷ்மி:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன். நம்பர் இரண்டு: கிட்டத்தட்ட ரெடி தான். எனக்கு பரிக்ஷை நெருங்கி நெருங்கி நொறுக்கிறது! மூன்றே வாரத்தில் அதை மூட்டை கட்டி வைத்துவிட்டு வருகிறேன். போர் அடித்தால், அதை விட்டு விட்டு நம்பர் இரண்டுடன் விரைவில் வருகிறேன். வளைந்து கொடுப்பதே பண்பு தானே. 

மேடை ஏற்றுவோம். நன்றி.

திருமதன் தமிழ்த்தேனீ!

கோட்டை விட்டு விட்டீரே, ஐயா! ஒரு வார்த்தை, " பாங்கி - கிரிஜா" என்று குறிப்பிடவில்லையே ஏன்? " என்று கேட்காமல், மலரில்லா பாலையில் தேனீ வட்டமிடுகிறதோ? நன்றி.
Geetha Sambasivam 
7/16/10

ஹிஹிஹி, நானும் பொதிகைத் துணையில் தமிழ்த் தென்றலை அநுபவிச்சுட்டுத் தான் சொன்னேன்! 


Tthamizth Tthenee 
7/16/10

திருமதன் தமிழ்த்தேனீ
 
 
நான்  ஏதோ  யதேச்சையாக  பாங்கி,கிரிஜா  என்றெல்லாம் சொல்லப் போக
 
நீங்கள்  என்னை உங்களுக்கு  போட்டியாக  நினைத்து  விட்டால்  என்ன செய்வது
 
அதனால்  சற்றே அடக்கமாக இருந்தேன் சும்மா  இருக்கும் போதே  திருமதன்  என்கிறீர்
 
எனக்கேன் வம்பு  அப்புறம் மன்மதன் என்பீர்
 
சபலம் யாரை விட்டது):
 
மலரில்லாப் பாலையோ,  குறிஞ்சி  எதுவுமில்லை
 
எல்லா இடத்திலும்  மலர் உண்டு  பாலையில்   (கள்ளி)  நான் செடியை  சொன்னேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ 
 
 

meena muthu  
7/16/10

என்ன பேசிக்கிறாங்கன்னே புரியலைப்பா..!

*
சித்திரத்துக்கு நன்றி: http://dosa365.files.wordpress.com/2012/08/mullai-kurinji-marutham-neithal1.jpg?w=448&h=130