Thursday, May 9, 2013

பாமரகீர்த்தி 3




பாமரகீர்த்தி 3

Innamburan S.Soundararajan Fri, May 10, 2013 at 6:53 AM

பாமரகீர்த்தி 3
பேராசிரியர் நாகராஜன் அரிய நண்பர். நகைச்சுவை மன்னன். அவர், அனுபவ ஜாம்பவான்.
இந்தத் தொடரில் அளித்த பாமரகீர்த்தி, இது.
இன்னம்பூரான்.
_____________________________

தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு என்ற மொழிவு ஆய்வுக்குரிய ஒன்று

இன்னொரு இழையில் தான் என்பதன் உண்மைப் பொருளை ஆய்வதன் அவசியத்தை ராஜம் அம்மா சுட்டிக்காட்டியிருந்தார்

"நான்" என்பதைத் தவிர வேறு பிறவும் உண்டு என்றால் சிலருக்குப் புரியாது.

எனக்கு "நான்" என்பதோடு பிறவும் வேண்டும். அதாவது ... "நான்" தனித்து இயங்க முடியாது. ஒரு வீட்டில் நான் விரும்பியபடித் தனித்து இருந்தாலும் என் மனது எப்போதும் அடுத்ததையே நினைக்கும் -- என் தோழியர், என் மாணவியர், என் நண்பர்கள், என் உறவினர் எல்லாரும் எப்படி இருக்கிறார்களோ? என் மகன் நலமாக இருக்கிறானா? என்ன செய்கிறானோ? என் புத்தகங்களை எப்போது முடிக்கப்போகிறேன்? -- இப்படிப் பல நினைவுகள் என்னை அலைக்கும். நான் ஒட்டுதல் இல்லாத துறவியில்லை. 

உலகப் பற்று எல்லாம் துறந்து துறவிகளாகத் திரிபவர்களும் அலைகிறார்கள் என்று கேள்வி. அவர்கள் எதைத் தேடி அலைகிறார்கள்? எனக்குப் புரிந்த அளவு ... அவர்கள் தேடுவதும் அவர்களுடைய "நான்" என்பதற்கு அப்பாற்பட்டதுதான். அதற்கு அவர்கள் என்ன பெயர் கொடுத்தாலும் சரி -- பக்தி, ஞானம், நிர்வாணம் ... என்று. அப்பொ ... அவர்களுடைய நானுக்கும் மேற்பட்ட ஒன்று அவர்களுக்கு வேண்டும்; அவர்களுக்கு அப்பாற்பட்ட ஒன்றின்மேல் அவர்களுக்குத் தேட்டம் என்றுதானே என்னால் புரிந்துகொள்ள முடியும்?

தமிழனின் தான் என்பதை ஆங்கில உளவியல் சமூகவியல் அளவிடுகள் மூலம் அறுதியிட்டுச் சொல்வது பொருந்தாது.  அதுபோன்றே இம்மையைத்துறந்து மறுமையைத் தேடும் மனமும்  குடும்பம்முறவு என்று பாசவலையில் உள்ள மனமும் ஒன்றல்ல என்ற அனுமானம் ஆய்வுக்குகந்தது.

The Nature of Tamil Individuality

While residing as an anthropologist in Tamil Nadu State, south India, I found private and public expressions valuing individuality always close at hand. In houses, businesses, and community marriage halls, for example, portrait photographs are hung and honored with incense, flowers, sandalwood paste, and kumkum (red powder). Honored pictures of this sort commemorate specific kin, benefactors, political leaders, gurus, and deceased loved ones. These portraits and their uses reflect and symbolize the significance of a uniqueness defined by relationships: "This is my benefactor, mentor, wife, friend." Indeed, the individual always exists in relation to others and derives distinctiveness from these relation-ships. Although the Tamil word for "individuality," tanittuvam , connotes the individual separate from others, it also implies all that makes the person unique, including his or her relationships.[8]
These portraits also symbolize what a person has done. Tamils recognize individuals as responsible actors, whatever the forces that may ultimately impel their actions. People are individualized by their actions and acquire importance depending on the significance of what they have done. I once saw an unusually large photo portrait prominently displayed in a small handloom textile shop in Madras. The owner told me the miracu-

Figure 1.
The giver of Rs. 60,000 and his beneficiary's widow (center), daughter,
and grandson. George Town, 1992.
lous story of how the old man of the photo had befriended him when he was young and years later had given him Rs. (rupees) 60,000 to start the shop (see fig. 1). The gift had rescued the shopkeeper from a lifetime of poverty and his gratitude was beyond simple expression.
Generosity (vallanmai ) is an important feature of south Indian public life and acts of public philanthropy are common and widely evident. Generosity is an individual attribute that establishes and maintains relationships and is highly valued in politicians and leaders of all sorts. Just asphotographs preserve identities, the inscribed names of donors and their donations on the walls of public buildings and temples preserve identities; donor names are engraved on the stairs leading to hilltop temples, on plaques attached to houses and buildings given as charity to temples, on public choultries (covered rest halls), schools, community libraries, production cooperatives, and occasionally on the wall of a medical dispensary. The ubiquitous leaflets and posters that announce political, social, and ritual events also list by name the sponsors, officers, and important guests of public functions. Why hang photos and list names but to announce who is responsible for what; to call attention to individuality; to give homage to particular persons?
தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குண்முண்டு என்பதில் ஒரு குணம் வள்ளன்மையில் தனித்துவத்தை வெளிப்படுத்தல்.  முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் (எங்க ஊர்க்காருங்கண்ணா) ஏழையாளனுக்கான வையகப் பரிவும் இதன் வெளிப்பாடே
நாகராசன்

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -37":அட ராபணா!





தணிக்கை செய்வதில் தணியா வேகம் -37":அட ராபணா! 
Innamburan S.Soundararajan Mon, May 6, 2013 at 4:09 PM


02 03 2010
தணிக்கை செய்வதில் தணியா வேகம் -37":அட ராபணா! 
Inline image 1

டில்லிக்கு வந்தேனா! காலம்பறப்பார்த்த அஞ்சாறு தலைகள் எனக்கு; பத்தும் ஆச்சு கூடிய சீக்ரம். நானே அன்டர்செக்ரடரி: (ஆயுதங்கள் + தளவாடங்கள் + நிதி ஆளுமை + யுத்தக்கையேடு + தணிக்கைத்தொடர்பு + பொதுக்கணக்குக்குழு வேலைகள் + நாடாளுமன்றக்குறிப்பு எடுப்போன் + விஞ்ஞான ஆலோசகர் நடத்தும் விவாதங்களுக்கு குறிப்பாளன் (Rapporteur) + இது + அது + எதுவும்!). போறாக்குறைக்கு, நான்கு டிபுடி செக்ரடரிகளுக்கு/ மூன்று ஜாயின்ட் செக்ரடரிகளுக்கு (எல்லாரும் ஐ.ஸி.ஸ் பெருமகனார்கள்)/ ஒரு  விஞ்ஞான ஆலோசகருக்கு பதில் சொல்லியாகவேண்டும்; மேலதிகாரி யார் கூப்பிட்டக்குரலுக்கும்  தத்க்ஷணமே பதில் சொல்லியாகவேண்டும். போக வர பஸ்ஸும் நின்றுவிடும்; டாக்சியும் கிடைக்காது; நடுநிசியானால் அப்டித்தான். அதற்காகவே கார் வாங்கினேன். ராணுவ அமைச்சகம்  ஆழம் தெரியாதக்கடல்;  சைனா போரும் வந்துவிட்டதா? வேறு வினை வேண்டாம். 500/600 கார்கள் வரும் அலுவலகம். மூன்று கார்களூக்கு மட்டு ஒதுக்கப்பட்ட இடம். ஒன்று ராணுவத்துறைக்காரியதரிசிக்கு. பாக்கி இரண்டும் க்யூ. நம்ம இரண்டு பேருக்கும் ( ஸெள & ஸெள) நிச்சயம். வேறு யாரு காலை 6 மணிக்கு ஆஃபீஸ் வருவார்கள்?
காலை ஆறு மணிக்குப்போய், ராத்திரி 11 மணிக்கு வந்தால், நான்கு தடவையாவது 'பட்பட் படார்' என்று மோட்டார் சைக்கிள் தூதுவர்கள், கோப்பைகளோடு. எது எப்படீருந்தாலும், எனது உடனடி மேலதிகாரிக்கு, இது மேலும் பொருந்தும். பார்க்கவேண்டியிருந்தவர்கள் எல்லாரையும் பார்த்தபிறகு, அவரை மட்டும் அணுகமுடியவில்லை. அவ்வளவு பிஸி, அந்த அஷ்டாவதானி + சா.வ.கோ.ப + வே.வா.ம.
ஒருநாள் ஃபோன் போட்டார்: அன்றைய மீட்டிங்க் ஒன்றுக்கு எனக்கு பதில் நீ போய்விட்டு வந்து சொல்லு என்றார். அது மிகவும் ரகசியமான உயர்மட்டக்குழுவின் கூட்டம். சங்கேதச்சொற்கள் இல்லையெனில் நுழையமுடியாது. சமர்த்தாகப் போய் அமர்ந்தேன், எல்ல சம்பிரதயங்களையும் முடித்து விட்டு. குழுதலைவர் என்னைப்பார்த்து முறைத்தார்; நாமம் கேட்டார்; நவின்றேன். சங்கேதம் ஒலித்தார்; எதிரொலித்தேன்.  முறைத்தார் மறுபடியும்; வெளியில் சென்று வந்தார், புன்சிரிப்புடன். கனிவாக என்னை அறிமுகம் செய்து, மிலிடரி ஸ்டைலில் எனக்கு நாமகரணம் செய்தார் 'பாக்கெட் எடிஷன்' என்று! அந்த பெயர் நிலைத்து விட்டது. பல வருடங்கள் கழித்து ராணுவ அமைச்சரகம் சென்றபோது, 'பாக்கெட் எடிஷன்' வந்திருக்கிறார் என்று நினைவு கூர்ந்தார்கள்.
 ஒரு பாடாக, என் டிபுடி செச்ரெடரியின் தரிசனம் கிடைத்தது, அதிர்ச்சி தரும் சூழலில்!
இன்னம்பூரான்
_____________________________________
சித்திரத்துக்கு நன்றி: http://sagotharan.files.wordpress.com/2010/05/ravana.jpg
பி.கு. இன்றைக்கும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், 50 வருடங்கள் கழித்து. 
இன்னம்பூரான்
06 05 2013
_________
பி.கு: வே.வா.ம = வேலை வாங்குவதில் மன்னன்.

சா.வ.கோ.ப = சாளரம் வழி கோப்பை பறிமுதல் செய்வோன்.

அன்றொரு நாள்: மே 10: காயா! பழமா!




அன்றொரு நாள்: மே 10: காயா! பழமா!
19 messages

Innamburan Innamburan Thu, May 10, 2012 at 10:17 PM

ன்றொரு நாள்: மே 10:
காயா! பழமா!

பிராது: சர்க்கரை என்று மணலை பொட்டலத்தில் விற்றான்.

‘எஜமான்! நான் வீசை எட்டணா என்று கூவினேன். வாங்கிட்டுப்போனாங்க. அது தப்பா?’

‘பிராது தள்ளுபடி. அவன் பொய் சொல்லவில்லை. நிஜமும் சொல்லவில்லை.’ (கனம் கோர்ட்டார்).
*

இந்த சட்டம் இருக்கிறதே. அதில் விந்தைகள் பல உண்டு. போர்ட்ஸ்மத் ஹார்பர். போலண்டு கப்பல் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறது. இரண்டு மாலுமிகள் தண்ணி போட்டு அடிச்சுக்கிட்டாங்க. கோர்ட்டில் வழக்கு, ஆங்கிலத்தில். இவங்களுக்கு அரைகுறையாகத்தான் தெரியும். தண்ணியின் எஃப்பெக்ட் குறையவே, இரண்டு பேருக்கும் ராஜியாயிடுத்து. இதை ஒத்தருக்கு ஒத்தர் மொழிபெயர்ப்புச் செய்ய, கோர்ட்டாரும் மனமுவந்து தள்ளுபடி செய்தார்கள். ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு’ என்று ஓடப்பார்த்தால், கூப்பிட்டு காசு கொடுக்கிறது, கோர்ட்டு! மொழிப்பெயர்ப்புக்கு சன்மானமாம்! அந்தக் காசையும் தண்ணிலெ போட்டாங்க!
*
நீங்கள் எக்மோர் சில்லறை கோர்ட்டு (ஸ்மால் காஸ்) போயிருக்கிறீர்களோ? ஸூப்பருங்க.
சைக்கிள்ளெ டபிள்ஸ் போய் மாட்டிக்கொண்டோம். எங்களை இற்செறித்த தண்டல்காரர் சொன்னார், ‘பேசாம ஃபைன் கட்டிட்டுப் போய்க்கிணே இரு. மவனே! வாதாடாதே. நாங்க கேட்டாத்தானே.

கோர்ட்டுக்காட்சி:

கோர்ட்: இரண்டு ரூபாய் அபராதம்

நான்: யுவர் ஆனர்!

கோர்ட்: அஞ்சு ரூபாய்.

நான்: நாங்கள்..

கோர்ட்: பத்து ரூபாய்.

நான்: (தனி மொழி) என்ன ஏலம் போடறார். (பாம்புச்செவி, அந்த கிழத்துக்கு)

கோ: நூறு ரூபாய்.

கட்டிட்டு ஓடியாந்தோம்.

*
ஜஸ்டிஸ் ராஜமன்னார் என்று ஒரு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி. இருந்தார். குடும்பமே நீதிபதி குடும்பம். நல்லா ஊறியிருக்கு. ஒரு நாள் மாலை கடற்கரையில் நடை பயிலப்போறார். விடலைப்பசங்க ஈவ்-டீஸ்ஸிங். ஓரமா நின்றுகொண்டிருந்த அப்பாவி போலீஸ்காரனை கூப்டு அவங்களை அரெஸ்ட் பண்ண ஆணையிட்டார். ஜட்ஜுக்கு அந்த பவர் உண்டாம். பெரிய வீட்டுபசங்க எல்லாம் ராத்திரி கொசுக்கடிலெ. அடிச்சுப்பிடிச்சுக்கினு அப்பனும் ஆத்தாளும் மறுநாள் கோர்ட்டுக்கு ஓடிவாராஹ. ஜட்ஜ் ஐயா கூலா சொல்றாரு, ‘உன் பையனை கண் அடிக்க விடாதே.’ இத்தனைக்கும் அவரை பற்றியே ஒரு தினுசா பேசிப்பாஹ. நமக்கேன் வம்பு? இதெல்லாமே செவி வாய் செய்தி.
*
நான் நினெச்சுக்கறது. சில பேர் ‘ பெண்ணாய் பிறக்கலாகாதா’ என்று அங்கலாய்ப்பார்கள். நாம நீதித்துறையில் புகுந்து இருக்கலாம் அல்லவா! சொல்ல வந்த விஷயத்தை மறந்துட்டேனே!
*
இன்றைய தினம்: மே 10, 1893: அமெரிக்காவின் உச்ச நீதி மன்றத்தில், வரலாறு காணாத தீர்ப்பு ஒன்று அளிக்கப்பட்டது, வழக்குத் தொடர்ந்து ஆறு வருடங்களான பிறகு: NIX v. HEDDEN, 149 U.S. 304 (1893)

கோர்ட்டுக்குக் கூட்டிக்கொண்டு போகிறேன், வாங்கோ.
ஜட்ஜ் மும்ம்மூர்த்திகள் வந்தவுடனே டவாலி கூவினார். எல்லாரும் எழுந்து நின்றார்கள். மூவரும் அமர, கோர்ட்டுத் தொடங்கியது. மூன்று கனமான அகராதிகள் கொண்டு வரப்பட்டன. புரட்டப்பட்டன. பொருள் திரட்டப்படப்ட்டது. 

சாக்ஷி1: ‘கடவுள் மீது ஆணை! அகராதிகள் எல்லாவற்றையும் வகைப்படுத்துவதில்லை. ஆனால், செய்தவரை சரி. அறுபது வருடங்களில் அர்த்தம் அதிகமாக மாறவில்லை. அதாவது கொஞ்சம், கொஞ்சம் மாறியிருக்கலாம்.......’ இந்த மாதிரி சொல்லிக்கொண்டே போனார்.

சாக்ஷி 2: இந்த சொற்களுக்கு எல்லாம் அறுபது வருடங்களுக்கு முன்னாலும், பின்னாலும் விசேஷமான அர்த்தங்கள் இருப்பதாக.....இந்த மாதிரி சொல்லிக்கொண்டே போனார்.
இரண்டு சாக்ஷிகளும், இரு தரப்பு வழக்குழப்பவர்களும் ( அதாவது வழக்கறிஞர்களும்) அதே மூன்று அகராதிகளையும் வைத்துக்கொண்டு, அவரவர் நிலைப்பாடுகளை நிலைப்பாட்டினார்கள். வாயிருந்தா, அகராதி அழுதிருக்கும்.
வணிகப்பெயருக்கும், பாமர மக்கள் பேசும் மொழியில் உள்ள அர்த்தத்துக்கும், விஞ்ஞான பெயருக்கும் உள்ள வேறுபாடுகள் அலசப்பட்டன. 
தீர்ப்புக்கு வந்த சிக்கல்:

கொடியாக வளர்ந்து, வளைந்து, பூத்துக்குலுங்கி, கொத்துக்கொத்தாக ஒரு வஸ்துவை தரும் தாவரத்தின் பெயர் ‘Solanum lycopersicum’. அதை பறித்துக்கொடுத்தால், கீதா, ராஜம், ஸுபாஷிணி ஆகியோர் சட்னி, ரசம், பிசைந்த சாதம், ஊறுகாய் செய்வார்கள்; அதற்கு முன் ஃபோட்டோ போடுவார்கள். தாவர இயல் சாத்திரம் இதை பழம் என்கிறது. உபவகை: பெர்ரி. 1773ல் இதை உருளைக்கிழங்குடன் வகைப்பாடு செய்தார்கள்.1768ல் வைத்த புது நாமகரணமான Lycopersicon esculentum இன்றும் வளைய வருகிறது. உங்களுக்கு புதிரவிழ்க்க உதவவேண்டும் என்ற கடமையினால், இந்த விவரங்கள் அளிக்கிறேன். நன்றி கூறவும்.

தீர்வு: விஞ்ஞானம் ‘பழம்’ என்றாலும், இது காய்.

அடடா! எதை பற்றி இந்த ‘காயா’ ‘பழமா’ தாவா? 

அந்த காய்/பழத்தின் பூவின் படம் கிடைத்தது. இணைத்துள்ளேன். நீங்கள் உடனே கண்டு பிடித்து, ‘

ஏன் இந்த தாவா?’ என்ற வினாவுக்கு விடை அளிப்பீர்களாக.

இன்னம்பூரான்
10 05 2012

உசாத்துணை:
U.S. Supreme Court:149 U.S. 304:NIX et al. v. HEDDEN, Collector. No. 137: May 10,1893

rajam Thu, May 10, 2012 at 11:14 PM


என்னைப்போல் கண் கோளாறு உள்ளவர்களூக்கு இதுபோன்ற பதிவுகளைப் படிக்கத் துன்பம். தயவு செய்து வெள்ளைப் பின்னணியில் கருப்பு எழுத்தில் தட்டவும். நன்றி!
ராஜம்






N. Kannan Thu, May 10, 2012 at 11:43 PM



வழிமொழிகிறேன்!

க.>
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, May 10, 2012 at 11:48 PM

கண்ணன் சாரே! நாள் தவறாமல், இந்த கலர் அரிதாரம் பூசாத நான் இன்றொரு நாள் காரணார்த்தமாக ரோஸினால், அடிக்க வாரீரே. இதோ போட்டுட்டேன். ஆனா அந்த கலர்? ஐயகோ!


2012/5/10 N. Kannan &l
[Quoted text hidden]

Innamburan Innamburan Thu, May 10, 2012 at 11:50 PM


renuka rajasekaran Thu, May 10, 2012 at 11:55 PM


இப்படி க்ளோசப் வியூவில் காட்டி, ரோமத்தை முள்ளே என்று நினைத்து, சுண்டைக்காய், தூதுவளை, என்று பிதற்றுக என்று காட்டுவதா?
இந்த போமேடோ ஒரிசனல் டோமேடோ , தக்ளியை -
பூவா தலையா போடாமலேயே கண்டுபிடித்தாகிவிட்டது!
மணமான தக்காளி - நேற்று கே மேரேஜ் ஓகே சொல்லி விட்டார் ஒபாமா
யாருக்கு மாப்பிள்ளை யாரோ? 

என்ன பரிசு?


rajam Fri, May 11, 2012 at 12:01 AM


ஒரு பதிவைப் போட்டுவிட்டு, அதோடு கொக்கியெல்லாம் போட்டால் ... நான் ஓடியே போய்விடுவேன். என்னால் படிக்கத்தான் முடியும். அதுக்குமேல் ஆராய்ச்சி செய்து பதில் கொடுக்க நான் என்ன ஐ.ஏ.எஸ் / ஐ.ஏ.ஏ.எஸ் பதவிக்குப் படிக்கிறவளா? ஆளை விடுங்கள். பதிவை மட்டும் போட்டுவிட்டு, "சும்மா இருங்கள்" பெரியவரே! :-) :-) :-) எப்படியோ ... தகவல் கிடைக்கிறது. நன்றி, அன்பரே! 


N. Kannan Fri, May 11, 2012 at 12:02 AM


மெக்கிண்டாஷ் கணினியர் கண்டுசொன்னது, வெள்ளைப் பின்னணியில்
கருப்பெழுத்து. கண்ணை உறுத்தாது என்பது.

நான் பல காலமாகச் சொல்லிவருவது, அவசியம் என்றாலொழிய வெட்டியாக formatted
text அனுப்பாதீர்கள் என்பது. எளிய plain text இருக்கும் போது formatting
ஏன்?

சிலர் நேரடியாக ஜிமெயிலில் எழுதுவதில்லை. அவுட்லுக் எக்ஸ்பிரஸ் போன்ற
எழுதிகளைப் பயன்படுத்தும் போத் default ஆக formatting text அமைந்து
விடுவதுண்டு.

பொதுவாக மற்றவர் கவனம் வேண்டுவோர் குறைந்த பக்ஷம் அவர்களுக்கு தொந்தரவு
தரமால் இருப்பது நலம் இல்லையா?

ஏதோ தோன்றியது! நீங்கள் பழம் தின்று கொட்டை போட்டவர் :-)


rajam Fri, May 11, 2012 at 12:29 AM


கணினித் திரையின் பின்புலம் பற்றி எழுத எனக்கு மிகவும் ஆவல், ஏனென்றால் ...

அது முதன் முதலில் உருவான இடத்தில் (Netscape) அப்போது நான் வேலை பார்த்தேன். அந்தத் திரை எப்படி உருவானது என்று எனக்குத் தெரியும்.  என் பங்கும் அதில் சிறிதளவாவது உண்டு.



அண்மையில் கண்ணன் லண்டனிலிருந்து அனுப்பிய அழைப்பிதழை என்னால் ஒரு நொடிக்கு மேல் பார்க்க-படிக்க முடியவில்லை.

ஒரே வண்ண மயக்கம். எழுத்தும் பின்வண்ணமும் போட்டி. ஓர் அழைப்பிதழின் பின்புலம் முக்கியமா? அதன் உட்பொருள் முக்கியமா? இந்தக் குறிப்பிட்ட அழைப்பிதழ் ஒரே கலவரம்.



இப்படி ... பல. இதெல்லாம் கணினிப் பொறியாளர்/முகப்பாளர் கவனத்துக்கு வரவேண்டும்.

ஃபோட்டோ எடுப்பதற்கு என்று பல நுணுக்கம் உண்டு. அதேபோல ... கணினித் திரையில் கருத்தை இடுவதிலும் பல நுணுக்கம் உண்டு.


பலருடைய இடுகைகளையும், பலருடைய வலைத்தளப் பதிவுகளையும், பார்த்தவுடனே "நறுக்"கி விடுவேன் --- காரணம் இந்த வண்ணக் குழப்பமே! :-(


Innamburan Innamburan Fri, May 11, 2012 at 12:41 AM
இனி நான் 'கறுக்கிடு'வேன் என்பதால் 'நறுக்க' வேண்டாம்.

[Quoted text hidden]

Nagarajan Vadivel Fri, May 11, 2012 at 3:06 AM


நீங்கள் எக்மோர் சில்லறை கோர்ட்டு (ஸ்மால் காஸ்) போயிருக்கிறீர்களோ? ஸூப்பருங்க.அங்கேயே பொருளாதாரக் குற்றங்களுக்கான கோர்ட் ரெண்டுங்க.  டபுள் சூப்பருங்க.  பெரிய கம்பெனி போர்டு மெம்பர்கள் மாட்டிக்கிட்டு முழிப்பாய்ங்க. ஆனாலும் சுத்தமாப் பல்லுப்போய் சத்தம் மட்டுமே போடும் சட்டப்பிரிவுகள்.  ஜாலியா இருக்கும். நானே மூனூ முறை பொருளாதாரக் குற்றக் கோர்ட்டுக்குப் போயிருகேன்

இத்தனைக்கும் அவரை பற்றியே ஒரு தினுசா பேசிப்பாஹ. நமக்கேன் வம்பு? இதெல்லாமே செவி வாய் செய்தி.
சொல்லாமாட்டேன் ஆனாச் சொல்லீடுவேன் என்கிறமாதிரி.  ரொம்ப வயசாகிப்போய் நடக்கவே முடியாமக் கஷ்டப்பட்டு ஒரு பார்ட்டிக்கு வந்தாஹ.  நான் முனிவனுமல்ல அவள் படிதாண்டாப் பத்தினியுமல்ல என்ற லைஃப் ஸ்டைல்.  இவருடைய நண்பர் ஒரு சினிமா நடிகையைக் கீபா வச்சிக்கிட்டார்.  அது எங்களுக்குத் தெரியும்.  எங்களுக்குத் தெரியும்னு அவருக்கும் தெரியும்.  சென்னைத் தொலைக்கட்சியில் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சி நடத்துறவனுக்குத் தெரியுமா?  திடீர்னு டுயெட்ல அந்தம்மா சைக்கிள்ள முன்னால ஒக்காந்து பாடிக்கினே வருவாங்க இந்த ஐயா அதைப் பாத்ததும் எழுந்து ஓடிக்கினே இருப்பாரு. நமக்கேன் வம்பு

‘காயா’ ‘பழமா’ தாவா?
வரி வரியாப் பொடுவாய்ங்களே அதாங்க விற்பனை வரி, வருமானவரி.  தேங்காய் காயா பழமான்னு இன்னும் முடிவு செய்யல
ஏதோ என்னாலான இரண்டு தம்பிடி(த்த) பின்னூட்டம்
நாகராசன்


PARTHA SARATHI Fri, May 11, 2012 at 5:02 AM


இந்திய நாட்டில் எத்துணையோ நீதியரசர்கள் நீதி வழுவாது, தீர்ப்பு சொன்ன
வரலாறு உண்டு.  அவர்களில் நீதியரசர் பி.வி. ராஜமன்னாரும் ஒருவர் என்று
படித்திருக்கிறேன்.  நீதியரசர் ராஜமன்னார் பற்றி ஓரிரு வரிகளை உங்கள்
எழுத்துக்களில் கண்டேன். பல அரசியல் தலைவர்கள் போற்றிய ஜஸ்டிஸ் பி.வி.
ராஜமன்னார் அவர்களை நினைவு கூறும் வகையில் சென்னை கலைஞர் நகரில்  ஜஸ்டிஸ்
பி.வி. ராஜமன்னார் பெயரில் இருக்கும் தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும்
மேலாக வசித்து வருகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

மற்றபடி நீங்க என்னோட காயா? இல்ல பழமா? என்று கேட்டதை என் சிறுவயதில்
கேள்விப் பட்டிருக்கிறேன்.  நண்பர் நடராசன்வடிவேல் சொன்னதுமாதிரி தேங்கா
மாதிரியே பூசனிக்கும் "காய்" மட்டும் தான் பின்னால் வரும், 'பூசனிப்பழம்'
என்று யாரும் சொல்வதில்லை.

பெருவை பார்த்தசாரதி
[

கி.காளைராசன் Fri, May 11, 2012 at 6:07 AM

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/5/11 Innamburan Innamburan <innamburan@gmail.com>

நீங்கள் எக்மோர் சில்லறை கோர்ட்டு (ஸ்மால் காஸ்) போயிருக்கிறீர்களோ? ஸூப்பருங்க.
சைக்கிள்ளெ டபிள்ஸ் போய் மாட்டிக்கொண்டோம்.
1978ஆம் வருடம், நானும் எனது நண்பரும் அதிகாலை 6 மணிக்கு கன்னிமாரா அருகே மாட்டிக்கொண்டோம்.
இரண்டு ரூபாய் கொடுத்தோம்.  விட்டுவிட்டார்கள்.

எங்களை இற்செறித்த தண்டல்காரர் சொன்னார், ‘பேசாம ஃபைன் கட்டிட்டுப் போய்க்கிணே இரு. மவனே! வாதாடாதே. நாங்க கேட்டாத்தானே.
கோர்ட்டுக்காட்சி:
கோர்ட்: இரண்டு ரூபாய் அபராதம்
நான்: யுவர் ஆனர்!
கோர்ட்: அஞ்சு ரூபாய்.
நான்: நாங்கள்..

இந்தச் துணிச்சல் யாருக்கு வரும். 


 சொல்ல வந்த விஷயத்தை மறந்துட்டேனே!

மறப்பதா, 
இலையில் சோறு போடுவதற்கு முன், 
தண்ணீர்தெளித்து, உப்பு வைத்து, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு வெஞ்சனங்களை வைத்துப் பின்னர் சோறு வைத்துக் குழம்பு ஊற்றிச் சாப்பிடச் சொல்வார்கள்.
அதுபோல்தான் தாங்களும்,  ஒவ்வொன்றாகச் சிறிது சொல்லிவிட்டு கடைசியில் விசயத்திற்கு வருவீர்கள்.
அதனால் நீங்கள் போடும் இழை(இலை)யில் சுவை கூடுகிறது.

*
இரண்டு சாக்ஷிகளும், இரு தரப்பு வழக்குழப்பவர்களும் ( அதாவது வழக்கறிஞர்களும்) 

கொடியாக வளர்ந்து, வளைந்து, பூத்துக்குலுங்கி, கொத்துக்கொத்தாக ஒரு வஸ்துவை தரும் தாவரத்தின் பெயர் ‘Solanum lycopersicum’. அதை சட்னி, ரசம், பிசைந்த சாதம், ஊறுகாய் செய்வார்கள்; அதற்கு முன் ஃபோட்டோ போடுவார்கள்.
சாப்பிட்டு முடிந்ததும், அட்டணக்கால் போட்டு உட்கார்ந்து வெற்றிலை பாக்கு போட்டுக் கொண்டு வம்பு அளப்பார்கள்.

அன்பன்
கி.காளைராசன்

N. Kannan Fri, May 11, 2012 at 10:23 AM


> அண்மையில் கண்ணன் லண்டனிலிருந்து அனுப்பிய அழைப்பிதழை என்னால் ஒரு நொடிக்கு
> மேல் பார்க்க-படிக்க முடியவில்லை.
>
> ஒரே வண்ண மயக்கம். எழுத்தும் பின்வண்ணமும் போட்டி. ஓர் அழைப்பிதழின் பின்புலம்
> முக்கியமா? அதன் உட்பொருள் முக்கியமா? இந்தக் குறிப்பிட்ட அழைப்பிதழ் ஒரே
> கலவரம்.
வண்ணக்கலவரம்! நல்ல வார்த்தை.
நானும் சொன்னேன் எளிமையாக கருப்புப் பின்னணியில் எளிய வர்ணங்களில்
செய்யுங்கள் என்று. சீர் செய்ய நேரமில்லை. இவர்களெல்லாம் பல
வேலைக்குக்கிடையில் இலக்கியப் பணியில் ஈடுபடுபவர்கள். ஆர்வத்தைப்
பாராட்டி அமர வேண்டியதுதான் :-)


Innamburan Innamburan Fri, May 11, 2012 at 2:45 PM

கலரடிச்சதின் காரணம்:அட்டேச்ச்டு. நன்றி, ஸுபாஷிணி.



wintertomato.jpg
67K

rajam Fri, May 11, 2012 at 4:33 PM


ம்ம்ம் ... கொஞ்சம் துணிச்சலோடெ இதெச் சொல்றேன் ... . ஃபொட்டாக்ரஃபி (photography) நுணுக்கம் வேறு; காகிதத்தில் அச்சடித்தலும் கணினியில் தட்டுவதும் வேறு. ஒரு பொருளின் பரிமாணத்தின் (dimensional), கோணங்களின் (angles) தாக்கம் ஃபோட்டோ பிடிக்கிறதில் முக்கியம். அதெல்லாம் இயற்கைக்குத் தக்கபடி அமையும். அந்தப் பரிமாணங்களைக் காகித அச்சில் கொண்டுவருவதுக்குப் பெரு முயற்சி தேவை. அதைக் கணினியில் கொண்டுவர CAD போன்ற மென்பொருள்கள் உதவுகின்றன. நம் மதுரை உதயனைக் கேட்டால் தெரியும்.
பாருங்கள் ... சுபாவின் படத்தில் ஒரு சில தக்காளிப் பழங்கள் மட்டுமே. அந்தப் பழங்களின் உருண்டை வடிவம் மிக அழகாகத் தெரிகிறது. அதுவே முன் நிற்கிறது. சாம்பல் கருப்பு ~ கருப்பு நிறப் பின்னணி முன்னணியில் உள்ள பழங்களைப் பார்ப்பதைத் தடுக்கவில்லை.

இதே படத்தை நான் எடுத்திருந்தால், பின்னணியை வேறு மாதிரி, டிசைன் இல்லாமல், அமைத்திருப்பேன். அது வேற விஷயம். என் சுவைக்கு ஏற்றபடி, பின்னணி மிகவும் எளிமையாக இருக்கவேண்டும். நாம் சுட்டிக் காட்டும் பொருள் தனித்துத் தெரியவேண்டும். 

அதனால் ... வண்ணக் கலவையை மட்டும் எடுத்துக்கொண்டு அதைப் பின்பற்றிச் சொல்லியது என்னைக் குழப்பிவிட்டது.  அவ்வளவே! :-) :-) :-) 

sk natarajan Sat, May 12, 2012 at 2:54 
அத்தனையும் அருமையான தகவல்கள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.


Geetha Sambasivam Sat, May 12, 2012 at 10:00 AM
பல புதிய விஷயங்கள் ஃபோட்டோகிராஃபி பற்றித் தெரிந்து கொள்ள முடிந்த பதிவுக்கு நன்றி.

பாமரகீர்த்தி 2

>


பாமரகீர்த்தி 2
1 message




  1. பாமரனொருவர்
  2. Inline image 2

'ஆபத்சம்பந்துக்கு' என்ற சொல், முன்னறிவிப்பில்லாமல் வந்து உதவும் சமயசஞ்சீவியை சுட்டுகிறது. அத்தகைய மாந்தர்களை அன்றாடம் கண்டாலும், நாம் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. இருந்தும், சில நிகழ்வுகள் காணக்கிடைக்கின்றன - டா.ராதாகிருஷ்ணன் ஒரு மாணவருக்கு உதவியது போல. நானும் ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என்னுடைய அலுவல்கள் ஒரு டாக்டரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தன ~ எதிராளியாக! அதாவது என் கூற்றை எதிர்ப்பது அவருக்கிடப்பட்ட பணி. காலாவட்டத்தில் என் கூற்று ஏற்கப்பட்டது. அவரும் நண்பராயினார். நான் அரசு பணியில் அமர்வதும், அவர் பணியிலிருந்து ஓய்வு பெறுவதும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. அத்தனை வயது வித்தியாசம். அவர் மற்றதொரு பணி ஏற்றுக்கொண்ட ஊரில் என் தந்தை வாசம். அவருக்கு பார்கின்ஸன் டிஸீயஸ் என்ற நிவாரணம் காணாத வியாதி. இந்த டாக்டரும் முடிந்த வரை அவரை மருத்துவரீதியில் கவனித்துக்கொண்டார். ஒரு நாள் சென்னையில் ஆளனுப்பி என்னை வரவழைத்து சொன்னது: 'இன்று ஹிந்துவில் வந்திருக்கிறது, ஒரு பிரிட்டீஷ் டாக்டர் மூளை அறுவை சிகிச்சை செய்து இந்த வியாதிக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கும் பணியில் வந்திருக்கிறார் என்று. அது டா.பி.ராமமூர்த்தியின் பிரிவு. அவர் என்னுடைய மாணவர். இந்த கடிதம் எடுத்துச் செல்லுங்கள்.'. இதே மனிதர் பத்து மாதங்கள் முன் என்னிடம் சொன்னது, 'தம்பி! நீ சொல்வது சரியென்றாலும் ஒத்து வராது. நீ சின்னப்பையன். உனக்கு அனுபவம் போதாது!' நான் மசியவில்லை அப்போது என்று கோபப்பட்டவர், அவர்! அவருடைய அறிவுரையினால், மள மள என்று ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து, பாரிச வாயு போன்ற இந்த பிணியால் பீடிக்கப்பட்டு இருந்த என் தந்தை, அதற்கு பிறகு ஒரு வாழைத்தோட்டம் போட்டார். பல வருடங்களுக்கு புனர்வாழ்வு. இந்த சமய 'சஞ்சீவி'யின் பெயர் டா. மாருதி ராவ். என்னே பொருத்தம்!

அன்பர்கள் யாவரும்மின் தமிழில், 'பாமரர்களின்
வரலாறுஎன்ற இலக்கிய வரவை தரவேண்டும் என்று மறுபடியும் விண்ணப்பம்.
அன்புடன், 
இன்னம்பூரான்
05 09 2011
Mohanarangan V Srirangam 
9/5/11

2011/9/5 Innamburan Innamburan <innamburan@gmail.com>

அருமையான அறிமுகம், மெருகான நடையில், மாருதிராவ் என்றும் நினைவில் பதியும் விதத்தில். இது போல் தொடராகப் பலர் பற்றியும் எழுதினால் ஒரு நல்ல தொகுப்பாக ஆகும்.
Innamburan Innamburan <innamburan@gmail.com>
9/5/11

நன்றி பல. ஶ்ரீ. ஶ்ரீரங்கம் மோஹனரங்கன்,

பாமர கீர்த்தி தான் சமூகத்தின் உண்மையான வரலாறு என்று கருதுகிறேன்.
Mohanarangan V Srirangam 
9/5/11


நன்றி பல. ஶ்ரீ. ஶ்ரீரங்கம் மோஹனரங்கன்,

பாமர கீர்த்தி தான் சமூகத்தின் உண்மையான வரலாறு என்று கருதுகிறேன். 


மிக அழகான வாக்கியம் ஐயா இது. -- “பாமர கீர்த்திதான் சமூகத்தின் உண்மையான வரலாறு”.  

ஆங்கிலத்தில் சொன்னால் 

Micro-history forms the real history of the society as such. 

இதை நிச்சயம் தேசியம் இழையில் மேற்கோள் காட்டுவேன். அனுமதி உண்டுதானே. 

Innamburan Innamburan <innamburan@gmail.com>
9/5/11

தாராளமாக. நானே பொது சொத்து அல்லவா!

Subashini Tremmel
9/5/11

இந்தப் புதிய கருத்துக்கு நல்வரவு!

-சுபா
coral shree 
9/5/11

நல்ல ஆரம்பம் ஐயா. தொடரலாம் அருமையாக.நன்றி. வணக்கம்.
shylaja 
9/5/11

 இ சார் .ஜனரஞ்சகம்!  தொடரலாம்..நானும் வரேன்.

____________
innamburan
08 05 2013

Wednesday, May 8, 2013

’பூசல்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -34




’பூசல்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -34
1 message

Innamburan S.Soundararajan Wed, May 8, 2013 at 6:04 PM


’பூசல்’ : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -34 
Inline image 1

மறு நாள் அஸன்சால் ஸ்டேஷனில் ஆரவாரம். ரயில்வண்டிக்கதவை திறந்து கொண்டு நேருஜி. 'அஸால்ட்டா' நின்றுகொண்டு இருந்தார். தற்காலம் போல கெடுபிடிகள் கிடையாது.
திவாஜீ ஆடிட் பூசலைப் பற்றிக்கேட்கிறார். நேரு மீட்டிங்கை ஆடிட் பகிஷ்காரம் செய்தது, அழைப்பு இல்லாததால். என்னை மட்டும் தான் அழைத்திருந்தார்கள் என்றது பிறகு தெரிய, ஜெனெரல் மானேஜருக்கு ஒரு கண்டனக்கடிதம் எழுதினேன். தீர விசாரித்து, எங்கள் ஆஃபீஸுக்கு வந்து, ஆடிட் சமூகத்திடன் மன்னிப்பு கேட்டார், அந்த பெரிய மனிதர்.
பூசல் தணிந்தது; கிதாப்பு ஏறியது.
ரயில்வே ஆடிட் ரிப்போர்ட்டில், பலவருடங்களாக சித்தரஞ்சன் தொழிற்சாலையைப்பற்றி குறை கூறபடவில்லை என்ற சாதனையும் முறிந்தது. மூன்று ஆடிட் பாரா, முதல் வருடமே. அதில் ஒன்று ஒரு தீ விபத்து. அது ஆண்டவன் செயல் என்று அவர்கள் கூற்று. அது மனிதனின் பொறுப்பற்ற செயலின் விளவு என்று என் ஆதாரங்கள்.
வேலை மிக குறைவாக இருந்தது; தொழிற்சாலையிலே மணிக்கணக்காக இருந்து, நுணுக்கங்கள் கற்று வரும்போது, ஜி.எம். கூப்பிட்டார். 'ஒரு முக்யமான பாகம், ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் வாங்குகிறோம்; அவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள். உள்நாட்டு நிறுவனம் ஒன்றுக்கு சலுகை கொடுத்து, வளர்க்க விரும்புகிறோம். நீயோ மடியில் இருக்கும் தேள் மாதிரி கொட்டுவாயோ? என்று கவலைப்படுகிறார்கள் என்றார். அக்காலம், டி.ஜி.டி.டி (DGTD) என்ற துறை இத்தகைய சலுகைகள் பற்றி கொள்கை அறிவித்திருந்தது. அவற்றை திரட்டி அவரிடம் கொடுத்தபோது தான், வேறு யாரும் அது பற்றி தகவல் தரவில்லை என்று நன்றி கூறினார். ஆடிட் தேள் தப்பு செய்தால் தான் கொட்டும் என்று சொல்லி விட்டு, ஓடி வந்து விட்டேன்.
டபிள் சார்ஜும், நானும் கூடப்பிறந்தவர்கள். காசிக்கு அருகில் உள்ள மற்றொரு தொழிற்சாலை ஆடிட் அடிஷனல் சார்ஜ். அந்த கதைக்கு பிறகு வருகிறேன். படா டமாஷ்!
சித்தரஞ்சனிலிருந்து என்னை டில்லியில் பாதுகாப்பு அமைச்சரகத்தில் அண்டர்செக்ரெட்டரியாக (டைம் லைன் 1962) மாற்றினார்கள். 'இன்றே வருக.' 'நேற்றே வருக.' என்ற வகையில் தந்திகள் பறந்தன. என் பையன் படு ஜுரம்; ஆஸ்பத்திரியில். டில்லியில் லேசில் வீடு கிடைக்காது. தவித்து போனேன்.
ஒரு நாள் ஆஸ்பத்திரியிக்கு வந்து என் பையனைப் பார்த்த ஜி.எம்., 'இவன் தேறியபிறகு, குடும்பத்தை சென்னைக்கு அனுப்பிவிட்டு, வீட்டுச்சாவியை என்னிடம் கொடுத்து விட்டு, டில்லிக்குப்போ; நான் சாமான்களை கொணருகிறேன்' என்றார். அப்படியே, எனக்கு வீடு கிடைத்த பிறகு,தன் தனிவண்டியில் (ஸலூன்) கொணர்ந்தும் கொடுத்தார். அத்துடன் விடவில்லை. ஒரு வருடம் கழித்து, சித்தரஞ்சனில் ஒரு புதிய வகை எஞ்சின் தயாரிப்பைத் தொடக்கிவைக்க, நேருஜி வந்த போது, ' ...as an old guard of CLW...'நீயும் வரவேண்டும் என்ற அழைப்பும், ரயில்வே பாஸ்ஸும் அனுப்பினார். இதை ஏன் சொல்கிறேன் என்றால், சான்றோகளின் நடைமுறை எல்லாம் படிப்பினை அல்லவோ!
இன்னம்பூரான்


தணிக்கை செய்வதில் தணியா வேகம் -33:’தண்டம்’




தணிக்கை செய்வதில் தணியா வேகம் -33:’தண்டம்’

Innamburan S.Soundararajan Mon, May 6, 2013 at 5:39 PM


07. 02 2010

தணிக்கை செய்வதில் தணியா வேகம் -33:தண்டம்
Inline image 1

அப்டேட்:
கடந்த பத்து வருடங்களில், நான் இந்த கட்டுரையில் சுட்டிய ஊழல்களை எல்லாம்  அசுரவேகத்தில் வளர்த்து,
நாட்டின் செல்வத்தை சூறையாடுகிறார்கள். அதனால் தான் சிவப்பு மசி.  இதை படித்தவர்கள் தங்கள் அனுபவங்களை/கருத்துக்களை/ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டால், நலம். என் நன்றி. தனிமடல் அனுப்புவோர்க்கும் பதில் அனுப்பபடும்.

அன்புடன், 
இன்னம்பூரான்
06 05 02013

கொஞ்சம் மாற்றம் வேண்டாமோ?  இது நான் 2004 லில் எழுதிய கட்டுரை.
இன்னம்பூரான்
07 02 2010------------


Date:03/08/2004 URL: http://www.thehindu.com/thehindu/op/2004/08/03/stories/2004080300261300.htm

Back Open Page

Containing waste

PENCIL SHAVINGS is a waste product. 
Throwing the stub away is a waste. 
Throwing the pencil away is a malpractice.
Most governmental activities throw the metaphorical pencil away, as premeditated subversion. Private sector is no paragon of virtue, debiting philately to postage! Nevertheless, the immediate concern is on public money. Unburnt coal is deliberately heaped with coal ash for sharing the loot, in some power stations. The top managers in one case sat up and took notice only when it was shown that gold prices rose less steadily than the bids for coal ash! Dhanbad mafia is a direct product of waste and malpractices in mining and dispatching coal. Floor sweepings in factories command a premium in auctions as a rich pick of tools, products and raw material can be salvaged. Ingenious are the ways of those who thrive on waste. The story goes that a Soviet factory was losing wheelbarrows daily. Having failed to solve the riddle, the management adopted a capitalistic stratagem; they announced a reward and immunity. The culprit confessed to heaping a barrow daily with waste and walking away. Security guards let him out after checking the contents!
The limited focus is here on the deliberate waste for illegal gain. The national Common Minimum Programme will meet its nemesis in the hardcore waste-taker in all spheres, if the government does not watch out. Primarily comes the inefficiency of services and wasting of working time. Employment guarantee is welcome. However, employee obligation in the form of discipline and reasonable obedience should be defined and enforced. Legislation in the U.K. protects the employee jealously in many respects, including maternity, rest, safety and whistleblowing. However, there is no protection to gross misconduct like rifling the till. We had been exposed to malpractices long enough to spot them, if there be a will. Hawala and black money are examples of Frankenstein spawned and nurtured by the wasteful system. They are open gutters and are not submerged tunnels.
A few examples are mentioned to signpost the rocks on which governments founder. It is but the tip of the iceberg. Government apparatus jealously guards some myths. The public works department, which Rajaji famously declared as his enemy No.1 (ranking the communists next), awards contracts, based on schedule of rates, derived from rate analyses. A multi-purpose dam project had schedules only for buildings, one per cent of its outlay. When the project digs canals, the wasters dig gold. The digging profile consists of overburden (sand or equivalent), soft disintegrated rock and hard disintegrated rock. Deeper the cut, higher the rate. It is fair. However, in one geological zone, hard rock could not be built into the rates, as it was of alluvial soil. The masterstroke was to adopt the schedule of an adjacent district, for enriching the contractors. This was stopped, but the honest man got the sack. The tribals in Phulbani district of Orissa touch neither sugar nor wheat. The public distribution system routinely drew those commodities for that district. This happened decades ago. Nevertheless, the moral is still valid.
Another myth is the sanctioned estimate. Overdesign is the trick. Most culverts need non-pressure clay or at the most, cement pipes. One estimate provided for electronically welded steel pipes (used for tube wells) costing hundreds of times more; the stock reply was that the estimate was a sanctioned one. A highway division had large quantities of thick twisted steel rods, when they needed none. The bridge divisions had enough on their plate. Unable to defend that purchase, they planned to convert them into mild steel rods (which also they did not need), a physical impossibility. Bitumen is one item, which is pilfered on paper and on site. The unedifying spectacle, euphemistically known as March rush of expenditure, is hoarding time for the rogue elephants among government officials. The litany is endless.
Whenever the government is on the threshold of launching large spending programmes, deliberate wasters spend sleepless nights scheming in mind as to how to subvert the system. They form a ubiquitous and unscrupulous community of shared interests, and, of course, the booty, among politicians, officialdom, contractors and middleman. They operate in secret in the beginning and become brazen after some time, as mutual protection gets set, unlike the sand they mixed with the cement.
Apart from vigilance machinery — in-house and external — the government must evolve alert preventive measures to stop this Barbarian (vested interest masquerading as a mere waster) at the Gate. Such measures can be as simple as a log of what was done, a quick reporting mode and the surprise inspections. The colonial rule had a system of district inspection by members of the Board of Revenue, a sinecure establishment. It used to be as instructive as the gazetteers and performance was measured and ranked. There are many other dimensions to waste as a phenomenon. All those who are aware should share and the government should take care.

S. SOUNDARARAJAN

Former Additional Deputy Comptroller and Auditor General of India
© Copyright 2000 - 2009 The Hindu