Wednesday, September 11, 2019

திரு. வி. க. குருகுலம் ~ 2

திரு. வி. . குருகுலம் ~ 2

முன்குறிப்பு

பின்னூட்டம் அளித்து, ஆர்வத்தைக் கூட்டிய 26 வாசக நண்பர்களுக்கு வந்தனம். எல்லாருமே வரவேற்றதுடன், மேலும் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது என் கடமையை உணர்த்துகிறது. தொடருவோம்.
இன்னம்பூரான்.
செப்டம்பர் 11, 2019

3. 'வீட்டுக்கு போய், நாளை வருக.’

நண்பர்காள்! நிராயுதபாணியாகிய இராவணனை நோக்கி ஶ்ரீராமன் போரில் இவ்வாறு கூறினான் என்று சொல்லப்படுவது வழக்கம், அது கம்பராமாயணத்திலிருந்து அல்ல. அது ஒரு புறமிருக்க, இங்கு அதன் பொருள் வேறு. சென்னையின் பட்டாளம் பகுதியில் தான் தொழிளாளர்கள் பெரும்பாலும் வசித்தனர். திரு.வி.. அவர்கள் ஒரு தொழிளார் சங்கத்தலைவர் என்பதை நம்மில் பலர் அறிந்ததில்லை. தொழிலாளர்களின்  அலை வரிசை வேறு. இலக்கியக்கர்த்தாக்களின் அலை வரிசை வேறு. இடைவெளி அதிகம். திரு.வி.. இங்கும் தலைமை தாங்குவார்; அங்கும் போற்றப்படுவார். அவர் ஆணையிட்டு விட்டால், எத்தனை ஆவேசத்திலிருந்தாலும், தொழிலாளர்கள் மகுடிக்கு மயங்கிய அரவம் போல அடி பணிவார்கள். அவர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டார்கள். மறு நாளை, நோன்பு தினத்தை, என்னால் முடிந்த வரை சொற்சித்திரமாக தருகிறேன்.

இது நோன்பு தினம்: ஏப்ரல் 6, 1919. ஸத்யாக்கிரஹ தினம்சென்னை மாநகரம். பட்டாளத்திலிருந்து தேசீய பாடல்களை பஜனை செய்து கொண்டு, ஒரு பெரிய  தொழிலாளர் பட்டாளம், காத தூரத்துக்கு மேல் நடந்து வந்து  ராயப்பேட்டையில் இருக்கும் திரு.வி.. அவர்களின்     அவர்களின் அச்சுக்கூடத்தில் வந்து சேர்ந்தது. சத்யாக்ரஹ சிந்தனைகடலில் மூழ்கி அவர்கள் உணர்ச்சிப்பெருக்கால் தத்தளித்தாலும், தலைவரின் ஆணையை மறக்கவில்லை.அதனால் நிம்மதியில்லாத அமைதி

வைகறையில் பஜனை, நோன்பு தினத்தன்று. தவம், விழா எடுப்பது, தியாகம் ஆகியவை தான், முக்கிய அம்சங்கள். அலை அலையாக, மக்கள் வேப்பமரத்தடியில் (அங்கு தான் தி.வி.. அவர்களின்தேசபக்தனின்சாது அச்சுக்கூடம்.அதுவே யான் கூறும் குருகுலம்). அந்த வேப்பமரம் ஒரு போதி மரமன்றோ! அதனடியில் அமர்ந்து திரு.வி.. அவர்களுடன் அளவளாவிய மேன்மக்கள் யார், யாரோ? துறவி.சுப்ரமண்ய சிவா, ராஜாஜி, அரசியல் எதிர்துருவமாகிய .வே.ராமசாமி நாயக்கர், துடிப்பு சுதேசிமின்சாரநீர்புகழ் வரதராஜுலு நாயுடு, மஹா கவி சுப்ரமணிய பாரதியார் போன்ற மேன்மக்கள். அங்கிருந்து குஹானந்த நிலையத்திற்கு  அந்த பேரலை ஊர்வலமாக சென்றது. பொழுது புலர்ந்துவிட்டது.ஒரு குளிர்; ஒரு வெயில். ஒரு கவிதை.

மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. ஐயம் ஒன்றும் இருப்பது சாத்தியமில்லை. இன்றைய அரசியல்வாதிகளை, சமுதாய பிரமுகர்களை நடிப்பு சுதேசிகள் என்று கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்கு முன்பே இனம் கண்டு கொண்டு மனவருத்தத்தில் ஆழ்ந்தவர். அவருக்கு ஏப்ரல் 6, 1919 ஒரு சுபதினம் என்று தோன்றியதும், அவர் ஆதவனின் பொற்சுடர்களை வருணித்ததும் வியப்புக்குரியவை அல்ல. அவருடன் கோரஸ்ஸாக, அந்த திருபள்ளியெழுச்சி பாடலை பாடி மகிழ்ந்து, அன்றைய நிகழ்வுகளை காண்போமாக.

திருப்பள்ளியெழுச்சி

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை யிருட்கணம் ோயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
பொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்கு உன்
தொண்டர் பல்லாயிரர் சூழ்ந்து நிற்கின்றோம்
விழி துயில்கின்றனை இன்னும் எம் தாயே
வியப்பிது காண் பள்ளி யெழுந்தருளாயே
மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ
மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ
குதலை மொழிக்கிரங்காதொரு தா
மகளே!பெரும் பாரதர்க்கரசே
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறு உனைப் பாடுதும் காணாய்
இதமுற வந்து எமை ஆண்டருள் செய்வாய்
ஈன்றவளே பள்ளி யெழுந்தருளாயே.”

குஹானந்த நிலையத்திலிருக்கும் தேசாமபிமானிகளின் பேரலையியில் பாரதியார் இல்லாவிடின், அது பெருங்குறையன்றோ! தற்செயலாக, மஹாகவி பாரதியார் (அவர் வீட்டிலிருந்து நடை தூரம்.) குஹானந்த நிலையத்திற்கு வந்து சேர, திரு.வி.. அவரை ஒரு பாட்டு பாட சொல்கிறார். ‘முருகா! முருகா!’ என்று நெக்குருக பாடுகிறார்அன்றும், இன்றும், நாளையும், இந்த நிகழ்வு கார்மேகம் போல் கண்களில் நீரை பெருக்கி, தேக்கிவிடும் ஆற்றல் கொண்டது. இதை நூறாண்டுகளுக்கு (20 நாட்கள் தாமதத்திற்கு மன்னிக்கவும்.) பின் எழுதும் போது, அர்ஜுனனின் உடல் நடுங்கியது போல, என் நாவு உலர்ந்து விட்டது. தேகமாடுகிறது. நடை தளர்ந்து விட்டது. இது என் அனுபவம்.


இந்த கூட்டம், களிறு போல், கடற்கரை நோக்கி நடந்ததாம். வழியெல்லாம், மூடிய கடைகள் திறந்து, இராம நவமி போல், எல்லாருக்கும்  அண்டா அண்டாவாக பானகம் வினியோகம் செய்கிறார்கள். இது, வணிக பெருமக்கள் அரசாணையை மீறிய அருங்காட்சி. திலகர் திடம். புனித பூமி. (தற்காலம்அழகுபடுத்தப்பட்டு உரம் இழந்தது.) தலைவர் தன் உரத்தக்குரலை மெச்சிக்கிறார். மைக் இல்லாமே ஆவேசமாக பேசி தீத்துட்டார், திரு.வி.. அவர்கள். அவரை கைது செய்வார்கள் என்று பேச்சு அடிபட்டாலும், அவரை அரசு கைது செய்யவில்லை. கதை முடிஞ்சது என்று போய்டாதீங்க. கத்திரிக்காய் காய்க்கவில்லை. சம்பந்தமில்லாமல், ஒரு பேய்ப்பழம் பழுத்தது.
(தொடரும்)
இன்னம்பூரான்
11 09 2019

Thursday, August 29, 2019

திரு. வி. க. குருகுலம் -1 & 2

திரு. வி. க. குருகுலம்
முகவுரை

“திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும்” என்ற தொடரை, பின்னூட்டங்களாக வந்த வாசகர்களின் 60 கருத்துக்கணிப்புக்களுக்கு இணங்க, மேற்படி தலைப்பில், சீர்திருத்தங்கள் செய்து, புதியதொரு தொடராக சமர்ப்பிக்கிறேன். 

திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழ்த்தொண்டு, தேசீய பணி, சமுதாய சீர்திருத்தங்கள், தொழிலாளர்களுக்கு தலைமை என்று ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற அடிப்படையில் செய்ததை எல்லாம் தமிழினம் மறந்து விட்டது. தற்காலத்தமிழர்களுக்கு அவரை பற்றி தெரிந்தது சொற்பம். யான் அவருடைய ஏகலைவ சீடன் -அதாவது, அவரிடம் நேரடியாக பாடம் படிக்காவிடினும், அவருடைய நூல்களை என் குருகுலமாக பாவித்து, இந்த தொடரை உங்களின் ஆதரவுடன் துவக்குகிறேன். 

இத்தருணம் நன்றி நவில்வது பொருந்தும். எனது சிறுவயதிலேயே என் தந்தை எனக்கு நாட்டுப்பற்று கற்றுக்கொடுத்தார். ஒரு விதத்தில் அது அவருக்கே இன்னல் விளைவித்தது. கலோனிய அரசு கோலோச்சிய காலகட்டம். அவர் போலீஸ் துறையில் பணி புரிந்தார். என்னுடைய பொதுமேடை ஆவேசப்பேச்சுக்கள் உசிலம்பட்டியில் வரவேற்கப்பட்டன; கலோனிய அரசால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டன; அவருடைய வேலைக்கும் உலை வைத்தன. ஆனால், அவர் என்னை தடுத்தாட்கொள்ளவில்லை. அவருக்கு என் வணக்கமும், நன்றியும் உரித்ததாகவன. அந்த காலகட்டத்தில் எனக்கு ஒரு திரு.வி.க. நூல் பரிசாக அளிக்கப்பட்டது. கொஞ்சம் கூட புரியவில்லை. கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு பிறகு அதே நூல் கிடைத்தது, தற்செயலாக. இப்போது புரிந்தது. நான் திரு.வி.க. பக்தன் ஆனேன். 

அந்த காலகட்டத்தில் நான் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் வாழ்ந்து வந்தேன். உலகாளவிய தமிழ் மரபு அறக்கட்டளையின் நிறுவனர்களில் ஒருவரான  முனைவர் சுபாஷிணியின் அறிமுகம் கிடைத்தது. அவர் திரு.வி.க. அவர்களின் வாழ்க்கை, நூல்கள், தொண்டு ஆகியவை பற்றி என்னை பலமுறை தொலை பேசி மூலம் நேர்காணல் செய்து பதிவு செய்தார். அந்த உந்துதலால், அவரின் விடா முயற்சியின் பயனாக, திரு.வி.க. அவர்களின் நூல்களை மின்னாக்கம் செய்ய சென்னை வந்து சேர்ந்தேன். டாக்டர் அக்னிஹோத்ரம் வாசுதேவன் அவர்கள் மின்னாக்கம் செய்ய சொல்லிக்கொடுத்தார். மற்றவர்களின் மறு பிரசுரங்களில் எனது நாட்டம் செல்லவில்லை. எங்கிருந்தோ வந்த முனைவர் நாகலிங்கம் அவர்கள் (அவருடைய முனைவர் பட்டத்துக்கு எடுத்துக்கொண்ட ஆய்வே, திரு.வி.க. அவர்கள் எழுதிய பெரிய புராணம் பற்றிய நூல்.) மூல நூல்களை கொடுத்து உதவினார். நான் மின்னாக்கம் செய்த திரு.வி.க. நூல்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் மின் நூல் சேகரிப்பில் உளன. நான் எழுதிய கட்டுரைகள் எல்லாவற்றிலும் திரு.வி.க. அவர்களின் முத்திரை உள்ளடக்கம். அவற்றை இடை விடாமல் வல்லமை மின் இதழில் முனைவர்.அண்ணா கண்ணனும், ஆசிரியர் திருமதி. பவள சங்கரியும் பிரசுரம் செய்தனர். என் தந்தைக்கு அடுத்தபடியாக, முனைவர் சுபாஷிணி, டாக்டர் வாசுதேவன், முனைவர் நாகலிங்கம்,  முனைவர் அண்ணா கண்ணன், திருமதி. பவளசங்கரி ஆகியோருக்கும், இந்த இழையின் உந்தனர் ஆகிய டாக்டர் நா.கணேசன் அவர்களுக்கும், கருத்தளித்த வாசகர்களுக்கும் நான் நன்றி நவின்று, இந்த தொடரை துவக்குகிறேன்.

இன்னம்பூரான்
29 ஆகஸ்ட் 2019

  1. முதற்படி

சான்றோர்களைத் தற்காலத் தலைமுறைக்கு அறிமுகம் செய்யும் போது, அவர்களின் பிறந்து, வளர்ந்து, மறைந்த கதையை விட அவர்களின் வாழ்நெறியை எடுத்துரைப்பது தான் பயன் தரும். அத்தருணம் சில நிகழ்வுகளை முன்னிறுத்தி அலசுவது தான் வாழ்க்கைப்பாடங்களை அளிக்கும் வழி. அவ்வாறு தொகுக்கும்போது அட்டவணை போட்டு கதாநாயகன் கட்டை விரல் சப்பியதில் தொடங்கி மரணாவஸ்தை வரை வரிசைப்படுத்துவது தேவையல்ல. சில சம்பவங்கள் அந்த சான்றோர்களின் பெருமைக்குக் கட்டியம் கூறும். சில அவர்களின் தர்மசங்கடங்களை பூடகமாகத் தெரிவிக்கும் – திறந்த மனதுடன் தேடினால். நான் என்னவோ என் மனம் அழைத்துச்செல்லும் ராஜபாட்டையில் தான் உங்களை அழைத்துச்செல்வேன். ராஜபாட்டை விசாலமானது. திரு.வி.க. அவர்களை முன்னிறுத்தினாலும், நாட்டு நடப்புகள் -உதாரணமாக ஜாலியன் வாலா பாக் - விவாதிக்கப்படும். மஹாத்மா காந்தி வருவார்; கார்ல் மார்க்ஸ்ஸும் வருவார். பொறுத்தாள்க.

மஹாத்மா காந்தியின் ஜன்மதினம் அன்று உலகெங்கும் அவரது நினைவாக விழாக்கள் எடுக்கப்படும். அவரது சிலைகளுக்கு மாலை மரியாதை நடக்கும். சொற்பொழிவுகள் நிகழும். இந்தியாவில் விடுமுறையல்லவா! சிறார்கள் விளையாடுவார்கள். வயது வந்தோர் ஓய்வு எடுப்பார்கள். காந்திஜியை நினைவு கூர்பவர்கள் சொற்பம். 

அது கூட இல்லை. ‘தமிழ் காந்தி’ ‘தமிழ்தென்றல்’ திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரம் அவர்களை தமிழர்கள் அறவே மறந்துவிட்டார்கள். ஏதோ விருது அளிக்கும் தினத்தில் ஒரு வரி உதட்டளவு புகழுரை. அத்துடன் சரி. அங்கும், இங்கும், எங்கும் இறைவனின் சிலாரூபத்தைப் பழிப்பவர்கள் எழுப்பிய மானிடஜன்மங்களில் சிலைகள் மலிந்த நம் நாட்டில், எனக்குத் தெரிந்து மூவருக்கு மட்டும் தான் ஆளுக்கு ஒரே ஒரு சிலை, பொது மக்களே முன் வந்து ஆர்வத்துடன் சந்தா அளித்து எழுப்பபட்டவை. அவர்களில் ஒருவர் திரு.வி.க. அவர்கள். மாஜி பி & ஸி மில் முன் நிற்கிறார், அஃறிணை ஆகி விட்ட திரு.வி.க. மற்ற இருவரை பற்றி யாராவது கேட்டால் சொல்கிறேன். இது நிற்க.

கூடு விட்டு கூடு பாய்ந்து ஒரிஜனல் காந்தியிடம் செல்வோம். காந்திஜிக்கு ராமன் இஷ்டதெய்வம். இந்து-முஸ்லிம் ஒற்றுமை அவருக்கு இஷ்ட மந்திரம். ‘ரஹம்’ என்ற இஸ்லாமியத்தின் நங்கூரசொல்லின் பொருள் கருணை. அதையும் இணைத்தல்லவோ, அவருடைய பஜனை அமைந்தது. அண்ணலின் விருப்பம் இனியாவது நிறைவேற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் அந்த கனிவை ந்யூஸிலாந்தில் காண்கிறோம். அங்கு ஒரு பயங்கரவாதி பலரை சுட்டுத்தள்ளி விட்டான். அந்த நாட்டு வெள்ளையர் மக்கள் இஸ்லாமியர்களை தேடி அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறார்கள். அவர்களுக்கு காந்தி மஹான் அறிமுகம் இருக்கிறது. நமக்குத்தான் இல்லை.

“ஒரு தனிமனிதன், தன்னுடைய மனசாட்சியை மட்டுமே, பாற்கடலை கடையும் மத்தாக, வாய்மை என்ற கயிறை, கடைவதற்கான சாதனமாக வைத்துக்கொண்டு, அஹிம்சை என்ற பிரணவ உச்சாடனத்துடன், ஸ்வதேச அபிமானம் என்ற அமிர்தத்தை எடுத்து அளித்ததும், அடிமைமோஹத்திலிருந்து விடுபட்டு, இந்திய மக்கள், இந்த நோன்பில், ஒரே திரளாக திரண்டு வந்து வடம் பிடித்ததும், அமிர்தம் பருகியதும் வரலாறு. அத்தருணம், இந்த உலகமே ஆட்டம் கண்டதும் வரலாறு. அந்த தனிமனிதன்: அண்ணல் காந்தி.” -இன்னம்பூரான்.

2. நோன்பு
நோன்பு தினம்: ஏப்ரல் 6, 1919. நாமகரணம்: ஸத்யாக்கிரஹ தினம். ஒரு நூற்றாண்டு கடந்து விட்டது.
தனித்தழில் சொன்னால், ‘உண்மை மேலாண்மை ஏற்றுக்கொண்டது’. இடம்: இந்தியா முழுதும். குறிப்பாக இங்கு சென்னை நிகழ்வுகளின் அணி. அதற்கு முன் ஒரு பின்னணி. அரசு, நீதி மன்றத்தை புறக்கணித்து, மக்களில் சிலரை சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், மார்க்கம் ஒன்று வேண்டாமோ? காந்திஜி மீது குறை காண்பது தற்கால நாகரீகம். அவர் மறைந்து எழுபது வருடங்கள் ஆயின. இரண்டு/மூன்று தலைமுறைகளுக்கு அவர் ஐநூறு ரூபாய் நோட்டின் சித்திரம் மட்டும்! எனினும், ஒரு வகையிலாவது அவரை போற்றவேண்டும். கறார் மேனேஜர், அவர்.
சட்டம் அமலுக்கு வரும் தினம் முன்பே யாவருக்கும் தெரியும் என்பதால், முன்கூட்டியே, ஏபரல் 6 தான் சத்யாக்ரஹ தினம் என்று அறிவித்து, நாடு முழுதும் பயணித்து, யாவரிடமும், ஒரு பிரதிஞ்ஞை பெற்றுக்கொண்டார் – 

‘சட்டத்தை மீறவும் வேண்டும். நன்னடத்தையையும் வெளிப்படையாக காட்டவும் வேண்டும்.’ 
இந்த மந்திரம் காட்டுத்தீ போல் பரவியது என்கிறார், திரு.வி.க.

சென்னையில் பலத்த ஏற்பாடு. ராஜாஜியின் தலைமையில், ஒரு கண்காணிப்புக்குழு. அக்காலம் ஃப்ளெக்ஸ்போர்ட் கலாச்சாரம் கிடையாது. போஸ்டர்களும், துண்டறிக்கைகளும் மட்டும் தான். ராயப்பேட்டையும், [உறுதுணை: காமத்] தொழிலாளர்கள் பேட்டைகளும், [உறுதுணை: தண்டபாணி பிள்ளை] திரு.வி.க. அவர்களின் பொறுப்பு. ராஜாஜிக்குழுவில், திரு.வி.க.வும், கே.வி. ரங்கசாமி ஐய்யங்காரும். பெரம்பூரில் ஒரே கலவரம், முதல் நாளே. வ.உ.சி. யாலேயே தொழிலாளர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. ‘தமிழ் காந்தி’ திரு.வி.க. அவர்கள் மேடை ஏறி பேசினார் -வசிஷ்டர், பிரஹ்லாதன், ஏசு கிறிஸ்து,, அப்பர்! ‘வீட்டுக்கு போய், நாளை வருக.’ என்றார். கட்டுப்பட்டார்கள்.

கல்கி சொல்லுவார். திரு.வி.க. வுக்கு அடி பணிய, அவர் சொன்னதெல்லாம் புரிந்துகொள்ள தேவையில்லை என்று.
(தொடரும்)
இன்னம்பூரான்

பின்குறிப்பு:
புவனம் முழுதும் நண்பர்கள் இருப்பது ஒரு கொடுப்பினை. டெக்ஸாஸ் வாழும் டாக்டர் நா.கணேசன் அவர்களிலொருவர். ஒரு இழையில், அவர் ”…மதறாஸ் வந்தால் இன்னம்பூரான் சார் வீட்டிலோ அல்லது கீதாம்மா வீட்டிலோ நிச்சயம் திணைப்பாயாசம் கொடுக்கணும்.” என்று எழுதி என் மனதை கவர, இந்த இழை பிறந்தது.
என் குருநாதரின் அன்பு கட்டளை படி எனக்கு எல்லாரும் வேண்டும். இதமாக பழக வேண்டும். இங்கிதமான உறவு நாடுபவன், நான். இந்த இழை தொடரும். காழ்ப்புணர்ச்சியை உரக்கப் பேசுபவர்களை தணிந்து பேசச்சொல்லி கோரிக்கை விடுகிறேன்.

3.அடிச்சுவடுகள்:
சான்றோர்களை பற்றி மற்றவர்கள் எழுதியதை படிக்கும் போது, நாம் அவ்வாறு எழுதியிருக்கலாகாதா? என்ற அங்கலாய்ப்பு எழுவது ச்கஜம். நம்மில் பெரும்பாலோர் என்னைப்போல பாமரர்கள் தானே. ஆர்.நல்லகண்ணு அவர்கள் பழுத்த பொதுவுடைமை அரசியல் வாதி. நல்லொழுக்கத்துக்கு முன்னுதாரணம் வகிப்பவர். அவர் திரு.வி.க. அவர்களின் சீடர் என்பது வியப்புக்குரிய செய்தி அல்ல. குருநாதர் தானே கார்ல் மார்க்ஸின் நூல்களை பிரசுரம் ஆனவுடன் படித்து தொழிற்சங்கத் தலைவர் ஆனார்.மேலும் சீடர் குருநாதரின் அடிச்சுவடுகளை தொகுத்தார். அவற்றை பட்டியலிட்டு இங்கு, தோழர். நல்லகண்ணு அவர்களுக்கு நன்றி கூறி, இங்கு தவணை முறையில் தருகிறேன்.

1. "அரசியல் மேடைகளில் தமிழில் பேசிச் சாதாரணமக்களை அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபடச் செய்தார். முதன்முதல் ஏகாதிபத்ய எதிர்ப்பு அரசியலில் சானான்யரும் ஈடுபடவேண்டுமென்று வலியுறுத்தினார். சாதாரணமக்களையும் விடுதலைப் போரில் ஈடுபடத்தூண்டினார்.

2. "சென்னை மாநகரில் அமைப்பு ரீதியாகத் தொழிலாளர்களைச் சங்கமாகத் திரட்டினார். இறுதி மூச்சு வரை தொழிலாளர் நலனுக்காகப் போராடி வந்தார்."
(தொடரும்)


http://innamburan.blogspot.de/view/magazine

https://www.blogger.com/blogger.g?blogID=4506062343141339038#overviewstats


Monday, August 26, 2019

Reply: INNAMBURAN PAGES: 21 AUGUST 1907

Reply:

Thursday, August 22, 2019

INNAMBURAN PAGES: 21 AUGUST 1907


Dear Commentators,
I Wish to individually reply to all of you, but do not have the time and energy for it. I am a loner aged 87,somehow managing to blog, write, take classes, run literary circles. Put together, I have a long day, everyday 24x7. I thank you all for the kind words spoken and hope to live up to your expectation. 
As I told often, my mind writes; I have, therefore, rejoiced in it.
I suggest we form a community, perhaps, known as Innamburan Community. All others can ask me to put their writings there or by opening a Yahoo Group, each one of us can post there. Tamil enjoys a prirority.
Regards,
Innamburan

Thursday, August 22, 2019

INNAMBURAN PAGES: 21 AUGUST 1907



https://innamburanpages.blogspot.com/2019/08/innamburan-pages-21-august-1907.html

Wednesday, August 21, 2019



https://innamburan.blogspot.com/2019/08/innamburan-pages-19-august-1934-lord.html

INNAMBURAN PAGES: 19 AUGUST 1934





INNAMBURAN PAGES: 19 AUGUST 1934

Lord Acton famously said, “Power corrupts. Absolute Power corrupts absolutely." History is replete with countless biopics of Democracies illegitimately spawning authoritarian heavy-handed misrule like Hitler becoming Fuhrer. Devil incarnate, he waged wars on weak neighbours, almost exterminated Jews in the most notorious genocide, the Holocaust. He got his handle through a Referendum (some call it Plebiscite.) held in Germany this day in 1934, following the death of President Hindenburg, who had earlier defeated him. Rigged up though, this dubious exercise of a democratic tool did bring out support for him.As historian Ian Kershaw has judged, even after accounting for the manipulation of the voting process, the results "reflected the fact that Hitler had the backing, much of it fervently enthusiastic, of the great majority of the German people" at the time...

The German army took an oath of allegiance to him. His Nationalsozialistische Deutsche Arbeiterpartei (Nazi Party) ’s socialist orientation was little more than a ploy to attract working-class support; in fact, Hitler was fiercely right-wing. 

“…Although the Nazis suffered a decline in votes during the November 1932 election, Hindenburg agreed to make Hitler chancellor in January 1933, hoping that Hitler could be brought to heel as a member of his cabinet. However, Hindenburg underestimated Hitler’s political audacity, and one of the new chancellor’s first acts was to exploit the burning of the Reichstag (parliament) building as a pretext for calling general elections. The police under Nazi Hermann Goering suppressed much of the party’s opposition before the election, and the Nazis won a bare majority. Shortly after, Hitler took on dictatorial power through the Enabling Acts…” (History Today).

Placed above is the facsimile of the legal document enabling his dictatorship. Charlie Chaplin parodied him in his immortal 'The Great Dictator. Friend N.Lakshninarayan put this for us, as under. You must view the film at leisure, fully. Two hours well spent Its lesson is embedded in global society's memory.


https://www.youtube.com/watch?v=culm_r_oAdc





Reference: 


https://www.history.com/this-day-in-history/hitler-becomes-fuhrer





Sunday, August 18, 2019

Innamburan Page: 18 August 2019



https://innamburanpages.blogspot.com/2019/08/innamburan-pages-18-august1945.html

innamburan-pages-18-august1945.




https://innamburanpages.blogspot.com/2019/08/innamburan-pages-18-august1945.html