Wednesday, October 1, 2014

ஆலப்பாக்கமும் அக்கம்பக்கமும்: விரைசா சைனாவுக்கு ஒரு நடை போய்.... அல்லது லபோ திபோ; II

ஆலப்பாக்கத்து அக்கம்பக்கத்து நண்பர்களே,
இது என்றோ ஒரு நாள் எழுதியதின் மீள்பதிவு. இங்கு செல்லுபடியாகுமா என்றறியேன். விருப்பமுள்ளவர்கள் பகருக.
ஒரு நூற்றாண்டுக்கு முன் ஒரு இந்தியர் அங்கு நடத்திய புரட்சி இன்று இங்கு ஏன் நடக்காது?
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்

அன்றொரு நாள்: நவம்பர் 6
கல்லும் கரைந்த கதை
கல்லையும் போட்டார். அதை கரைத்தும் கொடுத்தார்.
Was he the Pied Piper of Hamelin? அல்லது மகுடியூதி மயக்கிய பிடாரனா, இந்த பிச்சுக்குப்பன்? காலை 6:30 மணிக்கு 57 குழந்தைகளும், 127 பெண்களும், 2,037 ஆண்களும் பின் தொடர, ஊர் எல்லை கடந்தார். சுட்டுப்புடுவோம் என்று வீராப்பு பேசியவர்கள், வியப்புடன், இந்த இரண்டுங்கெட்டான் படையை முறைத்து பார்த்தனர். வாளாவிருந்தனர். வழி நெடுக விருந்தோம்பல். சாயும் வேளை. கிட்டத்தட்ட 5000 பேர். ராத்தங்க முகாம் தயாரிக்கும்போது, கைது செய்தார்கள். உடனே ஜாமீனில் விடுதலை. இது ஆரம்ப கட்டம். ஒரு உரையாடல், அதற்கும் முன்னால்.
*
‘என்னிடம் யாது குறை? எனக்கு சிறை செல்ல தகுதி இல்லையா?’
‘சரி, உன் இஷ்டம்,’
*
சட்டத்தை மீறி, எல்லை கடந்து, சில பெண்கள் டால்ஸ்டாய் பண்ணையிலிருந்து நேட்டாலுக்கு விஜயம். அவர்களை அரசு கைது செய்யவில்லை. சிறிது நேரம் கழித்து, மேற்படி உரையாடலுக்குப் பிறகு, சில ஃபீனிக்ஸ் குடியிருப்பு பெண்கள் ட்ரான்ஸ்வாலுக்கு பயணம். கைதாயினர், அவளும் உள்பட.நேட்டாலில் புகுந்த பெண்கள் ந்யூகேஸ்சில் நிலக்கரி சுரங்கபூமிக்கு சென்று, அடிமையாகாத தொழிலாளிகள் மீது விதிக்கப்பட்ட வரியை எதிர்த்து, சுரங்கத்தொழிலாளிகளை வேலை நிறுத்தம் செய்ய சொன்னார்கள். அந்த பெண்கள் சிறையில் தள்ளப்பட்டார்கள். கொதி நிலை. அருமையாக போற்றி வளர்த்தத் தங்கள் பெண்ணினம் பட்ட அவதியை கண்டு இந்தியர்கள் கொதித்தெழுந்தனர். அடிமைகள் தொழிலாளிகளுடன் இணைந்தனர். சூத்ரதாரியும் பிரசன்னம். அவர்களை, சுரங்கத்தை விட்டு விட்டு தன்னுடன் பிராந்தியம் கடந்து, சிறை செல்ல ஆயத்தமாக வரச்சொன்னார். அவர்களும் சம்மதித்தனர். இந்த காலகட்டத்தில் தான் கைது/ஜாமீன்.
நவம்பர் 6, 1913 காலை. தென்னாஃப்ரிக்கா: டால்ஸ்டாய் பண்ணை: ட்ரான்ஸ்வால் பிராந்தியம் & ஃபீனிக்ஸ் குடியிருப்பு: நேட்டால் பிராந்தியம்: அந்த பெண்மணி: கஸ்தூரி பாய். பிச்சுக்குப்பன் அலையஸ் சூத்ரதாரி: மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி. 
அந்த கைது/ஜாமீன் எல்லாம் பாசாங்கு. அவரை என்ன செய்வது என்று தான் அரசுக்கு புரியவில்லை. எட்டாம் தேதி, மறுபடியும் சிறையடைக்கும் படலம். மாஜிஸ்ட் ரேட் ஆணை. ‘ஓஹோ! எனக்கு பிரமோஷன்!’ என்று ‘நறுக்’ ஜோக் அடித்தார். மறுபடியும் ஜாமீன். மறுபடியும் யாத்திரை. ஐயாவை கைது செய்தால், பின் தொடருபவர்கள் கலைந்து விடுவார்கள் என்று நினைத்தார்கள். ஊஹூம்! வன்முறை வந்தால் தாக்கலாம் என்று பார்த்தார்கள். ஊஹூம்! அண்ணல் சொன்னதால், அமைதி; பூரண அமைதி. ‘உம்மால் சாந்தஸ்வரூபியை கொல்லமுடியுமா?’ என்றார். இதற்கு நடுவில், இந்த அமைதி பூங்கா மனிதர், அதிபர் ஜெனரல் ஸ்மட்ஸின் காரியதரிசியிடம், ‘ஜெனரல் இந்த அபாண்ட வரியை தள்ளுபடி செய்தால், நான் சட்டத்தை மீறும் இந்த யாத்திரையை நிறுத்தி விடுவேன்’ என்றார். அவர்கள் ‘உன்னால் ஆனதை பார்’ என்று சொல்லி, அந்த பேச்சை கடாசி விட்டார்கள். 9ம்தேதி மூன்றாம்முறை கைது. 11ம் தேதி 9 மாத கடுங்காவல் தண்டனை. மூன்றே நாட்களில் மற்றொரு குற்றச்சாட்டு. + 3 மாதம். கூட்டாளிகளும் கைது. தொழிலாளிகள் கட்டி இழுத்து ரயிலில் போடப்பட்டு திருப்பப்பட்டனர். அவர்கள் சிறைப்படுத்தப்படவில்லை. வேலைக்கு ஆள்? அதனால், கூண்டுக்குள் அடைக்கப்பட்டு, சவுக்கால் அடிக்கப்பட்டு வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். ஊஹூம்!  அவர்கள் அசைந்து கொடுக்கவில்லை. உலகெங்கும் எதிர்ப்பு தோன்றியது. நன்கொடையும், உதவியும் வந்து குவிந்தது. ஏன்? இந்தியாவின் வைஸ்ராயே தென்னாஃப்பிரிக்க அரசின் போக்கைக் கண்டித்தார். எல்லா தென்னாஃப்பிரிக்க சுரங்கங்களிலும் 50 ஆயிரம் பேர் வேலை நிறுத்தம். ஆயிரக்கணக்காக சிறையில். ராணுவம் மக்களை சுட்டுத் தள்ளியது. அண்ணல் காந்தி சொல்கிறார், ‘தென்னாஃப்பிரிக்க அரசு விழுங்கிய எலியை முழுங்கவும் முடியாமல், உதறவும் முடியாமல் இருக்கும் பாம்பு போல் தவிக்கிறது’. அப்படி தவித்த ஜெனெரல் ஸ்மட்ஸ் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கிறார். என்ன பிரயோஜனம்? இந்தியர்கள் சத்யாக்ரஹிகளை விடுதலை செய்யவேண்டும் என்றனர். இந்த விசாரணை கமிஷனில் ஒரு இந்திய தரப்பு (வெள்ளையனாக இருந்தாலும்) அங்கத்தினர் வேண்டும் என்றனர். ‘எலி விழுங்கிய’ ஸ்மட்ஸ் முடியாது என்றார். 1914 வருட புத்தாண்டு தினத்தில் மாபெரும் வேலை நிறுத்தம் என்று பிரகடனம் செய்தார், காந்திஜி.
இங்கு தான் முதல்முறையாக, காந்தீயம் தலையெடுத்து, ஜெனெரல் ஸ்மட்ஸ்ஸின் கல்மனதை கரைத்தது. அதே சமயத்தில், தென்னாஃப்பிரிக்காவே ஒரு ரயில் வேலை நிறுத்தத்தால் தவிக்க நேரிட்டது. காந்திஜி தன்னுடைய சத்யாக்கிரஹத்தை ஒத்தி வைத்தார், உன் இன்னல் என் ஜன்னல் அல்ல என்றார். ஜெனெரல் ஸ்மட்ஸின் காரியதரிசி காந்திஜியிடம்: ‘ நீங்கள் எங்கள் கஷ்டகாலத்தில் கை கொடுக்கிறீர்கள். நாங்கள் உங்கள் மீது எப்படி கை வைக்க முடியும்? நீங்கள் வன்முறை பாதையில் சென்றால், உங்களை கையாளும் விதம் எங்களுக்கு தெரியும். நீங்களோ தன்னையே ஆஹூதி செய்து வெற்றி காண்கிறீர்கள். அதற்கு முன்னால் நாங்கள் எம்மாத்திரம்?’
ஜெனெரல் ஸ்மட்ஸும் காந்திஜியும் பேசிக்கொள்கிறார்கள். கடிதப்போக்குவரத்து வேறே. பெரும்பாலான பிரச்னைகள் தீர்ந்தன. அபாண்ட வரி தள்ளுபடி. கிருத்துவ முறை அல்லாத விவாகங்களை சட்டம் அனுமதித்தது. ( இது பெரிய விஷயம்; அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து,
தீ வலம் வந்தது விவாகமல்ல என்றது அந்நாட்டுச்சட்டம். பிறகு தான் அதை பற்றி எழுத வேண்டும்.) ‘என் கடன் முடிந்தது’ என்று 20 வருடங்களுக்கு பிறகு தாய்நாடு திரும்பினார், காந்திஜி. ஒரு மாபெரும் சத்திய சோதனைக்கு பிறகு. பிற்காலம், இந்தியாவின் விடுதலை வாங்கிக்கொடுத்தது அதுவல்லவா. 
இந்தியாவுக்கு திரும்பும் முன், காந்திஜி ஜெனெரல் ஸ்மட்ஸுக்கு, தான் சிறையில் தைத்த ஒரு ஜோடி காலணிகளை பரிசளித்தார். பல வருடங்களுக்கு பின்னால், ஸ்மட்ஸ் கூறியது, “ பல வருடங்களில் வேனில் காலத்தில் நான் அந்த காலணிகளை அணிந்துள்ளேன். ஒரு மாமனிதரின் காலணிகளில் நிற்க எனக்கு தகுதி உண்டா என்று தான் நினைத்துப்பார்ப்பேன்.’
இது தான் கல்லும் கரைந்த கதை.
இன்னம்பூரான்
06 11 2011
1913 Mohandas Gandhi was arrested while leading a march of Indian miners in ...
Indian women join Gandhi's passive resistance campaign
உசாத்துணை:
This biography was written by Roberta Strauss Feuerlicht and is reprinted here with the permission of the copyright holderஇன்னம்பூரான்
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


விரைசா சைனாவுக்கு ஒரு நடை போய்....
அல்லது
லபோ திபோ; II




இது ‘லபோ திபோ’ விசிறியான பாசக்கவி இசக்கி பரமசிவன் ஸ்பெஷல்.

டிசம்பர் 2013 மாதக்கடைசியில் இங்கிலாந்துக் குளிரிலிருந்து தப்ப சென்னைக்கு டிக்கெட் எடுக்க களத்தில் இறங்கின மறுநாள் ஒரு ஆணை பறந்தோடி வந்தது. மின் தமிழ்/வல்லமை சுமை தாங்கிகளில் புகுந்து விளையாடும் சில இழுபறி இழைகளைப்போல, அது என்னை திசை மாற்றியது. சாராம்சம்: ‘இங்கேயும் போலார் வோர்டெக்ஸ் பொழியும் பனிமாரி பல அடிகள் கனம். வண்டி எடுக்கமுடியாது; ஆனா வேலைக்கு போகவேண்டும். நடுநிசியானாலும் அள்ளிப்போட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், இங்கே வந்து விடு. குளிர் ஜாஸ்தி; கம்பிளி ஆடையெல்லாம் எடுத்து வா. இரண்டு மாசம் ஆனப்பறம், நானே உன்னை அழைத்துச் செல்கிறேன். டிக்கெட் அனுப்றேன்.’ டொக். பேச்சுக்கு இடம் இல்லை. பெண்ணாணையாச்சே. ஃபெப்ரவரி முதல் தேதி வாக்கில், அமெரிக்கா வந்து பனிமழை இற்செறிப்பு. அமெரிக்கா அரைவலின் அதிகப்படி ஆதாயம், பெண்ணியத்தின் நுட்பங்கள் பலவற்றை தனது விசேஷ படிப்பினாலும், தொழில் அனுபவத்தால் ஆராய்ந்த பல வல்லுனர்களுடன் கலந்து ஆலோசிக்க ஒரு தருணம்  கிட்டியது. ‘சொன்னால் விரோதம்’ சரி தான். பல நாட்கள் உலாவ முடிந்தது. சிலநாட்கள் நூலகமே கதி. சனி, ஞாயிறு பார்ட்டீயிங். 

அதற்கு முன்னாலேயே இந்தியாவுக்கு ஏப்ரல் 2 கிளம்ப டிக்கெட் எடுத்தாச்சு; அதற்கு முதல் நாளுக்கு டிக்கெட் எடுந்திருந்தால், பரமசிவனார் 

‘தேதியே! ஏப்ரல் முதல் தேதியே! 
மதி கலங்கவைக்கும் தேதியே!
பேதி மாத்திரை கொடுக்காதே!
நீதி நெறி பாடம் எடுக்கும் எசக்கி நானே!

என்று பாடியிருப்பார். ஆனால் விதியை வெல்ல என் செய்யலாம்? போனதென்னெமோ சைனாவுக்கு! ஐயமிருந்தால், விமான கம்பெனியை கேளுங்கள். திட்டப்படி அமெரிக்காவிலிருந்து யுனைட்டட் ஏர்வேஸ், ஃப்ராங்க்ஃபெர்ட் வரை. அங்கிருந்து லுஃப்தான்ஸா சென்னைக்கு. எம்டன் குண்டு: ஏப்ரல் இரண்டு முதல் மூன்று நாட்கள் லுஃப்தான்ஸா விமான ஓட்டிகள் ஹர்த்தால். ஸ்டட்கர்ட் வரை கொண்டுபோய் விட்றுங்கோ. ஸுபாஷிணியை பாத்ததா ஆச்சு என்று கேட்கச்சொன்னேன். விந்தையாக என்னை முறைத்துப்பார்த்த பெண் சொன்னாள்,’ How impractical. You are always like this. மூன்று மணி நேரம் கப்சிப் ஆக இரு’ என்றாள். டெலிஃபோன்/ கம்ப்யூடர்/டெலிஃபோன்/ கம்ப்யூடர் சுழன்றன, விஷ்ணுச்சக்கரம் மாதிரி. பின்னர் ஃபைனல் ஆர்டர். நாம் ஏப்ரல் முதல் தேதி கிளம்பறோம். கிட்டத்தட்ட அதே பிளான். என்றாள், அப்பீல் இல்லை என்று குறிப்பால் உணர்த்தினாள். கிளம்பினோம்.

கிளம்பினோமா? சிகாகோவில் யுனைட்டெட் ஏர்வேஸ் விமானம் ஸ்மார்ட்டாக நின்று கொண்டிருந்தது. ஸ்டார்பக்ஸ்லெ போய் ஒரு கப் காஃபி அருந்தி விட்டு வந்தால், ஒரு பேரிடி.
‘இந்த விமானம் ரிப்பேரு. பதில் விமானம் வர ஒரு மணியாகும். அந்த டிலே ஈடு கட்டமுடியாதது என்பதால், நாங்கள் இறங்குவதற்கு முன்னாலே லுஃப்தான்ஸா சென்னை விமானம் பறந்தோடியிருக்குமே. தீவிர விசாரணையில் இறங்கினோம். வந்த பதில்கள்:

‘ Oh! how sad!/ we do not know when the replacement plane can come to the bay/
Some solution will be found/you must be carrying spare clothing/ the worst is you would be stranded in a Teutonic hotel for 3 days/ enjoy!/ we will try to reroute you through Paris. OK?/ இத்யாதி.

இசைகேடா நான் சொன்னேன். எஃப்பீல் டவர் பாத்துட்டு வரலாம். பொண்ணு முறைத்தாள். அதற்குள் பதில் விமானம் வர, 90 நிமிடம் தாமதம், அது கிளம்ப. ‘ஈஶ்வரோ ரக்ஷது’ என்று அவன் மேல் பாரத்தைப்போட்டு ஏறிவிட்டாலும், கவலை பிடுங்கித் தின்றது. God helps only those who help themselves. என்று மீனா டீச்சர் சொல்லிக்கொடுத்து இருக்காங்களே. எப்படி தோசையை திருப்பிப்போட்டு இங்கிதமாக பேசி விவரம் கேட்டாலும், ஸ்டாக் ரிப்ளை: We have no way of telling you. Wait for landing. இவள் என்ன அதை சொல்றது என்று கருவிக்கொண்டே, விமான பயணம் பற்றிய வீடீயோவை, பகவத் கீதை படிக்கிறமாதிரி போட்டுக்கொண்டே இருந்தேன். அதில் இறங்கப்போகும் வாசல், கனெக்டிங்க் விமானம் பற்றிய தகவல்கள் கொட்டும். அந்த அசரீரி திருப்பித்திருப்பி கூறியது:

‘ இந்த விமானம் பீஜீங்க விமான தளத்தின் முதல் டெர்மினலில், இன்னு 23 நிமிடங்களில் இறங்கும். சைனா விஸாவை கையில் எடுத்து வைத்துக்கொள்ளவும். இல்லையென்றால், அனுமதி மறுக்கப்படலாம். ஜெயிலில் போட்டாலும் போடுவார்கள். சாக்கிரதை. ‘லொட்! லொடட்! தட தடா! பிளேன் இறங்கிடுத்து. எனக்கு பெரிய சந்தேஹம்: ஈஷ்வரன் லீவுல்லே போயிட்டாரோ?
எப்படி சென்னை வந்தோம்னு கேட்கிறீர்களா?
(தொடரும்)
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி


Sunday, September 28, 2014

இந்தியா 2014 -2

இந்தியா 2014 -2

உடனுக்குடனே இதை எழுதுவதாக இல்லை. ஆனால் பிரதமர் மோடி இப்படி செய்து விட்டாரே! சற்று முன் அவர் மேடிசன் சதுக்கத்தில் ஆற்றிய உரை முழுவதையும் கவனத்துடன் கேட்ட பிறகு, ஹிந்து இதழில் நான் தெரிவித்த கருத்து.
‘கடந்த சில வருடங்களாக இந்தியாவில் ஒரு மாபெரும் புரட்சி வரும். தலைகள் உருளும். உதிரம் சிந்தும். வன்முறை தலை தூக்கும்.இந்த தாங்கொண்ணா துன்பத்திற்கு பிறகு, விவேகம் திரும்பும்.’
என் நண்பர்களுக்கு இது பிடிக்கவில்லை. உள்ளதை சொல்கிறோம் அல்லவா. தேசீய தேர்தல் 2014 நடந்த பின்னும், புரட்சி நிகழும் என்றும் அதன் தீவிரம் தணிந்து இருக்கும் என்று நினைத்தேன். வரலாறு காணாத வகையில் நமது பிரதமர் மோடி, இயல்பாக, கடுதாசி வைத்துக்கொள்ளாமல் பல நற்செய்திகளையும், சீரிய கருத்துக்களையும், வருங்கால நடவடிக்கைகளை பற்றியும் மேற்படி உரையில் கூறியதையும், அதற்கு கிடைத்த அமோக வரவேற்பையும் கண்ட பின், வரப்போகும் புரட்சி அமைதியாகவும், சத்தம் போடாமலும் நிகழும் என்ற கனவு எனக்கு மேலோங்கி நிற்கிறது. உள்மனது உடனுக்குடனேயே பகிர்ந்து கொள்ள சொன்னது. அவர் கூறிய பெரிய உரையிலிருந்து சில அரிய கருத்துக்களும் செய்திகளும்:
  • இந்தியா தான் 21ம் நூற்றாண்டில் உலகை வழி நடத்தும்.
  • கவலைக்கும் ஏமாற்றத்துக்கும் இடமில்லை. இந்தியாவின் இளைய சமுதாயம் சாதனை படைக்கும்.
  • அமெரிக்காவில் பலநாடுகளிலிருந்து வந்தவர்கள் உளர். இந்தியர்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள்.
  • நடைமுறையில், இந்தியா வீசா எளிதில் கிடைக்கும். என்.ஆர்.ஐ.களுக்கு நியாயமான சலுகைகள் கிடைக்கும்.
  • எல்லோரும் வந்து வடம் பிடிப்பீர்களாக.
மற்றதை ஊடகங்களில் படித்துக்கொள்ளவும். 

சித்திரத்துக்கு நன்றி: http://i.ytimg.com/vi/APva4nVmXFA/0.jpg

Saturday, September 27, 2014

இந்தியா 2014 ~1




இந்தியா 2014 ~1
இந்தியாவின் தற்கால வரலாற்றில் இவ்வருடம்/ இம்மாதம்/ இவ்வாரம் ஒரு நிரந்தரமான, புகழ் மங்காத, என்றும் மகிழ்வுடன் பேசப்படுவதாக அமையும். சில முக்கியமான நிகழ்வுகள்: விண்வெளி சாதனை, மண்ணை குடைந்தெடுத்த பகல் கொள்ளை மீது வெளிச்சம், 1988 வருட சட்டமொன்று மீண்டும் பெற்ற உயிர்மை, உலக அரங்கில் இந்திய பிரதமரின் தெளிவான உரை ஆகியவை. ஒவ்வொன்றை பற்றியும் பலரும் எழுதியிருப்பார்கள். அவற்றை பற்றி சற்றே நீண்ட கட்டுரைகள் இன்றியமையாதவை. எனவே, இந்த பதிவை ஒரு முன்னுரையாக பாவிக்கவும்.
மங்கல்யான் விண்கலம்



இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நவம்பர் 5, 2013 அன்று  அனுப்பிய ஆளில்லா மங்கல்யான் விண்கலம், திட்டமிட்ட படி, இம்மி பிசகாமல், இம்மாதம் 24ம்தேதி செவ்வாய் கிரகத்தை அடைந்தது. இந்திய விஞ்ஞானிகளின் சாதனை மெச்சத்தக்கதே. இதனால் யாருக்கு ஆதாயம்? அந்த பணத்தில் ஏழைகளுக்கு மான்யம் கொடுக்கலாமே என்று ஒரு சமூக ஆர்வலர் ஆதங்கப்பட்டார். ஆனால், இந்தியாவில் ஏழைகளின் மான்யத்தை கபளீகரம் செய்தது ஏழைகள் அல்ல. செல்வமும், அதிகாரமும் படைத்தவர்கள். ஆவின் நீர்பால் துரோகம் 1990 திலிருந்து நடப்பதாக, இன்றைய செய்தி. ஏதாவது சிந்திய துளிகள் அவர்களுக்கு கிடைத்திருக்கலாம்.பிள்ளையார் கோயிலாண்டி என்றுமே ஊருக்கு இளைத்தவன் தான். இது வரலாறு. இஸ்ரோவுக்கு திரும்புவோம். பல துறைகளில் சாதனை படைப்பதின் மூலம் இந்தியாவுக்கு உலகளவில் மதிப்பு கூடுகிறது என்பதும் உண்மை. எதற்கும் ஒரு நெருடலை ஜீரணித்துக்கொள்வோம். ஊழல் மலிந்த பாரத தேசத்தில் விஞ்ஞானிகள் நிறைந்த இந்திய விண்வெளி மையமும் சிக்கிக்கொண்டது, சிலகாலம் முன்பு. தவறு இழைத்தவர்கள் நீக்கப்பட்டாலும், விவகாரம் தீர்ந்தபாடில்லை.
மண்ணை குடைந்தெடுத்த பகல் கொள்ளை மீது வெளிச்சம்



கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மின் வெளிச்சம் போட, ரயில் வண்டி ஓட்ட, மற்றும் பல ஆலைகள் இயங்க தீனி போடும் நிலக்கரியை தோண்டி எடுப்பதில் மணலை கயிறாக திரிப்பதை விட மாயாஜாலங்கள் செய்து ஊரையும் உலகையும் ஏமாற்றி, ஏழைபாழை கூலிகள் வயிற்றில் அடித்து நடந்த ஊழல்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து, 214 நிலக்கரி சுரங்க ‘முரண்’ உடன்படிக்கைகளை ரத்து செய்து விட்டது. உள்ளதை சொன்னால் உடம்பு எரிச்சல் என்பது சொல்வழக்கு. ஆடிட்டர் ஜெனரல் சொன்னால் கபில் சைபால் போன்ற பிரகஸ்பதிகளுக்கு மூக்கு நுனியில் எள்ளும் கொள்ளுமாக எள்ளல் வெடிக்கும். திரு. சாக்கோ போன்றவர்கள் சாக்கு போக்கு சொல்லி வெள்ளைக்கடுதாசியில் மசி பூசுவார்கள். உச்ச நீதி மன்றம் ஆடிட்டர் ஜெனெரல் போட்ட கணக்கு சரி என்று சொல்லி விட்டது. சட்டவிரோதமாக அனுமதி பெற்ற முதலாளிகள் ஒரு டன்னுக்கு ரூபாய். 295 வசூலிக்கவேண்டும் என்று தீர்வு. உலகளவில் எல்லா நாளிதழ்களும் நம்மீது நமது உற்பத்தியான சகதியை வீசிவிட்டார்கள். மனோஹர் லால் சர்மா என்ற மனுதாரர் அரசுக்கும், அந்த வழியில் மக்கள் இழந்த நஷ்டத்தை விளைவித்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார். மாட்டிக்கொள்பவர்களில் பிஜேபி கூட்டணியும் உளது. அக்டோபர் 8, 2014 அன்று இது விசாரணைக்கு வரும். அதுவரை அநேகர்கள் வயிற்றில் புளி கரைகிறது. நான் அந்த தீர்வையும் ஊடக செய்திகளையும் முழுதும் படித்தேன். அயோக்கியர்களுக்கு பஞ்சமில்லை, நம் நாட்டில். முழுதும் எழுத மஹாபாரதம் போல் நீண்டு விடும். ஒரு பிள்ளையார் கிடைத்தால், சொல்லிப்போடலாம்.

1988 வருட சட்டமொன்று மீண்டும் பெற்ற உயிர்மை



இன்று எல்லார் வீட்டிலும் இந்த பெங்களூரு வழக்கில் செல்வி. ஜெயலலிதாவுக்கும், அவரது பாங்கிகளுக்கும் கிடைத்த சிறை தண்டனை, அபராதம், ஆங்காங்கே கலவரங்கள், மத்திய அரசின் அறிவுரை வகையறா தான் பேச்சு. Justice delayed is better than Justice denied என்ற தோற்றம். இது கூட முதல் கட்டம் தான். 18 வருடங்களாக இழுத்த ஜவ்வுமிட்டாய் கரைந்து பாகற்காய் சாற்றுடன் கலந்து விட்டது. நான் அந்த வரலாறு படைத்தத் தீர்வை இன்னும் படிக்க இயலாததால், இதற்கு மேல் எழுத வில்லை, திரு. ராஜ்நாத் சிங் சொல்வது போல. இது நிற்க. இங்கிலாந்தில் காரை அதிக வேகத்தில் ஓட்டி, மாட்டிக்கொள்ளாமல் இருக்க மனைவியை பினாமியாக்கிய அமைச்சருக்குப் பொய் சொன்னததற்காக சிறை, அபராதம் எல்லாம். கூட்டுப்பொய்யர் மனைவிக்கும் அவ்வாறே. போதாக்குறையாக, அரசுக்கு ஆன செலவை அவர்களிடமிருந்து வாங்குவதாக ஆர்டர். 

உலக அரங்கில் இந்திய பிரதமரின் தெளிவான உரை




சற்று முன் தான் அவருடைய உரை நிகழ்ந்தது, ஹிந்தியில் பேசினார். ஏற்புடைய வகையில் ஆங்கில சொற்களை கலந்தார். சில மேற்கோள்கள்:
  • இதோ எழுபது வயது ஆகப்போகிறது, நமக்கு. எண்பது வரை காத்திருக்க வேண்டுமா? சீரமைப்புகள் உடனடி தேவை.
  • பாகிஸ்தானுடன் அமைதியான பேச்சுவார்த்தைக்கு தயார். பயங்கரவாதத்தில் நிழல் கூட படக்கூடாது.
  • உலகை ஒரு குடும்பமாக இந்தியா பாவிக்கிறது. வஸுதேவ குடும்பகம்.
  • இந்தியாவில் பொருளியல், சமுதாய முன்னேற்றங்கள் பெருகி வருகின்றன.
  • சராசரி இந்தியனின் எதிர்ப்பார்ப்புகளை யாவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
  • பயங்கர வாதத்தில் நல்லது/தீயது என்று பாகுபாடு கிடையாது.
  • சர்வதேச யோக தினம் அனுஷ்டிக்கலாம்.

மேலும் பல நற்கருத்துக்களை உரைத்தார். எல்லாரும் பார்த்திருப்பீர்கள். அதனால், இது போதுமே.
சித்திரங்களுக்கு நன்றி: 




Tuesday, September 16, 2014

சிரிச்சு மாளலெ ~ 11

சிரிச்சு மாளலெ ~ 11

இன்னம்பூரான்
16 09 2014
கொத்தமங்கலம் சுப்பு காந்தி மகான் கதையை எழுதி வில்லுப்பாட்டு பாடியதால், அண்ணல் காந்தியின் ‘சத்தியசோதனையுடன்’கூட்டணி வைத்தது சுப்பு என்பது தப்பு இல்லையோ? அல்லது தியாகபிரம்மத்தின் கீர்த்தனையை பாடியதால், அதை இயற்றயதில் நித்யஶ்ரீக்கு பங்கு உண்டு என்பது என்ன நியாயம்? பிளேட்டோவின் தத்துவங்களை தெளிய தமிழில் அளித்த திரு.வெ.சாமிநாதசர்மாவின் பணி மகத்தானது. அதற்காக, அவரை பிளேட்டோவின் பத்து நாள் தாயாதியாக்கலாமோ?
இது மாதிரியான பயித்தராத்தனம் ஒன்று அண்மையில் நடந்ததாக நேற்றைய செய்தி. சிரிச்சு மாளலெ என்றாலும் அழுகையும் வரது! பின்னெ என்ன? பல வருஷங்களுக்கு முன்னால் பாபாசாஹேப் அம்பேத்கார் அவர்கள் சாதி ஒழிப்புப் பற்றி ஆய்வுகள் பல செய்த பின், விவரமான, ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கிய நூல் ஒன்று எழுதினார். தலித் சமூகம் அதை வேதபாடமாக கருதுகிறது. தற்காலம் அதை மையத்தில் பொருத்தி, உரையும் கறையுமாக (annotated Critical edition) அருந்ததி ராய் கொணர, அதை பதிப்பித்த VersoBooks.com என்ற ஆங்கில பிரசுரகர்த்தா, இந்த மாமியும் சேர்ந்து அம்பேத்காரும் எழுதிய நூல் என்று விளம்பரப்படுத்தியது. அம்பேத்கார் பெளத்தமதத்தில் தன்னை இணைத்துக்கொண்டதால், மறு பிறவி எடுத்து, அருந்ததி ராய் அம்மையாரை நாடி வந்து தன்னை புதுப்பித்துக்கொண்டார் என்று கணக்குப்போடுதோ அந்த நிறுவனம் என்று தோன்றினாலும், Home Shop 18 என்ற இணையதள விற்பனையாளரும், ஆனானப்பட்ட அமேஜான் நிறுவனமும், இதே பயித்தராத்தனத்தை மட்டும் செய்யவில்லை. தலையில் சகதியை வாரி இறைத்துக்கொண்டன. Home Shop 18 அருந்தியார் மட்டுமே எழுதினமாதிரி, அவருடைய மற்றொரு நூலை முன் வைத்து, சங்கூதுகிறது. அகமதாபாத் நிறுவனமான Infibeam அம்பேத்காரின் பெயரை, கோழிக்குஞ்சை அமுக்றமாதிரி, அமுக்கி தள்ளி விட்டு, இது விளக்க உரை என்பதையும் சொல்லாமல், மாமியே புத்தகாசிரியர் மாதிரி விளம்பரம் செய்துள்ளது. அமேஜான் தலையில் கை வைத்தது: ‘The Annihilation of Caste (Hardcover – October 7, 2014) by Arundhati Roy (author), B.R. Ambedkar (author).’ ரிஷிமூலம், நதி மூலம் பார்க்கப்போனால், ஒரிஜினல் பிரசுரகர்த்தாவின் பெயர் நவாயனா. அவர்கள் தான் VersoBooks.comக்கு ‘இல்லாத’ காப்புரிமையை விற்று விட்டார்கள். இணையதள பெருமக்கள், ‘ஐயகோ! காப்புரிமை மீது வன்முறை; திருட்டுச்சொத்து’ என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறார்கள். கழுதை கெட்டா குட்டிச்சுவர். வெர்ஸோ தப்புத்தான், கணினி குழப்பம்  என்கிறது. டெக்னிகல் எர்ரராம், இந்த டெர்ரர்! வெர்ஸோ, அமேஜான், இன்ஃபிபீம் தவறை நிவர்த்தி செய்தாலும், செய்த தவறின் தழும்பை அழிக்க முடியவில்லையே. அது விளம்பர உத்தி என்கிறார், ஒரு தலித் பிரமுகர். யார் கண்டா? நாளைக்கு 
தடித்தாண்டவராயன், கம்பன் (2014) ‘இராமகாதை’ ‘annotated Critical edition’: சென்னை: தடாலடி பதிப்பகம்.
என்ற நூல் வெளிவரலாம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.combinedbook.com/blog/wp-content/uploads/2014/02/selfpubbed6.png

Saturday, September 13, 2014

என்னத்தைச் சொல்ல ! ~4


என்னத்தைச் சொல்ல! – 4
  1. Friday, September 12, 2014, 5:38

–இன்னம்பூரான்.
பிரசுரம்: http://www.vallamai.com/?p=50443



ைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில்  (10.09.2014) கல்லையும் கரைக்கும் உருக்கமான நிகழ்வு பற்றிய செய்தி: கும்முடிப்பூண்டி பகுதியில் மழை பெய்து தெருவில் நீர் தேக்கம். அதினுள் ஒரு உயிரோட்டமுள்ள மின்கம்பி. கடக்க முயன்றவர்களை பிள்ளைத்தாய்ச்சி நாய் ஒன்று பலமாக குரைத்து எச்சரித்ததை அந்த மாந்தர்கள் மதிக்கவில்லை. மனிதாபிமானத்துடன், அந்த மிருகம் தானே குதித்து ஆத்மதியாகம் செய்து, அவர்களை காப்பாற்றியது.  நன்றியுணர்வுடன், அந்த பேட்டை மக்கள் அந்த பிள்ளைத்தாய்ச்சி நாய் அநாதையாக விட்டுச்சென்ற நாய்குட்டிகளை தத்து எடுத்துக்கொண்டார்கள். இங்கு ‘இட்டார் பெரியோர்’ என்று பார்த்தால், அந்த பிள்ளைத்தாய்ச்சி நாய் தான் உயர் சாதி.  மெளலிவாக்கம் மாடிக்கட்டிடம் வீழ்ந்ததற்குக் காரணம், மனித நேயமற்ற மானிட மனப்பான்மை. புலன் பெயர்ந்து வந்த கூலிகளின் உற்ற தோழர்களாக வாழ்ந்த இரு தெரு நாய்களின் உத்தமபுருஷ தகுதியை சொல்லி மாளாது. போலீஸ் மோப்பநாய்கள் உண்மை ஊழியர்கள். இங்கிலாந்தில் ராணுவ மோப்பநாய்களுக்கு அபரிமித மரியாதை. இது நிற்க.
ஊடகங்கள் கேட்க மறந்த சில கேள்விகள்:
  1. உயிரோட்டமுள்ள மின்கம்பி அறுந்தது மின்சார துறைக்கு ஏன் தெரியவில்லை?
  2. அல்லது, தெரிந்தும் வாளாவிருந்தனரா?
  3. நாய் அபாயத்தைக் குறிக்கும்போது குரைக்கும் விதமே அலாதி. புத்தியுள்ள மாந்தருக்கு அது தெரியும். அப்படியானால், கடக்க விழைந்த மனித தெய்வங்களுக்கு புத்தியில்லையா?
  4. மின்கம்பி விவகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதா?
  5. அப்படியானால் என்ன முடிவு?
  6. இல்லையென்றால், ஏன்?
  7. நாய்க்குட்டிகளுக்கு அரசு மான்யம் கிடைக்குமா?
  8. ஆம் என்றால், அதை கண்காணிப்பார்களா?
  9. இல்லை என்றால், மனிதனுக்கு ஒரு விதியா? விலங்குகளுக்கு வேறு நடுவுநிலைமை ஒழிந்த சால்ஜாப்பு எப்படி நியாயப்படுத்தப்படும்?
என்னத்தைச் சொல்ல?

-#-


இன்னம்பூரான்
10 09  2014
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்

www.olitamizh.com

Monday, September 8, 2014

என்னத்தைச் சொல்ல! 3

என்னத்தைச் சொல்ல! 3

இன்னம்பூரான்
06 09  2014
பிரசுரம்: வல்லமை மின்னிதழ்:http://www.vallamai.com/?p=50274
பகை படையெடுக்கலாம். உள்ளிருந்தும் புகையலாம். ஏன்? பாலிலும் வரலாம். சூடான செய்தி: ஆவின் பாலில் இலவச குளிர்பானமாக வந்து அமைச்சர் தலையை காவு வாங்கலாம் ! வாங்கிடிச்சுண்ணு சில மணி நேரம் முன்னால் தினமலர் கூறியது. 
செய்தித்துகள் கூட்டம்:
 ‘மேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படும் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் பெறப்படும் ஆவின் பால், சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் குளிரூட்டும் நிலையத்தில் பதப் படுத்தப்பட்டு, தினமும், 2 லட்சம் லிட்டர் வீதம், சென்னைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த மாதம், 20ம் தேதி, திண்டிவனம் அருகே, கோவிந்தாபுரத்தில், சென்னை ஆவினுக்கு கொண்டு செல்ல தயாராக இருந்த லாரியை, போலீசார் சோதனை செய்ததில், பாலில் தண்ணீர் கலப்படம் செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக, வேலூர், ஆவினில் வேலை செய்த எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். இந்த மோசடி குறித்து, சி.பி.சி.ஐ.டி., ஜ.ஜி., மகேஷ்குமார் அகர்வால் தலைமையில், போலீசார், சத்துவாச்சாரியில் உள்ள ஆவினுக்கு சென்று, ஐந்து நாட்களாக விசாரணை செய்தனர்.சென்னைக்கு அனுப்பிய ஆவின் பாலில், தினமும், 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கலந்து கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசுக்கு அறிக்கை சி.பி.சி.ஐ.,டி., போலீஸ் அறிக்கை அனுப்பியிருந்தனர்... சென்னைக்கு, ஆவின் பால் கொண்டு சென்ற டேங்கர் லாரியில், தினமும், 4,000 லிட்டர் பால் திருடியதாக, எட்டு பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஆவின் பால் நிறுவனம், திருவண்ணாமலை பகுதியில் இருந்து, தினமும், 12 ஆயிரம் லிட்டர் பால், டேங்கர் லாரி மூலம் சென்னைக்கு அனுப்புகிறது. பால் நிரப்பி அனுப்பும் டேங்கரை, மறைவான இடத்தில் நிறுத்தி, குறிப்பிட்ட அளவு பாலை திருடி, அதே அளவில், தண்ணீரை டேங்கரில் நிரப்புவது தினமும் நடந்து வந்துள்ளது...கோவிந்தாபுரம் அருகே வயல்வெளியில், ஆவின் டேங்கர் லாரியில் (டி.என்.19: எக்ஸ் 3618) இருந்து, 40 லிட்டர் கொள்ளளவுள்ள, 40 கேன்களில், திருடிய பாலை நிரப்பி, டாடா ஏஸ் வாகனத்தில் ஏற்றி, எடுத்து செல்ல தயாராக வைத்திருந்தனர். திருடிய பாலுக்கு மாற்றாக, அதே அளவில், டேங்கரில் தண்ணீர் ஊற்றி நிரப்பியிருந்தனர்.இதில், ஆவின் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடந்தது... தமிழக பால்வளத்துறை அமைச்சர் மூர்த்தி இன்று அமைச்சரவையில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவரை பொறுத்தவரையில் கட்சி தொண்டர்களுக்கு பதவி வழங்குவதற்கு கல்லா கேட்பது, மற்றும் இவரது சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் குவாரி சட்ட விரோத செயல்பாட்டுக்கு துணைபோவது , மற்றும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்படம் செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சொல்லப்படுகின்றன... பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் ஆவின் பாலில் தண்ணீர் கலப்பு முக்கியமாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கலப்படம் கொடிகட்டி பறந்துள்ளது. இந்த கலப்படத்தின் பின்னணியில் அமைச்சரே காரணமாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் தன்னை வளப்படுத்தி கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
எல்லாம் மார்க் ட்வைய்ன் சங்கேத மொழிகள் தான். நல்லவேளை, ‘பாலில் தண்ணீர் கலப்பதாகச் சொல்லப்படுகிறதாம். தண்ணீரில் பால் கலப்பதாகவும் கேள்விப்படுகிறோம். ஆவினம் ஆவின் மீது வழக்குத் தொடரப்போகிறதாம். தருமமிகு சென்னையின் மஹாலிங்க நகரில் வாந்தி பேதியாம். அதற்கு காரணம் பாலில் கலந்த சாக்கடை நீர் என்று சில ஊடகங்கள் கூறுவதை வன்மையாகக் கண்டித்த ஆவின் பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் சங்கங்கள் காரணம் கூற அடக்கத்துடன் மறுத்து விட்டனவாம். வாம்! வாம்!’ என்று எந்த நாளிதழும் எழுதவில்லை.’ கற்பனை போதும்.
இந்த நாசகார வேலையில் எத்தனை பேர் எத்தனை வருடங்களாக ஈடுபட்டிருந்தனர்? அந்த காலத்தில் அரசியில் கல்லும் கிராமஃபோன் ஊசியும் கலப்பது உண்டு. தேயிலையில் குதிரைச்சாணி கலப்பதற்கே என்று இருந்த களவு தொழிற்சாலைகள் என்ன ஆயின? ஆகமொத்தம் மக்களுக்குத் தெரியாமலா இந்த கலவை நடந்திருக்கும்? 
இது எல்லாம் உள்ளிருந்து புகைச்சலா? என்னத்தைச் சொல்ல?
-#-

சித்திரத்துக்கு நன்றி:http://photos.thenews.com.pk/tasveer_images/2012-11-17/large/2_201211170304100202.jpg

Saturday, September 6, 2014

என்னத்தைச் சொல்ல! 2

என்னத்தைச் சொல்ல! 2

இன்னம்பூரான்
01 09  2014
இன்றைய செய்தி: பாரதியார் பல்கலைக்கழகத்தில் விதி மீறி 108 கல்லூரிகளுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகளை ஆடிட்டர் ஜெனரல் குறை கண்ட அறிக்கை ஆகஸ்ட் 12, 2014 அன்று தமிழ்நாட்டு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டதை பற்றி. ‘ஸ்டடி செண்டர்’ என்ற அமைப்புகளை பல்கலைக்கழகம் ஆய்வுக்கு உட்படுத்தவேயில்லை என்று அங்கு தகவல். மேதகு துணைவேந்தர் திரு.ஜான் பிச்சை அவர்களோ எழுத்து மூலம் அறிக்கை வரட்டும் என்று காத்திருப்பதாக சொல்கிறார் என்றும் இதழ்களில் செய்தி. இது விந்தையிலும் விந்தை அல்லவோ! 150 வருடங்களுக்கு மேலாக ஆடிட் நடைமுறை ஒரே மாதிரி தான். முதலில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு வினா எழுப்பி விடை நாடுவார்கள். அவற்றை எல்லாம் சீர்தூக்கி அலசியபிறகு ஆடிட் அறிக்கையின் தீர்வுகளை துணைவேந்தரிடம் சமர்ப்பிவித்து, பேச்சு நடத்தியபின் தான், அது எடிட் செய்யப்படும். பதில்களும், விளக்கங்களும் அதில் அடக்கம். ஏற்புடையவைகளை ஒத்துக்கொள்வார்கள். சம்மதமில்லையெனில் காரணம் கூறுவார்கள். இது இப்படியிருக்க, அறிக்கை தாக்கல் செய்தபின் மேதகு துணைவேந்தர் எதை எதிர்பார்க்கிறார்? நடந்த விதிமீறல்களை அவர் அறியாதது உண்டோ?
இதில் என்ன விந்தை என்றா கேட்கிறீர்கள்? ஒரு உதாரணம்.
மன்னன் அமைச்சரிடம் ‘மாதம் மும்மாரி பெய்கிறதா?’ என்று வினவ அமைச்சரும் ‘ஆமாஞ்சாமி’ என்று சத்தியபிரமாணம் செய்தாராம். மன்னனுக்குப் பாவம் அந்தப்புரத்திலிருந்து வானம் தென்படவில்லை போல் இருக்கிறது, துணை வேந்தர் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை கண்டு கொள்ளாமல், வரப்போகாத எழுத்து ஆவணம் கேட்பது. ஆகமொத்தம் ;‘என்னத்தை சொல்ல?’
-#-

பிரசுரம்: http://www.vallamai.com/?p=49969 

Saturday, August 30, 2014

புலவர். திரு. எஸ். சம்பந்த சிவாச்சாரியார் அவர்கள்

ஹிந்து இதழில் இன்றொரு செய்தி. திரு. எஸ். சம்பந்த சிவாச்சாரியர் அவார்களின் நிகரற்ற தமிழ்/ சங்கத தொண்டு பற்றி. IFPயும் EFEO வும் அபூர்வ சகோதரர்கள். பாண்டிச்சேரியில் இருந்து கொண்டு அவை இந்திய கலாச்சாரத்துக்கு மகத்தான பணி புரிகிறார்கள். தமிழகத்திலும் நாம் இவர்களை பின்பற்றி செய்யவேண்டியவை பற்றி புரிந்துகொள்ள, இந்த கட்டுரை தெளிவாக விளக்கம் தருகிறது.
இன்னம்பூரான்
30 08 2014



Today's Paper » NATIONAL » TAMIL NADU
Published: August 30, 2014 00:00 IST | Updated: August 30, 2014 05:41 IST

One more feather in Sanskrit scholar’s cap
S. Prasad


  • pastedGraphic.pdf

    S. Sambanda Sivacharya examining palm leaves manuscripts, which are preserved at the French Institute of Pondicherry. —Photos: S.S. Kumar 
  • pastedGraphic_1.pdf



The octogenarian chosen for Presidential Award of Certificate of Honour
: Octogenarian S. Sambanda Sivacharya has founded his formidable scholarship on an in-depth study of the scriptures and the nuggets of knowledge engraved on palm-leaf manuscripts.
The 89-year-old Sanskrit scholar and researcher in the French Institute of Pondicherry (IFP), who has been chosen for the coveted Presidential Award of Certificate of Honour for lifetime achievement in the field of Sanskrit language and literature, has done phenomenal work, especially in the Saivasiddantha.
He has published critical editions of the Saivagamas, one of the 28 main texts (agamas) of Saivasiddantha, tracing the historical evolution of its doctrines and the Saiva ritual system dating back several centuries. He also catalogued and translated over 300 ancient Saiva manuscripts.
On the Presidential award, which carries a certificate of honour, a memento and a one-time cash prize of Rs. 5 lakh, he believes it is a reward for his hard work and hiw affinity with the language.
The scholar who joined IFP as a research assistant in 1969 is also the proud recipient of prestigious civil award ‘ Ordre des Palmes Académiques’ from the French government in 2008 for his contributions to the study of the languages, texts, history and cultures of the Indian subcontinent. Among his other accolades are the prestigious Ikuo Hirayama award and the Agama Bhushanam Award from All India Aadhisaiva Sivachariyagal Seva Sangam in 2011.
Sambanda Sivacharya was born into a family archakas and had early exposure from the age of seven to temple rites and Veda Mantras under the guidance of his father D. Subrahmanya Gurukkal.
During his stint as scholar at the IFP since 1969, he extensively collected and studied Saiva manuscripts on palm leaves under the guidance of noted scholar N R Bhatt.
“The IFP has about 8,400 bundles of palm leaf manuscripts (classified as Memory of the World collection) by UNESCO with a majority on Saivagama, rituals, astrology, traditional south Indian medicine, Sanskrit literary works and Tamil devotional literature,” he said.
Most of the manuscripts are written in Grantha script, used by Tamil Brahmins for writing Sanskrit while others are in Sarada, Nandinagari, Newari, Tigalari, Grantha, Tamil, Telugu, Oriya and Tulu scripts. Each palm leaf bundle contains dozens of texts engraved in tiny letters, Sambanda Sivacharya said.



Award carries a certificate of honour, a memento and a one-time cash prize of Rs. 5 lakh

He has contributed phenomenally in the field of Sanskrit literature, especially in Saivasiddantha

Friday, August 29, 2014

பண்டிட். ஆர்.வரததேசிகன் அவர்கள்

நண்பர்களே,

ஹிந்து நாளிதழ் சொல்ல மறந்தது, பண்டிட். திரு. ஆர். வரததேசிகனின் வயது 94 என்று. அவருடன் அளவளாவ தருணம் கிட்டினால், நேரம் போவதே தெரியாது. 87 வயது வரை ஆபீசுக்கு சைக்கிளில் வந்தவர். அவருடைய ஆசி பெற எனக்கு வாய்ப்பு கிடைத்ததே EFEO மூலமாகத்தான். அந்த நிறுவனமும், அங்கு பணி புரியும் அன்னிய நாட்டு/இந்திய புலவர்களும், வந்து போகும் ஆய்வாளர்களும்  இந்தியாவின் பாரம்பரியத்துக்கும், தமிழுக்கும் செய்யும் தொண்டு மகத்தானது.

இன்னம்பூரான்
பாண்டிச்சேரி
30 08 2014


Published: August 23, 2014 00:00 IST | Updated: August 23, 2014 05:46 IST

Chronicling Bhakti movement

Staff Reporter
R. Varadadesikan launches the book, ‘Mapping the Chronology of Bhakti.’— Photo: S.S. Kumar
R. Varadadesikan launches the book, ‘Mapping the Chronology of Bhakti.’— Photo: S.S. Kumar
Throwing light on the growth of the Bhakti movement in South India since the sixth century, the Ecole française d’Extrême-Orient and the French Institute of Pondicherry has published a book of essays which draws on linguistics, philology, epigraphy and archaeology to map the chronology of the movement. The movement which emphasises the emotional aspect in the relation between devotee and God, swept across the sub-continent and transformed popular religion.
The book, ‘Mapping the Chronology of Bhakti: Milestones, Stepping Stones, and Stumbling Stones’ have been compiled based on proceedings of a workshop held in honour of R. Varadadesikan, a specialist of the Tamil sources of Vaishnavism, who worked at the EFEO for 44 years and retired recently.
Staff at EFEO recalled how processes set by Mr. Varadadesikan set a precedence and an era of traditionally-taught cassical Tamil has come to an end. “It is rare to find scholars who are experts in Tamil and Sanskrit. With his knowledge of Tamil, Sanskrit and Manipravalam (a mixture of Sanskrit and Tamil) Pandit Varadadesikan has played a pivotal role in cataloguing of manuscripts of the EFEO collection and this book is dedicated to him,” said Valérie Gillet, director, EFEO, at the launch of the book held recently. Ms. Gillet has edited the book.

Thursday, August 28, 2014

என்னத்தைச் சொல்ல! 1

என்னத்தைச் சொல்ல!

Friday, August 29, 2014, 5:18
இன்னம்பூரான்
 innam
‘The Devil quoting the Bible’ என்ற ஆங்கில சொலவடை இப்போது நினைவில் வருகிறது. என்னத்தைச் சொல்ல! பங்கு சந்தையில் புகுந்து கன்னா பின்னா அழுகுணி ஆட்டம் ஆடி ரூ.5600 கோடியை ஸ்வாஹா செய்த வினை NSEL & MCX-SX என்ற அபூர்வ சகோதர கில்லாடிகளை சார்ந்தது. அவற்றின் பிதாமஹராகிய ஜிக்னேஷ் ஷா சிறையில் அடைக்கப்பட்டார். நடந்ததை மறந்து எங்களுக்கு புதிய அவதாரத்துக்கு நாமகரணம் செய்ய வேண்டும் என்று அனுமதி வேறு கேட்டிருக்கிறது, MCX-SX. ‘அதெல்லாம் சும்மா உளவாங்காட்டிக்கு. ஆனாலும், அவர்களுக்கு தனியார் துறை ஆடிட்டர் கொடுத்த சான்றிதழ் மீது ஆனானப்பட்ட ஆடிட்டர் ஜெனெரல் கமெண்ட் அடிக்கவில்லை; எனவே நாங்கள் தவறிழைக்கவில்லை என்பது உறுதியாச்சு என்று தம்பட்டம் அடித்து ஒரு செய்தி! அரசு முதலீடு பொருட்டு, ஆடிட்டர் ஜெனெரல் செய்யும் இந்த அடுத்தக்கட்ட ஆடிட், அந்த தனியார் துறை ஆடிட்டர், சட்டரீதியான ஆடிட் செய்துள்ளனர் என்று தான் எதிர்வினை கருத்துத் தெரிவிக்கவில்லை. அதைப் போய் எங்கள் பரிசுத்தத்துக்கு அதுவே சான்று என்பது, ‘The Devil quoting the Bible’. அதாவது, ‘வசிஷ்டர் வாயாலெ பிரம்மரிஷி’ என்பதாகும். இதெல்லாம் ‘இடம்’ தகர்த்து, ‘பொருள்’ பேதம் செய்து, ‘ஏவலை’ திசை திருப்பும் சால்ஜாப்பே.
‘வல்லமையில்’ தணிக்கைத்துறை பற்றி எழுதிய கட்டுரைகளை, கடந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் ஆகியவற்றை இணைத்து, அரசியல் விழிப்புணர்ச்சி பொருட்டு ஒரு தொடராக எழுதலாமா/வேண்டாமா என்பதை வாசகர்கள் தான் தீர்மானம் செய்ய வேண்டும். இல்லை, இம்மாதிரியான ‘நறுக்’ போதுமா?

பிரசுரம்: http://www.vallamai.com/?p=49792