Thursday, April 18, 2013

அன்றொரு நாள்: ஏப்ரல் 19 விர்ரென...!




அன்றொரு நாள்: ஏப்ரல் 19 விர்ரென...!
Innamburan Innamburan Thu, Apr 19, 2012 at 12:26 AM



அன்றொரு நாள்: ஏப்ரல் 19
விர்ரென...!
அமெரிக்காவுக்கும், ஸோவியத் ரஷ்யாவுக்கும் கடும் போட்டி. செயற்கைக்கோள் விண்கலம் (சாட்டிலைட்) முதலில் செலுத்தி, ஜன்மசாபல்யம் பெறப்போவது யாரு என்று. 1957ல் முதலில் விர்ரெனெ... பறந்து ரஷ்யா அந்த புகழை வாங்கிக்கொண்டது. அக்காலம், விடுதலை பெற்று பத்து வருடங்கள் கூட ஆகாத நிலையில், இந்தியா பின் தங்கிய நாடாகத்தான் இருந்தது. ஏப்ரல் 19, 1975 அன்று, அருமை நண்பர் ரஷ்யாவின் அரவணைப்பில், 358 கிலோ எடையுள்ள ‘ஆர்யபட்டா’ என்ற செயற்கைக்கோளை, ரஷ்யாவிலிருந்து, விர்ரென ஏவி விட்டு, தன்னுடைய கீர்த்தியை கொடி நாட்டியது. அக்காலம், இதையெல்லாம் கேலி செய்த ஈஸி-சேர் (என்னது?) அறிவுஜீவிகளை தெரியும். அந்த ‘கன்னி முயற்சி’ (தனித்தமிழ் சரியா?)யில் மூன்று விஞ்ஞான ஆய்வுகள் திட்டமிடப்பட்டன. நமது விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் அதிகரித்தனர். ஆனா! பாருங்கோ! மின் வெட்டு/ மின் தட்டுப்பாடு வந்து தொந்தரவு செய்ய, மூன்று ஆய்வும் அரோஹரா. மற்றபடி, ஆடியோ ஓட்டம், சீதோஷ்ண விவர விவரணை, இரண்டும், நடந்தன, பர்த்தியாக. ஶ்ரீஹரிக்கோட்டாவில் ஒரு தளம் அமைத்தது, அப்போது தான். ஒரு வாரம் பொறுக்கக்கூடாதோ? பிறந்த நாள் கொண்டாடி இருக்கலாம். ஏப்ரல் 11, 1981 அன்று இது காலாவதியாயிற்று. வீடியோ இணைக்கப்பட்டுளது. கண்டு களிக்கவும்.
இன்னம்பூரான்
19 04 2012

உசாத்துணை
*

கி.காளைராசன் Thu, Apr 19, 2012 at 2:54 AM

ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2012/4/19 Innamburan Innamburan <innamburan@gmail.com>
ஏப்ரல் 19, 1975 அன்று, அருமை நண்பர் ரஷ்யாவின் அரவணைப்பில், 358 கிலோ எடையுள்ள ‘ஆர்யபட்டா’ என்ற செயற்கைக்கோளை, ரஷ்யாவிலிருந்து, விர்ரென ஏவி விட்டு, தன்னுடைய கீர்த்தியை கொடி நாட்டியது.

இதை ஒரு தேசவிழாவாகக் கொண்டாடியிருக்க வேண்டும்.
அன்றிலிருந்து இன்றை இளம் விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.
-- 


Nagarajan Vadivel Thu, Apr 19, 2012 at 3:10 AM


ஈசி சேர்
கைவைத்த நாற்காலி - பத்திரிக்கை ஆசிரியர்
சாய்வு நாற்காலி - வாசகன் (அறிவு ஜீவி)
ஆழ்துயில் நாற்காலி - உளநோய் நிபுணர்
சாய்வு நாற்காலி கருத்தை வெளியிட கைவைத்த நாற்காலி உதவவில்லையென்றால் சாய்வு நாற்காலி ஆழ்துயில் நாற்காலியிடம் செல்லவேணும்
நாகராசன

No comments:

Post a Comment