Friday, February 5, 2016

தம்! தமா! தம்!- 5


தம்! தமா! தம்!- 2
இன்னம்பூரான்
05 02 2016
இன்றைய தினமலரில்: பாடபேதத்துடன்: மோடிக்குக் கோடி புண்ணியம். வேலை செய்யாமலிருக்கும் அமைச்சர்களை உதறபப்போறாராம்! அநேக மந்திரி தந்திரிகள் குலைநடுக்கத்தில் என்று பேசிக்கிராங்க. நடுவண் அரசில் வேளான்மை அமைச்சருக்கு படா கிலி. வாஸ்துவை நம்பி ஆபீஸ்லெ பெரிய மீன் தொட்டி வச்சு, அலங்காரம் பண்ணி, குட்டி மீன்களை எதிர்நீச்சுக்குப் பழக்கி, வாஸ்து புருஷா! காப்பாத்து என்கிறாராம். அவரென்னத்தைக் கண்டார்னேன். ஓமந்தூரார் ஆசுபத்திரி இருக்குமிடத்தில் சட்டசபை கட்டிய அக்கால முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் கூட மீன்வேடிக்கை பாத்தாங்க, அங்க. வேல போயுடிச்சே!
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://www.ornafish.biz/images/homePic.jpg
Source:



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

___________
தம்! தமா! தம்!- 3

இன்னம்பூரான்
06 02 2016

ஒத்தன் குப்பற விழுந்தானாம். மீசை இல்லாததால், மண் ஒட்டல்லைன்னு சொல்ல முடியல்லெ. ஆனா, வாசாலகத்திலே மன்னன். யோவ்! நானா விளுந்தேன்? அது கரடி வித்தை அய்யாமார்களே! அம்மாமார்களே! பசங்களே! என்று மாய்மாலம் பண்ணானாம். அந்த மாதிரியில்லெ இருக்கு, அகில இந்திய காங்கிரஸ்ஸின் உண்மை ஊழியன் சஞ்சய் நிருபம் அவர்களின் கோக்குமாக்கு! காங்கிரஸ் தர்ஷன் என்றதொரு தப்பறிக்கைப் பத்திரிக்கை. அதுலெ சஞ்சய் ‘நேரு தான் காஷ்மீர் கஷ்டத்துக்கும், திபெட் டபெக்குக்கும், சைனா பிரச்னைக்கும் வித்திட்டவர் என்று வீரவசனம் எளுதினாராம். சனி பிடித்து அவரை ஆட்டியிருக்கிறது. சோனியாவின் தந்தையை பாசிஸ்ட் ஜிப்பாய் (இது இடாலியன்; தமிழில் சிப்பாய்.) என்று வசை பாடினாராம். அது பாயிண்ட் இல்லை. இந்திய அரசியலில் நமக்கு பிடிக்காதவர்களை பாசிஸ்ட் என்று திட்டுவது பண்பு.
விளக்கம் கேட்டார்கள். தார்மீகம் பொங்க, ‘ தப்புத்தான்; மாப்பு ப்ளீஸ்’ என்றாராம். ஆதர்ஷ் கேஸ்லெ சாவனை காப்பாத்தின மாதிரி நிருபத்தின் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்கிற மாதிரி, விட்டுப்பிடித்தா, அவர் ஏன் இதெல்லாம் கரடி வித்தை என்று சொல்லமாட்டார். வாழ்க சால்ஜாப்புக்கள்.
-#-

சித்திரத்துக்கு நன்றி:https://s-media-cache-ak0.pinimg.com/136x136/ac/ec/28/acec2873306499e9f4d3271539b84bef.jpg

____________________________________
தம்! தமா! தம்!- 4
இன்னம்பூரான்
07 02 2016

பண்டாவுக்குக் கொண்டாட்டம். மனுஷாளுக்குத் திண்டாட்டம். டோக்யோவிலிருந்து ஒரு ஒஸாகா செய்தித்துளி. அச்சம், வெட்கம், மடமை, பயிர்ப்பு மிகுந்து காணப்படும் பெண்ணினம், மனிதர்கள் அல்ல; ஐ மீன் மனுஷிகள். கலி முத்திடுத்தா. தடியெடுத்தவள் எல்லாம் தண்டல்காரி என்ற வகையில் கொலை கூட நடக்கிறதாம். நல்லதே நடக்கும். அச்சம் தவிர்த்த பாரச்சூட் ஜம்பிகளும், வெட்கம் மறைக்காத நடிகைகளும், மடமையை கொளுத்திய பெண்ணினமும், பயிர்ப்பை கண்டு கொள்ளமுடியாதபடி பெண்கள் பயணிக்க வேண்டிய நிர்பந்தமும், மனித இனத்துக்கு சொந்தம். பண்டா பெண்குலம், பார்க்க வருபவர்களை அச்சத்துடன் மிரண்டு பார்க்கிறது. வெட்கம் பண்டா ஆண்குலத்துக்கும் உண்டாம். மடமை இல்லாவிடினும், வாரிசுகள் உற்பத்தி செய்ய தயங்குவது மடமை தானே! டோக்யோவில், பெண்ணரசி பண்டாக்கள் திலோத்தமை, ரம்பை, ஊர்வசி போல், சற்றே கவர்ச்சி காட்ட, அந்த மிருக கண்காட்சியாளர் பண்டா அந்தபுரம் அமைத்து விட்டு, காத்துக்கொண்டு இருக்கிறார்களாம். ஏன் தெரியுமா? ஒரு வருடத்தில் 363 நாட்கள் கருத்தத்தரிக்க லாயக்கில்லை, பண்டாக்களுக்கு. எல்லா ஆக்கபூர்வமும், இரண்டு நாட்களில் நிறைவேற வேண்டும். மனுசனை நினச்சா போச்சு. லீப் வருடத்தில் 366 நாட்களுக்கும் லீப் தான்!

ஒரு மாமா சொன்னார். தாத்தாப்பாட்டிக்கு, அந்தக்காலத்தில் சுகஜீவனம். ஏழு, எட்டு பாப்பாக்கள். இரண்டு தலைமுறைக்குள்  எட்டு பதினாறாகி, அதுவும் 256 ஆகி, அடுத்தாப்ல 516 ஆகி!! சிவ! சிவ!

ஜூட்!
-#-
சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

------------------------------------------------------------
தம்! தமா! தம்!- 5


இன்னம்பூரான்

08 02 2016
கீர்த்தனாரம்பக்காலத்திலே ரிஷிபத்தினியும், ரிஷிகுமாரனும் யாகசாலையின் ஈசானமூலையில் தவமிருந்தவாறே, ‘கேள்விக்கென்ன பதில்?’ என்ற சூத்திரம் படைத்து, பதிலுக்கேற்ப கேள்விகள் அமைத்துக்கொண்டதாக, அம்புலுப்பாட்டி, நேர பாத்தமாதிரி கதை அளப்பாள். தற்காலம் காந்தி ஃபேமிலி ( அசல் காந்தி ஃபேமிலி வேற.) அதே சூத்திரத்தை வைத்து சொல்ல வருவது யாதெனில்:
  1. இந்த நேஷனல் ஹெரால்ட் விவகாரத்தில் காந்தி ஃபேமிலி இன்னும் துட்டு பார்க்கலையே. எஃப்.ஏ.க்யூ நோக்கவும்.
  2. பழையன கழித்து புதியன படைத்து லாகவமாக பாயை பிறண்டாமல், சுருட்டியபோது, புது கம்பேனி வீடு வாங்கல்/விற்றல் பண்ணவில்லையே.
  3. சட்டப்படி அரசியல் கட்சிக்கள் கடன் கொடுக்கலாமே.தேர்தல் கமிஷனும் 2012 அதானே சொன்னாங்க. இது கடன் இல்லையே, வாராக்கடனாச்சோ? என்று துளைத்து எடுக்காதே, மகனே!
  4. மாதிரிக்கு ஒரு வினா: பாடபேதத்துடன்:
நீங்கள் எல்லாம் பெரிய மனுஷா. வங்கியில் கடன் வாங்கி, காங்கிரஸ்ஸுக்குக் கொடுத்து, நன்றிக்கடன் மட்டும் வச்சுக்கிறது தானே?
என்ன கேள்வி இது? கம்பெனி பூண்டி. எந்த வங்கி இளிச்சவாயனாக கடன் கொடுக்கும். நாங்கள் என்ன மீன்கொத்தி தேறல் கம்பெனியா? அசத்து! இன்னா கேள்விக்கேக்கிறாய் நீ?
---
முழு  எஃப்.ஏ.க்யூ:  காங்கிரஸ் இணைய தளத்தில். நம்மடவர்கள் தானே. வினவ மாட்டர்கள் என்ற தகரியம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://cdn2.business2community.com/wp-content/uploads/2012/10/tumblr_mcao3ufGD31r7ub2p.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, February 4, 2016

தம்! தமா! தம்!- 1




தம்! தமா! தம்!- 1
இன்னம்பூரான்
04 02 2016

காலை வாக் போகும் போது அலாக்கா சொல்லிட்டுப்போய்ட்டார், நண்பர் ஒருவர். ஹாஸ்யமா எழுதணுமாம்! ரோசனை பண்ணிக்கிட்டே மத்யானம் தலையை சாச்சா, அம்புலுப்பாட்டி வந்து, ‘நான் சொன்னதா போட்டுடு. நீ பொறுப்பேக்க வேண்டாம். ஆனால் இட்டுக்கட்டக்கூடாது.’ என்றாள். எனவே படிச்ச நன்முத்துக்களில், அவை வித்யா நூலகத்தில் படித்தவை என்று இந்த வருடாந்திர தொடர் முழுதுக்கும்  இன்றே சத்தியப் பிரமாணம் செய்து விட்டு, ஒவ்வொரு நன்முத்தாக சிந்துகிறேன். பொறுக்கிக்கொள்ளவும். பாடபேதம் இருக்கத்தான் செய்யும். மன்னித்தருள்க.

கொளத்தூர்லெ ஒரு மீட்டிங். ஸ்டாலின் பேச்றார். எள்ளல் மிகுந்ததால், துள்ளிக்கொண்டே , “ ‘அம்மா அழைப்பு’ என்று ஒரு மின் தாக்குதல் வந்திருக்கு. நீங்க பிராது எல்லாத்தையும் சொல்லிப்போட்லாம்ங்றாங்க, ஆனா பாருங்க! எடுக்கவே மாட்டேங்க்றாங்க. என்னுடைய ப்ரிதிநித்வத்தை நிலை நாட்டும் மையம் 25x 8 வேலை செய்யுது. பாரு பயாஸ்கோப்பு’ என்று முழக்கிவிட்டு டயலினார். யாரும் எடுக்கல்லை. அசடு வழிஞ்சது, அகத்திலும், முகத்திலும்.
மோடி மஸ்தானின் ஸ்வச்சபாரத் ஆசாமிகள் வழித்து சுத்தம் செய்தார்களாம்.

டிஸ்கி: பேராசிரியர் அன்பழகன், ‘யாரு இந்த சோ’ என்று கேட்டாராம்!!! நல்ல வேளை கருணா ஆருன்னு கேக்காமப்போனாரே,
-#-

Sunday, January 31, 2016

நாளொரு பக்கம் II:5

நாளொரு பக்கம் II: 1
இன்னம்பூரான்
31 01 2016

From my grandfather Verus I learned good morals and the government of my temper. [1:1 -Meditations.Marcus Aurelius]

வாழ்க்கை நெறியை பற்றியும், சினத்தை அடக்கியாளும் வழியையும் என் பாட்டன் வெர்ஸ் அவர்களிடமிருந்துக் கற்றுக்கொண்டேன். -மார்கஸ் ஒளரேலியஸ்.
***
திரைகடல் கடந்தும் திரவியம் தேடச்சொன்னார், அவ்வைப்பிராட்டியார். திரைகடல் கடந்து ஞானக்கடல்கள் நம்மை வந்தடைகின்றன. நாம் அவற்றை கண்டும் காணாமல் கோட்டை விட்டு விடுகிறோம். 

அரசியல் நிர்வாகத்தை மிகவும் சிறப்பாக மக்கள் பணியாக செய்த மன்னர்கள் உண்டு, அசோக சம்ராட் போல. சீதாப்பிராட்டின் தந்தையாகிய மன்னரை ஜனகமகரிஷி என்பார்கள். மனித இயலின் மூன்று கூறுகளை நீதி சதகம், வைராக்ய சதகம், சிருங்கார சதகம் என்று பகுத்துக்கூறியவர் பர்த்துஹரி என்ற ராஜரிஷி. மார்கஸ் ஒளரேலியஸ் என்ற ரோமானிய சக்கரவர்த்தியும் ஒரு ராஜரிஷி.

அவர் எழுதிவைத்துள்ள அகசிந்தனை தொகுப்பு இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல் சமுதாயங்களை சீரமைப்பு செய்து வந்துள்ளன.

முதல் பொன்மொழியில், ‘வாழ்க்கை நெறியை பற்றியும், சினத்தை அடக்கியாளும் வழியையும் என் பாட்டன் வெர்ஸ் அவர்களிடமிருந்துக் கற்றுக்கொண்டேன்.’ என்கிறார். அது நிரந்தரமான உண்மை என்பதை மனிதப்பிறவிகள் யாவரும் அறிவர். நாம் அவரவது குடும்பத்து பெரியோர்களிடமிருந்து வாழ்க்கையின் நுட்பங்களை கற்றுக்கொள்கிறோம் என்பது கண்கூடு. அவர்கள் வாழும் விதம், நாகரீகம், கட்டுப்பாடு, கொடை, இரக்கம், கல்வி ஆகியவை முன்னுதாரணம் ஆகின்றன. அவர்களின் அனுபவங்களை காணும் போது நமக்கு பல படிப்பினைகள் கிடைக்கின்றன. யாதொரு பிரதியுபகாரம் எதிர்ப்பார்க்காமல், அறிவுரை கூறுவதில், தாத்தா-பாட்டிக்கு இணை யாருமில்லை.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

உசாத்துணை: The Meditations By Marcus Aurelius
++++++++++++++++++++++++++++
நாளொரு பக்கம் II: 2

இன்னம்பூரான்
01 02 2016

சில சமயங்களில் சில ஆர்வங்கள் நம்மை கெட்
டியாகப் பிடித்துகொள்கின்றன. சிலர் அருமையான ஓவியங்கள் வரைந்து மகிழ்வார்கள் (ராஜா ரவி வர்மா); சிலர் சிற்பங்களை படைத்து புகழ் அடைவார்கள் (தனபால்); சங்கீதமும் (பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி) நாட்டியமும் (ருக்மிணி அருண்டேல்) வாழ்க்கையை அலங்காரம் செய்பவை. இலக்கியத்தின் தாக்கம் (கபிலர், பரணர்) நாம் அறிந்ததே. 

தத்துவ விசாரணைகள் ஆயிரக்கணக்கான வருடங்களாக, வாழ்வியலில்  நிரந்தரமாக வசித்துக்கொண்டு வருவது மட்டுமல்லாமல், வாழ்க்கைப்பயணத்துக்கு ராஜபாட்டை போடும் பொறியாளர்களாக அமைந்து விடுகின்றன. நாட்தோறும் ராஜரிஷி மார்கஸ் ஒளரேலியஸ் அவர்களின் அகச்சிந்தனைகளை பகிர்ந்து கொள்வது பல தலைமுறை வாசகர்களுக்கு நலம் பயக்கும் என்று கருதுகிறேன். 

சாக்ரடீஸ், ப்ளேடோ, அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க தத்துவவாதிகளுக்கோ, செனகா போன்ற ரோமானிய வாதிகளுக்கோ, அத்ரி, ப்ருகு, குத்ஸர் போன்ற முனிபுங்கவர்களுக்கோ, திருவள்ளுவர் போன்ற தமிழ் ஞானிகளுக்கோ ராஜரிஷி மார்கஸ் ஒளரேலியஸ் இணையில்லை என்று வாழ்நாள் முழுதும் வாதப்ரிதிவாத, விதண்டாவாதப்பிரயோகங்கள் செய்வது எளிது; பயன் யாதுமில்லை என்பதும் தெளிவுச்.

ராஜரிஷி மார்கஸ் ஒளரேலியஸ் வாதத்துக்கும், சர்ச்சைக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல்,  அவரவர் தமது வாழ்நெறியை தனித்துவத்துடன் அமைத்துக்கொள்வதற்கு வழி வகுத்தார். அதனால் தான் எனக்கு அவருடைய அகசிந்தனைகளில் ஆர்வம் ஏற்பட்டது.
அடுத்து நாளை வருவது:  அவரிடமிருந்து தான் மிருதுவான ஸ்வபாவத்தையும், அடங்கி வாழ்வதையும் கற்றுக்கொண்டேன்.
LONG, A. A. அவர்களின் 'Epictetus, Marcus Aurelius' நல்லதொரு படைப்பு.

FARQUHARSON, A. S. L., The Meditations of the Emperor Marcus Antoninus, Edited with Translation and Commentary, 2 vols (Oxford: Clarendon Press, 1944 என்ற நூல் ஆழ்ந்து படித்து உள்ளுறை அறிந்து கொள்ள , பெரும் உதவியாக அமைந்து இருக்கிறது.
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://36.media.tumblr.com/10bec2a9a0091c5c9f870ddf3ec6f51a/tumblr_n1ipalqu7p1s6xd49o1_500.png

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நாளொரு பக்கம் II: 3
இன்னம்பூரான்
02 02 2016

From the reputation and remembrance of my father, modesty and a manly character. [1: 2-Meditations.Marcus Aurelius]
or
From the fame and memory of him that begot me I have learned both steadfastness and manlike behaviour. [1: 2-Meditations.Marcus Aurelius]

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. புகழ்பெற்றவர்கள் பலரின் வரலாற்றுக்களை படிக்கும்போது, அவர்களின் வாழ்க்கையை நிர்ணயித்தவர்கள் - மூதாதையரும், பெற்றோர்களும், ஆசிரியர்களும், மற்றும் சில சான்றோருகளும் வந்து போகிறார்கள்.  அவரவர்களுக்கு முதல் பிரத்யக்ஷ தெய்வம் தந்தை. அடுத்த பதிவில் அது தாய் என்பேன். ஓடோடி வந்து ‘முன்னுக்கு பின் முரணாகப் பேசுகிறீர்களே’ என்று மிரட்டக்கூடாது. முரண் யாதுமில்லை. தந்தையும் தாயும் முன்னறி தெய்வம். 

மார்க்கஸ் ஒளரேலியஸ் மூன்று வயதில் தன் தந்தையை இழந்தவர். அவரது தந்தை ஒரு பிரபல அரசியலராக இருந்தவர். அவருடைய கீர்த்தியும், அவரை பற்றி மற்றவர்களிடம் இருந்த நினைவலைகள் மட்டுமே, மார்க்கஸ் ஒளரேலியஸ்ஸுக்குக் கிடைத்திருக்கிறது எனலாம். அவற்றின் மூலமாக, இந்த ‘ஏகலைவ சிஷ்யன்‘ தான் திடமான மனப்பான்மையையும், ஆண்மை இயல்பையும் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறார். இது நிற்க,

வாசகர்கள் இத்தகைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளாவிடின், இப்படு எடுத்துரைப்பது வியர்த்தமாகப்போய்விடும். உதாரணம் ஒன்று. என் தந்தை அரசு இயந்திரத்தின் கடைசி அச்சாணி. மேற்பார்வை தேவையில்லை. அவரும், சகஊழியர்களும் அவரவது பொறுப்புகளை கண்ணும் கருத்துமாக நிறைவேற்றினர். மேலதிகாரிகள் வந்து போவார்கள். அன்றாட வேலைகளில் தலையிடமாட்டார்கள். இந்தப்பாடம் எனக்கு உயர்பதவி அதிகாரத்தை நல்வழியில் பயன் படுத்த சொல்லிக்கொடுத்தது. 

மற்றவர்கள் பங்கு கொள்ளாத வரை இது அரைகுறைப் பதிவு தான்.
-#-

சித்திரத்துக்கு நன்றி: http://eng331epicrooks.weebly.com/uploads/1/8/5/7/18573842/3676688.jpg
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

+++++++++++++++++
நாளொரு பக்கம் II: 4


இன்னம்பூரான்
03 02 2016

From my mother, piety and beneficence, and abstinence, not only from evil deeds, but even from evil thoughts; and further, simplicity in my way of living, far removed from the habits of the rich. [1:3 -Meditations.Marcus Aurelius]

சிரத்தை மிகுந்த பக்தியையும், நல்வழியையும், தீய செயல்களை மட்டுமில்லாமல், தீய எண்ணங்களை ஒழித்து வாழ்வதையும் கற்றுக்கொண்டேன். அது மட்டுமல்ல. செல்வந்தர்களைப் போல் அல்லாமல், எளிய வாழ்க்கையில் பயணிக்கக் கற்றுக்கொண்டேன்.

அன்னை அரவணைப்பாள். பத்து மாதம் அடை காத்து உயிர்பிச்சை போட்டது, அன்னையே. வாழ்நாள் முழுதும் அர்ப்பணித்த வாழ்க்கை வாழ்வது அன்னைமார்களே. சங்க இலக்கியங்களிலும், வடமொழி சாகித்யங்களிலும் மிளிர்வது தாயார் தான். வைணவ சித்தாந்தப்படி தாயார் தான் பகவானை அடைய முதற்படி. 

என் அனுபவத்தில், மார்கஸ் ஒளரேலியஸ்ஸின் அன்னை போல எனக்கும் அன்னை அமைந்ததும், என் வாழ்நெறியை முளையிலேயே வகுத்தவர் என்பது என் கொடுப்பினை. அவரில்லையெனில், நான் இதை எழுதியிருக்க முடியாது.
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://s-media-cache-ak0.pinimg.com/236x/db/70/c5/db70c532f9e3bccb340aa4fdb32695f7.jpg



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


_______________________________

நாளொரு பக்கம் II: 5

இன்னம்பூரான்
04 02 2016

From my great-grandfather, not to have frequented public schools, and to have had good teachers at home, and to know that on such things a man should spend liberally. [1:3 -Meditations.Marcus Aurelius]

மார்கஸ் ஒளரேலியஸ் தன்னுடைய கொள்ளுப்பாட்டனிடமிருந்து கற்றுக்கொண்ட நுட்பம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறார். பள்ளிக்கு சென்று படிப்பதை விட வீட்டிலேயே நல்லாசிரியர்களை அமர்த்தி கற்பது சாலத்தகும்; அதற்காக தாராளமாக செல்வு செய்யலாம். என்கிறார். இதை நாம் அக்காலத்துப் பின்னணியில் உற்று நோக்கினால், அந்த பெருமிதம் புரியும். குருதேவ் ரவீந்தரநாத் அப்படிப் படித்து வந்து உலகப்புகழ் எய்தியவர் தான்.

கற்றுக்கொள்வது மாணவனின் சாமர்த்தியம். அடிமையிடமிருந்து அபார சகிப்புத்தன்மையை கற்றுக்கொள்ளலாம். விவசாயிடமிருந்து அசராத உழைப்பைக் கற்றுக்கொள்ளலாம். குதிரை காஸ்தாரியிடமிருந்து புரவியின் துரிதம் பற்றி அறியலாம். நல்லதொரு கோனாரிடமிருந்து பசுங்கன்றின் பராமரிப்பு கற்றுக்கொள்ளலாம். இதற்கெல்லாம் அளவேயில்லை.

எனக்குக் கொள்ளுத்தாத்தா மாதிரி இருந்தவர் என் அத்தையின் கணவரின் அண்ணன். திருச்சியிலிருந்து தஞ்சைக்கு வருவதானால், மதிய உணவுக்கு வருகிறாரா? இல்லை அதற்கு பின்னாலா? என்று தந்தி அடிப்பாராம். அதை அத்தை எனக்குச் சொல்லி 78 வருடங்கள் ஆயின. பாடம் என்னவோ பசுமராத்தாணி போல் பதிந்து விட்டது. விளைநிலத்துக்கு வேண்டிய மழை மொட்டைமாடியில் ஏன் பெய்கிறது போன்ற கேள்விகள் கேட்பேனாம், அவருடைய படுக்கையில் படுத்துக்கொண்டு. அவரும் பொறுமையுடன் பதில் சொல்வாராம். எனக்கு இப்போது ஒரு பெருமை. அவர் பெயர் தான் எனக்கும்!
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://media.dinamani.com/2015/07/25/25sm11.jpg/article2940097.ece/binary/original/25sm11.jpg




Tuesday, January 26, 2016

மனித நேயம் 1: 2016

மனித நேயம் 1


கலஹாரி பாலையில் ஒரு வெள்ளையன் சிக்கிக்கொண்டான். அவன் கார், ரேடியேட்டர்ல், நீர் வறண்டு போனதால், நின்று விட்டது. ஆதவன் இறங்க, இறங்க, இவனுக்கு திகில் ஏறியது. ஒன்று: குளிர் கொன்றுவிடும்; இரண்டு: ஒரு பழங்குடி, ஒதுங்கி, மறைந்து, இவனை நோட்டம் விடுகிறான். அசந்து போனால், கொன்று தின்று விடுவானோ என்ற பயம். மேல் மட்டத்தாருக்கு, கீழ்மட்டம் என்றுமே தள்ளுபடி. ஆனால், இனம் தெரியாத பயம்.

சில மணி நேரம். அந்த பழங்குடி, அனுபவத்தின் பயனாக, ஓரிடத்தில் மணலை தோண்டி, சொற்பமான நீரை வாயில் உறிஞ்சி, வெள்ளையனிடம் இருந்த ஜெர்ரிகேனில் தர, அவனும் காரை கிளப்பிக்கொண்டு போகிறான். மிஞ்சிய துளிகளை அருந்த அவன் தாகம் விழைகிறது. பரிதாபமாக, அந்த  'தண்ணீர் பந்தலை பார்க்கிறான், குற்ற உணர்வுடன். அவன் தலை அசைக்க, அருந்தி விடுகிறான். ஆனால், அந்த வெள்ளையனுக்கு தெரியும்; பாலைவனம், இனி நீர் தராது. அந்த பழங்குடி இறந்து போவான்.

பல வருடங்களுக்கு முன்னால், இது நிஜம் என்று படித்தேன்.

இன்னம்பூரான்
15 03 2011

Saturday, January 16, 2016

குல்லா மனிதன்: 17 01 2016


குல்லா மனிதன்: 17 01 2016

இன்னம்பூரான்
17 01 2016

“ சர்வ வல்லமையுடைய பரமபிதாவே! தரணியாளும் தேசாபிமானமுள்ள நாடுகள் யாவற்றிலும் சுதந்திரப்பற்றுடன் கூட மனித உரிமைகளை பற்றிய முழுமையான அறிவும் நீ அருளவேண்டும். அப்போது தான் தத்துவ வாதி ஒருவன் உலகின் எந்த பாகத்திலும் பாதம் பதித்து, இது என்னுடைய நாடு என்ற சொல்ல முடியும்.’
~ குல்லா மனிதன்

எனது அருமை நண்பர்களுடன், அதுவும் ஆத்யந்த நண்பரான பக்கத்து வீட்டுக்காரருடனும் அளவளாவும் போது, இந்த ஏக்கம் வெளிப்படும். தக்கதொரு விடை கிடைக்காமல் நாங்கள் தவிப்போம். எங்கு பார்த்தாலும் சண்டையும், சச்சரவும், மதபேத பிதற்றல்களும், வகுப்பு வாத  கதறல்களும், மற்றும் பல குஸ்திகளும் சின்ன சின்ன குடியிருப்புகளிலும்  கூட ‘முதல் தாம்பூலம்’ பெற்றுக்கொள்வதால், குல்லா மனிதனின் பிரார்த்தனை ஏட்டுசுரைக்காயாக பலருக்கு தோன்றும். அது தவறு.


300 வருடங்களுக்கும் முன்னால் 17 01 1706 அன்று ஜனித்த ‘குல்லா மனிதர்’ ஒரு அரசாளும் மேலாண்மை படைத்தவர், ராஜ தந்திரவாதி, எழுத்தாளர், விஞ்ஞானி, படைப்பாளி, தத்துவ ஞானி. இன்றைய அமெரிக்காவின் சுதந்திரமும், அரசாளும் சாஸனங்களும் கரையேறுவதற்கு நல்வழி வகுத்தவர்களில் ஒருவர்.

ஏழைக்குடும்பம். பெரிய குடும்பம். 17 குழந்தைகள். தந்தை சோப்பும், மெழுகுவர்த்தியும் செய்து குடித்தனம் நடத்தினார். நமது கதாநாயகன் பள்ளிக்கல்வி கற்றது சொற்பம். இவரோ சின்ன வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்டார். படிக்கத்தொடங்கியது அதற்கும் முன்னால், என்று சொல்ல தேவையில்லை. சும்மா கிடக்க விரும்பாத மனிதன் 1723ல் ஊரை விட்டோடி லண்டன் வந்து பற்பல விஷயங்களை கற்ற பின், 18 மாதங்களுக்குள் நாடு திரும்பி, ஒரு இதழ் தொடங்கி புகழ் அடைந்தார். 15 வருடங்களில் சொத்துப்பத்து சேர்ந்த பின், வணிகத்தைத் துறந்து விஞ்ஞானி ஆனார். நவீன அடுப்பும், மின்னல் தாங்கியையும் கண்டுபிடித்து, மின்சாரத்தின் தந்தையானார். கையோடு கையாக அரசியலில் புகுந்து, சீர்திருத்தங்கள் செய்தவாறு புகழேணில் விரைவாக ஏறி, லண்டனில் சில பிராந்தியங்களின் பிரதிநிதியாக பணி புரிந்து, ஆங்கிலேய கலோனியத்துவத்தின் ஆதிக்கத்தை விலக்குவதற்காக, தாய்நாடு திரும்பினார். அமெரிக்கன் தத்துவவாதி மையத்தைத்துவக்கியவர், இவரே. கல்வித்துறையில் பணி புரிந்து பென்சில்வேனியா பல்கலைக்கழகத்துக்கு வித்திட்டார்.

அவர் திரும்பும் காலகட்டத்தில் அமெரிக்காவின் சுதந்திரப்போர் தொடங்கி விட்டது. சுதந்திர பிரகடனத்தை வரைந்து கையொப்பமிட்ட இவருக்கு ஒரு விசனம். மனைவியாகாத மற்றொரு மாதுவிடம் பிறந்த இவருடைய மகன் வில்லியம் ஆங்கில விசுவாசியாகத்தான் இருந்தார்.

மற்றபடி, கல்வியாளாராகுவும் இருந்த நம் குல்லா மனிதர், ஃபிரான்ஸில் அமெரிக்க தூதுவராக அனுப்பப்ட்டார். இரு நாடுகளுக்கு இணக்கம் உருவாக்கி, அதன் துணையினால், சுதந்திர போருக்கு முடிவு கண்டார். பின்னர் அமெரிக்கா திரும்பி வந்து பல முன்னேற்றங்களுக்கு வித்திட்டு, அரசியல் சாஸனத்தை எழுத உதவினார். அவர் 1790 ம் ஆண்டில் மறைந்தார். இன்றளவும் அமெரிக்காவில் போற்றப்படும், இவரது கனவை நனவு ஆக்குவதில் நாம் எல்லாரும் ஈடுபடவேண்டும்.

அடடா! மறந்து போனேனே! இந்த அதிசய குல்லா மனிதரின் பெயர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின்.

-#-
சித்திரத்துக்கு நன்றி: http://www.geekadelphia.com/wp-content/uploads/2014/02/1-ManyHats_CARTOON-highres-650x1535.jpg

உசாத்துணை:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, January 15, 2016

சும்மா கிடப்பதே சுகம்! 16 01 2016

சும்மா கிடப்பதே சுகம்!



இன்னம்பூரான்
16 01 2016

களிப்புடன் பெருக்கெடுத்து , ஓடியாடி உருண்டோடி வந்தாலும், நதி மவுனமாகவே கடலில் சங்கமித்து விடுகிறது. அன்றொரு நாள் திருவையாற்றில் ஒரு சங்கீதக்கச்சேரி கேட்கப்போனேன். அங்கொரு சுட்டிப்பொண்ணு, இரண்டு வயது குட்டிப்பொண்ணு அதகளம் செய்து கொண்டிருந்தாள். அந்த அழகில் மயங்கிய ரசிகர் பட்டாளம் செவியை மட்டும் பாட்டுக்குக் கொடுத்து விட்டு, கண்கள் சொக்கச் சொக்க, இந்த குழந்தையின் விளையாட்டை ரசித்து வந்தார்கள். ஒரு வினாடி ஏறி குதித்தாள். அடுத்த வினாடி ஆழ்ந்து உறங்கி விட்டாள். ‘சும்மா கிடந்து அவள் கண்ட சுகமும்’ அழகு தான்.

‘...”பழையதை தின்று விட்டு சும்மா கிடக்கும்” மனப்பக்குவம் எப்போது வரும்?.’ “ என்ற வினாவை எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது. அப்படியானால், நாம் கடமையாற்றவேண்டும் என்று வருத்திக்கொள்வது எல்லாம் வீண் தானா? ‘Que Sera! Sera’ என்று ஃபிரெஞ்சு மொழியில் சொல்வார்கள். அதாவது, நடப்பது நடந்தே தீரும்.

‘இல்லாத காரியத்தை இச்சித்து சிந்தை வழிச்
செல்லாமை நல்லோர் திறங்காண் பராபரமே’ 

என்று தாயுமானவர் அருளியதின் பொருள், இச்சை தான் நம் சிந்தையை இயக்கி பாடாய் படுத்துகிறதோ என்று தோன்ற வைக்கிறது.


ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அது வரினும் வந்தெய்தும்-ஒன்றை 
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாழும் ஈசன் செயல். (நல்வழி-27)

இது அவ்வையார் அருளிய நல்வழி. சும்மா கிடக்க நான் நினைப்பது ஒன்று, அது ‘ஒழிந்திட்டு’ என்னை எழுத வைப்பது யாரு? இதோ விடை! நினையாதது முன் வந்து நிற்பது ஈசன் செயல் என்று அவரும் பட்டாங்கில் செப்பி விட்டுச்'சட்'டென்று' சென்று விட்டார்.

மாட்டிக்கொண்டு முழிப்பது நீங்கள் என்று யான் சொல்லமுடியாது, இந்த ஆனானப்பட்ட டெலீட் பட்டனும் , வாக்கும், வாதமும் இருக்கும் வரை. தலைப்பை எழுதி விட்டு சிந்தையில் ஆழ்ந்த போது, சும்மா கிடத்தும் உறக்கம் வந்த போதிலும், ஒரு கபீர் தாசரின் விமர்சனம் [‘Que Sera! Sera’] வந்து எய்தியது, அவ்வைப்பாட்டியின் வாக்கை பொய்க்காமல். விடலாமோ!

कबीरा किया कुछ न होते है, अन किया सब होय।
जो किया कुछ होते है , कर्ता और कोय ॥

‘தான் செய்து நடப்பதில்லை, கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ 
தான் செய்து நடப்பனப் போல் காண்பீர், செய்விப் பவனவன் யாரோ’


சுருங்கச்சொல்லின், அடித்துப்பிடித்துக்கொண்டு செய்தாலும், சுகமாக சும்மா கிடந்தாலும், 
‘தான் செய்து நடப்பதில்லை, கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ 
தான் செய்து நடப்பனப் போல் காண்பீர், செய்விப் பவனவன் யாரோ’

இது எல்லாம் ஒரு கபீர் தாசரின் திடீர் உபயம்.

கடவுளை கொண்டு வர எத்தனை உத்திகள் பாருங்கள்! தாயுமானவர் சிவராத்திரியில் தூங்கி வழிந்து ‘சும்மா கிடக்கும் சுகத்தை இப்படி வருணிக்கிறார்.


ஆராயும் வேளையில் பிரமாதி யானாலும்
ஐய வொரு செயலுமில்லை [ஆமாம்! ஆமாம்!]

அமைதியொடு பேசாத பெருமைபெறு குணசந்த்ர
ராம் என இருந்த பேரும்
நேராக ஒரு கோபம் ஒருவேளை வர அந்த
நிறைவொன்றும் இல்லாமலே
நெட்டுயிர்த்துத் தட்டழிந்து உளறுவார். [ஆமாம்! ஆமாம்!]

வசன
நிர்வாகர் என்ற பேரும்
பூராயமாய் ஒன்று பேசுமிடம் ஒன்றைப்
புலம்புவார்.  [ஆமாம்! ஆமாம்!]


சிவராத்திரிப்
போது துயிலோம் என்ற விரதியரும் அறிதுயில்
போலே இருந்து துயில்வார் [ஆமாம்! ஆமாம்!]

பாராதி தனிலுள்ள செயலெலாம் முடிவிலே
பார்க்கில் நின் செயல் அல்லவோ [ஆமாம்! ஆமாம்!]
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே

ஆமாம்! இந்த ‘வியர்த்தமான’ கட்டுரை எழுதும் விபரீதம் யாது என்று நீவிர் வினவினால், இதோ பதில்.

இன்று National Nothing Day in California. அப்படி ஒன்றை நிறுவி விட்டு அதில் நம்மை 'அம்போ' என்று விட்டு விட்டுப் போனவரை பற்றி நமக்கு தெரியாமல் இருப்பது நல்லது தான். தெரிந்து விட்டால் அது நத்திங் இல்லை. சம்திங்க் ஆகி விடும் என்கிறார், ஆண்டி ரூனி.

ஆளை விடுங்க சார்/மேடம். இன்று National Nothing Day என்பதால் ‘சும்மா கிடப்பதே சுகம்' என்ற மர்மத்தைப் பற்றி something எழுதிவிட்டேன்.

சுபம்.
பி.கு. இன்று காணும் பொங்கல். சும்மா சுத்திட்டு வாங்க.

சித்திரத்துக்கு நன்றி:https://anandchelliah.files.wordpress.com/2015/09/charlie-chaplin.jpg?w=535

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, January 14, 2016

நமது பாதுகாவலர்கள் தினம்


நமது பாதுகாவலர்கள் தினம்



இன்னம்பூரான்
15 01 2016

உலகிலேயே பெரிய ராணுவங்களில் ஒன்று, இந்திய ராணுவம். இரண்டு உலக யுத்தங்களிலும், விடுதலைக்குப் பிறகு நடந்த யுத்தங்களிலும், உலக சமாதான சேவைகளிலும், உள்நாட்டு கலவரங்களை தணிப்பதிலும், அண்மையில் சென்னை வெள்ளத்தை லாகவமாக கையாண்டு, மக்களை உய்வித்த பணியிலும், கட்டுப்பாட்டுடனும்,தியாக உணர்வுடனும், திறனுடனும், துணிவுடனும் இயங்கிய இந்திய ராணுவத்தின் மகத்துவத்தை பற்றி நாம் அறிந்து கொண்டது சொற்பம்.

இன்று இந்திய ராணுவ தினம். இதே தினத்தில் 1949ல் பிற்காலம் ஃபீல்ட் மார்ஷல் என்று கெளரவப்படுத்த்ப்பட்ட ஜெனெரல் கே.எம். கரியப்பா அவர்கள் ஜெனெரல் ஸர் ராய் புட்சர் அவர்களிடமிருந்து இந்திய ராணுவத்தின் தளபதியாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அதை நாம் கொண்டாட வேண்டும். 

ராணுவம் உகந்த முறையில் கொண்டாடும். நாமும் அதனுடைய வரலாற்றை அறிந்து கொண்டு, அவர்களுக்கு நன்றி செலுத்தும் செயலில்  முழுமனதுடன் ஈடுபடவேண்டும். அவர்களையும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களையும் சந்தித்துப் போற்றவேண்டும்.

ஆங்கிலேயர்கள் இந்திய ராணுவத்தை மதித்தார்கள். கிட்டத்தட்ட 1900 வருட காலகட்டத்தில் இங்கிலாந்தின் ராணுவம் தமது பட்டாலியன்களை இந்தியாவில் அமர்த்தும் வழக்கம் இருந்தது. மதராஸ், பம்பாய், பெங்கால் ராணுவங்களை ஒன்றுபடுத்தி இந்திய ராணுவத்தை கர்சான் பிரபு அமைத்தார். அக்காலத்து ராணுவ தளபதி கிச்சனர் பிரபு ராணுவ பயிற்சி மையங்களை 1903ம் வருடம் துவக்கினார். 1917லிருந்து இந்தியர்கள் உயர்பதவிகளில் அமர்வது தொடங்கியது. 1947ல் இந்தியாவும் பாகிஸ்தானும் உருவான போது இராணுவம் இரண்டு பட்டது. ஆங்கிலேயர்களில் பலர் வெளியேறினர். இந்திய ராணுவத்தின் தன்னார்வ படை மிகவும் பெரிது.

என் குடும்பத்திலும், நண்பர்கள் குழாமிலும் ராணுவ வீரர்கள் உளர். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். ஒரு கால கட்டத்தில் பாதுகாப்பு அமைச்சரகத்தில் பணி புரிந்தேன். அப்போது பல ராணுவ அதிகாரிகளுடன் பரிச்சயம் ஏற்பட்டது. பதவி சிறியது;ஆனால் பல பொறுப்புகள் : பட்ஜெட், ஆயுதங்கள் & தளவாடங்கள், விஞ்ஞான ஆலோசகரின் உதவியாளர், யுத்தம் பொருட்டு அதிரகசிய கையேடுகள் தயாரிப்பு, பாராளுமன்ற கவனிப்பு, இத்யாதி. அப்போது தளபதி ஜெனெரல் செளதரி அவர்கள். ராணுவ அதிகாரிகளிடமிருந்து பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன். அந்த மரியாதைக்கு ஏற்ற நன்றி செலுத்துகிறேன்.

எனக்கு ஒரு வருத்தம். எல்லா வாலிபர்களுக்கும் (16-17 வயது) கட்டாய ராணுவ சேவை கொடுத்து பயிற்சி அளிக்கப்பட்டிருந்தால், நமது சந்ததி மிகவும் பொறுப்புடன் பல  சேவைகளை செய்வதை தன்னிச்சையாக கற்றுக்கொண்டிருக்கலாம். போனது போகட்டும் குழந்தைகள் பிறந்த வண்ணம். இனி மேலாவது இதை எல்லாம் செய்யலாம்.

வாழ்க இந்திய ராணுவம்.
சித்திரத்துக்கு நன்றி:http://indianarmy.nic.in/FlashImage/Fdss2.jpg

உசாத்துணை:





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, January 11, 2016

ஒரு கடுதாசி

அன்பார்ந்த திரு. ராவ் அவர்களுக்கு,

நீங்கள் அனுப்பிய பாபா மெயில் பதிவு தமிழரன்பர்கள் என்னுடைய கருத்துக்களையும் பெறவேண்டி என் வலைப்பூவிலும் மற்ற இடங்களிலும் என் பொறுப்பில் தமிழில் 
பதிவு செய்கிறேன்.

1. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதே,
எளிய அறிவுரை. அவரவர் பிரச்னை, தீர்வு அவரவர் கையில். சொந்த சமாச்சாரங்கள் தனியாரின் உரிமை. எனினும் ஆலோசனை மன்றங்கள் உளன. அது கேட்பவர்களுக்கு மட்டும் பொறுப்பாக அளிக்கப்படும். ஒருவர் மற்றொருவரின் சம்பளம் பற்றி கேட்பது அநாகரீகம். அவரே வட்டி விகிதம் பற்றி கேட்டால் தீர விசாரித்து சொல்வது நலம்.

2. மன்னித்து மறந்து விடு.
இதை சொல்வது எளிது. செய்வது கடினம். தாரதம்யம் வேறு இருக்கிறது. லஞ்சம் கொடுப்பவனை காட்டிக்கொடுக்கவேண்டும். துஷ்டனை கண்டால் தூர விலகுவது விவேகம். ஆனால் சிலர் அவமானப்படுத்துவார்கள். அவர்களை மன்னித்து விட்டு மறந்து விட்டால், மனம் இலேசு ஆகும்.

3. தம்பட்டம் அடித்துக்கொள்ளாதே.
தற்புகழ்ச்சியையும் புகழ்மாலைகளையும் விட்டொழிப்பது நன்மை பயக்கும். ‘பணி செய்து கிடப்பது’ உன்னதமான செயல். புகழ்பவர்கள், காலம் மாறினால், இகழ்வார்கள்.

4. பொறாமை வேண்டாம்.
வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் உண்டு. பொறாமையினால் மன நிம்மதி தான் குலையும். அதை விட்டொழிக்க.
5. சூழ்நிலையுடன் ஒத்து வாழ்.
தலைக்கேற்ற குல்லா வாங்கு. குல்லாவுக்கு ஏற்றபடி தலையை வெட்டிக்கொள்ளலாமா?!

6. பொறுத்துக்கொள்வதே நிவாரணம்.
நம் கையில் யாதும் இல்லை. எல்லாமும் இருக்கிறது. இதில் முரண் யாதுமில்லை. மாற்ற முடியாத சிக்கல்களை சுயநம்பிக்கையுடன் இயங்கி தீர்வு காண முடியும். ‘பொறுத்தார் பூமியாள்வார்’.

7. இயன்றதை செய். அதிக பளு வேண்டாம்.
எளிது. ஆனால், நானே கேட்கவில்லை. பாருங்களேன்!⏳

8. தியானம் செய்,
நல்ல அறிவுரை. நானும் கேட்கப் பார்க்கிறேன்!⛺

9. மனதை சோம்ப விடாதே,
மனம் இயங்கிக்கொண்டிருந்தால், பிரச்னைகள் அணுகா. ஏதாவது ஆக்கப்பூர்வமான செயலை செய்து வா.

10. எதையும் ஒத்திப்போடாதே.
அதனால் தான், உடனே இதை எழுதினேன்!

11. நடப்பது நடக்கும். அலட்டிக்காதே.〽

பாபாமெயில் சொன்னபடி திரு. பி.எஸ்.ஆர்.ராவ். அவர் சொன்னதை சற்றே மாற்றி எழுதிய