Showing posts with label ஒரு கடுதாசி. Show all posts
Showing posts with label ஒரு கடுதாசி. Show all posts

Monday, January 11, 2016

ஒரு கடுதாசி

அன்பார்ந்த திரு. ராவ் அவர்களுக்கு,

நீங்கள் அனுப்பிய பாபா மெயில் பதிவு தமிழரன்பர்கள் என்னுடைய கருத்துக்களையும் பெறவேண்டி என் வலைப்பூவிலும் மற்ற இடங்களிலும் என் பொறுப்பில் தமிழில் 
பதிவு செய்கிறேன்.

1. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதே,
எளிய அறிவுரை. அவரவர் பிரச்னை, தீர்வு அவரவர் கையில். சொந்த சமாச்சாரங்கள் தனியாரின் உரிமை. எனினும் ஆலோசனை மன்றங்கள் உளன. அது கேட்பவர்களுக்கு மட்டும் பொறுப்பாக அளிக்கப்படும். ஒருவர் மற்றொருவரின் சம்பளம் பற்றி கேட்பது அநாகரீகம். அவரே வட்டி விகிதம் பற்றி கேட்டால் தீர விசாரித்து சொல்வது நலம்.

2. மன்னித்து மறந்து விடு.
இதை சொல்வது எளிது. செய்வது கடினம். தாரதம்யம் வேறு இருக்கிறது. லஞ்சம் கொடுப்பவனை காட்டிக்கொடுக்கவேண்டும். துஷ்டனை கண்டால் தூர விலகுவது விவேகம். ஆனால் சிலர் அவமானப்படுத்துவார்கள். அவர்களை மன்னித்து விட்டு மறந்து விட்டால், மனம் இலேசு ஆகும்.

3. தம்பட்டம் அடித்துக்கொள்ளாதே.
தற்புகழ்ச்சியையும் புகழ்மாலைகளையும் விட்டொழிப்பது நன்மை பயக்கும். ‘பணி செய்து கிடப்பது’ உன்னதமான செயல். புகழ்பவர்கள், காலம் மாறினால், இகழ்வார்கள்.

4. பொறாமை வேண்டாம்.
வாழ்க்கையில் மேடு பள்ளங்கள் உண்டு. பொறாமையினால் மன நிம்மதி தான் குலையும். அதை விட்டொழிக்க.
5. சூழ்நிலையுடன் ஒத்து வாழ்.
தலைக்கேற்ற குல்லா வாங்கு. குல்லாவுக்கு ஏற்றபடி தலையை வெட்டிக்கொள்ளலாமா?!

6. பொறுத்துக்கொள்வதே நிவாரணம்.
நம் கையில் யாதும் இல்லை. எல்லாமும் இருக்கிறது. இதில் முரண் யாதுமில்லை. மாற்ற முடியாத சிக்கல்களை சுயநம்பிக்கையுடன் இயங்கி தீர்வு காண முடியும். ‘பொறுத்தார் பூமியாள்வார்’.

7. இயன்றதை செய். அதிக பளு வேண்டாம்.
எளிது. ஆனால், நானே கேட்கவில்லை. பாருங்களேன்!⏳

8. தியானம் செய்,
நல்ல அறிவுரை. நானும் கேட்கப் பார்க்கிறேன்!⛺

9. மனதை சோம்ப விடாதே,
மனம் இயங்கிக்கொண்டிருந்தால், பிரச்னைகள் அணுகா. ஏதாவது ஆக்கப்பூர்வமான செயலை செய்து வா.

10. எதையும் ஒத்திப்போடாதே.
அதனால் தான், உடனே இதை எழுதினேன்!

11. நடப்பது நடக்கும். அலட்டிக்காதே.〽

பாபாமெயில் சொன்னபடி திரு. பி.எஸ்.ஆர்.ராவ். அவர் சொன்னதை சற்றே மாற்றி எழுதிய