Thursday, December 1, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [4]


Update:
My follow up comments;

I thank the Hindu for not rejecting my first flush comments and congratulate the commentators for doing a much better job, than Visvak & Mahima & the Hindu, (and, of course, me!)individually and collectively thru 'Likes' & 'Dislikes' in critical  comments. The Hindu should not have claimed the 'access' privilege and exclusivity on a matter Google has filled reams of paper. Secondly, the Government of India has put the whole thing in http://www.pmindia.gov.in/en/assets-and-liabilities-of-the-union-council-of-ministers-2015-2016/ 
Jaitley's Return was on 21.06.16 long before the D Day. He had 4 savings a/cs  and two company deposits other the Cash (obviously) in hand 
Rs. 65,29,400/- . Luckily for me, my comments stand vindicated.


The Hindu is in the epicenter of Chennai/Tamil Nadu. 
There is no black money here. ONLY DARK MONEY amounting to billions held 
by a horde of minuscule to superheavy politicians and hangers on. Why shy away from exposing them? The Hindu should tell us now.

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [4]





இன்னம்பூரான்
30 11 2016

மற்ற செய்திகளை ஒத்தி வைத்து விட்டேன். இன்றைய ஹிந்துவில் வந்த தகவலும், அங்கு நான் பதித்த கருத்தும், இங்கு மேலதிக விமர்சனமும்.

தங்களிடம் பிரத்யேகமாக தருவிக்கப்பட்டதான ஆதாரங்களின் அடிப்படையில், ‘
‘ஹிந்து’ இதழ் இன்று கூறிய முடிவு:

The data also reveals that not everyone in the government’s roster of Ministers shares the Prime Minister’s enthusiasm for cashless transactions.

அந்த பதிவின் மீது என் கருத்து:
~True. You have opened the can of worms, which is going to spill ugly truths. The poser is not only to all of us, but, particularly to the Prime Minister and also Mr. Modi, as an Indian, presiding over this group of persons.
You have done a service for the nation and are charged with the responsibility of going the whole hog, relentlessly and unceasingly. Mr.Modi's cash holding is not much, Mine was Rs.5000/- since deposited.

செய்தி:
பொது மக்கள் க்யூ வரிசையில் வாட, அரசியல் வாதிகளும், அமைச்சர்களும் சுகவாசம் செய்கிறார்கள். அமைச்சர்கள் மார்ச் 31,2016 அன்றைய நிலவரப்படி, தங்கள் சொத்து பத்துகள் விவரங்களை வருடந்தோறும் பிரதமரிடம் அறிவிக்கவேண்டும். அதை காமன்வெல்த் மனித உரிமை கழகம் தொகுத்ததை, ஹிந்து இதழ் பெற்று அதன் அடிப்படையில் இந்த செய்தி என்று பறை சாற்றிக்கொண்டது. 

[என் விமர்சனம்: இந்த பட்டியல் என்றோ மோடியின் அரசு இயந்திரத்தால் தொகுக்கப்பட்டது; அதை ஏதோ தன்னார்வ பணி என்று மார்பை தட்டிக்கொள்வதும், அதை  ஒரு புதிய ஆய்வு போல,இன்று பதிவு செய்வதும், உள் நோக்கம் என்று தான் தோன்றுகிறது. தமிழ்நாட்டு அரசியல் வாதிகள் கொள்ளை கொள்ளையாக சுருட்டுவதும், சுருட்டியதும், இங்கு பகிங்கிர ரகசியம். அவற்றை அச்சம் பொருட்டு ஹிந்து பதிவு செய்வதில்லை போலும். சரி. விஷயத்துக்கு வருவோம்.]

  1. மொத்தம் 76 அமைச்சர்கள்: 36 அமைச்சர்கள் இன்று வரை இந்த ஆணைக்கு இயங்கி விவரம் கொடுக்கவில்லை.  அவர்களில் கட்கரி, பரிக்கர், உமா பாரதி அடக்கம்.
  2. 23 அமைச்சர்கள் ரூபாய் 2 லக்ஷத்துக்குக் குறைவாக வைத்துக்கொண்டிருப்பதாக பதிவு செய்தனர்.
  3. 15 அமைச்சர்கள் ரூபாய் 2.5 லக்ஷத்துக்கு மேல் வைத்திருந்தனர்.
  4. அவர்களில் அருன் ஜெட்லி: 65 லக்ஷம் + ரொக்கம்; நாயக்: 22 லக்ஷம். ஹன்ஸ்ராஜ் 10+
  5. பிரதமர் மோடி: ரூபாய் 89,700/-.

ஹிந்து இதழின் நோக்கம் யாதாயினும், நாம் கவனிக்கப்படவேண்டியது:
  1. இந்த ‘கற்பிழந்த நோட்டு’ தாக்கீதுகளை பிரதமர் உரிய ரகஸ்யத்துடன் தான் அமல் படுத்திருக்கிறார். இல்லையெனில் கட்கரி வகையறா, ஜெட்லி வகையறா சுதாரித்துக்கொண்டிருப்பார்கள். 
  2. ஆணையை உதாசீனம் செய்த அமைச்சர்கள் மீது பா.ஜ.க. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை பொது மன்றத்தில் வைக்க வேண்டும்.
  3. அருன் ஜெட்லி வாய் கிழிய ‘காசு வேண்டாம். காசில்லா செலவு செய்க’ என்று முழுங்குகிறார் (முழங்குகிறார்). அவர் 65 லக்ஷம் வைத்துக்கொண்டிருந்தது சட்டவிரோதம் அல்ல. எனினும், தார்மீக ரீதியில் அது விந்தையான/தவிர்த்து இருக்கக்கூடிய தொகை. அவர் அது பற்றி உண்மை கூறவேண்டும்; அது வந்த விதம் என்ன? அது ஏன் காசாக இருக்கிறது என்பதை பொது மன்றத்தில் விளக்கவேண்டும். அதை அவர் யார் யாரிடமிருந்து எதற்கு எதற்கு பெற்றாரோ, அவர்கள் வருமான வரி கட்டிய விவரமும், தான் வருமானவரி கட்டிய விவரமும் கூறவேண்டும். அமைச்சரவையில் அமர்ந்து கொண்டு அவர், ‘கருடா? சுகமா?’ என்று வடேராவை வினவக்கூடாது.
  4. எதையும் சீர் தூக்கிப்பார்ப்பது தான் நலம்.
  5. “சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி [திருக்குறள் 118]
-#-
சித்திரத்துக்கு நன்றி: 


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com




Wednesday, November 30, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [4]




கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [4]




இன்னம்பூரான்
30 11 2016

  1. இந்தியா விடுதலை அடைவதற்கு சில நாட்கள் (19 ஜூலை 1947) நமது அண்டை நாடாகிய கடாரத்தின் [பர்மா/மியான்மார்] தந்தை என்று போற்றப்பட்டவரும், அந்த நாட்டு பொதுவுடமை கட்சியின் தந்தையும், கலோனிய ஆட்சியில் பிரதமராகவும், நாட்டுக்கு விடுதலை பெற்றவரும் ஆன ஆங்க்ஸான் அவர்களும் அவருடைய அமைச்சரவையும் [7 நபர்] சுட்டுக்கொல்லப்பட்டனர்.  [தற்காலம் அவரது மகள் ஆங்க்ஸான் ஸு யி மிகவும் பிரபலம்.] அவருடைய காலத்துக்கு முந்திய பிரதமர் ஊ சா வின் கைக்கூலிகள் , அரசு நிர்வாகக்குழு அமர்வு அறையில் புகுந்து இந்த கைங்கரியத்தை செய்தனர். பிற்காலம் அந்த ஊ சா தூக்குமேடையில் ஊசலாடி செத்தான், சட்டரீதியாக. கோர்ட்டில், வெளியேறிய பிரிட்டீஷ் சிப்பாய்கள் ஊ சாவுக்கு பல துப்பாக்கிகளை விற்றது தெரிய வந்தது.
  2. அக்காலம் பள்ளி இறுதி ஆண்டு படித்து வந்த என்னை இது மிகவும் பாதித்தது. ஃபோரம் என்ற இதழ் நடத்தி வந்த ஜோஷிம் ஆல்வா அவர்கள் இதை எல்லாம் புரியும்படி எடுத்துக்கூறியிருந்தார். அக்காலம் என் தந்தை என்னிடம் கூறிய தகவல் (என்னிடம் வேறு ஆதாரமில்லை.) நேருவின் அமைச்சரவையை ஒழிக்க ஒரு அண்டை நாட்டு பயங்கரவாதிகள் கும்பல் பயணித்த லாரியை ஆர்.எஸ்.எஸ். காரர்கள் மடக்கி, அவர்கள் எல்லாரையும் கொன்று நம் தலைவர்களை காப்பாற்றினார்கள். அதை சர்தார் படேல், (ஹோம் மினிஸ்டர்) நேருவிடம் எடுத்துக்க் கூறினார். தந்தையிடம் ஒரு ஆவணம்/ ஊடகம் இருந்தது. அதன் பெயர் எனக்குத் தெரியாது.
  3. கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு பின் வந்த நேற்றைய இந்திய செய்தி:
  4. மதுரையில் 27 11 2016 அன்று அல் க்வைடாவுடன் சம்பந்தப்பட்டவர்களும், சித்தூர், கொல்லம், மைசூர், நெல்லூர், மல்லபுரம் ஆகிய இடங்களில் கோர்ட்டுகளில் குண்டு வீசியவர்களும் ஆன மூவர் கைது செய்யப்பட்டனர். நாலாவது ஆசாமி சென்னையில் அகப்பட்டான். மல்லபுரம் குண்டு வீச்சு நடந்த இடத்தில் கிடைத்த தடயங்கள் மூலம் தெரிய வந்த செய்தி: நரேந்திரமோடியை சுட்டுத்தள்ளுவது, அமெரிக்கன், ரஷ்யன், இஸ்ரேல் தூதரங்களையும், ஹைதராபாத் கோர்ட்டையும் குறி வைப்பது, அவர்களில் ஒருவன் பள்ளியை துறந்த மாஜி மாணவன். பி.காம் படித்த மற்றொருவன் கோழிக்கறி வணிகர். மூன்று பிராந்திய போலீஸ் படைகள் ஒத்துழைத்து, அவர்களை பிடித்தது. ஒருவரின் தந்தை குற்றச்சாட்டுகளை மறுக்கிரார்.
  5. மொத்தம் 22 இந்திய பிரபலங்களை பிலாக்கணத்திற்கு இலக்காக கொலை செய்வதாக, இவர்கள் உத்தேசமாம்.
  6. நவம்பர் 8க்கு பிறகு, கடந்த 20 நாட்களில்  விமானம் மூலம் கடத்த முயன்று பிடிபட்ட பணம்: 
மும்பாய்: 12.5 கோடி
டில்லி    6.2  “
கொல்கத்தா 5.9 கோடி;
மற்றவை: 4.4 கோடி;’

இது எல்லாமே கறுப்புத்தான் என்று சொல்லக்கூடிய சான்றுகளை அவர்கள் முன் வந்து அளிக்கவில்லை. தவிர முதல் வாரத்தில் 5 கோடி, பின்னர் 24 கோடி பற்றி விசாரணை நடந்தது. தவிர, கணக்கிடமுடியாத வகையில் ஹரியானாவிலிருந்து பல கோடிகள் ஒரு பிரத்யேக விமானத்தில் நாகாலாந்துக்கு அனுப்பப்பட்டது. அங்குள்ள தலித் மக்களுக்கு வரி சலுகைகள் உண்டு. நோ வருமான வரி. அவர்களின் வரவு எகிறுவதாக சந்தேகம். 135 கிலோ தங்கமும் பிடிபட்டது. 

செல்லாக்காசாக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் பல பயங்கரவாதத்துக்கு போகிறது என்று அரசின் கூற்று. நம்பினால் நம்புங்கள். நம்பாவிட்டாலும் பரவாயில்லை. ஆங்க்ஸான் படுகொலையை போல... வேண்டாம். மோடியும் 22 பேர்களும் பிழைத்துப்போகட்டும்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:


https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e7/Aung_San_BNA.jpg/220px-Aung_San_BNA.jpg











இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, November 22, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [3]



கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம்
[3]

இன்னம்பூரான்
22 11 2016

  1. கற்பிழந்த நோட்டுகளின் எண்ணிக்கை: 22 பிலியன்;வைத்திருந்த 1.3. பில்லியன் மக்கள். வங்கிக்கிளைகள் 1.3 லக்ஷம். உலகில் இத்தனை பெரிய திட்டம் எங்குமே எடுத்து கொள்ளப்படவில்லை.
  2. பாகிஸ்தானாவது இந்தியாவுக்கு கள்ள கரன்சி நோட்டு அனுப்பவதாவது! இந்த மோடி இப்படி ஒரு சால்ஜாப்பு சொல்லி மாஜி கரன்சி நோட்டுக்களை களை இழக்க செய்து விட்டார், இதோ பார். அந்த கள்ளப்பண கணக்கு வழக்கு; அது சொற்பம் என்றெல்லாம்  வாதாடி, இந்தியாவின் மேலாண்மைக்கு விளையக்கூடிய ஆபத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று ஒரு கட்சி இருக்கிறது. அவர்கள் கவனிக்க மறுக்கும் நிகழ்வுகளில் சில; ஆறு வருடங்களுக்கு முன்னால் (24 12 1999) காட்மாண்டு-கந்தஹார் விமானம் ஹைஜேக் செய்தவர்களுக்கு, துப்பாக்கி, குண்டு, கத்தி ஆகியவற்றை கொடுத்தவன் ஜியா அன்சாரி என்ற பாகிஸ்தான் தூதரக ஊழியன். அந்த ஆபீஸ் முதன்மை காரியதரிசி அன்சாரியிடம் இந்திய கள்ளப்பணம் வாங்கிய சபூர் நேபால் போலீசால் கைது செய்யப்பட்டான். ஒரு ரைய்டில் ஒரு கோடி ரூபாய் கள்ளப்பணம் கைப்பற்றப்பட்டது.  நேபால் கண்காணிப்பு தீவிரமானவுடன் பங்களா தேஷ் அவர்களின் உறைவிடமானது. அங்கு ஆட்சி மாறியபின் தாய்லாண்ட், மியான்மார் ஆகியவை, அவர்களிம் பாசறையாக அமைந்தது. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் இரண்டாம் பக்ஷம் தான். எப்படியாவது இந்தியாவின் வலிமையை குறைக்கவேண்டும் என்பது தான் அவர்கள் இலக்கு. இன்றல்ல; நேற்று அல்ல. எப்போதுமே. பாகிஸ்தானில் அடித்த மாஜி கரன்சி  பயங்கரவாதிகளுக்கு வெல்லம் மாதிரி. தெரிந்தே பாகிஸ்தான் கள்ள நோட்டுகளை உலவ விடுவது, நமது நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களே.
  3. ‘நான் செய்ததலில் தப்பு இருந்திருக்கலாம்; தப்பிதம் இல்லை என்று கொக்கரிக்கிறார், சுபாஷ் தேஷ்முக். அவர் மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பி.ஜே. பி. அமைச்சர். அவருடைய கம்பெனி ஒன்றின் வாஹனத்தில் பிடிபட்டது ரூ. 91.5 லக்ஷம் மாஜி கரன்சி நோட்டுகள். கம்பெனி ஊழியர்களுக்கு சம்பளம் என்ற இந்த அமைச்சரின் வாதம் வேடிக்கையாக இருக்கிறது. அவரிடமிருந்து நம்பகத்தனமான பதில் வரவில்லை. மேலும் ஒரு செய்தி. அமைச்சர்கள் முழு நேர வணிகம், தொழில், பணி எல்லாம் செய்வார்கள், இந்தியாவின், எல்லா மாநிலங்களிலும். 
  1. தமிழ் நாட்டில் ஹிந்தி மொழிக்கு என்ன தான் எதிர்ப்பு இருந்தாலும், பினாமி (அநாமதேயம்) புழக்கத்திலிருக்கிறது; அநேகருக்கு அது தொட்டில் பழக்கம். அது இந்தியா முழுதும் பரவியிருப்பது கங்கை கொண்டான் போல, தெற்கிலிருந்து வடக்கே பயணித்தது என்போருமுண்டு. அகத்தியரின் கமண்டலநீர் போல அங்கிருந்து இங்கே வந்தது என்போரும் உண்டு. எது எப்படியோ, ஜார்க்கண்டு கிரிதி: மாநிலத்து கிராமம் ஒன்றில் ஒரு தெருவோர வெற்றிலைப்பாக்குக்கடை வைத்திருக்கும் பப்புக்குமார் திவாரிக்குக் கனஹதாரா வரன் கிடைத்ததா அல்லது அவருக்கு யாரோ குழி தோண்டுகிறார்களோ? தெரியவில்லை. தடாலடியாக, அவருடைய வங்கிக்கணக்கில் சேமிப்பு ரூ. 9.99 கோடியாக எகிறியிருக்கிறது. கணக்கு தப்பா அல்லது குறி வைத்து யாரோ கோடீஸ்வரன் அவரை தற்காலிக கோடீஸ்வரனாக்கி, கற்பிழந்த கரன்சி நோட்டுகளை ... சரி விடுங்க, சாமி.
  2. ஜி.ஜனார்த்தன் ரெட்டிகாரு கர்நாடாக மாநிலத்தில் பிஜேபி ஆண்ட போது ஓங்கி, உலகளந்து உச்சாணிக்கிளையிலிருந்து ஆட்டம் போட்ட மாஜி அமைச்சர். மெகா அளவில் தாதுப்பொருள் சுரண்டி கோடி கோடியாக சுருட்டியவர். உச்ச நீதி மன்றத்தால் சட்டவிரோத சுரண்டலுக்குத் தண்டிக்கப்பட்டவர். சொந்த ஊரான பல்லாரியில் காலெடுத்து வைக்கக்கூடாது என்று கோர்ட்டார் ஆணை. பொண்ணுக்கு கல்யாணம் செய்ய ஜாமீனில் வெளிவந்த அவர் பற்பல கோடிகள் செலவழித்து தாம் தூன் என்று படோடாபமாக அந்த கல்யாணத்தை நடத்தி வைத்தார். பிஜேபி பெருந்தலைகள் ஆஜர். நரசிம்ஹமூர்த்தி என்ற சராசரி மனிதன் இத்தனை கோடிகள் எங்கிருந்து வந்தது என்று கேட்டு வேட்டு வைக்கவே, பத்து வருமானவரி அதிகாரிகள் பல்லாரியில் டேரா போட்டு இவரை குடைந்ததாக செய்தி. இந்த செய்தியை கசிந்து விட்டு அவரை விட்டு விடுவார்களா அல்லது மோடியின் கோட்பாடு படி டின் கட்டுவார்களா? மக்கள் தான் கவனிக்கவேண்டும்.
[தொடரும்]
சித்திரத்துக்கு நன்றி:












இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, November 20, 2016

இன்னம்பூரான் பக்கம் 5: 30கனம் கோர்ட்டார் அவர்களே! 30அவிழும் முடிச்சு

Innamburan S.Soundararajan

 இன்னம்பூரான் பக்கம் 5: 30கனம் கோர்ட்டார் அவர்களே! 30அவிழும் முடிச்சு

Mon, Nov 21, 2016 at 6:48 AM


இன்னம்பூரான் பக்கம் 5: 30
கனம் கோர்ட்டார் அவர்களே! 30
அவிழும் முடிச்சு

இன்னம்பூரான்
18 11 2016
பிரசுரம்: http://www.vallamai.com/?p=73395

நீதிதேவதை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கும்போது சென்னை உச்ச நீதிமன்றத்தின் கிளை மதுரையில் ஜூலை 24, 2005 அன்று துவக்கப்பட்டது. அந்த விழாவுக்கு தலைமை வகித்த சென்னை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆற்றிய உரையில், ஒரு தென்றல் வீசியது என்கிறார், ஒரு பிரபல மூத்த வழக்கறிஞர். அவருடைய மைந்தன் உச்ச நீதி மன்றத்தில் நீதிபதி என்றால்,பார்த்துக்கொள்ளுங்கள், பெரியவரின் பெருமையை.

தென்றல்: மக்களின் மேலாண்மை தான் குடியரசின் இலக்கணம். நீதிபதிகள், பிரதிநிதிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எல்லாருமே மக்களின் ஊழியர்கள்;அதற்கு அவர்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். அத்துடன் நிற்காமல் வீசிய தென்றல், அந்த் ஆளுமை படைத்த மக்கள் ஊழியர்கள் மீது, அவர்களின் பணியின் குறைவுகளின் மீது குற்றம் காணலாம். நமது அதிகாரமே மக்களின் நம்பிக்கையின் மீது தான் செழிக்கிறது; அவதூறு வழக்குத் தொடரும் சக்தியின் மீது அல்ல.

பேச்சுரிமையும், கருத்துரிமையும் நமது அரசியல் சாஸனம் அளித்த வரன்கள். அதற்கு விலக்காக அமையும் இந்த கோர்ட்டாரின் அவதூறு சட்டம் ஏற்புடையது அல்ல. ஒரு ஜட்ஜ் லஞ்சம் வாங்கி விட்டாரென்று கற்பனை செய்து கொள்வோம். அந்த உண்மையை எடுத்துரைப்பது அவதூறு என்று கோர்ட்டார் அந்த உண்மை விளம்பியை தண்டிப்பது அபத்தம் இல்லையோ! மேலும் ஒரு அபத்தம். நமது அரசியல் சாஸனத்தின் ஷரத்து 124 (4) நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை செய்த ஜட்ஜை நீக்க வழி செய்கிறது. அதை செயல்படுத்த விரும்புபவர் முதலில் அதே ஜட்ஜால் ஜெயிலுக்கு அனுப்பப்படலாம்! இந்த அபத்தத்தைத் தவிர்க்க வழி இல்லையா? உளது. நீதித்துறையே இந்த குறையை நீக்கவேண்டும். அவர்கள் சுணங்கினால், வேறு வழியின்றி நாடாளுமன்றமே அதை நீக்கவேண்டும். அவையில் ஊசி விழும் சத்தம் கூட கேட்காத மெளனம். எத்தனை முகங்கள் இறுகியவையோ? சொன்னால் பொல்லாப்பு. பத்து வருடம் கழிந்த நிலையிலும் நான் மாட்டிக்கொள்ளலாம். ஜெயிலுக்கு போற வயதா? திகார்லெ பிஸ்கெட் ராஜன் பிள்ளையை சாவடிக்கல்லை? 

[Pillai's widow, Nina Pillai, alleged that a conspiracy was behind the death of her husband in the jail. She urged the court to direct a CBI probe on the conspiracy angle as she feared foul play in the death of her husband. The Chief Metropolitan Magistrate (CMM) had ordered a CBI inquiry based on the petition.[9] The medical officer who conducted the autopsy, deposed before the CMM, and said that Pillai had died of asphyxia caused by blocking of blood in the respiratory system.The Justice Leila Seth Commission under Leila Seth was constituted to enquire into the conspiracy angle of his custodial death, but did not find any conclusive evidence. The Commission had issued advertisements in the newspapers seeking public help in the matter. Nina Pillai said she would provide evidence about the conspiracy angle, but later she refused to name the conspirator. The Commission concluded that 'ways and means must be found to ensure that competent doctors were posted in the jail'. The Commission also suggested that the UN standard minimum rules be followed, and a prisoner should be allowed to be treated by his own doctor. Following the submission of its report, there were systemic changes at the Tihar jail, with a 24-hour attendance by doctors. There were 75 doctors on call compared to the previous 16, and initial medical check up was made imperative~ Wikipaedia] எனினும்?!



அந்த பிரபல வழக்கறிஞர் , ‘என்னுடைய 55 வருட சட்டம் சார்ந்த துறையில் பெற்ற அனுபவத்தில், இம்மாதிரி ஒரு நீதிபதியே தன் மனத்துள் புகுந்தாரய்ந்து பொருத்தமான வழிமுறையை முன்னுரைப்பதை முதலில் காண்கிறேன் என்று புளகாங்கிதம் கொள்கிறார்.

அந்த தலைமை நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்.
அந்த பிரபல வழக்கறிஞர்: ஃபாலி.எஸ்.நாரிமன் அவர்கள்.

காலத்தின் கோலமடா! இன்று இந்தியாவின் உச்சமன்றத்தில் ஒரு தாவா. 
கோர்ட்டாரை அவமதித்தாக குற்றம் சுட்டப்பட்டவர்: அந்த மாஜி தலைமை நீதிபதி திரு. மார்க்கண்டேய கட்ஜு அவர்கள்.
அவருக்காக வாதாடபோகும் வழக்கறிஞர்:அந்த பிரபல வழக்கறிஞர்: ஃபாலி.எஸ்.நாரிமன்.

[தொடரும்]
சித்திரத்துக்கு நன்றி:
http://ai-i1.infcdn.net/icons_siandroid/png/200/8466/8466765.png








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com
__._,_.___

Posted by: "Innamburan S.Soundararajan" <innamburan@gmail.com
Reply via web postReply to sender Reply to group Start a new topicMessages in this topic (1)
This Group is restricted to Invitees only for ensuring compliance with the Terms, Guidelines & Privacy conditions of Yahoo and this Group and to guard against phishing. Most members of this Group are from an Elder Community in Aalapaakkam.
Respecting their wishes, all may refrain from commenting upon the community and its administrations.
Yahoo! Groups
• Privacy • Unsubscribe • Terms of Use
.

__,_._,___

Wednesday, November 16, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [2]





கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம்
[2]

இன்னம்பூரான்
17 11 2016

  1. அரவங்குறிச்சி வகையறா இடங்களில் வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.5000/- செல்லா நோட்டுகளில் கொடுப்பதாக சகல கட்சிகளும் தாராளமய கோட்பாட்டை கையில் எடுத்து உளராம் என்று தினமலர் செய்தி. நம்ம ஆளப்போகும் பிரதிநிதிகளின் இந்த ‘ஒரு கல்லில் இரண்டு மாங்காய்’ அணுகுமுறை விபரீதத்தில் முடியட்டும் என்று சித்தரின் சாபம்.
  2. கூகிளாண்டவரிடம் இந்தியாவிலிருந்து அதிகம் கேட்கப்பட்ட கேள்வி: “கறுப்புப்பணத்தை வெள்ளையாக்குவது எப்படி? நேர்மை கொழுந்துகளே! வணக்கம். 
  3. கர்நாடகா எம் எல் ஏ நாரயண்சாமி தலா மூன்று லக்ஷம் கொடுத்து, பெருமளவில் கல்லா கட்டுகிறாராம். இல்லை அது வங்கி அளித்த விவசாயக்கடன் வினியோகம் என்கிறார், அவர். அட! நாராயணா!
  4. நீண்ட காலமாக செயல்படாத ஒரு கோடி வங்கி கணக்குகளில் முடங்கி கிடக்கும் ரூ.2400 கோடி. விடுதலை இதழ் தலையங்கம்
  5. இதில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி களில் மட்டும் 86 லட்சம் கணக்குகள் முடங்கியுள்ளன. அவற்றில் ரூ.1900 கோடி பணம் உள்ளது. இதிலும் ஸ்டேட் பாங்க் குரூப் வங்கிகளில் மட்டும் பார்த்தால், 10 லட்சம் செயல்படாத கணக்குகளில் ரூ.233 கோடி முடங்கியுள்ளது. 
  6. தனியார் வங்கிகளில் 14 லட்சம் செயல் படாத கணக்குகளில் ரூ.233கோடிக்கும் அதிகமான பணம் முடங்கியுள்ளது. வெளி நாட்டு வங்கிகளில் 46,000 செயல்படாத கணக்குகளில் ரூ.69கோடி முடங்கியுள்ளது.
  7. Property developers are putting up a brave front on prices, but registration authorities report a sharp fall in revenue in leading real estate markets in Haryana, Uttar Pradesh, Karnataka, Telangana and Tamil Nadu in the first week after demonetisation. 17 11 2016
  8. Some small developers in Bengaluru, a segment that makes up an estimated 12 per cent of the market, have reportedly cashed in on the Centre’s decision, making sales in “old currency”, to be regularised using loans later. 17 11 2016
  9. மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் உயர்ந்து காணப்படுகிறது. டாலரின் மதிப்பு உயர்வுடன் துவங்கிய போதிலும்...இந்திய ரூபாய் மதிப்பு உயரத் துவங்கியது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது ரூபாய் மதிப்பு 67.89 ஆக இருந்தது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 67.94 ஆக இருந்தது.
  10. சிங்­கப்பூர் : ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், டி.சுப்­பாராவ், சிங்­கப்­பூரில், நிதித் துறை கருத்­த­ரங்கில் பேசி­ய­தா­வது: மத்­திய அரசு, கறுப்புப் பணத்தை கட்­டுப்­ப­டுத்த, 500, 1,000 ரூபாய் நோட்­டு­களை செல்­லா­த­வை­யாக அறி­வித்­தி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­கது. இதனால், மக்கள் படும் துயரம், தற்­கா­லி­க­மா­னது. ஆனால், இந்­ந­ட­வ­டிக்­கையால், நாட்­டிற்கு நீண்ட கால பயன்கள் கிட்டும். குறிப்­பாக, இந்­தி­யாவில் முத­லீ­டுகள் அதி­க­ரிக்கும்; விலை­வாசி உயர்வு கட்­டுக்குள் வரும்; பண­வீக்கம் மறைந்து, பண வாட்டம் என்ற நிலையை, நாடு சந்­திக்க நேரும். ரொக்க பரி­மாற்றம் குறைந்து, மின்­னணு வாயி­லான பணப் பரி­மாற்றம் அதி­க­ரிக்கும். இந்­தியா, ரொக்கப் பொரு­ளா­தாரம் சார்ந்த நாடு என்ற நிலையில் இருந்து, குறை­வான ரொக்கப் பரி­மாற்றம் உள்ள நாடு என்ற சிறப்பை பெறும். இவ்­வாறு அவர் கூறினார்.

பின்குறிப்பு: சில குமுகங்களில் எழுதுபவர்களில் பலரும், அங்கெல்லாமும், என் வலைப்பூவிலும் என்னுடைய வாசகர்களில் பலரும் இந்திய பிரஜையாக இல்லாமல் இருக்கலாம். அவர்கள் இந்திய நாட்டின் மேலாண்மையை (sovereignty) மதிப்பாதவர்களாகவும், இந்தியாவில் தற்காலம் நடக்கும் நிகழ்வுகளை துச்சமாக கருதபவர்களும் இருக்கலாம். தீவிரம் புரியாமல் எள்ளி நகையாடுவதிலும் ஞானஸ்நானம், விதண்டாவாதம் செய்பவர்களாகவும், வதந்தி காதலர்களாகவும் இருக்கலாம். அத்தகைய உத்தமபுத்திரர்கள் இந்தியாவிலிருந்தே குட்டை குழப்பலாம். அவர்களை நான் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. புறக்கணிக்கிறேன். பொருட்படுத்தவில்லை. சில குமுகங்கள் நான் எழுதுவதை மட்டுறுத்தலாம். I don’t care.
இன்னம்பூரான்
17 11 2016

[தொடரும்]
சித்திரத்துக்கு நன்றி:






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, November 15, 2016

இன்னம்பூரான் பக்கம் 5: 29: கனம் கோர்ட்டார் அவர்களே! 29:இழுபறி வைத்தியம்

Innamburan S.Soundararajan

இன்னம்பூரான் பக்கம் 5: 29: கனம் கோர்ட்டார் அவர்களே! 29:இழுபறி வைத்தியம்
1 message

Innamburan S.Soundararajan Wed, Nov 16, 2016 at 7:13 AM


இன்னம்பூரான் பக்கம் 5: 29: கனம் கோர்ட்டார் அவர்களே! 29
இழுபறி வைத்தியம்

இன்னம்பூரான்
13 11 2016
பிரசுரம்: http://www.vallamai.com/?p=73288#respond



கலோனிய அரசு கெடுபிடிகள் பல காட்டினாலும், திலகரின், காந்திஜியின், பாரதியாரின் எழுத்துரிமையும், பேச்சுரிமையையும் முச்சூடும் பறிக்கவில்லை. தடா போட்டுப் பார்த்ததுடன் சரி. காந்திஜியுடன் வைஸ்ராய் இர்வின் பிரபு பேச்சு வார்த்தை நடத்தினார். நீதித்துறை தன் பெருமையை காத்துக்கொள்வதில் கவனம் செலுத்தும் என்பார்கள். ஆனால், மதராஸ் ஹைகோர்ட்டில் ஒரு ஜட்ஜை வழக்கறிஞர் ஒருவர் நாய் என்று பொருள்பட நகைத்தார்.  சிரித்துக்கொண்டு விட்டு விட்டார்கள். ஏனெனில், அது பூடகமான நகைச்சுவையாக இருந்தது. சினம் பொங்க, ஒரு ஜட்ஜ் ‘நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்று தெரியுமா?’ என்ற வினவ, பழம் தின்னி கொட்டை போட்ட வக்கீல் ஐயா, ‘ஆஹா! தெரியுமே! ஒரு ஒல்லிப்பிச்சான் [puisne] ஜட்ஜிடம் பேசுகிறேன்.’ என்றார். எல்லாரும் கமுக்கமாக சிரித்துக்கொண்டார்கள்,  ஜட்ஜ் உள்பட.

அத்தகைய அலாதி உறவு எல்லாம், சுதந்திர இந்தியாவில் பறி போகத் தொடங்கின, கொஞ்சம், கொஞ்சமாக. 

எனக்கு ஒரு கெட்ட வழக்கம். இங்கிலாந்தில் படித்து வந்த காலகட்டத்தில் உயர் நீதி மன்ற (ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்) தீர்ப்புகளை தினம்தோறும் படிப்பேன். கறாரில் மையக்கரு நகைச்சுவையிலும், அலட்டிக்கொண்ட தீர்ப்பில் தர்மமும் இருக்கும். எல்லாம் பாடமே. இந்திய அரசியல் சாஸனத்தில் நீதித்துறைக்கு மவுசு அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்பீல் என்ற சட்ட நடவடிக்கை இருப்பதே, நீதிபதிகள் தெய்வாம்சம் கொண்டவர்கள் அல்ல, ஒருவர் அளித்த தீர்ப்பை மேலா ரத்து செய்யலாம் என்பதால், தீர்ப்புகளை விமர்சனத்துக்கு உட்பட்டவை என்பதை குறிக்கிறது. அதே விமர்சனத்தை மக்களில் ஒருவர் செய்வது வரவேற்கபடுவதில்லை. அப்படி செய்தாலும், கவனமாக நீதிபதியை கொஞ்சம் வெளிப்படையாக விமர்சித்தால் கோர்ட்டை அவமதித்தாக எடுத்துக்கொண்டு, ஆறு மாதம் ஜெயிலில் போடலாம். 


அந்த நிலைப்பாட்டுக்கு அஸ்திவாரமே சற்றே தடுமாற்றம் தான். வில்மாட், வில்மாட் என்று ஒரு ஜட்ஜ் 1765ல் ‘கோர்ட்டை அவமதிப்பது குற்றமே’ என்று ஒரு நிருபர் மேல் எழுந்த வழக்கில் ஒரு தீர்ப்பில் எழுதி இருந்தாலும்,  டெக்னில் காரணங்களால். அது குறைப்பிரசவம் ஆனது வில்மாட்டின் மைந்தர் காலம் சென்ற தந்தையின் படைப்புகளை பதிவு செய்த போது, சட்டத்தை அணுகாத அந்த கருத்து ஒரு மரபு ஆகி விட்டது. அப்பறம் என்ன? நீதி அரசர்கள், நீதி மன்னர்களானர்கள், சில இடங்களில் நீதி தேவர்களும் ஆனார்கள் -இந்தியாவில். இங்கிலாந்தில் மரபை பதிவு செய்து விட்டு, காமன் சென்ஸ் படி நடந்து கொண்டார்கள். பொதுவாக சொன்னால், அங்கே நீதிபதிகள் அமரிக்கையாக இருந்தார்கள். 

மேல்நாட்டு ஊடகங்கள் எந்த உத்தமபுத்திரனையும் உச்சாணிக்கிளையில் அமர்த்தி மெய்கீர்த்தி பாடமாட்டார்கள். தடாலடியை எல்லாம் இறக்கி வைத்து வேப்பிலை அடிப்பார்கள். பல வருடங்களுக்கு முன்னால்   [1989?] நீதிபதிகளின் தலைமை போன்ற டெம்பிள்டன் பிரபு, பிரபல வழக்கறிஞர்களும், நீதிபதிகளின்புடை சூழ, இந்தியா வந்திருந்தார். அப்போது, ‘ ஊடகங்களின் எழுத்துரிமை ‘கனம் கோர்ட்டாரை அவமதித்தால்..!?.’ என்ற பட்டி மன்றம் நடந்தது. அப்போது அவர் 1987ல் உலகெங்கும் பேசப்பட்ட ஸ்பைகேட்சர் புத்தகம் பற்றிய தீர்ப்பில், அந்நூலின் ஆசிரியர் பீட்டர் ரைட் வாக்கு மீறி அரசு ஒற்றர்களின் ரகசியங்களை (ஒரளவு லீக் ஆனவை தான்) பிரசுரம் செய்யக்கூடாது என்று தானும், இரு சக ஜட்ஜ்கள் மெஜாரிட்டி தீர்ப்பு கொடுத்ததை ஊடகங்கள் பரிகசித்தன. மூவரின் படங்களை தலை கீழாக மாட்டி, ‘மூன்று முட்டாள்கள்’ என்ற தலைப்பை டைலி டெலிக்ராஃப் பிரசுரம் செய்தது. ஐயா அவர்கள் உடனே நடவடிக்கை எடுத்தார். என்ன? அதை தன் வரவேற்பு அறையில் அலங்காரமாக மாட்டி விட்டு, தினம் அதை பார்த்து சிரித்துக்கொண்டார்.
[தொடரும்]
சித்திரத்துக்கு நன்றி:






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, November 13, 2016

Life Certificate

Time for submission of Life Certificate extended up to 15th January 2017.
We suggested extension unto 31 Dec 2017. The above is Government's response within 24 hours.

Friday, November 11, 2016

கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம் [1]



கற்பிழந்த கரன்சி நோட்டுக்கள்: தகவல் மையம்
[1]

இன்னம்பூரான்
12 11 2016
சில நாட்களாக ஊடகங்களும் பூடகங்களும் மத்திய அரசு ரூ. 1000/- & ரூ. 500/- கரன்சி நோட்டுகள் செல்லாது என்ற உத்தரவை பிறப்பித்த பின், ஓயாமல் செய்திகள்/ கருத்துக்கள்/ அபிப்ராயங்கள்/ சிக்கல்கள்/ தீர்வுகள் ஆகியவை பற்றி பறை சாற்றி வருகின்றன. நேற்று பிறந்த குழந்தை கூட குறை கூறுகிறது என்ற மிகையை யதார்த்தமாகக் கூறலாம்.

இந்த கனஜோர் நடவடிக்கையை வரவேற்கும் நான், சில தகவல் துணுக்குகளை மட்டும் ஓரோரு வரியில் இந்த மையத்தில் தருகிறேன்.

எல்லாம் பொது மன்றத்தில் வந்தவை தான் என்று உறுதி அளிக்கிறேன். தனித்தனியாக உசாத்துணை கொடுக்க இயலாது.

  1. 21/2 லக்ஷம் பொறும் போலி நோட்டுகளை கேந்திரபாராவிலிருந்து குர்தா ரோடு வந்த சுமித் குமார் துடு என்ற வாலிபன் வங்கியில் செலுத்தும்போது பிடிபட்டான். அவன் ஒரு தேசத்துரோகி கும்பலை சார்ந்தவன் என்று சொல்லவும் வேண்டுமா?
  2. மும்பையிலும், டில்லியிலும், வருமான வரி அதிகாரிகள் 12 ஹவாலா துரோகிகளையும், உண்ட வீட்டுக்கு துரோகம் செய்த ஆபரண வியாபாரிகளையும் துளைத்து எடுத்தார்கள் - ஏன்? அவர்கள் சட்டவிரோதமாக செல்லா நோட்டுகளை திரவியமாக்கினர்.
  3. கோவாப்பரேட்டிவ் வங்கிகளில் விதிகள் மீறப்பட்டன. அவர்கள் தலையிலும் கை.
  4. ஹவாலா திவாலானதால் வெளி நாட்டிலிருந்து வரி செலுத்தாமல், வங்கிக்கட்டணம் கட்டாமல் தாய்நாட்டுக்கு பல வருடங்களாக துரோகம் செய்த பாவிகள், தேள் கொட்டிய திருடர்கள் போல் தவிக்கின்றனர்
  5. அவர்களிடம் பெற்ற பணத்தை என் செய்வது என்று தெரியாமல், அரசியலர் ஆதரவுடன் பல வருடங்களாக மக்களை ஏமாற்றியவர்கள் சிக்கி வருகிறார்கள்.
  6. ஏழு வருடங்களாக தி.மு.க. ‘அற’ கட்டளை சொத்து வரி கட்டவில்லை. இன்றைய பாக்கி ரூ.72 லக்ஷம். வாத்தியார் நின்று கொண்டு.....
  7. டாஸ்மாக் கடைகளில் விற்பனை கடும் சரிவு. மது மயக்கம் நாடுவோர் மால்களில் க்ரெடிட் கார்டு கொடுத்து வாங்கி சரியலாம்.
  8. வாட்ஸ் அப்: திருவான்மியூர் குப்பை தொட்டியில் நோட்டுகள்! ~இது வதந்தியாம்.
  9. ஹிந்தி நடிகை பிபாஷா பாசு முட்டை வாங்க கடன் வாங்க நேரிட்டதால், ‘கொதிப்பு’ ~ செய்தி 
  10. திருமலை ஒம்மாச்சி சார்பில் அந்த கோயில் ‘அறங்காவலர்கள்’ செல்லா நோட்டுகளையும் உண்டியலில் பெற்றுக்கொள்கிறார்கள். யாத்திரீகர்களை என்றும் கவனிக்கும் அவர்கள் கனிவுடன் இரண்டாவது உண்டியல் பெட்டியையும் வைத்துள்ளார்கள். மோடி என்ன சொல்வார்? ஒம்மாச்சி என்ன நினைப்பார்?

அடக்கத்துடன்,
இன்னம்பூரான்

சித்திரத்துக்கு நன்றி: 
http://indianexpresstv.com/vvtimages/news-images/thumbs/tiger-information-center-is-across-the-country-நாடெங்கும்-அமைகிறது-புலிகள்-தகவல்-மையம்-07-08-16.jpg















இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, November 8, 2016

துட்டும் நோட்டும்


துட்டும் நோட்டும்


ஆயிரம் ரூபாய்/ ஐந்நூறு ரூபாய் நோட்டுக்கள் செல்லாது. அது நல்லது என்பது என் கருத்து.

அறுவை சிகிச்சை தேவையாகும்போது, களிம்பு உதவாது. ஓரிரு நாட்கள் பொது ஜனத்துக்கு சின்ன கஷ்டங்கள். என்னிடம் வாடகை வண்டிக்கு பணம் இல்லை, இன்று தமிழ் சந்திப்புக்கு செல்ல. அதை பெரிது படுத்தலாமா? பொடி நடையா போனால் போச்சு. நடப்பில் பாகிஸ்தான் கள்ளப்பணம் இருப்பது உமக்கு தெரியுமா? தென்னிந்தியர்களுக்கு போர் என்ன என்று தெரியாது. சொகுசு வாழ்க்கை. அதான் முணுமுணுப்பு.
அன்புடன்,
இன்னம்பூரான்
http://www.noolulagam.com/book_images/27804.jpg

Monday, November 7, 2016

உருண்டு பிரண்டு திரண்டு முரண்டு!!!!!!!

Innamburan S.Soundararajan

உருண்டு பிரண்டு திரண்டு முரண்டு!!!!!!!

Innamburan S.Soundararajan Mon, Nov 7, 2016 at 10:32 PM


உருண்டு பிரண்டு திரண்டு முரண்டு!!!!!!!

நாத்திகம் உட்பட எம்மதமும் சம்மதமே என்பதே எல்லா மதாபிமானங்களின், நாத்திகம் உட்பட, உள்ளுறை. அதாவது, நமது நம்பிக்கை பாட்டைகள் எத்தனை முரண் தெரிவித்தாலும், மனிதநேயம் அடி வாங்காது, காளை. இங்கிலாந்தில் பெரும்பாலாக மதாபிமானம் ( நாத்திகம் உட்பட) அன்றாட வாழ்க்கையில் இடம் பெறுவதில்லை. அதனால், மாதாகோயில்கள் விற்கப்படுவதை காணலாம். கோயில்களோ, மசூதிகளோ, மாதா கோயில்களோ மனிதர்கள் வீடு போல் வாழ உகந்தவை அல்ல. தெய்வங்கள் அங்கு வாழலாம். சில இடங்களில் சினிமா தியேட்டர் கட்டலாம். எனவே, யாதொரு விதமான பிரச்னைகள் இல்லாமல் அவை மசூதியாக/ குருத்வாராவாக, கிருஷ்ணன் கோயில்களாக மாறி விடுகின்றன. இதில் குற்றமே இல்லை. எனினும், குற்றம் இழைத்தன் விளைவாக ஒம்மாச்சிகள் எல்லா மதங்களிலும், நாத்திகத்திலும் ஓங்கி வள்ர்கின்றன. ஃபைஸாபாத்தில், ஒரு மசூதி அவ்வாறு கட்டப்பட்டது. இராமபிரான் வாயை திறக்கவில்லை. மசூதி  இந்து மத தீவிர அபிமானிகளால் இடிக்கப்பட்டது. பக்கத்து வீட்டில் இராமர். ஆனாலும் அங்கு மனிதநேயம் மறையவில்லை. அந்த ஊரில் ஒரு கனவின் நல்வரவாக ஒரு தென்னிந்திய ராமர் கோயில் உள்ளது. கனவை பற்றி சொன்னால்,இவ்விடம் 'பிலு பிலு' என்று சண்டை போடுபவர்கள் உளர். அவர்களை கண்டாலே, ஏன் காணாமல் கூட, எனக்கு அப்படி ஒரு அச்சம்!. மதவாத பிரச்னைக்கு பயந்து ஒரு வருடம் ராம நவமி உத்ஸவத்தை ரத்து செய்ய நினைத்தார்கள். ஆண்டாண்டு தோறும் புஷ்பம் கொண்டு தரும் இஸ்லாமிய நண்பர்கள், 'கவலையற்க' என்று ஆதரவும், பாதுகாப்பும் அளித்தனர். உத்ஸவமும் 'ஜாம் ஜாம்' என்று நடந்தது. 

ஆனாலும் அதருமமிகு சென்னையில் ஒரு நடுத்தெரு ராமசாமி கோயில் இருக்கிறது. திறந்தவெளி சிலை, சில அனுமார் கோயில்கள் மாதிரி. நேர்த்திக்கடன், ஜபம், தபம், யாகம், யஞ்கம், விளக்கு பூசை, மண்தரை சாப்பாடு, மொட்டை, பார்ப்பனர் கோயிலில் பார்ப்பன பூசாரியை வைத்து வடமொழி அர்ச்சனை என்றெல்லாம் இயங்கும் ராமசாமி பக்தர்கள், அந்த சிலாரூபத்தின் கல்வெட்டில் இருக்கும் 'கடவுளை நம்புவோன் முட்டாள்' என்ற வாசகத்தை ஸ்வீகரித்துக்கொண்டார்களோ அல்லது உள்ளுறை பொருட்டு அதை விட்டு வைத்திருக்கிறார்களோ? என்னவோ! நான் இரண்டாவது நிலைப்பாட்டை நம்புகிறேன். திரு. கருணாநிதியின் மகளிர் அவருக்காக, கோயிலுக்கு போனது கேட்டு, எம்மதமும் சம்மதம் என்று சொல்லிக்கொண்டேன்.