Wednesday, April 6, 2016

இன்னம்பூரான் சரடு 4

இன்னம்பூரான் சரடு 4


பொதுவுடமைக்காரர்களும், முதலாளித்துவத்தினரும் ஒருவரை ஒருவர் சாடுவதற்கு ஜோக்கடிப்பார்கள். அவற்றில் சில அறுவைஜோக்குக்களாக அமையும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு விமானங்கள்  இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக [சென்னை தமிழில் 'கண்டிப்பாக) தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு படகுகள்  இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக  தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு ஹெலிகாப்டர்கள்  இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு படகுகள்  இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக  தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! நிச்சயமாக தத்க்ஷணமே கொடுத்து விடுவேன்.

கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை: தோழரே! உன்னிடம் இரண்டு சைக்கிள்கள் இருந்தால், ஒன்றை கட்சிக்குக் கொடுத்து விடுவாயா?
குடிமகன்(ள்): தோழரே! மன்னிக்க வேண்டும். என்னிடம் இரண்டு சைக்கிள்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை தர இயலாது. 

சர்தார்ஜி ஜோக்குக்கள் மாதிரி, இத்தகைய ஜோக்குக்களில் பொய் மிகைப்படுத்தப்படலாம் அல்லது நிதர்சனம் தலையை நீட்டலாம். நம்பூதிரிபாத், பி.ராமமூர்த்தி, உமாநாத் போன்ற இந்திய கம்யூனிஸ்ட்கள் சொத்தையும், வரவையும் கட்சிக்கிக் கொடுத்து விட்டு, அவர்கள் கொடுக்கும் குறைந்த ஊதியத்தில் வாழ்ந்து வந்தார்கள். ஜீவா அவர்கள் அதைக்கூட வாங்கிக்கொள்ளவில்லை. தற்கால ரஷியாவின் அழகு பனாமா கண்ணாடியில் பிரதிபலிப்பு.
-#-
சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, April 5, 2016

தோஸ்தவஸ்தாத்துஸ்தாத்! இன்னம்பூரான் சரடு 3

இன்னம்பூரான் சரடு 3

தோஸ்தவஸ்தாத்துஸ்தாத்!
தோஸ்த்! வஸ்தாத் ! உஸ்தாத் !

நான் சுல்தான் கீ பப்டி என்ற ஊரில் ராஜ்யபரிபாலனம் [அசிஸ்டெண்ட் கலைக்டர்] செய்து கொண்டிருந்த போது, ஹிந்தி தெரியாததால் ரொம்ப அவஸ்தைப்பட்டேன். லக்டி என்றால் விறகு. லட்கி என்றால் பொண்ணு. விறகு வாங்கினதில் ஒரு தாவா, ஓட்டல் ஓனருக்கும், விறகு மண்டி ஓனருக்கும். அதற்கு நியாயமான தீர்வு வழங்கினேன். ஆனால், எல்லாரும் கொள்ளைச்சிரிப்பு. லக்டீ கீ பதிலாக லட்கீ வாங்கி விற்கறதாக நான் எழுதிய அனுமார் வால் தீர்ப்பு அபத்தமாக இருந்தது. ஊர் சிரிச்சுப்போச்சு.  அந்த மாதிரி தான் பஹூ என்றால் மருமகப்பெண். பஹீ என்றால் வரவு செலவுக்கணக்குப்புஸ்தகம். பஹூவை பஹீ என்று கூப்பிட்டு விட்டு, அவள் ஒரு குரல் கூக்குரலெடுத்து அழுத பின் தான் , அந்த விவாகரத்துக் கேஸே வாபஸ் வாங்கப்பட்டது. குரங்கைப்பிடிக்கப்போய் அது பிள்ளையார் பிடித்தக் கதையாகி விட்டது என்று சிலாகித்தார்கள்.  இது நிற்க.

அங்கு உருதுவுக்கு செல்வாக்கு என்பதால், ஜனாப் ஜலாலுதீன் சாஹேப் ‘தோஸ்த்’ ஆன எனக்கு ‘உஸ்தாத்’ ஆனார். அவர் பக்கத்து மைதானத்தில் குஸ்தி அக்காடா வைத்திருந்த ‘வஸ்தாத்’ சோம்தத் அகர்வாலை பற்றி ஒரு லோக்கல் கதை சொன்னார். அதான், ‘தோஸ்தவஸ்தாத்துஸ்தாத்!’.

இந்த ரகசிய என்கெளண்டர் போலீஸ் வேலைக்கு மூன்று பேரும் விண்ணப்பம் செய்தனராம். காலியிடம் ஒன்று மட்டுமே.

டெஸ்ட்:

என் நிழலாகிய தோஸ்திடம் ஒரு துப்பாக்கியை கொடுத்து, ‘அந்த அறையில் உன் மனைவி/கணவன் இருக்கிறார். சுட்டுக்கொன்று விட்டு வா.’ தோஸ்த் அழுத வண்ணம் திரும்பி வந்து ‘சுட கை வரவில்லை.’ என்றார். அவர் நிராகரிக்கப்பட்டார். அடுத்து வந்த உஸ்தாத்துக்கும் இதே அதோகதி! வஸ்தாத்தோ வாகை சூடினார். அது எப்டி?

அவர் அந்த அறையில் நுழைந்தவுடன், சரமாரியாக குண்டுகள் வெடித்தன. பின்னர், கைக்கலப்பு சண்டைக்கான அறிகுறிகள், சத்தம், கூச்சல், அழுகை, முனகல், மவுனம். அவர் வெளியில் வந்து புகாரித்தார். ‘என்னது இது? நீங்கள் துப்பாக்கியில் வெத்துவேட்டு வைத்திருப்பதை சொல்லவேண்டாமா? சுட்றேன். சுட்றேன். நோ எஃபெக்ட். அப்றம் அடிச்சுக்கொன்னேன்.’ அவருக்கு உடனே கை மேல் வேலை.

இந்த காலத்தில் எல்லா வேலைகளிலும் ஆண் பெண் சமானம். மூவரில் யாரு யாரு எந்த பால்? ஏன்?
உடனே பதில் போடுவதாக செல்வன் சொன்னார். பேலியோ டையட் துணிவு. 
கமான் செல்வன்.
இன்னம்பூரான்
ஏப்ரல் 5, 2016

Monday, April 4, 2016

பால் மாறினாலும் சொல் மாறாதே! சொல் மாறாதே, பால் மாறினாலும்!

பால் மாறினாலும் சொல் மாறாதே! சொல் மாறாதே, பால் மாறினாலும்!

ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி. பல்லென்னவோ சொல்லுக்கு உறுதி. மாணிக்கவேலு முதலியார் உள்ளூரில் பெரிய புள்ளி. மாவட்டத்தில் சற்றே சிறிய புள்ளி. மாநிலத்தில் சின்ன புள்ளி. பாரத நாட்டில் தம்மாத்தூண்டு புள்ளி. அவரு ஒரு நாள் தன்னுடைய மாருதி காரில் மாருத துல்ய வேகமாக, செங்கல்பட்டிலிருந்து தருமமிகு சென்னைக்கு செல்லும் போது, மாமாண்டூரில் ஹெட் கான்ஸ்டபிள் முனுசாமி விசிலடித்து நிறுத்தி, பேரையும், ஊரையும் எழுதிக்கொண்டு ரெஜிஸ்ட்ரேஷன் புக்கை வாங்கிப்பார்த்தார். ‘ஐயா இங்கே 60 கிலோமீட்டதில் தான் ஓட்டலாம்னு ரூலு. நீங்க 61 கிலோமீட்டரில் ஓட்றீங்க. கண்ணுக்குக் கண்ணாடிப் போட்டு ஓட்டணும்னு போட்றிக்கு. போட்டுக்கில்லை. பிடி சாபம்’  என்று சலானித்தார். முதலியார் கிளம்பச்ச சம்சாரம் கொடுத்த தாம்பூலத்தைத் துப்பாமல், இது வரை தப்பி வந்தார். ஆகவே, ‘நான் காண்டேக்ஷ்ஷ்...’ என்றவுடன், ‘சாமி! இது எலெக்ஷன் டைம். நாங்க வணங்காமுடியா இயங்கலாம். நீங்க எந்த மந்திரி தந்திரி காண்டேக்ட் சொன்னாலும், நாங்க டோண்ட் கேர், இன்னம்பூரானைப்போல, என்றார்.
முதலியார் பாவம் சொத்து இருந்தததால், ஷோக்குக்கு காண்டேக்ட் கண்ணாடி...
சரி விடுங்க. வேந்தன் வந்தா பேசிக்கலாம்.
இன்னம்பூரான்
04 04 2016
சித்திரத்துக்கு நன்றி: 

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, April 3, 2016

லோ! லோ!




லோ! லோ!
இந்த ஆனானப்பட்ட ஆங்கிலம் ஆளாளுக்கு வெவ்வேறு பொருள் கொடுத்து ஆலாய் படுத்துகிறது ஐயாமார்களே! அம்மாமார்களே!

இனி இங்க்லீஷ்  அப்பொத்தான் புரியும்.

Two American soldiers were traveling in an overcrowded London bus, standing. Within earshot, two ladies were talking about getting down in the next stop. 

One GI said to the other: Hi! When the ladies rise, we shall pinch their seats’

Perturbed, the ladies got down at the very next stop, to save their skin.

Comment Please.

சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, April 1, 2016

'உம்'

'உம்'

ராமுவும் சோமுவும் பள்ளித்தோழர்கள். கணினி மன்றத்திலும் தான். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலைக்கு
விண்ணப்பித்தார். ஒரே பரிக்ஷை. அதே கேள்விகள். பால்யபருவத்திலிருந்து ஒரே மார்க் வாங்கி கின்னஸ் ரிக்கார்ட்
படைத்த இந்த இளஞர்கள் இங்கும் அப்டியே. வியப்பில் ஆழ்ந்த அதிகாரி, இரண்டு பேருக்கு இடம் காலியில்லை. ஒரு பத்து வினாத்தொடர். பத்து நிமிடங்களில் பதில் என்று பந்தயம் வைத்தார். ஒரே மார்க். சோமுவுக்குத்தான் வேலை கொடுத்தார். ராமு கொஷ்யண்ட். நியாயமான பதில் அளித்தார். அது என்ன, நண்பர்களே?

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


-----------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் 2, 2016

தொல்காப்பியம் கற்றுக்கொள்ள:

1. விடையில்லையெனினும் தேர்வு. ஐந்தாவது வினாவுக்கு, 'எனக்கு தெரியாது' என்று சோமுவும், 'எனக்கும் தெரியாது' என்று ராமுவும் எழுத, ராமுவுக்கு வேலை கிடைக்கவில்லை.
2. எதிர்பாராத டெவலப்மெண்ட்: தொல்காப்பியம் கற்று, மறக்காமல் இருக்கப்பாடம்;

எச்சம், சிறப்பே, ஐயம், எதிர்மறை
முற்றே, எண்ணே, தெரிநிலை, ஆக்கம் என்று
அப்பால் எட்டே உம்மைச் சொல்லே
நூல்: தொல்காப்பியம் (சொல்லதிகாரம், இடையியல்)
பாடியவர்: தொல்காப்பியர்
’உம்’ என்ற சொல் எட்டு விதமாகப் பயன்படுகிறது:
1. எச்சம் : மீதமிருப்பதைச் சொல்லும்போது
உதாரணம் : அங்கே மிருகங்களோடு பறவைகளும் தங்கியிருந்தன
2. சிறப்பு : ஒரு விஷயத்தைச் சிறப்பித்துச் சொல்லும்போது
உதாரணம் : கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்
3. ஐயம் : இதுவா அதுவா என்று நிச்சயமில்லாமல் சந்தேகத்துடன் ஒருவரைப்பற்றிச் சொல்லும்போது
உதாரணம் : இவரும் நன்றாகவே பாடுவார் என்று நினைக்கிறேன்
4. எதிர்மறை : ஒன்றைச் சொல்லி அதற்கு எதிர்மறையான இன்னொன்றைப் புரியவைக்கும்போது
உதாரணம் : இவன் அவ்வப்போது படிப்பதும் உண்டு (அப்படியானால், பல நேரங்கள் படிக்காமல் இருப்பதுதான் வழக்கம் என்று அர்த்தம்)
5. முற்று : முழுமையைச் சொல்லும்போது
உதாரணம்: பதினெட்டுப் பட்டிக்கும் இவர்தான் நாட்டாமை
6. எண் : எண்ணிக்கையைச் சொல்லும்போது
உதாரணம்: தமிழிலும் கன்னடத்திலும் தெலுங்கிலும் மலையாளத்திலும் ஹிந்தியிலும் இவர் சரளமாகப் பேசுவார்
7. தெரிநிலை : ஆராய்ந்து சொல்லும்போது
உதாரணம்: இது பாம்பாகவும் இருக்கலாம், வெறும் கயிறாகவும் இருக்கலாம்
8. ஆக்கம் : ஒன்றின் விளைவாக இன்னொன்று ஏற்படும்போது / ஆக்கப்படும்போது
உதாரணம்: நான் பாடும் பாடல் நன்றாக உள்ளதா?
உபயம்: என்.சொக்கன்
ராமுவின் 'உம்' இந்த எட்டில் எது?
இன்னம்பூரான்

மோடி, தாடி



ஆஹான்னானாம்! இப்போ தான் ஒபாமோவுடன் செல்ஃபிண்ட நமது மதிப்புக்குரிய பிரதமர் மோடியின் தாடியை கண்டு பரவசமடைந்தேன்.
ஓஹோன்னானாம்! என்னே களை! கொண்டேன் தாடி மோஹம்! முடியழகும் ஜோர், ஆலின் ஆல் அழகு ராஜா எம்.கே.டி. போல.
நிஜம்மா சொல்றேன். இத்தனை பேர் இருக்கங்களே. அவருடைய தாடி அட்வைஸர் யாரு?
மோடிக்கும் அவருடைய ஜோடி தாடிக்கும் என் கனிவு வாழ்த்துக்கள்.

Image Credit & Copyright & Thanks: http://images.indianexpress.com/2016/04/44cdf76ea989ce10940f6a7067009b0d-1mn.jpg?w=600



இன்னம்பூரான்

Thursday, March 31, 2016

இன்னம்பூரான் பக்கம்: 🌚💥🌚 🌚இன்றொரு நாள்: 1: போஸ்ட் ஆடிட்.


இன்னம்பூரான் பக்கம்: 🌚💥🌚
🌚இன்றொரு நாள்: 1: போஸ்ட் ஆடிட்.

நடு நிசி. அமாவாசை இருட்டு. லேசான தூறல். ஆனால், கீத்து மின்னல் டால் அடிக்கிறது. இடி டமாரம் அடிக்குது. தொலைவிலிருந்து ஆந்தையின் அலறல் என் கூடாராத்தின் நூல் ஜன்னலை தாக்குகிறது. ஒரு காட்டுப்பூனை மிரட்டு மியாவுடன் என் மார்பை மிதித்துவிட்டு, அந்த ஜன்னல் வழியாக ஓடி விடுகிறது. எங்கிருந்தோ வந்த ஒரு புலியின் உறுமல் கேட்டு, என் இரத்த அழுத்தம் உச்சகட்டத்தில் தாண்டவம் ஆடியது. இத்தனைக்கும், கட்டாயத்தின் மீது நான் இந்த கானகத்தில் நுழையவில்லை. தன்னிச்சையாப் போனேனா, பச்சை பச்சையா வாந்தி. பக்கத்தில் சிகெரட் பிடித்துக் கொண்டு மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்த ஃபாரஸ்ட் ரேஞ்சர் பொம்மி ரெட்டிகாரு, சிரித்துக்கொண்டே ஒரு சிகெரட்டை நீட்டினார். ‘நீரு பீடி உறிஞ்சினா சரிக ஆயுடும்’ என்று சொன்னார். அவரை சுட்டுக்கொல்லலாம் போல நம்கு ஃபீலிங். ஆனால் துப்பாக்கி அவர் கிட்டெல்ல இருக்கு. போதாக்குறைக்கு, ‘ஏன் நடுங்கி சாகிறீர்கள்? செம்மரக்கட்டைக்காட்டிலே, நாகேஸ்வர ராவ் பார்க் மாதிரியா இருக்கும்? கொலையாளிகள் நடமாடும் பிராந்தியம் ஐயா! நீ இன்னா நனச்சுக்குணு வந்தீக என்று சென்னை கொச்சையையும், மலையாளி கொச்சையையும் கலந்து அடிச்சு விட்டார். அவர் சென்னையில் ட்ரெய்னிங் வந்திருந்தாராம். களக்காடு காட்டிலேயும்  வால்பாறையிலும் ப்ராக்டிக்கலாம். யாரு கேட்டா இதெல்லாம்? 

சமாச்சாரம் இது தான். ஓய்வு பெற்ற உயரதிகாரிகளுக்கு அப்பப்பொ தாக்கீது வரும். தணிக்கைத்துறையின் தணியா வேகம் தொடரில் நான் எழுதிய ரசவாதம் என்றை கட்டுரையை சீஃப் செக்ரட்ரீ சுதாகரன் ஐ ஏ எஸ் சந்திரபாபு ரெட்டிகாருவிடம் காண்பித்தாராம். தமிழ்நாட்டு பசங்க வந்து ரெட் சாண்டர்ஸ் வெட்டிக்கிணு போராங்க. அந்த கவர்னமெண்டோ கூவுது. நீரு இந்த இன்னம்பூரானை இங்கு கைபற்றப்பட்ட ரெட் சாண்டர்ஸ் துண்டங்களை ஏலம் போடச்சே, ஸ்பாட் விஜிலன்ஸ் ஆபீஸராக போடலாமே. அப்றம் ஆடிட்காரன் தொந்தரவு இருக்காதுல்லெ.  அவருக்கு ஒரு திருப்பதி ஏகாந்த சேவை, ஏழு லட்டு, ஒரு சால்வை, இரண்டு லக்ஷ ரூபாய் கேஷ்,  மெல்லிசா ஒரு தங்க மோதிரம் கொடுக்கலாம். முன்னாலேயே சொல்லிடுங்க. அந்த ஆளு ரொம்ப கறாரு என்று கியாதி என்றாராம். லட்டு தின்ன கசுக்குமா என்ன? சரி என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் பாருங்கோ, ‘விநாச காலே, விபரீத புத்தி’ என்பார்கள். ‘சுதாகர்! உனக்கு என்னை பற்றி நன்றாகவேத் தெரியும். காட்லெ போய் இந்த வெட்ற சங்கதியெல்லாம் பார்த்தால் தான், என்னால் வேலையை எடுத்துக்கொள்வதை பற்றி முடிவு கூறமுடியும்.’ என்று திட்டவட்டமாக சொல்லி விட்டு, அவர் வரச்சேயே மணி ஏழு. சோத்தைக் கொட்டிக்கிட்டே பேசினோமா!, காண்ட்ராக்ட் பேசி முடிக்க சீ.எம். கிட்டப்போய் கேளு’ என்று அசால்ட்டா சொல்லி விட்டு தலையை சாச்சேன், பதினொன்று மணி வாக்கில். துர்சொப்பனம் ஒன்று கண்டேன். ‘போகாதே! போகாதே! என் கணவா!’ என்ற நல்ல தங்காள் பாட்டின் மெட்டில்,

‘போகாதே ! போகாதே! இன்னம்பூரா!
சாகாதே! சாகாதே! சித்தூர் காட்டில்.
ஆகாது! ஆகாது! இந்த கூலி படையெடுப்பு!
சாகரத்தில் தள்ளப்படுவாய், அசட்டு கிழமே!

இப்டி ஒரு பாட்டை பாடிக்கொண்டு வந்தது, பள்ளிக்கரணை கொள்ளிவாய் பிசாசு!
நான் ஓவென்று அலறி மணியை பாக்றேன்.
மணி: 0.001 ஏ.எம் ஏப்ரல் 1, 2016.
இன்னம்பூரான்


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, March 27, 2016

இன்னம்பூரான் பக்கம்: 3 – சமுதாயமும், நீயும், நானும், அவரும் 3‘சாதிப்பெயர்…’


இன்னம்பூரான் பக்கம்: 3 – சமுதாயமும், நீயும், நானும், அவரும் 3
  1. Monday, March 28, 2016, 5:30
  1. Featuredஇலக்கியம் 3. பிரசுரம் http://www.vallamai.com/?p=67489
‘சாதிப்பெயர்…’
இன்னம்பூரான்
25 03 2016

சாதிப்பெயரைச் சொல்லி அழைப்பதையும், அதை எடுத்துரைப்பதையும், அவ்வாறு எழுத்துப்பழகுவதையும் பண்பற்றதாகவும், அநாகரீகமாகவும் கருதும் காலகட்டமிது. அந்த கருத்து தமிழ்நாட்டில் அதிகமாக உலவதும் கண்கூடு. பந்துலுவும், ரெட்டியும், நாயுடுவும் ஆந்திராவில் சகஜமாக நடமாடுகிறார்கள். அண்டை கேரளாவில், மேனனும், நாயரும், பணிக்கரும் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஏன்? நம்பூதிரிபாட் முதல்வராக இருந்தாரே? சாதிப்பெயரை விலக்காத கம்யூனிஸ்ட்! கன்னடதேசத்திலோ, ராவுஜியும், அய்யாவும், வடநாட்டிலோ சதுர்வேதியும் , திரிவேதியும், த்விவேதியும், சக்சேனாவும், மோடியும், காந்தியும் படேலும், அரோராவுமாக பற்பல ‘சாதியை சுட்டும்’ துணைப்பெயர்களில்லா ஆளில்லை, நேரு உட்பட. இஸ்லாமியர் என்றால், தமிழ்நாட்டில் இல்லாத ராவுத்தர், மரைக்காயர், லப்பைகளா?

இந்திய மக்கள் விழிப்புணர்வுடன் ஆங்கிலேய கலோனிய ஆட்சியை எதிர்த்துப்போராடிய காலகட்டத்தில், தமிழ் நாட்டில் ‘முதலியார்’ நாயக்கர்’ ‘நாயுடு’ என்ற சாதிப்பெயர்கள் மரியாதையுடன் எடுத்துரைக்கப்பட்டன. அவர்கள் திரு.வி.க.வும், ஈ.வே.ரா.வும், வரதராஜுலு நாயுடுவும் ஆவார்கள். திரு.வி.க. அவர்கள் தன் பெயரை ‘கல்யாண சுந்தரம்’ என்று எழுதினாலும், வீட்டில் அவர் ‘சின்ன முதலியார்’ தான்; மூத்தவரான திரு.வி.க. அவர்கள் தான் பெரிய முதலியார். என் தந்தையும், நண்பர்களும் இவ்வாறு தான் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டனர்.

‘உ.வே.சா அவர்கள் தன் ஆசிரியரிடம் வைத்திருந்த பக்திக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. பிள்ளையவர்கள் என்று சொல்வார்களே அன்றி முழுப்பெயரைச் சொல்லக்கூடப் பயப்படுவார்.’
இதனால் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. சகஜ நிலையில் போக்குவரத்து இருந்து வந்தது. ‘நான் ஒரு சூத்திரன்’ என்று எழுதியவர் தன்னை சட்டநாத கரையாளர் என்று தான் அறிவித்துக்கொண்டார். நீதிக்கட்சித்தலைவர்கள் சாதிப்பெயரை அழித்துக்கொள்ளவில்லை – டி.எம்.நாயர், தியாகராஜச் செட்டி.
திராவிட கட்சிகள் தலையெடுத்து ஆட்சிக்கு வந்த பின் ஐயங்கார் தெரு ‘தெரு’ ஆனது; சோமசுந்தர முதலியார் தெரு ‘சோமசுந்தரம் தெரு’ ஆனது; இது எல்லாம், ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ரெட் ஹெர்ரிங். தமிழில் பாசாங்கு. திசையை இப்படியெல்லாம் திருப்பி, இன்று வரை சாதி அடிப்படையில் மட்டுமே தேர்தலுக்கு ஆள் பிடிக்கிறார்கள், அந்த திராவிடக்கட்சிகள். இதெற்கெல்லாம் கேள்வி முறை கிடையாதா? எத்தனை வருடங்கள் நாம் ஏமாந்த சோணகிரியாக இருப்போம்?

நிகழ்காலத்துக்கு வருவோம்.
  • சங்கர்-கெளசல்யா ஜோடியை கலைக்க இருவரையும் பயங்கரமாகத் தாக்கி, சங்கரை கொன்ற மேல்சாதி கண்டது என்ன? – சிறை சென்றதும், பெற்ற பெண்ணை அனாதையாக்கியதும், தன் குடும்பத்தின் மேல் சேற்றை வாரி போட்டுக்கொண்டது தான்

– இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அப்பனின் ஆத்திரம் மட்டும் தானா?

  • ‘வெட்டி சாய்க்கிறார்கள்…சுற்றி நின்றவர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள். பதறி விலகுகிறார்கள்‘

-இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? இல்லை தமிழர்களின் பாழாய்ப்போன பயந்தாங்குளி குணமா?
கெளசல்யாவின் அப்பனும், மாமனும் மிரட்டியிருக்கிறார்கள்.. இரண்டு மாதம் முன்னால் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் இந்த தம்பதி கொலை பயம் பற்றி புகார் செய்தார்கள். ஆனால் போலீஸ் புகாரை வாங்கவில்லை.
-இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அல்லது போலீசின் அராஜகமா? அவர்களை சட்டம் அணுகுமா?
  • சட்டத்தை மட்டம் தட்டியவர்கள் யார்? இத்தகைய படுகொலைகளை தடுக்க எண்ணி ஒரு கோடி பெண்கள் அக்காலத்து அமைச்சர். ப.சிதம்பரத்திடம் ஒரு மனு கொடுத்தார்கள். தோழர்.பிருந்தா காரட்டும், தேசீய மகளிர் ஆணையமும், சட்ட ஆணையமும் பரிந்துரைத்தனர். என்ன நடந்தது? உரித்த வாழைப்பழமாக சட்ட ஆணையம் ‘Prohibition of Unlawful Assembly Interference with freedom of Matrimonial alliance’ என்ற சட்டவரைவை அளிக்க, பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு குழு அலசி ஒரு மசோதாவை மாநிலங்களின் கருத்து கேட்க, அனுப்பி வைத்தது, காருண்யம் பொழிந்த ப.சி. யை உள்ளடக்கிய மத்திய அரசு.
  • -இது பெரிய சமூகத்தின் சாதி வெறியா? பிரச்சனையை மறைத்து வைக்கும் சூழ்ச்சியா? ஏன் இந்த தட்டாமாலை?
  • கருணாகரமான [தவறாக நினைக்க வேண்டாம்! ‘எல்லாம் ஒரு குட்டையில் அழுகிய மட்டை தான் – காமராசர்’.] தமிழ் நாட்டு அரசு 23 03 2016 வரை மவுனம் -இது சின்ன/பெரிய சமூகத்தின் சாதி வெறியா? இல்லை அரசு கொள்கையா?

வரிந்து, வரிந்து பக்கம் பக்கமாக சாதிவெறி பற்றி எழுதும் நண்பர்கள் ஏன் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்று எனக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் Vicarious pleasure என்பார்கள். தமிழில் ‘சொல்லி மகிழ்வது’ எனலாமோ? எனக்கு இரண்டு மொழியும் தெரியாது.

இணைய பெருமக்களே! நமக்குள் பேசி பயனில்லை.களத்தில் இறங்குங்கள். சமயம் பார்த்து விண்ணப்பிக்கிறேன். என்னால் ஆனதை செய்து வருகிறேன். அது மற்றவர்களின் ப்ரைவசியை பாதிக்கக்கூடாது என்பதால், இப்போதைக்கு முற்றுப்புள்ளி.
-#-
நன்றி: ஆனந்த விகடன்: 23 03 2016
சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, March 25, 2016

இன்னம்பூரான் பக்கம் 5: 28: கனம் கோர்ட்டார் அவர்களே! 28 கந்துவட்டியும்கமிஷனர் துரையும்




இன்னம்பூரான் பக்கம் 5: 28: கனம் கோர்ட்டார் அவர்களே! 28

ந்துவட்டியும்கமிஷனர் துரையும்

இன்னம்பூரான்
Friday, March 25, 2016, 12:27
பிரசுரம்: http://www.vallamai.com/?p=67442

எனக்கு அலுத்து விட்டது. இயற்றிய சட்டம், அதன் கிளைகள், தீர்வு அளித்த சட்டம், சட்ட நிர்வாகம், சட்ட சீர்திருத்தம் ஆகியவை பற்றி நான் தெளிவாக பலமுறை எழுதியிருந்தாலும், ‘தும்பை விட்டு, வாலையும் விட்டு, வெறும் காற்றை பிடிக்கப்பார்த்து ஏமாந்து போகிறார்கள் சிலர். நம்ம இன்னம்பூரான் தானே ! அவர் என்னத்தைக் கண்டார்? என்று ஒரு இனம். சட்டம் ஒரு இருட்டறை என்றால் எதுகையோ, மோனையோ, அலங்காரமாக இருக்குது; இது மற்றொரு இனம். சட்டம் ஒரு கழுதை என்றால், உவமை அணி என்றொரு கட்சி. ஆக மொத்தம், எல்லாரும் ராங்கு ! புது வாசகர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களாவது படிக்கட்டுமே.

அரசாங்கத்தைக் குறை சொல்வது எளிது; நடாத்துவது கடினம். பல வருடங்களாக, பற்பல அரசு நிர்வாகங்களுடன் இணைந்தும், எதிர்த்தும் நற்பணி செய்து வந்த நான் விதிகளையோ, சட்டப்புத்தகத்தையோ, ஈயடிச்சான் காப்பியாக அமல் படுத்தியதாக ஞாபகம் இல்லை. எங்கள் பயிற்சி மன்றத்தில் இது பற்றி பாடம் எடுத்தார்கள். ஒரு சிறிய உதாரணம். ஒரு நோயாளிக்கு அவசரமாக பென்ஷன் எடுத்துச்செல்ல ஆணையிட்டேன். இடம், பொருள், ஏவல் பெரிய கதை. ஃபோன்: ‘சார்! ஐந்து நிமிடம் முன்னால் அவர் இறந்து விட்டார். என்ன செய்ய?’. அந்தக்காலத்தில் அவர் மனைவிக்கு பென்ஷன் இல்லை; பழம்பாக்கி போய் சேர ஒரு வருடம் ஆகும். ‘சத்தமில்லாமல் பிரேதத்தின் கைநாட்டு எடுத்து வா. நான் அதற்கு சம்மதித்து ஆணையை பதிவு செய்கிறேன்.’ ஆட்டம் க்ளோஸ். என்னது இது? அவர் பேராசிரியர். அவர் கிட்ட கை நாட்டா? பிடி சார்ஜ் ஷீட். விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட். அதுவும் செல்லுபடியாகும்!!!!

சட்டம் இயற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஒரு பின்னணியை முன்வைத்து பொது நலம் நாடுவார்கள்: ஜமீன்தாரி ஒழிப்பு. ஓட்டைகள் தவறியும், திட்டமிட்டும் அமையலாம். நீதிபதிகள் மோப்பம் பிடித்து சரி செய்த பின் அது சட்டம் ஆகும். இந்த வகையில் மாற்றங்கள் ஏற்படலாம்.

இந்த வழக்கை பாருங்கள். இந்தியாவின் மத்திய & பேரார் மாகாணத்தில் பேதுல் ஜில்லாவில் ஒரு லேவாதேவிக்காரர் ஒரு பழங்குடி மீது வட்டியும் முதலுமாக வசூலிக்க வழக்குத் தொடர்ந்தார். ஆவணங்கள் பக்கா. கடங்காரரோ, ‘ஐயோ! அந்த பாவி தான் கடங்காரன். காசா கொடுத்தேன். உழைப்பா கொடுத்தேன், சின்ன பசங்கக் கூட உழைத்தார்கள். அவன் நாசமா போக! கடவுளே! நீ கண்ணில்லா கபோதி! எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது. நோ ஆவணம். ‘ என்று கதறினான்.

ஜட்ஜ்மெண்ட்:
‘சட்டப்படி வாதியின் வழக்கு சரியே. பிரதிவாதி இந்த கடனை தீர்க்கத்தான் வேண்டும். இல்லாவிடின் கடுங்காவல். வட்டியும் முதலுமாக அவர் ₹ 200 கட்டவேண்டும். அவரோ பரம ஏழை. ஆகவே, சட்டப்படி வருடத்துக்கு ஒரு ரூபாய் வீதம் 200 வருடங்கள் கட்டியே ஆகவேண்டும். இந்த ஷரத்துப்படி அப்பீல் கிடையாது.’

-J G Bourne, Deputy Commissioner & ex officio Judge of the Small Cause Court.
ஆதாரம்: MN Buch: 2008 When the Harvest Moon is Blue: Har Anand (p.56-57).

சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, March 22, 2016

‘வீதியிருக்கு…’: இன்னம்பூரான் பக்கம்: 2 சமுதாயமும், நீயும், நானும், அவரும் 2



இன்னம்பூரான் பக்கம்: 2


Wednesday, March 23, 2016, 4:59

பிரசுரம்: http://www.vallamai.com/?cat=1066


இன்னம்பூரான் பக்கம்: 2 

சமுதாயமும், நீயும், நானும், அவரும் 2

‘வீதியிருக்கு…’
இன்னம்பூரான்

22 03 2016

 


கணக்குப் படிக்கும் போது, வட்டத்துக்குள் வட்டம் வரைந்து அழகு பார்ப்பதும் உண்டு. பெரிய வட்டம் இந்திய சமுதாயம், அம்பானியிலிருந்து அம்மாக்கண்ணு வரையில். அம்பானி அம்பாரியில் ஏறி ஆனை சவாரி செய்வார். அம்மாக்கண்ணு அபலை. புதுமைப்பித்தன் தான் அவரை பற்றி எழுதிவிட்டாரே. அடுத்த உள்வட்டத்தில் சராசரியில் மேன்மக்கள், செல்வத்தில். பகவத் கீதை-விஸ்வரூப தரிசனத்தில் ஆசாரியன் சொன்ன மாதிரி பற்பல பிரபஞ்சங்கள் சுழன்றவண்ணம் உள.

சில வருடங்களுக்கு முன் மும்பையில் மக்கள் ஆலோசனை மன்றத்துக்காக அலைந்து திரிந்தபோது, கால்களை இழந்த ஒரு மாற்றுத் திறனாளியை பேட்டி கண்டேன்; அவர் எனக்குக் குடும்பத்தினரை அறிமுகம் செய்து, தேநீர் வாங்கிக்கொடுத்தார்.

அவர் கதையை நான் எழுதப்போவதால், சாரம்சம் மட்டும் இங்கே, பக்கவாட்டில் கற்பனைத் தேரோட்டி!

‘நான் பிச்சை எடுத்து வாழ்ந்தேன். நல்ல வருமானம்; ஆனால் அவமானம். இந்தப் படத்தில் நான் வணங்கும் இந்த பார்ஸி அம்மை தான், எனக்கு வண்டி வாங்கிக்கொடுத்து, பழைய பேப்பர் வாங்கி விற்கும் நுட்பங்கள் சொல்லிக்கொடுத்து, இந்த கடைக்கு மூலதனம் போட்டார். இன்று நல்ல வருமானம்; மாதம் நிகரலாபம் 50,000 ரூபாய். இந்த கொலாபா பிராந்தியத்தில் தான் இந்த வியாபாரம் கொழிக்கும். ஆனால், கனவில் கூட குடிசை கூட வாங்க முடியாது. அதனால், வீதி தான் வீடு. பசங்க இங்கே தான் பிறந்தாங்க. நல்ல செக்யூரிட்டி, எங்கள் பிரபஞ்சம் தான் என்றார். போலீஸ் மாமூலில் மாதம் 10,000 அவுட்.’ என்றார்.


அடுத்த பேட்டி: மாதுங்கா போலீஸ் ஸ்டேஷன். டிஃபனும், இனிப்புடன் கொடுத்து, அசத்தி விட்டார்கள்.

இன்ஸ்பெக்டர்:

‘ஐயா! உங்களுக்கு என்ன பதில் சொல்வது? நான் சிப்பாயாக சேர்ந்து, 20 வருடங்களில் இரு உயர் பதவிகள். ஆனால், அதே ஓர் அறை குடில். வசதி நில். நேரம், காலம் தவறிய ஊழியம். இரண்டு மகனும், இரண்டு மகளும் விவரம் தெரிந்த வயது. பெற்றோர்கள் உடன். எனக்கும் என் மனைவிக்கும் தனித்துப் பேசிக்கொள்ளக்கூட இடம் இல்லை. பிறந்த நாள், விவாக நாள் என்றால், ஹோட்டலில் இடம் பிடித்துத்தான் ஜல்ஸா செய்யமுடியும். நாங்களும் மனிதர்கள் தானே! கட்டுப்படியாகாது. லோக்கல் ரெளடி தான் இது உபயம். நான் வாயடைத்து நின்றேன்.


ஹெப்ஸிபா (16) வாயு வேகத்தில் ஓட்டப்பந்தயத்தில் கெலிப்பாள்; அதிலேயே கரணம் போடுவாள். ரியோ டெ ஜெனீரோவில் நடந்த தெருவாசி பெண்களுக்கான பந்தயத்தில் வாகை சூடினாள். அது சரி. அவள் வளர்ந்த விதம் என்ன? செல்வந்தர்கள் வளைய வரும் நேரு ஸ்டேடியம் கட்ட, தெருவில் வளர்ந்து, உருண்டு பிரண்ட இந்தப் பெண் வெளியேற்றப்பட்டாள். ஏதோ சென்னை கார்ப்பரேஷன் நடத்திய சரணாலயத்தில் அபயம். கருணாலயா என்ற தன்னார்வக் குழு நடத்திய தெருவாசி பெண்களுக்கு ஆன பந்தயத்தில் நல்ல பேர் எடுத்தாள். மிகுந்த பிரயாசை செய்து, கடன் வாங்கி, கருணாலயா, அவளை ரியோ அழைத்துச்செல்ல, அவள் அங்கு வெற்றியுடன், பேசியே மக்கள் மனதைக் கவர்ந்தாள். அஷோக், ஸ்னேகாவும், உஷாவும் அங்கு சொன்ன சமாச்சாரம், ‘ நாங்கள் நாட்தோறும் போலீசுக்கு நடுங்கி வாழ்கிறோம். எங்களைப் பாதுகாக்க வேண்டிய போலீசால் தான் எங்களுக்கு அபாயம். அதிலிருந்து எங்களை தப்புவிக்க, போலீஸ் பயிற்சி மன்றங்களில் பேச எங்களைக் கூட்டிச்செல்லுங்கள்.’ இது இன்றைய ஹிந்து இதழ் செய்தி.


ஐயாமார்களே!, அம்மாமார்களே!


மூன்றுமே உண்மை செய்திகள். நன்றாகச் சிந்தித்து, இந்த மூன்றையும் மட்டும் பற்றி, திசை மாற்றாமல், உங்கள் கருத்தை வெளியிடுங்கள். எத்தனை பேர் சமுதாய சீர்திருத்தம் பற்றி 1% வது சிந்திக்கிறார்களோ, பார்ப்போம்.


-#-

சித்திரத்துக்கு நன்றி:

https://s-media-cache-ak0.pinimg.com/originals/48/b2/de/48b2de51a8e11b3f3cd617f1d3226a51.jpg

இன்னம்பூரான்

22 03 2016

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com