Monday, February 29, 2016

இன்னம்பூரான் பக்கம்: II.8: ஒரு துளி தேன்பாகு: 8: JK

இன்னம்பூரான் பக்கம்: II.1
ஒரு துளி தேன்பாகு

இன்னம்பூரான்
29 02 2016

மின் தமிழ் என்றதொரு அருமையான இணைய குழுவின் பதிவுகளில் ஒன்றில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சிந்தனைகளை தமிழில் எடுத்துரைக்க இயலாது என்று பொருட்பட ஒருவர் கூறுவதை கேட்டு மன சஞ்சலமடைந்தேன். அந்த இழை திசை மாறி பயணிப்பதால், இந்த தொடரை துவக்குகிறேன், ‘சிறு துளி பெருவெள்ளம்’ என்ற அடிப்படையில். அறிமுகங்கள் கூட அன்றாடம் சிறிதளவே வரும்.

ஜேகே அவர்களை நான் நன்கு அறிவேன். கல்லூரியில் படிக்கும்போது, பாடம் தவிர மற்ற எல்லாவற்றிலும் கவனம் செல்லும். நாங்கள் மூவர் அணி (கேயார்வி, ராமு, சுந்து) தவறாமல் சைக்கிள் பயணத்தில் வசந்த பவனம் சென்று ஜேகே அவர்களின் உரைகளை கேட்போம். பக்குவமின்மையானால், நான் தினந்தோறும் அவரிடம் கேள்விக்கணை தொடுப்பேன். அவரும் பொறுமையாக பதிலளிப்பார். கடைசி நாளன்று எனக்கு ஒரு மணி நேர பேட்டி கொடுத்தார். பக்குவமின்மை சிறிதளவு குறைந்தது.  என் மகவுகளை அவரது சிந்தனைகளை கேட்க வழி வகுத்தேன். 45 வருடங்கள் கழிந்த பின் அவரை பின்பற்றிய ஒருவரிடம் பாடம் கேட்டேன். பக்குவமின்மை மேலும் சிறிதளவு குறைந்தது. பின்னர் ஒரு வாரம் வசந்த பவனத்தில் நிம்மதி வாரமாக கழித்தேன். பக்குவமின்மை மேலும் சிறிதளவு குறைந்தது.

கடந்த ஒரு வருடமாக நானும் திரு.பி.எஸ்.ஆர். ராவ் அவர்களும் நாட்தோறும் தோழமை பாராட்டுகிறோம். அவர் ஒரு பிரபல எழுத்தாளர்; தமிழில் 30-40 நூல்களை எழுதியவர்.அவர் மனமுவந்து கொடுத்த ‘வாழும் கலை’ : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் என்ற நூல் படித்ததின் நற்பயனாக, தமிழார்வம் கூடியது. பக்குவமின்மை கணிசமான அளவு குறைந்தது. அந்த நூல் -438 பக்கங்கள்: நர்மதா பிரசுரம் 2007. காப்புரிமை பற்றிய குறிப்பு தென்படவில்லை. எனினும் ஆசிரியரிடம் அனுமதி பெற்றுக்கொண்டேன். அப்போது அவர் சொன்னதை பிறகு பகிர்ந்து கொள்கிறேன்.  அந்த நூலிலிருந்து சில துளிகளை எடுத்துரைக்கும் போது, அவற்றிற்கு நான் தான் பொறுப்பு. திரு.பி.எஸ்.ஆர். ராவ் அல்ல. துளிக்கூட தயக்கமில்லாமல், முழுமையாக புரிந்து கொள்ள, அந்த நூலை வாங்கி விடுங்கள் என்பேன்.

இன்றொரு துளி:
“...நான் கூறுபவைகள் உங்களுக்கு ஏற்புடையவையாக இல்லாவிட்டால், அவற்றை நீங்கள் நிராகரித்து விடுங்கள். அன்பு, பரிவு, சினேகம் ஆகியவற்றின் அடிப்படையில் உலகத்தில் இருந்து வரும் மோசமான நிலையைப் பற்றி உங்களுடன் கலந்து உரையாடவே நான் இங்கு வந்திருக்கிறேன்...”
-ஜே.கே.
[தொடரும்]

Image credit: http://thumb7.shutterstock.com/display_pic_with_logo/655813/655813,1300452117,5/stock-photo-treacle-trickle-treacle-syrup-overflowing-from-a-silver-desert-spoon-73403080.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


-------------------------------------------------------------------------------------------------------------------------
இன்னம்பூரான் பக்கம்: II.2
ஒரு துளி தேன்பாகு
இன்னம்பூரான்
மார்ச் 1, 2016

"இளம் வயதில் நான் படித்த ஒரு சுயமுன்னேற்ற நூல் எனது வாழ்வின் போக்கை மாற்றியமைத்தது. பெரும் பயன் பெற்ற நான், மற்றாவர்களும் பயன் அடைவதற்காகவே சுயமுன்னேற்ற நூல்கள் எழுதலானேன்." ~ திரு.பி.எஸ். ஆர். ராவ்.

இவருடன் எனக்கு ஏற்பட்ட நட்பு எனக்கு மிகவும் இதமாக இருக்கிறது என்று சொல்லும் நான், அவரது நூலிலிருந்து ஒரு மேற்கோள் தருகிறேன். ஜேகே உலகத்திலேயே போற்றப்படும் சிந்தனையாளர். அவர் நமது சிந்தனைக்கு முதலிடம் தருகிறார்.

"நான் ஒரு ஆசிரியன் அல்ல. உங்கள் யாரையும் மாற்றா நான் இங்கு வரவில்லை. நான் சொல்லி வருபவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்ற எந்த நிர்பந்தமும் கிடையாது."
- ஜேகே.

திரு.பி.எஸ். ஆர். ராவ் இந்த நூலை எழுதவதற்கு ஒரு தவமிருந்தார் என்றால் மிகையாகாது. நிறைய படித்து, சிந்தனையில் அவற்றை புடம் போட்டு, திட்டங்கள் போட்டு, ஜேகேயின் சிந்தனைக்களத்தை (அறிவுரைகள் இங்கில்லை.) அலசி, வடித்து இந்த 860 பக்க நூலை எழுதியிருக்கிறார். நான் அத்தனையும் பதிவு செய்ய இயலாது. நீங்களும் படிக்க மாட்டீர்கள். எனவே, என் திட்டப்படி அவருடைய சிந்தனைகளை பகிர்ந்து கொள்கிறேன்.

தொடர் தொண்டரடிப்பொடியாராக வரவேண்டும். அதற்காக துளி 1 இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி, வணக்கம்.

--------------------------------------------------------------------மேல், பல்லாயிரக்கணக்கான சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். அவற்றை கேட்க சான்றோர்கள் கூடுவார்கள். ஒலி நாடாக்கள் ஆயிரக்கணக்கில். "நான் ஒரு ஆசிரியன் அல்ல. உங்கள் யாரையும் மாற்றா நான் இங்கு வரவில்லை. நான் சொல்லி வருபவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்ற எந்த நிர்பந்தமும் கிடையாது." என்று திரும்பத்திரும்ப கூறிய ஜே.கே. அவர்களுக்கு இன்றளவும் ஒரு விசிறிக்கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. நமது பி.எஸ்.ஆர்.ஆர். அதற்கு விதி விலக்கு. ஏனெனில், அவர் ஜே.கே.யை பரிசீலனைக்கு உட்படுத்தி, தனக்கேற்ற வாழ்நெறியை, சுய சிந்தனையையின் வெளிப்பாடாக, அமைத்துக்கொண்டார் என்பதை காண்கிறேன். அத்துடன் அவர் நின்று விட்டிருந்தால், இந்த தொடர் துவக்கப்பட்டு இருக்காது.

அவர் எழுதிய ‘வாழும் கலை’ : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் என்ற நூல் ' இது மொழிபெயர்ப்பு அல்ல; ஜே.கே. சிந்தனைகளை உள்நிறைந்த தத்துவ நடை பயிலல்; அனைவருக்குமான எளிய தமிழில் ஜே.கே. சிந்தனைகளின் பரிசுப் பதிப்பு' என்று நர்மதா பதிப்பகம் கூறுவது மிகையல்ல என்பதை கண்டு கொண்டேன
Attachments area
Preview attachment JK PSRR INNAMBURAN.pdf
இன்னம்பூரான் பக்கம்: II.3
ஒரு துளி தேன்பாகு: ஜே.கே.


இன்னம்பூரான்
மார்ச் 2, 2016

ஜே.கே. அவர்கள் உலகமுழுதும் பல நகரங்களில் 65 ஆண்டுகளுக்கு மேல், பல்லாயிரக்கணக்கான சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். அவற்றை கேட்க சான்றோர்கள் கூடுவார்கள். ஒலி நாடாக்கள் ஆயிரக்கணக்கில். "நான் ஒரு ஆசிரியன் அல்ல. உங்கள் யாரையும் மாற்றா நான் இங்கு வரவில்லை. நான் சொல்லி வருபவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்ற எந்த நிர்பந்தமும் கிடையாது." என்று திரும்பத்திரும்ப கூறிய ஜே.கே. அவர்களுக்கு இன்றளவும் ஒரு விசிறிக்கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. நமது பி.எஸ்.ஆர்.ஆர். அதற்கு விதி விலக்கு. ஏனெனில், அவர் ஜே.கே.யை பரிசீலனைக்கு உட்படுத்தி, தனக்கேற்ற வாழ்நெறியை, சுய சிந்தனையையின் வெளிப்பாடாக, அமைத்துக்கொண்டார் என்பதை காண்கிறேன். அத்துடன் அவர் நின்று விட்டிருந்தால், இந்த தொடர் துவக்கப்பட்டு இருக்காது.

அவர் எழுதிய ‘வாழும் கலை’ : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் என்ற நூல் ' இது மொழிபெயர்ப்பு அல்ல; ஜே.கே. சிந்தனைகளை உள்நிறைந்த தத்துவ நடை பயிலல்; அனைவருக்குமான எளிய தமிழில் ஜே.கே. சிந்தனைகளின் பரிசுப் பதிப்பு' என்று நர்மதா பதிப்பகம் கூறுவது மிகையல்ல என்பதை கண்டு கொண்டேன்.

பிற பின்னர்.

தொடர் தொண்டரடிப்பொடியாராக வரவேண்டும். அதற்காக துளி 1&2(pdf) இணைக்கப்பட்டுள்ளன. நண்பர்களின் விருப்பத்திற்கு அடி பணிந்து, நான் எழுதிவரும் மற்ற குழுமங்களிலும் பதிவு செய்ய தொடங்குகிறேன்.


நன்றி, வணக்கம்.

[தொடரும்]
-----------------------------------------------------------
இன்னம்பூரான் பக்கம்: II.4
ஒரு துளி தேன்பாகு: ஜே.கே.

இன்னம்பூரான்
மார்ச் 3, 2016

மலர்விழி மங்கை 'ஒருபடி தேன்' என்று சொன்னதற்கு, நான் பி.எஸ்.ஆர்.ஆர். அவர்களுக்குத் தான் நன்றி கூறவேண்டும். தேமொழி கேட்டுக்கொண்டதற்கு இணங்கி,  ‘வாழும் கலை’ : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்' என்ற நூலை திரும்பத் திரும்ப புரட்டிப்படித்தேன். பி.எஸ்.ஆர்.ஆர். தவமிருக்கவில்லை என்று புரிந்தது. அவர் அருந்தவத்தில் ஆழ்ந்து, சிந்தனையில் மூழ்கி, வஸ்த்ராயணம் செய்து, ஜே.கே. அவர்கள் உலகமுழுதும் பல நகரங்களில் 65 ஆண்டுகளுக்கு மேல், பல்லாயிரக்கணக்கான சொற்பொழிவுகளை வரிசைப்படுத்தி, ஒலி நாடாக்களை கவனமாக கேட்டபின், ஜே.கே.நூல்களை படித்து, ஆங்கிலத்தில் ஒரு  concordance வரைந்து, அதன் பின் தன் மொழியில் தமிழாக்கம் செய்திருக்கிறார் என்பது தெளிவாக தென்படுகிறது.

எனவே,   ‘வாழும் கலை’ : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்'  என்ற நூல் தனித்துவம் படைத்தது. சொல்லப்போனால், எனக்கு அதை ஆங்கிலத்திலும், மற்ற மொழிகளிலும்  மொழிபெயர்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.

தனக்குத்தானே விடுதலை அளித்துக்கொண்ட ஜே.கே. அவர்கள் தனது தலைமை உரையில். 'உண்மையிடம் அழைத்துச்செல்ல பாதைகள் எதுவும் கிடையாது. சமயம் புனித நூல்கள்,சடங்குகள், பூஜைகள் போன்றவற்றையைக் கொண்டு உண்மையை நெருங்க முடியாது. ஒரு அமைப்பு மனிதனின் தனித்தன்மையை அழித்து விடுகிறது. உண்மையை ஒழுங்குப்படுத்த முடியாது. (Truth cannot be organized.). ' என்றார். (நூல்: பக்கம் 10).

இனி, இவ்விழையில் , திரு.பி.எஸ்.ஆர்.ராவ் அவர்களை பற்றி அதிகம் எழுதப்போவதில்லை. நாம் துரித நடை பழகவேண்டுமல்லவா!

யேசு ராஜன் அளித்த ஆங்கில பதிவை படித்தேன். இன்று அதை புரிந்து கொள்ள முடிந்தவர்கள் சொற்பம். அது பற்றி உரிய தருணத்தில் பேசுவோம்.

இன்னம்பூரான்












இன்னம்பூரான் பக்கம்: II.5

ஒரு துளி தேன்பாகு: 5:  ஜே.கே.

இன்னம்பூரான்
மார்ச் 5, 2016

ஜே.கே. அவர்களின் சிந்தனைகளை பகுத்து அறிவதற்கு முன் அவருடைய பரிந்துரை ஒன்றை கவனித்து பயனைடைய வேண்டும். அவருடைய கருத்துக்களம் முழுதும் கணிசமான அளவு செலவு செய்து, தமிழ் உள்பட பல மொழிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவருடைய விசிறிகள் அவருடைய காலத்துக்கு பின் ஒரு ஸ்தாபனம் அமைத்து செயல் படுகின்றனர். அது அவருடைய இயங்கிய இடத்தில் தான் இயங்குகிறது. அவர்களுடைய ஆர்வம் மெச்சத்தக்கது.

இந்த ‘ஒரு துளி தேன்பாகு: ஜே.கே.’ தொடர் அந்த ஸ்தாபனத்தின் பதிவுகளுடன் தொடர்பு கொண்டதல்ல ~ 1. ஜே.கே. அவர்களின் பரிந்துரை; 2. காப்புரிமை பிரச்னை தவிர்ப்பு; 3. ‘வாழும் கலை’ : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் என்ற நூலின் தனித்துவம்.

ஜே.கே. அவர்களின் பரிந்துரை: 

“ பலர் தங்களை என்னுடைய வாரிசு என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். ...நான் இதை மீண்டும் சொல்கிறேன். நான் யாரையும் என் வாரிசாக நியமிக்க வில்லை....நான் இருக்கும்போதோ அல்லது இறந்த பிறகோ அப்படி யாரும் உரிமை கோராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.”. [நூல்: பக்கம் 6]

-#-
இன்னம்பூரான்

இன்னம்பூரான் பக்கம்: II.6

ஒரு துளி தேன்பாகு: 6:  ஜே.கே.


இன்னம்பூரான்
மார்ச் 6, 2016

"நான் ஒரு ஆசிரியன் அல்ல. உங்கள் யாரையும் மாற்ற நான் இங்கு வரவில்லை. நான் சொல்லி வருபவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்ற எந்த நிர்பந்தமும் கிடையாது."

என்ற ஜே.கே. யின் அணுகுமுறை மற்ற குருமார்களின் அணுகுமுறைக்கு எதிர்மறை. மதகுருமார்கள் எல்லாருமே சீடர்கள் குருவின் சொல்படி நடக்கவேண்டும் என்பதை கட்டாயப்படுத்துவார்கள். நாத்திகம் போதிப்பவர்களும் அவ்வாறே தான் இயங்குகிறார்கள். போதனை என்ற சொல் ஜே.கே. யின் அகராதியில் இல்லை எனலாம். 

“...ஒருவன் தன்னுடைய சூட்சும புத்தி, [Discernment] விடாமுயற்சி, ஊக்கம் [perseverance ] போன்றவற்றைக் கொண்டு தான்  தன்னை வாட்டிவரும் பிரச்சினைகளைப் பற்றிய உண்மை நிலையை க் கண்டு கொள்ளமுடியும். நம்மில் நிறைய பேர்கள், தங்களுடைய சோம்பேறித்தனத்தின் காரணமாக, தையும் ஆழ்ந்து கவனிக்க முயற்சி செய்வதில்லை...இந்தியாவில் நான் மேற்கத்திய தத்துவங்களை விளக்கிக்கூறி வருபவன் என்று கூறி வருகிறார்கள். வெளி நாடுகளில் நான் தியானத்தில் மூலம் உண்மையையும் பரம்பொருளையும் கண்டுகொள்ள உதவும் கிழக்கிந்திய நம்பிக்கையை [Oriental mysticism] விளக்கி வரும் ஒரு மதகுரு என்று கூறி வருகிறார்கள்." [நூல்: ப.12.13].

I am inclined to believe that cross-references, in a carefully selective and relevant manner, will add to the utility of this series to interested readers. Here we go.

An excerpt from an introductory  to the book: Krishnamurthy: Reflections on Self: Open Court: 1997

***
Described by the Dalai Lama as "one of the greatest thinkers of the age", Jiddu Krishnamurti has influenced millions throughout the twentieth century -- including such notables as Joseph Campbell, Dr. Jonas Salk, Aldous Huxley, Van Morrison, Bertrand Russell, Henry Miller, and Bruce Lee -- and his work continues to inspire even a decade after his death. Born of middle-class Brahmin parents in 1895, Krishnamurti was recognized at age fourteen by Theosophists Annie Besant and C.W. Leadbeater as the anticipated world teacher and proclaimed to be the vehicle for the reincarnation of Christ in the West and of Buddha in the East. In 1929 he repudiated these claims and traveled the world, sharing his philosophical insights and establishing schools and foundations.

Because Krishnamurti had no interest in presenting theories, his thought is far removed from academic philosophy in the analytic tradition, yet his insights remain extremely relevant to contemporary philosophical theories and to people who are passionately interested in understanding themselves and the world. Rather than a theorist, Krishnamurti was a seer and a teacher. He saw inherently distorting psychological structures that bring about a division in every person's consciousness between "the observer" and "the observed". This division, he believed, is a potent source of conflict -- both internally for the individual and through the individual externalized for society as a whole. Krishnamurti envisioned a radical transformation in human consciousness and offered a way to transcend these harmful structures.

Krishnamurti: Reflections on the Self is a collection of Krishnamurti's writings and lectures about the individual inrelation to society. In Reflections, he examines the importance of inquiry, the role of emotions, the relation between experience and the self, the observer/observed distinction, the nature of freedom, and other philosophical ideas.

"In my own life Krishnamurti influenced me profoundly and helped me personally break through the confines of my own restrictions to my freedom". -- Deepak Chopra, M.D.
-x-



இன்னம்பூரான் பக்கம்: II.7

ஒரு துளி தேன்பாகு: 7  ஜே.கே.


இன்னம்பூரான்
மார்ச் 7, 2016

இந்த தொடர் ஒரு அறிமுகம் மட்டும் தான்.இதின் பக்கபலம்  'வாழும் கலை’ : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் என்ற நூல் மட்டுமே. ஜே.கே.திறந்த மனது வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். குறுக்கும் நெடுக்குமாக (cross references) வரும் மற்றவை, இடம், பொருள், ஏவல் கருதி பொருத்தப்படுபவை. அவற்றுக்கு நான் மட்டும் தான் பொறுப்பு.  

நந்தினி சுந்தர் காட்டிய மேற்கோள், இது: [ மேலதிக விவரங்கள், பின்னர்.]

ஏ.கே.ராமனுஜம் ஒரு புகழ்வாய்ந்த தமிழ் பேராசிரியர். மேன்னாட்டு பல்கலைக்கழகங்களுக்கு தமிழின் பெருமையை எடுத்தோதிய கன்னடத்து மேதை. அவருடைய ‘Speaking of Siva‘ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி:

இதை படித்தபின், குறிப்பாக, இறுதி வரியை படித்தபின் தற்கால இழிவு நிலையை கண்டு வருந்துவோர்களுக்கும் சரி, அரசு கட்டுப்பாட்டில் நம்பிக்கை வைத்திருப்போரும் சரி, வன்முறையில் அகம்பாவம் கொள்வோரும் சரி,பலவிதமான சிந்தனையாளர்களும் ‘எல்லாம் வந்து போகும்; எது தான் நிரந்தரம்?’ என்ற சிந்தனையில் ஆழ்ந்து போகலாம்.

'...The rich will make temples for Shiva,
What shall I, a poor man do?
My legs are pillars, the body the shrine, the head a cupola of gold.
Listen, O' lord of the meeting rivers,
things standing shall fall, but the moving ever shall stay...'

சிவபெருமானே!
செல்வந்தர்கள் உனக்கு ஆலயம் கட்டுவார்கள்.
நானோ ஏழை! என் செய்யலாம்?
என் கால்களே தூண்கள்; உடலே ஆலயம்; தலையே தங்கக்கீரிடம்.
சங்கமத்துத் தலைவா!
நின்றது வீழ்கிறது! நடையில் இருப்பதோ சாஸ்வதம்.

இது பஸவேந்திரா என்ற ஞானியின் வாசனா.
வாசனா தத்துவங்களை பற்றிய அடுத்தடுத்தத் துளிகளை ருசிப்பது, ஜே.கே.யை புரிந்து கொள்ள உதவலாம்.
-#-

***
இன்னம்பூரான் பக்கம்: II.8

ஒரு துளி தேன்பாகு: 8 ஜே.கே.


இன்னம்பூரான்
மார்ச் 8, 2016

“வாழும் கலை : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள்” .

‘நின்றது வீழ்கிறது! நடையில் இருப்பதோ சாஸ்வதம்.’ என்ற வாசனா, ஜே.கே.  தன்னை புகழ்ந்த மேனாட்டினர் ஒருவரிடம் கூறிய கருத்தை முன் வைக்கிறது.

“ கிருஷ்ணமூர்த்தி என்ற ஒருவனை நினைவில் வைத்துக் கொள்வதினால் உலகத்திற்கு எந்த விதமான பிரயோஜனமும் கிட்டப்போவதில்லை. செம்பில் இருக்கும் பாலைப் பருகவேண்டுமே தவிர செம்பை வணங்கி வரக் கூடாது...என்னை நீங்கள் மறந்து விடுங்கள். நான் சொல்லுபவைகளை ஆழ்ந்து விசாரணை செய்யுங்கள்...” [பக்கம்: 23]

எனக்கு ஒரு அனுபவம் கிட்டியது. சென்னை வந்திருந்த ஜே.கே. பிரும்மஞான சபை தலைவர் ராதா பர்னியருடன், அந்த சபையின் பிரத்யேக கடற்கரையில் உலவ வந்திருந்தார். அந்த நிகழ்வை தற்செயலாக சில நிமிடங்கள் தொலைவிலிருந்து நான் காண நேரிட்டது. அது தான் அங்கு அவருடைய கடைசி உலவுதல். ஊடகங்களில் அது பின்னர் வெளியானது.

‘நின்றது வீழ்கிறது! ஆம். ஜே.கே.யின் பூதவுடல் மறைந்தது. 

நடையில் இருப்பதோ சாஸ்வதம்.’! ஆம். அவருடைய பயணம் தொடர்கிறது.

‘உளியினாலும், சுத்தியலாலும் சிதைக்க முடியாத வைரம் பாய்ந்த ரோஸ்வுட் கட்டையை கோடரியையும், அரிவாளையும் வைத்துக்கொண்டு உடைக்கமுடியுமா? அமுதம் போன்ற சான்றோர்களின்  வாசனா சாஸ்வதம். அழிக்க முடியாதது. அதைப்போய் வேதங்களும், ஆகமங்களும் என் செய்ய இயலும்?’

ஹேமகல்ல ஹம்பா என்ற 17வது நூற்றாண்டு சிந்தனையாளர் இவ்வாறு வினவியதின் உட்பொருள் சற்றே தெளிவுடன் இப்போது கிடைக்கிறது.
-#-

Sunday, February 28, 2016

இன்னம்பூரான் பக்கம்: 2: கனம் கோர்ட்டார் அவர்களே![26]

இன்னம்பூரான் பக்கம்: 2: கனம் கோர்ட்டார் அவர்களே![26]

Monday, February 29, 2016, 5:09

பிரசுரம்: http://www.vallamai.com/?p=66709
இன்னம்பூரான்
27 02 2016
உரிமை போராட்டங்களில் உரிமையும் தாக்கப்படுவது ஒரு இயல்பான காட்சி. ஒரு உள்ளங்கை நெல்லிக்கனி உதாரணம்.

‘தன்னுடைய கோலை சுழுற்றுவதற்கு உமக்கு முழு உரிமை உண்டு, அது என் மூக்கை உடைக்கும் வரையில்.’
எனினும் கோலை சுழற்றுபவர்களுக்கும், சிதைந்த நாசிகளுக்கும் பஞ்சமில்லை!

மஹாலக்ஷ்மி பாவானி என்ற வழக்கறிஞர், உச்சநீதிமன்றத்தின் மகளிர் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில், அந்த நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தார். அதில் கூறப்பட்ட தகவல், சர்வ வல்லமை படைத்த ஆண்டவனையும் உலுக்கி எடுத்து விடும். குஞ்சும் குளவானுமான வருடந்தோறும் இல்லத்தில் ‘கரு’ பணி செய்து வரும் பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும், அந்தந்த பஸ்களில் பள்ளி சென்று வரும் சிறுமிகளுக்கு நீலத்திரைப்படங்களை காண்பித்து, அவர்களை பாலின தொந்தரவு செய்கிறார்கள் என்றும் அத்தகைய வக்கிரங்களை சட்டரீதியாக தடுக்கவேண்டும் என்றார்.

Child pornography உலகெங்கும், அதுவும் இணையத்தில், பரவியிருந்தாலும், அநேக தேசங்களில் உடனடி தடையும் தண்டனையும் உண்டு. போர்ட்ஸ்மத் என்ற இங்கிலாந்து நகரில், ஒரு ஓய்வு பெற்ற மேஜர் ஜெனெரல் நீதிபதி. மேற்படி குற்றங்களுக்கு கடுந்தண்டனை விதிப்பார். ஒரு நாள் அவர் வீட்டில் சோதனை. ஆயிரக்கணக்கான நீலப்படங்கள். கையோடு கையாக கைது செய்து விட்டார்கள். அமெரிக்காவில், cybercrime police உடனேயே, கத்தியும் கபடாவுமாக வீட்டில் புகுந்து கைது செய்யக்கூடும். ஶ்ரீலங்காவில் வசித்து வந்த ஒரு பிரபல ஆங்கிலேய எழுத்தாளரை இங்கிலாந்து ராஜகுமாரன் (கிழம்!) வந்து பாராட்டுவதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஏன் தெரியுமா? அந்த பெரிசு Child pornographyயில் மூழ்கி ஞானஸ்நானம் செய்வதால். ஆனால் அவரை கைது செய்யவில்லை, பல வருடங்களாக. இந்தியாவில் இந்த வக்ரமான மனோவியாதி மிகவும் பரவலாக இருந்தாலும், தமிழனின் நாகரீகத்தில் ஒளிந்து கொண்டிருந்தாலும், சர்வம் மர்மமயம். இது ஒழிக.

எதற்கெடுத்தாலும் நாமும் கோர்ட்டாரை அணுகுகிறோம்; அவர்களும் மனமுவந்து தீர்வு அளிக்கிறார்கள். இந்த வக்ராதிபதிகளை தண்டிக்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்திய கோர்ட்டார் மிகவும் மன உளைச்சல்களுக்கு ஆளாகி, இதை அசிங்கம், சமுதாயத்தின் நன்னெறிக்கும் அபாயம் என்று கூறினர். நீதிபதி மிஸ்ரா அவர்கள்,

‘…பேச்சுரிமையும், விட்டு விடுதலையும் கட்டுப்பாடற்றவை அல்ல. அரையணா சர்ச்சைகளும், கோர்ட்டின் எல்லை சர்ச்சைகளும் குறுக்குசால் ஓட்டக்கூடாது..’

என்று அச்சுறுத்தினார். மத்திய அரசு பொருத்தமான சட்டங்கள் இயற்றவேண்டும் என்ற நீதிபதிகள், அந்த அரசிடமிருந்து ஒரு விளக்கம் கேட்டு ஆணையிட்டனர். கவின்கலைக்கும், வக்கிரபுத்திக்கும் வித்தியாசம் உண்டு என்ற அவர்கள், அவற்றை பகுத்து அறிவது கடினம் என்றனர்.

படிப்பினை:

டாக்டர் தேவி ரஜப் அவர்கள் நாசகார பன்முகங்களை ஒழிப்பதில் கவனம் செலுத்தாமல், வீண் சிந்தனைகளிலும், காழ்ப்புணர்ச்சியிலும் காலம் கடத்துவதால் இளைய சமுதாயம் மாபெரும் தவறு செய்கிறது; கடமையிலிருந்து நழுவி விடுகிறது; சமுதாய சீர்குலைப்பு தழைவிட்டு வளர்கிறது என்பதை எடுத்துரைத்து விட்டார். அதை நாம் ஊன்றி கவனித்து, நமது சம்பிரதாய சண்டைகளிலிருந்து (பாட்டியின் மொட்டை, பார்ப்பன துவேஷம் போன்ற சில்லறை மாஜி தாவாக்கள்: அதெல்லாம் செத்த பாம்பு, மேடம். Child pornography ஒரு கட்டுவிரியன்: அடுத்து வருவது கருநாகம். ) விடுதலை பெற்று ஆக்கப்பூர்வமான சமுதாய நிவாரணங்களுக்காக உழைக்க வேண்டும். சமுதாயத்தின் விரோதி சமுதாயம் தான் என்பது கசப்பான உண்மை. சமுதாயத்தின் பின்னடைவை தடுத்தாட்கொண்டு முன்னேற்றங்களை கொணரவதும் சமுதாயம் தான் என்பது இனிப்பான உண்மை.
இனி உங்கள் பாடு.
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://forrestduba475.files.wordpress.com/2011/02/child-pornography.jpg
உசாத்துணை:
© The Hindu


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, February 25, 2016

‘இன்னம்பூரான் பக்கம்’- 1சமுதாயமும், நீயும், நானும், அவரும்


‘இன்னம்பூரான் பக்கம்’- 1


Friday, February 26, 2016, 5:17

பிரசுரம்: வல்லமை: 26 02 2016
சமுதாயமும், நீயும், நானும், அவரும்

‘உலகெங்கும் காணக்கிடைக்கும் இன்னல்களுக்கு தீர்வு காணமுடியவில்லையே; அவற்றின் சீற்றத்தைக் குறைக்கவும் கூட முடியவில்லையே’ என்று அங்கலாய்க்கும் தென்னாப்பிரிக்க சிந்தனையாளர் டாக்டர் தேவி ரஜப் அவர்கள் இளைய சமுதாயம் வீண் சிந்தனைகளிலும், காழ்ப்புணர்ச்சியிலும் காலம் கடத்துவதை கண்டு வருந்துகிறார். அது, சமூக விரோதிகளின் நாசகார பன்முகங்களை கண்டுகொள்ளாததால் விளையும் அவலங்களை தடுப்பதை, குலைக்கிறது என்கிறார் (Confluence: Feb 2016). அத்தருணம் ஒரு ஹிந்து மெய்யறிஞர், ‘இந்த மதமோ, அந்த மதமோ, எந்த மதமாயினும், (நாத்திகத்தின் பல உட்பிரிவுகள் உட்பட) அதன் விசுவாசிகள் தங்கள் நம்பிக்கை மட்டுமே உண்மை என்று அடித்துக் கூறுவதால் அபாயம் ஏற்பட்டுவிடுமே என்று அஞ்சுகிறார். அவர் விடுத்த எச்சரிக்கை: மனிதம், சுதந்திர உலகம் ஆகியவற்றை காப்பாற்ற, எந்த விதமான மதாபிமானத்தையும் புறக்கணிக்காமல், ’ அப்பா! இதற்கு கடவுளின் துணை நாடாதே (Not in God’s name!) என்றதை வழிமொழிகிறார்.

உலகசமுதாயம் பெரிது; கணக்கற்ற வாழ்வியல்கள். சற்றே சிறியதான தேசாபிமான சமுதாயமும் அப்படித்தான் என்றாலும், நாட்டுப்பற்று ஒரு தொப்பிள் கொடி. இந்தியா இதற்குரிய உதாரணம். அதன் பல பகுதிகள்- அருணாச்சல பிரதேசத்திலிருந்து ஆண்டிப்பட்டி வரை- இமாலயத்திலிருந்து திருவிதாங்கூர் வரை, தனது தனித்துவ சமுதாய பண்புகளையும், இந்திய கலாச்சாரத்தை போற்றும் வகையிலும் இயங்கி வருகின்றன. மனித இனம் என்பதால் முரண்களுக்கு பஞ்சம் இல்லை.

உலகெங்கும் சமுதாய அநீதிகள் காலம் காலமாக கோலோச்சுவதும், அவை தோன்றி மறைவதும் கண்கூடு. ஆனால், மேல்மட்டம் கண்களை மூடிக்கொள்வார்கள். ஆஃப்ரிக்க நாடுகளில் பெண்கள் தாழ்த்தப்படுவதும், துன்புறுத்தப்படுவதும், பழங்குடி சண்டைகளும் காணக்கிடைக்கின்றன. நான் பட்டியலிட்ட அவலங்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏகபோக உரிமையல்ல. நான் மற்ற மாநிலங்களிலும் கண்டிருக்கிறேன். டில்லியின் மேல்மட்டத்தில், தலைக்கூத்தல், (முதியவர்களை 26 வகைகளில் ஒன்றில் கொன்று விடுவது) பெண்சிசுவதை, கந்து வட்டி, கட்டப்பஞ்சாயத்து ஆகிய நான்கு அவலங்களும், மற்றும் பல சமூகவிரோதங்களும் பரவலாகத்தான் இருந்தன, இருக்கின்றன. சொத்து களவாடவேண்டி, செல்வந்தர்கள் வீடுகளில் தலைக்கூத்தல் மாதிரி முதியவர்கள் குறி வைக்கப்பட்டது உண்டு. உசிலம்பட்டி சிசுக்கொலையை விட, டில்லியில் அதிகம். 1965 -1990களில் ரயிலில் வந்தால், இருபக்கமும் செக்ஸ் டெட்டர்மினிஷன் விளம்பரங்கள் . மெத்தப்படித்த கொலைகார டாக்டர்கள் தான், சட்டத்தை அவமதித்து, இன்றைக்கும் சேலத்தில் கூட சிசு வதை செய்திருக்கிறார்கள், அரசு விளம்பரங்கள் அலறும் போதும். இத்தனைக்கும் ஏற்கனவே தண்டிக்கப்பட்டவர்கள். சில மாநிலங்களில் கந்துவட்டி கொடுக்கமுடியமால் தற்கொலைகள் இன்று கூட நடக்கின்றன. தமிழ் நாட்டில் ஒரு பிரபல செல்வந்தர் கூட தற்கொலை செய்து கொஞ்சம் பழைய செய்தி. பீஹார், உத்தர் பிரதேஷ் கட்டப்பஞ்சாயத்துக்கள் உயிர்க்கொல்லிகள். ஒடிஷாவின் நெற்களஞ்சியமான காலகண்டியில் ஏழை வயிற்றில் மண்.

நான் பாலபருவத்தில் கண்டு கலங்கிய வறுமையின் பூதாகாரம் யாருக்கும் புரியவில்லை. அரைப்பட்டினியில் ஐம்பது நாட்களாவது வதங்கியவர்களுக்குத் தான் அதன் வலி புரியும். நான், சொந்த அனுபவத்தாலும், நாடு முழுதிலும் பணி புரிந்திருந்ததாலும், கிராமங்களுக்கு அடிக்கடி செல்லவேண்டி இருந்ததாலும், இவற்றை அறிவேன்.

இந்தியாவில் ஒரு புரட்சி வந்தே தீரும் என்று, இந்தப் பின்னணியில் பலதடவை எழுதியிருக்கிறேன். எனது ஆசானாகிய தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களும், நானும் பல கோணங்களில் மார்க்சிஸ்ட் தான். இதை படித்த பின் புரியும்.

‘…புரையோடிப்போன சமூகத்தை மொத்தமாய் புரட்டிப்போடுவதற்குப்பெயர் தான் புரட்சி…83 ஆயிரம் சதுரமைல் பரப்பளவு கொண்ட ஹைதராபாத் சமஸ்தானத்தில் மூன்று மாவட்டங்களின் நிலம் பத்துப்பதினைந்து சுவான்தார்களுக்குச் சொந்தம். விஷ்ணுப்பூர் தேஷ்முக்: 40 ஆயிரம் ஏக்கர்: சூர்யாபேட் தேஷ்முக்: 20 ஆயிரம்: கல்லூர் தேஷ்முக் ஒரு லக்ஷம்…இந்த பண்ணையாளர்கள் விவசாயத்தொழிலாளிகளை நாயினும் கேவலமாக நடத்தினர். கூலியே இல்லாமல் வேலை கட்டாயம். ஐந்து பேருக்குக் கொடுக்கும் கூலி ஒரு ஆள் சாப்பிடக்கூட காணாது. கூலி கேட்டால் கடன். மன்னிக்கவும் குட்டி வட்டி, கந்து வட்டி; பல்லக்குத்தூக்க வேண்டும்; குதிரை வண்டி முன்னால் ஓடவேண்டும்; சமையல், சலவை, நாவிதம் எல்லாம் இலவசம். பண்ணையாருக்கு கால் அமுக்கி விடவேண்டும்; விருப்ப நாயகிகள் தரவேண்டும், மனைவிகளை…அதில் பந்தாட்டம் உண்டு. வரதக்ஷிணையில் அடிமைப்பெண் உண்டு. (கொஞ்சம் சுருக்கினேன், பெரும்பாலோர் இத்தகைய கசப்பு செய்திகளை படிக்கமாட்டார்களே என்று.) (ஆதாரம்: ஜூனியர் விகடன்: 3.2.16)
மேற்படி மனித உதாசீனங்கள் தஞ்சை டெல்டாவில்- வாண்டையார், வடபாதி மங்கலம், சாம்பசிவ அய்யர் (கொஞ்சம் நல்லவர் என்பார்கள் விவசாயிகள்), குருதி வெள்ளம் எல்லாவற்றிலும் உண்டு. நான் வாழ்ந்த மதுரை பக்கத்திலும் உண்டு, கொஞ்சம் டிஃஃபெரண்ட் பார்முலா. சொன்னால் பொல்லாப்பு. சாதியை சாடுகிறான் என்பார்கள். ஆனாலும் ஏழைக்கு சாவு மணி தான். ஏன் தலைக்கூத்தல் நடக்காது? முதலாளியை கொல்லமுடியாது. அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் போட ஒரு சோறு இல்லை. பொட்டுத்துணி இல்லை. பசங்க வள வள. எல்லாம் பட்டினி, அழுகை. மருத்துவம் கேள்விப்படாத உண்டு. ஏழ்மை இல்லை; வறுமை இல்லை; வரட்சி இல்லை; இல்லாமை, ஐயா.

எழுபது வருடங்களுக்கு முன்னால் நான் கண்ட அவலங்கள் இன்றும் நடக்கின்றன, தமிழ்நாட்டில், நடத்தப்படுகின்றன. சமுதாயத்தின் விரோதி சமுதாயம் தான். அதையெல்லாம் விட்டு விட்டு…இதற்கு மேல் எழுத இன்று சக்தியில்லை.
-#-
சித்திரத்துக்கு நன்றி:




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, February 23, 2016

தற்காலிகமாக.

மறுபடியும் எழுதணும் இல்லை. யாரும் வாசிப்பதாக தெரியாததால், தற்காலிகமாக, என் உடல் நிலையையும், மருத்துவர் ஆலோசனையையும் கவனித்தில் கொண்டு, நிறுத்தியிருந்தேன்.

Thursday, February 18, 2016

கனம் கோர்ட்டார் அவர்களே [25]

கனம் கோர்ட்டார் அவர்களே [25]


இன்னம்பூரான்
Wednesday, February 17, 2016, 21:45

பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=66455

இல்லறம் வாழ்வியலில் மிகவும் முக்கியமானதாக அமைந்திருப்பதாலும், அது பெரும்பாலோருக்கு உகந்ததாக அமைந்து இருப்பதாலும், ஆண்-பெண் உறவு போற்றப்பட்டதாக அமைகிறது. இங்கு திருமணவைபவம் முன் நிறுத்தப்படவில்லை. நற்றிணை போன்ற சங்கப்பாடல்களில் அந்தரங்க உறவு மேன்மைப்படுத்தப்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் ஒருவனும் ஒருத்தியும் வாழும் வாழ்வில் காதல் – ஆணழகன் – பெண்ணரசி – உறவு என்பன அகம் எனப்படும். அகப்பொருளின் பாடு பொருள் ஆண் பெண் என்னும் இருபாலாரது காமம் ஆகும். காமம் என்பது உலக உயிர்களுக்கெல்லாம் உரியது. தேவருலகங்களில் செங்கோல் ஆட்சி செலுத்துகிறது. உடைமையது இன்பம் தருவது. இது குறித்துத் தொல்காப்பியனார் இவ்வாறு சொல்கின்றார்.
எல்லாஉயிர்க்கும் இன்பம் என்பது

தானர்ந்து வருஉம் மேவற்றாகும்.
-தொல்காப்பியம் பொருளதிகாரம் – நூற்பா 27

தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் அகம் புறம் குறித்து வரையறுத்துக் கூறுகின்றார். அகம் பற்றிக் கூறும் போது ‘ஒத்த அன்பான ஒருவனும் ஒருத்தியும் கூடுகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம். . .’ என்றுதான் அவர் ஆரம்பிக்கின்றார். நாம் தான் அதன் காதில் ‘சிற்றின்பம்’ என்ற பூ சூட்டி விட்டு, தட் தடாவென்று தடை விதித்து விட்டு, ரகசியமாக, தடையை மீறுகிறோம். தொன்மை காலங்களிலிருந்து தற்காலம் வரை, தேவ வாக்குக்கள், அரசாணைகள், பிரகடனங்கள், சட்டங்கள் ஆகியவை ஆணும் பெண்ணும் பிரிந்தால் ஏற்படக்கூடிய குழந்தைகளின் தவிப்பு போன்ற சிக்கல்களை அலசி, ஆராய்ந்து, சில வழிமுறைகளை அமல் படுத்துகின்றனர்.

சில உண்மையான நிகழ்வுகள்:

மீனுவுக்கும் சீனுவுக்கும் 1978ல் திருமணம். பத்து வருடங்களில் மூன்று குழந்தைகள். அந்த காலகட்டத்தில், தான் இஸ்லாமியர் ஆகிவிட்டதாக சான்றுகள் காட்டி, மற்றொரு பெண்ணை மணந்து கொண்டான், சீனு.
அதே வருடத்தில் [1988] சீதாவை மணந்த கிஷோர், அவளை துன்புறுத்தினான். மூன்றே வருடங்களில், மற்றொரு பெண்ணுடன் உடன்போக்கு சென்று, பின்னர் இஸ்லாமியராக மதம் மாறி மணந்து கொண்டான்.
1992: கமலா என்போம், அவருடைய பெயரை, இங்கு. அவர் தாயகம் சென்று திரும்பினால், அவரது எட்டு வருட தாம்பத்தியம் நட்டாற்றில். அவரது கணவன் சந்திரன் விவாகரத்து வேண்டும் என்றான். திக்கிட்டுப்போன கமலாவின் மனம் உடைந்து விட்டது. அழுதுகொண்டே , மறுத்து விட்டாள். ஒரு வருடம் பொறுத்த பின், சந்திரன் தான் இஸ்லாம் மதத்தைத் தழுவி விட்டதாக கூறி, சாக்ஷியம் காட்டி, வேறு ஒரு பெண்ணை, புதிய மதம் அனுமதிக்கிறது என்று, மணம் செய்து கொண்டான்.
நீங்கள் நீதிபதியாக இருந்தால் என்ன தீர்வு சொல்வீர்கள்? மூன்றும் நடந்து விட்ட சம்பவங்கள். தீர்வும் வழங்கப்பட்டது. அது பின்னர்.
இரண்டு துணை வினாக்கள்: [1] சட்டவிரோதமாக பல இருதாரத்தினர் சகஜமாக உலவுகிறார்கள். சட்டம் அவர்களை என்ன செய்யும்?
[2] குஜராத்தில் மைத்ரீகரார் என்ற காந்தர்வ விவாகம், காண்ட்றாக்ட் என்ற முறையில், ‘தொட்டால் உண்டு; விட்டால் போச்சு.’ என்ற நடைமுறையில் இருந்தது. சட்டம் அவர்களை என்ன செய்யும்?
-#-
சித்திரத்துக்கு நன்றி:


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, February 14, 2016

கனம் கோர்ட்டார் அவர்களே [ 24]

கனம் கோர்ட்டார் அவர்களே [ 24]

இன்னம்பூரான்
13 06 2016

பிரசுரம்:http://www.vallamai.com/?p=66357

Monday, February 15, 2016, 5:36


சட்டம் இயற்றுவது சட்டசபை; சட்டத்தை நிர்வகிப்பது நிர்வாகம்; சட்டத்தை மேன்மை படுத்துவது நீதிமன்றம். மூன்றும் இணக்கத்துடன் இணைந்து செயல்படுவது, அரசமைப்பு. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. நடைமுறையில் நுட்பங்களும், சிக்கல்களும், வழுக்களும், துணைமன்றங்களும், அவற்றின் நுட்பங்களும், சிக்கல்களும், வழுக்குகளும் ஊடே அமைந்து, கூட்டுறவாகவோ, ஊடுருவலாகவோ செயல்படுவதால், சில சமயம் திகைத்து நிற்கிறோம். அவரவர் அபிப்ராயங்களை கட்டவிழ்த்து ஜல்லிக்கட்டுகிறோம். இது நிற்க.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போ லமைந்தொருபாற் 
கோடாமை சான்றோர்க் கணி. [திருக்குறள் 118]
‘சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் -துலாம் போல- அமைந்து ஒரு பால் கோடாமை சான்றோர்க்கு அணி.’ -பரிமேலழகர் உரை: வை.கோவிந்தன் பிரசுரம்.
அத்தகைய சான்றோர் பணி புரிந்தால், நீதிமன்றங்கள் சட்டத்தை மேன்மைப்படுத்த முடியும். நடுவு நிலையில் நின்று பகர்ந்த தீர்வுகள் வாழ்வியலில் நலம் தரும் நடைமுறைகளை சாத்தியப்படுத்த முடியும். பற்பல படிநிலைகளில் நின்று அளித்தத் தீர்வுகளில் குற்றம் காண்பது, மனித இயல்பு. படிநிலை உயர உயர, விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் போது, தீர்வுகள் மாற்றப்படலாம்; ரத்து செய்யப்படலாம்; மாற்றுக்கருத்துக்கள் தலையெடுக்கலாம்.
இன்றைய பதிவில் இரு கோர்ட்டார்கள் ஆஜர். தீர்வுகளின் சுருக்கத்தைப் படித்து விட்டு, நமது தீர்வுகளை அவரவர் மனதில் உலவ விடலாம். நீதிபதிகள் மீது அவதூறு செய்யக்கூடாது. ஆனால், பழிச்சொற்களை உதறாமல், தீர்வுகளை நாகரீகமாக அலசலாம். விருப்பம் உள்ளவர்கள் அலசுக.
I. தடை.:

எனக்குத் தெரிந்த நாள் முதல் சபரிமலையில் சபரிக்கு மோக்ஷம் கிடையாது. பெண்ணினம் தள்ளுபடி. சபரிமலை தேவஸ்வம் வாரியம் ஒரு ஆணுலகம். ‘சபரிமலைக் கோயிலுக்குள் நுழைய மாலையிட்டுக் கொண்டு, இருமுடி தாங்கி செல்லும் பக்தர்கள் கடும் விரதங்களையும் கடினபாடுகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது… நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்தத் தடை பக்தர்கள் மனதில் உட்பொதிந்துள்ளது… கடவுள் ஒரு துறவி, அவரை வழிபடச்செல்லும் பக்தர்கள் ‘சுவாமி’ என்று அழைக்கப்படுகின்றனர்.’ என்ற வாதங்கள் எடுபடவில்லை.
பெண்களை தடை செய்வதை நீக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தவர்கள், சட்ட மாணவர்கள். அவர்கள் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் மிகவும் பிரபலமான பெண்ணிய வழக்கறிஞர்: தாய்க்குலம். அவர் “பெண் பிரம்மச்சாரிகளும் இந்த உலகத்தில் உள்ளனர…அனைத்து ஆசைகளையும் துறந்து வாழ்வது ஆண்களுக்கு மட்டுமே உரியது அல்ல. நமது அரசியல் சாசன சட்டப்பிரிவு 25 அனைத்து மனித இனத்துக்கும் பொதுவான மத ஸ்தலங்களை திறந்து விடுங்கள் என்கிறது. நாங்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களல்லர் என்று கூற வருகிறீர்களா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.
நீதிபதி தீபக் மிஸ்ரா அவர்கள் எழுப்பிய வினாக்கள்:
ஆன்மிகம் முழுதும் ஆண்களுக்கு மட்டுமே உரித்தானதா? மதம் என்ற புலத்தில் பெண்கள் ஆன்மிக நிலையை அடைய லாயக்கற்றவர்கள் என்று கூறுகிறீர்களா?
உங்கள் தாயை கோயிலுக்குள் நுழைய தடை விதிப்பீர்களா?
அவருடைய அறிவுரை: “வழிபாட்டு பண்பாட்டில் ஒரு மையமான குழு இருக்கும். இதில் பிறரை வெளியாட்கள் என்று தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கும். ஆனால் மதம் என்பது முழுமைத்துவத்தை வலியுறுத்துவது, அதுதான் சனாதன தர்மம், பால், சாதி, இன வேறுபாடின்றி அனைவரையும் உள்ளடக்கியதே சனாதன தர்மம்”.
நீதிபதி மிஸ்ரா, “அரசியல் சாசனத்தில் வலியுறுத்தப்படும் அடிப்படை உரிமையான சமத்துவம் என்பதை மீறி இந்த தடை மரபு நீடித்து நிலைக்கப் போகிறதா? வேதங்களிலும், உபநிடதங்களிலும் பெண்/ஆண் பாகுபாடு இல்லையெனும் போது, வரலாற்றில் எந்த காலக்கட்டத்தில் இந்தப் பாகுபாடு தொடங்கியது என்று கூறுங்கள்” என்று வலியுறுத்தினார்.
உத்தரவு 1: தடைக்கு ஆதரவான ஆயிரமாண்டு கால நிரூபணத்தை ஆறு வாரங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
உத்தரவு 2: இந்த வழக்கிற்கு சட்ட, அரசியல் சாசன மற்றும் ஆன்மீக தளங்களில் ஆழமான ஆய்வு தேவைப்படுகிறது என்பதால் மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரன் என்பவரை நீதிமன்ற நடுநிலை அறிவுரையாளராக நியமனம் செய்கிறேன்.
யான் கூற விழைவது: இப்போது பம்பா நதியின் நட்டாற்றில் நிற்கிறோம்.
கேள்விக்கு என்ன பதில்?
-#-
II. உடை:

அடுத்து வருவது:

ராமநாதபுரம் மாவட்டம், உத்தர கோசமங்கையில் 3,300 ஆண்டுகள் பழமையான மங்களநாத சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் மூலவர் மரகத நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடன் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். ஆருத்ரா தரிசனம் அன்று மட்டும் மரகத நடராஜர் சந்தனக் காப்பு இல்லாமல் காட்சியளிப்பார்.
வழக்கறிஞர்கள் இல்லாமல் வழக்கா? ராமநாதபுரம் வழக்கறிஞர் முருகன் அவர்களுக்கு ஒரு வேட்கை [இன்னம்பூர் ஶ்ரீநிவாசர் கட்டாரி அணிந்துள்ளாரா? என்று தூக்கம் தொலைத்த சம்பத்துப் போல!]: இந்த நடராஜர் சிலை உண்மையில் மரகதத்தால் செய்யப்பட்டதா? இல்லையா? என்று அவர் தூக்கத்தைத் தொலைத்தது மட்டுமல்லாமல், [கண்ணகி சிலம்பை உடைத்தது போல]சிலையை உடைத்து மரகதமா இல்லையா? என்பதை ஆய்வு செய்ய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும், வழக்குத் தொடர்ந்தார்.
இதை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
“அனைத்து மத நம்பிக்கைக ளையும் அறிவியலை பயன்படுத்தி ஆராய்ந்து கொண்டிருக்க முடி யாது. சில நம்பிக்கைகளை நம்பிக்கையாகவே இருக்க விடுவது நல்லது. மனுதாரர் மரகத நடராஜர் சிலை உண்மையில் மரகத்தால் செய்யப்பட்டது என நம்பினால் நம்பலாம். அவருக்கு அந்த நம்பிக்கை இல்லாவிட்டால், அவர் கோயிலுக்கு செல்வதை நிறுத்திக்கொள்வது நல்லது.
மனுதாரர் மரகத நடராஜர் சிலையை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மனுவை தாக்கல் செய்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் ஒரு சிலையை உடைக்காமல் அந்த சிலை குறித்து ஆய்வு செய்ய முடியாது. அப்படி சிலை உடைக்கப்பட்டால் அந்த சிலை வழிபாட்டுக்கு தகுதியற்றதாகி விடும். மனுதாரர் இப்படிப்பட்ட தவறான உள்நோக்கத்துடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
உத்தரகோசமங்கை கோயி லுக்கு கோடிக்கணக்கான பக் தர்கள் வருகின்றனர். அவர்களின் நம்பிக்கையை கெடுக்கும் செயல்களை செய்வது சரியல்ல. மரகத நடராஜர் ஆண்டுதோறும் சந்தனக் காப்பில் இருப்பதை பெரிய பிரச்சினையாக்கி, அதை சரிசெய்ய சிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது.
இந்த மனுவை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். ஆனால், சுய கட்டுப்பாடு காரணமாக மனுதார ருக்கு அபராதம் விதிக்காமல் விட்டுவிடுகிறோம். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது “
இனி உங்கள் பாடு, மரகத நடராஜர் பாடு, முருகன் பாடு. அவர் உச்சநீதி மன்றத்துக்கு விண்ணப்பம் செய்வாரானால், அவருக்கு நீங்கள் பரிந்துரை செய்யும் வாதங்கள் யாவை?
என் தம்பிடி கருத்து: கனம் கோர்ட்டார் அபராதம் சிறிதளவாவது விதித்திருக்கவேண்டும்.
-#-
உசாத்துணை, இரவல் நன்றி, காப்புரிமை நன்றி: தி இந்து: 12 02 2016
சித்திரங்களுக்கு நன்றி:
இன்னம்பூரான்