Monday, June 1, 2015

அன்பும் அழகும் ஆராதனையும்

Innamburan S.Soundararajan

அன்பும் அழகும் ஆராதனையும்
11 messages

Innamburan S.Soundararajan Fri, Oct 4, 2013 at 5:47 AM


அன்பும் அழகும் ஆராதனையும்

இன்னம்பூரான்
Unknownமஹாகவி பாரதியார் புதுவை மாந்தோட்டம் ஒன்றில் அமர்ந்து ‘குயில் பாட்டு’பாடினார். அந்த தோட்டம் மறைந்து விட்டது. குயில் என்னமோ பறந்து விட்டது. பாரதியார் அமரராகி விட்டார். பாடல் தங்கிவிட்டது. மறையாது. நமதுநினைவலைகளும் எங்கெங்கோ சஞ்சாரம் செய்பவை.
அவை பேசத்தொடங்கி விட்டன.
அழகிய சோலை. மலர்க்கொடிகள். பூத்துக்குலுங்கும் செடிகள், காயும் கனியுமாக தாவரமயம். அமர்ந்திருந்த கவிஞருக்கு ஆனந்தமாக இருந்தது. ஒட்டுமாங்கனி தொங்கும் கைக்கெட்டிய கிளையில் ஒரு பஞ்சவர்ணக்கிளி வந்து அமர்ந்தது. கொஞ்சம் மெளனம். அது மெல்லிய குரலில் இசை பாடத் தொடங்கியது. அமரிக்கையாக அவர் கேட்டுக்கொண்டிருந்தார். சிறகுகள் அடித்துக்கொண்டன. தன்னழகை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த கிளியிடம் பேச்சுக்கொடுக்க ஆசை, கவிஞருக்கு. காத்திருந்தார்.
***
என்ன பார்க்கிறாய்?
உன் அழகு என்னை கட்டி இழுக்கிறது.
அதற்குத் தான் என்னை படைத்தார்.
நான் உன்னை ஆராதிக்கவேண்டும் என்று தான் விரும்பினார், இல்லையா?
பூஜை சாமக்கிரியைகள் எல்லாம் தயாரா?
அவள் தன் அழகுக்கு மெருகேற்றிக்கொண்டிருந்தாள்.
இவருக்கோ லாஹிரி ஏறிக்கொண்டிருந்தது.
பஞ்சவர்ணம்! உன்னை ஆராதித்து ஒரு கவிதை படைக்கப்போகிறேன்.
ஓ! அப்படியா! நான் லாவண்யா. என்னழகைப்பார்.
அவள் ஒய்யாரமாக தன் கழுத்தை ஒடித்துக்கொண்டாள்.
இசை இன்பவெள்ளமாயிற்று.
சற்றே பறந்து மற்றொரு கிளையில் அமர்ந்தாள்.
ஊம்! கவிதை எங்கே?
கவிஞர் கவிதை இயற்றலாம் என்று எதுகை, மோனை தேடும்போது…
அப்பனே! எனக்கு சந்தேஹமாக இருக்கிறது.
உன் சொல்லணியில் என் இசை தொனிக்குமோ?
இல்லை, கண்ணே.
சரி, போகட்டும் என் பஞ்சவர்ணங்கள் அழகை வீசி அடிக்குமே. அது வருமோ?
எப்படிம்மா அது இயலும்?
அதெல்லாம் போகட்டும். நான் சிறகடித்து, றைக்கை விரித்து உயர உயர பறப்பேனே?
அதுவாவது வருமோ?
என்னால் முடியாத காரியம், கண்ணே. எந்த கவிஞனும் இவற்றை பற்றி எழுதலாம்.
சொல்லணியில் அவற்றை தத்ரூபமாக எப்படி புகுத்து அமைக்க இயலும்?
அப்படியானால் கவிதையில் நான் எப்படி இருக்கமுடியும்?
கேலியாக சிரிக்கிறாள்.
இல்லை அழகியே. உன் மேல் எனக்கு எத்தனை அன்பு தெரியுமா?
என்ன பேச்சு இது?
சொல்லணிக்கும் அன்புக்கும் என்ன சம்பந்தம்?
பஞ்சவர்ணம் பறந்தாள், உயர, உயர.
களைத்துப்போன கவிஞர் கவிதை மறந்தார்; வீடு திரும்பினார்.
மனைவி கேட்டாள்.
என்ன செய்தீர்? ஒளியும், களைப்பும் கலந்து உள்ளனவே.
அன்புடன் அழகை ஆராதித்தேன்.
எது பறந்தது?
எது மறைந்தது?
எது நிறைந்தது?
தெரியவில்லை.
***
எனக்கு எழுத வராது. ஒரு தாக்கம். ஹரிவம்சராய் ‘பச்சன்’ அவர்கள் எழுதிய 16 வரி கவிதை ஒன்றை படித்ததின் தாக்கம். மையக்கருத்து அவருடையது. தழுவல் என் பொறுப்பு. ஆம். அவர் அமிதா பச்சனின் தந்தை தான். அதற்கும் அவருடைய ‘அன்பு’ என்ற கவிதைக்கும் என்ன சம்பந்தம்?
பிரசுரம்: வல்லமை:Friday, October 4, 2013, 5:19










திவாஜி 
great!




shylaja Fri, Oct 4, 2013 at 8:34 AM

மிக அழகு.  அதிலும் பாரதியை  முதலில் கொண்டுவந்து ஆராதனையை ஆரம்பித்தீர்களே அது  உயர்வு!



coral shree 
அன்பின் இ ஐயா,

அருமை! மிகவும் இரசித்துப் படித்தேன். நன்றி.

அன்புடன்
பவளா


Tthamizth Tthenee 
அற்புதமான​  சொல்லாட்சி
 
அற்புதமான  கற்பனை
 
அழகு கொஞ்சுகிறது கிளியிடமும்   உம்மிடமும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
[Quoted text hidden]

Subashini Tremmel 

எனோ முன்னர் இசையாசிரியரியரிடம் கற்றுக் கொண்ட .. 
பச்சைக் குழந்தையடி கண்ணின் பாவையடி சந்த்ரமதி 
பாடல் திடீரென ஞாபகத்திற்கு வந்தது. அழகின் ஆராதனை தொடரட்டும்.

சுபா



Nagarajan Vadivel 

2013/10/4 Subashini Tremmel <ksubashini@gmail.com>
எனோ முன்னர் இசையாசிரியரியரிடம் கற்றுக் கொண்ட .. 
பச்சைக் குழந்தையடி கண்ணின் பாவையடி சந்த்ரமதி 
பாடல் திடீரென ஞாபகத்திற்கு வந்தது.

மிஞ்ஞானி​

[Quoted text hidden]

Innamburan S.Soundararajan Fri, Oct 4, 2013 at 9:32 PM
T
சொல்லவேண்டியதை சொல்லி விடுகிறேன், ஸுபாஷிணி. 
1945:
அண்ணல் காந்தியின் ஆணைக்குட்பட்டு புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கால்பந்து விளையாடிய தூசிப்படலத்துடன், புரோகிதர்கள், குடும்பத்தலைவிகள் கூட ஹிந்தி படித்த போது, என் மனதை உலுக்கிய கவிதை இது. நுட்பம் புரியவில்லை.ஆனால், பிற்காலம் சாந்தி நிகேதனில் சம்ஸ்கிருதம் சொல்லிக்கொடுத்த ஏ.எஸ் அவர்களின் பாடமே தனி முத்திரை கொண்டது. நான் ஹரிவம்சராயின் மதுஷாலா என்ற கவிதையின் மீது மனதை பறி கொடுத்தேன்.

2013:
என் தங்கையின் பேரனுக்கு அதே பரிக்ஷை அதே பாடம். என் 1945ம் வருட நினைவு உருப்பெற்றது, உமக்கு சந்திரமதி பாடல் நினைவில் வந்த மாதிரி. ஊக்கம் கொடுத்த நண்பர்களுக்கு எல்லாம் நன்றி.

பார்வதி இராமச்சந்திரன். 
சமுத்திரத்தில் கால் நனைத்துத் திரும்பிய பின்னும் அலைகள் மனதில் ஓய்வதில்லை. அது போல் இந்தக் கவிதையும்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.



Innamburan S.Soundararajan Fri, Oct 4, 2013 at 9:39 PM
To: "vallamai@googlegroups.com"
நம்மடவர் தினமும் சமுத்திரத்தில் கால் நனைப்பவர் தானே. எவெரெடியூப்இன்னம்பூரான்

2013/10/4 பார்வதி இராமச்சந்திரன். <tsparu2001@gmail.com>
[Quoted text hidden]


Aadhiraa 
மிக மிக அருமையான பாரதி புகழ்.  
[Quoted text hidden]
அன்புடன்,
முனைவர். ப. பானுமதி 
(ஆதிரா முல்லை)

Sunday, May 31, 2015

நாளொரு பக்கம் 35

நாளொரு பக்கம் 35


Monday, the 30th March 2015

வாளை மீன் உள்ளல் தலைப்படலும், ஆள் அல்லான்
செல்வக் குடியுள் பிறத்தலும், பல் சவையின்
அஞ்சுவான் கற்ற அரு நூலும், - இம் மூன்றும்
துஞ்சு ஊமன் கண்ட கனா.
- திரிகடுகம் 7

இந்த செய்யுளின் உவமைகள் பாராட்டத்தக்கன. ஒன்று: பொருத்தம். இரண்டு: அழுத்தம். மூன்று: படிப்பினை. 

நோஞ்சானால் பயில்வானை தாக்குப்பிடிக்க முடியுமா? சிறுதுரும்பும் பல் குத்த உதவும். ஆனால், அதனால் குண்டாம்தடிக்கு ஈடு கொடுக்கமுடியாது. நல்லாதனார் கூறிய உவமை: உள்ளல் என்ற சின்ன பறவை வாளை மீனை எடுக்கமுடியாது. அதே மாதிரி, ‘சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான்’ செல்வந்தனாக இருந்தாலும் சான்றோர் அவையில் அஃஃறிணையான நன்மரம் தான். இதையெல்லாம் பார்த்தால், ஆழ்ந்த உறக்கத்தில் கண்ட கனவை ஊமையால் சொல்ல முடியாது என்ற உருவகம் நினைவுக்கு வருகிறது என்கிறார்.
தமிழில் உள்ள அறநூல்கள் ஒரே விஷயத்தைக்கூட சுவை கூட்டி, உவமான உவமேயங்களுடன், பல அணிகள் சேர்த்து, எப்படிப் பார்த்தாலும் உறைக்கும் படி உரைப்பது வழக்கம்.
-#-


சித்திரத்துக்கு நன்றிள் http://i.somethingawful.com/u/garbageday/2013/drew/ragesoap.jpg

நாளொரு பக்கம் 34

நாளொரு பக்கம் 34


Sunday, the 29th March 2015

सन्तप्तायसि संस्थितस्य पयसो नामापि न ज्ञायते
मुक्ताकारतया तदेव नलिनीपत्रस्थितं राजते ।
स्वात्यां सागरशुक्तिमध्यपतितं सन्मौक्तिकं जायते
प्रायेणोत्तममध्यमाधमदशा संसर्गतो जायते ॥

Saatveekam, Raajasam, Thaamasam are the three categories under which the people are labelled. All this depends on the company. A serene person can be turned into a hooligan by liquor. An upright and courageous householder may take to renunciation, as Lord Buddha did. The Prodigal Son may return to his father’s hearth, repenting his straying away into bad company. Many a permutation and combination of these three categories and sub-categeries are encountered daily by us.
The metaphor of water in this apt Subhashitham is non-pareil.  A drop of water on a hot iron evaporates so fast that you do not even get to see it. The same drop, well-rounded, shines beateously like a pearl on a lotus leaf. It turns into a genuine pearl indeed, if this tiny drop enters a seashell on the auspicious day of Svathi Nakshatra. 
-x-

Saturday, May 30, 2015

நாளொரு பக்கம் 32

நாளொரு பக்கம் 32

Thursday, the 26rd March 2015
“The Art is Ageless program focuses on individual well-being and the agelessness of human creativity.”
-Heidi Beyer: Presbyterian Manor:Farmington: USA

முதுமை, வயது என்ற எல்லையை கடந்து, இந்த பூவுலகிலேயே ஒரு அமரத்துவம் பெற்று விடுகிறது. பெரும்பாலோர் ஓய்வு பெற்றதுமல்லாமல், கடமைகளிலிருந்தும் விடுதலை பெற்றவர்கள். நோய் நொடி படுத்தினாலும், பொதுவாக எல்லாரும் ஒருவாறு சமாளித்துவிடுகிறார்கள். சிலருக்கு ஆலயம் செல்வது சாலவும் நன்று. மற்றும் சிலருக்கு தொல்லைக்காட்சி ஒரு டைம் பாஸ். அரசியல் இருக்கும் வரை, மதாபிமானங்கள்/அவமதிப்புகள் இருக்கும் வரை பட்டிமன்றங்களுக்கு நீடுழி வாழ்வு. கசமசாவின் சுவையே தனி!
கீர்த்தானரம்பம் இவ்வாறு இருக்கும்போது, பல முதியோர்களை அணுகமாட்டேன் என்கிறாள், நித்ரா தேவி. என்ன செய்யலாம் என்ற எண்ணம் தோன்றுங்கால், ஹைடி பேயர் சொல்வதை கேட்டு பயன் அடையலாம். மிஸெளரி மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில், அவர் மதபோதகர். அவ்வூரின் மையமே பாலின வன்முறை செய்த குற்றவாளிகளின் கூண்டு. பெரும்பாலோர் அங்கு ஊழியம் செய்பவர்கள். அத்தகைய பின்னணியிலும் முதியவர்களிடம் கலை ஆர்வம் வளர்க்க ஹைடி பேயர் உதவுகிறார். முதியோர் கலைக்காட்சிகளும், விழாக்களும், பரிசுகளும் அங்கு முதியோர்களின் வாழ்வில் நிறைவு கொணருகின்றன. இங்கும் சங்கீதம் இடம் பெறுவது மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள். 
கலையார்வம், இலக்கியார்வம், ரசனை, சிறார்களுக்கு பொருத்தமான போதனை எல்லாமே நிறைவு தந்து, இளமையை வரவழைப்பவை தான்.
-#- 

சித்திரித்துக்கு நன்றி: http://dmh.mo.gov/img/smmhc/sign5.jpg

Friday, May 29, 2015

நாளொரு பக்கம் 33

நாளொரு பக்கம் 33

Saturday, the 28th March 2015


“...He would do anything for you, and he could make you do anything for him...”
- Professor CNR Rao on JRD Tata
Elegantly brief, this eulogy to Jeh ( as JRD Tatq is known in inner circles) is bereft of flattery, rings true and comes from a high dignitary, not given to hyperboles. The quintessential human in Jeh could not have done more or could not have asked for less.  This is a leadership quality and is also  a good neighborly attribute. For a role model, we do not have look elsewhere.
These sterling qualities come ‘made easy’ for us, thanks to Jeh’s life, as lived in. A chat with a lonesome widow, a good turn to a disabled guy, mentoring a student from a downtrodded community, a wee bit of charity, all are possible for most of us. And, there are countless other ways of reaching out to one in distress. CNRR’s tribute to Jeh implies an aspect of good governance, exemplified by the Hawthorne Experiment, which was a way of life with the Tata School of Life.
‘Caring begets duty unbound’ is the edifice on which it is built.
-x-

நாளொரு பக்கம் 31

நாளொரு பக்கம் 31

Wednesday, the 25rd March 2015
अङ्गुष्टमात्र: पुरुषो मध्य आत्मनि तिष्टति
ईसानां भूतभव्यस्य न ततो विजुगुप्सते ॥

அங்குஷ்ட மாத்ர: புருஷ: மத்ய ஆத்மனி திஷ்டதி
ஈஸானம் பூதபவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே


தெய்வத்தின் குரல் எங்கும் ஒலிக்கும். அதன் வெளிச்சமே ஒளி. திருக்கோவிலூர் ரேழியில் முதலாழ்வார்களை நெருக்கியவன், அந்த நீக்கமற நிறைந்தவனாகிய தெய்வமே. ஆங்கிலத்தில் Omnipresent, Omniscient, Omnipotent என்பார்கள் அதே கருத்தை.

இதயம் எனப்படும் பெட்டகத்தே, கட்டைவிரல் அளவு இடைவெளிக்குள் ஒடுக்கிக்கொண்டு ஆனந்தமாக உறைவதும், அவனே. 

எல்லை அறிய இயலாத  ஆகாய வெளியில் விசாலமாக  விரிந்திருப்பதும் அவனே. பரம்பொருள் என்கிறார்கள்.

அனாதி காலம் முதற்கொண்டு, என்றென்றும் காலம், நேரம், நாள், கிழமை போன்ற 
கால அளவுகளை கடந்தவனாகிய  கடவுளை உணர்ந்து கொண்டுவிட்டால், அந்த  பாகியசாலிகள் தங்களை எதிலிருந்தும் காத்துக்கொள்ள முனைவதில்லை என்பதே இந்த கடோபனிஷத்  செய்யுளின் பொருள். 

தன்னையும் 
சுற்றத்தையும் பிரித்தறியாமல் 
தன்னுள்
இருப்பதே எங்கும் இருப்பது 
என்று உணர்ந்தபின் எதனிடமிருந்து எதை காப்பாற்றுவது? 
-#-

Thursday, May 28, 2015

நாளொரு பக்கம் 30

நாளொரு பக்கம் 30 





Friday, the 27th March 2015
Use the talents you possess, for the woods would be a very silent place if
no birds sang except the best.
-Henry van Dyke, poet (1852-1933)
Henry van Dyke was one with Nature, thanks to his upbringing. Reputed to be one of the greatest preachers in New York, he was a born leader, who ‘energetically trampled through forest trails, fished at trout brooks, scrambled wooded mountains, and took virtual ownership of nature’.
Let us, therefore, listen to his sage advice with rapt attention. It is alright to pursue Excellence, but lesser attainments also should be given due recognition. For that, each one one of us must do what we can do as our best contribution. Henry van Dyke uses an incomparale simile. All birds sing, some like the koel sing divinely. The beautiful peacock has a grating and unpleasing voice. If we wish only for the koel’s cooing, the silent forest will hardly be welcome to us.
In sum, உன்னால் முடியும் தம்பி.
-x-









இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, May 26, 2015

நாளொரு பக்கம் 29

நாளொரு பக்கம் 29

Tuesday, the 24rd March 2015

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு. 
-திரிகடுகம் 6


பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும்:
தற்புகழ்ச்சியையே தவிர்ப்பது கடினம். சுயநலத்திற்காகவோ, மரியாதை நிமித்தமாகவோ, பணிவன்புடனோ பிறர் புகழ்மாலை சாற்றினால் உச்சி குளிர்ந்துவிடும். மற்றவர் பேணுவதை நாடுவீர்கள். அதை லஜ்ஜையுடன் கையாளுவது சாலத்தகும்.
பேணார்
திறன் வேறு கூறின் பொறையும்:

புகழ் வரவு. இழிச்சொல்லோ பற்று (அதாவது [-]). இழிச்சொல்லை ஜீரணம் செய்வது கடினம். அது சொற்போரையோ, கைகலப்பையோ துவக்கலாம். தேவையா? பொறுத்தாள்வதே விவேகம்.

அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும்:

பிறருக்கு மைம்மாறு செய்யும் தருணம் கிட்டினால், அதை கொடுப்பினையாக கருதாமல், கைம்மாறு எதிர்பார்ப்பதைத் தவிர்த்து, ‘பணி செய்து கிடப்பது என் கடனே’ என்ற ஆளுமை தான் நற்பயன். செருக்கு என்றால் அகந்தை என்ற பொருள் இங்கு இல்லை. அது பெருமிதத்தைக் குறிக்கிறது.
-#-


Monday, May 25, 2015

நாளொரு பக்கம் 28

நாளொரு பக்கம் 28

Wednesday, the 25rd March 2015

यः पठति लिखति पश्यति 
परिपृच्छति पंडितान् उपाश्रयति।
तस्य दिवाकरकिरणैः नलिनी
दलं इव विस्तारिता बुद्धिः॥

One who reads, 
writes, 
sees, 
inquires, 
lives in the company of learned, 

His intellect expands as the lotus petals expands due to the rays of sun.

Thus sayeth an entry in an Internet site.  We may note, with rapt attention, that this wise saying gathers all the attriibutes of well-behaving humanity. The simile of the blossoming lotus and the beaming sunrays is most appropriate.
-x-

Image Credit:http://starrywisdomlibrary.com/wp-content/uploads/2013/11/the-scholar.jpg

Sunday, May 24, 2015

நாளொரு பக்கம் 27

நாளொரு பக்கம்  27

 Monday, the 23rd March 2015

You may not be able to change the world, but at least you can embarrass the guilty. 
-Jessica Mitford, author, journalist, and civil rights activist (1917-1996)

The Mitford lineage is a much-admired one. Jessica is the much younger sister of Nancy of ‘Noblesse Oblige’ fame. Jessica had won acclaim in many fields of activism. It is widely believed that, when she died in 1996, the San Francisco Chronicle wrote, "In this strangely flat era of 'diversity,' she was the rarest of birds, an exotic creature who rose each morning to become the sun around whom thousands of lives revolved."

We may therefore take her admonition seriously and shame those guilty of misdeamenors. A cause-list for those willing to fight for a cause:
  1. The Bihar parents, who assisted cheating in the examinations.
  2. Defenders of the rapists.
  3. Granite grabbers.
  4. Manalvari Mafia.
  5. Aavin diluters.
  6. Commonwealth game, 2G, coal Anthology

&&&& 
so many more.

As JS Mill put it,‘Eternal vigilance is the price of Liberty’.

-x-