Monday, April 15, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம்: ஓய்வும், ஓய்வூதியமும் : 9


தணிக்கை செய்வதில் தணியா வேகம்: ஓய்வும், ஓய்வூதியமும் : 9

Innamburan S.Soundararajan Mon, Apr 15, 2013 at 9:29 AM
To: Innamburan Innamburan
Bcc: innamburan88

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/8/10

தணிக்கை செய்வதில் தணியா வேகம்: ஓய்வும்ஓய்வூதியமும் : 9



'மெளனம் சர்வார்த்த சாதகம்’ என்ற ஸுபாஷிதத்திற்கேற்பஸ்திதபிரதிஞ்னன் ஆகிய யான்உங்கள் எல்லாரின் அனுமதியுடன்ஆர்வத்துடன்இச்சையுடன்ஈகையுடன்உரிமையுடன், ஊக்கத்துடன்எண்ணம் பிறழாமல்,ஏற்புடைய வகையில்ஒரு ஓட்டமும் நடையுமான நிகழ்வை உள்ளது உள்ளபடி பகிர்ந்த்து கொள்கிறேன்.

டாக்டர் ரத்னவேலு சுப்ரமண்யம் ஒரு சான்றோன். புகழ் வாய்ந்தமனிதநேயம் மிக்க மருத்துவர். என் தந்தைக்காகஅவரிடம் சிகிச்சைக்குப்போனபோது அவர் எனக்கு கொடுத்த பணி, ' ‘ஜெனெரல் ஆஸ்பத்திரியில் ஒரு ஓய்வு பெற்ற எஞ்சினீயர் நினைவிழந்து இருக்கிறார். அவரது ஆயுள் என்றும் முடியலாம். கொஞ்சம் நினைவு வந்தால்பென்ஷன் வந்ததாஎன்று கேட்டுவிட்டுஇல்லையென்றால்யாசத்துடன்மறுபடியும் கோமா நிலை. நீ அவருக்கு பென்ஷன் வாங்கிக்கொடு'.

சரி என்று சொல்லிவிட்டுசம்பந்தப்பட்ட இலாக்காவில் விசாரித்தால்பொதுப்பணித்துறையிலிருந்து ஒரு வருடமாகஅவரது பென்ஷன் ஆவணங்கள் வரவில்லை. அது ஆமையை விட மெதுவாக பயணிக்கும் துறை. ஓட்டமும்நடையுமாகஏ.ஜீ.யிடம் ஓடினேன். இதில் உனக்கு என்ன இன்டெரெஸ்ட் என்று கேட்ட அவர்விவரம் அறிந்தவுடன்மின்னல் வேகத்தில் இயங்கினார்.

பென்ஷன் தாமதம் ஆனால்தோரயமாகஒரு பென்ஷன் தற்காலிகமாகக் கொடுக்க ஏ.ஜீ.க்கு மட்டும் அதிகாரம் உண்டு. அதை 'அரிது அரிதுஎன பயன் படுத்தும்போதுஅதிகப்படி 90% ொடுக்கலாம். நானோ 100%கொடுக்கவேண்டும் என்று தலைகீழாக நின்றேன். ஏனென்றால்அந்த எஞ்சினீயருக்கு எது மறந்தாலும்,பென்ஷன் தொகை மறக்காது. அதற்கும் தயாளன் ஆகிய ஏ.ஜீ. ஒத்துக்கொண்டார். ஆணையும் பிறப்பித்தார். இருந்தும் சிக்கல். பென்ஷனர் கையொப்பம் வேணுமேவங்கிக்கணக்கு திறந்துஅதில் பென்ஷனைப் போட. மத்றாஸ்ஸில் அதை அமல் படுத்த பே அகவுண்ட்ஸ் ஆஃபீஸ் என்ற மாகாண அரசின் ஆஃபீஸை அணுகவேன்டும்.எனது வேண்டுகோளை மதித்துஅங்குள்ள அதிகாரிடி.பார்த்தசாரதி அவர்கள்ஆஸ்பத்திரிக்குப்போய்,பென்ஷனர் கையொப்பம் இடமுடியாது என்று சான்று அளித்துஅவரின் மனைவி பேரில் வரவு வைக்க ஏற்பாடு செய்து விட்டு வந்தார்.
அந்த எஞ்சினீயரருக்கு நினைவு வந்தபோது இந்த நற்செய்தி கூறப்பட்டது. அவரது முகம் மலர்ந்தது. சில நாட்களில்அவர் இறந்து விட்டார்.

படிப்பினைகள்;
1. நாங்கள் பொதுப்பணித்துறையை அணுகவில்லைஅது கல்மனது என்று தெரியும்.
2. கறாராக விதிகளை கடைப்பிடித்திருந்தால்தவறு இல்லைம்கா மட்டம் என்பதை தவிர.
3. எல்லாரும்ஒரு மைல் அதிகப்படி நடந்து உதவினார்கள். மனிதநேயம் அப்படி.
4.எங்களில் ஒருவரும் நல்ல பெயர் தேடவில்லை. இன்று தான் நிகழ்வு வெளி வருகிறது.
Tthamizth Tthenee 
1/9/10

அது  சரி

எப்போது  பென்ஷன்  துறை  கோமாவிலிருந்து  விடுபடும்..?


இப்போதும் பென்ஷன் கைக்கு வராமலேயே உயிர் நீத்த  பல இருக்கிறார்கள்



அன்புடன்
தமிழ்த்தேனீ
9-1-10 அன்று, Innamburan Innamburan <innamburan@googlemail.com> எழுதினார்:

Venkatachalam Subramanian 
1/9/10
to mintamil
 
அவரோ அப்டியான்னு கேட்டார். வேலை ஜாஸ்தியா இருக்கு.  ஏ.ஜீ. அஃஃபீஸ் கடிதமெல்லாம் படிக்கறதில்லை என்றார். எனக்கு சுரத்து இறங்கிப்போச்சு. 

ஓம்.
மெய்கண்டார் என்னும் பெயருடன் ஒரு அலுவல்ர் இருந்தார். கோட்டையிலிருந்து வரும் நேர் முகக் கடிதங்கள் அலுவலகத்தில் காணக் கிடைக்கவில்லை. அவை எங்கு போயின வென்ற தேடுதல் அங்கு நிகழ ஆரம்பித்தது.
 தேடிய அனைத்து நேர் முகக் கடிதங்களும் திரு மெய்கண்டார் அவர்களின் கோட் பாக்கெட்டில் இருந்தன.
அவர் சொன்னார்,” மிக்கப் பிரியத்துடன், எனதன்புள்ள மெய்கண்டார் என்று மேலதிகாரிகள் என்னைப் பெயர் சொல்லி அழைத்து அனுப்பியுள்ள கடிதங்களை நான் என்னிடமே வைத்துக் கொண்டு கண் போன்று காத்து வருகிறேன் ” என்றார்.
பின்னர் கடுமையாக அனல் பறந்து அவர் வேறிடத்துக்கு மாற்றப்பட்டது தனி விஷயம்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/9/10
 
to mintamil
 
௧. தமிழ்த்தேனி அவர்கள் சொல்வது தனியார் துறையிலும், ஒரு அளவு மாநில அரசு பணியிலும் இருக்கலாம். மத்திய அரசு, ஓய்வு பெறும்
 தினமே, ஓய்வூதியம்,க்ஷேமநிதி, இலவச ஆலோசனை, வேலைவாய்ப்பு அறிவுரை, மாலை, புகழுரை எல்லாம். இவற்றுக்கான வழிமுறைகள் வகுத்ததில், எனக்கு ஒரு பங்கு உண்டு என பெருமிதம் கொள்கிறேன். மாநில அரசு பணியில் இருந்தால், பிற்கால காரணங்கள் வேறு. இப்பவும், யாருக்குஆவது இன்னல் இருந்தால் சொல்லுங்கள். தீர்க்கமுயலலாம்.  
௨. ஓம் ஐயா அவர்களுக்க அரசு அனுபவம் இருப்பதால், அவரது கருத்துக்களை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன். மெய்கண்டார் போல பலர் உண்டு.  பாடங்களும் உண்டு. நிர்வாகம் செய்வது கடினம் அல்ல, புரிந்து கொண்டால்.
நன்றி
இன்னம்பூரான்

Photo Credit

Sunday, April 14, 2013

இதுவும் ஒரு பிருகிருதி: பச்சண்ணா சந்தில் நவசீலம்!




இதுவும் ஒரு பிருகிருதி: பச்சண்ணா சந்தில் நவசீலம்!

Innamburan S.Soundararajan Mon, Apr 15, 2013 at 6:57 AM

10/19/12


பச்சண்ணா சந்தில் நவசீலம்!
mInline image 1

மனுஷ ஜன்மம் எல்லாமே ‘இதுவும் ஒரு பிருகிருதி’ தான். ஒவ்வொண்ணும் அஷ்ட கோணல். ஒரு வருஷம் ஆகப்போறது, கீதா சாம்பசிவம். ‘சரியாப் போச்சு போங்க,  சரியான இடத்திலே நிறுத்திட்டா என்ன அர்த்தம்?? ‘ என்று உரிமை பிரச்னை எழுப்பி. இப்பவாவது வரேனே, அதை சிலாகிச்சுக்குங்கோ, என்ன!

பச்சண்ணா சந்து அஃறிணையில்லை. அதற்கு ஆத்மா உண்டு. சாக்கடைக்கு எதிர்வாடைலே ஆறாவது வீடு தான் அந்த உசிரை பிடிச்சுண்டு நிற்கறது. ஒண்டுக் குடித்தனம் ஒன்பதா! அந்த உசிர் ஊசலாட்றது.  அமீன் பிச்சுமணி ஐயர் என்ற பேஃபார்ஸ் (இரண்டுங்கெட்டான்) ஆசாமியை பத்தி ஆரம்பிச்சதே தப்பு. நாக்கு உலர்ந்து போச்சு. பின்னெ என்ன? சர்வோத்தம ராவை விட்டுட்டு இந்த தடிப்பிராமணனை பத்தி என்ன பேச்சு வேண்டியிருந்தது? எழுதியாச்சு. அன்னிக்கு காளை ராஜன் நிவாரணம் அளிக்கவும் என்றார். இதோ நிவாரணம் வந்தாச்சு.

’பிச்சுமணி ராவுஜியை ஒரு பிடி பிடிச்சார். அந்த கதையை அப்றம் சொல்றேன்...’ என்றதற்குத் தான் உரிமை பிரச்னை எழுந்தது. எனக்கு சப்ஜாடா மறந்து போயிடுத்து. ‘ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’. சர்வோத்தமராவ் என்று கேட்டால் யாருக்கும் தெரியாது. ஒண்ணு சகாராம ராவோட பிள்ளை என்று கேக்கணும்; இல்லை. சக்குபாய் ஆத்து மாமா என்று சொல்லணும். அத்தனை சாது அவர். அவரா சண்டைக்கு போகமாட்டார். வந்த சண்டையையும் விட்டுடுவார். நத்தை மாதிரி சங்கோஜி. அவராச்சு. அந்த லொட லொட தையல் மிஷின் ஆச்சு. அதுவும் ராத்திரியில் மட்டும். ஜன்னலைக் கூட சாத்திண்டு, அவிஞ்சு போயிண்டே, தீபாவளி ஆர்டர் எல்லாம் தயார் செய்வார். கொஞ்சம் சத்தம் கேட்டாக்கூட பிச்சுமணி அதட்டும். பகல்லெ நேரம் ஏது ஓய்? ஜோஷிக்கடைலெ முழம் போடவும், புடவை அடுக்கவும் தான் சரியா இருக்கும். சக்குபாய் மாமி அவருக்கேற்றவள். செட்டா குடித்தனம். கடன் வுடன் வாங்கமாட்டா. இரண்டு பேரும் பட்டினி கிடந்தாலும் கிடப்பா. கை நீட்டி யாசகம் செய்ய மாட்டா. குழந்தை கூட பெத்துக்கலெ என்றால் பாத்துக்கோங்களேன். சக்குபாய் மாமி எல்லாருக்கும் ஒத்தாசையா இருப்பாள். அதனாலே இந்த ஆறாம் நம்பார் ஸ்டோர் என்ன? பச்சண்ணா சந்திலெயும் சரி, மேலராஜவீதி வக்கீல்கள் வீடுகளிலும் சரி, அவளுக்கு நல்ல பெயர். அதுவும் வக்கீல் ராகவாச்சரியாரோடெ மாட்டுப்பெண் சரோஜாவுக்கு, மாமி மேலெ ஒரு பரிவும் உண்டு. இது நம்ம பிச்சுமணிக்கு எரிச்சல். அந்த விஷயத்தில் மட்டும் அவரோட ஆத்துக்காரி தையூவுக்கு பூர்ண சம்மதம்.

இனி ஒரு உரையாடல்:

பிச்சுமணி: (கூச்சல் போட்டு) என்ன ராவுஜி! நாங்கள் எல்லாம் மனுஷாளா உமக்குப் படலையா? தெரியாமாத்தான் கேக்றேன்.

கோடியாத்து கமலப்பொண்ணு: அம்மா! அந்த கிழம் ஏதோ கத்தறது. நான் சக்குபாய் மாமிக்குத் துணைக்குப் போறேன். (பதிலுக்கு நிக்கலை. ‘சர்’ணு, தாவணி சறுக்க, அங்கே போய் விட்டாள், ஒரு தடி புஸ்தகத்தை எடுத்துண்டு.)

சக்குபாய்: (மென்மையான குரலில்: உள் சுவரை பாத்துண்டு) அவா இப்போத்தான் ஜோஷிக்கடையிலிருந்து வந்தா. ஸ்நானம் பண்ணிண்டிருக்கா.

பி: சரி. சரி. எனக்கும் ஆயிரம் ஜோலியிருக்கு. அந்த மனுஷன் இன்னிக்கி ராத்திரி மிஷின் ஓட்டினா, என்ன நடக்கும்னு தெரியாது. சொல்றதை சொல்லிட்டேன்.

கமலா: மாமா! இன்னிக்கி வாண்டையாரோட ஆள் வந்து உங்களை கேட்டான். என்னமோ ‘ஜப்தியை’ ஜப்தி பண்ணிடுவோம்லெ’ அப்டின்னு சொல்லிண்டா. (சமயம் பார்த்துத் தாக்குவதில் கமலத்துக்கு இணை அவளே தான். அவளுக்கு நன்னா புருஷன் அமையணும் நான் ஸ்வாமியை கேட்டுப்பேன்.)

பி: சரி. சரி. நீ எங்கெ இங்கே வந்தே. படிக்கிற பொண்ணு. 
(ராவுஜி கதவை பார்த்து, உரக்க) குளிச்சுட்டு இங்கெ வரட்டும். ஒண்லெ ரண்டு பாத்துறலாம்.

ச: (மென்மையான குரலில்: உள் சுவரை பாத்துண்டு) நவராத்திரி இல்லையா. தேவி பூஜை பண்ணுவா. நாழியாகும். அவாள்டெ சொல்றேன். (இனி மாமி கிச்ச்ன்லெ ரிடயர்ட். ஃபீல்ட் ஓப்பன் ஃபார் கமலா. அவள் கிட்ட தான் பிச்சுமணிக்கு கொஞ்ச பயம். அப்படி வாயாடி, அவள்.)

பத்து நிமிஷ இண்டெர்வல். பிச்சுமணி பஜ்ஜி சாப்ட்டிண்டு இருக்கு.

பி: சர்வோத்தம ராவ்! கொஞ்சம் இப்டி வரேளா?

க: மாமா! சக்குபாய் மாமி சொன்னாளோனோ. எங்க அம்மா கூட சொன்னா. ராவுஜி மாமா பண்ற ஆத்மார்த்தமான பூஜையினால் தான் இந்த பச்சண்ணா சந்து நவசீலம்  உருப்படியா இருக்குனு. சரோஜா மாமி கூட சொன்னா, ‘ ராவுஜி மாமா பூஜை பண்ணப்றம், கொஞ்சம் பிரசாதம் எடுத்துண்டு வா. மாமனார் சந்தோஷப்படுவார்னு.  ராவுஜி மாமா கிட்ட என்ன சொல்லணும்னு சொல்லுங்கோ. நான் போய் சொல்றேன்.

பி: (உள்ளூர கருவிக்கொண்டு, ஆனா பொட்டிப்பாம்பா அடங்கிப்போய்) ஒண்ணுமில்லெம்மா. நீ போய் படி.
க: மாமா! லைட்டை போட்டுருங்கோ, மாமா. ப்ளீஸ். (‘உலகே மாயம்...’ முணுமுணுத்துண்டு போகிறாள்.)

பி: (தனி மொழி) என்ன பாட்டு வேண்டிகிடக்கு. ஒரு ஸ்லோகத்தை பாடாதோ.

தையூ: ஆமாம். அந்த குட்டி கிட்ட என்னமா பயப்படறேள். பெரிய அமீன்!!!
[பச்சண்ணா சந்துக்கு ஆத்மாவுடன் வாயும் இருந்தால், ஒரு நூறு பிருகிருதிகளையாவது ஒப்பேற்றலாம். எழுதறவனுக்கே இத்தனை மறதி இருந்தால், படிக்கிறவாளுக்கு எவ்வளவு இருக்கும். அதான், ‘இதுவும் ஒரு பிருகிருதி ~7’ கீழே.
இன்னம்பூரான்
19 10 2012
படத்துக்கு நன்றி: http://farm1.static.flickr.com/159/392184521_7f7aae9c18.jpg

தணிக்கை செய்வதில் தணியா வேகம்: 'கம கம' ப்பூவும், மணக்காத நாரும்!: 8

Innamburan S.Soundararajan


தணிக்கை செய்வதில் தணியா வேகம்: 'கம கம' ப்பூவும், மணக்காத நாரும்!: 8



1/7/10

 தணிக்கை செய்வதில் தணியா வேகம்: 'கம கம' ப்பூவும், மணக்காத நாரும்!: 8
கீர்த்தனாரம்பக்காலத்திலே - அதாவது, நான் தலையெடுத்து நாலு காசு (ரூபாய் 152/- மைனஸ் ஸ்டாம்புக்காசு) சம்பாதிக்க ஆரம்பித்தபோது தான் -  'பூவுடன் சேர்ந்த நாரும் மணக்கும்' என்ற சொலவடை  மாயக்கூற்று என உணர்ந்தேன். .புஷ்பத்திற்கு உபமானமாக துட்டு என்றால், அதை அரவணைக்கும் ரெவென்யூ ஸ்டாம்பு நார் எனலாம். காசு 'கம கம' . நாற்றமில்லா ஸ்டாம்ப்.
 
யார் செய்த முன்வினையோ, ரயில்வே ஆடிட் என்னை ஒதுக்க (அது ஒரு கதை), ஏ.ஜீ ஆந்திரா அட் மட்றாஸ் என்னை ஏற்றுக்கொண்டது, 'ஆடிட்டர்/ அப்பர் டிவிஷன் குமாஸ்தாவாக. அடயார் பாரக்ஸ்,  அடையாரிலிருந்து காத தூரம்,!துறைமுகம் அருகில். அங்கு தான் ஆஃபீஸ். நடராஜா ஸர்வீஸ். மெரீனா பீச் வழியாக நடை. முதல் நாள் கருவூலக்கணக்கை சரி பார்க்கச் சொன்னார்கள்.ரொம்பத்தப்புதப்பா இருந்தது. எல்லாம் தலைகீழ். நான் சரி பார்த்த்தை ஸூபரின்டெண்ட் மெச்சினார்.  அடிக்கடி இப்டி இருந்தா 'ட்ரெஷரி இர்ரெகுலரிட்டி' அப்படின்னு ப்ளாக் மார்க் கொடுப்போம். ஒரு நாள் அந்த மாதிரி வாங்கி கட்டிண்ட கருவூல அதிகாரி ஒருவர் பக்கத்து வீட்டுக்கு வந்திருந்தார். யோகக்ஷேமங்கள் விசாரித்த பிறகு, இது பற்றி என் ஆழ்ந்த கவலையை தெரிவித்தேன் அவரோ அப்டியான்னு கேட்டார். வேலை ஜாஸ்தியா இருக்கு.  ஏ.ஜீ. அஃஃபீஸ் கடிதமெல்லாம் படிக்கறதில்லை என்றார். எனக்கு சுரத்து இறங்கிப்போச்சு. 
35 வருஷத்திற்கு அப்பறம், உத்தர் பிரதேசத்தில் கருவூலக்கணக்கை பரிசோதித்தேன். 35 வருஷத்திற்கு முன்னால் மத்ராஸில் பார்த்ததை விட மட்டமாக இருந்தது. இதெல்லாம் தீராவழக்குன்னுட்டு, அப்போதே நான் ஸ்டாம்ட் ரசீது பக்கம் போனது சரியாகப்பட்றது. இது நிற்க.
 
அட்யார் பேரக்ஸ்லேருந்து.  ட்ராக்டர்லே, கவர்மன்ட் 
கடுதாசியெல்லாம் எடுத்துண்டு எக்ஸ்ப்ரெஸ் எஸ்டேட்லே பாசறை அமைத்தோம். அப்போ வந்த ஸூபெரிடெண்ட் ஒரு மாதிரி.  அபரிமிதமாக ஆடிட் குறைபாடுகள் கண்டுபிடிக்கணும். அப்றம் தீர்த்தும் வைக்கணும். இது என்ன 'ஸேம் சைட் கோல்'னு கேட்டேனாம். டீ.ஏ.ஜீ.கிட்ட வத்தி வச்சுட்டார்!
 
கிட்டத்தட்ட ஆறு மாதம் போச்சு. முதல் மூன்று மாதம், போன மாஸம் சென்னையிலெ பெய்ததே, அந்த மாதிரி, ஆடிட் அப்ஜெக்ஷன் மாரி பெய்த வண்ணமும், அடுத்த மூன்று மாதங்கள் ஸெட்டில்ட் ஆடிட் அப்ஜெக்ஷன்'  மாரி பெய்த வண்ணமும்!!! எல்லாருக்கும் சந்தோஷம்.
 
நம்ம ஸல்யூஷன் எளிது. எளிது.  செக்க்ஷனில் உள்ள எல்லா குமாஸ்தாக்களும் உள்கை. முதல் மூன்று மாதங்கள் வந்த ஸ்டாம்ப்ட் ரசீதுக்களை உருவி தனித்து வைப்போம். அவை வரவில்லை என்று பலமாக அப்ஜெக்ஷன் போடப்போட, ஸூப்ரிண்டெண்ட் ஐயா ஜாலியா கையொப்பம் இடுவார். அடுத்த மூன்று மாதம், அவற்றை இணைத்து, வந்த்தாக கூறி நன்றிக்கடிதம் போட்டு, அப்ஜெக்ஷன் நீக்குவோம். ஸூப்ரிண்டெண்ட் ஐயா  கையொப்பம் இடுவார், இன்னும் ஜாலியா.
டீ.ஏ.ஜீ.கிட்ட நல்லபெயர். கொஞ்சநாட்களுக்கு பிறகு வேலையை விட்டு விட்டேன். ஆனால், ஆந்திரப்பிரதேஷ் தப்பவில்லை.
மிகைப்படுத்தவில்லை,கற்பனை ஒழித்துவிட்டேன் என்றாலும், பொது நலம் கருதி, சில விஷயங்களை தவிர்த்து விட்டேன்.


இன்னம்பூரான்

சித்திரத்துக்கு நன்றி:
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhToYe0-MzgYIrOGwLNPL48JRlqQnbyILVDTqIz0ePbVEX7-uh_FAjeXx0gMp5MqP4hMl0jeqmhJal2xY87uERbbFqqmuJJEu4MwwHba8yj-2xhp3tC3fncax320rLq8xYAdwduALBVeYNq/s1600/1931881224_47eac98e29.jpg

‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 5



‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 5
1 message

Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Apr 1 (13 days ago)

‘பாரத தேசமென்று பெயர்சொல்லுவார்...’ 5
Inline image 1


ஆகஸ்ட் 15,1947 அன்று இந்திய விடுதலை. பிரதமர் நேரு ‘ஒளி படைத்தக் கண்ணிணாய், வா! வா!’ என்று பாரதமாதாவின் புகழ் பாடினார். அதன் மீது நமக்கு பிராது யாதுமில்லை. ஜனவரி 26, 1950 அன்று நமது அரசியல் சாஸனத்தை அரியணையில் அமர்த்தினோம். அதன் மீது நமக்கு பிராது யாதுமில்லை. அந்த புனித சாஸனத்தில், டாக்டர். அம்பேத்கார் வற்புறுத்திய இரு சீர்திருத்தங்கள் நீர்த்துப்போயின. 1. அடிப்படை கல்வி உரிமையின் தரம் தாழ்த்தப்பட்டது. 2. தணிக்கைத்துறையின் முக்கியத்துவம் தணிக்கப்பட்டது. விளைவு: ஜனநாயகத்துக்கு ஏகப்பட்ட இன்னல்கள். அதன் மீது எமக்குப் பிராது.
பங்குச்சந்தையின் வீழ்ச்சியைப்போல இவ்விழையும் தட்டுத்தடுமாறினாலும், ஒரு சிலர் தன்னார்வத்துடன் கல்விப்பணி செய்வது பற்றி அறிந்து மகிழ்ந்தேன். மூன்று வருடங்கள் முன்னால், ஏப்ரல் 1, 2010 அன்று, 60 வருடங்கள் கும்பகர்ணோத்ஸவம் செய்த இந்திய/மாநில அரசுகள், RTE Act என்ற சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்தன. அதன் பிரகாரம், ஒவ்வொரு சிறுவர்/சிறுமியருக்கும் எட்டு வருட பள்ளிக்கல்வி கட்டாயம் & இலவசம். அந்த இலக்கை அடைய சட்டம் விதித்த கெடு நேற்றுடன் முடிந்தது. சில ஆய்வுகள் மூலம், கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் 99% கிராமங்களில் பள்ளிகள் உள்ளனவாம். 1.1 கோடி சிறார்கள் பள்ளிகளில் படிக்கிறார்களாம். ஆனாலும் 80 லக்ஷம் சிறார்கள் பள்ளி செல்வதில்லை. வயதுக்கேற்ற படிப்பு அளிப்பதில் இடர்ப்பாடுகள், பல. லக்ஷக்கணக்கான சிறுவர்கள் பாதியில் படிப்பை உதறி விடுகிறார்கள்.
அது மட்டுமல்ல.  கற்றுக்கொள்ளவேண்டியதை அவர்களுக்கு உகந்த முறையில் போதிக்கப்படுவது இல்லை.  சிறார்கள் சமூகத்தின் பல தளங்களிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்குள் இயல்பான உறவு ஏற்படுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை. வகுப்பறையும், பாடப்புத்தகங்களும், பிரம்பும் மட்டும் போதாது. மாணவர்களின் நேசத்தை ஆசிரியர்கள் நாடுவதில்லை. படிப்பு - மனனம் - மார்க். அத்துடன் சரி. அது போதுமா?சொல்ல பல விஷயங்கள் இருக்கின்றன. ஒன்றை மட்டும் அடி கோடிட்டு விட்டு, உங்கள் தீர்வுக்கு விட்டு விடுகிறேன்.
இந்த சட்டத்தின் அடித்தளமே, பள்ளிகளை நடத்துவதில் சமூக ஈடுபாடு. ஆந்திரபிரதேசத்தில், இதற்காகவே பிரசாரம் நடைபெறுகிறது. அஸ்ஸாமில் அன்னைமார் சங்கங்கள் பள்ளிகளை நடத்துவதில் பங்கு கொள்கின்றன.
கெடு முடிந்த பின்னும் உங்கள் பேட்டை/ஊர்/ மாவட்ட நிலவரம் என்ன, எப்படி என்று உங்களுக்குத் தெரியும்.
என்ன செய்யப்போகிறீர்கள்?
இன்னம்பூரான்
01 04 2013
சித்திரத்துக்கு நன்றி: http://www.wespeaknews.com/wp-content/uploads/2012/07/Indian-Schools-RTE.jpg


2013/3/29 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Indian-Schools-RTE.jpg
130K   View   Share   Download  
Rathinam Chandramohan
Apr 1 (13 days ago)
to mintamil
 
Ungal Pirathu romba correct. What we  should do? The teachers organization is not going to streets yet they are speaking at some Forums only. United action is needed to drag the attention of the Bureaucratic setup and politicians. 1. அடிப்படை கல்வி உரிமையின் தரம் தாழ்த்தப்பட்டது. 
Pongi Eluvom..... 1700000 crores, 10,0000 crores, 16000 crores....Ministers can speak about these figures why not these figures!
Chandramohan


2013/4/1 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
 
செல்வன்
Apr 1 (13 days ago)
to mintamilvallamai
 
பள்ளிகூடம் நடத்த வேன்டிய அரசு சாராயம், மணல், ஓட்டல், பெட்ரோல், டீ, விமானம், உணவக தொழிலில் இறங்கிவிட்டது. அதனால் சாராயம், மணம், ஓட்டல்காரர்கள் பள்ளிகூடம் நடத்தி வருகிறார்கள்.

அரசு தன் சைசை சுருக்கி, அரசியல்வாதிகள் கொள்ளை அடிக்க மட்டுமே உருவாக்கபட்ட காமதேனுக்களான ஏர் இந்தியா, டாஸ்மாக், அசோகா ஓட்டல்ஸ் முதலிய கம்பனிகளை பங்கு சந்தையில் மக்களுக்கு விற்றுவிடவேண்டும்.அந்த கம்பனிகளை தணீக்கை செய்துகொண்டிருப்பதை விட இதுதான் ஊழலை ஒழிக்கும் வழி. ஏர் இந்தியாவின் ஒட்டு மொத்த நஷ்டம் மட்டும் 65,000 கோடி ரூபாய். இதில் எத்தனை பள்ளிகள் கல்லூரிகள் கட்டி இருக்கலாம் என்பதை உங்கள் யூகத்துக்கு விட்டு விடுகிறேன்.
--
செல்வன்


Capitalism has fed, clothed and housed more people than any charity, government, or communist regime ever could. 

--
Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Apr 1 (13 days ago)
to vallamaimintamil
 
அன்பின் செல்வன்,
உமது கருத்தின் சில கூற்றுகளுடன் நான் உடன்படுகிறேன். ஆனால், 'பாரத தேசமென்று பெயர் சொல்லுவர்' என்ற மஹாகவி பாரதியின் தாரக மந்திரத்தைத் தலைப்பாக வைத்ததின் காரணமே தேச மறுமலர்ச்சிக்காக, அதுவும் தேர்தல் வரும் நேரத்தில், ஒரு மாபெரும் சமாச்சாரத்தை படிப்படியாக முன் வைத்து, ஒரு interactive forum நடத்துவதே, முடியுமானால்.  முடியவில்லை என்றால், விலகி விடுவேன். அதனால், ஒவ்வொரு இடுகையையும் ஒரு வினாவுடன் முடிக்கிறேன். அதைப் புறக்கணிக்க உமக்கு முழு உரிமை உண்டு. ஆனால், தடாலடி முதலாளித்துவ பிரசாரம் செய்தால், இந்த இழை திசை மாறும். நானும் மரியாதையாக விலகி விடுவேன்.  உதாரணமாக, 'Capitalism has fed, clothed and housed more people than any charity, government, or communist regime ever could.' is a fallacy. 

I hope you understand the larger canvas and the perspective of this thread and contribute constructively.
அன்புடன்,
செல்வன்
Apr 1 (13 days ago)


'Capitalism has fed, clothed and housed more people than any charity, government, or communist regime ever could.' is a fallacy. 

அது என் கையெழுத்து. என் எல்லா மடலிலும் வரும்.

நீங்கள் எழுதியதற்கு சரியான தீர்வை தான் நான் எழுதினேன். ஏர் இந்தியாவின் நஷ்டம் உங்கள் தணிக்கை துறை கொடுத்த ரிப்போர்ட்டில் இருப்பதுதான். இப்படி வெள்ளை யானைகளை கட்டி மேய்க்கும் அரசிடம் பள்ளிகூடம் நடத்த நிதி இல்லை. அதனால் சாராயம் விற்பவர்கள், ஓட்டல் முதலாளிகள் பள்ளீகூட பிசினஸில் இறங்கி லாபம் சம்பாதிக்கிறார்கள்.

இதில் எதுவுமே உண்மைக்கு மாறானது இல்லை. ஆனால் நான் எழுதியதில் ஒரு பாயின்டையும் நீங்கள் சரி அல்லது தவறு என மறுக்கவில்லை. மற்றபடி உங்கள் இழைகளை புறக்கணிக்க நீங்கள் சொன்ன ஆலோசனையை ஏற்று இனி உங்கள் இழைகளை உங்கள் விருப்பபடி புறக்கணிக்கிறேன்.நன்றி வணக்கம்.
Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Apr 1 (13 days ago)
 
to vallamaimintamil, bcc: innamburan88
 
Sorry. There was an interruption. Let me complete.

'Capitalism has fed, clothed and housed more people than any charity, government, or communist regime ever could.' is a fallacy. 

'Charity has fed, clothed and housed more people than any Capitalism,government, or communist regime ever could.' is also a  fallacy. 

' Government  has fed, clothed and housed more people than any charity, Capitalism, or communist regime ever could.' is also a  fallacy. 

Communist regime has fed, clothed and housed more people than any Capitalism,government, or charity ever could.' is also a  fallacy. 

Good governance is the need of the hour in any part of the world. 

இந்த இழை இந்தியாவுக்கு நல்ல ஆட்சி நாடும் முயற்சி. கல்வி அடிப்படை. அதனால் அதற்கு முதலிடம் கொடுத்தேன். சாராயம், மணல், ஓட்டல், பெட்ரோல், டீ, விமானம், உணவக தொழிலில் அரசு இறங்கியதற்கும் முதலாளித்துவம் அத்துறைகளில் நடத்திவந்த/ நடத்தி வரும் ஊழல்களும், கொள்ளையும் தான் அதனுடைய பின்னணி. சொல்லப்போனால் அரசின் பினாமியாக/கூஜாவாக முதலாளித்துவம் கொழுத்து வருகிறது. முதலாளித்துவத்தின் கூஜாவாக/பினாமியாக, அரசு பணிந்து போகிறது. அரசு சாராயம், மணல், ஓட்டல், பெட்ரோல், டீ, விமானம், உணவக தொழிலில் இறங்கிவிட்டதை நான் நியாயப்படுத்தவில்லை. முன் நான்கு இழைகளையும் மறுபடியும் படித்துப்பார்த்தேன். நான் அதை நியாயப்படுத்தி எழுதவேயில்லை. அது போகட்டும். நாம் பொது நலன் பற்றி பேசுவதால், இதையும் சொல்லக்கடமை பட்டிருக்கிறேன். 60 வருடங்களாக, இந்திய அரசு/முதலாளித்துவம்/பொதுவுடமை/ சமுதாய சேவைகள்/ தன்னார்வ பணியும், தன்னலமும் பற்றி நான் நேரடியாக, ஆதாரங்களுடன், நுட்பங்களை பார்க்ககிடைத்த அனுபவப்பாடங்கள் உங்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. அது உங்கள் தவறல்ல. ஆனால், நான் அரசியல் சாஸனத்தையே சாடுவதை காணும் போது, நான் மற்ற விஷயங்களை எழுத தயங்குவதற்குக் காரணம், இந்த திசை மாற்றம் தான்.
இனி உங்கள் இஷ்டம்.
அன்புடன்,
இன்னம்பூரான்




Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>
Apr 1 (13 days ago)
to vallamaimintamil
 
அன்பின் செல்வன்,
உமது பதிலை இப்போது தான் பார்த்தேன். நான் சொன்னது, 'என் வினாவை புறக்கணிக்க உங்களுக்கு உரிமை உண்டு' என்று. நீங்கள் என் இழைகளை (என் விருப்பப்படி?) புறக்கணிப்பது உங்கள் இஷ்டம். You are throwing the baby with the bathwater.