Showing posts with label ஸர் சுப்ரமண்ய ஐயர். Show all posts
Showing posts with label ஸர் சுப்ரமண்ய ஐயர். Show all posts

Monday, April 22, 2013

தரிசித்தேனே! ஸ்வாமி விவேகானந்தரை! [2]


தரிசித்தேனே! ஸ்வாமி விவேகானந்தரை! [2]


Innamburan S.Soundararajan Mon, Apr 22, 2013 at 9:23 AM

To: Innamburan Innamburan
Bcc: Innamburan Innamburan

தரிசித்தேனே! ஸ்வாமி விவேகானந்தரை! [2]

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
12/5/10

தரிசித்தேனே!  ஸ்வாமி விவேகானந்தரை! [2]

அப்படி இப்படி ஒரு மாதம் ஓடிவிட்டது, ரங்கனார் ஒரு யூ-டர்ன் அடித்து
எட்வெர்ட் சையது பக்கம் திரும்பி ரொம்ப பிசியாக இருப்பதால்.
‘தரிசித்தேனே!  ஸ்வாமி விவேகானந்தரை!’ என்ற இழையும் காணோம்! சரி.

ஸ்வாமி விவேகானந்தர் கும்பகோணத்திலிருந்து சென்னை வந்த போது, ஒரு
வரவேற்புக்குழு காத்துக்கொண்டிருந்தது. 32 அங்கத்தினர்கள் கொண்ட
அக்குழுவின் தலைவர்: மஹா கனம் பொருந்திய நீதியரசர் ஸர் சுப்ரமண்ய ஐயர்
அவர்கள். சமீபத்தில் சாரதா ஶ்ரீசக்ரம்மாவை பற்றி எழுதிய இடுகையில்
குறிப்பிடப்பட்ட டாக்டர். எம்.சி.நஞ்சுண்ட ராவ் அவர்களும், ரங்கனார் ஒரு
இடுகையில் குறிப்பிட்ட யோகி. எஸ். பார்த்தசாரதி ஐயங்காரும், அக்குழுவில்
உள்ளனர். ஸ்வாமிஜியை சென்னைக்கு முதலில் கொணர்ந்த அக்கவுண்டண்ட் ஜெனெரல்
மன்மதநாத் பட்டாச்சார்யாவையும் காண்கிறோம். இது நிற்க.

மஹா கனம் பொருந்திய நீதியரசர் ஸர் சுப்ரமண்ய ஐயர் அவர்கள் யார் என்று
விசாரிப்போம். சென்னை வந்த காந்திஜீ இரண்டு சுப்ரமண்ய ஐயர்களை
பணிவன்புடன் தரிசித்தார். ஒருவர் இந்தியாவிலேயே பெண்ணியத்தை போற்றிய
ஜீ.எஸ். மற்றொருவர், இவர். 1869ல் ஹைக்கோர்ட்டில் வக்கீலாக பதிவு செய்து
கொண்ட இந்த மதுரைக்காரின் தொண்டுகள், பல துறைகளில் கணக்கில் அடங்கா.
நீதியரசர், ஓய்வுக்கு பின், அன்னி பெசண்டின் சுய உரிமை இயக்கத்தின் கெளரவ
தலைவர். சுதந்திரம் நாடிய தேசபக்தன். ஞானி. ஆங்கிலேய அரசு, இவரை மதித்து
விருதுகள் பல வழங்கின. தேசபக்தர்களும், சனாதனிகளும் இவரை தொழுதனர்
என்றால் மிகையாகாது. இந்திய திரு நாட்டின் தலை விதியை நிர்ணயித்த
மஹான்களில் ஒருவர். சுத்தமாக அவரை மறந்து விட்டது, தமிழகம்.

மதுரை முனிசிபல் கமிஷனர், மீனாக்ஷியம்மன் கோயில் அறங்காவலர், அரசு
வக்கீல் [1888] சட்டசபை உறுப்பினர் [1884] சென்னை மாகாணத்தில் முதல்
இந்திய   முதன்மை ஹைக்கோர்ட் ஜட்ஜ் [1899, 1903 and 1906] அதற்கு முன்,
தொடக்கத்திற்கு முன்பே, இந்திய நேஷனல் காங்கிரஸுக்கு வித்திட்டவர்.
திலகருடனும், காந்திஜியுடனும் இவரை ஒப்பிட்டு அக்காலமே பேசப்பட்டது.

இந்திய வரலாற்றிலேயே, ஆங்கிலேய அரசின் மேல் தனக்கு உள்ள செல்வாக்கை,
ஆக்ஷேபணைகளை புறக்கணித்து, நாட்டுப்பற்றுக்கு வித்திட்ட சான்றோன், இவர்.
அரசு, இவர் சொல்லுக்கு மதிப்பு வைத்தது யாவரும் அறிந்ததே.  இவரின்
மஹாத்மியத்தின் ரகசியம், வெறும் தேசபக்தி மட்டுமல்ல. பகவத் கீதை வழி
நடந்த வாழ்க்கை நெறி. வேதாந்தி என்று தான் அவர் அறியப்பட்டார். ‘’
ஸ்வாமிஜியின் போதனையார் ஈர்க்கப்பட்டவர் இவர்” என்று ஒரு குறிப்பு
கூறுகிறது.

இந்த பாரதமாதாவின் திருமகனின் மூன்று திருப்பணிகளை கூற விரும்புகிறேன்.
ஆனால், என்னுடைய ஆவணங்களே எனக்கு கிடைக்காத நிலையில் அல்லல் படுகிறேன்.
பொறுத்தாள்க.

(தொடரும்)

இன்னம்பூரான்

05 12 2010
Mohanarangan V Srirangam
12/5/10

2010/12/5 Innamburan Innamburan <innamburan@googlemail.com>
தரிசித்தேனே!  ஸ்வாமி விவேகானந்தரை! [2]

அப்படி இப்படி ஒரு மாதம் ஓடிவிட்டது, ரங்கனார் ஒரு யூ-டர்ன் அடித்து
எட்வெர்ட் சையது பக்கம் திரும்பி ரொம்ப பிசியாக இருப்பதால்.
‘தரிசித்தேனே!  ஸ்வாமி விவேகானந்தரை!’ என்ற இழையும் காணோம்! சரி.

யூ டர்ன் எல்லாம் இல்லை சார். பல ஆர்வங்கள் போயிண்டு இருக்கும். நீங்க சொல்லுங்கோ. 

உங்களுக்குப் பர்சனலா ஸ்வாமி விவேகாநந்தர் எப்படி அப்பீல் ஆனார்? உங்கள் நெடிய வாழ்வனுபவத்தில் அவர் கூறிய கருத்துகளை நீங்கள் உரசிப்பார்த்துக் கண்ட முடிவுகள் என்ன இவை பற்றியும் அவவ்ப்பொழுது கூறுங்கள். 

உம்மை நடைக்கு என்ன...ஜிலு ஜிலு நடை... 
:-)) 
Innamburan Innamburan <innamburan@googlemail.com>
12/15/10

அன்று சொன்னது: 'இந்த பாரதமாதாவின் திருமகனின் மூன்று திருப்பணிகளை கூற விரும்புகிறேன்.
ஆனால், என்னுடைய ஆவணங்களே எனக்கு கிடைக்காத நிலையில் அல்லல் படுகிறேன்.
பொறுத்தாள்க.

(தொடரும்)

இன்னம்பூரான்

05 12 2010


இந்த பாரதமாதாவின் திருமகனின் மூன்று திருப்பணிகள்:

  1. நீதியரசராக நீடிக்க வாய்ப்பு இருந்தும், கண்ணொளி மங்கிவிட்டதனால், பணியின் நிறைவு குறைந்து விடலாம் என்று அப்பணியில் இருந்து ஓய்வு நாடிய ஐயர் அவர்கள், அன்னி பெஸண்ட் அம்மையாரின் ஹோம்ரூல் லீக்கின் கெளரவ தலைவராக பொறுப்பேற்றது முதல் திருப்பணி;
  2. ஓங்கி வானளாவ வளர்ந்து விட்ட ஆலமரத்தை காண்போருக்கு,  நுண்மையான ஆலவித்து தென்படாது. அடையாறு பிரும்மஞான சபையில் இருக்கும் ஆலமரத்தை பாருங்கள். புரியும். அங்கு தான் டிசெம்பர் 1884ல் 17 அங்கத்தினர்கள் கொண்ட குழு ஒன்று அகில இந்திய காங்கிரஸுக்கு வித்திட்டது. கலந்து கொண்டவர்களில் முக்யமானர்கள் : ஹோம் ரூல் கெளரவத்தலைவரான ஐயர் அவர்கள், திரு.அனந்தாசார்லு, திரு. வீரராகவாச்சாரியார், திரு.ராவ், திரு. ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம். அனைவரும் பிரும்மஞான இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர்கள். ஒரு வருடம் கழிந்த பின் தான் அகில இந்திய காங்கிரஸின் முதல் கூட்டம் நடந்தது. திரு ஐயர் அவர்களிம் திருப்பணியால், சென்னைக்கு இந்த வரலாற்றில் ஒரு சிறப்பிடம் கிடைத்து விட்டது.
  3. அந்தக்காலத்தில் மின்னலஞ்சல்கள் கிடையா. கடித போக்குவரத்தே மாதங்கள் பிடிக்கும். அதுவும், அரசுக்குத் தெரியாமல் இயங்குவது மெத்த கடினம். அன்னி பெஸண்ட் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, ஐயர் அவர்கள் ஜூலை 24, 1917 அன்று, அமெரிக்க ஜனாதிபதி வில்சனுக்கு ஒரு கடிதம் எழுதினார். வில்சனுக்கு மனித உரிமையின் நண்பர் என்ற நற்பெயர் உண்டு. அரசு பறிமுதல் செய்து விடும் என்பதால், ஹென்ரி ஹாட்ச்னர் என்ற பிரும்மஞான வாதி அதை எடுத்து சென்றார். அங்கு பிரபலம் அடைந்த அந்த கடிதம் இங்கிலாந்துக்கு வந்து பிராபல்யமான டைம்ஸ் இதழில் பிரசுரிக்கப்பட்டு, அங்கு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, ஆங்கிலேயரின் இந்திய ஆளுமைக்கு, உலகெங்கும் கண்டனம் வரவழைத்தது. சினம் பொங்கிய அரசு, ஐயர் அவர்களை அவமதிக்க முனைந்தது. அவரோ ‘ஸர்’ விருதை தூக்கி எறிந்து விட்டார். ஆனால், தொடைநடுங்கி இதழ்கள் மெளனித்தன. 
  4. தேசபக்தன் இதழில் ஜூலை 21, 1918 அன்று திரு.வி.க. அவர்கள் ‘மயிலை முனீந்திரர்’ என்ற தலையங்கத்தில், விவரம் முழுதும் அளித்து விட்டார். ஐயர் அவர்களே, இந்த இதழின் துணிவை பாராட்டினாராம். அதற்கும் எதிர்வினை இல்லாமல் போகவில்லை. தேசபக்தன் ஃபெப்ரவரி 28, 1919 அன்று தடை செய்யப்பட்டது. திரு.வி.க. அவர்களும் ஆசிரியர் பதவியிலிருந்து விலக வேண்டியிருந்தது.

ஸ்வாமிஜியை பற்றிய இதழில் திரு. ஐயர் அவர்களை பற்றி விவரமாக எழுத காரணம்: அவர் தான் ஸ்வாமிஜியை வரவேற்ற கமிட்டியின் தலைவர். ஹோம் ரூல் கெளரவதலைவர். வரலாறு முழுமையாக பதிக்கப்பட்டால், அகில இந்திய காங்கிரஸ்ஸின் தூண்களில் ஒருவர் என்றால் மிகையாகாது. 
இன்னம்பூரான்
15 12 2010
பி.கு. பர்சனலா ஸ்வாமி விவேகாநந்தர் எனக்கு அப்பீல் ஆனது அவரிடைய நிர்விகல்பஸமாதியை பற்றி படித்தது, 10 வயதில். உசிலம்பட்டியில் எனக்கு நல்ல நூல்கள் கிடைக்கும், அப்பாவின் தயவால். அவர் கூறிய கருத்துகளை உரசிப்பார்த்தது பற்றி, பிறகு பார்க்கலாம். நான் இன்றும் அவரது அடிப்பொடி. இருந்தாலும் சாக்ரட்டீஸ் மாதிரி எனக்கு தாக்கம் அளித்தவர்கள் யாருமில்லை.
coral shree  
12/16/10

மிக அழகாக, ஒரே சீராக சென்று கொண்டிருக்கிறது ஐயா, தொடருங்கள். நாங்களும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறோம் தங்களை. நன்றி.


kanniappan 
12/17/10

தொடருங்கள் ஐயா!. நாங்கள் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.

16 டிசம்பர், 2010 3:53 pm அன்று, coral shree <coraled@gmail.com> எழுதியது:

*



நண்பர் ஆர்.எஸ். ஆர். அவர்கள் இந்த கட்டுரையை அனுபவித்துப்படித்து நியாயமான கேள்வி ஒன்று எழுப்பினார். ‘மயிலை முனீந்திரர்’  சித்திரம் அனுப்பி அதை போடாலாமே என்றார். அதை செய்து விட்டேன். நன்றி, திரு.ஆர்.எஸ். ஆர். & http://www.ts-adyar.org/sites/default/files/images/Eminent%20Theosophists/Subramaniya%20Iyer/Sir%20Subramaniya%20Iyer.gif

இன்னம்பூரான்
22 04 2013

Saturday, March 2, 2013

அன்றொரு நாள்: ஜனவரி:12 துருவ நக்ஷத்திரம்

Innamburan Innamburan


அன்றொரு நாள்: ஜனவரி:12 துருவ நக்ஷத்திரம்
2 messages

Innamburan Innamburan Thu, Jan 12, 2012 at 1:51 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொரு நாள்: ஜனவரி:12
துருவ நக்ஷத்திரம்

ஜனவரி 12, 1863 ஸ்வாமி விவேகானந்தரின் ஜென்ம தினம். விழாக்கோலமெடுத்துக் கொண்டாடுவோமாக. ஆன்மீகத்துடனும், ஹிந்து மதாபிமானத்துடனும், தேசாபிமானத்தையும், மனித நேயத்தையும், சமுதாய நலனையும் போற்றிய துறவியும்,போதகருமானவர், ஸ்வாமி விவேகானந்தர். வரட்டு வேதாந்தமும் கிடையாது, அவரிடம். கிளிப்பிள்ளை வாதமும் கிடையாது. உரக்கக்கூவும் நாத்திகமும் கிடையாது. அதை புறக்கணிப்பதுமில்லை.   ‘தரிசித்தேனே! ஸ்வாமி விவேகானந்தரை!’ என்ற நீண்டதொரு இழையில் அவரை பற்றி எழுதியிருந்ததால், விருப்பமுள்ளவர்கள், அதை மீள்பார்வை பார்க்கலாம். ஒரு சிறிய குறிப்பு மட்டும், இங்கே.
ஸ்வாமிஜி கும்பகோணத்திலிருந்து சென்னை வந்த போது, ஒரு வரவேற்புக்குழு காத்துக்கொண்டிருந்தது. 32 அங்கத்தினர்கள் கொண்ட அக்குழுவின் தலைவர்: மஹா கனம் பொருந்திய நீதியரசர் ஸர் சுப்ரமண்ய ஐயர் அவர்கள். டாக்டர். எம்.சி.நஞ்சுண்ட ராவ்,யோகி. எஸ். பார்த்தசாரதி ஐயங்கார், அக்கவுண்டண்ட் ஜெனெரல் மன்மதநாத் பட்டாச்சார்யாவையும், அந்தக்குழுவில் காண்கிறோம். மற்றொரு சமயம் சென்னை வந்த காந்திஜீ இரண்டு சுப்ரமண்ய ஐயர்களைபணிவன்புடன் தரிசித்தார். ஒருவர் இந்தியாவிலேயே பெண்ணியத்தை போற்றிய ஜீ.எஸ். மற்றொருவர், இவர். 1869ல் ஹைக்கோர்ட்டில் வக்கீலாக பதிவு செய்து கொண்ட இந்த மதுரைக்காரின் தொண்டுகள், பல துறைகளில் கணக்கில் அடங்கா. நீதியரசர், ஓய்வுக்கு பின், அன்னி பெசண்டின் சுய உரிமை இயக்கத்தின் கெளரவ தலைவர். சுதந்திரம் நாடிய தேசபக்தன். ஞானி. ஆங்கிலேய அரசு, இவரை மதித்துவிருதுகள் பல வழங்கின. தேசபக்தர்களும், சனாதனிகளும் இவரை தொழுதனர். இந்திய நேஷனல் காங்கிரஸுக்கு வித்திட்டவர்.திலகருடனும், காந்திஜியுடனும் இவரை ஒப்பிட்டு அக்காலமே பேசப்பட்டது. இப்படியாக புகழ் வாய்ந்த ஸர் சுப்ரமண்ய ஐயர் அவர்களுக்கு ஸ்வாமிஜி ‘இந்தியாவுக்கு நல்லதொரு திட்டம்’ வகுப்பதைப் பற்றி ஒரு கடிதம் எழுதினார், ஜனவரி 3, 1895 அன்று. அதனுடைய சாரம்சம்:

“...நேசம், நன்றி, விசுவாசம் கலந்த கடிதமிது. உங்களது வாழ்வியல் நிர்ணயங்களை மதிப்பவன், நான். உணர்வை மதித்து, அறிவையும் புகுத்தும் அரிய பண்பு உங்களிடம் உளது. திட்டமிட்டதை நிறைவேற்றும் ஆற்றல் உளது. அதற்கெல்லாம் மேலாக, உங்களுடைய வாய்மை மெச்சத்தக்கது.எனவே, என் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

  1. சென்னையில் ஒரு சமயம் சார்ந்த பள்ளி நிறுவி, வேதம், பாஷ்யம், மற்ற சமயங்கள், ஆங்கிலம், பிராந்திய மொழி ஆகியற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். ஆலம்வித்து நுண்ணியது; ஆலமரம் பெரிது. ஆகவே, அந்த பள்ளி வளரும். தற்காலம் சென்னையில் தொன்மையும், நவீனமும் இணைந்து இருப்பது, நன்நிமித்தமே.
  2. நம் சமுதாயத்தை முற்றிலும் திருத்தி அமைக்க வேண்டும் என்று படித்த மேதைகள் சொல்வது சரியே.இதையும், அதையும் ஒழிக்க முனைந்த சீர்திருத்தங்கள் தோல்வியுற்றன... நம் மக்களிடம் நான் சொல்வது, ‘ நல்லதிலிருந்து உன்னதம், உண்மையிலிருந்து வாய்மை, சிறப்பிலிருந்து மேலும் சிறப்பு, நாடவேண்டும்.’
  3. சம்ஸ்கிருதத்தில் சொல்லப்படும் ஜாதி, மனித இனத்தின் ‘விசித்திரத்தை’ (வேறுபாடுகளை) சுட்டுகிறது. முற்காலத்தில், ஜாதி ஒரு தனி மனிதனின் பிருகிருதியை வெளிப்படுத்த உதவியது, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னிலிருந்து. சமபந்தி போஜனமோ, கலப்பு திருமணங்களோ என்றுமே தடை செய்யப்பட்டவை அல்ல. ஆனால், தடுமாறி வீழ்ந்து விட்டோம், இந்த ஜாதிப்பகையில். அதற்கு காரணம், ஜாதியை பற்றிய உண்மையை மறந்ததே.
  4. ஜாதி வகைகள் வேறு. இனவெறி வேறு. இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம் ஜாதியை தவறாக புரிந்து கொண்டு, இனவெறியை வளர்த்துக்கொண்டதே. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் உள்ள வேறுபாடுகள் (சமுதாய நிலைப்படிகள்) (ஜாதி) நன்மை தருகிறது. ஹிந்து ஜ்யோதிஷ சாஸ்திரம், இத்தகைய வேறுபாடுகளை முன்னிறுத்த முடியும். ஒரு முக்கியமான கோட்பாடு: மனிதர்களுக்குள் ஏற்றதாழ்வுகள் கிடையாது; சிறப்பு உரிமைகள் கிடையாது.
  5. ஹிந்து மதத்தினர் எதையும் விட வேண்டியதில்லை. முனிவர்களை வழித்துணயாக வைத்துக்கொண்டு, வாளாவிருப்பதை அகற்றி, அடிமைக்குணத்தை ஒழித்தால் போதும். நாம் முன்னேறவேண்டும்... ஒவ்வொரு தேசத்திற்கும் அதற்கே உரிய நீரோட்டம் உண்டு. இந்தியாவுக்கு, அது சமயம். அதை பலப்படுத்த வேண்டும். எனது சிந்தனையின் ஒரு தளமிது. அமெரிக்காவிலும் எனக்கு பல ஊழியங்கள் பாக்கி. அவை முக்கியம். இங்கு எனக்கு உதவியும் கிடைக்கும். இந்தியாவிலும் அத்தகைய அலை வரிசை நிறைவேற வேண்டும். நான் எப்போது இந்தியா வருவேன் என்பதை அறியேன். எல்லாம் ஆண்டவன் கட்டளை.

‘ இப்புவியலகில் என்ன தான் செல்வம் தேடினாலும், இறைவா!, நீ தான் எனக்குக் கிடைக்கும் அணி. என்னை உனக்கு அர்ப்பணிக்கிறேன். நேசத்துக்கும், பாசத்துக்கும், என்ன தான் தேடினாலும், கிடைக்கும் அன்பன் நீ மட்டும் தான். என்னை உனக்கு அர்ப்பணிக்கிறேன்.’(யஜுர்வேத சம்ஹிதை)

உங்களுக்கு என்றென்றும் ஆண்டவனின் அருள் கிட்டட்டும்....”

இன்னம்பூரான்
12 01 2012
9-10-93.jpg


உசாத்துணை:
Complete Works of Swami Vivekananda, 4: 371-73.


Geetha Sambasivam Thu, Jan 12, 2012 at 4:33 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan , coral shree , anantha narayanan nagarajan , Soumya Srinivasan
http://tinyurl.com/7chelp4
[Open in new window]

1869ல் ஹைக்கோர்ட்டில் வக்கீலாக பதிவு செய்து கொண்ட இந்த மதுரைக்காரின் தொண்டுகள், பல துறைகளில் கணக்கில் அடங்கா. நீதியரசர், ஓய்வுக்கு பின், அன்னி பெசண்டின் சுய உரிமை இயக்கத்தின் கெளரவ தலைவர். சுதந்திரம் நாடிய தேசபக்தன். ஞானி.  //


ஐயா,

துருவ நக்ஷத்திரம் என்ற பெயர் பொருத்தமானதே.  ஆனாலும் துருவ நக்ஷத்திரம் கண்களுக்கு இப்போது தெரியவில்லை;  நம்மால் பார்க்க முடியாத தொலைதூரத்திற்குப் போய்விட்டோம். :((((  இல்லை;  அதுவும் தப்பு.  நம் கண்கள் தான் குருடாகி விட்டன.  இனி பார்வை வரும் நாள் எப்போவோ? 


மேலே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மணி ஐயரைத் தான் தமிழ்த்தாத்தா தம் நினைவு மஞ்சரியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் என நினைக்கிறேன்.  மிகப் பெரிய கட்டுரைத் தொகுப்பு. நேற்றுத் தான் இறுதிப் பகுதியைச் சேர்த்தேன்.  நேரம் கிடைக்கையில் நீங்கள் சொல்பவரும், தாத்தா சொல்லி இருப்பதும் ஒருவரே தானா எனப் பார்க்கவும்.  நன்றி.


2012/1/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: ஜனவரி:12
துருவ நக்ஷத்திரம்

ஜனவரி 12, 1863 ஸ்வாமி விவேகானந்தரின் ஜென்ம தினம். விழாக்கோலமெடுத்துக் கொண்டாடுவோமாக. ஆன்மீகத்துடனும், ஹிந்து மதாபிமானத்துடனும், தேசாபிமானத்தையும், மனித நேயத்தையும், சமுதாய நலனையும் போற்றிய துறவியும்,போதகருமானவர், ஸ்வாமி விவேகானந்தர். வரட்டு வேதாந்தமும் கிடையாது, அவரிடம். கிளிப்பிள்ளை வாதமும் கிடையாது. உரக்கக்கூவும் நாத்திகமும் கிடையாது. அதை புறக்கணிப்பதுமில்லை.   ‘தரிசித்தேனே! ஸ்வாமி விவேகானந்தரை!’ என்ற நீண்டதொரு இழையில் அவரை பற்றி எழுதியிருந்ததால், விருப்பமுள்ளவர்கள், அதை மீள்பார்வை பார்க்கலாம். ஒரு சிறிய குறிப்பு மட்டும், இங்கே.
ஸ்வாமிஜி கும்பகோணத்திலிருந்து சென்னை வந்த போது, ஒரு வரவேற்புக்குழு காத்துக்கொண்டிருந்தது. 32 


உசாத்துணை:
Complete Works of Swami Vivekananda, 4: 371-73.