Showing posts with label தண்டோரா. Show all posts
Showing posts with label தண்டோரா. Show all posts

Friday, May 10, 2013

தண்டோரா ~ 4




தண்டோரா ~ 4

Innamburan S.Soundararajan Fri, May 10, 2013 at 8:01 PM

தண்டோரா ~ 4


Inline image 1

தண்டோரா போடுவது ஒரு நுண்கலை; பகிரங்கத்தை நுட்பமாக பொதுமன்றத்தின் முன்னால் வைக்க வேண்டும். கொசு ஒழிப்பானாலும், கருத்தடையானாலும், ஜப்தி செய்வதானாலும், பஞ்சாயத்து மீட்டிங்க் ஆனாலும், அரசாணை பிரகடனமானாலும், ஒலி எழுப்பி சேதி சொல்வதும், அதை கூட்டிக்குறைக்காமல் விளம்புவதும் எளிதல்ல. மாமாண்டூர் மாடசாமிக்கு இது கை வந்த கலை; குடும்பச்சொத்து; கொள்ளுத்தாத்தா அடித்தத் தண்டோராவைத்தான், இவனும் அடிக்கறான்.

டைம் லைன்: 10 05 2013; இடம்: மாமாண்டூர்; நேரம்: ஆதவன் மறைய வில்லை. மணியடிச்சாச்சு, ஆரம்பப்பள்ளியில். கன்னா பின்னான்னு ஓடி வந்த பசங்க புடை சூழ மாடசாமி அரசமரத்தடிக்கு விரைந்து சென்றான். சென்றானா? ஊர்ப்பஞ்சாயத்துக் கூடிய வண்ணம். வெள்ளி வெற்றிலை செல்லத்தை ‘கூஜா’ குப்புசாமி கொண்டு வந்து வைத்தான். அதில் பண்டாரவாடை துளிர் வெற்றிலை, கும்போணம் நெய்ச்சீவல், சிவபுரி பிரமபத்திரம் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஊருக்கே செவிலியாகவும், வீட்டுக்கு வீடு பிள்ளைப்பேறுப் பார்ப்பவளும், கோயில் பிரகாரங்களை பெருக்கித் துடைக்கும் ‘மதினி’ லச்சுமி ஒரு கெத்துடன் ஒய்யாரமாக வந்து, சொம்பையும் வைத்து, விரல்களை நெறித்து திருஷ்டிக் கழித்தாள். எல்லாரும் அவளை ஒருமாதிரி பார்த்து விட்டு, உருத்திராக்ஷப்பூனை போல் கண் மூடி தவமிருந்தனர், அது கபட வேஷமாயினும்.

சின்ன மைனர் சிவசாமி ஐயர் தலைமை என்று சிலர் சொல்வதால், ஜாதிபத்திரியும், ஒரு குட்டி புட்டியில் மூக்குப்பொடியும் இருந்ததைப் பாத்தேன் என்று நம்ம கிட்டா சத்தியம் பண்றான். நாட்டாமை ஆறுமுகம் சேர்வை, இந்த சேதியெல்லாம் வந்தப்றம் தான், வீட்டை விட்டு கிளம்பினார். இன்று அவர் தான் அக்ராசனம் என்ற எண்ணம் அவருடைய மனதில் அசையா இடம் பெற்றதால், ஆரவாரத்துடன், அந்த பத்தடி தூரத்துக்கு ஜல் ஜல் என்று இரட்டை மாட்டு வண்டியில் வந்து கோஷத்துடன் இறங்கி, ஐயரை அரியாசனத்திலிருந்து இறக்கி விட்டு, தாம்பூலம் தரித்துக்கொண்டு, உறையூர் சுருட்டு ஒன்றை பற்ற வைத்துக்கொண்டார். சிவசாமி அய்யர் முகத்திலும் புகை. மனதிலும் புகை & பகை. 

அது வரை, கட்சி மாறும் நம் அரசியல் குறுமன்னர்களைப்போல, காட்சி மாறுவதை கண நேரத்தில் உள்வாங்கிக்கொண்ட மாடசாமி நெடுஞ்சாங்கிடையாக சேர்வை ஐயா காலில் விழுந்து, ‘தண்டம், சாமியோவ். உத்தரவு’ என்று வினவும்போது, ‘மதினி’ லச்சுமிக்கு சாமி வந்து விட்டது. ‘ஓய்ய்ய்ய்’ என்று கூவி விட்டு, சுயநினைவை இழந்த மாதிரி பாவ்லா செய்து, ஐயரை உருட்டி விட்டாள். அவர் பாவம் நோஞ்சான். இது சேர்வையின் செட் அப் என்று மனதிலுள்ள புகையும், பகையும் ‘உள்-தண்டோரா’ போட்டாலும், சுதாரித்துக்கொண்டு, அவர் நாசி-உத்வேகத்தை வரவழைத்துக்கொண்டார். அடுத்த கட்டபஞ்சாயத்துக்குள்ளே, சேர்வை சாகமாட்டானா என்ற நப்பாசை!

இன்று ஒரு சிறிய உரையாடலுடன் பீடிகை மட்டும். 

சேர்வை: யாருடா அங்கே? மாடசாமிக்கு நாலு காசு கொடு. அவன் டாஸ்மாக்கிலே போய் குடிச்சுட்டுக் கிடக்கட்டும். நாம சாமியை கும்பிடுவோம். என்ன சரி தானே, மைனர்வாள்?
(மாடசாமி கிளம்பியாச்சு. இனி அவன் தண்டோரா அடிக்க நாலு நாள் இருக்கு.)

‘மதினி’ லச்சுமி மேல் வந்து ஆரோகணித்த அம்மன்: 
‘கேட்டுக்கங்கடா! 25 வருஷமா நேரு-காந்திக்குல்லாக்காரங்க செண்டர்லெ ஆட்சியில் இல்லை. அவனையும், இவனையும் கூட்டுச்சேர்த்துக்கிணு லூட்டி அடிக்கிறாக.

சிவசாமி அய்யர்: (தனிமொழி) லூட்டி இல்லையம்மா. லூட். பரிசுத்த லூட். 2014லெ அவங்கள் தேர்தலை சந்திக்கணும். 
தெய்வமாச்சே( பாம்புச் செவி) அது சொல்லுது:

‘அய்யரே! ஆம்பிளை அடிச்சா லூட்! பொம்பளை அடிச்சா லூட்டி! உம்ம மாப்பிள்ளை வந்திருக்காப்லெ, அவரு தான் ஜோஸ்யர் ஆச்சே. கேட்றுவோம். எதற்கும் நான் சொல்றதைக் கேட்டுக்கோ. 2014ம் வருடம் 2013லேயே வந்திரும். கர்நாடகா தேர்தலில் ஆளும் கட்சி மண்ணை கவ்வின மாதிரி, இவுகளுக்கும் சோதனைடா! இந்த மோடி பேச்சு வேறே அடி படறதா. காங்கிரஸ் மைனராகி விட்டால் ( அவள் சொல்வது மைனாரிட்டி. சாமியெல்லாம் இப்படித்தான் பேசும்.). தென்னாட்டு கட்சிகளை பாம்பென்று அடிக்கவும் முடியாது. பழுதென்று மிதிக்கவும் முடியாது. காரியம் ஆகணும்னா காலை பிடிப்பானுக. காரியம் ஆகிவிட்டால், கழுத்தைப் பிடிப்பானுக. கிழக்கே வேறே மாம்தாவின் மமதையும், மாயாவின் மாயாஜாலமும் காங்கிரஸை பின்னி பெடல் எடுக்குது.  போதாக்குறைக்கு, இன்னும் இருபது நாட்களில் மாஜியாகப்போற ஆடிட்டர் ஜெனெரல் படுத்தறான். ஆராசா போட்ற சத்தத்திலெ சாக்கோ ஷாக் ஆயிட்டார். ஒரு பேப்பர்க்காரன் சொல்றான்:‘பிஜேபிக்கு 150-160 ஸீட்: காங்கிரஸுக்கு 100.’ அப்டினு.
சொல்லி முடிக்கலை. சேர்வை பல்லை நற நறவென்று கடித்தார். சுருட்டை வீசி எறிந்தார். 

சேர்வை: அம்மா! தாயே! பரதேவதையே! அரசியல் எதுக்கம்மா, நமக்கு. இன்று பஞ்சாயத்து பெங்களுரு பற்றி தானே, அம்மா. நமக்கு ஏன் இண்டெரெஸ்டு? ஏதோ நாலு காண்டிராக்ட் எடுக்கலாம்லெ.

‘என்னடா சொன்னாய்? (அவளை அந்தப்புரத்தில் பாடாய் படுத்தும் அவரை விரட்ட இது தானே சாக்கு!) அங்கே, காங்கிரஸ் தலையெல்லாம் உருளுது. சித்தராமையா, மல்லிக்கார்ஜுன கார்கே,பரமேஷ்வரா, தேஷ்பாண்டே, சிவகுமார், சிவஷங்கரப்பா, ஜயச்சந்திரா, முனியப்பா, எண்ணிக்கிட்டையா, இப்டி எட்டுப்பேர் முதல்வர் போஸ்டுக்குப் போட்டாபோட்டி. நீ எதுக்கு ராசா காண்டிராக்ட் கெஞ்சணும். நீயும் போட்டிப்போடு’ என்றாளே பார்க்கலாம்!

மூலையில் நின்று கொண்டு வேடிக்கைப்பார்த்த வாத்தியார் அனந்து சார் ‘கொல்’ என்று சிரித்து விட, ‘ ஹோய்ய்ய்ய்’ என்று கூவிக்கொண்டு. சாமி மலையேறிவிட்டது. ‘மதினி’ லச்சுமி மூர்ச்சையாகி விழுந்து விட்டாள். அவளுக்கு சூடம் ஏற்றி ஆராதனை நடக்கும்போது, நம்ம அனந்து சார் சொன்னார்.
‘கர்நாடகா எம்.எல்.ஏ களில் 90% கோடீஸ்வரர்கள், எந்த கட்சியானாலும். ஒவ்வொத்தனுக்கும் சொத்து ஜன்னி கண்ட ஜுரம் மாதிரி எக்கச்சக்கமா ஏறிடுத்து, நாலு வருஷத்துக்குள்ளே. மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ மேலே கிரிமனல் கேசு இருக்கு அவங்களே எழுதிக்கொடுத்திருக்கிறார்கள். பெங்களுரிலே கிட்டத்தட்ட 60% ஓட்டு. பிஜேபி யை துரத்தி அடிச்சுட்டாங்க என்றாலும் சிலர் சொந்த மதிப்பினால் கெலித்திருக்கிறார்கள்.’
அவர் பேசி முடிக்கலை. நம்ம ஆண்டாளு பிள்ளை ‘அரும்பு மீசை’ சேஷாத்திரி, காலேஜ்லெ பெரிய கிளாஸ் படிக்கிறான் இல்லை. அவன் மடிக்கணினியை வைத்துக்கொண்டு, ‘அப்டேட்’ என்றான். அதற்குள் சந்தியாவந்தனம் பண்ணனும் என்று சிவசாமி அய்யர் எழுந்து போய்விட்டார். நாட்டாமை ஆறுமுகம் சேர்வையும் வண்டியேறினார். வண்டி பின்னாலேயே, தகரியமா, ‘மதினி’ லச்சுமி நடந்து சென்றாள். கூட்டமும் கலைந்தது. நாளை தண்டோரோ அடிக்கப்படும் என்று மக்களிடையே பேச்சு அடிபட்டது.
நன்றி, வணக்கம்.


இன்னம்பூரான்



____________________________________________________________________________-_
அப்டேட்: வாலு போச்சு: பன்ஸலும், அஷ்வினி குமாரும் ராஜிநாமா. 
                கத்தி வந்தது. முப்பது வருஷத்துக்கு பிறகு மைசூருக்கு யோகம். சித்தராமையா முதலமைச்சர். ஆனால், அது எளிதில் வரவில்லை. அதற்கும் சீக்ரெட் ஓட்டெடுப்பு.
இன்னம்பூரான்
10 05 2013

தண்டோரா! ~3




 தண்டோரா! ~3

Innamburan Innamburan Sat, Feb 4, 2012 at 12:40 PM

thandora.jpg
மீண்டும் தண்டோரா!
ஹெச்சரீக்கா! மீண்டும் தண்டோரா! தண்டோரா-4 பெங்களூருலேயிருந்து தோம்! தோம்! னு மேளதாளத்தோட/பாண்டு வாத்தியத்தோடெ, தூள் கிளப்பிக்கிணு வந்த் கொண்டே இருக்கு. அப்டேட் கம்ப்ளீட்டு.
இன்னம்பூரான்
10 05 2013
2ஜி உரிமங்களை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் அளித்த தீர்வு ஆட்சிபீடத்தை ஆட்டிவிட்டது என்றாலும், நொண்டி சாக்குகளும், சால்ஜாப்புகளும் வெளி வந்த வண்ணமே இருக்கின்றன. எந்த அமைச்சரோ, பிரதமரோ ராஜிநாமா செய்வது பற்றி, அதிகார வட்டங்களில் பேச்சு எழவேயில்லை. இங்கிலாந்தில் முந்திய ஆட்சியின் உள்துறை அமைச்சர் டேவிட் ப்ளங்கட் பதவியிலிருந்து விலக நேரிட்டது: குற்றச்சாட்டு: தன் ஆசைக்கிழத்தியின் தாதியின் பயண அனுமதி பற்றி லேசாக விசாரித்தது. அவருடைய காதலை பற்றி யாருக்கும் கவலையில்லை. இங்கிலாந்து போற்றும் க்யூ முறையில் எட்டிப்பார்க்க முயன்றது; அதுவும் அவருடைய துறை அதிகாரிகளிடம் தான் விசாரித்தாராம்.
ஃபெப்ரவரி 3, 2012 அன்று இங்கிலாந்தில் க்ரிஸ் ஹூஹ்னெ என்ற அமைச்சர் விலக நேரிட்டது: குற்றச்சாட்டு: இங்கிலாந்தில் போக்குவரத்து விதிகளை மீறினால், கடுமையான தண்டனை, காரோட்டும் உரிமத்தில் குற்றம் பதிவு செய்து, மைனஸ் மார்க் போடப்படும். ஓரளவுக்கு மேல் மீறினால், கார் ஓட்டும் உரிமமே ரத்து செய்யப்படலாம். க்ரிஸ் ஹூஹ்னெ 2003ல், விதித்த வேகத்தை மீறினார். உரிமம் பறி போகுமோ என்ற அச்சத்தில், தன் மனைவி (இப்போது மாஜி) விக்கி ப்ரைஸ்ஸை குற்றத்தை ஒப்புக்கொள்ள சொன்னார். அவள் இப்போது குட்டை உடைத்து விட்டாள். போலீஸோ இருவரையும் தண்டிக்க ஹேது இருக்கிறது என்கிறது. குற்றச்சாட்டு: ்க்ரிஸ் ஹூஹ்னெ பொய் சொல்லிவிட்டார்; எங்களுக்கு பொய் சொன்ன அமைச்சர் வேண்டாம்.
என்னே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்!
இன்னம்பூரான்
04 02 2012
சித்திரத்துக்கு நன்றி:http://www.subaonline.net/thf/thf_depot/kidangku/thiruvannamali/thandora.jpg
பிரசுரம்: வல்லமை

Thursday, April 18, 2013

தண்டோரா! Nov 15, 2011 & 20 11 2011




தண்டோரா!
Nov 15, 2011 & 20 11 2011

Innamburan Innamburan Tue, Nov 15, 2011 at 9:54 PM

தண்டோரா!
ist2_6619956-indian-drums.jpg
சாமியோவ்! தாய்க்குலமே! சின்னப்பசங்களா!
டும்! டும்! டும்! அஞ்சு நிமிஷம் முன்னாலெ வந்த சேதி. விடிவு காலம் வந்துருச்சு. எல்லாரும் காது குடுத்துக் கேளுங்கோ. 62 வருஷங்களுக்கு முன்னாலெ, ஊர்லெ இருக்கற பெரியமனுஷா எல்லாரும் டில்லிலெ டேரா போட்டு, இந்திய மக்கள் ஆளும் குடியரசு அப்டீன்னு முதுகிலெ ஷொட்டுக்கொடுத்துண்டு இந்திய அரசியல் சாஸனத்தை விமரிசையாக பிரகடனம் பண்ணச்ச, இந்தியாவில் பிறந்த பசங்களுக்கு எல்லாம் ஆரம்ப கல்வி கட்டாயமா இலவசமா இருக்கணும்னு பேசிகிட்டாஹ. ஆனா, சாக்கிரதையா, அதை அடிப்படை சட்டமா போடாமா, மேலெழுந்தவாரியா, அப்டி ஆசைப்பட்றோம்னு சொல்லிப்போட்டாஹ. யாரும் கண்டுக்கலெ. காசும், பணமும், புரள, கல்விதந்தைகள் கல்வித்தாத்தாக்கள் ஆனாஹ. ஏழு தலமுறைக்கு சொத்து வச்சுட்டு, செத்தும் போனாஹ. ஏழை பாழை வீட்டு சின்னப்பசங்க பீடி சுத்தினாஹ, தீக்குச்சி அடுக்கினாஹ, முறுக்கு சுத்தினாஹ, கண்ணாடி வளையல் பண்ணாஹ, ஜமக்காளம் நெஞ்சாஹ, செங்கல் சூளைலெ  செத்து மடிஞ்சாஹ, கொத்தடிமைகளா. படிக்க மட்டுமில்லை. இப்டி நாலு தலமுறைக்கு, படிப்புக்கு தலை முழுகினாங்க. நம்ம தாத்தன், பாட்டி, மாமன், அத்தைக்காரி எல்லாரும் இந்திய மக்களின் உரிமையை இழந்து, படிக்காமலெ செத்துப்போய்ட்டாஙக. அவங்களுக்கு, அரசு, சமுதாயம், அப்பன், ஆத்தா, நீங்க, நான் எல்லாரும் தலை முழுகினோம், வெட்கம் கெட்டு.
இரண்டு வருஷம் முன்னாலெ தான், Right of Children to Free and Compulsory Education Act, 2009 அப்டீன்னு, இலவச, கட்டாயக்கல்வி சின்னப்பசங்களுக்கு உரிமை அப்டீனு இந்த கும்பகர்ணங்க சட்டம் போட்டாஹ.  அதனாலே தம்பிடி ஆதாயமில்லை அப்பனே, அதற்கான விலாவாரியான விதிகளை பிரகடனம் செய்யும் வரை. ஆந்திரபிரதேஷ், மஹராஷ்ட்டிரா, ஒரிஸா, ராஜஸ்தான், டில்லி அப்டீனு 20 மாநிலங்களில் அந்த காரியம் நடந்தது. தமிழ் நாட்டில், தி.மு.க. அரசும், அதக்கப்றம் அ.தி.மு.க. அரசும் இன்று மாலை வரை (15 11 2011) ஏன் தூங்கி வழிஞ்சாங்கன்னு புரியல்லைங்க. 12ம்தேதி கெஜட்லெ போட்டாஹ. இன்னிக்கி பொது மன்றத்தில் வச்சாஹ. ஆன ஒரு பிரச்னைங்க. அந்த சட்டத்திலெ சொன்னமாதிரி அண்டை அயல் பசங்களுக்கு எப்டி இடம் பதிவு செய்யோணுங்கிறதை பத்தி ஒன்னும் சொல்லலைங்க. சண்டை போட்டு வாங்கணுங்க. புரியுதா/
சாமியோவ்! தாய்க்குலமே! சின்னப்பசங்கள கொத்தடிமையா அனுப்பாதீங்க. பள்ளிக்கூடம் அனுப்புங்க. இல்லென்னு துரைத்தனத்தார் உங்களை தண்டிப்பாஹ. சொல்லிபோட்டேன். டும்! டும்! டும்!
இன்னம்பூரான்
14 11 2011

செல்வன் Wed, Nov 16, 2011 at 3:54 AM

சட்டம் போட்டால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விடுவார்களா?

அடிப்படை கல்வி,சுகாதாரம் என அடிப்படை பிரச்சனைகளை கவனிக்க வேண்டிய அரசு ஏர் இந்தியா, அசோகா ஓட்டல்,செயில் மாதிரி கம்பனிகளை நடத்தி நஷ்ட மழையில் குளிக்கிறது. இந்தியாவின் ஏழ்மையான உபி அரசின் பொதுதுறை நிறுவனங்களின் நஷ்டம் 18,000 கோடி ரூபாய். இந்த காசு முழுக்க நம் வரிப்பணமே.இதெல்லாம் அரசு கம்பனிகளில் வீனாகிறது

ஏர்-இந்தியாவில் கடன்சுமை 65,000 கோடி.

65,000 கோடியில் எத்தனை பள்ளிகள் கட்டலாம்?..கணக்கு போடலாமா?

இத்தனை நஷ்டம் வந்தும் ஏன் ஏர்-இந்தியா மற்றும் பொதுதுறை நிறூவனங்களை அரசு நடத்துகிறது?

ஏர்-இந்தியா இயங்கினால் தான் அதுக்கு பல்லாயிரம் கோடி செலவில் விமனாங்களை வாங்க முடியும்.கமிஷன் அடிக்க முடியும். அதுக்கு பொதுதுறை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கவேண்டும்.அரசியல்வாதிகளின் கட்டுபாட்டில் இயங்கவேண்டும்.

மக்களை ஏழ்மையில் வைத்திருந்தால் தான் ஆளும்வர்க்கம் கொள்ளை அடிக்க முடியும்.

--
செல்வன்

"அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி - அதன்
  அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால் - இந்த
பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்"





Innamburan Innamburan Wed, Nov 16, 2011 at 9:00 AM

சட்டம் போட்டால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விடுவார்களா?.............................
~ கனவலைகள் மோதுகின்றன. அப்பாவுக்கு சாமுவேல் தேவசகாயம்னு ஜிக்ரி தோஸ்த். நேரே கிட்சன்லெ வந்து ஃபில்டர் காபி கேப்பார். அவர் வீட்டுக்குப்போனா சுவை மிகுந்த கேக் கிடைக்கும். தோட்டத்திலெ கொடுக்காப்புளி பறிச்சுக்கோன்னு துரட்டி கொண்டு வந்து கொடுப்பார். ஆனா பாருங்கோ! அவர் கிட்ட என்ன பேச்சுக் கொடுத்தாலும் ~ நேருவும் சீனாவும், காந்தியும் திருவள்ளுவரும், சுருட்டில்லா சர்ச்சில், தொல்காப்பியமும் நாமக்கல் கவிஞரும், எப்படி வாணாப்பேசிப்பாருங்கோ, சுவிசேஷத்தவப்புதல்வரான, சாமுவேல் தேவசகாயம் மாமா, ‘கர்த்தர் என்ன சொல்றார்னா’, பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே, இந்த சிவபிரான் படுத்துவதை பாரும்’, ‘விவிலியத்திலிருந்து ஒரு பகுதி தாண்டா, இந்த திவ்யபிரபந்தம்’ என்று விட்டு விளாசுவார்.
 அந்த மாதிரி...
இன்னம்பூரான்
16 11 2011 

Innamburan Innamburan Wed, Nov 16, 2011 at 9:06 AM



2011/11/16 செல்வன் <holyape@gmail.com>
சட்டம் போட்டால் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விடுவார்களா?

அடிப்படை கல்வி,சுகாதாரம் என அடிப்படை பிரச்சனைகளை கவனிக்க வேண்டிய அரசு ஏர் இந்தியா, அசோகா ஓட்டல்,செயில் மாதிரி கம்பனிகளை நடத்தி நஷ்ட மழையில் குளிக்கிறது. இந்தியாவின் ஏழ்மையான உபி அரசின் பொதுதுறை நிறுவனங்களின் நஷ்டம் 18,000 கோடி ரூபாய். இந்த காசு முழுக்க நம் வரிப்பணமே.இதெல்லாம் அரசு கம்பனிகளில் வீனாகிறது

ஏர்-இந்தியாவில் கடன்சுமை 65,000 கோடி. 

Kingfisher is in the most critical condition, despite the number of passengers flying in the first nine months of 2011 soaring 19 per cent from the same period a year earlier. 

65,000 கோடியில் எத்தனை பள்ளிகள் கட்டலாம்?..கணக்கு போடலாமா?

இத்தனை நஷ்டம் வந்தும் ஏன் ஏர்-இந்தியா மற்றும் பொதுதுறை நிறூவனங்களை அரசு நடத்துகிறது?

ஏர்-இந்தியா இயங்கினால் தான் அதுக்கு பல்லாயிரம் கோடி செலவில் விமனாங்களை வாங்க முடியும்.கமிஷன் அடிக்க முடியும். அதுக்கு பொதுதுறை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கவேண்டும்.அரசியல்வாதிகளின் கட்டுபாட்டில் இயங்கவேண்டும்.

மக்களை ஏழ்மையில் வைத்திருந்தால் தான் ஆளும்வர்க்கம் கொள்ளை அடிக்க முடியும்.

--
செல்வன்


sound rajan Wed, Nov 16, 2011 at 3:13 AM

superb! Yera vendiyavanga kaathile yeruma?

செல்வன் 


2011/11/16 Innamburan Innamburan <innamburan@gmail.com>
Kingfisher is in the most critical condition, despite the number of passengers flying in the first nine months of 2011 soaring 19 per cent from the same period a year earlier. 

கிங்க்பிஷர் நஷ்டமானதால் மல்லையாவுக்கு நஷ்டம்.

ஏர்-இந்தியா நஷ்டமானதால் மக்கள் வரிப்பணம் தண்டம்.

மல்லையா எக்கேடும் கெட்டால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் ஏழை,பாழையின் வரிப்பணத்தை வாங்கி விமான கம்பனி நடத்தி ஆயிரகணக்கான கோடிகள் பணத்தை தொலைப்பது ஒரு அரசுக்கு அழகில்லை.

பொதுதுறை கம்பனிகள் இத்தனை லட்சம் கோடி நஷ்டத்துக்கு பிறகும் இயங்க காரணம் அரசியல்வாதிகளுக்கு கமிஷன் அடிக்க வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதால் தான்.

நம் அரசியல்வாதிகள் நம்மை திட்டமிட்டு ஏழையாக வைத்திருக்கின்றனர். இந்தியாவின் ஏழ்மை திட்டமிட்டு உருவாக்கபட்டது.அதற்கான கருவி சோஷலிசம்,பொதுதுறை.


Thiruvengada Mani T.KWed, Nov 16, 2011 at 2:38 PM
சாமியோவ் ...... குறவன் மொழி
டும் டும் டும் ... தண்டாரா போடுபவன்...
ரெண்டு பேரும் சொல்லறாங்களோ?
எப்படியோ தகவல் போய் சேர்ந்தால் சரி
மணி

கவி.செங்குட்டுவன் Wed, Nov 16, 2011 at 3:46 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகள் 25% இடங்களை ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும் எனவும், அவர்களுக்கான கட்டணத்தை சம்மந்தப்பட்ட மாநில அரசு ஏற்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஏன் எல்லா அரசுப் பள்ளிகளும் தனியார் பள்ளிகள் போலச் செயல்பட வேண்டுமென்றும், அதே போன்ற அடிப்படை கட்டமைப்புகளை மாநில அரசுகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும் எனச் சட்டம் இயற்றவில்லை. தெரிந்தவர்கள் கூறுவார்களா?

Geetha Sambasivam Wed, Nov 16, 2011 at 3:55 PM
என்னவோ சட்டம் இயற்றாமல் தான் பிள்ளைகள் கல்வி கற்க வரலைனு சொல்வதை ஏற்க முடியலை;  எத்தனையோ பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதை வெறுக்கவும் செய்கின்றனர்.  எங்க வீட்டில் வீட்டு வேலைக்கு உதவி செய்யும் பெண்ணின் மகளுக்கு எவ்வளவோ அறிவுரை சொல்லிப் படிக்கப் புத்தகம் வாங்கப் பணம் கொடுத்து, துணிகள் எடுத்துக் கொடுத்து
ம்ஹும்.,
 
பதினைந்து வயதுக்குள்ளாகக் காதல்;  கல்யாணம்; குழந்தை.  இப்போ அந்தப் பெண்ணுக்குப் பதினெட்டே வயது, இரண்டு குழந்தைகள்.  கணவன் தச்சு வேலை பார்க்கிறான்.  21 வயசு!  சம்பாதிக்க ஆரம்பிச்சால் பெரும்பாலான இளைஞர்கள், இளம்பெண்கள் அதைத்தான் விரும்புகிறார்கள்.  மேலும் இம்மாதிரியான அடித்தட்டு மக்களுக்குப் பணம் காசோடு சினிமா தான் சொர்க்கம். அடுத்துத் தொலைக்காட்சி, நல்ல உடைகள்.  இப்போ அநேகமா எல்லாருமே உடையில் கவனம் செலுத்துவதால் இவங்க அதோடு திருப்தி அடையறாங்க.  (அப்படினு நினைச்சுக்கறாங்க.) படிக்கலையேனு குறை எல்லாம் இல்லை அவங்களுக்கு.

Innamburan Innamburan Wed, Nov 16, 2011 at 4:16 PM
To: mintamil@googlegroups.com

Kingfisher is in the most critical condition, despite the number of passengers flying in the first nine months of 2011 soaring 19 per cent from the same period a year earlier. 

கிங்க்பிஷர் நஷ்டமானதால் மல்லையாவுக்கு நஷ்டம். 
இல்லை சார்! வங்கிகள் பங்கியடிக்கணும்.
இ 

Nagarajan Vadivel Wed, Nov 16, 2011 at 4:49 PM

இந்தியக் குடிமக்கள் இருக்கும்வரை ஏர் இந்தியா நஷ்டத்தில் ஓடலாம்
இந்தியக் குடிமகன்கள் இருக்கும்வரை மல்லையா நஷ்டத்தைச் சமாளிக்கலாம்
இஞ்சி தின்ற பதினொரு குரங்குகள் எப்படி இருக்கும்?
மல்லையாவுக்குக் கடன் கொடுத்த வங்கித் தலைவர்களின் இருள் சூழ்ந்த முகத்தை அருள் கூர்ந்து பார்க்கவும்
விட்டதைப் பிடிக்கோனும் போட்டதை எடுக்கோனும் என்ற கூத்தாட்டம் விரைவில் தொடங்கும் என்று நம்பலாம்
நாகராசன்


Innamburan Innamburan Wed, Nov 16, 2011 at 5:07 PM
To: mintamil@googlegroups.com
பேராசிரியரே! பாயிண்ட் மேட். எதற்கும், ப்ளீஈஈஸ்!, தண்டோரா போட்டதை பற்றி மட்டும் இங்கு பேசுவுமே. சாமுவேல் மாமாவும் ஒத்துக்கிறார்.


DEV RAJ Wed, Nov 16, 2011 at 5:15 PM

>>> இல்லை சார்! வங்கிகள் பங்கியடிக்கணும்.<<<
:)))


N. Ganesan Thu, Nov 17, 2011 at 2:41 PM



On Nov 16, 8:32 am, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2011/11/16 Innamburan Innamburan <innambu...@gmail.com>
>
> > Kingfisher is in the most critical condition, despite the number of
> > passengers flying in the first nine months of 2011 soaring 19 per cent from
> > the same period a year earlier.
>
> கிங்க்பிஷர் நஷ்டமானதால் மல்லையாவுக்கு நஷ்டம்.
>
> ஏர்-இந்தியா நஷ்டமானதால் மக்கள் வரிப்பணம் தண்டம்.
>
> மல்லையா எக்கேடும் கெட்டால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால்
> ஏழை,பாழையின் வரிப்பணத்தை வாங்கி விமான கம்பனி நடத்தி ஆயிரகணக்கான கோடிகள்
> பணத்தை தொலைப்பது ஒரு அரசுக்கு அழகில்லை.
>
> பொதுதுறை கம்பனிகள் இத்தனை லட்சம் கோடி நஷ்டத்துக்கு பிறகும் இயங்க காரணம்
> அரசியல்வாதிகளுக்கு கமிஷன் அடிக்க வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பதால் தான்.
>
> நம் அரசியல்வாதிகள் நம்மை திட்டமிட்டு ஏழையாக வைத்திருக்கின்றனர். இந்தியாவின்
> ஏழ்மை திட்டமிட்டு உருவாக்கபட்டது.அதற்கான கருவி சோஷலிசம்,பொதுதுறை.
>
ஆம் ஐயா. ஏர் இந்தியா அதில் வேலை பார்ப்பவர்களுக்கும்,
அரசு பெரிய அதிகாரிகளும், குடும்பங்களும் சுற்றுலா
செல்லவும் பயன்படுகிறது.

ஏர் இந்தியாவை இழுத்து மூடினால் நல்ல பல்கலைக்
கழகங்கள் ஏற்படுத்தலாம். மாணவர்களின் உழைப்பும்,
ஆய்வும் இந்தியாவை மேல்நிலைக்குக் கொண்டுவரும்.

நா. கணேசன

Innamburan Innamburan Thu, Nov 17, 2011 at 4:08 PM
To: mintamil@googlegroups.com
தண்டோரா கேட்காமல் காதைப் பொத்திக்கொள்வது உங்கள் உரிமை.தயை செய்து திசை திருப்பாதீர்கள் என்று கெஞ்சுவது என் கடமை.
'...ஆம் ஐயா. ஏர் இந்தியா அதில் வேலை பார்ப்பவர்களுக்கும்,அரசு பெரிய அதிகாரிகளும், குடும்பங்களும் சுற்றுலா செல்லவும் பயன்படுகிறது.' என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கூறினால், நலம், கணேசனாரே.
இன்னம்பூரான்


Innamburan Innamburan Sun, Nov 20, 2011 at 6:29 PM


ist2_6619956-indian-drums.jpg


டும்! டும்! டும்!
ஐயாமார்களே! அம்மாமார்களே! சின்னப்பசங்களா!
கவனமா கேளுங்க, சாமியோவ். மலையை கிள்ளி எலியை பிடிச்சுண்டாங்களாமே. டும்! டும்! டும்! இன்கம்டாக்ஷ் காரங்க டில்லிலெ வலை போட்டுத் தேடினாங்களாம். எல்லாம் ஸ்விஸ் தகவல் மேலெ. கற்றுப்புப்பணம் 500 கோடியாமெ. அம்மாடியோவ். 22 பேருகிட்ட பிடிச்சு, எம்ப்ளது கோடி வரி வசூல் பண்றப்போறாங்களாம். அந்த 22 பெர்ரிய மனுஷங்களும் ஒத்துகிணாங்களாம். சேதி கேளுங்க சாமி. அதுலெ எல்லாரும் பிஸ்னெஸ் காரங்க. ஒரு அரசியல் வாதி கூட இல்லெ. ஹூக்கும்!!!!! டும்! டும்! டும்!
என்னாங்க்றே! முறைக்காதே, சாமி. சுக்ராம்ன்கிற மந்திரிக்கு 5 வருஷம் ஜெயிலு. புலனாய்வு ஆசாமிங்க அந்தக்காலத்து மஹாஜன் வரை தோண்ட்றாக. அவுக எல்லாம் பிஸ்னெஸ்ஸான்னு கேக்க்றயே. இன்னா தெனாவெட்டு, உனக்கு!
டும்! டும்! டும்!
இன்னம்பூரான்
20 11 2011 (இரவு அப்புடேட்டு)

Geetha Sambasivam Wed, Nov 23, 2011 at 10:12 PM

என்னாங்க்றே! முறைக்காதே, சாமி. சுக்ராம்ன்கிற மந்திரிக்கு 5 வருஷம் ஜெயிலு. புலனாய்வு ஆசாமிங்க அந்தக்காலத்து மஹாஜன் வரை தோண்ட்றாக. அவுக எல்லாம் பிஸ்னெஸ்ஸான்னு கேக்க்றயே. இன்னா தெனாவெட்டு, உனக்கு!//
 
அதானே!