Showing posts with label கனம். Show all posts
Showing posts with label கனம். Show all posts

Thursday, May 30, 2013

கனம் கோர்ட்டார் அவர்களே!-5


கனம் கோர்ட்டார் அவர்களே!-5

Innamburan Innamburan Fri, Nov 11, 2011 at 10:41 PM

கனம் கோர்ட்டார் அவர்களே!-5
இன்னம்பூரான்
சட்டதிட்டங்கள் ஏழைக்கும் பாழைக்கும் சமய சஞ்சீவியாக உதவாவிடின், சமத்துவம் ஒரு மாயை. ஜனநாயகம் பயனற்றது. மனித உரிமை பறி போகும். வலிமை விலை போகும். அதர்மம் அரசாளும். கோர்ட்டுக் கச்சேரியிலிருந்து சற்றே நகர்ந்து, மரத்தடி உபதேசம் எதற்கு என்றால், இன்று ‘நவம்பர் 9′ தேசியச் சட்ட ஆலோசனை தினமாகக் கொண்டாடப்படுகிறது என்பதே. The Legal Services Authorities Act, 1987 அமலுக்கு வந்த தினம், 1995-ல். இந்திய அரசாளும் மரபு செங்கோலைப் போற்றுகிறது. பாண்டியன் சபையில் கண்ணகி வழக்காடுவதே மனித உரிமையின் போர்க்கொடி. பாவை மன்றம், சதுக்கப்பூதம், ஆராய்ச்சி மணி, சிபிச்சக்ரவர்த்தியும் புறாவும், ஜஹாங்கீரின் துப்பாக்கி என்பெதல்லாம் ‘தர்மம் தலை காக்கும்’ பாரதபூமியின் சங்கேதங்கள்.
தற்கால வரலாற்று நோக்கில் பார்த்தால், 1851-ல் பிரான்சு நாட்டில் ஏழைகளுக்கு இலவசச் சட்ட ஆலோசனை திட்டமிடப்பட்டது. இங்கிலாந்தில் 1944-ல் உரிய நடவடிக்கைகள் தொடங்கின. தற்காலம், நான் பணி புரிந்த மக்கள் ஆலோசனை மன்றத்தின் மூலமாக இந்த வகையில் ஒரு மாபெரும் மக்கள் பணி, திறம்பட, நாடு முழுதும், தன்னார்வக் குழுக்களால், இலவசமாக, இயங்குகிறது. குடும்பப் பெண்மணிகள்தான் இதன் முதுகெலும்பு. வழக்கறிஞர்களும் வந்து உதவுகிறார்கள். அரசின் திட்டமும் செவ்வனே நடைபெறுகிறது. அமெரிக்காவில் இத்துறையில் தன்னார்வப் பணி இயங்குவதை லாஸ் அஞ்செலசில் ஆய்வு செய்ய முடிந்தது.
ஜனநாயக இந்தியாவில் அடித்தள/கீழ்ப்படுத்தப்பட்ட/நசுக்கப்பட்ட சமுதாயத்திற்கு,(தலித், பெண்ணினம், சிறார்கள், மாற்றுத்திறனாளிகள், இனவெறியால் பாதிக்கப்பட்டவர்கள், தொழிலாளிகள், சிறைப்படுத்தப்பட்டவர்கள், குறைந்த வருட ஊதியம் பெறுபவர்கள் – அநேக மாநிலங்களில் தற்காலம் இது ஒரு லக்ஷம் ரூபாய்). இலவசச் சட்ட ஆலோசனை/உதவி அரசியல் சாஸனத்தின் 39 A பகுதி 1950-ல் அளித்த உரிமை. ஆனால், எல்லாமே நத்தை வேகத்தில் நகர்ந்தன. 1952-லிருந்து 1960 வரை சட்ட அமைச்சர் மாநாடுகள், சட்டக் கமிஷன், அங்குமிங்கும் இது பற்றி விலாவாரியாக பேசிக் கொண்டே இருந்தார்கள். 1960-லிருந்து 1980 வரை இருபது வருடங்களுக்கு, சில மாநிலங்களில் பரிக்ஷார்த்தமாக, சட்ட ஆலோசனை மன்றங்கள், அது சம்பந்தமான போக்குவரத்துக்கள், (என் கணிப்பில் ‘ஏனோ தானோ’ என்று) நடந்த வண்ணம் இருந்தன. 1980-ல் ஜஸ்டிஸ் பி.என்.பகவதி அவர்கள் தலைமையில், ஒரு மேற்பார்வைக் கமிட்டி அமைக்கப்பட்டது. லோக் அதாலத் முறையும் தலை தூக்க ஆரம்பித்தது. அப்பாடா! 1987-ல்  ‘The Legal Services Authorities Act, 1987’ என்ற சட்டமே இயற்றி விட்டார்கள், அரசியல் சாஸனம் பிரகடனப்படுத்தி 37 வருடங்களில். அதற்கப்பறம் கிடப்ஸில் கிடந்த இந்தச் சட்டத்திற்கு, திடீரென்று கும்பகர்ண உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட அரசு, 1994-ல், சில பிரேரணைகளை நிறைவேற்றி, நவம்பர் 9, 1995 அன்று, அடேங்கப்பா!, அரை நூற்றாண்டு கடப்பதற்கு முன், அமலுக்குக் கொண்டு வந்து விட்டார்கள். ரோஷம் பொத்துக் கொண்டு, டிசம்பர் 5-1994 அன்றே, ஒரு மாதத்திற்குள், தேசியச் சட்டப் பணி மையம் நிறுவி விட்டார்கள். அதனுடைய கிளைகள் மாநிலங்களில்/மாவட்டங்களில்/தாலுகாக்களில் உள்ளன. உங்களுக்குத் தெரியுமோ?



கி.காளைராசன் Sat, Nov 12, 2011 at 7:24 AM


ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

2011/11/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
கனம் கோர்ட்டார் அவர்களே!-5
இன்னம்பூரான்
சட்டதிட்டங்கள் ஏழைக்கும் பாழைக்கும் சமய சஞ்சீவியாக உதவாவிடின், சமத்துவம் ஒரு மாயை. ஜனநாயகம் பயனற்றது. மனித உரிமை பறி போகும். வலிமை விலை போகும். அதர்மம் அரசாளும்.

 சத்தியமான வார்த்தைகள்.
சில தீர்ப்புகள் வருவதற்கு முன்னால் மனுதாரர் மரணம் எய்தி விடுகிறார்.  அதுதான் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அன்பன்
கி.காளைராசன்



R.M. Paulraj 


> சட்டதிட்டங்கள் ஏழைக்கும் பாழைக்கும் சமய சஞ்சீவியாக உதவாவிடின்,
> சமத்துவம் ஒரு மாயை. ஜனநாயகம் பயனற்றது. மனித உரிமை பறி போகும்.
> வலிமை விலை போகும். அதர்மம் அரசாளும்.


நான் சுவைத்து ரசித்து அசை போட்டுக்கொண்டிருந்த வரிகள் நண்பர் கா.ரா.வையும் கவர்ந்திருக்கின்றன.

அன்புடன்,
ஆர்.எம்.பால்ராஜ்
R.M.Paulraj



சித்திரத்துக்கு நன்றி: https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTvoz3KzoO2kEuMqNSxe8Mi74ChCFOh8fqnvB640-vJqCi3jXTVnHdlQHvKLYvc_M5QZubzpsv52bHFp3A1peuWZoouoM4CWcbgsETk1NdVzINnrb_hCjyw_Q0eMknB5WsBMDesRlU5IN3/s1600/DSCF4747.JPG
இன்னம்பூரான்
29 05 2013

Sunday, May 26, 2013

கனம் கோர்ட்டார் அவர்களே ~3


கனம் கோர்ட்டார் அவர்களே ~3

Innamburan Innamburan Mon, Oct 10, 2011 at 8:46 AM

கனம் கோர்ட்டார் அவர்களே ~3

  1. Monday, October 10, 2011, 11:51
  2. பிரசுரம்: வல்லமை
சித்திரத்துக்கு நன்றி:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg8YmnJzdBEsPdpR6XLberL6C9ftNMDDX7YlJ0I6UJ__eEkcNbmD72pk-XLuITogPyntWQtT4f6GbaBdlkzHpDitp1SZy2AXjxzkNLV4zz4KH-xUP-lVkCodHr6F6J_w7_hmjFln_ys5LoO/s1600/kavithai+funny+animals-2.jpg
இன்னம்பூரான்


கனமான விஷயங்களை மட்டுமே எழுதி வந்தால், துண்டை உதறி போட்டுக்கொண்டு ஓடிப்போய்விடுவார்கள். கொஞ்சம் லைட்டா எழுதேன், என்றார் தேசிகன். அவர் தான் நமக்கு இன்ஹெளஸ் விமர்சகர். நீங்க எங்கே வேணும் பாருங்கோ ~ரேஷன் கடை, தபாலாபீஸ், வங்கி, கோர்ட்டு, பார்லிமெண்ட்… ஜாலியா சுத்திண்டேஇருக்கும் நகைச்சுவை, அறுவை ஜோக் உள்பட. உங்களுக்கு கோர்ட்டுக்குள் கால் வைத்த துர்பாக்கியம் ஏற்பட்டிருக்கோ? அமீனா கால் வைத்தால் வீடு உருப்படாது. கோர்ட்டில் கால் வைத்தால் நீங்க உருப்படுவேளா? டவுட்! கோர்ட்லே, வயசான ஜட்ஜ் நொண்டிண்டே வரச்சே மஹா டவாலி ( டவாலி களில் மேல் சாதி, கீழ் சாதி உண்டு, சுவாமி!) ‘ஆர்டர்! ஆர்டர்! ஆர்டர்! என்று கூப்பாடு போடுவான். எல்லாரும் பவ்யமா எழுந்து நிற்கணும். ஆமாம்.
இதை மனதில் வைத்துக்கொண்டு ‘அமெரிக்கன் கோர்ட்டுகளில் அனார்டர் (அதாவது ‘ஆர்டர் குலைந்தது’) என்று ஒரு நூல். அதில் இருந்த ஷோக்கான ஜோக்குகளில் சில: எல்லாம் நிஜம். இதை எல்லாம் நோட்ஸ் எடுக்கும் குமாஸ்தாக்கள் சிரிக்கவே முடியாது. ஒரு கருவூலமே வச்சிருக்கேன்.
pastedGraphic.pdf
விவாகரத்து தாவா:
‘காலையில் எழுந்தவுடன் என்ன சொன்னார், உன் புருஷன்?
‘நான் எங்கே இருக்கேன், கமலா’ என்றார்.
‘அதுக்கு போய் கேஸ் போடலாமா, தாயே!’
‘பின்ன! என் பெயர் பத்மினி.’
*
‘கிருஷ்ணன்! இந்த அல்ஸீமர் வியாதி: இதனால், மறதி வருதா?
‘ஆமாங்க.’
‘அது சரி சார்! அது எப்படி உங்க ஞாபகசக்தியை அஃபெக்ட் பண்ணுது?
‘சொல்லத்தெரியல்லையே. மறந்து போச்சே.’
‘கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும். என்ன மறந்தது? ஒரு உதாரணம். சொல்லித்தான் ஆகணும்.’
*
‘டாக்டர்! இது நிஜமா? ஒத்தன் செத்துட்டான், தூக்கத்திலே. இந்த விஷயம், காலாம்பறத்தான் அவனுக்குத் தெரியுமா?
‘வக்கீல் சார்! இது நிஜமா? நீங்கள் வக்கீல் பரிக்ஷை பாஸ் பண்ணது?
*
‘மோஹன்! உங்கள் பையன் 20 வயசு ராமு! அவன் வயசு என்ன? டக்னு சொல்லணும்.’
‘அவன் வயசும் உங்க ஐ.க்யூ அதே ~20.’
*
‘ரஹீம்! உங்களோட ஃபோட்டோ எடுக்கச்ச, நீங்க அங்கே இருந்தீங்களா?
‘தண்ணிப் போட்டுட்டா கோர்ட்டுக்கு வந்தீங்க?
*‘ கவிதா! உங்கள் முதல் விவாகம் எதனால் ரத்து ஆனது?
‘சாவு’.
‘யார் சாவு?’ உடனே பதில்.
‘நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள், வக்கீல் (மடையனே!)
*
‘அந்த நபரை வர்ணிக்கவும்.’
‘சராசரி உயரம், குறும் தாடி.’
‘க்விக்! ஆணா? பெண்ணா?
‘ வக்கீல் சார்! ஆண் என்று நினைக்கிறேன். எதற்கும் சர்க்கஸ் வந்திருந்ததா என்று விசாரித்துக்கொள்ளுங்கள்.’
*
‘டாக்டர்! நீங்கள் செய்த பிரேத பரிசோதனைகளில், எத்தனை பேர் செத்தவர்கள்?
‘வக்கீல் சார்! எல்லாருமே. உயிரோடு இருந்தவங்க, சண்டை போட்டு ஓடி போய்ட்டாங்க.
*
‘டாக்டர்! இந்த குப்புசாமி பிரேதத்தை எத்தனை மணிக்கு பரிசோதனை செய்தீர்கள்?
‘காலை 8 30க்கு.
‘அத்தருணம் அவர் செத்து விட்டாரா?
‘அதை விடுங்க. நான் அறுத்து முடிக்கச்சே குப்புசாமி பிணம்.’

பி.கு. ஸர் ஜான் சைமனும், திருவள்ளூர் குடியானவனும். தெரியுமோ?
இன்னம்பூரான்

திவாஜி Mon, Oct 10, 2011 at 9:58 AM

ஹில்லேரியஸ்!
அப்பப்ப எடுத்து உடறது!


Subashini Tremmel Mon, Oct 10, 2011 at 8:21 PM




விவாகரத்து தாவா:
‘காலையில் எழுந்தவுடன் என்ன சொன்னார், உன் புருஷன்?
‘நான் எங்கே இருக்கேன், கமலா’ என்றார்.
‘அதுக்கு போய் கேஸ் போடலாமா, தாயே!’
‘பின்ன! என் பெயர் பத்மினி.’*
இது நல்லாயிருக்கு.

 ..
*
‘அந்த நபரை வர்ணிக்கவும்.’
‘சராசரி உயரம், குறும் தாடி.’
‘க்விக்! ஆணா? பெண்ணா?
‘ வக்கீல் சார்! ஆண் என்று நினைக்கிறேன். எதற்கும் சர்க்கஸ் வந்திருந்ததா என்று விசாரித்துக்கொள்ளுங்கள்.’

:-)


சுபா

செல்வன் Mon, Oct 10, 2011 at 9:15 PM


கணவனும், மனைவியும் அசந்து தூங்கி கொண்டிருந்தார்கள்.அதிகாலை நேரம்.மனைவியின் கனவில் பக்கத்து வீட்டுகாரன் வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். அவனுடன் உல்லாசமாக கனவில் அவர் சோபாவில் உட்கார்ந்து பேசிகொண்டிருக்க...கதவை திறந்துகொண்டு அவர் கணவர் உள்ளே வருகிறார்.

பதறி எழுந்த மனைவி "ஐயோ என் கணவர் வருகிறார்..கணவர் வருகிறார்" என கத்தினார்

இதை கேட்டதும் பாதி தூக்கத்தில் அருகே படுத்திருந்த அவள் கணவன் எழுந்து ஜன்னலை தாண்டி எட்டிகுதித்து வெளியே ஓடினான்

Subashini Tremmel Mon, Oct 10, 2011 at 9:20 PM



படு ஜோர்.. :-)

சுபா


Nagarajan Vadivel Tue, Oct 11, 2011 at 2:20 AM

இதே கதை ஒரு சிறிய மாற்றத்துடன்
கனவன் ஒரு கனவான்.  அரண்மனையில் அரசவைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்புகிறர்.  படுக்கை அறைக்குள் நுழைந்தால் அதிர்ச்சி.  மனைவியும் பாதிரியாரும் படுக்கையில்.  உடனே கனவான் படுக்கை அறையின் பலகனியைத்திறந்து சாலையில் போய்க்கொண்டிருந்தவர்களைக் கைதட்டிக் கூப்பிட்டார்.  அவர்களைப் பற்றிச் சொல்லப்போகிறார் என்று பயந்த பாதிரியாருக்கு அதிர்ச்சி.  கனவான் சாலையில் நின்று வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து. 

ஓ பாவிகளே பரமண்டலத்திலிருக்கும் பரம பிதாவே இவர்களை ரட்சியும் என்று சொல்ல ஆரம்பித்தார

மனைவி கனவனைப் பார்த்து என்ன செய்கிறீர்கள் என்று கேட்க

இங்கே பாதிரியார் என் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். நான் அவர் வேலையைச் செய்துகொண்ட்யிருக்கிறேன் என்றூ மறுமொழி சொன்னார்.
தப்பா?
நாகராசன்


Geetha Sambasivam Tue, Oct 11, 2011 at 10:07 PM

கலக்கல்



பி.கு. ஸர் ஜான் சைமனும், திருவள்ளூர் குடியானவனும். தெரியுமோ?
இன்னம்பூரான்


Innamburan Innamburan Tue, Oct 11, 2011 at 10:15 PM

இனி யானுக்கு பயம் ஒன்றும் இல்லை. சாக்கு மூட்டையை பிரிக்க வேண்டியது தான்.



Sunday, April 7, 2013

கனம் கோர்ட்டார் அவர்களே -15

கனம் கோர்ட்டார் அவர்களே -15
  1. Monday, April 8, 2013, 5:22
  1. 1 comment


இன்னம்பூரான்

சில செய்திகளைப் பார்த்தால் வாளாவிருக்கமுடியவில்லை. அது என்னுடைய பலவீனம். ‘வல்லமை’க்கு அது வலிமை தரும் என்ற பகற்கனவு வேறே. இன்று உலகளவில் ஊடகங்களில் பெரிதும் பேசப்படும் ‘நோவார்ட்டீஸ்’ வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 1, 2013 அன்று  அளித்த தீர்வு ‘சாலமன்’ ஜட்ஜ்மெண்ட்டுக்கு இணையானது என்று சொன்னால் அது மிகையல்ல. அது என்ன ‘சாலமன்’ ஜட்ஜ்மெண்ட்? சாலமன் சக்கிரவர்த்தி அதி மேதாவி. ஒரு வழக்கு. இரு பெண்மணிகள் ஒரு குழந்தையை ‘தனது’ என்று வாதாடுகிறார்கள், அவர் முன்னிலையில். இக்கட்டான நிலை. இரு தரப்பும் பலத்த சாட்சியங்கள். அதனால் என்ன? குழந்தையை சரி பாதியாக வெட்டி, ஆளுக்குப் பாதி என்று தீர்ப்பு அளிக்க, ஒருவள் கதறினாளாம், ‘ஐயோ வேண்டாம். அவளே வைத்துக்கொள்ளட்டும்’ என்று. அவள் தான் உண்மையான அன்னை என்று கூறி அவளிடம் குழந்தையை ஒப்படைத்தாராம்.  அது நினைவுக்கு வந்தது.
திடீர் குபேரனாக வேண்டுமானால் ஒன்று கள்ளுக்கடை வைக்கவேண்டும்; அல்லது மருந்து வியாபாரம் செய்யவேண்டும். முதலில் ஒரு கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். 1977: தீவிரமான வியாதி, எம் குடும்பத்தில்.  ஒரு மருந்து கொடுத்து, தினம் மூன்று மாத்திரை. சிங்கப்பூரிலிருந்து வரவழைக்க வேண்டும் என்றார்கள். ஒரு மாத்திரையின் விலை ரூபாய் 200/-. தவித்துப்போய்விட்டோம். சில வசதிகள் இருந்ததால், வழி பிறந்தது. எங்கள் சொந்தப் பிரச்னை தணிந்தது. ஆனால், சமுதாயப் பிரச்சனை மேருமலை அளவு என்றும் புரிந்தது. வியாதியின் தீவிரம், பாதிப்பு, ஏழை மக்கள் பாடு ஆகியவற்றைப் பற்றி விவரங்களை சேகரித்துக்கொண்டு, Drug Controller இடம் சென்று, இந்தியாவில் இந்த மருந்து தயாரிக்க வேண்டும், விலையும் குறைய வேண்டும் என்று பரிந்துரை செய்தேன். அவர் விழித்துக்கொண்டு சிரிக்கவில்லை. அது தான் பாக்கி. ‘இதெல்லாம் நடக்கற காரியம் இல்லை. போய் வா, மகனே’ என்று அவர் ஆசீர்வதித்தார். நானும் விடாக்கொண்டன் ஆச்சே. மேலிடங்கள் சென்று வாதிட்டேன். ஸ்க்ரூவை முடுக்கினேன். பத்து வருடங்களுக்குள் அதை இந்தியாவில் தயாரித்து, மூன்றாவது வருடம் அதன் விலை ரூபாய் 5/-. ஆனால், அதற்குள் ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது. எங்கள் வீட்டில், அதை நிறுத்தச்சொல்லி அறிவுரை வந்ததால், கையில் இருந்ததை ஒரு ஏழை நோயாளிக்குக் கொடுத்தோம். சில மாதங்கள் தாக்குப்பிடித்தாலும், சில உதவிகள் பெறமுடிந்தாலும், கட்டுபடி ஆகவில்லை. நாங்களும் வேறு ஊருக்கு மாறி போய்விட்டோம். அந்தப்  பெண்மணி அகால மரணமடைந்தார்.
அத்தகைய துர்பாக்கியம் ஏற்படுவதைத் தடுக்கிறது, இந்தத் தீர்வு. மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் ஆய்வு செய்ய செலவு அதிகம் செய்கிறார்கள். அதை மீட்க விரும்புவது நியாயம். அதனால் காப்புரிமை பெற்று, கணிசமாக யானை விலை/குதிரை விலையேற்றம் செய்கிறார்கள். அத்துடன் திருப்தி அடையாமல், முலாம் பூசும் (evergreening) சித்து வித்தை செய்து மறுபடியும் காப்புரிமை பெற்று, வெளுத்து வாங்குகிறார்கள். நோவார்ட்டீஸ் என்ற பிரபல கம்பெனி புற்று நோய் தணிக்கும் க்ளைவக் (Glivec or Gleevec,) என்ற மருந்துக்கு 1996ல் பெற்ற காப்புரிமை காலாவதி யாகும் வேளையில், சின்ன மாறுதல் ஒன்று செய்து, தங்களுடைய ஏகபோகத்தை நிலை நாட்ட முயன்றார்கள். அந்த மருந்து ஆயுசு பரியந்தம் சாப்பிட வேண்டும். மாதம் ரூ. 1.20 லக்ஷம் ஆகும். ஒரு இந்திய கம்பெனி அதே மருந்தை மாதம் எட்டாயிரம் ரூபாயில் தருகிறது. அதைத் தடுக்க நோவார்ட்டீஸ் போட்ட வழக்கை, உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்த தீர்வு 300 ஆயிரம் நோயாளிகளுக்கு பேருதவி.
தீர்வின் மைய கருத்து: “…புதியது என்று சொல்லப்படும் இமாடினிப் மெஸைலேட் புதியது அல்ல. 1996ல் காப்புரிமை வாங்கிய ஜிம்மர்மென் பேடண்டிற்கும், இதற்கும் வித்தியாசமில்லை. நோவர்ட்டிஸின் விண்ணப்பத்திலேயே இது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் சென்னை காப்புரிமை அலுவலகமும், அதனுடைய அப்பீல் அலுவலகமும், இந்த விண்ணப்பத்தை நிராகரித்தது சரியே…”.
பின்னணி என்று பார்க்கப்போனால், ஃபைனான்சியல் டைம்ஸ் என்ற இங்கிலாந்து இதழ் சொன்ன மாதிரி, இந்தியாவின் காப்புரிமை அணுகுமுறை, சர்வதேச வணிக மன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துப்போனாலும், மருந்து கம்பெனிகளால் வெறுக்கப்பட்டது. இப்போது கூட நோவர்ட்டீஸ், இந்தத் தீர்வு நோயாளிகளுக்கு உபத்ரவம்; நாங்கள் புதிய மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்யப்போவதில்லை என்பதால் என்கிறது. அதனுடைய விண்ணப்பத்தில் உள்ள முரண், வாசாலகம் பற்றியெல்லாம் காஷ்டமெளனம். இது இங்கிலாந்தின் பிரபல சட்டம் சார்ந்த பேராசிரியர் டாக்டர் த்விஜேன் ரங்கனேகரின் கருத்து.
இன்றைய (ஏப்ரல் 6, 2013) அப்டேட்: மெர்க் ஷார்ப் அண்ட் டோஹ்ம் என்ற பிரபல அமெரிக்க கம்பெனி தன்னுடைய நீரழிவு நோய் மருந்துகளின் காப்புரிமையை ஒரு இந்திய கம்பெனி மீறுகிறது என்ற வழக்கை டில்லி உயர் நீதி மன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
சிக்கலான/ நுட்பமான செய்திகளை நான் விவரிக்க வில்லை. இதுவே அலுத்துப்போய்விடுகிறது அல்லவா!
சித்திரத்துக்கு நன்றி:

பிரசுரத்துக்கு நன்றி: வல்லமை மின் இதழ்:http://www.vallamai.com/?p=34279#comments