Saturday, August 3, 2019

ஆசிய ஜோதி,பாகம் 1, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்

ஆசிய ஜோதி: பாகம் 1 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்

https://www.youtube.com/watch?v=hRxZwOOXIBg&t=57s

இன்னம்பூரான்

last comment
Fine way of describing, and nice article to obtain data on the topic of my presentation subject, which i am going to present in institution of higher education.
Reply: Welcome. Do go ahead. I shall post the next passages soon. How do we keep in touch, Sir?
Innamburan@gmail.com

Wednesday, July 24, 2019

அன்றொரு நாள்: நவம்பர் 21,லாசரேஸ்ஸும் குரேஷியும்

GmailInnamburan S.Soundararajan

மீள்பதிவு
அன்றொரு நாள்: நவம்பர் 21 லாசரேஸ்ஸும் குரேஷியும்
1 message

Innamburan Innamburan 21 November 2011 19:06



அன்றொரு நாள்: நவம்பர் 21
லாசரேஸ்ஸும் குரேஷியும்
அண்ணன் தம்பி சண்டை அண்டை வீட்டுக்காரன் சண்டையானால், காழ்ப்புணர்ச்சிக்குக் கொண்டாட்டம். ராஜாங்கங்கள் போர் புரிந்தாலும், அவர்களுக்கு கீழ்ப்படிந்த ராணுவம் கத்தி வீசி, வேலெறிந்து, தோட்டா பறக்க, அடி தடியில் இறங்கினாலும், மக்களிடையை பகையில்லை. சிப்பாய்களும் மக்களின் உறவினர் தான். என்னை கேட்டால், சாந்தி நிலவவேண்டுமெனில், ராணுவம் தகுதி பெற்ற சமாதான தூதுவர்களை தரக்கூடும். உங்களுக்கு நவம்பர் 21, 1971 அன்று கரீப்பூரில் நடந்த ‘பொய்ரா’ முள்ளுப்பொறுக்கி சண்டையை பற்றி தெரியுமோ? பங்களா தேஷ் பிரசவம் சிஸேரியன்; சிக்கலான சிஸேரியன்; உதிரபோக்கு அதிகம்; எத்தனை தடவை பாசாங்கு இடுப்பு வலி! முக்தி பாஹிணி, பிரசவம் பார்க்க வந்த அத்தைக்காரி மாதிரி. செவிலியவதாரம் இந்தியாவுக்கு. சூத்ரதாரி, இந்திரா காந்தி. முடிஞ்சா, அடுத்த மாதம் அது பற்றி எழுதலாம்!

இந்த முள்ளுப்பொறுக்கி சண்டையின் மகத்துவம், இந்தியா விமானப்படையின் சாகசம்; தக்கதொரு தருணத்தில் தூசிப்படைக்கு கவசமாக இயங்கிய வெள்ளோட்டம். ஸேபர் (sabre) என்றால் பட்டாக்கத்தி. அது பாகிஸ்தான் விமானம். நாட் (gnat) என்றால் சில்வண்டு. அது இந்திய விமானம். கடுமையான டாங்கி போர், தரையில். பாகிஸ்தான் ஆகாயத்துணை கொணர்ந்தது, பட்டொளி வீசி. இந்தியா ‘ஞொய்ங்க்’ என்று தாக்கியது. ‘ஞொய்ங்க்’ வாகை சூடியது.
மணி14 48: சேபர் டைவிங்க். மணி14 53: வண்டுகள் ‘ஞொய்ங்க்’. போர்விமானிகள் பக்ச்சி, மேஸ்ஸே,ஸோரஸ், கணபதி, லாசரேஸ் ஆகியோரின் தாக்குதலை பட்டாக்கத்திகள் தாங்க முடியவில்லை. இரண்டு பாகிஸ்தானிய விமானிகள் சிறைப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒருவரான ஃப்ளைட் லெஃப்டினெண்ட் பர்வேஸ் மேஹ்டி குரேஷி பிற்காலம் பாகிஸ்தானின் விமானப்படை தலைவரானார். அவருடைய விமானத்தை வீழ்த்திய லாசரேஸ் க்ரூப் கேப்டன் பதவியிலிருந்து ஓய்வு பெற்று, குன்னூரில் ஒரு கிருத்துவ மையத்தில், தன்னார்வத்தொண்டு செய்து வந்தார். ஏர் மாஷல் குரேஷி 1996ல் தலைமை பதவி பெற்றதுக்கு வாழ்த்து அனுப்ப, அவரும் கனிவுடன், தான் நேரில் பார்த்த, இந்திய விமானப்படையின் சாகசங்களை வானளாவ புகழ்ந்து பதில் அனுப்பினார். அது கண்டு என் நினைவுக்கு வந்தது ‘அன்றொரு நாள்: ஜூலை 11 & டிசம்பர் 15, 1971‘. அதிலிருந்து ஒரு பகுதி:  

‘...பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசர்: ஐயா! எப்படி சொல்வேன்? விதி விளையாடுகிறது! நாமோ அன்யோன்யாமாகிவிட்டோம். சொல்லமுடியாமல் என் நெஞ்சு அடைக்கிறது. அருண் மாவீரன். அன்று (டிசம்பர் 15, 1971) தன்னுடைய டாங்கியுடன், அச்சம் தவிர்த்து, ஆவேசம் மூண்டு, இம்மை மறந்து, ஈட்டி போல் பாய்ந்து, எங்கள் படைகளை அதகளமாக்கினான். இருபக்கமும் பயங்கர உயிர்ச்சேதம். தளவாடங்கள் நொறுங்ககிக்கிடந்தன. நாங்கள் இருவர் மட்டும். எதிரும் புதிருமாக. பகையாளி. ஒரே க்ஷணத்தில் இருவரும் சுட்டோம். நான் இருக்கிறேன். அதான் பார்க்கிறீர்களே.

இது உரையாடலோ? உருக்கமான இரங்கலோ? அது பற்றி பேச நான் தயாராக இல்லை. பிரிகேடியர் க்வாஜா முகம்மது நாசரின் வீடு, ஜனங்கள், ஏன் ஜன்னல்கள்!, பிரிகேடியர் எம்.எல். க்ஷேத்ரபாலின் மனோநிலை (‘பரம வீர் சக்ரா’ ஷஹீத் அருண் க்ஷேத்ரபால் (21) அவர்களின் தந்தை என்று சொல்லித்தான் தெரியவேண்டுமா?, இந்தியனே!) எல்லாமே ஒரு  ஒளிவட்டத்தில், ஒரு சூன்யத்தில். இதை விலாவாரியாக விமரிசிக்க மானிட ஜன்மங்களால் இயலாது. அவரவருக்கு, அவரவர் கற்பனாசக்தி, மனோதர்மம்!...’

நான் சொல்ல மேலே என்ன இருக்கிறது?
இன்னம்பூரான்images+%252861%2529.jpg
21 11 2011

... border in the Battle of Garibpur, and hostilities commenced.
உசாத்துணை:

Wednesday, July 10, 2019

தண்டி யாத்திரை

தண்டி யாத்திரை

https://www.youtube.com/watch?v=79bslyeR028&t=

இன்னம்பூரான்

Sunday, June 16, 2019

‘சாதிப்பெயர்…’

INNAMBURAN ON CASTE SURNAMES

‘சாதிப்பெயர்…’ 
இன்னம்பூரான் 25 03 2016
சாதிப்பெயரைச் சொல்லி அழைப்பதையும், அதை எடுத்துரைப்பதையும், அவ்வாறு எழுத்துப்பழகுவதையும் பண்பற்றதாகவும், அநாகரீகமாகவும் கருதும் காலகட்டமிது. அந்த கருத்து தமிழ்நாட்டில் அதிகமாக உலவதும் கண்கூடு. பந்துலுவும், ரெட்டியும், நாயுடுவும் ஆந்திராவில் சகஜமாக நடமாடுகிறார்கள். அண்டை கேரளாவில், மேனனும், நாயரும், பணிக்கரும் வந்து போய்க்கொண்டு இருக்கிறார்கள். ஏன்? நம்பூதிரிபாட் முதல்வராக இருந்தாரே? சாதிப்பெயரை விலக்காத கம்யூனிஸ்ட்! கன்னடதேசத்திலோ, ராவுஜியும், அய்யாவும், வடநாட்டிலோ சதுர்வேதியும் , திரிவேதியும், த்விவேதியும், சக்சேனாவும், மோடியும், காந்தியும் படேலும், அரோராவுமாக பற்பல ‘சாதியை சுட்டும்’ துணைப்பெயர்களில்லா ஆளில்லை, நேரு உட்பட. இஸ்லாமியர் என்றால், தமிழ்நாட்டில் இல்லாத ராவுத்தர், மரைக்காயர், லப்பைகளா?
இந்திய மக்கள் விழிப்புணர்வுடன் ஆங்கிலேய கலோனிய ஆட்சியை எதிர்த்துப்போராடிய காலகட்டத்தில், தமிழ் நாட்டில் ‘முதலியார்’ நாயக்கர்’ ‘நாயுடு’ என்ற சாதிப்பெயர்கள் மரியாதையுடன் எடுத்துரைக்கப்பட்டன. அவர்கள் திரு.வி.க.வும், ஈ.வே.ரா.வும், வரதராஜுலு நாயுடுவும் ஆவார்கள். திரு.வி.க. அவர்கள் தன் பெயரை ‘கல்யாண சுந்தரம்’ என்று எழுதினாலும், வீட்டில் அவர் ‘சின்ன முதலியார்’ தான்; மூத்தவரான திரு.வி.க. அவர்கள் தான் பெரிய முதலியார். என் தந்தையும், நண்பர்களும் இவ்வாறு தான் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டனர்.
‘உ.வே.சா அவர்கள் தன் ஆசிரியரிடம் வைத்திருந்த பக்திக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது. பிள்ளையவர்கள் என்று சொல்வார்களே அன்றி முழுப்பெயரைச் சொல்லக்கூடப் பயப்படுவார்.’ இதனால் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. சகஜ நிலையில் போக்குவரத்து இருந்து வந்தது. ‘நான் ஒரு சூத்திரன்’ என்று எழுதியவர் தன்னை சட்டநாத கரையாளர் என்று தான் அறிவித்துக்கொண்டார். நீதிக்கட்சித்தலைவர்கள் சாதிப்பெயரை அழித்துக்கொள்ளவில்லை – டி.எம்.நாயர், தியாகராஜச் செட்டி. திராவிட கட்சிகள் தலையெடுத்து ஆட்சிக்கு வந்த பின் ஐயங்கார் தெரு ‘தெரு’ ஆனது; சோமசுந்தர முதலியார் தெரு ‘சோமசுந்தரம் தெரு’ ஆனது; இது எல்லாம், ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ரெட் ஹெர்ரிங். தமிழில் பாசாங்கு. திசையை இப்படியெல்லாம் திருப்பி, இன்று வரை சாதி அடிப்படையில் மட்டுமே தேர்தலுக்கு ஆள் பிடிக்கிறார்கள், அந்த திராவிடக்கட்சிகள். இதெற்கெல்லாம் கேள்வி முறை கிடையாதா? எத்தனை வருடங்கள் நாம் ஏமாந்த சோணகிரியாக இருப்போம்?
நிகழ்காலத்துக்கு வருவோம்.
சங்கர்-கெளசல்யா ஜோடியை கலைக்க இருவரையும் பயங்கரமாகத் தாக்கி, சங்கரை கொன்ற மேல்சாதி கண்டது என்ன? – சிறை சென்றதும், பெற்ற பெண்ணை அனாதையாக்கியதும், தன் குடும்பத்தின் மேல் சேற்றை வாரி போட்டுக்கொண்டது தான்
– இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அப்பனின் ஆத்திரம் மட்டும் தானா?
‘வெட்டி சாய்க்கிறார்கள்…சுற்றி நின்றவர்கள் வேடிக்கைப் பார்க்கிறார்கள். பதறி விலகுகிறார்கள்‘
-இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? இல்லை தமிழர்களின் பாழாய்ப்போன பயந்தாங்குளி குணமா? கெளசல்யாவின் அப்பனும், மாமனும் மிரட்டியிருக்கிறார்கள்.. இரண்டு மாதம் முன்னால் உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் இந்த தம்பதி கொலை பயம் பற்றி புகார் செய்தார்கள். ஆனால் போலீஸ் புகாரை வாங்கவில்லை. -இது சின்ன சமூகத்தின் சாதி வெறியா? அல்லது போலீசின் அராஜகமா? அவர்களை சட்டம் அணுகுமா?
சட்டத்தை மட்டம் தட்டியவர்கள் யார்? இத்தகைய படுகொலைகளை தடுக்க எண்ணி ஒரு கோடி பெண்கள் அக்காலத்து அமைச்சர். ப.சிதம்பரத்திடம் ஒரு மனு கொடுத்தார்கள். தோழர்.பிருந்தா காரட்டும், தேசீய மகளிர் ஆணையமும், சட்ட ஆணையமும் பரிந்துரைத்தனர். என்ன நடந்தது? உரித்த வாழைப்பழமாக சட்ட ஆணையம் ‘Prohibition of Unlawful Assembly Interference with freedom of Matrimonial alliance’ என்ற சட்டவரைவை அளிக்க, பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு குழு அலசி ஒரு மசோதாவை மாநிலங்களின் கருத்து கேட்க, அனுப்பி வைத்தது, காருண்யம் பொழிந்த ப.சி. யை உள்ளடக்கிய மத்திய அரசு. -இது பெரிய சமூகத்தின் சாதி வெறியா? பிரச்சனையை மறைத்து வைக்கும் சூழ்ச்சியா? ஏன் இந்த தட்டாமாலை? கருணாகரமான [தவறாக நினைக்க வேண்டாம்! ‘எல்லாம் ஒரு குட்டையில் அழுகிய மட்டை தான் – காமராசர்’.] தமிழ் நாட்டு அரசு 23 03 2016 வரை மவுனம் -இது சின்ன/பெரிய சமூகத்தின் சாதி வெறியா? இல்லை அரசு கொள்கையா?
வரிந்து, வரிந்து பக்கம் பக்கமாக சாதிவெறி பற்றி எழுதும் நண்பர்கள் ஏன் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை என்று எனக்கு புரியவில்லை. ஆங்கிலத்தில் Vicarious pleasure என்பார்கள். தமிழில் ‘சொல்லி மகிழ்வது’ எனலாமோ? எனக்கு இரண்டு மொழியும் தெரியாது.
இணைய பெருமக்களே! நமக்குள் பேசி பயனில்லை.களத்தில் இறங்குங்கள். சமயம் பார்த்து விண்ணப்பிக்கிறேன். என்னால் ஆனதை செய்து வருகிறேன். அது மற்றவர்களின் ப்ரைவசியை பாதிக்கக்கூடாது என்பதால், இப்போதைக்கு முற்றுப்புள்ளி. 
-#- 
நன்றி: ஆனந்த விகடன்: 23 03 2016 
இன்னம்பூரான்

Saturday, June 15, 2019

முத்துப்பட்டன் கதை 5 இறுதி பாகம்.



முத்துப்பட்டன் கதை 5 இறுதி பாகம்.

https://www.youtube.com/watch?v=B8q0JcfBAb0

இன்னம்பூரான்

Monday, June 10, 2019

முத்துப்பட்டன் கதை 4வது பாகம்



முத்துப்பட்டன் கதை 4வது பாகம்



https://www.youtube.com/watch?v=3VuvtzCdg-Y&t=106s

இன்னம்பூரான்

Wednesday, June 5, 2019

முத்துப்பட்டன் கதை 3

நண்பர்களே,

இது முத்துப்பட்டன் கதை 3:

https://www.youtube.com/watch?v=dmcVDD3qXwA&t=2s

இன்னம்பூரான்

Wednesday, May 29, 2019

முத்துப்பட்டன் கதை 2

முத்துப்பட்டன் கதை 2


https://www.youtube.com/watch?v=dmcVDD3qXwA&t=36s


இன்னம்பூரான்

Sunday, May 26, 2019

முத்துப்பட்டன் கதை 1


முத்துப்பட்டன் கதை பகுதி 1

https://www.youtube.com/watch?v=2a9QDvnKVoQ&t=48s

இன்னம்பூரான்

Saturday, May 11, 2019

நான் ஆண்டவனின் திருவோடு : Ieshia Evans

Update
Heroes arise from the ordinary people.

World Press Photo 2017

Drawing entries from more than 5,000 photographers, from 125 countries, the 60th annual World Press Photo Contestrecognises the best work from press photographers across the globe. 
Lone activist Ieshia Evans stands her ground while offering her hands for arrest as she is charged by riot police during a protest against police brutality outside the Baton Rouge Police Department in Louisiana, U.S., 9 July 2016. Evans, a 28-year-old Pennsylvania nurse and mother of one, traveled to Baton Rouge to protest against the shooting of Alton Sterling. 

Pictured: Taking A Stand In Baton Rouge by Jonathan Bachman, Thomson Reuters - winner of Contemporary Issues - First Prize, Singles
இது ஒரு மீள்பதிவு. தோன்றியது போட்டேன்

இன்னம்பூரான் பக்கம்
நான் ஆண்டவனின் திருவோடு
இன்னம்பூரான்
ஜூலை 12 , 2016


இந்த படத்தை கண்டவுடன், எனக்கு என்னமோ மஹாத்மா காந்தி தான் பொக்கைவாய் சிரிப்புடன் வந்து நிற்கிறார். தென்னாப்பரிக்காவில் அவர் ஒரு அமைதியான கிளர்ச்சியை துவக்கி வைக்கிறார், அரசு இந்திய திருமணங்கள் செல்லாது என்ற விதியை நிர்ணயித்த போது. அது தான் உலக வரலாற்றில் முதல் அமைதி புரட்சி எனலாம். ஒருவர், இருவர் என புறப்பட்ட ஊர்வலம், குஞ்சும் குளவானும், படி தாண்டா பத்தினிகளும், ஆயிரக்கணக்கில் புடை சூழ, களை கட்டி விட்டது. தாட்பூட் தஞ்சாவூர் என்று பயமுறுத்திய அரசு கையை பிசைந்து கொண்டு அப்பாவியாக நிற்கிறது. அந்த காலகட்டத்தில் ரயில்வே ஹர்த்தால் அறிவிக்கப்படுகிறது. ‘உங்களுக்கு அதனால் வேலை அதிகம். உங்களுக்கு உதவியாக என் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திக்கொள்கிறேன்’ என்று அரசுக்கு அவர் எழுத, அதிபர் ஜெனெரல் ஸ்மட்ஸின் காரியதரிசி, ‘உங்களை என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம்.’ என்று நன்றி கூறுகிறார். முழு விவரமும் ‘அன்றொரு நாள்’ தொடரில் எழுதியிருக்கிறேன். ரோஸா பார்க் அவர்களும், மார்டின் லூதர் கிங்கும் அவ்வாறே பவனி வந்தார்கள்.  யாராவது கேட்டால் மீள்பதிவு செய்யலாம். இது நிற்க.

சில சித்திரங்கள் வரலாற்றின் மையக்கருவான வினாடியை கையகப்படுத்தி, அதை நிரந்தர பதிகமாக பதிந்து விடுகின்றன.
ஆழ்ந்து கவனித்தால், அவை இயல்பாகவே அமைந்தவையாக இருக்கும். காந்திஜி உப்பு அள்ளுவதும், டியான்மென் சதுக்கத்தில் டாங்கி முன் சமாதான புறாவாக நின்ற மனிதனும், வியாட்நாம் போரில் விஷவாயு வெடியால் பற்றிய தீயுடன் ஓடி வந்த பெண்குழந்தையும், நாஜி கொடுமைகளும், போரிலிருந்து திரும்பிய ராணுவவீரன் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு பெண்ணை கட்டி முத்தமிடுவதும், ஜான் கென்னடியின் சவப்பெட்டிக்கு சலாம் அடிக்கும் சிறுவன் ஜான் ஜானின் படமும், சென்னை வெள்ளத்தில் மனிதாபிமானத்துடன் பணி செய்த சில ஆர்வலர்களின் மனிதநேயப்படங்களும், மற்றும் பலவும் எண்ணில் அடங்கா. சிந்தியா காக்ஸ் உபால்டோ இந்த படத்தையும் அந்த வரிசையில் சேர்கிறார்.

இந்தியாவில் இன்றளவும் தீண்டாமை ஒழிக்கப்படாத காலகட்டத்தில், இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் அடிமைகளாக நடத்தப்பட்ட ஆஃப்ரோ அமெரிக்கர்கள் மிகவும் முன்னேறியுள்ளார்கள். ஜனாதிபதியே அந்த பின்னணியை சார்ந்தவர். எனினும், இன்று கூட அந்த இனத்தினரை போலீசார் கடுமையாக தண்டிக்கும் நிகழ்வுகள் லாஸ் ஏஞ்சலஸ், சைண்ட் லூயிஸ், பேடன் ரூஷ் போன்ற இடங்களில் நடந்துள்ளன. அவர்களில் சிலர் சுட்டுத்தள்ளப்பட்டனர். அல்டன் ஸ்டெர்லிங் என்பவர் ஜூலை 9 2016 அன்று அவ்வாறு
சுடப்பட்டு இறந்தார்.  

அதை கண்டிக்கும் வகையில் நேற்று நடந்த கிளர்ச்சியில் பங்கு கொண்ட ஒரு இளம்பெண்ணின் படம் இது. ஏதோ ராக்ஷஸர்கள் போல் பலவிதமான பயங்கரமான தளவாடங்கள் அணிந்த போலீஸ் இருவர் இந்த பெண்ணை கைது செய்ய வருகிறார்கள். மயில் ராவணன் தோற்றான். அத்தனை ஜோடனை. பின்னால் ஒரு அசுர படையே நிற்கிறது.
சுற்றி வர சூறாவளி அடிக்க, சாந்தஸ்வரூபிணியாக அதன் மையத்தில் தனது மெல்லிய ஆடை காற்றில் அசைய, முகத்தில் அகத்தின் அமைதி நிலவ, நிற்கிறாள் இந்த பெண். அவள் பெயர்  இஷியா ஈவான்ஸ். ஜோனாதன் பக்ஹ்மன் எடுத்த இந்த நிழற்படம் உலகம் முழுதும் சுற்றி விட்டது. திருமதி ஈவான்ஸ், ‘எல்லாருக்கும் நன்றி. இது இறைவனின் செயல். நான் இறைவனின் திருவோடு மட்டும் தான்' என்று அடக்கத்துடன் கூறுகிறார்.
-#-
சித்திரத்துக்கு நன்றி

படித்தது: உலகாளவிய நாளிதழ்கள்.

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com