Saturday, April 5, 2014

வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 1


வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 1

இன்னம்பூரான்
05 04 2014

தேசிய தேர்தல் 2014 காலகட்டத்தில் இந்தியாவில் இருக்க விரும்பினேன், ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கும் அமெரிக்காவுக்கு விசிட் அடிக்கும் யான். இனம் காணமுடியாத வியாதிக்கு காய்ச்சல் அறிகுறி என்பது போல, தேர்தல் கணகணப்பும் ஜனநாயகத்தின் நோய் நொடிகளில் அறிகுறியே. இங்கு வந்த பின் பாமரதரிசனமும், சொற்மாரி இந்திய பிரஜையின் அலசல் தூறல்களும், ஊடகங்களின் ஊகங்களும், அரசியல் வாதிகளின் மாய்மாலமும், கசமுசாக்களும், கட்டித்தழுவி முதுகில் குத்தும் முரணாசைகளும், endangered species ஆன பிரதிநிதித்துவ ஜனநாயகமும், காசு வாங்கி மெய்கீர்த்தி பாடும் ஊடகக்குஞ்சுகள் முதல் காசு கொடுத்து ஓட்டுக் கேக்கும் கேடிகள் வரை மக்களுக்கு துரோகம் செய்வதும், முதல் தேர்தலில் ஓட்டுப்போட்ட என்னை வாட்டி வதைக்கின்றன. ‘புலி வருது...’ தொடரை படித்த வெளிநாட்டு நண்பர்கள், ‘நுட்பம் கூறுக’ என்கிறார்கள். தொடருக்கு கட்டியம் கூறியாகிவிட்டது.

இலக்கணம்: எல்லாவற்றையும் பற்றி எழுத இயலாது. பருவமழை போல் கொட்டும் தேர்தல் தகவல்கள் பொது மன்றத்தில் இருப்பதால், நானும் எழுதி உங்கள் ‘இருடியமான’ நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. என்னை கவர்ந்த/ பெரும்பாலோர் தவறக்கூடிய விஷயங்களை மட்டும், என்னால் முடிந்தவரை பட்டியலிட்டுக் கூறுகிறேன். நீங்கள் முக்கியமென்று கருதுவதை பகிர்ந்து கொள்ளுங்கள். அதற்கு ஹேதுவாக, அடிக்கடி தனி இழையில், இதே தலைப்பில் வரும்.
நான் ஆதரிக்கும் கட்சி இன்னும் பிறக்கவில்லை: ‘மக்கள் நலம்’. ஆகவே, கட்சி சார்பு இல்லை. எனினும், ஒரு வேட்பாளருக்கு நான் பிரசாரத்தில் இறங்கக்கூடும். இனி சுற்றி வளைத்துப் பேசவேண்டாம்.

ஜாபிதா:
  1. திரு. பி.எஸ். ராகவன் (ஐஏஸ் ஓய்வு) அவர்களை திரு. பத்ரி சேஷாத்ரி பேட்டி எடுத்து 26 03 2014 அன்று ஜி+ (நல்ல வேளை ஒரே ஒரு ஜி !)ல் செய்த விழியம். இருவருக்கும் நன்றிக்கடன். அதை விட நடுநிலை அலசல் ஒன்றை நான் இது வரை பார்க்கவில்லை. பாருங்கள்.

  1. என்னிடம் தேர்தல் முடிவு பற்றி கலாய்த்த ( ‘விரைசாக சைனாவுக்கு ஒரு நடை...’) இண்டோ-ஜெர்மன் நண்பரின் ஆர்வம், பதவியில் இருப்பவர்களை இறக்குவது; மோடி ஆதரவு.
  2. நேற்று தக்கர் பாபா வித்யாலயத்துக்கு என்னை அழைத்தச்சென்ற 5வது வகுப்பு வரை படித்திருந்த வாகனமோட்டியின் அருமையான பாமர அலசல். சுருங்கச்சொல்லின், லஞ்சத்தை ஒழிக்க முடியாது,மக்கள் அதை முதலீட்டாகக் கருதுவதால். கல்வி அளிப்பதை மறைமுகமாக தவிர்த்து தான், அயோக்ய அரசியல்வாதிகளின் திட்டமிட்ட முதலீடு. இருப்பதில் சிறந்த வேட்பாளர்: நோட்டா. தமிழ்நாட்டு அரசியலை அலசிய அவர், இந்தியா பற்றி மிகவும் தெரிந்து வைத்திருந்தார். அவர் மறுபடியும் வருவார்.
  3. அஸ்ஸாமில் ஏப்ரல் 7 அன்று தேர்தல் துவக்கம். பிரசாரம் நேற்றுடன் மூட்டைக்கட்டி வைக்கப்பட்டது. தடை செய்ய்ப்பட்ட உல்ஃபா அமைப்பின் இரு பிரிவுகளும், 30 வருடங்களாக தேர்தலை புறக்கணித்தன. இந்த தடவை அவை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிக்கவில்லை. நன்நிமித்தம்? மேலும் ஒரு செய்தி நாளை வரும்.
  4. மும்பாய் மாநகரத்தில் ஸோனாகச்சி என்ற இடத்தில் வாழும் ஆயிரக்கணக்கான விலைமாதுகள், தேர்தலை புறக்கணிக்கப்போகிறார்கள். அவர்கள் விழையும் சில சமத்துவ/மனித உரிமை வேண்டுகோள்களை எல்லா கட்சிகளும் கண்டு கொள்ளவில்லை. [‘Their key demands are that sex workers be given the status of workers so that they can get government benefits available to workers of unorganised sectors, government recognition for their self regulatory board and revoking the Immoral Traffic ( Prevention) Act, 1956, which results in police harassment.’- ஹிந்து இதழ் 04 04 2014.]


சித்திரத்துக்கு நன்றி: http://eci.nic.in/eci_main1/dj_images/ecistamp.jpg

Thursday, April 3, 2014

லபோ திபோ; II.2 அல்லது விரைசா சைனாவுக்கு ஒரு நடை போய்....

விரைசா சைனாவுக்கு ஒரு நடை போய்....
அல்லது
லபோ திபோ; II.2



ஈஷ்வரன் லீவுல்லே போயிட்டாரோ? எப்படி சென்னை வந்தோம்னு கேட்கிறீர்களா?
(தொடரும்)...

நானும் சைனீஸ் பேச, மூக்கால் முணமுணக்க, மெல்லின உயிர்மெய் வாய்பாடு தொடங்கினவுடன், தட்தடதடா என்று விமானம் தரை தட்டுவதற்கு ஆயத்தம் செய்தது. பிரிவுபசாரம் அளித்த பெண்மணி மென்மையாக பேசியது ஆண்களை மட்டும் தான் குறி வைத்த மாதிரி இருந்தது. ஆமாம்: ‘கொம்மன், டாங்க, ஃப்ராகன், ஃவெர்போட்டான் அது இது என்று ஆண்பால் பக்கம் பேசினாள், கரடுமுரடாக. பிஸினஸ் க்ளாஸ் என்ற இனபேதம் பைலட் சொற்கள் மூலம் இளித்தது. ஒளஃப் வீடர் ஸேஹன் என்றார் பாருங்கள், எனக்கு மூச்சு வந்தது. என் பெண்ணிடம் சொன்னேன், லுஃப்தான்ஸோ இல்லையா? சைனா போனாலும் தாய்மொழிபற்று, இந்த தந்தை வழி நாட்டுக்கு என்றேன். அவள் சும்மா இரு என்றாள். 

சும்மா சொல்லக்கூடாது. நமக்கு ஊருக்கு போய்ச்சேர ஆசை. அவங்களுக்கு நம்மை கழட்டி விட ஆசை. இல்லை என்றால் செல்வன் மாதிரி நம்பள்க்கு விருந்து படைக்கணும், மூன்று நாட்களுக்கு! இறங்கினவுடன், ஒருவர் நம்மை அழைத்து, ‘மோடிக்கு ஜே! பிரதமர் மோடிக்கு ஜே! என்று ஆரவாரித்த பின், ‘சென்னை விமானம் பறந்தோடி விட்டது. ‘உங்களுக்கு பெங்களூரு வழி ரிபுக்ட். அங்கிருந்து ஜெட் ஏர்வேய்ஸ். ராத்திரி பூரா வைட்டிங்கு. என்ஷூல்டிகன் ஸீ’ என்றார். நானும் அவருடைய சட்டையின் அட்டையை பார்த்து, ‘கேம்! மஜா மேன் சே?’ என்றேன். அவர் தான் சைனா மர்மத்தை அவிழ்த்தார். அடிக்கடி சிஸ்டம் ஃபைலியர் ஆயிடறது. லண்டன்லேயிருந்து மாஸ்கோ போற விமானத்தில், அது திண்டுக்கல்லில் இறங்கப்போவதாக சொல்லிச்சு. அப்றம், பைலட் கூகிள் மேப்ஸ் வச்சுக்கிணு மாஸ்கோ போனார் என்றார். அடுத்த அரை மணி நேரம் சுறுசுறுப்பாக இயங்கின அவர் பேசியவை: மலேசியா விமானம் இஸ்ரேலில் இருக்கு என்று குஜராத்தி ஜோசியர் ஜோஷி சொன்னார்: இவர் மோடிக்கு ஓட்டுப்போடப்போவதில்லை. ஜெர்மன் சிடிஸன் ஆச்சே. டிப்ஸ் கொடுக்கும் உத்திகள்.ஆகமொத்தம் தக்ஷிணை பத்து பவுண்டு. 

அந்த விமானம் மாடி பஸ். எல்லாமே பிரமாதம். ஜெர்மன் திட்டோலக்கணம். அப்பத்தான் கொஞ்சம் உறங்கினோம். அப்டி, இப்டினு பெங்களுரு வந்தவுடன், இந்திய லக்ஷணங்கள் ‘பளிச்’ என்று தெரிந்தன. மேல்வகுப்பு இளைப்பாறும் அறை, வெளியில் இருந்தது. போனால், சென்னை விமானம் பிடிக்க நடுத்தெருவில் நான்கு மணி நேரம் நிக்கணும். அதனால் இடங்கழி வாசம். ஜெட் ஏர்வேஸ், பிஸினெஸ் க்ளாஸ் சலுகைகளை அறவே மறுத்து விட்டார்கள். கூடவந்த மதுரை மாமா மூலம் பினாமி சமர் புரிந்தோம். ஜெயிச்சோம். சென்னை வந்தோம். சம்பந்தி விருந்து.சவுடாலுக்கு ஃபோனினேன். பிஸி டோன். நான் சைனாவுக்கு சிஸ்டம் அனுசரித்து, மானசீக யாத்திரை செய்தது என்னமோ உண்மை. 
வர்ரேன்...
சித்திரத்துக்கு நன்றி: http://www.nanditaarts.com/wp-content/uploads/2013/03/ModernArtMentalJourney1.jpg

Thursday, March 27, 2014

கவர்மெண்ட் லாங்குவேஜூ: 1

கவர்மெண்ட் லாங்குவேஜூ: 1
http://farm3.static.flickr.com/2242/2328920329_4b361bf737_m.jpg

“எவரொருவர் வழக்கமாக ஒரு நாயை வைத்திருக்கிறாரோ, அவரே, அந்த நாயின் செயல்களுக்கு பொறுப்பு ஏற்கவேண்டும். விதி விலக்கு: வேறு ஒருவர் அந்த பதவி வகித்தால். இது முனிஸிபாலிட்டி ஆணை.
~ லைசஸ்டர் முனிசிபாலிட்டி: 2013

இன்னம்பூரான்
27 03 2014

சித்திரத்துக்கு நன்றி: http://farm3.static.flickr.com/2242/2328920329_4b361bf737_m.jpg

சொன்னால் விரோதம்: 2

 - innamburan@gmail.com - Gmail

சொன்னால் விரோதம்: 2
Inline image 1
‘கரையானை ஒரு நாள் மருந்து அடித்துக் கொல்ல முடியாது. அடித்தளம் புகுந்து வேரொடு களைய வேண்டும்...எத்தனை நாட்கள் தான் நாம் சால்ஜாப்பில் காலம் தள்ளமுடியும்? பெண்களை தாழ்த்தும், இழிவு படுத்தும் வன்முறைகளை தடுக்க நாம் என்ன தான் செய்ய வேண்டும்? ...I have thrown the guantlet. You do what you like.’ என்று 13 நாட்களுக்கு முன் எழுதியதற்கு பதிலாக, ‘பெற்றோர்கள் ஆண்பிள்ளைகளை வளர்க்கும்போதே பெண்களை மதிக்கணும் என்பதை கற்றுக்கொடுக்கணும். ‘ என்றார் ஒருவர்; அயோத்தி தாசப் பண்டிதர் சிந்தனைகளை முன்வைத்து  ‘பகுத்தறிவு வாதத்தை கற்றோர் மத்தியில் பரப்பாமல் குமுகத்துன் கடைக்கோடியில் வாழும் எளிய மனிதர்கள் தங்கள் தாழ்வுக்கான காரணத்தை அறிய ஒரு அறிவாயுதமாக அளிக்க வேண்டும்.  குறிப்பாகப் பெண்கள் தங்களின் தாழ்வுக்கான காரணத்தை உய்த்துணர அறிய கடந்த கால வரலாற்றைத் திரிக்காமல் தொன்மம் புனைவில்லாமல் அறிய வாய்ப்பளிக்க வேண்டும்’ என்றார் உளவியல் நன்கு அறிந்து, தெளிவுடன் செப்பும் மற்றொருவர். மற்றபடி மெளனம் அனர்த்த சாதகமாக பரிமளித்தது. இதற்கு நடுவில் ஒரு practising forensic psychiatrist உடன் ஆக்கப்பூர்வமான உரையாடல் நடந்தது. அது எல்லாம் நிற்க. ஒரு அமெரிக்க நடவடிக்கையையும், இந்திய புள்ளி விவரமும் பார்த்தோம். இப்போது ஜப்பானை பார்ப்போம்.
ஜப்பானில் பெண்களின் மேல்படிப்புக்கு அரசும், சமுதாயமும் மற்ற உலகநாடுகளை விட அதிகமாக முன்னுரிமை கொடுக்கிறது. ஆனால், அத்தனையும் வீண். சம்பளத்துக்கு ஊழியம் செய்பவர்களில் 63% தான் பெண்கள்; அது மேன்னாட்டு சதவிகிதத்தை விட மிகக்குறைவு. முதல் குழந்தை பிறந்தவுடன் அவர்களில் 70% வேலைக்குப் போவது இல்லை, பெரும்பாலும் நிரந்தரமாக; அமெரிக்காவில் அது 30%.
ஜப்பானிய பிரதமர் திரு. ஷின் ஜோ ஏப் நாட்டின் செல்வநிலையை பெருக்க பெண்கள் மிளிரவேண்டும் என்கிறார். ஆணும் பெண்ணும் சரி சமானமாக வேலைச்சந்தைக்கு வந்தால், 80 லக்ஷம் ஊழியர்கள் அதிகரிப்பார்கள், நாட்டின் செல்வம் 15 % அதிகரிக்கும் என்று ஒரு உலகப்புகழ் நிதி நிறுவனம் சொல்வதை ஆதரிக்கிறார். மழலைகள் மையம், தாய்ப்பால் பிரச்னை என்று நுட்பமான பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டி, பிரச்சாரம் செய்கிறார். இத்தனைக்கும் 2005ல் அவர் பழமை வாதி தான். பெண்கள் முன்னேறினால் கலாச்சாரம் பாதிக்கப்படும் என்று கூட சொன்னார். அவருடைய கட்சியின் சிகாமணி ஒருவர், ‘பெண்கள் குடும்பத்தலைவியாக இருப்பது தான் சாலத்தகும். மழலைகள் பெருகும். காலாகாலத்தில் அதிகப்படி ஊழியர்கள் கிடைப்பார்கள்’ என்று ஜெர்மனியின் ப்ஃரெட்ரிக் தெ க்ரேட் மாதிரி திருவாய் மலர்ந்து அருளினார். ப்ஃரெட்ரிக் தெ க்ரேட் அவர்களின் திரு வாசகம், ‘நிலா காய்கிறது. 20 வருடங்களுக்கு பிறகு நமக்கு சிப்பாய்கள் பலர் கிடைப்பர்!’ ஜப்பானில் நடந்தது என்னமோ எதிர்மறையாக. கிட்டத்தட்ட பெண்ணொருத்திக்கு ஒரே பிள்ளை என்ற சராசரி வந்தது. 2050 வாக்கில் வேலைக்கு ஆள் கிடைப்பது 40% டவுன் என்ற ஞானோதயம் ஏற்பட்டது. எளிதான, நியாயமான தீர்வுகளை புறக்கணித்தால், இது தான் கதி. (இந்தியா சம்பந்தப்பட்டவரை குடும்பக்கட்டுப்பாடு முக்கியம். அது தளர்வதுக்குக் காரணம் ஆண்களும் என்று சொல்லலாம்.)
மேலும் சொல்லப்போனால், ஊழியமும் பிள்ளைப்பேறும் ஒன்றுக்கொன்று முரண் அல்ல. மேல்நாடுகள் அதற்கு உதாரணம். ஜப்பானிய/ இந்திய கிராமீய வாழ்க்கை அதற்கு உதாரணம். 2000 ஆண்டு காலகட்டத்தில் திரு. ஷின் ஜோ ஏப் அவர்களின் பெண்ணிய அமைச்சரான திருமதி. யோகோ காமிகாவா, பெண்கள் முன்னேற்றம் தென்படவில்லையே என்று திகைத்துப்போனதாக சொல்கிறார்.
இது எல்லாம் ஒரு பீடிகை தான். சொல்ல நிறைய விஷயம் உளது. பார்க்கலாம். ஒரு வினா:
“இந்தியாவில் குடும்பத்தலைவிகள், அதுவும் குழந்தைகள் காலேஜ் போன பிறகு, தன்னாரவப்பணியில் அசகாய வேலைகள் செய்யலாம். தற்காலத்தில் அப்படி இயங்குபவர்களின் வரலாறு இருக்கிறதா? சென்னையில் இருப்பவர்கள், கூப்பிட்டு பயிற்சி அளிக்கப்பட்டால் வருவார்களா?
நன்றி, வணக்கம்.
உசாத்துணை:
சித்திரத்துக்கு நன்றி:http://www.noolulagam.com/book_images/1742.jpg
பி.கு. என் வலைப்பூவில் இது தொடரும்.

தோணித்து! போட்டேன்: இன்னம்பூரான் பக்கம் 7 – அதீதம்

இன்னம்பூரான் பக்கம் 7 –

அதீதர்களே!

அடுத்த வாரம் டிசம்பர் 11 அன்று மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் அவர்களின் ஜன்மதினம். அதை பற்றி நினைத்த மாத்திரம் நான் வலுக்கட்டாயமாக நாம் ‘வீர சுதந்திரம்’ பெறுவதற்கு முன்னால் இருந்த கால கட்டத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டேன். 1930-43 களில் பாரதியாரின் குடியிருப்பு, மாணவர்கள் நாவில் மட்டுமே. அவருடைய பாடல்கள் ஸ்ருதி தான். எளிதில் படிக்கக்கிடைக்காது. சில நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது.

நான் சொல்லப்போவது இன்றைய சூழ்நிலையில் எடுபடாமல் போகலாம். பாரதி போற்றியதெல்லாம் அகக்கண்ணுக்கும், புறக்கண்ணுக்கும் புலப்படவில்லை என்பார்கள் இன்றைய தேசீய தலைவர்கள் என்று ஊடகங்களில் பெரிதும் பேசப்படுகிறது. கரி, வைரம், நீர், ஆகாயம், மலை, இரும்பு, ஏழ்மை எல்லாவற்றிலும் துட்டு பார்க்கிறார்களாம். இந்திய தணிக்கைத்துறை கரடியாக கத்துகிறது. நான் அவ்வப்பொழுது நினைத்துக்கொள்வது உண்டு ~ மஹாகவி இதையெல்லாம் பார்த்தால் என்ன சொல்வார் என்று? என்ன சொல்வார்?
‘என்று தணியும் இந்த பாழுங்காசுக்கு வந்த மோகம்?’ என்று பாடுவார்.

சில வருடங்கள் முன்னால் தஞ்சை மேலராஜவீதியில் இருக்கும் கொங்கணேஸ்வரர் பாடசாலைக்கு விஜயம் செய்தேன். தலைமை ஆசிரியர் எடுத்துக்கொடுத்த என் மூன்றாம் வகுப்பு பற்றிய பதிவின் நகலை கொடுத்த போது மனம் அலை பாய்ந்தது. எனக்கு பாலு சார் தான் எல்லாம் என்றேன். நான் அவருடைய மகன் என்றார், அருகில் இருந்த நண்பர். அந்த பாலு சார் சொல்லிக்கொடுத்த படி திலகர் திடலில் நான் டிசெம்பர் 11, 1941 அன்று பக்திப்பரவசத்துடன் ஆற்றிய சொற்மாரி கேட்டு ஒரு பெரியவர் சபையிலேயே என்னை கட்டிக்கொண்டு அழுதார். பரிசாக கிடைத்த நூல்கள் இரண்டு: பாரதியாரின் கதைக்கொத்தை யாரோ கொத்திக்கொண்டு போய்விட்டார்கள். என் வாழ்க்கையை வகுத்த பகவத் கீதையை என் பெண் பத்திரமாக வைத்திருக்கிறாள். கலோனிய அரசின் உளவுத்துறை குறிப்பு எடுத்துக்கொண்டதாம். எனக்கு ஒரே பெருமை. அத்தை தான் திருஷ்டி கழித்து விட்டு, என்னை மறைத்து வைத்தாள். இதெயெல்லாம் பாடசாலையின் மாணவர்களுக்கு சொன்னபோது எனக்கு அதீத பெருமை!
ஐந்து வருடங்களுக்குப்பிறகு உசிலம்பட்டி ஜில்லா போர்ட் கள்ளர் ரெக்ளமேஷன் பள்ளி. எந்த கணக்கில் என்னை மாணவர் தலைவனாக தேர்ந்தெடுத்தார்கள் என்று அறியேன். ஆனால், நான்தான் சட்டாம்பிள்ளை! தலைமை ஆசிரியர் ஜனாப் யாகூப் கான் அண்டை வீடு. குடும்ப நண்பர். நான் அவருக்கு செல்லம் வேறு. ஒரு நாள் காலை பிரார்த்தனையில் ‘வந்தே மாதரம்’ பாடச்சொன்னேன். ஒச்சத்தேவனும் பாடினான். தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டு நின்றார். ஆக்ஷேபிக்கவில்லை. மறுநாள் தற்காலிக பதவி நீக்கம். திரு. சிவசுப்ரமண்ய ஐயருக்கு தற்காலிக பதவி உயர்வு. நாங்கள் ஹர்த்தால் செய்தோம். ஐயரோ அப்பாவுக்கு ஆப்த நண்பர். அவர் வந்து கேட்டும் நாங்கள் ஹர்த்தாலை வாபஸ் வாங்கவில்லை, ஜனாப் அவர்கள் பதவிக்குத் திரும்பும் வரை. ஏதோ ஒரு மாதிரியாக என்னை கைது செய்து, உடனுக்குடனே விட்டும் விட்டார்கள்.
இதெல்லாம் தம்மாத்தூண்டு சமாச்சாரங்கள். மஹாகவி சுப்ரமண்ய பாரதியார்  ஒரு நாள் தமிழ்த்தென்றல். திரு.வி.க. அவர்களின் தேசபக்தன் இதழ் அலுவலகத்துக்கு வந்தார். உதவி ஆசிரியராக இருந்த பரலி.சு.நெல்லையப்பர் எல்லாரையையும் பக்குவமாக தயார் செய்து வைத்திருந்தார். பாரதி விஜயம் பற்றி மற்றொரு உதவி ஆசிரியரான திரு.வெ.சாமிநாத சர்மா எழுதியிருந்ததை ஒரு நூலுக்காக ஆங்கிலப்படித்தினேன். அதனுடைய தமிழாக்கத்தை யான் ‘‘செய்யுந்தொழிலுன் தொழிலே காண்;…’ என்று இறை வணக்கம் செய்து, ‘பால பருவத்தில் எனக்கு தேசாபிமானம் என்ற அடிசில் ஊட்டி…’ என்று குரு வந்தனம் செய்து,
‘வந்தாரே அமானுஷ்யன்;
சட்டையில் காலரில்லை;
ஆனா டை கட்டி தொங்குதடா,
சீமானே! மனம் போல் திறந்த கோட்டு,
தோளின் மேல் சவாரி,
நீலக்கலரிலே, ஐயா, சவுக்கம் ஒன்று.
முண்டாசு முடிச்சிருக்கான், கரை போட்ட துண்டாலே.
அதற்கு வாலும் தொங்குதடா, ராச மவராசன் போல.
எம்மாம் பெரிசு சோப்புக்கலர் குங்குமப்பொட்டு.
மீசையாவது, ஒளுங்கா, மன்மதனே, கத்திரிச்சிருக்கு.
எத்தனை நாள் பட்டினியோ, தெய்வத்திருமகனே!
கன்னமெல்லாம் ஏண்டாப்பா நசுங்கிப்போச்சு?
உனக்கு வில்லியம் ப்ளேக் தெரியுமோடா?
அவன் பாடின மாதிரி, புலிக்கண்ணோ உந்தனுக்கு?
என் கண்ணெல்லாம் சுணங்குதும்மா;
அப்படி ஜொலிக்கது உன்னோட கண்மலர்கள்!
மஹமாயி!  ஆதி பராசக்தி!
அந்த மணக்குளத்து பிள்ளையாரே!
பாஞ்சாலி மானம் காத்தாய்! நீ
இவனுக்கு சேவகன் இல்லையாடா?
அதெல்லாம் சரி.
அதென்ன ரயில் வண்டி புகை, ‘குப்’,குப்’னு?
ஓ! தொரை உரையூர் சுருட்டுத்தான் பிடிக்கிறாரு!

என்று கவி வந்தனம் செய்து, ‘பராக்! பராக்!’ என்று சல்யூட் அடித்து, அஞ்சலி செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, விடை பெறுகிறேன். உங்கள் யாவரையும் அந்த ஆதிபராசக்தியின் திருவருள் ரக்ஷிக்கட்டும்.

பிரசுரம்: அதீதம் இதழ்
சித்திரத்துக்கு நன்றி: http://bharathiyar.gratussolutions.com/sites/all/themes/bharathiyar/images/bharathiar1.jpg

Tuesday, March 25, 2014

DANDI MARCH: GANDHIJI: RAJAJI: SALT SATHYAGRAHA APRIL 6: 84 YEARS AGO


DANDI MARCH: GANDHIJI: RAJAJI: SALT SATHYAGRAHA APRIL 6: 84 YEARS AGO.

Innamburan

தண்டி யாத்திரை, வேதாரண்யம் யாத்திரை, ஒரு பிடி உப்பு. ஆயிரம் தடா அக்காரவடிசில்

இன்னம்பூரான்

Monday, March 24, 2014

நட ராஜா! ஹே! நடராஜா!நட, வந்து விடு.

நட ராஜா! ஹே! நடராஜா!நட, வந்து விடு.


அற்புதமான கலைவண்ணங்களை திருடுவதும், அவற்றை மேல்நாட்டு ம்யூசியங்கள் எக்கச்சக்கம்மாக விலை கொடுத்து வாங்குவதும் வாடிக்கையாகி விட்டது. சென்னை யில் சிறைப்படுத்தப்பட்ட சுபாஷ் கபூர் என்ற சிலாபகரண சிகாமணியிடமிருந்து $ 50 லக்ஷத்துக்கு ஆஸ்ட்ரிலியாவின் தேசீய கலைக்காட்சியகம் நடராஜர் சிலையை வாங்கியதை பற்றி இன்றைய ஹிந்து இதழில் மேலதிகத்தகவல்:
அந்த நாட்டு கலைத்துறை அமைச்சரும், அரசு வழக்காடும் துறைத் தலைவரும் ஆன திரு. ஜியார்ஜ் ப்ரேண்டிஸ், தமிழ்நாட்டிலிருந்து திருடப்பட்ட இந்த ஆயிரமாண்டு தொன்மையான நடராஜர் சிலையை ஆஸ்ட்ரிலியாவின் தேசீய கலைக்காட்சியகம் வாங்கிய கவனக்குறைவான விதத்தைக் கண்டித்துப்பேசியிருக்கிறார். சந்தேகங்கள் இருந்தன; மழுப்பி விட்டார்கள் என்கிறார். அதை தமிழ்நாட்டுக்குத் திருப்பி விட வேண்டும் என்பதை பற்றி அயல்நாட்டு அமைச்சரிடம் பிரஸ்தாபித்து இருக்கிறார். அந்த கலைக்காட்சியகத்தின் தலைவர் டாக்டர் ஆர்.நாகஸ்வாமியிடம் கலந்து ஆலோசித்தப்பின்னர் தான் வாங்கினோம் என்று சொன்னதை டாக்டர் ஆர்.நாகஸ்வாமி மறுத்திருக்கிறார். அது மட்டுமல்ல. ஷேன் சிம்ப்ஸன் என்ற மரபு ஆராய்ச்சி சார்ந்த வழக்கறிஞர் ‘சான்றுகள் ஒன்றும் பெரிதாக இல்லை; விசாரணை போதாது; இந்த சிலை எங்கிருந்து வந்தது என்ற விவரம் இல்லை; இது கோயிலிலிருந்துத் திருடப்பட்டது என்ற வலுவான ஐயம் எழுகிறது’ என்று 2008லியே எச்சரிக்கை விடுத்தார். அதை ஆஸ்ட்ரிலியாவின் தேசீய கலைக்காட்சியகம் கண்டு கொள்ளவில்லை. 
இதே மாதிரி தான் சிவபுரம் நடராஜர் சிலை லண்டன் ஓல்ட் பெய்லி கோர்ட்டில் சமத்தாக மூலையில் நின்று கொண்டிருந்தார். கோயில் அர்ச்சகர் சாக்ஷி அளிக்க வந்த போது, சிலையாக பிரத்யக்ஷமாக நின்ற நர்த்தனசுந்தரரை தழுவி அணைத்து, ‘உனக்கு இங்கு காயம் செய்து விட்டானே. அங்கு கீறல் என்று அழுதார். வியந்த ஜட்ஜிடம் ‘ எனக்கு தெரியாதா? நான் எத்தனை வருஷம் அவனுக்கு நீராட்டம் செய்திருக்கிறேன் என்று தேம்பினார். நிச்சியம் இவர் சிவபுரத்து வாசி தான் என்று, அதை திருப்பிக்கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். நடராஜரும் நம் ஹை கமிஷனுக்கு வந்து சேர்ந்தார். அவரை அங்கு 1990ல் தரிசித்தேன்.
தமிழகம் ஆஸ்ட்ரிலியாவிலும், உலகெங்கும் உளது. நாம் மற்ற அரட்டைகளை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, ஒருசேர திரண்டு, ‘நட ராஜா! நட, வந்து விடு’ என்று அவனை மேளதாளத்துடன் அழைத்து வர வேண்டாமா?
அன்புடன்,
இன்னம்பூரான்

24 03 2014
Image Credit: http://www.radioaustralia.net.au/international/sites/default/files/imagecache/ra_article_feature/images/2012/08/3/4175840-4x3-700x525.jpg

ANDAL HOLY WEDDING [5 & Final]


23 03 2014

ANDAL HOLY WEDDING [5 & Final]

TODAY’S EPISODE: BLISS




இன்னம்பூரான்





Next Episode

Ambrosia (Amitha) with a pinch of salt !

Reply here or mail to innamburan@gmail.com





https://www.youtube.com/watch?v=rHFrzunDL9Q

Friday, March 21, 2014

சடுதியில் உருப்படியாக முடிச்சவிழ்க்க…[2]

சடுதியில் உருப்படியாக முடிச்சவிழ்க்க…[2]
  1. Friday, March 21, 2014, 5:06
  2. Featured, இலக்கியம், பத்திகள்

பிரசுரம் & நன்றி: http://www.vallamai.com/?p=43250


இன்னம்பூரான்

ஆங்கிலத்தில் ‘the plot thickens’ என்பார்கள். அதாவது மர்மங்கள் கூடுகின்றன. மாஜி அதிகார வர்க்கம் CBI யின் தடாலடி செயலைக் கண்டித்தால் ‘இனம் இனத்தோடு சேர்கிறது என்று சால்ஜாப்பலாம். ஆனால் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் CBI யின் தடாலடி செயலைக் கண்டிக்கிறார். நிதியமைச்சர் ப.சிதம்பரனார் CBI யின் தடாலடி செயல், முழு விவரங்கள் அறியாமையிலே அமைந்து விட்டது என்று குறிப்பால் உணர்த்துகிறார். என்னடா இது? இவர்கள் சேம்ஸைட் கோல் போடுகிறார்களா அல்லது ‘the plot thickensaa?’ என்ற ஐயம் எழுகிறது. மேற்படி அரசியல்வாதிகள் யாதும் அறிந்த அரசியல் ஞானிகள். சேம்ஸைட் கோல் போடமாட்டார்கள். அது திண்ணம். ஆக மொத்தம், மர்மங்கள் கூடுகின்றன.
கொஞ்சம் புரிந்து கொள்ள SEBIயின் மாஜி தலைவர் பவே அவர்கள் சொல்வதை பட்டியலிட்டுப் பார்க்க வேண்டும்.
MCX-SX மேல் வைக்கப்பட்ட வருமானவரி குற்றத்தில் சத்து ஒன்றுமில்லை என்று நிதித்துறையே அறிவித்ததை, CBI ஏன் கண்டு கொள்ள மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது?
அவர்கள் ஏன் மகளுக்கு ஒரு நீதி, மருமகளுக்கு ஒரு நீதி என்று இயங்குகிறார்கள்?
என்னிடம் உள்ள சில மர்மங்களை பொது மன்றத்தில் வைக்கும் காலம் வந்து விட்டது.
சஹாரா நிறுவனத்தின் முறைகேடுகளை அம்பலப்படுத்தியதிற்கு, இது தண்டனையா என்று கேட்டதற்கு, ‘இருக்கலாம். நான் ஊடகங்களிலிருந்து தான் தெரிந்து கொள்கிறேன்’ என்றார்.
FTIL/MCX-SX உரிமங்கள் முறைகேடாகக் கொடுக்கப்படவில்லை. அதனால் அவர்களுக்கு ஆதாயம் இல்லை. அரசு கொள்கைக்கு உகந்தவாறு, போட்டி வரவேற்கப்பட்டது என்றார். குற்றச்சாட்டு பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது என்றார்.
அவருடைய ஐந்தாவது பதிலுக்கு சான்று, அவருடைய கண்காணிப்பும், தரமுயர்ந்த நாணயமான புதுமை உத்திகளே. இதை CBI கூட மறுக்கவில்லை.
ஆட்டுவிப்பது யாரு?
ஒரு பழைய தகவல் நினைவுக்கு வருகிறது. ‘The Craft of Audit’ என்ற என் ஆய்வுக்கட்டுரையை ஒரு பன்னாட்டு ஆடிட் இதழுக்கு கேட்டிருந்தார்கள் அதன் சாராம்சம்:
உன்னால் தணிக்கை செய்யப்படுவர்களில் மூன்று வகை உண்டு. முதல் வகை விதிப்படி இயங்குவர். சின்ன சின்ன விதிவிலக்கு இருக்கலாம். அதை பெரிது படுத்தாமல், இடம், பொருள் , ஏவல் கருதி தணிக்கை செய்யவும். இரண்டாவது வகை எல்லா விதிகளையும், சரியோ தப்போ, கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு, இயக்கி இருப்பான். அவனை இரக்கமில்லாமல் தணிக்கை செய். பெருங்குற்றங்களை மறைக்க விதி வைக்கப்போர் கை கொடுக்கும். அவன் பாயில் புகுபவன் என்றால், நீ கோலத்தில் புகுந்து ஆடிட் செய். மூன்றாவது வகை விதியின் இலக்கணத்தை மீறாவிடினும், இட்ட காரியத்தை முடிப்பதில் கருமமே கண்ணாயிருப்பர். மதி குறைந்த விதியை அவர்கள் மீறிருப்பர். தாரதம்யம் அறிந்து அவர்களை ஆடிட் செய். தொழில் விவரங்கள் அறிந்து இயங்கு.
(தொடரும்)

சித்திரத்துக்கு நன்றி: http://kccollegegameday.com/wp-content/uploads/2013/11/theplotthickens.jpg

ANDAL HOLY WEDDING [4]


21 04 2014

ANDAL HOLY WEDDING [4]

TODAY’S EPISODE: Dancing Damsels herald the Glorious Wedding Festivities

&

PANIGRAHANA: The Marriage vow of receiving the Bride by holding her hand

இன்னம்பூரான்





More in the offing for those, who ask for it:

Reply here or mail to innamburan@gmail.com


இன்னம்பூரான்



https://www.youtube.com/watch?v=VaMa0EEWPQc