Tuesday, August 2, 2016

Dear Friends,


Dear Friends,

I have been observing for long that there is not much of verified interactive information, citing sources, on matters of health, self-preservation, early warning symptoms, managing own health and such matters.

I am planning to start an English Blog, with an eye on verified information being given; in that case, feedback is a must and a global group could emerge. Only those interested may send me a private mail to innamburan @ gmail.com

That Blog depends on your response.

Regards to all you,
Innamburan

Thursday, July 21, 2016

'தானாய் வந்ததால் வீணாய் போனதோ வேதம்!'

இன்னம்பூரான் வலைப்பூ வாசகர்களில் சிலருக்கு இந்த கட்டுரை உகந்ததாக படலாம் என்பதால், தினமலருக்கு நன்றி கூறி, இத மீள்பதிவு செய்கிறேன்.
இன்னம்பூரான்
22 07 2016



'தானாய் வந்ததால் வீணாய் போனதோ வேதம்!'


பதிவு செய்த நாள்
20
ஜூலை
2016 
23:44


திவாகர நிகண்டு, தொல்காப்பியம், திருமந்திரம், பொய்யாமொழி உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில், வேதங்கள் பலவாறாக போற்றப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வேதங்கள் மொழி பெயர்க்கப்படாமல் இருந்தது. இந்த குறை, 19ம் நுாற்றாண்டில், த.ப.ராமசாமி பிள்ளையால் களையப்பட்டது.

இதுகுறித்து, சமூக, பண்பாட்டு ஆய்வாளர் ரெங்கய்யா முருகன், நம்மிடம் பகிர்ந்து கொண்டது: 
தெரியாததை சொல்வது வேதம் என்பர். இடப தேவர் அருளியது; புறா வடிவம் கொண்ட கடவுள் உபதேசித்தது; இருடிகளால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற பல்வேறு கருத்துக்கள், வேதங்கள் பற்றி உலவு கின்றன. இருப்பினும், இருடிகள் தான், வேதங்களை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தினர். 
ஆங்கிலேயர் வருகைக்கு பின், அச்சு ஊடகம் வளர்ச்சியடைந்தது. அது, கிறிஸ்தவத்தை பரப்ப உதவியதுடன், இந்திய வேதங்களை ஆங்கிலம் உள்ளிட்ட மேலை மொழிகளில் மொழிபெயர்க்க வைத்தது. 
வேதகிரி முதலியார், வேதக் கருத்துகளை தமிழில் கட்டுரைகளாக எழுதினார். 1898ல், சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு, தன் பத்திரிகையில், உபநிடதங்கள் குறித்த குறிப்புகளை வெளியிட்டார். பாரதியாரும், வேதக் கருத்துக்களை எள்ளி
நகையாடி உள்ளார். 
பத்தொன்பதாம் நுாற்றாண்டில், வியாசர்பாடி கரப்பாத்திர சிவப்பிரகாச சுவாமி கள், சூளை ஈசூர் சச்சிதானந்த சுவாமிகள், பெரம்பூர் வீர சுப்பையா சுவாமிகள், வண்ணை நாராயணதேசிகர் உள்ளிட்ட வடசென்னை மடங்கள், பல்கலைக்கழகங்களைப் போல் செயல்பட்டு, பன்மொழி வேதாந்த கருத்துக்களை, தமிழில் வெளியிட்டன.
கசப்புணர்வு

குறிப்பாக, 'திருவொற்றியூரான் அடிமை' என அழைக்கப்பட்ட, த.ப.ராமசாமி பிள்ளையின் வேத மொழிபெயர்ப்பு பணி மிகச்சிறந்தது. அவர், சிறுவனாக இருந்தபோது, கரந்தையில் உள்ள கருவேலநாதர் சன்னிதியில் வேதம் கேட்க போய், அந்தணர்களால் திருப்பி அனுப்பப்பட்டார். அந்த நிகழ்வு, அவருக்குள் கசப்புணர்வாகவே இருந்தது
அவர், பொருளாதார ரீதியாக வளர்ந்ததும், தமிழில் வேதத்தை கேட்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். இந்த நிலையில், காசிவாசி சிவானந்த யதீந்தர சுவாமிகள் கரப்பாத்திர சுவாமிகளின் அனந்த ஆசிரமத்திற்கு வந்தார். அதன் நிர்வாக பொருப்பாளரான முக்தானந்த சுவாமிகள், த.ப.ராமசாமி பிள்ளையிடம், சிவானந்த யதீந்தர சுவாமிகளை அறிமுகப்படுத்தி, 'நீங்கள் இருவரும் இணைந்தால், திருமகளின் கடாட்சமும், கலைமகளின் அருள்வாக்கும் தமிழுக்கு கிடைக்கும்' என, அறிவுறுத்தினார்.
அதனால், 1930களில், த.ப.ராமசாமி பிள்ளை பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, அனைத்து மொழிகளிலும் உள்ள வேதத்தின் உரைகள், வேதாங்கங்கள், நிருக்தம், நிகண்டு உள்ளிட்டவற்றை தருவித்து, காசிவாசி சிவானந்த யதீந்தர சுவாமிகளிடம் கொடுத்து, வேத மொழிபெயர்ப்பை துவங்கினார். 
மூன்றாண்டுகளுக்குள் சாம வேதத்தின் சம்கிஹிதா பாகத்தை, பதவுரை, கருத்துரை, குறிப்புரைகளுடன் மொழிபெயர்க்க வைத்தார். 
அவர்களுடன், அ.கோபால் மேனன், வடமொழி பதிப்பையும், டாக்டர் ராசாபகதுார் நாயகர், ஸ்டீவென்சனின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் ஒப்பிட்டு பிழைதிருத்தம் செய்ய உதவினர். பின், பாடியத்தை தழுவி நாகரம், கிரந்தம், தமிழ் என 3 வடிவங்களில், 2 தொகுதிகளை அச்சிட்டு உயர் ரக காலிக்கோ பைண்டிங் செய்து, ஆயிரம் பிரதிகள் பதிப்பித்து, தமிழர்களுக்கு இலவசமாக கொடுத்தார். 
த.ப.ராமசாமி பிள்ளை, தன் பதிப்புரையில், 'நாம் வேதத்தை, இன்னதென்று உணர முடியாமல் அறியாமையில் கட்டுண்டு கிடந்தோம். அதை உணர்ந்து, நமது திருவொற்றியூர் எழுத்தறியும் பெருமானார், வேதங்களை தமிழிலும் எழுதுமாறு பணித்தருள, அப்பணியை தலைமேற்கொண்டு, செயற்கரிய செய்யும் பெரியாரை கொண்டு தமிழில் மொழிபெயர்த்து, முதலில் சாம வேதத்தை பதிப்பித்து உலகம் உய்யுமாறு நன்கொடையாக அளித்தனம்.
'இப்போது, கிருஷ்ணா எசுர் வேதத்தையும் மொழிபெயர்த்து நன்கொடையாக அளிக்கிறோம். மேலும் அதர்வண வேதம் முதலியவற்றையும் அளிக்க உள்ளோம். தானே வந்தது வீணே போனது என்றபடி, இதை வீணாக்காமல் அதன் பொருளுணர்ந்து உய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்' எனக் குறிப்பிட்டுள்ளார். 
நன்கொடையாக...
இந்த வேத மொழிபெயர்ப்பை வெளியிடுவதற்காக, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு மேற்கு மூலையில், பத்திரகிரியார், வள்ளலார், பட்டினத்தார் உள்ளிட்டோரின் சிலைகளுடன் கூடிய அழகிய கல்மண்டபம் எழுப்பி, அதற்கு கும்பாபிஷேகம் நடத்தி, இந்த நுாலினை நன்கொடையாக வெளியிட்டார்.
அவரை தொடர்ந்து, அதே காலகட்டங்களில் சிவத்தியானந்த மஹரிஷியும், மணக்கால் ஆர். ஜம்புநாத ஐயரும் சாம வேதங்களின் சில பகுதிகளை தமிழில் வெளியிட்டனர். என்றாலும், த.ப.ராமசாமி பிள்ளையின் மொழிபெயர்ப்புகளை, அரசோ, மடங்களோ, வேதாந்திகளோ மீண்டும் பதிப்பித்து மீட்டெடுக்காதது, தமிழின் சோக வரலாறாக உள்ளது.


  • நமது நிருபர் -

Retrieved with thanks from Dinamalar on July 22, 2016

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

இன்னம்பூரான் பக்கம் [8] பாமரகீர்த்தி [1]

இன்னம்பூரான் பக்கம் [8] 
பாமரகீர்த்தி [1]



Friday, July 22, 2016, 4:59
பிரசுரம்: http://www.vallamai.com/?p=70528
இன்னம்பூரான்
21 07 2016

“ என்னுடைய நோயாளிகளில் 95% சமுதாயத்தில் மிகவும் கீழ்படிந்த நிலையில் வறுமையில் உழலும் திக்கற்றவர்கள். அவர்களின் எதிர்நீச்சல்களை காணும் போது நம்மால் அவர்களுக்கு நல்லதொரு மாற்றம் தர இயலும் என்பது கண்கூடு”
-டாக்டர் டொனால்ட் மெக்லார்ட்டி.

“… சமுதாயத்தில் உரத்த குரல் எழும் வரை, அன்றாடம் நிகழும் அவலங்களை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.”
-இன்றைய பாமரன்
வரலாற்றின் கதாநாயகர்கள் ராஜா ராணியும், அமைச்சர்களும், தொழிலதிபர்களும் தான். சுருங்கச்சொல்லின் பிரபலங்கள். அங்கும் இங்கும் மிகை இருக்கலாம். உண்மை நீர்த்துத் தென்படலாம். அதையெல்லாம் பொருட்படுத்தாமல், பாடப்புத்தகத்தில் கூட போட்டுவிடுவார்கள். 

ஆனால், பெரும்பான்மை மக்களை பற்றி பேச்சு மூச்சு கிடையாது. அவர்களின் சாதனை சேற்றில் மறைந்த மலர். வீடு தோறும் தலைமாந்தர்கள் மேலாண்மை வகித்துள்ளனர். ஜெயகாந்தனின் கெளரிபாட்டியின் யுக சந்தி ஒரு புரட்சி. அவள் மாதிரி தான் என் நண்பரின் பிராமண சம்பிதாயத்தை போற்றும் அன்னை நாமகிரி அம்மாள் பேத்திகளின் கலப்பு மணத்தை ஆதரித்தார். தம்பி காளைராஜனின் முன்னோர்கள் பர்மாவிலிருந்து நடந்து வந்தார்கள், தாயகத்துக்கு. அதே மாதிரி, இரண்டாவது உலகப்போரின் காலகட்டத்தில். குஞ்சும் குளவானுமாக குழந்தைகளை தூக்கிக்கொண்டு மலேசியா- சிங்கப்பூரிலிருந்து கடைசியாக கிளம்பிய ஜப்பான் கப்பலில் இலங்கைக்கு வந்து, கால்நடை, கட்டைவண்டி, கரிமூட்டை பஸ் என்று வந்த எச்சுமி என்ற இளம்பெண்ணுக்கு தலையாய பிரச்னை: பசங்க பாம்பன் பாலத்தில் பிடிக்க முடியாதபடி ஓடியது தான். சோறு தண்ணி இல்லாமல், வெடித்த பாதங்கள் வலித்ததும், நாட்கணக்கில் தூங்காததும் அவருக்கு பிரச்னையாக படவில்லை. அவரை தினமும் பார்க்கும்போது, பாமரகீர்த்தி எழுத விழைவேன். துவக்க, ஒரு அதிசயப்பிறவி பாமரனை தேடிக்கொண்டிருந்தேன். இன்று தான் அவர் கிடைத்தார். போகப்போகப் பார்க்கலாம்; பாமரனுக்கா பஞ்சம்!

இன்றைய பாமரகீர்த்தி கதாநாயகன் டாக்டர் கெளசிக் ராமையா. அவருடன் உரையாடிய ஜூலெஸ் மார்கன், அவர் இராப்பகல் பார்க்காமல், சம்பாத்தியத்தை அறவே மறந்து, ஏழை பாழைகளுக்காக 24 x 7 ஊழியம் செய்வதை கண்டு, மாய்ந்து போகிறார். அதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது அவர் பணி புரியும் நாடு ~ டான்சானியா. அந்த நாடு ராமையாவை என்றோ தத்து எடுத்துக்கொண்டு விட்டது. மூன்று தலைமுறைகளுக்கு முன்னாலிருந்து குடும்ப வணிகம் முந்திரிக்கொட்டை ஏற்றுமதி. ராமையா சொல்வதைப்போல, ஆப்பிரிக்க நாடுகளில் குடி பெயர்ந்த இந்தியர்கள் குடும்பத்தொழில்களை வகுத்துக்கொண்டு திரவியம் தேடினர். 
அந்த தொழிலில் வாழ்க்கையை தொடங்கிய ராமையாவுக்கு வானூர்தி பொறியியலில் இருந்த ஆர்வம்,சாக்கியமுனிக்கு ஞானோதயம் கிடைத்தது போல மக்களுக்கு மருத்துவம் மூலமாக தொண்டு செய்வதற்கு மாறியது. மும்பைக்கு வந்து மருத்துவத்தில் பட்டம் பெறுகிறார். டான்சானியாவின் தலைநகரான தாருல் இஸ்லாம் நகரில் மேற்படிப்பு. அதிர்ஷ்டவசமாக அவருக்கு அமைந்த ஆசான்கள் டொனால்ட் மெக்லார்ட்டியும், சாம்ஸன் பாஸீண்டாவும் அவருக்கு மருத்துவம் மட்டும் சொல்லிக்கொடுக்கவில்லை. மனித நேயப்பாடங்களையும் சொல்லிக்கொடுத்தார்கள். தன்னுடைய குடும்பம் இவரது படிப்புக்காக செய்த தியாகங்களை ரோமம் சிலிர்க்க, பகிர்ந்து கொண்ட ராமையா வறுமையின் கொடுமையினால் மருத்துவ நிவாரணம் கிடைக்காத ஏழைகளின் பாதிப்பு தன்னை திசை திருப்பியது என்கிறார்.

‘தட்டுங்கள்; கதவு திறக்கும்’ என்பார்கள். இவரை தேர்வுக்கு பரிசோதிக்க வந்த டாக்டர் ஜார்ஜ் ஆல்பெர்ட், மேற்படிப்புக்கு இவரை இங்கிலாந்துக்கு அழைத்து செல்கிறார். அதை முடித்து விட்டு தாய்வீடு திரும்பிய ராமையா, “மேல்நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கு உள்ள இடைவெளியை குறைக்க செல்வம் இன்றியமையாதது இல்லை.’ என்ற தீர்மானத்துடன் நான்கு டாக்டர்கள், மூன்று அறைகள், பத்து படுக்கைகள் கொண்ட ஒரு தரும ஆஸ்பத்திரியுடன் தன்னை இணைத்துக்கொண்டார், 1982ல். அது தற்காலம் அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில், நீரழிவு நோய்க்கும், ஹெச்.ஐ.வி./ஐட்ஸ் சிகிச்சைக்கும் பெரிய ஆஸ்பத்திரியாக இயங்குகிறது. நாட்தோறும் 600 நோயாளிகள், 45 படுக்கைகள். இதுவே சிறியதாகத் தோன்றும், நாம் அவர்கள் கடந்த இன்னல்களை அறியாவிடின்.

1990 காலகட்டத்தில் ஹெச்.ஐ.வி./ஐட்ஸ் உயிர்கொல்லிகள். ராமையா உடனே அமெரிக்கா சென்று அது பற்றி படித்து திரும்பி வந்து அநேக நோயாளிகளுக்கு மறு வாழ்வு அளித்தார். டைப் 1 டயாபிடீஸ் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை. இவர்கள் எல்லாரும் வந்து, உங்களால் எங்கள் வாழ்க்கைக்கு புனருத்தாரணம் தரமுடிந்தது என்று சொல்வது தான், அவருக்கு பரிசு. அவர் தலைமை வகிக்கும் அந்த ஆஸ்பத்திரியின் பெயர்: ஶ்ரீ ஹிந்து மண்டல் ஆஸ்பத்திரி.
சஹாரான் ஆப்பிரிக்கா பிராந்தியத்தின் உலகளாவிய டயாபிட்டீஸ் நிறுவனத்தின் தலைவரும் இவரே. 24 x 7 டாக்டர் கெளசிக் ராமையாவின் பொழுது போக்கு: தபால் தலை சேகரம்.
டாக்டர் கெளசிக் ராமையா போன்ற பாமரகள் நிறைந்த நல்லுலகம் இது.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://www.eahf.net/wp-content/uploads/2015/05/kaushik-300x300.png

படித்தது:

இன்னம்பூரான்


http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, July 12, 2016


Sunday, July 10, 2016

இன்னம்பூரான் பக்கம் 7 நூற வருடங்களுக்கு முன்னால் 3



 

இன்னம்பூரான் பக்கம் 7
நூற வருடங்களுக்கு முன்னால் 3

பிரசுரம்: http://www.vallamai.com/?p=70225
இன்னம்பூரான்
ஜூலை 8, 2016

மனிதவியலும் சமூகவியலும் தவிர்த்த மருத்துவம் உதவாக்கரை. தக்கதொரு மருத்துவ நல்வரவுகள் இல்லாத சமூகம் பாழ். ஏழை பாழைகளுக்கும், செல்வந்தர்களுக்கும் கிடைக்கும் மருத்துவ சிகிச்சை/உதவி/ஆலோசனை எல்லாம் ஒரே தரத்தில் இருப்பது தான் நியாயம். காசுக்கேற்ப வசதி கிடைப்பது நடைமுறைதான். காசு கொடுத்தால் தான் வைத்தியம் என்பது அடாவடி. அண்மையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில், லஞ்சம் கொடுக்க முடியாததால், ஒரு சாவு. தற்காலம் இந்தியாவில் தனியார் மருத்துவமனைகள் பெருகி இருப்பதும், அரசு தர்ம ஆஸ்பத்திரிகள் முடங்கி இருப்பதும் கண்கூடு. எனினும், அரசு மருத்துவமனைகளுக்கு அடிக்கடி செல்லும் நான், ஆங்காங்கே நல்ல முன்னேற்றங்களைக் காண்கிறேன்.

சென்னை மருத்துவ மனை துவக்கப்பட்டது நவம்பர் 16, 1664. ராணுவ மருத்துவமனையான அதில் இந்திய நோயாளிகள் அனுமதிக்கப்பட்டது 1842ல் தான். 1964ல், அதாவது, துவக்கி முன்னூறு ஆண்டுகள் கழிந்த பின்னும், அங்கு இலவசமருத்துவமும், தரமான சிகிச்சையும், மனித நேயம் குறையாத அணுகுமுறையும் காணக்கிடைத்தன. என் தந்தைக்கு 1964ல் சிக்கலான ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவர், இங்கிலாந்திலிருந்து வந்திருந்த ஒரு மருத்துவ பேராசிரியர். அறுவை சிகிச்சைக் கட்டணம் ரூபாய் 15/-, தந்தையின் வரும்படி அடிப்படையில். ஏழைக்கு இலவசம்.

அமெரிக்காவில் நூறாண்டுகளுக்கு முன் வைத்திய நடைமுறையை பற்றி ஜூலை 8, 1916 அன்று ஒரு கட்டுரை ‘ஜாமா’ (Journal of American Medical Association) என்ற பிரபல மருத்துவ இதழ் பிரசுரம் செய்தது. அதுவும் நான் அடிக்கடி பார்வையிட நேர்ந்த சைண்ட் லூயிஸ் நகரத்து வாஷிங்டன் பல்கலை கழகத்தின் மருத்துவமனை மருத்துவர்கள் எழுதியது.

நமது முன்னேற்றங்களைப் பாராட்டும் பொழுது குறைகளை கண்டறிந்து அவற்றை நீக்குவது தான் நல்லது. நாம் தேவையான சமாச்சாரங்களை ஆய்வு செய்து, தெளிவான முடிவுகளை நிறைவேற்றுவது அரிது. உதாரணமாக, 1970-2010 காலகட்டத்தில் தருமமிகு சென்னை மருத்துவமனைகளில் அதருமம் தலையெடுத்ததைப் பற்றி ஒரு ஆய்வும் கிடைக்கவில்லை. ஆனால் நூறு வருடங்கள் முன்னால் ‘ஜாமா: ஜூலை 8, 1916’ இதழில் ஏழை பாழைகளும் ஆஃப்ரோ அமெரிக்கர்களும் நிறைந்த பகுதியிலிருந்து மத்தியதர மக்கள் வாழும் இடத்திற்கு மூன்று மருத்துவ ஆலோசனை மன்றங்கள், ஒன்றாக இணைக்கப்பட்டு, மாற்றப்பட்டதின் விளைவை சாங்கோபாங்கமாக ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். ஏனெனில் மருத்துவ ஆலோசனை பழைய இடத்தில் இலவசமாகவே அமைந்தது நியாயமே. புது இடத்தில், வருமானத்தின் அடிப்படையில் ஆலோசனை அமைவதும் நியாயமே. அவர்கள் பல மாநிலங்களிடமிருந்து நடைமுறை விசாரித்தார்கள். அதில் க்ளீவ்லாந்து பதில், ‘எனக்கு மருத்துவம் சம்பந்தமில்லாத விசாரணைகளுக்கு நேரமும் கிடையாது; உண்மையும் வராது. அதனால் பிரயோஜனமில்லை.’ சிந்திக்கவைக்கிறது.

சென்னையில் போனவருடம் அரசு ஆஸ்பத்திரி ஒன்றுக்கு சென்றிருந்தேன். குமாஸ்தா வருமானம் எவ்வளவு என்று கேட்டார். என் ஓய்வூதியம் சொன்னவுடன், சிரித்துக்கொண்டே குறித்துக்கொண்டார். பின்னர் அந்த எழுத்தை படிக்கமுடியவில்லை. இலவசமாக தான் ஆலோசனை அளித்தார்கள். அவரிடம் விளக்கம் கேட்டபோது, அங்கு ஆலோசனை இலவசம். சிகிச்சைக்குத்தான் வருமான அடிப்படை. அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று, உங்கள் வசதிக்காக கிறுக்கி வைத்தேன் என்று ஒரு போடு போட்டார்.
-#-

சித்திரத்துக்கு நன்றி:
https://wuphysicians.wustl.edu/Portals/0/Skins/wash-u-physicians/images/wash-u-physicians-logo.png

படித்தது:
https://jama.jamanetwork.com/issue.aspx?journalid=67&issueid=10559



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com
__._,_.___

Posted by: "Innamburan S.Soundararajan" <innamburan@gmail.com
Reply via web postReply to sender Reply to group Start a new topicMessages in this topic (1)
This Group is restricted to Invitees only for ensuring compliance with the Terms, Guidelines & Privacy conditions of Yahoo and this Group and to guard against phishing. Most members of this Group are from an Elder Community in Aalapaakkam.
Respecting their wishes, all may refrain from commenting upon the community and its administrations.
Yahoo! Groups
• Privacy • Unsubscribe • Terms of Use
.

__,_._,___

Thursday, July 7, 2016

இன்னம்பூரான் பக்கம் 7 நூறு வருடங்களுக்கு முன்னால் 2 ஜூலை 7, 1916

இன்னம்பூரான் பக்கம் 7 
நூறு வருடங்களுக்கு முன்னால் 2
ஜூலை 7, 1916



Friday, July 8, 2016, 4:50
பிரசுரம்: http://www.vallamai.com/?p=70195


இன்னம்பூரான்
ஜூலை 7, 2016

நூறு வருடங்களுக்கு முன்னால், இதே தினம் பிறந்தவர், பேராசிரியர் Chia-Chiao Lin (C.C.Lin) உச்சாடனம் இப்படியே இருந்தால், பிரச்னையில்லை. அது இங்கு ஒரு பொருட்டும் அல்ல. அவருடைய 96 வருட வாழ்க்கை வரலாறு தான் முக்கியம். சைனா நாட்டின் இன்னல், பின்னல்களும், தீர்வுகளும் அவருடைய காலகட்டத்தில் எளியதாக அமைய வில்லை. மிகவும் பின் தங்கிய அந்த நாட்டிலிருந்து பெருமளவு கப்பம் கறக்கப்பட்டிருந்து, மேல் நாடுகளால். அமெரிக்கா கணிசமான அளவுக்கு, அதை திருப்பி அளித்தபோது, அந்த வரவு கல்வி மேன்மைக்கு பயன் படுத்தப்படவேண்டும் என்ற நிபந்தனை விதித்தது. அதன் மேல்வரவு தான் நமது பேராசிரியர். அவர் உலகத்திலேயே மிகவும் மதிக்கப்பட்ட கணித மேதையாக அறியப்பட்டார். அவருடைய வளர்ச்சி வியப்பை விளைவிக்கிறது. Tsinghua பல்கலையில் இரண்டாவது இடம் பெறும் மாணவனை பற்றித்தான் ஹேஷ்யம். முதலிடம் இவரது எப்போதுமே.
சிலருடைய வாழ்க்கைகளில் திருப்புமுனைகள் தெய்வாதீனமாக அமையும். அவ்வாறே, ஜப்பான் சைனா மீது படையெடுத்த போது, சைனாவின் விமானங்களால், ஜப்பானின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இவரது ஆசான் Pei Yuan Zhou அவர்கள் இவரை தன்னுடைய ஆய்வை ஏரோடைனகிக்ஸ் பக்கம் திருப்பி, நாட்டின் பாதுகாப்புக்கு உழைக்க தூண்டினார். அத்துறை மேல்படிப்புக்காக, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்ற நமது பேராசிரியர் 1944ம் ஆண்டு அத்துறையில் அமெரிக்காவின் கால்டெக் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றதை விட, அது Werner Heisenberg என்ற உலகமே மிகவும் போற்றிய விஞ்ஞானி தனது முனைவர் ஆராய்ச்சியில் எழுப்பிய வினாவுக்கு விடை கண்டது என்ற சாதனை. இவரை மேல்நாட்டு விஞ்ஞானிகள் இடையே சமானமானவராக ஏற்றுக்கொண்டது ஒரு புகழுரை தான். ஏனெனில், ஹைஸன்பர்க் அவர்களை சிந்தனையை, இவர் தெளிவாக வெளியிட்ட அதிசயம் தான்.
இவரின் அடுத்த சாதனை, கணினி துறையில். ஒரு விருந்தில் இவருடன் சற்றே அளவளாவிய கணினி மேதை John von Neumann அவர்களுடன் சேர்ந்து அக்காலத்து ஐபிஎம் கணினியை உபயோகித்து, பெரும் விஞ்ஞான சிக்கல்களை அவிழ்த்தது.
கணக்கு சாத்திரத்தை நடைமுறை சாத்தியங்களுக்கு பயன் படுத்தியவர்கள் வரிசையில் இவர் இடம் பெறுகிறார். 1953ம் வருடம் விஞ்ஞானத்தின் மையமாகிய எம்.ஐ.டி. யில் இவர் பேராசிரியர் ஆனார். வாழ்க்கையின் இறுதி பகுதியை சைனாவில் தன் கல்லூரியில், தன் ஆசானை பெருமைப் படுத்தும் வகையில், விஞ்ஞான மையம் அமைத்து, அதை பேணுவதில் நிறைவு கண்டார்.
மேற்படி வரலாறு மண்ணில் புதைந்து கிடக்கும் மேதைகளில் சிலர் தலையெடுக்க எதிர்பாராத நிகழ்வுகள் உதவுவதை கூறுகிறது. ஒரு துறையின் சாதனைகள் மற்ற பற்பல துறைகளும் உதவும் என்பதற்கே இவரே சாக்ஷி.
இவரை நாம் யாவரும் வணங்க வேண்டும்.
கலைமகளை போற்றுவுமாக.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://ymsc.tsinghua.edu.cn/guanming/image/CCL.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

இன்னம்பூரான் பக்கம் 7 நூறு வருடங்களுக்கு முன்னால் 1 ஜூலை 6, 1916



இன்னம்பூரான் பக்கம் 7

நூறு வருடங்களுக்கு முன்னால் 1

ஜூலை 6, 1916

இன்னம்பூரான்
ஜூலை 6, 2016

பிரசுரம்: http://www.vallamai.com/?p=70172ஜூலை 6, 2016: 18 47

சமுதாயத்தில் நல்லதும் கெட்டதும் நடந்த வண்ணமாகத்தான் இருக்கிறது. உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால், நல்லது நடக்கவும், தீயது விலக்கவும், விழிப்புணர்ச்சி அளிக்கும் அறிவுரை மிகவும் உதவும். கொசு மருந்திலிருந்து விதவாவிவாகம் வரை, விழிப்புணர்ச்சியும், அதை பரப்பும் உத்திகளும், விளம்பரங்களும் வரவேற்கப்படுகின்றன.

நூறு வருடங்களுக்கு முன்னால், ஒரு நிகழ்வு. 1914ம் வருடம் தொடங்கிய முதல் உலக யுத்தத்தில் அமெரிக்கா பங்கு கொள்ள நிச்சயித்த காலகட்டத்தில், ராணுவத்துக்கு ஆள் பிடிக்க வேண்டியிருந்தது. ‘ நாம் தயார் நிலையில் இருக்கிறோமா? ‘ என்ற வினா எழுப்பி,ஜூலை 6, 1916 அன்று பிரசுரமான லெஸ்லி வாராந்திர இதழ் என்ற பத்திரிகையில், ‘இவர் தான் அமெரிக்க மாந்தர்‘ என்று குறிப்பிடும் வகையில், ஜேம்ஸ் மாண்ட்கோமரி ஃப்லாக் என்பவர் வரைந்த ‘அங்க்கில் சாம்‘ என்ற படம் பிரசுரம் ஆனது. அவர் அமெரிக்கர்களை யுத்த ஆயத்தங்களுக்கு அழைப்பதாக வாசகம் அமைக்கப்பட்டது. இதற்கு ஓஹோ என்ற ஏகப்பட்ட வரவேற்பு.  இரு வருடங்களுக்குள் 40 லக்ஷம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டன. மக்களும் திரண்டு உதவினர்.
நான் சமீபகாலத்தில், கிட்டத்தட்ட நூறாண்டுகள் கழிந்த பின்னும், இந்த முத்திரை சித்திரம் பயனில் இருப்பதைக் கண்டேன்.

யார் இந்த சராசரி அமெரிக்கனின் மாதிரி என்று ஜனாதிபதி ரூஸ்வெல்ட் கேட்டதற்கு, சிக்கனம் கருதி தன்னையே மாதிரியாக வைத்துக்கொண்டதாக அந்த ஓவியர் விளக்கம் அளித்தார். ஜனாதிபதியும், இது தான் அமெரிக்க குணாதிசயம் என்று பாராட்டினார். அது யாது என்றால், நடு நிலை நியாயம், பொறுப்பேற்கும் தன்மை, நாணயம், நாட்டுப்பற்று எல்லாம் உள்ள மனிதன். 

ஒரு கல்லில் எத்தனை மாங்காய்!

நாம் நம் நாட்டுக்கு எந்த மாதிரி பிரதிபலிப்பு முத்திரை சித்திரம் வரையலாம்?
-#-
சித்திரத்துக்கு நன்றி: https://upload.wikimedia.org/wikipedia/commons/1/1d/Unclesamwantyou.jpg


படித்தது: James Montgomery Flagg (1877–1960). Wake Up America! New York: The Hegman Print, 1917. Color lithographic poster. Prints and Photographs Division, Library of Congress (58D.6)



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tuesday, June 28, 2016

இன்னம்பூரான் பக்கம் 1 [4] சமுதாயமும், நீயும், நானும், அவரும். [4.1]

இன்னம்பூரான் பக்கம் 1 [4] 
சமுதாயமும், நீயும், நானும், அவரும். [4.1]



பிரசுரம்: http://www.vallamai.com/?p=69992

Wednesday, June 29, 2016, 5:20

இன்னம்பூரான்
ஜூன் 28. 2016
‘…முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க..’

என்று மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் வாழ்த்திய பாரத சமுதாயத்தின் தற்கால பொது உடைமை, சங்கம், புதுமை, ஒப்பிலா தன்மை ஆகியவற்றை நாமே சற்று பரிசோதித்துக்கொள்வது நலம் பயக்கும்.

நமது பொதுவுடமை நாட்டுப்பற்றும், சமத்துவமும், தருமமிகு வாழ்க்கையும் எனலாம். நாடு விடுதலை அடைவதற்கு முன் இருந்த நாட்டுப்பற்று இன்று காணக்கிடைக்கவில்லை. 1947லிருந்து எழுபது ஆண்டுகளுக்குள், பிரிவினை வாதங்கள் ஓங்கி வளர்ந்து விட்டன. பாரதசமுதாயமே சற்று நீர்த்துப்போனமாதிரி தான் காட்சி. பாரதியார் கனவில் உதித்த பாரத சமுதாயம் மனத்தளவிலாவது திரும்பி வரவேண்டும். இன்று இதை முன்வைப்பதற்கு ஒரு காரணமுண்டு –

பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிந்தது. பிரிந்ததா என்பதே ஒரு கேள்விக்குறியாக திரிகிறது. ஒரு கோணத்தில் பார்த்தால், அந்த நாட்டு மக்கள் அவ்வாறு விலகுவதின் தாக்கம் பற்றி , முடிவு எடுத்த பின் தான் அறிந்து கொள்ள விழைந்தார்களாம்! நமது அருமை நண்பர் திரு.நரசய்யா அவர்களின் பேத்தி செல்வி தீக்ஷா ரமேஷ் ஒரு பிரபல இதழில், புதுமையான ஆய்வு ஒன்று செய்த பின், நேற்று இவ்வாறு அறிவித்திருந்தார்.

பொது ஜன அபிப்ராயம் என்பது எளிதில் காட்சி தருவதில்லை. நிமிடந்தோறும் நிறம் மாறும். விடுதலை பெற்ற போது பாரத தேசம் இருந்தது; இந்தியா கேள்விக்குறி தான். அதாவது நாம் தேசீய வேட்கையில் ஒன்று பட்டிருந்தாலும், குறுநிலமன்னராட்சிகளும், கலோனிய அரசின் தாக்கங்களும், பாகிஸ்தான் பிரிவினை காயங்களும், பல உட்பிரிவுகளை முன் நிறுத்தின. பின்னர், மொழிவாரி மாநிலங்கள், கோரிக்கைகள், பல கலாச்சார வித்தியாசங்கள் எல்லாம் நமது தேசீய வேட்கையின் வீரியத்தை குறைத்துவிட்டன என்று சொன்னால், மிகையாகாது. மேலும், ருசி பார்த்த பூனை போல, பற்பல உட்பிரிவு சமுதாயத்தினர், சுயநலத்திற்காக, பாரத சமுதாயத்தின் மேன்மைக்கு உழைக்கவில்லை.

எனினும், வலுவான இந்திய அரசியல் சாஸனமும், மத்திய அரசு/ மாநில அரசுகள் என்ற பாகுபாடும், விடுதலை வேள்வி அளித்த வரப்பிரசாதங்களும், நீதி, தணிக்கை, கண்காணிப்பு, தேர்தல் நிர்வாஹம் போன்ற துறைகள் மத்திய அரசிடமோ, மாநில அரசுகளிடமோ, கை கட்டி சேவகம் புரியாததால், ‘பாரத சமுதாயத்தின்’ பொதுவுடைமையை கட்டிக்காப்பாற்ற இயலும். இந்த அளவுக்கு மட்டுமே, மக்களிடம் ஆழ்ந்த ஈடுபாடு இருந்தால், சமத்துவத்தையும், தருமமிகு வாழ்க்கையையும் நாம் படைத்துக்கொள்ளலாம்.
அவற்றின் நுட்பங்களையும், சங்கம், புதுமை, ஒப்பிலா தன்மை ஆகியவற்றை அலசுவது பற்றியும் வாசகர்கள் கருத்து அறிந்த பின் எழுதுவது சாலத்தகும்.

நன்றி.

சித்திரத்துக்கு நன்றி:

இன்னம்பூரான்








இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Caught on Camera

http://www.ndtv.com/mumbai-news/caught-on-camera-drunk-woman-assaults-cops-ransacks-police-station-1424239

Credit NDTV 

Sunday, June 26, 2016

பெண்ணியம்: புதிய பார்வை [3/2]இன்னம்பூரான் பக்கம் [7]

இன்னம்பூரான் பக்கம் [7]
 பெண்ணியம்: புதிய பார்வை [3/2]

p
Sunday, June 26, 2016, 14:51
பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=69914
இன்னம்பூரான்
ஜூன் 26, 2016
கட்டுரையை தொடர்வதற்கு முன் ஷாக்: இன்று சென்னையில் ஐந்து பெண்மணிகள் (நான்கு பெண்கள் 30 வயதுக்குள்) கொடூரமாகத் தாக்கப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் 24 வயது யுவதி. கணினி பணியாளர். நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் கொலை. ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் அருகில் ஒரு அன்னையும் அவரது மூன்று மகளிரும் கொல்லப்பட்டு, வீட்டிலேயே சடலங்கள் ஒளித்து வைக்கப்பட்டிருந்தன. இதையெல்லாம் கேட்டு, பிரபல வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், ‘பெண்களுக்கு வீட்டிலும் பாதுகாப்பு இல்லை; வெளியிலும் இல்லை. அவர்கள் தற்காப்பு சண்டைகள் கற்றுக்கொள்ள வேண்டும். ‘ என்கிறார்.

“,,,இன்று கட்டுரையின் முன்னறிவிப்பு மட்டும் தான். வாசகர்கள் இருந்தால், முழுதும் வெளியாகும். அத்தருணம் படித்த கட்டுரையின் இணைப்பும் கொடுக்கப்படும். அது வரை, சாரு பஹ்ரீக்கும், லான்ஸெட்டுக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்.”
(தயக்கத்துடன் தொடருக்குத் திரும்புகிறோம்.).

சாரு பஹ்ரீ இந்த கொடுமையின் நிவாரணம் பொருட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளை விவரிக்கும்போது, கூறுவது:
உலக சுகாதார மையம் [WHO] உலகின் மூன்றில் ஒரு பங்கு பெண்பாலார் தனது வாழ்க்கையில் வன்முறையால் துன்பம் அடைகின்றனர் என கூறுகிறது. இந்தியாவில் வீட்டிற்குள் வன்முறை அவதிப்படும் பெண்களே மூன்றில் ஒரு பங்கு என்பதால் உலக பிரச்னை, இந்தியாவில் எங்கும் இல்லாத அளவு மாபெரும் பிரச்னையாகி விட்டது. முதற்கண்ணாக, விழிப்புணர்ச்சி தலையெடுக்கவேண்டும். இந்திய மத்திய அரசின் சுகாதார இலாக்கா 850,000 நபர்களை முன்னிலை சமுதாய ஆலோசகர்களாக (Accredited Social Health Activists (ASHAs)—front-line community health workers—to create awareness of what constitutes violence against women, the consequences, and its identification and prevention.) நியமனம் செய்து, பயிற்சி அளித்து, வன்முறைக்கு உட்படுத்த பெண்களுக்கு தக்கதொரு ஆலோசனை, அடைக்கலம், சட்ட உதவி, வருமானம் தரும் சிறு தொழில்கள் கற்றுக்கொடுப்பது, குழந்தை பராமரிப்பு ஆகிய உதவிகள் செய்வார்கள்.’ என்ற திட்டம் பற்றி விவரம் கொடுத்திருக்கிறார், இத்தகைய சங்கிலித்தொடர் உதவிகள் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்கிறார். பொது மக்கள் இவற்றீன் மீது கவனம் வைத்து இவர்களின் பணியை தணிக்கை செய்யவேண்டும்.

என்ன உதவி செய்தாலும் அவை உடனுக்குடன் நம்பகத்தனமான முறையில் கிட்ட வேண்டும் என்பதற்காக, புது டில்லியில், எல்லா விதமான உதவிகளும் ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்கள்.

மாநிலங்களில் இத்தகைய சேவை மன்றங்கள் எதிர்ப்பார்த்த அளவு உருவாகவில்லை. காரணம், வேறு அமைச்சரகம் என்ற ஐயம் ஏற்படுகிறது. எனினும் 33 மையங்கள் இருப்பது ஒரு அளவு வரவேற்கத்தக்கதே. மூன்றே வருடங்களில் ஒவ்வொறு மாவட்டத்திலும் இவை சேவை செய்யும் என்று மத்திய அரசு உறுதி கூறுகிறது. மற்றும் பல உத்திகளை கையாளப்போவதாக மத்திய அரசும் தன்னார்வக்குழுக்களும் திட்டம் போடுகின்றனர்.
பார்க்கலாம்.
(தொடரும்)
சித்திரத்துக்கு நன்றி: https://i.ytimg.com/vi/aHjoqG8R6Dg/hqdefault.jpg


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com