Tuesday, November 24, 2015

நாளொரு பக்கம் 33

நாளொரு பக்கம் 33

Saturday, the 28th March 2015

“...He would do anything for you, and he could make you do anything for him...”
- Professor CNR Rao on JRD Tata
Elegantly brief, this eulogy to Jeh ( as JRD Tatq is known in inner circles) is bereft of flattery, rings true and comes from a high dignitary, not given to hyperboles. The quintessential human in Jeh could not have done more or could not have asked for less.  This is a leadership quality and is also  a good neighborly attribute. For a role model, we do not have look elsewhere.
These sterling qualities come ‘made easy’ for us, thanks to Jeh’s life, as lived in. A chat with a lonesome widow, a good turn to a disabled guy, mentoring a student from a downtrodded community, a wee bit of charity, all are possible for most of us. And, there are countless other ways of reaching out to one in distress. CNRR’s tribute to Jeh implies an aspect of good governance, exemplified by the Hawthorne Experiment, which was a way of life with the Tata School of Life.
‘Caring begets duty unbound’ is the edifice on which it is built.
-x-

Wednesday, November 18, 2015

நாளொரு பக்கம் 32/Daily Bulletin 32

நாளொரு பக்கம் 32/Daily Bulletin 32


Thursday, the 26rd March 2015
“The Art is Ageless program THAT focuses on individual well-being and the agelessness of human creativity.”
-Heidi Beyer: Presbyterian Manor:Farmington: USA
Aging had crossed the fence called age. There is a certain immortality to it, here and now. Most of the elders are not merely superannuated; they stand released from their ‘duties’. Infirmity and sickness may trouble one; one learns to manage though. Some prefer to go to temple; some are immersed in T.V. soap operas. The argumentative Indian will live long, so long as politics, religiosity and verbal assaults being debated endlessly is a way of life.
While the Song of Life is chanted so sweet, sleep eludes many oldies! Do you ask for a remedy? 
Then, Pray!, Listen to -Heidi Beyer, the Parson of the Presbyterian Manor at Farmington, a small village in Missouri State: USA. The very habitation is the well-guarded row of cages of sexual offenders, deviants, juvenile offenders and the like. Most residents are/were connected to these cages in some way or the other.
Notwithstanding this morbid scenario, Heidi seeks to imbue a sense of aesthetics among Elders by enthusing them to come out of the self-structured shell by encouraging Elder Art Galleries, Festivals, Awards such that a spirit of fulfillment pervades the atmosphere. Music is an overwhelmingly moving influence.
This is my translation of my Tamil piece of the 26rd March 2015 and is relevant to assuage the troubling image of a doddering old person, as aesthetics, literary pursuit, art appreciation and mentoring the young ones are as creative as Mona Lisa.
What do you say friends?
Innamburan
18 11 20151
முதியோர் கலைக்காட்சிகளும், விழாக்களும், பரிசுகளும் அங்கு முதியோர்களின் வாழ்வில் நிறைவு கொணருகின்றன. இங்கும் சங்கீதம் இடம் பெறுவது மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள். 
கலையார்வம், இலக்கியார்வம், ரசனை, சிறார்களுக்கு பொருத்தமான போதனை எல்லாமே நிறைவு தந்து, இளமையை வரவழைப்பவை தான்.

முதுமை, வயது என்ற எல்லையை கடந்து, இந்த பூவுலகிலேயே ஒரு அமரத்துவம் பெற்று விடுகிறது. பெரும்பாலோர் ஓய்வு பெற்றதுமல்லாமல், கடமைகளிலிருந்தும் விடுதலை பெற்றவர்கள். நோய் நொடி படுத்தினாலும், பொதுவாக எல்லாரும் ஒருவாறு சமாளித்துவிடுகிறார்கள். சிலருக்கு ஆலயம் செல்வது சாலவும் நன்று. மற்றும் சிலருக்கு தொல்லைக்காட்சி ஒரு டைம் பாஸ். அரசியல் இருக்கும் வரை, மதாபிமானங்கள்/அவமதிப்புகள் இருக்கும் வரை பட்டிமன்றங்களுக்கு நீடுழி வாழ்வு. கசமசாவின் சுவையே தனி!
கீர்த்தானரம்பம் இவ்வாறு இருக்கும்போது, பல முதியோர்களை அணுகமாட்டேன் என்கிறாள், நித்ரா தேவி. என்ன செய்யலாம் என்ற எண்ணம் தோன்றுங்கால், ஹைடி பேயர் சொல்வதை கேட்டு பயன் அடையலாம். மிஸெளரி மாநிலத்தின் குக்கிராமம் ஒன்றில், அவர் மதபோதகர். அவ்வூரின் மையமே பாலின வன்முறை செய்த குற்றவாளிகளின் கூண்டு. பெரும்பாலோர் அங்கு ஊழியம் செய்பவர்கள். அத்தகைய பின்னணியிலும் முதியவர்களிடம் கலை ஆர்வம் வளர்க்க ஹைடி பேயர் உதவுகிறார். முதியோர் கலைக்காட்சிகளும், விழாக்களும், பரிசுகளும் அங்கு முதியோர்களின் வாழ்வில் நிறைவு கொணருகின்றன. இங்கும் சங்கீதம் இடம் பெறுவது மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள். 
கலையார்வம், இலக்கியார்வம், ரசனை, சிறார்களுக்கு பொருத்தமான போதனை எல்லாமே நிறைவு தந்து, இளமையை வரவழைப்பவை தான்.
-#- 
சித்திரித்துக்கு நன்றி: http://dmh.mo.gov/img/smmhc/sign5.jpg

Tuesday, November 10, 2015

நாளொரு பக்கம் 31

நாளொரு பக்கம் 31

Wednesday, the 25rd March 2015
अङ्गुष्टमात्र: पुरुषो मध्य आत्मनि तिष्टति
ईसानां भूतभव्यस्य न ततो विजुगुप्सते ॥

அங்குஷ்ட மாத்ர: புருஷ: மத்ய ஆத்மனி திஷ்டதி
ஈஸானம் பூதபவ்யஸ்ய ந ததோ விஜுகுப்ஸதே


தெய்வத்தின் குரல் எங்கும் ஒலிக்கும். அதன் வெளிச்சமே ஒளி. திருக்கோவிலூர் ரேழியில் முதலாழ்வார்களை நெருக்கியவன், அந்த நீக்கமற நிறைந்தவனாகிய தெய்வமே. ஆங்கிலத்தில் Omnipresent, Omniscient என்பார்கள் அதே கருத்தை.

இதயம் எனப்படும் பெட்டகத்தே, கட்டைவிரல் அளவு இடைவெளிக்குள் ஒடுக்கிக்கொண்டு ஆனந்தமாக உறைவதும், அவனே. 

எல்லை அறிய இயலாத  ஆகாய வெளியில் விசாலமாக  விரிந்திருப்பதும் அவனே. பரம்பொருள் என்கிறார்கள்.

அனாதி காலம் முதற்கொண்டு, என்றென்றும் காலம், நேரம், நாள், கிழமை போன்ற 
கால அளவுகளை கடந்தவனாகிய  கடவுளை உணர்ந்து கொண்டுவிட்டால், அந்த  பாகியசாலிகள் தங்களை எதிலிருந்தும் காத்துக்கொள்ள முனைவதில்லை என்பதே இந்த கடோபனிஷத்  செய்யுளின் பொருள். 

தன்னையும் 
சுற்றத்தையும் பிரித்தறியாமல் 
தன்னுள்
இருப்பதே எங்கும் இருப்பது 
என்று உணர்ந்தபின் எதனிடமிருந்து எதை காப்பாற்றுவது? 
-#-

Monday, November 9, 2015

அன்றொரு நாள்: ஜூலை 6/7

அன்றொரு நாள்: ஜூலை 6/7


‘மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை
எந்நோற்றான் கொல்லெனும் சொல்.’

என்ன நோன்பும், உதவியும் வேண்டிக்கிடக்கிறது? ஜீ.எல்.பாட்ரா அவர்கள் ஜனாதிபதி முன் நிற்கிறார், கண்களில் நீர் ததும்ப, நெஞ்சடைக்க, மனமுடைந்து, உடல் தளர்ந்து, ஆத்மபலம் கரைந்தது போல். அவற்றை எல்லாம் கட்டிப்போட்டதால், அஃறிணையாக, ‘கானகத்தே நிற்கும் நெடு மரம் போல்’. ஜடம். படத்தைப் பாருங்கள். 15 ஆகஸ்ட் 1999 அன்று, இந்த நிகழ்வு.
கார்கில் யுத்தம். அண்டை அயல் அநாவசியமாகத் தொடுத்த யுத்தம். சிந்திய  இரத்தத்தை நினைத்தால், மனம் கலங்குகிறது. அதான் சிவப்பு மசி.
இலக்கு 5140 என்ற இடத்தை பிடிக்க செல்கிறார், ‘சிம்ம ராஜா’ கேப்டன் விக்ரம் பாட்ரா (24) (13, ஜேஏகே ரைஃபில்ஸ் & டெல்டா கம்பெனி). பகையை எதிர்பாராத விதமாகத் தாக்கவேண்டுமென, அவரும், ஐந்து வீரர்களும் ஒரு செங்குத்தான பாதை மேல் ஏற, பகையின் மிஷின்கன் தாக்குதல் கடுமை. ‘த கன்ஸ் ஆஃப் நவ்ரோன்’ சினிமா பார்த்திருக்கிறீர்களோ? அந்த மாதிரியான இக்கட்டு; நெருக்கடி. கையும் கையுமாகக் கலந்த கடுமையான போரில், இவரது கையால் இறந்தது மூன்று பகையாளிகள். பலத்த காயம் பட்ட பிறகு போராடிய இவரது துணிச்சலால் உந்தப்பட்டு, இவர் படை ஆவேசத்துடன் இயங்க, அந்த இலக்கு பிடிப்பட்டது: அதிகாலை 3:30. 20 ஜூன் 1999. ஒன்றன் பின் ஒன்றாக, இலக்கு 5100, இலக்கு 4700, உச்சி, மூன்று புள்ளிகள் ஆகியவை இவரது வசமாயின. அடுத்து, கேப்டன் அனுஜ் நய்யார், சஞ்சய் குமார் (இவருக்கும் இதே விருது;சரியான கூட்டாளி, விக்ரமுக்கு.) உதவியுடன், இலக்கு 4750 ஐயும், இலக்கு 4875 ஐயும் பிடிக்கும் தறுவாயில், கேப்டன் விக்ரம் பட்ரா வீரமரணம் எய்தினார். அதிகாலை: 6/7 ஜூலை 1999. ( என்ன இலக்கு வேண்டியிருக்கு, போங்கள்?) அவரது மரண வாக்கு, ‘என் தெய்வத்தாய்க்கு (பாரதமாதா) ஜே!’. 

அவருக்கு இந்தியாவின் அதி உன்னதமான ‘பரம் வீர் சக்ரா’ அருளிய திருவிழாவை முதலில் பார்த்தோம். 
இன்றைய இடுகைக்கு நடத்திய ஆய்வில் பரம வீர் சக்ராவை பற்றிய வரலாற்று செய்திகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. அந்த ஆய்வில் என்னை தோய்த்து எடுத்தன. இரண்டை மட்டும் இப்போதைக்கு பகிர்ந்து கொள்கிறேன். விக்ரமும் சரி, முதல் முதலாக 1948ல் இந்த பதக்கத்தை பெற்ற மேஜர் ஸோம்நாத் சர்மாவும் ஒரே ஊர்: பாலன்பூர். மேலும், இந்த பதக்கத்தின் வடிவமைத்துக்கொடுத்தவர், திருமதி.சாவித்ரி கனோல்கர் என்ற அன்னிய நாட்டு பெண்மணி. அவருடைய வடமொழி ஞானம், இந்திய ஆன்மீக  ஆர்வம், வேதத்தை பற்றிய ஞானம் ஆகியவற்றை வைத்து தான் அவரை அணுகினார்கள். அவரும் ததீசி முனிவர் வஜ்ராயுதத்திற்காக, தன் எலும்பை கொடுத்த  நிகழ்வின் அடிப்படையில், இந்த பதக்கத்தை வடிவமைத்தார்.(தாய்: ரஷ்யன் தந்தை:ஹங்கேரியன்: கணவன்: இந்தியர்:ராணுவ அதிகாரி) மேஜர் ஸோம்நாத் சர்மா, இவரின் மாப்பிள்ளையின் அண்ணன். இந்த பதக்கம் நம் நாட்டுக்கு வேண்டும் என்றவர், நேரு. இதன் முன்னோடி: இங்கிலாந்தின் விக்டோரியா க்ராஸ் என்ற செப்புப் பதக்கம். விக்டோரியா க்ராஸ்ஸின் வரலாறும் அதை பெற்ற தியாகச்செம்மல்களின் வீர தீர பராக்ரமங்களும், ரோமஹர்ஷம் வருமளவுக்கு, துணிச்சலானவை. 

ஒரு வேளை, மற்றதெல்லாம் விட்டு விட்டு, பரம வீர் சக்ராவும், விக்டோரியா க்ராஸ்ஸும் மட்டுமே என் கவனத்தின் மீது ஆளுமை செய்யுமோ?
இன்னம்பூரான்
07 07 2011
உசாத்துணை:




Param Vir Chakra
Mr Girdhari Lal Batra with his son's Param Vir Chakra medal. A grateful nation applauds the Batra family.

Full size: 399x791 
Image Credit: http://www.bharat-rakshak.com/ARMY/Galleries/2590-3/Batra08.jpg






Point 5140
Reconnaissance for the capture of Point 5140. Sitting Left to Right: Lieutenant Vikram Batra, Major Vikas Vohra, Captain Chatterji and the CO of 13 JAK Rifles, Lieutenant Colonel Y K Joshi.

Full size: 490x291 






Copyright BHARAT RAKSHAK. All rights reserved.Reproduction in whole or in part in any form or medium without express written permission of BHARAT RAKSHAK is prohibited.
Copyright BHARAT RAKSHAK. All rights reserved.Reproduction in whole or in part in any form or medium without express written permission of BHARAT RAKSHAK is prohibited.






Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
7/7/11

to thamizhvaasal, me 





மிக மிக அருமையான, கண்ணீர் கொட்ட வைக்கும் இடுகை ஐயா.  பல ராணுவ அதிகாரிகளுடன் நட்பு முறையில் நெருக்கமாகப் பழகியதால் இந்த உணர்வுகளை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. அமைதிப்படையின் பரமேச்வரனும், மெட்ராஜ் ரெஜிமெண்டின் விசாகன் என்னும் கர்னலும் எங்கள் நண்பர்கள்.  அதுவும் விசாகனின் பெண்ணும், எங்க பெண்ணும் ஒரே வகுப்பு.  உல்ஃபா தீவிரவாதிகளால் விசாகன் அவர் குடும்பத்தினர் கண்ணெதிரே கொல்லப்பட்டபோது அழுகையை அடக்க முடியவில்லை.  இப்படி எத்தனை எத்தனை நண்பர்கள்!  மனம் கனத்துத் தான் போகிறது. :((((((((((

2011/7/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>




Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>Unsubscribe
7/7/11

to thamizhvaasal 





பரம்வீர்சக்ரா பற்றிய தொலைக்காட்சித் தொடர் ஒன்று தூர்தர்ஷன் மட்டுமே பிரபலமாக இருந்த நாட்களில் வந்திருக்கிறது.  கோர்கா ரெஜிமெண்டின் மேஜர் ஜெனரல் தாபா அவர்கள் அதிலே முன்னுரை கொடுத்திருப்பார்.

Sunday, November 8, 2015

நாளொரு பக்கம் 29

நாளொரு பக்கம் 29

Tuesday, the 24rd March 2015

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு. 
-திரிகடுகம் 6


பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும்:
தற்புகழ்ச்சியையே தவிர்ப்பது கடினம். சுயநலத்திற்காகவோ, மரியாதை நிமித்தமாகவோ, பணிவன்புடனோ பிறர் புகழ்மாலை சாற்றினால் உச்சி குளிர்ந்துவிடும். மற்றவர் பேணுவதை நாடுவீர்கள். அதை லஜ்ஜையுடன் கையாளுவது சாலத்தகும்.
பேணார்
திறன் வேறு கூறின் பொறையும்:

புகழ் வரவு. இழிச்சொல்லோ பற்று (அதாவது [-]). இழிச்சொல்லை ஜீரணம் செய்வது கடினம். அது சொற்போரையோ, கைகலப்பையோ துவக்கலாம். தேவையா? பொறுத்தாள்வதே விவேகம்.

அற வினையைக்
கார் ஆண்மை போல ஒழுகலும்:

பிறருக்கு மைம்மாறு செய்யும் தருணம் கிட்டினால், அதை கொடுப்பினையாக கருதாமல், கைம்மாறு எதிர்பார்ப்பதைத் தவிர்த்து, ‘பணி செய்து கிடப்பது என் கடனே’ என்ற ஆளுமை தான் நற்பயன். செருக்கு என்றால் அகந்தை என்ற பொருள் இங்கு இல்லை. அது பெருமிதத்தைக் குறிக்கிறது.
-#-

Friday, November 6, 2015

வாத்ஸல்யம்

வாத்ஸல்யம்
Monday, February 11, 2013, 7:03



இன்னம்பூரான்
“நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை


நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலைக்
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல்மல்லைத் தலசயனத்தே.’
(பெரிய திருமொழி 2-5-2)
சென்னைக்கு அருகே ஒரு பெருமாள் கோயில். பெருமாளோ பக்தவத்ஸலன். தாயாரோ ‘என்னைப்பெற்ற தாயார்’. அகஸ்மாத்தாக, என் தங்கையும், அவளுடைய குடும்பமும், நானும் ஒரு நாள் சாயரக்ஷையில் திருநின்றவூர் போயிருந்தோம். அற்புதமாக தரிசனம் கிட்டியது. எல்லாருக்கும் தான். என் மனம் இந்த தெய்வீக திருநாமங்களையும், அவற்றில் குடி கொண்டிருக்கும் கனிவுக்கும், அன்புக்கும், பிரேமைக்கும் ஊற்றுக்கண்ணாகிய வாத்ஸல்யத்தில் லயித்தது. பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தாலும், சாவகாசமாக தரிசித்து, அர்ச்சானாதி பிரசாதங்களை பெற்று அனுபவிக்க முடிந்தது. அமைதியும், மன நிறைவும், சந்துஷ்டி என்பார்களே அந்த பூரணத்துவமும் எம்மை ஆட்கொண்டபடியால், லெளகீக சமாச்சாரங்கள் ( வண்டி ஓட்டுனர் தேநீர் அருந்தினாரா?/ காலணிகள் பத்திரமா? வீட்டுச்சாவி யாரிடம்?/ஓய்வூதியம் வங்கிக்கணக்கில் வந்திருக்குமா?/ அலமாரியை பூட்டினோமா? இத்யாதி) மனதை விட்டு விலகியிருந்தன. தரிசனம் முடிந்தபின் சற்று நேரம் அங்கே அமர்ந்து விட்டு வருவது ஒரு சம்பிரதாயம். நாங்களும் அவ்வாறே செய்தோம். என்ன தோன்றியதோ, தெரியவில்லை. என் தங்கை ஒரு கேள்வி கேட்டாள். பதில். அடுத்த கேள்வி.  பேசிக்கொண்டே, அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றால், ஒரு இனிய அனுபவம். பெருமானின் பெயர்: ஹிருதயாலீஸ்வரர்; அம்பாளோ மரகதாம்பிகை. கொஞ்சம் அசந்து தான் போய்விட்டோம். இப்படி ஒரு பொருத்தமா என்று. அந்த ஊரில் குடி புகுந்து விடலாமா என்று கூட ஒரு எண்ணம் உலா வந்தது. அங்கு சிறிது நேரம் அமர்ந்த பின், எங்கள் உரையாடல் தொடர்ந்தது.  இப்படி, நேரம் போனது தெரியாமல் ஒரு அரை மணி நேரம் கழிந்து விட்டது.  சில நிமிடங்களில் ஒரு கூட்டமே சேர்ந்து விட்டது, தாமதமாகத்தான் எங்களுக்குத் தெரிந்தது, முடிவில். அதுவும் எப்படி? முன்பின் தெரியாத மூத்த நபரொருவர், ‘நல்ல வேளை. நானும் கலந்து கொண்டேன். நீங்கள் யாரும் ஆக்ஷேபிக்கவில்லை. எல்லாம் ஆத்மார்த்தமாக நடந்து விட்டது. எல்லாம் அவனுடைய வாத்ஸல்யம்’ என்று சொல்லி மனமுருகி விடை பெற்றுக்கொண்டார். அப்போது தான் புரிந்து கொண்டோம், ஒரு கோஷ்டி பிரவசனம் நடந்து முடிந்திருக்கிறது என்று. கிட்டத்தட்ட பத்து/பதினைந்து பேர், அடக்கி வாசிக்கும் குரலில், சம்பாஷித்ததில் யார் யார் என்ன என்ன சொன்னார்கள் என்பது முக்கியம் அல்ல. கேள்வி தான் முக்கியம்; சாராம்சம் தான் முக்கியம். என் தங்கை கேட்ட கேள்வி, “ ஏன் இங்கு இன்று எதிர்பாராமல் கிடைத்த மனசமாதானத்தை நம்மால் மற்ற இடங்களில் இருக்கும்போது பெற முடியவில்லை?

சாராம்சம்: முனைந்தால் அது நமக்குக் கிட்டும். முனிவர்களும், சாதுக்களும் பெறவில்லையா? முனைவது என்பதே ஒரு அப்பியாசம். அப்போது அப்பியாசத்தில் லயிக்கும் மனம் லெளகீகத்தில் தான் உழல்கிறது. வாசற்படி தாண்டி பக்தி மார்க்கத்தில் பயணிப்பதில்லை. அதனால் என்ன? ஆன்மீகமும் பயிற்சியினால் தானே படிப்படியாக கோபுரம் ஏறுகிறது. அதை செய்து பார்ப்போம். அம்மா! பக்திக்கு முன் ஆன்மீகம் எம்மாத்திரம்? ‘என்னைப்பெற்ற தாயாரின்’ கருணாசாகரத்திலோ, பக்தவத்ஸலனின் அன்புப்பிடியிலோ, ஹிருதயாலீஸ்வரரின் மனோபாவ கவர்ச்சியிலோ, மரகதாம்பிகையின் கனிவு பிரவாகத்திலேயோ, ஆன்மீகமா ஆட்சி புரிகிறது? லெளகீகத்திலிருந்து தற்காலிக விடுதலை பெற ஆன்மீகம் உதவலாம்.  தற்காலம் பெரிதும் பேசப்படும் ஆன்மீகம் வேறு. ஞானமார்க்கம் வேறு. நாமோ ஆன்மீகத்தையே லெளகீகத்தின் படி நிலையாக வைத்து குப்பை கொட்டுகிறோம். பக்தி மார்க்கமே உகந்தது. அதற்குதவத்தான் பெருமாளின் வாத்ஸல்யம். தாயாரோ பெற்றெடுத்த அன்னையானாள். அன்றொரு நாள் பிரம்மபுரத்தில் ‘பிள்ளையாருக்கு’ அடிசல் கொடுத்த அம்மை, இங்கே தாயார்.  நீங்கள் கொஞ்சம் தயங்கினால் கூட, உமது மனோபாவத்தைக் கொள்ளை கொள்ள மரகதாம்பிகா சமேத ஹிருதயாலீஸ்வரர் வந்து விடுவார். தெய்வ சன்னிதானம் நம் மனதில் தான். பக்குவம் வந்தால், என் அம்மா சொன்னமாதிரி, அவரே நம்மை தேடி வருவார். பக்தவத்ஸல பெருமாள் கடல்மல்லைத் தலசயனம் சென்று தானே, திருமங்கையாழ்வாரிடம் பாசுரம் பெற்று, மங்களாசாஸனம் செய்து கொண்டார்.  இப்படியாக ஒரு நல்ல நாள் கழிந்தது. நல்லெண்ணம் தொடர்ந்து ஆட்கொண்டவண்ணம் உளது.
இப்படியாக சம்பாஷணை நடந்து கொண்டபோது, என் மருமான் கேட்டான், ஒரு உதாரணம் சொல்லு என்று. 1964ல் அக்காலத்து ஆடிட்டர் ஜெனெரல் ஏ.கே.ராய் அவர்களுடன் திருமலைக்கு செல்லும் வாய்ப்புக் கிட்டியது. வீ. வீ.ஐ.பி. ஏற்பாடு. தேவஸ்தானத்துத் தலைவர் எங்களை அழைத்துச் சென்றார். அந்த ‘ஜருகண்டி’ சன்னிதானத்தில், கருவறை தலைவாயிலில் இரண்டு மணி நேரம். ஸஹஸ்ரநாம அர்ச்சனை. எங்கள் இருவருக்கும், அவருடைய காரியதரிசி தேசிகனுக்கும் இந்த அரிய வாய்ப்பு. திருமலை வெங்கடேசனின் பக்தியில் மூழ்கிக்கிடந்தோம்.  அங்கு நுழையும் முன், திரு. ராய், ‘ராஜூ! என் கூட வா.’. (ராஜூ வண்டி ஓட்டுனர்.) தெய்வ சன்னிதானத்திலும் லெளகீகம் நடை போடுவது, அவருக்குத் தெரியாத சமாசாரமா? ராஜுவுக்கும் அந்த அரிய வாய்ப்பு. சென்னை வந்த பின் ராஜூ என்னிடம் சொன்னார், ‘நான் இரண்டு தெய்வங்களை தரிசித்தேன்.’
சித்திரத்துக்கு நன்றி:
நன்றி: வல்லமை இதழ்: http://www.vallamai.com/literature/articles/31844/

***
இப்படி மனதைக் கவரும் ஒரு கோயிலைப் பார்த்து விட்டால் எனக்கும் சில முறை சில இடங்களில் தோன்றியதுண்டு. :-) ...
சாராம்சம்: முனைந்தால் அது நமக்குக் கிட்டும். முனிவர்களும், சாதுக்களும் பெறவில்லையா? முனைவது என்பதே ஒரு அப்பியாசம்.
உண்மை. 
அப்போது அப்பியாசத்தில் லயிக்கும் மனம் லெளகீகத்தில் தான் உழல்கிறது. வாசற்படி தாண்டி பக்தி மார்க்கத்தில் பயணிப்பதில்லை. அதனால் என்ன? ஆன்மீகமும் பயிற்சியினால் தானே படிப்படியாக கோபுரம் ஏறுகிறது. அதை செய்து பார்ப்போம். அம்மா! பக்திக்கு முன் ஆன்மீகம் எம்மாத்திரம்?
அழகானச் சொல்லியிருக்கின்றீர்கள். 

சுபா
..
இப்படியாக சம்பாஷணை நடந்து கொண்டபோது, என் மருமான் கேட்டான், ஒரு உதாரணம் சொல்லு என்று. 1964ல் அக்காலத்து ஆடிட்டர் ஜெனெரல் ஏ.கே.ராய் அவர்களுடன் திருமலைக்கு செல்லும் வாய்ப்புக் கி..~சுபாஷிணி ட்ரெம்மல்.
***
வழக்கம் போக  வாத்சல்யமான எழுத்து  இ சார்   சென்னை  வரும்போதெல்லாம் திரு நின்றவூர் போய் இந்த இரண்டு
ஆலயங்களையும் தரிசிக்க  நினைப்பேன்  என்னவோ வேளை வரவில்லை... ஷைலஜா
*
சில ஆண்டுகளுக்கு முன்  இங்கே போய் வந்தோம். ஹ்ருதயாலீஸ்வரரைப்பற்றி  அப்போது தெரியலை. 

ஆனால் எட்டடி ராமரை  தரிசிக்க முடிஞ்சது.

விவரங்கள் இந்த இரண்டு சுட்டிகளில்.

.  நேரம் இருந்தால் பாருங்கள்.



துளசி கோபால்

சித்திரத்துக்கு நன்றி: https://lh4.googleusercontent.com/-Qjj3ekzLcbo/S-a78EBh35I/AAAAAAAAAOA/D6oRF62-i5o/s640/DSCN0482.jpg

Wednesday, November 4, 2015

நாளொரு பக்கம் 30

நாளொரு பக்கம் 30


 
Friday, the 27th March 2015
Use the talents you possess, for the woods would be a very silent place if
no birds sang except the best.
-Henry van Dyke, poet (1852-1933)
Henry van Dyke was one with Nature, thanks to his upbringing. Reputed to be one of the greatest preachers in New York, he was a born leader, who ‘energetically trampled through forest trails, fished at trout brooks, scrambled wooded mountains, and took virtual ownership of nature’.
Let us, therefore, listen to his sage advice with rapt attention. It is alright to pursue Excellence, but lesser attainments also should be given due recognition. For that, each one one of us must do what we can do as our best contribution. Henry van Dyke uses an incomparale simile. All birds sing, some like the koel sing divinely. The beautiful peacock has a grating and unpleasing voice. If we wish only for the koel’s cooing, the silent forest will hardly be welcome to us.
In sum, உன்னால் முடியும் தம்பி.
-x-

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

நாளொரு பக்கம் 28

நாளொரு பக்கம் 28



Wednesday, the 25rd March 2015

यः पठति लिखति पश्यति 
परिपृच्छति पंडितान् उपाश्रयति।
तस्य दिवाकरकिरणैः नलिनी
दलं इव विस्तारिता बुद्धिः॥

One who reads, 
writes, 
sees, 
inquires, 
lives in the company of learned, 

His intellect expands as the lotus petals expands due to the rays of sun.

Thus sayeth an entry in an Internet site.  We may note, with rapt attention, that this wise saying gathers all the attriibutes of well-behaving humanity. The simile of the blossoming lotus and the beaming sunrays is most appropriate.
-x-
Image Credit:
http://izquotes.com/quotes-pictures/quote-he-whose-intellect-overcomes-his-desire-is-higher-than-the-angels-he-whose-desire-overcomes-his-rumi-263336.jpg

Tuesday, November 3, 2015

நாளொரு பக்கம் 27

நாளொரு பக்கம்  27


Monday, the 23rd March 2015/ Add on 3rd November 2015

You may not be able to change the world, but at least you can embarrass the guilty. 
-Jessica Mitford, author, journalist, and civil rights activist (1917-1996)

The Mitford lineage is a much-admired one. Jessica is the much younger sister of Nancy of ‘Noblesse Oblige’ fame. Jessica had won acclaim in many fields of activism. It is widely believed that, when she died in 1996, the San Francisco Chronicle wrote, "In this strangely flat era of 'diversity,' she was the rarest of birds, an exotic creature who rose each morning to become the sun around whom thousands of lives revolved."

We may therefore take her admonition seriously and shame those guilty of misdeamenors. A cause-list for those willing to fight for a cause:
  1. Blackmoney Babalog
  2. Chit Fund Cheats
  3. Bonded Labour Exploiters
  4. Ponzi Plunderers
  5. Sothu Singasanams
  6. False Prophets
  7. Fake Swamys
  8. Education Takeaway Looters
  9. Drug Dealers
  10. The Bihar parents, who assisted cheating in the examinations.
  11. Defenders of the rapists.
  12. Granite grabbers.
  13. Manalvari Mafia.
  14. Aavin diluters.
  15. Commonwealth game, 2G, coal Anthology

&&&& 
so many more.

As JS Mill put it,‘Eternal vigilance is the price of Liberty’.

-x-




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com

Monday, November 2, 2015

நாளொரு பக்கம் 26

நாளொரு பக்கம் 26

 Sunday, the 22th March 2015

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலா காதே.
  • நறுந்தொகை 16


பனங்கனி சுவை பொருந்தியதானாலும், அதனுடைய விதையானது முளை விட்டு, வளர்ந்து வானளாவ செழுமை பெற்றிருந்தாலும், அதனடியில் ஒருவர் கூட அமர்ந்து அதன் நிழலில் இளைப்பாறமுடியாது. விதை முளைத்து வளரினும் அது நிழலாகாது என்பது உருவகம் ( metaphor).

உருவத்தால் பெரியவர்கள் எல்லாரும் பெருமை உடையவர்கள் என்று கொள்ளலாகாது. அது தான் இந்த நறுந்தொகை எனப்படும் வெற்றி வேற்கை செய்யுளின் உட்கருத்து.
-x-
சித்திரத்துக்கு நன்றி: http://mrswarnerarlington.weebly.com/uploads/6/9/0/0/6900648/3040892.jpg?632