Tuesday, November 3, 2015

நாளொரு பக்கம் 27

நாளொரு பக்கம்  27


Monday, the 23rd March 2015/ Add on 3rd November 2015

You may not be able to change the world, but at least you can embarrass the guilty. 
-Jessica Mitford, author, journalist, and civil rights activist (1917-1996)

The Mitford lineage is a much-admired one. Jessica is the much younger sister of Nancy of ‘Noblesse Oblige’ fame. Jessica had won acclaim in many fields of activism. It is widely believed that, when she died in 1996, the San Francisco Chronicle wrote, "In this strangely flat era of 'diversity,' she was the rarest of birds, an exotic creature who rose each morning to become the sun around whom thousands of lives revolved."

We may therefore take her admonition seriously and shame those guilty of misdeamenors. A cause-list for those willing to fight for a cause:
  1. Blackmoney Babalog
  2. Chit Fund Cheats
  3. Bonded Labour Exploiters
  4. Ponzi Plunderers
  5. Sothu Singasanams
  6. False Prophets
  7. Fake Swamys
  8. Education Takeaway Looters
  9. Drug Dealers
  10. The Bihar parents, who assisted cheating in the examinations.
  11. Defenders of the rapists.
  12. Granite grabbers.
  13. Manalvari Mafia.
  14. Aavin diluters.
  15. Commonwealth game, 2G, coal Anthology

&&&& 
so many more.

As JS Mill put it,‘Eternal vigilance is the price of Liberty’.

-x-




இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com

Monday, November 2, 2015

நாளொரு பக்கம் 26

நாளொரு பக்கம் 26

 Sunday, the 22th March 2015

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை
வானுற வோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க் கிருக்க நிழலா காதே.
  • நறுந்தொகை 16


பனங்கனி சுவை பொருந்தியதானாலும், அதனுடைய விதையானது முளை விட்டு, வளர்ந்து வானளாவ செழுமை பெற்றிருந்தாலும், அதனடியில் ஒருவர் கூட அமர்ந்து அதன் நிழலில் இளைப்பாறமுடியாது. விதை முளைத்து வளரினும் அது நிழலாகாது என்பது உருவகம் ( metaphor).

உருவத்தால் பெரியவர்கள் எல்லாரும் பெருமை உடையவர்கள் என்று கொள்ளலாகாது. அது தான் இந்த நறுந்தொகை எனப்படும் வெற்றி வேற்கை செய்யுளின் உட்கருத்து.
-x-
சித்திரத்துக்கு நன்றி: http://mrswarnerarlington.weebly.com/uploads/6/9/0/0/6900648/3040892.jpg?632

Friday, October 30, 2015

நாளொரு பக்கம் 25

நாளொரு பக்கம் 25



 Saturday, the 21th March 2015

भवन्ति नम्रास्तरव फलोद्गमैः
नवांबुभिर्भूमिविलंबिनो घनाः
अनुद्धताः सत्पुरुषा समृद्धिभिः
स्वभाव एवैष परोपकारिणाम् ||

-अभिज्ञानशाकुन्तलम् (महाकवि कालिदास) 
Mahakavi Kalidasa, the unrivalled Dramatist, Poet and the creative writer in Samskritham, is most renowned for his deft, aesthetic and memorable similes and metaphors. They adorn his works like inlaid gems of precious stones. 

The above stanza can be translated to mean: 

Laden with fruits that become heavier by the day, the trees  stoop to conquer - to enable people to pluck and enjoy the sweet fruits.

Similiarly, the clouds pour down the rain, as they can no longer hold the weight of the water.  There are many such descriptions in Tamil literature. In his spiritual exploration, not knowing Samskritham, Kannadasan referred to the limpid eyes of the Devi as “நீருண்ட மேகக்கண்கள்”.
Kalidasa continues in the same vein:

Noble men, when fortune embraces them, do not get puffed up with vainglorius haughtiness, but use their wealth to help others. 
-x-
சித்திரத்துக்கு நன்றி: http://www.pdfbooksworld.com/image/cache/catalog/558-390x550.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Thursday, October 29, 2015

நாளொரு பக்கம் 22

நாளொரு பக்கம் 22


Wednesday ,the 18th March 2015/29 10 2015

वदनं प्रसादसदनं सदयं हृदयं सुधामुचो वाचः ।
करणं परोपकरणं येषां केषां न ते वन्द्याः ॥
Who will not honor such a person - 

who keeps a smile on his face always, 

has compassion in his heart, 

whose speech is controlled, and 

always helps others.


A smile cheers up, compassion is a Divine attribute for the mortals to learn and practice and the speech under control will utter only the Subhashitham.
-x-
சித்திரத்துக்கு நன்றி: http://cdn.nammabookscom.netdna-cdn.com/image/cache/data/narmadha/164-500x500_0.JPG

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, October 25, 2015

நாளொரு பக்கம் 67

நாளொரு பக்கம் 67


இன்னம்பூரான்
Saturday, 9th May 2015
reprinted: 25 10 2015
காபந்து
இந்தியா எளிதில் விடுதலை பெறவில்லை. அந்த காலத்துத் தியாகசுடர்களின் வெம்மையில் நாம் குளிர் காய்கிறோம். இலவசத்துக்கும், காசு, பணம், பிரியாணி, சாராயம் போன்ற இழிவுகளையும், கழிவுகளையும் வெட்கம் இல்லாமல் உண்டு பருகி, காந்தி மஹானுக்குக் கொடுத்த வாக்கை மறந்து, தரம் கெட்ட வகையில் வாக்கு அளித்து, மக்களை சுரண்டுபவர்களை நம் பிரிதிநிதிகளாக நியமனம் செய்து, அதன் தீநிமித்ததை அனுபவிக்கிறோம். இது கடந்த சில நாடளாவிய தேர்தல்கள் பற்றிய பொது மக்களின் கணிப்பு. இருந்தும், சில தேர்தல்களில் பாமரமக்கள் மிகவும் போற்றத்தக்க பொறுப்புடன் வாக்களித்ததை மறப்பதற்கில்லை.
இந்த பின்னணியில் மற்ற நாடுகளிடமிருந்தும் கற்றுக்கொள்வதிலும் தவறு யாதும் இல்லை. ‘திருமங்கலம்’ என்ற அமங்கலச் சொல்லை தேர்தல் அகராதிக்கு கொணர்ந்த தமிழகம், இன்று இங்கிலாந்தில் நடக்கும் தேர்தலில் இருந்து சில நுட்பங்கள் கற்போமாக. இன்று காலை 7 மணிக்கு  50 ஆயிரம் மையங்களில் தொடங்கும் வாக்களிப்பு இரவு 10 மணி வரை நடக்கும். அப்போது வரிசையில் நிற்பவர்கள் எல்லாரும் வாக்களித்த பின் தான் சாவடிகளை மூடுவார்கள்.  ஏற்கனவே அஞ்சல் மூலம் 15% வாக்குக்கள் பதிவாகிவிட்டன. இணையம் மூலமாகவும் வாக்களிக்க வசதி உண்டு. பள்ளிகளிலும், சமூக மையங்களிலும், கோயில் மடங்களிலும், மதுசாலாக்காளிலும், வண்ணாந்துறைகளிலும், ஏன் ஒரு பஸ்ஸில் கூட சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. இரவு நடுநிசிக்குள் சில முடிவுகள் அறிவிக்கப்படும்; எல்லாம் நாளை மதியம் முன்னால் அறிவிக்கப்படும். சொல்லப்போனால், இரண்டு தேர்தல்கள் ஒரே சமயத்தில் -பார்லிமெண்டுக்கும், முனிசிபாலிட்டிகளுக்கும். 650 பார்லிமெண்ட் அங்கத்தினர்கள், 9000 கெளன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட, எல்லாம் 36 மணி நேரத்துக்குள் ஓவர். இங்கிலாந்துக்காரர்கள் சிக்கனத்துக்கு பேர் பெற்றவர்கள். அதனால், இத்தகைய ஏற்பாடு.
-#-






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Friday, October 23, 2015

பப்பு வேகாது!

பப்பு வேகாது!



இன்னம்பூரான்
23 10 2015

‘எங்கும் சுதந்திரம் என்றே பேச்சு’ என்று, அன்று மஹாகவி பாடினார். இன்று, ‘எங்கும் பப்பு என்றே பேச்சு’. டெங்குக் காய்ச்சல் மாதிரி விலை ஏறினால், பருப்பு இல்லாத கல்யாணம் தான் பண்ணலாம். இது வரை பப்புப்புராணம் என்னிடம் பாடியவர்களின் எண்ணிக்கை: 4,134.5. அதென்னெ 0.5 என்று நீங்கள் கேட்கக்கூடாது. மாட்டுறுத்தலாகாது. அந்த 0.5 அடுத்தாத்து அம்புஜம். அவள் ஒரு பொதுநலவாதி. மக்கள் தரகர்களை அண்டி வாழ்ந்து, கொள்முதல் முதலைகளை அண்டமுடியாமல் இருப்பதால் தான், இந்த பப்பு கலாட்டா; அரசு என் செய்ய முடியும் என்பது அவளுடைய வாதம். அம்புஜம்: வெயிட்டு.

இன்றைய அப்டேட்: கொள்முதல் முதலைகளிடமிருந்து இன்று 15,000 டன்கள் பறிமுதல்; இதுவரை 50,000 டன் அவர்களுக்குக் கோவிந்தா. அரசுக்கு ராம ராமா! ஆனால் கடையில் விலை குறையவில்லை. கிருஷ்ணா! கிருஷ்ணா! ஆபத்பாந்தாவா! இப்படியெல்லாம் எப்படி ஆச்சு? ஏண்டா! இறக்குமதி பண்ணல்லை என்று கேட்கிறார்கள். ஆனால், பதுக்கி வைத்ததெல்லாம், இறக்குமதி செய்யப்பட்டவை, காலாகாலத்தில். அதுவும் பெரும்பாலும் பர்மாவிலிருந்து, திட்டமிட்டப்படியே. அதையே இந்த பாவிகள் அபேஸ் செய்து விட்டார்கள்.

இன்று நிதியமைச்சகத்தில் இது பற்றி ஒரு கலந்துரையாடல். அங்கு, லஜ்ஜையை அறவே ஒழித்து விட்டு, பருப்பை பதுக்கும் இறக்குமதியாளர்கள் பேரம் பேசினார்கள். என்ன? நாங்கள் பதுக்கியதிலிருந்து ஒரு லக்ஷம் டன் துவரம்பருப்பு தினம் கிலோ ரூ.135 என்று தருகிறோம். ஆனால், பதுக்கலை கட்டுப்படுத்தக்கூடாது! பேஷ்! இந்த சுரண்டலுக்கும் அரசு தான் பொறுப்பேற்கணும். ‘ வணிகைப்போட்டியில் விலை வாசி குறையும். எங்களை தட்டிக்கேட்க அரசுக்கு என்ன அதிகாரம் என்று கொள்முதல் முதலைகள் கேட்கிறார்கள்’. 

"Pulses prices will come down only if there is smooth availability of imported dals. Therefore, pulses imports and importers should be exempted from the stock holding limit," said Mumbai-based Indian Pulses and Grains Association Chairman Praveen Dongre, after the meeting with Jaitley. 

நாளைக்கு, பொன்னி அரிசி, சம்பாகோதுமை, பார்லி வாட்டர், கருவேப்பிலை எல்லாத்தையும் இறக்குமதி செய்யணோம். பதுக்கலை தடுக்காதே என்று கூச்சல் போடுவாங்க. மக்கள் ஓடு எடுத்து அவர்களுக்கு வால் பிடிப்பார்கள். மக்கள் பணத்தை அரசு வேஸ்ட் பண்ணால் போதும். சபாஷ்!
-#-
சித்திரத்துக்கு நன்றி: http://images.indiatvnews.com/mainnational/2015/1445617882Pulses.jpg



இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Wednesday, October 21, 2015

ஒரு இரங்கல் கடிதம்

ஒரு இரங்கல் கடிதம்





இன்னம்பூரான்
21 10 2015
எனது நண்பர் வெ.சா. அவர்களின் குடும்பத்தினருக்கு நான் வரையும் மடல், இது. 

கடிதம் நாம் எல்லாருக்கும் போடுவதில்லை. ஏனெனில், அதில் ஒரு தனித்துவம் உளது. பின்னணி உளது; நேயம் உளது; அன்யோன்யம் உளது. எனக்கு வெ.சா. உடன்பிறந்தவர் மாதிரி. இருவரும் சமவயதினர். அதனால், மனம் திறந்து பேசுவதற்கு, கடிதம் போன்ற நிகரற்றதொரு  சாதனம், தேவை. ஆனால், வெ.சா. அவர்கள் ஒரு பொது சொத்து. அதனால், இணையதளம் என்ற பாதாளகங்கையில் என்னுடன் கிரீடை செய்யும் அருமை நண்பர்களுக்கும் இது அனுப்பப்படுகிறது. எதற்கும், முன்சாக்கிரதையாக,இதை அவரவருக்கு அனுப்பிய தனிமடலாக பாவிக்கவும் என்று வேண்டிக்கொள்கிறேன். அவரவர் விருப்பப்படி நடக்கட்டும். 

எனக்கு உடனே மனதில் தைத்த கவிதை, மாயா ஏஞ்சலோ எழுதிய ஒரு அருமையான பாடலில் கீழே கண்ட பகுதி:

‘...Great souls die and
our reality, bound to
them, takes leave of us.
Our souls,
dependent upon their
nurture,
now shrink, wizened.
Our minds, formed
and informed by their
radiance,
fall away.
We are not so much maddened
as reduced to the unutterable ignorance
of dark, cold
caves...’

“சான்றோர்கள் ஆவி துறந்தால், அவர்களொடு ஒட்டி இருந்த நமது நிதர்சனம் நம்மிடமிருந்து விலகி விடுகிறது. அவர்களால் வளர்க்கப்பட்ட நமது ஆத்மா வாடிப்போய் சுருங்கி விடுகிறது. அவர்களின் ஒளியில் உறையும் நமது மனசுகள் 
சுக்குநூறாகி விழுந்து விடுகின்றன. நமது அறிவு மங்கிவிட்டது என்பதை விடகீழ்த்தரமான அறியாமையில் முழுகி விடுகிறோம்.”

இன்றைய விக்கிப்பீடியாவில் அவரது மறைவு கூறப்பட்டுள்ளது என்பதிலிருந்து, அவரது தமிழ் ஆளுமையை பற்றி சற்றே அறிந்துகொள்ளலாம். பின்னோக்கிப்பார்த்தால், தமிழின் மறுமலர்ச்சி காலகட்டதில், கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன், அவர் தமிழ் ஜாம்பவான்களுடன் சரி சமானமாக உறவு கொண்டாடியவர். ந. பிச்சமூர்த்தி அவர்களின் இலக்கியபயணத்தை நமக்கு உணர்த்தியவர், வெ.சா.  இலக்கியத்தில் அவருடைய பன்முகத்தை பற்றி கூகிளை கேட்டால், அரை நிமிடத்தில் வரும் ஐம்பதாயிரம் பதிவுகள் சாட்சி. தமிழ் இலக்கிய விமர்சனத்தின் மூதாதையர்கள் இருவர்: க.நா.சுப்ரமண்யம் & சி.சு.செல்லப்பா. முந்தியவர், ‘... என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும் அளவுக்கு, நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன்...’ என்றார். ‘... சாமிநாதனது பேனா வரிகள் "புலிக்கு தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது" என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும்...; என்றார், பிந்தியவர். என்னை கேட்டால், அவருக்குக் கழுதையும் அத்துப்படி என்பேன். அவர் எழுதிய ‘அக்ரஹாரத்தில் கழுதை’ யை ஜான் அப்ரஹாம் சினிவாக எடுக்க அது திரையுலகில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மஹாகவி சுப்ரமண்ய பாரதியாருடன் இவரை ஒப்பிடும் சுந்தர ராமசாமி,  ‘...பாரதியோ ஒரு உணர்ச்சிக் கவிஞன். தேசியக் கவிஞன்; புரட்சிவாதி. அவனது இயற்கையான முகங்கள் அனைத்தும் நம்மவர்கள் இயற்கையாகவே புரிந்துகொள்ளாமல் போற்ற வசதியானவை. வெ.சாவின் உலகமோ, புரிந்து கொள்ளும் ஆற்றலை தீவிரமாகக் கேட்டு நிற்கிறது...’  என்கிறார். தமிழ் மொழியின் இளம் பிள்ளையாக ( சிலர் இளம்பிள்ளை வாதம் என்பர். சொல்லிவிட்டுப்போகட்டும். ஹூ கேர்ஸ்?) ஏழெட்டு வருடமாக தமிழ் மாணாக்கனாக வந்த என் தமிழ் உரைநடையை, அத்தகைய தமிழறிஞர் வெ.சா. அவர்கள் மனமார அடிக்கடி போற்றியது அவரது பெருந்தன்மை. எனக்கு  ஒரு மலர்மாலை என்க. அதில் பூரித்து இருக்கும் எனக்கு அவர் மற்றுமொரு பொன்மாலை அணிவித்தார். தமிழ் பேப்பர் என்ற இதழில், அ.முத்துலிங்கம் அவர்கள்,’ சில நேரங்களில் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன் போன்றவர்களைச் சந்தித்தப்போது புத்தகங்களில் அவர்களுடைய கையெழுத்துகளைப் பெற்றிருக்கலாமே என்று நினைத்ததுண்டு.’ என்று அங்கலாய்த்திருக்கிறார். எனக்கோ, வெ.சா. அவர்களின் கையெழுத்துடன் அவருடைய நூல்களின் மூன்று, பெங்களூரிலிருந்து, பறந்து வந்தன. நான் பெருமிதம் கொள்ளலாகாதா!

அவர் ஒருமுறை நானில்லாத சபையில் என்னை மனதளவில் அமர்த்தி அழகு பார்த்தார். அடுத்த தடவை ஒரு சிறிய தமிழறிஞர் குழுவுக்கு என்னை வரவழைத்தார். சில மணி நேரங்கள், ஆல்பெர்ட் ஈன்ஸ்டீனின் சில வினாடிகளாக சொகுசாகக் கழிந்தன. அடுத்த சென்னை வருகையின் போது தான் பேராசிரியரும் நானும் அவரை சந்தித்தோம். திரு.நரசய்யா அவர்களையும் அழைத்துத்தான் போவதாக உத்தேசம். உடனுக்குடன் புறப்பட வேண்டியிருந்ததாலும், கை பேசிகளின் மவுனத்தினாலும், அது நடக்க வில்லை என்பது எனக்கு வருத்தம் தான்.

இது சம்பிரதாயமான கடிதம் இல்லை என்பதால், திரு.வெ.சா. அவர்களின் நினைவஞ்சலியாக இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்பது என் பிரார்த்தனை.

அன்புடன்,
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி (இது அவருக்குப்பிடித்தப்படம்)  https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/d/d4/VenkatSwaminathan.jpg/220px-VenkatSwaminathan.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine


www.olitamizh.com

Monday, October 19, 2015

நாளொரு பக்கம் 81

நாளொரு பக்கம் 81

Thursday, the 4th June, 2015
To have great poets, there must be great audiences. 
Walt Whitman: poet (1819-1892)

This quote is the mantra of the famous US magazine, Poetry; Ezra Pound was overruled.  Art, Aesthetics and Imagery, interwined as they are, flourish only in the fertile, irrigated and manured soil of the Rasika Mandram. 
Walt Whitman was  a Guru to most readers, but had to self-publish his Leaves of Grass; this he did throughout his life. A poem therefrom is reproduced to exemplify the point made in the mantra.  A tearful tribute to Abraham Lincoln, it is such a tribute to Mahatma Gandhi also.
O Captain! my Captain! our fearful trip is done,
The ship has weather’d every rack, the prize we sought is won,
The port is near, the bells I hear, the people all exulting,
While follow eyes the steady keel, the vessel grim and daring;
                         But O heart! heart! heart!
                            O the bleeding drops of red,
                               Where on the deck my Captain lies,
                                  Fallen cold and dead.

O Captain! my Captain! rise up and hear the bells;
Rise up—for you the flag is flung—for you the bugle trills,
For you bouquets and ribbon’d wreaths—for you the shores a-crowding,
For you they call, the swaying mass, their eager faces turning;
                         Here Captain! dear father!
                            This arm beneath your head!
                               It is some dream that on the deck,
                                 You’ve fallen cold and dead.

My Captain does not answer, his lips are pale and still,
My father does not feel my arm, he has no pulse nor will,
The ship is anchor’d safe and sound, its voyage closed and done,
From fearful trip the victor ship comes in with object won;
                         Exult O shores, and ring O bells!
                            But I with mournful tread,
                               Walk the deck my Captain lies,
                                  Fallen cold and dead.

-x-
Image Credit: http://www.mandm.org.nz/wp-content/uploads/2013/10/arrogant-300x283.jpg

Saturday, October 17, 2015

நாளொரு பக்கம் 37

நாளொரு பக்கம் 37


Wednesday, the 1st April 2015

वदनं प्रसादसदनं सदयं हृदयं सुधामुचो वाचः ।
करणं परोपकरणं येषां केषां न ते वन्द्याः ॥

There is such a thing called personal magnetism. Some call it charisma. It is formless, but is visible even to the visually challenged. Stroking the cheeks of Jawaharlal Nehru, Helen Keller commented on his mellow kindness. You cannot discover its whereabouts, as it lies deep within. You cannot hear it, as it lies hidden in words, not uttered.
You see it toiling around, but cannot figure it out.

And, it is ever-present everywhere, as thought, word, and deed.

Literally translated, this Shubhashitham means:

“Who will not honor such a person - who keeps a smile on his face always, has compassion in his heart, whose speech is controlled, and always helps others.”

-x-

Friday, October 16, 2015

பாரதமாதா -1

பாரதமாதா -1




இன்னம்பூரான்
17 10 2015

வாழ்க்கையில் அருமையான தருணங்கள் கிடைப்பது அரிது. அவை நொடியில் தோன்றி அடுத்த நொடியிலிருந்து கண்ணின் பாவையாக அமைவதும் உண்டு;  மறைமூர்த்திக்கண்ணனுடன் மறைந்து உறைவதும் உண்டு. இந்தியாவில் நாட்டுப்பற்று எப்படியெல்லாம் நமது முன்னோர்களை கவர்ந்து, பாரதமாதாவின் பாதாரவிந்தங்களில்  அவரவது தியாகத்தை சமர்ப்பிவித்து, விடுதலை வேள்வியில் அர்ப்பணிக்க வைத்து, பிரதிபலன் யாதும் நாடாத தேசபக்தர்களாக அவர்களை நியமித்த வரலாற்றை தற்கால மாணவசமுதாயம், ஏன்? வயது வந்தவர்கள் கூட அறிந்ததாகவோ அல்லது அறிந்த பின் சான்றோர் வழி நடத்தலை ஏற்றுக்கொண்டதாகவோ, வரலாறும், அன்றாட சம்பவங்களும், அளவளாவுதல்களும் நமக்கு சேதி கூறவில்லை. இந்தத் தொடரின் சிந்தனை, கருத்து, நடைமுறை எல்லாமே, அந்த விட்ட குறை, தொட்டகுறை ஆகிவற்றை ‘கவனித்து’ சுருக்கமாக சில செய்திகளை சொல்வதே. வினவிய வினாக்களுக்கு, பின்னர் வரும் கட்டுரைகளில் விளக்கம் இருக்கக்கூடும். பீடிகை முற்றிற்று.

ஆனந்த மடம் என்றொரு புதினம் வாசகர்களை உலுக்கி எடுத்தது. அதன் தாரகமந்திரம்: அன்னையை வணங்குதல்: வந்தே மாதரம். எழுதியவர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா அவர்கள். அந்த பாடலுக்கு மெட்டு அமைத்துப் பாடியவர்: திலீப்குமார் ராய் என்ற பாடகர், இசையமைப்பாளர், சிந்தனையாளர். தத்துவ ஞானி. ஶ்ரீ அரவிந்தரின் அத்யந்த சிஷ்யன், லிகிதம் பரிமாரிக்கொள்ளும் சகபாடி. அவரும், உலக புகழ் பாரதரத்னா எம்.எஸ் அவர்களும் சேர்ந்து பாடிய வந்தே மாதரம் பாடலை கேளுங்கள். முழுப்பாடலையும், தமிழாக்கத்தையும் படியுங்கள். கொஞ்சம் தேசீயம் ஒட்டிக்கொள்ளட்டும். நண்பரொருவர் அனுப்பிய பாட்டைக்கேட்டால், அது நடக்கும். அனுமதி கொடுத்த அவர், பெயரை வெளியிட அனுமதித்த பின், அது கூறப்படும்.
அன்னாருக்கு நன்றி.
வினாக்களும் பின்னூட்டமும் வரவேற்கப்படுகின்றன. 

கேட்டுப்படித்து மகிழ்ந்து செயல்பட: Bankim's Vandhe Matharam  ( MS & DILIP KUMAR  ROY)


சித்திரத்துக்கு நன்றி: https://tamilandvedas.files.wordpress.com/2015/09/bharati-bharatamata.jpg?w=600