Showing posts with label வெங்கட் சாமிநாதன். Show all posts
Showing posts with label வெங்கட் சாமிநாதன். Show all posts

Wednesday, October 21, 2015

ஒரு இரங்கல் கடிதம்

ஒரு இரங்கல் கடிதம்





இன்னம்பூரான்
21 10 2015
எனது நண்பர் வெ.சா. அவர்களின் குடும்பத்தினருக்கு நான் வரையும் மடல், இது. 

கடிதம் நாம் எல்லாருக்கும் போடுவதில்லை. ஏனெனில், அதில் ஒரு தனித்துவம் உளது. பின்னணி உளது; நேயம் உளது; அன்யோன்யம் உளது. எனக்கு வெ.சா. உடன்பிறந்தவர் மாதிரி. இருவரும் சமவயதினர். அதனால், மனம் திறந்து பேசுவதற்கு, கடிதம் போன்ற நிகரற்றதொரு  சாதனம், தேவை. ஆனால், வெ.சா. அவர்கள் ஒரு பொது சொத்து. அதனால், இணையதளம் என்ற பாதாளகங்கையில் என்னுடன் கிரீடை செய்யும் அருமை நண்பர்களுக்கும் இது அனுப்பப்படுகிறது. எதற்கும், முன்சாக்கிரதையாக,இதை அவரவருக்கு அனுப்பிய தனிமடலாக பாவிக்கவும் என்று வேண்டிக்கொள்கிறேன். அவரவர் விருப்பப்படி நடக்கட்டும். 

எனக்கு உடனே மனதில் தைத்த கவிதை, மாயா ஏஞ்சலோ எழுதிய ஒரு அருமையான பாடலில் கீழே கண்ட பகுதி:

‘...Great souls die and
our reality, bound to
them, takes leave of us.
Our souls,
dependent upon their
nurture,
now shrink, wizened.
Our minds, formed
and informed by their
radiance,
fall away.
We are not so much maddened
as reduced to the unutterable ignorance
of dark, cold
caves...’

“சான்றோர்கள் ஆவி துறந்தால், அவர்களொடு ஒட்டி இருந்த நமது நிதர்சனம் நம்மிடமிருந்து விலகி விடுகிறது. அவர்களால் வளர்க்கப்பட்ட நமது ஆத்மா வாடிப்போய் சுருங்கி விடுகிறது. அவர்களின் ஒளியில் உறையும் நமது மனசுகள் 
சுக்குநூறாகி விழுந்து விடுகின்றன. நமது அறிவு மங்கிவிட்டது என்பதை விடகீழ்த்தரமான அறியாமையில் முழுகி விடுகிறோம்.”

இன்றைய விக்கிப்பீடியாவில் அவரது மறைவு கூறப்பட்டுள்ளது என்பதிலிருந்து, அவரது தமிழ் ஆளுமையை பற்றி சற்றே அறிந்துகொள்ளலாம். பின்னோக்கிப்பார்த்தால், தமிழின் மறுமலர்ச்சி காலகட்டதில், கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன், அவர் தமிழ் ஜாம்பவான்களுடன் சரி சமானமாக உறவு கொண்டாடியவர். ந. பிச்சமூர்த்தி அவர்களின் இலக்கியபயணத்தை நமக்கு உணர்த்தியவர், வெ.சா.  இலக்கியத்தில் அவருடைய பன்முகத்தை பற்றி கூகிளை கேட்டால், அரை நிமிடத்தில் வரும் ஐம்பதாயிரம் பதிவுகள் சாட்சி. தமிழ் இலக்கிய விமர்சனத்தின் மூதாதையர்கள் இருவர்: க.நா.சுப்ரமண்யம் & சி.சு.செல்லப்பா. முந்தியவர், ‘... என் மற்ற நண்பர்களுக்கு எரிச்சலூட்டும் அளவுக்கு, நான் வெங்கட் சாமிநாதனின் அபிப்ராயங்களை மதிக்கிறேன்...’ என்றார். ‘... சாமிநாதனது பேனா வரிகள் "புலிக்கு தன் காடு பிற காடு வித்தியாசம் கிடையாது" என்றபடி சகலத்தையும் பதம் பார்க்கும்...; என்றார், பிந்தியவர். என்னை கேட்டால், அவருக்குக் கழுதையும் அத்துப்படி என்பேன். அவர் எழுதிய ‘அக்ரஹாரத்தில் கழுதை’ யை ஜான் அப்ரஹாம் சினிவாக எடுக்க அது திரையுலகில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மஹாகவி சுப்ரமண்ய பாரதியாருடன் இவரை ஒப்பிடும் சுந்தர ராமசாமி,  ‘...பாரதியோ ஒரு உணர்ச்சிக் கவிஞன். தேசியக் கவிஞன்; புரட்சிவாதி. அவனது இயற்கையான முகங்கள் அனைத்தும் நம்மவர்கள் இயற்கையாகவே புரிந்துகொள்ளாமல் போற்ற வசதியானவை. வெ.சாவின் உலகமோ, புரிந்து கொள்ளும் ஆற்றலை தீவிரமாகக் கேட்டு நிற்கிறது...’  என்கிறார். தமிழ் மொழியின் இளம் பிள்ளையாக ( சிலர் இளம்பிள்ளை வாதம் என்பர். சொல்லிவிட்டுப்போகட்டும். ஹூ கேர்ஸ்?) ஏழெட்டு வருடமாக தமிழ் மாணாக்கனாக வந்த என் தமிழ் உரைநடையை, அத்தகைய தமிழறிஞர் வெ.சா. அவர்கள் மனமார அடிக்கடி போற்றியது அவரது பெருந்தன்மை. எனக்கு  ஒரு மலர்மாலை என்க. அதில் பூரித்து இருக்கும் எனக்கு அவர் மற்றுமொரு பொன்மாலை அணிவித்தார். தமிழ் பேப்பர் என்ற இதழில், அ.முத்துலிங்கம் அவர்கள்,’ சில நேரங்களில் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜெயமோகன் போன்றவர்களைச் சந்தித்தப்போது புத்தகங்களில் அவர்களுடைய கையெழுத்துகளைப் பெற்றிருக்கலாமே என்று நினைத்ததுண்டு.’ என்று அங்கலாய்த்திருக்கிறார். எனக்கோ, வெ.சா. அவர்களின் கையெழுத்துடன் அவருடைய நூல்களின் மூன்று, பெங்களூரிலிருந்து, பறந்து வந்தன. நான் பெருமிதம் கொள்ளலாகாதா!

அவர் ஒருமுறை நானில்லாத சபையில் என்னை மனதளவில் அமர்த்தி அழகு பார்த்தார். அடுத்த தடவை ஒரு சிறிய தமிழறிஞர் குழுவுக்கு என்னை வரவழைத்தார். சில மணி நேரங்கள், ஆல்பெர்ட் ஈன்ஸ்டீனின் சில வினாடிகளாக சொகுசாகக் கழிந்தன. அடுத்த சென்னை வருகையின் போது தான் பேராசிரியரும் நானும் அவரை சந்தித்தோம். திரு.நரசய்யா அவர்களையும் அழைத்துத்தான் போவதாக உத்தேசம். உடனுக்குடன் புறப்பட வேண்டியிருந்ததாலும், கை பேசிகளின் மவுனத்தினாலும், அது நடக்க வில்லை என்பது எனக்கு வருத்தம் தான்.

இது சம்பிரதாயமான கடிதம் இல்லை என்பதால், திரு.வெ.சா. அவர்களின் நினைவஞ்சலியாக இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என்பது என் பிரார்த்தனை.

அன்புடன்,
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி (இது அவருக்குப்பிடித்தப்படம்)  https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/d/d4/VenkatSwaminathan.jpg/220px-VenkatSwaminathan.jpg

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine


www.olitamizh.com

Thursday, March 14, 2013

இலக்கியமும் விமர்சனமும் ‘மனமர்மமு’ மணி




இலக்கியமும் விமர்சனமும் ‘மனமர்மமு’ மணி
11 messages

Innamburan Innamburan Wed, Nov 14, 2012 at 6:29 AM
To: mintamil , Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com

இலக்கியமும் விமர்சனமும்
‘மனமர்மமு’ மணி 


சில வருடங்களாகத்தான் எனக்கு தமிழார்வம். தற்செயலாக, அது நிகழ்ந்தது என் பாக்கியம். கிட்டத்தட்ட எழுபது வருடங்கள் முன்னால் பரிசாக கிடைத்தது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்களின் கட்டுரை நூல் ஒன்று. அப்பொழுது ஒரு சொல் கூட புரியவில்லை. இப்போது அகஸ்மாத்தாக மறுபடியும் கிடைத்தது; புரிந்தது. அதே மாதிரி இதுவும் கிடைத்தது. வெ.சாமிநாத சர்மா அவர்களின் மொழிபெயர்ப்பு என்று நினைக்கிறேன். ஒரு டால்ஸ்டாய் கதை. ஒரு நிரபராதி தூக்கிலிடப்படுகிறான். பத்து வயதில் அதை படித்து விட்டு அழுததின் நற்பயனாக, அப்பா நல்ல நூல்களை மதுரையிலிருந்து கொண்டு வந்து கொடுத்து ஊக்கமளித்தார். பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு நூல்கள். ஒரு அணா ஒன்று. ராமுலு பிரசுரகர்த்தா என்று நினைவு. ஆங்கிலத்திலும், தமிழிலும் தொகுப்புக்கள். அன்று பிடித்த புத்தகபைத்தியம் என் மக்களுக்கும் இருப்பது எனக்கு திருப்தி.

அது ஒரு புறமிருக்க, ஒரு கவலை என்னை ஆட்கொண்டது. புதுமைப்பித்தனின் அகல்யை சாபவிமோசனத்தை பற்றி சொன்னபோது, யார் அந்த பித்தன் என்று மெத்தப்படித்த பெண்மணியொருவர் வினவினார். தமிழுலகில் நடமாடும் நண்பரொருவரிடம் நான் தி.ஜானகிராமனின் ‘மோக முள்’ பற்றி அளவளாவியபோது அவர் தி.ஜ.ர. பற்றி பேசுகிறேன் என்று நினைத்தபோது, நான் திகைத்துத்தான் போனேன். எனக்கு பாடம் எடுத்த முனைவரொருவர் ‘தமிழில் இல்லாதது வடமொழியில் இருக்கிறதா?’ என்று உத்வேகத்துடன் வினவினார். அதன் பிறகு பல தமிழன்பர்களிடம் பேசும்போது, பெரும்பாலோர் இலக்கிய ரசனை, விமர்சனம், ஆய்வு, ஒப்பியல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது புரிந்தது. இந்த இலக்குகளை நாடும் நூல்கள் குறைவு என்றாலும், இருப்பதையாவது படிக்க வேண்டாமா? அப்படி படித்ததைப் பகிர்ந்து கொள்வதால் எனக்கும் மனதில் படியும். அவரவர் சுயவிருப்பப்படி, உருப்படியாக பங்கேற்கலாம். அதான்.

இலக்கியம் வாழ்வியலின் கண்ணாடி என்பார்கள். 24 கதைகளும் இரண்டு கட்டுரைகளும் மட்டும் எழுதிய மணி (27.7.1907 ~ 6.7. 1985) உள்மனதைக் குடைந்து, சல்லடை போட்டு அரிந்து, அதை எக்ஸ்ரே படம் போல், சாட்சிக்கூண்டில் நிறுத்துவார். மாயவரத்து ஆசாமி. கும்பகோணத்தில் பல வருடங்கள் வாழ்ந்தவர். குடும்பச்சொத்தை பராமரிக்க, சிதம்பரம் வந்து சேர்ந்தார். அவரை தேடிச்சென்ற ‘இலங்கையன்’ பேராசிரியர் எம்.ஏ.நுமான் வீடு தெரியாமல் திண்டாடுகிறார். அவர் வசிக்கும் தெருவிலேயே அவரை யாருக்கும் தெரியவில்லை. அவருடைய புனைப்பெயர் ‘மெளனி’ பொருத்தம் தான்! ஒரு மாவு மில் நடத்தி வந்ததால்,’ மில் மணி ஐயர் என்று சொன்னால் தெரிந்திருக்கலாமோ என்னமோ! தற்கால தமிழிலக்கியத்தின் தூண்களில் ஒன்றான மணிக்கொடியில் எழுத ஆரம்பித்து பிற்காலம் ‘கசடதபற’ விலும் எழுதி வந்த ‘சிறுகதை சிற்பி’ மெளனியை, பிரபல இலக்கிய விமர்சகரான க.நா.சுப்ரமண்யன் அவர்கள் மிகவும் சிலாகித்துள்ளார். க.நா.சு. உலகசிந்தனை படைத்தவர். உலக இலக்கியங்களை ஆராய்ந்தவர். அவரே ஒரு படைப்பாளர். அவரது விமர்சனங்கள் சிலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், அவற்றின் அலசல்களை புறக்கணிக்க முடியாது.

1984ல் பேராசிரியர் எம்.ஏ.நுமான் மெளனியுடன் நடந்த நேர்காணலை விவரிக்கும்போது, தன்னுடைய, தருமு சிவராமு, நமது வெங்கட் சாமிநாதன், சச்சிதானத்தனின் ஆகியோரின் கருத்துக்களயும் தந்துள்ளார். அவற்றின் சுருக்கம்:
நுமான்: 
முதுமையின் தாக்கம் அதிகம். அவருக்கு ஈழத்து தமிழ் பணி பற்றி அவ்வளவாக தெரிந்திருக்க வில்லை. ஆங்கில இலக்கியம் நிறையப் படித்திருக்கிறார். தமிழ் முறையாகப் படித்ததில்லை.  படைப்பாளிக்குரிய நுண்ணுணர்வு விமர்சகனுக்கு வேண்டும் என்றார். அவருக்கு தத்துவம், பண்பாடு, நாகரீகம் என்றெல்லாம் ஆர்வமிருந்தது. ‘...தன்னைப் பற்றி தனது படைப்புக்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு நிகழ்காலம் இல்லாது போய்விட்டதை உணர வருத்தமாக இருந்தது...’. கதை எழுதிய அவர் தலைப்புகளை பத்திரிகைக்காரர்களிடம் விட்டு விட்டாராம்.’தனது கதைகளைத் தான் ஒரே இருப்பில் எழுதி முடித்து விடுவதாகச் சொன்னார்...உங்கள் மொழி  நடையைப் பிரக்ஞை பூர்வமாகக் கையாள்கிறீர்களா என்று கேட்டேன். இல்லை. அப்போது வருவதுதான் எழுத்து என்று சொன்னார்... தன்னுடைய புத்தகங்கள் இப்போது கிடைப்பதில்லை என்றும் யார் விரும்பினாலும் அவற்றை மறுபிரசுரம் செய்து கொள்ளலாம் என்றும் சொன்னார்...’.
‘... சில சொற்பிரயோகங்களைப் பொறுத்தவரையில் மௌனி பிரக்ஞை பூர்வமாகவும் பிடிவாதமாகவும் இருந்திருப்பதாகத் தெரிகிறது... ஆனால் வாக்கிய அமைப்பில் எப்போதும் அவர் பிரக்ஞைபூர்வமாக இருந்திருக்கிறார் என்று சொல்வதற்கில்லை. அவருடைய வாக்கியங்கள் பல தாறுமாறாக உள்ளன...

தருமு சிவராமு

‘மௌனிக்கு தமது கதைகளில் ஒவ்வொரு சொல்லுமே முக்கியமானது. சொற்களின் அர்த்தத்தோடு, சில வேளைகளில், அவற்றின் சப்த அமைப்பையும் கூட அவர் கவனத்தில் ஏற்கிறார்: “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” (அழியாச்சுடர்) என்ற வரியில் ‘எவற்றின்’ என்ற சொல் தவறு, ‘எவைகளின்’ என்பதே சரி என ஒருவர் மௌனியிடம் சொன்னாராம். மௌனி “அச் சொல்லின் சப்தம் அந்த வசனத்திற்குத் தேவைப்படுமான சப்தமே அவ்வரியிலுள்ள கேள்விக்கு அதிக வலிமையைக் கொடுக்கிறது” என்று கருதினாராம். ‘இங்கு மௌனி தனது கதைகளைத் திரும்பத் திரும்ப எழுதிச் செப்பனிடுபவர் என்ற கருத்தே முக்கியமானது.’ என்று கூறும் நுமான் அவர்கள், மெளனி தன்னிடம் சொன்னது, இதற்கு முரண் என்று சுட்டுகிறார்.

வெங்கட் சாமிநாதன்: ‘மௌன உலகின் வெளிப்பாடு’:


‘மௌனி எழுத உட்கார்ந்தால் கடுமையாக உழைப்பவர். பலமுறை திரும்பத் திரும்பத் திருத்தி எழுதுவார்... பிரசுர கர்த்தரின் பொறுமை எல்லை கடந்து சோதிக்கப்படும் வரை திருத்தம் செய்துகொண்டே இருப்பார்.’

கி.அ. சச்சிதானந்தன்


“(மௌனி) எழுதுவதற்கு நிரம்ப கால அவகாசம் எடுத்துக்கொள்வார். ஒவ்வொரு சொல்லையும் சுண்டிச் சுண்டிப் பார்ப்பார். ஒரு நாளைக்கு ஒரு வாக்கியத்தோடு நிறுத்திக் கொண்டதும் உண்டு. தமிழில் முதலில் வரவில்லை என்றால் ஆங்கிலத்தில் எழுதிவிடுவார். பின்னால் தமிழ்ப்படுத்துவார். ஒரு கதைக்கு இருபது டிராப்ட் கூடப் போட்டிருக்கார்.”.
ஒரு இலக்கியவாதியை பற்றி நால்வரின் கருத்துக்களை சுருக்கி அளித்திருப்பதால், பேராசிரிய உசாத்துணையில் இருக்கும் நுமானின் முழுக்கட்டுரையையும்  நீங்கள் படித்தால் நல்லது.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்

உசாத்துணை:

http://azhiyasudargal.blogspot.co.uk/2010/10/blog-post_22.html

யதார்த்தா கி.பென்னேஸ்வரன் Wed, Nov 14, 2012 at 6:39 AM
Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com
மௌனியை மிகவும் அற்புதமாக நினைவு கூர்ந்து இருக்கிறீர்கள்.

டெல்லியில் எங்களுக்கு மோகன் என்று ஒரு நண்பர் இருந்தார்.  அவர் மௌனியுடன் நெருங்கிப் பழகியவர்.  மௌனி பற்றி பல விஷயங்களை எங்களுடன் ஆத்மார்த்தமாகப் பகிர்ந்து கொள்வார்.

வெங்கட்சாமிநாதனுக்கும் அவரைத் தெரியும்.

மோகன் சொல்லி மனதில் நின்ற ஒரு சம்பவம்.

மௌனியை சில நண்பர்கள் அவருடைய வீட்டில் சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.  பால்கனியை ஒட்டி எல்லோரும் உட்கார்ந்து இருந்தார்கள்.  கீழே ஒரு சிறுவன் குட்டி நாய் ஒன்றின் கழுத்தில் கயிற்றைக் கட்டி வன்மையாக இழுத்துக் கொண்டிருந்தான்.  அந்தக் குட்டி நாய் நான்கு கால்களையும் அகட்டிக் கொண்டு நகருவேனா என்று பிடிவாதம் பிடிக்கிறது.

சிறுவனுக்கும் நாய்க்குட்டிக்கும் போட்டி வலுத்துக் கொண்டே வருகிறது.

அப்போது நண்பர்கள் மௌனியுடன் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் சிக்கலான நடை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களாம்.

மௌனி மிகவும் சகஜமாக கீழே நடந்து கொண்டிருந்த நாடகத்தைக் காட்டி, “அவன் பாஷையை வச்சிண்டு அந்தப் பையன் பண்றதைத் தானே பண்ணிண்டிருக்கான்” என்றாராம்.

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------


 

Kamala Devi Wed, Nov 14, 2012 at 9:07 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அருமை இ சார்.
 இவ்வளவு அருமையான செய்திகளைப்பற்றி என்னமாய் சொல்லமுடிகிறது
கமலம்


Mohanarangan V Srirangam <Wed, Nov 14, 2012 at 12:43 PM
Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com

2012/11/14 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penneswaran@gmail.com>
மௌனியை மிகவும் அற்புதமாக நினைவு கூர்ந்து இருக்கிறீர்கள்.

டெல்லியில் எங்களுக்கு மோகன் என்று ஒரு நண்பர் இருந்தார்.  அவர் மௌனியுடன் நெருங்கிப் பழகியவர்.  மௌனி பற்றி பல விஷயங்களை எங்களுடன் ஆத்மார்த்தமாகப் பகிர்ந்து கொள்வார்.

வெங்கட்சாமிநாதனுக்கும் அவரைத் தெரியும்.

மோகன் சொல்லி மனதில் நின்ற ஒரு சம்பவம்.

மௌனியை சில நண்பர்கள் அவருடைய வீட்டில் சந்தித்து அளவளாவிக் கொண்டிருந்தார்கள்.  பால்கனியை ஒட்டி எல்லோரும் உட்கார்ந்து இருந்தார்கள்.  கீழே ஒரு சிறுவன் குட்டி நாய் ஒன்றின் கழுத்தில் கயிற்றைக் கட்டி வன்மையாக இழுத்துக் கொண்டிருந்தான்.  அந்தக் குட்டி நாய் நான்கு கால்களையும் அகட்டிக் கொண்டு நகருவேனா என்று பிடிவாதம் பிடிக்கிறது.

சிறுவனுக்கும் நாய்க்குட்டிக்கும் போட்டி வலுத்துக் கொண்டே வருகிறது.

அப்போது நண்பர்கள் மௌனியுடன் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் சிக்கலான நடை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்களாம். 


 

மௌனி மிகவும் சகஜமாக கீழே நடந்து கொண்டிருந்த நாடகத்தைக் காட்டி, “அவன் பாஷையை வச்சிண்டு அந்தப் பையன் பண்றதைத் தானே பண்ணிண்டிருக்கான்” என்றாராம்.

பென்

இந்தக் கடைசிப் பகுதியை நீங்கள் காட்டியிருப்பதில் நான் விஷமமான ஒரு யதார்த்தத்தைப் பார்க்கிறேன். இதற்கு மேல் உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை. :-) 
 

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்Wed, Nov 14, 2012 at 1:10 PM
Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com
அய்யம்பேட்டையா சுவாமி?

பென்
--------------------------------------------------------------------------------------------------------------------




[Quoted text hidden]
--

 

Hari Krishnan Wed, Nov 14, 2012 at 1:39 PM
Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai@googlegroups.com


2012/11/14 யதார்த்தா கி.பென்னேஸ்வரன் <penneswaran@gmail.com>
அய்யம்பேட்டையா சுவாமி?

பென்

அதுவோ வர மாட்டேங்குது... அதப் போட்டு இந்த இழு இழுத்தா! :))


--
அன்புடன்,
ஹரிகி.
 

 

கி.காளைராசன் Wed, Nov 14, 2012 at 2:59 PM
To: mintamil@googlegroups.com
Cc: Manram , thamizhvaasal , தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com, >
ஐயா ‘இ‘னா அவர்களுக்கு வணக்கம்.

எனக்கு பாடம் எடுத்த முனைவரொருவர் ‘தமிழில் இல்லாதது வடமொழியில் இருக்கிறதா?’ என்று உத்வேகத்துடன் வினவினார். அதன் பிறகு பல தமிழன்பர்களிடம் பேசும்போது, பெரும்பாலோர் இலக்கிய ரசனை, விமர்சனம், ஆய்வு, ஒப்பியல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது புரிந்தது. இந்த இலக்குகளை நாடும் நூல்கள் குறைவு
“இலங்குநூல்“ கற்றோர் அருகி வருகின்றனர்.
ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் எழுதப் பட்ட கருத்து இது.
உண்மை ஐயா.

அன்பன்
கி.காளைராசன்


Innamburan InnamburanWed, Nov 14, 2012 at 3:05 PM
To: "கி.காளைராசன்"
நன்றி,பென். மற்றபடி மர்மமு புரியவில்லை. 
நன்றி, காளை! அந்த இலக்குகளை நாம் நாடவேண்டும். 
இன்னம்பூரான்
2012/11/14 கி.காளைராசன் <kalairajan26@gmail.com>
[Quoted text hidden]

sk natarajan Thu, Nov 15, 2012 at 2:05 AM
To: vallamai@googlegroups.com
Cc: thamizhvaasal , தமிழ் சிறகுகள் , Innamburan Innamburan
அருமையான பதிவிற்கு நன்றி ஐயா 

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

Geetha Sambasivam Thu, Nov 15, 2012 at 1:14 PM
To: tamizhsiragugal@googlegroups.com
Cc: mintamil , thamizhvaasal , Innamburan Innamburan
அருமையான அலசலுக்கு நன்றி.  சுட்டியில் உள்ள கட்டுரையையும் படிக்கிறேன்.

2012/11/14 Innamburan Innamburan <innamburan@gmail.com>
இலக்கியமும் விமர்சனமும்
‘மனமர்மமு’ மணி 

“(மௌனி) எழுதுவதற்கு நிரம்ப கால அவகாசம் எடுத்துக்கொள்வார். ஒவ்வொரு சொல்லையும் சுண்டிச் சுண்டிப் பார்ப்பார். ஒரு நாளைக்கு ஒரு வாக்கியத்தோடு நிறுத்திக் கொண்டதும் உண்டு. தமிழில் முதலில் வரவில்லை என்றால் ஆங்கிலத்தில் எழுதிவிடுவார். பின்னால் தமிழ்ப்படுத்துவார். ஒரு கதைக்கு இருபது டிராப்ட் கூடப் போட்டிருக்கார்.”.
ஒரு இலக்கியவாதியை பற்றி நால்வரின் கருத்துக்களை சுருக்கி அளித்திருப்பதால், பேராசிரிய உசாத்துணையில் இருக்கும் நுமானின் முழுக்கட்டுரையையும்  நீங்கள் படித்தால் நல்லது.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்

உசாத்துணை:

http://azhiyasudargal.blogspot.co.uk/2010/10/blog-post_22.html

Geetha Sambasivam Thu, Nov 15, 2012 at 1:27 PM
To: tamizhsiragugal@googlegroups.com
Cc: mintamil , thamizhvaasal , Innamburan Innamburan
சுட்டியில் போய் வாசிச்சேன்.  வயதானதால் மெளனிக்குத் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி அவர் பொய் சொல்லி இருக்க சாத்தியம் இல்லை.


//மெளனியைக் குறித்த ஆய்வுக் கட்டுரைக்கு நன்றி. மணிக்கொடி கால எழுத்தாளர்கள் பலரும் வறுமையிலேயே உழன்றிருக்கிறார்கள் என்பதை அறிய வருத்தமாய் இருக்கிறது.  

இதில் யார் சொன்னது பொய் என ஆராய்வதை விட, நடந்ததை அப்படியே ஏற்றுக் கொள்வதே நல்லது. மெளனி உண்மையைத் தான் சொல்லி இருக்க வேண்டும். //

அங்கே போட்ட பின்னூட்டம்.