Showing posts with label Good governance. Show all posts
Showing posts with label Good governance. Show all posts

Friday, May 17, 2013

அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(1)




அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(1)

Innamburan S.Soundararajan Fri, May 17, 2013 at 4:56 PM



 அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க....(1)
Inline image 1

முன்குறிப்பு:

கிட்டத்தட்ட முப்பது மாதங்களுக்கு முன் திரு. வாசுதேவன் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த இழை, 'தணிக்கைத்துறையின் தணியா வேகத்தின்' கிளை. பல சான்றோர்கள், மனம் திறந்து, திசை மாற்றாமல் அளவளாவிய இழை. இது இந்தியாவை மட்டுமல்ல, உலகின் மற்ற துரைத்தனத்தாரின் போக்கை உற்று நோக்குவது. வழக்கம் போல் நூல் முடிச்சுப்போட்டுக்கொண்டு, தங்கி விட்டது. தற்கால அரசியல் நிலையை, குறிப்பாக இந்தியாவின் வரும் தேர்தலை நினைக்கும்போது விழிப்புணர்ச்சி அவசரத்தேவை. எனவே, இவ்விதழின் மிச்சபகுதிகளை வலையேற்றிய பிறகு, சிந்தனைகள் தொடரலாம்.
சித்திரத்துக்கு நன்றி
இன்னம்பூரான்
17 05 2013
____________________________________________________________



Tirumurti Vasudevan 
1/13/10

ஆமாம். வெகு நாட்களாக இருக்கிற ஆதங்கம். அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க சட்ட வழி முறைகளே இல்லையா?
உங்கள் பதிவுகளில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். வேறு இழையாக இதை பிரித்து கொண்டு போகிறேன்.
திவாஜி

2010/1/13 Innamburan Innamburan 
திவாஜி விடுவதாக இல்லை.



Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/13/10

திவாஜி,
,'எள்' என்றால் எண்ணெய்! இழை பிரிக்கவேண்டும் என நினைத்தேன். செய்து விட்டீர்கள்! இங்கு இந்த வினாவே தொடக்கம்.
.
அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க அரசியல் சாசனம் வழி வகுத்துள்ளது. அந்தந்த செயல்களுக்கு அந்தந்த சட்டம் உண்டு; தண்டனை உண்டு. சான்றாக, சிறார்களையும், சிறுமிகளையும் வேலை வாங்கக்கூடாது, சட்டப்படி.  மற்றொரு சட்டம் அவர்களுக்கு கட்டாய கல்வி என்கிறது. நடப்பது நாம் அறிந்ததே.

௧. மக்கள் சட்டத்தை மதிப்பதில்லை.
௨. அரசு சட்டத்தின் சாட்டையை வீசுவதில்லை.

௩.நீதித்துறையை என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது.

௪. நிர்வாகம் தடம் மாறும் போது பொதுநல வழக்கு, தகவல் உரிமை சட்டம், ஆகியவை அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க விரட்டலாம். சட்டம் மற்றவகையில் உதவாது, அதனுடைய பயன் வேறு.

இவையெல்லாம் புதியவை. அறுபது வருடங்ககளுக்கு முன்னாள், திரு வசந்த பை என்ற வழக்கறிஞர் தவறுகளை தட்டிக்கேட்டு நீதிமன்றத்தையே, ஒரு 
ஆட்டு ஆட்டி வைத்தார்.

௫.  அரசை உருப்படியாக வேலை செய்ய, அரசியல் வாதிகள் தன்னலம் அற்றவர்களாகவும்,சர்தார் படேல் போல திறன் படைத்தவர்களாக இருக்கவேண்டும். அது மக்களாட்சியில் துர்லபம். சர்வாதிகாரமோ கொடியது.

௬. அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கட்டுப்பாடான விதிமுறைகள் உள்ளன.    கண்டு கொள்பவர்கள் இல்லை.

௭. எனவே, விழுப்புணர்ச்சி, போராட்டம் என்றெல்லாம் ஆரம்பிக்க ஹேது உண்டு. வரலாறும் அதையே கூறுகிறது.

இன்னம்பூரான்

Tirumurti Vasudevan 
1/13/10

அரசு மதிச்சாத்தானே மக்கள் மதிக்க? அரசே சட்டத்தை மதிக்காது, கோர்ட் உத்திரவை அமல் படுத்தாது ன்னா என்ன் மக்கள் செய்வாங்க?
அதான் கேக்கிறேன், அரசு தன் கடமையை செய்ய வேண்டும்ன்னு கேஸ் போட முடியுமா முடியாதா? ஆர்தர் ஹெய்லி யோட ஹைப்லேசஸ் லே அப்படி கனடிய (?ப்ரிட்டிஷ்?) சட்டத்தில் இடம் உண்டுன்னு படிச்ச நினைவு. நினைவென்ன, படிச்சேன் நிச்சயமா.



Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/13/10

திவாஜி,
ஆர்தர் ஹெய்லி யோட ஹைப்லேசஸ் கற்பனை நூல் எனினும்,  அதன் பின்ணணியில் ஆய்வு இருந்தது. 1960ல் அது எழுதப்பட்டபோது, அப்படி சட்டம் ஒன்றும் இல்லை; பிறகும் இல்லை. ஆனால், அந்தந்த சட்டங்களை மக்கள் கையாண்டார்கள் வெற்றியோடு. 'டார்ட்' சட்டம் இங்கிலாந்தில் வேரூன்றியிருந்தது. ஒரு ப்ராம் வண்டியில் இருந்த கம்பியானால் அமைந்த வசதி, தவறாக இணைக்கப்பட்டிருந்த்ததால், குழந்தையின் கண்ணை குத்தி விட்டது. வழக்கில், அதை விற்றவரும், உருவாக்கிய கம்பெனியும், பளுவான நஷ்டஈடு கொடுக்க  தீர்ப்பு. இந்தியாவில் 'ஏன் 'டார்ட்' பற்றி பேசமாட்டேன் என்கிறார்கள் என்பது மர்மம்.பட்டாசு கம்பேனி சட்டத்தை மீறினால்  ஏற்படும் சாவுக்கு வரிப்பணத்த ஏன் கொடுக்கவேண்டும்? அவனிடம் பிடுங்க வேண்டியது தானே?
As John Stuart Mill put it, "Vigilance is the price of Liberty."
இங்கிலாந்தில் விழிப்புணர்ச்சி அதிகம்; வெல்ஃபேர் ஸ்டேட் அல்லவா. நான் ஐந்து வருடங்கள் இங்கு மக்கள் ஆலோசனை மையத்தில் தன்னார்வ பணி புரிந்த போதும், அத்துறையில் பட்டப்படிப்பு ஆய்வுகளிலும் கற்றுக்கொண்டது மக்களால் மட்டுமே அரசை மேய்க்க முடியும் என்பது. நாள் தோறும், அரசு மான்யம் பெற்று அதை செய்கிறோம்!  என்னுடையான உறுதியான கருத்து, நாடாளும்
மன்றம், அரசியல் சாஸனம் என்பதையெல்லாம் விட ஆங்கிலேயர்கள் Citizen Advice [established 1939] அமைப்பை நமக்கு தந்திருந்தால், நாம் சுபிக்ஷமாக இருந்திருப்போம். 2002 ஆண்டிலிருந்து அந்த அமைப்பின் தொடக்கத்தையாவது இந்தியாவில் செய்ய முயன்றேன். கஜினி படையெடுப்பு செய்தேன். படு தோல்வி அடைந்தேன். இந்தியாவில் பொதுவாக நான் கண்ட குறை, 'எதிலும் ஆதாயம் தேடுவது'. எனினும், சான்றோர்கள் பல இருந்திருக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் டா. பார்த்தசாரதி என்ரு ஒருவர் பழங்குடிமக்களுக்கு சேவை செய்தார். அவர் காலவியோகம் ஆனபோது, மக்கள் நம்பவில்லை. அவர்கள் அவரை இறைவன் என்றும், இறைவனுக்கு மரணம் இல்லை என்றும் நம்பி இருந்தார்கள்.
இந்தியாவில் அரசு இயந்திரம் இந்தளவுக்கு பழுது அடையும் என்று நாற்பது வருடங்களிக்கு முன் கிஞ்சித்தும் நினைக்கவில்லை.
அன்புடன்,

இன்னம்பூரான்
2010/1/13 Tirumurti Vasudevan <agnihot3@gmail.com>

karthi 
1/14/10


இன்னம்பூரான்,
அரசு - மேலும் குறிப்பாக பிரிட்டிஷ் மாதிரியிலான அரசு - ஒரு சிறந்த நிர்வாகியாக
இருக்க முடியாது என வரலாறும், பல நாடுகளின் அனுபவங்களும் நிருபித்துள்ளன.
அதன் குறைகள் அரசு அமைப்புடன் சேர்ந்தே பிறப்பவை. "உடன் பிறந்து கொல்லும்
நோய்கள்."
இதற்கான தீர்வு அரசு சேவைகளை தனியார் மயப்படுத்தலில்தான் இருக்கிறது. அமெரிக்காவிலும்
இங்கிலாந்திலும் பல துறைகள் தனியார் மயமாக்கப்பட்டு சேவைகள் மேம்பாடு
அடைந்துள்ளன. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர், மலேசியா, கொரியா, ஜப்பான் முதலிய
நாடுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். மலேசியாவில் வருமான வரி வசூலிப்பு கூடத்
தனியார் துறையினால்தான் செய்யப்படுகிறது. இந்நாடுகளில் அரசாங்கம் பல துறைகளில்
மேலாண்மை மட்டுமே செய்கிறது.
ஆனால் தனியார் துறை இலாப நோக்குடையது. இலாபம் பெற சேவைகளுக்குக் கட்டணம்
விதிக்கும். சேவை பெறும் பொதுமக்கள் அதிகக் கட்டணம் தர வேண்டி இருக்கும்.
இந்தியாவில் இதற்குப் பெரும் எதிர்ப்பு கட்டாயம் இருக்கும்.
இந்தியாவுக்கு இன்னமும் ஒரு சோஷியலிச மனப்பான்மை இருக்கிறது. சோஷியலிசம்
மீண்டும் மீண்டும் தோல்வியடைந்த போதும் அதனை விடாப்பிடியாகப் பிடித்துக்
கொண்டிருக்கும். நோக்கங்கள் உன்னதமாக இருந்தாலும் விளைவுகள் மோசமாக இருக்கும்.
ஆகவே அரசை உருப்படியாக வேலை செய்ய வைக்க அரசு இவற்றிலிருந்து விலக வேண்டும்.
மேலாண்மை மட்டுமே செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியா சீரடையும்.
ரெ.கா.

N. Kannan <navannakana@gmail.com>
1/14/10

இந்தியா போன்ற ஆன்மீக பாதிப்புள்ள நாட்டில் எவ்வகையான அரசு செயல்படும்
என்பதே கேள்வி.
ஒரு காலத்தில் தெய்வத்திற்கு பயப்பட்டு காரியங்கள் நடந்து வந்தன.
விரைவில் வெளியாகப் போகும் மின்னூல்களில் உ.வே.சா காலம்வரை (ஆங்கில அரசு)
அது ஆங்கிலேயர்களையும் உடன் சேர்த்து எப்படி நடந்து வந்திருக்கிறது
என்பது தெரிய வரும். இன்னும் அங்கு தர்மசாலைகள் உள்ளன. எல்லாம்
தர்மத்திற்குக் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது.
அதே நேரத்தில் கோரமான சுயநலமும், ஊழலும், ஒழுங்கின்மையும் செய்முறை
வாழ்வாகியும்விட்டது.
ஒருபுறம் சோஷலிசம், இன்னொருபுறம் தனியார் துறை. இரண்டையும் ஊழலே அங்கு
கட்டுப்படுத்துகிறது.
ஊழல் என்பதே இந்திய அரசின் அடிக்கோடாக, அடிப்படை அலகாக மாறிவிட்டது.
எனவே ஊழலை எப்படி ஒழுங்குபடுத்துவது எனும் புதிய ஃஇர்வாக நுணுக்கங்கள்
அங்கு செயல்முறைக்கு வரவேண்டும்.
ஊழல் என்பதும் தனியார் துறை சமாச்சாரம்தான்!

க.>


Geetha Sambasivam <geethasmbsvm6@gmail.com>
1/14/10

ம்ம்ம்ம்ம்ம் பெருமூச்சுத் தான் விடமுடியுது! :(((((((( 


Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/14/10

நன்னா காதுலே விழறது.


Geetha Sambasivam 
1/14/10



Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/14/10



Venkatachalam Subramanian 
1/14/10

நடுவண் அரசின் பொறுப்பிலுள்ள ஒரு நிறுவனம். தளவாடச் சாமாங்கள் பதிவேட்டில் (Dead stock Register) ஆயில் எஞ்சின் (பெட்டர்) உருப்படி 1.
என்ற பதிவில் இருந்த எஞ்சினைக் கடத்திச் செல்ல திட்டமிட்ட சில ஊழியர்கள் ஒரு புதிய ஏற்பாடு செய்தனர்.

டெட் ஸ்டாக் பதிவேட்டில் இருந்த பதிவினை மாற்றி(Consumable Stock Register) ‘கன்ஸுயூமபல் ஸ்டாக் ரிகிஸ்டருக்கு எடுத்து எழுதினான் ஒருவன். 

ஏன் பிறித்து எடுத்து எழுதினாய் என்ற கேள்வி கேட்கப்படவில்லை. எழுதியவன் ஒரு இட வல மாற்றம் செய்து பெயர்த்து எழுதியிருந்தான்.

’ஆயில் எஞ்சின் ‘ என்பதை ’எஞ்சின் ஆயில்’ என்று எழுதி முறையாக மேலதிகாரியிடம் சுருக்கொப்பமும் பெற்றான்.

பிறகென்ன! 
தினமும் பல வண்டிகளின் பெயரால் செலவு எழுதி ஒரு நன்னாளில் இருப்பு பூஜ்யம் என்று காட்டி காவலரையும் கூட்டத்தில் சேர்த்து பெரிய எஞ்சின் நோகாமல் கடத்தப்பட்டது.
குறுக்கு வழியில் வாழநினைக்கும் திருட்டுக் கூட்டம்!  தணிக்கை குழு ஒன்று இதனைக் கண்டுபிடித்து வெட்ட வெளிக்குக் கொணர்ந்து அந்தக் குழு தண்டிக்கப்படது.

ஓம். வெ.சுப்பிரமணியன

Geetha Sambasivam 
1/14/10

இப்படியும் நடக்கும் என்பதே ஆச்சரியம் தான், கடத்தல் மட்டுமல்ல, தண்டனையும் கூட!

karthi 
1/14/10


ஐயா,
எங்கள் நாட்டிலும் எஞ்சின் திருடர்கள் உள்ளார்கள்.
இங்கே காணலாம்:
ரெ.கா.
2 attachments — Download all attachments   View all images   Share all images  
517.gif517.gif
1K   View   Share   Download  
360.gif360.gif
1K   View   Share   Download  



Saturday, May 4, 2013

'ஸ்டைலாக தாக்ஷிண்யம்' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -27: Updated




'ஸ்டைலாக தாக்ஷிண்யம்' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -27: Updated
Innamburan S.Soundararajan Sat, May 4, 2013 at 8:01 PM




27 01 2010 II Edition 04 05 2013

 'ஸ்டைலாக தாக்ஷிண்யம்' : தணிக்கை செய்வதில் தணியா வேகம் -27

Inline image 1
 இன்றைய அப்டேட். 06 05 2013
கான்ஸ்டபிள் ட்ரான்ஸ்ஃபெர் கூட மந்திரியின் வேலை.:  
டைம்லைன்: 1958/1964:/2013

55 வருடங்களில் நிர்வாஹம் சீரடைந்ததை நோக்குக. அமைச்சர்னா மச்சம் தான்! 
சித்திரத்துக்கு நன்ற்:https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh9dxJjxd_AXIlD5lMZS25C2NbK_b0BZmQW6zct6nNNQhtpKIlxVaFe9EKhmUT4muF3XJumLAuU5Rwpay-LAohuMAz3IkSEQyd0-DCqoav_L6uNCvk5yDbJJh7QIA7qst7MZYT6pkdEcOza/s320/maraicoir_cartoon.png

இன்னம்பூரான்
06 05 2013
Director general of police Sanjeev Dayal's threat to resign over withdrawal of his powers to transfer and promote police personnel roused home minister R R Patil. Belatedly, the minister slipped into damage-control mode even as retired police chiefs J F Ribeiro, M N Singh and A N Roy successfully highlighted his "greedy for power". 

A day before K Subramanyam took over the reins of the state police from D Sivanandan in June 2012, the home department withdrew crucial powers of the DGP to transfer police sub-inspectors (PSIs), assistant inspectors (AIs) and police inspectors (PIs) without assigning any reasons. 

Subramanyam followed by Roy had brought it to the notice of Patil that if the DGP's powers were not restored, then the head of the state's police force would be toothless. While no steps were taken to restore the DGP's powers, in April, the general administration department led bychief minister Prithviraj Chavan issued another circular stating that the DGP's powers to promote lower-rung police officers stands withdrawn in view of the law on transfers in force since 2006. 

A committee headed by senior bureaucrat K P Bakshi was set up to make amends, but no decision was taken on its recommendations. Now another panel headed by industries minister Narayan Rane is examining the law. It's well known that when the government is not keen on taking a decision, a committee headed by Rane is set up. Ribeiro, Singh and Roy feel that if Patil is serious on restoring the DGP's powers, he must promulgate an ordinance soon. 
______________________________________________________

இன்றைய அப்டேட்: (04 05 2013)
இந்த சிவப்பு மசி புற்று நோய் இந்தியா முழுதும் பரவி விட்டதாக இன்றைய ஊடக செய்திகள். ராஜாஜி இறந்த போது, தி.மு.க. ஆட்சி. தலைவர் காமராசர் கூட்டத்தோடு நின்று கொண்டிருந்தார். அதை கண்காணித்த கமிஷனர் திரு. ஷெனாய், வேறு அலுவலுக்கு செல்லுமுன், என்னை ' ஒரு நிமிஷம் ஐயா கூடவே இரு' என்று சொல்லிவிட்டுப்போனார். இலாக்காக்களுக்குள் நல்லிணக்கம் இருந்தது. எனக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்ததும் அவர் தானே. மறு நாள் தகனத்தின் போது, வாய்க்கரிசி போட்ட வரிசையில் முதல்வர்; அடுத்து பொதுஜனமாகிய நான்! ஜஸ்டிஸ் ஆனந்த நாராயண் முல்லா அறிக்கை பற்றி தெரியுமோ?
சித்திரத்துக்கு நன்றி: 
இன்னம்பூரான்
04 05 2013



தணிக்கையிலிருந்து கொஞ்சம் விலகிஅரசு ஸ்டைல் பற்றி கொஞ்சம். அம்மா சொன்னது நினைவு இருக்கோபெரிய  பையனுக்கு வீடு கிடைக்கவில்லை என்று

டைம்லைன்: 1958/1964:

தொன்னூறு ரூபாய் குடக்கூலி கொடுக்க முடியாத சொற்பசம்பளம் 1958ல். கிடச்ச கீக்கிடத்திலே எல்லாம் தொல்லை. அந்தக்காலத்திலே காங்கிரஸின் தர்மராஜ்யம் நடந்திருக்கச்சேவீடு கிடைப்பதுஒரு போர்ஷன் கூட, குதிரைக்கொம்பு. அக்காமொடேஷன் கன்ட்றொல்லர் என்று ஒரு சம்பிரதாய  ஆஃபீசு. கால் தம்பிடிக்கு வக்கு இல்லாத ஆஃபீசு. எல்லாம் தண்டச்செலவு. அக்காமொடேஷன் கன்ட்றொல்லர்  ஒரு நபும்ஸக ஆஃபீஸர். காலி வீடு லிஸ்ட் போடுவாக. நம்ம மாதிரி ஏமாளிகள்,கன காரியமாகமனுவைபத்து நகலெடுத்து அனுப்பிவிட்டு காத்திருப்போம். எங்கிட்டோ வந்தவனுக்கு வீடு அல்லாட் ஆகும்,குறைந்த  வாடகையில். இதை கண்டு பதைபதைத்த என்னை ஏளனமாப்பார்த்த ஒரு விவரம் அறிந்தவர்மந்திரியைப்போய் பார்த்தால் கிடைக்கலாம் என்றார். எல்லாம் 'லாம்!தான்.

திரு.கக்கன் ஒரு முறைதிரு ராமையா ஒரு முறை. எவர் எந்த முறை என்று நினைவு இல்லை. மந்திரியைப்போய் பார்த்தேன்கஜினி படையெடுப்பு. அவர்களைப்பார்ப்பது கடினமில்லை. காரியம் எளிதில் நடக்காது. 1958ல் மாண்புமிகு கேட்ட கேள்விகள். 1. உங்கள் ஆஃபீஸில் ஏன் வீடு கட்டமாட்டேன் என்கிறார்கள். 2. அப்பாவைப்பார்த்துகொள்ள வேண்டுமானால்கைப்பணத்தை செலவு செய்வது தானே? 3. எனக்கு வேறு வேலை இல்லையா? [(ஓய்! அபத்தமான கேள்வி என்று நினைத்துக்கொண்டேன். ' Give thy thought no tongue' என்று சும்மா இருந்து விட்டேன்.) இப்டியாக! சினத்தை அடக்கிக்கொண்டுகை கட்டி வாய் புதைத்தாலும், 'இல்லை'பாட்டு நபும்ஸகரிடமிருந்து. ஒரு பாடாகமந்திரி மனசு வைத்தார். ஒரு வீடு கிடைத்தது. இத்தனைக்கும், 'கடேலெ இருக்கற நெய்யேஎன் பெண்டாட்டி கையே கதை தான். வீட்டு ஓனர்,பாவம்மாட்டிக்கொண்டார். விண்ணப்பதாரர்பாவம்,ஓடிக்கொண்டே. 1964ல் கொஞ்சம் சுதாரித்துக்கோண்டுமுதல்லேயே, மந்திரியிடம் போனேன்அப்பாவின் ஆப்ரேஷன் ஆவணங்களை எடுத்துக்கொண்டு. உரையாடலை ஆபரேஷனில் சென்டர் பண்ணிமந்திரி வினா எழுப்பாமல் பார்த்துக்கொண்டேன்.  இரண்டுமூன்று படையெடுப்பு. நல்ல வீடு கிடைத்தது. டில்லியும் வாழ்ந்து விடவில்லைஆனால் அங்கு கூத்து வேறு கதை. பிறகு,கேட்டால்.

படிப்பினைகள்:

1. நிர்வாக அரசாங்கத்தின் அங்கங்கள் மூன்று: ஊழியர்அதிகாரிஅரசியல் ஆளுமை.

~ ஊழியர் விதிமுறையை அனுசரித்து இட்ட பணியையும்;
~அதிகாரிவிதியை, விதிவிலக்கையும் பண்புடன், தர்மம், நீதி, நியாயத்திற்கு கட்டுப்பட்டு, இட்ட பணியுடன்,
நிர்வாகமும்;
~அரசியலர் மக்கள் நலன் கொள்கை வரைவதுசட்டமியற்றுவது என மேல்நிலை ஆளுமையும் செய்யவேண்டும். 

சுதந்திரம் வந்த பத்து வருடங்களில்அரசியலர் அன்றாட அலுவல்களில் ஆர்வம் கொண்டதற்கு காரணம்அதில் உள்ள பசையை புரிந்து கொண்டது தான். ஆக மொத்தம்
~தாந்தோன்றி பணி ஊழியருக்கு;
~கொள்கை/சட்டம் அதிகாரிகளுக்கு [அந்த ஆவணங்களைகண்ணால் பார்க்காமல்,அரசியலர் ஒப்புதல் கொடுப்பர்.]; ~ ~ ~அன்றாட பசை அரசியலருக்கு என்று ஆகி விட்டது. கான்ஸ்டபிள் ட்ரான்ஸ்ஃபெர் கூட மந்திரியின் வேலை.இத்தனைக்கும் ஃஃப்.வி.அருள், /ஷெணாய் போன்ற திறன்மிக்ககண்ணியமான அதிகாரிகள் அரசியல் தலையீட்டுக்கு செவி சாய்க்கமாட்டார்கள்.

2. ஒன்று காசுஇல்லையேல் தாக்ஷிண்யம்அதன் பிரதிபலனை கேட்டு வாங்குவது என்று ஆகிவிட்டது. முதல் பலிகடா: நியாயம். எதற்கும்: உடனக்குடன்பணிவுடன்தாழ்மையான மொழியில் நன்றிக்கடிதம். அத்துடன் தாக்ஷிண்யத்தை மறந்து விடுவது, என்னுடைய வழி, வேறு வழி இல்லாததால்; நான் சிறிய ஆள்; மந்திரி என்னிடம் வருவதற்கு ஒன்றும் இல்லை. ஆனாலும், யானை, பூனை என்று ஒன்று இருக்கிறதே!

3. தற்கால பாலிஷ்: அணுகவேண்டியதுஅமைச்சரின் நேர்முக உதவியாளர்களில் ஒருவர். லஜ்ஜையை ஒழித்தவர்கள் தான் அந்த வேலைக்கு வருவார்கள்.

4. அரசியலர் நைச்சியமாக ஊழியர் வேலையையும் எடுத்துக்கொண்டனர். அவர்களுடன் நேரிடை தொடர்பு வைத்துக்கொண்டு,கலக்டர் போன்ற அதிகாரிகள் நியாயாமாக நடந்து கொண்டால்அதற்கு வேட்டு வைப்பது அரசியலர் நாகரீகம் என்பது என்றோ மேடை ஏறிவிட்டது. பிற்கால அரசுகள்அந்த முறையற்ற வழிகளை ஸ்திரப்படுத்தின.

5. என்ன செய்யலாம்சொல்லுங்கள்.
_______________________________