Showing posts with label Chattisgarh. Show all posts
Showing posts with label Chattisgarh. Show all posts

Sunday, June 8, 2014

சிரிச்சு மாளலெ 5


சிரிச்சு மாளலெ 5


இன்னம்பூரான்
ஜூன் 8, 2014

‘காதல் இளைஞர்கள் கருத்தழிதல் காணாயோ...’ என்று பாடினார், மஹாகவி பாரதியார்.
‘கருத்தழிந்த இளைஞர்கள் கற்பழிப்பதை காணாயோ? நிர்பயா நிர்தூளி ஆவதை காணாயோ?’ என்பதுடன் கூட ‘கருத்தழிந்த முரடர்கள் கற்பழிப்பதை’ நியாயப்படுத்தும் அரசியல் வாதிகளை கண்டு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.

இரண்டு காரீய கொழுப்புக்கள்:

‘கோயீ ஜான் பூஜ்கர் நஹீம் கர்தா ஹை (கற்பழிப்பதை), தோக்கே ஜோ ஹோ ஜாதா ஹை துஷ்கர்ம்.’ [யாரும் வேணும்னு கற்பழிப்பதில்லை. அது தானாகவே நிறைவேறிவிடுகிறது.] சொன்னவர் ராம்சேவக் பைக்ரா, உள்நாட்டு அமைச்சர் -சட்டீஸ்கர் மாநிலம்.

‘லட்கோம் ஸே கல்தி ஹோ ஜாத்தீ ஹை.’ [பசங்க னா அப்டித்தான். தப்பு நடந்துடும்.] சொன்னவர் முலாயம் சிங் யாதவ். ஹிந்தியில் முலாயம் னா மென்மை!!!!!!]

பேஷ்!

இந்த லோகமாகப்பட்டது பாவத்திலே பிறந்ததுங்காணும். கலி வேறே முத்திடுத்து. 

சித்திரத்துக்கு நன்றி: http://tvrecappersanonymous.files.wordpress.com/2010/06/bad_boys_sm.jpg





இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com