Showing posts with label Asian Journal of Government Audit. Show all posts
Showing posts with label Asian Journal of Government Audit. Show all posts

Sunday, June 2, 2013

15. விநோத்ஸ்பீக்: தணிக்கை


தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை: 15

விநோத்ஸ்பீக்
அப்டேட்: ரிலையன்ஸ் பிரச்னை இரு வருடங்கள் ஆகியும் இழுபறியில்!
இன்னம்பூரான்
03 06 2013

இன்னம்பூரான்
Saturday, July 9, 2011, 6:37

விநோத்ஸ்பீக்
சாணக்யரின் ‘அர்த்த சாத்திரத்தில்’ உள்ள தணிக்கை அறிவுரைகளை ‘ஆசியன் ஜர்னல் ஆஃப் கவர்ன்ட்மெண்ட் ஆடிட்’ என்ற இதழில், நான் அவ்விதழின் ஆசிரியனாக இருந்த காலத்தில் பதிவு செய்திருந்தேன். நல்ல வரவேற்பு. 40 கட்டுரைகளுக்கான வித்து அவை எனலாம். அவற்றை எடுத்துக்காட்டாக அமைத்து, தற்கால தணிக்கை முறைகளை ஒப்புமை செய்ய நினைத்தேன். ஆனால், மற்றொரு தகவல் முன்னுரிமை எடுத்துக் கொண்டது.  எனவே, அந்த அறிவுரைகளில் ஒன்றை மட்டும் குறிப்பால் உணர்த்தி விட்டு, வந்த காரியத்தை சொல்கிறேன்.
“இன்றைய வரவை நாளை கணக்கில் இடுவது குற்றமே.”

வந்த காரியம்: ஒரு பிரபலம் உரைத்ததை தொகுக்கும் போது, அதை அன்னாரின் பேச்சு என்று பொருள் பட ‘…ஸ்பீக்’ என்பது வழக்கம். இந்தக் கட்டுரை, தற்கால ஆடிட்டர் ஜெனரல் மதிப்பிற்குரிய திரு.விநோத் ராய் அவர்கள் பிரசித்தி பெற்ற ‘அவுட்லுக்’ என்ற ஆங்கில இதழுக்கு அளித்த நேர் காணலின் சுருக்கம். எனவே ‘விநோத் ஸ்பீக்’ என்ற தலைப்பு.
வினா: அ (அவுட்லுக்)/ விடை: வி: விநோத் ராய்.
அ: சரமாரியாக உம்மீது தொடுக்கப்படும் கணைகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?
வி. இது புது கேள்வி! எல்லோரும் ‘ஏன் இன்னார் இன்னார் மீது குறை காண்கிறீர். அடுத்த பலி யாரு?’ என்று தான் கேட்கிறார்கள். கணையேதும் இல்லையே!
அ. அரசியலாரும், தனியார் நிறுவனத்தாரும், உமது காமன் வெல்த் விளையாட்டு, 2ஜி, கச்சா எண்ணெய் குற்றச்சாட்டுகளுக்குப் பின், உமது திறனுக்கு அப்பாற்பட்டு நீங்கள் இயங்குவதாக, பழிக்கிறார்களே?
வி: தணிக்கையில் மூன்று விதம் -நிதியைக் கையாண்டது எப்படி?, ஆணைகளுக்கு உகந்த செயல்களா?, அரசு துறைகள் உருப்படியாக இயங்கியனவா? மூன்றாவது வகையை எமது பணியில் அடக்கம் என்று ஜூன் 2006லியே நிதி அமைச்சரகம் கூறியுள்ளது. நீங்கள் சொன்ன மூன்று தணிக்கைகளும் அதில் அடக்கம். பொது சொத்து, தனியார்-அரசு கூட்டுத் துறைகளில் பயன் படுத்தப்பட்டால், நாங்கள் வரத்தானே வேண்டும்.
வி: ரிலையன்ஸ் கம்பெனியின் கருத்துக்களை நாங்கள் ஏற்கவில்லை என்கிறீர்கள். அமைச்சரகம் கேட்டுக் கொண்டவாறு தணிக்கை செய்தோம். ரிலையன்ஸ் ஆட்சேபித்தனர். வாஸ்தவம் தான். ஒப்பந்ததில் இது போடப் படவில்லை. மூன்று வருடங்கள் கேஸ் நடந்தது. சாதகமான தீர்ப்பு வந்த பின் தான், தணிக்கையே தொடங்கப்பட்டது. அமைச்சரகம் தான் அவர்களுடன் உரியதை பகிர்ந்து, விளக்கம் பெற்றுத் தரவேண்டும்.
அ: கபில் சிபல் உமது ரிப்போர்ட்டை உதறி விட்டாரே! உங்கள் மீது உள்ள நம்பகத்துவம் பாதிக்கப்பட்டதா?
வி: இல்லையே. அவர் அதை ‘சரியே’ என்றல்லவா சொல்லியிருக்கிறார். இரு விஷயங்களில் சம்மதம். ஒன்றில் சம்மதமில்லை. முறை கேடுகளைத் தான் சம்மதிப்பதால்தான், விசாரிக்க கமிஷன் அமைத்தார். நஷ்டத்தைப் பற்றித் தான் அவருடைய கஷ்டம். ஆடிட் ரிப்போர்ட்டே, இது விவாதத்துக்குரியது என்று சொல்கிறதே.
அ: உமது அதிகாரிகள் மீது அரசியல்/ அதிகாரத்துவத்தின் தாக்கம் இருந்ததா?
வி: லவலேசமும் இல்லை. நாங்கள் எங்கள் வழி செல்வதில் தடை ஏதும் இல்லை.
அ: 2ஜி/ கச்சா எண்ணைய் ஆடிட் வரைவு ரிப்போர்ட்டுகள் கசிவு பற்றி, உங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்களே!
வி: அதில் எமக்கு ஆதாயம் என்ன? எங்கள் ஆக்கத்தை அல்லவா அது தாக்குகிறது? நாடாளுமன்றத்தில் வைத்த பின் டிபுடி ஸீ.ஏ.ஜி. ஊடகங்களுடன் பேசுவார். அந்த மின்னலடிப்பதை விட்டு விட்டு, பிட் நோட்டீஸ் விடுவோமா, என்ன?
அ: அரசுத் துறைகள் பல பட்டறை. இப்போது தனியாருடன் உடன்பாடுகள் வேறு. இதை எல்லாம் தணிக்கை செய்யும் திறன்/ வலிமை/ ஆற்றல்  உம்மிடம் உள்ளதா?
வி: ஆம். திறன் வேண்டும். ராணுவம்/ அணுசக்தி/ சுகாதாரம்/ கல்வி என அனைத்துத் துறைகளிலும். அதற்காகத் தான் அறிமுகக் கூட்டங்கள் -  நுட்பங்கள் அறியும் பொருட்டு.  எங்கள் வலிமையே, ஆற்றலும், திறனும், ஆக்கமும் மிகுந்தத் தணிக்கைப் படை எங்களிடம் இருப்பது தான். உலகளவில், முதல் மூன்று/ நான்கு இடங்களில் நாங்கள் இருக்கிறோம்.
அ: இந்தக் கச்சா எண்ணைய் விவகாரத்தில், உமது திறனும், புரிதலும் சர்ச்சைக்கு உள்ளாயினவே?
வி: எமது துறையின் 14 அதிகாரிகள் மேற்கு ஆசியாவில் இதே ஆய்வுப் பணியில் உள்ளனர். இந்தத் தணிக்கை செய்தவரும் கூட வளைகுடா பிராந்தியத்தில் இதேப் பணியை நான்கு வருடங்களுக்கும் மேல் திறம்படச் செய்தவர். எங்கள் அதிகாரிகளை நேரில் சந்திப்பவர்களுக்கு, எங்களின் ஆழ்ந்த புரிதலின் பேரில் செய்யும் பணியின் ஆற்றல் புரியும்.
அ: ஆடிட் ரிப்போர்ட்களின் மீதான நடவடிக்கைகள் பற்றி?
வி: ஒரு கால கட்டத்தில் அவற்றை யாரும் மதித்தது இல்லை. எங்கள் ரிப்போர்ட்டுகளில் மூன்றில் ஒரு பகுதிக்கு விளக்கம் வருவது இல்லை என்று, பிரதமர் முன்னிலையில் சொல்லி இருக்கிறேன். இப்போது பரவாயில்லை. ராணுவ அமைச்சரகமும், சுற்றுச் சூழல் அமைச்சரகமும் வழி முறைகளை மாற்றிக் கொண்டது, எனக்கு மகிழ்ச்சியே.
அ: சட்ட அமைச்சர் மொய்லி அவர்கள், நீங்கள் ‘வருமுன் காப்போனாக’ இயங்குவது இல்லை என்கிறார். ஆடிட் விதிகளை மாற்றினால் உதவுமோ?
வி: நாங்கள் கேட்ட வரங்கள் மூன்று: ஆடிட் தாமதம் ஏன்? நாங்கள் விளக்கம் கேட்டால், ஒரு நாளில்/ ஒரு மாதத்தில்/ ஆறு மாதங்களில் அதைத் தரலாம். தராமலும் இருக்கலாம்!  தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் உள்ளது போல், 30 நாட்களில் பதில் போதும். அது வரம் ஒன்று.
ஆடிட் ரிப்போர்ட்டை ஜனாதிபதி/ கவர்னரிடம் சமர்ப்பிக்கிறோம், அரசியல் சாசனத்தின் 151 வது சரத்துப் படி. அது மன்றத்தில் வைக்கப்பட வேண்டும். இப்போது அமைச்சரகத்திடமே கொடுக்கின்றோம். அவர்கள் இஷ்டப்படி ஒரு மாதம்/ ஆறு மாதம்/ ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறார்கள். இதை மாற்றி, குறிப்பிட்ட கெடு வைக்க வேண்டும் என்று கேட்கிறோம். அது வரம் இரண்டு.
மூன்றாவதாக, 1971க்குப் பிறகு பஞ்சாயத்து, அரசு-தனியார் கூட்டணி, தன்னார்வக் குழுக்களின் பங்கு எல்லாம் வந்து விட்டன. அவற்றை ஆடிட் செய்வது பற்றி ஒரு தெளிவு வேண்டுமல்லவா! அதை தான் கேட்கிறோம். அது வரம் மூன்று.
அ: எத்தனை ஆடிட் ரிப்போர்ட்டுகள்  நாடாளுமன்றத்தின் முன் வைக்கப் படவில்லை?
வி: எல்லாமே வைத்தாகி விட்டது. ஆனால், என்னே தாமதம்! – ஒரு வருடம் கூட! அன்றைய அரசுக்கு இஷ்டமில்லை என்றால். இந்தத் தாமதத் தந்திரம் மத்திய அரசில் இருப்பதை விட மாநிலங்களில் அதிகம். மஹாராஷ்டிராவில் ஒன்று, மெட்ரோ பற்றி ஒன்று – ஒரு வருடத்திற்கும் மேல் தாமதம்.
அ: உமது ஆடிட் ரிப்போர்ட்கள் எந்த அளவுக்கு இறுதி நிலை வரை…?
வி: பத்து/ஆறு வருடங்களுக்கு முன்னால் படு மோசம். முதற்கண்ணாக, தாமதம்: மக்களுக்கு ஆர்வமிருக்கவில்லை. கணக்கு வழங்கும் முறையும் சரியாக இல்லை. இப்போது படாபட். கணக்கு வழக்கு நிலைப்பாடு  வந்து தானே ஆகவேண்டும்.
அ: உமக்கு தோட்டக் கலையில் ஆர்வம் என்று கேள்வி. உமக்கா அல்லது உமது மனைவிக்கா?
வி: நான் தான் மாலி: தோட்டக்காரன்.வீட்டில் அவள் ராணி; வெளி உலகில் என் ராஜ்யம். ஏதோ இயற்கைக்கு உகந்த காய்கறி கொடுத்தால் என் கடமை ஒவர்!
இது அவுட்லுக் இதழில் வந்த நேர் காணலின் தமிழ் சுருக்கம். தமிழாக்கமும், சுருக்கமும் நான் செய்தது. பொறுப்பு எனது. ஆங்கிலத்தில் வந்துள்ள மூலக் கட்டுரையின் காப்புரிமை அவுட்லுக் இதழுக்கே. நமது நன்றி அவர்களுக்கு உரித்ததாகுக. தமிழாக்கத்திற்கு அனுமதி கொடுத்ததிற்கும் அவர்களுக்கு நன்றி  செலுத்துகிறேன்.
ஒரு நற்செய்தி. இனி ஆடிட் ரிப்போர்ட் பற்றி மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பிரசுரங்கள் வரப் போவதாக செய்திகள் வருகின்றன.
ஒரு சுவாரசியமானச் செய்தி: திரு. தயாநிதி மாறன் மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜிநாமா செய்து விட்டார்!
(தொடரும்)
உசாத்துணை
பிரசுரம்: http://www.vallamai.com/archives/5091/
Geetha Sambasivam
7/9/11



மொழிபெயர்ப்பு பிரமாதம். திரு விநோத்ராய் சொல்லி இருப்பது போல் தாமதம் தவிர்க்க வேண்டும். தணிக்கைத் துறை என ஒன்று இல்லை எனில் அரசாங்கம் செய்யும் தில்லுமுல்லுகள் வெளிவரவே வராது.  ஆனால் மேல் நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றனவா என்றால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.  

Friday, April 26, 2013

தணிக்கை செய்வதில் தணியா வேகம் 18 & 19: “வேற்றுமுகம்” & “அடியும் தடியும்”




தணிக்கை செய்வதில் தணியா வேகம் 18 & 19: “வேற்றுமுகம்” & “அடியும் தடியும்”
Innamburan S.Soundararajan Fri, Apr 26, 2013 at 4:59 PM



தணிக்கை செய்வதில் தணியா வேகம் 18 & 19: வேற்றுமுகம்& “அடியும் தடியும்”
Inline image 1

இன்று கணினி ஒத்துழைக்க மறுத்ததால்ஒரு சிறிய இடுகை. இந்த இழை விழுதுகள் விட்டுசீரிய அரசாங்க ஆளுமை பற்றியும் தணியா வேகம் எடுத்திருப்பது நல்லதே. மற்றும் பலர் கருத்து தெரிவிப்பதால்பயன் அதிகரிக்கிறது.

பொதுப்பணித்துறை தணிக்கைப் பற்றி கற்றுக்கொள்வதற்குள்பலதரப்பட்ட துறைகளை நேரில் சென்று தணிக்கை செய்யும் துறைஎனக்கு அதிகப்படி பொறுப்பாக தரப்பட்டது. நாம் நிர்வாகங்களை எவ்வளவு குறை சொன்னாலும்கேலி செய்தாலும்,சில முறைகளின் பயன் போகப்போகத்தான் தெரியும்.

ஒரு அதிகாரிக்கு திடீரன்று அதிகப்படி வேலை கொடுப்பதின் பின்னணி சுவாரஸ்யமானது. டிகிரி வாங்கின உடனேயே,சின்ன வயதில் பெரிய பொறுப்புகள்,  சலுகைகள்சமுதாயத்தில் ஒரு சிறந்த இடம்நல்ல சம்பளம் ஆகியவற்றைக்கொடுப்பதுஅவர்களை கெடுப்பதற்கும் வகை செய்யக்கூடும். கர்வம்அதிகார மோகம், 'தாட் பூட்'கலாச்சாரம் ஆகியவை தலை தூக்கலாம். உதாரணமாகநாங்கள் சிம்லா போனபோது (அந்தக்கதை கன ஜோர்!) அங்கே கaசு எடுத்து செல்லத் தேவையே இல்லை. எல்லாக்கடையும் கடன் கொடுப்பார்கள். அப்ப்டித்தானே ஆங்கிலேய அதிகாரிகள் கடனாளி ஆகிவிட்டனர். எங்கள் பிரின்சிபலோஒரு பில்லுக்கு ரிமைண்டர் வந்தாலும் தோலை உரித்து விடுவார்.


அவ்வாறேஎங்களுக்கு பணியும்பயிற்சியும் இணைந்தே வரும். சவால்களை சமாளிக்கிறானா என்று பார்ப்பார்கள். சுணங்கிறானா என்று பார்ப்பார்கள். அதிகப்படி வேலை கொடுப்பதும் ஒரு சவால் தான். இத்துடன் இன்னொரு அதிகப்படி.த்ரீ இன் ஒன்! ஆம்! எனக்கும்என் துறைக்கும் சம்பந்தமில்லாத ஹிந்திமொழி படிப்பிக்கும் துறை என் தலையில் கட்டப்பட்டதுஅது முற்றிலும் வேற்றுமுகம். பிறகு நடந்தவை - தமாஷ்புதிய அனுபவங்கள்உளவியல்மற்ற இடங்களிலும் நல்ல பெயர்கொஞ்சம்திவாஜி சொல்றமாதிரி அடி தடி!

இன்னம்பூரான்
18 01 2010


தணிக்கை செய்வதில் தணியா வேகம் -19: அடியும் தடியும்

தணிக்கையை கொஞ்சம் தள்ளிப்போடுவோம், 'ஆடிட் அப்ஜெக்ஷன்இழையில் பதில் வரும் வரை.

இந்த ஹிந்திப்படிப்புத்துறைக்கு நான் வைத்திருந்த செல்ல பெயர், “Hindi Cheating Scheme” ! அதன் இயற்பெயர், “Hindi Teaching Scheme”.  பாப்பா கையிலே ஒரு ஆழாக்குஅது உழக்கை விட பெரியதாஇல்லையா என்ற பட்டும் படாத பட்டிமன்றம்.  அதற்குள்ளே ஒரு மகாபாரத யுத்தம் என்ற வகையில்பத்து ஆசிரியர்களும்ஒரு பிராந்தியா அலுவலரும்'நித்திய கண்டம்பூரணாயுஸாககாலையும்மாலையும்இடையில் எல்லாவேளைகளிலும்போர்க்கள ஆயத்தமாக இருந்து வந்தார்கள்பொழுது விடிந்தால் புகார் காண்டம் தான்; 'கரணம் தப்பினாமரணம்என்று அனாமதேயக் கடுதாசு இலக்கியத்தலைவர்களாககாலம் தள்ளி வந்தார்கள்.

ஆட்சி மாறின உடனே, ஆளைப்பிடிடா என்று சேர்ந்தும்பிரிந்தும்அணிகள் பல வகுத்தும் என்னிடம் தூது வந்தார்கள்;கோள் சொன்னார்கள்ஆதாரமற்ற ஆதாரங்களை பிட்டு பிட்டு வைத்தார்கள். ஆனால்யாரைக்கேட்டாலும்பாடம் எடுப்பதைப்பற்றி காஷ்ட மெளனம். முந்திய Officer in Charge (அது தான் பதவி : சன்மானம் மாதம் தோறும் ரூபாய் எம்ப்ளது.)எனது நண்பர். அவரிடம் கேட்டேன். அவரின் கூற்று, " உன்னைக்கேட்க ஆளில்லைஅனாமதேய கடுதாசுக்களை தவிர.அவற்றை தடுக்க ஆண்டவனாலும் முடியாதுஇந்த பிச்சைக்காசுக்கு அதுவே அதிகப்படிசலுகைகளை அனுபவி"
பாய்ண்ட் மேட். நாட் டேகன்.

 ஒரு நாள்முன்னறிவிப்பு இல்லாமல்நாலு வகுப்புக்களுக்கு சென்று, 'வாத்தியார்/அம்மா வாராரோ என்று காத்துக்கிடந்தேன். மாணவர்கள் எல்லாருமே அரசு ஊழியர்கள் தானே. அடுக்கினார்கள்களத்துப்பட்டியலை. இங்கு தான் நிர்வாகத்திறன் கை கொடுத்தது..நான் குற்றப்பத்திரிக்கை கொடுத்ததுவகுப்புக்கு வாரா ஆசிரிய சிரோன்மணிகளுக்கு அல்ல. பிராந்திய அதிகாரியோ என் கட்டுப்பாட்டில் இல்லை. எனவேஅவருக்கு பணிவன்புடன்வாத்திமார்களுக்கு குற்றப்பத்திரிக்கை கொடுத்தோகொடுக்காமலோஅவர்களின் விளக்கம் வாங்கி 24 மணி நேரத்துக்குள் (ஒரு நாள் அல்ல.) அனுப்பவும் என்றுலிகிதம் எழுதிவிட்டுஅந்த வாத்தியார்களின் சம்பளப்பட்டியலைப் பூட்டி வைத்துவிட்டேன். இந்த முறையை சொல்லிகொடுத்தவர்ஒரு பழம்பெருச்சாளி. வாழ்க அவர் நாமம்!

அப்பறம் தான் சீட்டிங்க் தவிர்த்து டீச்சிங்க் செய்ய வந்தார்கள். நான் கண்டிப்பாக கோப்புக்களை மட்டும் பார்ப்பேன். ஹிந்தியாளர்களுக்கு நேர்முகம் மறுப்பு. என்னுடைய உதவியாளருக்கு வராத வதந்திகளே கிடையாது. அவரே நமக்கும் பாங்கன். ரொமப் கெடுபிடி என்று அஞ்சுகிறார்கள் என்று ஒரு நாள் சொல்லி அகமகிழ்ந்தார். விட்றுலாமோ?

ஒரு மீட்டிங்க் கூட்டினேன். அதற்கு முன்பிராந்திய அதிகாரியை தேனீர் அருந்த அழைத்தேன். என் கண்டிப்பான போக்கை அனுசரித்து அவர் தான் கொள்கை பிரகடனம் செய்யவேண்டும் என்றும்அது செய்ய மறுக்க அவருக்கு உரிமை உண்டு என்றும்எது எப்படி இருந்தாலும்தவறு செய்வோருக்கு தண்டனைப்பட்டியல் இது தான் என்றும் கூறினேன். பாவம் அவர். தேனீர் அருந்தவே இல்லை!.

மீட்டிங்க் சக்செஸ் என்று சொல்லத்தான் வேண்டுமாபழி அவர் மேல்என்றும் இல்லாத கண்டிப்புக்காக. தண்டனைப்பட்டியலை கூட கனிவுடன் அளித்ததற்காகஎனக்கு நல்ல பெயர். இந்ததுறைக்கு மேலாண்மைமத்திய உள்துறை இலாக்கா. கிட்டத்தட்ட ஆறு மாதங்களில்  நல்ல முன்னேற்றம். எனக்கு சென்னையிலிருந்து மாற்றல் வந்த போதுஅந்த துறையிலிருந்து கடிதம் வந்தது, " உங்களுக்கு ஆக்ஷேபணை இல்லை என்றால்ஆடிட்டர் ஜெனெரலிடம் சொல்லிஅதை நிறுத்தக்கேட்டுக்கொள்கிறோம். ஏனென்றால்இந்த திட்டத்தின் முன்னேற்றம் அடிபடும் என்று. " ஐயா! நன்றி ஆளை விடுங்கள். என்னுடைய முதலாளி ஆடிட்டர் ஜெனெரல். அவர் சினந்தால்எனக்கு தான் இன்னல்என்று எழுதி,தியாகம் செய்த இந்த துறை மறுபடியும் என்னிடம் வந்ததுஇன்னொரு கதை.

படிப்பினைகள்.

1. சின்ன ஆஃபீஸ்வேலைக்குறைவு. கேட்பார் இல்லை என்றால்ஆளுக்காள் நாட்டாண்மை.
2. நிர்வாகத்திறன் தர்மத்துக்கு கட்டுப்பட்டால் தான் எடுபடும்.
3.. அடி உதவறமாதிரிஅண்ணன் தம்பி உதவமாட்டார்கள்நிச்சயமாகசக உத்யோகஸ்தர்கள்.
4.. விதிமுறைசட்டம்திட்டம் எல்லாம் பண்புக்கும்நியாயத்திற்கும் அடுத்த படி தான்.
5. அனுபவம் கை கொடுக்கும்தவறு செய்யவும். அதை நியாயமாக கையாளும் பண்பை பயிற்சியால் அளிக்கமுடியும்.

பி.கு.

கீதாபெண்ணேஸ்வரன்கண்ணன்ஓம் ஐயா ஆகியோரின் ஊக்கத்திற்கு நன்றி. ஆடிட்டர் ஜெனெரல் மக்களின் நண்பனாக பணி புரிவது பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூல் வடித்து வந்தேன்மின்னாக்க பைத்தியம் பிடிக்கும் வரை.  பிறகு மற்றும் பல ஜோலிகள். மறுபடியும் விட்டுப்போன அந்த 'நூலைபிடிக்கவேண்டும்.

இன்னம்பூரான்
19 04 2013


2010/1/18 N. Kannan 
> யான் அன்றே நாவன்னா காவன்னாவிடம் இயம்பினேன், தாசில்தார் ஐயாவை அழைத்து வருவேன்
> என்று.
உண்மைதான். உம்ம எழுத்துதான் கொக்கின்னு இப்பப் புரியுது ;-)

க.>

devoo 
1/18/10



> ஆடிட்டர் ஜெனெரல் மக்க்ளின் நண்பனாக பணி புரிவது பற்றி ஆங்கிலத்தில் ஒரு நூல் வடித்து
> வந்தேன், மின்னாக்க பைத்தியம் பிடிக்கும் வரை.  பிறகு மற்றும் பல ஜோலிகள்.
> மறுபடியும் விட்டுப்போன அந்த 'நூலை' பிடிக்கவேண்டும்.<
நீங்களும், உங்கள் மின்னாக்கப் பித்தும் தீர்காயுஸாக இருக்கும்படி
பெருமாளை ப்ரார்த்திக்கிறேன். ஆங்கில ’நூல்’ அப்படியே இருக்கட்டும்;
தமிழ் ’இழை’ வளரட்டும்

தேவ்

Venkatachalam Subramanian 
1/22/10

படிப்பினைகள்.

1. சின்ன ஆஃபீஸ்வேலைக்குறைவு. கேட்பார் இல்லை என்றால்,ஆளுக்காள் நாட்டாண்மை.
2. நிர்வாகத்திறன் தர்மத்துக்கு கட்டுப்பட்டால் தான் எடுபடும்.
3.. அடி உதவறமாதிரிஅண்ணன் தம்பி உதவமாட்டார்கள்நிச்சயமாகசக உத்யோகஸ்தர்கள்.
4.. விதிமுறைசட்டம்திட்டம் எல்லாம் பண்புக்கும்நியாயத்திற்கும் அடுத்த படி தான்.
5. அனுபவம் கை கொடுக்கும்தவறு செய்யவும். அதை நியாயமாக கையாளும் பண்பை பயிற்சியால் அளிக்கமுடியும்.

ஓம்.
அரசு அளித்துவரும் இனாம்களில் முதியோர் உதவித் தொகை, விதவைகள் உதவித்தொகை,கணவனால் கைவிடப்பட்டவருக்கு உதவித் தொகை போன்றவை தகுதியானவை.
ஒவ்வொரு வட்டத்துக்கும் எத்தனை பேருக்கு வழங்கலாம் என்பது தனித்தனியே நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது.. பயன் பெறுவோர் கால வோட்டதில்  மரணம், அல்லது வேறு இடத்திற்கு தன் கணக்கை மாற்றிக் கொண்டதால் ஏற்படும் காலி யிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் இருந்து தேர்வு செய்து முதிர்ச்சியின் அடிப்படையில் பூர்த்திசெய்யப் படும்.

முதியோர் உதவித் தொகை பெறுவதற்கு உரிய தகுதி என்பது அவருக்கு ஆண் வாரிசுகள் இல்லை என்பதை உறுதி செய்து சான்றுகள் பெற்ற பின்னர் வழங்கப் பட்டிருக்கும்.
தலைமை அமைச்சரின் தனிப்பிரிவில் ஒரு மனுக் கொடுக்கப்பட்டிருந்தது.(Chief minister's cell). ’ஒரு கிராமத்தில் வசிக்கும் 15 பேர் மூதாட்டிகள் அரசினை ஏமாற்றி வாரிசுகள் வசதியாக இருப்பதை மறைத்து அரசாங்கத்திலிருந்து முதியோர் உதவித் தொகை(Old age pension) பெறுகிறர்கள்’என்பது அந்த மனுவினில் கண்ட செய்தியாகும்.
இந்த மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு நடிவடிக்கையின் முடிவு பற்றிய தகவலை மனுதாருக்குத் தெரிவிப்பதுடன் முதலமைச்சர் தனிப் பிரிவுக்கும் இறுதி அறிக்கைத் தகவல் தரவேண்டும். கால அவகாசம் 15 தினங்கள்.

அந்த மனுவில் கண்ட மூதாட்டியரின் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு 7 வருடங்கள் ஆகியுள்ளன. அவர்களுக்கு மு.உ.தொ.ஒப்பளிக்கப்பட்ட ஆணைகள் அடங்கிய முடிவுற்ற கோப்பினை வைப்பறையினின்றும் தேடி எடுத்துப் பார்த்ததில் அந்த மூதாட்டியருக்கு வாரிசுகள் ஏதும் இல்லையென்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அந்த மனுவினைக் கொடுத்தவரும் அந்த மூதாட்டியரும் ஒரே ஊர்க்காரர்கள்.
ஒரு குறிப்பாணை அனுப்பி மனுதாரையும் மூதாட்டியர்களையும் ஊராட்சி மன்ற அலுவலக்த்தில் ஒரு நாள் குறிப்பிட்டு, வருமாறு  அழைத்தேன். முடிவுற்ற ஒப்பளிப்பு கோப்பும் கொண்டு சென்றிருந்தேன்.ஊராட்சித் தலைவரையும் முன்னிறுத்தி அவர்களுடன் பேசினேன்.கள்ளச் சிரிப்புடன் மனுதாரர் இஞ்ஞாசி, கிழவிகளைப் பார்த்து எக்காளம் காட்டிச் சைகையில் ஏதோ உணர்த்திக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். 

மனுவில் கண்ட செய்தி உண்மையென நிறுவப்பட்டால் ஏழு ஆண்டுகளுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகை முழுமையுமாக திரும்பவும் வசூலிக்கப்படவேண்டும். உடுத்தியிருக்கும் சேலையும் அலுமினிய குவளையும் தட்டும் தவிர வேறு எந்தப் பொருளும் அவர்களுக்கு இல்லை.

இஞ்ஞாசிதான் அவர்களை அழைத்துவந்து உதவித்தொகை வழங்க உள்ளூர்வாசி என்ற முறையில் முதலில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் பரிந்துரை செய்திருக்கிறான். அவன் கையெழுத்து மட்டும் இருந்தது முந்திய கோப்பினில். ஒரு வாக்குமூலம் அவனுடைய மனுவின்படிப் பதிவு செய்தேன். கையெழுத்துகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பரிந்துரைத்ததும் பழிசொல்வதும் ஒரே நபர்தான் என்பதும் கிழவிகளிடம் மாதாமாதம் பங்குபெறுவதில் தபால்காரர் முதலாவதாகவும் பின்னர் இஞ்ஞாசியும் தொடர்ந்து முனைந்திருக்கிறார்கள். சில கிழவிகள் மறுப்புடன்  முணுமுணுக்கவும், நேரில் மிரட்டியது போலவே முதலமைச்சர் தனிப்பிரிவிற்கும் மனுச் செய்துள்ளான்.
இதற்கு முன்னர் ஒரு நாள் நேரடியாக அந்த கிராமம் சென்று மூதாடியரைச் சந்தித்தும் அவ்வூர் பெரியவர்களிடம் விசாரணை மேற்கொண்டேன். மூதாட்டியர் மதிய உணவுக் கூடத்தில் கிடைக்கும் உணவை நம்பித் தான் உயிர்வாழ்கிறார்கள், உதவுவோர் எவரும் இல்லை என்பதையும் பராரிகளை துன்புறுத்துகிறான் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
இத்தகவலை ஊராட்சிமன்றத் தலைவரிடம் பேசியும் ஒப்பளிப்பு கோப்பில் கண்ட பரிந்துரையாளரும் ,மனுதாரும் ஒருவரே என்றும் உறுதிப்படுத்திக் கொண்டபின் அவரிடம் மேலும் ஒரு வாக்குமூலம் வாங்கினேன்.இந்த மூதாட்டீயர் 15 பேருக்கும் இதுவரை வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகையாகிய 200x15x7= ரூபாய்  21000/ -       உடனடியாக கருவூலத்தில் செலுத்திவிடுகிறேன் . தவறினால், என்னுடைய கதவிலக்கம் 13-1, கீழ்த்தெருவில் உள்ள மச்சுவீட்டின் மீது வில்லங்கப்படுத்தி ஈடாகக் காட்டுகிறேன்.
கையெழுத்தினைப் போட மறுத்தான் இஞ்ஞாசியிடம்.முடிவுற்ற கோப்பினை நேரில் காட்டி அவன் முன்னர் தந்த பரிந்துரை வாக்குமூலமும், அவன் வழங்கிய சான்றாவணங்களும்  காட்டிய பின்னர் மன்றத்தலைவரின் கால்களில் விழுந்து தன்னை விடுவிக்குமாறு வேண்டினான். தலைவர் அவனுக்கு புத்திமதி சொல்லி மூதாட்டிய்ர் ஒவ்வொருவருக்கும் தலா ஐம்பது ரூபாய் வழங்குமாறு கூறினார். கையோடு வைத்திருந்த பணத்தில் தலைவரின் ஆணைப்படி வழங்கிவிட்டு ’தன்னுடைய புகார் மனு தவறாக தரப்பட்டுவிட்டது. அந்த மூதாட்டியார் வாரிசு அற்றவர்கள்தான். தன்னுடைய பிழைபட்ட புகார் மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவேண்டாம்’ என்று ஒரு மனு கைப்பட எழுதிக்கொடுத்து அதன் சாட்சியாக ஊராட்சித் தலவரின் கையொப்பமும் பெற்று மேல் நடவடிக்கை ஏதும் தேவை இல்லை என்பதை உரிய விசாரணை வாக்குமூலங்களுடன் அரசுக்கு அறிக்கை செய்தேன்.
ஓம்.

Tirumurti Vasudevan 
1/22/10

இதான் ரொம்ப அவசியமான நீக்குப்போக்கா?
வாழ்த்துக்கள்.
சென்னையில் சந்தித்தபோதே உங்களுக்கு அனுபவங்கள் நிறைய இருக்கிறது.
அனுபவங்களை எழுதுங்கள் என்றேன். இப்போதுதான் வேளை வந்து இருக்கிறது.
இழுத்து வந்த இ க்கு நன்றி.
:-))
திவாஜி
PSJ Sigamany 
1/22/10

9 pm அன்று, Venkatachalam Subramanian <v.dotthusg@gmail.com> எழுதியது:
அரசுப்பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின் இவ்வாறு பணி விவரங்களை வெளிப்படுத்துவது அழகன்று.

Tirumurti Vasudevan 
1/22/10

ஏன்? எந்த ரகசியம் இப்போது வெளி வந்துவிட்டது?
என்னவெல்லாம் அந்நியாயம் நடக்குது என்பதெல்லாம் இப்போ ஓபன் சீக்ரெட்.
அதில இப்படியும் சிலர் இருக்கிறது எனக்கு ஆறுதலா இருக்கு.

திவாஜி

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/22/10

ஓம் ஐயாவின் இடுகை
 
முதியோர் உதவித் தொகைவிதவைகள் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டவருக்கு உதவித் தொகை போன்றவை ஒவ்வொரு வட்டத்துக்கும் எத்தனை பேருக்கு?…’ என்ற விதியே தவறு; தன்னிச்சை முடிவுக்கு அடிகோல்;தகுதி அடிப்படை அற்றது. தலைமை அமைச்சரின் தனிப்பிரிவு இங்கெல்லாம் தலையிடாமல் மாவட்ட ஆட்சி நடப்பது தான் முறை. அளவுக்கு மிஞ்சினால் அமிருதமும் விஷம். இது அதிகாரமையம் அமைக்க மட்டுமே உதவும். ஆனால்ஓம் ஐயாஇந்த கட்டுப்பாட்டிற்குள் தான்.  நீதியை நிலை நாட்டியிருக்கமுடியும். அவர் அருமையான தணிக்கை செய்து உண்மையை கண்டுபிடித்து இருக்கிறார். அது நல்லதே. ஆனால்இஞ்ஞாசியை கிரிமினல் கேஸ் போட்டுசட்டப்படி தண்டனை கிட்ட வாய்ப்பு இருந்தது. அதை நழுவ விடஅவருக்கோமன்றத்தலைவருக்கோ, . தலைமை அமைச்சரின் தனிப்பிரிவிற்கோ சட்டப்படி தகுதி [discretion] இல்லை. இது என் தாழ்மையான கருத்துநடைமுறைக்கு ஒவ்வாமல் இருக்கலாம்.

உள்ள சட்டங்களைமுதற்கண்ணாகநாம் மதிக்கவேண்டும்.
*

Thursday, April 18, 2013

“உன்னால் முடியும் தம்பி”




“உன்னால் முடியும் தம்பி”

Innamburan S.Soundararajan Thu, Apr 18, 2013 at 10:39 PM


“உன்னால் முடியும் தம்பி”
Inline image 1

“பாரத தேசம் என்று பெயர் சொல்கிறோமே’. அந்த விசாலமான, புனித பூமியின் வடகிழக்குப் பிராந்தியத்தின் மணிப்பூர் மாநிலத்து Tamenglong மாவட்டத்தின் Tousem சப்-டிவிஷன் இருக்கும் ஊர், ஒரு மூலை முடுக்கு ஊர். தீவு எனலாம். பிரவாஹிக்கும் நதியை கடந்து, குண்டும், குழியான ராஸ்தாவில், உயிரை பணயம் வைத்து பயணம் செய்தால் தான் 50 கிலோமீட்டர் தள்ளி இருக்கும் Tamenglong என்ற ஊருக்கும், அதைத் தலைவாயிலாக வைத்து வெளி உலகத்திற்கும் போக முடியும். செழிப்பான நிலம். ஆனால், பழங்கள் அழுகி போகின்றன. வியாதிஸ்தர்களுக்கு அவதி. மக்கள் கேட்பதன்னெமோ ஒரு ரோடு. துட்டுக்குப் பற்றாக்குறை என்று அரசு கையை விரித்து விட்டது. சப்கலெக்டர் திரு. ஆர்ம்ஸ்றாங் பாமே ஐ.ஏ.எஸ். (28) உள்ளூர் பையன். பாலப்பருவத்திலிருந்து மக்களின் இன்னல்களை பார்த்தவர். கால்நடையாகவே 31 குக்கிராமங்களில் பயணித்து ஒரு ‘விதிமீறல்’ முடிவுக்கு வந்தார். ஃபேஸ்புக் மூலமாக ரோடு போட திரவியம் தேடினார். கைக்காசு ரூபாய். ஐந்து லக்ஷம் போட்டார். அம்மாவிடமிருந்தும், சகோதரனிடமிருந்தும் நன்கொடை வாங்கினார். செய்தி பரவ, பரவ, கல்லாப்பெட்டி நிரம்பியது ( ரூபாய் 40 லக்ஷம்) அமெரிக்காவிலிருந்து ஒரு சீக்கியர் தாராளமாக உதவினார். காண்டிராக்டர்கள் இயந்தரங்களை இலவசமாக கொடுக்க சம்மதித்தனர்.. மக்கள் கூலி மறுத்து, இனாமாக சிரமதானம் செய்தார்கள். 100 கிலோ மீட்டர் சில மாதங்களிலே ரெடி. மக்களின் மகிழ்ச்சி தான், இவருடைய ‘விதிமீறலுக்கு’ பரிசு. அரசும், ஊடகங்களும், சமுதாயம் இவரை போற்றுவதைக்கண்டு, இந்த ‘விதிமீறலை’ கண்டு கொள்ளமாட்டார்கள் என்று தோன்றுகிறது.
என்ன ‘விதிமீறல்’, இது? ரோடு போட்டது அரசுக்கு சொந்தமான இடம். அரசு நிர்வாக விவிலயம் (GFR& CTR) படி, அதில் கை வைத்தது ‘விதிமீறல்’. அரசு அதிகாரி நன்கொடை நாடியது ‘விதிமீறல்’. காண்டராக்டர்களிடம் தாக்ஷிண்யப்பட்டது ‘விதிமீறல்’. ஆடிட்காரன் என்ன சொல்வான்? முதற்கண்ணாக இந்த அரசு நிர்வாக விவிலயத்தின் பற்றுக்கோடு ஆகிய விதியை அவர் மீறவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்வான்.
“...என்றைக்கோ விதிக்கப்பட்ட வரையறைகளுடன் மோதும் துணிச்சலான, கண்ணியமான, தொலைநோக்கு உடைய, மக்கள் நலம் நாடும் சாதனைகள் நம் வரப்புயர்த்தக்கூடியவை... தணிக்கையாளர், ரூல் புத்தகங்களுக்குள் அடைந்து கிடைக்காமல், நாற்திசையும் பார்க்கவேண்டும்...”.
ஆசிய நாடுகளின் தணிக்கை மஹாஜன சபையின் அதிகாரபூர்வமான இதழின் ஆசிரியப்பணி இந்தியாவிடம். 1989ல் , அதில் மேற்படி கருத்துப் பதிக்கப்பட்டது, என்னால். ஆகவே, இந்திய தணிக்கைத்துறையும், ஆசிய மன்றமும் அதை ஏற்றுக்கொண்டது எனலாம். அடுத்த வருடமே என்னை அந்த இதழுக்கு ஆசிரியராக நியமித்தார்கள். அதுவும், என் கூற்றை ஆதரித்ததை குறிப்பால் உணர்த்துகிறது. மேலதிக விவரங்களுக்கு, இரண்டாவது உசாத்துணையை நோக்குக. மேற்படி கருத்தின் நடைமுறையை வேறு ஒரு இடத்தில் விளக்கியிருக்கிறேன். யாராவது கேட்டால், தேடிப்பார்த்து சொல்கிறேன்.
இப்போதைக்கு, காலம் சென்ற டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்கள் சொன்ன மாதிரி, ‘உன்னால் முடியும் தம்பி.’ என்று சொல்லி, ‘“பாரத தேசம் என்று பெயர் சொல்லுவோம்’ என்ற திருமந்திரத்தை நமக்கு ஓதிய மஹாகவி சுப்ரமண்யபாரதியாரின் தாள் பணிந்த,
உங்கள் இன்னம்பூரான்
18 04 2013
*
Journal Article: S.Soundararajan (1989): The Craft of Audit: Asian Journal of Government Audit: Retrieved with thanks on April 18, 2013 from:http://www.asosai.org/journal1989/the_craft_of_audit.htm
*
சித்திரத்துக்கு நன்றி: http://2.bp.blogspot.com/_W8C3cRbxXT8/TGuq_KiUdaI/AAAAAAAAAow/j8qXuywnnj4/s1600/umt4.png