Showing posts with label பிரமலை கள்ளர். Show all posts
Showing posts with label பிரமலை கள்ளர். Show all posts

Saturday, October 12, 2013

பிரமலை கள்ளர்: அன்றொரு நாள்: அக்டோபர் 12:II

பிரமலை கள்ளர்:


அன்றொரு நாள்: அக்டோபர் 12:II

Innamburan Innamburan Thu, Oct 13, 2011 at 2:56 AM

அன்றொரு நாள்: அக்டோபர் 12:II
II. தந்தையின் பணி: நான் அப்பாவிடம் ஆயிரம் கேள்வி கேட்பேன். ஆங்கிலேயனின் போலீஸ் துறை தான் இந்த Criminal Tribes Act 1871 ஐ நடத்தியவர்கள்; முன்பின் சொல்லாமால் அட்டெண்டென்ஸ் எடுத்து, கைது செய்பவர்கள். கொடுமைக்காரர்கள் எனப்பட்டவர்கள். அதே ஆங்கிலேய நிர்வாஹம் கள்ளர் புனர்வாழ்வு (Kallar Reclamation) என்ற அருமையான திட்டம் ஒன்றை அதே போலீஸ் துறை மூலம், ஆனால் கூட்டுறவுத்துறை அதிகாரிகளின் வழிமுறையில் சிறப்பாக நடத்தி வந்தது. அப்பா ஒரு ஜூனியர் கூட்டுறவுத்துறை அதிகாரி. வீட்டு முகப்பு அறை தான் ஆஃபீஸ். ஆனால், அப்பா தினந்தோறும் முகாம் போய் விடுவார். இரவு பத்து மணிக்கு தான் ஆஃபீஸ். ஒரு தெலுங்கு மாமா கணக்கு எழுத வருவார். அம்மா தான் புதிய இரும்பு கலப்பை, விதை தானியம், மருந்துகள் எல்லாம் கொடுப்பார். மாலை ரேடியோவில் விவசாய அறிவுரை கேட்கக்கூட்டம்.  போலீஸ் கெடுபிடியை தாண்டி, வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட கள்ளர் பிரான்கள் கடனை அடைக்க நடு நிசியில் வருவார்கள். அவர்களுக்கு அப்பாவின் ரூல் தடியிடம் பயம். அவருக்கு இருந்த அதிகார பலம், வரவு செலவுக்கு அனுமதிக்கப்பட்டது எல்லாம், இன்று அந்தத்துறைத்தலைவருக்கே கிடையாது. லேபர் கூட்டுறவு சொசைட்டி, விற்பனை கூட்டுறவு சொசைட்டி, லேவாதேவி கூட்டுறவு சொசைட்டி, விவசாய கூட்டுறவு சொசைட்டி, சேமிப்பு கூட்டுறவு சொசைட்டி. எல்லாம் லாபத்தில். அங்கத்தினர்கள் எல்லாம் ஜெயிலுக்கு போய் வரும் பிரமலை கள்ளர்கள். அப்பா சர்வாதிகாரி. கட்டுப்படுவார்கள். கோடாங்கி தான் சூத்ரதாரி. டவாலி போட்டுக்கொள்ளாத டவாலி மாயாண்டியும், பெரியாண்டியும் குடும்ப நண்பர்கள். எனக்கு ஒரு பாடி கார்டு உண்டு. ‘...அவர் பெயர் ரவணப்பன்; ஹெட் கான்ஸ்டபிள்; வேங்கையச்சுட்ட வீரன்; எங்கள் ஹீரோ. எனக்கு நிழல் என்ற பணி. அவருடன் உடன்படிக்கை செய்து கொண்டு, அவரது சைக்கிளில் டபிள்ஸ்! அவர் கண்ணில் மண் தூவி விட்டு, அருணா ஆசஃப் அலியையும், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களையும், பார்த்து விட்டு வந்தேன். நான் காங்கிரஸ்; ஃபார்வேட் ப்ளாக் பக்கம் சாய்வு. அப்போது தான் அப்பா கடைசியாக அடித்தது...’.
இதனுடைய செய்தி: ஆங்கிலேய நிர்வாஹம் ஸர் வில்லியம் ஸ்லீமென் மேற்பார்வையில் வட இந்தியாவில் ‘தக்ஸ்’ (Thugs) என்ற கொள்ளையர் கூட்டத்தை அடக்கியதும், புனருத்தாரணம் செய்ததும் வரலாறு. அதே மாதிரி, 1947 வரை ஆங்கிலே அரசு செய்த ஆக்கப்பூர்வாமான பணிகள் பிரமலைக்கள்ளர்களுக்கு உதவியது போல, பிற்காலம், அரசியல் ஆதாயத்திற்காக எல்லா கட்சிகளும் தீட்டிய தன்னலத்திட்டங்கள் உதவவில்லை என்று நான் கருதுகிறேன். 1960களில், இந்த கள்ளர் புனர்வாழ்வு திட்டத்தைத் தணிக்கை செய்ய சென்றிருந்தேன். என்று அது போலீஸ் + கூட்டுறவு துறைகளிலிருந்து தாசில்தார்களிடம் வந்ததோ அன்றே அரோஹரா. ஜனாப் யாகூப்கான், பெரியாண்டி, மாயாண்டி, ரவணப்பன் ஆகியோரை அவரவர் இடங்களில் போய் சந்தித்தேன். அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரவில்லை என்பது கண்கூடு. விஜாரித்ததில், 1947க்கு பிறகு அவர்களுக்கு எல்லாமே சுரத்துக்குறைந்துவிட்டது தெரியவந்ததது. இன்று தமிழ்நாட்டில் Kallar Reclamation எப்படி நடக்கிறது என்று படித்தேன். எனக்கு நம்பிக்கை பிறக்கவில்லை.
இனி கள்ளர் இனம் தன்னை பற்றி: சில பகுதிகள்:
‘... கள்ளர் என்றொரு இனமுண்டு, அதற்கென்று ஒரு தனித்தன்மை உண்டு, நன்றி மறவாதவர்கள். கொடுத்த வாக்கினை காப்பாற்றுபவர்கள். முதன்முதலில் தென்னிந்தியாவில் குடியேறிய பழங்குடியினர். சோழ மன்னர்கள் வழிவந்தோர். எனவே கள்ளர் இனத்தவர் ஆட்சி பொறுப்பிலும், போர்ப்படையிளும், சோழ மன்னர்களுக்கு பணிபுரிந்தவர்கள்.காலப்போக்கில் ஆட்சி மாறி-
    முகமதியர் ஆட்சி,
    விஜய நகர ஆட்சி,
    பாமினி சுல்தான் ஆட்சி,
    முகலாயர் ஆட்சி, மராட்டியர் ஆட்சி,
    நாயக்கர் ஆட்சி,
    தக்காண சுல்தான் ஆட்சி கடைசியாக
    ஆங்கிலேயர் ஆட்சி என மாறி மாறி ஆட்சிகள் ஏற்பட்டதினால், 
இவர்கள் தங்கள் தொழிலாகிய நிர்வாகம், போர்படை தொழில் முதலிய தொழில் நிலைகளை இழக்கும்படிநேறிட்டது. மற்ற வகைத் தொழில் முறையை அறியாததால், வாழ்கையில் பல எதிர்மாறான நிலையை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. வளமான நீர் வசதியுள்ள பகுதிகளில் வாழ்ந்தோர் விவசாயத்தை ேற்கொண்டனர். மற்ற வறட்சியான பகுதிகளில் வாழ்ந்தோர் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் வாழ்க்கை நிலையை மாற்றிக் கொண்டனர். 
ஆங்கிலேயர்களையும் அவர்களது ஆட்சியையும் எதிர்த்து சுதந்திரத்திற்காக போரிட்டு, தென்னிந்திய அரசர்கள் தங்களது ஆட்சியை இழந்ததினால், தங்களது படைகளை கலைத்து விட்டனர். தென்னிந்திய அரசர்களின் படையில் போர் வீரர்களாகவும், படை தளபதிகளாகவும், பணிபுரிந்த கள்ளர் குலத்தினர் தங்கள் தொழிலை இழந்தனர். போரையே தங்கள் தொழிலாக கொண்ட கள்ளர் குல மக்கள் தங்கள் தொழிலை இழந்ததினால் பிழைக்க வழியின்றி, வயிற்று பிழைப்பிற்காக பலவிதமானதிருட்டு, கொலை, கொள்ளை முதலிய சமுதாய விரோத செயல்களில் ஈடுபட்டு, நெறிமுறை அற்ற வாழ்க்கையை மேற்கொள்ள நேரிட்டு, குற்றப்பரம்பரை சட்டத் (கைரேகை சட்டம்) தினால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இவற்றில் மிகக் கடுமையானவை குற்றப்பரம்பரை சட்டம் 1911 (Criminal Tribes Act, 1911). குற்றப்பரம்பரை சட்டம், (திருத்தியது), 1924(Criminal Tribes Act, Amended, 1924) 1911 வரை ஒன்றுபட்ட சென்னை ராஜதானியில் (Composite Madras presidency - parts of Kerala, Karanataka, Andhra and the present Tamil Nadu) இருந்து அனைத்து கள்ளர் குலத்தவர் (ஜாதி) ஒன்றாக கருதப்பட்டு, குற்றப்பரம்பரை சட்டத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அரித்துவாரமங்கலம் என்ற ஊரில் தோன்றிய தமிழ்ப்பேரறிஞரும், கொடை வள்ளலும், மூதறிஞருமான மதிப்பிற்குரிய திரு. V. கோபாலசாமி ரெகுநாத ராஜாளியார் தன் குல மக்கள் குற்றப்பரம்பரை சட்டம், 1911 ஆல் வார்த்தையால் விவரிக்க முடியாத துன்பத்தை அனுபவித்து வருவதைக் கண்டு கொதித்தெழுந்து, 1911ல் டிசம்பர் திங்களில் மேதகு ஐந்தாம் ஜியார்ஜ் மன்னர் இந்தியாவில் பேரரசராக புது டில்லியில் முடி சூட்டிக் கொள்ள வந்தபொழுது ஒரு மகஜரை அளித்து ஒன்றுபட்ட தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்த கள்ளர்களுக்கு குற்றப்பரம்பரை சட்டத்திலிருந்து தீவிர நடவடிக்கை தளர்த்தப்பட்டது. இம்மாவட்டங்களில் இருந்த கள்ளர்களே குற்றப்பரம்பரை சட்டத்திலிருந்து விடுபட்ட சீர் பழங்குடியினர் Denotified Kallar Tribe என்பதற்கு பதிலாக ஈசநாட்டுக் கள்ளர்கள் என்று (Esanattu Kallars) அழைக்கப்பட்டனர். அரசு ஆவணங்களிலும் அவ்வாறே ஈசநாட்டு கள்ளர்கள் என்றே குறிக்கப்பட்டனர். தஞ்சை, மதுரை மாவட்டங்களில், ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் 1930 வரை CT Act.   பிரகாரம் கள்ளர் இன மக்களை கைது செய்து சித்ரவதைக்கு உள்ளாகினார்கள் என்று அப்பொழுது இருந்த மாவட்ட ஆட்சியர் Block Burn என்பவர் குறிப்பிட்டுள்ளார். 1939 வரை கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தஞ்சை, திருச்சி, மாவட்டங்களில் செயல்பட்டு வந்திருக்கிறது.
எஞ்சியிருந்த மாவட்டங்களில் இருந்த கள்ளர்கள் 15.08.1947 ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர் ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு குற்றப்பரம்பரை சட்டப் (Criminal Tribes Act, 1911) பிடியிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். இவர்கள் சீர்பழங்குடி கள்ளர் (Denotified Kallar Tribe) என்று அழைக்கப்பட்டனர்.
இவ்வாறு இரத்த உறவு முறைகொண்ட (Kinship) கள்ளர் குல மக்கள் ஈசநாட்டுகள்ளர்கள் (Esanattu) என்றும் சீர்பழங்குடி கள்ளர் (Denotified Kallar Tribe) என்று இருபிரிவினர்களாக்கப்பட்டானர். பெரும்பான்மையான விபரமறியாதோறும், தங்களை மேட்டுகுடி மக்கள் (Upper Caste) என்றும் ஜாதிபாகுபாட்டில் மற்ற இனத்தவர்கள் நடுவில் காட்டிகொண்ட ஒரு சிலர் சூழ்ச்சியினாலும், இப்பெயர்கள் அரசு ஆவணங்களில் நிலைபெற்றுவிட்டன.
 மேலும் தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட முதலாவது (1972) மற்றும் இரண்டாவது (1985) பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களால் (First and Second Backward Classes Commissions) கள்ளர் இனம் G.O.No.437 S.W.D. Dated 15.05.1972, G.O.No.1564,1566, 1567 Dated 30.07.1985, G.O.No.242 B.C.W. N.M.P and S.W.D Dated 28.03.1989 -ன்படிகீழ்க்கண்டவாறு, ஒன்றாக இருந்த , கள்ளர் ஜாதியினர் சிதறடிக்கப்பட்டனர்.
ஈசநாட்டு கள்ளர்
கள்ளர் குலத் தொண்டைமான்
பிற்பட்ட வகுப்பினர்
(Backward Class)
தொண்டமான்
மிகவும் பிற்பட்ட வகுப்பினர்
(Most Backward Class)
கந்தர்வகோட்டை கள்ளர்
கூத்தபார் கள்ளர்
(கூத்தபால் கள்ளர் அல்ல)
பெரியசூரியூர் கள்ளர் பிறமலைக் கள்ளர்
சீர் மரபினர்
(Denotified Communities)ெட்டில்மெண்ட் கள்ளர்கள்
எந்தபிரிவிலும் சேர்க்கபடாதவர்கள்
செட்டில்மென்ட் கள்ளர்கள் நான்குவகையாகப் பிரிக்கபட்டுள்ளனர்.

i. அசீஸ் நகர் செட்டில்மெண்ட் (Aziz Nagar Settlement) விழுப்புரம் மாவட்டம்.

ii. பம்மல் செட்டில்மெண்ட் (Pammal Settlement)பல்லாவரம், தாம்பரம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், இது பசும்பொன் நகர் செட்டில்மெண்ட் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

iii. பிரிஸ்லி நகர் செட்டில்மெண்ட் (Brezlee Nagar Settlement)பெரம்பூர், ஓட்டேரி, சென்னை மாவட்டம்.

iv. அந்தமான் செட்டில்மெண்ட் (Andaman Settlement)
இது மத்திய அரசு நிர்வாகத்தில் உள்ளது.
இவர்கள் எந்த தொகுப்பிலும் வராமல் நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர்.

4. 1979 -ல் சீர் பழங்குடியினர் (Denotified Tribe) என்று இருந்த கள்ளர் வகுப்பினரை G.O.No.1310 S.W.D. Dated 30.07.1979 -ன் படி சீர்மரபினர் (Denotified Community) என்று மத்திய அரசின் பரிந்துரைப்படி தமிழக அரசு மாற்றிவிட்டது.
இவையாவும் கள்ளர் ஜாதி மக்களை ஜாதி மக்களை கலந்து ஆலோசிக்காமல் இழைக்கப்பட்ட அநீதியாகும்.

5. கள்ளர் ஜாதியினரை திருத்தி நல்வழிப்படுத்தி முன்னேற்றம் அடையச் செய்ய வேண்டும் என ஆங்கில அரசு இந்திய சுதந்திரத்துக்கு முன்- இந்திய அரசுச்சட்டம், 1919 (Government of india Act, 1919) -ன்படி கள்ளர் சீர்திருத்த திட்டத்தை (Kallar Reclamation Scheme, 1920)-ல் அமல்படுத்தியது அதன்படி தஞ்சாவூரிலிருந்து ஆரம்பித்து , ஆழிவாய்க்கால், ஒரத்தநாடு, பாப்பாநாடு, கோணக நாடு, (கோனூர் நாடு) , ஆதனகோட்டை, கந்தர்வகோட்டை பகுதிகளின் வழியே புதுக்கோட்டை, விராலிமலை (புதுகை மாவட்டம்) சென்று கொட்டாம்பட்டி, நத்தம், சிறுமலை, செம்பட்டி, திண்டுக்கல், அழகர் கோவில், அலங்காநல்லூர், நிலக்கோட்டை, சோழவந்தான் மற்றும் உசிலம்பட்டி, வாடிபட்டி, திருமங்கலம், ஆண்டிபட்டி, சேடப்பட்டி, கம்பம், உத்தமபாளையம் ஆகிய பிரமலை கள்ளர் பகுதிகள் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டது. காலபோக்கில் கள்ளர் இனத்தில் வசதிபடைத்தஒரு சில குடும்பங்கள், மற்ற பெரும்பாலான கள்ளர் இன ஏழை மக்களை தங்களின் விவசாய கூலியாகவும், கொத்தடிமைகளாகவும் வைத்திருக்க என்னி, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கள்ளர் சீர்திருத்த பள்ளிகளையும் கடன் வழங்கும் சங்கங்களையும், மாணவ விடுதிகளையும், மாவட்ட் உயர்நிலை பள்ளிகளுடன் (District Board High Schools) இணைக்க ஏற்பாடு செய்தனர். பிறகு அவைகள் அரசினர் உயர்நிலைபள்ளிகளாக (Goverment High Schools) மாற்றப்பட்டன. எஞ்சியிருப்பது தஞ்சாவூரில் உள்ள செல்வராஜ் உயர்நிலைப்பள்ளி (Selvaraj High School) கணபதி நகர் மட்டுமே. இதுவும் இப்பொழுது தனியார் பள்ளியாக மாறிவிட்டது. இந்த வசதிபடைத்த ஒரு சில கள்ளர் நிலச்சுவான்தார் குடும்பங்களின் இவ்வகை செயல்களினால் பெரும்பாலான கிராமங்களில் உள்ள ஏழை கள்ளர்கள் சுதந்திரத்துக்கு முன்பும், பின்னும் அடையக்குடிய அரசு கல்வி சலுகைகளையும், மற்ற முன்னேற்ற சலுகைகளையும் இழக்க நேரிட்டது. ஆனால் (Kallar Reclamation Scheme, 1920) -ன் படி ஆரம்பிக்கப்பட்ட பள்ளிகள், பிரமலைப்பகுதிகளான மதுரை, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் உள்ள உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, சேடப்பட்டி, வத்தலக்குண்டு பகுதிகளிலும் உள்
ளன. அவை இன்று அரசின் உதவியினை பெறுகின்றன....
மேற்படி கூறுபவர்:
டாக்டர் அ. சீனிவாசன் வன்னியர் M.D.D.C.H
தலைவர்
தமிழ்நாடு கள்ளர் சங்கம். 
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வை செய்தவரின் பெயர்: டாக்டர் பாண்டியன். அதை பற்றி, பிறகு தான் எழுதவேண்டும். இதே மாதிரி பிரமலை கள்ளர்களின் மேன்மை கலாச்சாரங்களை பற்றி ஒரு ஸ்வீடன் நாட்டு ஆய்வாளர் எழுதிய ஆய்வு நூல் ஒன்று படிக்கக் கிடைத்தது. தற்பொழுது காணவில்லை. 
நான் சிறு வயதில் கவனித்து, கணித்து எழுதியதற்கும், அந்த இனத்தலைவர் ஒருவர் இன்று சொல்வதற்கும் ஒப்புமை உள்ளதாக எனக்கு தென்படுகிறது. அப்படியானால், படிப்பினை என்னவென்று நீங்களே சொல்லலாம்.
இன்னம்பூரான்
12 10 2011
உசாத்துணை:

Geetha Sambasivam Thu, Oct 13, 2011 at 5:10 AM
மிக்க நன்றி.  பல தெரியாத செய்திகள்.

2011/10/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: அக்டோபர் 12:II
டாக்டர் அ. சீனிவாசன் வன்னியர் M.D.D.C.H
தலைவர்
தமிழ்நாடு கள்ளர் சங்கம். 
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வை செய்தவரின் பெயர்: டாக்டர் பாண்டியன். அதை பற்றி, பிறகு தான் எழுதவேண்டும். இதே மாதிரி பிரமலை கள்ளர்களின் மேன்மை கலாச்சாரங்களை பற்றி ஒரு ஸ்வீடன் நாட்டு ஆய்வாளர் எழுதிய ஆய்வு நூல் ஒன்று படிக்கக் கிடைத்தது. தற்பொழுது காணவில்லை. 
நான் சிறு வயதில் கவனித்து, கணித்து எழுதியதற்கும், அந்த இனத்தலைவர் ஒருவர் இன்று சொல்வதற்கும் ஒப்புமை உள்ளதாக எனக்கு தென்படுகிறது. அப்படியானால், படிப்பினை என்னவென்று நீங்களே சொல்லலாம்.
இன்னம்பூரான்
12 10 2011
உசாத்துணை:

Friday, October 11, 2013

பிரமலை கள்ளர்:அன்றொரு நாள்: அக்டோபர் 12:I


அன்றொரு நாள்: அக்டோபர் 12:I

Innamburan Innamburan Wed, Oct 12, 2011 at 6:13 PM

அன்றொரு நாள்: அக்டோபர் 12:I
I. பாமர வரலாற்றில் ஒரு சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை பாரபக்ஷமற்றி, ஒரு நடுவு நிலையிலிருந்து உன்னித்து கவனித்தோமானால்,  ஆழப்புதைந்திருக்கும்/ புதைக்கப்பட்டிருக்கும் உண்மைகள் புதிய படிப்பினைகளை தரலாம். அதற்கு ஆய்வுகள் முக்கியம். நினைவலைகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியவையே. ஒரு சோதனை முயற்சி, இங்கே. பிரமலை கள்ளர் சமுதாயம் தமிழ் நாட்டில் தஞ்சை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில், பல உட்பிரிவுகளில், நெடுங்காலமாக, தனித்தும், பெரிய சமுதாயத்துடன் இணைந்தும் வாழ்ந்து வருகிறார்கள். மதுரை மாவட்டத்தில், செக்கானூரணியில் 4-5 வயதுகளிலும், உசிலம்பட்டியில் 9-13 வயதுகளிலும் வசித்ததும், கள்ளர்களுக்கு என்று நடத்தப்பட்ட பள்ளியில் ஓரிரு பிராமண மாணவர்களில் ஒருவனாக இருந்து படித்ததும், என் தந்தை அந்த சமுதாயப்பணியில், ஒரு அரசு உத்யோகஸ்தனாக, இருந்ததும், நினைவில் இருப்பதாலும், பிற்காலம் இன்று வரை அவர்களை பற்றி விருப்பத்துடன் படிப்பதாலும், இன்று பிரமலை கள்ளர்களை பற்றி ~ இரு பகுதிகளில். 
இந்தியாவில் தலைமுறை தலைமுறையாகத் திருடுபவர்கள் என்று பிரிட்டீஷாரால் சூடு போடப்பட்ட சமுதாயங்களில், இது ஒன்று. அதனால், தலை குனிவு; நாள் தோறும், ஆண்மக்கள் கிராமத்தில் இரவு தங்கவேண்டும். ஆஜர் என்று நேரடி சாட்சியம் தரவேண்டும் என்ற கெடுபிடிகள்: இதன் பின்னணியாகிய கிரிமினல் பழங்குடிகள் கட்டுப்பாடு சட்டம் (Criminal Tribes Act 1871) அமலுக்கு வந்த தினம்: அக்டோபர் 12, 1871. விடுதலை வந்த பின் மாஜி கிரிமினல் பழங்குடிகள் (denotified tribes) என்ற நாமகரணத்தால், அவர்கள் பெரிய சமுதாயத்துடன் கலந்து விடமுடியாமல் தனிமைப்படுத்தப்பட்டனர் அதனால் தான் ‘Habitual Offenders Act 1952 ‘ (மட்டமான தலைப்பு.) அமலுக்கு வந்தது என்று நான் நினைக்கிறேன். அவற்றில் 192 பழங்குடி சமுதாயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. பிறகு என் கருத்தை சொல்கிறேன்.
கள்ளர் பிரான்கள்: அவர்களின் சொத்து மானம் பார்த்த பூமி. அளவு கடந்த ரோஷம். அதற்கு ஒரு படி மேல், சினம். அதற்கும் ஒரு படி மேல், நகைச்சுவை. யாராவது ஒரு பிரமுகரை பழி வாங்கவேண்டுமானால், கட்டிலோடு அவரை லாகவமாகக் கடத்தி, 20-30 மைல் தொலைவு கடத்தி, ‘தொப்’ என்று கிடத்திவிடுவார்கள். தூங்கினவன் எழுந்திருக்க மாட்டான். அத்தனை லாகவம். ஆட்டுமந்தைகள், இவர்கள் கூப்பிட்டால் வந்து விடும். அத்தனை வசீகரம்!. போலீஸ் போனால் பிரயோஜனமில்லை. ராவோடு ராவாக, கிராமமே விருந்துண்டு, தோல்களை வேறு கிராமத்தில் புதைத்து விடுவார்கள். ஒரு கதை: திருமலை நாயக்கன் ராஜாவுடன் ஒரு கள்ளர் தலைவர் பந்தயம். ராணியை முடியை பின்னிக்கொள்ளாமல் இன்று படுத்துக்கொள்ளச்சொல்லுங்கள். பிறகு பாருங்கள். ராவோடு ராவாக, ஒரு உடும்பின் வாலை பிடித்து மலையேறி ராணியின் முடியை இவர் பின்னிவிட்டதாகச் சொல்வார்கள்.
பள்ளி நினைவுகள்: செக்கானூரணி: த்ரீ ரிங்க் சர்க்கஸ் மாதிரி ஒரே அறையில்/ஹாலில்/திண்னையில்/ மரத்தடியில் (எல்லா வர்ணனையும் தகும்!) ஐந்து வகுப்புகள், ஒரே ஆசிரியை, கூச்சல், பாடம், ஆட்டம், பாட்டம், விளையாட்டு, வானரம், நாய், பூனை, வரத்துப்போக்கு. நான் ஏதோ உயர்பிறவியாக நடமாடியதும், நினைவில் உள்ளது. லீலா டீச்சர் 25 வருடங்களுக்கு பிறகு வந்த போது, நான் விஷமக்காரன் என்று கேலி செய்தார். சமத்துவம் இருந்ததை உணர்த்தினார். 
பள்ளி நினைவுகள்: உசிலம்பட்டி: கள்ளர் இன மாணவர்களுக்கான ஜில்லா போர்ட் பள்ளியில் இனபேதம் துளிக்கூட இல்லை. அவர்களுக்கு, உணவு, ஆடை, தங்குமிடம், கல்வி இலவசம். தாமதமாக பள்ளியில் சேருவதால், எனக்கும் மற்றவர்களுக்கும் வயது வித்தியாசம் அதிகம். பள்ளியில் சுதந்திரதாகம் வலுத்து இருந்தது. ‘...ஜூனியர் வகுப்பில் இருந்தாலும், என்னை அந்த பிரமலை கள்ளர் மாணவர்கள் தலைவனாக, ஏன் ஏற்றுக்கொண்டார்கள் என்று, இன்னும் புரியவில்லை. ஹெட்மாஸ்டர் யாகூப்கான், அண்டைவீடு; அவருக்கு நான் செல்லப்பிள்ளை. கண்டும் காணாது போய் விடுவார். அன்றாடம், காலைப்பிரார்த்தனைப்பாடல், முதல் நாள் தான், தேர்ந்தெடுப்போம். ஒரு நாள், என் முடிவின் படி, ‘வந்தே மாதரம்’ பாடினான், ஒச்சத்தேவன். ஹெட் மாஸ்டர் ஆட்சேபிக்கவில்லை; அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டார், தற்காலிகமாக. அவரிடத்திற்கு வந்த அப்பாவின் நண்பர் சிவசுப்ரமணிய ஐயரை, அவர் வீட்டுக்கு வந்து கெஞ்சிய பிறகும், நாங்கள் எதிர்த்தோம்; பள்ளியில் முதல் முறையாக, ஸ்ட்ரைக் செய்தோம், யாகூப் கான் அவர்களை பதவியில் அமர்த்தும் வரை. எனக்கு டி.ஸி. கொடுக்கவேண்டும் என்ற ஆணையைப் புறக்கணித்தார். இது எல்லாம் தினத்தூது என்ற இதழில் வந்ததாகச் சொல்வார்கள்...’மாணவர்களாகிய நாங்கள் கெடுபிடிகளால் கட்டிப்போடப்படவில்லை. 
என் பாடு வேறு:அம்மா எழுதியது:’...இத்தனை வருஷத்துக்குள் இரண்டாவது யுத்தம் நடக்கும்போது என் பெரிய பிள்ளை காங்கிரஸ் கஷ்ஷி(ட்சி)யில் சேர்ந்து ஸ்கூலில் மீட்டிங் நடத்தினான். பிறகு ஊர்வலம் வந்தார்கள். அப்போது மீட்டிங் பேசினதால், இவன் ஊர்வலம் வர ஏற்பாடு இவன் தான் செய்தான் என்று என் பிள்ளையை அரஸ்டு செய்வதாகச் சொன்னார்கள், அதற்குள் டீ எஸ் பீ  கியாம்பு உசிலம்பட்டி வந்திருந்தார். அவர் உடனே என் புருஷனை வரும்படி எங்கள் வீட்டிற்கு என் புருஷனுக்குத் துணையாக வேளப்பன் என்று ஒரு போலீஸ்கார கான்ஸ்டபிள் இருந்தான். சென்னை பீ சூப்ரண்டு அவனை அனுப்பினார், வீட்டுக்கு. அப்போ உடனே என் புருஷன் டீ எஸ் பீ அவர்களைப் போய் பார்த்தார், அவர் உன் பிள்ளை தான் மீட்டிங்கில் பேசினான். இனி அது நடக்கக் கூடாது என்று உன் பிள்ளையிடம் சொல்லி வை என்று சொல்லி விட்டு உன் பிள்ளை என்று தெரிந்தேன், அரஸ்டு செய்யாமல் விட்டு விட்டேன். உனக்கு தான் வேலை போகும். அதனால் உன் பிள்ளையைக் கண்டித்து வை என்று சொ(ன்)னார்...’
(தொடரும்)
kattpix1.jpgஇன்னம்பூரான்
12 10 2011

கி.காளைராசன் Wed, Oct 12, 2011 at 6:34 PM

ஐயா “இ“னா அவர்களுக்கு வணக்கம்.


>
> இந்தியாவில் தலைமுறை தலைமுறையாகத் திருடுபவர்கள் என்று பிரிட்டீஷாரால் சூடு
> போடப்பட்ட சமுதாயங்களில், இது ஒன்று. அதனால், தலை குனிவு; நாள் தோறும்,
> ஆண்மக்கள் கிராமத்தில் இரவு தங்கவேண்டும். ஆஜர் என்று நேரடி சாட்சியம்
> தரவேண்டும் என்ற கெடுபிடிகள்: இதன் பின்னணியாகிய

திருச்சியில் இராபர்ட் கிளைவின் குதிரையைக் கள்ளன் ஒருவன் களவு
செய்தததால் இந்தத் தண்டனை?

கள்ளர் கள்வரோ?
அல்லது
கள்ளர் காவலரா?
தாங்கள் அறிந்த நிகழ்வுகளை எங்களுக்கு இன்னும் அறியத்தர வேண்டுகிறேன் ஐயா,

தங்களது நினைவாற்றலுக்கு நன்றி
அன்பன்
கி.காளைராசன்

prakash sugumaran Wed, Oct 12, 2011 at 6:44 PM

அருமையான பதிவு. பிரமலை கள்ளர்கள் தாந்திரீகத்தில் ( மந்திரம், மாயம் இல்லாத ) கை தேர்ந்தவர்கள். அதிகார வர்க்கத்தின் பல அடக்குமுறைகளையும் கடந்து எங்கெங்கோ பிரிந்துள்ள அவர்கள் இன்றைக்கும் செய்யும் செயல்கள் நம்பவே முடியாத, கற்பனைக்கு அப்பார் பட்டவை.

இன்றைக்கு தமிழக காவல்துறையின் கண்களில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருக்கும் அத்தகைய ஒரு நபரின் உறவினரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. குற சிவா என்பது அந்த கள்வனின் பெயர். சென்னை, வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி மற்றும் பெங்களூரு, ஆந்திரத்தின் சித்தூர் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருப்பவன். இதுவரை அவன் கொள்ளையிட்ட மொத்த மதிப்பை கணக்கிட்டால் சில நூறு கோடிகளை தாண்டும். என்றாலும் அவனது தினசரி இரவுத் தூக்கம் ஏதோ ஒரு மரத்தின் கிளையில். நூற்றுக்கும் மேற்பட்ட கொள்ளைகளில் இதுவரை ஒருவரை கூட கொன்றதில்லை. சிக்கிக்கொள்ளும் நிலையில் அவனும் அவன் கூட்டாளிகளும் செய்யக் கூடிய அதிகபட்ச செயல் குண்டாந்தடியால் தலையில் தட்டி ரத்த காயம் ஏற்படுத்துவது.

காவல்துறை கணக்கெடுப்புப் படி அவனுக்கு 27  மனைவிகள். இதில் இறந்து போன முதல் மனைவி ஒருத்தியை தவிர மற்ற எல்லாரும் ஏற்கனவே விதவைகள் அல்லது கணவனால் கை விடப்பட்டவர்கள். பல மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட கள்ளர் குடும்பங்கள் இவனை நம்பியுள்ளன. உண்ண உணவு, உடுக்க உடை, கல்வி, திருமணம் ஆகியவற்றை தவிர வேறு எந்த தேவைக்கும் பண உதவி செய்ய மாட்டான். பல சமயங்களில் களவு போன வீட்டில் உள்ளவர்களுக்கே நீண்ட நாள் கழித்துதான் தெரியும் களவு போன விஷயம். இவனை வளைத்துப் பிடிக்க கிட்டத்தட்ட் 300 தனிப்படை காவலர்கள், மூன்று மாநிலங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட உயரதிகாரிகள் இரவு பகலாக பல ஆண்டுகளாக முயன்று வருகிறார்கள். 

இப்போதைக்கு கருநாடக மாநிலம் மங்கலூருவில் உள்ளதாக தகவல்.
]

Innamburan Innamburan Wed, Oct 12, 2011 at 7:28 PM
To: mintamil@googlegroups.com
ப்ரகாஷ் சுகுமாரன் ஸ்பெஷல்: மீள் பதிவு:
***
“தாம் தீம் தூம்’ னு  ராசா  வாராறு! 
                     சுத்துப்பட்ட சனங்கெ எல்லாம் சலாமு
பூம் பூம்ம் னு ஊதறாக, கொம்பு!
                       மத்தப் பட்டணத்து மக்களே, கேளுங்க.”

நேரம் ஆச்சே, தலையை சாய்க்கலாம் என்று விளக்கு அணைச்சேனா, கண்ணின் முன் வந்து நின்றார், சந்தனதேவன். உசிலம்பட்டியில் ஊரோரம் ஒரு காட்டாறு, மணலா ஓடும், வருஷம் முக்காலும். ஆனாலும், மேக்கத்திலே மழை பேஞ்சா, பஞ்சத்தில் அடிப்பட்ட பனாதை போல, ஓடியாரும் தண்ணி. வேடிக்கை பாக்கப்போவோமா? நொறையா பொங்கி பொங்கி போகும். கண்டதையும் அடிச்சிக்கிட்டு போவும். மரமும், செடியும், கிளையும் மொதந்துக்கிட்டே போவும். ஆடும், மாடும் பாத்தானாம், மாயாண்டி.  அடிச்சு விட்றான், பொச்சத்தேவன். பொணம் மிதந்து வந்தது, அப்டீன்னு.

கற்பனை என்றால், இப்படி தான் காதும், மூக்கும் வைத்துக் கொண்டு வரும். வழக்கம் போல, இது நிற்க. சின்ன வயதில், எங்களுக்கு ஹீரோ, சந்தனத்தேவன். வெள்ளைக்காரனுக்கு டேக்கா கொடுத்த கொள்ளைக்காரன். சொத்துக்காரன் வீட்டிலேருந்து கொத்து கொத்தா எடுத்து ஏழை பாழைக்கு கொடுப்பானாம். காட்டிலே இருப்பான்; ஆனையோட குஸ்தி போடுவான், புலியோடு விளையாடுவான், குதிரை சவாரி, ராஜா தேசிங்கு (பாடத்தில் வந்தவர்.) வராப்லே இருக்கும், கம்பீரமா.
இது எல்லாம் ஒரு கூட்டுக்கற்பனை. அவரை பற்றி நாட்டுப்பாடல்கள் பல இருந்தன. ஜாலியாப்பாடுவோம். ஒரு வரி கூட ஞாபகத்தில் இல்லை. அதான், மேலே உள்ள ‘பாட்டு?’ இப்போ இட்டுக்கட்டினது. அதை விடுங்க.

தேவர் என்னமா வாராறு? அதை பாருங்க. உறக்கத்துக்கு, உறுதுணையாக, அகப்பட்ட நூல், கி.வா. ஜகந்நாதனின் ‘மலை அருவி’. நாட்டுப்பாடல் என்றாலே. நா. வானமாமலை, லூர்து, கி.வா.ஜ. போன்றோர் நினைவில் வருவார்கள். பர்சி மாக்வீன் ஐ.சி.எஸ். கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கான நாட்டுப்பாடல்களை தொகுத்து, சென்னை பல்கலைக்
கழகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்தவரை அறியாதவர் பலர். ( அவை உள்ளனவா என்று அறிய அவா.) அதில் ஒரு பகுதியை சரஸ்வதி மஹால் பிரசுரித்தது. கி.வா.ஜ. 2676 பாடல்களை தேர்ந்து எடுத்தார், ஆய்வு செய்ய. அவற்றில் ஒன்றின் தலை மாந்தர், சந்தனத்தேவன். அது கண்ணில் பட, எங்கள் ஹீரோ, சந்தனத்தேவனை பற்றி ஒரு பாடலை போட துணிந்தேன்.

“எல்லாரும் கட்டும் வேட்டி - ஏலங்கிடிலேலோ
 ஏழைக்கேற்ற மல்லுவேட்டி - ஏலங்கிடிலேலோ
 சந்தனம் கட்டும் வேட்டி - ஏலங்கிடிலேலோ
 சரியான சரிகை வேட்டி - ஏலங்கிடிலேலோ
 
எல்லாரும் படுக்கும் பாயி - ஏலங்கிடிலேலோ
ஏழைக்கேற்ற கோரைப் பாயி - ஏலங்கிடிலேலோ
சந்தனம் படுக்கும் பாயி - ஏலங்கிடிலேலோ
சரியான ஜப்பான் பாயி - ஏலங்கிடிலேலோ

எல்லோர்க்கும் போலீஸ் என்றால் - ஏலங்கிடிலேலோ
ஏழைக்கேற்ற நடுக்கந்தான் - ஏலங்கிடிலேலோ
சந்தனத்திற்குப் போலீசென்றால் - ஏலங்கிடிலேலோ
சரியான சக்காந்தமாம் -ஏலங்கிடிலேலோ.”

‘சட்’ என்று இது கிடைத்ததிலே - ஏலங்கிடிலேலோ
‘தட்’ என்று இங்கே போட்டுட்டேன் -ஏலங்கிடிலேலோ


நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
05 10 2010
***





Geetha Sambasivam Thu, Oct 13, 2011 at 5:14 AM

இதை முதலில் படிச்சிருக்கணும். அருமையான நினைவலைகள்.
2011/10/12 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொரு நாள்: அக்டோபர் 12:I
(தொடரும்

Geetha Sambasivam 
ஆச்சரியமான தகவல்.

Geetha Sambasivam Thu, Oct 13, 2011 at 5:19 AM

சட்’ என்று இது கிடைத்ததிலே - ஏலங்கிடிலேலோ
‘தட்’ என்று இங்கே போட்டுட்டேன் -ஏலங்கிடிலேலோ//
 
ஏலங்கிடிலேலோ!


கி.காளைராசன் Thu, Oct 13, 2011 at 4:31 PM

...வேலை நேரம் ஆச்சே, தலையைத் திருப்பக்கூட முடியவில்லையே என்று கணினியை
போட்டேனா,   கண்ணின் முன் வந்து நின்றார்,
பார்த்தால், சந்தனதேவன்...
--
அன்பன்
கி.காளைராசன்