Wednesday, November 4, 2009

அம்மா சொல்படி ராஜூ: பராக்! பராக்!

அம்மா சொல்படி ராஜூ: பகுதி 6: 22 10 2009

(மாப்பிள்ளை வரார்! பராக்! பராக்!)

அவர்களும் ஜாதகம் பொருத்தம் லட்டர் போட்டுவிட்டு, பையனை பெண்ணைப் பார்க்கும்படி பையனுக்கு லட்டர் போட்டிருக்கிறேன். அதன்படி பையன் வந்து பெண்ணைப் பார்த்து லட்டர் போடுவான். அதற்கு மேல் பேசிக்கொள்ளலாம். அதன்படி பையன் பெண்ணைப் பார்த்துப்போய் (?) அவர் அப்பாவிற்கு லட்டர் போட்டானாம். என்னவென்றால், பெண் நன்றாகயிருக்கிறது. 22 ஆனால், அம்மைதழும்பு இருக்கிறது என்று எழுதியிருந்தானாம். அதற்கு பையனுடைய அம்மா 23 பரவாயில்லை என்றும் லட்டர் பிள்ளைக்கு எழுதிவிட்டாராம். அந்த சமயத்தில் என் அக்காவுக்கு இரண்டாவது குழைந்தை பிறந்து இறந்துவிட்டது. மறுபடியும் இன்னம்பூர் 24 சம்பந்திக்கு25 என் அப்பா லட்டர் போட்டு, பையன் பெண்ணை பார்த்துவிட்டு போனான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள். அதன்படி செய்கிறேன். இந்த லட்டருக்கு உடனே லட்டர் போடும்படி ஒரு லட்டர் போட்டார்? அவர்கள் என்ன எழுதினார் என்றால் நாங்களும் பெண் பார்க்கவேண்டும். நீங்கள் கும்பகோணத்தில் வந்தால் நாங்கள் பெண் பார்க்க செளகரியம் என்று லட்டர் போட்டுவிட்டார்.

அதனால் அப்பா என்ன செய்வது என்று கவலை இருந்தாலும், கும்பகோணம் தன் மாமா பிள்ளை ஆராவமுதுவிற்கு லட்டர் போட்டார். இன்னம்பூரிலிருந்து சம்பந்தி சுவாமிகள் நாங்களும் பெண் பார்க்கவேண்டும். நீங்கள் கும்பகோணத்தி/ர்கு வந்தால் நாங்களும் பார்க்கவேண்டும் என்று சொல்லி லட்டர் போட்டிருக்கிறார். அதனால் உன் வீட்டில் தங்கி (அடித்தல் திருத்தல்) பெண் பார்க்க செய்யலாம் என்று நினைக்கிறேன். அதனால் உனக்கு லட்டர் போட்டிருக்கிறேன். நீ உடனே எனக்கு பதில் போடு.; எதிர்பார்க்கிறேன் என்று அவருக்கு என் அப்பா லட்டர் போட்டார். அவர் உடன் லட்டர், தாராளமாக வரலாம்; எப்போது வருவீர்கள் என்று எழுது. (நா)ங்கள் நான் ஸ்டேஷனுக்கு வருகிறேன் என்று பதில் போட்டுவிட்டார். உடனே என் அப்பா, அம்மா, நான், தம்பி எல்லோரும் கும்பகோணம் போய் அவர்கள் வீட்டில் தங்கினோம். மறுநாள் சாயங்காலம் இன்னம்பூரிலிருந்து பையன் அப்பா, அம்மா, மற்ற எல்லாரும் வந்து பெண் பார்த்துவிட்டுப் போனார்கள். நாங்கள் மறுநாள் திருப்பதி போய் தம்பிக்கு பூணூல் போட்டுக்கொண்டு26 கும்பகோணம் (போய்) முன்போல் அவர்கள் வீட்டில் தங்கி என் கல்யாணத்தை நிச்சியம் செய்தார்கள். சம்பந்தி அவர்கள் கையில் வரதக்ஷிணை என்று 500 ரூபாய் கொடுத்து மற்றதெல்லாம் என் அப்பா செய்வதாக சொல்லிவிட்டார். மறுநாள் கடைக்குப் போய் பித்தளை, வெள்ளிப்பாத்திரம், நகைகள், திருமாங்கல்யம்27உள்பட வாங்கிகொண்டு நேராக காரைக்குடி வந்தோம். அந்த சமயத்தில் உள்ளூரில் இருந்த அத்தை மாமியார் இறந்துவிட்டார் என்று என் அத்தை கல்யாணத்திற்கு வரமுடியவில்லை. ஆனால் எனக்கு விபவ வருஷம் ஆனி மாஸம் 8ம்தேதி 28 முஹூர்த்தம் வைத்தார்கள்.

அதற்கு கல்யாண பக்ஷணம் செய்வதற்கு, என் அப்பாவுடைய தங்கையும், பாட்டியும் தான் செய்தார். ஆனால், என் அம்மாவுடைய தங்கை சிறிய வயதில் விடோவாகப் (widow) போய்விட்டாள். ஆனால், அவளுக்கு நாங்கள் தான் குழந்தை. அதனால், அவள் தான் என்னுடைய கல்யாணங்களுக்கு 29 உதவி செய்வாள். கல்யாணம் நெருங்கிவிட்டது. ஜான்வாஸத்தன்று 30 இன்னம்பூரிலிருந்து எல்லாரும் வந்து விட்டார்கள். ஆனால், மாப்பிள்ளை ஜான்வாஸத்திற்கு வருவது லேட்டாகி விட்டது. அதற்குள் என் அப்பாவிற்கு கவலையாப் போய்விட்டு...

22. அன்றும், இன்றும் பெண் என்றால் அஃறிணை தான்! இத்தனைக்கும், பெண்களை பன்மையில் குறிக்கும் பண்பை, சேக்கிழாரே துவக்கி வைத்தார்.

23. இவரை பண்பின் சிகரம் என்று ருக்மிணி சொல்வார். கண்ஜாடையிலேயே குறிப்புணர்த்துவாராம். ருக்மிணிக்கு பலவிதங்களில் பாதுகாப்பு அளித்தாராம். நான் பிறக்கும் முன் புற்றுநோயால் இறந்துவிட்டார். போஃட்டோ உள்ளது. பதித்திருக்கிறேன்.

24. இன்னம்பூர் கும்பகோணத்திலிருந்து ஸ்வாமிமலை போகும் வழியில் உள்ளது. பெருமாள் கோயில் சிறியது; எழில் மிகுந்தது. சிவன் கோயில் பாடஸ்தலம். கஜபிருஷ்ட விமானம் சிறப்பு. ஹிந்து இதழ் குடும்பமும், இந்த மண் தான்.

  1. இவர் தான் ‘இன்னம்பூர் சிங்கம்’. இவரை நான் நன்கு அறிந்திருந்ததால், தனிக்கட்டுரை

அனுபந்தத்தில். ஊர் பட்டாமணியம். வைத்தது சட்டம் என்று வாழ்ந்த தடாலடி, ஆனால், ஜாலி மனிதர். இந்த நூலின் கதாநாயகர் இவரை விட வயதில் பெரியவர். அவர் முன்னிலையில் இவர் அடக்கி வாசிப்பது போல் பாவ்லா காட்டுவார். மற்றபடி ‘டோண்ட் கேர்’ மாஸ்டர். இந்த வம்சாவளியில் இன்னொரு ‘டோண்ட் கேர்’ மாஸ்டரும்னு பேசிப்பா இவர் பைய்ட் பைப்பைர்; செல்லும் இடமில்லாம், ஒரு சிறுவர் குழாம் தொடரும். தீவிர பிரிட்டீஷ் விசுவாசி.. ஆனால், மஹாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டபோது, குழந்தை போல் விக்கி விக்கி அழுதார்.

  1. திட்டம் போடுவதிலும், சிக்கனத்திலும், தாத்தாவிற்கு ஈடு, இணை கிடையாது .

  1. நாண்
  2. என்னே ஞாபகசக்தி! என்னே தமிழ் நடை! யாராவது இங்கிலீஷ் தேதி சொல்லுங்களேன்.

  1. சுப காரியங்கள், லெளகிகம், பக்ஷணங்கள், மேற்பார்வை எல்லாம், அவருக்கு அத்துபடி. எப்படி தான் அந்த காலத்து மனிதர்கள் ‘தன் கடன் பணி செய்து கிடப்பதே என்று இருந்தார்களோ!

  1. திருமணத்திற்கு முந்திய நாள். மறுபடியும் நிச்ச்சியதார்த்தம், ஊர்வலம் எல்லாம் அன்று தான். விமரிசையாக, மேளதாளங்கள், பேண்டு வாத்தியம், காஸ்லைட், வெடி, மத்தாப்பு, ஆண்கள் முன்னாலும், பெண்கள் பின்னாலும். கோலாஹலம் தான். மாப்பிள்ளையை ஊருக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பு. ஸைடு அடிக்கறத்துக்கும்!

(என்னடாது ...!)

No comments:

Post a Comment