Saturday, November 7, 2009

அம்மா சொல்படி ராஜூ: மின்னல் வேகம்: 22: 07 11 09

அம்மா சொல்படி ராஜூ: (மின்னல் வேகம்): பகுதி 22: 7 11 2009

(புதுக்கோட்டை அழைக்க)

(புதுக்கோட்டைக்கு வந்து விட்டோம்...) ... ஆனால் என் புருஷன் மாத்திரம் குறைந்த பக்ஷம் பதினைந்து வருஷம் ஓட்டலில் சாப்பிட்டு வந்தார்.84 இதற்கிடையில் காரைக்குடி போய் பார்க்கலாம் என்று போனேன். அங்கு என் தம்பிக்கு மூன்றாவது பெண் இருந்தது. அது திடீரென்று இறந்து விட்டது. என் அப்பாவிற்கும் அது ஒரு வருத்தம். அந்த சமயத்தில் என் அப்பாவிற்கும் உடம்பு சரியில்லாமல் இருந்தது. பிறகு அவருக்கு உடம்பு நன்றாகத் தேவலை. புதுக்கோட்டையில் குழந்தைகளை வைத்துக்கொண்டு இருந்தேன். நமக்கு குழந்தைகள் படிப்பு தான் முக்யம். ஆனால் ஸ்ரீகாரம் (தத்து) கொடுத்த பையனுக்கு கொஞ்சம் நிலம் உண்டு. அதில் நெல் வரும். அதை வைத்துக்கொண்டும், வீட்டில் இரண்டு வீடு உண்டு. 85 இரண்டில் பெரிய வீட்டை வாடகைக்கு வைத்துவிட்டு அந்த வாடகையையும் வாங்கி வைத்துக்கொண்டு குடும்பம் நடத்தினேன். ஆனால் என் அப்பா அடிக்கடி வந்து பார்ப்பார். என் அப்பாவிற்கு உடம்புக்கு வந்ததால், அவருக்கு பணமுடை ஏற்பட்டு விட்டது. ஏற்கனவே என் அக்கா புருஷன் நிலத்திலிருந்து அரிசியை தான் வாங்கிக்கொள்வார். ஆனால், அந்த பணத்தை ப்யாங்கில் (வங்கி) போட்டு விடுவார். ஆனால் நான் புதுக்கோட்டையில் நல்ல முறையில் குடும்பம் நடத்தினேன். நானும் கிராமத்திற்குப் போய் கிஸ்தி (வரி) கட்டி விட்டு நெல்லை வண்டியில் கொண்டு போடும்படி குடியானவனிடம் சொல்லிவிட்டு புதுக்கோட்டை வந்து விடுவேன். ஆனால், என் பிள்ளையை புதுக்கோட்டையில் அத்தைக்கு ஸ்ரீகாரம் கொடுத்த அடுத்த வருஷம் என் அக்கா மூன்றாவது பெண் - அதாவது என் கல்யாணத்தின் போது உண்டாகியிருந்தாள். என் (தலை) தீபாவளிக்குள் அக்காவிற்கு அக்காவிற்கு பெண் பிறந்தது - அந்த பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தார், என் அப்பா. அத்திம்பேர் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை. அந்தக் கல்யாணத்திற்குத்தான் அக்கா பணத்தில் எடுத்து செலவு செய்தார். அப்போது நான் உசிலம்பட்டியில் இருந்து வந்தேன். அப்போது புதுக்கோட்டையிலிருந்து என் அத்தை அவனையும் (ரகு) அழைத்து வந்தார். நான் உன் பிள்ளையை நன்றாக வைத்திருக்கிறேன் என்று சொன்னாள். சரி என்று சொல்லிவிட்டு நானும் என் புருஷனும் உசிலம்பட்டி போய் விட்டோம். ஆனால், அதற்கு பிறகு தான் புதுக்கோட்டை வந்தோம். பெரியவன் எஃப் .ஏ (கல்லூரியில் முதல் நிலை) படித்துக் கொண்டிருந்தான். பெரிய பெண் திருநெல்வேலியில் படித்து விட்டாள். பிறகு அவள் படிக்க முடியவில்லை. 86 ஏன் என்றால் எனக்கு ஏழாவது குழந்தை பிறக்கும் சமயத்தில் உதவிக்கு யாரும் இல்லை. அவள் தான் குடும்பத்தையே பார்க்கும்படி ஆகிவிட்டது. ஆனால் என் அம்மா வந்தாள். அவளால் சமையல் தான் செய்வார். வேறு ஒன்றும் முடியாது. எனக்கு பிள்ளைக்குழந்தை பிறந்தது. அப்போது என் புருஷனை சேலம் பக்கத்தில் தர்மபுரி என்ற ஊரில் மாத்தியிருந்தார்கள். ஆனால், அவர் குழந்தை பிறந்த புண்யாவசனத்திற்கு வரவில்லை. அப்போது அவருக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார். இப்படி இருக்கும்போது அவரும் அடிக்கடி புதுக்கோட்டை வருவார். நாங்கள் கொல்லையில் (கிச்சன் கார்டென் எனலாம்) கத்திரிச்செடியெல்லாம் போட்டிருப்போம். அவரும் வந்த சமயம் தண்ணீர் கொட்டுவார். இப்படியிருக்கும் போது திடீரென்று அவருக்கு முதுகில் ஒரு சின்ன கட்டி மாதுரி இருந்தது. ஆனால் குத்து வலி ரொம்ப கஷ்டப்பட்டார். நானும் அக்கி என்று எழுதினோம். 87 பலன் இல்லை. பக்கத்தில் டி.வீ.எஸ் கம்பெனி டாக்டர் ஒருத்தர் இருந்தார். அவருக்கு தியாகராஜன் என்று பெயர். அவரிடம் காண்பித்தோம். அவர் ஊசி போட்டார். அது அலர்ஜியாகி முதுகு பூராவும் கொப்புளம் மாதுரி வந்து விட்டது. ஆனால் அதற்கு முன்னாடியே பெண் கல்யாணம் செய்வதற்காக முன் செலவுகள் வரும் என்று தன்னுடைய ப்ராவிடண்ட் ஃபண்ட் பணத்தில் கொஞ்சம் எடுத்துக் கொண்டார். ஆனால் முதுகுக்கு வந்து கஷ்டப்பட்டதை என் அப்பாவிடம் சொல்லவேண்டாம் என்று சொன்னார். அது முடிகிற காரியமா? ±ý «ôÀ¡Å¢üÌ ¦¾Ã¢óРŢð¼Ð. ±ý «ì¸¡¨Åì ÜôÀ¢ðÎ ¿£ ÒÐ째¡ð¨¼ §À¡ö Á¡ôÀ¢û¨Ç¨Â «¨ÆòÐ ÅÕõÀÊ «ì¸¡¨Å «ÛôÀ¢ ¨Åò¾¡÷. «ì¸¡×õ Åó¾¡û. À¡÷òÐÅ¢ðÎ ¿£í¸û ¯¼§É ¸¨ÃìÌÊ ÅÕõÀÊ ±ý «ôÀ¡ ¦º¡øÄ¢ Å¢ð¼¡÷; «íÌ ¿øÄ ¨Åò¾¢Âõ ¦ºöÂÄ¡õ ±ýÚ ±ý¨É «ÛôÀ¢ ¨Åò¾¡÷. நீங்¸û ¯¼§É ÒÃ(È)ôÀÎí¸û ±ýÚ ¦º¡øÄ¢ ±ý ¦Àâ ¦ÀñÏõ, ±ý ÒÕ„Ûõ ±ý «ì¸¡×¼ý ¸¡¨ÃìÌÊ §À¡É¡÷. «íÌ ¬ò¾¢ø (Å£ðÊø) «õÁ¡Å¢üÌ ¯¼õÒ ºÃ¢Â¢ø¨Ä ±ýÚ «ì¸¡ ¯¾Å¢ìÌ Åó¾¢Õ츢ȡû. «¾É¡ø ±ý Òரு„¨ÉÔõ «¨ÆòÐô§À¡É¡û. ¿¡ý ÒÐ째¡ð¨¼Â¢ø ÌÆ󨾸ټý þÕó§¾ý. ¸¡¨ÃìÌÊ¢ø ÓÕ§¸ºý ±ýÚ ¬Ô÷§Å¾ ¨Åò¾¢Â ¼¡ì¼÷. «Å÷ ±ý ÒÕ„ÛìÌ ¨Åò¾¢Âõ À¡÷òÐ ¿ýÈ¡¸ò §¾Å¨Ä. ±ý «õÁ¡Å¢üÌõ §¾Å¨Ä. ±ý Òரு„ý ÒÐ째¡ð¨¼ ÅóРŢðÎ ÁÚÀÊÔõ Ä£× ÓÊóÐ ¾÷ÁÒâ §À¡öÅ¢ð¼¡÷. þôÀÊ þÕìÌõ§À¡Ð ±ý «ôÀ¡ ±ýÉ¢¼õ ¿£ À¢û¨Ç¸ÙìÌ âßø88 §À¡¼§Åñ¼¡Á¡? Á¡ôÀ¢û¨ÇÔõ §Àº¡Áø þÕ츢ȡ÷? «¾üÌ ¿¡ý ´Õ §Â¡ƒ¨É ±ýɦÅýÈ¡ø ஸ்ரீகாரம் கொடுத்த பிள்ளைக்கும் உன் பெரிய பிள்ளைக்கும் நானே பூணூல் போட ஏற்பாடு செய்யலாம் என்று நினைக்கிறேன்? நிற்க. எச்சம்மா (பெரியம்மா) பெண் அம்புலுக்கும் கல்யாணம் செய்வதாக இருக்கிறோம். அதோடு உன் பிள்ளைகள் இரண்டு பேருக்கும் (பூணூல்) போடலாம் என்று நினைக்கிறேன்...

84. இனி ருக்மிணி மின்னல் வேகத்தில் பறக்கிறார். பல வருடங்களை சில பக்கங்களில் அடக்கி விடுகிறார், தொய்வில்லாமல், முக்கிய நிகழ்வுகளை ஒதுக்காமல் கதை தொடர்கிறது. ‘ஆனாலும்’ அதிகரிக்கிறது!

85. இரண்டுமே சிறியவை, ஒரு வீட்டின் இரு பகுதிகள். முதலில் நான் பார்த்தபோதே, நான் எங்கோ கண்ட வீடு எனத்தோன்றியது! Dejavu?

86. மற்றொரு காரணம் பத்தாம் பசலித்தனம். பெண்கள் இந்த அளவு படித்தால் போதும் என்ற மனப்பான்மை. நான் அம்மாவுடன் சண்டைப் போட்டேன். உண்ணா நோன்பு இருந்தேன். பலிக்கவில்லை.

87. Herpes. அக்கி நீக்க, அந்த அவயவத்தில் குயவரை அழைத்து சித்ரம் எழுதச் சொல்வது, கிராமிய வைத்யம்.

88. மூன்று வர்ணத்தோரும் முப்புரி நூல் அணிந்தாலும், பிராமணர்களுக்கு முக்கிய சடங்கு. இதற்கு பிறகு தான் அவன் பிராமணனாக மறு ஜென்மம் எடுக்கிறான்.

(மின்னல் வேகம்)

No comments:

Post a Comment