Wednesday, November 4, 2009

அம்மா சொல்படி ராஜூ: அட்டை: 10: சுழன்ற சக்கரம்

அம்மா சொல்படி ராஜூ: (சுழன்ற காலச்சக்கரம் ...) பகுதி 10: 26 10 2009

(வந்தே மாதரம்...)

... உடனே என் அப்பா என்னை திருமங்கலம் கொண்டு விட்டு விட்டு காரைக்குடி போய்விட்டார். நானும், கடசி நாத்தனாரும், என் புருஷனோடு இருந்தோம். அந்த சமயத்தில் என் மாமியாருடைய கடைசித்தங்கை பிள்ளைகள் இரண்டு பேர் 44 லீவுக்கு எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். இரண்டு வாரம் இருந்தார்கள்.

திடீரென்று, என் மாமியாருக்கு உடம்பு சரியில்லை என்றும் லட்டர் போட்டு என்னை வரச்சொன்னார்(கள்). ஆனால், என் மாமியாருக்கு உதவி யார். என் நாத்தனார் இருந்தார். ஆனால், நாமு என்ற நாத்தனார் கல்யாணம் ஆகி கல்கத்தா போய்விட்டார். உடனே என் புருஷன் என்னை வந்திருக்கும் பையன்கள் கூட அனுப்பி வைத்தார். அவர்களுடன் நான் இன்னம்பூர் போனேன். மாமியாருக்கு நான் போனது ரொம்ப சந்தோஷம். ஆனால் மாமியார் உடம்பு சரியில்லாமல் படுக்கையாக இருந்தார். அவருக்கு உதவி 45 என் மாமனார் செய்து கொண்டிருந்தார். இப்படியிருக்கும்போது கடைசி நாத்தனாருக்கு தஞ்சாவூரிலிருந்து வரன் வந்தது. அதை முடிக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த வரன் இரண்டாம் தாரமாக இருந்தது. மாமியாருக்கு இஷ்டமில்லை. மாமனார் தான் முடிக்கலாம் என்று சொன்னார். மாமியாருக்கு உடம்பு வேறு சரியில்லை. வேறு எந்த வரனைப் பார்ப்பது என்று தஞ்சாவூர் வரனுக்கு 46 நிச்சியம் செய்து விட்டார். தஞ்சாவுரில் என் மாமனாருடைய அக்கா பிள்ளை ஆஸ்பத்திரியில் மானேஜராக 47 இருந்தார். அவர் அந்த வரனை கொடுத்தார். பிறகு என்ன செய்வது என்று தஞ்சாவூர் வரனுக்கே கடைசி நாத்தனாரை கல்யாணம் செய்து வைத்தது. ஆனால் என் மாமியாரால் உட்கார்ந்து கன்னிகாதானம் செய்யமுடியவில்லை. அதனால் என் புருஷனுக்கு லட்டர் 48 போட்டு அவர் வந்து அவரும் நானும் தான் கன்னிகாதானம் செய்தோம். பிறகு மாமியாரை மெட்(ரா)ஸ் போய் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். ஆனால், நானோ, என் புருஷனோ போகவில்லை. கல்யாண நாத்தனார் அவள் புருஷன் வீட்டில் இருந்து விட்டாள். அவள் என்ன செய்யமுடியும். இரண்டாம் தாரமாக கொடுத்தாயிற்று. மூத்தாளுக்கு நாலு பிள்ளைகள் 49 எல்லாம் சின்னக்குழந்தைகள். அதைப்பார்த்துகொள்ளவேண்டுமே என்று அம்மாவுக்கு உதவிக்குப் போகவில்லை. என் மைத்துனர், மாமனார், என் மாமியாருடைய «õÁ¡ 50, þÅ÷¸ள் ¾¡ý ±ý Á¡Á¢Â¡Õ¼ý ¯¾Å¢ìÌ ¦ÁðÈ¡Š §À¡É¡÷¸û. அப்போது எனக்கு 16 வயது. என் புருஷனுக்கு 21 வயது தான். ஆனால், நாங்கள் நாத்தனார் கல்யாணம் ஆனதும் நேராக திருமங்கலம் என் புருஷனுடன் போய்விட்டேன். ஆனால், மாமியார் சொன்னார், ‘நான் பிழைக்கமாட்டேன். என்ன செய்வது. நீ ஊருக்குப்போ’ என்று என் புருஷனிடம் சொல்லிவிட்டார். நாங்கள் ஊருக்குப்போய் என் மாமனாருக்கு அம்மாவிற்கு உடம்பு எப்படியிருக்கிறது என்று லட்டர் போட்டோம். அவர் உள்ளதை சொல்லாமல் தேவலை என்று லட்டர் போடுவார். ஆனால், என் புருஷனுக்கு கோபம் வரும். என்ன செய்வது? கவலைப்படுவார். என்னை என் அம்மாவாத்தில் வந்து அழைத்துப் போனார்கள். அங்கு கொஞ்ச நாள் இருக்கலாம் என்று நான் அங்கு இருந்தேன். நவராத்திரிக்குப் போனேன். அந்த சமயத்தில் திடீரென்று தந்தி வந்தது. என் மாமியார் இறந்துவிட்டார் என்று வந்தது.

(சுழன்ற காலச்சக்கரம்... )

44. அவர்களில் கோபால் சித்தியா தொடர்பில் இருக்கிறார். அவரது தந்தை மற்றொரு சிங்கம். அதுவும் அழகிய சிங்கம். சித்தியா கடற்படை, விமானப்படை, காலாட்படை எல்லாவற்றிலும் பணி புரிந்து, பிறகு போலீஸ். மூன்று தலைமுறை உயர் போலீஸ் அதிகாரிகள், அந்த திங்களூர் குடும்பம். கோபால் தலைமையில், சடகோபன், கண்ணன், கோபால் II, நான் ஆகியோர், ஆடுதுறை பாட்டி வீட்டில் செய்த ரகளைகளும் கின்னஸ் புத்தகத்தகுதி பெற்றவை. வீரசோழனாற்றின் பாலத்தில் ரயில் வண்டியைக்கூட நிறுத்தியிருக்கிறோம்! பாடி முன்னால் பெட்டிப்பாமு என்பதால், அவர் புகார்களை புறக்கணிப்பார்! சித்தியா தான் முதலில் சுய சரிதம் எழுதியவர், அதன் என்னுரையில், “... என் அண்ணன் மகனும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.&ஏ.எஸ் அதிகாரியுமான திரு. எஸ்.செளந்தரரஜன் அவர்கள் ஆங்கில புலமை பெற்ற இனிய பண்பாளர். ஆங்கிலத்தில் நான் எழுதிய பக்கங்களை முழுதுமாகப் படித்து பிழை திருத்தி தந்தார். ஓய்வு பெற்றாலும் பல்வேறு பணிகளின் அழுத்ததிற்கிடையே இதற்கு நேரம் ஒதுக்கிய அவரது பண்புக்கு என் நன்றி.... “வசிஷ்டர் வாயாலே பிரம்ம ரிஷி ! தற்காலம், ஒரு அமைப்புக்கு நான் போஷகர். அவர் உப தலைவர்.

45. இப்படி அப்படி இல்லை. அணுக்கத்தொண்டு. துணி தோய்த்து, வீடு பெருக்கி, சமையல் செய்து ஊழியனாக செயல்பட்டாராம். நாமு அத்தை சொல்வாள். இதுவல்லவோ மாறாக்காதல்!

46. அவர் பெரிய வக்கீல். அதுவும் வறுமையால் முந்திய தலைமுறையில் புலன் பெயர்ந்த குடும்பம். சகோதரர்கள் சுயமுயற்சியால் முன் வந்து உயர் பதவிகள் வகித்தனர். ஒருவருக்கு ‘ஸர்’ விருது கூட.. தற்கால தலைமுறையுடன் தொடர்பு உள்ளது.

47. அவர் தான் ‘அத்தான்’. அவருக்குக் கோபம் வந்தால், அண்டமெல்லாம் கிடுகிடுக்கும், மகன் ‘தம்பி’ யைத்தவிர! சமீபத்தில், அவனது சதாபிகேஷேத்துக்குப் போயிருந்தேன். இன்னம்பூருக்கும், ஈராக்கின் பாஸ்ரா நகருக்கும் ஏதொ ஒரு தொடர்பு! தேசிகன் என்ற பெரியவர், முதல் உலக மகா யுத்தத்தின்போது, அங்கு ராணுவப்பணி புரிந்தார். இரண்டாம் யுத்ததில், ‘அத்தான்’. தற்காலம், என் திருமகன்!

48. அந்த லட்டரைப் படித்து என் தந்தை அழுதாராம்.

49. எல்லாரும் படிப்பில் புலி. உயர் பதவிகள் வகித்தார்கள். தலைமகனை நாங்கள் ‘பெரியவர்’ என்று பவ்யமாகக் கூப்பிடுவோம். அவரது மகனும் நானும் இன்றளவுக்கு நண்பர்கள்.

50. இவர் தான் ஆடுதுறைப்பாட்டி. அறியாப்பருவத்தில், நான் அவரிடம், ‘உன் பெண் செத்துவிட்டாளே. ¿£ ²ý º¡¸Å¢ø¨Ä’ ±ýÚ §¸ð§¼É¡õ! (²§¾¡ …£É¢Â¡Ã¢ðÊ ¸½ìÌ!) ¦º¡øĢ¡øÄ¢ Á¡öóÐ §À¡வாள்.

No comments:

Post a Comment