Wednesday, November 4, 2009

அம்மா சொல்படி ராஜூ: 12. இடி விழுந்தது.

`அம்மா சொல்படி ராஜூ: (இடி விழுந்தது) பகுதி 11: 27 10 2009

(வந்தனன்! வந்தனன்!)

குழந்தை பிறந்து மூன்றாம் மாஸம் என்னை சீர் செய்து திருமங்கலம் கொண்டு வந்து விட்டாள். அம்மாவும் உடனே ஊருக்குப் போய் விட்டாள். (அடித்தல், திருத்தல்) என் மைத்துனரும் திருமங்கலம் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தார். இன்னம்பூரில் என் மாமனார் மட்டும் தானே சமையல் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் கூப்பிட்டும் வரமாட்டார். எங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். மாமியார் இறந்து கொஞ்சநாள் ஆனதும், கல்கத்தா நாத்தனார் கல்கத்தா போய்விட்டாள். என் கல்யாணத்தின் போது என் மைத்துனருக்கும் பூனூல் போட்டார்கள். என் புருஷன் வீட்டில் எனக்கு யாரும் இல்லாததால் என்னுடைய குடும்பத்தை என் அப்பாவே கவனிக்க முடிய ஆயிற்று. ஆனால், என் அக்காவுக்கும் என் அப்பா தான் கவனிக்க முடிய ஆயிற்று. (அடித்தல், திருத்தல்). என் அக்காவுக்கு இரண்டு பிறந்து மூன்றாவது பிரஸவத்திற்கு என் அப்பா வீட்டிற்கு வந்திருந்தாள். அந்த சமயத்தில் தான் எனக்குப் பிள்ளை பிறந்த்தது? அக்காவிற்கு பெண் பிறந்ததது. ஒரே வீட்டில் இரண்டு பிரஸவம் நடந்ததது. எனக்குப் பத்து வயதுக்கு பிறகு என் அப்பாவிற்கு நல்ல பணம் சம்பாத்தித்து நன்றாக இருந்தோம்.

இரண்டு வருஷத்துக்கு ஒரு தரம் பிரஸவத்திற்கு அப்பா வீட்டிற்கு போய்விடுவேன். இப்படியிருக்கும் போது அக்காவும் என்னைப் போல் பிரஸவத்துக்கு வருவாள். அவளுக்கு பெண் பிறக்கும். எனக்கு பெண்ணும், பிள்ளையுமாக கலந்து பிறக்கும். ஆனால் அக்காவிற்கு நாலு பெண் பிறந்து விட்டது. அக்கா கவலைப்பட்டு பிறகு பிரஸவத்திற்கு வருவதில்லை. இருந்தும் பிறகும் ஒரு பெண் ஆக ஐந்து பெண் பிறந்தது. அதனால் அவள் பிரஸவத்திற்கு அப்பா வீட்டிற்கு வருவதில்லை. நான் தான் போய் வருவேன். நான் பிரஸவத்திற்கு வந்து அப்பா வீட்டில் இருப்பேன். நான் பிரஸவமாகி ஊருக்கு போகும் வரை என் புருஷன் ஓட்டலில் தான் சாப்பிடுவார். ஆனால் என் அப்பா இன்கம்டாக்ஸ் கணக்கு வேறு பார்த்துக்கொண்டிருந்தார். தனியாக ஆபீஸ் வைத்துக் கொண்டார். இருந்தாலும் பழய செட்டிமார் வீட்டு வேலையை விடவில்லை. தனக்கு குமாஸ்தாவாக அய்யங்கார் பையன் ஆராவமுது 54 என்று அவனை வைத்துக்கொண்டார். திடீரென்று தஞ்சாவுரிலிருந்து என் நாத்தனார் புருஷன் இறந்துவிட்டார் என்று தந்தி வந்தது. ஆனால் முன்னடியே பேப்பரில் அவர் போன செய்தி தெரிந்தது.

என் புருஷன் படித்துவிட்டு ரொம்பவும் வருத்தப்பட்டார். மறு நாள் லட்டர் வந்தது. ஆனால், இந்த கஷ்டத்தைப் பார்க்க என் மாமியார் இல்லை. இன்னம்பூரிலிருந்து என் மாமனார் வந்துவிட்டார். நாங்கள் பிறகு தான் போனோம். நாத்தனாரைப் பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது.

54. ஜப்பானீஸ் லாயல்டி . தாத்தா காலம் வரை, அவர் நீடித்து அந்த ஊழியத்தில் இருந்தார். தாத்தாவை விட, பாட்டியிடம் தான் அவருக்கு பயம். வபையாப் பிடித்து விடுவாள்.

(இடி விழுந்தது)

No comments:

Post a Comment